கோயில்களும் சிறப்புகளும்

115 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jun 8, 2025, 11:31:50 AM6/8/25
to vallamai
ஞானசரஸ்வதி அம்மன் கோயிலில் இன்று (8.6.25) காலை கும்பாபிஷேகம்

திருத்தங்கல் அரிமா சங்கத்தினர் நடத்தும் திருத்தங்கல் அரிமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒரு சரஸ்வதி கோயில் உள்ளது. இராஜப்பன் முதலாளி இருந்த காலத்தில் கட்டிய கோயில். அவர் இறைப்பதம் சேர்ந்த பிறகு முதல் முறையாக இன்று அவர் செய்த திருப்பணியில் தொய்வு ஏற்படாத வகையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் அரிமா உறுப்பினர்களும் ஒருங்கு இணைந்து நடத்திய திருப்பணி. 

இந்த அம்மனின் சிறப்பு அம்சம் என விக்னேஷ் (சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயில்) அர்ச்சகர் கூறிய செய்தி:

சரஸ்வதி அம்மன் பீடத்தில் தான் எழுந்தருளி இருக்கிறாள். அது தான் முறை... 
பீடத்தில் இருக்கும் வரிகள் அதற்குத் தாமரை போன்ற தோற்றத்தைத் தருகின்றன. அவ்வளவே...
அம்மனின் கையில் வெண்தாமரைப் பூ. அது தான் சரி... வீணை அம்மனின் திருவுருவத்தோடு இணைந்த கூறாக இல்லாமல் தனித்த பாகமாக உள்ளது; ஏனெனில் கல்விக்கு உரிய குறியீடு வீணை... அதை மாணவர்க்குத் தர அம்மன் தயார்நிலையில் இருக்கிறாள். 




விளக்கம் புதுமை. 

சக 

kanmani tamil

unread,
Jun 10, 2025, 2:40:37 PM6/10/25
to vallamai
மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில்


விருதுநகர் மாவட்டம் அளகாபுரி அருகே...
முற்காலப் பாண்டியர் குடைவரை - 8ம் நூற்றாண்டளவில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டது.
சமணர் அமைத்த குடைவரைகள் எல்லாம் பாண்டியன் சைவ சமயம் மாறிய போது சைவக் கோயில்கள் ஆயின.

கருவறைக் குடைவரையில் புடைப்புச் சிற்பங்களாக இருக்கும் சிவன்,  முருகன், பிள்ளையார் ஆகிய  திருவுருவங்கள் அனைத்தும் சமணர் கைவண்ணங்களே. 

எப்படி ஒரு தாவரத்தில் கொழுந்து ஒரு அங்கமாக இருக்கிறதோ; அது போல் மலையின் ஒரு கூறு மலைக்கொழுந்து எனப்பட்டது. அதனால் ஈசனுக்கு மலைக்கொழுந்தீஸ்வரர் என்று பெயர். 

பிற்காலத்தில் தனியாக மரகதவல்லித் தாயார், நவக்கிரகங்கள், பைரவர் ஆகிய தெய்வங்கள் குகைக்கு வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. 

சிவபெருமானோடு தொடர்புறும் நீர்நிலைகள் எல்லாம் ஆகாயகங்கை எனும் பொதுப் பெயரைப் பெறுகின்றன. 

எங்கே சுனை இருந்தாலும் அதை மகாபாரதத்தோடு தொடர்புறுத்தி; அர்ச்சுணனின் கைவண்ணம் என்று கூறி மகிழ்வது தமிழக மக்களின் பண்பாட்டில் இருந்து பிரிக்க முடியாத நம்பிக்கையும் வழக்காறும் ஆகும். 

கருவறை வரை சுனைநீரைக் கொண்டு செல்லும் நீர் மேலாண்மை இத் தலத்தை வேளாளரோடு இயைபுறுத்துகிறது.

நேரம் வாய்க்கும் போது அவசியம் போக வேண்டிய கோயில்...

சக 

kanmani tamil

unread,
Jun 21, 2025, 11:26:47 PM6/21/25
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில்...

https://youtu.be/StwpXfipUBE?si=UDjeGjiR7Fnxtsvu

காணொலி இக் கோயிலை முழுவதுமாகச் சுற்றிக் காட்டுவதுடன் தொடக்க காலத்தில் அது வடபத்ரசாயி என்ற பெயரில் அமைந்த பெருமாள் கோயிலாக இருந்து; பின்னர் ஆண்டாள் கோயில் என வழங்கப்பட்ட வரலாறோடு தொடங்குவது சிறப்பு. 

பெரியாழ்வார் தான் கண்டெடுத்த குழந்தைக்குக் (forsaken child) 'கோதை' என்று பெயர் சூட்டி வளர்த்தார் என்பது வரலாறாகத் தோன்றிய வழக்காறு. 

'கோதை ஆண்டாள்' என்ற பெயர் வழக்கு ஏற்பட்ட காரணம் தனி ஆய்வாக அமைய வேண்டியது. மக்கள் மனதில் இருந்து காலப் போக்கில் மறந்து போகும் உண்மைகளும் உள்ளன. அதில் ஒன்று 'கோதை' பற்றிய விளக்கம். பல வகையாகக் கட்டப்பட்ட பூமாலைகளுள் 'கோதை' எனும் வகையினைச் சேர்ந்த பூமாலையைக் கட்டிப் பெருமாளுக்கு அணிவித்ததால் தான் அவள் 'கோதை ஆண்டாள்' ஆனாள். இக் கருத்திற்குரிய ஆதாரத்தைத் தொகை இலக்கியத்தில் இருந்து பெற முடிகிறது. 

ஆண்டாள் மறைவிற்குப் பிறகு தான் ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி அமைந்தது எனலாம். கோயிலுக்கு உள்ளே இருக்கும் கிணறு ஆண்டாள் முகம் பார்த்த கிணறு எனச் சொல்வது பொதுமக்கள் ஆண்டாளின் மேல் கொண்ட அன்பின் வெளிப்பாடு காரணமாகத் தோன்றிய நாட்டார் வழக்காறு. 

இந்தக் கோயில் மண்டபத்தில் இலவசமாக பரதநாட்டிய வகுப்புகள் ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெறும் என 1980களில் கேள்விப்பட்டு இருக்கிறேன். விருப்பம் உள்ளவர் யாராக இருப்பினும் ஜாதி பேதம் இல்லாமல் கற்றுக் கொடுத்தனர். அங்கே பயின்ற மாணவிகள் கல்லூரியில் (SFR) நாட்டியப் போட்டி வைக்கும் போது பின்னி விடுவார்கள்... நான் 1976ல் இருந்து 30ஆண்டுகள் தொடர்ந்து பணி ஆற்றிய கல்லூரி ஆதலால்; பல முறை நேரில் பார்த்து வியந்து இருக்கிறேன். இப்போது நடைமுறையில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

சக 

 

kanmani tamil

unread,
Jun 22, 2025, 2:29:02 PM6/22/25
to vallamai
ஆண்டாள் நாச்சியாரின் இடது கையில் ஏந்தி இருக்கும் கிளியின் செய்யும் முறை...

 
திருமணத் தடை நீங்க ஆண்டாளின் சன்னிதிக்குச் சென்று வழிபடும் பெண்களுக்கு ஆண்டாளின் கோதையை அணிவித்து; அவளது கையில் ஏந்திய கிளியையும் கையில் கொடுத்து; சன்னிதியை வலம் வர வைக்கும் நடைமுறை இன்று வரை தொடர்கிறது. 

சக

kanmani tamil

unread,
Jun 24, 2025, 10:01:48 PM6/24/25
to vallamai
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மடவார் வளாகம் எனப்படும் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலின் சிறப்புகள்:

ஆண்டாள் தன் தோழிகளோடு குடைந்து நீராடியது இச் சிவன் கோயிலின் அருகில் உள்ள குளம் என்பது கர்ணபரம்பரைச் செய்தி. 

திருமலை நாயக்கரின் வயிற்றுவலி இக்கோயிலுக்கு வந்து வழிபட்ட பிறகே தீர்ந்தது என்பர். 

இக்கோயிலின் உச்சிக்கால பூஜை முடிந்த பிறகே திருமலை நாயக்கர் உணவுண்ண அமர ஏதுவாக; இங்கிருந்து மதுரை வரை மணிமண்டபங்களை அமைத்தார் என்பர். 

https://youtube.com/shorts/9eLHLRBeZu0?si=tFkhmG6DFIsW-mQr

கோயிலின் பெயர்க் காரணம், சிவகங்கை தீர்த்தம், ஹேமதீர்த்தம், தாமரைக் குள மகிமை, படியில் காசு வைத்த பெருமை என அனைத்தும் இக் கோயிலின் பெருமைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன. 


சுகப் பிரசவத்திற்கு வழிபட வேண்டிய ஈசன் என்ற அற்புத நிகழ்வு தாயுமான சுவாமி பற்றிய தலபுராணத்தை ஒத்துக் காணப்படுகிறது. 


கோயிலின் பழமையும் அழகும் அமைதியும் மனதிற்கு நிறைவைக் கொடுத்து; பக்தியைத் தூண்டும் சூழலுடன் பொருந்தி உள்ளது. 

சக

kanmani tamil

unread,
Jun 25, 2025, 10:06:03 PM6/25/25
to vallamai
விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகில் உள்ள கீழ ராஜகுலராமன் கோயில்... 


கோயிலின் பெயரில் ராமன் இருக்க; கருவறைக்குள் பாமா ருக்மணி சகிதமாய் ராஜகோபாலன் தான் இருக்கிறார். இதிலிருந்தே இக் கோயில் காலத்தால் முற்பட்டதாக இருந்து... சிதைந்து... பின்னர் சீர்ப்படுத்தப் பட்டது என முடிவு செய்ய இயல்கிறது.

கோயிலின் மேற்கூரையில் உள்ள புடைப்புச் சிற்பம் என்ன என அடையாளம் சொல்ல இயலவில்லை என்கிறார் புலனப் பதிவாளர். அது மகரத்தின் வாய் (ஒரு வகை முதலை). 

கோயில் வாசலில் புடைப்புச் சிற்பமாக இருக்கும் கஜலட்சுமியின் திருவுருவமும் கூரையில் காட்சி அளிக்கும் முதலையின் தோற்றமும் இந்தக் கோயிலின் பழமைக்குச் சான்றாகும் ஆதாரங்கள். 

அரசு ஆவணம் சொல்வது போல் 400ஆண்டுகளுக்கு முற்பட்டது எனாமல் அதற்குப் பல நூற்றாண்டுகட்கு முற்பட்டது என அறுதியிட வாய்ப்பு உள்ளது. 

சக 

kanmani tamil

unread,
Jun 27, 2025, 2:04:47 PM6/27/25
to vallamai
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் இருக்கும் குடைவரையின் புடைப்புச் சிற்பம்;


விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள குடைவரையின் பின்புறம் உள்ள புடைப்புச் சிற்பத்தை ஒத்துக் காணப்படுவது;


ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஓர் அரிய வழக்காறை உண்மையெனக் காட்டும் தடயம் ஆகும். 

தென்காசிக் குடைவரையை மக்கள் வனப்பேச்சி கோயில் என்று அழைக்க; திருத்தங்கல் குடைவரை வனதுர்க்கை கோயில் எனப் பெயர் பெறுகிறது. இரண்டு பெயர்களிலும் இருக்கும் '-வன' எனும் முன்னொட்டு ஒரு ஒத்த தன்மையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. 

பண்டைத் தமிழகத்தில் கொற்றவையை வழிபடும் வீரன்; அரசன் வெற்றி பெறத் தனது தலையைத் தானே அரிந்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதற்குப் பண்டைத் தமிழ்த் தொகைநூல்கள் சான்று பகர்கின்றன. 

பண்டைத் தமிழகம் எங்கும் நடைமுறையில் இருந்த இப் பலிப் பழக்கம் பாண்டிய நாட்டில் இரண்டு தொல்லியல் எச்சங்களாகக் கிடைத்து இருப்பது; தமிழன் கடந்து வந்த பாதையைத் தெளிவாகக் காட்டுகிறது. 

சக 

kanmani tamil

unread,
Jul 7, 2025, 5:52:17 AM7/7/25
to vallamai
ஒரு சந்நிதிக்குள் இரு மனைவியரோடு ஐயனாரும் கூடவே சிவலிங்கமும் அமைந்துள்ள தனித்துவம் மிகுந்த கோயில்:


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் உள்ள கே.ஆலங்குளம் ஊரில் காணப்படுகிறது. 

இது குலதெய்வ வழிபாட்டிற்கு உரிய கோயில் ஆகும். தற்போது திருப்பணி தேவைப்படும் நிலையில் இருப்பினும் ஒரே கருவறையில் சிவலிங்கத்துடன் இருப்பதே சிறப்பம்சம் ஆகும். 

சக 

kanmani tamil

unread,
Nov 25, 2025, 10:54:57 PM11/25/25
to vallamai
ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில்:

ராமானுஜரின் பதப்படுத்தப்பட்ட திருமேனியை இக்கோயிலின் பிரகாரத்துக் கோடியில் இன்றும் காண இயல்வது வேறெங்கும் இல்லாத சிறப்பம்சம் ஆகும்.

பத்து வயதுச் சிறுமியாக என் பெற்றோருடனும் உடன்பிறப்புகளோடும் இந்தக் கோயிலுக்கு முதல் முறை சென்ற போது... 
பெற்றோருக்கு முன்னர்  வெகுவேகமாகத் தம்பியுடன் குதியாட்டம் போட்டுக் கொண்டு இச்சன்னிதியில் இத் திருவுருவைக் கண்டு துணுக்குற்று நின்றிருக்கிறேன். ஏனெனில் அந்தத் திருவுரு நிஜத்தில் ஒருவர் அமர்ந்து இருப்பது போலவே காட்சி அளித்தது. அதற்கு மேல் அதைப் பற்றி ஏதும் கேட்க அப்போது தோன்றவில்லை. 

1980களில் தான் ஸ்ரீராமானுஜரின் பூதவுடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது என்ற செய்தியை நான் கேள்விப்பட்டேன். அச் செய்தியின் உண்மைத் தன்மையைப் பின்வரும் பதிவு காட்டுகிறது. 

/// ஶ்ரீரங்கத்தில் 1000 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்படும் பூத உடல்!

ஆதிசேஷனின் அவதாரம் 
என்றென்றும் நிலைத்திருக்கும்
இராமானுஜர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூதஉடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக... கெடாமல் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் பச்சைக் கற்பூரமும், குங்குமப்பூவும் கொண்டு அபிஷேகம் செய்து வருகிறார்கள். அமர்ந்த நிலையில் சற்றே பெரிய திருமேனியாக இராமானுஜரை இன்றும் நாம் ஶ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் தரிசிக்கலாம் (உடையவர் என்பது இராமானுஜரின் சிறப்புப் பெயர்).

இந்த அதிசய செய்தியை இந்துக்களிலேயே பலரும் அறிந்திருக்கவில்லை.

ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியே ஸ்ரீராமனுஜர் சந்நதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் என்று அறிவது இல்லை. சந்நதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்துக் கடந்து போகிறார்கள்.

தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.

இராமானுஜர் தமது 120-ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.

அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

அவரது உயிர் பிரிந்த உடனே
'தர்மோ நஷ்ட' (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்பர்.

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த ஆடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.

உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி, அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த ஆடையையும் சூடிக்களைந்தத் தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம்.

பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் “பிரம்மமேத ஸம்ஸ்காரம்” என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு, இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும், ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம்.

பல்லாயிரக்கணக்கான சீடர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கித் திருவாய்மொழி யரையர் ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

தொடர்ந்து ‘இராமானுஜர் நூற்றந்தாதி” ஓதியபடி ஶ்ரீரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர்.

மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது...
தரிஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்! என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்
“இராமானுஜன் என்தன் மாநிதி
என்றும்; இராமனுஜன் என்தன் சேமவைப்பு” என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்!

அதாவது இராமானுஜர், எனது மிகப் பெரும் செல்வம்; எனது சேமநிதி! என அரங்கன் திருவாய் மலர்ந்தருளினார்.

நமது பணத்தை. நாம் வங்கியில் நிரந்தர சேமிப்பு வைப்பு நிதியாகப் பாதுகாப்பதைப் போல; அரங்கன் இராமரின் தம்பி இலட்சுமணரின் அவதாரமான இராமனுஜரை என்றென்றும் பாதுகாத்து வைத்திட அருள் செய்தார்.

அப்படியானால் பிற சிரஞ்ஜீவிகளைப் போல இவரையும் ஏன் என்றென்றும் உயிரோடிருக்கச் செய்யவில்லை? என்றால்; கலியுகம் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை எனலாம். உயிர் பிரிந்து பூதவுடலானாலும்; திருமேனி எப்போழுதும் அடையாதிருப்பதே இறைபக்தி... இறை நம்பிக்கையற்றவர்கள் இதைக் கண்ணாரக் கண்டு அறிவு பெற்றிட வேண்டும் என்பது திருமாலின் திருவுள்ளமாக இருக்கலாம்.

எனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தப்புரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சந்நதிக்குள்ளேயே (யதிஸம்ஸ்காரவிதியின் படி) பள்ளிப்படுத்தினர் பெரியோர்.

பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. 

இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம். இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சந்நதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்குத் 'தானான திருமேனி' என்று பெயர்.

ஆதிசேஷனின் அவதாரமல்லவோ இராமானுஜர்! இலட்சுமணரின் மறுபிறவி அல்லவோ இராமனுஜர் (இராம+அனுஜர்;
அனுஜ = தம்பி) அவரது திருமேனி இன்றும் நிலைத்திருக்கத் தானே செய்யும்?!!

kanmani tamil

unread,
Dec 7, 2025, 6:54:06 PM12/7/25
to vallamai
முதனை அருள்மிகு முதுகுன்றீஸ்வரர் திருக்கோயில்:

/// #முதல்நெய் > முதனை.  

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது; முதன்முதலாக நெய் வழங்கியது இவ்வூர். இதன் காரணமாகவே இவ்வூரின் பெயர் முதல்நெய் எனப்பெற்றது. இது மருவி முதநெய் என அழைக்கப் பெற்றுத் தற்போது 'முதனை' என அழைக்கப்படுகிறது. 

மூலவர்: முதுகுன்றீஸ்வரர்
உற்சவர்: பழமலை நாதர்
அம்மன்: பெரியநாயகி
தல விருட்சம்: கொன்றை மரம் (சுமார் 5 தலைமுறைக்கு மேலாக ஒரே அளவில் உள்ளது.)
தீர்த்தம்: நன்னீர் குளம்
பழமை: 500-1000 ஆண்டுகட்கு முன்
விருத்தாசலம் அருகில், கடலூர் மாவட்டம். தமிழ்நாடு 607 804

திருவிழா:     
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், தை பிரம்மோற்சவம் (வேல்முழுகுதல்) மாசி மகம், சோமவாரம், பிரதோஷம்.  
   
திறக்கும் நேரம்:     
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.   
    
கோயில் அமைப்பு:    
ஊரின் வடமேற்கு திசையில், ஏரியின் ஓரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலினுள் செல்ல பிரதான வாயில் ஒன்று மட்டுமே உள்ளது. சுற்றுச் சுவர் உள்ளது. நுழைவு வாயிலின் வலதுபுறம் மூஞ்சுறு வாகனத்துடன் விநாயகர், இடதுபுறம் வள்ளி, தெய்வானை, முருகர் சிலைகள் மாட அமைப்பில் வைக்கப்பட்டுள்ளன. விநாயகப் பெருமானை வழிபட்டு உள்ளே சென்றால் உடன் காட்சி கொடுப்பது பலிபீடம். அதனையடுத்து, கொடிமரம் அதிகார நந்தி, முதுகுன்றீஸ்வரர் அர்த்த மண்டபம், மூலஸ்தானம். மூலஸ்தானத்தில் சதாசிவ வடிவில் முதுகுன்றீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பீடத்தின் மேலிருக்கும் ஆவுடையாருடன் சேர்ந்து மூலஸ்தான விக்ரகம் இரண்டரை அடி உயரமுள்ளது. அர்த்த மண்டபத்தின் வாயிலின் மேல் கெஜலட்சுமி சிலை, அர்த்த மண்டபம்.
அம்பாள் சன்னதி: முதுகுன்றீஸ்வரரை வழிபடும் மகா மண்டபத்தின் மத்தியில் நின்று வடக்கு நோக்கினால் காண்பது பெரியநாயகி அம்மன் கோயிலாகும். அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தெற்கு ஓரத்தில் பலிபீடம், நந்தி உள்ளன. 
கருவறையின் வெளிச்சுவற்றின் தெற்கு கோட்டத்தில் தட்சணாமூர்த்தியாகிய தென்முகக் கடவுள் கல் ஆலின் கீழிருந்து நால்வருக்கு அறிவுரை வழங்குவது போன்றும் வலது காலின் கீழ் முயலகன் கிடக்கும் கல்வடிவ சிலை உள்ளது.
திருச்சுற்று வரும்போது தென்மேற்கில் கன்னி மூல விநாயகர் வீற்றிருக்கிறார்.
முதுகுன்றீஸ்வரர் கருவறையில் வடக்குப் பக்கம் கோமுகத்தின் கீழ்ப்பக்கம் சண்டிகேஸ்வரர் தனி கோவிலில் ஒன்னரை அடி உயரத்தில் தெற்கு நோக்கி உள்ளார்.
சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு வடக்குப் பக்கமுள்ள சன்னதியில் வலது கையில் வேல், அம்பு, வாள், கொடி தண்டுகத்தலும், இடது கையில் வில், வஜ்ரம், தாமரை, மலர்கேடயங்களுடன் முருகன் கிழக்கு நோக்கியுள்ளார். எதிரே தனி பீடத்தில் மயில் உள்ளது.
முருகன் சன்னதிக்கு வடக்குப் பக்கமாக பெருமாளுக்குத் தனி சன்னதி உள்ளது. எதிரில் ஒன்றரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். 
பெருமாள் கோவிலையடுத்து, காசிலிங்கநாத கோவில் உள்ளது. இந்த மண்டபத்தில் தென் பகுதியில் கிழக்கு நோக்கி விநாயகரும், வடக்கு பகுதியில் தெற்கு நோக்கி விசாலாட்சி அம்பாளும் உள்ளனர்.
பெரியநாயகி அம்மன் சன்னதியில் கிழக்குப் பக்கம் துர்க்கை அம்மன் நின்ற கோலத்தில் நான்கு கைகளில், மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரமும், கீழ் வலது கை அபய அமைப்பிலும், இடது கை இடுப்பில் வைத்திருப்பது போன்று தனிச் சன்னதியில் உள்ளார். மகாமேரு வடிவில் கோபுர விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவாயிலில் வடக்குப் பக்கம் தனி கட்டட அமைப்பில் நவக்கிரக சன்னதியும் உள்ளன. 
இராஜகோபுர உள்மண்டபத்தில் மேற்கு முகம் நோக்கிக் காலபைரவர், சூரியன், சந்திரன் காட்சி தருகின்றனர்.    
     
தலப்பெருமை:    
இத்தலத்திற்கு இயற்கை வளம் கொண்ட இரண்டு ஏரிகளும் பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கும் செம்புலிங்க அய்யனாரும் பெருமை சேர்ப்பன.  
     
தல வரலாறு:     
கி.பி., 12ம் நூற்றாண்டின் இறுதியில் நடு நாட்டினை ஆட்சிபுரிந்த காடவர் தலைவர்களான கச்சிராயர்களில் ஒருவர் முதநெய் கிராமத்தில் வாழ்ந்தார். இவர், தினமும் திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலத்திற்கு நேரில் சென்று பழமலைநாதர் எனும் விருத்தகிரீஸ்வரரை வணங்கி வந்தார். முதுமை காரணமாக அவரால் விருத்தாசலம் செல்ல முடியாத நிலையை எண்ணி வருந்தியபோது, பழமலை நாதர் (விருத்தகிரீஸ்வரர்) பெரியநாயகியுடன் இவ்விடத்தில் காட்சியளித்ததாகவும், காட்சி கொடுத்த இடத்திலேயே இத்திருக்கோவிலைக் கட்டி வழிபட்டு வந்த அவர், செலவுக்கு மானியமாக நிலம் கொடுத்ததாகவும் ஐதீகம்.  
     
மகாமண்டபத்தின் மத்தியில் நின்று வெவ்வேறு இடங்களிலுள்ள பழமலை நாதர், பெரியநாயகியை ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.  

விருத்தாசலத்திற்கு கிழக்கே 20 கி.மீ., தூரத்திலும், நெய்வேலிக்கு மேற்கே 8 கி.மீ., தூரத்திலும் உள்ள முதனை ஏரியின் வடக்குப் பக்கத்தில் கோவில் உள்ளது.

நன்றி: இரா.வி.மதுசூதனன் ஐயர் (பதிவிலிருந்து)


திருவண்ணாமலை தீபத்திற்கு முதல்நெய் அளித்த பெருமை இவ்வூரின் சிறப்பாக மட்டும் இன்றிக் கோயிலின் சிறப்பும் ஆகிறது. 

தெரிவு:சக 

kanmani tamil

unread,
Dec 19, 2025, 7:47:54 PM12/19/25
to vallamai
ஒருநாமம் ஓருருவம் இலானுக்கு ஆயிரம் திருநாமம் சாற்றித் தெள்ளேணம் கொட்டிய தமிழரின் சமய வாழ்வில்... ஒரே ஐயனார் இடம் / பொருள் காரணமாகப் பெறும் நூற்றுக்கணக்கான பெயர்கள்..

கணக்கில் அடங்காப் பெயர்களுடன் ஐயனார்... 

/// #ஐயனார் பெயர்கள்:-

ஆயிரம் பெயர்கள் அய்யனுக்கு உண்டு. அவற்றில் எனக்குத் தெரிந்த சில பெயர்களுடன் கார்,  வேன்கள், கடை பெயர்ப் பலகைகளில் பார்த்த பெயர்கள்; இவற்றுடன் வலைத் தளங்களில் இருந்து சேகரித்த பெயர்கள் அனைத்தையும் பதிவிட்டுளேன்

                 அய்யனாரைப் பல இடங்களில் பல பெயர்களில் வழிபடுகிறர்கள்.  இவை காரணப் பெயராகவோ அல்லது ஊர்ப் பெயராகவோ அனமந்துள்ளன. 

1 கரையடி காத்த அய்யனார்       
2 அடைக்கலம் காத்த அய்யனார்
3 நீர்காத்த அய்யனார்
4 அருஞ்சுனை காத்த அய்யனார்
5 சொரிமுத்து அய்யனார்
6 கலியணான்டி அய்யனார்
7 கருங்குளத்து அய்யனார்
8 குருந்துனடய அய்யனார்
9 இளம்பாளை அய்யனார் 
10 கற்குவேல் அய்யனார்
11 கொன்றையாண்டி அய்யனார் 
12 செண்பகமூர்த்தி அய்யனார்
13 திருவேட்டழகிய அய்யனார் 
14 சமணர்மலை அய்யனார் 
15 கூடமுடைய அய்யனார்
16 சிறை மீட்டிய அய்யனார் 
17 எட்டிமுத்து அய்யனார்
18 செகுட்ட அய்யனார் 
19 வெட்டுடைய அய்யனார் 
20 மருது அய்யனார் 
21 வேம்பூலி அய்யனார் 
22 நிறைகுளத்து அய்யனார்
23 ஆதிபுதிரங்கொண்ட அய்யனார்
24 சித்தகூர் அய்யனார் 
25 பிரண்டி அய்யனார்
26 வீரமுத்து அய்யனார்
27 பாலடி அய்யனார் 
28 தந்தலை வெட்டி அய்யனார் 
29 கருமலை காத்த அய்யனார் 
30 அல்லல் தீர்த்த அய்யனார் 
31 ஹரி இந்திர அய்யனார் 
32 காடைப்பிள்ளை அய்யனார் 
33 செல்லப்பிள்ளை அய்யனார் 
34 வீர பயங்கரம் அய்யனார் 
35 மாணிக்கக் கூத்த அய்யனார் 
36 வணங்காமுடி அய்யனார் 
37 குன்னிமலை அய்யனார் 
38 தூத்துவான் அய்யனார்
39 மாநாடு அய்யனார்
40 தலையூனி அய்யனார்
41 பொன்வண்டு அய்யனார்
42 பலவேசம் அய்யனார்
43 மருதமலை அய்யனார்
44 அல்லியூத்து அய்யனார்
45 வன்னிய அய்யனார்
46 எரிச்சீஸ்வர அய்யனார்
47 சுனை அய்யனார்,
48 வில்லாயுதம் உடைய அய்யனார் 
49 கோச்சடை அய்யனார்
50 மக்கமடை அய்யனார் 
51 வீரப்ப அய்யனார்
52 மஞ்சனீஸ்வர அய்யனார்
53 வெங்கலமூர்த்தி அய்யனார்
54 குரும்புடைய அய்யனார்
55 நீதியுடைய அய்யனார்
56 ஈடாடி அய்யனார்
57 செவிட்டு அய்யனார்
58 தேன்மலையாண்டி அய்யனார்
59 கலியுகமெய் அய்யனார்
60 கரந்தமலை அய்யனார்
61 பனையூருடைய அய்யனார்
62 அதிராம்சேரி அய்யனார்
63 மலம்பட்டி அய்யனார்
64 ஜடாமுனி அய்யனார்
65 ராசவெலி அய்யனார்
66 பொய் சொல்லாத மெய் அய்யனார்
67 அலங்கம்பட்டி அய்யனார்
68 புரோவர்த்தி அய்யனார்
69 ஐந்துமுடை அய்யனார்
70 அதினமிளகிய அய்யனார்
71 ஒடக்குலம் அய்யனார்
72 பாலாறுகொண்ட அய்யனார்
73 குன்னக்குடி அய்யனார்
74 குலம் அய்யனார்
75 வலையங்குளம் அய்யனார்
76 கருகப்பிள்ளை அய்யனார்
77 வெள்ளிமலை அய்யனார்
78 கருக்காச்சி அய்யனார்
79 பெரியகுளம் அய்யனார்
80 வளையங்குளம் அய்யனார்
81 செல்லபட்டி அய்யனார்
82 கடவுகாத்த அய்யனார்
83 செங்கமடை அய்யனார்
84 நல்லூடைய அய்யனார்
85 வல்லகுடி அய்யனார்
86 இடமறை அய்யனார்
87 சுண்டைக்காட்டு அய்யனார்
88 கூத்தினிகாட்டு அய்யனார்
89 வெள்ளவேடு அய்யனார்
90 அம்மச்சி அய்யனார்
91 நாகலிங்க அய்யனார்
92 உத்தம அய்யனார்
93 வெள்ளை வீர அய்யனார்
94 பெரியசாமி அய்யனார்
95 மூர்த்தி அய்யனார்
96 வேலங்கி அய்யனார்
97 சுயம்புலிங்க அய்யனார்
98 பராக்கிரப்பாண்டிப்பேரி அய்யனார்
99 வெற்றிவேல் அய்யனார்
100 ஐந்தருவி அய்யனார்
101 அழகிய அய்யனார்
102 குளத்தூர் அய்யனார்
103 செம்புலி அய்யனார்
104அகலிகைசாபம்தீர்த்த அய்யனார்
105 படியேறும் அய்யானர்
106 குறும்பண்ட அய்யனார்
107 பேயாண்டி அய்யனார்
108 ஆறுமுக அய்யனார்
109 திருக்கோட்டி அய்யனார்
110 ஆதீனமிளகிய அய்யனார்
111 ஆனைமேல் அய்யனார்
112 வெங்கலமுடி அய்யனார்
113 சாகத அய்யனார்
114 வட்டத்தாழி அய்யனார்
115 பொன் அய்யனார்
116 புலியாண்டி அய்யனார்
117 சாத்த அய்யனார்
118 நடுவுடைய அய்யனார்
119 வேலடிபண்ணை அய்யனார்
120 சின்ன அய்யனார்
121 தேத்தாம்பட்டி மலையாண்டி அய்யனார்
122 வெள்ளுடைய அய்யனார்
123 வீரமலைஅய்யனார்
124 சோலைமலை அய்யனார்
125 குருவீரப்ப அய்யனார்
126 மஞ்சமலை அய்யனார்
127 செருவலிங்க அய்யனார்
128 சுண்டக்காட்டு அய்யனார்
129 அழகியவரத அய்யனார்
130 களத்திருடைய அய்யனார்
131 கலியுகவரத அய்யனார்
132 தண்டீஸ்வர அய்யனார்
133 வெள்ளந்திருவரசு வரத அய்யனார்
134 கரும்பாயிரம் கொண்ட அய்யனார்
135 நலலமுத்துஅய்யனார்
136 குன்னம் அய்யனார்
137இராஜவளவாண்ட அய்யனார்
138 பரமநாதஅய்யனார்
139 பழங்குளத்து அய்யனார்
140 கொடைமுகி அய்யனார்
141 கரைமேல்அழகர் அய்யனார்
142 சிறைகாத்த அய்யனார்
143 மழைகாத்த அய்யனார்
144செல்வராய அய்யனார்
145 திருமேனி அய்யனார்
146 நல்லசேவு அய்யனார்
147 பூங்காவிடை அய்யனார்
148 முத்துபிரம்ம அய்யனார்
149 மெய்சொல்லி அய்யனார்
150 கலிதீர்த்த அய்யனார்
151 பெருவேம்பு அய்யனார்
152 தோளப்ப அய்யனார்
153 மோக்கமுடைய அய்யனார்
154 மெய்ஞானமூர்த்தி அய்யனார்
155 வளமுடைய அய்யனார்
156 கொத்தவல்லிஅய்யனார்
157 மஞ்சள்கூத்த அய்யனார்
158 கட்டியப்பஅய்யனார்
159 ஓலைகொண்ட அய்யனார்
160 நல்லகுருந்த அய்யனார்
161 பந்தமாணிக்க அய்யனார்
162 செல்லக்குட்டி அய்யனார்
163 காரியழகர் அய்யனார்
164 ஆலமுத்து அய்யனார்
165 சாம்பக மூர்த்தி அய்யனார்
166 வள்ளாள கண்ட அய்யனார்
167 குழந்தி அய்யனார்
168 கூரிச்சாத்த அய்யனார்
169 திருவீதிகொண்ட அய்யனார்
170 சிங்கமுடைய அய்யனார்
171 பொய்யாமொழி அய்யனார்
172 பிழைபொறுத்த அய்யனார்
173 வினைதீர்த்த அய்யனார்
174 வலதுடைய அய்யனார்
175 துல்லுக்குட்டி ஐயனார்
176 நீலமேக அய்யனார்
177 முடிபெருத்த அய்யனார்
178 மருதய அய்யனார்
179 உருவடி அய்யனார்
180 பெருங்காரையடி மீண்ட அய்யனார்
181 பாதாள அய்யனார்
182 வழிகாத்த அய்யனார்
183 கருத்தக்காட்டு அய்யனார்
184 சுந்தரசோழ அய்யனார்
185 கீழ அய்யனார்
186 வடக்க அய்யனார்
187 திருவரசமுர்த்தி அய்யனார்
188 மைந்தனைக் காத்தாடையப்ப அய்யனார்
189 தாடையப்ப அய்யனார்
190தொண்ட மண்டல அய்யனார்
191 இராம அய்யனார்
192 பெத்தபாட்டை அய்யனார்
193 செல்லமுத்துஅய்யனார்
194 முதலியப்பஅய்யனார்
195 மருதப்பஅய்யனார்
196 பணங்காடி அய்யனார்
197 சேவூராயஅய்யனார்
198 கண்ணாயிரமூர்த்தி அய்யனார் 
199 தொரட்டை அய்யனார் 
200 சுப்பாணிகூத்த அய்யனார்
201 வழியடி அய்யனார்
201 காரியப்பஅய்யனார்
202 பொற்கண்டஅய்யனார்
203 துள்ளுவெட்டி அய்யனார்
204 கூரிச்சாத்த அய்யனார்
205 கிளிக்கூண்டு அய்யனார்
206 நல்லி அய்யனார்
207 ஈடாடி அய்யனார்
208 ஆதி அய்யனார்
209 பரமநாத அய்யனார்
210 ஸ்ரீ புலிக்கரை அய்யனார்
211 தடி கொண்ட அய்யனார்
212 குறுமலை பொய்யாலப்பன் அய்யனார்
213 அரியசுவாமி அய்யனார்
214 காரிய அய்யனார்
215 வெள்ளந்தாங்கி அய்யனார்
216 ஏரமுடி ஐயனார்
217 செங்கொழுந்து ஐயனார்
218 பொய்யாடமூர்த்தி ஐயனார்

அய்யானாரை சில இடங்களில் சாஸ்தாவாகவும் வழிபடுகிறார்கள்

219 ஆதிமணிகண்ட சாஸ்தா
220 பெருவேம்புடையார் சாஸ்தா
221 சமூகமடம் குளத்தய்யன் சாஸ்தா
222 அரிகரபுத்திர சாஸ்தா
223 குளகக்ரைசாஸ்தா
224 மடையுடையார் சாஸ்தா
225 கலைக்காவுடையார் சாஸ்தா
226 வேம்படி சாஸ்தா
227 எம்பெருமாள் சாஸ்தா
228 தர்ம சாஸ்தா
229 மருதவுடையார் சாஸ்தா
230 சௌந்தரிய சாஸ்தா
கரையடி காத்த அய்யனார்  
கரையடி காத்த அய்யனார்  
231 அய்யனார்பட்டி சாஸ்தா
232 மருங்கய்யன் சாஸ்தா
233 மேகமுடையார் சாஸ்தா  
234 மருது உடையார் சாஸ்தா
235 சடையுடையார் சாஸ்தா
236 பூனுடையார் சாஸ்தா
237 வடமலை சாஸ்தா
238 பனையடியான் சாஸ்தா
239 எட்டுடையார் சாஸ்தா
240 ஹரிஹரபுத்திர சாஸ்தா
241 பட்டமுடையார் சாஸ்தா
242 தெற்கு உகந்த உடையார் சாஸ்தா
243 குளத்தூராயன் சாஸ்தா
244 கோயில் குளம் சாஸ்தா
245 மடையுடையார் சாஸ்தா
246 குளத்தூராய்யன் சாஸ்தா
247 தலைக்காவுடையாயார் சாஸ்தா
248 காரிசாஸ்தா கரவுடையார் சாஸ்தா
249 காரியமுடையார் சாஸ்தா
250 உலகுடையார்சாஸ்தா  
251 அஞ்சனமெழுதிய கண்டன் சாஸ்தா
252 காரி அய்யன் சாஸ்தா
253 சடையுடைய கண்டன் சாஸ்தா
254 வெட்டுவெண்ணி கண்டன் சாஸ்தா
255 பிராஞ்சேரி கண்டன் சாஸ்தா
256 புன்னார்குளம்சாஸ்தா
257 ஊருக்குடைய கண்டன் சாஸ்தா
258 நயினார் உதய கண்டன் சாஸ்தா
259 புதுக்குளம் கண்டன் சாஸ்தா
260 பொன்னாயிரமுடைய கண்டன் சாஸ்தா
261 சடையுடைய கண்டன் சாஸ்தா
262 கான சாஸ்தா
263 குடமாடிசாஸ்தா
264 சுரைக்காவல் அய்யன் சாஸ்தா
265 அரி கோவிந்த சாஸ்தா///

https://www.facebook.com/share/17WEVkxKAa/

தெரிவு: சக

seshadri sridharan

unread,
Dec 19, 2025, 9:21:24 PM12/19/25
to vall...@googlegroups.com
ஐயர் என்ற மதிப்பு பன்மையை தமிழில் ஐயன் என்போம் ஒருமையில். ஐயனார் என்பது ஒருமையுடன் சேர்ந்த மதிப்பு பன்மை. நான் மார்கலி கோசலர் ஆவியுடன் பேசியபோது நீர் கடவுள் இல்லை என்றீர். ஆனால் உம்மையே கடவுள் ஆக்கினரே எப்படி என்றேன். அதற்கு தொடக்கத்தில் மதிப்பு என்ற அளவில் தான் இருந்தது. பின்பு தான் தெய்வம் ஆக்கப்பட்டேன் என்றார். இவர் மகாபலிபுரம் அருகே இருந்த சரவணா என்றா இடத்தில் பிறந்தவர்.  அதே ஊரில் தான் நாந்தாசிரியரும் பிறந்தார். இருவரும் பிராமணர் என்பதால் ஐயன் எனப்பட்டனர். 

kanmani tamil

unread,
Dec 21, 2025, 7:33:32 PM12/21/25
to vallamai
/// சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்

ஒரு விரிவான பார்வை:
​சிவன் என்றாலே நமக்கு லிங்க வடிவம் தான் நினைவுக்கு வரும். ஆனால், சிவபெருமான் மூலவராக மனித உருவில் சயன கோலத்தில் (படுத்துக் கொண்டு) அருள்பாலிக்கும் உலகிலேயே அபூர்வமான தலம் தான் சுருட்டப்பள்ளி.

​தல வரலாறு: 
ஆலகால விஷம் உண்ட ஈசன்:

​தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, வாசுகி பாம்பு வலி தாங்காமல் ஆலகால விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் உலகை அழிக்காமல் இருக்க, சிவபெருமான் அதை விழுங்கினார். விஷம் அவர் வயிற்றுக்குள் செல்லாமல் இருக்க, பார்வதி தேவி அவரது கழுத்தை அழுத்திப் பிடித்தார். இதனால் விஷம் தொண்டையிலேயே தங்கி, சிவபெருமான் 'நீலகண்டன்' ஆனார்.
​விஷத்தை உண்ட மயக்கத்தில் சிவபெருமான் சற்று இளைப்பாற விரும்பினார். அப்படி அவர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்து ஓய்வெடுத்த இடமே சுருட்டப்பள்ளி. சிவன் இங்கு 'பள்ளி கொண்டீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

​கோவிலின் தனிச்சிறப்புகள்:
சயன கோல சிவன்: 
பொதுவாக விஷ்ணு தான் பள்ளிகொண்ட நிலையில் இருப்பார். ஆனால், இங்கு சிவன் மனித உருவில் அம்பிகையின் மடியில் தலை சாய்த்து படுத்திருக்கும் காட்சி மிகவும் அபூர்வமானது.

​தம்பதி சமேதராய் தெய்வங்கள்:
இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இங்குள்ள அனைத்து தெய்வங்களும் தங்களது துணைவியருடன் (தம்பதி சமேதராய்) காட்சியளிக்கின்றனர்.
​பள்ளிகொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை
​வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை
​விநாயகர் – சித்தி, புத்தி
​சாஸ்தா – பூரணை, புஷ்கலை
​குபேரன் – கவுரி தேவி

​பிரதோஷத்தின் பிறப்பிடம்: பிரதோஷ காலம் முதன்முதலில் உருவானது இந்த தலத்தில் தான் என்று நம்பப்படுகிறது. தேவர்கள் அனைவரும் இங்கு வந்து சிவபெருமானின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

​மூலவர் வால்மீகிஸ்வரர்: 
இங்கு சுயம்பு லிங்கமாக 'வால்மீகிஸ்வரர்' வீற்றிருக்கிறார். வால்மீகி முனிவர் இங்கு தவம் இருந்து சிவனை வழிபட்டதால் இப்பெயர் பெற்றது.
​கோவில் அமைப்பு
​இக்கோவில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. கருவறைக்கு வெளியே துவார பாலகர்களுக்குப் பதிலாக சங்கநிதி மற்றும் பதுமநிதி சிலைகள் உள்ளன. அம்பாள் சன்னதிக்கு வெளியே காமதேனு மற்றும் கற்பக விருட்சம் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில் பிரம்மா, விஷ்ணு, சப்தரிஷிகள், இந்திரன், சூரியன் மற்றும் சந்திரன் போன்ற பல தெய்வங்கள் உள்ளனர்.
வழிபாட்டுப் பலன்கள்:
​இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், தம்பதிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக, பிரதோஷ நாட்களில் இங்கு வந்து வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

​இந்தத் தலம் ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது.///

https://www.facebook.com/share/16q6vDHPLW/

தெரிவு:சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTKxfFoKvg8XgW6gMrJfqpwNymm-7nGRgZ2_UPW_oTwpg%40mail.gmail.com.

Venkatachalam Dotthathri

unread,
Dec 22, 2025, 12:08:32 PM12/22/25
to Vallamai
பிலாவடி சாஸ்தா அம்பாசமுத்திரம் தாலுகா கோடாரங்குளம் கிராமத்தில் உள்ளார்.
வெ.சுப்பிரமணியன்.ஓம்

kanmani tamil

unread,
Jan 5, 2026, 8:15:09 PMJan 5
to vallamai
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் 

/// இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனிதத் தலம் பற்றிய 60 சிறப்புத் தகவல்கள் :-

1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்புலிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.
4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.
6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளைப் பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.
7. ஆதி காலத்தில் இந்தத் தலம் சிவபுரம், தெட்சிண கைலாயம், சதுர்வேதி மங்கலம், 
இலந்திகைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.
9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய
திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.
12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.
13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான
அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.
14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்தக் கல்வெட்டு கருதப்படுகிறது.
15. இத்தலத்தில் வேதவியாசர், காகபுஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்
வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.
16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.
17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.
18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்
என்று இத்தல மான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.
19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.
20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த
கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப் பெருமான் என இப்பெருமான் போற்றப்படுகிறார்.
23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே
அம்பாளுக்கு வேதப் பொருளை உபதேசம் செய்து; பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர
சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.
26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளன. நாம் கையை நுழைத்துக் கூட பந்தை நகர்த்த முடியும்.
27. இத்தலத்துக் கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.
28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில் சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை
கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.
29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை
தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள், திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.
30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்குச் செல்லலாம்.
31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதக்கல் 
நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதைக் கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
32. இத்தலத்தில் தினமும் முதலமைச்சரின் அன்னத்தானத் திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்கு அன்னதானம் கொடுக்கலாம்.
33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது.
34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.
35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்
தனிதனிக் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
36. நடராஜர் மரகதக் கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்
இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.
37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டுச் சென்றுள்ளார்.
38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிடக் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம், வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பத்துநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்
அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா, மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் ஆகும்.
41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகின்றன.
42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம்.
44. மரகதக்கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.
45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.
46. மங்களநாதர் சன்னதியைச் சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.
47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.
48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.
49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.
50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.
51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.
52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும்; இன்று வரை உயிருடன் உள்ளதும்; பல அருள் தலைமுறைகளும்
முனிவர்களும் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்தை மரம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
53. வேதவியாசர், பாராசரர், காகபுஜண்ட ரிஷி, மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.
54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.
55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா
56. இத் திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.
57. சிவபெருமானால் பரத நாட்டியக் கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயமாகும்.
59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளைத் தாலாட்டும் போது பாடினால்; குழந்தைகள்
உயரமாகவும் உன்னதமாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

///🌹ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மரகதமேனி தரிசனம்:
🌹உண்மையாகவே ஆச்சரியமூட்டும் நடராஜர் அதிசயங்கள்!
🌹தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்கள் இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை தனித்துவமானது. இங்குள்ள நடராஜர் சிலையும், அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடைப்பட்ட ஒரு பெரும் மர்மம்.
 🌹1. உலகிலேயே பெரிய மரகதத் திருமேனி!
இங்குள்ள நடராஜர் சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது. இது விலைமதிப்பற்ற, தூய பச்சை மரகதக் கல்லால் ஆனது. உலகில் இவ்வளவு பெரிய மரகதச் சிலை வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🌹 2. ஏன் 364 நாட்கள் சந்தனக் காப்பு?
மரகதம் ஒரு மென்மையான கல். இது ஒளி, ஒலி மற்றும் காற்று ஆகியவற்றின் அதிர்வுகளால் விரிசல் அடைய வாய்ப்புள்ளது. இந்தச் சிலையைப் பாதுகாப்பதற்காகவே ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டிருக்கும். மேள தாளங்கள் கூட இந்தச் சிலைக்கு அருகில் பலமாக இசைக்கப்படாது.
🌹 3. அந்த ஒரு நாள் அதிசயம்!
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனத்தன்று காலை சந்தனம் களையப்படும். அன்று ஒரு நாள் மட்டுமே சிலையைப் பச்சை நிற மரகத மேனியில் தரிசிக்க முடியும்.
🌹 அப்போது சிலையின் மீது சூரிய ஒளி படும்போது, சிலை உயிர்ப்புடன் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்.
🌹மிகவும் நுணுக்கமாக கவனித்தால், சிலையின் உடலில் மனிதர்களுக்கு இருப்பது போன்ற நரம்புகள் தெரிவதை இன்றும் காணலாம். இதுதான் இந்தச் சிலையின் மிகப்பெரிய அதிசயம்!
🌹 4. அதிசய அபிஷேகமும் தீர்த்தமும்!
மரகத சிலையின் மீது அபிஷேகம் செய்யப்படும்போது, அந்தப் புனித நீர் மற்றும் சந்தனம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது. குறிப்பாகச் சிலையிலிருந்து எடுக்கப்படும் அந்தப் பழைய சந்தனம் பக்தர்களுக்குப் பெரும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
🌹 5. காலத்தால் முந்தைய தலம்
மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது" என்பது இக்கோவிலின் பழமையைச் சொல்லும் வாசகம். அதாவது பூமி உருவான காலத்திலிருந்தே இந்தத் தலம் இருப்பதாக நம்பப்படுகிறது. இராவணன் இந்த ஈசனை வழிபட்டுத் தான் தனது வரங்களைப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.🙏ஓம் நம சிவாய🙏///
தெரிவு:சக 

kanmani tamil

unread,
Mar 21, 2026, 5:17:46 AMMar 21
to vallamai
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில், திருவனந்தபுரம். 

கேரளத்தில் ஆட்டுக்கால் என உச்சரிக்கின்றனர். ஆற்றின் கிளை அருகே இருக்கும் கோயில். 

பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு மாசி மாதம் பொங்கல் திருவிழாவிற்கு நேரில் சென்று  வழிபட வாய்ப்புக் கிடைத்தது. 

லட்சக்கணக்கில் எல்லாத் திசைகளிலும் இருந்து பெண்கள் படையெடுத்து வருவது போன்ற காட்சி தான்.

ஊரின் புறநகர்ப் பகுதிகளில் கூட... எல்லாத் தெருக்களிலும் வீதிகளிலும் கூட... மூன்று செங்கலைக் கூட்டி அடுப்பாக்கி வரிசையாக... ஒரு ஒழுங்கிற்கு உட்பட்டு... கோயில் நிர்வாகத்தில் இருந்து மூட்டிக் கொடுக்கும் தீயைத் தான் ஒவ்வொருவரும் தம் அடுப்பில் பத்த வைக்கின்றனர். தவறாது ஒவ்வொரு சந்திக்கும் அது புனிதமாகக் கருதி எடுத்து வரப்படுகிறது.


ஆக... குறிப்பிட்ட நேரத்தில் தான் எல்லோரும் அடுப்பு மூட்டுகின்றனர். பொங்கல் இடுகின்றனர். சிலர் கொழுக்கட்டையாக அவிக்கின்றனர். சிலர் கருப்பட்டிப் பாகில் கேரளத்தின் தனிச்சிறப்பான பாயசம் காய்ச்சுகின்றனர். எல்லோரும் பெண்கள் தாம் (ஆண்கள் போட்டி போடவில்லை). 


வெயில் ஏற ஏறப் பொதுமக்கள் விநியோகிக்கும் பழச்சாறு, குளிர்பானங்கள், நீர்மோர் என முக்குக்கு முக்கு வரிசை கட்டுகிறது. 
உச்சிவேளைக்குப் பிறகு ஆங்காங்கு வழங்கும் அன்னதானத்தை  பக்தர்கள் எந்தப் பாகுபாடும் இன்றி; வரிசையில் நின்று அமைதியாக... ஆர்ப்பாட்டமே இல்லாமல் வாங்கிப் பசி ஆறுவதைக் காண ஆச்சரியமாக இருந்தது. யாருமே முண்டியடிக்கவில்லை; கூச்சலும் இல்லை!
கேரளத்து மக்கள் பொது இடத்தில் இவ்வளவு அமைதியாக நடந்து கொள்வது போல் தமிழகத்தில் ஒருநாளும் நான் கண்டதில்லை. 

பசியாறிய பிறகு எல்லோரும் காத்திருக்கின்றனர். கோயிலில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஒவ்வொரு வீதியிலும் மங்கல நீரும் பூவும் தெளித்துத் தூவுகின்ற அழகே அழகு... எல்லாம் முடிய கிட்டத்தட்ட மாலை 3மணி ஆகி விட்டது. தாம் அம்மனுக்கு வைத்த பொங்கல் / கொழுக்கட்டை  / பாயசத்தைச் சுற்றிலும் உள்ளோர்க்கு விநியோகிக்கின்றனர். இப்படி வெள்ளிக் கிழமை பொங்கல் கொண்டாட்டம் முடிந்த பிறகு கூட்ட நெரிசலுக்குப் பயந்து மறுநாள் சனிக்கிழமை தான் கோயிலுக்குச் சென்றோம். எல்லா அம்மன் கோயில்களையும் போலத் தான்... 

இருபத்தைந்து கி.மீ. சுற்றளவில் 25லட்சம்  பொங்கல் படையல்கள் என்ற பாரிய அளவும் கின்னஸ் சாதனையும் ஒரு ஒழுங்கிற்கு உட்பட்ட தொடக்கமும் நிறைவும் இக் கோயிலின் தனிச் சிறப்புகள். 

சக 


kanmani tamil

unread,
Apr 13, 2026, 2:41:33 AMApr 13
to vallamai
///ஆழ்வார்திருநகரி வங்கார தோசை – நைவேத்தியத்தின் தெய்வீக ரகசியம்

தாமிரபரணி நதிக்கரையில் வீசும் தென்றல், பழமையான கோயில் மணியின் ஓசை,
அதன் நடுவே ஒரு புனிதமான வாசனை — நெய் கலந்த வங்கார தோசையின் மணம்!

அது ஒரு சாதாரண உணவு அல்ல; பெருமாளுக்கே அர்ப்பணிக்கப்படும் தெய்வீக நைவேத்தியம்.

🛕 தெய்வீகத் திருத்தலம்

தூத்துக்குடி மாவட்டத்தில்,
புண்ணியமான தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலம் நூற்றியெட்டு திவ்யதேசங்களில் 51வது திவ்யதேசம்.

🙏 ஆதிநாதர் அருள்

அந்தக் கோயிலுக்குள் கோவிந்த விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில்
ஆதிநாதர் அருள்பாலிக்கிறார்.

அந்த தரிசனத்தில் ஒரு அமைதி… ஆழ்ந்த ஆனந்தம்…

📖 தல வரலாறு

பிரம்மதேவர் ஒருநாள்,
“படைப்புத் தொழிலுக்கான ஞானத்தை பெற நான் எங்கே தவம் செய்ய வேண்டும்?” என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார்.

அதற்குப் பெருமாள் அருளிய பதில்:
👉 “நான் உருவாகும் முன்பே தாமிரபரணிக் கரையில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளேன். அங்கு வந்து தவம் செய்.”

பிரம்மனும் அந்த இடத்திற்கு வந்து கடுமையான தவம் செய்தார். அதன் பயனாக,
மகாவிஷ்ணு அவருக்கு குருவாக இருந்து வேத மந்திரங்களை உபதேசித்தார்.

👉 அதனால்:

இத்தலம் ஆதிபுரி
பெருமாள் ஆதிநாதர்
மேலும் திருகுருகூர் என்ற பெயரும் பெற்றது
🌳 உறங்காப்புளி அதிசயம்

கோயிலின் தலவிருட்சம் — உறங்காப்புளி மரம்.

👉 இதன் சிறப்பு:

பூக்கும்; காய்க்கும்; ஆனால் பழுக்காது! இரவில் இலைகள் உறங்காது.

இதனால் தான் “உறங்காப்புளி” என்ற பெயர்.

🌸 நம்மாழ்வார் மகிமை

இது நம்மாழ்வார் அவதாரத் தலம்.
அவர் அருளிய பாசுரங்களால் இத்தலம் மங்களாசாசனம் பெற்றுள்ளது.

ஆழ்வார் பெயராலேயே அழைக்கப்படும் அபூர்வ திருத்தலம் இது.

🍯 வங்கார தோசை – நைவேத்தியத்தின் ரகசியம்

👉 தினமும் காலை
ஆறு வங்கார தோசைகள்
பெருமாளுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகின்றன!

அந்த தோசையின் மணம் கோயில் முழுவதும் பரவி இருக்கும்…

🍽️ வங்கார தோசை – ஏன் இவ்வளவு முக்கியம்?

இது சாதாரண தோசை அல்ல…
இதில் உள்ள பொருட்கள் அனைத்தும் உடலுக்கும் ஆன்மாவுக்கும் நல்லவை:

பச்சரிசி, முழு கருப்பு உளுந்து,
சுக்கு, மிளகு, நெய்

👉 இவை சேர்ந்து:

உடலுக்கு சக்தி தரும்;
மனதை சுத்தமாக்கும்;
தெய்வீக நைவேத்தியமாக உயர்த்தும்.

🔥 தயாரிக்கும் முறை

பழமையான முறையில்:

அரிசி, உளுந்து தனித்தனியாக ஊற வைக்கப்படுகிறது
பின்னர் அரைத்து கலந்து
சுக்கு, மிளகு சேர்க்கப்படுகிறது
இரவு முழுவதும் புளிக்க வைக்கப்படுகிறது

மறுநாள் காலை:
👉 தடிமனாக வார்க்கப்பட்ட தோசை
👉 நெய்யில் நன்கு வெந்ததும்
👉 பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது

🌟 பக்தனின் அனுபவம்

👉 அது சுவை மட்டுமல்ல
👉 அது ஒரு அருள் அனுபவம்

அந்த தருணத்தில் மனதில் ஒரு அமைதி நிலவுகிறது.

🎉 இத்தலத்தின் விசேஷங்கள்

இங்கு நடைபெறும் முக்கிய விழாக்கள்:

பங்குனி & சித்திரை உத்ஸவம் (பெருமாள்)
மாசி & வைகாசி உத்ஸவம் (ஆழ்வார்)
வைகுண்ட ஏகாதசி
கருட சேவை
அரையர் சேவை
கிருஷ்ண ஜயந்தி
நவராத்திரி

ஒவ்வொரு விழாவும் தெய்வீக அனுபவம்.

வங்கார தோசை என்பது உணவு அல்ல…
அது பக்தியின் வடிவம்.

அதை சமர்ப்பிப்பது ஒரு சடங்கு அல்ல… அது ஒரு ஆன்மீக இணைப்பு.

ஆழ்வார்திருநகரி சென்றால்:
👉 பெருமாள் அருள்
👉 ஆழ்வார் ஆசீர்வாதம்
👉 தெய்வீக அனுபவம்

மூன்றையும் ஒரே இடத்தில் பெறலாம்.

#DivyaDesam #Alwarthirunagari #TemplePrasadam #SpiritualTamil #ThannasiAppar///

https://www.facebook.com/share/18Sejp5Zns/

தெரிவு:சக

kanmani tamil

unread,
Apr 17, 2026, 9:07:17 PMApr 17
to vallamai
சாயா சோமேஸ்வரர் கோயில், தெலுங்கானா:

///மன்னர் காலத்தில் வடிவமைக்க பட்ட சில கோவில்களில் உள்ள மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாமல் இன்றளவும் விஞ்சானிகளும் விழி பிதுங்கி நிற்கிறார்கள் என்றே கூற வேண்டும்  
அந்த வகையில் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாயா சோமேஸ்வரர் கோவிலில் பல மர்மங்கள் அடங்கியுள்ளது.

10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளன. அந்த மூன்று கருவறைகளில் மூன்று விதமான மர்ம நிழல்கள் உள்ளன.  

(01) லிங்க கருவறை:-
                  இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால்; காலைமுதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்துகொண்டே போகும் அது தான் உலக நியதி. அனால் இங்கு சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது.  
இந்தக் கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. அனால் கருவறையில் விழும் நிழல் எந்த தூணிற்கானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்தத் தூணிற்குப் பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் விழுவதில்லை.  

(02) பிரம்மா கருவறை:
                   இந்தக் கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவர் தன்னுடைய நான்கு நிழல்களைப் பார்க்க முடியும். எப்படி ஒரு உருவத்திற்கு நான்கு நிழல்கள் விழுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.  

(03) லிங்க கருவறை:- 
               இந்தக் கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவரது நிழல் எப்பொழுதும் அவருக்கு எதிர் திசையிலே விழும். நிழல் எப்படி எப்போதும் எதிர் திசையிலே விழுகிறது என்பது கணிக்கமுடியாத ஒன்றாகவே உள்ளது. சாயா என்றால் நிழல் என்று பொருள் அதனால் தான் இந்த கோயிலுக்குச் சாயா சோமேஸ்வரர் என்று பெயர் வந்துள்ளது. நிழலை வைத்துப் பல மர்மங்களோடு இந்த கோவிலைக் கட்டியுள்ளதால், இந்த கோயிலின் கடவுள் நிழல்களின் தெய்வம் என்றே அழைக்கப்படுகிறார்.///

          - சித்தர்களின் குரல்.


தெரிவு:சக 

kanmani tamil

unread,
May 5, 2026, 8:45:47 PM (8 days ago) May 5
to vallamai
ஜுவாலா முகி அம்மன் கோவில்

/// 5,000 ஆண்டுகளாகத் தொடரும் இந்தியாவின் மிகப்பெரிய மர்மம்!
ஒரு விளக்கு எரிய வேண்டும் என்றால் அதற்கு எண்ணெய் வேண்டும் அல்லது ஒரு திரி வேண்டும். ஆனால், நம் இந்தியாவில் ஒரு அதிசயமான இடம் இருக்கிறது. அங்கே எந்த ஒரு துணையும் இல்லாமல், சுமார் 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது!

​அதுதான் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற சிரை ஜுவாலா முகி அம்மன் கோவில். இந்தக் கோவிலில் மொத்தம் 9 தீபங்கள் இருக்கின்றன. அந்த 9 தீபங்களும் நீல நிறத்தில் சுடர் விட்டு எரிவதுதான் இங்குள்ள மிகப்பெரிய ஆச்சரியம்.

​வரலாற்றின் மிகப்பெரிய சோதனை:
இந்தத் தீபங்களின் சக்தியைச் சோதிக்க நினைத்த பேரரசர் , பல முயற்சிகளைச் செய்தார். முதலில் அந்த நெருப்பை அணைக்கப் பெரிய வாய்க்கால் வெட்டி தண்ணீரைத் தீபங்களின் மேல் பாய்ச்சினார். ஆனால், தண்ணீர் ஊற்றியும் அந்த நெருப்பு அணையவில்லை! அதன் பிறகு, காற்றுப் புகாதவாறு பிரம்மாண்டமான இரும்புத் தட்டுகளைக் கொண்டு அந்தத் துவாரங்களை மூடினார். ஆனால், அந்தத் தட்டுகளைத் துளைத்துக் கொண்டு நெருப்பு வெளிவந்தது. இதைப் பார்த்து, தனது தவறை உணர்ந்து அம்மனுக்குத் தங்கக் குடையைக் காணிக்கையாக வழங்கினார் அரசர்.

​அறிவியல் சொல்லும் காரணம் என்ன?
இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலை ஆராய்ந்தபோது, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகளின் அடுக்குகளில் இருந்து வெளிவரும் மீத்தேன் (Methane Gas) வாயுதான் இதற்குப் பின்னணி என்று சொல்லப்பட்டது. அந்த வாயு காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து நெருப்பாக எரிகிறது என்பது ஒரு வாதம்.

​இந்திய அரசாங்கத்தின் அதிரடி ஆராய்ச்சி:
இந்த அறிவியல் கூற்றை உறுதிப்படுத்த, 1980-களில் இந்திய அரசாங்கம் ஒரு பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. 'அடியில் இயற்கை எரிவாயு இருந்தால் அதை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது?' என்று நினைத்து, கோவிலைச் சுற்றி சுமார் 3,000 மீட்டர் ஆழத்திற்குத் துளையிட்டுப் பார்த்தனர். ஆனால், அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்தத் துவாரங்களைத் தவிர வேறு எங்குமே கேஸ் கிடையாது! 3,000 மீட்டர் ஆழம் வரை தோண்டியும் அந்த கேஸ் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

​இன்றுவரை அந்த 9 தீபங்களும் எப்படித் துல்லியமாக அந்தந்த இடங்களில் மட்டும் எரிகிறது? எப்படி 5,000 ஆண்டுகளாக ஒரு விநாடி கூட அணையாமல் இருக்கிறது? - இதற்கெல்லாம் அறிவியலிடம் முழுமையான பதில் இல்லை.

​பக்தர்கள் இதை அம்மனின் சக்தி என்கிறார்கள்.///


5000 என்ற ஆண்டளவு அனுமானிக்கப்பட்டதாக இருக்கும்.

தெரிவு:சக 

kanmani tamil

unread,
May 7, 2026, 8:39:37 PM (6 days ago) May 7
to vallamai
/// #அதிசயம் ஆனால் உண்மை 
ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டுகளாக வெடிக்கும் லிங்கம்* 

#இந்தியாவில் அதிசயம் நடக்கும் பல கோவில்கள் உண்டு. கோவில்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டுகளாக வெடிக்கும் லிங்கம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

#இப்படிப்பட்ட அதிசய நிகழ்வு நடக்கும் கோவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிஜிலி என்ற மலைமீது மகாதேவ் ஆலயம் ஒன்றில் நடக்கிறது. இது மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். இக்கோவில் கருவறையில் உள்ள லிங்கத்திற்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்னல் தாக்கும். இந்த நவீன யுகத்தில் இது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்.

👉இக்கோவிலைப் பற்றி ஒரு புராணக் கதையும் சொல்லப் படுகிறது. குலந்த் எனும் அரக்கன் மலைப் பாம்பு வடிவம் எடுத்து பூமியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தி வந்தான். இவன் மத்தனா என்ற கிராமத்திற்கு வந்து அங்கு பாயும் வ்யாஸ் நதியைத் தடுத்து நிறுத்தி விட்டான். இதனால் பல உயிர்கள் நீரில் மூழ்கி மாண்டன. இதனால் கோபமடைந்த சிவபெருமான் அரக்கனை வதம் செய்கிறார். உடனே அரக்கன் பிஜிலி மலையாக மாறியதாகவும், அதன் மீது மகாதேவ் கோவில் கட்டப்பட்டது என்றும் தெரிகிறது.

🧿பிறகு சிவபெருமான் இந்திரனை அழைத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோவில் லிங்கத்தை மின்னல் காக்குமாறு கட்டளையிட்டார். மின்னலின் தாக்குதலால் லிங்கம் மட்டும் தான் உடையும் கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது!

👉இக்கோவில் புரோகிதர்கள் உடைந்த லிங்கத் துண்டுகளை சேகரித்து அதோடு கடலைமாவு, பருப்பு மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணை இவற்றை பசை மாதிரி ஆக்கி உடைந்த லிங்கத்தை ஒன்று சேர்த்து பூசுகின்றார்கள். இது காய்ந்ததும் பழைய லிங்கமாக மாறிவிடும். மின்னல் தாக்கியதும் கோவிலை கொஞ்ச நாட்கள் திறக்க மாட்டார்கள். 

💥லிங்கம் நன்றாகக் காய்ந்ததும் பழையபடி அபிஷேகம், ஆராதனை செய்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் லிங்கம் உடைந்த சுவடே தெரியாது.✍🏼🌹///


தெரிவ: சக 
Reply all
Reply to author
Forward
0 new messages