தமிழ் மரபுகள்

25 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jun 18, 2025, 11:09:38 AMJun 18
to vallamai
/// ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.

அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை "கீரை" ஆகின்றது

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "தழை".

நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் "தாள்" ஆகின்றன.

சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்குப் பெயர் "மடல்".

கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் "தட்டு" ஆகின்றன.

கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் "தோகை" (சோகை) என்றாகின்றன.

தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் "ஓலை" என்று சொல்லப்படுகின்றன.

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.

 இதுவே தமிழின் சிறப்பு ///


தெரிவு: சக

kanmani tamil

unread,
Jun 20, 2025, 11:37:15 PMJun 20
to vallamai
மேலே பார்த்தது தமிழ் இலக்கணத்தில் சொல்மரபு 


இந்தப் பதிவில் காண்பது தமிழ் நாட்டுச் சிற்பக்கலை மரபு.

ஒரு லிங்கத்தின் மூன்று பாகங்கள்:
பிரம்ம பாகம் 
விஷ்ணுபாகம் 
ருத்ர பாகம் 

இப் பெயர்கள் வடமொழிப் பெயர்கள் தாம்; ஆனால் மரபு தமிழ்மரபு எனலாம். அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி என்னுள் எழவில்லை. கேள்வியை மக்கள் எழுப்புவர் என்பது அப்பட்டமான உண்மை. 

ஒரு காலகட்டத்தில் எதையும் வடமொழியில் சொல்வதே மேதாவிலாசம் என்ற கொள்கை நிலவியதன் விளைவு. 

வேறொரு சான்று விளக்கம் பார்க்கலாம்...
நம் தமிழகத்து இலக்கிய வரலாற்றில் மதுரையில் எழுந்தருளி இருக்கும் சோமசுந்தரப் பெருமானை மையப்படுத்தித் தோன்றிய கதைகள் திருவிளையாடற் புராணக் கதைகள். அவற்றுக்கு முதன் முதலில் இலக்கிய வடிவம் தந்த போது வடமொழியில் தான் எழுதினர்- ஹாலாஸ்ய மகாத்மியம். பிறகு தான் தமிழ்ப்படுத்தப் பட்டது. 

நிகழ்காலத்தில் எதுவும் ஆங்கிலப் பெயர் பெறுகிறது அல்லவா?! அது போல...

சக 

kanmani tamil

unread,
Nov 4, 2025, 12:00:54 AM (4 days ago) Nov 4
to vallamai
அரைஞாண் கொடி > அரணாக்கொடி 
அரைஞாண் > அரைநாண் 
அரை = இடுப்பு 
இன்று இதை இடுப்புக்கொடி என்றும் அழைப்பர். 

தமிழர் வாழ்வியலில் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் 'இழை கட்டும்' சடங்கு இன்றும் பெரும்பாலோரிடமும் காணப்படுகிறது. இதைக் 'கயறு கட்டுதல்' எனவும் சொல்வர். பிறந்த குழந்தை மிகுதியும் அழுது கொண்டே இருந்தாலும்; இரவில் தூங்காமல் அவஸ்தைப் படுத்தினாலும் 'சீக்கிரம் இழை கட்டு' என்று பெரியோர் சொல்வது உண்டு. 

இச்சடங்கில் குழந்தையின் கையிலும் இடையிலும் மஞ்சள் தடவிய நூலிழைகளைக் காப்பாகக் கட்டுவர். கையில் கட்டும் இழையில் வசம்பு (குழந்தை வளர்ப்போர் வசம்பு என்று வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்; அதன் மருத்துவ குணம் குறைந்து விடும் என்று நம்பிக்கை. பேர் சொல்லா° என்பர்.) மணிகளையும் பூலாங்கிழங்கு மணிகளையும் கோர்த்திருப்பர் அத்துடன் பால்காப்பு (பண்டைக் காலத்தில் சங்கினால் ஆன காப்பு ; தற்போது ப்லாஸ்டிக்), யானைக்கண்ணி வளையல் (அல்லது கருவளை) இரண்டையும் சேர்த்துக் காட்டுவர். இடையில் மஞ்சளில் நனைத்த நூலிழையைக் கட்டுவர். வசதிக்கேற்ப தங்கக் கொடியுடனோ; அல்லது வெள்ளிக் கொடியுடனோ சேர்த்துக் கட்டுவதும் உண்டு.

தாய்வீட்டில் மகப்பேறுக்குப் பிந்தைய பக்குவம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது; கணவனின் பெற்றோர், உடன்பிறந்தோர், உற்றார், உறவினர் அனைவரும் சேர்ந்து பிள்ளை இருக்கும் இடம் தேடி வந்து; தம் வீட்டில் மரியாதைக்கு உரிய மூத்த பெண்களில் பெரியவரை வைத்தே இழை கட்டுவர். சில சமூகங்களில் குழந்தையின் தகப்பன் கூடப் பிறந்த சகோதரி மட்டுமே இழை கட்டும் உரிமை உடையவள் ஆவாள். சிவகாசியில் அவளுக்கு 'அப்பன் கூடப் பிறந்த கப்பலரசி' என்ற பட்டப்பெயர் உண்டு. அப்படிக் கட்டப்படும் இழை... குழந்தை வளர வளர இறுக்கும். பின்னர் அதைக் கறுப்புக் கயறாக மாற்றி ஆண்டிற்கு ஒரு முறை புதுக்கயறு வாங்கிக் கட்டுவோம்.

தொண்ணூறுகளில் கூட கடைத்தெருக்களில் இந்தக் கறுப்புக் கயறு / சிவப்புக் கயறைத் தொங்க விட்டுக் கொண்டு விற்பவர்களைக் காணலாம்.    

///*வெள்ளி அரணாக்கொடி*

இதைப் பழைய காலத்தில் விவசாயக் குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிவர்..

விவசாயக் குடும்பம் மட்டுமே இல்லை; கொஞ்சம் வசதி படைத்த நம் தாத்தா வயதில்... தந்தை வயதில் இருந்த அனைவரும் அதை அணிந்து கொண்டு இருப்பதை பார்த்தும் இருப்பீர்கள்.

என்ன... அவர்கள் அனைவரும் அதை அணிந்து கொண்டு இருந்த போது அவர்கள் அனைவரும் கோமணம் (விவசாய காட்டில் வெள்ளையும் சொள்ளையுமா சுத்த முடியாதே???) மட்டுமே அணிந்து இருப்பார்கள். இதைப் பார்த்துப் பார்த்துப் பழகி... 

ஆனால் இன்றைய பேரன்மார்கள்... !? இப்பொழுது வெள்ளி அரணாக்கொடி என்பது ஏதோ தீண்டத் தகாத பொருள் போல இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.

அரணாக்கொடி எதற்காக என்று இன்னும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் விதமாக இப்பதிவு.

ஆண்களின் இடுப்பில் உரசிக் கொண்டே இருக்கும் அரணா என்பது ஆண்களின் விந்தணுப் பையில் இருக்கும் விந்தணுக்களை அழிவில்லாது காப்பாற்றிக் கொடுத்து அவர்களுடைய வம்ச விருத்தி செய்ய உதவுகிறது.

ஜோதிட ரீதியான அடிப்படையில் சனி பகவான் சுக்கிரன் வீடான துலா ராசியில் செல்லும்போது உச்சம் அடைகிறார். இந்த சனி பகவான் நம் உடலில் ஆங்கிலத்தில் ஸ்பைனல் கார்ட் எனச் சொல்லப்படும் நடுத் தண்டுவட எலும்பு அடுக்குகள் உள்ளே இருந்து ஆட்சி செய்கிறார். முதுகுத்தண்டு வட 32 எலும்பு அடுக்குகள் கூட கருப்பு நிற நரம்பில் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த தண்டுவட எலும்புக்கு கீழே அடித்தளத்தில் சுக்கிரன் எனும் வெள்ளி இருந்தால்... அந்தத் தண்டுவடம் விலகுதல் / பாதிக்கப்பட்டு விடுதல் போன்றவை இல்லாமல் நல்ல தேக ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொண்ட மனிதன் ஆக வைக்கிறது..

அதே போலத் தான் பெண்களின் இடுப்பில் ஒட்டியாணம் தங்கத்தினால் அணிவிக்கப்படும்

இது அந்தப் பெண்ணின் கருப்பையில் உள்ள தேவையற்ற செல்களை அழித்து நல்ல விதமாக மகப்பேறு எனும் குழந்தைப் பேறு பெற உதவுகிறது.

எம்மைப் பொறுத்தவரை திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத தம்பதியினருள் ஆண் வெள்ளி அரணாக்கொடி அணியும் போது; தன்னுடைய விந்தணு உற்பத்தி அதிகப்படியான அளவில் கொண்டு வர உதவும்.
பெண் தங்க அரணாக்கொடி அல்லது... தன் தொப்புளில் சிறிதளவு ஆவது தங்கம் அணிய கர்ப்பம் தங்கும் என நம்பலாம்...

ஆண்களுக்கு இன்னொரு குறிப்பு: 
தற்போதைய இளைஞர்கள் அனைவரும் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். சிறு வயதிலேயே (31 வயது) பைக் அதிகமாக ஓட்டுவதால் தண்டுவடம் கொஞ்சமாக வலி கண்டு சிகிச்சைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரை அவர் வெள்ளி அரணாக்கொடி அணியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி அணியச் சொன்னேன். ஆறு மாத காலத்திலேயே தன் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருந்த நிலை மாறி விட்டதை மிகப்பெரும் அதிசயமாக மீண்டும் வந்து சொன்னார்கள்.

கண்ட கண்ட நகைகளை வாங்கி அணிவதை விட்டு தேவைக்கேற்ப நகைகளை அணியலாம்.
*தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்*
*தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்*
*தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்*
*தன்வழித் தன்னரு ளாகிநின் றானே .*///

முந்தைய தலைமுறையின் ஆண்கள் கடைசிக் காலம் வரை கட்டினர். பெண்கள் குழந்தைப் பருவத்தில் மட்டுமே கட்டினர். 

இந்தத் தலைமுறையில் பள்ளிக்கூடம் போனவுடன் கட்டுவதை நிறுத்தி விடுகின்றனர். 

சில சமூகத்தார் இந்த அரணாக்கயறில் சில சங்கதிகளைச் சேர்த்துக் கோர்த்துக் கட்டி விடும் வழக்கமும் முன்பு இருந்தது. 

ஜோதிட ரீதயாகச் சொல்லப்படும் விளக்கங்கள் பற்றிய உண்மைத் தன்மை தெரியவில்லை. 

உடல்நலம் சார்ந்த நன்மைகள் பற்றி மருத்துவர்கள் தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும். 

ஆனால் எங்கள் தலைமுறை வரை பிள்ளைகளுக்கு கறுப்புக்கயறு கட்டுவது கண்படாமல் இருக்க... என்ற நம்பிக்கை வழக்காறு உள்ளது. 

சக 
Reply all
Reply to author
Forward
0 new messages