கோள் பெயர் வேரியல்

3 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
1:10 AM (3 hours ago) 1:10 AM
to வல்லமை, hiru thoazhamai
கோள் பெயர் வேரியல் 

image.png

கோள்களின் பெயர் தான் வாரத்தின்  ஏழு நாளையும் குறிக்க இடப்பட்டுள்ளது. வெண்மைக் கருத்தில் இருந்து ஒளிக் கருத்து தோன்றுகிறது. அந்த ஒளிக் கருத்தில் இருந்து அறிவுக் கருத்தும் பின் அழகு, பொலிவு கருத்துக்களும் தோன்றும்.

ஞாயிறு > ஞால் + இறு = ஞாயிறு என்றால் உடலை தைக்கும் ஒளி. 
ஞாலல் - மின்மினி பூச்சி. இறு - வீழ்தல், எறிதல், தைத்தல்.  யா > ஞா >  நா என்று திரியும்; வெண்மை, ஒண்மை கருத்துகளை தரும் சொல்லைத் தரும் .

யா வேர் கொண்ட சொற்கள்:
யாக்கெடு - கொன்றை
யாகாட்டம் - வெள்ளை நாயுருவி.
யாசுசிதறாணி - கற்பூரம் (வெண்மையானது).  எனவே ஆய் < யாய் என்பதற்கு வெண்மை கருத்து உண்டு காண்க. 

திங்கள் > திய் + கள்.  தியதி > தேதி - ஒளிரும் நாள். திய் என்றால் ஒளி. கள் என்றால் கவர்தல்.  திங்கள் என்றால் பிழம்பாக ஒளிரும் வெண்மைக் கவர்ச்சி. 

கள் < கல் - வெள்ளொளி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே நோக்குக. இதன் பொருள் பகல் தோன்றி இரவு தோன்றாத இடைப்பட்ட காலத்தில் என பொருள்.  

செவ்வாய் -  செ + ஆய். செ என்றால் சிவந்த. ஆய் என்றால் ஒளி. சிவந்த ஒளி என்று பொருள்.
    
புதன் - புல் + து = புது + அன். புல் என்றால் வெளிச்சம், ஒளி. அறி என்றால் ஒளி. இதாவது, வெளிச்சத்தில் அறிவதே அறிவு என்ற பொருள் தரும். எனவே அறிவன் என்றொரு சொல் ஒளிக் கருத்தில் இன்னொரு பெயராக வழங்குகிறது. 

வியாழன் - விய் + ஆழன். விய் என்றால் அகன்ற. ஆழம்  என்றால் பெருமிதம். இதாவது அகன்று விரிந்த என்ற பொருளது.

வெள்ளி - வெள் + இய். வெள் என்பது வெண்மை. இய் என்பது ஒளி. இதாவது, வெள்ளொளி என்பதே அதன் பொருள். 

சனி - மஞ்சள் நிறக் கோள். சனி தமிழ் அல்ல என்பர் தமிழறிஞர். சன் வேர் கொண்ட சொற்கள் மஞ்சள் நிற கருத்தை குறிப்பதை காண்க. சனை - மஞ்சள் நிற ஓமம், சனாம்பா - சந்தன மரம், சன்னியம் - மரமஞ்சள். ஏனினும் கருப்பு என்ற பொருளில் காரி என்ற சொல்லும் வழங்குகிறது.

நாளுக்கு வழங்கும் மேற்சொன்ன அத்தனை பெயர்களும் தமிழே. சமற்கிருதம் ஏதும் இல்லை. 
  
Reply all
Reply to author
Forward
0 new messages