கண்ட காவ்யம்?

307 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 14, 2013, 11:38:33 PM9/14/13
to vall...@googlegroups.com
கண்ட காவ்யம் என்பதன் பண்புகள்  யாவை?

எடுத்துக்காட்டுகள்? அவற்றிற்கு ஏன் சிறப்புச் சலுகை?

தேவ் அவர்களை விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

[தெரிந்தவர்களும் விளக்கலாம் ....]

இழையைப் பிரிக்காமல் இருக்க இப்புதிய இழை.
_________________________________________________________________________________________________________________

REF: https://groups.google.com/d/msg/vallamai/k5YX72-8hX0/hC7UU51c5oQJ
On Friday, 13 September 2013 19:49:54 UTC+5:30, ஐயப்பன் கிருஷ்ணன் wrote:

    பாண்டவர்களை நோக்கி அப பாண்டவம் என்ற பெயர் கொண்டு, பாண்டவ குலத்தை முற்றிலும் அழிக்க..............


பாராட்டுகள் ஜீவ்ஸ்.
கதை மாற்றம் இருப்பினும் சுவை மிகுந்த நடை;
கண்ட காவ்யங்களில் இச்சலுகை உண்டு.
அப பாண்டவம் தவறு
அபாண்டவாஸ்த்ரம் - மூல வடிவம்


தேவ்
 
_________________________________________________________________________________________________________________


..... தேமொழி




DEV RAJ

unread,
Sep 15, 2013, 1:40:17 AM9/15/13
to vall...@googlegroups.com
On Sunday, 15 September 2013 09:08:33 UTC+5:30, தேமொழி wrote:
கண்ட காவ்யம் என்பதன் பண்புகள்  யாவை?
எடுத்துக்காட்டுகள்? அவற்றிற்கு ஏன் சிறப்புச் சலுகை?
 

1.2.2 வடமொழியில் காப்பிய வகை

வடமொழியில் காப்பியங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப் பெறுகின்றன.

1) இதிகாசம்
2) மகாகாவியம்
3) காவியம்
4) புராண காவியம் 
5) உத்பாத்தியம் 
6) சம்பு காவியம்
7) சந்தேச காவியம்
8) கண்ட காவியம்

இதிகாசம் என்ற சொல்லுக்கு ‘இவ்வாறு முன் இருந்தது’ என்று பொருள். இதிகாசங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாறாக 
(Pre-historic Period) நம்பப்படுவன. வால்மீகி ராமாயணமும், வியாச பாரதமும் இவ்வகைப் படைப்புகளே.
 
வடமொழியின் மகாகாவியம் என்பது இதிகாசக் கதையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, விரிவாகப் பேசுவது. 
இதில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நாற்பொருள் இடம் பெறும். கற்பனை வளமும் வருணனைத் திறனும் பெற்றிருக்கும். 

மகா காவியத்திலிருந்து அளவால் குறைந்தது காவியம். நாற்பொருளும் இதில் இடம் பெறாது. ஒரு சில குறைந்து அமையும். 
உயரிய நோக்கமும் கற்பனை வளமும் குறைவாகவே காணப்படும். 

கடவுளர் பற்றிய புராண வரலாறாக அமைவது புராண காவியம். 

இதிகாசத்திலோ, புராணங்களிலோ இடம் பெறாத, புதிய கதையை மையமாகக் கொண்டு படைக்கப் பெறுவன உத்பாத்தியம் என்னும் 
காப்பிய வகையாகும். 

சம்பு காவியம் என்பது உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுளாகும். 

சந்தேச காவியம் என்பது தூது இலக்கிய வகையாகும். 

கண்ட காவியம் என்பது பழைய இதிகாச - காப்பியக் கதையை எடுத்துக் கொண்டு, கால வேறுபாட்டிற்கு ஏற்ப மாற்றங்களையும், 
புதுமைகளையும் சேர்த்துப் படைக்கப் பெறுவது. 

தமிழில் பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக் காப்பியம், சாலை இளந்திரையனின் 
சிலம்பின் சிறுநகை போன்றவை இக்கண்ட காவிய வகையைச் சார்ந்தவை.




கண்ட -

khanDa
खण्ड [p= 336,1] [L=61078] mn. a piece , part , fragment , portion 

துண்டு துண்டாக வெட்டுவதற்குத் தமிழில் கண்ட துண்டமாக வெட்டுதல் என்பர்;
சலுகை என்பது கவிஞர்கள் அவர்களாகவே எடுத்துக் கொள்வதுதான் :))



தேவ்

Hari Krishnan

unread,
Sep 15, 2013, 1:55:02 AM9/15/13
to vallamai

2013/9/15 DEV RAJ <rde...@gmail.com>

On Sunday, 15 September 2013 09:08:33 UTC+5:30, தேமொழி wrote:
கண்ட காவ்யம் என்பதன் பண்புகள்  யாவை?
எடுத்துக்காட்டுகள்? அவற்றிற்கு ஏன் சிறப்புச் சலுகை?
 

1.2.2 வடமொழியில் காப்பிய வகை

தமிழில் காவியத் துணுக்கு என்று சொல்லலாம்.  பாஞ்சாலி சபத உரையைத் தொடங்கும் சமயத்தில் நான் எழுதியிருந்ததில் பின்வருவதும் அடங்கும்:

Bharati's Panchali Sabatha Architectonics என்ற தலைப்பில் தனித்தனி பாத்திரமாக ஆயவேண்டிய திறக்கு இது.  செய்யமுடிந்தால் பார்க்கலாம்.  (இன்று தொடங்கிவைத்துவிட்டேன்.  நானில்லாவிட்டால் எனக்குப் பின்னால் யாராவது செய்துவிட்டுப் போகிறார்கள்!)
முன்னுரையில், ‘திருதிராஷ்டிரன்........... துர்க்குணமுடையோன் என்று கருதுவோரு முளர்.  எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது’ என்று பாரதி குறிப்பிடுகிறான்.  அவன் குறிப்பிடுவது இந்தக் குறிப்பிட்ட இடத்தில் திருதிராஷ்டிரன் பாத்திரப் படைப்பைப் பற்றி.  பாஞ்சாலி சபதம் ஒரு கண்ட காவியம் (க்கண்ட்ட காவியம்) அல்லது காவியத் துணுக்கு என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

வேணி ஸம்ஹாரம், ஊறூ பங்க்கம் எல்லாம் மஹாபாரதத்தின் காவியத் துணுக்கு வகையைச் சேர்ந்தவையே.

யாம் அய்யி கரீட்டு, தேவு?
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

DEV RAJ

unread,
Sep 15, 2013, 2:05:28 AM9/15/13
to vall...@googlegroups.com
On Sunday, 15 September 2013 11:25:02 UTC+5:30, Hariki wrote:
வேணி ஸம்ஹாரம், ஊறூ பங்க்கம் எல்லாம் மஹாபாரதத்தின் காவியத் துணுக்கு வகையைச் சேர்ந்தவையே.
 
 
ஆம், பெரிய பட்டியலே உள்ளது.
ஊரு பங்கம் - சரியானது, அண்ணா 


தேவ்

தேமொழி

unread,
Sep 15, 2013, 5:07:39 PM9/15/13
to vall...@googlegroups.com

தேவ் மற்றும் ஹரிகி அவர்களுக்கு நன்றி.

[1] கண்ட காவியம் என்பது பழைய இதிகாச - காப்பியக் கதையை எடுத்துக் கொண்டு, கால வேறுபாட்டிற்கு ஏற்ப மாற்றங்களையும், புதுமைகளையும் சேர்த்துப் படைக்கப் பெறுவது. 

[2] காவியத் துணுக்கு

இதில் சலுகை என்பது படைப்பாளிகள்  அவர்களாகவே எடுத்துக் கொள்வது....     விளங்குகிறது  ....

அப்படியானால் ஷைலஜாவின் குந்தளாதேவி, 
மணிரத்தினத்தின் தளபதி, 
பாரதிராஜாவின் புதுமைப்பெண் ஆகிய தற்காலப்படைப்புகளை  கண்ட காவியம் என்றும் (வெவ்வேறு ஊடகங்கள், படைப்பு வகைகள் என்றாலும்) கருதலாமா?

 பழைய இதிகாச - காப்பியக் கதையை எடுத்துக் கொண்டு, கால வேறுபாட்டிற்கு ஏற்ப மாற்றங்களையும், புதுமைகளையும் சேர்த்துப் படைத்திருக்கிறார்கள்.


தமிழ் இணையப் பல்கலைகழக சுட்டிக்கு நன்றி, எந்த வகை வகைபடுத்தலாக இருந்தாலும் ...
மேலை இலக்கியக் காப்பிய வகை,
வடமொழியில் காப்பிய வகை,
தமிழில் காப்பிய வகை,
இவற்றின் பட்டியல் முழுமையாக அனைத்து இலக்கிய  வகைகளையும் உள்ளடக்கவில்லை.


தமிழ் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் நாட்டுப்புற/தெருக்கூத்து வகைகளுக்கு  இடம் இல்லை. 
நீலி, நல்லதங்காள், அண்ணன்மார் பொன்னர் சங்கர் போன்ற வாய்மொழி  படைப்புகளை எங்கு வைப்பது  என்று தெரியவில்லை.


வடமொழி காப்பிய வகையில் தற்கால இலக்கியங்களுக்கோ பிறசமய படைப்புகளுக்கோ வழியில்லை 


மேலை இலக்கியங்கள் பெரும்பாலும் உணர்வுகளின் அடிப்படைக் காப்பிய வகைகளாகப் பகுக்கப்படிருந்தும் சோகம் என்ற வகையை அதில் காண முடியவில்லை, comedy tragedy என எழுதிய Shakespeare படைப்புக்களை எங்கே வைப்பது? அவர்களிடமும் தற்கால இலக்கியம் என்ற வகையும்  இல்லை.    


மீண்டும் காலத்திற்கேற்ப புதிய காப்பியப்பிரிவுகள் வேண்டும் என்று தோன்றுகிறது.

விளக்கமளித்த தேவ், மற்றும் ஹரிகி அவர்களுக்கு மீண்டும் நன்றி.

அன்புடன்
..... தேமொழி

Hari Krishnan

unread,
Sep 15, 2013, 9:46:57 PM9/15/13
to vallamai

2013/9/16 தேமொழி <them...@yahoo.com>

comedy tragedy என எழுதிய Shakespeare படைப்புக்களை எங்கே வைப்பது?

DEV RAJ

unread,
Sep 15, 2013, 9:51:10 PM9/15/13
to vall...@googlegroups.com
On Monday, 16 September 2013 02:37:39 UTC+5:30, தேமொழி wrote:
மீண்டும் காலத்திற்கேற்ப புதிய காப்பியப்பிரிவுகள் வேண்டும் என்று தோன்றுகிறது.
 

பிரபந்த வகைகளில் பள்ளு இலக்கியம் வளர்ந்தது.

இச்சுட்டியும் உங்களுக்கு உதவலாம் -

எண் சுவை ஒன்பான் சுவையானது. சீவக சிந்தாமணி ஒன்பான்
சுவைகளும் நிறைந்த அரிய காப்பியமாகத் திகழ்கிறது.
என்ன, சிருங்காரம் ஓவர் டோஸ்; அவ்வளவுதான்.

சங்கதத்தின் பக்தி இலக்கிய வளர்ச்சி காலத்தில் பக்தியும் ஒரு ரசமாக ஏற்கப்பட்டது.
சங்கத முக்தக காப்பிய வகையைப் பின்னாளில் ஹிந்தி இலக்கியத்தில்
பரவலாகக் காணமுடிகிறது. ஆறாம் திணை என இப்போது நாம் பேசுகிறோம்; 
வளர்ச்சிக்கேற்ற புதிய வகைப்பாடு தேவைதான்.


தேவ்

தேமொழி

unread,
Sep 16, 2013, 12:09:41 AM9/16/13
to vall...@googlegroups.com

1.2.1 மேலை இலக்கியக் காப்பிய வகை
கிரேக்கம், இலத்தீன், பாபிலோனியம் முதலான பழமை வாய்ந்த மொழிகளில் எழுந்துள்ள காப்பியங்களைப் பின் வருமாறு வகைப்படுத்துகின்றனர்.

1) முன்முறைக் காப்பியம் (Primitive or Oral Epic)
2) வழிமுறை அல்லது கலைக் காப்பியம் (Secondary or Literary Epic)
3) வீரயுகக் காப்பியம் (Chivalric Epic)
4) வீரயுகக் காதல் காப்பியம் (Chivalric Romance)
5) காதல் காப்பியம் (Romantic Epic) 
6) நகைச்சுவைக் காப்பியம் (Burlesque Epic)

பகுதியில் வரும்....
ஹரிகி அவர்கள் கொடுத்துள்ள பிரிவான 'Tragicomedy'  என்பது Genre என்ற வகைப்படுத்துதலில் அடங்குகிறது. Epic என்பதைப் போலவே  Tragicomedy என்பதும் Genre இல் ஒரு பிரிவுதான்.

(ஆனால் 'nonsense' என்ற பிரிவும் கொடுத்தவர்களை வாழ்த்த வேண்டும் :D )

An epic  is a lengthy narrative poem, ordinarily concerning a serious subject containing details of heroic deeds and events significant to a culture or nation.
அத்துடன்  Oral poetry may qualify as an epic (முன்முறைக் காப்பியம் (Primitive or Oral Epic) என்றும் இருப்பதால் நான் பாடல்கள் நிறைந்த நாட்டுப்புற கூத்துகளுக்கு தமிழக காப்பியங்கள் வரிசையில்  தனி இடம் கொடுக்கப்படவில்லை என்றேன். 

1.2.3தமிழில் காப்பிய வகை:
1)  இதிகாசம் 
2)  புராணம் 
3)  பெருங்காப்பியம் 
4)  சிறுகாப்பியம் 
5)  மறைந்துபோன தமிழ்க் காப்பியம் 
6)  மொழிபெயர்ப்புக் காப்பியம் 
7)  இசுலாமிய சமயக் காப்பியம் 
8)  கிறித்தவ சமயக் காப்பியம் 
9)  தற்காலக் காப்பியம் - மற்றும் கதைப் பாடல்கள்

நாட்டுப்புற கூத்துகளுக்கு (நல்லதங்காள் கதை முதலான பல எண்ணற்ற கதைப் பாடல்கள்)  'தற்காலக் காப்பிய வரிசை'யில் பொத்தாம் பொதுவாக வரிசைப்படுத்துவதோ, அல்லது பிரபந்த சிற்றிலகியமாக வகைப்படுத்துவதோ   அவற்றிற்கு தரப்படவேண்டிய முக்கியத்துவத்தைக் குறைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவற்றிற்கு காப்பியப் பிரிவில் மேலைநாட்டு காப்பியப் பிரிவு போல /'Oral Epic' போன்று தனித்துவம்  கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.    

எனவே, எந்த மொழியிலும், யாருடைய 'காப்பியம்' என்ற வகைப்படுத்துதலும் முழுமையற்றதாகவே ***எனக்குத் தோன்றுகிறது. 


..... தேமொழி 

DEV RAJ

unread,
Sep 16, 2013, 3:59:10 AM9/16/13
to vall...@googlegroups.com
இலக்கியத்தை வகைப்படுத்துதல் -

தமிழில் புதுக் கவிதை, ஹைகூ கவிதைகள் உள்ளன.
எழுத்தாளரில் சிலர் முற்போக்கு எழுத்தாளர் என
அடையாளம் காட்டப்படுகின்றனர். பெண்ணிய
இலக்கியம், தலித் இலக்கியம், இடதுசாரி இலக்கியம்
எனும் வகைப்பாடுகளையும் பார்க்கிறோம்.
தமிழில் மொழிபெயர்ப்பு ஒரு புதிய துறை.
தமிழின் ஒப்பிலக்கியத்தில் தேக்க நிலை என்றே 
தோன்றுகிறது


தேவ்

தேமொழி

unread,
Sep 16, 2013, 4:14:01 AM9/16/13
to vall...@googlegroups.com
தமிழில் மொழிபெயர்ப்பு ஒரு புதிய துறை <<< இப்படி சொன்னால் கம்பர் கோவிக்க மாட்டாரா?
:))

..... தேமொழி

DEV RAJ

unread,
Sep 16, 2013, 4:43:52 AM9/16/13
to vall...@googlegroups.com
On Monday, 16 September 2013 13:44:01 UTC+5:30, தேமொழி wrote:
தமிழில் மொழிபெயர்ப்பு ஒரு புதிய துறை <<< இப்படி சொன்னால் கம்பர் கோவிக்க மாட்டாரா?
:))

திருத்தக்கதேவர்கூட கோவிப்பார்:))
காலத்தால் முற்பட்ட சிந்தாமணியும் ஒரு வழிநூலே.

நான் சொல்லவந்தது உரைநடையில் மொழிபெயர்ப்புகளை.
சரஸ்வதி ராம்நாத் போன்றோரை நினைத்து எழுதியது .
கதிரேசச் செட்டியார், ஜகன்னாத ராஜா போன்றோர் ஆற்றிய 
அரும்பணி போற்றுதற்குரியது. இணையத்தில் இவர்களுடைய 
நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை


தேவ்

Banukumar Rajendran

unread,
Sep 16, 2013, 4:50:01 AM9/16/13
to vallamai, மின்தமிழ்



2013/9/16 DEV RAJ <rde...@gmail.com>

On Monday, 16 September 2013 13:44:01 UTC+5:30, தேமொழி wrote:
தமிழில் மொழிபெயர்ப்பு ஒரு புதிய துறை <<< இப்படி சொன்னால் கம்பர் கோவிக்க மாட்டாரா?
:))

திருத்தக்கதேவர்கூட கோவிப்பார்:))

:))

கொங்குவேள் மாக்கதை (பெருங்கதை) தான் தமிழின் முதல் மொழிபெயர்ப்பு நூல்.

இரா.பானுகுமார்,
சென்னை



 
காலத்தால் முற்பட்ட சிந்தாமணியும் ஒரு வழிநூலே.

நான் சொல்லவந்தது உரைநடையில் மொழிபெயர்ப்புகளை.
சரஸ்வதி ராம்நாத் போன்றோரை நினைத்து எழுதியது .
கதிரேசச் செட்டியார், ஜகன்னாத ராஜா போன்றோர் ஆற்றிய 
அரும்பணி போற்றுதற்குரியது. இணையத்தில் இவர்களுடைய 
நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை


தேவ்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

bhuvaneshwar.d

unread,
Sep 16, 2013, 5:22:20 AM9/16/13
to vall...@googlegroups.com
खण्ड - கண்ட என்ற சொல்லின் அர்த்தம் பார்ப்போம்.

खण्डपरशु - கண்டபரசு என்று சிவனாருக்கு ஒரு பெயர் உண்டு. (விஷ்ணு சஹாஸ்ரநாமத்திலும் இது வரும்
(568அவது திருநாமம் -
சுதன்வா கண்டபரசுர் தாருனோ த்ரவிணப்ரத:|
திவ:ஸ்ப்ருக் சத்க்ருதவ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ:||         )

கண்ட என்ற சொல்லுக்கு உடைந்த என்று ஒரு மேலோட்டமான, அப்பட்டமான பொருள் இருப்பினும், இயபை விடச் சிறியதான என்ற பொருளில் அது வழங்கப் பெறும். பரசு என்றால் கோடாலி. கண்ட பரசு என்றால் உடைந்த கோடாலியா? அல்ல. சிறிய வகைக் கோடாலி. Hatchet எனபது போல.

அது போரில் மிக அருகில் உள்ள எதிரிகளைத் தாக்கப் பயன்படும். அதை கையுள் வைத்துள்ளதால் கண்டபரசு என்று சிவனுக்கு ஒரு பெயர். இது அமரகோசத்திலும் உளது.

உடைந்த என்ற நேரப் பொருள் இருப்பினும், கண்ட என்ற சொல், ஒரு பொருள் தனது இயல்பான அளவை விட சிறியதாக வரும் பொது அதைக் குறிப்பிடவே பயன்படுகிறது.
 
இப்போது கண்ட-காவ்யம் என்றால் என்ன எனபது புரிந்திருக்குமே? ஒரே காவியம், அதன் அளவில் சுருங்கி வரும் அவஸ்தையில் (நிலையில்) அதை கண்ட காவ்யம் என்கிறோம். இதைத்தான் ஆங்கிலத்தில் "Abridged version" எனபது. ஓரளவுக்கு கவிதா ஸ்வாதந்ரியம் இருப்பினும் மூல நூலில் உள்ள சரக்குக்கு significant changes பண்ணுவது கூடாது. அப்படிச் செய்தால் அது கண்ட காவ்யம் ஆகாது.

தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன், அன்பர்களே.

திரு தேவ் அவர்கள் மற்றும் ஹரிகி அவர்கள் சொன்னவற்றையும் ஆமோதிக்கிறேன்.

புவனேஷ்வர்
Reply all
Reply to author
Forward
0 new messages