இங்கே இங்கிலாந்திலே இணையவழியில் என்னிடம் தமிழ் படிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயார் நேற்று வகுப்பு முடிந்த பின் அனுப்பி வைத்த புலனச் செய்தி
படத்திலே உள்ளது. பிள்ளைகள் மட்டுமல்ல; அவ்வம்மையாரும் இங்கே பிறந்து வளர்ந்தவர் தான். தமிழரென்றபோதும் தமிழ் பேச வராது.
மேலை நாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்குத்
தமிழ் சொல்லித் தருவது அலாதியானது.
ஏரணச்செறிவு (logical prowess) மிக்க கேள்விகள் வழியாக உங்கள் சிந்தனையைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருப்பார்கள். சிறுவயதில் இருந்து அச்சமின்றிச் சிந்திக்கும்படி இங்குள்ள கல்விமுறை அவர்களைப் பயிற்றுகிறது.
நான் பாடம் சொல்லித்தரும் பிள்ளைகள் அனைவரும் ஆங்கிலத்தை முதன்மொழியாகக் கொண்டவர்கள். பலர் வீட்டில் தமிழில் உரையாடுவதே கிடையாது.
‘
தமிழ் கற்பதற்குக் கடினமான மொழி அன்று ’ என்று அவர்கள் உணரும் வகையில் பாடம் சொல்லித்தருவதற்கு நான் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.
ஆங்கிலம் வழியாகத் தமிழ் கற்பிப்பதில் உள்ள முதன்மையான இடர்பாடுகளாக நான் கண்டறிந்தவை:
https://madhuramoli.com/பனிநிலங்களில்-தமிழ்-வயல்/