விருதுநகர் மாவட்டத்தில் அளகாபுரி அருகே முதன்மைச் சாலையிலிருந்து 5கி.மீ. தொலைவில் இருக்கும் பாண்டியர் காலக் குடைவரை மலைக்கொழுந்தீஸ்வரர் எழுந்தருளிய மொட்டை மலை. அடிவாரத்தில் பெயரிலேயே வரலாற்றுச் சிறப்பான கதையைத் தாங்கியுள்ள மூவரை வென்றான் என்னும் ஊர்.
5ம் நூற்றாண்டில் இருந்து 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஊர்.
தண்ணீருக்காக மனிதர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அரசியல் புறநானூறு தொடங்கி இன்று வரை...
சிவகாசியிலிருந்து தூத்துக்குடி போகும் வழியில் 'எப்போதும் வென்றான்' என்ற பெயரில் ஒரு ஊரை மாணவப் பருவத்தில் கடக்கும் போதெல்லாம் 'இதில் ஏதோ வரலாறு பொதிந்துள்ளது' என்று எண்ணியதுண்டு.
இப்போது மூவரை வென்றான் ஊர் தொடர்பான கதையைத் தெரிந்து கொண்டது... நாட்டார் வழக்காற்றின் உட்கருவான வரலாறை இனம் காட்டுகிறது.
மலையின் மேலிருக்கும் ஊற்றுநீர் மலையடிவாரம் வரை கொண்டுவரப் பட்டுள்ள நேர்த்தி... வரலாற்றுக் காலத்தில் நீர்மேலாண்மையில் விஞ்சிய தமிழரின் உழைப்பையும் பெருமையையும் காட்டுகிறது.
சக