அகரமுதல 31 : 14. நடுகற்கள் – இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் ; 15. தமிழ் இலக்கியத் திருவிழா

50 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 18, 2014, 6:42:05 PM6/18/14
to thiru thoazhamai

days of the hero01

தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவுபவை நடுகற்கள். 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை முதலாவது நடுகற்கள் பற்றிய கருத்தரங்கை, சென்னையில் நடத்தியது. நாற்பதாண்டுகளில் சங்கக்கால நடுகற்கள்  முதலான மிக முதன்மையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு விரிவான ஆழமான ஆய்வுகளும் பலநிலைகளில் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றை அறிய வேண்டி வருகின்ற சூன் மாதம் 21, 22 ஆகிய  நாள்களில்,

இக்கருத்தரங்கை, கிருட்டிணகிரி வரலாற்று ஆய்வு மையம், தருமபுரி அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம், காவேரிப்பட்டினம் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் ஆகிய வரலாற்று ஆய்வு நிறுவனங்களோடு இணைந்து நமது நடுகற்கள் முகநூல் குழு நடத்தவுள்ளது சிறப்பானதாகும். முனைவர் ஒய்.சுப்பராயலு, முனைவர் கே.இராசன், முனைவர் இராசகோபால், முனைவர் சுந்தரா, முனைவர் ஆருணி,முனைவர் வேம்புலி கங்காதர், தியோடர் பாசுகரன், சு.கி.செயகரன், முனைவர் பூங்குன்றன், முனைவர் பக்தவத்சல பாரதி, முனைவர் சு. இராசவேலு,  முனைவர  சுப்பிரமணியன், முனைவர் சொ.சாந்தலிங்கம், முனைவர் மகேசுவரன் முதலான ஆய்வறிஞர்கள் பலரும் பிற மாநில ஆய்வறிஞர்களும் பங்கு பெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பின்வரும் பொருள்களில் கவனம் செலுத்தி, நடுகல் பற்றிய கருநாடக,ஆந்திர, கேரள, தமிழக அறிஞர்களின் உரைகளும் ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இடம் பெறும்.

01. தொல்பழங்காலமும் நடுகற்களும்
02. நடுகல் வழிபாட்டின் பழங்குடிப் பின்னணி,
03. நடுகல்லும் கால்நடை வளர்ப்பும்
04. நடுகல்லும் தீமிதி சடங்குகளும்
05. நடுகல் காட்டும் அரசியல்
06. நடுகல் சமூகம்
07. நடுகல் இலக்கணம்
08. நடுகல் மொழி
09. நடுகல் நம்பிக்கைகளும் சடங்குகளும்
10. நடுகல் நாடும் ஊரும்
11. நடுகல் சிற்ப அமைதி
12. இளையோர் குழு
13. தலைபலி, சதி
14. நடுகல்/நினைவுக் கற்கள் –விலங்குகள்
15. நடுகல் காலக் கணிப்பு
16. சங்கம் நடுகற்கள், பல்லவ நடுகற்கள் முதல் இன்று வரையிலான பார்வை
17. பிறமொழி/பிற மாநில நடுகற்கள்
18. நடுகல் காட்டும் நிலம்

அறிவுரைகள், வழிகாட்டல்கள் வரவேற்கப்படுகின்றன.

நிகழிடம் – கே.ஏ.பி. திருமண மணமண்டபம், ஓசூர்

நாள்  :  ஆனி 7 & ஆனி 8, 2045/21 சூன்,  22 சூன், சனி & ஞாயிறு

தொடர்புக்கு

சுகவனமுருகன், பெண்ணையாறு தொல்லியல் சங்கம் 90421 58667
ராஜசேகர் பாண்டுரங்கன், நடுகல் ஆய்வுக்குழுமம் 73054 37393
heroston...@gmail.com

 அகரமுதல 31 : பயிற்சிமொழிச்சிறப்பிதழ்


+++

dinamaniilakkiyathiruvizhaa

“தினமணி’ நாளிதழும் சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்த இருக்கும் தமிழ் இலக்கியத் திருவிழா வரும் சூன் 21, 22 ஆம் நாள்களில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இஞ்சிக்குடி சுப்பிரமணியத்தின் மங்கள இசையுடன் தொடங்கும் நிகழ்வை இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் ஆ.ப.செ. அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்.

ஔவை நடராசன் தலைமையில் “இன்றைய தேவையும் இலக்கியமும்’, ஞான. இராசசேகரன் தலைமையில் “காட்சி ஊடகத்தில் கலை, இலக்கியம்’, மாலன் தலைமையில் “தகவல் ஊடகத்தில் தமிழ்’, சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் “மொழியும் பெயர்ப்பும்’, சுதா சேசய்யன் தலைமையில் “சமயமும் தமிழும்’, ம. இராசேந்திரன் தலைமையில் “வாசிப்பும் பழக்கமும்’, இ. சுந்தரமூர்த்தி தலைமையில் “வேர்களைத் தேடி- இலக்கியம்’, இரா. நாகசாமி தலைமையில் “வேர்களைத் தேடி- கலைகள்’ என்று எட்டுத் தலைப்புகளிலான அமர்வுகளில் 24 அறிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய இருக்கிறார்கள்.

ஒவ்வோர் அமர்வுக்குப் பிறகும், ஒவ்வோர் அரசியல் தலைவர், இம்மியும் அரசியல் கலப்பின்றி “என்னைச் செதுக்கிய இலக்கியம்’ என்கிற தலைப்பில் அரை மணி நேரம் பேச இருக்கிறார். பழ. நெடுமாறன், திருச்சி சிவா, தமிழருவி மணியன், பழ. கருப்பையா, தொல். திருமாவளவன், வைகோ ஆகியோரின் இலக்கியச் சொற்பொழிவுகள்தான், தமிழ் இலக்கியத் திருவிழாவின் சிறப்பியல்புகளாகத் திகழப் போகின்றன.

இத்துடன் நின்று விடாமல் இரண்டு நாள்களும் மாலையில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. “கலைமாமணி’ சாகிர் உசேன் குழுவினரின் “தசாவதாரம்’ நாட்டிய நாடகம் முதல் நாளும், சொர்ணமால்யா குழுவினரின் ” இராசராசன்’ நாட்டிய நாடகம் இரண்டாவது நாளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

புத்தகப் பதிப்பாளர்கள் சங்கத்திடம், முன்னணிப் பதிப்பாளர்கள் வெளியிட்டிருக்கும் இலக்கியத் தரமான படைப்புகளை மட்டும், விழா அரங்கத்திற்கு வெளியே விற்பனை செய்ய வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

எதற்காக இப்படி ஓர் இலக்கியத் திருவிழா? இதனால் என்ன ஆகிவிடப் போகிறது? என்று கேட்கலாம். ஒவ்வொரு ஊரிலும் கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. சான்றாக, மதுரை சித்திரைத் திருவிழாவையே எடுத்துக் கொள்வோம். அந்த விழாவால் என்ன பயன் என்று கேட்டால் அதற்கு என்ன சொல்வது? பல்வேறு ஊர்களில், நாடுகளில் இருப்பவர்கள் ஒன்று கூடவும், கலந்து பேசவும், உற்றார் உறவினரை, சுற்றத்தினரை, நண்பர்களைச் சந்திக்கவும் நலம் உசாவவும் இதுபோன்ற விழாக்கள் வாய்ப்பாக அமைகின்றன என்பதுதானே அந்த விழாக்களின் சிறப்பு.

“தினமணி’ இலக்கியத் திருவிழாவின் நோக்கமும் அதுதான். தென்காசி திருவள்ளுவர் கழகத்தவரும், ஐதராபாத்து திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஒரு வாய்ப்பு; கோவை இளங்கோவடிகள் மன்றத்தவரும், இராசபாளையம் கம்பன் கழகத்தவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாக ஒரு வாய்ப்பு; தில்லித் தமிழ்ச் சங்கச் செயலாளர் இரா. முகுந்தனையும், ஓசூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் புலவர் கருமலைத் தமிழாழனையும் தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து கைகுலுக்கி அளவளாவச் செய்ய இது ஒரு வாய்ப்பு.

“இலக்கியத் திருவிழாவால் அழிந்துவரும் தமிழ்மொழிக்கு ஆக்கத்தைச் சேர்க்க இயலுமா? தமிழ் ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, கல்வி மொழியாக ஆவதற்கும், விளம்பரப் பலகைகளில் தமிழ் ஒளிரவும், செய்தித்தாள், தொலைக்காட்சி, திரைப்படங்களில் கொலை செய்யப்படும் தமிழைக் காக்கவும் என்ன செயல் திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?’ என்கிற ஓசூர் தமிழ்ச் சங்கச் செயலர் கருமலைத் தமிழாழனின் ஆதங்கமும், அவசரமும், ஆத்திரமும் புரியாமல் இல்லை. தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலும் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளின்,பன்னூறாயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்களின் மனக்குமுறல்தான் இது. ஆனால், அவரவர் ஆங்காங்கே மனப்புழுக்கத்துக்கு வடிகால் கிடைக்காமல் புலம்பித் தீர்ப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?

தமிழை நேசிக்கும் ஆர்வலர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கூடினால்தானே, ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகமானால்தானே, தமிழைப் பாதுகாக்கும் முயற்சி ஆக்கமும் வீரியமும் பெறும்?

தமிழ் இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைவதால் மட்டுமே, தமிழ் வழக்காடு மன்ற மொழியாகவோ, கல்வி மொழியாகவோ மாறிவிடப் போவதில்லை. இது போன்ற இலக்கிய விழாக்கள் மூலம் அதற்கான கருத்தாக்கம் உருவாக்கப்படுவதன் மூலமும், தமிழார்வலர்களுக்கிடையே அறிமுகமும் நட்புறவும் ஏற்படுவதன் மூலமும்தான் அதை சாதிக்க முடியுமே தவிர, தீர்மானங்கள் போடுவதாலோ, அமைப்புகளை ஒருங்கிணைப்பதாலோ செயல்படுத்தக்கூடியது அல்ல அந்தப் பெரும்பணி.

தமிழை மீண்டும் தமிழர்களின் மன அரியணையில் ஏற்றி அமர்த்தும் முயற்சிதான் இலக்கியத் திருவிழாவே தவிர, தீர்மானம் போடவோ, போராட்டம் நடத்தவோ எடுக்கப்படும் முயற்சி அல்ல.

இது ஏன் மாநாடாக அல்லாமல் திருவிழாவாக நடத்தப்படுகிறது என்றால், திருவிழாக் கூட்டத்தைப் போலக் கூடிப் பேசி, ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, மகிழ்ந்து பிரிவதற்காகத்தான். “இந்த வாரம்’ பகுதியில் நான் எழுதியிருந்ததுபோல சிதம்பரம் ஆருத்ரா தரிசனம், மதுரை சித்திரைத் திருவிழா, திருப்பதி பிரம்மோற்சவம், திருவரங்கம் வைகுண்ட ஏகாதசி, பழனி தைப்பூசம், வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா, நாகூர் கந்தூரி விழா என்று இறையுணர்வாளர்கள் பெருந்திரளாகக் கூடி மகிழ்வதுபோல, தமிழன்பர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடிக் களிக்கும் நிகழ்வாக “தினமணி’ நாளிதழின் தமிழ் இலக்கியத் திருவிழா அமைய வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

எங்களுக்கு மேடையில் பேச வாய்ப்புண்டா, உணவு, தங்குமிட வசதிகள் செய்து தரப்படுமா, அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ளலாமா, இப்படிப் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கெல்லாம் நானளிக்கும் ஒரே பதில், இது அரசு நடத்தும் மாநாடல்ல, “தினமணி’ நாளிதழ் நடத்தும் இலக்கியத் திருவிழா என்பதுதான். உங்களூர்த் திருவிழாவிற்குப் போக நீங்கள் உறைவிட உணவு வசதியா கேட்கிறீர்கள்? இல்லை, எனக்கும் கற்பூர ஆரத்தி காட்டி பூசை செய்ய வாய்ப்புண்டா என்றா வினவுகிறீர்கள்?

தனித்தனியாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பனுப்பும் அவசியமும் இல்லை. தமிழை நேசிக்கும் அன்பர்கள் ஓடியும் தேடியும் வந்து கூடிக் களிக்கும் விழா இது. இது உங்கள் விழா, தமிழ் பேசும் அனைவரும் அழைக்காமலே ஒருங்கிணைய வேண்டிய விழா.

ஆக்கபூர்வமான, மொழி வளர்ச்சிக்கான விவாதங்களை மையப்படுத்தி, தமிழ் உணர்வாளர்களையும், வாசக அன்பர்களையும், அறிஞர்களையும் ஓரிடத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சி இது, அவ்வளவே!

தமிழன்பர்கள் கூடிக் குலாவ, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ள, பல தமிழறிஞர்களிடம் கலந்துரையாட, அனபிற்குரிய எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேச, இரண்டு நாள்கள் தமிழே மூச்சாகக் கிடைக்கும் வாய்ப்பாகக் கருதி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஒருங்கிணையுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள், கோரிக்கை, அழைப்பு!

மக்கள் மத்தியில் தமிழ் இலக்கியத்தை எடுத்துச் செல்லும் பெரும்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆங்காங்கே செயல்படும் இலக்கிய அமைப்புகளின் சார்பில் “தினமணி’ நாளிதழ் எடுக்கும் விழா இது என்றுகூடச் சொல்லலாம்.

விழா அரங்குகளில் தமிழறிஞர்கள் பதிவு செய்யும் கருத்துகள் கட்டுரைகளாக, “வேர்களைத் தேடி’ என்கிற தலைப்பில் மலராகத் தொகுக்கப்படுகின்றன. அந்த மலரில் தமிழ் இலக்கியத் திருவிழாவில் பங்கு பெறும் இலக்கிய அமைப்புகளின் பட்டியலும் இடம்பெற இருக்கிறது. இந்தப் பெரும்பணியை ப. முத்துக்குமார சுவாமியும், கிருங்கை சேதுபதியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல, தமிழை நேசிக்கும் அன்பர்களும், அமைப்புகளும், படைப்பாளிகளும், அறிஞர்களும் ஒன்றுகூடித் தமிழுக்கு விழா எடுத்து மகிழ்வோம். வாருங்கள்…. தமிழால் இணைவோம்! தமிழுக்காக இணைவோம்!!

இப்படிக்கு அன்பன்,

ஆசிரியர் கே. வைத்தியநாதன், தினமணி

 அகரமுதல 31 : பயிற்சிமொழிச்சிறப்பிதழ்


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

seshadri sridharan

unread,
Jun 25, 2014, 11:32:12 AM6/25/14
to vall...@googlegroups.com
எனக்கு இந்த தேசியக் கருத்தரங்கு ஏற்பாட்டாளர் அனுப்பிய இணைப்புகளை உம்மோடு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இணைப்பைப் படித்து இன்புறுங்கள்.

சேசாத்திரி



2014-06-19 4:11 GMT+05:30 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:

தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவுபவை நடுகற்கள். 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை முதலாவது நடுகற்கள் பற்றிய கருத்தரங்கை, சென்னையில் நடத்தியது. நாற்பதாண்டுகளில் சங்கக்கால நடுகற்கள்  முதலான மிக முதன்மையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு விரிவான ஆழமான ஆய்வுகளும் பலநிலைகளில் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றை அறிய வேண்டி வருகின்ற சூன் மாதம் 21, 22 ஆகிய  நாள்களில்,

இக்கருத்தரங்கை, கிருட்டிணகிரி வரலாற்று ஆய்வு மையம், தருமபுரி அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம், காவேரிப்பட்டினம் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் ஆகிய வரலாற்று ஆய்வு நிறுவனங்களோடு இணைந்து நமது நடுகற்கள் முகநூல் குழு நடத்தவுள்ளது சிறப்பானதாகும். முனைவர் ஒய்.சுப்பராயலு, முனைவர் கே.இராசன், முனைவர் இராசகோபால், முனைவர் சுந்தரா, முனைவர் ஆருணி,முனைவர் வேம்புலி கங்காதர், தியோடர் பாசுகரன், சு.கி.செயகரன், முனைவர் பூங்குன்றன், முனைவர் பக்தவத்சல பாரதி, முனைவர் சு. இராசவேலு,  முனைவர  சுப்பிரமணியன், முனைவர் சொ.சாந்தலிங்கம், முனைவர் மகேசுவரன் முதலான ஆய்வறிஞர்கள் பலரும் பிற மாநில ஆய்வறிஞர்களும் பங்கு பெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பின்வரும் பொருள்களில் கவனம் செலுத்தி, நடுகல் பற்றிய கருநாடக,ஆந்திர, கேரள, தமிழக அறிஞர்களின் உரைகளும் ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இடம் பெறும்.

நிகழிடம் – கே.ஏ.பி. திருமண மணமண்டபம், ஓசூர்

Hero Stone bk.jpg
nalli.pdf
news.rtf

தேமொழி

unread,
Jun 25, 2014, 12:46:33 PM6/25/14
to vall...@googlegroups.com
நல்ல பகிர்வு ...சேசாத்திரி

..... தேமொழி

seshadri sridharan

unread,
Jun 26, 2014, 12:26:50 PM6/26/14
to vall...@googlegroups.com
இந்த தொடுப்புகளில் மேலும் சில சேதிகள்

சேசாத்திரி 

2014-06-25 22:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நல்ல பகிர்வு ...சேசாத்திரி -  தேமொழி


On Wednesday, June 25, 2014 8:32:12 AM UTC-7, seshadri sridharan wrote:
எனக்கு இந்த தேசியக் கருத்தரங்கு ஏற்பாட்டாளர் அனுப்பிய இணைப்புகளை உம்மோடு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இணைப்பைப் படித்து இன்புறுங்கள்.

சேசாத்திரி 
 
சுகவனமுருகன், பெண்ணையாறு தொல்லியல் சங்கம் 90421 58667

தேமொழி

unread,
Jun 26, 2014, 9:42:26 PM6/26/14
to vall...@googlegroups.com
மிக்க நன்றி சேசாத்திரி 

.....  தேமொழி

வேந்தன் அரசு

unread,
Jun 26, 2014, 11:02:47 PM6/26/14
to vallamai



26 ஜூன், 2014 9:42 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

மிக்க நன்றி சேசாத்திரி 

.....  தேமொழி




On Thursday, June 26, 2014 9:26:50 AM UTC-7, seshadri sridharan wrote:
இந்த தொடுப்புகளில் மேலும் சில சேதிகள்


உருப்படியான காரியங்களும் நடக்கத்தான் இருக்கு.
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages