.
. .
Reply | Forward |
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!இதில் வரும் ஆழி-மழை-கண்ணா யாராக இருக்கும்?
கண்ணா என்பது அன்பாக விளிக்கும் சொல்லும் கூட! அதிலும் பெண்களுக்கு மனதுக்குப்பிடித்தவர்களை இப்படி அழைக்க மிகவும் பிடிக்கும்!
மழைக்கண்ணனாமே அப்படியானால் நீர்த் தெய்வம் வருணனா? இல்லை மழைத் தெய்வம் இந்திரனா? :)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஆழிமழைக்கண்ணா என கிருஷ்ணனைத்தான் அழைக்கிறாள் என்கிறார் அழகியசிங்கர் சுவாமிகள். எதற்கு அழைத்தாய் என்று கிருஷ்ணன் கேட்பதான பாவனைக்கு பதிலாக அவளின் வார்த்தைகள் தொடர்கின்றன..( மழைக்கண்ணா பற்றிய விளக்கம் எங்கண்ணாக்கு கம்பராமாயண வகுப்புக்கு வரும்போது ஜீயர்சுவாமிகள் எழுதிஅளித்தபுத்தகத்தை நேரில் காட்டுகிறேன் !)
அங்கே சொல்லப்பட்டிருப்பது ஆழி மழைக்கு அண்ணா. அண்ணா என்றால் தலைவன். ஆழிமழைக்கு அண்ணனாகிய வருணன்தான் இங்கே ஆழி மழைக்கு அண்ணாவாக விளிக்கப்படுகிறான்.இது இப்படி இல்லையானால்,
ஊழி முதல்வன் மெய்போல் மெய்கருத்து, பற்பநாபன் கையில்... என்ற உவமைகள் எல்லாம் எப்படிப் பொருந்தும்.நீயே உன்னைப்போல் கருத்து, உன்கை வில்லைப் போல் மின்னி... என்றெல்லாம் பொருள் விபரீதமாகப் போகும்.
--
--
ஊழி என்றால் உலகம் என்ற பொருளும் இருப்பதால் ,,,>>> ஆமாம் தே மொழி இந்தப்பாடலுக்கு மட்டும் கடலைப்போல ஆழமான அர்த்தம்...ஆனால் பொதுக்கருத்து என்ன வெந்றால் மழை வேண்டும் இறைவனின் அருள் மழை! அருட்கடலிலிருந்துதான் அருள் மழை தோன்றுகிறது
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து = என்பது ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதிமனிதனைப் போன்ற கருநிறம் என்ற அறிவியல் கருத்தினைக் கொண்டதாகவும் பொருள் கொள்ளலாமா ஷைலூ ;-))<<<< ஆதிமனிதனைமுதலில் தோ ற்றுவித்ததால் அண்ணல் மேனி கருத்திருக்குமோ?:)
தந்தை மகள் உரையாடல் மனதைக் கவர்கிறது, நல்லதோர் கற்பனை.>>>> சற்று வித்யாசமாய் எழுத நினைத்ததின் விளைவு மற்றபடி இருப்பதை எடுத்து அளிப்பதை தவிர கற்பனைக்கு அதிகம் வேலை இல்லை:)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>செல்லாக்காசல்ல செல்லக்காசு நீ
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2013/12/19 PRASATH <pras...@gmail.com>
எனக்கு அனைவரின் கருத்துகளும் சரின்னு தான் படுது...சோ, நான் ரெண்டு பக்கமும் வாக்களிக்குறேன்...:)))இப்படிக்கு,செல்லாக்காசு( என்னோட புதுப்பேராக்கும்... நானே வச்சுகிட்டது தான்) >>>செல்லாக்காசல்ல செல்லக்காசு நீஅள்ளக்குறையா அருந்தமிழில்வெண்பா தரும் வெல்லக்காசுஉன்பால்நம்பிக்கையின்றிஎன்னன்னவோ நீ சொன்னால்என்னால் ஏற்க இயலாதுஅன்புத்தம்பி பிரசாத்துஉன்புதுப்பேரைத்தான் மாத்து:)

--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--. .
Reply Forward
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 2013/12/19 தேமொழி <them...@yahoo.com>ஊழி என்றால் உலகம் என்ற பொருளும் இருப்பதால் ,,,>>> ஆமாம் தே மொழி இந்தப்பாடலுக்கு மட்டும் கடலைப்போல ஆழமான அர்த்தம்...ஆனால் பொதுக்கருத்து என்ன வெந்றால் மழை வேண்டும் இறைவனின் அருள் மழை! அருட்கடலிலிருந்துதான் அருள் மழை தோன்றுகிறது
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து = என்பது ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதிமனிதனைப் போன்ற கருநிறம் என்ற அறிவியல் கருத்தினைக் கொண்டதாகவும் பொருள் கொள்ளலாமா ஷைலூ ;-))<<<< ஆதிமனிதனைமுதலில் தோ ற்றுவித்ததால் அண்ணல் மேனி கருத்திருக்குமோ?:)அறிவியல் கருத்துக்கள் இப்பாடலில் சற்று அதிகம் அதனைஇந்த வரிகள் சொல்கின்றன அவள் அளிக்கும்்நீர்ச் சுழற்சி ஓவியத்தைக் கொஞ்சம் பாருங்கள்!அவள் எந்த வகுப்பறையில் போய் Hydro Cycle எல்லாம் படித்தாள்?
ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து (Infiltration & Run-off)
முகந்து கொடு = அள்ளிக் கொண்டு (Capillary Action)
ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி (Evaporation)
ஊழி என்றால் உலகம் என்ற பொருளும் இருப்பதால்ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து = என்பது ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதிமனிதனைப் போன்ற கருநிறம் என்ற அறிவியல் கருத்தினைக் கொண்டதாகவும் பொருள் கொள்ளலாமா ஷைலூ ;-))தந்தை மகள் உரையாடல் மனதைக் கவர்கிறது, நல்லதோர் கற்பனை.
On Thursday, December 19, 2013 4:42:52 AM UTC-8, தேமொழி wrote:ஊழி என்றால் உலகம் என்ற பொருளும் இருப்பதால்ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து = என்பது ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதிமனிதனைப் போன்ற கருநிறம் என்ற அறிவியல் கருத்தினைக் கொண்டதாகவும் பொருள் கொள்ளலாமா ஷைலூ ;-))தந்தை மகள் உரையாடல் மனதைக் கவர்கிறது, நல்லதோர் கற்பனை.தேமொழி,
On Thursday, December 19, 2013 4:42:52 AM UTC-8, தேமொழி wrote:ஊழி என்றால் உலகம் என்ற பொருளும் இருப்பதால்ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து = என்பது ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதிமனிதனைப் போன்ற கருநிறம் என்ற அறிவியல் கருத்தினைக் கொண்டதாகவும் பொருள் கொள்ளலாமா ஷைலூ ;-))தந்தை மகள் உரையாடல் மனதைக் கவர்கிறது, நல்லதோர் கற்பனை.தேமொழி,இந்த அழகான பார்வையை முதலில் எழுதியது மாதவிப்பந்தல் கண்ணபிரான் ரவிசங்கர். 2008-ல்:.
>>>>>>கண்ணபிரான் ரவி சங்கரும் நானும் 2008ல் மார்கழிப்பதிவில் மிகவும் ஈடுபட்டோம் என்னைவிட இளையவரானாலும் அவர்மூலம் திருப்பாவை விளக்கம் பல நான் அறிந்துகொண்டிருக்கிறேன்...
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
On Thursday, December 19, 2013 4:42:52 AM UTC-8, தேமொழி wrote:ஊழி என்றால் உலகம் என்ற பொருளும் இருப்பதால்ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து = என்பது ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதிமனிதனைப் போன்ற கருநிறம் என்ற அறிவியல் கருத்தினைக் கொண்டதாகவும் பொருள் கொள்ளலாமா ஷைலூ ;-))தந்தை மகள் உரையாடல் மனதைக் கவர்கிறது, நல்லதோர் கற்பனை.தேமொழி,இந்த அழகான பார்வையை முதலில் எழுதியது மாதவிப்பந்தல் கண்ணபிரான் ரவிசங்கர். 2008-ல்:.2008 மார்கழியில் ரவி எழுதியது பாருங்கள்.சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே - என்று ஏன் ஆண்டாள் (பெரியாழ்வார்?) சொல்கிறார்என்று இப்பொழுது புரிகிறது. சங்ககாலத்தில் கண்ணன் என்று பலருக்கும் பேர்.கண்ணன் (< கிருஷ்ணன்), விஷ்ணு (< விள்- என்னும் தமிழ். இருக்குவேதத்தில் சூரியக்கதிர்),நிறத்தால் அப்போதைய பெருந்தெய்வம் வருணன் கண்ணன் என்று வணங்கப்பட்டுள்ளான்.க்ருஷ்ணப்ரேமி ஆன ஆண்டாள் தம் திருப்பாவையில் கண்ணன் என்று க்ருஷ்னனைச் சொல்லாமல்சங்கத் தமிழ்த் தெய்வம் கரிய அணங்கு வருணனைத்தான் சொல்கிறாள். எனவேசங்கத் தமிழ்மாலை தான்.நா. கணேசன்
>>என்னது திருப்பாவையில் கண்ணன் என கிருஷ்ணனைச் சொல்லவில்லையா?:0 ்திரு கணேசனுக்கு சூடிக்கொடுத்த சுடர்கொடியே வந்து பதில் சொல்லட்டும் என்னால முடியாது!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஆழிமழைக் கண்ணா என்று ஆண்டாள் விளிப்பது வருணனையே. வேளுக்குடியின் இந்த விளக்கம் பூர்வர்கள் அனுக்ரஹித்த வியாக்கியை அடியொற்றியே அமைந்திருக்கிறது.நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை மற்றும் காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம் அண்ணா முதலானோர் இவ்வாறே வியாக்கியானங்கள் தந்துள்ளனர்."கை கரவேல்", "பெய்திடாய்" என்றெல்லாம் வருகின்ற ஏவற் சொற்கள், வர்ஷ தேவதையான பர்ஜந்யனையே குறித்து ஆணையிடுவதாக அமைகின்றன.பி.ப. அண்ணா அருளிய உரையில் இவ்வாறு காணப்படுகின்றது.
கோயில்களில் அந்தி விழா | |
நீரும் நிலனும் தீயும் வளியும் | |
| மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய | |
| மழு வாள் நெடியோன் தலைவன் ஆக, | 455 |
| மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர் | |
| வாடாப் பூவின், இமையா நாட்டத்து, | |
| நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு, | |
| மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார், | |
| அந்தி விழவில் தூரியம் கறங்க http://www.tamilvu.org/library/l1100/html/l1160101.htm சங்கத் தமிழில் முதற்கடவுள் வருணனின் தொல்லியல் சான்றுகள் ஏராளம். தொன்மையோ மிகப் பெரிது. |
"ஸந்நிதிகளில் கைங்கர்யபரர்களை அருளிப்பாடிடும்போது, “குடை தூக்குவான்!, சாமரை வீசுவான்!, திருச்சின்ன மூதுவான் !” என்றிங்ஙனே அவரவர்கள் அதிகரித்த காரியத்தையிட்டு அருளப்பாடிடுவது ஸம்ப்ரதாய மாதலால் இவர்களும் அந்நடையை அடியொற்றி “ஆழிமழைக் கண்ணா!” என்று அவன் அதிகரித்த காரியத்தையிட்டு அழைக்கின்றனரென்க"ஒவ்வொரு வியாக்கியான கர்த்தாவும் தத்தம் மனோரதப்படி அர்த்தம் ஸாதித்தருளுவதை 'ஸ்வாபதேசம்" என்று விசேஷமாகக் கொள்வதுண்டு. காட்டாக, "நானேதான் ஆயிடுக" என்பதற்கு எளிமையான பொருள் சொல்வது ஒரு புறம். அதையே கருவாக அமைத்து சிறப்பித்து ஒரு நற்கவிதையே (இலந்தை எழுதியது) எழுதுவதும் இங்கே கண்டுள்ளோம்.சௌந்தர்
செல்லாக்காசல்ல செல்லக்காசு நீ
5.2.4 மழை வேண்டுதல் |
மூன்றாம் பாடலிலும் நான்காம் பாடலிலும் பாவை நோன்பு நோற்கும் பெண்கள் மழையை வேண்டி நிற்றலும், மழை பொழிந்து நாடு செழித்துச் செல்வம் பெருகுதலை வேண்டி நிற்றலும் காணலாம். முதலில் மழைக்குரிய தெய்வத்தை வேண்டும் நான்காம் பாடலைக் காணலாம். |
4. ஆழிமழைக் கண்ணா ஒன்றும்நீ கைகரவேல் |
|
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில் |
|
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் |
|
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். |
பாடல் பொருள் |
கடல் போன்ற பெருமைமிக்க இயல்பினையுடைய, மழைக்குத் தலைவனாகிய வருணக் கடவுளே! உன் வண்மையில் சிறிதும் குறைக்காமல், மறைக்காமல் வழங்கு! பெருங்கடலுள் புகுந்து, அங்குள்ள நீரை முகந்து, இடி முழக்கத்துடன் வானத்தில் எழு! காலம் முதலிய எப்பொருட்கும் முதல்வனாக விளங்கும் திருமாலின் திருமேனியைப் போல் கறுத்துத் திரண்டு மழைபொழி! திண்மையான, அழகிய தோள்களையுடைய பத்மநாபனின் கையில் உள்ள சக்கரப்படை போல் மின்னி, சங்கினைப் போல் முழங்கு! காலம் தாழ்த்தாமல் அவனுடைய சார்ங்கம் என்ற வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் உலகத்தார் அனைவரும் வாழ்வதற்காகவும், மார்கழி நோன்பு மேற்கொண்ட நாங்கள் நீராடுவதற்காகவும் நீ, மழையைப் பொழிவாயாக! |
திருமால், கண்ணனாய்ப் பிறந்து அன்பர்க்கு எளியனாய் விளங்கும் காட்சியைக் கண்டு வருணன் என்னும் மழைக்கடவுள், அவன் அடியார்க்குத் தன்னால் இயன்ற தொண்டு புரிய விரும்பினன். பாவை நோன்பு நோற்பாரிடம், தன்னால் செய்யத்தக்க செயல் யாது என வினவினன். அவர்கள், வருணனிடம், தம்மால் வணங்கப்பெறும் இறைவனின் இயல்புகளை அவனிடம் காண விரும்புவதாகக் கூறினர் என இப்பாடலுக்கு விளக்கம் கூறுவர். |
மழைக்காட்சியின் ஒவ்வொரு நிலையிலும் திருமாலின் இயல்புகளையே காணும் பாவை நோன்பினர் பக்தி போற்றத்தக்கது. மேகக்கருமை திருமாலின் நிறத்தையும், மின்னல் அவன் சக்கரப் படையையும், இடி அவனது சங்கின் முழக்கத்தையும், மழைத் தாரைகள் அவனது வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளையும் அவர்களுக்குக் காட்டுகின்றன. மழையும் இறைக்காட்சியும் ஒன்றாகி விடுகின்றன. |
இப்பாடலில் திருமாலின் ஐந்து நிலைகளுள் ஒன்றான ‘அந்தர்யாமித்துவம்’ (உள்ளீடாயிருக்கும் தன்மை) இடம் பெற்றுள்ளது. |
மழையால் நாடு செழித்துச் செல்வம் பெருக வேண்டும் என்னும் வேண்டுதலை மூன்றாம் பாடலில் வெளிப்படுத்துகின்றனர் பாவை நோன்பு நோற்கும் பெண்கள். |
On Sunday, December 22, 2013 5:09:35 PM UTC-8, ananth wrote:2000-ல் மன்றமையம் வலைத் தளத்தில் ஆழிமழைக்கண்ணா பாடல் பற்றி டாக்டர் ரமணி நாயுடு எழுதியிருந்த குறிப்பு எதேச்சையாக இன்று கண்ணில் பட்டது. அதை இணைத்துள்ளேன்.அனந்த்
கவியரசு கண்ணதாசன் கட்டுரை இது: (அர்த்தமுள்ள இந்துமதம்):(கவியரசு சேலத்தில் திராவிட இயக்கத்தில் இருந்தபோது ஜலகண்டாபுரம் கண்ணன்பேரில் கண்ணதாசன் ஆனார். பின்னாளில் கண்ணபிரான்-தாசன் ஆனார்.)இரமணிநாயுடு சொல்லும் ஆங்கிலக் கவிதை:கண்ணன் என்று வருணனை ஆண்டாள் பாடக் காரணமுண்டு.நா. கணேசன்
2013/12/23 N. Ganesan <naa.g...@gmail.com>
ஆழிமழைக் கண்ணன் வருணனின் தோற்றம் (3500 - 3800 ஆண்டுகள் முன்னர்):Archaeologists of ancient India ask the opinion about this sculpture:சங்க காலத்ததும், அதற்கு முந்தையதுமான் ’மழுவாள் நெடியோன்’ வருணன் இங்கேமுதலையாகக் காட்டப்படுகிறான். பன்றி என்று பேரா. அஹுஜா போன்றோர் சொல்லுதல்பிழையானது. பாண்டிச்சேரி EFEO-விலும், சென்னையிலும் விளக்கி நூலும் அடுத்த ஆண்டு அச்சாகும்.
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? திருமால் வழிபாடு காலம் கடந்தது என்றுதான் அக்கட்டுரை சுட்டுகிறது. வராக அவதாரம் பற்றி திருவாய்மொழி நிரப்பச் செப்பும். ஆண்டாள் கூட பெருமாளை இதை வைத்துக் கிண்டலடிப்பாள். ஆனால், அது முதலை, அது வருணன் என்று எப்படிச் சொல்கிறீர்கள். புரியவில்லை!
கவியரசு கண்ணதாசன் கட்டுரை இது: (அர்த்தமுள்ள இந்துமதம்):(கவியரசு சேலத்தில் திராவிட இயக்கத்தில் இருந்தபோது ஜலகண்டாபுரம் கண்ணன்பேரில் கண்ணதாசன் ஆனார். பின்னாளில் கண்ணபிரான்-தாசன் ஆனார்.)
ஆண்டாள் ஒரு வசியக்காரி. உள்ளே நுழைந்தாள் வெளியே வரவே முடியாது. கவியரசு படும்பாடு அக்கட்டுரையில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. சொக்கிப்போய் எழுதியிருக்கிறார்.ஆண்டாள் திருவடிகளே சரணம்!
நா.கண்ணன்