உலக தண்ணீர் தினம்

8 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Mar 20, 2023, 5:42:59 AM3/20/23
to

உலக தண்ணீர் தினம் 


தண்ணீர் நம் வாழ்க்கை 

அதை வீணாக்காதீர்கள் 

மாணவியின் விழிப்புணர்வு கவிதை 

தேவகோட்டை-  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது.

                   ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார் . பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவ மாணவிகளுக்கு உலக தண்ணீர் தினம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி மற்றும் கவிதைப் போட்டி நடைபெற்றது.  கவிதை சொல்லுதல் போட்டியில் லட்சுமி முதலிடத்தையும், அட்சயா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். ஓவிய போட்டியில் கவிஷா  முதல் இடத்தையும் , முகல்யா இரண்டாம்  இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் ஸ்ரீதர் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

                                       தண்ணீரை நாமும்  சேமிக்க வேண்டும் இல்லையெனில் -  நாளை கண்ணீரில் மனிதன் தத்தளிக்க வேண்டும் என்பன போன்ற கவிதைகளை மாணவிகள் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள்  நன்றி கூறினார்.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தொடர்பான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசுகளை வழங்கினார்.ஆசிரியர் ஸ்ரீதர் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

 

வீடியோ :  

 

 https://www.youtube.com/watch?v=NztYCekRPvw

IMG_5588.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages