மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர், 1956

117 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 24, 2023, 10:31:45 AMSep 24
to Santhavasantham
மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர், 1956
-----------------------------------

பாலவநத்தம் கிழார் பொ. பாண்டித்துரைத் தேவரும், இராமநாதம் சேதுபதி மன்னரும் ஆதரவு நல்கி, மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ல் தொடங்கியது. பல தமிழ் இலக்கியங்கள் முதன்முதலாக அச்சுவாகனம் ஏறின. செந்தமிழ் என்னும் அரிய ஆய்விதழில் நல்ல கட்டுரைகள். புலவர் தேர்வு முறையாக நடந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பல பெரும்புலவர்கள். மகாவித்துவான் ரா. ராகவையங்கார், மு. ராகவையங்கார் தலைமை வகித்தனர். இருவரும் எழுதிய இரு நூல்களில் தான் கரூர் சேர நாட்டின் தலைநகராக விளங்கியமை வெளிப்பட்டது. சங்க காலத்தில் வஞ்சி மாநகர் எனக் கரூர் அழைக்கப்பட்டது. அரண்மனை இருந்த பகுதி கருவூர். இப்போது “Downtown" என அமெரிக்க நகரங்களில் இருப்பது போன்றதாகும். பின்னாளில், தொல்லியல்துறையினர் சங்க கால வஞ்சி கரூர் என அகழாய்வுகள், நாணயவியல் கொண்டு நிறுவினர் என்பது 20-ம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு வரலாறு. ஆக, மதுரை, உறந்தை, வஞ்சி மூவேந்தர் தலைநகரங்கள் தமிழ் இன்றும் உள்ள தமிழ்நாட்டின் பெருநகரங்கள்.  வஞ்சிக்காண்டம் என்று தன் தலைநகர் அரண்மனையில் வாழ்ந்து சிலப்பதிகாரத்தின் இறுதிக்காண்டத்தை அமைத்துள்ளார் இளங்கோவடிகள். குலசேகர ஆழ்வார் காலத்திற்குப் பின் கேரளா பக்கம் சேரர்கள் தலைநகரம் மாறியது.

தற்போது மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா நிகழ்ச்சிகள், அதில் நடந்த சம்பவம் பற்றி, பத்திரிகளில் செய்திகள் அடிபடுகின்றன.
மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர் 1956-ல் அச்சாகியது. தமிழவேள் பி. டி. இராசன் பதிப்பாசிரியர். 11 பேராசிரியர் கட்டுரைகள். தொகுப்புக்குப் பேரா. அ. கி. பரந்தாமனார் உதவியிருக்கிறார். மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர் (1956) வாசித்தருள வேண்டுகிறேன்:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0015792_மதுரைத்_தமிழ்ச்_சங்க_மலர்.pdf

தெரிவு:
நா. கணேசன்
https://nganesan.blogspot.com

N. Ganesan

unread,
Sep 25, 2023, 1:06:10 PMSep 25
to Santhavasantham
Sir P. T. Rajan passed away on 25 Sept 1974. So, today is the 49th death anniversary of his.
Thanks, Sounder (Dallas, TX) for converting to வெள்ளுரை (plain text). 
PTRajan_death_anniversary.jpg
Madurai Tamil sangam malar_20230925.txt

N. Ganesan

unread,
Sep 25, 2023, 5:38:29 PMSep 25
to Santhavasantham
மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா 1956-ல் நிகழ்ந்துள்ளது. அதுவமையம், சர் பி. டி. ராஜன் அண்ணாவை அழைத்துப் பேசச் செய்துள்ளார். இது மதுரை வடக்கு ஆடி வீதியிலே நடந்துள்ளது. அதன் பின் முத்துராமலிங்கத் தேவர் எதிர்த்துள்ளார். அண்ணாதுரை போன்றோர் பேச்சைத் தமுக்கம் மைதானத்தில் நடத்துக என பிடிஆரிடம் கேட்டுள்ளார். அதன்படி வடக்காடி வீதியிலே விழா நிறுத்தப்பெற்றது. தமுக்கம் மைதானத்தில் நிகழ்ச்சிகள். 20ம்-நூற்றாண்டு நடுவிலே நடந்த இந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்த்த சிலர் கட்டுரைகள் தந்துள்ளனர் எனத் தெரிகிறது. அவற்றை ஸ்கான் செய்து வலையேற்றினால், அப்போதைய தமிழ்ப் புலவர்கள், தலைவர்கள் கருத்துக்களை நாம் அறிவோம். ராஜாஜி விழாவைத் தொடங்கிவைத்துள்ளார். அதுவும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது (உ-ம்: கவிஞர் கண்ணதாசன், தென்றல் இதழிகையில் எழுதிய தலையங்கம், ...) . தேடுகிற சில ஆவணங்கள்:

(1) ஏ. ஆர். பெருமாள், முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத்தேவர்.
இதில், மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா நிகழ்வுகள் பற்றி உள்ள பக்கங்கள் என்ன?

(2) ஃபார்வடு பிளாக் முன்னாள் தலைவர் வி.எஸ். நவமணி பேட்டி https://kamadenu.hindutamil.in/politics/anna-didnt-apologize-in-madurai-devar-issue-says-forward-bloc-navamani
”ப.திருமலை என்னும் மூத்த பத்திரிகையாளர் எழுதிய ‘மதுரை அரசியல்’ என்னும் புத்தகத்தில் இச்சம்பவத்தை விவரித்துள்ளார்.

(3) புகழ்பெற்ற எழுத்தாளர் நா.பார்த்தசாரதி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் மாணவர். அவரும் இச்சம்பவத்தை அப்படியே கட்டுரையாக எழுதியிருந்தார். அக்கட்டுரை 1974-ல் கோரிப்பாளையத்தில் தேவர் சிலை திறப்பு விழா நடந்தபோது வெளியிடப்பட்ட மலரில் பிரசுரிக்கப்பட்டது.

(4) அதுபோல பி.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை கமல தியாகராஜன் என்பவர் எழுதியுள்ளார். ‘தமிழவேள் பி.டி.ஆர். வாழ்க்கை வரலாறு’ என்ற அந்தப் புத்தகத்திலும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ”

(5) பேரா. காவ்யா சண்முகசுந்தரம், பசும்பொன் களஞ்சியம் வெளியிட்டார். அதில், மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா நிகழ்ச்சி பற்றி என்ன எழுதி இருக்கிறது?

இந்த ஐந்து கட்டுரைகளும் அதன் ஆசிரியன்மார் எழுதியவாறே இணையம் ஏறின், ஆய்வாளருக்கு உதவும்.

நன்றி,

நா. கணேசன்
https://nganesan.blogspot.com
On Sun, Sep 24, 2023 at 9:31 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர், 1956
------------------------------
-----

பாலவநத்தம் கிழார் பொ. பாண்டித்துரைத் தேவரும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் ஆதரவு நல்கி, மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ல் தொடங்கியது. பல தமிழ் இலக்கியங்கள் முதன்முதலாக அச்சுவாகனம் ஏறின. செந்தமிழ் என்னும் அரிய ஆய்விதழில் நல்ல கட்டுரைகள். புலவர் தேர்வு முறையாக நடந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பல பெரும்புலவர்கள். மகாவித்துவான் ரா. ராகவையங்கார், மு. ராகவையங்கார் தலைமை வகித்தனர். இருவரும் எழுதிய இரு நூல்களில் தான் கரூர் சேர நாட்டின் தலைநகராக விளங்கியமை வெளிப்பட்டது. சங்க காலத்தில் வஞ்சி மாநகர் எனக் கரூர் அழைக்கப்பட்டது. அரண்மனை இருந்த பகுதி கருவூர். இப்போது “Downtown" என அமெரிக்க நகரங்களில் இருப்பது போன்றதாகும். பின்னாளில், தொல்லியல்துறையினர் சங்க கால வஞ்சி கரூர் என அகழாய்வுகள், நாணயவியல் கொண்டு நிறுவினர் என்பது 20-ம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு வரலாறு. ஆக, மதுரை, உறந்தை, வஞ்சி மூவேந்தர் தலைநகரங்கள் தமிழ் இன்றும் உள்ள தமிழ்நாட்டின் பெருநகரங்கள்.  வஞ்சிக்காண்டம் என்று தன் தலைநகர் அரண்மனையில் வாழ்ந்து சிலப்பதிகாரத்தின் இறுதிக்காண்டத்தை அமைத்துள்ளார் இளங்கோவடிகள். குலசேகர ஆழ்வார் காலத்திற்குப் பின் கேரளா பக்கம் சேரர்கள் தலைநகரம் மாறியது.

தற்போது மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா நிகழ்ச்சிகள், அதில் நடந்த சம்பவம் பற்றி, பத்திரிகைகளில் செய்திகள் அடிபடுகின்றன.

N. Ganesan

unread,
Sep 27, 2023, 7:37:00 AMSep 27
to Santhavasantham, housto...@googlegroups.com, Dr. Y. Manikandan, sirpi balasubramaniam, Thevan, Vedachalam V
தி ஹிண்டு பத்திரிகை புகழ்மிக்க பத்திரிகை. 1878-ல் தொடங்கி 135+ ஆண்டுகளாய் இன்றும் அச்சாகும் பத்திரிகை. இணையத்திலும் இருக்கிறது. அதன் தமிழ்ப் பதிப்பில் திரு. வி. எஸ். நவமணி அவர்கள் (தமிழக ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவர்) மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா நிகழ்ச்சியில் நிகழ்ந்தவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார். உ-ம்: நேதாஜியின் தோழர், “தேசியம் உடல், தெய்வீகம் உயிர்” என  வாழ்ந்த உ. முத்துராமலிங்கத் தேவர் மரணத்தின்போது அண்ணா ஆற்றிய உரைப்பகுதி:
https://kamadenu.hindutamil.in/politics/anna-didnt-apologize-in-madurai-devar-issue-says-forward-bloc-navamani
”1963-ல் தேவர் இறந்துபோகிறார். அப்போது நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய அண்ணாதுரை, “ இப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் உள்ளனர். நான் ஈரோட்டில் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய போது, அங்கே தேவர் பேச வருவதாகச் சொன்னார்கள். இந்த ‘தென்பாண்டி சிங்கம்’ எப்படி இருக்குமென பார்க்க கூட்டத்தோடு நானும் நின்றேன்.

அப்போது பிடரி சிலிர்க்கும் சிங்கமென, துள்ளல் நடையுடன் மேடையேறிய தேவரைக் கண்டு ‘தென்பாண்டி சிங்கம்’ என்ற பெயர் இவருக்கு சாலப் பொருந்தும் என்று உணர்ந்தேன். அப்படி சிங்கம் போல இருந்த தலைவரை, அடையாளம் தெரியாமல் தனிமை சிறையில் அடைத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் நஞ்சு கொடுத்து, எலும்பும் தோலுமாக இன்று நம் கையில் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் அரசு.

தேவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி, வரும் தேர்தலில் காங்கிரஸை வேரோரும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவதுதான்” என்றார். அதற்கு முன்னர் இந்த ‘ஸ்லோ பாய்சன்’ பேச்சே இல்லை. ” திராவிட இயக்கக் கட்சிகள் பத்திரிகைகளில் அண்ணாவின் முழுப்பேச்சு இருக்கும். அதனை இணைய உலா காணச்செய்தல் வேண்டும்.

இப்பேட்டியில் திரு. வி. எஸ். நவமணி குறிப்பிடும் ’தீபம்’ நா. பார்த்தசாரதி அவர்களின் 1974-ம் ஆண்டுக் கட்டுரை அவரிடம் கேட்டேன். அன்புடன் உடனே அனுப்பி வைத்தார். தீபம் நா. பார்த்தசாரதி அவர்களின் அரிய கட்டுரை தருகிறேன். வாசித்தருள்க. ~NG https://nganesan.blogspot.com

*ஒரு குறிப்பு*: தமிழிலே உள்ள மகாபாரதம் வில்லிபுத்தூராழ்வார் செய்தது. அதன் புரவலன் கொங்கர்கோன் வரபதி ஆட்கொண்டான். அவனைக் குறிக்கும் இடங்களில் எல்லாம், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தான் என்று தான் பாடிய தமிழ் இதிகாசத்தில் வில்லிபுத்தூராரும், இதிகாசப் பாயிரத்தில், வில்லிபுத்தூரார் திருமகன் வரந்தருவாரும் பாடியுள்ளனர். எனவே, பாலவநத்தம் ஜமீந்தார் பொ. பாண்டித்துரைத்தேவர் அமைத்த மதுரைத் தமிழ்ச்சங்கம் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்பது சாலப் பொருந்தும்.

Deepam_NP_On_Thevar1.jpeg
Deepam_NP_On_Thevar2.jpeg

N. Ganesan

unread,
Sep 27, 2023, 9:06:08 AMSep 27
to Santhavasantham, housto...@googlegroups.com, Dr. Y. Manikandan, sirpi balasubramaniam, Thevan, Vedachalam V
67329697-Madurai-Tamil-Sangam-Speech_June-2-19561.jpg

N. Ganesan

unread,
Sep 28, 2023, 6:06:47 AMSep 28
to Santhavasantham

1974-ல் மதுரையில் முக்கியமான இடத்தில் பசும்பொன்  உ. முத்துராமலிங்கத் தேவருக்குச் சிலை வைத்தனர். அந்த விழா மலரில், தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய கட்டுரையை, வெள்ளுரையாகத் (plain-text) தருகிறேன். ~NG

https://youtu.be/otWcnla73pA

தென்பாண்டிச் சிங்கம்
  - நா. பார்த்தசாரதி
   "தீபம்" ஆசிரியர்

தேவர் என்ற சொல்லைக் கேட்டதுமே என்னுடைய இளமையில் மதுரை நகரத்தின் தேசிய மேடைகளில் நான் கேட்ட சிங்க நாதத்தை நினைவு கூர்கிறேன். நல்ல உயரமும், கம்பீரமான தோற்றமும், அருளும் வீரமும் பொலிவும் திருமுகமுமாகத் தேவர் அவர்கள் மக்களுக்கு முன்நின்று முழங்கும் காட்சி மனக்கண்ணில் விரிகிறது. தென்பாண்டிச் சீமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயருக்கு ஒரு மந்திர சக்தியே உண்டு. இப்போது தேவருக்கு மதுரையில் வைக்கிற சிலை அவரை அப்படியே நேரில் பார்ப்பது போலிருக்கிறது. அதே நிமிர்ந்த நோக்கு. சிங்கத்தின் பிடரி மயிர் போல் காதோரம் சரியும் அழகு முடி. கம்பீரத் திருவுருவம். மதுரை நகர மக்களுக்கும் தமிழகத்துக்கும் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், அறிவுறுத்துகிற சின்னமாகத் தேவரின் திருவுருவச்சிலை விளங்கும் என்பதில் ஐயமில்லை.

அப்போது - அந்த நாளில் ஏ. ஆர். ஹைஸ்கூல் என அழைக்கப்பட்டு வந்த இந்நாளைய மதுரைக் கல்லூரிக் கலாசாலையில் நான் மாணவனாகக் கற்று வந்தேன். மதுரையில் கூடலழகப் பெருமாள் கோவிலுக்கு முன்னிருந்த சந்நிதித் தெருவில் எங்கள் குடும்பம் ஒரு பெரிய வீட்டில் நான்காவது ஒண்டுக்குடியாக வசித்து வந்தது. ஒரு நாள் மாலை பெருமாள் கோவில் வாசலில் ‘பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் பேசுவார் என்று தட்டிகளில் எழுதி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். ஏனோ, அந்தக் கூட்டத்திற்கு அவசியம் போக வேண்டும் என்று தோன்றியது எனக்கு. போனேன். முன் வரிசையில் தெருவில் தரையில் உட்கார்ந்து தேவர் வரப்போவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தேவர் கரகோஷங்களுக்கிடையே வந்தார். மேடையில் பளீரென்று ஒரு மின்னல் நிற்பது போல் வந்து நின்று கூட்டத்தை நோக்கிக் கைகூப்பினார். அவருடைய முதல் தோற்றமே என்னைக் கவர்ந்து விட்டது. விவேகானந்தரின் ஆன்மீக ஒளியும், சிவாஜியின் வீர ஆகிருதியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இராணுவ கம்பீரமும் ஒன்றாக இணைந்த ஓர் ஒளிப்பிழம்பாக அவர் என்னுடைய முதற் பார்வையிலேயே எனக்குத் தோன்றினார். மேடைகளில் வழக்கமாக ஏறிப் பேசும் அந்த நாளைய சாதாரணப் பேச்சாளர்களில் ஒருவராக அவரை நான் நினைக்க முடியவில்லை. அவருடைய முகத்தில் ஒரு தேஜஸ்-அல்லது நம்பிக்கையூட்டும் பொலிவு இருந்ததை நான் கண்டேன். அவருடைய பேச்சு கடல்மடை திறந்தாற் போலிருந்தது. அதில் வெறும் பச்சை அரசியல் மட்டும் பேசப்படவில்லை. ஆன்மீகம் கலந்த அரசியல் பேசப்பட்டது. பாரத கலாசாரத்திலும், பண்பாடுகளிலும், இந்து மதத்திலும் அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அந்தப் பேச்சில் தெரிந்தது. இதற்குப்பின் மதுரை நகரத்திலும், சுற்றுப் புறங்களிலும் பசும்பொன் தேவரவர்களின் பேச்சு எங்கு நிகழ்ந்தாலும் அதைத் தவற விடாமல் போய்க்கேட்பவர்களில் நானும் ஒருவன் ஆனேன்.

சில ஆண்டுகளில் திரு. பி. டி. ராஜன் அவர்களுடைய தலைமையில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா வந்தது. அந்த விழாவின் மாலை நிகழ்ச்சிகள் தமுக்கம் மைதானத்திலும், காலை நிகழ்ச்சிகள், மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியிலும் நிகழ்ந்தன. அந்த விழாவில் ஒரு பேச்சாளராக வந்திருந்த அண்ணாதுரை திருஞான சம்பந்தரைக் கிண்டல் செய்வது போல் சில வார்த்தைகள் பேசவே அதே விழாவில் அவருக்குப் பின்பு பேசிய பசும்பொன் தேவர் சீறிப் பாய்ந்து அதற்குப் பதிலிறுத்தார். பள்ளிப்படிப்பையும் கலாசாலைக் கல்வியையும் முடித்துப் பட்டம் பெற்றுத் தமிழாசிரியராக வேலை பார்த்து வந்த நான் இப்போது மீண்டும் வளர்ந்த நிலையில் தேவரை மேடையில் கண்டேன். ஆயிரக்கணக்கான மக்களை மயக்கும் நாவன்மை பெற்றிருந்த அண்ணாவை அருகில் வைத்துக் கொண்டே அஞ்சாமல் தயங்காமல் அவருக்குப் பதிலிறுத்த தேவரின் தீரத் தன்மையை வியந்தேன். தேவருக்கு மறுப்புத் தெரிவிக்க மறுநாள் மாலையில் திலகர் திடலில் (ஞாயிற்றுக்கிழமைச் சந்தை மைதானம்) ஒரு கூட்டம் போட மதுரை தி.மு.க. கிளை திட்டமிட்டது. "தேவரை எதிர்த்தோ, மறுத்தோ கூட்டம் போட்டு வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இந்தச் சீமையில் முத்துராமலிங்கத்தேவரை எதிர்த்துப் பேசிவிட்டுத் தப்புவது அரிது. பேசாமல் இரயிலேறிச் சென்னைக்குப் போய்ச் சேருங்கள்"- என்பதாகப் பி. டி. ராஜனோ, போலீஸாரோ யோசனை கூறியதாகக் கேள்வி. இருந்தாலும் கூட்டம் நடந்தது. ஆனால் தேவர் பற்றி யாருமே எதுவும் பேசவில்லை. தேவரின் மேடை ஆண்மையையும் அஞ்சா நெஞ்சத்தையும் ஒரு மாபெரும் படைத்தளபதிக்குரிய பலத்தையும் இந்த சம்பவத்தின் போது நான் கண்டேன். தேவரைப் பற்றி வாழ்வில் எந்த நாளிலும், எந்த நிலைமையிலும் நான் மறக்க முடியாத சம்பவம் இது.

அடுத்த சில ஆண்டுகளில் மதுரையில் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து மலிவுப்பதிப்பு வெளியீட்டு விழாவில் தேவரை மறுபடி மேடையில் சந்தித்தேன் நான். அந்த விழாவில் தேவர் கடைசிப் பேச்சாளராகப் பேசினார். கூட்டமோ முதலிலிருந்து, "இன்னும் தேவர் பேசலியா?” “தேவர் எப்போ பேசப் போறாரோ, தெரியலியே”- என்று தேவரையே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தது. கடைசியில் தேவர் பேசுவார் என்று அறிவித்ததும் அதை வரவேற்கும் மகிழ்ச்சி ஆரவாரமும், கைதட்டல்களும் ஓயவே சில நிமிடங்கள் ஆயின. தேவர் எழுந்து நின்று பேசினார். மந்திரம் போட்டு வசியப்படுத்தியது போலக் கூட்டம் கட்டுண்டு அவரையே பார்த்தபடி அவருடைய சொற்பொழிவைக் கேட்டது. அவர் தன்னுடைய பிரசங்கத்தின் கடைசி வார்த்தையை முடிக்கிற வரை இந்த நிலை நீடித்தது. மதுரை மாநகர மக்கள் அவர் மேல் அப்படியொரு மதிப்பும் அன்பும் விசுவாசமும் பெற்றிருந்தனர். இதற்குப் பின்னர் தேவரை மேடையில் பார்க்கவோ கேட்கவோ நான் கொடுத்து வைக்கவில்லை என்றே கூறவேண்டும். இதன் பின் நான் சென்னை வாசியாகி விட்டேன்.

சிறிது காலத்திற்குப்பின் உடல் நலம்குன்றித் திரு நகரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த தேவரைக் காண்பதற்காக நானும் என் நண்பர் ரா. கோவிந்தராஜனும் (சென்னை அகௌண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் பணி புரிபவர்) சென்றிருந்தோம். மதுரையிலிருந்து காலை எட்டு மணிக்கே திருப்பரங்குன்றம் சென்று தேவருக்காக முருகப் பெருமானை வேண்டிக்கொண்டு அவருடைய நலனுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் ஓர் அர்ச்சனையும் செய்துவிட்டுப் பிரசாதத்தோடு நடந்தே அங்கிருந்து திருநகர் சென்றோம். தேவர் தங்கியிருந்த வீட்டை விசாரித்துக் கண்டு பிடித்தோம். அவர் மாடியில் இருப்பதாகத் தெரிந்தது. தேவருடைய உதவியாளர் வந்தார். எங்கள் கையோடு கொண்டு போயிருந்த முருகனின் விபூதியை அவரிடம் அளித்துவிட்டு, "சென்னையிலிருந்து தேவரைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறோம்"- என்பதைத் தெரிவித்தோம்.

"கொஞ்சம் இருங்க...நானே மறுபடி வந்து கூப்பிடுகிறேன்”- என்று எங்களைக் கீழ் வீட்டில் உட்காரவைத்து விட்டுத் தேவரின் உதவியாளர் நாங்கள் அளித்திருந்த விபூதிப் பிரசாதத்தோடு மாடிக்குச் சென்றார். நாங்கள் பத்துப் பதினைந்து நிமிஷம் வரை காத்திருக்க வேண்டி நேர்ந்தது. மறுபடி கீழே வந்த அந்த உதவியாளர், “நீங்க மேலே போகலாம்! தொந்தரவு எதுவும் இல்லாமப் பார்த்திட்டு வந்திடுங்க..." என்றார். நானும் நண்பர் கோவிந்தராஜனும் மாடிப் படியேறி மேலே சென்றோம். அறை முகப்பிலேயே தூய வெள்ளை ஆடை அணிந்து அரைக்கண் மூடிய நிலையில் தியானத்தில் இருப்பதுபோல் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி இருந்தார் அவர். எங்கள் வரவைப் புரிந்து கொள்ளவோ, எங்களோடு உரையாடவோ முடிந்த பிரக்ஞை அவருக்கு இல்லை. தளர்ந்து நலிந்திருந்தாலும் அருளொளி துலங்கும் அவர் முகத்தில் சற்றுமுன் நாங்கள்
கொண்டு வந்து அளித்த முருகனின் திருநீறு பளிச்சிடுவதைக் கண்டோம். முதல்முதலாக மதுரைப் பெருமாள் கோவில் வாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆண் சிங்கம் போல் நிமிர்ந்து நின்று வீர முழக்கமிட்ட தேவரின் திருவுருவம் மீண்டும் என் நினைவில் வந்தது. இப்போது அவரிருந்த தளர்வான நிலையைக் கண்டபோது நண்பருக்கும், எனக்கும் கண்களில் நீர் மல்கியது. சிறிது நேரம் நின்று பார்த்து மனமுருகினோம். பின்பு வணங்கி விட்டு அந்த அருளொளி திகழும் உருவைப் பிரிய மனமின்றிப் படியிறங்கிக் கீழே வந்தோம்,

"எப்படி இருந்தவர் எப்படி ஆகி விட்டார்? இவர் தான் தேவர் என்பதை நம்பவே முடியவில்லையே?” என்று நண்பர் துயரந் தோய்ந்த குரலில் என்னிடம்  சொன்னார். இதுவே நான் தேவரைக் கடைசியாகத்  தரிசித்தது. அதற்குப்பின் சிறிது காலங்கழித்து அவர் அமரராகி விட்டார். தென்னாடு கண்ணீர் சிந்தியது. தேச பக்தர்கள் கதறினர். தெய்வ பக்தர்கள் பொய்ம்மையைத் தட்டிக்கேட்கும் புனிதனை இழந்து விட்டோமே என்று துடித்தனர். காலம் ஓடி விட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அதே பழைய மதுரை நகரம் தேவரை நான் முதலில் பார்த்த அதே வீரத் திருக்கோலத்தில் மீண்டும் பார்க்கப்போகிறது. ஆம்! சிலை வடிவத்தில்தான். என்றாலும் சிலை உயிருடன் நேரில் அவரைப் பார்ப்பது போலவே இருக்கிறது.

தேவர் ஒரு தலைவர் மட்டுமில்லை. அவர் ஒரு தத்துவம். வெறும் அரசியல் மட்டுமே அவரை இன்று நாம் தொழத்தக்க நிலைக்கு ஆக்கிவிடவில்லை. அவர் ஓர் அரசியல்வாதியை விடவும் மேலானவர். ஓர் ஆன்மீக  ஞானியும்கூட; ஆன்மீக வாதிகள் இடையே புதுமையானவர்; அரசியல் வாதிகள் இடையே அவர்களிலிருந்து ஒருபடி வேறாகி உயர்ந்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் பேரன்பு கொண்டவர். இறுதிவரை தமிழ்நாட்டு நேதாஜியைப் பார்ப்பது போலவே மக்கள் அவரை மதித்தார்கள். முக்குலத்தோருக்கு மட்டுமின்றி எக்குலத்தோரும் வணங்கிய பெரிய சக்தி தேவர். அவருடைய வீர வரலாறு எதிர்கால இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரணம். வறட்டு அரசியல் வாதிகளிடையே ஆன்மீக அரசியல் நடத்திய அவர் பாதை புதியது.  பெரியது. பரந்தது. தேசபக்தி ஒரு கண் என்றால் தெய்வ பக்தி இன்னொரு கண் என உறுதியாக நம்பிக் கடைப்பிடித்தவர் தேவர். அவரை நம்புகிற அனைவரும் இனியும் நம்ப வேண்டிய விஷயம் அது. தேவர் என்கிற தத்துவத்துக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை அது தான். பேரன்புக்குரிய திரு. மூக்கையாத் தேவர் அவர்களும் ஏனையோரும் தேவரின் இந்த மாபெரும் தத்துவத்தை இளைஞர்களுக்கு வற்புறுத்தி எடுத்துச் சொல்ல வேண்டும். இன்றைய நிலையில் அப்படிச் சொல்ல வேண்டியது மிகமிக அவசியமாகிறது.

Thevan

unread,
Sep 28, 2023, 10:23:15 AMSep 28
to vall...@googlegroups.com
ஐயா, மதுரையில் தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தின் பெயர் கோரிப்பாளையம்.

N. Ganesan

unread,
Oct 1, 2023, 11:17:10 AMOct 1
to santhav...@googlegroups.com, Navam...@gmail.com


On Thu, Sep 28, 2023 at 9:07 PM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
மிக அருமையான கட்டுரையை இங்கே இட்டதற்கு நன்றி.
சிவசூரி.

நன்றி, கவிஞரே. அரிய கட்டுரை தீபம் நா.பா. மதுரை மண்ணின் திருமகன் பற்றி எழுதியுள்ளார். தேடிப் பிடித்தேன். வீ. எஸ். நவமணி, பார்வர்ட் பிளாக் தலைவர் உதவினார். வெள்ளுரை இவ்விழையில் தந்தேன். நவமணி ஐயாவின் செவ்வி (தி ஹிண்டு):
https://groups.google.com/g/vallamai/c/U0gCnkefpYw/m/cH8aD8nxAAAJ
https://kamadenu.hindutamil.in/politics/anna-didnt-apologize-in-madurai-devar-issue-says-forward-bloc-navamani

முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழா மலர், தமிழ்நாட்டு அரசாங்க வெளியீடு. அப்போது கலைஞர் ஆட்சி.
தான் வாழ்ந்த காலம் வரை இரு தலைவர் கக்‌ஷிகள் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை. ராஜாஜி முயன்றும் கூட.:
https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jup9&#book1
தேவர் வரலாறு பற்றிய சில நல்ல கட்டுரைகள், ஒளிப்படங்கள் உள.

1956-ல் தமிழர் தலைவர்கள் தமிழவேள் பிடி ராசன், ஸ்ரீ உ. மு. தேவர், அண்ணா - மதுரைத் தமிழ்சங்கப் பொன்விழா தற்போது ஊடகங்களில் பேசுபொருள். இன்றில்லாத, பல தமிழறிஞர்கள் பங்கேற்பு. தேவர் அவர்களுடன் நேரில் பழகிய இருவர் பேட்டிகள்:
https://youtu.be/2oUKpVPuVYY (மதுரை, திரு. வி. எஸ். நவமணி)
https://youtu.be/AvI4dDZ7sjM   (சீவைகுண்டம், மேடைமணி நடராஜன்).


தமிழர்கள் எண்ண ஓட்டங்கள், இயக்கங்கள் அறிய இன்னும் 4-5 லட்சம் நூல்கள் பிடிஎப் ஆதல் அவசியம். பாரதியார் எழுத்தைத் தான் பலர் தேடிக் கண்டுள்ளனர். ஆனால், இன்னும் ஏராளமானை 1850-ம் ஆண்டிலிருந்து கிடைக்கும். இளைஞர்கள் முயல்வராக!

~NG

On Thu, Sep 28, 2023 at 3:36 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

1974-ல் மதுரையில் முக்கியமான இடத்தில் பசும்பொன்  உ. முத்துராமலிங்கத் தேவருக்குச் சிலை வைத்தனர். அந்த விழா மலரில், தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய கட்டுரையை, வெள்ளுரையாகத் (plain-text) தருகிறேன். ~NG


Virus-free.www.avast.com
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNOvTy2J7OBbw6rAFmAAmjYsjxt70wx3-XCWVht11K0sPw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 2, 2023, 4:01:31 AMOct 2
to Santhavasantham
Sir P. T. Rajan passed away on 25 Sept 1974. So, today is the 49th death anniversary of his.
Thanks, Sounder (Dallas, TX) for converting to வெள்ளுரை (plain text). 

இங்கே பார்த்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர் இரண்டாம் பதிப்பு சில நாளில் வெளியிட்டுள்ளனர். அதில் பல கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தீபம் நா. பா. கட்டுரை போன்ற சில கட்டுரைகள், விகடன் தலையங்கம், நவம்பர் 10, 1963. தினமணி ஆசிரியரிடம் அதன் தலையங்கம் கேட்டுள்ளேன்.

Vikatan-10-11-63.jpg

TamilMurasu_Singapore.jpg
Tamil Murasu, Singapore, June 3, 1956

Justice_N_Krishnasamy_Reddy.jpg


N. Ganesan

unread,
Oct 8, 2023, 11:22:35 AMOct 8
to Santhavasantham
இமயஜோதி சுவாமி சிவானந்தருடன் தேவர். "Hṛṣīkeśa" is a name of Vishnu,
composed of hṛṣīka meaning 'senses' and īśa meaning 'lord' for a
combined meaning as 'Lord of the Senses'. இருடீகேசன் =
ஐம்புலன்களுக்கும் இறை. http://tamilconcordance.in/ பேரா. ப.
பாண்டியராஜா தமிழ்த்தளத்தில், ஆழ்வார் பாசுரங்களில் “இருடீகேசன்”
தேடியறிக. அரிய ஒளிப்படம்:
https://twitter.com/naa_ganesan/status/1710420705240645875
Reply all
Reply to author
Forward
0 new messages