--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
2013/3/11 K. Loganathan <k.ula...@gmail.com>//நீங்கள் கூறுவதுபோல் மனதால் ஆழ் எண்ணினால் அதனையே குறிப்பாக கொண்டு வாழ்ந்தால் அது தக்க சாதனம் ஆகுமா? ஆகாது என்றே நினைகின்றேன். என் அறிவு அணுத்துவப் பட்டு சுட்டறிவாகின்றது என்பதின் மூல காரணத்தைக் கண்டு அதனை தக்க சாதனங்கள் வழி களைய வேண்டுமல்லவா? என்ன மூல காரணம்? என்ன சாதனம் - உலகன்//மனிதர்க்கு உள்ள 50 குணங்கள் அகமும் புறமுமாக வெளிப்பட்டு 50 X 2 = 100 ஆகின்றன. இந்த நூறும் 10 திசைகளில் செலவுபடும் போது 100 X 10 = 1000 ஆகின்றன. இந்த பதின்நூறு குணங்களும் கட்டுப்பாட்டு இடமே பதின்நூறுஆரச்சக்கரம் (sahasrara). இறைவன் குணமிலி எனப்படுகின்றான். இதன் பொருள் அவனிடம் குணமே இல்லை என்பதல்ல ஆனால் அவை அத்தனையும் அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்பதே. ஒருவர் குணமிலி நிலையை எய்த வேண்டுமானால் இந்த குணங்கள் 50 உம் கட்டுப்பட்டிருக்க வேண்டும்.நாடைமுறை வாழ்வில் இந்த ஐம்பது குணங்களும் நான், எனது என்ற சுட்டறிவின் காரணமாகவே ஓங்கி வெளிப்படுகின்றன. இவ்வாறு இருக்க நான், எனது எனும் உடல் சார்ந்து எழுகின்ற யான்மை(ego) அடங்காமல் இந்த குணங்கள் 'யாவும் அடங்கமாட்டாமல் மேலோங்கியே நிற்கும். இதாவது இந்த குணங்களுக்கு நாம் கட்டுப்படாமல் இவை நம் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதற்கு முதலில் யான்மை அடங்க வேண்டும்.Api cet sudurácáro bhajate mámananyabhák – “If even a very, very de[praved] person – ” – bhajate mámananyabhák – “ideates on me” – ananyabhák – “withdrawing his or her mind from all other, baser, propensities” – “If even a bad person, a brute in animal structure, ideates on me by withdrawing his or her mind from all other baser propensities (that is, from all those forty-nine propensities) – ” –What are those forty-nine propensities, do you know?The terranean plexus, or múládhára cakra:(1)dharma [psycho-spiritual longing]artha [psychic longing]káma [physical longing]mokśa [spiritual longing]The fluidal plexus, or svádhiśt́hána cakra:avajiṋá [indifference]múrcchá [psychic stupor, lack of common sense]prashraya [indulgence]avishvása [lack of confidence]sarvanásha [thought of sure annihilation]kruratá [cruelty]The igneous plexus, or mańipura cakra:lajjá [shyness]pishunatá [sadistic tendency]iirśá [envy]suśupti [staticity, sleepiness]viśada [melancholia]kaśáya [peevishness]trśńá [yearning for acquisition]moha [infatuation]ghrńá [hatred, revulsion]bhaya [fear]The anáhata cakra:áshá [hope]cintá [worry]ceśt́á [endeavour]mamatá [mine-ness, love]dambha [vanity]viveka [conscience, discrimination]vikalatá [mental numbness due to fear]ahaḿkára [ego]lolatá [avarice]kapat́atá [hypocrisy]vitarka [argumentativeness to point of wild exaggeration]anutápa [repentance]The vishuddha cakra:śad́aja [sound of peacock]rśabha [sound of ox]gándhára [sound of goat]madhyama [sound of deer]paiṋcama [sound of cuckoo]dhaevata [sound of donkey]niśáda [sound of elephant]oṋm [acoustic root of creation, preservation, dissolution]hummm [sound of arousing kulakuńd́alinii]phat́ [practication, i.e., putting a theory into practice)]vaośat́ [expression of mundane knowledge]vaśat́ [welfare in the subtler sphere]sváhá [performing noble actions]namah [surrender to the Supreme]viśa [repulsive expression]amrta [sweet expression]The lunar plexus, or ájiṋá cakra:apará [mundane knowledge]
சேசாத்திரி
----You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
//நாம் பொருட்கல்வி தற்கல்வி இறைக்கல்வி என்றவாறு கற்றுக் கற்று அகத்தே செரிந்திருக்கும் ஆணவமலத்தை அஞ்ஞான இருளைக் கடிய முடிவில் 'யான்மையை' நிறுத்துகின்ற ஞான அநதகாரத்தை இழந்து சுத்தமாகி இறைவனை அணுகுவோம்.//
SHIVOPADESHA 2
Átmajiṋánaḿ vidurjiṋánaḿ jiṋánányanyáni yánitu;
Táni jiṋánávabhásáni sárasyanaeva bodhanát.
[Self-knowledge is the real knowledge – all other knowledge is a mere shadow of knowledge; and will not lead to realization of the truth.]
“Self-knowledge is the real knowledge.
So we see that knowledge in the true sense of the term is self-knowledge. And all other aspects of learning which we wrongly designate as knowledge are only certain types of knowledge – either parávidyá or aparávidyá. For a human being, parávidyá is essential; but aparávidyá cannot be ignored either. That is why people must cultivate parávidyá with all their minds, with all their hearts, with the whole of their beings. But at the same time, to successfully face the hard realities of this dusty earth, for prosperity in the material sphere, one will have to cultivate aparávidyá also. History, geography, the different fields of material science, psychology, geology, different branches of the humanities, etc., have all to be carefully studied. To promote the earthly well-being of the human race, literature, art and other harmless means of entertainment must be encouraged, and thereby all the potentialities of the human heart will be properly utilized. Then and only then will ideal human beings be created. Attaining self-knowledge through parávidyá, those ideal human beings will move towards their final destination, the Supreme Benevolence, and merge in the sweetest ocean of bliss for eternity. This is the real life of human beings – this is the ideal life.
5 June 1982, Patna, Published in: Namah Shiváya Shántáya
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
2013/3/13 K. Loganathan <k.ula...@gmail.com>//எல்லாமாக நிற்கின்ற இறைவனை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாம் என்றும் சான்றோர்கள் கூறியுள்ளனர். 'ஆன்மா' என்பது இறைவன் அல்ல. எப்படி?//ஆன்மா இறைவன் அல்ல என்றால் அவன் எல்லாமாகி நின்றவனாக இருக்க முடியாது. அங்கேயே இந்த கருத்து அடிபட்டு போகின்றது.//இப்படி பொருட்கல்வியில் தொடங்கி தற்கல்விக்குப் பெயர்வது, பிறகு அதிலிருந்து இறைகல்விக்குப் பெயர்வதும் பிறகு முடிவில் கற்றலே வேண்டப்படாது அதனைக் கடப்பதும் நடக்கின்றனவே. ! எப்படி?//Subjective approach through objective adjustment. காட்சிப் பொருளுலகிற்கு ஏற்ப வாழ்க்கை நடையை அமைத்து அகம்நோக்கிய பொருளை நாடிஅணுக வேண்டும் என்பது தான் ஆனந்த மூர்த்தியின் அறிவுரை. உலகைப் புறக்கணித்துவிட்டு காட்டிலும், மேட்டிலும் உட்காருங்கள் என்பதல்ல அவர் கருத்து.// இங்கு எல்லாம் அறிந்தப் பொருளாக இருக்கக்கூடியது ஆன்மா (self) அல்ல , அந்த ஆன்மாக்களுக்கு அருள் புரிந்த வண்ணம் இருக்கும் இறைவன் தான. மலத்தால் பந்திக்க்பட்ட ஆன்மா கற்றுக் கற்று ஆணவ மலத்தின் பிடியிலிருந்து விடுபட்ட் சுத்தமாகி இறைவனோடு பிரிப்பின்றி அநந்நியமாக நிற்கத்தான் எல்லாமறிந்த ஒன்றாகின்றது. இது இறையருளால் நடக்குமே அன்றி வேறு வழியில் அமையாது என்றே நினைக்கின்றேன்.= உலகன்//இது துவைதம் போல் ஆகிவிடுகின்றதே. நீரோடு நீர் தான் சேரும் மண்ணெண்ணெய் சேரவே சேராது. இரண்டன் தன்மையும் வேறுவேறு.அப்படியானால், இறைவனோடு சேர வேண்டுமானால் அதுவும் தன்னளவில் இறைப் பண்பைக் கொண்டதாகத் தானே இருக்க முடியும். ஆக ஆன்மாவும் இறைவனும் ஒரே தன்மை பெற்றிருந்தால் மட்டுமே சேர முடியும் என்று புரிகின்றது. இது பரமாத்மாவும் ஆத்மாவும் ஒன்றே என்பதைத் தானே உணர்த்துகின்றது. இதன் படியும் ஆன்மா இறைவன் அல்ல என்ற கருத்து அடிபட்டு போகின்றதே.
சேசாத்திரி--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2013/3/13 K. Loganathan <k.ula...@gmail.com>
//இங்கு தான் மெய்ய்றிவு கோட்பாடுகள் இடிக்கின்றன. தாங்கள் காட்டும் ஆனந்த மூர்த்தி அவர்கள் உலகம் பொய் என்ற பழைய மாயாவாதம் கூறாது ஆனால் அதேபொழுது அநாதிப் பொருளியலில் "ஒன்றே பொருள்' என்றவாறு ஏகாத்துவிதம் பேசுகின்றவர் போலும்//ஆனந்த மூர்த்தி ஆதிசங்கரரின் மாயாவாதத்தை, பிரம்மவாத்தை ஏற்பவர் அல்லர். ஆதி சங்கரர் இந்த ஜகத்து பொய் என்றார். அதை ஆனந்த மூர்த்தி தவறு என்கிறார். பிரம்மமும் மெய் இந்த ஜகத்தும் மெய் ஆனால் அது சார்பு மெய் என்கிறார். இதாவது அந்த பிரம்மம் தன் கற்பனையை நிறுத்திக் கொண்டால் மட்டுமே இந்த ஜகத்து பொய் என்று ஆகும் என்கிறார்.அவருடைய படைப்புக் கொள்கை தனியானது அதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். இங்கே ஒரேஒரு சொற்பொழிவை கொடுகிறேன் அவர் ஆதிசங்கரரின் அத்துவைதர் அல்லர் என்பதற்கு.Vraja Krsna and Vishuddha Advaetavada – 1 (Discourse 10)26 October 1980, CalcuttaThe subject of today’s discourse is Vraja Krśńa in the light of Vishuddha Advaetaváda.(1) The usual name of the Vishuddha Advaetaváda school of philosophy is Uttara Miimáḿsá Darshana. It was originally propounded by Vádaráyańa Vyása, yet it was developed by Shankaracharya, and more than ninety percent of it was influenced by Shankaracharya’s Máyáváda [the Doctrine of Illusion]. Needless to say, Vishuddha Advaetaváda and Máyáváda emerged long after the advent of Vraja Krśńa.There is no scope to discuss Vishuddha Advaetaváda or Máyáváda in great detail here, nor is it necessary to do so. Its chief contention is Brahma satyaḿ jaganmithyá jiivah Brahmaeva náparah – “Brahma alone is real; the jagat [the creation] is false or illusory; all jiivas are nothing except Brahma.” Later I will explain what is really meant by the term Brahma, and what is meant by “Brahma alone is real.” I will also explain how they interpret the concepts of jagat and mithyá. But just now I will discuss jiivah Brahmaeva náparah – “all jiivas are nothing except Brahma.”Jiivas are finite entities, handicapped by microcosmic limitations, suffering from numerous imperfections and weaknesses. People err all the time on account of their ingrained psycho-spiritual weaknesses. They often commit errors unknowingly and then realize that they have acted improperly and feel repentant. Sometimes they do not repent at all and sometimes they do not even realize their mistakes, what to speak of repent. These are the inherent imperfections, the ingrained weaknesses, of the microcosm. No right-minded person can deny this. Had all the microcosms been Brahma, such digressions would never have been made. Thus the contention that all jiivas are Brahma is a glaring defect of Vishuddha Advaetaváda in the practical sphere. If, even after seeing this serious flaw in their philosophy, they still contend that the philosophy is true, does it not amount to hypocrisy?If after realizing the ingrained defects of the microcosm someone argues that they are not actually defects in practice, but only appear to be so due to the influence of Máyá, then the question arises, what is this Máyá? Máyá is explained as aghat́ana ghat́ana pat́iiyasii Máyá [“the dexterous hand of Máyá that can even create things impossible to create”]. Advaetaváda [non-dualism] contends that in reality nothing happens, but Máyá works in such a dexterous way that it seems as if something is happening. She who is very dexterous in this business of making what is not happening seem that it is happening, is known as Máyá. Suppose, for example, that Calcutta is non-existent, but due to the influence of Máyá appears to exist. If Máyá can make something appear, then where did this something come from? The city of Calcutta must have come from either something or nothing. If it appeared out of nothing, then that nothing must have a negative existence; and if it appeared out of something then that something must have a positive existence. Whether it is positive or negative in character, it is, after all, existence. If everything except Brahma is false then this existence is also false. So it logically follows that Máyá has built the city of Calcutta out of false materials. The whole thing seems impractical.Now, if one contends that Máyá has built something out of false materials then one must admit the existence of Máyá. By admitting the existence of Máyá in this way one recognizes the existence of two entities: Brahma and the miracle-creating Máyá. Brahma exists along with the dexterous Máyá which makes nothing appear as something – non-existent Calcutta as existent Calcutta. So how many entities are there? Two. Then is this advaetaváda [non-dualism, monism] or is it dvaetaváda [dualism]? Monism surrenders to dualism and thereby digs its own grave.To avoid the stigma of self-contradiction, the proponents of Máyáváda go one step further and declare that Máyá is mithyá svabhává; that is, Máyá also is unreal. It is the folly of madmen to claim on the one hand that whatever we perceive is the creation of Máyá, and on the other hand that Máyá Herself is unreal. Hence Máyáváda is full of contradictions from beginning to end. This sort of error is called pramáda in Sanskrit: error in the beginning, error in the middle and error in the end. The entire advaetaváda is pramádagrasta [full of errors].Jiiva Brahmaeva náparah. It is as if Máyá was trying to convince the jiivas, “You are jiivas with bodies of flesh and blood, but living in a non-existent Calcutta, and those physical bodies are also unreal. You think you are jiivas, but actually you are Brahma.” They claim that you are unreal because you have been created by Máyá, but in the next breath they claim that Máyá Herself is unreal. Thus the entire philosophy is self-contradictory in nature. When one tells a lie, one is forced to concoct hundreds of additional lies to protect oneself from the stigma of falsehood. In exactly the same way, the proponents of Máyáváda have had to concoct one lie after another to protect their untenable position.Once a certain mahápuruśa (ஆதிசங்கரர்) who happened to be an orthodox Máyávádin was walking along the road in Kashi [adjacent to Varanasi]. The popular saying goes that Kashi is famous for four things, for śánŕ, ránŕ, sinŕi, sannyásii – the bulls which throng the streets; the many widows; the stairs which one has to climb up or down every few metres; and the thousands of itinerant monks – and that in Kashi one should carefully avoid these four things. Anyway, one morning a wild bull suddenly started to charge that mahápuruśa, so he ran away as fast as his legs could carry him. A logician who happened to be standing nearby asked the mahápuruśa, “Well sir, if you say that this world is unreal, then the bull is also unreal, so why are you running in fear?” That mahápuruśa would not accept any defeat in logic and replied, “My running away is also unreal.” This is the way things went on for many centuries.Though not so relevant, it would be good to mention one thing here. In those days, Baoddha [Buddhistic] Shúnyaváda was the dominant school of thought. It was a kind of nihilism. This philosophical doctrine had left the people cynical and brought them to the brink of disaster. In order to eliminate Shúnyaváda by any means, the word Brahma was used in place of the word Shúnya. This was not the Brahma as understood by genuine spiritualists, rather, it was merely an equivalent of the term Shúnya. It was nothing more than that, and this has been stated in clear terms. Shankaracharya said, Yathá shúnyavádináḿ Shúnyaḿ Brahma Brahmavidáḿstathá – “The Brahmavádins use the term Brahma in the same way as the nihilistic Shúnyavádins use the term Shúnya.”To use the term Brahma in this way is acceptable neither to a philosopher nor to a devotee. If advaetaváda contends that this manifested universe has emanated from the One and will return to the One, that this plurality has evolved from the Supreme Singularity – Ekaḿ Sad vipráh bahudhá yad vadanti [“The Supreme Entity is one, but intellectuals explain It in various ways”] – and if they present thousands of similar arguments, then their contention will not stand in jeopardy. But if, while trying to justify the existence of this kind of Brahma (the Shúnya of nihilism) they deny the existence of any other entity or idea operating in the psychic, physical or psycho-spiritual spheres, then it is unmitigated foolishness. Regarding this, Jayanta Bhatta, the famous scholar and courtier of the Kashmiri king, Shankar Varma, said,Yadi távat advaetasiddheh pramáńam asti, tarhi tadeva dvitiiyamiti nádvaetam atha násti pramáńam. Netaráń advaetam aprámáńikáyá siddherabháváditi mantrárthavádottha vikalpamúlam advaetavádaḿ parihrtya tasmád upeyatámeśa padárthabhedah pratyakśa liuṋgágamágamyamánah.The first part of his observation is quite correct. The fallibility of advaetaváda has been clearly shown. Only the portion upeyatámeśa padárthabhedah is debatable. The fallibility of advaetaváda and its uselessness in the field of dharma are bound to be accepted by all. Advaetaváda can be compared to unalloyed gold which itself is of no practical use. The scholar argues, “If you contend that there are pramáńas [proofs] in support of advaetaváda, then you are obviously supporting dvaetaváda [dualism]. Advaetaváda on the one hand, and its supporting logic on the other hand, are two entities, and so it is dualism. If you say ‘No, my advaetaváda is not based on any valid logic, it is only advaetaváda,’ then I will not accept advaetaváda! Without proof I will not accept it.” That is why Jayanta Bhatta declares that advaetaváda is based upon jugglery of words and philosophical rigmarole and as such does not deserve to be accepted. He asserts in his defense, upeyatámeśa padárthabhedah; that is, people should acquire knowledge according to its three valid sources (direct perception, inference and authority) as propounded by Sáḿkhya or Nyáya philosophy. However, one should not base one’s deductions on Nyáya philosophy, which contends that the jiivas and Parama Puruśa continue to remain separate entities, that the Supreme Entity does not attract the jiivas towards Himself nor do the jiivas attract the Supreme entity towards themselves. This is opposed to the fundamental principles of science. According to science, every entity attracts every other entity, sometimes knowingly, sometimes unknowingly. That Entity whose irresistible attraction frees the jiivas from bondage is Parama Puruśa.Let us now turn to Vraja Krśńa (as I mentioned earlier that we would). Vraja Krśńa is not the Brahma of advaetaváda. Neither is He any worldly entity; He is an entity beyond the world. And jiivah Brahmaeva náparah. In fact, Vraja Krśńa is none other than Parama Puruśa Himself. This is something which can be readily demonstrated. I told you a little while ago that every entity attracts every other entity. Due to this force of mutual attraction, the stars, planets, meteors, and nebulae continue to move in their respective paths. In the event of the slightest weakening of this force the whole cosmological order would lose its balance and fall like a meteor. Just as planets continue to move around the sun in their respective orbits due to the force of attraction, in exactly the same way, all created beings move round Parama Puruśa, my beloved Krśńa, knowingly or unknowingly. Some love Him consciously, others unconsciously. Some love Him while thinking “I don’t love;” some sincerely believe in Him and love Him passionately, yet nonetheless continue to argue about Him because they want to find more and more justification for their love of Him. Even those who say “I don’t love Him” have love for Him, but their love is a negative love.There are devotees who long to hear the name Rádheshyáma [a name of Lord Krśńa] over and over again. So if anyone says “Rádheshyáma,” they pretend to be extremely angry. Seeing how irritated they have become, the utterer of “Rádheshyáma” takes delight in repeating it again and again. The devotees are also delighted for they get a chance to hear the Lord’s name spoken so many times. This is why they so cleverly feign anger.There is a story in the Rámáyańa. Sita was surrounded by a number of rákśasiis(2) who were guarding her in the Ashoka forest. Ravana, being obsessed with the annihilation of Rama, his arch-enemy, repeated Rama’s name over and over again, saying that he should be defeated in battle. To repeat Rama’s name was actually his inner desire. But he had instructed Sita’s rákśasii attendants to tell her not to take the name of Rama. However, by telling Sita, “Sita, Rama’s name is not to be uttered,” they were also unwittingly repeating the name of the Lord: Sita-Rama.All human beings love Parama Puruśa, some consciously, some unconsciously. A healthy person who delivers fiery lectures on atheism during a symposium quickly apologizes to the Lord when he starts getting heart palpitations. “O Parama Puruśa, You know how deeply I love You,” he says; “I only said those things to help the theists to find more points in favour of God.” Then and there the palpitation stops and he says, “O Parama Puruśa, this shows that You love me whether I speak for theism or not. In the future, I’ll criticize You more, just to save my prestige among my friends, but I’ll beg Your forgiveness before doing so.” Similarly, there are many leaders today who accept money from the capitalists to get their work done, but tell the people, “We hate the capitalists, we hate the capitalists.” But behind the scenes they tell the capitalists, “We are just telling the people these things. It will be to our mutual benefit.” The atheist psychology functions like this.All created beings in the universe move around Parama Puruśa for their very survival, otherwise their existence would be jeopardized. The centripetal and centrifugal forces can never coexist. So the contention of Vedanta philosophy (Vedanta is another name for Vishuddha Advaetaváda), jiivah Brahmaeva náparah [“all jiivas are nothing except Brahma”] is downright falsehood. In reality, the jiivas are moving around Him. Parama Puruśa is the shelter of the jiivas, and the jiivas are sheltered in Him. When devotion is aroused in the jiivas, that is, when the centripetal force becomes predominant, the jiivas rush towards the Nucleus, decreasing their radius with every surge in devotion. The closer one comes to Parama Puruśa, the more the devotees feel that Krśńa is not a man, but a bháva [devotional sentiment born out of psycho-spiritual parallelism] personified. The more one advances on the spiritual path, the more one realizes that Vraja Krśńa is not only a bháva, but is the life of one’s life. As one advances even further one realizes, “He is not only the life of my life; I have no existence apart from Him. My existence depends upon His existence alone. Vraja Krśńa exists and due to this, I exist.”So we find that Vishuddha Advaetaváda is a defective, illogical and impractical philosophy. When human beings realize that their hearts can be illuminated by the spiritual effulgence of Vraja Krśńa they turn away from the arid desert of philosophical rigmarole. Vishuddha Advaetaváda is like last week’s newspaper – it carries no importance.Vraja Krśńa, resplendent in His own glory, has been illuminating the minds of all jiivas of the universe, and thereafter attracting them to Himself. This is a never-ending process. It started in beginninglessness and will merge into endlessness. Vishuddha Advaetaváda shines for a few days in the world of logic, but is subsequently extinguished in the folds of darkness. Vraja Krśńa, however, will continue to exist as the source and nucleus of the endless creation, and at the same time will continue to draw all unto Him by the force of His irresistible charm and universal love. Vishuddha Advaetaváda came into existence as a school of philosophy only recently, just 1500 years ago. But Krśńa existed even before philosophy emerged, long before human beings were born on the soil of the earth, and will remain in future. He will still remain when not even a single microcosm remains alive on this planet. He is eternal and infinite. He is established in His own matchless glory; He is the embodiment of effulgence; He is vast. Vishuddha Advaetaváda concedes defeat to Vraja Krśńa even more ignobly than does Sáḿkhya philosophy. It cannot approach the greatness of Vraja Krśńa. Moreover, it has not the least capacity to taste the sweetness of His great personality.Footnotes(1) Doctrine of Pure Non-Dualism. –Eds.(2) In mythology, a demoness. The terms rákśasa and rákśasii were used by the Indo-Aryans to refer derogatorily to the indigenous Indians, especially the Dravidians (in the context of the Rámáyańa, the Dravidians of Lanka). –Eds.26 October 1980, Calcutta, Published in: Namámi Krśńasundaram, chapter: vraja Krsna and Vishuddha Advaetavada 1Discourse10
நான் இவ்விரு பாக்களில் சொல்லப்பட்ட நிலையை எய்தியுள்ளேன் ஆனால் omniscient நிலையை எய்தியதில்லை.1-22. Átmani mahadprańáshe nirguńásthitih
nirvikalpasamádhih vá.[When the mahat merges into the Átman, it is called nirguńásthiti (state of objectlessness) or nirvikalpa samádhi (the trance of indeterminate absorption, or total suspension, of the mind)].]
Purport: The totally-absorbed state of the mahat, after merging that “I” feeling in the Citishakti [Cognitive Principle] – rather than doing the sádhaná of installing the mahat in the Macrocosmic Mahat – is nirguńásthiti [a state of objectlessness] or nirvikalpa samádhi [the trance of indeterminate absorption, or total suspension, of the mind]. Due to the absence of any guńa, this state is called nirguńásthiti, the state of objectlessness. This state is verbally inexpressible because…
1-23. Tasyasthitih amánasikeśu.
[This state (of nirvikalpa samádhi) is beyond the mind.]
Purport: This state of objectlessness being beyond the orbit of the mind, it is not mentally apprehensible.
அன்பரேஇத்தகைய உயர் நிலைகளை எய்தியுள்ளமைக்கு எனது வாழ்த்துக்கள். ஆயினும் கீழ் வரும் கருத்தினைப் பற்றி பல கேள்விகள் எழாமல் இல்லை;
[Átmajiṋánam means a stage of objectlessness<Due to the absence of any guńa, this state is called nirguńásthiti, the state of objectlessness. This state is verbally inexpressible >]//குணங்கள் ஆன்மாவில் இல்லாத்தால் objectlessness எனும் நிலையா? அல்லது 'அது' எனும் சுட்டு இல்லாமையால் இந்த நிலையா?//இங்கு காட்சிப்பொருள்இல்லாமை (objectlessness) என்பது மனம் தன் சித்த தத்துவம், அஹம்தத்துவம், புத்தித்த்துவம் எனும் மகதத்துவம் ஆகிய தன் மூன்று இயல்புகளையும் ஆத்மாவில் சேர்த்து விட்டதால் (withdrawn into atman) அது தன்னை இழக்கின்றது. இதாவது, கடலில் சேரும் ஆறு தன்னுடைய ஆறு எனும் தனி அடையாளத்தை இழந்து கடலாகவே ஆகிவிடுவது போல மனம் ஆன்மாவாகவே ஆகிவிடுகின்றது.இங்கே சுட்டுவதற்கு இரண்டாம் பொருள் ஒன்று இல்லை. அப்படி சுட்ட வேண்டுமானால் இரண்டாவதாக ஒரு பொருள் தேவைப்படுகிறது. அவ்வாறான இரண்டாம் பொருள் இல்லாததால் ஆன்மா தான் தானாகவே (ஒருமையாகவே) ஆகிவிடுகின்றது.//This state of objectlessness being beyond the orbit of the mind, it is not mentally apprehensible.//
உணர்வு என்பது மனம் உள்ளமட்டில் தான். இந்த நிர்விகல்ப நிலையில் மனம் தான் இருப்பதையே உணராது. எனவே அதனால் எந்த குணங்களையும் உணரமுடியாது. இதனால் இது நிர்குண நிலை எனப்படுகின்றது. இந்த நிலையை சொற்களால் விவரிக்க முடியாது என்பது தான் உண்மை. இது முழு ஒருமை நிலை. இது ஆதிசங்கரரின் தூயஅத்துவைதத்தினும் வேறுபட்ட அத்துவைதம் ஆகும்.
இது தத்துவ விசாரணைக்கு அப்பாற்பட்ட நிலை. விளக்கிச் சொல்ல முடியாது எனும் போது தத்துவ விளக்கத்திற்கு அங்கே தேவை எழாது.இதைத் தான் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பர்.இந்த நிர்விகல்ப நிலையை எப்படி பெறலாம் என்றால். முதலில் உலகியல் சிந்தனை அற்று இருக்க வேண்டும். இது சத்சிதானந்தர் உரைக்கும் பதஞ்சலியின் முறை. இந்த நிலையோடு இருந்தபடியே பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். அதன் பின் தான் உலக உருண்டை மீது அமர்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டு தன் இரு கால் கட்டை விரல்களிலும் cosmic energy சின்னஞ்சிறிய ஒளிக்கற்றையாக நுழைவது போல் உருவகப் படுத்த வேண்டும். அந்த ஒளியை அப்படியே மெதுவாக முட்டி, தொடை வழியே ஊடுருவி வருவதாக எண்ண வேண்டும். பின் அந்த ஒளி இரண்டு புட்டமும் கூடுகின்ற மூலாதாரத்தில் இணைவதாக எண்ண வேண்டும். அப்படியே அந்த ஒளியை முலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா வரை ஏற்றிக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். ஆக்ஞாவில் நிறுத்திய பின் அந்த ஒளியை பார்க்காமல் ஒளியைச் சுற்றி வெற்றாக உள்ள புறப்பகுதியை பார்க்க வேண்டும். இந்த செய்முறை மகரிஷி அஷ்டவக்கிரரால் தன் மாணாக்கனான வங்க மன்னன் அலார்க்கணுக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன் சொல்லித் தரப்பட்டது. இதைத் தான் ஆனந்த மூர்த்தி தன் ஆனந்த மார்கிகளுக்கு சொல்லிக் கொடுத்தார். இது பரமரகசியமாய் இன்றளவும் வைக்கப்படுகின்றது.இந்த செய்முறையால் சிந்தனையை நிறுத்திய ஒருவரால் தன் உடலையும் மனதையும் மறக்க முடிகின்றது. மனதை ஆன்மாவில் சேர்க்க முடிகின்றது. மனம் ஆன்மாவில் சேர்ந்தால் காட்சிப் பொருளற்ற நிர்குண சமாதி கிட்டும். இதையே ஆன்ம ஞானம் என்கின்றனர்.சர்க்கார் எப்போதும் சொல்லுவது என்வென்றால் அறிஞர்களால் அடைமுடியாத இந்த நிலையை படிப்பறிவில்லாத ஆட்டிடையன் அடைந்துவிடுவான். ஏனென்றால் அவனுக்கு கேள்வி விசாரம் என்பதே இல்லை. அடக்கமுடன் சொன்னதை சொன்னபடியே செய்வான். அறிஞன் எப்போதும் ஓயாத கடல் அலையாய் கேள்விகள் கொண்டிருப்பான் அவனால் இந்நிலையை அடையவே முடியாது ஏனென்றால் இந்த கேள்விகளால் அவன் சிந்தனை அடங்காது கொந்தளிப்புற்று இருக்கும். இவ்வகையை சார்ந்தவர்கள் தாம் மடாதிபதிகளும் சொற்பொழிவாளர்களும். இவர்கள் விண்டவர் கண்டிலர் வகையராவர்.
சேசாத்திரி
On Thu, Mar 14, 2013 at 5:55 PM, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
நான் இவ்விரு பாக்களில் சொல்லப்பட்ட நிலையை எய்தியுள்ளேன் ஆனால் omniscient நிலையை எய்தியதில்லை.1-22. Átmani mahadprańáshe nirguńásthitih
nirvikalpasamádhih vá.[When the mahat merges into the Átman, it is called nirguńásthiti (state of objectlessness) or nirvikalpa samádhi (the trance of indeterminate absorption, or total suspension, of the mind)].]
Purport: The totally-absorbed state of the mahat, after merging that “I” feeling in the Citishakti [Cognitive Principle] – rather than doing the sádhaná of installing the mahat in the Macrocosmic Mahat – is nirguńásthiti [a state of objectlessness] or nirvikalpa samádhi [the trance of indeterminate absorption, or total suspension, of the mind]. Due to the absence of any guńa, this state is called nirguńásthiti, the state of objectlessness. This state is verbally inexpressible because…
1-23. Tasyasthitih amánasikeśu.
[This state (of nirvikalpa samádhi) is beyond the mind.]
Purport: This state of objectlessness being beyond the orbit of the mind, it is not mentally apprehensible.
--
2013/3/16 K. Loganathan <k.ula...@gmail.com>
//இறைவனுக்கு மனம் இல்லை ஆனால் உணர்வு இல்லை என்று கூற முடியுமா? நாம் என்ன சொல்ல வேண்டும் என்றால் மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்பன போன்ற அந்தகரணங்களைக் கடந்து ஆன்மா நின்றால் அதற்கு சுட்டுணர்வு இல்லாது போகும், அந்நியமின்றி அனைத்தையும் ஒன்றித்து அறியும் இயல்பு வந்தமையும் அபபொழுது அது இறைவனோடும் ஒன்றித்து அவன் அறிவினோடு தன்னறிவினை ஒன்றாக்கி வேறற நிற்கும் என்று தான் கூற முடியும்//This state (of nirvikalpa samádhi) is beyond the mind. இந்த வரி மனதைப் பற்றித் தான் குறிப்பிடுகின்றது. இறைவனை பற்றி அல்ல. நிர்விகல்பம் எனும் நிர்குணத்தில் மனம் என்ன நிலையை அடைகின்றது என்பதற்கு தான் விளக்கம் தந்துள்ளேன்.//இங்கு சைவத்தின் 'நின்மலத்துவமும்' தாங்களும் ஆதிசங்கரர் வழி செல்லாத வேறு பல வேதாந்திகளும் கூறும் 'நிர்குணத்துவமும்' ஒன்றல்ல வேறு.//சரி அவ்வாறே இருக்கட்டும்.
//'நின்மலத்துவம்' ஆன்மாவின் ஓர் உண்மையான இருப்பு நிலையாக அநுபவ நிலையாக இருக்க, 'நிர்குணத்துவம் தற்குறிப்பின் ஓர் கற்பித நிலையாகும்.( state of auto suggestion) இவ்வாறு பல இருப்பு நிலைகளில் ஆன்மா ஊழ்கம் போன்ற ஓர் உத்தி மூலம் தன்னை இருத்தி மகிழலாம். ஆனால் உண்மையாகாது. உண்மையான இன்பமும் அமைதியும் கூடி வாராது. காரணம் எந்த குணமும் இன்றி உணர்வு இல்லை. ஏதோ ஓர் உணர்வு இருக்க, உடல் அற்ற நிலையில் கூட ஓர் குணமும் இருக்கின்றது. ஆக நிர்குண நிலை எந்த குணமும் அற்ற நிலை ஓர் கற்பித நிலையாகவே முடிகின்றது.//
அனுபவம், உணர்வு என்பதெல்லாம் மனதிற்கு தான். அந்த மனமே தன் தனி அடையாளத்தை இழக்கின்ற போது அதனால் என்ன அனுபவத்தை உணர்வைப் பெறமுடியும்? சொல்லுங்கள். நிர்குணம் என்பது கற்பிதம் அல்ல.
//அருளே தானாக அன்பே தானாக நிற்கும் இறைவனும் நிர்க்குணனும் அல்ல. அன்பே சிவன் என்று திருமூலர் கூறும் போது, அவன் நிர்க்குணன் என்று கூறவில்லை, இந்த 'அன்பே தானாகும் நிலை நின்மல நிலையும் ஆகும். ஆன்மாக்கள் அடைய வேண்டிய இருப்பு நிலை (existential state) நிமலத்துவ நிலையே தவிற கற்பித நிர்க்குண நிலை அல்ல//
நிர்குணம் என்பது படைப்பு என்ற நோக்கில் நின்று சொல்லப்பட்டது. இதாவது சத்துவ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களாகிய பிரகிருதி அல்லது மாயை அடங்கி இருக்கின்ற நிலையில் இறைவன் குணமிலியாக இருப்பதால் நிர்குணனாக இருக்கின்றார்.இறைவனின் சொந்த விருப்பில் மாயை அவர் மீது தன் குணங்களை ஏற்றி தாக்குறுத்தும்(influence) போது இறைவன் தன்னில் மாறுபட்டு குணமுள்ளவனாகிறான். இது சகுணம் எனப்படுகின்றது. இந்த சகுணமும் பிரகிருதியும் இணைந்து தான் வானம், வளி, நெருப்பு. நீர், மண் உண்டாகியது. ஆனந்த சூத்திரத்தின் முதல் இரு பாக்கள் இதையே குறிக்கின்றன.1-1. Shivashaktyátmakaḿ Brahma. [Brahma is the composite of Shiva and Shakti.]
1-2. Shaktih Sá Shivasya Shaktih. [Shakti (the Operative Principle) is the shakti (force) of Shiva.]
//கற்று கற்று மேம்பட்டு அகத்திலிருந்து இந்த மலங்களை நீக்கினால் தான் அவை சுத்தமாகி, நிமலமாகி அதனால் இறைவனோடு ஒன்றித்து நின்று இன்பமே தூய்க்கும் என்பது தான் உண்மை. இங்கு கற்பிதமாக எதுவும் இல்லை - உலகன்//
வினைப்பயன்களை அனுபவித்து பக்குவம் பெறுவதையா இந்த கற்றல் குறிக்கின்றது? ஒன்றித்து இன்பம் துய்த்தல் என்றால் தன் தனி அடையாளத்தை இழக்காமல் இருத்தல் என்றல்லவா பொருள்படுகின்றது!! ஆனந்த மூர்த்தி, ஆனந்தம் (பேரின்பம்) என்பது இன்பமும் துன்பமும் அற்ற அதற்கும் மேலான ஒரு நிலை என்கிறார். இது தான் நிர்விகல்ப சமாதி நிலையில் ஏற்படுகின்றது.
சேசாத்திரி
--
அன்பரே
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆநந்த மூர்த்தி அவர்களின் கட்டுரையில் பதியினைப் போல் பசு பாசம் அநாதி எனும் திரியத்தீய அநாதிப் பொருளியல் இல்லை. இதனால் தங்கள் குரு அறிவினை அனுத்துவமாக்கும் ஆணவ மலத்தை அறிந்தவராக இல்லை, பிரகிருதி மாயைக்கு வேறாக மாறாக ஆணவ மலமும் ஆன்மாவை பந்தப் படுத்தி நிற்கின்றது என்று கூறவில்லை. அதனால்தான் நின்மலத்தைப் பற்றி பேசுவது ஒழித்து பரகிருதி மாயை பந்தத்தின் காரணமாக பலவகையான குணங்களைப் பற்றியும் அவற்றிலிருந்து நீங்கி நிர்க்குணத்துவம் அடைவது பற்றியும் அதற்குரிய சாதனங்களைப் பற்றியும் மிக விரிவாகப் பேசுகின்றார். இதற்கு வேறான இன்னும் ஆழமான நின்மலத்துவத்தைப் பற்றி பேசவில்லை.
என் இப்படி என்று ஆராய வேண்டிய கட்டாயம் இங்கு உண்டு. ஏனெனில் ஆளுக்கொரு அநாதிப் பொருளியல் இருக்க முடியாது. ஆதிசங்கருக்கு ஒன்று இராமாநுஜருக்கு ஒன்று திருமூலருக்கு ஒன்று மெய்கண்டாருக்கு ஒன்று உங்கள் ஆநந்த மூர்த்திக்கு ஒன்று என்று இருக்க முடியாது. ஆததிசங்கருருக்கு பரப்பிரம்மமே பொருள், பிறவெல்லாம் அல்ல என்றவாறு உபநிடதங்களை ஆதாரமாகக் கொண்டு ஏகாத்துவிதம் இருக்க, திருமூலர் தொடங்கி சைவர்கள் பதியினைப் போல பசு பாசம் அநாதி என்றவாறு திரியத்திய அநாதிபொருளே உண்மையானது என்று கொண்டு அதன் வழியேதான் வாழ்க்கைக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
தங்கள் குருவின் அநாதி பொருளியல் யாதென்று எனக்கு புலப்படவில்லை, ஆயினும் நிச்சயமாக அவர் ஆணவமலத்தை அநாதிப் பொருட்களில் ஒன்றாக கொள்ளவில்லை, ஆன்மா பிரகிருதி மாயையோடு பந்தப்பட்டு இருப்பதால் சிக்கல்கள் வேதனைகள், அதனின்று பலவகையான ஊகக் கணக்கில்( intuitinal practices) விடுபட வேண்டும், சுதந்திரமாக வேண்டும் என்று கூறுவதகத் தெரிகின்றது.
இது பழைய சாங்கிய கோட்பாடு போன்றும் அவர் பரிந்துரைப்பது ‘கைவல்யம்’ பெறுவது பற்றியும் என்று எனக்குப் படுகின்றது.
சைவர்கள் ஆன்மாவை பந்தித்து சிற்றறிவனதாக்குபவை ஆணவம் கன்மம் மாயை என்பர். இதில் ஆணவ மலம் சகச மலம் என்றும் கன்மம் மாயை போன்றவை ஆகந்துக மலம் என்றும் கூறுவர். இங்கு மாயை என்பது ‘பிரகிருதி’ மாயையும் உள்ளடக்கிய தூமாயை. இதுவே சுத்தமாயை அசுத்த்மாயை என்றெல்லாம் பிரியும் விரியும் சைவர்கள் இத்தகைய தத்துவங்களை எல்லாம் 36 என்றும் பிறகு அதனையும் பகுத்து வகுத்து 96 என்றும் இன்னும் பலவாறும் கூறுவர். சித்தர்கள் சிலர் இதனையும் விரித்து நூற்றுக்கு மேற்பட்ட தத்துவங்களை வரிசை படுத்துவர்.
ஏன் அநாதிபொருளியல் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டியது அப்படி இல்லை,?
வெவ்வேறு அணுமுறையில் வெவ்வேறு கருத்துக்கள். இங்கு திருமுலர் உள்ளுணர்வாக முன்மொழிந்த திரியத்துவ அநாதி பொருளியலை மெய்கண்டார் ஓர் மறுக்க முடியாத அனைவருக்கும் பொதுவாகிய ஒன்று என்று தக்க அணுமுறையில் தன் சிவஞான போதத்தில் நிறுத்தி பெரும் புகழ் பெற்றார். இந்த அற்பிதமான சாதனை வழியாக சமய வாழ்க்கையையே ஓர் அறிவியல் துறைபாற்பட்ட ஒன்றாக்கினார். வேதனை என்ன வென்றால் இதனை நாம் இன்னும் அறியமலேயே இருப்பது,
மெய்கண்டார் எப்படி இதனை சாதித்தார்? இரண்டு விசயங்கள் இங்கு,
முதலாவது அவர் ஆய்வுப் பொருளாக தேர்ந்தெடுத்தது அனைவருக்கும் பொதுவாகிய சுட்டுணர்வு அல்லது சுட்டறிவு,
இரண்டாவது எந்த சுருதியையும் பிரமாணமாகக் கொள்ளாது மெய்யறிவு ஆய்வினை நூலியல் அறிவியல் துறை ஆக்கியது.
“சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வு இன்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது சுதந்திரமின்றி நிற்றலான்’ என்ற கிளவியில் இவை இரண்டும் அடங்கி விட்டது. யார் இந்த நூலிய அறிவியல் முறையில் உலகத்தை ஆராய்கின்றார்களோ அவர்கள் சைவம் கூறும் திரியத்திய அநாதி பொருளியத்திற்கு வந்து நிர்குணத்துவம் பேசாது அதற்கு மேலான அன்பே தானாக நிற்கும் நிலையான நின்மலத்துவம் பேசுவார்கள்,.
இதனை இன்னும் விரிவாக அடுத்து விளக்குகின்றேன்.
உலகன்
2013/3/17 K. Loganathan <k.ula...@gmail.com>
// இந்த மனம் எப்படி தன் தனி அடையாளத்தை இழக்கும்? மனம் என்னும் அந்தக் கரணம் தனியான ஒன்று அல்லவே? அந்தக் கரணங்கள் நாங்கு. மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்பன அவை( mental modules) இவற்ரில் சித்தப் புகுதியே ஆழமான மூலப் பகுதி. அது அடங்கினால் தான் படிப்படியாக ஆங்காரம் என்றும் புத்தி என்றும் கடைசியில் ஐம்புலன்களோடு தொடர்புடைய் மனமும் அடங்கும். சித்தத்தில் மலம் இல்லாது போய் அது சுத்தமானால்தான் சித்தம் அடங்கும்//ஆனந்த மூர்த்தியின் ஆன்மிகக் கோட்பாடு தனிப்பட்டது (unique). ''நான் இருக்கிறேன்'' என்ற உணர்வு தான் மனதிற்கு அடிப்படை இதை புத்தி தத்துவம் அல்லது மகதத்துவம் என்பார். இதுவே மனதின் மிக நுண்ணிய (subtle)பகுதி. இதனினும் பருமையானது (crude) அஹம்தத்துவம், இதனினும் மிகப் பருமையானது சித்தம் என்பது. இந்த சித்தம் தான் புலன்களோடு புறஉலகோடு தொடர்புடையது.முதலில் மிகப் பருமையான இந்த சித்தம் அகம்தத்துவத்தில் ஒருக்கப்பட (withdraw) வேண்டும். பின்பு அந்த அகம்த்த்துவம் அதனினும் நுண்ணிய புத்தி தத்துவத்தில் ஒருக்கப்பட வேண்டும். இந்த மகதத்துவம் தான் சகுணபிரம்ம்ம் என்ப்படுகின்றது. ஏனென்றால் இதில் நான் இருக்கிறேன் என்ற உணர்வு தவிர வேறு எந்த குணமும் இல்லை. இந்த மகத்த்துவத்தையும் கொண்டு போய் ஆன்மாவில் ஒருக்க வேண்டும். அப்போது மனம் தன் தனி அடையாளத்தை, இதாவது, 'நான் இருக்கிறேன்' என்ற உணர்வை இழக்கின்றது. இங்கே ஆன்மா மட்டுமே இருக்கின்றது. இது சகுணபிரம்மத்தினும் உணர்வான நிர்குண நிலை.சரி! சகுண பிரம்ம்ம், பிரகிருதி பற்றி என்ன சொல்கிறார் மெய்க்கண்டார். கீழே ஆனந்த மூர்த்தியின் ஆங்கில உரைIntuitional Practice and Its NecessityAn all-round effort for emancipation from the bondage of Prakrti is sádhaná or intuitional practice.
The question now is to determine if complete emancipation from the bondage of Prakrti is possible. It would otherwise be only a waste of time to carry out intuitional practices (sádhaná). In an earlier chapter dealing with the creation, it was explained that the Qualified Supreme Entity (Saguńa Brahma), which was called Prajápati because of being under the influence of Prakrti (baddha puruśa), became free (mukta) from the bondage by carrying out intuitional practices (sádhaná) and was called Hirańyagarbha. It can thus be concluded that those under the bondage of Prakrti can attain freedom with the help of intuitional practice (sádhaná). Freedom from the bondage of Prakrti means attaining the nirguńa status. It is only then that one is completely emancipated from the bondage of Prakrti. Prajápati attained the status of Hirańyagarbha, that is, He became free of the bondage of Prakrti, only by doing sádhaná (intuitional practice). Emancipation from the influence of Prakrti is thus possible, and the only method of attaining it is sádhaná (intuitional practice).
The story of creation shows that in the phase of movement from crude to subtle the unit consciousness reflects itself clearly by taking shelter in a body made of the five rudimental factors derived from the Qualified Supreme Entity (சகுண பிரம்மம்). On its reflecting completely, the unit consciousness also gets a mind due to the qualifying influence of Prakrti. The three principles of Prakrti, sentient(சத்துவ), mutative (ரசோ) and static (தமோ), gave its mind the three functional forms of mahattattva, ahaḿtattva and citta, respectively. Citta is further projected through the ten physical organs or indriyas. This means that the unit consciousness, because of gradual increase in the qualifying influence of Prakrti, got metamorphosed as mahattattva or buddhitattva. Then with the increase of influence it became cruder, as ahaḿtattva, till finally it became even more crude as citta, and its citta, with the help of the ten physical organs or indriyas, started projecting in the form of crude physical actions.
The influence of Prakrti gained a hold on unit consciousness gradually, and hence in order to get out of Her hold the unit consciousness will have to retract gradually. It will have to first retract from citta to ahaḿtattva, then from ahaḿtattva to mahattattva; and finally the metamorphosed projection as mahattattva will have to be withdrawn into unit consciousness for emancipation from the hold of Prakrti. Thus intuitional practice is intended gradually to withdraw the qualifying influence of Prakrti so that She is no longer able to impose Her qualities on Consciousness.
It was said earlier that it is consciousness (puruśa - சகுண பிரம்மம்) in human beings which has to carry out sádhaná (intuitional practice). Hence the preliminary sádhaná (intuitional practice) has to be carried out by the consciousness metamorphosed as citta, by which this projection of consciousness retracts into ahaḿtattva. This leaves only ahaḿtattva and mahattattva. So the next entity to carry out sádhaná is the consciousness metamorphosed as ahaḿtattva. It is to free itself from the qualifying influence of the principle of Prakrti creating it by its dissolution into mahattattva. Thus only mahattattva or pure feeling of “I” remains. This is the stage of savikalpa samádhi where only mahattattva or pure “I” feeling indistinguishable from the Cosmic “I” remains. After this mahattattva carries out sádhaná and dissolves itself in the unit consciousness completely, freeing consciousness of the qualities imposed by the influence of Prakrti. It achieves emancipation from the bondage of Prakrti, and that is called nirvikalpa samádhi. Thus the sádhaná or intuitional practice that human beings have to carry out begins with citta, to be followed by ahaḿtattva and finally by mahattattva, which emancipates consciousness completely from the qualifying influence of Prakrti.
It is not easy to liberate mind from the qualifying influence of Prakrti. Human beings have a unit consciousness, and hence is it unit prakrti only which influences it? It is not so. The Consciousness in Nirguńa Brahma (Non-Qualified Supreme Entity) is not influenced by Prakrti because there She is the weaker counterpart. Since Infinite Prakrti is not able to influence Infinite Consciousness, unit prakrti will not be in a position to influence unit consciousness either. It would be incorrect to presume that in the qualified state of Brahma it is unit prakrti which qualifies the unit consciousness. If this is not so, which prakrti does qualify the consciousness, as without prakrti qualifying it there would be no Saguńa Brahma (Qualified Supreme Entity)? It may be assumed from this that two units of prakrti qualify one unit consciousness, as a single unit prakrti is the weaker counterpart of unit consciousness. This would also lead to the assumption that Infinite Cosmic Consciousness is being qualified by two Infinite Prakrtis. This is not logical and cannot happen. Prakrti is a unique force and it can never be divided into units or parts. Hence only Infinite Prakrti can influence every unit consciousness. If Infinite Prakrti qualifies every unit consciousness by Her infinite qualifying influence, then unit consciousness has to fight against Infinite Prakrti for emancipation, it has to fight against and defeat Infinite Prakrti for emancipation, and hence sádhaná is not an easy task.
Prakrti is a composite force which is always restless, and so the creation is ever-changing. All that is manifested in this Srśt́icakra [Cycle of Creation] is metamorphosed Cosmic Consciousness(சகுண பிரம்மம்), and hence changes in the Cycle of Creation also change the Cosmic Mind accordingly. That is, the Cosmic Mind also becomes restless, and that brings about changes in the flow of creation. But the changes in the flow of creation are slow and gradual, as Prakrti takes quite some time to bring about a change in the Infinite Mind. It is only because of Cosmic Consciousness being infinite that changes are gradual and not very quick. Even the ever-mutative Prakrti takes some time to bring about a rotation of the entire infinite Cosmic Mind in order to bring about a change. While bringing the Cosmic Mind under greater bondage, Prakrti also influences the unit mind, bringing about unfathomable restlessness and movement in it. Due to the complete influence of Infinite Prakrti, the unit becomes extremely disturbed and mutatory. The fickleness and ever-changing nature of the mind needs no description as everyone understands it well. This quality in the human mind is the sole gift of Prakrti, who imparts to all that She creates Her quality of perpetual restlessness.
The perpetual restlessness of Prakrti makes Her creation – the unit mind – also disturbed throughout its existence. At times or in some places it may be more agitated, while at others it may be less disturbed. Restlessness, being a quality imposed by Prakrti, will vary with the influence of Prakrti. The mind is less agitated or disturbed where the influence of Prakrti is less. Her influence is the least in mahattattva and the most in citta, and hence the former is less restless than the latter. Sádhaná or intuitional practice lessens the influence of Prakrti on unit consciousness, and with that the restlessness of mind also lessens. Prakrti alone is responsible for imparting disturbance to the mind, and with the waning of Her influence the vacillation of mind also lessens. Hence the vacillation of mind cannot be steadied unless unit consciousness is emancipated from the influence of Prakrti.
Steadying the vacillation of the mind and developing concentration of mind is the same thing. Concentration of mind is thus not possible as long as unit consciousness is not liberated from the qualifying influence of Prakrti. This is the aim of sádhaná or intuitional practice also. To concentrate the mind it would be necessary to liberate, first of all, its most exterior manifestation, the citta, from the influence of Prakrti. The next would be ahaḿtattva, and finally mahattattva or buddhitattva must be liberated from Her influence. The mind, spread in citta, ahaḿtattva and mahattattva, must gradually be withdrawn from them and then alone will it be concentrated. Thus concentration of mind is nothing else but sádhaná or intuitional practice, which liberates units from the influence of Prakrti.
அன்பரே
எனக்கு அதிக கால அவகாசம் இல்லாததால் பெரும் பெரும் கோப்புக்களை எல்லாம் படிப்பதற்கு நேரம் இல்லை, அதனால் இந்த மடலைப் போன்று சுருக்கமாக கருத்துக்களைத் தெரிவித்தால் தொடர்ந்து என்னால் இயன்றைக் கூறி விளக்கவும் மெய்யறிவு ஆய்வினை இன்னும் ஒருவாறு வளர்க்கவும் முயற்சிக்கின்றேன். இதன் பொருட்டு கீழே தங்களது கருத்து
>>> மெய்க்கண்டார் பக்தி என்ற கோணத்திலேயே தம் கோட்பாட்டை கட்டி எழுப்பி உள்ளார் போல் தோன்றுகின்றது படைப்பு என்ற நோக்கு இதில் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் மாயை சரியாக விளக்கப்படவில்லை மாறாக அத்ன தாக்கத்தால் உருவான ஆணவமும் மலமுமே பேசப்படுகின்றது. சகுண பிரம்மம் என்பது பற்றி பேச்சே இல்லை. அல்லது இவர் கூறும் பதி என்பது தான் சகுண பிரம்மா என்று தெரியவில்லை. சகுணத்தை விட நிர்குணமே தூயது.
>>>
இது மெய்கண்டாரை ஓரளவு புரிந்து கொண்டும் ஆனால் முற்றாக புரியாதும் பேசப்படும் நிலையாகும். ஆயினும் இது வியப்பான ஒன்றல்ல. சைவத்தை வளர்க்கும் ஆதீனங்கள் கூட அவரை சரியாக புரிந்துகொள்ளவில்ல என்றே நினைக்கின்றேன். சிவஞான போத மாபாடிய கர்த்தா மாதவச் சிவஞான் முனிவர் கூட அவரை சரியாக புரிந்துகொள்ள வில்லை,
உண்மை தான்-- மெய்கண்டார் உண்மையான பத்திமான் தான். ஆனால் எப்படி? இறைவன் எல்லா ஆன்மாக்களோடும் ஒன்றாய் உடனாய் வேறாய் நின்று தக்க முறையில் ஆன்மாக்களுக்கு தக்கதை போதித்து அவர்கள் தன்னறிவு பெற உதவுவதால் தான். இது கீழ் வரும் 11-வது சூத்திரத்தில் வெளியாகின்றது
காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அனபின் அரன்கழல் செலுமே
இறைவன் மேல் அயரா அன்பின் அவனைச் சேர்தல் தான் சேர நினைப்பதுதான் ‘பத்தி’, அன்பு இல்லையென்றால் பத்தி இல்லை, ஆயினும் ஏன் இந்த அயராத ஆழமான மெய்யன்பு?
கண்கள் அதை இதை புறவுலகிலும் அகவுலகிலும் காண்கின்றன. அவ்வாறு காணும் தன்னை காணாதே இருக்கும். இது உள் நின்று ஆன்மாவே(உள்ளமே) இதைக் காண் அதைக் காண் என்று விரட்டுவதால் தான் கண்கள் காண்கின்றன. காணும் கண்கள் தாமே தக்க விருப்புகள் தேற்றி அதை என்றும் இதை என்றும் கண்டு சுட்டுணர்வைத் தேற்றாது. அதேப் போலத்தான் புலன்களை ஆகவே மனத்தை விரட்டும் ஆன்மா தான் ஏன் இவ்வாறு செயல்படுகின்றேன் என்று அறியாதே ,தற்கல்வித் தேற்றி தன்னை அறியாதே அறியாமை இருளில் கிடக்கும். அது பொழுது வாழ்க்கையில் பல திருவிளையாடல்கள் நடத்தி தன்னையேத் தான் மறித்து நோக்கி தன்னையே ஓர் ஆய்வுப் பொருளாக ஆக்கி தற்கல்வி தேற்றி தன்னை இவ்வாறு அஞ்ஞான இருளில் வீழ்த்தும் ஆணவ மலத்தை அறிந்து அத்னை நீக்கி சுத்தமாகும்பொருட்டு அன்பு மீதூர இறைனை நாடிச் செல்லும்.
ஆக மெய்கண்டார் கூற்றுப்படி ஆன்மா, தான் அநாதியே ஆணவ மலத்தால் பந்திக்கிப்பட்டிருப்ப்தை இறைவன் உணர்தவே அறிந்து அதனை தன்னால் நீக்கி முடியாது அநாதியே நின்மலனாகிய இறைவனை அவன் அருளாலே அணுகினால் முடியும் என்று அறிந்து பத்தி கொண்டு இறைவன் மேல் அன்பு கொண்டு வாழும்.
மேலும் 10வது சூத்திரத்தில்
அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க
மலமாய தன்னொடு வல்வினை இன்றே
என்றும் கூறுகின்றார். ஆணவ மலம் மாயா மலம் கன்ம மலம் ஆகிய மும்மலங்களால் பந்திக்கப்பட்டு அணுத்துவப்பட்டு சிற்றறிவினதாக பல கொடுமைகளைச் செய்து திரியும் ஆன்மா, இறைவனேத் தான் என்ற சிவோகம் பாவனையில் இறைவனோடு ஒருமை நல்லுணர்வுடன் ஒன்றித்து நின்று பல நற்காரியங்களைச் செய்து வர, அகதே செறிந்திருக்கும் இந்த மூன்று மலங்கள் ஆன்மாவை பந்திப்பது விட்டு விலகி விடும் என்றும் கூறுகின்றார்.
இங்கு மாயை பிரகிருதி மாயையும் உள்ளடக்கிய சுத்தாசுத்த மாயை, தூமாயை அல்லது குடிலை.
இனி மெய்கண்டார் இவ்வாறு கூறுவதன் வழி பெரும் புரட்சி செய்தவர் மாத்திரம் அல்ல. இவ்வாறு அநாதி பொருட்களாக பதியாகிய இறைவன் உண்டு ஆன்மா உண்டு ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மமலங்களும் உண்டு இதில் ஆன்மாக்கள் அநாதியே மும்மலங்களால் பந்திக்கப்பட்டு சமல்\னாகக் கிடக்க இறைவனோ அநாதியே நிமலனாக அருட்பெருஞ்சோதியாக் சுடர்கின்றான், அன்பேத் தானாக நின்று பஞகிருத்தியங்களை இயற்றி எல்லா ஆன்மக்களையும் வீடு பேறு அடைய ஆடுகின்றான் என்றும் கூறி அழியாப் பெரும் புகழை எய்தவர் ஆகின்றார்.
இவர் சாதித்துள்ள அநாதிபொருளியல் உலகப் பொது. இதனை எப்படி சாதித்தார்?
உலகப் பொதுவாகிய சுட்டுணர்வையே ஆய்வுப் பொருளாகக் கொண்டு தன் ஆய்வினைத் தொடங்குகின்றார். எடுத்த எடுப்பிலேயே பதி பசு பாசம் உண்டு என்று கூறவில்லை, மேலும் வேதங்கள் ஆகமங்கள் போன்ற சுருதிகள் கூறிவிட்டன ஆக பிரமாணத்துவம் பகர்ந்து யாதோ ஓர் ஆகமத்தை ஆதார சாத்திரமாகக் கொண்டு அநாதிபொருளியலை நிறுத்த விலை,
உலகப் பொதுவாகிய சுட்டுணர்வை ஆய்வுப் பொருளாக்கி உலகப் பொதுவாகிய அநாதிப் பொருளியலை பிழையற நிறுத்துகின்றார்.
இதி இன்னொரு புரட்சியும் அடங்கியுள்ளது. அதுதான் அவர் கண்ட முறையியல், இதனை நூலிய அறிவியல் என்று நான் கூறி வருகின்றேன்
எல்லாவற்றையும் உள்ளடக்கிய இவ்வுலகு ஓர் பெரும் இரட்டுருவின் நூல், அதற்கு காண்வரும் புறவுரு என்றும் காண வரா ஆனால சிந்தித்து ஊகித்டு உணடென அறிய வரும் புதையுரு என்ற இரண்டு உருக்கள் உண்டு. இதில் புறவுலகு சுட்டுணர்வாகிய பிரபஞ்சமாக இருக்க புதையுருவாக, சுட்டுணர்வு இறந்து நின்ற சங்காரமாக, பஞ்சகிருத்தியனாக பதி இருக்கின்றான என்று உணர்த்துகின்றார், அனைவரும் உடன்படும் வகையில்.
இந்த நூலியத்தோடு வருவதுதான் ஏரணவீயம் எனும் அளவையியல். மெய்கண்டார் தனது சிவஞானபோதத்திற்கு தானே ஓர் உரையும் எழுதியுள்ளார், அது தொல்காப்பியத்தில் காணப்படும் காண்டிகை உரையின் ஓர் விருத்தி வடிவம் ஆகும். ஆக அதனை விருத்தி காண்டிகை உரை என்று கூறி இருகின்றேன்
இவ்வாறு உலகையே ஓர் நூலாகக் கொண்டு ஏரணவீயம் பிழையாது உண்மையைத் தவிர்த்து வேறு யாதையும் அனுமத்திக்காத சிந்தனைச் செறிவோடு செல்லும் மெய்கண்டார் எவ்வாறு பிழையான அநாதி பொருளியலை கூறியிருப்பார்?
யார் அவரோடு பேதப்பட்டு வேறு வகையான அநாதிப் பொருளியலை கூறுகின்றார்களோ அவர்கள் தாம் பிழையான வழியில் செல்பவர்களாக இருக்க முடியும், இதனை உணர்ந்தவராக மெய்கண்டார் அவையடக்கத்தில்
தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமை இகழார் – தம்மை
உணரார் உணரார் உடங்கு இயைந்து தம்மில்
புணராமை கேளாம் புறன்.
இதனை பற்றி எல்லாம் இன்னும் விரிவாக பிறகு கூறுகின்றேன்
உலகன்
2013/3/18 seshadri sridharan <ssesh...@gmail.com>
இணைப்பில் உள்ள கருத்தும் கருத்தியலும் என்ற தம் நூலுள் விரிவாக படைப்பை பற்றி விவரித்து இருக்கின்றார் ஆனந்த மூர்த்தி. முதல் மூன்று அத்தியாயங்களை மட்டுமாவது படியுங்கள். இவற்றுடன் மெய்க்கண்டாரின் படைப்புக் கருத்தை ஒப்பிடுங்கள்.
உங்களுடைய கீழ் கண்ட விளக்கங்கள் என்னுடைய முந்தய கருத்திற்கு வலு சேர்கின்றன.
சேசாத்திரி
2013/3/19 K. Loganathan <k.ula...@gmail.com>
அன்பரே
தங்கள் கேள்விக்கு மிக்க நன்றி. மெய்கண்டாரின் சாதனாவியல் யாது என்பதேக் கேள்வி என்றும் எடுத்துக் கொள்கின்றேன். இதனை நான் சிந்தித்து அறிந்த முறையில் நான் எழுதிய நூற்களைக் கொண்டே விளக்க முயல்கின்றேன். இதற்கு அடிப்படையாக இருப்பது ‘இறைவன் காட்ட ஆன்மா காணும்’ என்றும் இவ்வாறு கண்டு கண்டு ஞானம் வளர்த்தால் தான் ஆன்மா தன்னறிவு பெற்று நின்மலத்துவம் அடைந்து முடிவில் இறைவனை அடைந்து வீடு பேறு பெற்று இப்பிரபஞ்சச் செலவினை ஓர் முடிவிற்கு கொண்டு வரும் எனும் மிகப் பழைய பத்தி இலக்கியங்களில் இருக்கும் ஓர் மெய்யறிவு கோட்பாடுதான்.
அப்பர் பெருமான் பாடினார்: “காண்பார் ஆர் கொல் கண்ணுதல் காட்டாக்காலே’ என்று. மெய்கண்டாரும் தமது சிவஞானபோதத்தில் (இறைவனது) ‘காட்டு ஒடுங்க (ஆன்மா) காணாது’ என்றும் கூறுகின்றார். மேலும் திருமூலர் மிக அழகாக:
114
களிம்பு அறுத்தான் கண்ணுதல் நந்தி
களிம்பு அறுத்தான் கண் விழிப்பித்து
களிம்பு அணுகாத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே
kaLimbu aRuttaan kaNNutal Nanti
kaLimbu aRuttaan kaN vizippittu
kaLimbu aNukaata katiroLi kaaddip
paLingkil pavaLam patittaan patiyee
நுதல்விழி நாட்டத்தின் இறைவன் என் உள்ளத்தில் ஏற்கனவே கிடக்கின்ற மும்மலங்களாகிய களிம்பினை அறுத்து சுத்தமாக்கினான். இதனை எனது நுதல்விழியை விழிப்பித்து காணாததைக் காட்டி ஞானம்புகட்டிச் செய்தான். மேலும் எவ்வாற்றினும் களிம்பு அணுகாத சிவஞானப்பிரகாசத்தைக் காட்டி , பதியாகிய இறைவன் என் ஆன்மாவை பளிங்கென சுத்தமாக்கி அங்கு சிவத்துவம் பதித்தான்.
Nanti, the BEING-as-Virile Bull and with the Third Eye
Opening up my capacity for transductive perceptions
Dislodged the inner impurity that obscures and blocks off visions and
Dislosing the Light of Pure Radiance that is unattainable with these impuritieச் still lodged
Implanted in my crystal clear mind the REDNESS of Sivattuvam
>>.
மெய்கண்டார் இன்னும் இறைவனைப் பற்றிப் பேசும்போது ‘நோக்காது நோக்கி அன்றே காலத்தில் தாக்காது நின்று” செயல் படுகின்றான் என்பர். இவற்றையெல்லாம் காணும் போது தக்க சாதனம் என்பது விழிகளைத் திறந்து இதுவரை காணாததைக் கண்டு அஞ்ஞானம் போக்கி ஞானம் தேற்றி அகத்துச் செறிந்திருக்கும் மலமாசுக்களைப் போக்கி சுத்தமாக வேண்டுமென்பதே தக்க சாதனம் என்றாகின்றது.
அப்படி என்றால் ஆய்விற்குரிய பொருளாக காணல் பார்த்தல் போன்றவை ஆகின்றன. எல்லாருக்கும் பார்வை ஒன்றல்ல. ஓர் ஞானியின் பார்வை சாதாரண ஓர் மனிதனின் பார்வையை விட வேறு படும். எப்படி வேறு படும்? எப்படி ஒருவன் ஆழமான பார்வைகளைப் பெற்று சாதாரண முறையில் காண முடியாதிருப்பதைக் கண்டு மகிழ்வான்?
இதனை ஓரளவு திறன்பட சிவஞானபோதத்தின் வழிநூல் என கருதத் தக்க எனது பெருநூலாகிய ‘அழிவில் உண்மை’ எனும் நூலில் விளக்கியுள்ளேன். அதில் முதல் விளக்கமாக இந்தப் பார்வை விளக்கம் வருகின்றது.
>>>
அறிவின் திறனும் அவாவின் போக்குந்நூன்
னெறியி னாய்வர் நுழைவுகட் பெற்று
பெயராப் பெயர்க்கும் பெரும்பொருள் காண்பர்
பெய்யருள் பெருக்கின் பேணின் பிழையாது
: இச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின் , தக்க உத்திகள் பெய்தும் பழகியும் நூன்னெறி பிழையாது
அதன்வழி அருளைப் பேணியும் பெருக்கியும் ஞானத்தை வளர்த்துச் செல்ல, தான் பெயராது அசலனாகி நின்று
பிறவனைத்தையும் சலித்துத் தொழிற்படுத்தும் பேரறிவும் பேராற்றலும் உடையவனாகிய பதியை அனைவரும்
சிந்தை வழி ஊகித்து உண்டென்று அறிவதோடு ஞானக்கண்ணின் சிந்தை களிகூர நேராகக் கண்டும்
தெளியலாம் என்று உணர்த்துதல் நுதலிற்று என்பதாம்.
இங்கு
அறிவின் திறன்:
என்பது சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் எனப்படும் பஞ்சாவத்தைகள் வழி பசுகரணம்
சிவகரணம் எனப்படும் காட்சி பயக்கும் இருவகைக் கரணங்கள் வழி அடைந்து பல்வேறு செயல்களைச்
செய்து இச்சித்ததைத் தூய்த்து மகிழ்வதாகும். இந்த அவத்தைகளை பிறப்பிப்பதாக இருப்பன ஒன்றில் ஒன்று
மறைந்து பின் வெளிப்படும் பண்பின் பலவேறு பார்வைகள் ஆகும். இவற்றை பொறிலியப் பார்வை
அதனுள் கிடக்கின்ற நூலியப் பார்வை அதனுள் கிடக்கின்ற நுதலியப் பார்வை அதனுள் கிடக்கின்ற
சிவப்பார்வை, பரப்பார்வை, அதீதப் பார்வை என்றவாறு முடிவில் பார்வையற்ற பார்வை என்பன இருக்கின்றன.
இவற்றையே பண்டையோர் வாயிற்காட்சி மானதக் காட்சி தன்வேதனைக் காட்சி விஞ்ஞானக் காட்சி
சிவஞானக் காட்சி என்றெல்லாம் கூறிச் சென்றுள்ளனர். ஒவ்வொரு பார்வையும் ஓர்வகையான இருந்தறிவைத்
தர (intuitive
understanding) அவற்றைச் சிந்தித்து தெளிந்து எண்ணறிவுகளாக்கி ( reflective
understanding )உயிர்கள் மகிழும். இதனை பண்டையோர் நிருவிகற்ப ஞானம் என்றும் சவிகற்ப ஞானம் என்று
கூறிச் சென்றுள்ளனர். பார்வைகளின்றி அறிவுகள் இல்லை என, அறிவின் பல்வேறு திறன்கள் வெவ்வேறு
பார்வைகள் வழியேதான் அமைகின்றது என்பதாம். எந்த அளவிற்கு பார்வை ஆழமாகின்றனதோ அந்த
அளவிற்கு அகத்துச் செறிந்திருக்கும் அறியாமை நீக்கமாகும். இத்தகைய பார்வை பெயர்ச்சியின் எல்லை
பார்வையற்ற பார்வையாகும். அதனைக் கடந்த ஓர் வகைப் பார்வை இல்லையென, அதுவே முடிந்த
பார்வையாவதோடு அதுதரும் ஞானமே முடிந்த ஞானமாகின்றது. இதுவே அனைவர் உள்ளத்தும் ஏற்கனவே
பிரகாசித்துக்கொண்டிருக்கின்ற மெய்ஞானமும் ஆகும்.
>>>
இங்கே விரிக்க்படும் பொறிலியப் போன்றவற்றோடு இன்னும் ஞானத்தின் எல்லையில் ‘பேரருட்பார்வை’ காலாதீதப் பார்வை’ என்றெல்லாம் வரும். இதன் பிறகே எண் சித்திகளை மகிழும் பார்வைகளும் மெய்யாகும்.
இப்படி இறையருளைப் பேணிப் பெருக்கி பொறிலியப் பார்வை தொடங்கி படிப்படியாக மேலான பல பார்வைகளை இறையருளால் பெற்று பக்குவத்டதில் உயர்ந்து முடிவில் இறைவனது ‘நோக்காது நோக்கல்’ எனும் சுட்டு யாதும் இல்லாத ‘பார்வையற்ற பார்வை’ அடைவதே தக்க சாதனம் என்றாகின்றது.
இத்தகைய சாதனம் நிச்சயமாக மாயாவாத வேதாந்தம் பகர்ந்த ஆதி சங்கரிடம் இல்லை. பொதுவாக இன்று வரை வேதாந்திகள் யாரும் இப்படிபட்ட சாதனத்தை விளக்கியது இல்லை என்றே நினைக்கின்றேன்.
உலகன்
ஆதிசங்கரர் , இராமானுசர், மத்துவர் ஆகியோர் தாம் எடுத்துரைத்த பிரம்மத்தை அடைவதற்கு என்ன பயிற்சி செய்ய பரிந்துரைக்கின்றனர் என்பது தெரியவில்லை. ஆனந்த மூர்த்தி தாம் உரைத்த நிற்குணத்தை அடைய ஐந்து அகவை முதல் உள்ள அனைவரும் ஒவ்வொரு நாளும் தவறாமல் காலை மாலை இரு முறை சாகும் காலத்தளவிற்கு தாம் உணர்த்தியபடி ஊழ்த்தை (தியானம்) கட்டாயம் செய்ய வேண்டும் என்று கட்டளை போட்டுள்ளார்.இதுபோல் மெய்க்கண்டார் தாம் உரைத்த நிமலத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்கிறார்?ஏதேனும் பயிற்சி உண்டா?
அன்பரேமிக்க நன்றி. இனி அடுத்து வரும் மடல்களில் மெய்கண்டாரின் நூலியம் ஏரணவீயம் போன்றவற்றைப் பற்றி விளக்க உங்கள் இந்தக் கருத்து ஊக்கத்தைத் தருகின்றது. இன்றளவு ஏன் தமிழ் அறிஞர்களும் ஆதினங்களும் மெய்கண்டாரின் சிந்தனைப் புரட்சியை புரிந்து கொள்ளாது இருக்கின்றனர் என்று தெரியவில்லை, இது சிந்திக்க வேண்டிய விசயமாகவும் படுகின்றது,உலகன்2013/3/19 seshadri sridharan <ssesh...@gmail.com>உங்களுடைய கீழ் கண்ட விளக்கங்கள் என்னுடைய முந்தய கருத்திற்கு வலு சேர்கின்றன.சேசாத்திரி
அன்பரே
மிக நல்லக் கேள்வி- சிந்திக்க வைக்கும் நற்கேள்வி. இதற்கு என் வாழ்த்துக்கள்.
முதலில் மெய்கண்டார் ஆநந்த மூர்த்தி அவர்களோடு ஒத்துப் போகும் நிலை ஒன்று உண்டு. அது ‘objectlessness’ என்பது. இந்த சுட்டுணர்வு கடந்த நிலையை ஒருவாறு குறிக்கவே ‘நோக்காது நோக்கல்’ என்று அவர் கூற நான் நுட்பமான பார்வை ஆய்வில் விழுந்து முடிவில் அமைகின்ற பார்வையை, சுட்டு யாதும் இல்லாத சிறப்பின் ‘ பாரவையற்ற பார்வை’ என்றவாறு ஓர் வகையான முரன்பாடு தெரியும் வகையில் விளக்கியுள்ளேன். சுட்டின்றி விளங்க முடியாத மொழியில் சுட்டு இகந்த நிலையை எப்படி குறிப்பது?
ஆனால் இது ஆநந்த மூர்த்தி அவர்களின் ‘நிர்விகல்ப சமாதி நிலை’ ஆகுமா? யாதையும் அது இது என்று சுட்டாத நிலையில் விகற்பித்து அறியும் நிலை இல்லை. ஆக அது ஓர் நிருவிகற்ப நிலையே. ஆயினும் ‘சமாதி’ என்பது யாதும் செய்யாது ‘சும்மா விருத்தல்’ ‘சமைந்து எவ்வித செயலும் அற்று இருத்தல்’ என்றெல்லாம் பொருள் படும் எனில் அது மெய்கண்டாரொடு பொருந்தி வாராதென்றே நினைக்கின்றேன். இதற்கு ஆதாமாக என் ஞானக் கண்களைத் திறந்து விட்ட மெய்கண்டாரின் கீழ் வரும் வெண்பாவை நான் எழுதிய உரையோடு தருகின்றேன்.
>>>
எடுத்துக்காட்டு 1.4
நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில்
தாக்காது நின்று உளத்தில் கண்டு இறைவன் -- ஆக்காதே
கண்ட நனவு உணர்வில் கண்ட கனவு உணரக்
கண்டவனின் இற்று; இன்றாங் கட்டு
இதன் பொருள்:
பசுக்களுக்கு வேண்டுருவைத் தந்து அருள்பாலிப்பது,
கண்ட நனவு உணர்வில் கண்ட கனவு உணர:
ஓர் உலகத்தில் அனுபவமாகக் படும் ஒன்றில் அதனைப் பார்த்து அறியும்போது, அது புதிதாக அல்லாது முன்பு கனவிற் கண்டதையே மீண்டுங் காணுவதாகப் படின், அங்கு புதிதாக ஒன்றைப் பார்ப்பது அல்லையாய், கற்றலும் இல்லையாம். பார்வையும் நூலியப் பார்வை அல்லது பொறிலியப் பார்வை அற்றதாய் பார்த்த ஒன்றையே மீண்டும் பார்ப்பதாகிய ஆசிரியப் பார்வையாகவேத் திகழும்;
கண்டவனின் இற்று, இன்றாங் கட்டு:
இறைவனது பார்வையும் இப்படிப்பட்டதே, அறியாமையைப் போக்கும் முகத்தால், இது புதிது தான் அறியாதது என்று முனைத்தெழுதல் இல்லாத வொன்றாகும். கற்றல் இல்லாது போக, ஆகவே அறியாமைத் தொடக்கு இல்லாது போக, அங்கு எவ்விதக் கட்டும் இல்லையாம்;
நோக்காது நோக்கி நொடித்து:
பொறிலிய நூலியப் பார்வைகள் போக்கி, ஆயினும் பாராது இருப்பதையும் ஒழித்து சுட்டறியாது அநந்நியமாக நின்று ஆசிரியப்பார்வையின் அறிந்து, ஆன்மாக்கள் இனி எவ்வாறு போதித்தால் போதனைப் புகும் என்றவாறு கணித்து அதற்கேற்ப பற்பல காட்டுகளைத் தந்து;
அன்றே காலத்தில் தாக்காது நின்று:
இவ்வாறு நொடிக்கின்ற போதிலும், சுட்டில்லா பார்வையற்ற பார்வையிலேயே அனைத்தையும் கண்டவாறு காலவுணர்வு யாண்டும் தோன்றா வகையில் நின்று;
உளத்தில் கண்டு இறைவன்:
ஓர் ஆன்மா பிறிதோர் ஆன்மாவை உளத்தாலேயே கண்டுணர்வது போன்று, உளம் வேறு தான் வேறு என்றில்லாது பொறிலிய நூலியப் பார்வைகள் போக்கி கண்ணோடு கண் நோக்கி அவ்வுள்ளமே தானாகி நின்று அறியுமாபோல், இறைவனும் ஆன்மாக்களின் உளத்தோடு உளமாய் நின்று அறிந்து;
ஆக்காதே(ஆக்குவன்):
நுதிப்பு வாய்பட்டு அது தானாக வேண்டி பற்பல வினைகளைச் செய்வது போலவன்றி, ஆசிரியப் பெருந்தகையாய் அருளின் மேம்பாட்டினால் பசுக்களின் அணுத்துவத்தைப் போக்க, ஆதவன் ஒளி பரப்புமாபோல் ஞானங் கதிர்ப்பன் என்பதாம்.
இறைவன் தானல்லா தன்னின் ஓர் எதிர் நிலையை தான் அடைய வேண்டி இந்த உலகத்தை படைத்து விளையாடவில்லை. சர்வக்ஞனனும் பரிபூரணனுமாகிய அவனுக்கு இவ்வாறான நுதிப்புக்கள் தோன்றா. தோன்றுமாயின் இவனுக்கு மேலானவோர் பரம்பொருள் இருப்பதாகக் கொள்ளவேண்டும். கொண்டால் சங்கார காரணனாகிய முதலே முதல் என்பதற்கு இழுக்கு வரும். இறைவன் கற்றே மேம்படும் சித்துப்பொருள் அல்ல; அவன் அநாதியே முத்த சித்துரு. தனது இயல்பாய் இருக்கின்ற முத்த நிலைக்கு, அணுத்துவம் பட்டு கிடக்கும் ஆன்மாக்களை கொண்டு வரவே, முதிர்விக்கவே இந்த உலகம் எனும் அருள் விளையாட்டு, ஐங்கரம்.
இங்கு உளத்தில் காணல் என்பது, பொறிலியப் பார்வைக்கும் நூலியப்பார்வைக்கும் புறத்ததாகிய இன்னொரு பார்வையாம். "நான்" "நீ" என இரண்டு உள்ளங்கள தனிச் சுட்டரங்கம் பொதுசுட்டரங்கம் ஆகிய இரண்டுங் கழன்று, மன்சுட்டரங்கில் நின்று , உளத்தோடு உளம் ஒன்றிக் காண்பதாகும். ஒன்றித்துக் கண்டு பிறகு வேறு வேறெனக் கண்ட மாத்திரையான் "நான்" "நீ" என்ற பேதங்கள். இந்த பேத வுணர்வு தோன்றா முன்பு, வேறற்று ஒன்றித்து நின்றறிதலே "உளத்திற் காணல்". ஓர் உயிரை பிறிதோர் உயிர் நேராகக் காணல் --- ஆகவே பொறிலியப் பார்வையும் போக்கி, அனுமாநித்து அறிய உதவும் நூலியப்பார்வையும் போக்கி இரண்டற்ற வேறன்மையின் அத்துவிதமாக நின்றறிதலின் பார்வையாகும் இது. இறைவன் ஓர் உள்ளத்தை அதனோடு ஒன்றித்து நின்று உள்ளதை உள்ளவா காண்கின்றான் என்பதுமாம். ஆங்கு இவ்வாறு காணுமாற்றால் மறையான யாதுமில்லையாம்.
கருவிகளைக் கொண்டு இது காண்பது அல்லையென " நோக்காது நோக்கல்" எனப்பட்டது. மேலும் கருவிக் கரணங்களைக் கொண்டு வினையாற்றல் இல்லையென்பதால், ஆக்காதே ஆக்கல் எனவும் பட்டது; அவன் சங்கற்பித்த மாத்திரையின் அனைத்தும் தோன்றலான்.
இனி இவ்வாறு பரிபூரண முழுப்பார்வையாக இறைவன் நிற்க, அதனுள் அணுத்துவத்தோடு கூடிய குறைபார்வையனதாக சிறுப்பார்வையினதாக பசுக்கள் இருக்க, இறைவனோடு ஒன்றித்து ஒன்றித்து அணுத்துவம் போக்கி பசுக்களும் அந்த பரிபூரண முழுப்பார்வை பெற்று, இறைவனுக்கு சமமாகி தானும் ஒரு முதலாக நிற்கும் என சிவசமத்துவம் கூறவும் வரும். இனி இவ்வாறான பரிபூரணப்பார்வை வந்துற்றபோதும், ஆன்மாக்கள் யாண்டும் தொழும்பாகவே நிற்கும் என தமது அடுத்த படிமெய்யில் இறைவனது தற்பரத்துவத்தை காக்கின்றார் மெய்கண்டார்.
>>>>
இந்த வெண்பாவில் பல நுட்பங்கள் புதைந்து கிடக்கின்றன.
ஆன்மா இந்த நோக்காது நோக்கி நிற்கும் நிலைக்கு, பார்வையற்ற பார்வையை மகிழும் நிலைக்கு உயரும் போது அது கட்டு அதாவது ஆணவம் கன்மம் மாயை எனும் பந்தங்கள் யாதும் இல்லாத சுத்த நிலையாகும். மேலும் இதுவரை கற்று கற்று மேம்பட்டு இந்த கட்டுகளைக் கழற்றி வந்த ஆன்மா இந்த முடிவான நிலையில் அதனைக் கடந்து விடுகின்றது, கற்றல் யாதும் தேவை இல்லாது போகின்றது.
ஆனால் இது செயலற்று சும்மா இருக்கும் நிலை அல்ல. ஆசிரியப் பார்வையில் இறைவன் எவ்வாறு நொடித்தவாறே, பல திருவிளையாடல்களைச் செய்தவாறே ஆநந்த கூத்தினை அம்மையோடு ஆடியவாறே இருக்கின்றானோ அதேப் போலத்தான் முத்தி நிலை ஆன்மாக்களும். அவையும் வாழ்க்கையில் பல செய்தவாறே இருக்கின்றன ஆனால் செய்வதெல்லாம் சிவச் செயலேயாக தனக்கென்று யாதும் செய்யாது பிறர்கென்றே எல்லாம் செய்யும் நிலை.
இறைவன் பெருந்தொண்டனாக இருக்க
ஆன்மாக்கள் சுட்டறிவு கழன்ற நிலையில் சும்மா இருக்கும் சமாதியில் விழாது
சிறுதொண்டனாக மக்களுக்கும் ஏனைய உயிர்கட்கும் நல்லது செய்த வண்ணம் வாழும்.
உலகன்
இப்படி இறையருளைப் பேணிப் பெருக்கி பொறிலியப் பார்வை தொடங்கி படிப்படியாக மேலான பல பார்வைகளை இறையருளால் பெற்று பக்குவத்டதில் உயர்ந்து முடிவில் இறைவனது ‘நோக்காது நோக்கல்’ எனும் சுட்டு யாதும் இல்லாத ‘பார்வையற்ற பார்வை’ அடைவதே தக்க சாதனம் என்றாகின்றது.
நோக்குதல் என்றால் காட்சிப் பொருளை நோக்குதல். நோக்காது என்றால் காட்சிப் பொருள் (objectlessness) ஒன்று இல்லாமல் நோக்கல் என்று பொருள்படுமா?அவ்வாறானால் இதைத் தஆன் நிர்விகல்ப சமாதி நிலை என்கிறார் ஆனந்த மூர்த்தி.
சேசாத்திரி
ஆனந்த மூர்த்தி பயன் படுத்தும் சொற்கள் உபநிடத, பிரம்மவாத கருத்துகளில் பயன் படுத்திய சொற்கள் என்றாலும் அவை பொருளால் மாறுபட்டவை என்கிறார் அவர். காட்டாக, ஆதிசங்கரரின் மாயை illusion என்பதை குறிக்கும், ஆனந்த மூர்த்தியின் மாயை சத், ரஜோ, தமோ குணங்களை குறிக்கும் ஒரு பொதுப் பெயர். மெய்க்கண்டார் மொழியிலும் சொல் பயன்பாட்டு வேறுபாடு உள்ளது ஆதலால் பொருளை புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது.
சேசாத்திரி
இனி ஏன் சுட்டறிவு ஆய்வு? அதனைச் செய்து எவ்வகையில் மெய்கண்டார் அழியாப் பெரும்புகழ் பெற்றார் என்பதையும் எவ்வாறு உலகளாவிய ஓர் மாபெரும் மெய்யறிவுச் சிந்தனைப் புரட்சி என்பதையெல்லாம் சிறிது விளக்கலாம் என்றிருக்கின்றேன் மெய்கண்டாரின் பெரும் புரட்சியை தமிழர்கஏ உணராதிருக்க இது தேவைப் படுகின்றது.
கீழே அனது ‘அழிவிலுண்மை’ எனும் பெரும் நூலின் மூன்றாம் சூத்திரத்தை நானே எழுதிய இரண்டு உரைகளில் எளிமையான அரும்பத உரையோடுத் தருகின்றேன்
இந்தப் பெரும் நூல் சிவஞான போதத்தின் வழிநூல் என்றே கூறத் தகும். இங்கு உலகப் பொதுவாக சுட்டறிவு ஆய்வின் வழியேதான் உலகப் பொதுவாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களின், ஆன்மாவை கட்டு அணுத்துவப் படுத்தும் பாசத் தளைகளின் உண்மை நிறுத்தப் படுகின்றது
சூத்திரம் 3: பாசவுண்மை
முன்றாம் சூத்திரம் : பாசவுண்மை
இனி இறைவனாகிய பதியுண்டு, எண்ணிறந்த சித்துப்பொருட்களாகிய பசுக்களும் உண்டு ஆனால் இப்பதியே
ஈசுவரனாக நின்று சித்துமாய் அசித்துமாய் ஆகி, அசித்தாகிய பாசவுலகினை தன்னிடமிருந்தே வெளிபடுத்தி
அருளுவன்,
சித்தாகிய சிலந்திப் பூச்சி அசித்தாகிய வலையை தன்னிடமிருந்தே வெளிபடுத்துவது போல,
அதனின் பாசம் என்றவோர் அநாதிப் பொருள் இல்லை என்பாரை மறுத்தற்கெழுந்தது அடுத்து வரும் சூத்திரம்.
இதன்வழி பதியினைப் போலும், எண்ணிறந்த பசுக்களைப் போலும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய
பாசங்களும் அநாதி என்பதாயிற்று.
சூத்திரம் 3 பாசத் தளையின்
ஆன்மா
சுட்டறிவி னான்மா
சுட்டறி பெற்றிமை
உற்றிடல் பரனினெதிரா உயிரோ டனாதியே
நிற்றிடல் நீக்கரு
பண்பின் பாசம்
விட்டிடல் வேண்டும் விருப்பும் தேற்றி
: என் நுதலிற்றோ வெனின் சர்வ வியாபியாய் எங்கும் பிரகாசித்து அனைத்தோடும் அநந்நியமாய் நின்று
சுட்டறிவு இறந்து நின்று சத்தறிவே தன் அறிவாய் நிற்கக்கூடிய, சிவஞானமே தன் ஞானமாய் நிற்கக்கூடிய
வல்லமை உடைய ஆன்மா, சுட்டறிவின் வழியே அறிந்து அல்லற் பெற்றித்தாய் இருப்பதற்குக் காரணம்
பதியினைப் போலும் பசுக்களைப் போலும் அநாதியே நிற்கின்ற பாசங்கள் என்பதை உணர்த்துதல் நுதலிற்று
விளக்கம்:
சுட்டறிவின் ஆன்மா:
என்பது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்றவாறு சுட்டுக்காலம் வழியும் குறிப்புக்காலம் வழியும்
உலகிய நிகழ்ச்சிகளை மரபுவழிப் பட்டதாக பாரம்பரிய ஓட்டத்தில் பட்டதாக அறிதலும், மேலும் கிழக்கு
மேற்கு வடக்கு தெற்கு என்பனபோன்ற திசைகள் வழியும் அது இது உதுவென வரும் சுட்டுக்கள் வழியும்
அவற்றைத் தெளிதலும் வல்லதாகிய ஆன்மாவை சுட்டறிவின் ஆன்மா என்று அதன் ஓர் இயல்பினை
தெளிதலாகும். இஃது ஆன்மா என்பது சிற்றறிவினனாகிய கிஞ்ஞிக்ஞன் என்பதையும், ஓர் கட்டிமைக்குள்
விளங்கும் அறிவொடு கூடியவொன்று என்றும் உணர்த்துகின்றது.
இப்பண்பு எல்லா ஆன்மாக்களுக்கும் உரித்தாகிய பொதுவியல்பு ஆகும்.
சுட்டறி பெற்றிமை :
என்பது சர்வ வியாபியாய் நின்று அனைத்தையும் அதுவிது அங்கு இங்குவென சுட்டறியாது, அதுவேத் தானாய்
அநந்நியமாய் அத்துவிதமாய் அறிவதற்கு மாறாக காலவுணர்வோடும் திசையிடவுணர்வோடும் அனைத்தையும்
சுட்டியே அறிகின்ற திறன் என்றவாறு. இப்பெற்றிமையின் வழி பெறப்படுகின்ற மெய்யறிவுகள் அசத்தறிவுகள்
என்பதாம்.
ஏனெனில் கட்டிமையோடு தோன்றி உண்மையென நினைக்குமாறு செய்து பின் கட்டற்ற சத்தறிவில் மறைந்து போய் விடுவதால் என்க.
இதனை உற்றிடல்:
என்பது அத்திறத்தோடேயே சாதாரணமாக வாழ்வதும் அறிவதும் அனுபவிப்பதும் ஆகும். மேலும்
ஆன்மாக்களின் முடிவான வடிவம்
சத்தும் அசத்தும் கடந்த சிவசத்தறிவோடு
சர்வ வியாபியாய் இறைவனோடு
முற்றிலும் ஒன்றித்து ஒத்துப்போய் நிற்பதென, அதற்கு விரோதமாக இச்சுட்டறி பெற்றிமை வந்திருப்பதால்
"உற்றிடல்"
எனப்பட்டது. படவே இது அநாதிசெயற்கை, ஆகவே நீக்க வல்லது என்றும்
உணர்த்தப்பட்டவாறு. இருக்கின்ற நிலை இஃதெனினும் முடிவான நிலை, இன்னும் புதையுண்டு வெளிப்படாது
மறையாக அடையக் கூடிய சாத்தியமாகவே நிற்கின்ற அந்த மோனமொழியின் முத்தி நிலையே என்பதாம்.
பரனின் எதிரா:
என்பது பரனொடு தொடக்குற்ற ஆன்மா பரனோடேயே ஒன்றித்து நிற்குமெனின் அது
சிவசத்தறிவே தன்
அறிவாய் ஆகவே சத்தென்றும் அசத்தென்றும் பேதித்துக் காணாததாய் சிவஞானமே தன் ஞானமாய் நிற்கும்.
சிவஞானமே உடம்பாக நிற்கின்ற ஞானமயனாகிய பதியொடு தொடக்குற்று நிற்கும் போதெல்லாம்,
சுட்டறிவாகிய அசத்தறிவு பகலைக் கண்ட இரவுபோல பிரகாசியாது ஒடுங்கும். இதனால் ஆன்மாக்களின்
சுட்டறிவு பெற்றிமைக்குக் காரணம் பதியாகிய இறைவன் ஆகான் என, அந்த சிவப்பிரகாசத்திற்குப் எதிராக
பகையாக இருக்கின்ற வேறு பலவே காரணமாக இருக்கமுடியும் என்றவாறு. அது ஆன்மாவுடன் சகசமாய்க்
கிடக்க, அதன்வழி அகட்டறிவாகிய சத்தறிவினை பிறகு இப்பேதங்களையும் கடந்து சிவசத்தறிவினை
வேண்டும் ஒன்றாக ஆன்மாக்கள் திகழ்கின்றன என்பதாம்
இதனின் பரனின் எதிரா ஆன்மாக்களை சுட்டறி பெற்றிமைபால் வீழ்த்தும் ஒன்று பரனின் வேறாய் பசுக்களின்
வேறாய் உண்டு என்பதைப் பெற்றாம்.
உயிரோடு அநாதியே:
என்பது இந்த சிவஞானப் பகைப் பொருள், சிவஞானப் பரஞ்சுடராகிய பரசிவனால் தோற்றுவிக்கப்படக் கூடிய
ஒன்றல்ல என்றவாறும் ஆயினும் சிவஞானப் பிரகாசத்தாலேயே கழற்றப்படக் கூடிய ஒன்றென்பதால் செம்பிற்
களிம்பென பசுக்களோடு இயல்பாகாவே கலந்து நிற்கும் ஒன்று என்றும் விளக்கப்பட்டவாறு. ஞானமயனாகிய
இறைவன் ஞானப்பகையாகிய ஒன்றைத் தோற்றுவியான். மேலுங் கருணையே வடிவாகிய இறைவன் எல்லா
வேதனைகட்கும் இடர்கட்கும் இடுக்கங்கட்கும் நோய்நொடிகட்கும் காரணமாகிய இப்பகைப் பொருளை
தோற்றுவித்து பசுக்களோடு நின்று நிலவுமாறு செய்யவும் மாட்டான். அப்படி செய்கின்றான் எனக் கொள்ளின்
அஃது அவனது கருணைக்கும் அருளிற்கும் இழுக்காகும். ஆகவே யாராலும் உண்டாக்கப் படாது அநாதியே
நிற்கக்கூடியதாகிய இந்த ஞானப்பகை,
சகசமாகவே பசுக்களோடு உடங்கியைந்து கிடந்து அவற்றை
சுட்டறி பெற்றிமையோடு திகழுமாறு செய்கின்றது என்பதாம்.
நிற்றிடல்:
என்பது எளிதாக ஒதுக்கமுடியாது கழற்றி நீக்கமுடியாது பலவாறு முயன்றும் தொடர்ந்து பற்றிக்கொண்டே
இருப்பதாக, எண்ணிறந்த பிறவிகள் எடுப்பதற்கும் காரணமாகி சன்னஞ் சன்னமாக படிப்படியாக விடுதற்கு
வருவதாய் திகழ்கின்ற பண்பினதாம் என்றவாறு. பிராந்தி ஞானத்திற் பட்டான் ஒருவன் அந்த பிரமை நீங்கி
தெளிவறிவு அடைகின்றான். அப்படிப்பட்ட உடன் நீங்கும் பிரமையாகிய மயக்கம் இதுவல்ல இதுபோன்ற
பிறவும் அல்ல என்றலுமாயிற்று. பல்வேறு இன்னல்கட்கும் இடர்கட்கும் மரணவேதனைகட்கும்,
கிலேசங்கட்கும் கலக்கங்கட்கும் சஞ்சலங்கட்கும் காரணமாகி அரிய பெரிய தவங்களைச் செய்தே
சுத்தமாகுதல் சாலுமென்பதால், ஞானப்பகையாகிய இஃது மிக மிக வல்லிதாய் ஆன்மாக்களை பற்றிக்கொண்டு
நிற்கின்றது என்பதாம். மேலும் கழற்றிய பிறகும் சூன்யமாகாது மறையாக நின்று தொடர்ந்து அழியாதே
ஆங்கு நிலவுவதால்
"நிற்றிடல்"
என்றாயிற்று.
நீக்கரு பண்பின் பாசம்:
என்பது , இப்பகைப்பொருள் பற்றி நிற்கும் பண்பின் வெளிப்பாடுகளாகிய பாசங்கட்கு மூல காரணமாக நிற்கும்
என்பதாம்.
மெய்ஞானவேட்கைக்கு மாறாக அற்ப உலகியல் பாச நேசங்கட்கு மூலகாரணமாக இருப்பதால் ,
ஆகுபெயராய் அவற்றைத் தோற்றுவிக்கும்
மூலப்பொருளும் 'பாசம்' எனப்பட்டது.
பற்றுக்கள் பலவில்லவெனின் சுட்டறிவுகளும் இல்லையாம். ஞானத் திரோதமாக, அகத்திருளைத் தருவதாக ,
சிற்றறிவிற்கு ஏதுவாக இது இருப்பதின் காரணமாகவே நோக்கங்கள் தேற்றப்பட்டு சுட்டறிவின் காரணமாக
தற்போத முனைப்போடு அதன்வழி செயல்கள் பிறக்கின்றன. இவ்வாறான பற்றுக்கள் தோன்றுதற்கும்
அதன்வழி ஆன்மாக்களை சார்ந்ததின் வண்ணமாக திகழச் செய்து அதன் வழி பாசநேசங்களில்
ஆன்மாக்களை வசித்துக் கட்டுவதின் அது 'பாசம்' எனப்பட்டது.
இனி இதனை 'நீக்கரு பண்பினது' என்பது, இறையருட் துணையொடு மேலான சிவஞானம் அடைந்தாலன்றி
இதனின்று விடுபட முடியாது என்பதால் என்க. ஞானப் பகையாக நின்று, பற்றுநிலை தலைப்பட வைக்கும்
இதனை, சிவஞானப் பெருந்தெளிவே போக்கவல்லது, பிறவல்ல என்பதை சுட்டும் பொருட்டு என்க.
சுட்டறியப்படுவன வெல்லாம் காலவுணர்வு திசையுணர்வு ஆகியவற்றோடு வரும் கட்டறிவுகளாகிய
அசத்தறிவுகளாம். இத்தகைய அசத்தறிவுகளை எவ்வளவு பெற்றாலும் சுட்டறி பெற்றிமையை நீக்காது
என்பதால், இந்தப் பாசத்தையும் நீக்காது என்பதாம். சுட்டறிவு பெற்றிமையை இல்லாது போக்கும்
சிவஞானமே இந்த கழற்சியை மெய்யாக்கும் பிறவல்ல என்பதால் பாசத்தளை 'நீக்கரு பண்பினது'
என்றாயிற்று. அரிதாகிலும் நீக்கப்படும் கழற்றிவிடப் படும் தன்மையது, சிவஞானத்தாலேயே என்றும்
குறிப்பதாயிற்று.
விற்றிடல் வேண்டும் விருப்பும் தேற்றி:
என்பது ஆன்மாக்கள் மாட்டு அவை அசுத்தம் என்ற உணர்வு மேம்பட , அவற்றைவிட்டுக் கழன்று சுத்தமாக
வேண்டும் என்ற விருப்பினையும் சுத்தத்தின் சுத்தமாகிய இறைவனே தன் சுத்தத்தை அறிவுறுத்தி
உணர்த்துவன் என்பதாம். ஆன்மாக்கள் இறைவனை அறிந்து நெருங்கி அவனைச் சுத்தனாக
உணரும்போதே, அவனுக்குப் பகையாக இருக்கும் பாசங்களை அசுத்தமென உணர்ந்து அவற்றை
கழற்றிவிட்டு சுத்தமாக முனையும் என்பதாம். அல்லையேல் அசுத்தத்தை அசுத்தமென உணராது அவற்றில்
விழுந்து சுகித்து மகிழும் என்பதாம். மேலும் இறைவன் காந்தம் இரும்பை தன்பால் வசிப்பது போன்று எல்லா
ஆன்மாக்களையும் தனது இயல்பான பரம வசித்துவத்தின் தன்பால் வசிப்பான் என்பதாலும் அதற்கு எதிராக
நிற்கும் இந்தப் பாசங்களின் மேல் வெறுப்பு தோன்றி அவற்றை விட்டு நீங்கிடல் வேண்டும் என்ற
துணிவினையும் தரும் என்றவாறு
தொகுப்புரை
இம்மூன்று சூத்திரங்கள் வழி அநாதி பொருட்களாக பதி பசு பாசம் என்பவை நிறுத்தப்பட்டுள்ளன. சித்துப்
பொருட்களாக பதியும் பசுக்களும் இருக்க, அசித்துப் பொருளாக பாசம் இருக்கின்றது. பசுக்கள்
பாசத்தளையில் கட்டுண்டவையாகத் திகழ, பதி அனைத்தோடும் ஒன்றித்து அத்துவிதமாக நிற்கும் அதே
பொழுது, அவற்றால் பந்திக்கப்படாது வேறாக நின்று தன் அளப்பரிய பெருங்கருணையின் காரணமாக
ஐந்தொழில்களை இயற்றி அனைத்தையும் சலித்து, பசுக்கள் இந்த பாசத்தளைகளின் கட்டிலிருந்து கழன்று
தன்னோடு ஒத்து நின்று உய்ய உதவுவன் என்றும் பெறப்பட்டது.
தொடரும்
இங்கு மீண்டும் மெய்கண்டாரின் புரட்சியை வற்புறுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன்.
உண்மையான சாதனம் பாரவைகளை அகலமாக்கி ஆழமாக்கி காணாதைக் காணவைத்து முடிவில் திசையுறு வெளி உணர்வு கால உணர்வு போன்றவற்றைக் கழற்றி விட்டு நீங்கி சுத்தமாகி இறைவனைப் போல ஆன்மாவும் ‘நோக்காது நோக்கல்’ எனும் சுட்டற்ற பார்வையை அதாவது ‘பார்வையற்ற பார்வையை’ அடைந்து வீடுபேறு மகிழ்வதே யாகும்,
இந்தச் சாதனம் எப்படி சுட்டறிவு உலகப் பொதுவோ, எவ்வாறு காட்டப்பட்ட திரியத்திய அநாதிப் பொருளியலும் உலகப் பொதுவோ அதேப் போலத்தான் இந்த சாதனமும். பார்வைகள் என்பன அனைவருக்கும் உரிதானவையாக உலகில் இருக்கின்றன. சாதி மத பேதங்களை எல்லாம் கடந்த பொதுவுகளாக இவை இருக்கின்றன. ஆக இச்சாதனமும் சமயாதீதம் சாதியாதீதம் வர்ணாதீதம் என்றவாறு அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கின்றது,.
இதனை பற்றி மெய்கண்டார் இன்னொரு வெண்பாவிலும் மிக ஆழமாக தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். காண்க:
எடுத்துக்காட்டு 4.3.2
இலாடத்தே சாக்கிரத்தை எய்திய வுள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் -- இலாடத்தே
அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டதுவே
அவ்வற்றின் நீங்கலது வாங்கு.
இதன் பொருள்:
இலாடத்தே (தெளி)சாக்கிரத்தை எய்திய
உள்ளம்:
புருவ நடுவாகிய ஐயம்
திரிபு போன்ற
யாதுமில்லாத தெளிஞானத்தின் இலாடதானத்தே, மறைகள் விளங்கும் ஞானங்களை எல்லாம் தெளிஞானமாக்கி மாணறிவுகளாகப் பெற்று மகிழ்ந்தவாறு ஆன்மா இருக்கும் என்பதாம்.
அதாவது, சாதாரண
சாக்கிராவத்தைக்கு மேலான
சிந்தனைத் தெளிவின் வரு தெளிசாக்கிரமே பிற
அவத்தைகளைவிட , விழித்தவாறே அனுபவிக்கத் தருதலின், மிகவும் சிறப்புற்றிருப்பதாம். இந்நிலைக்கு எஞ்ஞானம் கொண்டு
வரப்படுகின்றாதோ, அதுவே
ஆன்மாவின் உடமைப்பொருளாக, அந்நியமிலாது அதுவே ஆன்மாவாக நிற்கத் தருவதாம். இப்படிப்பட்ட தெளிசாக்கிரத்தை அடைகின்ற ஆன்மா;
இலாடத்தே ஐந்து
அவத்தை எய்தும்:
இத்தானத்தில், உலகத்
தொந்தனையிலிருந்து கழன்றிருப்பதால் வரும்
மேலான விழிப்பு நிலையில் இருந்துகொண்டு, பிறபிற அவத்தைகளில் எழும் ஞானங்களை அவற்றின் மறைபோக்கி, தெளிவாகும் விடயங்களை இன்னும் சிந்தித்து அலசி
தெளிஞானமாய் சமைத்து
மகிழும் என்றவாறு.
இங்கு பொறிலியப்பார்வையின் சாதாரண
சாக்கிரத்தில் எழும் அறிவுகளோடு ஏனைய பார்வைகளிலும் எழும்
ஞானங்கள் அனைத்தையும் சிந்தித்து ஐயம் திரிபறத் தெளிந்து தெளிஞானங்களாக்கி, உத்தேசங்கள் எடுத்தமொழிகள் என்றெல்லாம் விட்டகன்று மேற்கோள்களாக , நிகமனங்களாகக் கொண்டு
சிறப்பதாம். காட்டாக,
சொப்பனாவத்தையை இலாடத்திற்குக் கொண்டு வருவதென்பது, கண்ட
கனவுகளை மறந்திடாது நினைவில் இருத்தி, பிறகு
அஃதோர் பைசந்தி
மொழி வகையில்,
சின்னமொழி ஆட்டுவென , அதனை
பெயர்த்துப் பெயர்த்து (interprete) வழக்கியல் மொழிக்குக் கொண்டு வந்து,
காணுகங்களும் காருகங்களுமே (percepts and concepts) ஆடும் வகையில்
தெளிஞானமாக்கி (indubitable consciuosness) மகிழ்வதாகும். கனவில்
'புனலாடுதல்' என்று
வர, அதனை
ஓர் சின்னமொழி (symbolic language) எனக்
கொண்டு அது
உணர்த்த வருவதை
"இறையருட்பதிவின் காரணமாக உடல் நலம்
பெறுதல்" என்று பெயர்த்து மெய்ப்பொருள் காண்பது போன்றதாம். ஓர்
கனவும் அத்தகு
ஞானோதயங்களும் எப்பொழுது இவ்வாறு
பெயர்க்கப்பட்டு (interpreted) அவற்றின் மெய்ப்பொருள் இஃதென தெளியப்படுகின்றதோ அப்பொழுதே தெளிஞானப் பொருளாய், இலாடதானத்தின் விடயமாய் ஆக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட வளர்ச்சியே இலாடதானத்தில் ஐந்தவத்தை எய்துவதாகும்.
இலாடத்தே அவ்வவ்
இந்திரியத்து அத்துறைகள் கண்டதுவே:
இவ்வாறு தெளிஞானத் தானமாகிய இலாடத்தே, சாதாரண சாக்கிராதி அவத்தைகளையும், அவ்வவ் அவத்தைகளைத் தரும் பசுகரணங்கள், சிவகரணங்கள் போன்றவற்றையும், மேலும் தென்படா
பற்பல மறைநிலங்கள் தென்படுமாறு ஒவ்வொரு அவத்தை
நிலையிலும் புதியப்புதிய நுழைவுகள் பெற்று, இதுவரை
காணாத முறையில் மறைக்கப்பட்டிருந்த ஆய்வுத் துறைகளை
இந்த அகயாத்திரையில் கண்டு, பிறகு தெளிசாக்கிரத்தில் அவற்றை
மறந்திடாது நினைத்து அலசி பெயர்த்து வழக்கியல் மொழிக்குக் கொண்டு வந்து தெளிஞானமாக்கி அறிந்து
மகிழும் அதுவே:
அவ்வவற்றின் நீங்கலது வாங்கு:
அந்தந்த அவத்தைகளில் மீண்டும் விழாமுறையில் கழன்று
விடுதி பெறுவதாகும்.
எது தொடர்ந்து தெளிவற்ற மறைஞானமாகவே தொடர்கின்றதோ, அதன்மேல் ஆன்மாக்களுக்கு ஆர்வங்
குறையாதேத் தொடரும்.
இவ்வாறான முறையில் ஞானதிரோதகம் நிற்க, அதனை
நீக்குவான் பொருட்டு ஆன்மா ஆங்காரப்பட்டு முனைந்தெழுந்து நிற்கும். இனி தெளிஞானத்தின் இலாட தானத்தில் இவற்றைக் கொண்டு வந்து, ஐயம்
திரிபு யாதுமில்லா தெளிஞானவிடயமாக ஆக்கிவிட, அதன்மேல் ஆர்வம் தானே கெடும்
என்பது. தொடர்ந்து அலசி விசாரித்து தெளிய
வேண்டியவொன்றாக அல்லாதுபோதலின் இவ்வாறான மாற்றம் என்பது.
சைவ ஞானத்தெளிவியல் ( Saiva Theory of Psychic Illumination)
இந்த எடுத்துக்காட்டில், சமய வாழ்க்கையை ஓர் நூலிய அறிவியல் துறையாக வளர்த்துவிட்ட மெய்கண்டார், அதற்கு அடிப்படையான ஞானத்தெளிவியல் தொடர்பான தமது தெரியத்தை (theory) இலைமறை
காயாகவே விளக்கி
இருக்க அதனை
மேலும் விளக்கக் கருதி இன்னும் சில
வார்த்தைகள இங்கு.
சமாயாதீத சைவத்திற்கு, தகுந்த சாதனங்களே தேவையானது; மக்களை அடிமைப் படுத்தி
தம்மையே தொழ
வைத்து இறைவனை
மறக்கச் செய்யும் அற்ப குரவர்கள் தேவையில்லை. இதனைப் போன்ற சித்தர்களும் தீர்க்கதரிசிகளும்
வழிகாட்டிகளாக அமைவரேத் தவிர இறைவனது இடத்தில் அமரக்கூடியவர்கள் அல்ல. தொழ
வேண்டியது இறைவனையே, மற்று யாரையும் யாதையும் அல்ல.
மேலே விளக்கியவாறு ஆன்மாக்கள் பற்பல கழற்சி
வினைகளைச் செய்ய
, அதனின் தத்துவக் கழற்சிகளுக்கு ஆளாகி, பொறிலிய நூலியப்
பார்வைகளோடு நுதலியப் பார்வைகள் பல பெற்று
அவற்றின் அமையும்
சாக்கிரம் சொப்பனம் போன்ற பஞ்சாவத்தைகளை அனுபவங்கள்ளாக தூய்த்து வாழும்
என்பதைக் கண்டோம்.
இது அனைவருக்கும் அமையக்
கூடியது, சாதி
மத பேதங்களை எல்லாங் கடந்த ஓர்
ஆன்மப்பொது (psychological universal) என்பதையும் கண்டோம்.
இந்த அவத்தைகள் மறைபொருளாகவே பற்பல உலகங்களை ஆங்கிருக்கும்
பொருட்களை அனுபவ
பூர்வமாக அறியத்
தர, அவையே
வைகரியாதி மொழிகள் வழி
அகத்தே இருத்தப்படுகின்றன. சமய வாழ்க்கை என்பது அதனோடு அமையாது,
அதன் முடிவானவோர் துறையாக,
நூலிய அறிவியல் (Hermeneutic Science) சான்ற தெளிஞானவியல் அமைகின்றது. இங்குதான், சாக்கிராதி அவத்தைகளின் அறியப்படுவனவற்றை, பெயர்த்தறிந்து இலாட தானத்தின் தெளிஞானமாக ஆக்கும் பணி
அமைகின்றது. இதன் வழியே
தான் சிவஞானம் பகிழப்பெற்று அதன்வழி , வள்ளுவப் பெருந்தகை முன்மொழிந்த, பற்றற்றான் பற்றும்
பற்றப்படுகின்றது என்பதாம். மேற்குலகில் இந்த தெளிஞானவியலை டேகார்டு (Rene
Descartes ) என்பார் தொடக்கி வைத்தாலும் அது நலமே வளராது
போய்விட, சைவ
சிந்தனையில் அது
ஆழ வேரூன்றி நலமே
வளர்ந்துள்ளதை கண்டு
நாம் பெரிதும் மகிழவேண்டும்.
இந்த தெளிஞானவியலின் அடிப்படையானது, சாக்கிராதி அவைத்தைகளின் ஆகுவனவற்றை வைகரியாதி மொழிகள்
வழி நினைவில் இருத்துவதோடு, அவற்றைப் பெயர்த்து வழக்கியல் மொழிக்குக் கொண்டு வந்து,
தான் ஐயம்
திரிபற உணர்வதோடு பிறருக்கும் உணர்த்தும் வகையில் தெளியவேதான், அது தெளிஞானமாகி , எவ்வித
ஐயப்பட்டிற்கும் இடந்தராத மாணறிவாகி ஆன்மாக்களின் ஞானவேட்கைகளை ஆகவே எல்லா வேட்களையும் போக்குகின்றது என்பதாம். எவ்வகை
அறிவும் இவ்வாறான இலாடதானத்து தெளிஞானம் ஆக்காவிடில், ஓர்
வகை ஐயப்பாடு உடன் நீங்காவகை இருந்துகொண்டே, அதனை தெளிவாக்கி உணருமாறு வேட்கைகளை பிறப்பித்துக் கொண்டே
இருக்கும். எப்பொழுது இவ்வாறு பெயர்த்து அம்
மறைநிலன் தெளிஞானம் படுத்தப்படுகின்றதோ,
அப்பொழுதே அது
தொடர்பான வேட்கைகளும் அறும் என்பதாம்.
இத்தகைய மறைஞானங்களை தெளிஞானங்களாக மாற்றுவிக்கும்
கற்றலில் அடங்கும் பெயர்ப்பாதி வினைகளே, ஊழ்ச்சி
வினைகள் எனப்படும். இவற்றின் வழியே தான்
அநாதியே அகத்துக் கிடக்கும் அஞ்ஞானம் போக்கி
மெய்ஞானம் பெற
முடியும் என்பதாம். யாவன்
முயன்று இந்த
கழற்சி ஊழ்ச்சி
யாதி வினைகளை
செய்கின்றானோ அவனுக்கு எவ்வித தடையுமின்றி உரித்தாகும் இந்த மேலான நிலை
என்பதின், அனவருக்கும் சாத்தியமாக கிடக்கும் ஒன்றே
இதுவெனப் படுகின்றது. பொறிலிய
நூலியப்பார்வைகளோடு நுதலியப்பார்வைகள் வழியும்
உலகத்து நிகழ்ச்சிகளைப் பார்த்துத் தெளியும் போது, ஆங்கு
எவ்வாறு உலகத்து
நிகழ்ச்சிகள் அனைத்தும் இறைவனது திருவிளையாடல்களால், பஞ்சகிருத்தியங்களால் மெய்யாக்கப் படுகின்றன வென்றும், இவையே எண்வகை
புத்திகளாகவும் அறியப்பட்டு அவை எவ்வாறு ஆன்மாக்களுக்கு எண்வகை
சித்திகளை அருளுகின்றது என்பதுவும் தெரியவரும் என்பதாம். இங்கேயே இறைவனை எண்குணத்தனாக கண்டுவக்கும் பேறும் கிட்டுமென்பதாம்.
இனி இதனையுங் கடந்து, துரியாவவத்தைகட்கு ஆளாகி,
அதன்வழி நுதலியப்பார்வையை இன்னும்
ஆழமாக்க, மந்திர
யந்திர தோற்றமும் செயற்பாடும் புரிய வர,
இறைவனை மந்திர
சொரூபியாக கண்டு
மகிழும் பேறு
கிட்டும் என்பது.
உலகெங்கும் புறத்தே
பலவாகத் தோன்றினும், அகத்தே அனைத்தும் மந்திர
யந்திரங்களின் தொழிற்பாடே என்ற தெளிவும் மிகும். இவ்வாறான தெளிவு
இன்னும் மிக
அதுபொழுது, இறைவனை
பஞ்சகிருத்தியனாகக் கண்டு
மகிழும் பேறும்
உண்டாம். இந்த துரியத்தின் மேன்நிலைகளில்,
சிவப்பார்வை வந்தமைய,
நாதமும் விந்துவும் அதிசூக்குமை மந்திர வடிவாகிய ஓங்காரத்தோடு ஒன்றாய் நிற்கின்ற மூலவடிவாகிய அருட்பெருஞ்சோதி வடிவில் இறைவனை
தரிசிக்கும் பேறு
உண்டாம். இனி இதன் பிறகு
துரியாதீத அவத்தையை தெளிசாக்கிர இலாட தானத்திற்கு கொண்டு வரும் போதே,
சிவப்பார்வையின் மேலாகிய
அதீதப் பார்வையும் இன்னும் அதற்கும் மேலதாகியதும் முடிவானதுமாகிய
பார்வையற்ற பார்வையும் அமையும். அப்பார்வையில் சுட்டென
யாதும் இலாது
போதலின், அதனின்
காலவுணர்வுங் கழற்றப்படுதலின், அதுவே
சிவசத்தாகிய சிவஞானம் தரும் என்பது. வாழ்க்கையின் எல்லாத்
தேடல்களுக்கும் மூலமாகிய ஞானத்தேடலை முடிவிற்கு கொண்டுவரும் தெளிஞானமே இச்சிவஞானமாம், பார்வையற்ற பார்வையின் மேற்
பார்வை இல்லை
என்பதின்.
இவ்வாறு பற்பல
அவத்தைகளை பெறுவதோடல்லாது, அவற்றை தீர சிந்தித்துப் பெயர்த்து தெளிஞானமாக்கிக் கொண்டே
சென்றால், முடிவில் எல்லை
ஞானமாகிய சிவஞானமே ஞானமாக அமையும் ; இதனை ஈட்டித்தரும் சிந்தனைவேள்விகளே இங்கு ஊழ்ச்சி
வினைகள் எனப்படுகின்றன. எத்துறையை இவ்வாறு தெளிஞானமாக்குகின்றோமோ, அதனின்று விடுபட்டு இன்னும் ஆழமான
பிறிதோர் துறைக்குச் செலும் பேறு வாய்ப்பதால், இத்தகைய ஊழ்ச்சி வினைகள்
பக்குவ முதிர்ச்சிக்கும் , கற்றளி( ஆதாரத்
தல) பெயர்ச்சிகட்கும் காரணமாக
அமைகின்றதைக் காண்க.
இனி இவ்வளர்ச்சியை ஓர்வகை
கூர்தல் வளர்ச்சியாக(evolutionary development) கொள்ளவும் முடியும். எவ்வாறெனின், பொறிலியப்பார்வைகள் போன்ற பார்வைகள் யாதும் அற்று சுத்தஞானக் குருடாகக் கிடக்கும் நிலை
கேவலாவத்தை என்றும்,
இந்தப் பார்வைகள் வந்தமைய
அதன்வழி பற்பல கண்டு
ஞானம் புசிப்பது சகலாவத்தை என்றும், ஊழ்ச்சி
வினைகள் வழி
இவற்றை தெளிஞானமாக்கி மகிழ்வது சுத்தாவத்தை என்றும்
நிலயவத்தைகளை அறிந்து
கொள்ளலாம். இவற்றில் , சகாலவத்தையே எல்லா
ஆன்மாக்களுக்கும் இயல்பான
தொன்றாக, சமயஞ்
சார்ந்த வாழ்க்கை அதனின்று மேலாலவத்தைகட்குக் கொண்டு
செல்ல, அதற்கு
எதிரான நாத்திக
வாழ்க்கை, கேவாலவத்தைக்கு கீழே இழுக்கும் கீழாலவத்தைகளத் தரும்
என்பதுமாம்.
இத்தகு சுத்தாவத்தை நிலலைகளில் படவேதான், ஆணவத்தொடக்கிலிருந்து கழன்று
சுத்தமாகும் சூழல்
பிறக்க, இங்கேயே
அணுத்துவம் போக்கிய
பரஞான நிலைகள்
அனுபவிக்க வரும்
என்றது. சகலாவத்தை நிலைகளில், குறிப்புக்கால உணர்விலிருந்து கழறாதே ஆன்மா உலக அனுபவங்களைப் பெற்று சுட்டுணர்வு ஆகவே
சுட்டுக்கால வுணர்வு
திசையுறு காலவுணர்வுகளையே அறிவின்
முதற்பொருளாகக் கொண்டு
உழலும். இந்த
குறிப்பு நிலையிலிருந்து சுட்டுநிலைக்குப் பெயர்ந்து சுட்டுனர்வுகளை மகிழ்வது, அந்த ஆணவமலத்
தொடக்கினால்தான். தெளிஞானத்தை வளர்த்து வளர்த்து இலாடதானத்தே ஐந்தவத்தைகளின் உட்பொருளையெல்லாம் தெள்ளறிவுப் பொருளாக மகிழும் ஆன்மா,
இந்த ஆணவ
மலத் தொந்தனையால் வரும் ஞானதிரோதகத்தைப் போக்கி,
அதனின் சகலாவத்தை நிலையிலிருந்து கழன்று பரஞானங்களையேத் தரும்
சுத்தாவத்தை மகிழும்
என்றது. இங்கு எஞ்சி
நிற்பதாகிய மறைப்பு,
சிவஞானத் திரோதகமே என்ன, அதனின் சுட்டுகால உணர்விற்குப் பெயரா குறிப்புக்கால உணர்வினையே காலவுணர்வாக நின்று
வாழும். இந்நிலையில் இறையருளின், இறைவனிடமிருந்து அந்நியமா நிற்பது கழற்சியுற, இந்த
குறிப்புக்கால உணர்வாகிய பராவவத்தைக் காலவுணர்வும் இல்லாதுபோம் என்றவாறு. எவ்விதக் காலவுணர்வும் தலைப்படாத நிலையில் அறிவில்
சுடர்ந்து நிற்கும் ஞானமே சிவஞானமென, ஊழ்ச்சி வினைகளின் முடிவு அறிவின் இந்த
எல்லைநிலை என்றது.
இவை இன்னும்
வரும் சூத்திரங்களில் மேலும் விரிக்கப்படும்.
தொடரும்
உலகன்
மெய்கண்டாரின் சிவஞானவியலை புரிந்துகொள்ள சற்றுக் கடினமானது என்றாலும் அடிப்படையில் மறைஞானமாக வெளிப்படும் ஒன்றினை சிந்தித்துத் தெளிந்து தெளிஞானமாக்கும் முயற்சியே முடிவில் இலாடதானத்தில் ஆன்மாவை இருக்க வைத்து எவ்வித மறையும் இல்லாத சிவஞானத்தை மகிழச் செய்யும் என்பதாம் ஆங்கித்தில் சொல்லும் போது ‘Unconacious’ என்பதை ‘conscious’ ஆக்குவதே நாம் செய்ய வேண்டிய ஞானப் பயிற்சி.
இதற்கு நல்லவோர் உதாரணமாக கனவு ஆராய்ச்சியைக் கூறலாம். ஓர் கனவு குறி மொழிகள் பல பயிலும் ஒன்றாகும். அதனைப் புறிந்துகொள்ள பல வகையான பொருள் பெயர்ப்புகளை (interpretations) நாம் செய்ய வேண்டும் ஓர் இளம் பெண்ணை முரட்டுப் பாம்பொன்று கட்டித் தழுவுகின்றது என்றால், உடன் ஓர் பாம்பு அவளைத் தாக்க வருகின்றது என்று பொருள்படாது. ஆக பொருள் என்ன? என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு காணும் போது, அவள் அகத்தே கடுமையான காமவேட்கையைத் தூண்டும் குண்டலினிப் பாம்பு எழுந்துவிட்டது ஆக இனி ஓர் ஆண் துணையை வேட்டுத் திரிவாள் என அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதுதான் இக்கனவின் பொருள்.
இதேப் போலத்தான் தெய்வ வடிவங்களைப் பற்றி நாம் கேள்விகள் கேட்டு சிந்திக்க வேண்டும். ஏன் திருமால் வடிவத் தெய்வம் ஆதிசேடன் எனும் பம்பினை படுக்கையாகக் கொண்டிருக்க , சிவபெருமான் எனும் தெய்வத் திருவடிவில் பாம்பொன்று கழுத்தில் நல்லவோர் அணியாக புரள்கின்றது?
இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு இத்தகைய தெய்வப் படிமங்கள் தம் அகதே மறைத்து வைத்திருக்கின்ற ஞானத்தை வெளிபடுத்தி மகிழ்வதே இங்கு மெய்கண்டார் விரிக்கும் ஞான சாதனமாகும். இறைவடிவங்கள் அனைத்தும் மானிடர்களின் கற்பிதங்கள் ஆகவே அவை பொருளற்றவை என்று ஏளனம் செய்து அவற்றைப் புறகணிக்கக் கூடாது. இறைவனே குருவாக நின்று இத்தகைய தெய்வப் படிமங்கள் வழியாக அவை நடிக்கும் புராணங்கள் வழியாக மிக ஆழமான ஞானத்தை போதிக்கின்றான. அவன் போதிப்பது தான் என்ன என்று ஆழ விசாரித்து பொருளறிந்து ஞானம் பெருக்குவதே தக்க சாதனம் ஆகும்.
காரைக்கால் அம்மையார் பாடல்களிம் இப்படிப் பட்ட ஆய்வுகள் நிறைய இருக்க, சான்றாக இங்கே ஒன்றைத் தருகின்றேன்.
அற்புதத் திருவந்தாதி:
41
ஒருபால் உலகளந்த
மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னிருவமாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவம் மின்னுருவோ நேர்ந்து
(அ-ரை
திரு.வி.க)
இருபாலும் நீல
உருவமாக நேர்ந்து (நெருங்கி) நிறந்தெரிய மாட்டோம். இரண்டு நீலமேக உருவிடைத் தோன்றும் மின்னுருவோ உன்னுடையது என்றபடி. இறைவன் மின்னுருவம் உடையவன் என்றவாறு
உரை(உலகன்)
பல்வேறு வடிவங்களில் தன்னைக் காட்டி அருளும்போது, ஒருபால் உலகளந்த திருமாலையும் மற்றொருபால் உமையம்மையையும் அடக்கி
நீலவண்ணத்தில் தானேயாய் வெளிப்பட்டு நீலசிவனாக நிற்க
,எந்த வடிவம்
நின் வடிவம்
என்று தெளிந்தறிய முடியாது தடுமாறுகின்றேன் ஐயனே!
நின் மெய்
உருவந்தான் எது?
கருமேகங்களிடையே வெடிக்கும் மின் உருவமோ நின்
உருவம?
41.
orupaal ulakaLanta maalavanaam maRRai
orupaal umaiyavaLaam enRaal - irupaalum
ninnuruvamaaka niRanteriya maddoomaal
ninnuruvam minnuruvoo neerntu.
Meaning:
O BEING who discloses Yourself in so many archetypal forms! When you disclose
yourself in a complex figure in which one half is Vishnu who measured the whole
world and the other half is the Umai, the Woman and both in Blue, you are lost
in these figures and I fail to distinguish you as different from these two.
Tell me, is your true form that of the lightning that flashes between the dark
clouds?
Comments:
The metaphysical life such as that of Punitavati is one of DIRECT
experiencing the deeper reaches of the metaphysical horizons taken there NOT by
books scriptures the words of gurus and so forth but by BEING Himself. Having
graduated from all these lower levels through the dint of her tapas, she is
taken to the genuine Pilgrimage by BEING Himself where He teaches her through
various devices in which presenting Himself in some archetypal forms and make
her contemplate on the MEANINGS encrypted into those dumb images and understand
them. We have seen how she has contemplated and succeeded in wresting out
many metaphysical truths through such efforts.
So far the matter was clear: the archetypes were those of Siva and hence a kind
of unity despite differences. However now emerges a situation where various
cultic dichotomies and differentiations BREAK down. Siva discloses as Tirumaal,
or VishNu and at the same the Woman and both in BLUE as opposed to His natural
Red or Golden. Thus the cultic mind is made to be confused and bewildered
with respect to the identity that has been promoted so far: the distinctions of
Saiva VaishNava Sakta and so forth BREAK DOWN when BEING discloses Himself as
all these and also a SURPLUS.
While at the lower levels strong emotional ties to certain archetypal forms may
be promoted but as one progresses in the metaphysical journey, there comes a
point where such singular and definite archetypal forms are made MERGE and
thereby confuse the identities by way of FREEING the mind from cultic
possession by the archetypes. At such levels of metaphysical reaches, the
person is NOT anymore a Saiva a VaishNava or Sakta or whatever. All such
identity-conferring archetypes merge into each other making all these
emotionally powerful cultic identities rather ridiculous.
It is also shown at the same time that BEING is forever a SURPLUS, the ONE who
cannot be given definite form and function and thus made a determinate entity.
Each time the mind conceives of Him as such and such and is very sure about it,
there emerges something that would shatter that confidence and thereby catapult
the soul into a realm where BEING is contemplated in His Supreme Indeterminacy.
தொடரும்
உலகன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஆறு ஆதாரங்கள்; கற்றளிப் பெயற்சி, பதவூழிகள்
மெய்கண்டாரின் சிவஞானவியலும் ஆகவே சாதனாவியலும் ஓர் உலகப் பொதுதான். எப்படி சுட்டறிவு உலகப் பொதுவோ அதன் வழி நிறுத்தப்பட்ட திரியத்துவ அநாதிப் பொருளியலும் உலகப் பொதுவோ அதேப் போல அன்னாரின் சாதனாவியலும் அனைவருக்கும் பொதுவான ஒன்று. சாதி மத பேதங்களை எல்லாம் கடந்தது.
இங்கு ‘கற்றளி’ என்பது மூலாதாரம் சுவாதிட்டானம் போன்ற ஆதாரத் தளங்கள் ஆகும். ‘கல்-அளி’ கற்றளியாகத் திரிந்து நிற்கின்றது. தொல்காப்பியரின் திணைக் கோட்பாடு போன்ற்து. ஒருவன் எட்டி வதிகின்ற ஆதாரத் தளதிற்கு ஏற்ப அவனது குணாதிசயங்கள். கற்று கற்று மேம்பட்டு மும்மலங்களைப் போக்கி சுத்தமாகி மேலான கற்றளிகட்குப் பெயர அவனது குணாதிசயங்களும் மாறுகின்றகின்றன. கீழான குணத்தவனாய் இருந்தவன் மேலான குணத்தவன் ஆகின்றான்.
மூலாதாரம் தொடங்கி சுவாதிட்டானம் பெயர்ந்து மணிப்பூரகம் அடைந்து பிறகு சிவத்தளங்களாகிய அநாகதம் விசுத்தி ஆக்ஞை போன்ற கற்றளிகளை அடைந்து அதற்கும் மேலும் உள்ளத் தளங்களை அடையவே தான் மும்முலங்களின் பிடியிலிருந்து ஆன்மா சுத்தமாகி இறைவனை நெருங்கி அவனுடன் ஒன்றித்து நின்று சிவஞானம் மகிழ்ந்தவாறு இருக்கும்.
அடுத்து வரும் சல கட்டுரைகள் இந்த சாதனாவியலை விளக்குவன்வாக அமையும் இவையும் எனது அழிவிலுண்மை எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை யாகும்
சூத்திரம் 11. மாயைக்
கழற்சி
மூலக்கற்றளி முட்டிமுடித்து அறிவினா திட்டான
மடைந்துமணி பூரகம்
உற்றிடும் மாண்புடை யான்மா
கண்டிடு முலகிற்
கருநிலை யாடல்கள்
வென்றிடு மாய்மை வீழுமிறை யருளின்.
இச்சூத்திரம் எந்நுதலிற்றோவெனின் எவ்வாறு மாயம் போக்கி மெய்யுணர்வு கைவல்லதாக ஆன்மாக்கள் உயர்ந்து அதன் வழி கற்றளிக் கற்றளிகளாகப் பெயர்ந்து உயர்ந்து இந்த மாயத்திற்கும் ஏதுவாகிய அசுத்தமாயா இசைவுங் கெடுத்து
சுத்தமாகி சுத்தமாயையின் ஆகும் மந்திரவுலகம் புகும் என்பதை விளக்கக் கருதியதுவாம்.
இங்கு கற்றளியாவது ஆதாரத்தலம் என்றும் சக்கரம் என்றும் பகரப்படும். அசுத்தமாயைத் திரித்து ஆன்மாக்களின் அறிவுலகினை நிறுத்துவனவாக ( the cognitive space, or the
hermeneutic world) இவை திகழ்வதின் " கல்" ஆகிய கற்றல் நிகழுமாறு
"அளி"க்கின்றவையாக இவை இருக்க , இங்கு அவை
"கற்றளி" எனப்படுகின்றன. இவை முதற்கற்றளி,
சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்றே பண்டையோர் கூற்றுப்படி
ஆறு ஆதாரங்களாக கொள்ளப்படும் என்ற போதிலும், " மூலக்கற்றளி" என்பது இந்த ஆறு கற்றளிகளையும் தன் அகத்தே கொண்டுள்ள முழுகற்றளியாகவும் கொள்ளப்படுகிறது என்பதை அறிக.
இச்சூத்திரம் இறையருளை ஈட்டத்தரும் வினைகளாலேயே மூலக்கற்றளி நுழைவதும் மேலும் அங்கு நுழைந்த பின் படிமான முறையில் அடுத்தடுத்து உட்புதைந்து கிடக்கும் இன்னும் பல கற்றளிகளின் நுழைவும் பெற்று பக்குவத்தில் முதிரும் என்றும்
மேலும் மணிபூரகக் கற்றளி அடைந்து நுதல்விழிப் பார்வையின் ஞானம் வளர்க்கும் பொழுதே அசுத்தமாயா பந்தம் கழற்றப்படும் என்பதையும் விளக்கக் கருதியதுமாம்.
இனி
"மூலக்கற்றளி முட்டி முடித்து
"
என்பதை "மூலக்கற்றளி முட்டி (அதில் முதற் கற்றளி ) முடித்து " என்று விளக்கமாகக் கொள்க. இக்கற்றளிகள் அமைகின்ற பார்வைகளுக்கு ஏற்ப அமைவது என்பதாலும், இந்தப் பார்வைகளும் ஒன்றிற்குள் ஒன்றாக புதைவுண்டு கிடப்பதாலும், இந்தக் கற்றளிகளும் ஒன்றிற்குள் ஒன்றாக புதைந்து கிடக்கும் என்பது. இதில் எல்லாக் கற்றளிகளையும் தன் அகத்தேக் கொண்டிருப்பது மூலக்கற்றளியாகிய முழுக் கற்றளி என அதில் முதலாவதாக அமைவதே முதற்
கற்றளியாகிய மூலாதாரம் என்றது.
ஆணவத் துன்னிருளைக் கிழித்துக்கொண்டு பொருளென நிற்கின்ற அனைத்தின் தொகுதியே இந்த முழுக்கற்றளி. இப்புவனமாயே திரிந்து நிற்பது சுத்த அசுத்த மாயைகள் என்பதின், அவற்றை இவ்வாறு திரித்து இடங் காலம் வித்தை இராகம்
நியதி போன்ற தத்துவங்களோடு திகழ வைப்பன நாத விந்துகளின் வழி எழுகின்ற மந்திரங்கள் என்பதின், இம்முழுக்கற்றளி திருட்ட அதிருட்டமாகிய ( concrete and abstract) எல்லா வகைப் பொருட்களையும் கொண்டிருப்பதாகும். மேலும் பதியாகிய இறைவனின் பஞ்ச கலைகட்கும் பஞ்சவதிகாரங்கட்கும்
இடமாகவும் இதுவே இருக்கின்றது. கட்டுண்ட ஆன்மாக்கள் உடலெடுத்து வாழ்வதும் கற்பதும் அதன்வழி மலங்களைப் போக்கி சுத்தமாகுவதும் இங்கேயே என்பதால், இந்த பாசத்தளைகளும் இந்த முழுக்கற்றளியில் கிடக்கின்றனவாம். இனி ஆணவம் கன்மம் மாயை என்னும் இந்த பாசங்களின் வன்மை மென்மைக்கு ஏற்ப, இந்த கற்றளி பகுதி பகுதியாகவே உணரப்பட்டு அறியப்படும் என்பதாம். இதன்வழியே ஆறு ஆதாரத் தலங்களும் அனுபூதிக்கு வந்தமையும் என்பது.
இனி அந்தக்கரணங்களில்
மனத்தோடு
மாத்திரம் ஒன்றித்து நின்று ஐம்புலன்களையே தொழிற்படுத்தி பொறிலியக் காட்சிகளையேப் பெற்று அதனின் முழுக்கற்றளியில் அசித்துலகையே மகிழும் ஆன்மாக்களுக்கு அமையும் அறிவுலகே மூலாதாரக் கற்றளி என்பது. இதுவே தூலமாகி நின்றிட, பிறப்பிற பார்வைகட்கு உரிய புவனங்களை, அறிவுலகுகளை புதையுருவினதாக, மறையுண்டு கிடப்பதாக இருக்கும். பொறிலியப் பார்வையேப் பார்வையாகவும் பிறப்பிற பார்வைகள் விளங்காதனவாகக் கிடப்பதின், ஐம்புல நுகர்ச்சிக்கு வருவதே பொருள் பிறவெல்லாம் வெற்றுக் கற்பனை என்றவாறும் இருப்பர். இதனின் அசுத்தமாயையின் விருத்திகளேப் பொருள் பிறவெல்லாம் அல்ல என்றிருப்பதின் , இவர்கள் மாயாமயக்காகிய மாயாமலம் உடையவர்கள் என்பதாம். மேலும் இம்மாயா மயக்கின் கரணமாக, உழற்சி வினைகளையேச் செய்து உழல்வர் என்பதின் கன்மத்தளை வல்லிதாய் பட்டவர்களும் ஆவர். மேலும் கழற்சி வினைகள் ஊழ்ச்சி வினைகள் என்பன இவர்கள் கருத்திற்கு பெரிதும் எட்டாவகை நிற்பதின், ஆணவமலத் தொடக்கும் உடையர்கள் என்பதாம். ஆகவே இவர்கள் மும்மலங்களையும் வல்லிதாய்க் கொண்ட "சகலர்கள்" என்பவர்கள் ஆகும்.
இனி இச்சகலர்களில் 'நாத்திகர்' என்றும் 'ஆத்திகர்' என்றும் இருதிறத்தினர் உண்டு. நாத்திகர் என்பார் பொறிலியப் பார்வையேப் பார்வை பிறவெல்லாம் கற்பனை என்று ஒதுக்கிச் செருக்கோடு நிற்க, ஆத்திகர் என்பார் , தெளிவாக அறியாவிடினும் மறையாக, அப்பொறிலியப் பார்வைக்கும் சூக்குமமாக பிறப்பிற பார்வைகள் உண்டு என்றும் அதன்வழி தெய்வங்கள் உண்டு என்றும் உணர்பவர் ஆவர். இதனின் இவர்கட்கு ஆழமான இறை நம்பிக்கை உண்டென்பது. இவர்களே மூலாதாரக் கற்றளியின் நுழைவு பெற்றவர்களும் ஆவர்.
இனி இதனை இவ்வாறு முட்டிவிட்டு அதனை முடிப்பதாவது வேண்டிய சரியாகிரியைகளை செவ்வே செய்து கழன்று மேலே செல்வதாகும். சகலர்களாகிய இவர்கட்கு
சாலோகப் பதவியே அமைவதின், செய்கின்ற கழற்சி ஊழ்ச்சி வினைகள் சரியா கிரியைகளாகவே இருக்கும். நூலிய அறிவியல் வழி செல்ல உதவும் நூலியப்பார்வை புதையுருவாகவே, சூக்குமமாகவே இருப்பதின், அதனின் நுதலியப் பார்வைகளும் இன்னும் அதிசூக்குமாக நிற்பதின், இவ்வாறு என்பதாம். நுதலியப் பார்வைக்கு இருக்கின்றதாகத் தென்படும் புராணவுருக்களை இவர்கள் தூலப்பொருட்களின் வழியாகவே, பொறிலியப் பார்வையின் ஊடேயே காணுந் திறத்தினர் என்பதின், சிலை வடிவங்களில் பல தெய்வங்களை
வணங்குவதும், அர்ச்சிப்பதும் கோயில் எடுத்துத் தொழுவதும், திருவிழா எடுப்பதும் அதுபொழுது தான தருமங்கள் செய்வதும் தெய்வங்களைப் போற்றி பாடலும் என்பதாகவே இவர்களது கழற்சி ஊழ்ச்சி வினைகள் இருக்கும்.
இப்படிப்பட்ட அனுபவங்களை பெற்றுப் பெற்று பிறகு அவற்றின் மெய்மையினை விசாரித்துத் தெளியவேண்டும் என்று வேட்கை எழும்போதே, அவர்கள் இந்தக் கற்றளியை முடித்து இதற்கு அடுத்துவரும் சுவாதிட்டானம் நுழைவர் என்பதாம்
தொடரும்
உலகன்
சாதிபேதங்கள் வர்ணபேதங்கள் தேவையில்லை- பக்குவத்தில் உயர
இனி கற்றளிப் பெயற்சியில், அதாவது ஓர் ஆதாரத் தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு பெயர்வது அதனால் பக்குவத்தில் உயர்வது என்பதுதான் நாம் விளக்கிக் கொண்டிருக்கும் சாதனமாகும். இதுவும் திரியத்துவ அநாதிபொருளியல்போல் அதற்கு வழிகாட்டி நிற்கும் சுட்டறிவு ஆய்வுபோல் எப்படி உலகப் பொதுவோ அதேப் போலத்தான் இந்த கற்றளிப் பெயற்சிகளும் அதனால் மெய்யாகும் பக்குவ முதிர்ச்சிகளும் .
இங்கு நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது இப்படிப்பட்ட பக்குவ முதிர்ச்சிகள் பிறப்பினால் வருவதல்ல. மேலும் மரபணுக்கள் போன்றவற்றோடு தொடர்பும் அற்றவை என்பதால் சாதி வேறுபாடுகள் வர்ணவேறுபாடுகள் இன வேறுபாடுகள் போன்றவை தேவையற்றவையாக விழுகின்றன. ஒருவனோ ஒருத்தியோ பிறப்பில் எப்படி இருந்தாலும் கற்று கற்று மேம்பட்டு மேலான கற்றளிகட்குப் பெயர்ந்து பக்குவத்தில் உயரமுடியும்
மேலும் அழிவில் உண்மை எனும் இப்பெருநூலின் தனிச் சிறப்பாக அமைவது இப்படிப்பட்ட பக்குவ முதிர்ச்சிகளை பதவூழிகளை பார்வைகள் வழியாக விளக்குவதாகும். பொறிலியப் பார்வை மூலக்கற்றளியின் நுழைவுத் தர, நூலியப் பார்வை சுவாதிட்டனம் புகுதற்கு உதவ நுதல்விழிப் பார்வை மணிபூரகம் நுழைவதற்கு உதவுகின்றது. மேலும் பல விளக்கங்கள் கீழே
>>
இனி
"அறிவின் (சுவ) ஆதிட்டானம் அடைந்து"
என்பது மூலாதாரக் கற்றளிக்குப் பின் அமையும் கற்றளி நுழைவினை விளக்கக் கருதியதாம். உலகியல் சுட்டுக் காலவுணர்விலேயேப் பட்டு மயங்கி வீடுபேற்றினை எண்ணிறந்த காலம் இருப்பது என்று திரிந்துணர்ந்தும், பரமுத்தியை சுவர்க்கத்து வாழ்க்கை என்றும், உலகத்து இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிப்பதே என்றும் நினைப்பது போக்கி, நூலியப் பார்வையுடன் குறிப்புக் காலவுணர்வும் தலைப்பட, அகத்திலே அறியாமைத் துன்னிருள் கிடக்கின்றதென்ற உண்மைத் தெளிவாக, அந்த அறியாமையை அகற்றுவதே வேண்டற்பாலது என்ற ஞானநோக்கம் எழும். காண்பதையெல்லாம் புறவுரு புதையுரு என்ற இருட்டுரு நூலெனக் காணும் திறன்வர, புறவுருவிற்கு நிமித்த காரணமாக புதையுருவொன்று உண்டு, அதனை பிழையின்றி அறியுமுகத்தானேயே அகத்தே கிடக்கும் அறியாமை நீங்கும் என்ற தெளிவின் இவர்கள் சுவாதிட்டானக் கற்றளிபுகுந்து வாழ்வர் என்பதாம்.
இவர்கள் இந்த நுழைவினால், அசுத்தமாயா காரியவுலகின் மாயாமயக்குக் கெட, அசித்துப் பொருட்களையே பொருள் என்று கண்டு மகிழ்ந்தது போக்கி, சித்துப் பொருட்களும் உண்டு என்ற வகையில் ஆன்மதரிசனமும் பெறுவர் .இனி இவர்களில் கீழோர், பொறிலியப் பார்வையையும் நூலியப் பார்வையும் உண்டென அனுமதித்து நுதலியப் பார்வையாதிகளை மறுத்து தெய்வநம்பிக்கையற்று, இலக்கண இலக்கியவாதிகளாக அளவைவாதிகளாக விளங்கி, மெய்யறிவு என்பதை அளவைகட்கு உட்பட்டது என்று சாதித்து வாதாடும் தருக்கர்களாக, நையாயிகர்களாகத் திகழ்வர்.
இனி இவர்களில் மேலானவர்கள், நூலியப் பார்வைக்குள் சூக்குமமாக நுதலியப் பார்வையாதிகள் உண்டு என்று உடன்பட்டு, ஆகவே தெய்வ நம்பிக்கை உடையவர்களாக, மெய்யறிவாய்வினை சிவஞானவாய்வாகவேக் கொண்டு , நூலிய அறிவியல் நெறியே நெறி என்பதாக ஏரண நியதி வழி செல்வர். உள்ளதை உள்ளவாக் காண்பதே வேண்டுவது, அகத்தே நின்று சுடரும் சிற்சத்தி எது உண்மை எது பொய் என்பதைக் காட்டி தெளிவுறுத்தும் என்றவாறு, சின்னியப் பொருட்களாக (symbolic objects) நிற்கும் தெய்வ வடிவங்களையும், அவற்றோடு வரும் திருவிளையாடல்களையும் மெய்பொருளெனக் கொண்டு அவற்றின் புதையுருக்களாவும் நிமித்தகாரணங்களாகவும் நிற்கும் மந்திரப் பொருட்களின்மேல் ஆர்வங்கொண்டு பதியியல் மெய்யறிவு நெறி படர்வர் என்பதாம். வெளிப்பட்டு நிற்பதினை விளக்கல் வேண்டா, வெளிபடா நிற்பதினையே ஆய்தல் வேண்டும் என்றவாறு மறைபொருளாய்வையும் (unconscious) போற்றுவர்.
அசுத்து மாயாமயக்குகள் கழன்று சுத்தமாயாவுலகு புகுந்து நிற்கும் இவர்கள், அந்தக்கரணங்களில் மனத்தொடு புத்தியும் உண்டென நின்று, கற்பனைக் கற்பனைகளாக படைத்துப் படைத்து சுத்தமாயாவுலகில் திரிந்து மகிழ்வர். படைப்பாற்றல் திறன்மிக்கவர்களாக புதியதாகப் பற்பல படைத்து படைத்து மகிழ்வர். இதனால் மேலான நுண்கலைகளைப் போற்றும் நற்கலைஞர்களாகத் திகழவுஞ் செய்வர். நுண்கலை நுகர்வின் சுத்தமாயாகாரிய வுலகே உலகு என்பதாக இவர்கள் கொண்டு, பற்பல கலைகள் வழியாகவே கழற்சி வினைகளையும் ஊழ்ச்சி வினைகளையும் செய்வர். சுத்தமாயாவுலகு சஞ்சாரத்தைத் தரும் பல்வேறு நுண்கலைப் படைப்புக்களே இவர்கள்தம் கழற்சி வினைகளாக, தன்னை மறந்து தெய்வமேத் தானாகி ஆடலும் பாடலும் நிட்டைக் கூடலுமாக ஊழ்ச்சி வினைகள் அமையும்.
இனி,
'மணிப்பூரகம் உற்றிடும் மாண்புடை ஆன்மா"
என்பதின் பொருள் என்னையோவெனின், மூலக் கற்றளியும் அதற்கு அடுத்து அமையும் சுவாதிட்டானமும் கடந்து செல்ல அமைகின்ற கற்றளி இது என்பதை விளக்கக் கருதியது. இங்கு இதற்கு முன் அமைந்த கற்றளிகளோடு இதற்கு அமையும் தொடர்புகளை சிறிது விரிப்பம். தெய்வக் கற்றளிகள் வழி செல்லாதிருப்பதைப் போக்கி தெய்வீகமான ஓர் வாழ்க்கையைத் தொடங்கும் போது அமைகின்ற கற்றளியே மூலாதாரம் என்று கண்டோம். இதன் நுழைவு கிட்ட அதுபொழுது பரசிவனின் ஆழிழுப்பாகிய சுழிமுனை செலவின் தொடக்கமும் இதுவேயாக அமைகிறது. . இவற்றிற்கு கீழேயும் அப்பாலும் உள்ள கணக்கற்ற கற்றளிகளில் இடகலை பிங்கலை நாடிகளோடு மரணநாடியும் வலுவோடு இருப்பவை. இவற்றிற்கு புறம்பாக எண்வகைத் திருவிளையாடல்களைக் கண்டறியும் திறனும், எண்வகை சித்தி புத்திகளை அடைந்து மகிழும் திறனும் மூலாதாரம் புகுந்தார்க்கு அமையும் என்பதால், இறைவன் தூரந்தூரமாக நில்லாது அனைவரையும் ஆட்கொண்டு இரட்சிக்கும் வகையில் யாருக்கும் எளியனாய் தானே அருளின் மேலீட்டால் விரும்பி வந்துறைபவனாக இருத்தலின் விநாயக வடிவத்து மூர்த்தியாக சித்திபுத்திகளோடு இந்தக் கற்றளியை ஆட்சி செய்வன் என்பதின், உண்மையில் இந்த மூர்த்தி மந்திர யந்திர சொரூபங்களை தொழிற்படுத்தும் பரஞ்சித்தாகிய பரசிவனேயாம்.
இந்தக் கற்றளியில் ஒன்றை அடுத்து ஒன்று வெளிப்படுபவை எனினும் ஒன்றில் ஒன்று புதைந்து கிடப்பதாகவேக் கொள்ளவேண்டும். மூலாதாரத்தில் மறையாக புதைந்து கிடப்பது சுவாதிட்டானம், சுவாதிட்டானத்தில் மறையாகப் புதைந்து கிடப்பது மணிபூரகம் என்றவாறு இவற்றின் அமைப்பு. ஓர் கற்றளிப் புக, அதில் வாழ்ந்து சிறந்து இருக்கின்ற திரோகத்தையும் மும்மலத் தாக்கத்தையும் இறையருளின் நீக்க, வெளிப்படாதிருக்கின்ற அடுத்தக் கற்றளி வெளிப்பட்டு விட, அதில் புகுந்து வாழும் ஒருவனுக்கு புதுப்புது இருந்தறிவுகளை வழங்கி இன்னும் அறிவினிற் சிறந்தோங்க வழிகோலும். இவற்றிற்கு அடிப்படையாக இருப்பது வந்தமையும் பார்வைகளே என்றும் விளக்கியுள்ளோம்.
இங்கு மூலாதாரத்தின் பொறிலியப் பார்வையொடு , சுவாதிட்டானத்தின் நூலியப்பார்வையொடு, ஒருவனை ஏனையோரிடமிருந்து பிரித்து தெய்வங்களை எல்லாம் நேராகக் கண்டு தரிசிக்கத்தரும் நுதலியப் பார்வை வந்தமைய அது தொடங்கியே மணிபூரகக் கற்றளி நுழைவு கிட்டுகின்றது என்பதாம்.
சுவாதிட்டாத்தின் தெய்வம் அயனும் கலைவாணியும். அவர்கள் இருப்பது திருமாலில் உந்திக்கமலம் என்பர். எப்பொழுது ஓர் ஆன்மா இந்த உந்திக்கமல வாழ்க்கையிலிருந்து ஆகவே சாத்திர அறிவின், கலைஞான அறிவின் மேல் ஞானத் தெளிவு வேண்டும் என்று, அயனின் பிடியிலிருந்து விட்டு நீங்கி அந்த திருமாலை அடைகின்றதோ அதுபொழுதே மணிபூரக கற்றளி நுழைவும் கிட்டுகின்றது என்பதாம்.
திருமால் அருளால் அமைவதே அறிதுயில் வாழ்க்கையாகும். இது என்னையோ வெனின் மூலத்தில் மாபெரும் குண்டலினி சத்தியைத் தருவதாக ஆதிசேடனே அமர, அது தரும் ஆற்றலைக்கொண்டு சாதாரண மக்களுக்கு கிடைக்கவொண்ணாத பார்வைப் பாய்வு பெற்று மறையாகவே நின்றிலங்கும் தெய்வங்களை நேராக காணும் திறத்தை பெறுவதாகும் சுவாதிட்டானம் வரை உறங்கும் போதே வருகின்ற கனவுகள் ஆனால் இப்பொழுது விழித்திருக்கும் போதே கனவுகள் எனப்தோடு புராண உருக்கள் திகழும் புதுவகைக் கனவுகள் அனுவத்திற்கு ஆகி வரும். உறக்கத்தின் போது வருகின்றவை 'உறக்கனவுகள்' எனின், விழித்த நிலயிலேயே வருகின்றவை "விழிக்கனவுகள்" எனவாகும். இப்படிப்பட் விழிக்கனவுகள் மகிழத் தந்து அதன்வழி சிவஞானம் இன்னும் சிறக்க உதவுவதே இந்த மணிபூரக கற்றளி ஆகும்
தொடரும்
உலகன்
ஓர் ஆன்மா ஓர் ஆதாரத் தளத்தின் ஓர் கற்றளியின் நுழைவு பெற்று அதில் வதிக்க அந்த கற்றளிக்கு ஏற்ப பல திறைமைகளும் இயல்புகளும் குணங்களும் வந்தமையும். இதுதான் பாரதமெங்கும் பல சித்தர் பெருமக்களால் போற்றப்படும் Tantric Psychology எனப்படும் ஆழுளவியல் துறையின் தனிச் சிறப்பு. இது தொல்காப்பிய பொருளதிகாரத்தோடு தொடர்புடையது, அங்கு ஓர் உயிரின் உள்ளம் எந்த நிலத் திணையில் இருக்கின்றதோ அதற்கேற்ப அதன் கூற்றுகளும் பிற செயல்களும் தோன்றும் என்பர். இதன் அடிப்படையிலேயே பாடல்களை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்றெல்லாம் வகுப்பர். ஆனால் இப்படிப்பட்ட மொழியால் ஆகும் உடம்பால் ஆகும் செயல்கள் எப்படி அமைகின்றன என்ற கேள்வியை நாம் எழுப்பினால். அது அந்தத் திணையில் மேவி நிற்கும் தெய்வத்தால் அமைவது என்பர். முல்லைக்கு மாயோன் குறிஞ்சிக்கு சேயோன் என்றெல்லாம் வரும்
இதைதான் இங்கும் காண்கின்றோம் மூலாதாரத்திற்கு சித்தி புத்தி எனும் சக்திகளோடு கூடிய விநாயகன், சுவாத்திட்டனதிற்கு கலைவானியோடு கூடிய நான்முகன், மணிபூரகத்டிற்கு மகாஇலக்குமியோடு கூடிய திருமால் என்பர்.
ஏன் மணிபூரகதிற்கு திருமால்? அக்கற்றளி புகும் ஆன்மாவிற்கு இதனால் வந்தமையும் தனித் திறமைகள் தான் என்ன எனும் போது ‘அறிதுயில்’ என்று பதில் பகரப்படும்.
இந்த அறிதுயில்தான் என்ன? என்பதை கீழே வரும் விளக்கம் தெளிவாக்கும்
>>>>
இனி
"கண்டிடும் உலகிற் கருநிலை
ஆடல்கள்"
என்பது ஐம்பொறிகளின் வழி அமையும் வாயிற்காட்சிக்கும், மனம் புத்தி ஆங்காரம் சித்தம் எனப்படும் அந்தக்கரணங்களினால் ஆகும் மானதக்காட்சி தன்வேதனைக்காட்சிகட்கும் எட்டாது கருவாகி, மறையாக நிகழ்த்தப்படும் திருவிளையாடல்களை ஞானவிழி திறக்க, சிவகரணங்கள் எழுந்து அறிவினைச் செலுத்த, அதன்வழி வரும் யோகக்காட்சிகளில் முதலாவதாகிய கடப்புரு காண் திறத்து விஞ்ஞான காட்சித்திறன் வந்தமைய, புராணவுருக்களா¡ல் ஆடப்படும் இவற்றை நேராகக் கண்டு மகிழும் திறத்தை மணிபூரகத் திறனாக விளக்கக் கருதியதாம். இதனையே நுதல்விழி திறக்க அதனின் அமையும் நுதலியப் பார்வை அனுபவங்கள் அல்லது அவத்தைகள் எனினும் அமையும். நூலியப் பார்வைக்குள் புதையுண்டு கிடந்து இப்போது இந்தப் பக்குவத்தில் வெளிப்படும் ஒன்றாகும்.
இங்கு விளக்கப்படும்
" கண்டிடல்"
எவ்வாறு நிகழும் எனில், உறக்கனவு விழிக்கனவு எனப்படும் இருவகை நுதலியப் பார்வையின் அவத்தை நிலைகளில் ஆகுமென்பது.
உறக்கனவாவது, உறங்கும்போது புறக்கரணங்களும் அந்தக்கரணங்களும் ஆன்மாவிற்கு ஆகாது ஆன்மாவுடன் பிணிப்பின்றிக் கழன்று
கிடக்க, அதுபொழுது இறையருள் அவற்றை ஆண்டு அகத்தே விளையாடி நடந்தது, நடந்து கொண்டிருப்பது,
நடக்கவிருப்பது போன்றவற்றை புராணமொழியில் புகன்று கனவுகளாகக் காணச் செய்வதாகும். இத்தகைய ஞானக்கனவுகள், புராணமொழியில் ஆடப்படுவதால், அவற்றின் பொருளை சிந்தித்து பெயர்த்து உலகியல் மொழியில் விரித்து உணர்ந்துகொள்ள, இறைவனால் உணர்த்தபடுவது புரிந்துகொள்ளப்படுகின்றது.
இதுவே அகத்தியக் கலையாகிய Dream Interpretations என்பது.
இவற்றின் வழி காலம் இடம்போன்ற கட்டுகளைக் கழன்று அதனால் தொலைநோக்கின் எட்டாத தூரத்தில் நடப்பதையும்
இன்னும் ஊகித்துப் பார்க்க முடியா வகையில் எதிர்காலத்தில் நடப்பதையும் காணமுடியும். இதனால் தான் இவற்றை ஆடுவதும்
எங்கும் பரந்தும் விரிந்தும் காலங்கடந்து நின்று அனைத்தையும் உள்ளவா அறிகின்ற இறைவனே என்ரும் ஆகின்றது.
இத்தகைய உறக்கனவுகளில் உரையாடல்கள் நிகழ்வதும் உண்டு. அவற்றின் வழி பொருளும் ஓரளவு விளங்கும். உரையாடல்கள் உண்டென்பதால் கண் இந்திரியத்தோடு செவி இந்திரியமும் இத்தகு உறக்கனவுகளில் செயல் படுகின்றன எனக் கொள்ளவேண்டும்.
ஏற்கனவே இருக்கின்றன மூளையின் இந்திரியங்களோடு தொடர்புடைய பல்வேறு பகுதிகளையே கனவு தரும் இறையருளும் பயன்படுத்துகின்றது. அதனால் அவை சிவக்கரணங்கள் ஆகின்றன என்பதும் ஒக்கும்.
இனி இத்தகு கனவுகள் ஆன்மாக்களின் கற்பனைதான் எனின், அது ஒவ்வாது.
உறங்கும் ஆன்மா வினைத்திறன் இழந்துகிடக்க, செயலியம் (agentivity) விளங்காது போக, இது ஆகின்ற ஓர் அனுபவம் என்பதால், ஆன்மாவின் கற்பனை போன்ற செயல் அல்ல கனவு காண்பது என்றும், ஆன்மாவை மீறி அதற்கு நடக்கும் ஒன்று என்றும் அறிய வேண்டும். கனவுகளின் வினைமுதல் கனவு காணும் ஆன்மாவல்ல, மற்றொன்று.
இனி உறக்கனவுகளுக்கு மேலாய விழிக்கனவாவது, சாக்கிரத்தில் சொப்பனம் போன்றவோர் அவத்தையாகும். விழித்துக்கொண்டிருக்கும்போதே , அந்தகரணம் புறக்கரணம் போன்றவற்றிலிருந்து கழன்று நிற்கும் திறன் வந்தமைய, இறையருளோடு கலந்து உரையாடல் அற்ற மௌன நாடகங்களாக, எல்லாப் பொருளும்
காட்சிப்புலனுக்கு ஏற்ற வகையில் காட்டப்படுவதாய் அனுபவிக்கப்படும் கனவுகளாம் இவை. இவற்றின் தனிச் சிறப்பாவது தெய்வப்படிவங்கள் சுத்தப் புராணவுருக்கள் போன்றவையும் வெளிப்பட்டு காட்சிக்குப் புலனாகுவதாகும். எவ்வாறு எவ்வாறு உலகத்து நிகழ்ச்சிகள் சேடிக்கப்பட்டு மெய்நிறுத்தப்படுகின்றன என்ற உண்மைகளை, எந்தெந்த தெய்வம் எத்தகைய சத்திகளை கொண்டு யாது யாதைச் செய்யும் என்பதையெல்லாம் நேரே அறியத் தருவது இத்தகையக் காட்சிகளாம்.
இனி உரையாடல் இல்லாது போக, கண்ணிந்திரியம் ஒன்றே இங்கு பயன்படும் இந்திரியமாகும். இதனால் சொல்லினால் உணர்த்தப்படுபவை ஊடகமாற்றம் பெற்று மௌனநாடகங்களின் வழி பரதநாட்டியத்து அபிநயங்கள் போன்று குறிப்பாகவே உணர்த்தப்படும். இதனின் நுதல்விழியால் உணரப்படும் நுதலியப் பார்வையின் அமையும் விஞ்ஞானக் காட்சிகள்
இவை ஆகும்.
இத்தகைய காட்சிகள் ஆன்மாவின் கற்பனைகளே வேறல்ல வெனின், அற்றன்று. கற்பனை எனின் காணும் ஆன்மா வேண்டும்போது தொடங்குவதும் வேண்டாபோது நிறுத்துவதும், மேலும் உட்பொருளை தன்னிச்சைக்கு ஏற்றவாறு படைத்தலும் திரித்தலுங்
கூடும். ஆனால் விழிக்கனவுகளும் உறக்கனவுகளைப் போன்று, ஆன்மாவின் செயலுத்துவத்திற்கு அப்பாற்பட்டு , அவற்றது இச்சைகட்கும் நோக்கங்கட்கும் வேறாகவும் பெரும்பாலும் மாறாகவும் நேர்ந்திடும் அவத்தைகளாம்.
விழிக்கனவுகளின்
தொடக்கத்தையும் முடிவினையும் உட்பொருளையும் ஆன்மாக்களால் ஒன்றும் செய்ய முடியாது போக, இவை ஆன்மாவின் கற்பனைகள் அல்ல என்பது தெளிவு.
இவை காணாதிருப்பத்தை வற்புறுத்திக் காணத்தரும் என்பதின் ஆன்மாக்களை மீறி அவற்றிற்கு ஆகும் அனுபவங்களாகும்.
இனி இவற்றை
" கருநிலை ஆடல்கள்" என்பது ஏனோவெனின், மணிபூரகம் புகும் பக்குவம் வந்தமைகின்ற வரையில் இத்தகைய ஞானங்களை தன் திரோகத்தில் மறைத்து ஆன்மாக்கள் நேரே உணரும்வண்ணம் தரிசனம் ஆகாது கிடத்துவதால் என்க. இருப்பதாக உணரப்பட்டு ஆனால் அய்யத்திற்கிடமின்றி காணமுடியாத நிலையில், அனுமானித்தே அறியக் கூடிய நிலையில் இந்தத் திருவிளையாடல்கள் ஆன்மாவின் அறிவிற் றிகழ்வதால், கருநிலை என்றாயிற்று. சூக்குமம் என்றாலும் ஒக்கும்.
இவற்றை 'ஆடல்கள்" என்பது ஏனெனின், உலகத்து நடக்கும் விளையாட்டு, நாடகம், நாட்டியம், கூத்து என்பனபோன்ற கலைப்பண்பாட்டு நிகழ்ச்சிளைப் போன்று அவையும் இருப்பதால் என்க. ஓர் கருப்பொருளைக் கொண்டதாயும், ஒன்றினை உணர்த்துவதாயும், ஒழுங்குபட அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளோடு தொடர்மைப்பட்டு வருவதாயும், அகத்தே பற்பல நியதிகளைக் கொண்டிருப்பதாயும் பற்பல சுவைகளை உணர்ச்சிகளை எழுப்பவல்லதாயும் இருக்க, மேலும் இவை வழுவாத இயந்திரத் தன்மை நியதிகளோடு மெய்யாகுபவை என்பதல்லாது, ஓர் விளையாட்டு போன்று வளைந்து கொடுக்கும் பண்பின் நியதிகளோடு விளங்குபவை என்பதாலும் 'ஆடல்கள்' எனப்படுகின்றன.
தொடரும்
உலகன்
இனி கற்றளிப் பெயற்சிகளில் அதனால வரும் பக்குவ முதிர்ச்சிகளில் அடுத்ததாக வரும் கற்றளிகள் அநாகதம் விசுத்தி ஆக்ஞை என்பவற்றோடு அவற்றிற்கு மேலான ஆயிரவிதழ் தாமரைத் தளம் போன்றவையும் அதற்கு மேலானவையும் அமையும்
அநாகதம் ஓர் அற்புதமானத் தளம் ஆகும். இங்கு தான் பொல்லாத பழவினைகள் போக்கப்பட்டு ஆன்மா சுத்தமாக்கப்படுகின்றது, இங்கு தான் இறைவனே நடத்தும் தீக்கைகள் நடக்கின்றன, ‘தீய்ப்பது’ என்ற கருத்தில் வந்ததே ‘தீக்கை’ என்பதாகும் இதுவே வடமொழியில் பிறழ்ந்து தீட்சா என்று நிற்கின்றது. இதைச் செய்யும் தெய்வ வடிவங்கள் உருத்திரன் உருத்திரி ஆகும். சுமேருத் தமிழில் ‘உருது: urudu என்றால் ‘செம்பு’ எனும் உலோகம் ஆகும். இந்த செம்பு அல்லது தீ வண்ணத்தில் இறைவன் எழுந்து தொல்வினைகளை எரித்து அல்லது தீய்த்து இல்லாது போக்கி சுத்தம் செய்கின்றான இந்தத் தளம் வந்தோர் அனைவருக்கும். இவன் துணை இதனால் உருத்திரி ஆகின்றான.
இதன் விரிவான விளக்கம் கீழே
சூத்திரம் 12: மலக்
கழற்சி
அநாகத மழிக்குமே கன்மம் யதன்பின்
அருளின் விசுக்தியும் ஆக்ஞையு மகற்றும்
அரியதா மணுவம்
ஆதவன் புகுத்தி
மறைப்பின் திரோதகம் மலமாய் எஞ்சிட
இச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின் , மாய்மையும் மாயாமலமும் போக்கிய சிறப்பாலும் மணிப்பூரகம் வந்தடைந்தத் திறனாலும், மறையாக நின்று அனைத்தையும் மெய்யாக்கும் திருவிளையாடல்களைக் கண்டுக்கண்டு இறைக்கல்வி மேலும் மேலும் பயிலும் ஆன்மா, இன்னும் பக்குவத்தில் உயர்ந்து சுத்தமாகி எல்லா உலகப்பற்றுக்களையும் போக்கும் அநாகதக் கற்றளி அடையுமென்றும், அதன்பின் சிவப்பற்றே பற்றாக நிற்க, அணுத்துவம் போக்கும் சிறப்பின் விசுத்தித் தலத்தையும், சிற்றம்பலமே புகு சிறப்பின் ஆக்ஞை கற்றளியும் அடைந்து எஞ்சி இருக்கும் திரோதகம் நீக்கி அருட்பெருஞ்சோதியாய்ச் சுடரும் பரசிவனை தரிசிக்கும் என்பதையாம்.
இதில்
அநாகத மழிக்குமே கன்மம்
என்பது, மணிபூரக நுழைவு பெற்ற ஆன்மா, இறைவனது எண்வகை திருவிளையாடல்களைக் கண்டு இறைக்கல்வி மகிழ்ந்தும் மேலான உலகியல் இன்பந்தரும் நல்வாழ்க்கையும் அனுபவித்தும்
மகிழுங்கால் அவற்றிலும் ஓர் உவர்ப்புத் தட்ட , அக்கற்றிளியில் மறையாக கிடக்கும் அநாகதக் கற்றளியின் வாயில்கள் திறக்க, பரசிவன் சங்காரத் தாண்டவத்து உருத்திரன் உருத்திரி வடிவங்களில் வெளிப்பட்டு ஆட்கொண்டு அடிகள் பல கொடுத்து அவப்பற்றாகிய உலகப் பற்றுக்களையெல்லாம்
எரித்து அறப்போக்கி, எஞ்சுவதினி சிவப்பற்றே என்பதாக ஆன்மாவிற்கு ஓரு பக்குவ முதிர்ச்சி அருளுவன்
என்பதாம்.
உழற்சி வினைகள் கழற்சி வினைகள் என்பனபோன்ற வினைகளையேச் செய்து அதனால்
பிறந்திறந்து உலகவாழ்க்கையிலிருந்து விடுபடாது பட்டுக்கொண்டே, அதற்கேற்ற மூலகன்மங்களை ஈட்டிக்கொண்டே வரும் ஆன்மாக்கள, இக்கற்றளி புகுந்ததும் இறைவனோடு ஒன்றிடத் தரும் ஊழ்ச்சி வினைகளே செய்யக் கடவது என்றதோர் வைராக்கியத்தோடு நிற்க, சிவஞானத்திற்கு இட்டுச் செல்லும் சிவப்பணிகளையேச்
செய்யும்
என்றது.
அசுத்தமாயா விருத்தியாகிய பிரபஞ்சச் செலவில் படுத்திக்கொண்டே இருக்கும் கன்மங்களிலிருந்து தொடர்பு அறுதலின், இக்கற்றளி வாழ்க்கை 'கன்மத்தை அழிக்கும்"
என்றது.
இனி சிவஞானத்திற்கு இட்டுச் செல்லும் செயல்களை நிறுத்துவது சிவகன்மங்களென இஇதனை ஊழ்ச்சியம் எனினும் அமையும் -- அதற்குப் பகையாக நிற்கும் உலகவாழ்க்கையில் மூலகன்மங்கள் அசிவகன்மங்களாம் -- இவற்றை உழற்சியம் கழற்சியம் எனினும் அமையும். இந்த அசிவகன்மங்களே இஇங்கு கன்மமலம் என்று பொதுவாகப் பகரப்படுகின்றது.
இனி இந்த கன்மக் கழற்சி எவ்வாறு நடக்குமெனில் கூறுதும்.
மணிபூரகத் தலம் வந்துசேர, அறிதுயில் திறத்து நாரணன் வடிவ இறைவனது ஆட்சியின் காரணமாக ஆன்மாக்கள் பலவகை உறக்கனவுகளையும் விழிக்கனவுகளையும் கண்டும் நுதலியப் பார்வை நிறுத்தும் கானாவியற் சான்ற வாழ்க்கை வாழ்ந்தும், ஈட்டிய அசிவ கன்மங்களை கனவுசான்ற
ஓர் வாழ்க்கை வாழ்ந்து போக்கும் என்பதாம். முற்பிறவிகளிலும் , மணிபூரகம் புகும் வரையில் இப்பிறவியிலும் செய்யப்பட்ட பல்வேறு வினைகள் வழி ஈட்டப்பட்ட உழற்சியம் கழற்சியமாதிகள் ஆழ்வுள்ளத்தில் சுவடுகளாகப் புதையுண்டு கிடக்க, சில இத்தகைய கனாவியல் சான்ற அனுபவங்களாக அனுபவிக்கப்பட்டு போக்கப்படும் என்பதாம்.
அகத்திலே ஆழ்தலத்தில் எங்கோ புதையுண்டு கிடக்கும் இத்தகு வினை ஈட்டங்களில் இஇன்னும்
சில உலகியல் மெய்களாக ஓர் நிகழ்ச்சியாக , ஏனைய உறக்கனவுகளாக விழிக்கனவுகளாகவே மெய்யாகி அதன்வழியே அனுபவிக்கப்பட்டு இல்லாது போம் என்பதாம். எல்லாக் கனவுகளும் இஇப்படி இல்லையென்றாலும், நாடகங்களைப் போன்று சில கனவுகள் அகத்திலே வெளிப்பட்டு இவ்வடிவில் சில அனுபவங்களை ஆன்மாக்களுக்குத் தந்து பிறகு ஆழ்வுள்ளத்தில் இஇல்லாது போக்கிடும். இஇதன்வழி புதையுண்டவைகளாக எழக்கூடிய சில இச்சாப்போக்குகளும் கனவுவழி அனுபவிக்கப்படும் மாத்திரையால்
நிறைவடைந்து இல்லாது போகின்றன.
மேலும் மணிபூரகம் நுழைவு பெற்றான் ஒருவனுக்கு, திருமாலின் பல்வேறு அவதாரங்கள் வெளிப்பட்டு தாம் அவனாக ஆட்கொண்டு ஆட்சி செய்து மேலான உலகியல் வாழ்க்கை அனுபவங்களையும் பெற வைக்கும். இராகவனாக சீதையைப் போன்ற மங்கையை அடைந்து கழிகாம வெறி இராவணனிடமிருந்து தற்காப்பதின் வழி இல்லற வாழ்க்கை இன்பமும், கேசவ நம்பியாக அரண்மனை வாழ்க்கையை பல தேவியர்களோடு மகிழ்ந்து காமவேட்கையை பொருள் வேட்கையைப் போக்கியும், கல்கி வடிவெடுத்து எதிர்காலத்தை அறிந்து பூரண ஆருடத் திறத்தின் காலவுணர்விலிருந்து விடுபட்டும், வல்லப் பரந்தாமனாக
விளங்கி அருட்போர் நிகழ்த்தி மெய்யான ஞானச்சிறப்பால் அழியாப் புகழ் எய்தியும் , கண்ணனாகக் குருந்த மலையை சுண்டு விரலால் தூக்கி துக்கத்தில் வாடும் மக்களுக்கு தற்காப்புத் தந்து அதன்வழி மக்களால் வணங்குதற்குரியவனாக வாழ்ந்தும், பேராற்றல் குண்டலியான ஆதிசேடனில் அனந்த சயனம் கொள்ளும் நாரணனாக மகிழ்ந்து நோயற்று நெடுநாள் வாழ்ந்தும், வீரியத்தோடு திகழ்ந்தும் இஇனி இவ்வாறாக பல்வேறு இவ்வுலக
வாழ்வு தரக்கூடிய எல்லா இன்பங்களையும் தூய்த்து உலக இஇச்சைகள் அனைத்தையும் அனுபவித்தே போக்குவதாலும் அசிவகன்மங்கள் தொடர்ந்து நில்லாது வீழ்ந்தொழியும் என்பதாம்.
இந்த உலகியல் பற்றையெல்லாம் போக்கியபின்றை, ஒழிவின்றிய ஒடுக்கத்தில் கிடப்பதல்லது, உன்னதமான வாழ்க்கை எவ்வாறு அமையுமென்றும், அவ்வாறே அமைந்தாலும் அதுவும் உலகியல் வாழ்க்கையாகவே அமைந்து முரண்படும் எனின், அற்றன்று, இங்கு அமையும் உன்னத வாழ்க்கை சிவவாழ்க்கையாக அது அற்ப உலகியல் வாழ்க்கை அல்ல என்பதாம்.
முற்றிலும் தனக்கென , அனைத்தும் தனதென எங்கும் தானே என இருக்கும் அணுத்துவப் பசு, பக்குவ முதிர்ச்சி சிறிது வர
இந்த ஆணவ மலத்தின் தாக்கம்
குறைய பிறரும் உண்டென அனுமதித்து அதனின் "தனக்கென- பிறர்க்கென", "தனதென- பிறரதென" தன்னோடு பிற ஆன்மாக்களையும் மறவாதே உடன்பட்டு , அவர்களுடனேயேத் தானும் ஒற்றுமையோடும் அன்போடும் வாழவேண்டும் என்றவாறு வாழும். அதுபொழுது எஞ்சி இருக்கின்ற தானெனும் தனக்கென்னும் தனதெனும் மமதையை, அணுத்துவம் தரும் ஆணவமலத்தை, வாழ்க்கையில் ஏற்படும் சங்காரத் தாண்டவங்கள், மனவேதனைத் தரும்
வாழ்க்கை நிகழ்ச்சிகள் முற்றிலும் கெடுத்துப் போக்க, தானெனும் எண்ணமெலாம்
பிரகாசியாது ஒடுங்கிட, முற்றிலும் பிறர்க்கே, அனைத்தும் பிறரதுவே, எங்கும் யாண்டும் பிறரே என்றவோர் அடக்கநிலை, தன்னை முற்றிலும் மறந்து பிறர் நினைப்பிலேயே வாழும் அருள்நிலை மெய்யாகும்.
இஇந்நிலையில் செய்வதெல்லாம் தொண்டேயாக , அமைகின்ற வாழ்கையும் தொண்டுவாழ்க்கையாகத் திகழும். அருளே வடிவாகிய இறைவன் செய்கின்ற ஐந்தொழில்களும், அவற்றின் உலகியல் வெளிப்பாடுகளாகிய எண்வகைத் திருவிளையாடல்களும் ஆன்மாக்களுக்கு அவற்றை ஊய்விப்பான் பொருட்டே பரங்கருணையின் ஊட்டப்படுவதால், அவை மகாத் தொண்டு காரியங்களாகின்றன, கைங்கரியங்கள் ஆகின்றன.
"தான்" எனும் அகந்தையும்
"தனது, தனக்கு" எனும் சுயநலமும் அநாகதத்தில் போக்கிய ஆன்மாக்கள் விசுத்தித் தல நுழைவு பெற்று செய்கின்ற அனைத்தும் இஇந்த இஇறைவனது மகாத்தொண்டுகளைப் போலவே, பிற ஆன்மாக்களை ஊய்விக்கும் பொருட்டே செய்யப்படுதலின் அவைத் தொண்டு பணிகளேயாகின்றன. பரசிவனைப் போன்று தானும் உயர்ந்து சாரூப்பியப் பேறு மகிழ்ந்திட உதவுதலின் அவை ஊழ்ச்சி வினைகளுமாகின்றன. அமையக் கூடிய வாழ்க்கையும் சிவவாழ்க்கையே ஆகின்றது. பசுத்துவம் போக்கி சிவத்துவம எய்த வைத்தலின் அது சிவவாழ்க்கையாம்
தொடரும்
உலகன்
அநாகதக் கற்றளி யான்மை எனும் அகந்தையை(ego) சிதைத்து இல்லாது போக்கி ஆன்மாவை சுத்தமாக்கும் ஓர் தளம் என்று கண்டோம். ‘யான்’ ‘எனக்கு’ என்ற அகந்தை கெட. அமையக் கூடிய வாழ்க்கை பிறருக்கு நல்லதே செய்யும் தொண்டு வாழ்கையே யாக அது அடுத்து வரும் விசுத்தித் தளத்தில் அமையும் என்று விளக்கப்படுகின்றது. இங்கு இறைவன் மகேசுரன் மகேசுவரி வடிவிலும் ஆநந்த சயனத்து திருமால் இலக்குமி வடிவிலும் ஆன்மாக்களை ஆட்கொண்டு அருள்பாலிப்பன் என்றும் விளக்கப்படுகின்றது
>>>
இனி
இவ்வெடுத்தமொழியொடு ,
"யதன்பின் அருளின் விசுத்தி அகற்றும் அரியதாம் அணுவம் ஆதவன் புகுத்தி "
என்று கொள்க.
இதனோடு தொடர்புடைய ஆக்ஞையின் விளக்கம் பின்பு.
இறைவனின் மகாதொண்டினைப் போன்று சிறுதொண்டுகளைச் செய்து வாழும் சிவவாழ்க்கையின் பயன் என்னையோவெனின் சிவஞானம் இன்னும் பிரகாசிக்கச் செய்து அதன்வழி அகற்றுதற்கு அரிதாகிய ஆணவம் படிப்படியாக அகற்றுதல் என்பதாம்.
இதில் "ஆதவன் புகுத்தி"
என்பது இறைவன் அகத்தே ஞானாதித்தன் சிவாதித்தன் போன்ற ஆதித்த வடிவங்களில் எழுந்து அகத்தே ஏற்கனவே இருக்கும் சிவஞானத்தை இன்னும் அதிகம் பிரகாசிக்கச் செய்வதாகும். அவப்பற்றாகிய உலகப்பற்றுகள் அனைத்தும் முற்றிலும் கடியப்பட, வாழ்க்கையின் ஊக்கமாக இருப்பது அடுத்து சிவப்பற்றேயாமென, அப்பற்றின்வழி ஊழ்ச்சி வினைகளையேச் செய்ய , ஈட்டப்படும் ஊழ்ச்சியங்கள் சிவஞானத்தை தெளிவாக்கும் பண்பிற்று என்பதாம். சாலோகம் சாமீப்பியம் சாரூப்பியம் சாயுச்சியம் என்னும் இறைவனோடு கூடிய உறவு நிலைகளில் இஇது சாரூப்பிய பேற்றை நல்குவனவாகும். சிறுதொண்டனாக நின்று மாகாத்தொண்டனாகிய பரசிவனைப் போன்று அனைத்தும் செய்யப்படுவதின் காரணமாக இவையும் சிறு ஐந்தொழில்களாக, சிறு திருவிளையாடல்களாக அமைந்து அவற்றைச் செய்யச் செய்ய சிவத்துவம் சித்தித்து சிவனென ஒருவனைக் கருதத்தக்க வகையில் சிவப்பண்புகள் வெளிப்பட்டு நிற்க உதவுவனவாம். இத்தகைய தொண்டு வாழ்க்கையே மெய்யான சிவோகம்பாவனை வாழ்க்கை எனினும் அமையும். இவ்வாறான பாவனைகளில் எல்லா மூர்த்தங்களையும் கடந்த அருட்பெருஞ்சோதியாகவே சிவதரிசனம் நடக்கும் என்பதால் 'ஆதவன் புகுத்தி"
என்றது.
அகத்திலே ஆதவன் வடிவில் இறைவன் எழுந்து சிவப்பிரகாசம் புணர்த்திட , இதுவரை கழறாது கிடக்கும் ஆணவ இருளும் அதனோடு கூடிய அணுத்துவமும்
இன்னும் அதிகமாக கழன்றுவிழும் என்பதாம். இனி இதற்கு முன் ஆணவகழற்சி இல்லையோ என, அற்றன்று முன்பும் உண்டு ஆயினும் இங்கு மாயாமலமும் கன்மமலமும் இல்லாத நிலையில் மூலமலமாகிய எஞ்சி நிற்கும் ஆணவமே அதனின் வரு அணுத்துவமே
கழற்றப்படும் என்பதாம்.
இது எவ்வாறோவெனின் , சிறுதொண்டனாக நின்று சிவவாழ்க்கை நடத்தும்போது, தானென தமதென தனக்கென வரும் அணுத்துவ அகந்தை சிந்தனைகள் கழன்று கழன்று விழுந்து கொண்டேச் செல்ல, ஆன்மா பிற ஆன்மாக்களோடு ஒன்றித்து அவையே தானேயாய் நின்று அவற்றின் சுகதுக்கங்களெல்லாம் தமதே என்ற எண்ணத்தில் அருளே மேம்பட்ட நிலையில் செய்யவேண்டிய உதவிகளை எல்லாம் பயன் கருதாது செய்யும். இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்ல, தன் சாதி தன் மதத்தர் தன் இனத்தர் போன்ற குறுகிய சுற்றாடலில் வீழ்த்தும்
குமுகாய அணுத்துவம் கழன்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற குமுகாய பரத்துவ நிலையே தன் இருப்பு நிலையாக ஆக்கும் வகையில் அணுவம் இங்கு கழறும் என்பது.
மேலும் இவ்வாறான ஆன்ம வளர்ச்சியில், அழுக்குகளையும் அவலங்களையும் காணும் கண்கள் இல்லாதுபோக, எங்கும்எதிலும் யாண்டும் நந்நயங்களயேக் காணும் உயர்விழியும் திறக்க , காண்பதெல்லாம் களிப்பு தருவதாக , பொய்மை இஇல்லாததாக, எங்கு காண்கினும் எதனை நோக்கினும்
அழகும் நல்லதுமேத் தென்படுவதாக ஆனந்தமயமானதோர் திருவாழ்கையும் அமைவதின், உள்ளத்தடிப்பினையும் புல்லறிவாண்மையையும் தரும் ஆணவ வலுப்பிடி இன்னும் இஇன்னும் தளரும் என்பதாம். இஇங்கு அமையும் பார்வையே உண்மையையும் சுத்தத்தையும் ஆகவே மேலான விசுத்தி நிலையையும் தரும் சிவப்பார்வை
என்பதாம். நுதலியப் பார்வைக்குள் புதையுண்டு கிடந்து அநாகதத்தின் உருத்திர தாண்டவத்திற்கு ஆளாகிய பின் அமைகின்ற பார்வை இது, விசுத்தித் தலத்திற்கே உரியது.
இவ்வாறு காண்பன அனைத்திலும் களிப்பே மிக, இத்தகைய அருட்கண்ணும் வளர, நடராச பெருமானது ஆனந்தத் தாண்டவ தரிசனமும் மெய்யாகும் என்பதாம். அவலச் சுவைகளை விரும்பி மகிழ்வது கெட்டு, மேலான அழகுச் சுவையே துய்த்து மகிழும் பெரும்பேறு கைவர, தீவிரதர சக்திநிபாதம் பெற்று ஆனந்த சிவதாண்டவத்தை அகிலமெலாங் கண்டுகளிப்பாரும் பெரும்பேறு கிட்டும் இங்கு. இதுவே மகேசுர வாழ்க்கையில் முக்கியப் பண்புமாகும்.
இதனையே திருமால் தலைவனாக திருமகளோடு இருக்கும் வைகுண்ட வாழ்க்கை எனினும் அமையும். இங்கு எல்லா நந்நயங்களையும் திருமகள் மேல் ஏற்றிக்கூறுவர்.
இத்தலத்தில்
அமையும் திருமாலை ஆனந்தசயனத்து அன்பன் என்பர்.
இனி ஆதவன் வடிவில் இறைவன் அகத்தெழுந்து சுடர, அகத்துக் கசடுகள்
இன்னும் நீங்க, அளப்பரிய குண்டலின ¢மூலாதாரத்தில் எழுந்து உடலெங்கும் பாய, செம்பு களிம்பு நீங்கி பொன்னாகச் சுடர்வது போல் அழுக்கு மேனியும் திருமேனியாகி தேசுறு பெற்றுப் பொலியும் , வச்சிரத்தேகமாக உடலும் வலுப்பெற்று நிற்கும். இது எவ்வாறோவெனின் , திருமூலர் செப்பியவாறு, விந்து சயம் சித்தித்து பரியங்க யோகம் செய்யும் போது சுக்கில நீக்கம் நடைபெறாதும் அப்படியே நடைபெற்றாலும்
குண்டிலினி ஈட்டமே பெரிதும்
நடைபெறுவதின் வழி என்பது. இந்தப் பரியங்கயோகமும் உடலோடு கூடிய உயிர்களைப் புணர்வதின் வழியன்றி , மூர்த்தங்களாக அகத்தெழு
மந்திர மகளிர்களை புணர்வதின் வழியும் சித்திக்கும் என்க.
விந்து சயமாவது உலகப் பற்றுக்களை எல்லாம் அறப்போக்கும் அநாகதக் கற்றளியின் சங்காரங்கட்கு ஆட்பட்ட பின்னர் சந்தான விருத்தியின் காரணமாக எழும் காமவேட்கையைப் போக்கி
தூய அன்பின் வெளிபாடாகவே கலவி இன்பம் தூய்ப்பது நடக்கும் நிலையாம். இதனால் சுக்கில சுரோணித நீக்கங்கள் இல்லாது போவதும் உண்டு; அதனின் கருதரிப்பதும் மெய்யாகாது போவதும் உண்டு. ஆயினும் இஇவை வருத்தங்களைக் கொண்டு வாரா. அகந்தையெலாம் கெட, அகமும் சுத்தமாக ஆங்கு திவ்விய மூர்த்தங்கள் ஆன்மாவை ஆட்கொண்டு அதுவே தானாக நின்று, நடக்கின்ற வாழ்க்கையும் இம்மூர்த்தங்களால் ஆகின்ற வாழ்க்கையேயாக, களிப்பும் காதலும் கலவியும் இந்த தெய்வமூர்த்தங்களின் திருவிளையாடலேத் தவிர பிறவல்ல எனினும் அமையும்.
இத்தகைய வாழ்க்கையினின்று எழுவதே மேலான பக்திச்சுவை இலக்கியங்களாம்
இனி அரியதாக சிவஞானத் தெளிவினாலேயே அகற்றப்படக் கூடியதாக இருக்கும் இஇந்த ஆணவத்தின் அகற்சி, ஆயிரந்தலை ஆதிசேடன் மேல் இலக்குமியோடும், தேவ தேவியர்
இருடி கணங்களோடும் ஆனந்த சயனம் கொள்ளும்இகரிய நெடுமாலின் அருளையும் ஈட்டித் தந்து ஆன்மாவை சிவஞான வள்ளல் ஆக்குதலும் உண்டு.
இதுவும் மகேசுரத்தின் ஒருகூறாம். இது எவ்வாறோவெனின், சிவப்பற்றே தழைத்தோங்கி அதன்வழி சிவகன்மங்கள்
அல்லது ஊழ்ச்சியங்கள் ஈட்டிசெய்வதெல்லாம் சிவச்செயலேயாக, சிவபுண்ணியங்களாகத் திரண்டு நந்நயங்களே நுகரும் பேறு கிட்டுமாறு செய்யும்.
இவற்றில் மேலானது மூலவய்யத்தைக் கெடுத்து குறைவற்ற மனநிறைவினைத் தந்து வேகமெலாங் கெடுத்து ஆனந்தமே வடிவாகினாற் போல் திகழ்ந்து, தொண்டுச் சிந்தையே உளத்தில் நிற்க, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, அடைந்த சிவஞானத்தெளிவினை பிறருக்கும் உபதேசித்து உபதேசித்து மகிழும் போக்கு வந்துசேர்வதாகும். இவ்வாறு கிடைத்தற்கரிய ஞானச்செல்வமாகிய சிவஞானத்தை கேட்பார்க்கும் கேளார்க்கும் , மதிப்பார்க்கும் மதியார்க்கும் , எதிர்ப்பாக்கும் வணங்குவார்க்கும் எவ்வித பேதமின்றி கதிரவன் எந்நிலையிலும் கதிர்களைபெய்துகொண்டே இருப்பதுபோல், சிவஞானத்தை வழங்கிக் கொண்டே இருக்கும் சிவஞானவள்ளல்களாக விளங்குவர். பற்பல அரிய ஞானநூற்களையும் படைப்பர். இதனால் அடியார் கூட்டம் பெருகிப் பெருகி வளர்ந்து ஓர் நெடிய பரம்பரியமே உருவாகுதற்கு இடனுண்டு.
இனி இவ்வாறான சிவச்செயல் மக்கள் நலத்திற்கு மிக உகந்தது
என்பதொடு அருளோனாகிய இறைவனால்
விரும்பப்படுவதும் என்பதால், வரையாது சிவஞானத்தை மக்கள் ஊய்திக் கருதி தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கும்பொருட்டு , இத்தகு சிவஞானவள்ளல்களுக்கு தொண்டராகப் பலரையும் வேண்டிய பொருளாதார வளமையையும்
இன்னும் வேண்டிய பிறவும் கொடுத்து உதவுவன் என்பதாம்.
தொடரும்
உலகன்
...
[Message clipped]
பொதுவாக பக்திபாற்பட்ட நிலையில் ஆன்மாக்கள் சிவன் என்றும் திருமால் என்றும் அம்மை என்றும் தமக்கு விருப்பமான ஓர் மூர்த்தியையே பெரிதும் விரும்பி அதற்கே பக்தனாகி வாழ்வர். இதனால் பல தெய்வங்களும் பல வகையான கோயில்களும் மதங்களும் போன்றவை ஆனால் சிவஞானம் அகத்தே சுடர்த் தொடங்க, ஓர் ஆன்மா படிப்படியாக மூர்த்தங்களைக் கடந்து அவற்றையெல்லாம் தன்னுள் விழுங்கி மறைவிடும் அருட்பெருஞ்சோதியாய் இறைவன் தனைக் காட்டியருள சமயாதீத்ம் கைவந்த சன்மார்க்க சிந்தையினனாக ஒருவன் எழுவான். இது ஆக்ஞா கற்றளி வந்து செர அமையும் என்பதை விளக்குவதாக அடுத்த எடுத்தமொழி;
>>
இனி அடுத்துவரும் எடுத்தமொழியை
யதன்பின் அருளின் ஆக்ஞையும் அகற்றும் ஆதவன் புகுத்தி அரியதாம் அணுவம்
என்று பிரித்துத் தனித்துக் கொள்க.
இங்கு 'யதன்பின் அருளின் ஆக்ஞை" என்பது விசுத்தித் தலத்து மகேசுர வாழ்க்கை நடத்துகையில், பார்வை
சிவப்பார்வையாகவே இருக்க அதனின் பற்றும் தூய்மையையே வேண்டத் தரும் சிவப்பற்றே பற்றாக மேலோங்கி நிற்க, சிவஞானத்தை இன்னும் வளர்க்கவல்ல அல்லது தரவல்ல ஆக்ஞை கற்றளியின் நெடுங்கதவங்கள் திறக்க, அதன் நுழைவுபெற்று ஆங்கு வதியும் சதாசிவ முர்த்தியின் மனோன்மணியின் அருட்பெற்று காலக்கடப்பு செய்து சிவஞானமே தன்ஞானமாய் நின்று நிலவும் மேலான சிவபதம் உற்று திகழ்வது என்று பொருள். இங்குள்ள பார்வையும் பரன் உணர்வினால் அனைத்தையும் உணரத்தரும் பரப்பார்வையாகவேத் திகழும் என்பது.
ஆக்ஞை கற்றளி என்பது சிவசங்கற்பமே பரவாணையாக, அனைத்தையும் நடத்தும் இறைவனது ஆணை வெளிப்படும் திருசிற்றம்பலம் என்பதாம். வைகரி பைசந்தி மத்திமை சூக்குமை அதிசூக்குமை என்பவற்றில் சூக்குமை என்பது விசுத்தித்தலத்து பஞ்சாக்கரமென, இங்கு அதிசூக்குமை என்பது பிரணவமாகிய, எல்லா அறிவுகளையும் சனிப்பிக்கும் ஓங்காரமாகிய ஓரெழுதோர் மொழியாகும். இந்த ஒருமொழியே சிவவாணையை உலகத்தில் செலுத்தி ஐந்தொழில்கள் செய்யும் பஞ்சாக்கரங்களாக, பிறகு எண்வகைத் திருவிளையாடல்களைச் செய்யும் ஐம்பத்தோர் அக்கரங்களாக
விரியும். ஆக்ஞை தலம் புகுந்தோன் இஇந்த ஒருமொழி வழியே இறைவனை உணரும் பேறு கிட்டி, திருவிளையாடல்களைக் கடந்தும் ஆகவே எல்லா மூர்த்தங்களையும் கடந்தும், பஞ்சாக்கர வடிவ நடராச கோலத்தைக் கடந்தும், காலக்கடப்பு செய்து எவ்வகைக் காலவுணர்வும் அறிவிலே எழாவகை பரத்துவ நிலை
எய்யச் செய்து சிவஞானமே ஞானமாக இருத்திடும் சதாசிவனின் அருளாட்சிக்கு ஆகும் என்க.
இங்கு ஆணவக் கழற்சி எவ்வாறெனின் கூறுதும்
சிவப்பற்றே பற்றேயாக, சிவத் தொண்டே வாழ்க்கையாக பெரும் பேற்றின் மகேசுர வாழ்க்கை நடத்திய போதும், பெரும்பெரும் மூர்த்தங்களின்
ஆட்சியே நடக்க, ஆணவத் தொடக்கு முற்றிலும் கழன்ற பாடில்லை. எங்கு மூர்த்திகளின் ஆட்சியோ அங்கு அறிவிற்கும் வரம்புண்டு. அந்த மூர்த்திகளின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட ஞானங்கள் மறையாகவே நிற்கும். இவ்வாறு அறிவினில் இன்னும் திரோதகம் நிற்க, அதன்வழி ஒன்றினைக் குறித்து நோக்கி எதிர்பார்த்து நிற்கின்ற நிலை இன்னும் நிலவ, குறிப்புக்காலக் கட்டு உண்டாம். ஆகவே ஆன்மா பெரும்பாலும் சத்தறிவையே புசித்தாலும் அதன்வழி சிவானந்தமே தூய்த்தாலும், காலவுணர்வோடு கூடி அசத்தறிவும் தேற்றி மகிழும் என்பதாம். இஇதனால் ஆன்மா சதசத்து ஆன்மாவாக நீடிக்கும் என்பதாம்.
இந்த ஆக்ஞை கற்றளி நுழைவே, சத்தறிவையும் அசத்தறிவையும் ஒருங்கே மகிழும் திறத்தின் சதசத்தான்மாவாக இருக்கும் ஆன்மாவை
சுத்தம் செய்து அசத்தறிவு தூய்ப்பதைப் போக்கி சத்தறிவையே மகிழும் பேற்றை நல்கும்.
இது எவ்வாறு நடக்குமெனில், எஞ்சி இஇருக்கின்ற ஆணவத் தொடக்கினையும் அது கழிய இன்னும் இருக்கும் திரோதகத்தையும் நீக்குவதால் அமையும் என்பதாம்.
இந்த சுத்திகரிப்பு எவ்வாறு நடக்குமெனில் கூறுதும்.
மேலான விசுத்தி கற்றளியில் பெரும் பெரும் தெய்வங்கள் மூர்த்திகளாக ஆன்மாவை ஆட்கொள்ள, அம்மூர்த்திகட்கு உட்பட்ட புவனங்கள் வெளியாகி அறியாமை போக்கி அறிவினை வளர்க்கும் அதேபொழுது சிவப்பற்றும் இங்கு திருமூர்த்தப்பற்றாக திரிபடைந்து சமயப் பற்றையும் சங்கற்ப பற்றையும் வாதப்பற்றையும் ஆகவே மரபுநிலைப்பட்டு வரும்சந்தானப் பற்று பாரம்பரியப் பற்று போன்ற பற்றுகளாக பல பற்றுக்கள் வளர்கின்றன. ஒன்றினைப் பற்றி அது தானாக நிற்க,அதற்கு அப்பாலாகியவை அறிவிற்படாது போகின்றன. இந்த ஆக்ஞை கற்றளியின் நுழைவு
இவ்வாறான மூர்த்தங்களின் ஆட்சியிலிருந்து ஆன்மாக்களை விடுவித்து சுத்தசமரச சன்மார்க்க நெறியின்பாற் படுத்தி
அனைத்தும் அவ்வவ்வளவில் ஏற்புடைத்தே என்ற சகிப்பையும் மேலும் , இவற்றைக் கடந்து சிவச் சமயமாகிய உட்சமயம் புகுந்தால், சுத்த சமரசஉள்ளத்தினைக் கொண்டுவந்து எல்லாச் சமயங்களையும் விருப்பு வெறுப்பின்றி நோக்கும் இஇயல்பினைத் தந்து எஞ்சி நிற்கும் அறியாமையை போக்க உதவும் என்பதாம்.
எல்லா மூர்த்தங்களும் ஒடுங்கிடும் பெருவடிவு பேரொளி இரவிமதி என்னும் ஒளிவடிவாம். சத்தன் சத்தியுத்தன் பிரவிருத்தன் என்று நிட்களமாய் சகளநிட்களமாய் சகளமாய் இறைவன் வெளிப்பட்டு அருளுகையில், இந்த ஆக்ஞை கற்றளியில் சத்தியுத்தனாக சதாசிவ வடிவில் மனோன்மணியோடு
இஇறைவன் தனைக் காட்டி அருளுவன். அதற்குக் கீழுள்ள கற்றளிகளில் பிரவிருத்தனாக பலவேறு மூர்த்திகளாக வெளிப்பட்டு உலகை நடாத்தி அருள்பாலிப்பன். இந்த சத்தியுத்தன் வடிவம்
பேரொளி இரவிமதி வடிவம் அருட்பெருஞ்சோதி வடிவம் என்பதெல்லாம் ஒன்றே. எல்லா மூர்த்தங்களும் இந்த ஒளிப்பிரகாசத்தில் ஒடுங்கிட, ஒளியேத் திருமேனியாகக் கொண்டு
ஆன்மாக்களை சித்தத்தை ஆட்சி செய்ய, பேதங்கள் யாதையும் காணாப்பெருவிழி வந்தமைய, அந்த ஆன்மாக்கள் அகத்து சுத்த சமரச சிந்தையே மேலோங்கி நிற்கும்.
எல்லா மூர்த்தங்களும் ஒடுங்கிடும் தரிசனம் இந்தப் பேரொளி பெருவடிவ தரிசனம் என்பதின் திரோதகமும் நீங்கத் தொடங்குகிறது. இந்தத் திரோதகம் நீங்கவேதான் உணர்வு சுட்டுகடந்த நிலையில் அதுவெனும் எதிர்
என்பது சூன்யமேயாக சத்தறிவாகிய சிவஞானம் மகிழத் தொடங்குகின்றது.
இவ்வாறு சிவஞானமறைப்பு படிப்படியாக நீங்கிட, நுதித்து ஒன்றினைத் தேற்றி அது தானாகப் பாவிக்கும்
பாவனைபாற்பட்டு ஆகவே குறிப்புக்காலத்தில் ஒன்றினை வேட்டு வீழ்ந்து கிடக்கும் நிலையும் கழற, காலக் கடப்பும் மெய்யாகின்றது.
காலவுணர்வு யாதுமின்றி யாது அறியப்படுகின்றதோ அதுவே சத்தறிவாகிய சிவஞானம் என்பதால், இந்த ஆக்ஞை கற்றளிக்கு வந்து சேரும் ஆன்மா சிவஞானமே ஞானமாக சுடரத் தொடங்குகின்றது என்பதாம்.
காலக்கடப்பு செய்ய, சுட்டுணர்வும் கட்டறிவும் தோன்றா நிலமையென, ஆன்மா பசுத்துவம் போக்கி சிவத்துவம்
எய்வதோடு பரத்துவமும் எய்தி சுத்த பரமான்வாக எழுகின்றது என்பதாம். எவ்வான்மா இஇவ்வாறு அணுத்துவம் போக்குவதின் பசுத்துவமும் போக்கி சிவத்துவம் எய்தி, பரத்துவ நிலையில் பரவான்மாவாக மலர்கின்றதோ, அது இனி குன்றிய புவனம் கொள்ளாது வரம்பின்றிய சிற்றம்பலத்தையே தனது புவனமாக கற்றளியாக கொள்ளும் என்பதின் அதன் இருப்புத் தலம் திருசிற்றம்பலமே யாகின்றது.
இத்திருசிற்றம்பலமே பரநாத வடிவில் இலிங்கசொரூபியாய், பரப்பிரம்மமாய் பரசிவன் தோன்றி நிற்கும் பரவிந்து என்றும், குடிலை என்றும் பரையென்றும் கூறப்படும் ஆதிசத்தி வடிவாம். இச்சிற்றம்பலத்தில் வதிந்து ஓங்காரமொழியாகிய அதிசூக்கும மௌனமொழி பயின்று அதன்வழி பரசிவனது சிவஞானபோதம் பெற்றுய்ய, வீடுபேறு சித்தியாகும் .அதன்பின் மீண்டும் பிறவாப் பெருநிலை எய்தி ஆன்மாக்கள் தம் பிரபஞ்ச உழற்சியைக் கடக்கும், வீடுபேறு உற்று மகிழும்.
தொடரும்
உலகன்
முத்தி முன்னறிவு என்றவோர் உணர்வு எல்லார் அகத்திலும் இருக்கின்றது. அதுவே மானிடர்களிடையே பல்வேறு பேதங்கள் இருந்தாலும் அனைவரும் ஒன்றே எனும் சமுத்துவம் பேசவும் மகிழவும் இடந்தருவது, குருபதத்து ஆக்ஞா கற்றளி வந்தோர் இந்த முன்னறிவே ஆழத்திலிருந்து வெளிப்பட்டு அகத்தே தெற்றென நிற்க வீடுபேறு அடைந்து இந்த நெடிய பிரபஞ்ச செலவிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவாமை அடைவதே முத்தி அடைவதே இறைனடி சேர்வதே வேண்டுவது என்றவாறு வாழ்வர். உலகெல்லாம் பரவிய நிலையில் மேலான ஞானிகள் அனைவரும் இதில் ஒன்றுப்பட்டவர்களாக விளங்கி அருளே வடிவாக வாழ்வர்.
இந்தத் தளம் வந்தவர்கட்குத்தான் வேதாந்த மகாவாக்கியங்களின் மெய்ப்பொருளும் தெற்றென விளங்கும். இதன் விளக்கமெல்லாம் கீழே.
இனி
மறைப்பின் திரோதகம் மலமாய் எஞ்சிட
என்பது என்னை எனின், சிவதாக்கியங்களாக பரதெய்வங்கள் ஆன்மாக்களை ஆட்கொண்டு ஞானம் புகட்டியபோதிலும், அதற்கு ஏதுவாக ஆன்மா விசுத்தித்தலம் தொடங்கி ஆணவமலம்
கழன்று ஆன்மா சுத்தமாகிய போதிலும் ஆன்மாவிற்கு அந்நியப்பார்வை இருப்பதின் அதனோடு குறிப்புக் கால உணர்வும் இருப்பதின் இறைவன் தன் சொரூபத்தை இன்னும் மறைத்து நிற்கும் திரோதகம் உண்டென அறியவரும் என்பதாம். இது எவ்வாறோவெனின்,
ஓர் பரதெய்வத்தோடு அத்துவிதமாய் நின்று பார்க்கின்ற வகையில் எழும் சிவப்பார்வைகள அனைத்தும் அந்நியப்பார்வையாக பரசுட்டு உணர்வோடு வருவனவே. இத்தகைய பார்வைகளின் எழும் ஞானமே
"நானே உலகம்"
"நானே இறைவன்"
"என்னின்றி உலகில்லை' என்றெல்லாம் வரும் வேதாந்த வாக்குகள் ஆகும். இத்தகு வாக்குகளே திரோதகம் உண்டென்றும் அது இஇன்னும் இத்தகையார் ஆன்மாவில் நீங்காதே நிற்கின்றது என்றும் காட்டும். இவை "அடுத்து என்ன? " என்ற உணர்வுடன் வர, குறிப்புக்கால உணர்வும் இவற்றோடு ஊர்ந்து வருவதின், இத்தகைய ஞானங்கள் காலவுணர்வு கடந்தறி திறத்தின் சத்தறிவு அன்று என்பது தெளிவு. "அதுவே நான்
" (தத் துவம் அசி)
எனும் போது இங்காகும் "அது" வெனும் சுட்டு பரச்சுட்டு ஆகும். ஆயினும் உலகியல் சுட்டுக்கால உணர்வு கடந்து அதற்கு இறங்கா தூய குறிப்புக்கால உணர்வு புதைந்து நிற்பதை இஇத்தகைய மொழியாக்கங்கள் உணர்த்தி நிற்பதின், இவற்றை ஆய்ந்து புதையுரு அடைவதின் வழி சிவஞானம் மகழ முடியும் என்பதாம். சிவஞானம் அகத்தே சுடர்வதற்கு மிக உயர்ந்த ஏணிகளாக இவை அமையக் கூடும்.
இனி இப்பரதெய்வங்கள் ஆட்சியில் எழும் பரவுணர்வுகள் பரதெய்வங்கள் மாற அவையும் தானே மாறும் பண்பினதாகத் திகழ்வதின்,
இவ்வாறு தானே மாறிவரும் பரவுணர்வுகளை அறியும் ஆன்மா, அதனின் இவ்வுணர்வுகளையும் அசத்தெனக் கண்டு, இவ்வாறு மாறாவகை யாண்டும் ஒரே படித்தாய் நிற்கும் சிவஞானம் இவற்றிற்கு நிமித்த காரண சூக்குமப் பண்பின் புதையுருவாக இருக்கின்றது என்பதை அறிந்து, வன்னப்பேதங்களைக் கழற்றிப் போக்கிடத்தான் படிகத்தின் சொரூபம் விளங்குமென, இப்பரதெய்வங்களோடு சாயுச்சியமாக விஞ்ஞானகலராக பார்த்தறிவது போக்கி, எவ்வகை தத்துவங்களோடும் கூடியறியாது, தனித்துக் கழன்று நின்று கடுஞ் சுத்தமாகி இவற்றையெல்லாம் கடந்து சென்று அனைத்தையும் அநந்நியமாக நின்று, அறியாது அறியவேண்டும் என்ற வேட்கை பிறக்கும். அதுபொழுதே பரதெய்வங்களின் ஆட்சியால் எழும் சமயப் பற்றுக் கடந்து சமயாதீத நிலைக்கு உயரவும் முற்படும் . அதுபொழுதே சிவப்பார்வைகளின் வழி எழக்கூடிய ஞானங்களையும் அழித்துப் பாழாக்கினால்தான் சமயாதீத நிலைக்கு உயரமுடியும் இறைவனது சொரூபத்தை அறிய முடியும் என்ற தெளிவும் பிறக்கும்.
இவ்வாறு அனைத்து அந்நியப்பார்வைகளின் எழு
ஞானத்தை எல்லாம் பாழாக்கிய நிலையில் இறைவனது சொரூபம் அறியவருதலின், ஞானிகள் இச்சொரூப ஞான இறைவனை "சுத்தப்பாழ்" என்பர்.
இவ்வாறு இறைவனை இன்ன குணத்தினன் என்றும் அல்லன் என்றும்
கூறமுடியாதவகையில்
ஒருவனை மௌனமாக்கிடும் இப்பரதெய்வங்கள் இதனின் 'சிவசாதாக்கியம்" என்றும் பகரப்படும். இச்சிவசாதாக்கியங்கள், தூய பரவிந்துவின் சத்தி தொடங்கி, தூய பரநாதத்தின் சிவன் வரை, இஇடையே நான்முகன் திருமால் மகேசுரன் சதாசிவன் என்றவாறு தத்தம் துணைகளோடு வெளிப்படும். இஇவற்றின் பீடம் தூயபரவிந்துவின் ஆயிரவிதழ் கமலமும், எண்ணற்ற கதிர்களோடு விகசிக்கும் சிவாதித்தனாகிய பிரமரந்திரமும் ஆகும். இஇப்பரதெய்வங்களோடு சாயுச்சியமாக நிற்பது கழன்றிட, இஇவ்வாயிர விதழ் தாமரையும் பிரமரந்திரமும் பேரொளி இரவிமதியென, அருட்பெருஞ்சோதி என தரிசனமாகி, சுத்த சமரச சன்மார்க்கத்தையும் அதனோடு எழும் பரங்கருணையின் ஜீவகாருண்யத்தையும் அகத்தே எழும்படிச் செய்யும்
. சிவசாதாக்கியங்கள் கழன்றகல, உண்மையான சமயாதீத உணர்வும் உடன் வரும்
சுத்தசமரச சன்மார்க்க உணர்வும் மெய்யான சமயாதீதமும் அகத்தே வெடிக்க, இஇறையருளின் தானே படிய, துவாதசாந்த நிலையும் மெய்யாகும். என்றுந் தவாத உபசாந்த நிலையே துவாதசாந்த நிலையாம். வேண்டுதல் வேண்டாமை கழன்றிடலின், அதீதப் பார்வையின்
அனைத்தொடும் அநந்நியமாய் நிற்பதின், யாண்டும் ஒரேப் படித்தாய பரங்கருணை நிலையே இவ்வுபசாந்த நிலை. இதுவரை அபூரணமாக நின்ற ஆன்மா, பூர்ணமாகிப் பொலிவதின் வந்தமையும் அகச்சுவை எனினும் அமையும்.
அபூர்ணம் போக்கி தவாத சாந்தம் மகிழத் தந்து ஆன்மாவை பூரணன் ஆக்குவதின், இஇந்நிலையின் ஆன்மாக்கள்
இறைவனை "பரிபூரணன்" என்றும் தெளியும். இஇவ்வாறு உணரப்படும் படும் இறைவனோடு
எவ்வித கரணங்களுமின்றி,
அசபை வாக்குங் கழன்று , பரசிவன் தானேயாய் ஒன்றித்து அனைத்தும் அநந்நியமாக நின்றறிவதினும், திரோதகத்தின் குறிப்புக்காலவுணர்வும் கழன்று நின்று அறிதலின் இஇங்கு பயிலும் மொழி மேலான மௌனத்தின் சின்முத்திரையே ஆகும்.
சலனமெலாங் கழன்று அசலனமே சொரூபமாக நின்று பராநிட்டையில் அமர்ந்து,
'அது" எனும் சுட்டுத்தரும் அந்நியப் பார்வைகள் எல்லாம் அறவே போக்கி
நின்றறிகின்ற போது ஆகின்ற மொழியே இம்மோனமொழியாகும். அந்நியம் இஇன்மையின் எதிரென சூன்யமே, சுத்தப் பாழே நிற்பதின், அதுவென எதனையும் சுட்ட வாராமையின், எம்மொழியும் பிறக்கமுடியாது போக, சுத்தமோனமே மொழியாகின்றது
முடிவுரை
ஞான வாழ்க்கை இதனோடு முடிவதில்லை, இதனைக் கடந்து ஆயிரவிதழ் தாமரைத் தளம் பிரம்மரந்திரம் போன்ற தளங்களும் உண்டு, இத்தகையத் தளங்கட்கு சென்றவர்கள் எண்சித்திகளை மகிழ்வர் என்றெல்லாம் திருமூலர் போன்ற பெரும் ஞானிகள் கூறுவர். தக்காரைக் கேட்டு தெரிந்து கொள்க.
முற்றும்
உலகன்