வையை ஆறு

20 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 9, 2019, 6:13:28 AM11/9/19
to மின்தமிழ், vallamai
On Sat, Nov 9, 2019 at 1:40 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
ஆம் வேகவதி ஆற்றின் பெயர்தான் அதன் வேகம் பிற ஆறுகளை விட அதிவேகமானது. ஆகவே அச்சொல்லும் பொருந்துகிறது.

நம்ம வைகை ஆற்றின் வேகம் அளப்பறியது. அதனால் அதற்கும் வேகவதி எனப்பெயர்.

வைகை என்னும் பெயர் வடமொழியில் வேகவதி என மாறியுள்ளது.
தாழைக்குத் தமிழ்ப்பெயர் கைதை, இதனால் கேதகீ என்று வடமொழியில் மாறும்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Nov 9, 2019, 6:26:25 AM11/9/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Sat, Nov 9, 2019 at 3:18 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
முதலில் எத்தனை வேகவதி ஆறுகள் உள்ளன என்ற கணக்கெடுக்க வேண்டும்.


இந்த வேகவதி என்ற ஆற்றுப்பெயர்கள் வையை என்ற திராவிடச்சொல்லின் திரிபு எனலாம்.
சங்க இலக்கியத்தில் வையை >>> வைகை >>> சம்ஸ்கிருத இலக்கணம்
முதற்பெயராக, -ஐ உயிர்மெய்களை ஏற்பதில்லை. வழிவந்த சொற்களை ஏற்கும்:
சைவம், ஜைநம், வைஷ்ணவம், ....  எனவே, வைகை திருத்தப்பெற்று வேகமந்த்- வேகவதி
என்றும், கைதை >> கேதை/கேதக/கேதகீ என்றும் ஆகியுள்ளன.

நா. கணேசன்
 

Located on the banks of the Vegavathy river, Kanchipuram has been ruled by the Pallavas

Vegavathi River takes its origin in the Pachipenta hills in Eastern Ghats. It is a tributary to Suvarnamukhi, which in turn is a tributary to River Nagavali. Salur town and Paradhi are located on the banks of this river. There are two road bridges at these places.

மேலும் கிடைக்கக்கூடும் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8b1971ea-772b-49c0-86ae-a3d954802567%40googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 9, 2019, 6:39:01 AM11/9/19
to மின்தமிழ், vallamai


On Sat, Nov 9, 2019 at 3:29 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட வைகை நதிகளா இருந்தன?

இருந்திருக்கவேண்டும்.

பம்பை நதி : பல இடங்களில் உண்டு. நீர் பம்பிப் பாய்வதால்.
அதுபோல், தமிழ்ப் பெயர்கொண்ட வையை >> வைகை >> வேகமத்-/வேகவதி ;

வேகவதி உள்ள ஊர்களில் பழைய இலக்கியங்கள் திராவிட மொழிகளில்
இல்லை. ஆதலால், நமக்கு வையை என்ற பழம்பெயர் கிடைப்பதில்லை.

NG
 

N. Ganesan

unread,
Nov 9, 2019, 7:06:54 AM11/9/19
to மின்தமிழ், vallamai

 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட வைகை நதிகளா இருந்தன?


முதலில் “வையை” என்ற ஆற்றுப்பெயர்க் காரணத்தை ஆராயவேண்டும்.

N. Ganesan

unread,
Nov 9, 2019, 11:41:47 AM11/9/19
to மின்தமிழ், vallamai


On Sat, Nov 9, 2019 at 8:21 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
முன்னமே வையை ஒரு இழையில் ஓடியது. மீண்டும் தருகிறேன்.

வை முஎக, இஎக; ஓரெழுத்து ஒருமொழி
வையம் அம் சேர்ப்பு, உலகம்
வையை வையகத்தை உருவாக்குவதால் வையை.

பாண்டியநாடு வையம் என கருதப்பட்டு இருக்கலாம்

இவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. 

தமிழர்கள் நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டியவர்கள். 
இவர்களுக்கு வையம் வேறு, பாண்டிநாடு வேறு என்று தெரியும்.

வையை என்ற சொல்லுக்கும் வையகம் என்றசொல்லுக்கும்
சொற்பிறப்புகள் வெவ்வேறு எனக் காட்டுகிறது,

நா. கணேசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 9, 2019, 2:35:35 PM11/9/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Sat, Nov 9, 2019 at 9:08 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆறுகளுக்குப் பொதுப்பெயர் வழங்குவதை வரலாற்றில் காண்கிறோம். 

தண்பொருநை >>> தாமிரபரணி 
ஆன்பொருநை >>>அமராவதி 
தண்ணான் பொருநை> பேரியாறு 

அதுபோல் வேகவதி என்பது பொதுப்பெயர் ஆகலாம். 

ஆமாம். பம்பை - பம்பிச் செல்லும் யாறு. பல இடங்களில் உண்டு.
வையை >> வைகை >> வேகமந்த்- ஆதலும் சம்ஸ்கிருத இலக்கணத்திற்காக.
வையை பல ஊர்களில் பொதுப்பெயராக இருந்திருக்கலாம்.

தண் ஆன்பொருநை - இதுவும் அமராவதி ஆறே.

புறநானூறு 36,
36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த 
ஆன்பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன் 
அரஞ்செய் அவ்வாய் நெடுங்கைநவியம் பாய்தலின் - வலிய 
கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய 
வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி 
வெட்டுதலான்


உரை: ஆன்பொருந்தம்  இப்போது அமராவதி யென வழங்குகிறது. 
--------
நீங்கள் முன்பு எழுதியது:
”கொங்குக்கரூரை அடுத்து ஓடும் தண்ணான்பொருநையின் பழையசிறப்புப்  பெயர்கள் ஆனி ,வானி என்பன.(பிங்கல நிகண்டு -4061)  ”

நா. கணேசன்

சக 
கைபேசியிலிருந்து. ..

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 10, 2019, 4:35:31 AM11/10/19
to மின்தமிழ், vallamai


On Sat, Nov 9, 2019 at 10:33 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> இந்தத் தண்பொருநை, ஆன்பொருநை, தண்ணான்பொருநை பற்றித் தெளிவு பெற; ஒரு ஆழமான  பார்வையுடன் அடுத்த கட்டுரை எழுத வேண்டும்.
> இப்போது சமீபத்தில் கடைசியாக எழுதியுள்ள கட்டுரை; "சிலப்பதிகாரத்தில் புனல்வாயில் வஞ்சியும் புல்லிலை வஞ்சியும்". டிசம்பர் 15ம் தேதி கருத்தரங்கம். ...சிவகாசியில்.
> ஆஸ்திரேலியப் பதிப்பகம் - 'செம்மூதாய்'  என்று நினைக்கிறேன்....ஒன்றுடன் இணைந்து இங்குள்ள பெண்கள் கல்லூரி நடத்துகிறது

> சக
> கைபேசியிலிருந்து..    
>

சங்க இலக்கியத்திலே தண்ணான்பொருநை என்று தனியாக ஆறு எதுவும் கிடையாது.
தண்ணிய ஆன்பொருநை = குளிர்ந்த ஆன்பொருநை யாறு என்று பழைய உரைகாரர்கள் விளக்கியுள்ளனர்.
ஆன்பொருநை என்பது அமராவதி ஆறு. ஸஹ்யாத்ரியில் இருந்து மேற்கே ஓடும்
ஆறு ஆன்பொருநை அன்று. 

தண்ணான்பொருநை எனத் தனியாக இழைத் தலைப்பிட்டு எழுதுங்கள்.
இவ்விழையை வையை யாற்றுப் பெயர் பற்றிய ஆய்வுகளுக்கு வைத்துக் கொள்வோம்.
நன்றி.

நா. கணேசன்

>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 10, 2019, 8:53:21 AM11/10/19
to மின்தமிழ், vallamai
On Sat, Nov 9, 2019 at 3:29 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட வைகை நதிகளா இருந்தன?


அப்படித்தான் தெரிகிறது பௌத்தக்கதைகளில் வேகவதி ஒரு கதாபாத்திரம்.

பெண்ணை, பம்பை, ... நதிகள் தென்னிந்தியாவில் பல.
அதே போல, வையை என்னும் தமிழ்/திராவிட ஆற்றுப்பெயர்
வைகை >> வேகவதி என மாறியிருக்கிறது.

முதலில், யாறு என ஏன் ஆற்றுக்குப் பழம்பெயர்? 
அறிந்தோர் சொல்க. என் கருத்தை விளக்குவேன்.

பிற பின்!
நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Nov 10, 2019, 9:31:52 AM11/10/19
to மின்தமிழ், vallamai
(1) வேகவதி:
வங்கிசபுரிக்கு அருகில் வேகவதி என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஆறு மாணிக்கமலைத் தொடரிலிருக்கும் தலையாறு எனுமிடத்தில் மூங்கில் காடுகளுக்கிடையே பாய்கிறது. அசுரனைக் கொன்ற அம்மன் யௌவன வடிவம் கொண்டு இந்நதி அருகில் தவமிருந்தாள். அசுரனைக் கொன்ற பாவம் அம்மனுக்கு நீங்குவதற்காக சப்த கன்னியர்கள், தெய்வப் பெண்கள், துர்க்கை அனைவரும் சேர்ந்து ஆயிரத்தெட்டு தங்கக் குடங்களில் நீரெடுத்து வாசனைத் திரவியங்களுடன் மஞ்சளும் கலந்து அபிசேகம் செய்தனர். கன்னித் தெய்வமாய் பொலிவுறும் காமாட்சியம்மனுக்கு அபிசேகம் செய்த மஞ்சள் நீர் ஆற்றில் கலந்ததால் வேகவதி ஆறாக இருந்த ஆறு மஞ்சளாறு எனப் பெயர் மாற்றமடைந்தது. அம்மன் தலையாற்றின் மூங்கில் காடுகளில் தவமிருந்த இடத்தில் சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இது “அம்மா மச்சு” என்று அழைக்கப்படுகிறது. 

(2) வேகவதி 
ஜான்ஜவதி, பாரா, பல்டியா, சந்தலா, சித்தகுர்ஹா, ஸ்ரீகோனா, குமுதுகெட, வெட்டிகட, சுவனர்முகி, வேனிக்தா, ரிக்னீதா மற்றும் வேகவதி ஆகியவை நாகவள்ளி நதியின் முக்கிய கிளை நதிகளாக உள்ளன. சுவர்ணமுகி நதியானது தனது பிறப்பிடத்தை சாலூர் மண்டலில் தொடங்குகிறது. கிழக்கு நோக்கி பாய்ந்து சென்று இறுதியாக ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வங்காராவில் சங்கம் என்ற கிராமத்திற்கருகில் நாகவள்ளி ஆற்றுடன் சங்கமிக்கிறது. வேகவதி ஆறானது பாசிபென்டா மண்டலின் பாசிபெண்டா குன்றுகளில் உற்பத்தியாகிறது. வேகவதி ஆறு தனது தொடக்கத்தை கிழக்குத் தொடர்ச்சி மலையின் பச்சிபென்டா குன்றுகளில் கொண்டுள்ளது. இது சுவர்ணமுகி ஆற்றின் துணை நதியாகும். சுவர்ணமுகி நாகவள்ளி ஆற்றின் துணை நதியாகும். சாலூர் நகரம் மற்றும் பரதி ஆகியவை இந்த ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளன. இந்த இடங்களில் இரண்டு சாலைப் பாலங்கள் உள்ளன. 

N. Ganesan

unread,
Nov 10, 2019, 9:48:38 AM11/10/19
to மின்தமிழ், vallamai
வேகவதி என்று பல ஆறுகள் இருந்தாலும், மதுரை, காஞ்சி நகர்களிடையே உள்ள வேகவதி முக்கியமான ஆறு.
காஞ்சியில் வேகவதி மணல் அள்ளவும், வீடுகள் கட்டவும் முழுதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
மதுரையில் குப்பை, கூளங்களால் நிறைக்கப்படுகின்றன. 

கூடல் என்ற பெயர் மதுரையின் ஒரு பழம்பெயர். சிறுமியர் விளையாடும் கூடல் இழைத்தல் போல்
கிருதமாலை நதியும், வையையும் மதுரையிலே இருப்பதால் கூடல் என்ற பெயர். இது
மணலூர் (கீழடி) பகுதிக்குப் பொருந்தாது. எனவே பழமதுரை(கூடல்) கீழடி அன்று:

உள்ள ஊர்களில் வேகவதி என்னும் காஞ்சி நகர நதி முக்கியமானது. வையை > வைகை >> வேகவதி
என்று மாற்றப்பெற்ற காலத்தில் இடப்பெயர் வெஃகா என்று தோன்றியுளது எனலாம்.
வெஃகா - இவ் இடப் பெயரில் தான் முதன்முறையாக, விஸர்க்க வடிவில் ஆய்த எழுத்து
கிரந்தத்தில் இருந்து தோன்றுகிறது (கல்வெட்டில்).

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி என்று 3 ஆறுகள்.
அவை கூடுமிடம்: முக்கூடல். இதில் பார்த்தால் வேகவதி ஆற்றுக்குத்தான்
தமிழ்ப் பெயரைக் காணோம். என்ன அது? ஆராய்ந்து பார்த்தால் வையை
என்னும் ஆற்றுப்பெயர் வேகவதி என மொழிபெயர்க்கப்ப்ட்டுள்ளது என அறியலாம்.
வையை >> வைகை (Cf. வெஃகா) >> வேகவதி என்பது பெயர்மாற்றப் படிநிலைகள்.

NG


kanmani tamil

unread,
Nov 11, 2019, 2:13:11 AM11/11/19
to mintamil, vallamai
///முதலில், யாறு என ஏன் ஆற்றுக்குப் பழம்பெயர்? 
அறிந்தோர் சொல்க. என் கருத்தை விளக்குவேன்.
பிற பின்!
நா. கணேசன்/// 17 மணிநேரத்திற்கு முன் எழுதியது .

' யாறு ' சொல்லாக்கம் பற்றி இதற்கு முன்னர் பேசியதே இல்லை.
யால் >>>ஆல் என்ற மரப்பெயர் ஆய்வும் அதையடுத்து ' யானை ' சொற்பிறப்பும் பற்றி மட்டும் தான் சொல்லி இருக்கிறீர்கள் .

ஒருவேளை ஆறு = வழி / தடம் என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் 
சக 

On Sun, Nov 10, 2019 at 8:47 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Sunday, November 10, 2019 at 7:16:06 AM UTC-8, இசையினியன் wrote:
டாக்டர் அவர்கள் இரண்டு thesis வைத்து உள்ளார் ஐயா. தாங்கள் எதைக் கேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை.

டாக்டர் இரண்டு தீஸிஸ் அனுப்பினால் இரண்டையும் படிக்கலாம்.

நா. கணேசன்
 

: வடமொழிப் பேய்
: வடமொழிப் பிசாசு

இவற்றில் எதை படிக்க விரும்புகிறீர் எனக் கூறினால் டாக்டர் அனுப்புவார்.

: வடமொழி அணங்கு

என்பதை டாக்டர் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்.

---
கணேசன்
எனக்கு டாக்டர் பிச்சைமுத்துவின் பிஎச்டி தீஸிஸ் படிக்க ஆவல்.
என் பழைய கல்லூரியில் பேசிய பேச்சின் வலைக்கண் அளித்துக் கேட்டிருக்கிறேன்.
டாக்டர் இப்போது இல்லை என்றாலும், ஆக வாழ்த்துகள்.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 11, 2019, 6:06:53 AM11/11/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, tiruva...@googlegroups.com
On Sun, Nov 10, 2019 at 11:13 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///முதலில், யாறு என ஏன் ஆற்றுக்குப் பழம்பெயர்? 
அறிந்தோர் சொல்க. என் கருத்தை விளக்குவேன்.
பிற பின்!
நா. கணேசன்/// 17 மணிநேரத்திற்கு முன் எழுதியது .

> ' யாறு ' சொல்லாக்கம் பற்றி இதற்கு முன்னர் பேசியதே இல்லை.
யால் >>>ஆல் என்ற மரப்பெயர் ஆய்வும் அதையடுத்து ' யானை ' சொற்பிறப்பும் பற்றி மட்டும் தான் சொல்லி இருக்கிறீர்கள் .

>ஒருவேளை ஆறு = வழி / தடம் என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் 
>சக 


யால்+து = யாறு.  
யால் > ஆல். ஆலமர விழுது = யால். (விழுது போல் இருக்கும் துதிக்கையால், யால்+நை = யானை).
மலையில் இருந்து இழிதரும் யாறு.மலையில் இருந்து “விழுது”போல இருப்பது யாறு (> ஆறு)

 வழி, பாதை = ஆறு என்பதுவும் உவமையாகுபெயர் எனலாம். இந்த உவமை சங்க காலத்திலே உண்டு.
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்  -  மதுரைக்காஞ்சி.

தமிழில் யாறு = வழி, தெரு, பாதை என்ற பொருளில் ஆளப்பெற்றுள்ளதா? ஆயவேண்டும்.
(யால் என்ற சொல் ஆல் மரத்திற்கு உண்டா? சங்க இலக்கியத்தில் வரும் யால் என்பது உடம்படுமெய்யாலா??
இல்லை, யால் என்பது தனிச்சொல் தானா??).

நற்றிணை 255 
திணை : குறிஞ்சி. துறை : இஃது, ஆறுபார்த் துற்றது.
ஓங்குவரை யாறே. - ஓங்கும் மலையில் உள்ள வழி.
இங்கு உள்ளது ஆறு?? யாறு?? - ஆய்வுக்குரித்து.
(உறுதியாய், ஆறு என உரைக்கவியலுமோ??)

கலித்தொகை - மருதம்:
தலைவி:
நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி,
யாறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப

புலவர் கா. கோவிந்தன், (மருத நில மங்கை)
யாறு = வழி என்றே உரை வகுக்கிறார்.பார்க்க.

யால் > ஆல்,  யால்+து = யாறு > ஆறு   (= நதி, வழி).

----------------

யகரம் சகரம் ஆகும்.
யாமை, தெலுங்கில் சாமெ. அதுபோல், யால்- > சாலை.

ஒரு கேள்வி:
வடமொழியில், யானம் = பாதை. மஹாயானம், ஹீனயானம், சந்திரயானம், ....
யான- இந்தோ-ஐரோப்பியச் சொல்லா? திராவிடச் சொல்லா?
1yAnamfn. leading , conducting (said of a road ; `" to "' gen. or adv. in %{-trA4}) RV. ; (%{yA4nI}) f. a path , course TS. MaitrS. Ka1t2h. (cf. g. %{gaurA7di}) ; n. (ifc. f. %{A}) a journey , travel ; going , moving , riding , marching &c. to (loc. or comp.) or upon (instr. or comp.) or against (acc. with %{prati}) Mn. MBh. &c. ; a vehicle of any kind , carriage , waggon , vessel , ship , litter , palanquin RV. &c. &c. ; (with Buddhists) the vehicle or method of arriving at knowledge , the means of release from repeated births (there are either 3 systems , the %{zrAvaka-yAna} , the %{pratyeka-buddha-y-} or %{pratyeka-y-} , and the %{mahA-y-} ; or more generally only 2 , the %{mahA-yAna} or `" Great method "' and the %{hina-y-} or `" Lesser method "' ; sometimes there is only `" One Vehicle "' , the %{eka-yAna} , or `" one way to beatitude "') SaddhP. Dharmas. 2 (cf. MWB. 159 &c.)
2yAna&c. see p. 849 , col. 3.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 11, 2019, 7:13:06 AM11/11/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, tiruva...@googlegroups.com
On Mon, Nov 11, 2019 at 3:09 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ஒரு கேள்வி:
வடமொழியில், யானம் = பாதை. மஹாயானம், ஹீனயானம், சந்திரயானம், ....
யான- இந்தோ-ஐரோப்பியச் சொல்லா? திராவிடச் சொல்லா?
1yAnamfn. leading , conducting (said of a road ; `" to "' gen. or adv. in %{-trA4}) RV. ; (%{yA4nI}) f. a path , course TS. MaitrS. Ka1t2h. (cf. g. %{gaurA7di}) ; n. (ifc. f. %{A}) a journey , travel ; going , moving , riding , marching &c. to (loc. or comp.) or upon (instr. or comp.) or against (acc. with %{prati}) Mn. MBh. &c. ; a vehicle of any kind , carriage , waggon , vessel , ship , litter , palanquin RV. &c. &c. ; (with Buddhists) the vehicle or method of arriving at knowledge , the means of release from repeated births (there are either 3 systems , the %{zrAvaka-yAna} , the %{pratyeka-buddha-y-} or %{pratyeka-y-} , and the %{mahA-y-} ; or more generally only 2 , the %{mahA-yAna} or `" Great method "' and the %{hina-y-} or `" Lesser method "' ; sometimes there is only `" One Vehicle "' , the %{eka-yAna} , or `" one way to beatitude "') SaddhP. Dharmas. 2 (cf. MWB. 159 &c.)
2yAna&c. see p. 849 , col. 3.

நா. கணேசன்


Clearly, yAna is Indo-European.

Sanskrit[edit]

Etymology[edit]

From Proto-Indo-Aryan *yáHnam, from Proto-Indo-Iranian *yáHnam, from Proto-Indo-European *yéh₂-nom, from *yeh₂- (to go). Cognate with Avestan 𐬫𐬁𐬌𐬙𐬌‎ (yāiti)Proto-Slavic *ěxati (to travel)

Pronunciation[edit]

Noun[edit]

यान  (yā́nan

  1. carriagevehicle, mode of transport
  2. movingjourney

Declension[edit]

more ▼Neuter a-stem declension of यान (yā́na)

Derived terms[edit]

 

kanmani tamil

unread,
Nov 12, 2019, 12:32:34 AM11/12/19
to mintamil, vallamai
/// வழி, பாதை = ஆறு என்பதுவும் உவமையாகுபெயர் எனலாம். இந்த உவமை சங்க காலத்திலே உண்டு.
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்  -  மதுரைக்காஞ்சி.
இது உவமை தானே. எதற்காக ஆகுபெயர் என்று சொல்ல வேண்டும்?
சங்க இலக்கியத்தில் பயிலும் இச்சொல் ஆகுபெயர் எனச் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு முந்தைய கால வழக்கில் அவ்வாறு இருப்பதற்குச் சான்று வேண்டும். அது நம்மிடம் கிடையாது. எனவே இது உவமை மட்டுமே .
தமிழில் யாறு = வழி, தெரு, பாதை என்ற பொருளில் ஆளப்பெற்றுள்ளதா? ஆயவேண்டும்.
(யால் என்ற சொல் ஆல் மரத்திற்கு உண்டா? சங்க இலக்கியத்தில் வரும் யால் என்பது உடம்படுமெய்யாலா??
சங்க இலக்கியத்தில் ஆலமரத்திற்கு யால் என்னும் வழக்கு இதுவரை என் கண்ணில் படவில்லை .
உடம்படுமெய் என்பது இரண்டு சொற்கள் புணரும் போது ஏற்படுவது.
இல்லை, யால் என்பது தனிச்சொல் தானா??).
நற்றிணை 255 
திணை : குறிஞ்சி. துறை : இஃது, ஆறுபார்த் துற்றது.
ஓங்குவரை யாறே. - ஓங்கும் மலையில் உள்ள வழி.
இங்கு உள்ளது ஆறு?? யாறு?? - ஆய்வுக்குரித்து.
(உறுதியாய், ஆறு என உரைக்கவியலுமோ??)
உறுதியாய் ஆறு தான். யகர உடம்படுமெய் தோன்றியுள்ளது. "இ ஈ ஐ வழி யவ்வும் ......"

கலித்தொகை - மருதம்:
தலைவி:
நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி,
யாறு மயங்கினை போறி!
நீ வந்தாங்கே
மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்
இந்தப்பக்கம் பாதை மாறி வந்து விட்டாய் .......அதனால் இங்கே யாறு = பாதை ; உடம்படுமெய் இல்லை  
புலவர் கா. கோவிந்தன், (மருத நில மங்கை)
யாறு = வழி என்றே உரை வகுக்கிறார்.பார்க்க./// Dr . Ganesan wrote 18 hrs ago 
இந்தக்கலித்தொகைப் பாட்டின் எண் என்ன? முழுதாகப் பார்க்க வேண்டும்.
சக 


On Tue, Nov 12, 2019 at 2:45 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
மேலும் தமிழர் யவனர்  என்று மேற்கத்தியரைக்  குறிப்பிட்டதும் புதியவர் என்ற அடிப்படையில் இருக்கலாம் என நான் எண்ணியதுண்டு 



On Monday, November 11, 2019 at 10:24:48 AM UTC-8, தேமொழி wrote:

यान  (yā́nan

  1. carriagevehicle, mode of transport
  2. movingjourney
எங்கிருந்து எது எங்கு போனது என்ற  ஒரு  மீளாய்வு தேவையாக இருக்கலாம்.

Etymology[edit]

 from Proto-Indo-Iranian *yáHnam

என்றால் 

சிந்துசமவெளிக்காலச் சொல் என இருக்கவும் கூடும் 




On Monday, November 11, 2019 at 10:18:04 AM UTC-8, தேமொழி wrote:
சங்க இலக்கியங்களில் காணப்பெறும் 'யாணர்' என்னும் சொல்லின் பொருள்: ஒரு மீள்பார்வை

பார்க்க: https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/12827


ஆய்வுச்சுருக்கம்

சங்க இலக்கியங்கள் குறித்த இலக்கிய, சமூகவியல் ஆய்வுகள் கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேல் நடந்துவருகின்றன. இவ்விலக்கியங்களில் மிகுதியாக ‘யாணர்’ என்ற சொல் பயின்று வருகிறது. இச்சொல்லுக்குப் 'புதிய வருவாய்' என்ற பொருள் விளக்கம் உரையாசிரியர்களின் உரைகளிலும் பின்னர் தொடர்ந்து வந்த பதிப்பாசிரியர்கள் உரைகளிலும் காணப்பெறுகிறது. இச்சொல்லின் விளக்கம் அதுவல்ல என்பதையும் இச்சொல்லுக்கு விளக்கமாகத் தொல்காப்பிய நூற்பாவில் காணப்படும் 'புதிது' அல்லது 'புதிய' என மட்டும் கொள்ளவேண்டும் எனவும் நிறுவ இக்கட்டுரை முற்படுகிறது


குறிப்புச் சொற்கள்:

சங்க இலக்கியம், யாணர், 'புதிய வருவாய்', புதிய இருப்பிடம், கைப்பற்றப்பட்ட இருப்பிடம்.







On Monday, November 11, 2019 at 10:08:12 AM UTC-8, தேமொழி wrote:
"யாணர்"

யாணர் என்பது தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும் இடம் பெறும் ஒரு சொல்.
அது "புதிய வரவை" குறிக்கும்.

புதிய இடங்களையும் புதிய வருவாயையும் குறிப்பிட யாணர் என்ற சொல் பயன்பட்டது 

தொடர்ந்து புதுநீர் வந்துகொண்டே இருக்கும் நீர்நிலைதான் யாறு எனக்குறிப்பிடப்பட்டிருக்கக் கூடும்.


யாணர்
yāṇar   n. 1. Freshness; புதிதுபடல். (தொல். சொல். 379.) 2. Fresh income;புதியவருவாய். அறாஅ யாண ரகன்கட் செறுவின்(பதிற்றுப். 71). 3. Fertility; வளப்பம். யாணர்க்கோங்கின் குவிமுகை (ஞானா. 60). 4. Wealth;செல்வம். வெல்போர் வீயா யாணர் (பதிற்றுப். 35,10). 5. Goodness; நன்மை. (பிங்.) 6. Nature;முறைமை. மாணுற விலகா யாணர்த்து (ஞானா. 54, 8).

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Nov 12, 2019, 12:39:55 AM11/12/19
to mintamil, vallamai
"யாணர்"
யாணர் என்பது தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும் இடம் பெறும் ஒரு சொல்.
அது "புதிய வரவை" குறிக்கும்.
புதிய இடங்களையும் புதிய வருவாயையும் குறிப்பிட யாணர் என்ற சொல் பயன்பட்டது/// தேமொழி 11 மணி நேரத்திற்கு முன் எழுதியது 

தமிழில் / தந்நகரம் , டண்ணகரம் ,றன்னகரம் / என்று மூன்று உண்டு.
வடமொழியில் / தந்நகரம் , டண்ணகரம் / இரண்டு உண்டு 
தமிழில் /ன், ந்/ ஒலியன் நிலை இப்போது இல்லை.
எனவே தற்காலத் தமிழிலும் இரண்டு மட்டும் இருப்பதாகக் கொள்ளலாம்.

நீங்கள் சொல்லும் ' யாணர் ' டண்ணகரம்.
நாம் மேலே  ஆய்வுக்கு உட்படுத்துவது 'றன்னகரம் ' 
எனவே இரண்டும் ஒன்று என்று சொல்ல வாய்ப்பில்லை என்பது என் கருத்து. அவை வெவ்வேறு உருபுகள் .
சக 


N. Ganesan

unread,
Nov 14, 2019, 4:57:38 AM11/14/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, Nov 12, 2019 at 2:44 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
தலைகீழாக மாற்றிச்   சொல்லி விட்டேன் போல, சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. 

ஆமாம், உண்மை தான். பலமுறை, தமிழ்ச் சொற்களின் உறவுகள் பற்றிச்
சொல்லும்போது வரும் மறுமொழிகளைப் பார்த்து வேத நிபுணர் மைக்கேல் விட்சல்,
ஹார்வர்ட் பல்கலை குறிப்பை நினைத்துக்கொள்வேன். சிந்து சமவெளி
தமிழரின் பழைய நாகரிகம் என்பதே மொழியியல் துறையால் தான் நிறுவமுடிகிறது.
விடங்கர் எழுத்து சிந்து சமவெளியில் எது எனக் காட்டியுள்ளேன். அதிசயமாக,
கீழடியில் இரண்டு பானையோடுகளிலும் பார்த்தேன். தமிழ்நாட்டுப் பானையொடுகள்,
எந்த ஊர்களில் கிடைத்தன, எந்த ஆழம் என ஒரு வலைத்தளம் தொல்லியல் துறை
அரசாங்க செலவில் செய்தால், சிந்து வெளியில் விடங்கர் பற்றி தெளிவாக
தெரிந்துவிடும். ஐராவதத்தின் செம்பியன் கண்டியூர் வாசிப்பு மறுவாசிப்பு செய்யவியலும்.
துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழ்வளர்க்க ஹூஸ்டன் நகருக்கு வருகிறார் இன்று.
மனைவி விஜயலட்சுமி, மகன் (இந்திய பாராளுமன்ற எம்பி), ... என குடும்பத்தோடு.
இந்திய தூதர் அலுவலகம், மீநாக்ஷி ஆலயம், ... என பல சமயங்களில் அவருடன்
பேசுவேன். ஹூஸ்டன் தமிழ் இருக்கை சார்பாக, அரசாங்க வரிப்பணத்தில்
மேலை நாட்டுப் பல்கலைகளில் தமிழ்/திராவிடவியல் இருக்கைகளை அமைக்க
வேண்டுவேன். பர்ரோ, எமனோ, பார்ப்போலா, ஹார்ட், சுவலெபில், .... போன்ற
பேராசிரியர்களை 21-ஆம் நூற்றாண்டிலும், அதன் பின்னரும் உருவாக்க 
களங்களாக அவை அமையும்.

யாந- என்ற வடசொல்லின் இந்தோ-ஐரோப்பிய மூலம் காட்டி இவ்விழையில்
எழுதியுள்ளேன். யாணர் என்பது தமிழ்ச்சொல்தான். அதிலிருந்து கிளைப்பது
கல்யாண- என்னும் வடசொல். முன்பு விரிவாக எழுதியுள்ளேன். பார்க்கலாம்.
கல்-(கலி-) + யாணர் ==> கல்லியாண/கலியாண என்றாகிறது. கலியாணச்சீரில்
கொற்றவைக்கான எருமைக்கொம்பும், நெய்தல் திணைமாந்தர் சுறாவின்
கோடும் வைத்து வருணனை வழிபடும் சங்கப்பாடல்கள் பற்றி எழுதினேன். சங்க காலப்
பெருந்தெய்வம் இந்தத் தம்பதியர் இவர்களே. 

விந்துமதி வெண்பா என தமிழ் இலக்கணத்தால் ஒரு கடினமான யாப்பு 
தமிழிலே உண்டு. சமணர்கள் Bindumati வெண்பா என 1000 ஆண்டுமுன்னே
தந்துள்ளனர். தொல்காப்பியர், திருவள்ளுவர் சமயத்தினர் இந்த இலக்கணிகள் ஆவர்.
வயல், கன்னடத்தில் பயலு, ஆவதுபோல, விந்துமதி >> பிந்துமதி ஆகிவிட்டது.
விந்து/பிந்து ‘seed, drop, liquid, Soma drink' >> இந்து ‘moon' என ரிக்வேதத்திலேயே
ஆகியுள்ளது. விந்து > இந்து ‘சந்த்ர’. எவ்வாறெனில், சங்க காலத்திலே, விடங்கர் > இடங்கர்
என்றானாற்போல. 

சந்திரமதி (திங்கள் ஒளி நிறைந்தவள்), பாநுமதி (சூர்ய ஒளி மிகுந்தவள்),
இந்துமதி (=சந்த்ரமதி), ஸ்ரீமதி, சுமதி, வசுமதி, .... இந்து என்ற பெயர்
lunar, lunatic போன்ற தொடர்பு உள்ளது. விரிவாகப் பின்னர் பேசலாம்.

வட இந்தியர்களுக்கு மொழியியல் என்றால் சிம்ம சொப்பனம்.
அதனால்தான் சிந்துவெளி செம்பூழிக் காலம் பற்றி ஏதேதோ சொல்வர்.
மைக்கேல் விட்சல் கூற்றுகள்: http://list.indology.info/pipermail/indology_list.indology.info/2000-July/021960.html
Take the letter/Aksara dh  (spoked wheel):  it is read  as dhaa (2x), dhaH
and dvai.
[Pseudo-] Voltaire, he say:       consonants count little,  vowels nothing!
Highlights:

* the 'principles' involved (consonants count little, vowels nothing)
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/2000-December/024795.html  
Again: these guys still do no get it AT ALL about comp.ling.:
   first, human speech organs-based sound correspondences/laws and language
   family-typical grammatical formantia, only then syntax, and finally, even
   less of [single word] semantics (which is, with Kalyanaraman, an excuse to
   correlate anything with anything, in Indian languages, that looks vaguely
   similar: Kratylos, Nirukta, Pseudo-Voltaire revived...  just to get his
   Pan-Indian "Prakrt" of 3000 BCE).
யாந- (இந்தோ-ஐரோப்பிய வார்த்தை), யாணர் (த்ராவிட மூலம்).
இரண்டும் வேறு. விட்சலின் கிரேக்க ஞானி க்ரேத்திலோஸ்
“ consonants count little,  vowels nothing!” சரியென்றால் ஒழிய.
நா. கணேசன்


On Tuesday, November 12, 2019 at 2:39:11 AM UTC-8, தேமொழி wrote:

thamizhi.JPG


தமிழி காணொளி பார்த்த பொழுது இந்த ஸ்க்ரீன்ஷாட் எடுத்தேன்.


அதில் பிராமி எழுத்தில் இருந்து தமிழி எழுத்து வேறு என அடையாளம் காண உதவிய தமிழ் எழுத்துக்கள் (வடமொழியில் இல்லாதவை) என்ற கருத்து பேசப்படுகையில்  நான் புரிந்து கொண்டதைக் குறிப்பிட்டேன்.





On Tuesday, November 12, 2019 at 2:06:43 AM UTC-8, N. Ganesan wrote:


On Mon, Nov 11, 2019 at 10:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
வடமொழியில் ந,ண,ன என்ற வேறுபாடு இல்லை. 
வடமொழியில் உள்ள எழுத்துக்களில் னகரம் மட்டுமே உள்ளது என நான் படித்ததுண்டு. 
ஆகவே வடமொழியில் யானம்  என எழுதுவர் இல்லையா?


வடமொழியில் ந, ண வேறுபாடு உண்டு.
விஷ்ணு, கல்யாணம், சுப்ரமண்யம், ....

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Nov 14, 2019, 5:57:07 AM11/14/19
to vallamai, mintamil

///வட இந்தியர்களுக்கு மொழியியல் என்றால் சிம்ம சொப்பனம் /// Dr.Ganesan wrote 1hr.ago...

தென்னிந்தியர்களுக்கு ....குறிப்பாகத் தமிழருக்கு மொழியியல் அல்வா சாப்பிடுவது போலவா இருக்கிறது ?
மொத்தத்தில் அந்த மொழி அறிவியல் துறையைக் கண்டுகொள்ள யார் இருக்கிறார்கள்?
இருந்தால் ' சு' என்னும் முன்னொட்டு வடமொழியில் இருந்தது என்பதற்குத் தமிழாசிரியர் குற்றவாளிகள் ஆவார்களா? 🤔🤔🤔
சக 




You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfPPNgE32-65KYqyx%2B%3DRGU%2BSUADzU%2BmiVVWZ5x0DCsUoA%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages