--
On Monday, September 2, 2019 at 12:39:44 PM UTC-7, kanmanitamilskc wrote:மணிமேகலைப் பாத்திரங்களும் கீதை அறங்களும்
(திருச்செந்தூர் தமிழாய்வு மன்றம் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 1998ல் நடத்திய முதல் கருத்தரங்கில் வாசித்தளித்த இவ் ஆய்வுக்கட்டுரை ஆய்வுப்பொழில் என்னும் கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப்பட்டது.)
0.0 முன்னுரை
சமயம் சார்ந்த அறநூல்களுள் ஒன்று பகவத்கீதை; 18 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஸாங்க்ய யோகம் என்ற தலைப்பில் உள்ள 2ம் அத்தியாயக் கருத்துக்களுக்கு மணிமேகலைக் காப்பியப் பாத்திரங்கள் விளக்க மாதிரிகளாக அமையும் பாங்கைக் காணலாம்.
1.0 உதயகுமரன்
மணிமேகலைக் காப்பியத் தலைவன் உதயகுமரன். காப்பியத்தின் இடையிலேயே உயிரை இழக்கும் இப்பாத்திரம் தொடக்கத்திலிருந்தே வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. பாத்திரம் அறிமுகமாகும் போது காட்டப்படும் மேன்மை நிலையையும், தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகள் வீழ்ச்சிப் போக்கு உடையனவாக இருத்தலையும் காணலாம்.
1.1 பாத்திர அறிமுகம்- மேன்மை நிலை
காப்பியத்தின் தொடக்கத்தில் வெறி கொண்டு ஓடிய பட்டத்து யானையின் சினத்தை அடக்கி வருபவனாகவே சாத்தனார் உதயகுமரனைக் காட்டுகிறார். (பளிக்கறை புக்க காதை- அடி.- 27-50) மன்னன் மகனாகிய அவன் தன் அரசியல் பொறுப்பிற்கேற்ப மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறான். கடமையில் இருந்து தவறாத அவன் பண்பு அவனை முதலில் ஏற்றமிகு தலைவனாகவே காட்டுகிறது.
सुख दु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।
ततो युद्धाय योज्यस्य नैवं पापमवाप्स्यसि ।।
"இன்பத்தையும் துன்பத்தையும் பேற்றையும் இழப்பையும் வெற்றி
தோல்விகளையும் சமமாகக் கருதி மனஅமைதியுடன் இப்போரினை
மேற்கொள்ள ஆயத்தப்படு. நீ பாவத்தை அடைய மாட்டாய்"
கண்மணி, தேவநாகரி எழுத்துக்களை அறிந்தோர் மட்டுமே அந்த எழுத்தில் உள்ளதைப் படிக்க இயலும்.सुख दु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।
ततो युद्धाय योज्यस्य नैवं पापमवाप्स्यसि ।।
என்பதை
ஸுக து:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ.
ததோ யுத்தாய யோஜ்யஸ்ய நைவம் பாபமவாப்ஸ்யஸி ..
"இன்பத்தையும் துன்பத்தையும் பேற்றையும் இழப்பையும் வெற்றி
தோல்விகளையும் சமமாகக் கருதி மனஅமைதியுடன் இப்போரினை
மேற்கொள்ள ஆயத்தப்படு. நீ பாவத்தை அடைய மாட்டாய்"
என்று எழுதினால் புழக்கத்தில் உள்ள சமஸ்கிரத வார்த்தைகளை அடையாளம் கண்டு படிப்பவர் அறிய முடியும்; அதனை மனனம் செய்ய விரும்புபவருக்கும் உதவும்.
உங்களுக்கு விருப்பமிருந்தால் இவ்வாறு மாற்ற உதவக்கூடிய தளம்
அக்ஷரமுகா இணைப்பு
http://www.virtualvinodh.com/wp/aksharamukha/
இதனை எனக்கு எனது தோழி பார்வதி ராமச்சந்திரன் சொல்லித் தந்தார்.
(ஸ்லோ.- 38) என்று அர்ச்சுனனுக்குக் கண்ணன் கூறும் உபதேச மொழிகளுக்கு
ஏற்ப உதயகுமரன் தனக்கு நேரும் இன்பதுன்பத்தைப் பற்றியும், புகழ் அல்லது இழப்பைப் பற்றியும், வெற்றி தோல்வியைப் பற்றியும் நின்று சிந்திக்கவில்லை. ஆனால் தன் நாட்டிற்குத் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்கிறான்.
1.2.0 உதயகுமரன் வீழ்ச்சி- குறைபாடு
1.2.1 புலனடக்கமின்மை
களிறடக்கி வரும் உதயகுமரன் எட்டிகுமரனிடம் முதலில் பேசும் உரையாடலில் காப்பியத் தலைவி மணிமேகலை இடம் பெறுகிறாள். அவள் பெயரைக் கேட்டவுடன் உதயகுமரனுக்கு அவள் அழகு நினைவில் எழ; அவளை அடையத் துடிக்கும் ஆசையும் மிகுதியாகிறது. (மேற். -அடி. -46-77)
ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषू पजायते।
सङ्गात संजायते कामः कामातक्रोधो भिजायते।।
"பொறிகளின் இன்பத்திற்காக ஒரு மனிதன் வாழ்கின்ற போது அவற்றிற்காக அவனுள் கவர்ச்சி- பற்றுதல் எழுகிறது. கவர்ச்சியினின்று அவா- உடைமையாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் இச்சை எழுகிறது."(மேற்.- 62)
என்ற கீதை வாசகத்திற்கேற்ப உதயகுமரன் புலனடக்கமின்மையால் மணிமேகலையின் மேல் ஆசைப்பட்டு; அவள் தோழி சுதமதியிடம் தகாத வார்த்தைகளைப் பேசுகிறான். (மேற்.- அடி.- 61-104) அவள் கூறும் அறிவுரைகளும் அவன் மனதை மாற்றவில்லை. ‘சித்திராபதி மூலமாக அவளை அடைவேன்’ என்னும் வெறி மிகுவதைக் காண்கிறோம். (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை- அடி.- 81-82)
1.2.2 புலனடக்கமின்மையின் விளைவு:
इन्द्रियाणां हि चरतां यन्मनो नुविधीयते
तदस्य हरति प्रज्ञां वायुनार्वमिवां मसि ll
"அலையும் இந்திரியங்களின் ஓர் ஏக்க வெறியினுக்கு மனம்
தள்ளப்பட்டுப் போயிருக்கும் போது; கடலலை மேல் காற்று ஒரு
தோணியை அடித்துச் செல்வதைப் போல; இந்த ஏக்கவெறி
மனிதஅறிவை அடித்துக் கொண்டு போய் விடுகிறது."(மேற்.- 67)
என்று கீதை புலனடக்கமின்மை பற்றிப் பேசுகிறது. இக்கூற்று உதயகுமரன் வாழ்வில் அப்படியே நிகழ்வதைக் கதைப்போக்கில் காண்கிறோம். தான் கண்ட கனவின் விளைவாக மணிமேகலையைத் தொல்லை செய்யாமல் இருந்த உதயகுமரனை; சித்திராபதி வந்து தூண்டியவுடன்; மீண்டும் அவளை நாடிச் செல்கிறான். புலனடக்கமின்மை காரணமாக அவன் மனம் அலைபாய்ந்தமையே இதற்குக் காரணமாகும். சித்திராபதியின் சொற்களாகிய காற்று அவன் மனத் தோணியைத் தன் போக்கில் இழுத்துச் சென்று விடுகிறது. (உதயகுமரன் அம்பலம் புக்க காதை-அடி.- 55-112) இதன் விளைவாக உலக அறவிக்கு அவளைத் தொடர்ந்து செல்கிறான். காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலையிடம் அவள் உருமாறியிருந்த செய்தியை ஊகித்துச் சென்று பேசியபோது; அங்கு வந்த விஞ்சையன் பிறழ உணர்ந்து வாளால் வீழ்த்துகிறான். (காதை- 18,19,20) இவ்வாறாகப் புலனடக்கமின்மை காரணமாக ஆசை மிகுந்து; அது வெறியாகித் தன் கட்டுக்குள் அடங்காமல் அறிவினை இழந்த நிலையில் தன் முடிவை எய்துகிறான் உதயகுமரன்.
2.0 மணிமேகலை
காப்பியத்தலைவி மணிமேகலை அறிமுகத்திலிருந்து இறுதிவரை படிப்படியாக உயர்ந்து உன்னதநிலை அடைகிறாள்.
2.1 அறிமுகநிலையும்; புலனடக்கத்தால் வளர்ச்சியும்
தாயின் வாய்மொழியாகத் தன் தந்தைக்கு நேர்ந்த முடிவு கேட்டு மனம் கலங்கிக் கண்ணீர் வடிப்பவளாகவே முதலில் அவளை அறிமுகம் செய்கிறார் சாத்தனார். (மலர்வனம் புக்க காதை- அடி.- 1-15) ஆனால் இதையடுத்து நிகழ்வன அனைத்தும் படிப்படியாக அவள் பண்பட்டவளாக மாறும் வளர்ச்சிப் போக்கினைக் காட்டுகின்றன.
"கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலையாட்டி என்று
இகழ்ந்தனனாகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே யாயின் கெடுக அதன்திறம்" (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை- அடி. - 66-71)
என்று தன் மனத்தைத் தானே அடக்குபவளாக மணிமேகலை காட்சியளிக்கிறாள்.
यदा संहरते चायं कूर्मो ङ्गानीव सर्वश
नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ll
"ஆமை தனது எல்லா அவயவங்களையும் உள்ளிழுத்துக் கொள்வது
போல் மனதில் மறைந்திருக்கும் ஆசை எண்ணங்கள் திரும்பவும் நினைவுபடுத்தப்படும் பொழுது பொறிகளின் இன்பங்களுக்குரிய கவர்ச்சிகளினின்றும் தனது பொறிகளை உள்ளடக்கிக் கொள்வோன் எவனோ அவனது அறிவே உறுதியான அறிவாகும்." (மேற். -58) என்று
அர்ச்சுனனுக்காகக் கண்ணன் கூறும் வாக்கியத்திற்கேற்ப மணிமேகலை தன் மனதைக் கட்டுப்படுத்தி உதயகுமரன் மேலுள்ள காதலை முளையிலேயே கிள்ளி எறிகிறாள். இதன் விளைவாக ஒரு நிலைப்பட்ட அறிவுடையவளாக வளர்வதை நாம் காப்பியப் போக்கில் காண்கிறோம்.
2.2 புலனடக்கத்தின் விளைவு நிலைப்பட்ட அறிவு
य:सर्वत्रानभिस्नेहस तत्त त्प्राप्य शुभाशुभम l
नामिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ll
(தொடரும்)
சக
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/108d0323-1fc6-41a9-8006-7835b41ba800%40googlegroups.com.
கீழ்க்காணும் இக்கருத்துகளில் உள்ள முரண் வியக்க வைக்கிறது!!!////
எந்த இந்திய பாஷையிலும் நவீன விஞ்ஞான,தொழில்நுட்ப ஆய்வுகள் நிகழ்வதில்லை. கல்லூரிகளிலும் உயர் மருத்துவம்,விஞ்ஞானம், எஞ்சினீரிங், ஐடி உயர்கல்வி இல்லை.
///////
ஒட்டுமொத்தமாகஇந்தியா வல்லரசு ஆக, ஆங்கில லிபியும் முக்கியப் பங்காற்ற வல்லமை கொண்டது.
///இக்கால அறிவியல், மருத்துவம், பொறியியல் இன்னபிற என எதுவும் இந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்பதுதான் பட்டாங்கு என்றால்அனைத்து மொழிகளிலும் உள்ள எவற்றை ஆங்கில எழுத்துருவில் மாற்றிப் படித்து இந்தியா வல்லரசு ஆக வேண்டும்?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/af2512a0-c7c6-487e-88b1-31e8b9f9ff6a%40googlegroups.com.
///இந்தியா வல்லரசு ஆக, ஆங்கில லிபியும் முக்கியப் பங்காற்ற வல்லமை கொண்டது ///அந்த எழுத்துக்கள் ஒலியியல் குறியீடுகள். ஆங்கில எழுத்துக்கள் என்று சொல்வதே தவறு.Your way of expression is wrong.Those symbols are there in the phonetic script which is common for all the languages in the world.மேலுள்ள இரண்டு வரிகளிலும் இருப்பவை ஆங்கில எழுத்துக்கள்.Sk
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvvieuW6kTa4SD4gF6GpxVwJBKjr_D2T_B6iDGrXi5Njg%40mail.gmail.com.
இந்த ISO15919 பற்றி ஏற்கெனவே ஒருமுறை இன்னொரு இழையில் சொல்லி இருந்தீர்கள்.நான் அப்போது சொன்னதையே இப்போதும் சொல்கிறேன்.இங்கே ஒலிபெயர்த்து எழுதியிருப்பது phonetic script தான்.நீங்கள் எதோ ஒரு குழுவில் சேர்ந்திருந்து ISO எழுத்துப் பெயர்ப்புக்கு நிர்ணயித்த குறியீடுகள் 30ம் (12உயிர் &18 மெய்) நாங்கள் 1976ல் முனைவர் முத்துச்சண்முகனார் புத்தகத்தில் படித்த ஒலியியல் குறியீடுகளே.நாங்கள் படிப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னரே அவர் தன் மொழியியல் புத்தகத்தை எழுதி விட்டார்.அவர் புத்தகம் எழுதும் முன்னரே மொழியியல் & ஒலியியல் குறியீடுகள் வல்லுநர்களால் நிர்ணயிக்கப்பட்டு உலக வழக்கத்திற்கு வந்து விட்டன. மாணவர் உலகம் அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி விட்டன; இன்றும் பயன்படுத்துகின்றன.அப்படி இருக்கும் போது எதற்காக இந்த ISO ------ எல்லாம்? புரியவில்லை.இங்கே நீங்கள் ஒலிபெயர்த்து எழுதி இருக்கும் ஸ்லோகத்தில் naivam என்ற பதத்தில் /m / ஒலியியல் குறியீட்டிற்கு மேல் புள்ளி வைத்துள்ளீர்கள்.அது தேவை அற்றது. नैवं என்ற பதத்தில் மேலே உள்ள புள்ளிக்கு /ம் / என்று ஒலிப்பு உண்டு, m போட்டு மேலே புள்ளி வைக்க வேண்டிய தேவை இல்லை.நாங்கள் வகுப்பில் அமர்ந்து எங்கள் ஆசிரியர் கற்றுக் கொடுத்த phonetic script ஐ நீங்கள் பயன்படுத்திக் கொண்டதில் தவறில்லை.ஆனால் phonetic script என்ற பெயரை விட்டுவிட்டு புதிதாக அதற்கு அதிகார பூர்வமாக வேறு பெயரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.phonetic script ஏற்கெனவே வாசித்துப் பழகியவருக்கு இந்த ஒலிபெயர்ப்பை வாசிப்பது எளிது தான்.சக
Added by ജിജാ സുബ്രഹ്മണ്യൻ on November 4, 2010 നോ വേക്കൻസി നോ വേക്കൻസി നോ വേക്കൻസി ബീയേക്കാരനും നോ വേക്കൻസി ബി എസ് സിക്കാരനും നോ വേക്കൻസി എം എ ക്കാരനും നോ വേക്കൻസി എം എസ് സിക്കാരനും നോ വേക്കൻസി ബീയേക്കാരനും ബി എസ് സി ക്കാരനും എം എ ക്കാരനും എം എസ് സിക്കാരനും ഒന്നാം ക്ലാസ്സു വാങ്ങിയോനും നോ വേക്കൻസി നോ വേക്കൻസി ഒന്നാം റാങ്കിൽ പാസ്സായോനും നോ വേക്കൻസി നോ വേക്കൻസി (ബീയേക്കാരനും..) കുട്ടികൾ ദിനം പെരുകുന്നു നാട്ടിൽ കക്ഷി തൻ എണ്ണം കൂടുന്നു നാട്ടിൽ വണ്ടികൾ തിങ്ങി ഒഴുകുന്നു റോഡിൽ വഞ്ചന എന്നും വളരുന്നു എങ്കിൽ (കുട്ടികൾ..) (ബീയേക്കാരനും..) നന്മകൾ കത്തിയെരിയുന്നു മണ്ണിൽ ധർമ്മമാം പക്ഷി കരയുന്നു വിണ്ണിൽ ദൈവമേ നിന്റെ പേരിൽ മതങ്ങൾ നിത്യവും രക്തം ചൊരിയുന്നു തമ്മിൽ (ബീയേക്കാരനും..) |