கழுகு மலை என பெயரிடுவது எங்கும் பலஇட டத்தும் நிகழலாம் கழுகுகள் மனிதர் நடமாட்டம் இல்லாத நெடும் மலை குன்றுகளின் உச்சியில் கூட்டுக்கட்டி தன இனத்துடன் வாழும் என்பது பலரும் அறிந்ததுவணக்கம் ஐயாகழுகுமலைக்கு அப்பெயர் வரக்காரணம் அம்மலை சமணர் கழகம் இருந்த மலை என்பதால் தான் .வெட்டுவான் கோயிலில்-அதாவது வேட்டுவன் கோயிலில் உள்ள தீர்த்தங்கரர்களின் புடைப்புச்சிற்பங்கள் இதை உறுதி செய்கின்றன .மக்கள் கழகம் என்ற சொல்லையும் பொருளையும் மறந்த காலத்தில் தமக்கு மிகவும் பரிச்சயமான கழுகின் பெயரை அம்மலைக்கு உரியதாக்கிவிட்டனர் .தமிழகத்தில் இவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற மலைகள் பிறவும் இருக்கின்றன .சங்கஇலக்கியம் சுட்டும் ஏழில் மலை நம் முன்னோர் உச்சரிப்பில் எலிமலை ஆனதால் இன்று மூஷிகமலை என்று வழங்குகிறது .இக்கருத்துக்கள் எனது சொந்தக் கருத்துக்கள் அல்ல .சில ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்த நூலின் பெயரும் ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை.ஞாபகமறதிக்கு வருந்துகிறேன் .கண்மணி
NG> அண்மைக்காலத்தில் யாராவது எழுதிய கருத்தாக இருக்கவேண்டும்.
சமணர்கள் “கழகம்” என்று பெயர் வைப்பார்களா?>
அண்மைக்காலத்து நூலில் தான் வாசித்த நினைவு .சமணர்கள் கழகம் என்று பெயர்
வைப்பார்களா?மாட்டார்களா?என்பதற்கு என்னால் விளக்கம் சொல்ல
இயலவில்லை.
ஆனால் அருணகிரிநாதர் காலத்திற்கு முன்னரே;அரும்பதவுரைகாரர்
காலத்திலேயே பண்டைத் தமிழக ஊர்கள் பல தம் பெயர்க்காரணம்
மறக்கப்பட்டுவிட்டன.வடமொழிப்பெயர் பெற்றுவிட்டன .
1-ஏழில் மலை -எலிமலை >மூஷிகமலை
2-முதிர மலை -குதிரை மலை >குத்ரமூஹ
3-பண்ணி மலை -பன்னி மலை (பன்றி மலை )>வராககிரி
4-வெண்குன்று >தவளகிரி
தமிழ்ப் பண்பாட்டில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மாற்றமாக இதை நான்
கருதுகிறேன் .இதனால் கழகமலை என்றபெயர் வழங்கியிருக்க வாய்ப்பு உண்டு.
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+unsubscribe@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் வசிக்கும் சிவகாசியிலிருந்து கழுகுமலை 30கி.மீ.தூரத்தில் உள்ளது.6ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தோடு ஒரு மாலை வேளையைக் கழிக்க அங்கு சென்று வந்தேன் .சிறிய குன்று .அடிவாரத்தில் ஒரு கோயில்.உள்ளே முருகப்பெருமானைப் பார்த்ததாக நினைவு .நான் ஆராய்ச்சி நோக்குடனோ ஆவணப்படுத்தும் நோக்குடனோ செல்லவில்லை .அதனால் இந்த கோபுரத்தைப் பற்றி என்னால் கருத்துரைக்க இயலவில்லை .மீண்டும் ஒருமுறை அங்கு சென்று இந்தப்படத்தைக் கையோடு கொண்டுபோய் ஒப்பிட்டால் தான் முடியும்.குன்றின் மேல் தான் சமண தீர்த்தங்கரர் புடைப்புச்சிற்பங்களும் ஒரு குடைவரைக் கோயிலும் உள்ளன.அந்தக் குடைவரைக்கோயில் ஒரு masterpiece.எனக்கு வேறு சொற்கள் கிடைக்கவில்லை .வேறு எங்கும் அப்படி ஒரு திறமையான கைவினையை நான் கண்டதில்லை .மாமல்லபுரத்துக் குடைவரைக்கோயிலைகள் வேறு வகை .எங்கள் ஊரில் வெட்டுவான் கோயில் என்று தான் சொல்வோம் வேட்டுவன் கோயில் என்று இந்த இழையில் தான் முதல்முதலாகப் பார்க்கிறேன் .நான் தொல்லியல் துறை சார்ந்தவள் இல்லை .அதனால் எனக்கு அந்த அமைப்பை விளக்கத் தெரியவில்லை .நான் தமிழாசிரியை .மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பொதுத் தமிழ் செய்யுள்தொகுப்பில் அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடல் இடம்பெறும் .அது இந்த முருகன்மேல் பாடப்பட்டது என்பர் .
<பண்ணி மலை என்று ஒரு மலை இருந்ததா? எந்த இலக்கியம் (அ) கல்வெட்டு>கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வராககிரி என்றும் பெயர் உண்டு என்பர் .இப்பெயர்க்காரணம் பற்றி சிந்தித்த போது சங்ககாலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னன் பண்ணி என புறநானூறு கூறுவது நல்ல ஆதாரமாக அமைந்தது.பண்ணி ஆண்ட மலை பண்ணிமலை .பொதுமக்கள் வாய்மொழியில் முயற்சிச் சுருக்கம் காரணமாக பன்னி மலை என்று மருவியிருக்க வேண்டும் .பன்னிமலை ------>பன்றிமலை ------>வராககிரி ஆகியிருக்க வேண்டும் இது எனது சொந்தக் கருத்தாகும் .கண்மணி.
2017-10-30 22:42 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
<பண்ணி மலை என்று ஒரு மலை இருந்ததா? எந்த இலக்கியம் (அ) கல்வெட்டுஎன அறிய ஆவல்>
வராககிரி2017-10-23 18:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
<கழகம் எனச் சமணர்கள் வைக்க வாய்ப்பில்லை>சமணர்கள் அம்மலையில் பல்கலைக்கழகம் நடத்தியதாக சான்றுகள் இருக்கும்போது கழகமலை என்ற பெயரைத்தான் முறைப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் .சமணர்கள் அல்லாதவர் அம்மலைக்கு கழகமலை என்று பெயரிட்டு அழைக்க பல்கலைக்கழகம் இல்லாமல் போன காலத்தில் பொருளும் வரலாறும் மறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நன்கு தெரிந்த கழுகு கழகத்தின் பெயரைப் பிடித்திருக்கலாம் .தமிழ்மக்கள் சொற்பொருளை மறந்து இடப்பெயர்களை மாற்றி விடுவர் என்பதற்கு இன்னொரு சான்று கூறுகிறேன் .மதுரையைச் சுற்றி உள்ள குன்றுகளில் -நாகமலை,ஆனைமலை,பசுமலை ஆகிய மூன்றும் புராணத் தொடர்புடையவை .சமணர் ஏவியதாகக் கதை உண்டு .நாகமலைபார்ப்பதற்கு நாகம் போலவே நீண்டு மேற்குமலைத்தொடருடன் சென்று சேர்கிறது .ஆனைமலை பார்ப்பதற்கு யானை படுத்திருப்பது போலவே தோன்றும் .ஆனால் பசுமலை பார்ப்பதற்கு பசு போல இருக்காது .சமணர் ஏவிய யானை,நாகம்,என்ற கதை அவ்விரு குன்றுகளின் தோற்றத்தை அடியொட்டிப் பிறந்தது .ஆனால் தோற்றம் ஒத்து வராமலேசமணர் ஏவிய பசு குன்றாக மாறியது என்ற கதை தோன்றக் காரணம் என்ன?மலையின் காரணப் பெயரை மறந்தது தான்.நாகமலை கிட்டத்தட்ட மொட்டைப் பாறையாகத் தான் இருந்தது ;இருக்கிறது .ஆனைமலையும் அப்படியே .ஆனால் பசுமலை எனக்கு விபரம் தெரிந்த நாள் முதலாக பசுமையாக இருந்தது;இருக்கிறது.பசுமை +மலை =பசுமலை. பசுமை என்ற சொல்லையும் பசுமலை என்ற பெயர் உருவான முறையையும் மக்கள் மறந்தபோது பசு மலையாக மாறிவிட்டது என்ற கதை உருவாகி விட்டது .கண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம் கணேசனாரே!என்னிடம் தமிழக் கடல் அரங்க,சீனிவாசன் எழுதிய ''காவடிச்சிந்தும் கவிஞன் வரலாறும் ''என்ற நூல் உள்ளது.இப்போது, நான் மஸ்கட்டில் என் மூத்த மகன் வீட்டில் இருக்கிறேன்.வெட்டுவான் வரலாறு தனிச்சுவை கொண்டது. சிற்பிக்கும் அவர் மகனுக்கும் இடையே நடந்தசிற்பங்கலைப் போட்டியில் மகன் வெட்டுப்பட்ட வரலாறு அது.நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
திருமிகு. ஏ.பி.சி. வீரபாகு தொடங்கிய கல்லூரியில் இலந்தையின் ஆசான் ‘நாணல்’ முதல்வராக இருந்தார். வீரபாகு மணிவிழா மலரில் கழுகுமலை பற்றிய கட்டுரை ஒன்று படிக்கலாம்.சம்ஸ்கிருதம் தெரிந்த சந்தவசந்தத்தாருக்கு ஒரு கேள்வி. ”இம்முனிவர்கள் வசித்திருந்த மற்றொரு மலைச்சரிவிலே கிஜ்ஜக்கூடம் ஒன்று. கிஜ்ஜக்கூடம், அதாவது திரீதரகூடம் என்பதற்குக் கழுகுமலை என்பது பெயர். இம்மலைப்பாறைகளில் செதுக்கப்பட்ட படுக்கைகள் காணப்படுகின்றன. ஆனால் பிராமி லிபிக் கல்வெட்டு இல்லை.” கிஜ்ஜகூடம், திரீதரகூடம்” இதனை நாகரியிலோ, ஆங்கிலத்திலோ எப்படி எழுதுவர்? கழுகு என்ற பொருளாக இருக்கும். நன்றி.நா. கணேசன்
தான் பிறந்து வளர்ந்த அழகிய கிராமமான கழுகு மலை குறித்து தன்னுடைய நெஞ்சில் பசுமையாக இருக்கும் நினைவுகளை... நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்.
''தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது வரலாற்றுச் சிறப்பு மிக்க கழுகு மலை. அக்ரஹாரத்தின் மையத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிரே பிரமாண்டமாக உயர்ந்திருந்த மலை, பல அற்புதங்களை தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. மலையைக் குடைந்து உருவாக்கி இருக்கும் கழுகாசலமூர்த்தி என்ற முருகன் கோயில் ரொம்பவும் பிரபலம். தேவரின் தயாரிப்பில் உருவான 'துணைவன்’ என்ற பக்திப் படத்தின் பாடல் காட்சியில், 'கழுகு
மலையில் வாழும் வேலய்யா...’ என்று ஏவி.எம்.ராஜன் பாடும் வரியில் கண்சிமிட்டும் நேரத்தில் அந்தக் கோயில் வந்துபோகும்.
இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம், ரொம்பவும் விசேஷமானது. ஆறு வகையான சூரர்களின் உருவச் சிலைகள் பார்க்கவே பிரமிப்பூட்டும். கனத்த சூரர்களைத் தூக்கி ஆடுவதற்கு என்றே பலசாலி வீரர்கள் பலர் உண்டு. பெரியண்ணத் தேவர் போன்றவர்களுக்கு மட்டுமே அந்தச் சூரர்களுக்குள் புகுந்து பேயாட்டம் போட்டு முருகக் கடவுளைச் சண்டைக்கு இழுக்கும் வல்லமை இருந்தது.
மலையின் பின்புறம் அமைந்து இருக்கும் ஆம்பூரணி (ஆம்பல் ஊரணி என்பது மருவி இப்படி ஆகிவிட்டது!) குளத்தில் இளம் வயதில் என்னுடைய இரு சகோதரிகளுடன் கரம்கோத்து நடந்து சென்றதும், ஆம்பூரணி குளத்தில் மீன்கள் காலைக் கவ்வ குளித்துக் கும்மாளமிட்டதும் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
குளித்து முடித்த பின்னர் வெட்டுவான் கோயில் பக்கம் போவோம். வெட்டுவான் கோயிலின் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தாமரைப் பூவைப் பார்க்கும்போது எல்லாம் என்னுடைய அண்ணன் குமரகுருபரனின் நினைவுவரும். அவர் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போது இந்தத் தாமரைப் பூவில் அமர்ந்து லயித்துப் படித்து ஸ்டேட் ரேங்க் வாங்கினார். நானும் அதே போல முயற்சித்தேன். ம்ஹும்... படித்த பள்ளியில் மட்டுமே முதலாவதாக வர முடிந்தது!
கழுகு மலையின் மலை, பல தலைமுறை கடந்த பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டது. மலை உச்சிக்குச் செல்லும் வழியில் பஞ்சுப் பொதி அடுக்குப் பாறை, சோற்று உருண்டைப் பாறை என ஒவ்வொரு பாறைக்கும் கூட தனித் தனிக் கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. மேலே சமணர் பள்ளியறை ஒன்று உண்டு. சமண மதத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள் ஏராளமாக இங்கு இருக்கின்றன.
சமண மதத் துறவிகள் இந்த மலைப் பகுதியில் வசித்து இருக்கிறார்கள். பகல் நேரத்தில் மலை அடிவாரத்தில் வசித்த பொது மக்களின் குழந்தைகளை மலைப் பகுதிக்கு அழைத்துவந்து கல்வி அறிவு புகட்டி இருக்கிறார்கள்.
முருகன் கோயிலின் பக்கவாட்டில் இருக்கும் மிகப் பெரிய தெப்பக் குளம் வசீகரமானது. ஊர் மக்களின் தாகம் தீர்த்தது இது. மழைக் காலத்தில், வெளியில் இருந்து வரும் தண்ணீர், பசு சிலையின் வாயில் இருந்து தெப்பக் குளத்துக்குள் கொட்டுவதைப் பார்ப்பதே தனி அழகு. நிரம்பி வழியும் தெப்பக் குளத்தையும் பார்த்து இருக்கிறேன். குடி நீருக்கே வழி இல்லாமல் காய்ந்து வறண்ட குளத்தையும் பார்த்து இருக்கிறேன். ஒரு குடம் தண்ணீருக்காக வரிசையில் கால்கடுக்க மணிக்கணக்கில் காத்து நின்ற கொடூரமான நாட்கள் அவை.
பன்னிரண்டு வருடங்கள் மட்டுமே நான் கழுகு மலையில் வசித்து இருந்தாலும் என்னுடைய படைப்புகளின் ஊற்றுக் கண் இங்கே இருப்பதாகவே உணர்கிறேன். இங்கு நடக்கும் சூரசம்ஹாரத்தை அடிப்படையாகக்கொண்டு நான் எழுதிய சிறுகதையைப் படித்துவிட்டு எழுத்தாளர் வண்ணதாசன் பாராட்டியபோது, ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அது என் ஊருக்கே கிடைத்த பெருமை!''
- ஆண்டனிராஜ்
<கழுகுமலை = கிஜ்ஜகூடம், க்ருத்ரகூடம் (கிரிதரகூடம்) என சமணசமயத்தவர்கள் (ஜைநர், பௌத்தர்கள்) பெயரிட ஒரு காரணம் உண்டு. அவர்கள் சாக்கிய குலத்தவர்கள். சாக்கிய நாயனார், புத்தரை சாக்கிய முனி என்பர், சாக்கியர்களில் ஒருபிரிவினரான பார்சிகள் உடலை எரிக்காமல் மலையுச்சியில் போட்டு கழுகுகள் உண்ண விட்டுவார்கள். சாக்கியமுனி அறவுரை நிகழ்த்திய மலை கழுகுமலைதான். பீகாரில். அவ்வாறு சமணர்கள் பெயரிட்டுள்ளார்கள் எனக் கருதுகிறேன். பல்கலைக்கழகம் போன்ற கழகம் என சமணர்கள் பெயரிட வாய்ப்பில்லை. ஏனெனில், கழகம் என்ற சொல்லை எப்படி கி.பி. முதலாயிரத்தில் (First Millennium) சமண இலக்கியங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்று பார்த்தால் இது புரியும். த்யூத என்னும் வடசொல் தமிழில் சூது என்றாகிறது. சூது ஆடுமிடம் கழகம். சூது என்ற பிராகிருதச் சொல்லை தமிழில் படைத்து, அதன் இடமாக கழகம் என்று செய்தவர்கள் சமணர்கள். எனவே, தங்கள் பள்ளிகள் அமைந்த இடம் “கழகம்” என்று அச் சமயிகள் பெயரிட மாட்டார்கள். பல சொற்கள் பொருள் மாறிவிட்டன. இப்போது கழகம் என்றால் நல்லபெயர். உ-ம்: தமிழரை 60+ ஆண்டுகளாக ஆண்டுவரும், இனி பல தேர்தல்களில் வெற்றிகொள்ளும் திராவிட கட்சிகள் யாவும் கழகங்கள் ஆக விளங்குவதை அறிவீர்கள். ஆத்தி சூடி என்பது தேவாரத்தில் சிவன் அணியும் மலராக இல்லை. ஆனால், ஆத்தி பார்சுவநாதரின் தீக்ஷாதரு என்பது சமணம். பள்ளிக்கல்வி தமிழ்நாட்டில் கழுகுமலை போன்ற இடங்களில் ஏற்படுத்திய கி.பி. முதலாயிரத்தில் ஔவை என்னும் குரத்தியார் பாடியது ஆத்திசூடி. >..
இந்த விளக்கம் கழுகு மலை என்ற பெயர்க்காரணத்திற்கு பொருத்தமாக உள்ளது .ஏற்றுக்கொள்ளக்கூடியதே .தெளிவு படுத்தியமைக்கு நன்றியுடையேன்கண்மணி .