Re: [MEYKANDAR] பெரியார் ஈ.வெ.ரா வின் 'ஆன்மீக'ப் பெருந்தவறு

142 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Dec 28, 2014, 6:46:57 AM12/28/14
to MEYK...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com
முனைவர் வீரபாண்டியன் அவர்களே

 மிக்க நன்றி. சிந்தனையைத் தூண்டும் வரலாற்று அலசல். திராவிட இயக்கம் செய்த நன்மைகளும் தீமைகளும் விளக்கப்படுகின்றன. கீழ் வரும் கருத்து எனக்கு உடன்பாடு''

//அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக,அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாகவன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும்.//

சுமேருத் தமிழ் தொடங்கி தொல்காப்பியமும் கற்று  திருகுறளும் ஓர்ந்து திருமந்திரம் சிவஞானபோதம் போன்ற தமிழில் விளங்கும் மெய்யறிவுப் பனுவலக்ளைப் படித்து புரிந்துகொண்ட நிலையில் தமிழர்கள்தான் உலகில் சமய வாழ்க்கையையே ஓர் நூலிய அறிவியல் வாழ்க்கையாக படைத்துள்ளனர் வடித்துள்ளனர் வளர்த்துள்ளனர். இதனை அறிந்து வற்புறுத்தி மீட்டெடுதாலே பிரமாண் வெறுப்பு சாதீய கொடுமைகள் எல்லாம் போய்விடும். அறிவியலுக்கு வரணமும் இல்லை சாதிகளும் இல்லை, அறிவை வளர்ப்பதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு.  இதனை மக்கள் புரிந்துகொள்ள செய்தால் நல்ல முன்னேற்றம் வந்திருக்கும். இன்றுபோல் பண்பாடு தடம் புரண்டு போயிருக்காது.

எனினும் இன்னும் பலர் படித்து தங்கள் கருத்துக்களை சொல்ல் ஏதுவாக ஏனைய குழுமங்கட்கும் அனுப்பி வைக்கின்றேன்

உலகன்

2014-12-28 18:45 GMT+08:00 veera pandian pann...@yahoo.co.in [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

    பெரியார் ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு



1944இல் அறிவுபூர்வ கூறுகள் பலகீனமாகி, உணர்வுபூர்வ கூறுகள் அரங்கேறி வளர்ந்து,முற்றிய நிலையில், தமிழ்நாட்டின் கனிவளங்களையும், ஏரிகள்,குளங்கள் உள்ளிட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களையும் (அரசர்கள், அதன்பின் காலனி ஆட்சி, அதன்பின் 1967வரை காங்கிரஸ் ஆட்சி வரை பாதுகாக்கப்பட்டு வந்ததை) சூறையாடி, காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியார் சிக்கல்களை உருவாக்கி வளர்த்து, தமிழ்வழிக் கல்வியையும், மனிதருக்கான ஒழுக்க நெறிகளையும் சிதைத்து, 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்ற திசையில் 'திராவிட அரசியல் கொள்ளையர்கள்' பயணித்தார்கள் என்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.(Refer post dt. December 3, 2014;  ‘'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2) தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’ ) 

அதன் விளைவாக, அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்ற சாதாரணத் தமிழர்களின் எண்ணிக்கை அபரீதமாக அதிகரித்து வருவது பற்றியும், கல்லூரி மாணவர்களிடையே 'இந்தியர்' என்ற அடையாளம் வலுவாகி வளர்ந்தாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை மிகவும் வருத்தப்படும் அளவுக்கு வீழ்ந்து வருவது பற்றியும், தமிழ்நாட்டில் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. 

இப்படிப்பட்ட மிகவும் கவலை தரும் விளைவிற்குக் காரணமான‌, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள்  செய்த பெரும் தவறு பற்றி,  இந்தப் பதிவில் பார்ப்போம்.

'திராவிட' பற்றிய விவாதங்களும், இந்தியாவை 'ஆரிய தேசம்' என்று குறிப்பிட்டு நடக்கும் விவாதங்களிலும், தொல்பொருள், மற்றும் பிற‌ சான்றுகளின் அடிப்படையில், 'ஆரியர்கள்' அல்லது 'திராவிடர்கள்'  என்று அவரவர் நிலைப்பாட்டிற்கு ஏற்றவாறு, இன்றுள்ள ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை ஒரே தேசம் என்ற நிலைப்பாட்டில் ஒற்றுமை இருக்கிறது. 

அந்த 'ஒற்றுமைக்கு' 'சுருதி பேதமாக', அண்ணாதுரையின் செல்வாக்கில் பெரியார் ஈ.வெ.ரா 1944இல்  'திராவிடர் கழகம்' உருவாக்கி,  கோரிய(?) திராவிட நாடு (‘தஞ்சை மாவட்டம் வரை கிடைத்தால் கூட போதும்' என்று கருத்து தெரிவிக்கும் அளவுக்கு) இருந்தது. பின்னர் அந்த பெயரில் இருந்த 'ர்'-ஐ நீக்கி, அண்ணாதுரை 'திராவிட முன்னேற்ற கழகம்' உருவாக்கி, 'இன அடிப்படையில் இன்றி, நிலப்பரப்பின்' (geographical) அடிப்படையில்,  'திராவிட நாடு திராவிடருக்கே' என்று விளக்கி, அந்த 'சுருதி பேதத்தின்' குழப்பத்தைக் கூட்டினார். ஆனாலும் 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்ற 'உணர்வுபூர்வ' திரைப்பாடல், திராவிடக் கட்சிகளின் பிரச்சாரத்தில் முக்கிய இடம் வகித்தது; 'பிரிவினைக் கோரிக்கையை' அண்ணாதுரை கைவிட்ட பின்னரும்.

பெரியாரின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள் இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு ஒன்று கீழே)

அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக,அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாகவன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன.

எனது இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன். பெரியார் இயக்கத்தில் தமது பிழைப்பிற்காக இல்லாமல், உண்மையான சமுகப்பற்றுடனும், பெரியாரைப் போலவே அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் தமது தவறுகளை அடையாளம் கண்டவுடன் ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்ளும் இயல்புடையவர்கள் பார்வைக்காகவும், பின் தொடர் விவாதத்திற்காகவும், அவ்வாறு நான் அடையாளம் கண்டவை கட்டுரையாக, 2006 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்தது. ((Refer post Dt December 4, 2013 ‘கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’ )  இன்று வரை அதை ஏற்றோ,மறுத்தோ ஒரு கருத்தையும் நான் சந்திக்கவில்லை. நேரில் என்னைச் சந்தித்த பெரியார் ஆதரவாளர்கள் அவை சரி என ஒத்துக் கொண்டார்கள். அவர்களும் அந்த விவாதத்தைத் தொடர்ந்தார்களா? இல்லையா? என்பதும் எனக்குத் தெரியாது.

அறிவியல் அணுகுமுறையில் ‘ஆரியர் – திராவிடர்’ என்ற பிரிவினையில் அர்த்தமில்லை என்பதைப் பெரியார் ஈ.வெ.ரா அறிந்திருந்தாலும், இலக்கியங்களிலும்,புராணங்களிலும் 'மூட நம்பிக்கை' என்று அவருக்குப் பட்ட இரைச்சல்களுக்குள்(noises)  புதைந்திருந்த மதிப்பு மிக்க 'சிக்னல்கள்' (signals)அவருக்கு தெரியாததாலேயே, கீழ்வரும் கருத்தைத் தெரிவித்தார். (Refer in this Blog Dt. September 20, 2014 ‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா? ‘ & Dt. September 19, 2014-  ‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’)  

"இரத்தக் கலப்பு ஏற்பட்டு விட்டதே; ஏன் இன்னும் ஆரியர் திராவிடர் பிரச்சினை நாட்டில் நடமாட வேண்டும்? என்று நம்மை நையாண்டி செய்யும் தோழர்கள் பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும்,அவற்றுக்கு ஆதாரமான  சாஸ்திர புராணக் குப்பைகளைக் கொளுத்தி விடவும், அதற்குச் சின்னமான கடவுளைத் தகர்க்கவும் கேட்டுக் கொள்ளவும்;பிறகு வரட்டும் நம்மிடம்." 29.09.1948 சிதம்பரம் சொற்பொழிவு; விடுதலை 05.10.1948)

மேலேக் குறிப்பிட்ட இரண்டாவது வகை உள்ளீடுகள் காரணமாக, பெரியார் தெரிவித்துள்ள இந்த கருத்தின் பின்னணியில், பெரியாருக்கு இருந்த வரை எல்லைகள்(limitations)  இல்லாத‌,  பிரான்ஸ் நாட்டு நாத்தீகர் ஜீன் பெரி லேமன் - Jean-Pierre Lehmann  - 'இந்து மதம் 'பற்றி தெரிவித்துள்ள கீழ்வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.

“உலகிற்கு ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம்,நேர்மை வழிகாட்டி தேவைப்படுகிறது.இந்தியாவில் உள்ள மதம் மற்றும் தத்தவப் பாரம்பரியங்கள் அந்த மூன்றையும் நன்கு வழங்கக் கூடியவையாகும்.”( The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.)
:‘The Dangers of Monotheism in the Age of Globalization’bBy Jean-Pierre Lehmann  (http://www.theglobalist.com/dangers-monotheism-age-globalization/)

ஆன்மீகத்தையும் மதத்தையும் ஒன்றெனக் குழம்பி வாழ்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கட்டுரை விளங்குவது சிரமமே.கடந்த நூறு வருடங்களாக, மேற்கத்திய அறிஞர்களிடையே, மதத்திற்கு தொடர்பில்லாத தனி மனிதர் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஆன்மீகம் பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் நூல்களாக வெளிவந்துள்ளன. மதமற்ற ஆன்மீகம்'’- "Spiritual but not religious" (SBNR)-, ‘ஆன்மீகத்துடன் சுதந்திரமாக'- "Spiritually Independent" - போன்ற அடையாளங்கள் வளர்ந்து வரும் காலக்கட்டம் இது.( http://en.wikipedia.org/wiki/Spiritual_but_not_religious)

'தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு' போன்ற ஆணிவேர்களுடன், மனிதரின் வளர்ச்சிக்கு அவசியமான ஆன்மீகத்தையும் சிதைத்ததே, கீழ்வரும் விளைவுகளுக்குக் காரணமா?  தமிழ்நாட்டின் கனிவளங்களையும், ஏரிகள்,குளங்கள் உள்ளிட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களையும்  சூறையாடி, காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியார் சிக்கல்களை உருவாக்கி வளர்த்து, தமிழ்வழிக் கல்வியையும், மனிதருக்கான ஒழுக்க நெறிகளையும் சிதைத்ததே, அதன் காரணமாக உருவாகி வளர்ந்த‌ , திராவிட அரசியல் கொள்ளையர்களிடம் தமிழும், தமிழரும்,தமிழ்நாடும் சிக்கி சீரழியக் காரணமா? என்ற ஆய்வு அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது. அதைத் தவிர்ப்பது, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் தற்கொலையாக முடியும்.

குறிப்பு: தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும், எப்படிப்பட்ட பொதுத் தொண்டர்கள் இனி பொது வாழ்வில் செல்வாக்கு பெற முடியும் என்பதற்கான பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் கருத்து,  கீழ்வரும் மேற்கோளில் உள்ளது.

"எந்த பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறர்கள் என்றால், அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்க வேண்டும். அல்லது  அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாதப் பொதுத் தொண்டர்களாக இருக்க வேண்டும்.பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள்  சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வழக் கூடாது; வாழவே கூடாது.

வாழ வேண்டி வந்தால், வாழ்ந்து கொள். ஆனால் 'நான் பொதுத் தொண்டன், கஷ்ட நஷ்டப்பட்டவன் ' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு; உன் மனதிலும் நீ நினைத்துக் கொள்ளாதே. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால், நீ 'மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதாகக் கருதிக் கொண்டிருப்பவன்' என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றும் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத் தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக் கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும்  மேற்பட்ட செலவத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார். " -  பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 17.09.1962
( பெரியார் 84 ஆவது பிறந்த நாள் மலர் )

தனக்கு வருமானம் தரும் பணியிடத்தில், வாழுமிடத்தில் 'புத்திசாலித் தனமான, இழிவான' சமரசங்களுடனும், அந்த போக்கிலான, 'ஆதாயம் தரும் சமூக வலைப்பின்னலுடன்', தம்மையும், தமது குடும்பத்தையும் 'பாதுகாப்புடன்' வளர்த்துக் கொண்டு, ஊரான் விட்டுப்பிள்ளைகளைத் தூண்டி, 'காவு கொடுத்து', வாழும் 'முற்போக்கு' தமிழ்/திராவிடக் கட்சியினரை அடையாளம் காண உதவும் அளவுகோல் இதுவாகும்.

From: http://tamilsdirection.blogspot.in/

__._,_.___

Posted by: veera pandian <pann...@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

தேமொழி

unread,
Jan 23, 2015, 8:13:15 PM1/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///
தனக்கு வருமானம் தரும் பணியிடத்தில், வாழுமிடத்தில் 'புத்திசாலித் தனமான, இழிவான' சமரசங்களுடனும், அந்த போக்கிலான, 'ஆதாயம் தரும் சமூக வலைப்பின்னலுடன்', தம்மையும், தமது குடும்பத்தையும் 'பாதுகாப்புடன்' வளர்த்துக் கொண்டு, ஊரான் விட்டுப்பிள்ளைகளைத் தூண்டி, 'காவு கொடுத்து', வாழும் 'முற்போக்கு'........
///

இது போன்ற நடைமுறைகள் பெரியாருக்குப் பின்னரோ... அல்லது 1960 களில் கழக ஆட்சிகளுக்குப் பின்னரோ உருவாகி தமிழத்தில் மட்டும்தான் உள்ளதா?

தமிழகத்திலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் அல்லது அதற்கு முன்னரும், 
இல்லை தற்பொழுது இந்தியாவிலோ, அல்லது உலகத்தில் பிறபகுதிகளிலும் இருந்ததில்லையா அல்லது இப்பொழுதும் இருக்கவில்லையா?  

corruption, bribery தொடர்பான வார்த்தைகள் பிற இந்திய மொழிகளிலோ உலக மொழிகளிலோ உருவாகாமல் இருந்து வருகிறதா?

உளவியல் துறையைச்  சார்ந்த லோகா ஐயாவும் மனிதப்பண்புகளை பொதுவான கோணத்தில் பார்க்கத் தவறுவது வியப்பளிக்கிறது.

எந்த ஒரு வரலாற்று நிகழ்வும் வெற்றிடத்தில் உருவாவதல்ல. ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு நடைமுறைக்கு எதிராக பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

வெற்றிடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு சதிகாரக் கும்பல் மக்களை ஏமாற்ற சதித்திட்டம் தீட்டியதாக சுலப வழியில் விளக்கங்கள்  எழுதவைத் தவிர்த்து, அக்காலத்தில் சமுதாய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி போராட்டங்களின் காரணத்தைப் புரிந்து கொள்ளுதல் சீர்திருத்த முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரியாதை அளிப்பதாக அமையும். 

அதே 1960 களில் பிலிப்பைன்ஸ் இமல்டா மார்கோஸ் தொடங்கி உலகம் முழுவதும், இந்தியா முழுவதும் பல பட்டியல் போடா முடியும்.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்கள் அடிவருடிகளாக சொந்த நாட்டிற்கு துரோகம் இழைத்த சுயநலவாதிகள்  ஆன்மிக மக்கள் இல்லை என காட்ட இயலுமா?

 

..... தேமொழி

K. Loganathan

unread,
Jan 23, 2015, 8:57:46 PM1/23/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com
 நின்னா தேமொழி

 ஊழல் என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் இருப்பதுதான். மலேசியாவிலும் உண்டு, இந்தோநேசியாவிலும் உண்டு. ஆனால எந்த அளவிற்கு அது விரவி இருக்கின்றது என்பதைப் பொருத்தே அது ஓர் நோய் ஆகின்றது பண்பாட்டுச் சீரழிவு ஆகின்றது

சமீப காலத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தியது மத்ரை வட்டாரதில் கல் குவாரிகள் தோன்றிய போது ஊழல் காரணமாக ப்ல சமண் குன்றுகள் உடைக்கப்பட்டன போன்ற செய்திகளை அறிய வர மன நோகின்றது, இது போல இன்னும் பல.

மேலும் ஏன் ஊழல் பல்குகின்றது என்பது நாட்டிற்கு நாடு வேறுபடலாம்.  பிலிப்பின்ஸ்-இல் வரும் காரணம் தமிழ் நாட்டிற்கு பொருந்தாது, இங்கு காரணம் வேறாக இருக்க்லாம். மேலும் 19ஆம் நூற்றாண்டில்  ஊழல் இருந்திருக்க அதன் காரணம் வேறாக இருக்கலாம். இருபதாவது நூற்றாண்டில் ஊழல் பலகுவதற்கு வேறொரு காரணம் இருக்கலாம். 

பொதுவாக காணும் போது பெரியரின் திராவிட இயக்குமும் பகுத்தறிவு வாதமும் நல்ல நோக்குடன் தொடங்கினாலும் அது பல பண்பாட்டுச் சீரழிவிற்கே கொண்டு சென்றுள்ளது என்றே நினைக்கின்றென்.

என் தலைமுறையினர் இந்த திராவிட இயக்கத்தின் தாக்குதலுக்கு ஆளாகாது வளர்ந்திருக்க முடியாது. ஆனால் என் இளமை காலத்திதிலேயே அதன் போக்கு பிடிக்காது நான் மெய்யறிவு திசையில் சென்று தமிழர்களின் உணமையான பகுத்தறிவு வாதமாகிய ஏரணவியலைக் கண்டு அதன் பல நூல்கள் இயற்றியுள்ளேன்

பெரியாரின் 'பகுத்தறிவு வாதம்' என்றால் என்ன அதன் பண்பாட்டுத் தாக்கங்கள் என்ன என்பதையும் நாம் விரிவாக ஆராய வேண்டும் என்று நினைக்கின்றேன்.

பகுத்தறிவு வாதத்தின் பிறழ்ச்சிகள் தமிழ குமுகாயததை ஓர் ஊழல் சமுதாயமாக வீழ்த்தியுள்ள்தாக எனக்குப் படுகின்றது.

திராவிட பகுத்டறிவு வாதம் இருந்த பகுத்தறிவையும் கொன்று சமயத்தை வெறுக்கும் ஓர் வெறியாகி விட்டது என்றே நினைக்கின்றேன். இந்நிலையில் அது எப்படி ஊழலைக் கண்டிக்கும்?

உலகன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Jan 23, 2015, 9:08:29 PM1/23/15
to vallamai

2015-01-24 7:27 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
பெரியாரின் 'பகுத்தறிவு வாதம்' என்றால் என்ன அதன் பண்பாட்டுத் தாக்கங்கள் என்ன என்பதையும் நாம் விரிவாக ஆராய வேண்டும் என்று நினைக்கின்றேன்.

​பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தையும் பின்னர் உருவான திராவிட இயக்கத்தையும் வேறுபடுத்தி நோக்குதல் வேண்டும்.  சுயமரியாதை இயக்கத்தில் மறைமலை அடிகளும் ப.ஜீவானந்தமும் கி.ஆ.பெ.விசுவநாதனும் இருந்தர்கள்.  கடவுள் மறுப்புக் கொள்கை நாளடைவில் அது பிராமணர் வெறுப்பாக மாறுவதை விரும்பாமல் அவர்கள் அனைவரும் வெளியேறினர்.  அண்ணா விலகுவதா வேண்டாம என்பதைமுடிவு செய்யவேண்டிய நிலையில் பெரியாருடன் இருந்தால் அரசியலில் தனக்கு அரசியல் முன்னேற்றம் கிடைப்பதைக் கருதி உடன் இருந்தார்

தமிழ்நாட்டில் ஊழல் அதிகரித்ததற்கு அரசியல் காரணம் அல்ல.  விரைவான பொருளாதார வளர்ச்சியும் பன்னாட்டு வணிகர்களும் அடிப்படைக் காரணம்.  உலகில் உள்ள கருங்கற்களில் மதுரைக் கல்லுக்கு உலக நாடுகளில் தேவை இருந்ததால் அவர்களின் தூண்டுதலால் இந்த மலைகள் உடைக்கப்பட்டன.

எலியோன்​

K. Loganathan

unread,
Jan 23, 2015, 9:37:52 PM1/23/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com
பேராசிரியர் அவர்களே

மிக்க நன்றி. இதுவரை யாரும் பெரியாரின் பகுத்தறிவு வாதம் எவ்வாறு ஏரணசிந்தையையே புதைத்துவிட்டது என்பதை ஆராயாதே விட்டனர்.

அதன் தாக்கத்தை ஓர் நிகழ்ழ்ச்சி வழி சொல்ல விரும்புகின்றேன். இது மிகப் பரவலாக நடக்கும் ஒன்று- மலேசியாவிலும்

எனது 'சுமேருத் தமிழே முதற் சங்கத்தமிழ்" என்ற ஆய்வுகள் மலேசிய நண்பனில் வெளியாகிட, ஒருவர் எனக்கு போன் செய்து தான் திராவிட இயக்கத்தை சார்ந்தவன் என்று கூறி பிராமணர்களைக் கடுமையாகச் சாடி கோயில்களை வடமொழி மயமாக்கி ஆரிய இந்து சமயத்தை தமிழர் சமயமாக்கியதை வெறுத்து தன் குழந்தைகளை கோயிலிற்கு அனுப்புவதே இல்லை என்று கூறினார்.

மலேசியாவில் திராவிட இயக்கம் என்றால் இந்து சம்யத்தை பிராமணர்களின் திணிப்பு என்று நினைத்து அதனை வெறுத்து நாத்திகம் பேசுவதே இயல்பாகிவிட்டது.

இவர்களோடு வாதம் செய்வது எளிதல்ல. எல்லாம் வெறித்தனமான வெறுப்பு 

பெரியாரின் பகுத்தறிவு வாதம் இபட்டிப்பட்ட வீழ்ச்சிக்கு, சிந்தனையே முடக்கிவிடும்  ஓர் வெறிக்கு இட்டுச் சென்றுள்ளது.

ஊழல் பற்றி இன்னொன்றையும் கூறுகின்றேன். இது சுய அனுபவம். பல ஆண்டுகட்கு முன்பு மிக பயபக்த்தியுடன் பழநி திருமுருகன் கோயில் சென்றேன், அங்கு வேண்டிய சீட்டுக்களையெல்லாம் முறையாக வாங்கி உச்சி சந்நிதி சென்று அர்ச்சனை சீட்டுகளை காட்டி அரிச்சனை செய்யுமாறு வேண்டினேன் ஆனால் அர்ர்ச்சகர் மேலும் தனியாக பணம் கேட்க் நான் அவரிடம் அர்ர்சனை சீட்டுகளை வாங்கிவிட்டேனே பிறகு எதற்கு உங்களுக்குப் பணம் தரவேண்டும்,? இறைவன் சந்நிதானத்திலேயே இலஞ்சமா? என்று கூறி அவரை ந்னறாக  திட்டிவிட்டு உனது அர்ச்சபை வேண்டாம் இறைவனுக்கு  நானே அர்ரசனை செய்துகொள்கின்றேன் என்று கூறி வெளியேறி விட்டேன்

நான் சென்ற எல்லா கோயில்களிலும் ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது. மனம் நொந்து இறைவன் சந்நிதானத்திலேயே ஊழல் என்றால் எப்படி நாடு வாழும் என்ற கேள்வியோடு மலேசியத் திரும்பி இங்கு கொயில்கட்கு சென்று இறைவனை மிகச் சுத்தமான சூழலில் வணங்க்கி மகிழ்ந்தேன்

தமிழக்த்தில் கோயில்களிலும் ஏன் இப்படி?  ஊழல்  செய்தவர்களில் சில பிராமணர்களும் அடங்குவர்.

உலகன்.

தேமொழி

unread,
Jan 23, 2015, 10:06:37 PM1/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

////
ஊழல் பற்றி இன்னொன்றையும் கூறுகின்றேன். இது சுய அனுபவம். பல ஆண்டுகட்கு முன்பு மிக பயபக்த்தியுடன் பழநி திருமுருகன் கோயில் சென்றேன், அங்கு வேண்டிய சீட்டுக்களையெல்லாம் முறையாக வாங்கி உச்சி சந்நிதி சென்று அர்ச்சனை சீட்டுகளை காட்டி அரிச்சனை செய்யுமாறு வேண்டினேன் ஆனால் அர்ர்ச்சகர் மேலும் தனியாக பணம் கேட்க் நான் அவரிடம் அர்ர்சனை சீட்டுகளை வாங்கிவிட்டேனே பிறகு எதற்கு உங்களுக்குப் பணம் தரவேண்டும்,? இறைவன் சந்நிதானத்திலேயே இலஞ்சமா? என்று கூறி அவரை ந்னறாக  திட்டிவிட்டு உனது அர்ச்சபை வேண்டாம் இறைவனுக்கு  நானே அர்ரசனை செய்துகொள்கின்றேன் என்று கூறி வெளியேறி விட்டேன்
////

நன்றி ஐயா,
பெரியாரால் ஆன்மிகம் குறைந்து மக்கள் கழிசடையானார்கள் என்ற கருத்தை மறுக்கும் மாற்று வாதத்தையும்  நீங்களே வைத்துவிட்டீர்கள்.

ஆன்மிக உலகிலும் பரவலாக உள்ள லஞ்ச லாவண்யங்களை சான்று காட்டி ஆன்மிகம் இருந்தால் குற்றமிருக்காது என்ற எண்ணத்தை தகர்க்கும் கருத்தையும் நீங்களே கொடுத்துவிடீர்கள்.

இதற்கு மேல் என்ன சொல்ல.

ஆன்மிகத்திற்கும் குற்றத்திற்கும் இப்படி ஒரு தொடர்புதான் கண்டிக்கத் தக்கது.

ஆன்மிகம் இல்லாமல் குற்றம் செய்பவர்களைவிட, ஆன்மிகத்தின் காவலாளிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் செய்யும் குற்றங்கள்தான் நகைப்பிற்குரியது.

..... தேமொழி





To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jan 24, 2015, 7:03:28 AM1/24/15
to vallamai, மின்தமிழ்
>
பகுத்தறிவு வாதத்தின் பிறழ்ச்சிகள் தமிழ குமுகாயததை ஓர் ஊழல் சமுதாயமாக வீழ்த்தியுள்ள்தாக எனக்குப் படுகின்றது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் ஊழல் இல்லையோ? பிகாரின் போன்ற மாநிலங்கள் எலல துறைகளிலிம் கடைநிலையில் இருக்க காரணம் என்ன?

தமிழக பூசாரிகள் சங்கம் திருவரங்கத்தில் அம்மா கட்சிக்கு வாக்கு அளிக்க  முடிவு செய்துள்ளது. அம்மா ஆட்சியில் கோவில் தோறும் சிறப்பு பூசைகள் நடந்து பூசாரிகள் பெரும் மகிழ்வுடன் இருக்கிறார்கள். அதிமுகவினர் ஊழல் செய்யவில்லையா?

கலைஞர் நிறைய் தேனிறால் அழைத்தார். புறங்கை நக்கினார். அம்மா ஆட்சியில் இறால் அழிக்கலை. இருக்கிற தேனை நக்கி, மக்களுக்கும் வழங்குகிறார்.

23 ஜனவரி, 2015 ’அன்று’ 10:06 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 24, 2015, 9:21:51 AM1/24/15
to vallamai, mintamil, tamilmantram
பல்லாயிரம் ஆண்டுகளாய்க் காட்டில் வாழ்ந்து வந்த கற்காலவாசிகளைத் தற்கால நவயுகக் கலாச்சார மாந்தராய் ஆக்கியவை ஐயமின்றி இந்து, புத்தம், கிறித்துவம், சீக்கியம் போன்ற உலகப் பெரும் மதங்களே.  அவற்றின் விளைவாய்த் தோன்றிய பகவத் கீதை, திருக்குறள், பைபிள், திருக்குர்ரான் போன்ற தெய்வீக நூல்களின் பெரும்பான்மைக் கொள்கை, வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்க நெறி முறைகள் உபதேசங்கள்.  அவை காலத்துக்கு ஏற்ப மாற்றப் பட்டால் இன்றும், என்றும் பயன்படும். 

ஆனால் கடந்த 60-70 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நாத்திகம் பரப்பி வந்த தந்தை பெரியாரும், அவரது பிரதான சீடரும் பிற்காலச் சந்ததிகள் பின்பற்ற என்ன ஒழுக்க நெறி நூல்களைப் படைத்துள்ளார்கள் ?


சி. ஜெயபாரதன்.

தேமொழி

unread,
Jan 24, 2015, 1:57:45 PM1/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
உள்ளே மறைநூல் படித்துவிட்டு வெளியே வந்து லஞ்சம் வாங்குபவர்களுக்கு ...குற்றம் செய்பவர்களுக்கு எத்தனை நூல்கள்தான்  எழுதி வைத்து என்ன பலன்?
கடைபிடிக்கவா போகிறார்கள்?  

இதுவரை வந்த நூல்களைப் படித்து குற்றமற்ற உலகமா உள்ளது?  எல்லோரும் கடைபிடித்திருந்தால் காவல்துறை, நீதித்துறை எதற்கு?

என்னைப் பொறுத்தவரை பெண் ஏன் அடிமையானாள் போன்ற நூலும், பற்பல பகுத்தறிவு  சிந்தனை நூல்களும்  போதுமானவை....

இங்கு குழுமத்திலேயே பலநூல்கள்  முன்னர் பகிரப்பட்டுள்ளது. நானும் கூட பகிர்ந்துள்ளேன்.

நன்னெறி என்ற போதித்துள்ள நூல்களில் கேள்வி எழுப்புவதும், ஓட்டைகளை சுட்டிக் காட்டுவதும் முக்கியமான கடமையே.

அதை குறையின்றி செய்தார் பெரியார்.


கீழுள்ள இரு சந்தேகங்களுக்கு  இதுவரை நிறைவான விடை அளிக்கப்பட்டுள்ளதா?

எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
 
இந்த வரிசையில் பல கேள்விகள் உள்ளன.  (பார்க்க: http://thamizhoviya.blogspot.com/2014/12/blog-post_40.html)

ஆனால் மின்தமிழில் அவைகளை எடுத்துவிட்டால் பலர் கொதிப்படைவார்கள்.  ....

ஆன்மிக பதிவுகளுக்கு வருவது போல ஆகா...ஆகா... அருமை..அருமை என்ற பாராட்டுகள் வராது. 

இன்றும் ஆன்மிகம் பற்றிய  எதிர் கேள்விகளை முன்வைப்பவர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்தான்.

கருத்துசுதந்திரம் மறுக்கப்பட்டோர் பட்டியலில் அவர்களுக்கு முதலிடம்  கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த உண்மை அனைவரும் அறிந்ததே.

..... தேமொழி 



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 24, 2015, 4:28:36 PM1/24/15
to vallamai, mintamil
​பத்துக் கயவர் இருப்பதால் பல்கலைக் கழகத்தை மூடக் கூடாது.  இருபது குற்றவாளிகள் இருப்பதால் நீதி நூற்கள் தேவையில்லை என்று வாதிட இயலாது. மோசஸ் காலம் முதலே பாபச் செயல்கள் பெருகியதால் பத்துக் கட்டளைகள் தேவைப் பட்டன.  ஏசுநாதர் காலத்தில் பைபிள் எழுதப் பட்டது. காத்லிக் கிறித்துவ மதத்தை எதிர்த்து, புராட்டஸ்டன்ட் மதம் வந்தது.  பிறகு மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்லாம் தோன்றிக் குர்ரான் ​வடிக்கப் பட்டது. இந்து மதம் முதலில் வந்தது. எதிர்த்து புத்த மதம் தோன்றியது. இஸ்லாமுக்கு எதிராக சீக்கிய மதம் உதித்தது.  இவை தடுக்க முடியாத வரலாற்று நிகழ்ச்சிகள்.

ஆதிமுதலே எலெக்டிரானும், புரோட்டானும், ஈர்ப்பு விசையும் எதிராக விலக்கு விசையும் தோன்றின.  நல்லது, கெட்டது, நேர் துருவம், எதிர்த் துருவம், பாசிட்டிவ், நெகட்டிவ் ஆத்திகம், நாத்திகம் இவை படைப்பின் இரு துருவ ஒருமைப்பாடு. 

///எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?///

பிரபஞ்ச நிகழ்ச்சிகள் இருவகைப்படும் :  இயற்கை நிகழ்ச்சிகள்,  மனித நிகழ்ச்சிகள்.

சி. ஜெயபாரதன்.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Jan 24, 2015, 5:21:23 PM1/24/15
to vallamai, mintamil
பெரியார் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே பள்ளிக்குப்போனவர். 12 வயதில் படிப்பை நிறுத்திவிடுகிறார்.

இந்தசூழலில் ஆன்மிக மூலநூல்களை அவற்றின் விரிவுரையுடன் படித்தறியும் வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கவில்லை. மூலநூல்களைப்படிக்காமல் இந்துசமயத்தில் அக்காலத்தில் நிலவிய தேவரடியார் முறை, தீண்டாமை, ஜாதி இவற்றை எல்லாம் கண்டால் எந்த மனிதனுக்கும் வெறுப்பே வரும். அதுவே அவரது எழுத்துக்களில் எதிரொலித்தது. 1920ல் அமெரிக்காவில் இருந்திதிருந்தால் அங்கேயும் கருப்பர்கள் மனிதர்களாக நடத்தப்படவில்லை. அரேபியாவில் அடிமைமுறை அதிகாரபூர்வமாக ஒழிக்கபட்ட ஆண்டு 1964. ஆனால் 1966ல் குத்துசண்டைவீரர் முகமது அலி கருப்பர்களுக்கு கிற்ஸ்துவத்தில் உரிமை கிடையாது என சொல்லி முஸ்லிமாக மாறுகிறார். அவருக்கு அன்றைய அரேபிய நிலவரம் தெரியாது போலும்.

ஆக ஒரு சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு காரணம் மதம் என்ற தவறான புரிதலே பெரியார், முகமது அலி போன்றவர்களுக்கு இருந்தது. இந்த தவறை காந்தி செய்யவில்லை. தீண்டாமையை ஒழிக்க முற்பட்டபோது இந்து மூலநூல்களில் தீண்டாமை உள்ளதா என ஆராய்கிறார். மனுஸ்ம்ரிதியில் இருப்பது வேதத்தில் இல்லையென்றும், ஸ்ம்ரிதிகள் அவ்வப்போது மாறும் தன்மையுடவை என தெளிகிறார்.

இந்தசூழலில் காஞ்சி பரமாச்சாரியார் காந்தியை சந்தித்து தலித்துகளை கோயிலில் விடவேண்டாம், இந்துமதத்தை அழிக்க வேண்டாம் என மன்றாடுகிறார். காந்தி அவரிடம் "மூலநூல்களில் இக்கருத்து எங்கேனும் குறிப்பிடபட்டிருந்தால்" கூறுமாறு கேட்க பரமாச்சாரியாரால் அதைக்காட்ட முடியாமல் போய்விடுகிறது. அன்றைய சூழலில் கல்கி முதலான செல்வாக்குள்ள ஆன்மிகநம்பிக்கையுள்ள இந்துக்கள் காந்தியின் கருத்தையே ஆதரித்து பரமாசாரியாரைக்கண்டித்து எழுதுகிறார்கள்.

ஆக காந்தியின் வழி பெரியாரின் வழியை விட மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது என்பதைக்காணுகிறோம். இருவரின் அணுகுமுறையே இதற்குக்காரணம். பெரியார் நாத்திகவாதத்தை முன்நிறுத்தாமல் இருந்திருந்தால் அவரது கருத்துக்கள் பலரையும் சென்று சேர்ந்திருக்கும். அண்ணாவே இப்பிழையை உணர்ந்ததால் தான் பின்னாளில் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதை ஏற்றுக்கொண்டார்.

தேமொழி

unread,
Jan 24, 2015, 7:08:16 PM1/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///
ஆதிமுதலே எலெக்டிரானும், புரோட்டானும், ஈர்ப்பு விசையும் எதிராக விலக்கு விசையும் தோன்றின.  நல்லது, கெட்டது, நேர் துருவம், எதிர்த் துருவம், பாசிட்டிவ், நெகட்டிவ் ஆத்திகம், நாத்திகம் இவை படைப்பின் இரு துருவ ஒருமைப்பாடு. 
///


மாறுபட்ட கருத்துகள், கோணங்கள்தான்  உலகின் நடைமுறை.

எப்படி எலக்ட்ரோன் & ப்ரோட்டானும் நல்லதும் அல்ல தீயதும் அல்ல.... 
அந்த மாறுபாடுதான் ஆக்க சக்தியாக மாறுகிறது என்பது போன்றதுதான் மாறுபட்ட கோணங்களும். 



அதனால் நமக்கு ஒத்து வரும் ஒன்றை நல்லது என்று நாமே முடிவெடுத்து மற்றதை தீயது என்று மறைமுகமாக அறிவுறுத்துவது என்றும் உதவாது.  

ஒரு சாராரை தீய வழியில் செல்க (அழிவு, கொலை, கொள்ளை, களவு, தீமை...இன்ன பிற செய்க) என்ற போதனை தராதவரை  எந்த ஒரு பிரிவினரையும் சமூகத்தின் "தீயசக்தி" என்று அடையாளப்படுத்துவது முறையல்லவே.

ஒருவரை சிந்தித்து முடிவெடு என்று அறிவுரை சொன்னதோ அல்லது சொல்வதோ என்றும் குற்றவியலில் அடங்காது.

ஒரு  பிரிவினரைப் போலத்தான் மற்றொரு பிரிவினரும் மற்றொரு வகையில் நல்வழிபடுத்தும் முயற்சி மேற்கொள்கிறார்கள். 
 


//////
///எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?///

பிரபஞ்ச நிகழ்ச்சிகள் இருவகைப்படும் :  இயற்கை நிகழ்ச்சிகள்,  மனித நிகழ்ச்சிகள்.
////

இந்த விளக்கம் உதவாது ஐயா.   இதைச் சொல்லும் பொழுது "எல்லாம் அவன் செயல்" என்பது மறுக்கப்பட்டுவிடுகிறது.

உங்கள் இயற்பியலில் சொன்னால் "A scientific law always applies under the same conditions, and implies that there is a causal relationship involving its elements."

"எல்லாம் அவன் செயல் " என்பது ஒரு ultimatum  
... that means it is  a final demand or statement of terms, the rejection of which will result in retaliation or a breakdown in relations.

இது போன்ற விளக்கம் ...நல்லவர்கள் துன்பப்படும் பொழுது அதற்கு விளக்கம் சொல்லத் தெரியாது, அது சென்ற பிறவியில் செய்த  பாவம் புண்ணியம் போன்ற கட்டுக் கதைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு ஒப்பானது. 

பிறகு எல்லாம் நம்பிக்கை என்று சொல்லும் பொழுது விவதாங்கள் dead end நிலையை அடைந்துவிடும். அது அவரவர் கருத்து என்று அவரவர் வழியில் செல்லும் நிலையை எட்டிவிடும்.  

யாரும் இதை நான் நம்புகிறேன் ...இது என் கருத்து என்று சொல்லும் பொழுது, அடுத்தவரும் ஒன்றை  நம்புகிறார்...அது அவருடைய கருத்து என்ற வழியில் போகும் முடிவு வரும். 

..... தேமொழி

தேமொழி

unread,
Jan 24, 2015, 7:16:44 PM1/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///
காந்தியின் வழி பெரியாரின் வழியை விட மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது என்பதைக்காணுகிறோம். 
///



சரி செல்வன் ...இருவரும் அவரவர் வழியில் முயன்றார்கள்...இன்றைய இந்தியாவின் நிலை என்ன?

அவர்கள் இருவரும் அவரவர் வழியில் போராடிய சமூக அவல நிலைகள்  மாறிவிட்டனவா?

மாறிஇருந்தால்  அதற்கு அவர்கள் முயற்சிகள்  காரணமா அல்லது இந்திய சட்டங்களா?

these are just open ended questions only...

:))

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 24, 2015, 7:25:02 PM1/24/15
to vallamai, mintamil
காந்தி, பெரியார் இருவரும் இருந்த காலத்தோடு ஒப்பீட்டால் இன்று மிகப்பெரும் அளவில் சமூகமாற்றம் நிகழ்ந்துள்ளது.

சமூகமாற்றத்தை இவர்கள் விரைவுப்படுத்தினார்கள். இவர்கள் இல்லையெனில் அது மிக, மிக மெதுவாக நிகழ்ந்திருக்கும். ஆனால் அதை யாராலும் தடுத்திருக்க முடியாது.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Jan 24, 2015, 7:32:49 PM1/24/15
to vallamai, mintamil

2015-01-24 18:08 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//////
///எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?///


எல்லாம் அவன் செயல் என்பதே தவறான கருத்து.

ஹிந்து நூல்களில் இதுகுறித்து பல மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

விஷிஷ்டாத்வைதத்தில் மனிதனுக்கு ஒரே ஒரு வினாடி சுயமுடிவெடுக்கும் அதிகாரத்தை பரமன் அருள்கிறான். அதை நாம் துஷ்பிரயோகம் செய்தால் அதன்பின் காலச்சக்கரத்தின் சுழலில் நாம் கர்மவினையின் போக்கில் அகப்படுகிறோம்.

உதாரணமாக மகாபாரதத்தில் "ஐந்து வீடுகளாவது கொடு" என கண்ணன் துரியனிடம் கேட்கையில் விஸ்வரூபமெடுத்து பரம்பொருளின் வடிவமாக நின்று கேட்கிறான். கண்ணிழந்த திருதராட்டிரனே அப்போது அவ்வுருவை தரிசிக்க இயலுகிறது. அந்த சூழலிலும் துரியோதனனின் ஆணவம் அவனை விடவில்லை. "ஊசிமுனை நிலமும் கொடுக்கமாட்டேன்" எனச்சொல்லி மறுத்துவிடுகிறான். ஆக அந்த வினாடி அவனிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தது. அதன்பின் அது மறைந்து கர்மவினையில் சிக்கிகொள்கிறான்.

ஆக "அவனன்றி அணுவும் அசையாது" என்பது போன்ற சொல்வடைகள் freewill எனும் கோட்பாடுக்கு முரணானவை என அறியலாம்

--

தேமொழி

unread,
Jan 24, 2015, 7:50:44 PM1/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///
 இதுகுறித்து பல மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
///



there you go...

எங்குதான் மாறுபட்ட கருத்து இல்லை..மதங்களில் கிளைகள் தோன்றியதன் காரணமே மாறுபட்ட கருத்துக்களினால்தானே 


..... தேமொழி

செல்வன்

unread,
Jan 24, 2015, 8:00:00 PM1/24/15
to vallamai, mintamil
ஆமாம். அதனால் தான் ஆன்மிகத்தை தட்டையாக புரிந்துகொண்டு ஸ்டிரியோடைப் செய்வதில் பலனில்லை.

ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவன் அய்யப்பன்
பரிசுத்த ஆவியில் இட்டிலி வேகுமா
786 என்பது அல்லாவின் டெலிபோன் நம்பரா?

இப்படி எல்லாம் திகவினர் சுவர்களில் கிறுக்கி வைத்திருப்பது இம்மதங்களை இப்படி தட்டையாக, ஒற்றைக்கணோட்டத்தில் புரிந்து கொண்டதனால் தான். ஆயுள் முழுக்க பெரியாரால் அப்படி தானே இந்துமதத்தைப்பற்றி உருவாக்கிகொண்ட பிம்பத்திலிருந்து வெளிவர இயலவில்லை. கழகத்திலும் பலரால் இன்னமும் வெளிவர இயலவில்லை என்பது நீங்கள் கொடுத்த தளத்தில் கேட்கபட்டிருக்கும் கேள்விகள் மூலமாகத்தெரிகிறது.

தேமொழி

unread,
Jan 24, 2015, 8:05:37 PM1/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

அட...அனைத்து  மதக் கோட்பாடுகளும்  சமமாகத்தான் தாக்கப்பட்டனவா?

:))

சிலர் இந்து மதத்தையே ஏன் குறி வைக்கிறார்கள்?   அடுத்த மதத்திடம்  அவர்கள்  பப்பு வேகுமா? என்று சவால்விட்ட வண்ணம் உள்ளார்களே!!!

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 24, 2015, 8:12:27 PM1/24/15
to vallamai, mintamil
சமமாக எல்லாம் இல்லை. நூற்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் சுவர்களில் இவ்வசனங்கள் எழுதபட்டிருக்கும். பிள்லையார் சிலையை செருப்பால் அடித்தது, கீதையைகொளுத்தியது மாதிரி எல்லாம் பிறமதங்களுக்கு செய்ய அவர் முன்வரவில்லை. செய்திருந்தால் சார்லஸ் ஹெபிபோ, ருஷ்டி நிலைக்கு உயர்ந்திருப்பார் :-) ஆனால் எந்த வரம்புக்குள் நின்று பிறமதங்களை தாக்கினால் பிரச்சனையில்லை என்பதை கழகத்தோழர்கள் நன்றாக அறிவார்கள் :-)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jan 24, 2015, 8:12:48 PM1/24/15
to vall...@googlegroups.com, mintamil
ஆனால் கடந்த 60-70 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நாத்திகம் பரப்பி வந்த தந்தை
பெரியாரும், அவரது பிரதான சீடரும் பிற்காலச் சந்ததிகள் பின்பற்ற என்ன
ஒழுக்க நெறி நூல்களைப் படைத்துள்ளார்கள் ?

~ அதுவும் இல்லை. நடைமுறையிலும் இல்லை. சொல்லப்போனால், முரண்.

ஏழை தொழிலாளிக்கு உரிய கூலி கொடுக்க
மறுத்த ஈவேரா அவர்களை பற்றி அண்ணாவே எழுதியிருக்கிறார். அண்ணா அவர்களின்
இலக்கிய படைப்புகளை விட அவருடைய அரசியல் மேல். வேலைக்காரி என்ற
இலக்கியத்தின் அமைப்பை விமரிசித்தால், அதனுள் அடங்கிய வாழ்வியலில் நடவாத
முரண்கள் தென்படும். பிற்கால நிகழ்வுகள் யாவரும் அறிந்ததே.









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jan 24, 2015, 8:14:09 PM1/24/15
to vall...@googlegroups.com, mintamil
செல்வமே! வர வர நாம் ஒத்துப்போகிறோம். மறுபடியும் விஸ்கன்ஸின் வருகிறேன்.

செல்வன்

unread,
Jan 24, 2015, 8:16:18 PM1/24/15
to vallamai, mintamil

2015-01-24 19:13 GMT-06:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
செல்வமே! வர வர நாம் ஒத்துப்போகிறோம். மறுபடியும் விஸ்கன்ஸின் வருகிறேன்.


நாம உள்நாட்டு அரசிய்லில் ஒண்ணு. வெளிநாட்டு அரசியலில் வேறு சார் :-)

--

K. Loganathan

unread,
Jan 24, 2015, 8:34:49 PM1/24/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com
அன்பர்க்ளே

  கருத்துக்களை எல்லாம் படிக்கும் போது என்னுள் பல கேள்விகள் எழுகின்றன. அடிப்படையில் நம் தமிழப் பண்பாட்டு சிந்தனை அடிப்படைகளை நாம் புரிந்துகொண்டுள்ளோமா ? என்பதே

அன்பர்கள் சிந்தனைக்கு இவை:

1,

தொல்காப்பியம் குறிப்பாக மரபியலில் விளங்கும் ஏரணவியல்  நூலுத்தியியல் போன்றவை பகுத்தறிவிற்குப் புறம்பானவையா?  தொல்காப்பியத்தில் இறை மறுப்பு இல்லையே? ஏன் இல்லை?,.

2.

மெய்ப்பொருள் காண்பது அறிவு எனும் திருக்குறள் பகத்தறிவிற்குப் புறம்பானதா? வள்ளுவரும் இறையுண்மையை உலகை வைத்தே நிறுத்துகின்றாரே?

3.

மெய்கண்டாரின் 'சிவஞானபோதம்" கூறும் அகண்ட அறிவியல் பகுத்தறிவிற்குப் புறம்பானதா?  அங்கு பிரமாணமாக வேதங்களோ ஆகமங்களோ சுட்டப்படவில்லையே?  அங்கு விளங்கு காண்டிகை உரை தொல்காப்பியம் தழுவி வரும் அது எப்படி பகுத்தறிவிற்கு புறம்பானது?  பகுத்தறிவையே விலக்குவதாக அல்லவா அது திகழ்கின்றது?

3.

அறிவியல் என்றால் என்ன என்பதை நாம் சரியாக புரிந்துகொண்டுள்ளோமா? ஐரோப்பிய அறிவியல்தான் அறிவியகா? சிவஞான போதம் காட்டும் அகணட அறிவியல் என்பது  metaphysics  என்பதையும் உட்படுத்திச் செல்லும் அகண்ட அறிவியல் என்பது  அறிவியல் அல்லையா?

4.
வீரச் சோழர் காலத்தில் மெய்கண்ட சாத்திரிங்கள்' என்றவோர் இலக்கிய வகை நூற்கள் தோன்றியுள்ளதே? எப்படிபட்டவை அவை? ஏன் அவை மெய்கண்ட சாத்திரங்கள் ஆகின்றன? அவை பகுத்தறிவிற்குப் புறம்பானவையா? ஐரொப்பியர்கள் இப்படிப்பட்ட மெய்கண்ட சாத்திரங்களை இயற்ரியுள்ள்ளனரா?

இந்தக் கேள்விகளை கேட்பதற்குக் காரண்மே தமிழர்களாகிய நாம் நம் பாரம்பரியத்தின் சிறப்புக்க்ளை அறியாதே இருக்கின்றோம் என்று தெளிவு படுத்துவதே. எனது 'ஏன் நான் ஓர் சைவன்?" என்ற கட்டுரைத் தொடரில் இவற்றிற்கு பல விளக்கங்களையும் தந்துள்ளேன்

உலகன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Jan 24, 2015, 9:02:12 PM1/24/15
to vallamai
இது முரண்வாதம்.  பெரியாரின் நீங்கள் குறிப்பிடும் நாத்திக வாதம் இந்துக்கடவுள் மறுப்புவாதம் மட்டுமே.  அவர் புத்த கிறித்துவ முஸ்லீம் சமயங்களைப் போற்றியே பேசியுள்ளார்.  அவரின் இந்துக்கடவுள் மறுப்பு நாத்திகவாதம் என்பது அவர் மற்ற சமய்ஙகளின்மேஅளவற்ற ஆதரவு காட்டியதால் அடிபட்டுப் போகிறதே
எலியோன்

2015-01-25 6:42 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jan 24, 2015, 9:09:44 PM1/24/15
to vallamai

2015-01-25 6:42 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
ஏழை தொழிலாளிக்கு உரிய கூலி கொடுக்க
மறுத்த ஈவேரா

​இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.  நீங்கள் போற்றும் திரு.வி.க நொந்துபோவார்.  தொழிலாளர்களுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் அவருடைய பரபரப்பான இந்துக்கடவுளர் மறுப்பின்முன் அதிகம் வெளியுலக்குக்குத் தெரியாமல்போனது

சோவியத் ரஷ்யாவில் ​பொதுவுடமைக் கட்சியில் சேர எல்லா ஏற்பாடுகளும் நடந்து ரஷ்யத் தலைமையச் சந்திக்க நாள் குறித்திருந்த நேரத்தில் அவருடன் சென்றிருந்த ராமநாதனின் செயல்பாட்டால் அனைவரும் ரஷ்யாவைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் நடந்தது. 

பெரியார் பாவம் பஞ்சுமிட்டாய் ரேஞ்சுக்கு ஊதி ஊதிப்பெரிசாக்கப்படுவதைத் தவிர அவரின் உண்மையான் சொரூபத்தை அறியவும் விளக்கவும் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் முன்வருவதே இல்லை

எலியோன்

K. Loganathan

unread,
Jan 24, 2015, 9:30:32 PM1/24/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com
 பேராசிரியரே 

 பெரியாரைப் பற்றி இது பொருந்தாது.  மற்ற ச்மயங்கள மேல் அளவற்ற மதிப்பு வைத்திருப்பவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மக்கள் ஒட்டு மொத்தமாக மதம் மாறவேண்டும் என்று ஏன் பரிந்துரை செய்யவில்லை?

மேலும் 'அவர் கொண்டிருந்தது  'இந்து கடவுள் மறுப்பு வாதம்' என்பது பட்டிப்பட்டது? அவர் சைவ சித்தாந்தம் அறிந்திருந்தாரா  இல்லை அவர் தம சீடர்கள் தாம் அறிந்திருந்தன்ரா?  அங்கு காரைக்கால் அம்மையார் தமது அற்புததிருவந்தாதியில் விளக்கி இருக்கும் ' icon thinking'  எனப்படும் திருவுருவச் சிந்தனையை , எவ்வாறு ஒவ்வொரு மூர்த்தமும் ஓர் ஞானநூலென பல உணமைகளை தன்னுள் புதைத்துவைத்துள்ள  உண்மையை அறிந்திருந்தரா?

 கட்டாக உலகப் புகழ் பெற்ற நடராச திருமூர்த்தம் தன்னுள் கொண்டுள்ள பொருளை அறிந்தவாராக ஆகவே இந்து கடவுள் உருவங்கள் கொண்டிருக்கின்ற உண்மைகளை அறிந்திருந்தாரா?

அத்தோடு ஏன் இன்று பெரியாரின் தாக்கத்தால் பலர் (மலேசியவிலும்) தங்கள் குழந்தைகளை கோயிலிற்கே அனுப்பாது தடை செய்கின்றனர்?

உலகன்


செல்வன்

unread,
Jan 24, 2015, 9:31:50 PM1/24/15
to vallamai

2015-01-24 20:02 GMT-06:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இது முரண்வாதம்.  பெரியாரின் நீங்கள் குறிப்பிடும் நாத்திக வாதம் இந்துக்கடவுள் மறுப்புவாதம் மட்டுமே.  அவர் புத்த கிறித்துவ முஸ்லீம் சமயங்களைப் போற்றியே பேசியுள்ளார்.  அவரின் இந்துக்கடவுள் மறுப்பு நாத்திகவாதம் என்பது அவர் மற்ற சமய்ஙகளின்மேஅளவற்ற ஆதரவு காட்டியதால் அடிபட்டுப் போகிறதே

ஐயா..பெரியார் நாத்திகர் அல்ல என கூறுகிறீர்களா?

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
வழிபடுகிறவன் காட்டுமிராண்டி
பரப்புகிறவன் அயோக்கியன்

என அவர் கூறியது எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதுதானே?


--

Nagarajan Vadivel

unread,
Jan 24, 2015, 9:42:41 PM1/24/15
to vallamai

2015-01-25 8:00 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
மற்ற ச்மயங்கள மேல் அளவற்ற மதிப்பு வைத்திருப்பவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மக்கள் ஒட்டு மொத்தமாக மதம் மாறவேண்டும் என்று ஏன் பரிந்துரை செய்யவில்லை?

​இதற்கு மிகச் சுருக்கமான பதில் அவர் அம்பேத்கார் தலித்துகளைப் பெளத்தத்துக்கு மாறச் சொன்னபோது சொன்னது பொருந்தும்.  இந்து சமயத்துக்கூளே இருந்துதான் சாதிக்கொடுமைகளைக் களைய வேண்டும் சாதியில்லாத பெளத்தத்துக்ச் சென்று இந்து சமயத்தைத் திருத்த முடியாது என்பது அவருடைய வாதம்

ஐயா பெரியார் பிறப்பால் வைணவர்.  அவர் குடும்பம் வைணவம் வளர்க்கப் பெரும்பங்காற்றியுள்ளது.  அவருடைய தாயின் இறப்பைப்பற்றிக் கூறும்போது உலகமெல்லாம் திருந்தவேண்டும் என்ற தான் சொன்னதைத் தன் வீட்டில் தன் தாய் ஏற்றுக்கொள்ளவில்லை.  தாய் இறுதி மூச்சுவரை வணவப்பற்றுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்

இந்து சமயத்தை எதிர்க்க அவர் எல்லாப் புராணங்களையும் படிக்கவேண்ட்டிய சூழல் ஏற்பட்டது.  காஞ்சிப் பெரியவர் தன் பக்தர்களுக்குக் கூறும்போது எதிர்ப்பாளர்களுக்கு இருக்கும் சமய அறிவில் பாதிகூட இல்லாமல் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது என்று ஒரு முறை குறிப்பிட்டுள்ளாரே

​எலியோன்

K. Loganathan

unread,
Jan 24, 2015, 9:57:41 PM1/24/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com
 மிக்க நன்றி பேராசியர் அவர்களே

  தங்கள் கூற்று:
//இந்து சமயத்தை எதிர்க்க அவர் எல்லாப் புராணங்களையும் படிக்கவேண்ட்டிய சூழல் ஏற்பட்டது.  காஞ்சிப் பெரியவர் தன் பக்தர்களுக்குக் கூறும்போது எதிர்ப்பாளர்களுக்கு இருக்கும் சமய அறிவில் பாதிகூட இல்லாமல் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது என்று ஒரு முறை குறிப்பிட்டுள்ளாரே//

எல்லா புராணங்களையும் படிக்க முயன்றவர் ஏன் சிவஞானபோதம் போன்ற மெய்கண்ட சாத்திரங்களை படிக்க வில்லை? அவரது வைண்வப் பாரம்பரியம் அதற்குத் தடையாக இருந்ததா?

சிவஞாபோதம் வற்புறுத்தும் அகண்ட அறிவியலை அறிந்திருந்தால் அதற்கு மேற்பட்ட 'பகுத்தறிவு வாதம்' இல்லை என்று உணர்ந்திருப்பாரே?

ஆக சைவம் அறியாத அறியாமையினால் தான் அவர் 'இந்து மதக் கடவுள் மறுப்பு சொல்லி அவர் காலத்திற்குப் பிறகு  அவர் சீடர்களால் 'இந்து மத வெறுப்பு" என்று அதனை வளர்க்க காரணமாக இருந்ததா? 

மிகப் பரவலாக 12 திருமுறைக்ளை கொண்ட  20 மேற்பட்ட அழகிய ஆழமான ஏரணவியல் சான்ற மெய்கண்ட சாத்திரங்களை அறியாத அறியாமையால் விளைந்த கேடுதான் அவர் போற்றிய 'இந்து மதக் கடவுள் மறுப்பு' வாதமா?

உலகன்

K. Loganathan

unread,
Jan 24, 2015, 11:02:56 PM1/24/15
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
 முனைவர் வீரபாண்டியன அவர்களே

 மிக்க நன்றி. ஓர் புதிய கோணத்தைக் கொண்டு வந்துள்ளீர். எனக்கு விய்ப்பாக இருப்பது உலகத்திலேயே ஏரணச் சிந்தனை சான்று முறையில் அகண்ட அறிவியல் துறைகளில் ஒன்றாக சமய வாழ்க்கையை  வடித்துள்ள தமிழப் பாரம்பரியம் குறிப்பாக மெய்கண்டாரியம் எப்படி பெரியாராலும் இன்னும் பலராலும்  பகுத்தறிவிற்குப் புறம்பானது என்ற கொள்ளப்பட்டது என்பதே புரியாத புதிர்

இதற்கு பார்ப்பன எதிர்ப்பு ஓர் காரணமாக இருக்குமோ? எனினும் தங்கள்  கருத்துகளை பிற அன்பர்களும் அறிந்திட என் ஏனைய குழுமங்களுக்கும் அனுப்பி வைக்கின்றேன்

தொடர்ந்து சிந்திக்கவும் செய்வேன்

உலகன்

2015-01-25 11:47 GMT+08:00 veera pandian pann...@yahoo.co.in [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 


1. 'பார்ப்பன நலன்' பார்வை வளையத்தில் சிக்கி,  மூடநம்பிக்கை என்ற இரைச்சலை மட்டுமே பார்த்தது, அவை ஒழிக்கப்பட வேண்டியவைகளே என்ற முடிவுக்கு இட்டுச் சென்றதா? அவற்றில் இருந்த புலமை தொடர்புள்ள 'சிக்னல்களை' ,உணர முடியாமல் போனதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அல்லது 'புலமை' என்பதே பார்ப்பன நலனாகப் பார்க்கப்பட்டதால், சமூக நலனுக்கான 'தகுதி, திறமைகள்' எல்லாம் 'பார்ப்பன மோசடி' என்ற முடிவுக்குக் கொண்டு சென்றதா?”  ((Refer in this Blog Dt. September 20, 2014 ‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா? ‘ & Dt. September 19, 2014-  ‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’)

From: http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-01-14T02:07:00-08:00&max-results=7  dt.January 10, 2015;''பார்ப்பனர் நலன்': 'மூடநம்பிக்கையா'? 'பகுத்தறிவா'?' 

2.
பெரியாரின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு குறிப்பு 1) 

அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக,அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன.
From: 'பெரியார் ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு';post dtDecember 28, 2014; http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-01-02T20:33:00-08:00&max-results=7&start=4&by-date=false


செ. அ. வீரபாண்டியன்


From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: vall...@googlegroups.com; "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; Tolkaa...@yahoogroups.com; "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>
Sent: Sunday, 25 January 2015 8:27 AM
Subject: Re: [வல்லமை] Re: [MEYKANDAR] பெரியார் ஈ.வெ.ரா வின் 'ஆன்மீக'ப் பெருந்தவறு

__._,_.___

Posted by: veera pandian <pann...@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (6)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

Innamburan S.Soundararajan

unread,
Jan 24, 2015, 11:08:39 PM1/24/15
to vall...@googlegroups.com
எலியோனாரே! சொன்னது அண்ணா. யான் அன்று. திரு.வி.க. அவர்களுக்குக் காசும்
தெரியாது; காசின் அருமையும் தெரியாது.
அண்ணாவிடம் பஸ் கட்டணம் வாங்கிச்செல்லும் அப்பாவி, அவர்.

தேமொழி

unread,
Jan 24, 2015, 11:26:07 PM1/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, January 24, 2015 at 5:16:21 PM UTC-8, செல்வன் wrote:
நாம உள்நாட்டு அரசிய்லில் ஒண்ணு. வெளிநாட்டு அரசியலில் வேறு சார் :-)


இது நல்ல கொள்கை செல்வன்...

இடத்திற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையா?

சின்னப் பசங்க "புஷ்  பண்ணுங்க, குஷியாயிடுங்க"  அப்படின்னு சொல்றாங்களேன்னு எப்ப பார்த்தாலும் புஷ் செய்து கொண்டே இருந்தீங்கன்னா அப்புறம் "புஷ்பராஜன்" ன்னு  பேர் கிடச்சிடும்...

..... தேமொழி

 

செல்வன்

unread,
Jan 24, 2015, 11:32:19 PM1/24/15
to vallamai, mintamil
இடத்துக்கு ஏற்ப நான் பேசுவது கிடையாது :-) அப்படிப்பேச நான் அரசியல்வாதி அல்லவே?

இந்தியாவிலும் கேப்பிடலிசம், அமெரிக்காவிலும் கேப்பிடலிசம்..இதுதான் என் கொள்கை :-)

இன்னம்பூராருடன் ஒத்துபோகும் விஷயம் கழகங்கள் மேல் இருவருக்கும் இருக்கும் அவநம்பிக்கை.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jan 24, 2015, 11:52:57 PM1/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நான் குறிப்பிட்டது பேச்சு அல்ல "நடவடிக்கை"

ஆளுக்கு ஏற்றவாறு ஐஸ் போடும் பேச்சல்ல.  

உங்களுக்கு உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் தடி கொண்டு தாக்குவதை துப்பாக்கி கொண்டு சுடுவதோ அல்லது துப்பாக்கியை எடுக்க வேண்டிய நேரத்தில் லத்தி சார்ஜ் செய்வதோ உதவாது...

:)
..... தேமொழி






On Saturday, January 24, 2015 at 8:32:20 PM UTC-8, செல்வன் wrote:
இடத்துக்கு ஏற்ப நான் பேசுவது கிடையாது :-) அப்படிப்பேச நான் அரசியல்வாதி அல்லவே?

இந்தியாவிலும் கேப்பிடலிசம், அமெரிக்காவிலும் கேப்பிடலிசம்..இதுதான் என் கொள்கை :-)

இன்னம்பூராருடன் ஒத்துபோகும் விஷயம் கழகங்கள் மேல் இருவருக்கும் இருக்கும் அவநம்பிக்கை.

2015-01-24 22:26 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, January 24, 2015 at 5:16:21 PM UTC-8, செல்வன் wrote:
நாம உள்நாட்டு அரசிய்லில் ஒண்ணு. வெளிநாட்டு அரசியலில் வேறு சார் :-)


இது நல்ல கொள்கை செல்வன்...

இடத்திற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையா?

சின்னப் பசங்க "புஷ்  பண்ணுங்க, குஷியாயிடுங்க"  அப்படின்னு சொல்றாங்களேன்னு எப்ப பார்த்தாலும் புஷ் செய்து கொண்டே இருந்தீங்கன்னா அப்புறம் "புஷ்பராஜன்" ன்னு  பேர் கிடச்சிடும்...

..... தேமொழி

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Jan 25, 2015, 2:11:31 AM1/25/15
to vallamai, mintamil

2015-01-24 22:52 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
உங்களுக்கு உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் தடி கொண்டு தாக்குவதை துப்பாக்கி கொண்டு சுடுவதோ அல்லது துப்பாக்கியை எடுக்க வேண்டிய நேரத்தில் லத்தி சார்ஜ் செய்வதோ உதவாது...

:)

உண்மைதான்.


--

Innamburan S.Soundararajan

unread,
Jan 25, 2015, 5:30:42 AM1/25/15
to vall...@googlegroups.com, mintamil
இடத்துக்கு ஏற்ப நான் பேசுவது கிடையாது :-) ~ இதை பல வருடங்களாக அறிவேன்.

அப்படிப்பேச நான் அரசியல்வாதி அல்லவே? ~ ஆமாம் சாமி!

இந்தியாவிலும் கேப்பிடலிசம், அமெரிக்காவிலும் கேப்பிடலிசம்..இதுதான் என்
கொள்கை :-) ~ தெரியுமே.

இன்னம்பூராருடன் ஒத்துபோகும் விஷயம் கழகங்கள் மேல் இருவருக்கும்
இருக்கும் அவநம்பிக்கை. ~அவநம்பிக்கை +

> உங்களுக்கு உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் தடி கொண்டு தாக்குவதை துப்பாக்கி கொண்டு சுடுவதோ அல்லது துப்பாக்கியை எடுக்க வேண்டிய நேரத்தில் லத்தி சார்ஜ் செய்வதோ உதவாது...
>
> :)


உண்மைதான். ~ அதானே.The right tool for the right job.

Nagarajan Vadivel

unread,
Jan 25, 2015, 6:59:59 AM1/25/15
to vallamai
ஐயா வலியோரே உங்களைப்போன்றோருக்கு மட்டுமே திரு.வி.கவின் பார்வையில் பெரியாரைப் பார்க்கமுடியும்.  உங்கல் எடுத்துக்காட்டு அண்ணாவுக்கும் பெரியாருக்க்ம் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளைக் காட்டும்.  இருவருமொருவரை ஒருவர் அரசியல் ஆதாயத்துக்குப்பயன்படுத்திக்கொண்டனரே அல்லாது பெரியார் திரு.வி.க போன்ற உண்மை நட்புக் கிடையாது.  பெரியார் எல்லாருக்கும் வேண்டியவராக இருந்ததற்கு அடிப்படை அவரிடம் இருந்த அளப்பரிய செல்வம்.  நீதிக்கட்சி வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவு பொதுக்கூட்டங்களுக்கு (குறிப்பாகச் சென்னையில் ஆள் திரட்டும் செலவு இரண்டாம் கட்டத் தலைவர்களின் குடும்பத்துக்கு உதவி என்ற பல நிலைகளில் அவர் தனது செல்வத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
எலியோன்

Nagarajan Vadivel

unread,
Jan 25, 2015, 7:16:54 AM1/25/15
to vallamai
2015-01-25 8:00 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
ந்து கடவுள் மறுப்பு வாதம்' என்பது பட்டிப்பட்டது? அவர் சைவ சித்தாந்தம் அறிந்திருந்தாரா  இல்லை அவர் தம சீடர்கள் தாம் அறிந்திருந்தன்ரா?  அங்கு காரைக்கால் அம்மையார் தமது அற்புததிருவந்தாதியில் விளக்கி இருக்கும் ' icon thinking'  எனப்படும் திருவுருவச் சிந்தனையை , எவ்வாறு ஒவ்வொரு மூர்த்தமும் ஓர் ஞானநூலென பல உணமைகளை தன்னுள் புதைத்துவைத்துள்ள  உண்மையை அறிந்திருந்தரா?

​இந்த வினாவுக்கு விடையாக அண்ணாவுக்கும் பி.சி.கணேசனுக்கும் இடையே நடந்த உரையாடலைமேற்கோள் காட்டி விளக்கலாம்.  கம்பரசம் பற்றிக் குறிப்பிடும்போது அண்ணா தான் ஒரு இலக்கியப் பார்வையில் கம்பனைப் பார்க்கவில்லை தான் சார்ந்த கட்சியின் கொள்கைக்கு ஏற்ற ஒரு அரசியல் பார்வையே கம்பரசம் எழுத அடிப்படை என்று கூறியுள்ளார். பி.சி.கணேசன் இதை ஏன் எல்லாருக்கும் சொல்லவில்லை என்று கேட்டதற்கு வக்கீல் தன் கட்சிக்கு மட்டும் வாதாடுவான் எதிர்க்கட்சி வக்கீலுக்கு உதவ மாட்டேன் அதுவே என் நிலையும் என்று கூறினாராம்.  தன் கருத்துக்கு மாற்றுக்கருத்தை முன்வைத்து வாதிட்ட ரா.பி.சேவாலும் அண்ணாவை வெற்றிகொள்ள முடியவில்லை.  சுய மரியாதைக்காரர்களும் அதன்பின் திராவிடக் கழகத்தாரும் பக்து இலக்கியம் உருவாக்கிய தமிழை மேடைத்தமிழாக்கி பக்தி இயக்கத்துக்கு எதிராகவே பயன்படுத்தினர்.  குறிப்பிட்ட சிலர் மேடை நாகரிகத்துக்கு அப்பாற்பட்டவகையில் சொற்சிலம்பம் விளையாடினர்.  அவர்கள் பேசிய பேச்சுக்கு அவர்கள் விளக்கம் அறிந்திருந்தார்கள என்பதை எதிர்க்கட்சியினர் உறுதி செய்யச வில்லை, அடுக்குமொழியில் மேடைத்தமிழில் அவர்கள் பேசிய பேச்சும் எழுத்தும்மக்களைக் கட்டிப்போட்டு அவர்களைக் கருத்து மயக்கம்கொள்ள வைத்தது.  அரசியல் காரணங்களுக்காக அவர்கள் முன்வைத்த புனைவுக்கருத்துக்கள் உண்மை என்று பலர் நம்பும் நிலை உருவானது.எதிரணியில் இருந்தவர்களால் இந்த மயக்குமொழிகளைக் கடந்து தமிழனின் உண்மை நிலையை எடுத்துரைக்கும் வாக்குவன்மை இல்லாமல் அமைதிகாத்தனர் என்றே தெரிகிறது

எலியோன்

K. Loganathan

unread,
Jan 25, 2015, 8:22:41 AM1/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com
 மிக்க நன்றி பேராசிரியர் அவர்களே 

 தங்கள் கருத்துக்களோடு உடன்படுகின்றேன். அதிலும் குறிப்பாக கீழ் வருவதொடு:

//எதிரணியில் இருந்தவர்களால் இந்த மயக்குமொழிகளைக் கடந்து தமிழனின் உண்மை நிலையை எடுத்துரைக்கும் வாக்குவன்மை இல்லாமல் அமைதிகாத்தனர் என்றே தெரிகிறது//

வேதாந்தம் உலகமே மாயை மித்தியயா ஞானம் என்று கூறி உலகிலிருந்து மக்களை ஓடச் செய்தது. திராவிட இயக்கம் அற்பத்தனமான கருத்துகளை பெரும் பெரும் வரலாற்று புனைவுகளை மதியினை மயக்கும் அடுக்குமொழியில் அலங்கார சொற்களில் பாடி(பேசி) மக்களை மயக்கினர் என்பது உண்மை, இதனால் அவர்கள் கூறுவதும் போற்றுவதும்  பகுத்தறிவே அல்ல. சில ஐரோப்பியர்களின்( இங்கர்சால் போன்றோரின்) மிகவும் கேவலமான் சில அறிவியல் கருத்துக்களை அளவிற்கு மீறிப் புகழ்ந்து தமிழ் பண்பாட்டில் அதிலும் குறிப்பாக சைவ பண்பாட்டில் தொல்காப்பியர் காட்டிய வழி பின்பற்றி ஏரணவியல் வளர்த்து அதனை அடிப்படையாக கொண்டு அகணட அறிவியலை வளர்த்துச்ச் சென்ற சிறப்பினை அறியாத அறிவிலிகளாக விளங்கினர் விளங்குகின்றனர் என்று தெரிகின்றது.

இதுவொரு வெட்கட்கேடு இல்லையா?

பாரதப் பண்பாடு அதிலும் குறிப்பாக உலக நாகரீகத்திற்கே வித்திட்ட தமிழப் பண்பாட்டின் இப்பட்ட வீழ்ச்சிக்கு வித்திட்டவர்கள் ஏன் அறிஞர் என்றும் பெரியார் என்றும் குறிப்பிடப்பட வேண்டும்? 

இதும் உலகம் பொய் என்று மிகப் பெரிய பொய்யைகூறிய ஆது சங்கரரை ஜகத்குரு  என்று புகழ்வது போன்ற வொன்று.

சைவத்தின் ஏரணவியலை அகண்ட அறிவியலை ஓரளவு அறிந்த எனக்கு இப்படிப்பட்ட அடைகளில் உடன்பாடே இல்லை.

உலகன்



சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2015, 9:45:36 AM1/25/15
to vallamai
////கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

வழிபடுகிறவன் காட்டுமிராண்டி
பரப்புகிறவன் அயோக்கியன் ////

ஐந்தாம் வகுப்புக்கூட தாண்டாத, பிரபஞ்ச / உயிரினத் தோற்றதைப் பற்றி ஓரளவு விளக்காத, அரைகுறை ஞானமுள்ள ஓர் அறிவாளிதான் இப்படிக் கூறுவான். இதுதான் பகுத்தறிவா ?

சி. ஜெயபாரதன்



--

Nagarajan Vadivel

unread,
Jan 25, 2015, 9:55:51 AM1/25/15
to vallamai
மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுவதும் பகுத்தறிவுதான்.  அவர் வாழ்ந்த காலத்தில் கிராமப்பள்ளியில் படிப்பே ஏழு ஆண்டுகள் தான்.  வானியல் மருத்துவம் என்று உயர்ஞானம் பெற விழைபவர்கள் ஒரு குருவை அண்டிக் கல்வி கேள்வி ஞானம் பெற்றுக்கொள்வதே அக்கால வழக்கம்.  ஞானத்தில் எங்கே அரைஞானம் இருக்கிறதோ யாமறியோம் பராபரமே

எலியோன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2015, 10:00:11 AM1/25/15
to vallamai
கடவுளை நம்புவன் முட்டாள் என்றால், கடவுளை நம்பாதவனும் முட்டாள்தான்.

சி,. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2015, 10:09:27 AM1/25/15
to vallamai
​காரண விளைவு நியதிப்படி [Cause & Effect Theory] எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது என்று நம்புவது மூட நம்பிக்கையா ?  

சி. ஜெயபாரதன்
2015-01-25 9:55 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jan 25, 2015, 10:10:59 AM1/25/15
to vallamai
இது கடவுளை மறுப்பவன் கடவுளை நம்புவன் ஆகிய இருவருக்குமிடையே உள்ள கருத்து முரண்பாடு

எம்மதமும் சம்மதம் என்று எம்மதம் உண்டு.  மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்பவர்கள்.  ஒருவன் நம்புகிறான் அதை இன்னொருவன் மறுக்கிறான்.  இரண்டுமே நம்பிக்கையின் அடிப்படையில் அறிதல் மூலம் தோன்றும் கருத்துரு.கடவுளை நம்புபவன் முட்டாள் என்றால் கடவுளை நம்பாதவனும் முட்டாள் என்பதை எப்படி நிறுவுவது

எலியோன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2015, 10:19:48 AM1/25/15
to vallamai
கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கைதான் !  கடவுள் உள்ளது என்பதும் ஒரு நம்பிக்கைதான். இரண்டையும் நிரூபிக்க முடியாது.   

இவற்றில் எது மூட நம்பிக்கை ?

கடவுள் இல்லை என்பவன் அறிவாளி என்றால், கடவுள் உள்ளது என்பவனும் அறிவாளிதான். 

சி. ஜெயபாரதன்.

Nagarajan Vadivel

unread,
Jan 25, 2015, 10:21:56 AM1/25/15
to vallamai
2015-01-25 20:38 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த கடவுள்
​ - காரணம்
​படைத்தல் விளைவு
என்ற நியதியில் இரண்டுக்கும் இடையே உள்ள உறவை எந்தத் தரவு அல்லது ஏரணம் மூலம் நிறுவ இயலும்.cause and effect theory யை எப்படி நிறுவ  முடியும்.  அறிவியல் இந்த இரண்டைத் தவிர மற்ற செயலிகளைக் கட்டுப்படுத்தியே நிறுவ முடியும் என்று வலியுறுத்தும் நிலையில் 

அறிவியல் என்பது நம்புவதைப் பொய்த்து புதிய நம்பிக்கையை உருவாக்கும் செயல்.  கடவுளை நம்புபவன் அதற்கு எதிமறையான தரவுகளையும் ஏரணத்தையும் ஏற்றுக்கொள்ளாத நிலைப்பட்டுடையவன்.  அவன் அவனுடைய நம்பிக்கையிலிருந்து எதிர்மறையான தரவுகள் காட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளாதவன்.  கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்று முழுதும் நம்புபவன் கடவுளைக் கைவிடமாட்டான்.  அவன் மனம் திற நிலையில் இருப்பதல்ல. கடவுள் நம்பிக்கை உள்ளவனை அந்தப்பாதையிலிருந்து திருப்புவது எளிதான காரியமல்ல​
 
​அறியற்கு அப்பாற்பட்ட உலகப் படைப்பைச் செய்தவன் இறைவன் என்று அறிவுப்பூர்வமாக எப்படி நிறுவுவது?​
​எலியோன்​


Nagarajan Vadivel

unread,
Jan 25, 2015, 10:25:15 AM1/25/15
to vallamai
என் காத்த்துட்டுக் கருத்து யாதெனில் இரண்டுமே நம்பிக்கை அடிப்படையில் அமைந்தது.  அவரவர் கோணத்தில் அவரவர் கருத்தை ஏற்பது அவர்கள் உரிமை.  மாற்றுக்கருத்தைச் சொல்லலாம் ஆனால் தான் சொன்ன கருத்து சரி மற்றவன் கருத்து தவறு என்று வாதிட அறிவியலிலும் மெய்யியலிலும் இடம் இல்லை

எலியோன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2015, 10:38:42 AM1/25/15
to vallamai
கூற்றுக்கு எதிர்க் கூற்று வேண்டாம் என்று யாரிங்கு வாதிடுகிறார் ?  

சி. ஜெயபாரதன். 

Innamburan S.Soundararajan

unread,
Jan 25, 2015, 10:39:30 AM1/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com
உங்களைப்போன்றோருக்கு மட்டுமே திரு.வி.கவின் பார்வையில் பெரியாரைப்
பார்க்கமுடியும்.

~ I see your point, எலியோனாரே. பெரியார் அடிக்கடி சாது
அச்சுக்கூடத்திற்கு வருவார். அன்புடன் முரண்டு பிடிப்பார்.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2015, 10:50:09 AM1/25/15
to vallamai
This is Cause & Effect Theory :  The whole scientific pursuit is based on Cause & Effect Principle.  If there is a running Clock or Watch, it is not an accidental product.  There is a really Watchmaker who created it & started it.  Nothing is created from vacuum.  Nature is nothing but God's process.

There is A Relationship between the Watch & Watchmaker.

Science and metaphysics are interlinked.

S. Jayabarathan


சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2015, 11:17:39 AM1/25/15
to vallamai
ஒருநாள் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் வரும் வேடிக்கையை நாம் காணலாம்.

சி. ஜெயபாரதன்

Nagarajan Vadivel

unread,
Jan 25, 2015, 11:20:56 AM1/25/15
to vallamai
ஐயா ஏன் இந்தக் கொலைவெறி
ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் பல ஆண்டுகள் பெரியார் குன்றக்குடி அடிகளார் என்ற தோற்றத்தில் தமிழ்நாட்டில் வலம் வந்ததே.  குன்றக்குடி அடிகளாரும் பெரியாரும் ஒத்துப்போனதுபோல் மற்ற ஆன்மீகவாதிகளால் நாத்திகர்களுடன் ஒத்துப்போக இயலாமைக்கு என்ன காரணம்?

எலியோன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2015, 3:27:35 PM1/25/15
to vallamai
பெரிய வார்த்தைகளைப் போடுகிறீர்கள் !
இதுதான் இப்போது ஃபிரீ ஸ்பீச் [Free Speech] என்று போற்றப் படுகிறது.  தேவதூதர் முகமதைக் கேலிச் சித்திரம் வரைந்து இகழ்வது ஃபிரீ ஸ்பீச்சாம் !!!

தந்தை பெரியார் பல இந்துக்களைப் பல்லாண்டு காலம் இகழ்ந்து காயப் படுத்தியுள்ளார்.  ​

நாத்திகவாதிகள் ஆத்திகருடன் ஒத்துப் போவாரா ?

சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும்
பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காலம் ?

இப்படிப் பாடியவர் ஒரு நாத்திகர்

Action and reaction are equal and opposite.

சி. ஜெயபாரதன்.

K. Loganathan

unread,
Jan 25, 2015, 7:09:55 PM1/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com
Dear Dr Jeyabarathan

Yes Science and Metaphysics are interlinked. But it is the greatness of Meykandar and scholars like him to work out a comcept of science that included also Metaphysics as part of it. This is what I call AkaNda ARiviyal or Hermeneutic Sciences whereby we also see that the Western Science such as those analysed by Popper and many others is KaNditha ARiviyal, a kind of science that is positive and which remains BLIND towards acknowledging the truths of the anmas and BEING(God) the intelligent creatures.

The Fundamental Ontology of the Western Sciences see only the Paasam but not the Pati and Pasu.

Loga

தேமொழி

unread,
Jan 26, 2015, 1:16:14 AM1/26/15
to vall...@googlegroups.com
///
Action and reaction are equal and opposite.
///

இப்படி விளக்கினால்தான் எனக்குத் தெளிவாகப் புரிகிறது இது போன்ற விவாதங்களில் ...

ஒரு சாராருக்கு இருக்கும் கருத்து மற்றும் செயல் சுதந்திரம் அடுத்தவருக்கும் இல்லையா என்ன?

பெரியாருக்கும் செருப்பு மாலை போடலாம்...போடும்படி சொல்லலாம்...  பதிலுக்கு பதில்...tit for tat

கடவுளை நம்பாதவன் முட்டாள் என்பதுடன்  ஏன் நிறுத்த வேண்டும்...மற்ற வரிகளையும்  பதிலுக்குப் பதில் மாற்றிவிடுவோம்...

ஒருவரது நம்பிக்கை பழிக்கப்பட்டால் அடுத்தவரும் அதை எதிர் கொள்ள வேண்டும் என்பதே சரியான நீதி. 

கடவுளை நம்பாதவன் முட்டாள்
வழிபடாதவன்  காட்டுமிராண்டி
தூற்றுகிறவன் அயோக்கியன்

Let everyone  exercise their rights...

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 26, 2015, 1:44:50 AM1/26/15
to vallamai

2015-01-26 0:16 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
கடவுளை நம்பாதவன் முட்டாள்
வழிபடாதவன்  காட்டுமிராண்டி
தூற்றுகிறவன் அயோக்கியன்

Let everyone  exercise their rights.



 "An eye for an eye makes the whole world blind" என்றார் காந்தி.

கடவுளை நம்புவதால், மறுப்பதால் ஒருவர் புத்திசாலியோ, முட்டாளோ ஆவதில்லை.

சென்றதலைமுறை செய்த தவறுகள் சென்ற தலைமுறையுடன் நின்றுவிடுவதே நல்லது. அது மனுவாக இருப்பினும் சரி, பெரியாராக இருப்பினும் சரி.

பெரியாரைப்பொறுத்தவரை அவர் கடவுளை நிந்தித்திருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்துவிட்டே மறைந்தார். அதனால் அவர் செய்த பிழைக்ளை சுட்டிகாட்டும் அதே சமயம் அவரது சமூகபங்களிப்பையும் மறுக்காமல் இருக்க முடியாது.

வைக்கத்தில் கோயிலில் ஈழவர்கள் நுழையவேண்டும் எனும் போராட்டத்தில் அவரது பங்கு இருந்தது. கடவுள் இருந்தால் அதற்காகவே அவருக்கு சுவர்க்கத்தில் இடம் கொடுத்திருப்பார்.



--

செல்வன்

unread,
Jan 26, 2015, 1:45:39 AM1/26/15
to vallamai

2015-01-26 0:44 GMT-06:00 செல்வன் <hol...@gmail.com>:
தனால் அவர் செய்த பிழைக்ளை சுட்டிகாட்டும் அதே சமயம் அவரது சமூகபங்களிப்பையும் மறுக்காமல் இருக்க முடியாது.

மறுக்க முடியாது என இருக்கவேண்டும்


--

தேமொழி

unread,
Jan 26, 2015, 2:11:45 AM1/26/15
to vall...@googlegroups.com
///
பெரியாரைப்பொறுத்தவரை அவர் கடவுளை நிந்தித்திருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்துவிட்டே மறைந்தார்
///


அவர் நிந்தித்த காரணமே கடவுளின் பெயர் சொல்லி மக்கள் சிலரின் உரிமைகளை மறுத்தவர்களின் பிடியிலிருந்து மக்களை(இதில் பெண்களும் அடங்குவர்) விடுவிக்க வேண்டும் என்பதால்தான். அதனால் அவர்கள் குறிப்பிட்ட கடவுளைப் பற்றியே கேள்வி எழுப்பினார் ...இதுதான் அவரது போராட்டத்தின் அடிப்படை.  இதைப் புரிந்து கொள்வதில் யாருக்கும் சிரமம் இருக்கவே வாய்ப்பில்லை.  இது போன்ற தாக்குதலில் ஆட்டம் கண்ட ஆதிக்க இனம் தங்கள்  முக்கியத்துவம், அதிகாரம் குறைவதைக் கண்டு துடிப்பதுதான் பெரியாரை எதிர்க்கும் அடிப்படை நோக்கம்.

அக்கால போராட்டத்தின் அடிப்படையே தெரியாதவர்களும் இது புரியாது. பெரியாரின் போராட்டத்தினால் பலனடைந்துவிட்டவர்களும் அவரது செயலை மறுப்பதும் மறைப்பதும் வேடிக்கை.

அவர் ஏன் நிந்தித்தார்?

அதனால் அவர் பலனடைந்தாரா?

உண்மையில் பலனடைந்தவர் யார் யார்?

பாதிக்கப்பட்டவர் யார் யார் ?

அவர் பெயர் சொல்லி பிற்காலத்தில் பிழைப்பவர்கள் உண்மையில் அவர் வழி வந்தவர்களா?

போன்ற கேள்விகளுக்கு உண்மையை மறைக்காமல் நடுநிலையுடன் பதிலளித்தால் விடை கிடைக்கும்....ஆனாலும் அதை ஒத்துக்கொள்ள மனமிருக்காது.  உண்மையில் லோகா ஐயா இந்தக் கேள்விகளுடன் பெரியாரை அணுகுவது அவரது ஆராய்சிக் கோணத்திற்கு வலு சேர்க்கும். 

ஒருவர் கடவுளை மறுத்தார் என்றவுடன் "வில்லன்" என்று வகைப்படுத்தி திட்டத் துவங்கும் முன்னர்........

ஏன் செய்தார் என்று ஆராய்வதே சரியான விடையைக் கொடுக்கும். 

அதன் பின்னர் வேண்டுமானால் அவர் போராட்டம் நடத்தியதில் பிழை...பிழையில்லை.  போன்றவற்றை அந்தக் காலக்கட்டத்தில் சென்று புரிந்து கொள்ள முயலலாம்.

ஆனால் சொர்க்கம் போக வேண்டும் என்ற ஈடுபாட்டில் அவர் மக்களுக்கு... பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை செய்ய நினைக்கவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

..... தேமொழி

துரை.ந.உ

unread,
Jan 26, 2015, 2:27:37 AM1/26/15
to வல்லமை, mint...@googlegroups.com
Inline image 1இந்த இழையைக் கடக்கும் பொழுது ...இந்தப் படம் நினைவில் ஆடுவதைத் தவிர்க்க முடியவில்லை :((((
(kfc - ஒரு உருவகம் மட்டுமே )

செல்வன்

unread,
Jan 26, 2015, 3:39:31 AM1/26/15
to vallamai

2015-01-26 1:11 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒருவர் கடவுளை மறுத்தார் என்றவுடன் "வில்லன்" என்று வகைப்படுத்தி திட்டத் துவங்கும் முன்னர்........

ஏன் செய்தார் என்று ஆராய்வதே சரியான விடையைக் கொடுக்கும். 

அதன் பின்னர் வேண்டுமானால் அவர் போராட்டம் நடத்தியதில் பிழை...பிழையில்லை.  போன்றவற்றை அந்தக் காலக்கட்டத்தில் சென்று புரிந்து கொள்ள முயலலாம்.


ஏன் செய்தார் என ஆராய்ந்தால் ஸ்லிப்பரி ஸ்லோப்புக்கு சென்றுவிடுவோம்.

புஷ் ஏன் இராக் மேல் படை எடுத்தார் என ஆராய்வது மூக்கியமா இல்லை அப்படையெடுப்பால் விளைந்த விளைவுகள் என்ன என ஆராய்வது முக்கியமா?

புஷ் நல்லெண்ணத்தில் கூட படை எடுத்து இருக்கலாம்..ஆனால் "Road to hell is paved with good intentions" என்பது முதுமொழி.

ஒருவர் ஏன் செய்தார் என்பதைவிட என்ன செய்தார், எப்படிசெய்தார், அச்செயலால் சமூகத்தில் என்ன விளைவுகள் உண்டாகின என ஆராய்வதே முக்கியம்.

--

தேமொழி

unread,
Jan 26, 2015, 1:23:22 PM1/26/15
to vall...@googlegroups.com

On Monday, January 26, 2015 at 12:39:31 AM UTC-8, K Selvan wrote:

2015-01-26 1:11 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒருவர் கடவுளை மறுத்தார் என்றவுடன் "வில்லன்" என்று வகைப்படுத்தி திட்டத் துவங்கும் முன்னர்........

ஏன் செய்தார் என்று ஆராய்வதே சரியான விடையைக் கொடுக்கும். 

அதன் பின்னர் வேண்டுமானால் அவர் போராட்டம் நடத்தியதில் பிழை...பிழையில்லை.  போன்றவற்றை அந்தக் காலக்கட்டத்தில் சென்று புரிந்து கொள்ள முயலலாம்.


ஏன் செய்தார் என ஆராய்ந்தால் ஸ்லிப்பரி ஸ்லோப்புக்கு சென்றுவிடுவோம்.

நடுநிலையான பற்றற்ற ஆய்வில்  ஸ்லிப்பரி ஸ்லோப் என்ற விடை கிடையாது.  நிகழ்வைப் பற்றிய முடிவு மட்டும்தான் தெரியும் ...அது  உறுதியான முடிவு  அல்லது பெரும்பாலும் இப்படி இருக்க வாய்ப்புள்ளது என்ற முடிவுகள்.

காலம் பல கடந்து தொடர்புகள் அறுந்துவிட்டிருந்தால் உறுதியாக கூறுவது இயலாமல் போகலாம்.  நாம் வாழும்போதே உயிரோடு இருந்தவரைப் பற்றிய ஆய்வு என்னும் பொழுது காலம் கடந்துவிடவில்லை.  நிகழ்வுகளுக்கு சாட்சியான மக்கள் பலர் இன்னமும் வாழ்கிறார்கள்.

எந்த முடிவாக இருந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பாங்கு மட்டும்தான் தேவை. 
 

புஷ் ஏன் இராக் மேல் படை எடுத்தார் என ஆராய்வது மூக்கியமா இல்லை அப்படையெடுப்பால் விளைந்த விளைவுகள் என்ன என ஆராய்வது முக்கியமா?

புஷ் நல்லெண்ணத்தில் கூட படை எடுத்து இருக்கலாம்..ஆனால் "Road to hell is paved with good intentions" என்பது முதுமொழி.

இதுதான் நன்கு தெரியுமே... அவரேதான் காரணமும் சொன்னாரே!!! கடவுள் புஷ்ஷை  படை எடுக்கச் சொன்னாராம் :))) 

தேமொழி

unread,
Jan 26, 2015, 1:24:21 PM1/26/15
to vall...@googlegroups.com
ref: http://www.theguardian.com/world/2005/oct/07/iraq.usa

George Bush: 'God told me to end the tyranny in Iraq'

President told Palestinians God also talked to him about Middle East peace
George Bush believes he is on a mission from God, according to the politician Nabil Shaath. Photograph: Charles Dharapak/AP
 George Bush believes he is on a mission from God, according to the politician Nabil Shaath. Photograph: Charles Dharapak/AP
George Bush has claimed he was on a mission from God when he launched the invasions of Afghanistan and Iraq, according to a senior Palestinian politician in an interview to be broadcast by the BBC later this month.

Mr Bush revealed the extent of his religious fervour when he met a Palestinian delegation during the Israeli-Palestinian summit at the Egpytian resort of Sharm el-Sheikh, four months after the US-led invasion of Iraq in 2003.





செல்வன்

unread,
Jan 26, 2015, 3:05:14 PM1/26/15
to vallamai
2015-01-26 12:23 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நடுநிலையான பற்றற்ற ஆய்வில்  ஸ்லிப்பரி ஸ்லோப் என்ற விடை கிடையாது.  
 
நிகழ்வைப் பற்றிய முடிவு மட்டும்தான் தெரியும் ...அது  உறுதியான முடிவு  அல்லது பெரும்பாலும் இப்படி இருக்க வாய்ப்புள்ளது என்ற முடிவுகள்.

காலம் பல கடந்து தொடர்புகள் அறுந்துவிட்டிருந்தால் உறுதியாக கூறுவது இயலாமல் போகலாம்.
 
 நாம் வாழும்போதே உயிரோடு இருந்தவரைப் பற்றிய ஆய்வு என்னும் பொழுது காலம் கடந்துவிடவில்லை.  
 
நிகழ்வுகளுக்கு சாட்சியான மக்கள் பலர் இன்னமும் வாழ்கிறார்கள்.

எந்த முடிவாக இருந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பாங்கு மட்டும்தான் தேவை. 



உலகில் தவறான நோக்கத்துக்கு தொடங்கப்பட்ட ஒரே ஒரு தீவிரவாத இயக்கத்தைக்கூட யாரும் காணமுடியாது.

நக்சல்களை கேட்டால் ஏழைகளுக்கு நல்லதுசெய்யத்தான் இயக்கம் துவக்கினேன் என்பார்கள்.

நேதாஜி இந்திய விடுதலைக்கு ஹிட்லருடன் கூட்டு வைத்தார்

லெனின் சர்வாதிகாரத்துக்கு எதிராக தான் கம்யூனிஸ்டு கட்சியைத்துவக்கிநடத்தினார்.

ஆபிரகாம் லிங்கன் அடிமைமுறைக்கு எதிராக ரிபப்ளிக்கன் கட்சியைத்துவக்கி நடத்தினார்

அல்கொய்தா இயக்கம் அரேபியாவில் இருந்து அமெரிக்க ஆதிக்கம் அழியவேண்டும் எனும் நோக்கில் துவக்கபட்டது

பிரபாகரன் ஈழதமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புலிகள் இயக்கத்தைத்துவக்கினார்

ஆக இத்தகைய இயக்கங்கள் எல்லாமே நல்லநோக்கில் தான் துவங்குகின்றன. உலகைக்கெடுக்கவேண்டும், அழிக்கவேண்டும் எனும் நோக்கில் இவை துவக்கப்படவில்லை. இவற்றை துவக்கியவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் எல்லாரும் இன்னமும் அவ்வியக்கத்தின் "வழிமுறை தவறாக இருப்பினும் நோக்கம் நல்லது" என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மையும் கூட.

ஆனால் நோக்கம் என்னவாக இருப்பினும் இந்த இயக்கங்கள் எல்லாமே "நோக்கை அடைய இவை என்ன வழியைக்கடைப்பிடித்தன, சமூகத்தில் இவை என்ன மாற்றத்தை உருவாக்கின" என்பதை வைத்தே அளவிடப்படுகின்றன. எம்ஜிஆர் என்ன நோக்கில் அதிமுகவைத்துவக்கினார் என்பதைப்பற்றி இன்று யாருக்கும் அக்கறை கிடையாது. அவர் சத்துணவுத்திட்டம் கொண்டுவந்தாரா, கல்வியை மேம்படுத்தினாரா, மக்களை நன்றாக வைத்திருந்தாரா? ரைட்டு..அவ்ளோதான் மேட்டர். அவர் பதவி ஆசையில் கட்சியை துவக்கியிருந்தால் யாருக்கு என்ன கவலை, அல்லது மக்கள் சேவை நோக்கில் துவக்கியிருந்தால் யாருக்கு என்ன கவலை?

ஒரு கம்பனியில் வேலை செய்கிறீறேன் என வைத்துக்கொள்வோம். முதலாளி பணத்தில் ஒரு கோடியை எடுத்து பெருமாள் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு "உங்களுக்கு வைகுந்தம் கிடைக்கத்தான் அப்படி செய்தேன்" என சொல்லி முதலாளிக்கு பெருமாள் கோயில் பிரசாதத்தைக்கொடுத்தால் அவர் என் நல்லநோக்கத்தை புரிந்துகொண்டு என்னை பாராட்டி பதவி உயர்வு கொடுப்பாரா அல்லது நான் கையாண்ட வழிமுறைக்காக என்னை பிடித்து முட்டிக்கு முட்டி தட்டுவாரா?

 




--

தேமொழி

unread,
Jan 26, 2015, 3:32:20 PM1/26/15
to vall...@googlegroups.com
அவர் நிந்தித்ததன் அடிப்படைக் காரணத்தை .... நோக்கத்தை மட்டும் தவிர்ப்பதேன் செல்வன்?

அதை எதிர் கொள்ளலாமே.

"கடவுள் பெயரால்" அனைவரையும் சமமாக நடத்தியிருந்தால் அவருக்கு வேலையே இருந்திருக்காதே. 

மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று சொல்வதை அவர் நடைமுறையில் காண்பித்தார்...

அதிலும் தனக்கு புண்ணியம் வரும் என்பது போன்ற தன்னல எண்ணத்தில் அவர் எதையும் செய்யவில்லை. 

அனைத்தையும் திட்டு வாங்கிக் கொண்டே தெரிந்தே செய்தார், எதிர்த்தார்.

///
ஒரு கம்பனியில் வேலை செய்கிறீறேன் என வைத்துக்கொள்வோம். முதலாளி பணத்தில் ஒரு கோடியை எடுத்து பெருமாள் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு "உங்களுக்கு வைகுந்தம் கிடைக்கத்தான் அப்படி செய்தேன்" என சொல்லி முதலாளிக்கு பெருமாள் கோயில் பிரசாதத்தைக்கொடுத்தால் அவர் என் நல்லநோக்கத்தை புரிந்துகொண்டு என்னை பாராட்டி பதவி உயர்வு கொடுப்பாரா அல்லது நான் கையாண்ட வழிமுறைக்காக என்னை பிடித்து முட்டிக்கு முட்டி தட்டுவாரா?
///

கேள்வி: அவர் தான் நடத்திய போராட்டத்தில்  யாரையும் கொள்ளை அடித்து கொலை செய்தாரா? ஊரை அடித்து உலையில் போட்டாரா?



///
உலகில் தவறான நோக்கத்துக்கு தொடங்கப்பட்ட ஒரே ஒரு தீவிரவாத இயக்கத்தைக்கூட யாரும் காணமுடியாது.
////

கேள்வி: இங்கு  மதத் தீவிரவாதிகள் பக்கம் அவர் செயலை திசை திருப்புவது ஏன்  பெருயார்  கருத்து திணிப்பு கூட செய்யவில்லை.

அவரைப் பொறுத்தவரை சகட்டு மேனிக்கு மக்களின் "நம்பிக்கைகளைப்" பற்றி கேள்விகள் எழுப்பிக் கொண்டே போனார் ... 




எல்லாவறையும் விட தன்னை ஒத்த மனிதர்களை கேவலப்படுத்தியவர்களைவிட அவர் செயல் கேவலமானதா?

அவர் செய்தது மோசமான செயல் என்றால் பிற ஆன்மிகவாதிகள் ஏன் அவர் நண்பர்களாக இருந்தனர்?

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 26, 2015, 5:49:19 PM1/26/15
to vallamai

2015-01-26 14:32 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அவர் நிந்தித்ததன் அடிப்படைக் காரணத்தை .... நோக்கத்தை மட்டும் தவிர்ப்பதேன் செல்வன்?

அதை எதிர் கொள்ளலாமே.

"கடவுள் பெயரால்" அனைவரையும் சமமாக நடத்தியிருந்தால் அவருக்கு வேலையே இருந்திருக்காதே. 


ஒருவருடைய நோக்கம் என்னன்னு அவரைத்தவிர யாருக்கும் தெரியாது. மோடியைக்கேட்டால் அவரும் "இந்தியாவின் நலனுக்காக தான் அரசியலில் இருக்கிறேன். எனக்கென்ன பிள்ளையா, குட்டியா?" என்பார். புரட்சித்தலைவி அம்மா, கருணாநிதி, வைகோ, மாவோ, போல்பாட், ஹிட்லர், லிங்கன், காந்தி எல்லாருமே "என் நோக்கம் நல்லது" எனத்தான் சொல்வார்கள். 

உலகில் நிறைய பிரச்சனைகள் இன்றும் உள்ளன. புதுப்புது இயக்கங்கள், புத்துப்புது கோரிக்கைகளுடன் களத்தில் தினமும் குதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நோக்கத்தை வைத்து அளவிட்டால் எல்லா இயக்கமும் அக்மார்க தரமுத்திரையுள்ள இயக்கமே.


கேள்வி: அவர் தான் நடத்திய போராட்டத்தில்  யாரையும் கொள்ளை அடித்து கொலை செய்தாரா? ஊரை அடித்து உலையில் போட்டாரா?

அவர் செய்தார் என நான் எங்கேயும் சொல்லவில்லையே?


எல்லாவறையும் விட தன்னை ஒத்த மனிதர்களை கேவலப்படுத்தியவர்களைவிட அவர் செயல் கேவலமானதா?

அவர் செய்தது மோசமான செயல் என்றால் பிற ஆன்மிகவாதிகள் ஏன் அவர் நண்பர்களாக இருந்தனர்?


ஸ்ட்ராமேன் ஆர்க்யுமெண்ட் :-)

அவர் செய்தது கேவலமானது, மோசமானது என இழையில் யாரும் சொல்லாத ஆர்க்யுமெண்ட்டுக்கு எதிராக நீங்களே வாதாடி வருகிறீர்கள் :-)

உலகன் அய்யா இழையில் சொன்னது "பெரியாருக்கு நல்லபடி ஆன்மிகத்தில் பயிற்சி இருந்திருந்தால் அவர் இப்படி நாத்திகவாதம் பேசாமல் சைவத்தின்பால் திரும்பி அதன்மூலம் இன்னமும் அதிகமாக நல்லது செய்திருக்கலாம்" என்பதே

அதுவே தான் என் கருத்தும். அவருக்கு மூலநூல்களில் பயிற்சி இல்லை, இந்து வேதங்களில் தீன்டாமை இல்லை என்பது காந்திக்கு தெரிந்திருந்தது, பெரியாருக்கு தெரியவில்லை என்பதே. அவர் நாத்திகத்துக்கு பதில் ஆன்மிகவழியில் மக்களை அணுகியிருந்தால் இன்னமும் எவ்வளவோ நல்ல மாற்றங்கள் நாட்டில் நிகழ்ந்திருக்கும். திருக்குறள், சிலப்பதிகாரத்தை எல்லாம் தூக்கி எறியச்சொன்னார். தொல்காப்பியனை ஆரியனின் கைக்கூலி என்றார். வள்ளுவரை வசைபாடினார். இந்த நூல்களை எல்லாம் படித்துப்புரிந்துகொள்ளும் திறன் இருந்திருந்தால் அப்படிச்சொல்லியிருக்க மாட்டார். குறளின் மூலமே தமிழ்நாட்டில் நிலவிய மூடப்பழக்கங்கள் பலதை எதிர்த்திருக்கலாம். அவ்வைப்பாட்டியின் "சாதி இரன்டொழிய வேறில்லை" மாதிரி பாடங்களை தமிழருக்கு எடுத்துச்சொலியிருக்கலாம். "பட்டாங்கில் உள்ளபடி.." என அவ்வைபபட்டியே அத்தனை தெளிவாக எடுத்துச்சொல்கிறாள். பெரியார் அதை எல்லாம் எங்கே காதில் போட்டுக்கொண்டார்? அவ்வையை முருகபக்தை எனும் அளவுகோலைத்தாண்டி அவரால் பார்த்திருக்க முடியாது.

இதுதான் இழையின் மையக்கருத்தே ஒழிய பெரியார் மோசமானவர், குற்றமிழைத்தவர் என எல்லாம் இழையில் யாரும் கூறவில்லை

--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 26, 2015, 6:34:21 PM1/26/15
to vallamai
தந்தை பெரியார் செய்த இமாலயத் தவறு : தமிழக ஒருமைப்பாட்டை நிரந்தரமாய்க் கெடுத்த  ஆரிய - திராவிடப் பகை & பிரிவு.

சி. ஜெயபாரதன்


--

தேமொழி

unread,
Jan 26, 2015, 7:39:10 PM1/26/15
to vall...@googlegroups.com


On Monday, January 26, 2015 at 2:49:19 PM UTC-8, K Selvan wrote:

2015-01-26 14:32 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அவர் நிந்தித்ததன் அடிப்படைக் காரணத்தை .... நோக்கத்தை மட்டும் தவிர்ப்பதேன் செல்வன்?

அதை எதிர் கொள்ளலாமே.

"கடவுள் பெயரால்" அனைவரையும் சமமாக நடத்தியிருந்தால் அவருக்கு வேலையே இருந்திருக்காதே. 


ஒருவருடைய நோக்கம் என்னன்னு அவரைத்தவிர யாருக்கும் தெரியாது. மோடியைக்கேட்டால் அவரும் "இந்தியாவின் நலனுக்காக தான் அரசியலில் இருக்கிறேன். எனக்கென்ன பிள்ளையா, குட்டியா?" என்பார். புரட்சித்தலைவி அம்மா, கருணாநிதி, வைகோ, மாவோ, போல்பாட், ஹிட்லர், லிங்கன், காந்தி எல்லாருமே "என் நோக்கம் நல்லது" எனத்தான் சொல்வார்கள். 

உலகில் நிறைய பிரச்சனைகள் இன்றும் உள்ளன. புதுப்புது இயக்கங்கள், புத்துப்புது கோரிக்கைகளுடன் களத்தில் தினமும் குதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நோக்கத்தை வைத்து அளவிட்டால் எல்லா இயக்கமும் அக்மார்க தரமுத்திரையுள்ள இயக்கமே.

எந்த இயக்கமும் எப்படியும் போராட்டம் நடத்தட்டும் ... அது நமக்குத் தேவையில்லை...நாம் இழையின் மையக் கருத்துடன் மட்டும் நிற்போம்...

இழையின் தலைப்பில் பெரியார் செய்தது ஆன்மிகப் பெருந்தவறு என்று சொல்லப்பட்டதற்கு, அவர் ஏன் ஆன்மிகத்தை எதிர்ப்பதைக் கையிலெடுத்தார் என்பது மட்டுமே விவாதத்தில் இருக்கிறது. 

ஏன் எடுத்தார்?
 


கேள்வி: அவர் தான் நடத்திய போராட்டத்தில்  யாரையும் கொள்ளை அடித்து கொலை செய்தாரா? ஊரை அடித்து உலையில் போட்டாரா?

அவர் செய்தார் என நான் எங்கேயும் சொல்லவில்லையே?

that is implied ....
///
ஒரு கம்பனியில் வேலை செய்கிறீறேன் என வைத்துக்கொள்வோம். முதலாளி பணத்தில் ஒரு கோடியை எடுத்து பெருமாள் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு "உங்களுக்கு வைகுந்தம் கிடைக்கத்தான் அப்படி செய்தேன்" என சொல்லி முதலாளிக்கு பெருமாள் கோயில் பிரசாதத்தைக்கொடுத்தால் அவர் என் நல்லநோக்கத்தை புரிந்துகொண்டு என்னை பாராட்டி பதவி உயர்வு கொடுப்பாரா அல்லது நான் கையாண்ட வழிமுறைக்காக என்னை பிடித்து முட்டிக்கு முட்டி தட்டுவாரா?
///

முதலாளியைக் கொள்ளையடிக்கும் விளக்கம் பின் இங்கு எதற்கு? அது ஏன் இங்கு வருகிறது?  அதனால்தான் அவர் யாரையும் கொள்ளையடித்தாரா என்று கேட்டேன்.
 


எல்லாவறையும் விட தன்னை ஒத்த மனிதர்களை கேவலப்படுத்தியவர்களைவிட அவர் செயல் கேவலமானதா?

அவர் செய்தது மோசமான செயல் என்றால் பிற ஆன்மிகவாதிகள் ஏன் அவர் நண்பர்களாக இருந்தனர்?


ஸ்ட்ராமேன் ஆர்க்யுமெண்ட் :-)

அவர் செய்தது கேவலமானது, மோசமானது என இழையில் யாரும் சொல்லாத ஆர்க்யுமெண்ட்டுக்கு எதிராக நீங்களே வாதாடி வருகிறீர்கள் :-)

இப்பொழுது தலைப்பைப் படிக்கச் சொல்ல வேண்டியது என் முறை போல  இருக்கிறது :))

இன்னமும் சற்று விளக்கமாக....

பெரியார் ஆன்மினக்தை எதிர்த்தது பெருந்தவறு என்று சொன்னால் ஆன்மிகவாதிகள் சிலர் ஏன் பெரியாருடன் நட்பு பாராட்டினார்கள்.

அந்த ஆன்மிகவாதி நண்பர்களைப் பொறுத்தவரை அது ஒரு பொருட்டில்லையோ ...தவறாகத் தெரியவில்லையோ ... 

 


உலகன் அய்யா இழையில் சொன்னது "பெரியாருக்கு நல்லபடி ஆன்மிகத்தில் பயிற்சி இருந்திருந்தால் அவர் இப்படி நாத்திகவாதம் பேசாமல் சைவத்தின்பால் திரும்பி அதன்மூலம் இன்னமும் அதிகமாக நல்லது செய்திருக்கலாம்" என்பதே

அதுவே தான் என் கருத்தும். அவருக்கு மூலநூல்களில் பயிற்சி இல்லை, இந்து வேதங்களில் தீன்டாமை இல்லை என்பது காந்திக்கு தெரிந்திருந்தது, பெரியாருக்கு தெரியவில்லை என்பதே. அவர் நாத்திகத்துக்கு பதில் ஆன்மிகவழியில் மக்களை அணுகியிருந்தால் இன்னமும் எவ்வளவோ நல்ல மாற்றங்கள் நாட்டில் நிகழ்ந்திருக்கும். திருக்குறள், சிலப்பதிகாரத்தை எல்லாம் தூக்கி எறியச்சொன்னார். தொல்காப்பியனை ஆரியனின் கைக்கூலி என்றார். வள்ளுவரை வசைபாடினார். இந்த நூல்களை எல்லாம் படித்துப்புரிந்துகொள்ளும் திறன் இருந்திருந்தால் அப்படிச்சொல்லியிருக்க மாட்டார். குறளின் மூலமே தமிழ்நாட்டில் நிலவிய மூடப்பழக்கங்கள் பலதை எதிர்த்திருக்கலாம். அவ்வைப்பாட்டியின் "சாதி இரன்டொழிய வேறில்லை" மாதிரி பாடங்களை தமிழருக்கு எடுத்துச்சொலியிருக்கலாம். "பட்டாங்கில் உள்ளபடி.." என அவ்வைபபட்டியே அத்தனை தெளிவாக எடுத்துச்சொல்கிறாள். பெரியார் அதை எல்லாம் எங்கே காதில் போட்டுக்கொண்டார்? அவ்வையை முருகபக்தை எனும் அளவுகோலைத்தாண்டி அவரால் பார்த்திருக்க முடியாது.

சிரிக்கவைக்காதீர்கள்  செல்வன்,  அவருக்குத்தான் பாவம் படித்துப் புரிந்து கொள்ளும் திறன் அறவே இல்லை... என்ன செய்வது....விட்டு  விடுவோம்..

பெரியாருக்கு  முன்னும் பின்னும் படித்துப் புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர்கள் யாருமே தோன்றவில்லையா?  அவர்கள் அதைச் செய்து வேண்டிய மாறுதல்களைக் கொண்டுவர குறுக்கே நின்றது/நிற்பது யார்?

இன்றும் சாதி இரண்டு என்று யாரும் சொல்லக் காணோமே!!!!

பெரியாரைப்  போல ஆன்மிகப் பெருந்தவறு செய்யாமல் எல்லோரும் இந்த நூல்களை எல்லாம் படித்து அனைவரையும் வழி நடத்தியிருக்கலாமே...



அவரது சமகாலத்தவர் பாரதி  கூடத்தான் சக்தி சக்தி என்று புலம்பிக் கொண்டே பெரியார் சொன்ன அதே கருத்துக்களைச் சொன்னார்...

அவர் கூடவா மக்களை சிந்திக்கவிடாமல் செய்தார் 



பெரியார் ஆன்மிகத்திற்கு எதிராக வழி காட்டி குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்பது ஆதாரமற்ற வாதம்.  பெரியார் தாக்கம் இல்லாத பிற இடங்களுடன் கொஞ்சம் ஒப்பிட்டு சொல்லவும் என்றால் காணாமல் போய்விடுகிறார்கள் இவ்வாறு குற்றப்பத்திரிக்கை படிப்பவர்கள். 

அவர் சிந்திக்க விடாததால்தான் மக்கள் மோசம் போனார்கள் என்று சொல்வதுதான் இந்த இழையின் நோக்கம் ...மையக்கருத்து....எல்லாமே 



அட... அதைத்தானே அந்தப் பெரியாரும் மக்களிடம் குற்றம் சாட்டினார் ...அடுத்தவங்க சொன்னா ஏன்..எதற்கு என்று யோசிக்கவே மாட்டீங்களோ ...தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு நான் ஒரு ஈனப் பிறவி என்று பிறர் சொல்வதை ஒத்துக் கொள்வீர்களா என்றுதான் அவர் கேட்டார்.  


யார் உண்மையில்  இங்கு மக்களை சிந்திக்கவிடாமல் செய்கிறார்கள்?

தேமொழி

unread,
Jan 26, 2015, 7:59:22 PM1/26/15
to vall...@googlegroups.com
///
தந்தை பெரியார் செய்த இமாலயத் தவறு : தமிழக ஒருமைப்பாட்டை நிரந்தரமாய்க் கெடுத்த  ஆரிய - திராவிடப் பகை & பிரிவு.
///


[1]

ஆமாம் ஜெயபாரதன் ஐயா, பெரியார்  வந்துதான் ஆரிய திராவிடப் பகை ....

அதற்கு முன்னர் பகை என்பது கிடையவே கிடையாது ....

எல்லாம் அடக்குமுறைதான் ...உரிமை மறுப்புதான்....

தோப்புக்கரணம் என்றால்...இந்தா எண்ணிக்கோ என்ற கதியில் இயங்க வேண்டும்...

ஜேசுதாசும்  கார் காரஜில் உட்கார்ந்துதான் பாட்டு கற்றுக் கொண்டதாகக் கேள்விப்பட்டுள்ளேன் ...அது சென்ற நூற்றாண்டுதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பாவம் எதிர்ப்பெல்லாம் மக்களுக்கு எங்கே தெரிந்தது...எதிர்த்தால்தானே பகை வளரும். 

இப்பொழுது பகை வளர்ந்து என்றால் எதிர்ப்பினால்தான்.

[2]

பிரிவு/சாதி சண்டை என்றால் யாருக்குமே தெரியாது என்பது...கொஞ்சம் உதைக்கிறது 

பிரிவு  இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்....அதை தமிழகத்தில் பிறந்த அனைவருமே அறிவர்...இங்கு விளக்குவது கால விரயம்.

(பேராசிரியரிடம் கேட்டால் இன்னமும் குலோத்துங்கன் காலம் துவங்கி வலங்கை இடங்கை  சாதிச் சண்டை என்றெல்லாம் கூட  சொல்வார்)



...... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Jan 26, 2015, 9:00:58 PM1/26/15
to vallamai
திராவிடக் கழகம் பிளந்து முன்னேற்றப் / பின்னேற்றக் கழகங்களாய்ச் சின்னா பின்னம் ஆனதற்கு முதல் காரணம் : தந்தை பெரியார்; இரண்டாம் காரணம் : மு. கருணாநிதி.

சி. ஜெயபாரதன். 

தேமொழி

unread,
Jan 26, 2015, 10:41:04 PM1/26/15
to vall...@googlegroups.com
நான் அப்படி படித்ததில்லை ஐயா.

என்ற எண்ணம் தொண்டர்களுக்குத் தோன்றத் துவங்கியது...அவர்களது ஆட்சி அமைக்கும், நாடாளும்  ஆசைகள் மறைமுகக் காரணம் என்று கேள்வி.

வெறும் போராடும் இயக்கமாக இருக்க விரும்பாத கொள்கை வேறுபாடு, எனவே வாய்ப்பு உருவானதும் பிய்த்துக் கொண்டோடி விட்டார்கள். 



ஆனால் இப்படி எல்லோர் வாயிலும் ஒரு கழகம் விழுந்து எழும்படி கேவலமான நிலைமைக்கு  வழி கோலியது கருணாநிதியின் பேராசையே.

இன்றுவரை தலைமைப் பொறுப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். 

ஆட்சிக்காலத்திலும், அதன் பிறகும் இவர் செய்த அடாவடி  நடவடிக்கைகளே  தாய்க்கழகத்திற்கு கரும்புள்ளியாகப் போனது என்பது என் கருத்து. 

எனக்கு நினைவு தெரிந்து நான் கேட்ட முதல் அரசியல் எதிர் கட்சிப் பிரச்சாரமே "பிள்ளை நடிப்பது பிள்ளையோ பிள்ளை, அப்பன் அடிப்பது கொள்ளையோ கொள்ளை" என்பது.

எல்லோரும் பேச்சாகப் பேசியது திருச்சி கிளைவ் ஹாஸ்டல் விவகாரம்.

பிறகு அறிவியல் முறை ஊழல் ...சர்க்காரியா கமிஷன் இன்ன பிற. 

"கழகம் நல்ல கழகம், நம் திராவிட முன்நேற்றக் கழகம், அதன் திருப்பணி என்றென்றும் தொடரும் " என்ற கட்சிப் பாடலில் "திருப்பணி" என்பதைக் கலாட்டா செய்து விழுந்து விழுந்து சிரித்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது.

நிற்க...

கட்சிகள் உடைவதன் காரணமே கட்சிக்குள் ஒவ்வொருவருக்கும் பதவிக் கனவு தோன்றும் பொழுதுதானே.

மக்களுக்காக உழைக்க என்று அரசியல்வாதிகள் சொன்னால் சின்னப் பாப்பா கூட இக்காலத்தில் நம்பாது. 


தறுதலைப் பிள்ளைகள் இருந்தால் ...எனக்கும் இன்னாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அவர்கள் நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது ...என்று  சட்டப்படி அறிக்கை வெளியிடும் நிலைமை சில பெற்றோர்களுக்கு  வரும்.  குடும்ப மானத்தை வாங்கவே வந்து பிறந்து தொலைத்திருப்பார்கள். 

பெரியாரும் அப்படி கழகப் போலிகளை நம்பாதீர்  என்றோ... எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை என்றோ அறிவிதிருந்திருக்கலாம் என்று நான் பலமுறை எண்ணியதுண்டு.:)

..... தேமொழி 

Innamburan S.Soundararajan

unread,
Jan 27, 2015, 1:02:13 AM1/27/15
to vall...@googlegroups.com

இந்த வினாவுக்குக் கிடைத்த சில விடைகள்.

1. ஈ வே ரா அவர்களின் படைப்புக்களை நாட்டுடமையாக்குவதற்கு கி.வீ. மறுத்து கோடிக்கணக்காக சொத்து சேர்த்தின் பின்னணி இந்த வினாவே.

2. சன்டீவியின் ஜன்மஸ்தானம் இந்த வினாவே.

3. ஸ்பைஸ் ஜெட்டின் ஜன்மஸ்தானமும், இறுதி நிலையும் , இந்த வினாவே.

4. அண்ணா அவர்களின் வம்சம் சொத்து சேகரிக்காதது, அவர்களின் அணுகுமுறையும், மற்றவர்கள் தமக்கு பயன்படுத்திய இந்த வினாவே.

5. கலைஞராத்து 'பேத்துமாத்து' என்ற அவரது குடும்பத்தாராலேயே  விரவி பேசப்படும் நிலைக்கும் காரணம், இந்த வினாவே.

6. அதிமுக சிக்கல்களுக்கும் காரணம் இந்த வினாவே. 

7. மற்றும் பல தாழ்வுகளுக்கு பின்னணி, இந்த வினாவே.

காமராசர் அன்று 'எல்லாம் ஒரே குட்டையில் அழுகிய மட்டை' என்றார்.

செல்வன்

unread,
Jan 27, 2015, 1:25:08 AM1/27/15
to vallamai

2015-01-26 18:39 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இழையின் தலைப்பில் பெரியார் செய்தது ஆன்மிகப் பெருந்தவறு என்று சொல்லப்பட்டதற்கு, அவர் ஏன் ஆன்மிகத்தை எதிர்ப்பதைக் கையிலெடுத்தார் என்பது மட்டுமே விவாதத்தில் இருக்கிறது. 

ஏன் எடுத்தார்?

ஆன்மிகத்தைப்பற்றி தெரியாததால் அதை எதிர்த்தார். அவருக்கு ஆன்மிகத்தை சரியாக எடுத்துரைக்க யாருமில்லை. பள்ளியில் படிக்கவில்லை, வீட்டில் அம்மா, அப்பா பேச்சை கேட்கவுமில்லை. தவறான நண்பர்களின் பழக்கம். வீட்டை விட்டு ஓடும் அளவும் அவரது இளமைப்பருவம் அமைந்திருந்தது. இதில் அவருக்கு ஆன்மிக, குறள், சிலப்பதிகாரம் முதலான நூல்களின் பரிச்சயம் இல்லாமல் போய்விட்டது. சமூக நடைமுறையைப்பார்த்து அதற்கு காரணம் இந்த நூல்களே என தவறான எண்ணி எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்



பெரியாருக்கு  முன்னும் பின்னும் படித்துப் புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர்கள் யாருமே தோன்றவில்லையா?  அவர்கள் அதைச் செய்து வேண்டிய மாறுதல்களைக் கொண்டுவர குறுக்கே நின்றது/நிற்பது யார்?

இன்றும் சாதி இரண்டு என்று யாரும் சொல்லக் காணோமே!!!!

பெரியாரைப்  போல ஆன்மிகப் பெருந்தவறு செய்யாமல் எல்லோரும் இந்த நூல்களை எல்லாம் படித்து அனைவரையும் வழி நடத்தியிருக்கலாமே...



நடத்திக்கொண்டுதான் வந்தார்கள், வருகிறார்கள். விவேகானந்தர், ராமானுஜர், காந்தி, நாராயணகுரு, அய்யாவழி நாராயணர், பாரதியார் முதல் இன்றைய அமிர்தானந்தமயி வரை இருக்கிறார்கள். 

அட... அதைத்தானே அந்தப் பெரியாரும் மக்களிடம் குற்றம் சாட்டினார் ...அடுத்தவங்க சொன்னா ஏன்..எதற்கு என்று யோசிக்கவே மாட்டீங்களோ ...தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு நான் ஒரு ஈனப் பிறவி என்று பிறர் சொல்வதை ஒத்துக் கொள்வீர்களா என்றுதான் அவர் கேட்டார்.  


அது எல்லாம் மணியம்மை திருமனத்துக்கு முன் சொன்னது. அதன்பின் அவரை அண்னாதுரையும், கருணாநிதியும் எதிர்த்துப்பிரிந்துபோனபின் "பெருமாள் சோற்றைதின்றுவிட்டு பெருமாளுக்கே துரோகம் செய்யும் பயல்கள்" என அவர்களை திட்டிதீர்த்துவிட்டு "எனக்கு முட்டாள்கள் மட்டும் போதும்.ஏன் என கேட்காமல் நான் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் தொண்டர்க்ள் தான் வேணும்" என மீட்டிங்கில் பேசினார். முந்தி "நான் சொல்வதை நீங்கள் ஒத்துகொள்ளவேண்டாம்" என சொன்னதுக்கு கைதட்டிய அதே மக்கள் கூட்டம் இதுக்கும் கைதட்டியது. மேடை ஏறி எதைப்பேசினாலும் கைதட்டி ரசிக்கும் வழக்கம் திராவிட இயக்கங்களாலேயே இங்கே உருவாகி இருந்தது. அவர்கள் தான் அடுக்குமொழி, அலங்காரபேச்சு, மிகைஉணர்ச்சிகள், நாடகபாணி அரசியல் என அனைத்தையும் அரசியல்மேடைக்கு கொண்டுவந்தார்கள்.

அதனால் மக்களை சிந்திக்க விடாமல் செய்ததுக்கு யார் காரனம் என நீங்கள் அவர்க்ளைப்பார்த்துத்தான் கேட்கவேண்டும்
--

செல்வன்

unread,
Jan 27, 2015, 1:37:21 AM1/27/15
to vallamai

2015-01-26 18:59 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆமாம் ஜெயபாரதன் ஐயா, பெரியார்  வந்துதான் ஆரிய திராவிடப் பகை ....

அதற்கு முன்னர் பகை என்பது கிடையவே கிடையாது ....

எல்லாம் அடக்குமுறைதான் ...உரிமை மறுப்புதான்....


இன்றும் அதுதான் நிலை.

உண்மையில் தலித்துகளை யார் ஒடுக்கிவந்தார்களோ, அந்த ஆதிக்கசாதிகளின் அரசியல் ஆதிக்கத்தை அதிகபடுத்தியதே பெரியாரின் பங்கு. அவர் ஆயுளில் தலித்துகளுக்காக பார்ப்பனரல்லாத சாதிகளை எதிர்த்து ஒரே ஒரு போராட்டம் கூட நடத்தியது கிடையாது. அவர் இடைநிலை சாதிகளின் தலைவர். அன்று தலித்துகள், நாடார்கள் என ஒடுக்கப்ட்ட மக்கள் காந்தியின் காங்கிரஸ் பக்கமே நின்றார்கள். அவர்களை திராவிட இயக்கங்களின் பக்கம் கொண்டுவர எம்ஜிஆரின் திரையுலக கவர்ச்சி தான் பின்னாளில் உதவியதே ஒழிய பெரியாரால் அவர்கள் கழகங்களுக்கு ஓட்டுப்போடவில்லை

உண்மையான விடுதலை தேடிய தலித்மக்களுக்கு அவரது பங்களிப்பு இல்லாமல் போனது மிகுந்த துரதிர்ச்டவசமானது. அன்றைய சூழலில் அவர்களுக்குத்தான் அதன் உதவி அவசியமாக இருந்தது


--

தேமொழி

unread,
Jan 27, 2015, 2:32:24 AM1/27/15
to vall...@googlegroups.com

இதே கருத்தை  வேறு வடிவில் வடிவமைத்த பொழுது நீங்கள் கொடுத்த பதில்.....

காந்தி, பெரியார் இருவரும் இருந்த காலத்தோடு ஒப்பீட்டால் இன்று மிகப்பெரும் அளவில் சமூகமாற்றம் நிகழ்ந்துள்ளது.

சமூகமாற்றத்தை இவர்கள் விரைவுப்படுத்தினார்கள். இவர்கள் இல்லையெனில் அது மிக, மிக மெதுவாக நிகழ்ந்திருக்கும். ஆனால் அதை யாராலும் தடுத்திருக்க முடியாது.



.... அதுவரைதான் ஒரு நூறாண்டு கூட வாழ முடியாத மனித வாழ்க்கையில் சாதிக்க முடிந்திருக்கிறது இவர்களால் ...எந்த வகைப் பாதையைத் தேர்ந்தெடுத்து இவர்கள் போராடினாலும்....இருவருக்கும் அதே முடிவுதான்.  

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் புரையோடிப் போயிருக்கும் நிலைமையை  சீரமைக்கவில்லை என்று  பெரியாரையோ அல்லது காந்தியையோ குற்றம் சாட்ட முடியாது. அவர்கள் செய்யவில்லை  செய்யவில்லை என்று குறை கூறவும்  முடியாது. 

அவர்கள் வாழ்க்கையில் அவர்களால் முடிந்ததை செய்துவிட்டுப் போனார்கள்...சொல்லிவிட்டுப்  போனார்கள் ...சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த கட்டு சோறும் எத்தனை நாளைக்கு வரும்?



///
திராவிட இயக்கங்களின் பக்கம் கொண்டுவர எம்ஜிஆரின் திரையுலக கவர்ச்சி தான் பின்னாளில் உதவியதே ஒழிய பெரியாரால் அவர்கள் கழகங்களுக்கு ஓட்டுப்போடவில்லை
///

நன்றி ...அப்பட்டமாக பெரியாரால்  மக்களை மனம் மாறச் செய்ய முடியவில்லை...சிந்திக்கச் செய்ய முடிவில்லை.... அவர் பேசியதெல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது...மக்கள்  பிற கழக கட்சிகளின் பின்னால் ஓடியது கலையுலக மயக்கத்தால் என்று சுட்டிக் காட்டியதற்கு  நன்றி. 

இங்கேயே இழையில் பெரியாரின் மீது வைத்த ஆன்மிகப் பெருந்தவறும் அதன் தீய விளைவுகளும்  குற்றச்சாட்டு மண்ணைக் கவ்வி விட்டது.  

ஒன்றையுமே மாற்ற இயலாதவர் மீது ஏன் வீண் பழி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்..  அவர் நாத்திக வாதம் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காகவா என்று வாதத்தில் ஈடுபடுபவர்களும் மறுபரிசீலை செய்யலாம்.


அப்படியே .... 

///
விவேகானந்தர், ராமானுஜர், காந்தி, நாராயணகுரு, அய்யாவழி நாராயணர், பாரதியார் முதல் இன்றைய அமிர்தானந்தமயி வரை இருக்கிறார்கள். 
///

1.
என இத்தனை பெரியோர்கள்  முயற்சி செய்தும் மக்களை மாற்ற முடியாத பொழுது....இத்தனை ஆன்மிகவாதிகள் வழிகாட்டியும் மக்கள் உருப்படாத பொழுது ... அவர்களை குறை சொல்லத் தோன்றுவதில்லை...

2.
பெரியாரை மட்டுமே சுட்டிக் காட்டி இத்தனைக்கும் அவர் பொறுப்பு என்று சொல்லும்பொழுது ஏன் அவர் தேவையின்றி அவர் உரைகள் மக்களை மாற்றும் சக்தி வாய்ந்தது என்பது போன்ற கோணத்தை எடுக்கிறோம் என்று யோசிப்பதும் நல்லது...

the common denominator is ....nothing but his atheist approach. 


..... தேமொழி 

செல்வன்

unread,
Jan 27, 2015, 2:49:59 AM1/27/15
to vallamai

2015-01-27 1:32 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெரியாரை மட்டுமே சுட்டிக் காட்டி இத்தனைக்கும் அவர் பொறுப்பு என்று சொல்லும்பொழுது ஏன் அவர் தேவையின்றி அவர் உரைகள் மக்களை மாற்றும் சக்தி வாய்ந்தது என்பது போன்ற கோணத்தை எடுக்கிறோம் என்று யோசிப்பதும் நல்லது...

the common denominator is ....nothing but his atheist approach. 

இழையில் சொல்லபட்டது ஈவேராவால் ஜாதியை ஒழிக்க முடியவில்லை என்ற குற்றசாட்டு அல்ல.

அவர் தவறான ஆன்மிகத்தைப்புரிந்துகொண்டார் என்பதுதான் உலகன் அய்யாவின் கூற்று. அதனால் தான் இதை ஆன்மிகப்பெருந்தவறு என உலகன் அய்யா அழைத்தார்.

அவர் நாத்திகராக இருந்தது பிரச்சனை கிடையாது. வேந்தன் அரசு கூடத்தான் நாத்திகர். ஆனால் வள்ளூவம் என் சமயம் என கூறுகிறார். வள்ளூவனை ஆரியகைக்கூலி என எல்லாம் அவர் அழைக்கவில்லை. கருணாநிதி நாத்திகராகவும், பெரியாரின் தொண்டராகவும் இருந்தாலும் அவரும் வள்ளூவரையும், தொல்காப்பியரையும் பெரியாரின் தட்டையான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இவர்கள் மூலநூல்களைப்படித்து புரிந்துகொண்டார்கள். பெரியாரால் அதைச்செய்ய இயலவில்லை. இதைத்தான் "ஆன்மிகபெருந்தவறு" என உலகன் ஐயா கூறுகிறார்



--

தேமொழி

unread,
Jan 27, 2015, 2:53:17 AM1/27/15
to vall...@googlegroups.com


On Monday, January 26, 2015 at 10:25:08 PM UTC-8, K Selvan wrote:

2015-01-26 18:39 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இழையின் தலைப்பில் பெரியார் செய்தது ஆன்மிகப் பெருந்தவறு என்று சொல்லப்பட்டதற்கு, அவர் ஏன் ஆன்மிகத்தை எதிர்ப்பதைக் கையிலெடுத்தார் என்பது மட்டுமே விவாதத்தில் இருக்கிறது. 

ஏன் எடுத்தார்?

ஆன்மிகத்தைப்பற்றி தெரியாததால் அதை எதிர்த்தார்.

ஆன்மிகவாதிகளின் பொய்யும் புரட்டும் தன்னலமும் அவருக்கு  ஆன்மிக உலகின் உண்மை நிலையை மறுபக்கத்தை உணர்த்தியது.  அவர் வளர்ந்தது பெரிய ஆன்மிக குடும்பம் என்று பெரியாரைப் பற்றி அறிந்த அனைவரும் அறிந்ததுதான். கோயிலின் நிர்வாகம் முதற்கொண்டு பொறுபேற்றுக் கொண்டவர் அவர். 

அத்துடன் நாத்திகம் என்பது பெரியார் மட்டும் காப்புரிமை  வைத்திருக்கும் எண்ணம்/கொள்கை/செயல்பாடு கிடையாது ..அவ்வாறு நினைப்பவர் எவரும்  இந்திய வரலாறோ உலக வரலாறோ அறியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும் 

புத்தமதம் என்றோ தொடங்கிவிட்டது இவர் எடுத்த நடவடிக்கைகளை. 

இதற்கு கீழ் வரும் ஆன்மிக வாதிகள் செவிடர்கள் காதில் ஊதிய சங்கு போன்ற வழிகாட்டல்களும்....

பெரியாரை பொருட்படுத்தாது கலையுலக மயக்கத்தில் இன்றுவரை ஆழ்ந்துள்ள மக்களைப் பற்றியும் மற்றொரு மடலில் வந்துவிட்டதால் இங்கு தவிர்த்து விடுகிறேன்.

அவரால் தமிழகம் குட்டிச்சுவர் என்போருக்கு மற்றொரு கட்டுரை தனியே.  இந்தியா முழுவதும் உள்ள நிலை 

10 Most Allegedly Corrupt Indian Politicians



 




இதுவும் அனைவரும் அறிந்ததே ....லல்லு, கல்மாடி...மாயாவதி... சரத்பவார்..எட்டியூரப்பா ...இன்னமும் சிலர்...இவர்கள் கழக வழி வந்தவர்களா?

இவர்கள் இருக்கும் இடத்தில் உள்ள மக்கள் சிந்திக்கிறார்களா இல்லையா ... இல்லை அவர்கள் மூளையையும் கழக கண்மணிகள் வசம் அடகு வைத்துவிட்டார்களா?

தேமொழி

unread,
Jan 27, 2015, 3:10:45 AM1/27/15
to vall...@googlegroups.com


On Monday, January 26, 2015 at 11:49:59 PM UTC-8, K Selvan wrote:

2015-01-27 1:32 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெரியாரை மட்டுமே சுட்டிக் காட்டி இத்தனைக்கும் அவர் பொறுப்பு என்று சொல்லும்பொழுது ஏன் அவர் தேவையின்றி அவர் உரைகள் மக்களை மாற்றும் சக்தி வாய்ந்தது என்பது போன்ற கோணத்தை எடுக்கிறோம் என்று யோசிப்பதும் நல்லது...

the common denominator is ....nothing but his atheist approach. 

இழையில் சொல்லபட்டது ஈவேராவால் ஜாதியை ஒழிக்க முடியவில்லை என்ற குற்றசாட்டு அல்ல.

அது நீங்கள் வருத்தப்பட்டதற்கு கொடுத்த பதில் 

///
உண்மையான விடுதலை தேடிய தலித்மக்களுக்கு அவரது பங்களிப்பு இல்லாமல் போனது மிகுந்த துரதிர்ச்டவசமானது. அன்றைய சூழலில் அவர்களுக்குத்தான் அதன் உதவி அவசியமாக இருந்தது
///

என்று சொல்லியிருந்தீர்கள் ...
 

அவர் தவறான ஆன்மிகத்தைப்புரிந்துகொண்டார் என்பதுதான் உலகன் அய்யாவின் கூற்று. அதனால் தான் இதை ஆன்மிகப்பெருந்தவறு என உலகன் அய்யா அழைத்தார்.


அது வீரபாண்டியன் அவர்களின் கட்டுரை


அவர் நாத்திகராக இருந்தது பிரச்சனை கிடையாது. வேந்தன் அரசு கூடத்தான் நாத்திகர். ஆனால் வள்ளூவம் என் சமயம் என கூறுகிறார். வள்ளூவனை ஆரியகைக்கூலி என எல்லாம் அவர் அழைக்கவில்லை. கருணாநிதி நாத்திகராகவும், பெரியாரின் தொண்டராகவும் இருந்தாலும் அவரும் வள்ளூவரையும், தொல்காப்பியரையும் பெரியாரின் தட்டையான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இவர்கள் மூலநூல்களைப்படித்து புரிந்துகொண்டார்கள். பெரியாரால் அதைச்செய்ய இயலவில்லை. இதைத்தான் "ஆன்மிகபெருந்தவறு" என உலகன் ஐயா கூறுகிறார்

பெரியாருக்கு தமிழலக்கியத்தில் ஏன் ஆர்வமில்லை என்பதுவா நம் கவலை, 

அவர் பக்தி  இலக்கியங்களைக் குறி வைத்தார் என்பதும...அது அவரது போராட்ட உத்தி என்பதையும்தானே விலாவாரியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆன்மிகப் பெருந்தவறு செய்யாதவர்களும், ஆன்மிகப் பெருந்தவறு செய்தாகக் கருதப் பட்டவர்களும் செய்த சாதனைகள்தான் ஒன்றாக இருக்கிறதே. 

பிறகு ஏன் ஒருவரை மட்டும் தனியே வெளியே இழுத்து குற்றம் சாட்டப்படுகிறது  ...witch hunting செய்யும் நோக்கத்தின் அடிப்படையை மற்பரிசீலனை செய்யக் கேட்டுக் கொண்டேன். 

..... தேமொழி


செல்வன்

unread,
Jan 27, 2015, 3:38:09 AM1/27/15
to vallamai

2015-01-27 1:53 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆன்மிகவாதிகளின் பொய்யும் புரட்டும் தன்னலமும் அவருக்கு  ஆன்மிக உலகின் உண்மை நிலையை மறுபக்கத்தை உணர்த்தியது.  அவர் வளர்ந்தது பெரிய ஆன்மிக குடும்பம் என்று பெரியாரைப் பற்றி அறிந்த அனைவரும் அறிந்ததுதான். கோயிலின் நிர்வாகம் முதற்கொண்டு பொறுபேற்றுக் கொண்டவர் அவர். 

இதைத்தான் ஆன்மிகபெருந்தவறு என்பது

ஆன்மிகத்தை அறிய ஆன்மிகபுத்தகங்களைபடிக்கணுமே ஒழிய ஆன்மிகவாதிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதைபார்த்தால் ஏமாற்ரமே மிஞ்சும். 2ஜி, டெலிபோன் ஊழல், சர்க்காரியா கமிஷனை பார்த்து "திராவிட இயக்கம் சரியில்லை" என முடிவெடுத்தால் அது எப்படி இருக்கும்? திராவிட இயக்கம் பற்றி அறிய பெரியார் நூல்களை படிக்கவேண்டும் அல்லவா? படிக்காமல் முடிவெடுப்பது தவறுதானே?



--

செல்வன்

unread,
Jan 27, 2015, 3:45:37 AM1/27/15
to vallamai

2015-01-27 2:10 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெரியாருக்கு தமிழலக்கியத்தில் ஏன் ஆர்வமில்லை என்பதுவா நம் கவலை, 

அவர் பக்தி  இலக்கியங்களைக் குறி வைத்தார் என்பதும...அது அவரது போராட்ட உத்தி என்பதையும்தானே விலாவாரியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆன்மிகப் பெருந்தவறு செய்யாதவர்களும், ஆன்மிகப் பெருந்தவறு செய்தாகக் கருதப் பட்டவர்களும் செய்த சாதனைகள்தான் ஒன்றாக இருக்கிறதே. 

பிறகு ஏன் ஒருவரை மட்டும் தனியே வெளியே இழுத்து குற்றம் சாட்டப்படுகிறது  ...witch hunting செய்யும் நோக்கத்தின் அடிப்படையை மற்பரிசீலனை செய்யக் கேட்டுக் கொண்டேன். 



எல்லாரும் தான் இணையத்தில் விமர்சிக்கபடுகிறார்கள் :-) பெரியாரே காந்திபடத்தை தெருவில் போட்டு கொளுத்தினார். ஒரு தலைவரைப்பற்றி விவாதிப்பது விட்ச் ஹண்டிங் என கூறுவது நல்ல நகைச்சுவை தான்..


--

தேமொழி

unread,
Jan 27, 2015, 5:03:23 AM1/27/15
to vall...@googlegroups.com
///
இதைத்தான் ஆன்மிகபெருந்தவறு என்பது
////

///
ஒரு தலைவரைப்பற்றி விவாதிப்பது விட்ச் ஹண்டிங் என கூறுவது நல்ல நகைச்சுவை தான்..
////


ஆன்மிகம் வேண்டுமா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம்...ஆன்மிகப் பெருந்தவறு பற்றிய விளக்கம் தேவையில்லை....அதன் தாக்கம் என்று கூறப்பட்ட  கருத்துக்களுக்குதான்  விளக்கம் வேண்டினேன். 

எப்படி பெரியார் அடுத்தவர் நம்புவதை முட்டாள்தனம் என்று விமர்சித்தாரோ அது போல அவரது கோணத்தை விமர்சிக்கவும் உங்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் சுதந்திரம் உண்டு.   

காந்திப்படத்தை எரிக்கிறார்களோ அல்லது பிள்ளையார் சிலையை உடைக்கிறார்களோ அல்லது பெரியாருக்குத்தான் செருப்பு மாலை போடுகிறார்களோ அது அவரவர் விருப்பம் ...அதைப்பற்றி எனக்கு அக்கறையும்  இல்லை.

ஆனால்  நான் கேட்டதற்கு பதில்  சொல்வது தொடர்ந்து தவிர்க்கப்படுகிறது.... இரண்டாவது மடலிலேயே கேட்டதுதான் ....

இழையின் மையக்கருத்து பற்றி நான் எழுப்பிய கேள்வி இன்னமும் அப்படியே அந்தரத்தில் ... பெரியாரைக் குறி வைத்து, அவர் தயவால், அவருடைய ஆன்மிக அறியாமையால் தமிழகம் குட்டிசுவரானது என்ற வாதத்தை சொல்லுபவர்கள்  

1.  பெரியாரால் அந்த அளவுக்கு தாக்கம் இருந்தது என்பதை  நம்புகிறார்களா ?   அப்படியானால் ஏன் இப்பொழுது இவ்வளவு ஆன்மிக நடவடிக்கைகள் அதிகரித்தது?  எனக்கு அவரது முயற்சிகள் பலன் தரவில்லை என்பதுதான் புரிதல்...

2.  இதே அளவுகோலை எப்படி அவரைப் பற்றியே அறியாத பிற இந்திய மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு உங்கள் நிலையை உறுதிப் படுத்துவீர்கள்....தமிழகத்தைவிட பெரியாரைத் தெரியாத பிற இடங்கள் உட்டோப்பியாவாக இருந்திருக்க வேண்டுமா இல்லையா? என்னைப் பொறுத்தவரை தொடர்பில்லாத இடத்து அரசியல், சமூக நிகழ்வுகளுக்கும் தமிழக சூழ் நிலைக்கும் வேறுபாடு தெரியவில்லை.

ஒப்பிட்டு பதில் சொல்லுமாறு கேட்கிறேன்... பதிலில்லை ....இவ்வாறு மக்களின் பொதுப்பண்புகளை உளவியல் துறை லோகா ஐயாவும் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் சொல்லிவிட்டேன்.  

எதற்கெடுத்தாலும் பெரியாரைக்  கைகாட்டி விட்டால் சமூகப் பிரச்சனைகள் யாவும்  தீர்ந்துவிடுமா?

ஏன் அவர் ஒரு ஈசி டார்கெட்டா?

பெரியாரைப் பற்றிய விமர்சனம் இதற்கு பதிலளிக்காது.   ஆன்மிகவாதிகளின் முயற்சிகளையும் கணக்கில் கொள்ளுங்கள் ...ஒற்றை  ஆளைத் தாக்கிவிட்டால் விடை எளிதாகிவிடுமா? (இதைத்தான் விட்ச் ஹண்டிங்  என்றேன்..)

எந்தக் கேள்வியைக் கேட்டாலும் .... 0 வை எந்த எண்ணுடன்  பெருக்கினாலும் வரும் விடை 0  என்பது போல ...எதற்கெடுத்தாலும் பெரியார் பக்கமா கையைக் காண்பிப்பது.  

அவருடைய impact என்று சொன்னால் ஒப்பிட்டு சரியான விளக்கம் தேவை...


..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2015, 5:23:25 AM1/27/15
to vallamai
​தலைப்பு நடுநிலைமையுடன் அமையவில்லை.  ஆன்மீகம் பற்றிய தவறில்லாத சையான புரிதல் எது என்பதில் இந்து சமயத்தின் உட்பிரிவுகளிடையே ஒரு ஒத்த கருத்து என்றுமே இருந்ததில்லை.சமயத்தின் பார்வையில்குமுகம் என்றோ குமுகத்தின் பார்வையில் சமயம் என்றோ எந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும் தமிழ்க் குமுக அமைப்பு பழங்குடிகள் அமைப்பு என்ற நிலையின் கிராம தெய்வங்களாகப்பெண்களை வழங்கி பெண்வழி மரபில் வாழ்ந்த காலத்தின் பிரிவுகளில் ஏற்ற தாழ்வு என்ற வேறுபடுத்தும் பார்வை இருந்ததில்லை.  பிற்காலத்தில் தமிழகத்தில் புதிதாகத் தோன்றிய சமயங்கள் சாதிகளை வருணாசிரம அடிப்படையில் பிரித்து ஏற்ற தாழ்வை உருவாக்கி சிலர் உயர்நிலை அடையவும் பலர் விளிம்புநிலை மக்களாய் வாழவும் சனாதன் தர்மத்தைக் குறுகிய நோக்குடன் பயன்படுத்தி குமுகப்பிரிவுகளில் பெரும்பாலோரைத் தாழ்த்தப்பட்டவர்களாக அழுத்திவைத்தனர்

இந்த வேறுபாடு களையப்பட வேண்டும் பொதுவழிபாட்டில் சாதியின் அடிப்படையில் சிலர் வழிபாட்டுக்கு ஏற்ற தூய்மை இல்லாதவர்கள் என்று கண்டறியப்பட்டு குமுகத்தின் கடைக்கோடியில் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கும் நிலையை சுதந்திர இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று அவர் காங்கிரசில் இருந்தபோது அதாவது 1922 ஆம் ஆண்டுவரை வலியுறுத்த் போராடி தோற்றுப்போனார்.  பிராமணர்களுக்கு ஸ்வராஜ்யக் கட்சியும் பிராமணர் அல்லாத உயர் ஜாத்த்தியினருக்கு நீதிக் கட்சியும் என்று இருபிரிவாகப் பிரிந்து ஆங்கில் ஆட்சியில் கிடைத்த பயன்களைப் பங்கிட்டுக்கொண்டனர்.

கீழ் சாதிக்கு உரிமை வேண்டும் என்று போராடிய பெரியார் கட்சி விரோத நடவடிக்கைக்காகக் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார்.நீதிக்கட்சியிலும் வெளியில் இருந்துகொண்டே பிராமணர் அல்லாதவர்கள் கீழ் சாதியினருக்கு சமூகச் சமத்துவ உரிமையை வழங்கவேண்டும் என்று நினைவூட்டிக்கொண்டிருந்தார்.   சனாதன தர்மம் தமிழ்நாட்டில் தோன்றிய கருத்துருவல்ல அது வெளியிலிருந்து கொணரப்பட்டு ஏற்கனவே இருந்த ஏற்ற தாழ்வில்லாத சாதிப்பிரிவுவுகளை நால்வகை வர்ணத்துள் அடக்கி அதற்குச் சமயச் சாயத்தைப் பூசி இறைவன்முன் அனைவரும் சம அல்ல என்று மூளைச் சலவை செய்ததையும்,  தமிழ்நாட்டுக் கோவில்களில் இறைவணக்கம் தாய் மொழியில் இல்லாமல் தேவ பாஷை என்ற வட மொழியில் இருக்கவேண்டும் என்ற திணிப்பையும் உருவாக்கியதால் தமிழ்நாட்டின் பெரும்பகுதியினர் அரசியல் சமூக பொருளாதார ஏற்ற தாழ்வுகளில் சிக்கித் தவிப்பதை எதிர்த்ததே பெரியாரின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தொடர்ந்த சமூக சீர்திருத்த சுயமரியாதை சார்ந்த பகுத்தறிவை ஊட்டும் பணி

இந்த அடிப்படையில்பார்த்தால் ஆன்மீகப் பெருந்தவறு தமிழ்நாட்டில் நிலவக் காரணமாக இருந்தவர்கள் இந்து சமயத்தைச் சார்ந்த ஆன்மீகவாதிகளே.  பெரியார் அந்த ஆன்மீகத் தவறைத்தான் தட்டிக் கேட்டார் அவர் காங்கிரஸ்காரரோ, நீதிக்கட்சிக்காரரோ சுயமரியாதைக்காரரோ திராவிடக்கட்சிக்காரரோ நாத்திகரோ எந்ய நிலையிலும் ஆன்மீகப் பெருந்தவறை எதிர்ப்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது

எலியோன்

--

K. Loganathan

unread,
Jan 27, 2015, 5:58:26 AM1/27/15
to vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, mint...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com
பேராசிரியர் அவர்களே

மிக்க நன்று. கீழ் வரும் தங்களது கூற்று நான் உடன்படுவது

//சனாதன தர்மம் தமிழ்நாட்டில் தோன்றிய கருத்துருவல்ல அது வெளியிலிருந்து கொணரப்பட்டு ஏற்கனவே இருந்த ஏற்ற தாழ்வில்லாத சாதிப்பிரிவுவுகளை நால்வகை வர்ணத்துள் அடக்கி அதற்குச் சமயச் சாயத்தைப் பூசி இறைவன்முன் அனைவரும் சம அல்ல என்று மூளைச் சலவை செய்ததையும்,  தமிழ்நாட்டுக் கோவில்களில் இறைவணக்கம் தாய் மொழியில் இல்லாமல் தேவ பாஷை என்ற வட மொழியில் இருக்கவேண்டும் என்ற திணிப்பையும் உருவாக்கியதால் தமிழ்நாட்டின் பெரும்பகுதியினர் அரசியல் சமூக பொருளாதார ஏற்ற தாழ்வுகளில் சிக்கித் தவிப்பதை எதிர்த்ததே பெரியாரின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தொடர்ந்த சமூக சீர்திருத்த சுயமரியாதை சார்ந்த பகுத்தறிவை ஊட்டும் பணி//

பெரியார் இதைதான் செய்ய முறப்ட்டால், இன்று அவர் தாக்கத்தில் எழுந்து வளர்ந்துள்ள திராவிட இயக்கங்கள் எந்த அடிப்படையில் சமூக சமத்துவம் சாதிக்கின்றன?

மேலும் எந்த அடிப்படையில் திராவிட இயக்கங்கள் வடமோழி தேவபாஷை என்ற கருத்தை மறுத்து மீண்டும் தமிழையே கோயில்களில் செங்கோல் ஓச்சுமா செய்துள்ளார்கள்? 

நான் அறிந்தவரை கோயில்களை புறகணிப்பதே திருவுருவ் வழிபாட்டை பகடி செய்வதே அவரது தாக்கத்தில் எழுந்த மாற்றங்களாகத்  தெரிகின்றன.

மேலும் சீவ சமத்துவத்தை எந்த அடிப்படியில் பெரியாரோ அல்லது அவரைச் சார்ந்து திராவிட இயக்கங்களோ நிறுத்தியுள்ளன்? 'ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்; என்ற திருமூலர் வாக்கை அவர்கள் அறிந்திருந்தாலும் அது ஏன் தமிழக அரசியல் அடிப்படையாக ஆக்கபட வில்லை,?

மேலும் ஒருவ்னை பகுத்தறிவுவாதி யாக்கிவிட்டால் அவன் தானே பல சீர்த்திருத்தங்களை கொண்டு வருவான் என்று அவர் கூறியிருக்கின்றார், ஆனால் உண்மையான  நிலவரம் எப்படி? மலேசீயாவில் பல ஆண்டுகளாக பல திராவிட இயக்கத்தினரோடு வாதித்திருக்கின்றேன். அதன் வழி நான் அறிந்தது: அவர்க்ட்கு ஏரண சுத்தத்தோடு வாதிக்கத் தெரியாது என்பதே. ஏன் இப்படி? ஏன்  திராவிட இயக்கங்கள் இறந்துபோன அளவையியல் சிந்தனையை ஏரணவியல் சிந்தனையை முற்படுத்தும் சைவ பாரம்பரியத்தை பிரித்து அது எவ்வாறு அறிவியல வழி சமயத்தை வளர்த்தது என்றும் அத்னால அது எவ்வாறு சாதி பேதங்களையும் வர்ணபேதங்களையும் கண்டிக்கின்றது என்றும் இன்றளவு திராவிட இயக்கங்கள் வலியுறுத்தாமல் இருக்கின்றனவே? ஏன்?

இதற்குப் பதில் தாங்களே கூறியுள்ளீர். அலங்கார அடுக்குமொழி மேடைப் பேச்சு. இது மதியை மயக்குவது இருக்கின்றன் சிந்தனைத் திறத்தையே  கெடுப்பது. சிந்திக்க வைக்கவேண்டும் என்று வற்புறுத்திய பெரியார் ஏன் அடுக்குமொழி மயக்குகளை ஆதரித்தார்?

மேலும் சம்ய வாழ்க்கையை ஒதுக்கி வைத்து அரசியல் நடப்பதால் இத்தனை வயதாகியும் கலைஞர் கருணாநிதி கட்சித் தலைவர் பதவியை துறந்திட மன வரவில்லையே?

திராவிட இயக்கத்தில் ஆன்மீகத் தவறு 'பற்றறுத்தல்: எனும் வள்ளுவர் வாக்கை அரசியலில் கொண்டு வராது போனதும் என்று தெரிகின்றது. 

இப்படி இன்னும் பல

உலகன் 

 

வேந்தன் அரசு

unread,
Jan 27, 2015, 6:27:04 AM1/27/15
to vallamai


25 ஜனவரி, 2015 ’அன்று’ 9:59 முற்பகல் அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
கடவுளை நம்புவன் முட்டாள் என்றால், கடவுளை நம்பாதவனும் முட்டாள்தான்.

முனியை நம்பாதவனும்  படுமுட்டாள்.
 
--
வேந்தன் அரசு

வேந்தன் அரசு

unread,
Jan 27, 2015, 6:28:56 AM1/27/15
to vallamai


25 ஜனவரி, 2015 ’அன்று’ 10:08 முற்பகல் அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
​காரண விளைவு நியதிப்படி [Cause & Effect Theory] எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது என்று நம்புவது மூட நம்பிக்கையா ?  

அதே காரண விளைவு கடவுளுக்கு பொருந்துமா?  இந்த வினாவை கிளப்பாதவர் எல்லாரும் முட்டாள்கள்தான்.
 

வேந்தன் அரசு

unread,
Jan 27, 2015, 6:37:44 AM1/27/15
to vallamai


26 ஜனவரி, 2015 ’அன்று’ 6:33 பிற்பகல் அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

தந்தை பெரியார் செய்த இமாலயத் தவறு : தமிழக ஒருமைப்பாட்டை நிரந்தரமாய்க் கெடுத்த  ஆரிய - திராவிடப் பகை & பிரிவு.

ஒத்துக்கொள்கிறேன் ஐயா.
 

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2015, 10:28:54 AM1/27/15
to vallamai
இது என்ன புதுக்கரடி.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை சமஸ்தானமும் ஜமீனும் தன்னாட்சி நடத்திக்கொண்டிருந்தன என்பது தாங்கள் அறியாததா

தமிழக வரலாற்றில் மூவேந்தர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொண்டிருந்தபோது அவர்கள் தமிழக ஒருமைப்பாட்டை வளர்த்துக்கொண்டா இருந்தார்கள்.  

இந்தியா எப்போது ஒரே நாடானது?  சுதந்திரத்துக்குப்பின் படேலால் 500 க்கு மேற்பட்ட தனி அரசுகளைக் கையகப்படுத்தி இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கினார்

எலியோன்

--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 27, 2015, 10:38:51 AM1/27/15
to vallamai
///விவேகானந்தர், ராமானுஜர், காந்தி, நாராயணகுரு, அய்யாவழி நாராயணர், பாரதியார் முதல் இன்றைய அமிர்தானந்தமயி வரை இருக்கிறார்கள். ///  

இத்துடன் ஆன்மீகப் பைபிள், பகவத் கீதை, திருக் குர்ரான், திருக்குறள் போன்ற நீதி நூல்களையும், புத்தர், ஏசு நாதர், அன்னை தெரேசா,  ஆல்பெர்ட் ஸ்வைஸர் போன்ற மாமனிதர்களையும் சேர்க்கிறேன்.


உலகத்தில் சுமார் 55%  [என் யூகம்] மாந்தர் ஓரளவு நேர்மையோடு, மனித நேயமோடு, சமூக சேவை செய்து வாழ்வதற்கு இந்த நீதி நூல்களும், அந்த ஆன்மீக மாமனிதரும்தான் பெரும்பான்மைக் காரணம் என்பது என் கருத்து.

ஆன்மீக ஆல்பெர்ட் ஸ்வைஸர், அன்னை தெரேசா போல், யாராவது இப்படி மனித சேவை செய்த நாத்திகர்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.


சி. ஜெயபாரதன்

+++++++++++++++++ 


--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 27, 2015, 11:20:26 AM1/27/15
to vallamai
விடுதலைத் தமிழகத்தைப் பற்றிப் பேசுவோம்.

விடுதலைப் போராட்டத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்து ஒன்றுபட்ட தேசீயத் தமிழகத்தில், தந்தை பெரியார் இந்திய சுதந்திரம் வேண்டாம் என்று முதலில் தள்ளி நின்று  பிறகு தனித் திராவிட நாட்டுக்குப் போராடிப் பரப்பிய ஆரிய-திராவிடப் பகை / பிரிவுக் கிளர்ச்சி தற்போதைய தமிழர் ஒருமைப்பாட்டை வளர்க்கிறதா ? கெடுக்கிறதா ?


குடியாட்சியில் சினிமா கட்சிகளான திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சியைக் கைப்பற்றி வரும் இந்த சுழலாட்சி வேடிக்கை இன்னும் நூறாண்டுகள் நீடிக்கும் எனது என் யூகிப்பு !   

தமிழ்நாடு முழுவதும் அல்லது பெரும்பாலும் இருப்பவர் கருப்புச் சட்டைக் கழகத்தாரரா ?10% திராவிடக் கழகத்தார் 90% தமிழரை எப்படி ஆள முடிகிறது ? 


சி. ஜெயபாரதன்.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 27, 2015, 12:04:32 PM1/27/15
to vallamai
வேந்தரே !

 
/// ​காரண விளைவு நியதிப்படி [Cause & Effect Theory] எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது என்று நம்புவது மூட நம்பிக்கையா ?  

அதே காரண விளைவு கடவுளுக்கு பொருந்துமா?  இந்த வினாவை கிளப்பாதவர் எல்லாரும் முட்டாள்கள்தான்.
 
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்  ///


There are certain things that are assumed and accepted in Science for the Speed of Light.  Light is an Absolute One. It is proved that nothing is faster than the speed of Light.

Similarly Death is Absolute.  God is considered to be ultimate & Absolute.  God is invisible Light.


S. Jayabarathan    

--

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2015, 1:05:21 PM1/27/15
to vallamai

2015-01-27 21:49 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

விடுதலைப் போராட்டத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்து ஒன்றுபட்ட தேசீயத் தமிழகத்தில், தந்தை பெரியார் இந்திய சுதந்திரம் வேண்டாம் என்று முதலில் தள்ளி நின்று  பிறகு தனித் திராவிட நாட்டுக்குப் போராடிப் பரப்பிய ஆரிய-திராவிடப் பகை / பிரிவுக் கிளர்ச்சி தற்போதைய தமிழர் ஒருமைப்பாட்டை வளர்க்கிறதா ? கெடுக்கிறதா ?

​இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியோடு தோளோடு தோள் நின்று கள்ளுக்கடை மறியல் வெளிநாட்டுப் பொருட்கள் புறக்கனிப்பு என்று காந்தியாரே வியந்து போற்றும் அளவுக்குப் பணியாற்றி அன்றைய ஒருங்கினைந்த மரராஸ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் பெரியார்  அவருடைய விடுதலைப் போராட்டப் பங்களிப்பை அவர் நாத்திகர் என்ற தவறான புரிதலின்படி கொச்சைப்படுத்தக் கூடாது

தமிழகத்தில் அதிகார உயர்மட்டத்தில் முக்கிய அரசுப் பதவிகளில் இருந்தவர்கள் இந்து சமயம் என்ற கருவியைக்கொண்டு சாதி ஏற்ற தாழ்வுகளைக் கடைப்பிடித்தனர்.  சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்குப் பதிலாக வர்ணாஸ்ரம அடிப்படை வெறி ஆட்சிக்கு வரும் என்ற அச்சம் நிலவிய நிலையில் எப்படி முஸ்லீம்கள் சுதந்திர இந்தியாவில் இந்துக்கள் அதிகாரத்தின்கீழ் தங்கள் உரிமைகளைத் தற்காத்து வாழமுடியாது என்று தனிநாடு கேட்டனரோ அந்த அடிப்படையில் தமிழகத்தில் வர்ணாஸ்ரம சனாதனிகள் அதிகார மையமாக இருக்கும் சுதந்திர இந்தியாவிலிருந்து வெளியேறி திராவிடஸ்தான் அமைக்கவேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டவர் பெரியார்.

​எனவே பெரியார் சுதந்திரம் வேண்டான் என்று சொன்னதற்கு அடிப்படை சுதந்திரம் கிடைத்தால் அமைக்கப்படும் புதிய ஆட்சி இந்துத்வ ஆட்சியை நிறுவி சாதி ஒழிப்பு முயற்சிகளைத் தடுத்து உள்ளது உள்ளபடி நிலைக்கட்டும் என்று இருந்துவிடுவார்களோ என்ற அச்சம் கொண்டிருந்தவர் பெரியார்.

நீங்கள் மேற்கோள் காட்டும் கடவுள் உல்கைப்படைத்தார் என்ற விதி மனிதன் கடவுளைப் படைத்தான் என்ற விதிக்கும் ஒத்துவருகிறதே.பெரியாரின் அடிப்படைச் சித்தாந்தம் கடவுளை மற மனிதனை நினை என்பதுதான். மேலுலகம் பற்றி வாய்கிழியப் பேசிக் கடைசியில் இவ்வுலக வர்ணாஸ்ரம அமைப்பை வலியுறுத்தி மனித நேயம்பற்றிக் கவலைப்படாமல் மக்கள் இருப்பதை வாக்குச்சீட்டு அரசியலுக்கு அப்பால் பகுத்தறிவைத் தூண்டும் சுயமரியாதை உணர்வை விதக்கவே அவர் பணியாற்றினார்.  ஆயின்ய்ம் அவருடைய இரண்டாம் நிலைத் தலைவர்காளுக்கு வாக்களிப்பு அரசியலில் கால்வைக்கும் ஆசை பிறந்துவிட்டது.  சமுதாய மாற்றத்துகு எது தேவை என்பதில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இருந்த கொள்கைவேறுபாடு தி.மு.க தோன்ற அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது.  வாக்களிப்பு அரசியலுக்காக கட்சியை உடைத்த அண்ணாவை அவர் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை.  தி.மு.கவை எதிர்க்க அவர் காங்கிரசைக் கண்ணைமூடிக்கொண்டு ஆதரித்தார்

அண்ணா எடுத்த முடிவு அனைத்துக் கட்சிகளையும் வேறுபாடுகளைக் கொஞ்சம் ஒதுக்கித் தள்ளிவிட்டுக் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒரு குடைக்கீழ் கொணடுவருவது என்று தீவிரமாகச் செயல்பட்டு ஆட்சியைப் பிடித்ததும் முதல் வேலையாகச்  சென்னையிலிருந்த அண்ணா பதவி ஏற்கும் முன் திருச்சி சென்று பெரியரைச் சந்திக்கிறார்.  இது த்மிழகம் எதிர்பார்க்காத ஒரு அரசியல் சாணக்கிய்த்தனம்.  அண்ணா உயிருடன் இருந்தவரை பெரியாரின் தீவிர இந்து பிராமண வெறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலில் இடையூறு செய்யாமல் பார்த்துக்கொண்டார்.  அடுத்துவந்த ஆட்சியில் ஒரே மேடையில் பெரியாரும் முதல்வராக இருந்த கலைஞரும் கலந்துகூட்டத்தில் (நான் நேரடியாக இருந்தவன்) பெரியார் இந்த கடவுளை நம்புபவன் முட்டாள் என்று பேசியதைக்கலைஞர் ஏற்றுக்கொள்ளவில்லை.  வாக்குக்காக கொள்கை மாற்றம் செய்துகொள்ளும்போக்கு அப்போது உருவாகி இருந்த திராவிட நாத்திகச் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டி திராவிடர் கழகம் தொடர்ந்து குடைச்சல் கொடுப்பதைப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்து ஆட்சி நடத்தும் சூழ்நிலைக்கு அவரைத் தள்ளிவத்துவிட்டு திராவிட அரிதாரம் பூசிக்கொண்டனர்.

பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே தொடர்ந்து இருந்துவந்த மக்கள் வாக்குரிமை மூல சமூகத் திருத்தமா அல்லது பொது அரசியலில்கலந்துகொள்ளாமல் சீர்திருத்த இயக்கமாக இருப்பதா என்ற கொள்கை திராவிட இயக்கத்தில் பெருங்குழப்பத்தை விளைவித்தது.  பெரியார் திராவிடக்கொள்கைகளைக் கலைத்துவிட்டு தனித்தமிழ்நாடு பச்சைத் தமிழன் என்ற புதிய அரிதாரத்தைப் போட்டுக்கொண்டார்

வாழ்க சுதந்திரம்

​எலியோன்

வேந்தன் அரசு

unread,
Jan 27, 2015, 2:13:37 PM1/27/15
to vallamai


27 ஜனவரி, 2015 ’அன்று’ 10:38 முற்பகல் அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

///விவேகானந்தர், ராமானுஜர், காந்தி, நாராயணகுரு, அய்யாவழி நாராயணர், பாரதியார் முதல் இன்றைய அமிர்தானந்தமயி வரை இருக்கிறார்கள். ///  

இத்துடன் ஆன்மீகப் பைபிள், பகவத் கீதை, திருக் குர்ரான், திருக்குறள் போன்ற நீதி நூல்களையும், புத்தர், ஏசு நாதர், அன்னை தெரேசா,  ஆல்பெர்ட் ஸ்வைஸர் போன்ற மாமனிதர்களையும் சேர்க்கிறேன்.


உலகத்தில் சுமார் 55%  [என் யூகம்] மாந்தர் ஓரளவு நேர்மையோடு, மனித நேயமோடு, சமூக சேவை செய்து வாழ்வதற்கு இந்த நீதி நூல்களும், அந்த ஆன்மீக மாமனிதரும்தான் பெரும்பான்மைக் காரணம் என்பது என் கருத்து.

ஆன்மீக ஆல்பெர்ட் ஸ்வைஸர், அன்னை தெரேசா போல், யாராவது இப்படி மனித சேவை செய்த நாத்திகர்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

 மெலிந்தா  உடன் பில்  கேட்சு.



--

செல்வன்

unread,
Jan 27, 2015, 2:17:41 PM1/27/15
to vallamai

2015-01-27 13:13 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
 மெலிந்தா  உடன் பில்  கேட்சு.

மெலிண்டா கடவுள்நம்பிக்கையுள்ள கத்தோலிக்கர்.

The moral systems of religion, I think, are superimportant. We've raised our kids in a religious way; they've gone to the Catholic church that Melinda goes to and I participate in. I've been very lucky, and therefore I owe it to try and reduce the inequity in the world. And that's kind of a religious belief. I mean, it's at least a moral belief. - Bill Gates

Read more at http://www.relevantmagazine.com/slices/bill-gates-discusses-god-church-charity-and-faith#CLZk3Li1vjwLcWUq.99



--

வேந்தன் அரசு

unread,
Jan 27, 2015, 2:21:15 PM1/27/15
to vallamai
ஓ மெலிந்தாவால்தான் பில் வள்ளல் ஆனாரோ?
நான் இன்னைக்கு பணிக்கு டிமிக்கி. நீங்களூமா? 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Jan 27, 2015, 2:54:01 PM1/27/15
to vallamai

On Tue, Jan 27, 2015 at 1:21 PM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
ஓ மெலிந்தாவால்தான் பில் வள்ளல் ஆனாரோ?
நான் இன்னைக்கு பணிக்கு டிமிக்கி. நீங்களூமா? 

பில்லும் கத்தோலிக்கர்தான். சர்ச்சுக்கு அடிக்கடி போவார்

நான் இன்று ஒர்க்கிங் ப்ரம் ஹோம்


--

தேமொழி

unread,
Jan 27, 2015, 4:07:06 PM1/27/15
to vall...@googlegroups.com
////
மனித சேவை செய்த நாத்திகர்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்
///

secularism என்ற பிரிவில் பார்க்க வேண்டும் ஐயா.

"இது வேறுலகம் தனி உலகம்" என்று பாடத்தோன்றும் அளவிற்கு மற்றொரு பிரிவும் மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது...வேறு அடிப்படைக் கொள்கைகளுடன் 


List of secularist organizations

From Wikipedia, the free encyclopedia
This list is incomplete; you can help by expanding it.
Conway Hall Humanist Centre, home of the South Place Ethical Society, the oldest freethoughtcommunity in the world. (Established 1793)

Secularist organizations promote the view that moral standards should be based solely on concern for the good of humanity in the present life, without reference to supernatural concepts, such as God or an afterlife. The term secularism, as coined and promulgated byGeorge Jacob Holyoake, originally referred to such a view.[1] Secularism may also refer to the belief that government should be neutral on matters of religion, and that church and state should be separate. The term is here used in the first sense, though most organizations listed here also support secularism in the second sense.

Background[edit]

Secularists, and their organizations, identify themselves by a variety of terms, including agnosticatheistbrightfreethinkerhumanistnontheistnaturalistrationalist, orskeptic.[2][3] Despite the use of these various terms, the organizations listed here have secularist goals in common. Note that, while most of these organizations and their members consider themselves irreligious, there are certain exceptions (Ethical Culture, for example).

In some jurisdictions, a provincial or national humanist society may confer upon Humanist officiants the ability to conduct memorial services, child naming ceremonies orofficiate marriage — tasks which would be carried out by clergy in most organised religions.[4][5][6]

List[edit]

International[edit]

Australia[edit]

Belgium[edit]

Brazil[edit]

Canada[edit]

Germany[edit]

Iceland[edit]

  • Sidmennt - Icelandic Ethical Humanist Association

India[edit]

Indonesia[edit]

Ireland[edit]

Italy[edit]

Kuwait[edit]

New Zealand[edit]

Northern Ireland[edit]

Norway[edit]

Philippines[edit]

Scotland[edit]

Sweden[edit]

United Kingdom[edit]

United States[edit]

தேமொழி

unread,
Jan 27, 2015, 4:16:25 PM1/27/15
to vall...@googlegroups.com
பெரும் புரவலர்களும் உள்ளனராம்....

Andrew Carnegie, atheist

மேலும் சிலரைப் பற்றி கட்டுரையில்  

Atheists are the most generous—even without heavenly reward!

By HANK PELLISSIER - IEET 
Added: Friday, 25 November 2011 at 8:09 PM

Who gives the most to charitable causes? Those who believe in gods or those who don’t?

“Go, sell everything you have and give to the poor, and you will have treasure in heaven…” (Mark 10:21)

“Any charity you give is for your own good. Any charity you give shall be for the sake of GOD. Any charity you give will be repaid to you…” (Koran 2:272)

Charitable behavior gets big perks in the afterlife, according to Christian and Islamic theology. Philanthropy, in these creeds, is a highly profitable long-term investment, a down payment on ecstatic immortality. Quite the bargain!

But atheists? No heaven awaits them. No pearly gates, eager virgins, harping angels, fluffy clouds, or succulent oasis. No reward whatsoever. Atheists have no faith, no expectation of benefit from a deity. So, atheists are probably selfish, right? Pitiless, parsimonious. Totally stingy misers, not passing a penny off to the poor…correct?

WRONG! Atheists, non-believers, secular humanists, skeptics—the whole gamut of the godless have emerged in recent years as inarguably the most generous benefactors on the globe. That’s right. Hordes of heretics are the world’s biggest damned philanthropists. Both individually and in groups, heathen infidels are topping the fundraising charts.

First, the facts.

The current most charitable individuals in the United States, based on “Estimated Lifetime Giving,” are:

1) Warren Buffett (atheist, donated $40.785 billion to “health, education, humanitarian causes”)

2) Bill & Melinda Gates (atheists, donated $27.602 billion to “global health and development, education”)

3) George Soros (atheist, donated $6.936 billion to “open and democratic societies”)

A century ago, one of the USA’s leading philanthropists was Andrew Carnegie, atheist.

Regarding “group efforts”—Kiva.org, the micro-financing organization that has distributed $261 million to people in 61 nations, has “lending teams” that post their generous efforts online. The leading team on November 22, 2011, is “Atheists, Agnostics, Skeptics, Freethinkers, Secular Humanists, and the Non-Religious.” These 18,127 benevolent blasphemers have lent $5,623,750 in 187,920 loans. Their simple motto is: “We loan because we care about the suffering of human beings.”

Trailing behind in the #2 slot are the “Kiva Christians” who have loaned $3,211,250. Their supernatural rallying cry is, “We loan because: Pure and undefiled religion before God the Father is this: to care for orphans and widows in their misfortune and to keep oneself unstained by the world. (James 1:27)”

I’m gleeful that the irreligious are the most altruistic because I was incessantly told the inverse by credo-worshipping commenters after I published my article “Tax the Churches and Give the Revenue to Hungry Children.” Pious posters informed me that my secular proposal would seriously damage charitable causes, because it would hamper the vast, sublime generosity of the devout. Ha! The numbers above suggest that their contention is just the usual sanctimonious drivel. A favorite slogan of atheists is, “We Don’t Need God To Be Good” and the philanthropy figures I’ve presented indicate that is exactly the case, indeed, we seem to be “BETTER without God.”

In actuality, there are complex difficulties in funding religious organizations; I discovered this five years ago when I donated money to a impoverished tribal village in the Philippines that was being educated, and medically treated, by a Catholic layperson. The tribe had a sickly population of 66 individuals; within two years it had ballooned up to 100, even sicker at this point, with tuberculosis and malnutrition. When I strongly suggested to the Catholic layperson that my next contribution should be a bag of 10,000 condoms, to halt the population explosion, she replied, “Oh no, we are Catholics, we only practice natural birth control.”

___________________________________________

ref: https://thegreatrealization.wordpress.com/2007/06/05/worlds-largest-philanthropers-atheists/

World’s Largest Philanthropists Atheists?

A recent story about Robert Wilsonan atheist who gave $22.5 Milliontoward New York Catholic Education got me wondering if there have been other good deeds such as this done by atheists. I didn’t have to look far.

Atheists are often challenged with questions like, “So you can just do whatever you want?” or accusations such as, “You don’t have a moral code to live by.” Well, as Kathryn Hepburn once said:

I’m an atheist. And that’s it. I believe there’s nothing we can know except that we should be kind to each other and do what we can for each other.

What other philanthropy of our time has been the benefit of godless members of society? For one Warren Buffet, the world’s second richest man. From Buffet’s Biography:

“He did not subscribe to his family’s religion. Even at a young age he was too mathematical, too logical, to makewarren the leap of faith. He adopted his father’s ethical underpinnings, but not his belief in an unseen divinity.” –from Buffett: The Making of an American Capitalist, by Roger Lowenstein (Doubleday, 1995), page 13.

Last year, Buffet donated more than $30 Million to the Bill and Melinda Gates foundation, which brings me to our next person.

Bill Gates has never explicitly made any statements about atheism, but according to an about.com article:

Gates was interviewed November 1995 on PBS by David Frost. Below is the transcript with minor edits.

Frost: Do you believe in the Sermon on the Mount?

Gates: I don’t. I’m not somebody who goes to church on a regular basis. The specific elements of Christianity are not something I’m a huge believer in. There’s a lot of merit in the moral aspects of religion. I think it can have a very very positive impact.

Frost: I sometimes say to people, do you believe there is a god, or do you know there is a god? And, you’d say you don’t know?

Gates: In terms of doing things I take a fairly scientific approach to why things happen and how they happen. I don’t know if there’s a god or not, but I think religious principles are quite valid.

It’s interesting that he thinks “religious principles are quite valid,” but he isn’t a believer in the Sermon on the Mount. Usually, when an irreligious non-Christian recognizes any validity to Christianity, it’s usually through some of the principles in the Sermon on the Mount. I wonder what Bill Gates had in mind?

Gates was profiled in a January 13, 1996 TIME magazine cover story. Here are some excerpts compiled by the Drudge Report:

“Isn’t there something special, perhaps even divine, about the human soul?” interviewer Walter Isaacson asks Gates “His face suddenly becomes expressionless,” writes Isaacson, “his squeaky voice turns toneless, and he folds his arms across his belly and vigorously rocks back and forth in a mannerism that has become so mimicked at MICROSOFT that a meeting there can resemble a round table of ecstatic rabbis.”

“I don’t have any evidence on that,” answers Gates. “I don’t have any evidence of that.”bill gates

He later states, “Just in terms of allocation of time resources, religion is not very efficient. There’s a lot more I could be doing on a Sunday morning.”

So, Bill Gates doesn’t go to church on a regular basis, doesn’t believe much in the specific elements of Christianity, doesn’t think there is any evidence for souls, doesn’t know that there is any god, and doesn’t consider religion very efficient. Bill Gates is definitely irreligious and is definitely agnostic. He may or may not be an atheist, but he is also definitely not the sort of person whom religious believers have in mind when they claim that religion is necessary for charitable work. Bill Gates is thus an effective demonstration that charity is possible without religion playing any role whatsoever.

When people speak about the good that religion has done, philanthropy is always one of the first things to be spoken about. Why isn’t it brought up that some of the largest philanthropic efforts in the world are being conducted without religion?


Hari Krishnan

unread,
Jan 27, 2015, 6:26:43 PM1/27/15
to vallamai

On 28 January 2015 at 00:51, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
நான் இன்னைக்கு பணிக்கு டிமிக்கி. நீங்களூமா? 

இடிமிக்கி.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 27, 2015, 6:37:32 PM1/27/15
to vallamai
///இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியோடு தோளோடு தோள் நின்று கள்ளுக்கடை மறியல் வெளிநாட்டுப் பொருட்கள் புறக்கனிப்பு என்று காந்தியாரே வியந்து போற்றும் அளவுக்குப் பணியாற்றி அன்றைய ஒருங்கினைந்த மரராஸ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் பெரியார்  அவருடைய விடுதலைப் போராட்டப் பங்களிப்பை அவர் நாத்திகர் என்ற தவறான புரிதலின்படி கொச்சைப்படுத்தக் கூடாது ////

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த தந்தை பெரியார், உலகெல்லாம் போற்றிய சுதந்திரப் பொன்னாளை [ஆகஸ்டு 15, 1947] ஏன் "துக்கநாள்" என்று அறிவித்தார் ?

/// சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்குப் பதிலாக வர்ணாஸ்ரம அடிப்படை வெறி ஆட்சிக்கு வரும் என்ற அச்சம் நிலவிய நிலையில் எப்படி முஸ்லீம்கள் சுதந்திர இந்தியாவில் இந்துக்கள் அதிகாரத்தின்கீழ் தங்கள் உரிமைகளைத் தற்காத்து வாழமுடியாது என்று தனிநாடு கேட்டனரோ அந்த அடிப்படையில் தமிழகத்தில் வர்ணாஸ்ரம சனாதனிகள் அதிகார மையமாக இருக்கும் சுதந்திர இந்தியாவிலிருந்து வெளியேறி திராவிடஸ்தான் அமைக்கவேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டவர் பெரியார்.////

முஸ்லீம்கள் பாகிஸ்தான் தனிநாடு கேட்டதற்கு இந்து வர்ணாசிர முறை காரண மில்லை. 

பிராமணர் ஆதிக்கம் காங்கிரசில் பெருகியது என்று பெரியார் வெறுத்து திராவிடர் மட்டும் வாழத் திராவிடஸ்தான் நாடினார்.  திராவிடஸ்தானில் ஆரியர் விரட்டப் படுவார் இல்லையா ?  ஆரிய -திராவிடப் பிரிவினை / வெறுப்பு இதுதானே !

அவர் குறிப்பிட்ட திராவிடர் யார் ? அவர் தேடிய திராவிட நாட்டுக்கு எல்லைகள் எங்காவது கூறியிருக்கிறாரா ?  யார் திராவிடர் ?  எது திராவிட நாடு ?  பெரியார் திராவிடரா ?  இலங்கைவாசி எம்ஜியார் திராவிடரா ?  ஜெயலலிதா திராவிட மாதா ?  ஆரிய மாதா ?

எல்லையற்ற ஒரு திராவிட நாட்டுக்கு, இனம் தெரியாத ஒரு கற்பனைத் திராவிடக் கூட்டத்துக்குப் போராடியவர் பகுத்தறிவுத் தந்தை பெரியார் !!!  விடுதலை நாட்டில் அது கிடைக்கா தென்று அண்ணா போன்ற அவரது சீடர்களே பிறகு கைவிட்டார்கள்.  
ஜாதி, மதங்களை எப்படி ஒழிப்பது என்று திட்டம் வகுக்காது ஜாதியை ஒழி, மதத்தை விடு என்று ஒரே சங்கை ஐம்பது ஆண்டுகள் ஊதினார் ! 

கடவுள் இல்லை, கடவுளை வழிபடக் கூடாது, கடவுளை நம்புபவன் முட்டாள் என்று ஒருபுறம் திட்டிக் கொண்டு மறுபுறம் தாழ்த்தப் பட்டோருக்கு ஆலயப் பிரவேசம் செய்ய காந்திஜி போல் முயன்றார்.  


சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++


சி. ஜெயபாரதன்

unread,
Jan 27, 2015, 6:47:51 PM1/27/15
to vallamai
தேமொழி,

இவர்கள் யார் என்றும் இவரது கொள்கைகள் என்ன வென்றும் அவரது பார்முலா மட்டும்தான் தெரிகிறது.  

இவர்கள் சமூகத்துக்கு என்ன செய்து வருகிறார் என்று எடுத்துக் காட்டுங்கள்.   குறிப்பாகப் பணக்காரப் பெரியார் பகுத்தறிவுப் பெரியார் ஏழை, எளியவருக்கு, கல்வி இல்லாதவருக்கு உதவ ஏதாவது நிறுவகம் உருவாக்கினாரா ?


சி. ஜெயபாரதன். 

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2015, 8:56:39 PM1/27/15
to vallamai

2015-01-28 5:06 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த தந்தை பெரியார், உலகெல்லாம் போற்றிய சுதந்திரப் பொன்னாளை [ஆகஸ்டு 15, 1947] ஏன் "துக்கநாள்" என்று அறிவித்தார் ?

​இந்தியா சுதந்திர நாளைக் கொண்டாடிய நாளன்று காந்தியார் கலந்துகொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்தார் என்ற காரணத்துக்காக அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று மவின்ட் பேட்டன் கூறினார்.  

முஸ்லீம்கள் பாகிஸ்தான் தனிநாடு கேட்டதற்கு இந்து வர்ணாசிர முறை காரண மில்லை. 

T wear Sevil Row suit while Gandhi is half naked

I eat cow while Gandhi worships

I want divided India or destroyed India 

என்று கூறியது எதைக் காட்டுகிறது.  பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரில்சென்று ஜின்னாவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  திராவிடஸ்தானத்துக்கு ஆதரவு பெற்றுத் திரும்பினார் என்பது வரலாறு காட்டும் உண்மை.  காஷ்மீரும் ஹைதரபாத்துக் (முஸ்லீம்) வடகிழக்கு மாநிலங்களும் (கிறித்துவம்) இந்தியாவில் தங்களை இணைத்துக்கொள்ளத் தயக்கம் காட்டியதற்கு எது அடிப்படை?

அவர் குறிப்பிட்ட திராவிடர் யார் ? அவர் தேடிய திராவிட நாட்டுக்கு எல்லைகள் எங்காவது கூறியிருக்கிறாரா ?  யார் திராவிடர் ?  எது திராவிட நாடு ?  பெரியார் திராவிடரா ?  இலங்கைவாசி எம்ஜியார் திராவிடரா ?  ஜெயலலிதா திராவிட மாதா ?  ஆரிய மாதா ?

திராவிட நாடு வேண்டும் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இந்தியா அலுவலகத்துக்கு வேண்டுகோள் எழுத்து வடிவில் திராவிடஸ்தான் படத்துடன் சமர்ப்பித்துள்ளனர்,  இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேய அரசுப் பிரதிநிதிகளிடம் திராவிடஸ்தான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்களே.

எம்.ஜி.ஆரும் ஜெய லலிதாவும் தாங்கள் யார் என்று தமிழக மக்களுக்கு அவர்கள் வாயாலேயே சொல்லியிருக்கிறார்களே.  கர்னாடகாவில் படப்பிடிப்பின்போது கன்னட வெறியர் வட்டல் நாகராஜ் ஜெயலலிதாவை ஒரு கன்னடியர் என்று சொல்ல அச்சுறுத்தியபோதும் அஞ்சாமல் தான் ஒரு தமிழச்சி என்று சொல்லியுள்ளாரே

இங்கு சரியா தவறா என்பது விவாதமல்ல. வரலாற்று நிகழ்வுகளைத் திரிக்காமல் உள்ளது உள்ளபடி எழுதுவதும் அறிவதுமே முக்கியம்.

எலியோன்



It is loading more messages.
0 new messages