கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – சந்தர் சுப்பிரமணியன் +++ தாயினுஞ் சிறந்தது தமிழே! – ஞா.தேவநேயப் பாவாணர்

20 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 1, 2017, 4:15:17 PM1/1/17
to thiru thoazhamai

தாயினுஞ் சிறந்தது தமிழே! – ஞா.தேவநேயப் பாவாணர்





தாயினுஞ் சிறந்தது தமிழே!

எமுனாகல்யாணி – ஆதி
தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே
வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே.
பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே
பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே
தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே
தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே
முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே
குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே
பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே
அயன்மொழி பயில்வதும் தமிழே அயன்மொழி நினைவதும் தமிழே
குலமெனப் படுவதும் தமிழே கோவெனப் படுவதும் தமிழே
நலமெனப் படுவதும் தமிழே நாடெனப் படுவதும் தமிழே
தனிமொழி யானதும் தமிழே தாய்மொழி யானதும் தமிழே
கனிமொழி யானதும் தமிழே கலைமொழி யானதும் தமிழே!
– மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்:
செந்தமிழ்க் காஞ்சி
+++++

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2

அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர்
அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ?
குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ!
கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா!
திவலை க்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத்
திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா!
இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்!
இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1)
காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும்
கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத்
தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத்
தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை
மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று
மேனிலையை அடையவில்லை; மேடை வேண்டிப்
பாவையெங்கும் பாடவில்லை; பசப்புச் சொற்கள்
பகன்றுநிற்கும் பழக்கமில்லை; பகட்டு மில்லை! (2)
-சந்தர் சுப்பிரமணியன் :
கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages