சதய நட்சத்திரமும் சஷ்டி நன்னாளும் கூடிய மார்கழியின் நாள் வெகு சிறப்பு வாய்ந்தது. தென்னாட்டு இந்துக்களின் மாபெரும் வழிபாட்டு நாட்களில் இந்நாள் முக்கியமானது
இந்த நாளின் பெரும் பாரம்பரிய வழிபாடுகள் தமிழகத்தில் பிரிட்டிஷ் காலத்திலே... கைவிடப்பட்டன. இப்போது இரு தமிழ்பேசும் இனங்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றன; ஒன்று நகரத்தார் எனும் செட்டியார்கள், இன்னொன்று ஈழத்தமிழ் இந்துக்கள்...
அடிப்படையில் இது கார்த்திகை தீபத்தன்றே துவங்குகின்றது. அது திருக்கார்த்திகை மட்டுமல்ல; பெரிய கார்த்திகையும் கூட.
அந்தக் கார்த்திகை பௌர்ணமியில் இருந்து அடுத்த 21 நாட்கள் இருக்கும் நோன்புக்குப் பெயர் 'பிள்ளையார் நோன்பு'. அது சஷ்டியும் சதயமும் கூடும் இந்நாளில் நிறைவடையும். அடுத்த 10 நாட்கள் திருவெம்பாவை படித்து மார்கழி திருவாதிரைக்குத் தயாராகும் நாட்கள்.
அந்த மார்கழித் திருவாதிரை முடிந்தபின் அடுத்த 14 நாட்கள் மகர சங்கராந்திக்கானவை. அதை அடுத்துத் தைப்பூசம் என முருகப் பெருமானுக்கானது.
பிள்ளையார் நோன்பு முடியும் நாளில் ஈழத்தவர் கோவில்களில் விநாயக வழிபாடும் கொண்டாட்டமும் கொழுக்கட்டையும் மிக பிரமாண்டமாக உண்டு.
செட்டியார்களுக்கு ... மார்கழி சதயம் மிக முக்கிய நாளாக அமையக் காரணம் மாணிக்கவாசகரும், அவருக்கு அக்காலச் செட்டியார்கள் செய்து கொடுத்த சத்தியமும்...
செட்டியார்கள் வாழ்வு கடலோடி வாழ்வு... அக்காலமே கடாரம், சீனா, மலாக்கா, தாய்லாந்து, இலங்கை, பர்மா என எல்லா இடங்களிலும் வியாபாரம் செய்தவர்கள், அங்கே பௌத்தமும் சமணமும் இருந்ததால் இவர்களுக்கு அவற்றினை முழுக்க விலக்க முடியவில்லை; அதனில் சிக்கிக் கொண்டார்கள்.
அப்படியான செட்டியார்கள்... இனி எக்காலமும் இந்துக்களாய் இருக்கவேண்டும் என மாணிக்கவாசகர் கோரியபோது; அவர்கள் 'திருவண்ணாமலை சிவன் மேல் ஆணையாகச் சைவர்களாக இருப்போம்' என இதே மார்கழி மாத சதயநாளில் சத்தியம் அருளினார்கள்.
இதைப் புதுப்பித்து நினைவு கூர்வது இன்றும் செட்டியார்களிடம் உண்டு. சில நாகரீக செட்டிகள் இதன் அடிப்படைக் காரணத்தை மாற்றிச் சொன்னாலும்; அவர்கள் சைவம் திரும்பி நிலைத்திருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள்.
இந்நாளில்தான் 'இழை எடுத்தல்' எனும் சடங்கு அங்கு விசேஷம்... அங்கேதான் மாணிக்கவாசகர் கால உடன்படிக்கை வரும்.
பெரிய கார்த்திகை என்றழைக்கப்படும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் மறுநாளிலிருந்து செட்டியார்கள் பிள்ளையார் நோன்பு விரதத்தை ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் நாள் முழுதும் விரதமிருந்து மாலைப் பொழுது சாய்ந்ததும் பிள்ளையாரை வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு நாளையும் எப்படி கணக்கு வைப்பார்கள் என்றால் அன்று செட்டியார்களின் புதுவேட்டியில் அல்லது துண்டில் இருந்து ஒரு நூலை அதாவது ஒரு இழையினை எடுத்து கணக்கு வைப்பார்கள். இது செட்டிநாட்டுப் பெண்களின் முக்கிய மரபு.
அப்படி 21 நாள் இருபத்தோரு இழை சேர்ந்ததும் அதை ஒரு திரியாக உருட்டுவார்கள், பெரிய திரியாக அதை சேர்த்துவிடுவார்கள். அப்படியே பச்சரிசி மாவில் கருப்பட்டி கலந்து ஒரு விளக்கு செவ்வார்கள். அது திருவண்ணாமலை போல் இருத்தல் வேண்டும் என்பது விதி. இந்த இழைகளை ஒன்றாக்கி, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி பல இழைகளாக நறுக்கி வைத்துக் கொள்கின்றனர். கருவுற்ற பெண்ணிற்கு ஒன்று என்றும் அவளது வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ஒன்று என்றும் கணக்குப் போட்டுக் கொள்கின்றனர். கைம்பெண்களை மட்டும் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளவதில்லை. எண்ணிக்கையை விடக் கூடுதலாகவோ குறைவாகவோ இழையை நறுக்குவது இல்லை. 21ம் நாள் சில சம்பிரதாயங்களைச் செய்வர்.
இந்நாளில் மணமாகிச் சென்ற பெண்களுக்கும் உறவுப் பெண்களுக்கும் சீர் அனுப்பும் மரபும் உண்டு. 21ம் நாள் குடும்பமே கூடிப் பிள்ளையார் நோன்பு அன்று; மாலை நேரம் வீட்டினைக் கழுவித் துடைத்துச் சுத்தம் செய்து பூசையறையில் ஒரு பெரிய கோலம் இடுவர். அதன் பின்னர் பூசைக்குத் தேவையான கருப்பட்டி அப்பம், பொரி, அவல், எள்ளுப் பொரி முதலான 21வகை உணவுப் பொருட்களைப் பிள்ளையாருக்குப் படைக்க எடுத்து வைத்துக் கொள்கின்றனர்...
அப்பத்தை எண்ணெயில் இடும்போது சங்கு ஊதுவது ஒரு வழமை.
இன்னும் பச்சரிசி அரைத்த மாவில் பழைய ஏடுகளை எடுத்து அதில் சுற்றியிருக்கும் நூலை மூழ்கச் செய்யும் சம்பிரதாயம் உண்டு, அதற்கு 'தும்பு பிடித்தல்' எனப் பெயர்.
பின் ஆவாரம்பூ உள்பட 21 பூக்கள் கொண்ட ஒரு பூச்செண்டைத் தயார் செய்து; குடும்பத்தின் மூத்த செட்டியார் தலைப்பாகை கட்டிக் கொண்டு கையில் ஆவாரம்பூச் செண்டைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் வருவர். அவரைப் பின்தொடர்ந்து வீட்டில் உள்ள ஆண்களும் வீட்டிற்குள் வருவர்.
இதன் பின் பூஜைகள் பல நடந்த பின் திருவண்ணாமலை சாயலில் செய்யப்பட்டிருக்கும் மாவிளக்கில் நெய் விட்டுத் தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தோடு கொழுக்கட்டையை அதாவது; அந்த மாவிளக்கை வாயில் இட்டு விழுங்குவர்.
எப்போதும் நாங்கள் இந்துக்கள் எனும் நெருப்பு எங்களுள் உண்டு; திருவண்ணாமலை சிவன் எங்களுக்குள் இருக்கின்றான் என்பதை சொல்லும் தாத்பரிய மரபு இது.
எல்லாமே சைவத்தைப் புதுப்பிக்கும் காட்சி. புதிதாக ஒரு விழா அங்கே இந்து சுவடிகளைக் காப்போம் எனத் 'தும்பு பிடித்தல்' என உறுதியெடுக்கப்படுகின்றது.
இழைகள் சேர்த்து திரியாக்கி உண்ணும் நாள் என்பதால் இதனை 'இழை எடுத்தல்' என்பார்கள்... குறிப்பாகச் செட்டிப் பெண்கள் இதனைத் தவற விடுவதில்லை.
கடல் கடந்த இனம் அவற்றை இன்னும் தொடர்கின்றது
இந்து சமயத் தாத்பரியமும் புனிதமும் வழிவழி மரபும் சமணர் பௌத்தர் காலத்தில் இருந்து மாறிய நுணுக்கமான வரலாறும் செட்டிகளிடமும் ஈழமக்களிடமுமே நிரம்பியிருக்கின்றன...
https://www.facebook.com/share/1FyTfiu11G/
ஜைன பௌத்த மதங்கள் தோன்றியமைக்கு மொழிப் போர் தான் முதன்மைக் காரணம் என எண்ண இடம் உள்ளது.
காலந்தோறும் தமிழகத்தில் சமயச் சண்டை, போட்டி, பூசல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
ஆனாலும்...
சூரியனை வழிபடும் சௌரம், கணபதியை வழிபடும் காணாபத்யம், குமரவழிபாடாகிய கௌமாரம், சக்திவழிபாடாகிய சாக்தம், சிவனை வழிபடும் சைவம், விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவம் மட்டுமின்றி ஜைன பௌத்த மதங்கள் அனைத்தையும் உள்வாங்கியே இந்து சமயம் உருவானது.
மரபுகளில் வரலாறு பொதிந்து இருப்பது தவிர்க்க இயலாதது.
இதில் மனவேறுபாட்டை வளர்க்க முனைவது விரும்பத் தகாதது.
தெரிவு:சக