ஆடி ரதம் ..

275 views
Skip to first unread message

shylaja

unread,
Jul 16, 2014, 11:38:46 PM7/16/14
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
  எந்த  மாதத்திற்காவது  திரு என்ற அடைமொழி சேர்த்து சொல்கிறோமா?  மார்கழிக்கே   அந்தப்பெருமை இல்லை  ஆனால் ஆடிக்கு உண்டு.

 திருவாடிப்பூர த்து  ஜகத்துதித்தாள் வாழியே  என்கிறோம் .ஆடிமாதப்பூர நட்சத்திரததில் ஆண்டாள் பிறந்தாள் என்பதால்,  ஆடிமாதமே திரு ஆடி ஆகிவிட்டது.

சித்திரை பிறந்து ஆனி வரை அதிகம் திருவிழாக்களோ  உற்சவங்களோ கிடையாது அனால் ஆடிவரும்போதே பண்டிகையை அழைத்துக்கொண்டுவந்துவிடுகிறது.

ஆடிமாதப்பிறப்பு என்று புதுமாப்பிள்ளைக்கு வெள்ளிடம்ளரில்
 தே ங்காய்ப்பால் கொடுப்பார்கள்  Bangalore MTR ஹோட்டலில் எல்லாரும் புதுமாப்பிள்ளைதான் வெள்ளிடம்ளரில்தான் இன்னமும் coffee..சாப்பாடு நேரம் வந்தால்   வெள்ளிடம்ளரில் தான்  ஜூஸ் 

வெள்ளிடம்ளர்  தேங்காய்பபால் விருந்தெல்லாம்முடித்துக்கொண்டு மாப்பிள்ளையை  ஊருக்குஅனுப்பிவிடுவார்கள் பெண்மட்டும்  பிறந்தவிட்டில் அதனாலேயே  புதுமாப்பிள்ளை  ஆடி வருகிறதென்றால்ஆடித்தான்  போ கிறார் கோபத்தில்:) 

ஆடிமாதம் அம்மன் மாதம் என்கிறார்கள் கோவில்களில் கூழ்  ஊற்றுதல் தீமிதித்தல் அம்மனுக்குத்திருவிழா என ஆடி அமர்க்களம்  .பிரபலம் .

ஆடித்தள்ளுபடி விற்பனை களைகட்ட ஆரம்பித்துவிட்டது 
ஆடி அமாவாசை சிறப்பினை யாராவது சொல்லலாம் 

ஆடிப்பதினெட்டு  இலக்கியத்தில் உள்ளதா 
  ஆற்றங்கரை கலந்த சாதம்  இவைகளைபின்னும் பேசுவோம் 
.




ஆடிக்கு அள்ளிக்கொடுக்கிறது யாரு யாரு என தொலைக்காட் சியில்   சிவகார்த்திகேயன் உரக்கக்  கேட் கிறார் விளம்பரத்திற்காக...

நானும் மெதுவா கேட்கறேன்:)

  ஆடிப்பழமொழிகளை  அள்ளிவீசப் போவது 
 யாரு?

ஆடிவெள்ளிக்கு  அருமையான அம்மன் பாடல்களை கொடுக்கப்போவது யாரு?

ஆடித்தபசு சங்கரன்கோயில் விவரம்  எழுதபோவது யாரு?

ஆடி பற்றின  திரைப்பாடல்களை   தேடித்தரபோவது யாரு ?:)



அன்புடன்
ஷைலஜா.

// ...நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//



நாச்சியார் திருமொழி 

coral shree

unread,
Jul 16, 2014, 11:47:14 PM7/16/14
to vallamai
​​
திருவடிச் சதங்கை ஜல் ஜல்லென்று சிணுங்க
அருள்வடிவான அன்னை ஆடிவரும் வேளை
கருவறையில் கற்பகமாய் காட்சியளித்து
அருமறைகள் தானருளி வேதப்பொருளானாளே!!! 

​அன்புடன்
பவளா​


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Tthamizth Tthenee

unread,
Jul 16, 2014, 11:49:23 PM7/16/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள்
ஆடியிலே கருத்தரித்தால் சித்திரையில் பிள்ளைவரும்
ஆடிமாதத்துக் கழைக்காத  மாமனை தேடிப் பிடித்து
செருப்பாலடி  என்றோர் பழமொழி -  ஆடவனே
ஆடிமாதம் தனித்திரு விழித்திரு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





2014-07-17 9:08 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

--

Dhivakar

unread,
Jul 17, 2014, 12:33:41 AM7/17/14
to vallamai
எந்த  மாதத்திற்காவது  திரு என்ற அடைமொழி சேர்த்து சொல்கிறோமா?  மார்கழிக்கே   அந்தப்பெருமை இல்லை  ஆனால் ஆடிக்கு உண்டு.

கார்த்திகைக்கு உண்டு ஷைலஜா.. திருக்கார்த்திகை தீபம் என்று சொல்வார்கள்..  எங்கள் ஊர் திருவாலி திருநகரி திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம் திருக்கார்த்திகைத் திங்களில் வரும் திருக்கார்த்திகை நட்சத்திரம்தான்.

இந்த நாள் கிழிக்கும் காலண்டர்களில் இப்படிக் குறிப்பார்கள். என்னிடம் இருப்பது கூட உங்கள் ஊர் சிட்பண்ட் கம்பெனி நாள் கிழிப்பு காலண்டர்தான்.. 

பொதுவாக எந்தப் பெயருக்கு மரியாதை சேர்க்க திரு பயன்படுத்தலாம்.. நான் திருப்பங்குனியில் திருச்சுவாதியில் திருநகரியில்  பிறந்தேன்..

உங்கள் பதிவில் அப்படியே அக்காரவடிசல்தான்..  

திருவுடையான் திருவருள் திருப்தியாக கிடைக்கட்டும்...




2014-07-17 9:08 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

--

Ranjani Narayanan

unread,
Jul 17, 2014, 1:05:22 AM7/17/14
to vall...@googlegroups.com
அன்பு ஷைலூ,

ஆண்டாளை நினைவு படுத்தி ஆடிரதத்தை இழுக்க ஆரம்பித்துள்ளீர்கள். சிறப்பாக இருக்கிறது. 


ஆடி மாத ஜோக் ஒன்று சொல்லலாமா?

'பெண்ணிற்கு என்ன வயது?'
'ஆடி வந்தா பதினெட்டு'
'ஆடாம வந்தா..........?'

ஆடிப்பெருக்கு படத்தில் வரும் எனக்குப் பிடித்த பாடலுடன் நானும் ஆடிரதம் இழுக்க வருகிறேன். இந்தப் படத்திற்கும், பாடலுக்கும் ஆடி மாதத்திற்கும் சம்பந்தம் உண்டா என்று தெரியவில்லை - படத்தின் பெயரைத் தவிர!

கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் ஏதாவது எழுதி அனுப்ப. கீதாவிற்கு சொன்னதை (30 நாட்கள் இருக்கே) நானும் எடுத்துக் கொள்ளுகிறேன்.


இதோ பாடல்:



அன்புடன்,
ரஞ்சனி 

துரை.ந.உ

unread,
Jul 17, 2014, 1:10:28 AM7/17/14
to வல்லமை, mintamil, தமிழ் சிறகுகள்
2014-07-17 9:08 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
  எந்த  மாதத்திற்காவது  திரு என்ற அடைமொழி சேர்த்து சொல்கிறோமா?  மார்கழிக்கே   அந்தப்பெருமை இல்லை  ஆனால் ஆடிக்கு உண்டு.



​அருமை அக்கா 

நானும் மெதுவா கேட்கறேன்:)

  ஆடிப்பழமொழிகளை  அள்ளிவீசப் போவது 
 யாரு?

ஆடிவெள்ளிக்கு  அருமையான அம்மன் பாடல்களை கொடுக்கப்போவது யாரு?

ஆடித்தபசு சங்கரன்கோயில் விவரம்  எழுதபோவது யாரு?

ஆடி பற்றின  திரைப்பாடல்களை   தேடித்தரபோவது யாரு ?:)

​:)​



அன்புடன்
ஷைலஜா.

// ...நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//



நாச்சியார் திருமொழி 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

shylaja

unread,
Jul 17, 2014, 1:50:48 AM7/17/14
to vallamai
அருமை பவழா 
/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

shylaja

unread,
Jul 17, 2014, 1:53:49 AM7/17/14
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்
கவிதையாய்  பதில்  .
தேனி சார்  ஆடிப்பூரம்பற்றி  ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி எழுதுங்க  நான்  அடுத்த மாசம் மதுரைக்கு  எழுத்தாளர் வீட்டுகல்யாணம்  அப்டியே ஆண்டாளையும் தரிசிகக்ணும்   என்னவெல்லாம் வில்லிப்புத்துர்ல முக்கியம் என சொல்லவும் 
--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

shylaja

unread,
Jul 17, 2014, 1:55:23 AM7/17/14
to vallamai
அடடா திருக்கார்த்திகையை மறந்தேனே  இப்ப திருதிருன்னு முழிக்கறெனே :)
 திருதிவாகருக்கு  இதுக்கு நன்றி
ஆனாலும் ஏகப்பட்ட திரு  அளித்து  சிறப்பு செய்தமைக்கு நன்றி 
--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

shylaja

unread,
Jul 17, 2014, 1:58:16 AM7/17/14
to vallamai
ரஞ்சனி மேடம்   கடிஜோக்கை ரசிச்சேன் :)  தனிமையிலே  இனிமை பாட்டும் அருமை 
/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 17, 2014, 2:08:21 AM7/17/14
to வல்லமை, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
அன்பான அக்கா,

அருமையான பதிவோடு ஆரம்பித்திருக்கிறீர்கள்..திருமிகு.பவளா அவர்களின் பாடலும் அருமை.. இணையம் மெதுவாக வேலை செய்கிறது. விரைவில் ரதம் இழுக்க வருகிறேன்.. அதுவரை இந்தப் பாட்டெல்லாம் கேளுங்க..பாருங்க...





அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-17 11:27 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​       
​                     
​                                                             
​                            

shylaja

unread,
Jul 17, 2014, 2:25:57 AM7/17/14
to தமிழ் சிறகுகள், வல்லமை, மின்தமிழ்
மூணுமெ  முத்தான பாட்டு ..அதிலயும்  ஆடி வெள்ளி  தேடி உன்னை  ஆஹா
 அருமை 

பேராசிரியர்  நேயர் விருப்பம் என்றால்தான்  கவனிப்பார் போலருக்கு :):)


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Jul 18, 2014, 2:29:19 AM7/18/14
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
ஆடிவெள்ளிக்கு  அன்னைக்கு ஒரு பாடல்
**************************************

மாதா உன் கோவில் வலம்வரவே  கால்தந்தாய்
பாதாம்புயத்தில் பணியச்சிரம் வைத்தாய்
ஆதாரம் நீ என்றுருகி நீர்வடிக்கக்கண் படைத்தாய்
வேதாகமத்தால் உன் சீர் விளம்ப வாய் கொடுத்தாய்
காதார் குழை யாய்  உன் சீர்கேட்கக் காதமைத்தாய்
தூயதான தொண்டருக்குப்பணிசெய்யக்கைபடைத்தாய்
நீதான் துணையென நினைக்க நெஞ்சளித்தாய்-  தாயே
ஏதாகும்  கைமாறம்மா இதற்கென்று உருகுவனே /.
--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

coral shree

unread,
Jul 18, 2014, 2:55:02 AM7/18/14
to vallamai, மின்தமிழ்



ஆடிரதமேறி ஆனந்தமாய் வலம்வரும் அன்னையே
பாடியுனை பதம்பரவி போற்றுவேன் உன்பிள்ளையே
நாடியுனை வாழும் வரமருளும் மாமகாசக்தியே
வாடியயெனை மீளும் வழிகாட்டி தாங்குவாயே!!

அன்புடன்
பவளா



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

shylaja

unread,
Jul 18, 2014, 3:08:00 AM7/18/14
to vallamai, மின்தமிழ்
எந்த அம்மன் ? அழகும் சிரிப்பும் அருமை பவழா   உங்க கவிதையும். 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 5:36:08 AM7/18/14
to வல்லமை, தமிழ் சிறகுகள், Shylaja Narayan, மின்தமிழ்
ஆடி வெள்ளியில் அன்னையைப் போற்றுவோம்!

நாடி தினந்துதிக்கும் அன்பர் மனத்தினுள்ளே
ஆடி வரும் அழகே அண்டம் நிறை ஒளியே!
கோடி வினை அறுக்கும் ஞானப் பெருங்கனலே!
பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!

கண்ணின் மணி நீயே! கருணைக் கடல் நீயே!
பெண்ணின் வடிவாகி பேணும் சுடர் நீயே!
மண்ணும் விண்ணுமாகி மலரும் எழில் நீயே!
எண்ணில் உருவானாய் எந்தன் துணை நீயே!

அண்டம் முழுதானாய் ஆதிக்கும் தாயானாய்!
கண்டம் கறுத்தானின் ஒரு பாகம் நீயானாய்!
சண்டையிடும் மனதை சன்னதியில் நிறுத்திடுவாய்!
கொண்ட குறை தீர்ப்பாய் குவலயத்தின் மாதரசே!

நாவில் உன் நாமம் நாளும் கமழ்ந்திடவே
வாவா வென அழைத்தேன் வந்து வரமருளே
சாவா நிலையதனை வேண்டேன் சந்ததமும்
மூவா மருந்துன்னை துதித்திடவே பிறந்திடுவேன்

நற்றாய் நீயென்று நாளும் நினைத் தொழுது
பொற்றா  மரைக் குளத்தில் மூழ்கித் தவமியற்றி
வற்றா உன்னருளை வேண்டித் தினந் துதித்தேன்
சற்றேனும் மனமிரங்காய் மதுரை வளர் கோகிலமே!

மாளா முன் வினையால் மதியிழந்தேன் மஹாமாயே! 
தாளா துயரடைந்தேன் தஞ்சம் என உனையடைந்தேன்
மூளா கனல் மூட்டி முன்வினையை சுட்டெரிப்பாய்
வாளா விருப்பதென்ன வையகத்தின் நாயகியே

-----------‍‍‍‍பார்வதி இராமச்சந்திரன். 


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 12:37 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​      
​        
​           
​    

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 5:38:07 AM7/18/14
to வல்லமை, தமிழ் சிறகுகள், Shylaja Narayan, மின்தமிழ்
ஷைலஜா அக்கா, பவளா அக்கா இருவரின் கவிதையும் மிக அருமை.... பவளா அக்கா தந்த அம்பிகையின் படம் அழகு பொலிகிறது.. முத்துக் கிரீடம் கொண்ட சக்தியின் கழுத்தில் முத்தான சிவம்!!!!....அற்புதம்!!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 15:06 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​           

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 5:48:20 AM7/18/14
to வல்லமை, தமிழ் சிறகுகள், Shylaja Narayan, மின்தமிழ்
இன்று சாமுண்டீஸ்வரி ஜெயந்தி நன்னாள்.. மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது!!!..


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 15:08 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​  








coral shree

unread,
Jul 18, 2014, 6:17:11 AM7/18/14
to vallamai, மின்தமிழ்
அன்பின் ஷைலு, பார்வதி,

மிக்க நன்றி. படம் முகநூலில் சுட்டது...  எந்தக் கோவில் அம்மன் என்று அங்கு விளக்கம் இல்லை  :-))) 

அன்புடன்
பவளா


2014-07-18 12:37 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

coral shree

unread,
Jul 18, 2014, 6:17:32 AM7/18/14
to vallamai
அருமை பார்வதி.

அன்புடன்
பவளா


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Jul 18, 2014, 6:18:31 AM7/18/14
to vallamai
அன்பின் ஷைலு,

பாடல் மிக அருமை.

அன்புடன்
பவளா


2014-07-18 11:58 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

crazy mohan

unread,
Jul 18, 2014, 10:08:09 AM7/18/14
to vallamai
ஆடி அன்னையைப் பாடிய அன்னையர்கள் பவள சங்கரி, பார்வதி அவர்களின் பாடல்கள் பிரமாதம்....




     அன்னை அந்தாதி
     ----------------------
    (கட்டளைக் கலித்துறை-TRY-OUT)
     ----------------------------------------
      காப்பு
      --------

துலங்குவெண் நீறு துனிப்பிறை கோடு துணைக்கரங்கள்
இலங்கரன் பாகம் இடப்புறம் ஏகும் இமையவளின்
வளம்புகழ் வீரம் வணங்கியந் தாதி யினிலுரைக்க
களம்புகுந் தானை முகத்தனைக் கொன்றோன் பதமரணே....(1)

அரனும் அரியும் அயனும் அளிக்க இயன்றிடாத
வரம்தரும் கற்பக வல்லியின் பாதம் வழுத்திடுவோர்
நரனாய்ப் பிறந்து நடைபிண வாழ்வில் நலிந்திடாது
பரணப் பரத்துப் பதவியால் வெல்வர் பிறப்பிறப்பே....(2)

பிறவா வரம்தரும் மாறிப் பிறந்தால் எமன்கரத்தால்
இறவா திருந்திடச் செய்யும் இதய குகைதனிலே
மறவா தெழுந்தரு ளும்பார், மகனே எனவழைத்து
உறவாம் அபிராமி மாதா உறவிந் துலகினிலே....(3)

உலகவள் நெற்றி விழிவந்து காய்ந்த ஒளித்துகளே
திலகமாய் அங்கு திகழும் பரிதியும் திங்களுமே
உலவிடும் செவ்வாய் புதன்வ்யாழன் வெள்ளி கிரகமெலாம்
கலகங்கள் செய்யா கதியென் றவள்பாதம் கொள்ளுமினே....(4)

கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்
சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
நல்கிட நண்பன் நலம்தரு தோழியின் நானிலத்தே....(5)

அவளை நினைத்து அவலை இடித்தால் அவளசையாள்
அவளைத் துதித்தல் அவளை ஸ்மரித்தல் அவளருளே
அவளே நமக்குள் அவளாய்த் திளைத்தால் அதுயிகமே
அவளில் கலந்து அவளாய் முடிந்தால் அதுபரமே....(6)....

பரசிவ வெள்ளம் பராசக்தி உள்ளம் புரிந்துணர்தல்
பெறுதவம் ஆகும் பிரபஞ்சம் வந்து பிறந்திறக்கும்
உறுமவம் நீங்கும் உலகிதன் மாய உருவொழிந்து
சருவமும் சக்தி உருவெனும் உண்மை வசப்படுமே....(7)

வசமான சித்தி விஷமாம் அதனை விரும்பிடாதே
நிசமான கூலி யசமானி அம்மா நிழல்துணையே
அசலான தெய்வம் அவளுண்டு வேறே அணுக்கமெலாம்
பசையாகக் கம்பளிப் போர்வையில் ஒட்டும் பிசுபிசுப்பே....(8)

பிசுபிசுத் தோடும் பிறவிப் பிணிகள் கொசுக்கடியாய்
தசகத் தலைகள் துணித்தவன் தங்கை திருவடிமுன்
திசையெட்டு தீவளி அப்புமண் எங்கும் திகழ்பவளை
வசனித்த பட்டர் அபிராமி அந்தாதி வாழ்த்துமினே....(9)

வாழ்த்த வயதுண்டு வல்லாள் அவளென்றும் வாலையடா
பாழ்தவம் பூணும் விரதங்கள், பக்தியே போதுமடா
நாழ்பட நாழ்பட நம்பிக்கை சேர்த்திடும் நாயகிமுன்
தாழ்வு உயர்வெலாம் தாயவள் கண்முன் தளசமமே....(10)

சமமவள் நோக்கு சரியோ தவறோ சரணடைய
இமையெனக் காத்து இருகரம் நீட்டி இகபரத்தை
அமைவுறச் செய்வாள் அபிராமி அன்னை அவளிருக்க
சமயமாய் வீணே சடங்குகள் செய்தல் சிரிசிரிப்பே....(11)

சிரித்திட மாதுளை, சம்புமுன் கொவ்வை, சினமடைந்து
முறைத்திட பாகல், முறுவலில் முல்லை, முனிகணங்கள்
சிரத்தினில் காய்ந்து சிவப்பழம் ஆகிடும் செவ்விதழை
தரித்திடும் தாய்முன் தலைவணங் கித்தாள் தொழல்தவமே...(12)

தவமறியேன் தான தர்ம மறியேன் திருமுறைகள்
விவரமாய் கூறும் வழிய றியேன்தாள் வணங்கிடுவோர்
சிவமறியேன் சக்தி வழிபா டறியேன் சலித்திடும்
அவமறிந்தேன் அம்மா அதனால் வந்தேன் அருள்பெறவே....(13)

பெறவந்தேன் பேரின்பம் பிச்சி யுனைப்போற்றி பாசுரங்கள்
அரவிந்த தாதுவை அள்ளும் அளிபோலே அம்பிகையே
குறவன்தன் பெண்வள்ளி கொண்டவன் கையில்வேல் கொள்ளவன்று
தரவந்த துள்ளலில் தந்தருள இங்கு வாவுமையே....(14)


வாயுண்ட தாம்பூலம் சிந்த வரதன் வரகவியாம்
வாயென்றும் பேசாத மூகனோ வாக்கிற்(கு) அதிபதியாம்
வாயென்ற பட்டர்க்கு வானத்தில் வந்த வளர்பிறையே
தாயென்ற போர்வையில் தந்தைக்(கு) இணையான தத்துவமே....(15)

தத்துவக் கோலுக்குத் தேறா தருகற் பகமவளாம்
சத்தியம் தர்மங்கள் சார்ந்தோர் சிந்தையிலும் சிக்கவொணா
பத்தினி பக்தர்தம்  பித்துக்(கு) அடிமையாம் பிச்சியவள்
உத்தமி ஈசர்தம் உடலி டபாகம் உற்றவளே....(16)....கிரேசி மோகன்....

shylaja

unread,
Jul 18, 2014, 12:16:07 PM7/18/14
to பார்வதி இராமச்சந்திரன்., வல்லமை, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
ஒவ்வொருவரியும் பாடலில் மிக  அருமை
 
//மாளா முன் வினையால் மதியிழந்தேன் மஹாமாயே! 
தாளா துயரடைந்தேன் தஞ்சம் என உனையடைந்தேன்
மூளா கனல் மூட்டி முன்வினையை சுட்டெரிப்பாய்
வாளா விருப்பதென்ன வையகத்தின் நாயகியே//


  1. மூலக்கனலே சரணம் சரணம்...   என்கிறது  லலிதா நவரத்தினமாலை   மூலக்கனலே  தெரியும்
மூளாக்கனல் என்னவாக இருக்கும்?   இது என்னவென்று விளக்க இயலுமா பார்வதி?
--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 1:15:08 PM7/18/14
to shylaja, வல்லமை, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
ரொம்ப ரொம்ப நன்றி தங்களுக்கு!..'மூளா கனல்'== குண்டலினி!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 21:45 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​                

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 1:16:35 PM7/18/14
to வல்லமை, மின்தமிழ்
தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி! மிக அற்புதமாக அந்தாதி தந்திருக்கிறீர்கள்!.. தொடரக் காத்திருக்கிறேன்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 19:38 GMT+05:30 crazy mohan <crazy...@gmail.com>:
​ 
​ 
​ 
​   
​   
​                       

shylaja

unread,
Jul 20, 2014, 9:08:39 PM7/20/14
to vallamai, மின்தமிழ்
பாவால் உனையே பணியும் பக்தனை  
ஆ ஆ என நீ ஆராய்ந்தே  அருள்வாய் 
சாவா வரமே தருவாய்  வேலா 
மூவா முதலே முருகா  முருகா !

காவார் குறமாது கலந்துதவும் 
மாவார் தினை  உண்டு மகிழ்ந்தவனே 
கோவாய்  இமையோர் பதி ஆள் குமரா 
மூவா முதலே முருகா முருகா ! 
 
(ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு )


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
murugan.png

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 21, 2014, 1:09:05 AM7/21/14
to வல்லமை, Shylaja Narayan, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
ஆடி கிருத்திகை கொண்டாடி மனம் மகிழ்வோம்!

சொந்தமென்று வந்தவர்க்கும் சிந்தையிலே வைத்தவர்க்கும்
சந்ததமும் உந்தன் பதம் தந்தருளும் கந்த குகா!
முந்தி வரும் நொந்த வினை பந்தகற்றி, பரிந்தருளும்
செந்தில்வளர் விந்தையுனை எந்தநாளும் போற்றிடுவேன்!

வேலை எடுத்தேவி வினை தீர்க்குமொரு குருபரனே!
கோல மயில்மீது வரும்  சண்முகனே சரவணனே!
பாலவடி வானதொரு பூரணமே! அரன் மகனே!
மூலமுழுதாகி வரும் முத்தமிழே! அருள்குகனே!

ஆறு படை வீடு கொண்ட அந்தமில்லா பொன்னெழிலே!
மாறு கொண்ட சூரன் வலி வாங்கியருள் தண்ணருளே!
ஏறு முகமான ஒரு வாழ்வருள்வாய் பைந்தமிழே!
வேறு கதி யாதெமக்கு பொழிந்திடுவாய் உன்னருளே!

சொற்றமிழால் நித்தநித்தம் பாடி வரும் அடியவரின்
பற்றறுத்து பதமருளி, சித்தமெல்லாம் அருள்நிறைத்து
முற்றுணர்ந்த ஞானியரின் நிலையதனை கூட்டுவிப்பாய்!
வெற்றி மயில் மீதமர்ந்து வெற்புறையும்  விண்ணரசே!!

தேவர் சேனை வெல்ல ஒரு வேலெடுத்து போர் புரிந்தாய்!
தேவசேனை மனம் மகிழ மணம் புரிந்து அருள் சுரந்தாய்!
தேவ தேவ உன்னை நித்தம் போற்றிடவே வாழ்வளித்தாய்!
தேவர் மூவர் யாவருக்கும் ஒரு தலைவ! பணிந்திடுவேன்! 

துள்ளி வரும் வேலழகும் தண்டையொலி பதமழகும்
வள்ளி மனம் கொண்டருளும் கந்தனவன் வடிவழகும்
அள்ளி வரும் அருளழகும் ஆனந்தப் பொழிலழகும்
தள்ளி விடும் வினையதைனை! தளிரடிகள் போற்றுவமே!

----------------------------
பார்வதி இராமச்சந்திரன்.--

ஆடி கிருத்திகையை முன்னிட்டு என் வலைப்பூவின் பதிவொன்று!


அன்புடன்
​​
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-21 6:38 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​   

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 21, 2014, 1:10:52 AM7/21/14
to வல்லமை, Shylaja Narayan, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
///காவார் குறமாது கலந்துதவும் 
மாவார் தினை  உண்டு மகிழ்ந்தவனே 
கோவாய்  இமையோர் பதி ஆள் குமரா 
மூவா முதலே முருகா முருகா ! ///

மிக அருமையான வரிகள்!.. மிக அழகான பாடல்!.. மிக்க நன்றி அக்கா!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-21 10:39 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​        

shylaja

unread,
Jul 21, 2014, 1:23:06 AM7/21/14
to பார்வதி இராமச்சந்திரன்., வல்லமை, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
வார்த்தைகள்   கந்தன் வேல்போல்  துள்ளிவருகின்றன .
  கிருத்திகைக்குமரன் மீது பார்வதி பாடின  அத்தனைபாடல்களும் அருமை .

தேமொழி

unread,
Jul 21, 2014, 2:51:24 AM7/21/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
என் தம்பி மகள் பாடிய "முருகா...முருகா.." பாடலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ஷைலூ...


..... தேமொழி 

shylaja

unread,
Jul 21, 2014, 4:09:25 AM7/21/14
to vallamai
மழலை குரலில்  அழகாய் பாடி இருக்கு குழந்தை.. சீக்கிரமா முடிச்சிட்டதேன்னு இருக்கு.அனுப்பினதுக்கு நன்றி தேமொழி  


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/” வானவர் உரைத்தலும், 'மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி, பார்' எனா,
தான் அவன் துணை மலர்த் தடக் கை பற்றினான் “

கம்பன் 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 21, 2014, 5:28:23 AM7/21/14
to வல்லமை, மின்தமிழ்
மழலைக் குரல் 'முருகா முருகா' என அழகாய்ப் பாடுகிறது!.. பகிர்வுக்கு ரொம்ப நன்றி தேமொழி!.. குழந்தைக்கு இறையருள் நிறையட்டும்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-21 13:39 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​      

coral shree

unread,
Jul 21, 2014, 8:22:46 AM7/21/14
to vallamai, மின்தமிழ்
​​



தித்திக்கும் முருகன் பெயரை உச்சரித்தால்
எத்திக்கும் தூய்மையே மணக்கும்.
எட்டுத்திக்கும் எய்தாமல் காக்கும் வேலே
முட்டித்தாவும் மனமதையும் முனைந்து காக்கும் மாலே
பட்டுத்தெளியும் சிந்தையதையும் பரிவுடன் காத்து
 தயவுடன் தரணியெல்லாம் நிறைபவனே.
கற்சிலையாய் நின்றாலும் கருணைமழையாய் 
பொற்பதம் காட்டி வாழ்விப்போனே வண்ணமயில்வாகனனே!!


நன்றி

அன்புடன்
பவளா







2014-07-21 13:39 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​      

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

coral shree

unread,
Jul 21, 2014, 8:24:52 AM7/21/14
to vallamai
மிக்க நன்றி சகோ. கிரேசி மோகன் அவர்களே. தங்கள் பாடல்கள் அத்தனையும் முத்துகள். வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா


2014-07-18 19:38 GMT+05:30 crazy mohan <crazy...@gmail.com>:

coral shree

unread,
Jul 21, 2014, 9:09:47 AM7/21/14
to vallamai
அழகான பாடல் ஷைலு மற்றும் பார்வதி. வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா


2014-07-21 6:38 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:



--

                                                               
                 

Take life as it comes.

Ranjani Narayanan

unread,
Jul 21, 2014, 9:10:34 AM7/21/14
to vall...@googlegroups.com
ஆடிக் கிருத்திகைக்கு என் பங்கு திருமதி சுதா ரகுநாதனின் 'கண்டநாள் முதலாய்....'
இதோ:




coral shree

unread,
Jul 21, 2014, 9:10:45 AM7/21/14
to vallamai
அன்பின் தேமொழி,

உங்கள் தம்பி குழந்தைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

அன்புடன்
பவளா


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

Ranjani Narayanan

unread,
Jul 21, 2014, 9:12:24 AM7/21/14
to vall...@googlegroups.com
அழகான பாக்களால் பாமாலை சூட்டிய ஷைலூ, பார்வதிக்கு பாராட்டுக்கள். வெகு இனிமையாகப் பாடிய குழந்தைக்கு வாழ்த்துக்கள்.


அன்புடன்,
ரஞ்சனி 

shylaja

unread,
Jul 21, 2014, 9:19:01 AM7/21/14
to vallamai
கண்டநாள்முதலாய்  பாடலைக்கேட்ட நாள் முதலாய்  மிகப்பிடித்த பலபாடல்களில் அதுவும் ஒன்றானது நன்றி ரஞ்சனி மேடம் ,சரியான தினத்தில்  அளித்து விட்டீர்கள் பாடலை 

பவழா வின் கவிதை முருகனைப்போலவே அழகு 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 21, 2014, 9:38:34 AM7/21/14
to வல்லமை, மின்தமிழ்
பவளா அக்காவின் பாடல் மிக அழகு!.. ரஞ்சனி மேடம், ஷைலா அக்கா சொன்னது போல், சரியான தினத்தில்  பாடலை அளித்து விட்டீர்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-21 18:48 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​              
​                        

Ravi Subramanian

unread,
Jul 21, 2014, 10:59:16 AM7/21/14
to vall...@googlegroups.com, மின்தமிழ், வல்லமை
Dear all,

This is an adi kruththikai share

For keetka, padikka, rasikka...

Su.Ravi

பாடல் ஒலி வடிவில்:


அண்டம் பகி ரண்டம் பொடிபட,அலை
பொங்கும் கடல் சுண்டும் படியெரியழல்
எங்கும் எழ கங்குல் பகலறயுக
அந்தம் என மின்னொளிர் வேலாடும்

கட்டற்றிடும் எட்டுத் திசைகளும், ஒளி
வெட்டித் தறிகெட்டுச் சுழலுற,முகில்
சட்டச்சட சட்டச் சடசடவென
வெற்றிப் பறை கொட்டி யிடித்தாடும்

பண்டஞ்சிய நெஞ்சங் களில் ஒளிவர
பண்பஞ்சிய நெஞ்சங் களில் இருளுற
விண்கொண்டெழு க்ரௌஞ்சம்சிறு துகளுற
எங்கெங்கும் எழுந்தது போர்மேகம்

பற்றற்ற மனத்துத் தவமுனிவரின்
பக்திக்கனல் பற்றிக் கணகணவென
நெற்றிப் பொறியுற்றுச் சிவனருளிய
சக்திக் கனல் சீரலைவாய் மேவும்!

மண்ணஞ்சிய சிங்கன் தலையொருபுறம்
துண்டம்பட அங்கம் புழுதியில் விழ
கந்தன்படை விஞ்சும் ரணகளமதில்
பொங்கும் செங்குருதியின் ஆறோடும்

மட்டற்ற மகிழ்ச்சிக் களியொடு இரை
தட்டற்று கிடப்பக் கழுகலகைகள்
நிர்த்தத்தொடு சப்தக் குலவைகளிட
சுற்றத்தொடு தாரகன் தான்வீழும்

மண்டும்துயர் நெஞ்சம் தனில்புரையுற
தன்னந்தனி நின்றும் தனதகம்எழ
சின்னஞ்சிறுவன்என் றொருநினைவுடன்
செந்தில்புரம் சூரனின் தேர்மேவும்

முத்துச் சுடர் வெட்கக் குறுநகையொடு
சக்திப் படைதொட்டுச் சரவணபவன்
முக்திப் பதம் வைக்க ஜெய ஜெயவென
எத்திக் கிலும் முருகனின் பேர்பாடும்!


Su.Ravi
0992244687
Sent from my I pad


Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 5:27:14 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஆகா! ஆடி ரதத்தைத் தெய்வ பாமலைகளால் அலங்கரித்துள்ள அன்புத் தோழியர் ஷைலு, பவளா, பார்வதி ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்! 

‘குன்றுதோறாடும் குணக் குன்றாம்’ கந்தவேளைப் பாடிப் பரவியுள்ள சிறுமி - அன்புத் தோழி தேமொழியின் தம்பி மகளுக்கு  மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!

அடுத்து, அருமையான கேள்விக் கணைகளை வீசி... நாங்கள் சொல்லும் பதில்களெல்லாம் சரியில்லை என்று (வழக்கம்போலவே) சொல்லிவிட்டுத் தான் அவற்றிற்குக் கண்டுபிடித்த காரணங்களைப் பட்டியலிடும் பேராசிரியப் பெருந்தகை  மதஎசுஇந்திரன் (இது பெயரா அல்லது அரசர்களுக்கான பட்டங்களை அறிவிக்கும் கட்டியங்காரர்களின் முழக்கமா?) அவர்களுக்கு நல்வரவு!

எங்கள் ஆடி ரதத்தில் ஆடவரும் ஆடி வரலாம்; பாடி வரலாம்; ஓடி வாருங்கள்! என்று எங்கள் அருமைத் தலைவி சார்பில் அன்போடு அழைப்பு விடுக்கிறேன். :-) 

இப்படிக்கு,
பெமுகுசிமாமகுழு (பெண்கள் முன்னேற்றம் குறித்தே சிந்திக்கும் மாண்புமிகு மகளிர் குழு) 
(நாங்களும் நீளமா பேர் வெச்சுப்போம்ல!) :-)


shylaja

unread,
Jul 22, 2014, 9:08:06 PM7/22/14
to vallamai, மின்தமிழ்
ரத இழைக்கு குட்ஸ்வண்டியைக்கொண்டுவந்த அமெரிக்க மலரே  வாழ்க வாழ்க ..நினைச்சா பேரை மாத்திக்க நமக்கும் முடியாதா என்ன?:)  ஆடிப்பதினெட்டு  காவிரியின் வரவு இதைப்பற்றி இலக்கிய சான்றுடன் அழகுத்தமிழில் அள்ளிக்கொடுங்க மேகலா 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/” //ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!//
பாரதி .


Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 9:22:28 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
//தெய்வ பாமலைகளால்//
தெய்வப் பாமாலைகளால்’ என்றிருந்திருக்க வேண்டும்; தவறாகத் தட்டச்சு செய்துவிட்டேன். சிந்தித்துப் பார்த்தால் பாமலை என்பதும்கூடச் சரியோ என்று தோன்றுகிறது; ஏனெனில் மலை மலையாய்க் கவிதைகள் காரிகையரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றனவே!

அன்புடன்,
மேகலா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Jul 22, 2014, 9:25:18 PM7/22/14
to vallamai, மின்தமிழ்
பேராசிரியபெருமான்  கண்லபடல  பிழைச்சீங்க மேகலா:):)

Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 9:26:23 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
//ரத இழைக்கு குட்ஸ்வண்டியைக்கொண்டுவந்த அமெரிக்க மலரே  வாழ்க வாழ்க!//

ஆமாம் ஷைலு! நமக்கு மட்டும் பெயரை மாற்றிக்கொள்ளவும் கூட்ஸ் வண்டிப் புனைபெயரில் மடல் வரையவும் தெரியாதா என்ன? :-)

இந்திரனுக்குப் போட்டியாக இந்திராணிகளும் களத்தில் குதிப்போம் ஷைலு! :-)

Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 9:38:22 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
//போரிட்டு வீரமடைய இயலாத பெண்களுக்கு அங்கே இடமில்லை.//

கண்டேன் சொற்குற்றமும் பொருட்குற்றமும் ஒருங்கே!

போரிட்டு வீரமரணமடைய இயலாத பெண்களுக்கு அங்கே இடமில்லை’ என்றல்லவா இருக்கவேண்டும்!  :-))


2014-07-22 21:35 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-07-23 6:56 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

இந்திரனுக்குப் போட்டியாக இந்திராணிகளும் களத்தில் குதிப்போம் ஷைலு! :-)

​ஹலோ தமிழ்நாட்டு இந்திரனுக்கு இந்திராணியெல்லாம் கிடையாதுங்க.  குடிக்க வெறும் அமிழ்து மட்டுந்தேன் ஜிகிர்தண்டா மாதிரி.  போரில் வீரமணமடைந்த தமிழ் மறவர்கள் வதியும் இடம் அது.  போரிட்டு வீரமடைய இயலாத பெண்களுக்கு அங்கே இடமில்லை.  அது ஆண்களுக்குமட்டும் என்று முழுக்க முழுக்க ஆண்கள் வாழும் உலகம். 

வீரர்கள் வாழும் இடமாக்கும்​

எல்லாத்துலயும் ரிசர்வேஷன் கோட்டா கேட்டா எப்புடி?

மதஎசுஇந்திரன்

Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 9:40:56 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
//கள்ளபார்ட்//
நாடகத்தில் திருடன் வேடமிட்டுப் புகழ்பெறுவோர் ‘கள்ளபார்ட்’ என்று அழைக்கப்படுவர் என நினைக்கிறேன்.
எ-கா: கள்ளபார்ட் நடராஜன்.


2014-07-22 21:38 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-07-23 7:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

ம்ம்  'நயம் பட உரைக்கும் நக்கீரன்' என்ற புதுத்திருநாமம் விரைவில் வருமோ?:)

​அடுத்த பேர் கள்ளபார்ட் கருநா(க்)கன் என்று வைக்க ஆசை

ராஜ பார்ட் தெரியும் ஸ்த்ரீ பார்ட் தெரியும் கள்ளபார்ட் தெரியலியே.  உங்களுக்குத் தெரியுமா

மதஎசுஇந்திரன்​

shylaja

unread,
Jul 22, 2014, 9:41:19 PM7/22/14
to vallamai, மின்தமிழ்
ஏறுங்க பெஞ்ச் மேல   Profji:)


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 25, 2014, 10:16:39 AM7/25/14
to வல்லமை, தமிழ் சிறகுகள்

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



---------- Forwarded message ----------
From: tsparu2001 <tspar...@gmail.com>
Date: 2014-07-25 19:44 GMT+05:30
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] Re: ஆடி ரதம் ..
To: mint...@googlegroups.com


நாளை ஆடி அமாவாசை. இதனை 'பீமன அமாவாசை' என்று அழைக்கிறார்கள்.. அன்று விரதமிருந்து, சிவ,பார்வதியைத் தொழுகின்றார்கள்.. ஜ்யோதிர் பீமேஸ்வர விரதம் என்றும் பதிசஞ்சீவினி விரதம் என்றும் அழைக்கப்படும் இந்த விரதம் குறித்த, என் வலைப்பூவின் முந்தைய பதிவொன்றை மீண்டும் தருகிறேன்..மிகவும் நீண்ட பதிவாகையால், விரத பூஜை முறை மட்டும் இங்கே.. முழுப் பதிவும் காண கீழே சொடுக்குக!


விரதம் அனுசரிக்கும் முறை:

களிமண்ணால் செய்யப்பட்ட இரு விளக்குகள் அவசியம். இவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம் அல்லது வாங்கலாம். தற்போது, ஜோடி பித்தளை அல்லது வெள்ளி விளக்குகள், சிவ பார்வதி திருவுருவப்படங்கள் அல்லது விக்ரகங்களை வைத்தும் பூஜிக்கிறார்கள்.

இவற்றுடன், பூஜைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், விரலி மஞ்சள், மஞ்சள் கயிறு(நோன்புச் சரடுக்காக), கஜ்ஜ வஸ்திரம் எனப்படும், பஞ்சினை, குங்குமம் தோய்த்து  உருவாக்கப்பட்ட மாலை (படம் பார்க்க. இரு விளக்குகளுக்கும் சேர்த்து அணிவிக்கப்பட்டிருப்பது). நிவேதனமாக, காசுகள் பொதித்து உருவாக்கப்பட்ட, கொழுக்கட்டைகள், மாவிளக்கு தீபங்கள்.

கொழுக்கட்டை பின்வருமாறு செய்யப்படுகின்றது. அரிசி அல்லது கோதுமை மாவில் நீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி, மத்தியில் ஒரு காசு வைத்து, சுற்றிலும் ஊற வைத்த பருப்புகளை வைக்க வேண்டும். மற்றொரு உருண்டையால் அதனை மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டைகளை உண்பதில்லை. ஆகவே, இவை தவிர வேறு நிவேதனங்களும் செய்யலாம்.

ஆடி அமாவாசை தினத்தன்று, விடிகாலையில் நீராடி, வீடு, பூஜையறை முதலியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். கொடுத்திருக்கும் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமர வேண்டும்.

விளக்குகளை சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அம்பிகையை ஆவாஹனம் செய்யும் விளக்கில், ஒரு மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சளைக் கோர்த்து அணிவிக்க வேண்டும்.

அரிசி அல்லது தானியங்கள் நிரம்பிய தட்டில், விளக்குகளை வைக்க வேண்டும். அம்பிகை விளக்கை வலப்புறம் வைக்கவும். ஒன்பது இழைகளாலான கஜவஸ்திரம் சாற்றி, நெய்யூற்றி திரி போடவும். விளக்குகளின் முன்பாக, சிவபெருமான், பார்வதி விக்ரகங்களோ, மங்கள கௌரி விக்ரகமோ வைக்கலாம். அவற்றுக்கும் பூச்சூட்டி அலங்கரிக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு, ஒன்பது முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். சரடுடன் ஒரு பூவையும் சேர்த்து முடிந்து வைக்கலாம். ஒன்பது வெற்றிலை, ஒன்பது, பாக்கு, இயன்றால் ஒன்பது வகைப் பழம் முதலியவற்றை, விளக்குகளின் வலது புறம் தயாராக எடுத்து வைக்கவும். நோன்புச் சரடுகளையும் ஒரு வெற்றிலையில் வைத்து, விளக்குகளின் வலப்புறம் வைக்கவும்.

பூஜை துவங்கு முன்பாக தீபமேற்ற வேண்டும். சிவனார், பார்வதி தேவி குறித்த துதிகளைக் கூறி அர்ச்சனை செய்யவும். மஞ்சள், குங்குமம், மலர்கள் முதலியவற்றை அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். கௌரி துதிகளும் சொல்லலாம்.

பூஜையின் முடிவில், தீபாராதனை செய்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும். நோன்புச் சரடுகளை, வீட்டில் உள்ள பெண்களில் வயதில் மூத்தவர், தான் கட்டிக் கொண்ட பின் மற்ற பெண்களுக்குக் கட்டி விட வேண்டும்.

மாவிளக்கு ஆரத்தி செய்வது இந்தப் பூஜையின் நியமங்களில் ஒன்று. பூஜை நிறைவில் கட்டாயம் செய்ய வேண்டும். குறைந்தது இரண்டு மாவிளக்குகள் செய்து ஆரத்தி செய்ய வேண்டும்.

அதன் பின், வீட்டில் ஆண் உறுப்பினர்கள், கொழுக்கட்டையை, வெற்றிலை பாக்கின் மேல் வைத்து, தமது முழங்கையால் நசுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, உள்ளிருக்கும் காசு வெளிவரும். சிறுவர்கள், காசை எடுத்துக் கொண்டு ஆசி பெறுவர். வயதில் மூத்தவர்கள், சிறியவர்களுக்கு ஆசி வழங்குவர். இவ்வாறு கொழுக்கட்டையை உடைப்பதால், துரதிருஷ்டங்கள், பிரச்னைகள் முதலியவை நீங்கி, நீண்ட ஆயுள், சுகம் முதலியவை உண்டாகும் என்பது ஐதீகம்.

அதன் பின்  பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி, பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிப்பர். அன்றைய தினம், வறுத்த, மற்றும் பொரித்த உணவுகளை உண்பதில்லை.

மறு நாள், புனர் பூஜை செய்து, இறைத் தம்பதியரை இருப்பிடம் எழுந்தருளச் செய்ய (யதாஸ்தானம்)வேண்டும். களிமண் விளக்குகளானால், துளசிச் செடியின் அடியில் அவற்றை வைத்து வணங்கி, ஒரு வாளியில் நீர் எடுத்து, அவற்றைக் கரைத்து, அந்த நீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டும். திருமணமான  பெண் அனுசரிக்கும் ஒன்பதாவது வருட விரதமானால், அந்த விளக்குகளை, புதிதாகத் திருமணமாகி, விரதம் அனுசரிக்கும் பெண்ணுக்குக் கொடுக்கலாம். சில வீடுகளில்,ஒன்பதாவது வருட விரத நிறைவின் போது,  ஒரு புதிய ஜோடி விளக்குகளை வாங்கி, சகோதரனுக்குக் கொடுக்கிறார்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

On Wednesday, 23 July 2014 07:29:51 UTC+5:30, Shylaja N wrote:                     

Granny Visalam

unread,
Jul 26, 2014, 4:46:54 AM7/26/14
to vall...@googlegroups.com
ஆடி வந்திடிச்சு , என் ஆத்தா ஓடி வருவா,
ஆடிப்பாடி அழைச்சுப்புட்டா என் ஆத்தா ஓடி வருவா.
 
பசுஞ்சாணம் தெளிச்சு காத்திருந்தேன் '
பச்ச கலரு புடவ வாங்கி வச்சேன் ,
வாழ ,மாவுல  அங்கிட்டு கட்டி வச்சேன்,
வண்ணக்கலரு பூசி கோலமிட்டேன் ................... ஆடி வந்திடிச்சு  என் ஆத்தா ஓடி வருவா.

மல்லிகப்பூ ,சாதி மரு ,ரோஸாப்பூ,
மணம் வீச கதம்பமும் கட்டி வச்சேன் ,
அதோ ஆடி அசஞ்சு ஆடிரதம் வந்திடிச்சு ,
அழகு ஆத்தா ,மாரியாத்தா பவனி வந்தாச்சி ,........ ஆடி வந்திடிச்சு என் ஆத்தா ஓடி வருவா

மாணிக்க முக்குத்தி  முகத்தில  பளபளக்க,
மரகத குண்டலம் அவ காதில அசைய ,
பொன் முத்துமாலையும் அவ மார்பில குலுங்க ,
பொன்னான மாரியாத்தா நம்ம தெரு வந்தாச்சி   .....ஆடி வந்திடிச்சு என் ஆத்தா ஓடி வருவா

அழகான சடையில. ராக்கோடி மின்னுது ,
அருள் மிகுந்த கண்ணில கருணை மழை பெய்யுது ,
அகலமான நெத்தியில மஞ்சகுங்குமம் துலங்குது ,
அங்காள பரமேஸ்வரி தேர் ஆடி ஆடி வருகுது          ........ஆடி வந்திடிச்சு என் ஆத்தா ஓடி வருவா.

கூழ் வார்த்து கும்பிட வந்தோம் ஆத்தா,
கூட நீ இருந்து துணை புரியணும் ,
மனை மங்கலம் சிறக்கணும்  ஆத்தா 
மதிப்பு சிறக்க வாழணும்  ..................................ஆடி வந்திடிச்சு  என் ஆத்தா ஓடி வருவா

நெல் விளைச்சல் பெருகணும் ஆத்தா 
நெனப்பு உங்கட்ட இருக்கணும் ,
கவலை மறைஞ்சு நிம்மதி வேணும் ஆத்தா
கண் திறந்து அருள் புரியணும்                                         ஆடி வந்திடிச்சு என் ஆத்தா ஓடி வருவா .

 
 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

coral shree

unread,
Jul 26, 2014, 7:26:21 AM7/26/14
to தமிழ் வாசல், vallamai, தென்றல், தமிழ் சிறகுகள், மின்தமிழ்



அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
ஈரேழுலகின் ஈடில்லா ஈசனின் இடப்பாகம்
உரையும் ஊழிமுதல்வியே முத்தான அன்னையே!!


2014-07-26 16:28 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
எங்க வீட்டில் கேழ்வரகுக் கூழ் தான் செய்வோம்.  ஆடிக்கூழ் தெரியாது.  இணையத்தில் தேடியதில் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். 

நவாலி சோமசுந்திரப்புலவர்  ஆடிக்கூழ்: தேவையானவை

ஒரு கைப்பிடி வறுத்த பயறு
கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது
ஒரு பேணி - பச்சரிசி மா
அரைமூடித்தேங்காய்ப்பால்
பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு
மிளகுத்தூள் தேவையான அளவு
சீரகத்தூள் தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு

முதலில் சுத்தமாக கழுவிய வாணலியில் அல்லது பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))...


கலவை 1
இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.


பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.

எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்

அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...

இங்கே தமிழ்நாட்டில் இதோடு எல்லா தானியங்களையும் சேர்த்துச் செய்கின்றனர்.  தானியங்களை முழுதாகவே போடுகின்றனர்.  பெரிய காளவாய் அடுப்பில் காய்ச்சுவதால் நன்கு குழைந்துவிடும் என எண்ணுகிறேன்.  நன்றி.  வணக்கம்..


தமிழ்நாட்டில் மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட வேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும்.//

தமிழ்நாட்டில் ஆடிக்கூழ் செய்யும் முறை மேலே உள்ளது.  எல்லா தானியங்களையும் போட்டு இந்த மருந்துக்கலவையைத் துணியில் முடிந்து உள்ளே போட்டுப் பின் கஞ்சி காய்ச்சி தானம் செய்வார்கள். 


2014-07-26 16:25 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

ஆடி ரதம் இழுக்கும் தோழிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.  இயன்றால் கலந்து கொள்கிறேன். 

 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

shylaja

unread,
Jul 29, 2014, 6:28:20 AM7/29/14
to தமிழ் வாசல், vallamai, தென்றல், தமிழ் சிறகுகள், மின்தமிழ்
பார்வதியின் ஆடி  அமாவாசைப்பதிவும் விசாலம் அவர்களின் பாடலும் பவழா(prof..ருக்காக பவளா என்றும் சொல்லிட்றேன் இல்லேன்னா பெஞ்ச் மேல   ஏற  வச்சிடுவார்னு ஒருபயம்தான்:)   கவிதையும் நன்று  கீதாவின் மடலுக்கும் நன்றி. .காட்டுப்பக்கம் உலா போய்ட்டேன் அதான் உடன் மடல் இடமுடியவில்லை என் அருமை சகோதரிகளே  

தேமொழி

unread,
Jul 29, 2014, 12:28:29 PM7/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
இது எங்கே போய் முடியுமோ தெரியல்லீயே!!!!


..... தேமொழி

shylaja

unread,
Jul 29, 2014, 12:39:08 PM7/29/14
to vallamai, mintamil
.(30-7-14)திருவாடிப் பூரம்  spl.

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து,
ஆழ்வார் திருமகளா ராய்!
 
உபதேச ரத்தினமாலையில் மணவாளமாமுனிகள் இப்படிக்கொண்டாடுகிறார்.
 
 விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநந்தவனத்தில் திருத்துழாயைப் பயிரிடுவதற்காக மண்ணைக் கொத்திக் கொண்டிருந்தபோது, பூமிப்பிராட்டியின் அம்சமாகத் திருவாடிப்பூர நட்சத்ரத்திலே ஆண்டாள் அவதரித்தாள்.
 

 பெரியாழ்வார் கண்டெடுத்த குழந்தைக்கு“சுரும்பார்க் குழற்கோதை” என்று திருநாமம் சாற்றி திருமகள்போலே வளர்த்து வந்தார்.
.
வாரணமாயிரம் சூழவலம் செய்து  நாரணன் நம்பி தன் கரம் பிடிக்கக்கண்ட கனவினை நனவாக்கிக்கொண்டாள் ஆணடாள். அவள் அந்தரங்கம் என்னவென்று அறிந்து கொண்ட பெரியாழ்வார் 
அந்த ‘ரங்கம்’ செல்ல மகளுக்கு  அனுமதித்தார்.

தென்திருக்காவிரி வடகரையிலே இறங்கி நீராட்டம் கண்டபிறகு, அலங்காரங்களைப் பண்ணிக்கொண்டு கோயில்  வாசலைக்கடக்கிறாள் ஆண்டாள்.
 திருவரங்கன் சூடிக்கொடுத்த நாச்சியாரை ஏற்றுக் கொண்ட வைபவத்தை ஆறாயிரப்படி குருபரம்பரை   கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது:

ஆண்டாள் வந்தாள், சூடிக் கொடுத்தாள் வந்தாள், சுரும்பார்க் குழற்கோதை வந்தாள், திருப்பாவை பாடிய செல்வி வந்தாள், தென்னரங்கந் தொழுந் தேசியள் வந்தாள்”  என்று!
 

. சீரார்வளை யொலிப்ப அன்னநடையோடு   உள்ளே  செல்கிறாள்.
 
அரங்கனும் சரி ஆண்டாளும் சரி! இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பு அலாதியானது. நாராயண நம்பி. இறுதியிலே, ஸ்ரீரங்கத்திற்கே ஆண்டாளை அழைத்துவரச் செய்துவிட்டான்!
 
 
 அங்கே அந்த அரங்கனோடு ஆண்டாள் ஐக்கியமாகிறாள்
 
 
 
ஆடிப்பூரத்தன்று பெரியபெருமாளுக்குத் தினந்தோறும் காலையில் காவேரியிலிருந்து வரும் திருமஞ்சனத்தைவிட விசேஷ விமரிசையுடன் பெரியகோயில் கைங்கரியபரர்கள் யானை மேல் கொண்டுவரும் தீர்த்தத்தால் ஆண்டாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும்.
 

பிறகு பெரியபெருமாள் ஸந்நிதியிலிருந்து சேலையும் அலங்காரமும் வந்து, அலங்காரம் அமுது செய்ததும் கோஷ்டி. முதலில் வெளியாண்டாளுக்குத் திருமஞ்சனம் வந்த பிறகு உள்ளாண்டாளுக்கு வரும்.
 

. பெரியபெருமாள் தம்முடைய திருமஞ்சன வேதி முதலியவற்றை உள்ளாண்டாளுக்குக் கொடுத்தனுப்புவார்.

பெரியாழ்வாருக்கு மகளின் பிரிவு பெருந்துயரைத் தந்தது. வாய்விட்டு கதறுகின்றார்,

”ஒரு மகள்தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன் – செங்கண் மால்தான் கொண்டு போனாரே” – என்று மனதைத்  தேற்றிக்கொள்கிறார்.

ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெரியாழ்வாருடனும், சகல பரிஜனங்களுடன் வந்துறங்கிய இடம் இன்றும் மேல அடையவளைஞ்சான் தெருவில் ‘வெளி ஆண்டாள்’ ஸந்நிதியாகயுள்ளது. இங்கு ஆண்டாள் மூலவர் விக்ரஹம் கம்பீரமாக அமர்ந்த கோலம்   காண ரம்மியமானது!

*******************************************************************************

ஆண்டாள் மகிமையை தொடரவும் .

தேமொழி  ஆண்டாள்படம் ஒண்ணு அட்டகாசமா கொடுங்க 

பின்குறிப்பு ...பேராசிரியரைப்போல பெயர்மாற்றம்திருவாடிப் பூரம்  தினத்திற்காக மட்டும்  செய்துகொண்டிருக்கிறேன்(  என் தாயின் பெயர் ஆண்டாள்தான்) 

 

 





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்// .

தேமொழி

unread,
Jul 29, 2014, 1:08:34 PM7/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

Megala Ramamourty

unread,
Jul 29, 2014, 3:27:21 PM7/29/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஆகா...அற்புதம்! ஆண்டாள் படங்கள் கொள்ளை அழகு தேமொழி!

ஆடிப் பூரம் வருகிறது என்றதுமே நினைத்தேன்...ஆண்டாளின் அருந்தவச் செல்வியின் பதிவும் வரும் என்று! பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட ஆண்டாள் மகிமையை எடுத்தியம்பிவிட்டார் அவரும் வழக்கம் போலவே!
வாழ்க ஆண்டாள் புகழ்பாடும் அணங்கு!

திருவாடிப் பூரத்தில் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் கோதை, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாய்ப் புகழ்பெற்றது உலகறிந்ததே. காலத்தை வென்ற தன் காவியப் பாடல்களால் அனைவர் மனங்களிலும் கொலுவீற்றிருப்பவள் அவள். கோதை ஆண்டாள் தமிழையும் சேர்த்தே ஆண்டவளாயிற்றே!

வைணவ ஆசாரியர்கள்கூட  மற்ற ஆழ்வார்களின் பாடல்களை ’மேட்டு மடை’ என்றும்; ஆண்டாளின் பாடல்களைப் ’பள்ள மடை’ என்றும் புகழ்வர். (மேட்டு மடை, பள்ள மடை குறித்த வைணவ ஆசாரியர்களின் வியாக்யானங்களை ஆண்டாளின் அன்புச் செல்வி விளக்குவார் என எதிர்பார்க்கிறேன்.)  :-)

ஆண்டாளின் திருப்பாவை புகழ்பெற்ற அளவிற்கு - ஓதப்படும் அளவிற்கு, அவருடைய மற்றொரு ‘master piece'-ஆன நாச்சியார் திருமொழிப் பாடல்கள் பரவவில்லையோ என்ற ஐயம் எனக்குண்டு. ஏனெனில் ‘நாச்சியார் திருமொழி’யில்தான் ஆண்டாளின் நாயக நாயகி பாவமும், கனிந்த காதல் நெஞ்சமும் தெளிவாய்ப் புலப்படுகின்றன.

நாச்சியார் திருமொழியில் எனக்குப் பிடித்த பாடல்கள் பல; அவற்றிலிருந்து ஒரு சில...

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
      மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்சிதறத்
      திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால்
      இரணியனை உடலிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள்
      தருமாகிற் சாற்றுமினே
  (மேகவிடு தூது)


கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
   (வலம்புரிக்குக் கிடைத்த பேறு)

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் 
(திருமணக் கனவை உரைத்தல்)
(இப்பாடலைக் கேளடி கண்மணி படத்தில் பிரபலப்படுத்திய பெருமை இசைஞானியைச் சாரும்)

அன்புடன்,
மேகலா

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Jul 29, 2014, 8:25:00 PM7/29/14
to vallamai, mintamil
சிற்றஞ்ச்சிறுகாலையில்
ஆண்டாள் தரிசனம்  அற்புதம்! 
அளித்த தேமொழிக்கு விரைவில்
அக்கார அடிசில் நிச்சயம்!  

Megala Ramamourty

unread,
Jul 29, 2014, 8:26:45 PM7/29/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
அக்கா கையால் ’அக்கா’ர அடிசில் எனக்கும் வேண்டுமே!  :-))

-மேகலா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Jul 29, 2014, 8:37:33 PM7/29/14
to vallamai, மின்தமிழ்
பள்ளமடை  பற்றி  எனக்கு தெரிந்தது என்ன வென்றால்  'ஆண் ஆணைக்கண்டு சிநேகிப்பதைக்காட்டிலும் ஒரு பெண்  ஒரு ஆணைக்கண்டு சிநேகிப்பது பள்ளமடையாகையால்  ஆழ்வார்களைக்காட்டிலும்  எம்பெருமான் பக்கல் பரம் பக்தி உடையவள் ஆண்டாள் என்பதாக  வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அருள்கிறார் .சரியான விளக்கம் நன்கு அறிந்தோர் சொல்லவேண்டும் என வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ..மேகலாவின் ஒவ்வொரு வரியும் பதிவில் அழகு..தமிழை மேகலா எழுதும்போதுமட்டும் சற்று கூடுதலாக இனிக்கிறதே. 
அதிலும்  நாச்சியார் திருமொழிப்பாசுரம் ஆஹா  இதற்கே அக்கார  அடிசில் நான்கு தடா தரலாமேஎன் அன்புத்தங்கைக்கு . 

Dhivakar

unread,
Jul 30, 2014, 1:44:13 AM7/30/14
to மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்

//இவற்றுள் அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு

ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து//


அப்படியானால் நாச்சியார் திருமொழியில் சொன்ன இந்தப் பாடலில் வேங்கடவற்கென்னை விதி’ என்று சொல்லிவிட்டாளே.. வேங்கடவன் மேல் உள்ள காதலைப் போல வேறெந்தப் பெருமானிடமும் அவள் காதலை பாடல் மூலம் சொல்லவில்லை.

உன்னையு மும்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே. (2) 1 

ஆனால் சும்மா பேச்சுக்கு எழுதினேன்.. ஆண்டாளுக்கு கண்ணன் என்கிற கள்வனை எந்தக் கோயிலிலிருந்தாலும் பிடிக்கத்தானே அத்தனைக் கஷ்டப்பட்டாள்..

ஆண்டாளைப் படிக்கப் படிக்கப் பரவசம்..



2014-07-30 10:49 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

திருவாடிப் பூர நன்நாள்


மீள்பதிவு




சூரியனும், சந்திரனும் தினம் உதிப்பது போல்

திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தவள்

என்னும் பெருமை கொண்ட ஆண்டாளின்

அவதார,அல்லது உதித்த தினம்

திருவாடிப் பூரம் என்று நம்மால்

கொண்டாடப்படுகிறது

 

"  திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே  "

 

 

கி.பி. 716 - நள வருடம் - ஆடி மாதம் - எட்டாம் நாள் - சுக்ல பட்சம் - பஞ்சமி திதி - செவ்வாய்க் கிழமை - பூர நட்சத்திரம் - துலா லக்னம்

ஆண்டாள் ஐந்து வயதுக் குழந்தையாய், பூமித் தாயின் அம்சமாய்,

பட்டர் பிரான் கண்டெடுக்க, திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள்!

 

 

 

கிளி மூக்கு = மாதுளம் பூ;

கிளியின் உடல் = மரவல்லிக் கிழங்கின் இலை;

இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;

கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;

கிளியின் கண் = காக்காய்ப் பொன்.

கட்டுவதற்கு வாழை நார்;

இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி

 

                        ஆண்டாள்

அன்று கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம்

சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில்

பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே

 துளசிச் செடியின் கீழே கொத்திக்

கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக்

கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி கோதை

என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை

நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனறும் அழைக்கப்படும்

ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

 

விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும்

வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார். ஆண்டாளும் துளசி

இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல்

ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத

நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்கு

கட்டிய மாலையைச் சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய

தோற்றம் கண்டு நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று

எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று

தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும்

முன் மாலையைக கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படி

பல நாள் நடந்தது.

 

ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதையை சூடிய மாலையோடு பார்க்க

நேர்ந்தது. அவர் மிகவும் மனம் வருந்தி இப்படிச் செய்யலாமா?

எம்பிரான் மாலையை நீ சூடலாமா?” என்று கேட்ட அவர் அன்று அம்மாலையை எம்பிரானுக்குச் சாத்தவில்லை.

அன்றிரவு எம்பெருமான் ஆழ்வார் கனவில் தோன்றி

இன்று நமக்கு மாலை சாத்தாதது ஏன்?” என்றார்.

 ஆழ்வார் தன் மகள் அதைச் சூடிய தவறைச்

சொல்லி மன்னிக்க வேண்டினார்.

இறைவனோ ஆண்டாள் சூடிய மாலையே,நல்ல மணமுடையதும்

நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்என

அறிவித்தார். பெரியாழ்வார் அன்று முதல் ஆண்டாளைப்

பூமிப் பிராட்டியாகவே கருதலானார். சூடிக் கொடுத்த நாய்ச்சியாரும்

மார்கழிநீராடி, மாதவனை எண்ணி நோன்பு நோற்று,

திருப்பாவை, நாச்சியார்திருமொழி ஆகிய பிரபந்தங்களைப்

பாடி அருளினார்.

 

மணப்பருவம் எய்திய மகள் மானிடவர்க் கென்று பேச்சுப்படில்

வாழ்கில்லேன்என்றும் மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்

மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்என்றும் கூறுவதைக் கேட்டு

மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக்

கொண்டு நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை

மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண

நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு

இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,

தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத்

திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,

திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார்.  இவற்றுள்

அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு

ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து

அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக்

காணலானாள்.

 

ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என

ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார்.

அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி கோதையை திருவரங்கத்துத்

திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள்

கைத்தலம் பற்றுவோம்.என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.

 

ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம்

சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப்

பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச்

சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில்

உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.

ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட

பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து சூடிக் கொடுத்த

சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை

பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.

ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை

அடைந்தனர்.

 

அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற்

பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.

ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார்

வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால்

சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீது

கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க

மறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப்

பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில்

உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.

 

 

இவ்வரலாற்றை ஒட்டி என் மனதில் எழுந்த கவிதை

துளசிப் பாவை

 

துளசி வனத்தில் உதித்த,

தபசி திருவரங்கன் உபாசி

பெரியாழ்வார் கண்டெடுத்த

இளவரசி 

 

திருவாடிப்பூர திரு நாளில் தேடி

எடுத்த அவதார லக்ஷ்மி இவள்

கோபால விலாசம் தேடிய திருப்பாவை

பகல் பத்து ராப்பத்து ,முப்பத்து நாளும்

முப்போதும் எப்போதும் முழுமையாய்த்

தவமிருந்தாள் விழித்திருந்தாள்

இப்பாவை நோன்பிருந்தாள்  பாவை நோன்பிருந்தாள்

திரு பாவை நோன்பிருந்து திருப்பாவை தானெழுதி

முன்னைப் பயன் பெற விரதமிருந்தாள்

 

திருவரங்கன்  அணைப்பாவை ,

என்றென்றும் துணைப்பாவை  தானாக

விண்ணவர் போற்றும்  திருவரங்கனை

அவ்வரங்கனை  தான் மாலை சூட

தான் சூடிய பூமாலையை பாமாலையாய் 

அவனுக்களித்தாள்,  அவனும் களித்தான்

 

கிணறே கன்னாடியாய், கிளியே தோழியாய்

தானே அரங்கனாய் தான் வடிவெடுத்து

தன் கழுத்தே அரங்கனாய் பாவித்து

மாலை தனை அணிவித்து தண்ணீரிலே

தன் பிம்பம் அரங்க பிம்பமாய்க்

அந்தரங்க பிம்பமாய்க் கண்டு

தானும் அவனும் ஒன்றாகி

கிளி கொஞ்சும் தோள்கள் கொண்ட

கோதை திருமாலைத் தானடைந்து 

தவழ்ந்த மாலை தவழும் மாலை

அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்சும்

கிளியானாள் துளசி மாலை போலானாள்

 

பெரியாழ்வார் விதிர் விதிர்த்தார்

அடியாராய் தான் நினைத்த தன் மகள்

கோதை  அரங்கனின்  திரு அடியாளாய்

ஆனகதை  அறியாரோ  பெரியாழ்வார்

 

 

அபசார மென்ரெண்ணி அவர் துடித்தார்

அலைமேலே பள்ளி கொண்ட

திருமாலின் தாரமிவள் என்றவர் அறியாரோ?

அதனால்தான்  தான் சூடிக் கொடுத்தாள்

சுடர்கொடி யாள் ஆண்டாள்

அரங்கனையும் ஆண்டாள்

அறியாரோ பெரியாழ்வார் அறியாரோ

ஆனாலும்  அளவில்லா பக்தியது

அரங்கன்மேல் 

 

திருப்பாவை தனை  ஆண்ட

திருவரங்கன்  தாரமிவள்

தனக்கேயாம் என்றுரைத்தான் திருமாலே

இவள் தொடுத்து தானணிந்த

ஒருமாலை தினமும் தன்

தோளின் திருமாலை என்றுறைத்தான்

திருமாலே

தெளிந்தாண்டார் பெரியாழ்வார்

பெற்றெடுத்த பெண்பிள்ளை

இல்லை இவள்  கண்டெடுத்த

துளசிக்  கிள்ளை

பெரியாழ்வார் கண்டெடுத்த

பெண்ணாழ்வார்  சின்னாழ்வார்

 

அன்புடன்

தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





2014-07-30 10:32 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஆஹா  அருமையான பதிவு கீதா  வரேன்  அக்காரடிசில்முடிச்சிட்டு மேலும் உங்கபதிவுக்கு  எழுத ...


2014-07-29 19:33 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே!
இன்று ஆடிப்பூரம். அம்மன் கோவில்களிலே திருவிழாப் போல் கூட்டம் நெரியும். சகலவிதமான அம்மன்களுக்கும் வளைகாப்புப் போல் வளையாலேயே அலங்காரம் செய்து, மகிழுவார்கள். அம்மன் அழகா, வளை, அழகா, அதைக் காண வரும் பெண்கள் அழகா எனப் போட்டி போட்டு அனைவரும் அம்மன் அருளை நாடிப் போகும் நாள். இந்த நாள் இனிய நாளாக சுதந்திரத் திருநாளாகவும் அமைந்து விட்டது. மேலும் ஆடிப் பூரம் ஆண்டாளின் திருநட்சத்திரம். ஆண்டாளுக்கு, அண்ணனாக இருந்து அவள் எப்போவோ வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்றித் தந்ததைப் பற்றி, நம் கண்ணபிரான் ஒரு அருமையான கவிதை எழுதி இருக்கிறார். அவர் அளவுக்கு எனக்கு எழுத வராது.

திருவாடிப் பூரத்து ஜெகத்து உதித்தாளை, திருப்பாவை முப்பதும் செப்பினாளை, பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடியைப் போற்றிப் பாடுவோம். ஆண்டாளின் தமிழ் அழகுத் தமிழ், கொஞ்சு தமிழ், எளிமைத் தமிழ். அந்தக் காலத்திலேயே மழையின் விஞ்ஞான தத்துவத்தைப் பாடல் மூலம் காட்டியவள். அவள் தமிழை மட்டும் ஆளவில்லை. நம் மனங்களையும் ஆள்கிறாள். அவள் பாடல்களிலே இறைவனின் பத்து அவதாரங்களையும், அதன் சிறப்புக்களையும் குறிக்கிறாள். கூடவே அவள் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள். உக்கம்= விசிறி, தட்டொளி=கண்ணாடி. கண்ணாடியைத் தமிழில் "தகளி" எனவும் சொல்வார்கள். இந்த அருமையான வார்த்தைகள் எல்லாம் இன்று எப்படி மறைந்து ஒழிந்து போயிற்று என நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது.

அது போலே எதிர்மறைப் பொருளைக் குறிக்கும் சொல்லையும் ஆண்டாள் கையாண்ட பாணி வியக்கத் தக்கது. செய்வோம்=செய்யோம், முடிப்போம்=முடியோம், உண்போம்=உண்ணோம், ஓதுவோம்=ஓதோம், இந்த வார்த்தைகளும் வழக்கொழிந்து போய் விட்டது. தட்டொளி எப்போதில் இருந்து கண்ணாடி ஆயிற்று? புரியலை! செய்ய மாட்டோம்னு எப்போதில் இருந்து கூற ஆரம்பித்தோம்? புரியலை! ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை, அனைவரின் மனங்களையும் தான்.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!

Inline image 1


பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப்பூரம் ஆகும். ஆண்டாளின் இயற்பெயர் கோதை ஆகும். திருமாலின் மூன்று சக்திகளாய்க் குறிப்பிடப் படும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி என்ற மூவரும் சேர்ந்து ஓருருவாய் வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததாய் ஐதீகம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கே முதல் மரியாதை. கருவறையில் ஆண்டாள் வலப்புறம் இருக்க இடப்புறம் கருடாழ்வாரோடு பெருமாள் காட்சி அளிப்பார். இந்த அமைப்பு வேறெந்தப் பெருமாள் கோயிலிலும் காண முடியாத ஒன்றாகும். எம்பெருமானின் பல்வேறு ஆயுதங்களும் அவரின் சங்கும் எம்பெருமானின் அம்சங்களாகவே போற்றப்படுகின்றன. அந்த அம்சங்கள் யாவும் சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்றவை பூமியில் ஆழ்வார்களாக அவதரித்துப் பெருமானின் புகழை இனிய தமிழ்ப்பாமாலைகளால் பாட பார்த்தாள் பிராட்டி! தான் மட்டும் என்ன சளைத்தவளா? அவளும் பூமியில் அவதரித்தாள். எம்பெருமானைத் தவிர வேறொருவரை மனதாலும் நினைக்க இயலாது என்பதை அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே உறுதிபடத் தெரிவித்தாள். தான் சூடிக்களைந்த மாலையையே ரங்கமன்னாருக்கும் அளிக்க அவனும் மிகவும் உவப்புடன் அதை அணிந்து கொண்டான்.ஆனால் இதை ஒரு நாள் நேரில் பார்த்த பெரியாழ்வாரோ மனம் நொந்து போய் அந்த மாலையை ரங்கமன்னாருக்குச் சாற்றவில்லை. ஆனால் என்ன அதிசயம்! அன்றிரவே ரங்கன் ஆழ்வாரின் கனவில் வந்து ஆண்டால் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனத் தெளிவுபடக் கூறினான். மேலும் கோதை யார் எனவும், அவள் தனக்கெனவே, தன்னைத் துதிக்கவும், பாமாலைகளால் வாழ்த்திப் பாடவுமே அவதரித்தவள் என்பதையும் தெளிவாக்கினான். பெரியாழ்வார் தாம் துளசி வனத்தில் கண்டெடுத்த குழந்தைச் செல்வம் சாட்சாத் தாயாரின் அம்சமே என்பதை உணர்ந்து கொண்டு எம்பெருமானையே மனதால் ஆண்ட அவளைத் தம் வாயால் அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்க ஆரம்பித்தார். ஆண்டாளும் தினமும் பெரியாழ்வார் கட்டிக்கொடுக்கும் மாலையைத் தான் சூடிக்கொண்டே ரங்கனுக்கு அனுப்பி வைத்தாள். அதோடு மட்டுமா? ரங்கனுக்கும் தனக்கும் திருமணம் நடப்பதாயும் கனவு கண்டாள்! அதுவும் எப்படி!

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!

என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம்

மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு குறிப்பிடுகிறாள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்றும் கூறும் ஆண்டாள், அவள் காலத்திலேயே சகோதரர்கள் உடனிருக்கத் தான் பொரியிட்டதையும் கூறுவது

வரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டு
எரிமுகம் பார்த்தென்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்!

திருமணச் சடங்குகள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையிலும் மாறாமல் இருப்பதையும் இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை. அனைவர் மனதையும் ஆண்டாள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மதுரைக் கள்ளழகரிடம் விண்ணப்பமும் வைக்கிறாள். அதற்காக அவருக்கு அக்கார வடிசில் சமைத்துப் படைப்பதாகவும் ஆசை காட்டுகிறாள். அதுவும் எவ்வளவு! எல்லாம் நூறு தடாவாம்.

நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நேர்ந்து வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ!

ஆஹா! தடான்னா என்ன சும்மாவா! பெரிய பெரிய அண்டாக்கள். அதிலே நூறு தடா வெண்ணெய் காய்ச்சி, நூறு தடா அக்கார வடிசில். இதிலே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியவை என்னன்னா, மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் எனக்குத் தெரிந்து அண்டாக்களில் தான் சமைப்பார்கள். இதுவும் ஆண்டாள் காலத்திலேயே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அது போகட்டும்! இந்தப் பிரார்த்தனையை வாய்மொழியாக நேர்ந்து கொண்டதோடு இல்லாமல் பாமாலையாகவும் பொறித்து வைத்த ஆண்டாளுக்குத் தன் காலத்தில் இதை நிறைவேற்ற முடியவில்லை. அவளுக்கு எப்படியோ ரங்க மன்னார் தன்னை ஏற்றுக்கொண்டானேனு சந்தோஷம். ஓட்டமாய் ஓடிவிட்டாள். தன் மனதுக்கினியவளிடம் அவள் பிரார்த்தனையை நினைவும் செய்யவில்லை அந்த வடபத்ரசாயி!

ஆனால் இதற்கெனப் பொறுப்பு வேறொருத்தரிடம் கொடுக்கப் பட்டுவிட்டது என்பதும், அதுவும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவரால் நிறைவேற்றப்பட்டதையும் நாம் அறிய வருகிறோம். ஆம். ஸ்ரீராமாநுஜர் அவதரித்து, உபதேசம் பெற்றுத் தம் கொள்கைகளைப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் திருமாலிருஞ்சோலைக்கும் சென்றிருந்தார். அங்கே ஆண்டாளின் வாய்மொழிப் பிரார்த்தனையையும், அது நிறைவேறாமல் இருந்ததையும் அறிந்து கொண்டவர் அவளுக்காகத் தாம் அதை நிறைவேற்றி வைக்கிறார். அத்துடன் அதை மறந்தும் விட்டார். அதன் பின்னர் சில திவ்ய தேசங்கள் சென்று ஆண்டாளின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார். அங்கே சந்நிதிக்குள் நுழைகிறார் ஸ்ரீராமாநுஜர். ஜலங், ஜலங், ஜலங், சலங்கைச் சத்தம், க்ணிக், க்ணிக், க்ணிக், மெட்டி ஒலி. ஓர் அழகான விக்கிரஹம் போன்ற பெண்ணுரு இளநகையுடன் நடந்து வருகிறது. பெண்ணா? விக்கிரஹமா?? கோயிலில் பூஜை செய்யும் பட்டாசாரியார்களில் இருந்து அனைவரும் திகைப்புடன் பார்க்க, கருவறையில் அர்ச்சாவதாரமாக இருந்த ஆண்டாளைக் காணவில்லை.

அவள் தான் நடந்து வருகிறாள். அதுவும் ஸ்ரீராமாநுஜரைப் பார்த்து, “என் அண்ணாரே!” எனக் கூப்பிட்ட வண்ணம் வருகிறாள். அனைவருக்கும் வியப்பு.. இப்படி ஆண்டாளாலேயே அண்ணன் என அழைக்கப்பட்டதால் ஆண்டாள் ஸ்ரீராமானுஜரை முன்னிறுத்தி, “பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே “கூறப்படுகிறாள். இப்படிப் பல வகையிலும் சிறப்புப் பெற்ற ஆண்டாளை ரங்க மன்னார் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாயும் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வருமாறும் கட்டளையிட்டானாம். அதன்படி ஸ்ரீரங்கம் சென்றனர் இருவரும். அங்கே சந்நிதிக்குச் செல்லும் போதே ஆண்டாள் திடீரென ஒளிமயமாகக்கருவறையில் ஐக்கியம் ஆகப் பெரியாழ்வார் பரிதவித்துப் போனாராம். ஒரு சிலர் காவிரிக்கரையிலேயே குளிக்கையில் ஆண்டாள் மறைந்ததாகவும் சொல்கின்றனர். ஆனால் எப்படியோ ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெருமானோடு ஐக்கியமானது குறித்துச் சந்தேகமே இல்லை. பெண்ணைப் பெருமாளிடமே ஒப்படைத்தாலும் பெண்ணைப் பெற்றவருக்கு மன வருத்தம் இருக்குமே. புலம்புகிறார்.

ஒருமகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’

என்றெல்லாம் புலம்பினாராம் ஆண்டாளின் பிரிவாற்றாமை தாங்காமல். அதன் பின்னர் ரங்க மன்னாரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். தன் மகளை ஊரறிய, உலகறிய ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள் எனக் கெஞ்சினாராம். மாமனார், மாப்பிள்ளை ஹோதா அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலந்த்திலும் உண்டு போலும்! :D பின்னர் மனமிரங்கிய ரங்கன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஒருபங்குனி உத்திரத் திருநாளில் கோதையைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம். அதோட போச்சா! அங்கேயே தங்கிவிட்டான் வீட்டோடு மாப்பிள்ளையாக!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது.






coral shree

unread,
Jul 30, 2014, 1:46:40 AM7/30/14
to மின்தமிழ், vallamai





​​
ஆடிப்பூரத்தில் அங்கமெல்லாம்  மின்னும் பொன்னாய்
மின்னிடையாள் ஆடிப்பாடி வருகிறாள் ஆனந்தமாய்
கொஞ்சுதமிழும்  பஞ்சு மெல்லடியும்  பாந்தமாய்
பொருந்திவர நஞ்சுண்ட கண்டனின் நாயகியாய்
அபயமளிக்கும் நற்றுணை வேதமாம் அன்னையாய்
பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்
நிதந்தோறும் நின்னை நினைந்துருகும்  வரமருள்வாய்
வாரணாம்பிகையே! வாயுதேவியே! வாகீசநாயகியே!
போற்றி போற்றி!! அன்னையே அகிலாண்டநாயகியே!!
அஞ்சேலெனும் மந்திரமருளும் மாதவச் செல்வியே!!
வணங்குகிறேன் நிதம் நின்னையே! எனதன்னையே!!


ஒருமகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’

என்றெல்லாம் புலம்பினாராம் ஆண்டாளின் பிரிவாற்றாமை தாங்காமல். அதன் பின்னர் ரங்க மன்னாரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். தன் மகளை ஊரறிய, உலகறிய ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள் எனக் கெஞ்சினாராம். மாமனார், மாப்பிள்ளை ஹோதா அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலந்த்திலும் உண்டு போலும்! :D பின்னர் மனமிரங்கிய ரங்கன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஒருபங்குனி உத்திரத் திருநாளில் கோதையைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம். அதோட போச்சா! அங்கேயே தங்கிவிட்டான் வீட்டோடு மாப்பிள்ளையாக!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது.






shylaja

unread,
Jul 30, 2014, 4:06:55 AM7/30/14
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்
ஆமாம் திவாகர் ..வில்லிபுத்தூர் பெருமானுக்கு மாலைகளை சூடிக்கொடுத்து வேங்கடவற்கு மனதைப்பறிகொடுத்து அழகருக்கு அக்கார அடிசிலை வேண்டிக்கொண்டு கடைசியில்  அரங்கத்தில் பள்ளி கொண்டமாலுடன் ஐக்கியமாகிவிட்டாள்..நீங்கள் சொல்வதுபோல ஆண்டாள் படிக்கப்படிக்க பரவசம்தான்.  

shylaja

unread,
Jul 30, 2014, 4:07:56 AM7/30/14
to vallamai, மின்தமிழ்
அன்னையை துதிக்கும் பாடல் அழகு பவழா 

shylaja

unread,
Jul 30, 2014, 4:17:28 AM7/30/14
to vallamai, மின்தமிழ்

Flash news:)
அக்கார அடிசில் ஆண்டாளுக்கு எங்க வீட்டில் :)
photo 2.JPG

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 30, 2014, 7:22:21 AM7/30/14
to வல்லமை, மின்தமிழ்
உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனையும், சிருங்கேரி அம்பிகையையும் தரிசித்து, இன்று காலை வந்தேன். திருவாடிப்பூரம் ஆண்டாள் கருணாகடாக்ஷத்தால் அழகுற மிளிர்கிறது.. அத்தனை பேரும் அற்புதமான தகவல்களைத் தந்திருக்கிறார்கள்.. இன்று ஒவ்வொரு பதிவுமே அக்கா கை அக்காரவடிசல் சுவை..

விடிகாலை வேளையில், வில்லிப்புத்தூர் வீதியிலே, நடையாக நடந்து கோதை சொன்ன திருப்பாவை நமக்காக நமக்காக நாம் உய்ய வேண்டுமென்றே...கோதைப் பிராட்டி,கோகுலத்தைக் கண்முன் கொண்டு வந்த காரணமென்ன?!...கோபியர்களின் பக்தியே மிக உயர்ந்ததென உணர்ந்த உத்தவர், கோபியர்கள் இருக்கும் திசை நோக்கி, உடல் நிலம் தோய விழுந்து வணங்கினாராம்.. மோக்ஷ மந்திரமான 'ஸ்ரீமந்நாராயணீயம்' சொல்கிறது இதை..அப்படி பக்தியில் சிறந்தவர்களாக, பகவானை ஆச்ரயித்து, எல்லாம் அவனாக, எல்லாம் அவனுக்காக என்றே வாழ வேண்டும் என்பதற்காக அல்லவோ 
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை பாடுபட்டாள்.. 

ஆர்த்ராபராதிநி ஜநேப்யபிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே
பார்ச்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ராயெண தேவி வதநம் பரிவர்த்திதம் ஸ்யாத்(ஸ்ரீ கோதா ஸ்துதி)

(ஹே தேவி!.. மக்கள் தொடர்ந்து பாவங்களைப் புரிந்தாலும், அவர்களைக் காக்க வேண்டி, ஸ்ரீமஹாலக்ஷ்மியானவள், திருவரங்கனின் திருச்செவியில் விண்ணப்பம் செய்தவாறு இருக்கிறாள். அதைத் தவிர்க்க வேண்டி, பெருமாள் மற்றொரு பக்கம் திரும்புவாராகில், அங்கு, ஸ்ரீதேவியை விடவும் கருணை நிரம்பிய நீயே எழுந்தருளியிருப்பதால், மக்களைக் காப்பதை விடவும் அவருக்கு வழியேது?!)

இன்று இல்லத்தின் பூஜையறையில் ஒற்றைப்படையில் நெய்தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம்.. வையத்தின் இருளகற்ற, விஷ்ணுசித்தர் குலக்கொழுந்தாய் உதித்த பூதேவித் தாயாரின் வைபவத்தை முன்னிட்டு  சில தீபங்கள் அகல் தீபங்களாகவும், மற்ற விளக்குகளிலும் தீபங்கள் ஏற்றி வணங்குவோம். பூஜையறையில் தீபாலங்காரமாக இருக்கும்..

நாச்சியார் திருமொழியில், 'வாரணமாயிரம்' பத்து பாசுரங்களுக்கும் இருக்கும் மகிமை அடியாள் சொல்லித் தெரியவேண்டுவதில்லை.. எங்கள் குடும்பங்களில், கல்யாணப் பெண்ணுக்கு முகூர்த்தப் புடவை எடுக்கும் சமயத்தில், கடைக்குக் கிளம்பும் முன், இந்தப் பத்துப் பாசுரங்களையும் மணப் பெண், பூஜையறையில் பாடவேண்டும்..மேலும், 'இந்திரன் உள்ளிட்ட' என்று துவங்கும் பாசுரத்தை, பத்து முறை சொல்லி வணங்க வேண்டும். முகூர்த்தப் பட்டு, மனதுக்குப் பிடித்த மாதிரி அமைந்து, மணவாழ்க்கை சிறக்கும் என்பார்கள் பெரியவர்கள்..

திருமண சமயத்தில், கூறைப்புடவை கட்டி, மணமேடைக்கு அழைத்து வரும் சமயத்திலும் இந்தப் பத்துப் பாசுரங்கள் சொல்லி ஸ்ரீஆண்டாளை பிரார்த்திப்போம்.

திருவாடிப்பூரம், அம்பிகையின் சீமந்த வைபவம் என்று சொல்லி, வளைகாப்பு அலங்காரம், சாகம்பரி அலங்காரம் அநேகமாக எல்லா திருக்கோயில்களிலும் செய்வார்கள்.. இல்லங்களிலும் புதிய வளையல்கள் வாங்கி வைத்து, மாலையாகக் கட்டிப் போடலாம்.. முளைவிட்ட பாசிப்பயறை நிவேதனம் செய்யலாம். வளையல் அலங்காரம் செய்யப்பட்ட அம்பிகையின் படம் கீழே.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-30 13:37 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
 
​    
​           
​    
​       
​   
​          
​      
​           
​     
​                 
         
IMG-20140730-WA0000.jpg

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 30, 2014, 7:38:09 AM7/30/14
to மின்தமிழ், வல்லமை
கீதாம்மா கைவண்ணத்தில், மரபு விக்கியில், அக்கார அடிசில் செய்முறை!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



coral shree

unread,
Jul 30, 2014, 7:40:15 AM7/30/14
to மின்தமிழ், vallamai
ஆடிபூரத்து அன்னையை அற்புதமாக அலங்கரித்துள்ள, கீதாஜி, ரஞ்சனி மேடம், ஷைலு, தமிழ்த்தேனீ ஐயா, அன்பு பார்வதி, மேகலா, தேமொழி, சுபா அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும்.

அன்புடன்
பவளா


2014-07-30 14:24 GMT+05:30 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>:
ஷைலூ வழக்கம்போல தூள்!   எப்படி நாமிருவரும் ஒரே பாசுரத்தில் இந்தப் பதிவை ஆரம்பித்தோம்,வியப்பாக இருக்கிறது. கீதாவின் பதிவு நிறைய விஷயங்களை நிறைவாகச் சொல்லுகிறது. தேமொழி போட்டிருக்கும் ஆண்டாள் படங்களும், மேகலாவின் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் அழகானவை. பவளாவின் அம்மன் பாடல் அருமை.

//அபயமளிக்கும் நற்றுணை வேதமாம் அன்னையாய்
பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்//


அருமையான வரிகள். பாராட்டுக்கள் ஷைலூ, கீதா, தேமொழி, மேகலா, மற்றும் பவளா எல்லோருக்கும். 

பள்ளமடை: 

பள்ளத்தை நோக்கி நீர் பாய்வது தான் இயற்கை. நடக்கக்கூடிய ஒன்று; இயல்பானது. அதுபோலத் தான்  ஒரு பெண் ஆணைக்கண்டு மோகிப்பதுவும். ஆழ்வார்கள் என்னதான் நாயிகா பாவனையில் பெருமாளைக் கண்டு மோகித்தாலும், ஆண்டாளின் பாடல்களைப் போல வருமா என்பது தான் 'பள்ளமடை' க்கு அர்த்தம். 

நாச்சியார் திருக்கோலத்தில் அரங்கன் எழுந்தருளியிருக்கிறான். பக்கத்தில் பராசர பட்டர். 'எப்படி என் நாச்சியார் திருக்கோலம்? உங்கள் நாச்சியார் மாதிரியே இருக்கிறேன், இல்லையா? பட்டர் தலைகுனிந்து மெதுவான குரலில் சொல்லுகிறார்: 'என்னதான் பொருத்தமான வேஷம் போட்டாலும் எங்கள் தாயாரின் கருணை விழி உனக்கு இல்லையே!' என்கிறார். இதுதான் பள்ளமடை என்பது. 

பாராட்டுக்களுக்கு நன்றி சுபா, ஷைலூ.


அன்புடன்,
ரஞ்சனி 




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

coral shree

unread,
Jul 30, 2014, 7:41:53 AM7/30/14
to vallamai, மின்தமிழ்
அன்பின் பார்வதி,  

அம்மன் வளையல் மாலை காட்சி அற்புதம். பகிர்விற்கு நன்றி.

அன்புடன்
பவளா


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 30, 2014, 7:47:11 AM7/30/14
to மின்தமிழ், வல்லமை
இன்று நாகபஞ்சமி:

இது குறித்த தகவல்கள் பற்றி ஒரு மீள்பதிவு!.. என் அப்போதைய பதிவுகள் எல்லாம் கூட்ஸ் வண்டி போல் மஹா நீளமாக இருந்ததால், சில தகவல்கள் மட்டும் தருகிறேன். முழுப் பதிவுக்கும் கீழே சொடுக்குக!!...

நாக சதுர்த்தி/ நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்கள் கொண்டாடப்படுவதன் காரணம்:

ஆந்திர மற்றும் வடமாநிலங்களில் இவ்விரதங்கள் பிரசித்தி பெற்றது. சிராவண சுக்ல சதுர்த்தி மற்றும் பஞ்சமியன்று நாகசதுர்த்தி/பஞ்சமி, மற்றும் கருடபஞ்சமி விரதங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

இது தொடர்பான புராணக்கதையின் படி, கத்ருவும் விநதையும், ஒரு நாள் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்த போது, வானில்,பாற்கடலில் திருமகளோடு உதித்த, இந்திரனின் குதிரையாகிய, 'உச்சைஸ்சிரவஸ்'  சென்று கொண்டிருந்தது.

'பாற்கடலில் உதித்ததன் காரணமாக,  அந்தக் குதிரை எவ்வளவு வெண்ணிறமாக இருக்கிறது பார்' என்று விநதை வியக்க, நாகங்களின் தாயான கத்ரு, தன் சகோதரி விநதையின் மேல் கொண்ட அசூயையின் காரணமாக, அதன் வால் கருநிறமுடையது வேண்டுமென்றே விநதையிடம் வாதம் செய்தாள். தான் அதை நிரூபித்தால், விநதை அவளுக்கு அடிமையாக வேண்டும் என பந்தயம் வைத்தாள். விநதையும் ஒப்புக் கொள்ள, அதை நிரூபிப்பதற்காக, தன் குழந்தைகளான, கருநாகங்களை, அதன் வாலில் சுற்றிக் கொள்ளும்படிச் செய்தாள். இதற்கு சம்மதிக்காத வாசுகி முதலான நாகங்களை, தாகத்தால் தவிக்குமாறும், ஜனமேஜய மஹாராஜாவால் சர்ப்பயாகம் நடைபெறும் பொழுது அதில் வீழ்ந்து மடியக் கடவதென்றும் சபித்தாள்.{ஜனமேஜய மஹாராஜாவால் சர்ப்ப யாகம் செய்யப்பட்ட இடம், கர்நாடகாவில் சிக்மகளூர் டவுனில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் ஹீரேமகளூர் பிரதேசத்தில் அமைந்துள்ள கோதண்ட ராமஸ்வாமி கோவில். இங்கு, சர்ப்ப யாகம் செய்யப்பட்டதன் நினைவாக, ஜனமேஜயனால் எழுப்பப்பட்ட ஒரு கல்தூண் உள்ளது. இந்தத் தூணை,  நாக பஞ்சமி அன்று தரிசனம் செய்ய நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.}

பிரம்மதேவரை இதன் காரணமாகச் சரணடைந்த நாகங்களை அவர், 'யாயவர் வம்சத்தில் தோன்றும் ஜரத்காரு மஹரிஷிக்கு உங்கள் சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்தால், அவர்களுக்குப் பிறக்கும் புதல்வன் உங்களைக்  காப்பான்' என்று வரமளித்தார். {நாகங்களின் தாகத்தைத் தணிப்பதற்காகவே புற்றுக்குப் பாலூற்றி வழிபடும் முறை ஏற்பட்டது. நாக பஞ்சமி தினத்தன்று, நாகதேவதைகளான, அனந்தன், வாசுகி, குக்ஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க் கோடன், குளிஜன், பத்மன் ஆகியோரின்  திருப்பெயர்களைச்  உச்சரித்துக் கொண்டே  பாம்புப் புற்றிற்கு பால்   ஊற்றி வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

புத்திர பாக்கியம் கிடைக்க அனந்தனையும்,புத்திரி பாக்கியம் கிடைக்க, வாசுகியையும், பலம் பெற தக்ஷகனையும், குஷ்ட ரோக நிவாரணம் பெற கார்க்கோடகனையும், நற்குணங்களைப் பெற, பத்மனையும், நோயிலிருந்து நிவாரணம் பெற, கங்கு பாலனையும் சீதளத்தினால் ஏற்படும் பாதிப்பு விலக குளிஜனையும் பூஜிக்க வேண்டும் என புராணங்கள் கூறுகின்றன.}

பிறகு,கருட பகவான், தன் தாயின் அடிமைத் தளை நீக்குவதற்காக, தேவலோகம் சென்று, இந்திரனுடன் போரிட்டு, அமுதக்கலசத்தைக் கொண்டு வந்து தன் தாயை மீட்டார். 

ஆகவே, இவ்விரதம் அன்னையர், தங்கள் குழந்தைகள் நலன் வேண்டிச் செய்ய வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த விரதமாயிற்று.

சகோதரர்கள் நலன் காக்க வேண்டியே பெரும்பாலும் இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாகச் சொல்லப்படும் கர்ண பரம்பரைக்கதை.

ஒரு பெண்ணிற்கு ஐந்து சகோதரர்கள். அவர்கள் அனைவரும் விறகு வெட்டும் வேலையைச் செய்து வந்தார்கள். ஒரு நாள் அவர்கள் அனைவருக்கும் அந்தப் பெண், கஞ்சி எடுத்துப் போகும் போது, வானில், ஒரு கருடன் கவ்விக் கொண்டு சென்ற நாகத்தின் வாயிலிருந்து வெளிப்பட்ட விஷம், கஞ்சியில் விழுந்து விட்டது. அதைப் பருகிய காரணத்தால், அந்தப் பெண்ணின் சகோதரர்கள் மரணமடைந்தனர்.

தன் சகோதரர்களின் நிலையைக் கண்டு அழுது புலம்பி, அவள் இறைவனிடம் மன்றாட, உடனே, சிவனாரும் பார்வதியும் தோற்றமாகி, அன்று கருட பஞ்சமி தினமாதலால், கருடபகவானுக்குப் பூஜை செய்ய மறந்ததால் ஏற்பட்ட நிலை இது என்பதை விளக்கினர்.

அவர்கள் சொல்படி, அங்கேயே பூஜை செய்த அந்தப் பெண், நோன்புக் கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, புற்று மண், அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் அண்ணன்மார்களின் முதுகில் குத்த அவர்கள் உயிர் பிழைத்து எழுந்தனர்.

ஆகவே, இவ்விரதம் சகோதரர் நலன் வேண்டி சகோதரிகள் செய்யும் விரதமாயிற்று. இதற்காக, சகோதரர்கள், சகோதரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குகின்றனர்.

புத்திர பாக்கியம் பெறுவதற்கு மிக உகந்ததாகச் சிறப்பித்துக் கூறப்படும் விரதம் இது. இந்தப் பஞ்சமி தினப் பூஜையை, நாக பஞ்சமியன்று துவங்கி, தொடர்ந்து 12 மாதங்கள், சதுர்த்தியன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, பின் பஞ்சமியன்று உபவாசமிருந்து நாக தேவதையைப் பூஜிக்க வேண்டும். ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எண்ணிக்கையில் பிராமண போஜனமும், அன்ன தானமும் செய்ய வேண்டும். ஒரு வருடம் முடிந்த பிறகு, விரதம் முடிக்கும் தினத்தன்று, தங்க, அல்லது வெள்ளி நாகர்களைத் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்ரு கடன்கள் நிவர்த்தியாகின்றன.

விரத தினங்களை நியமத்துடன் பூர்த்தி செய்து, நாகபஞ்சமி விரதக் கதையைக் கேட்க வேண்டும். இவ்வாறு செய்வதால், சர்ப்ப தோஷங்கள் நீங்கி குலம் விருத்தி அடையும்.


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 30, 2014, 7:48:44 AM7/30/14
to மின்தமிழ், வல்லமை
மன்னிக்கவும்..நாளை நாக பஞ்சமி என்று திருத்தி வாசிக்கக் கோருகிறேன்.. பதிவின் சுட்டி கீழே..


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 30, 2014, 7:52:03 AM7/30/14
to வல்லமை, மின்தமிழ்
ரொம்ப நன்றி தங்களுக்கு!.. இந்தப் படம், எனக்கு மின் அஞ்சலில் அனுப்பப்பட்டது!.. அம்மன் முக கடாக்ஷத்தால் ஈர்க்கப்பட்டு, பகிர்ந்து கொண்டேன்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



shylaja

unread,
Jul 30, 2014, 12:03:31 PM7/30/14
to vallamai, மின்தமிழ்
உடுப்பி  சிருங்கேரி  ஆஹா பார்வதி அமர்க்களம்.
 போனில் கேட்டுக்கொண்டேன் விவரங்களை.
 பதிவில் நாகபஞ்சமி விவரங்களும் அருமை .ரஞ்சனி  தேனிசார் மற்றும் அனைவர்க்கும் நன்றிமிக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Sampath Ramaswami

unread,
Jul 30, 2014, 1:49:21 PM7/30/14
to vallamai, மின்தமிழ்
திருவாடிப் பூரம் இணையத்தின் இணையற்ற நாளாகத் திகழ்கிறது. மனத்துக்கினியானை சூடிக்கொடுத்து பாடிக்கொடுத்து கைத்தலம் பற்றிய ஸ்ரீ கோதா தேவியைப் பற்றிய பல அரிய நுணுக்கமான விஷயங்களை ப​கிர்ந்து கொண்ட ஷைலஜா, தமிழ்த்தேனீ, கீதா சாம்பசிவம், ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கு மிக்க நன்றி. பவளா சங்கரியின் அம்மன் பாடல், பார்வதி ராமசந்திரனின் நாக பஞ்சமி கருட பஞ்சமி பற்றிய விவரணைகள் நம் எல்லோருக்கும் கிடைத்த bonus. நூறு தடா அக்கார அடிசிலையும் உண்டது போல் ஒரு உணர்வு. இழையில் பங்கேற்ற தேமொழி, மேகலா, சுபா இந்த விருந்தினுக்கு மேலும் பொலிவு ஊட்டியிருக்கின்றனர்.
இணைய அன்பு உள்ளங்களுக்கு ஆண்டாள் அம்மன் அருள் பொங்கட்டும்.
வணக்கத்துடன்
ஸம்பத்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 1, 2014, 1:20:04 AM8/1/14
to மின்தமிழ், Shylaja Narayan, வல்லமை
'ஆஷாட நவராத்திரி' சந்திரமானன பஞ்சாங்கத்தின்படி ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது என்றாலும், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னை வாராஹியைத் தொழுவோம் நாம்!..

வாராஹி தேவியின் மகிமைகள்:
வராஹ(பன்றி)யின் முகம் தாங்கியவளாதலால் வாராஹி எனும் திருநாமம் கொண்ட இந்த அன்னை, தாந்த்ரீக முறைப்படி வழிபாடு செய்ய‌ப்படும் தெய்வங்களில் மிக முக்கியமானதொரு சக்தி ஆவாள்.இந்த அம்பிகை வராக மூர்த்தியின் சக்தியின் அம்சமாகவும் போற்றப்படுகின்றாள். தாந்த்ரீக உபாசகர்களால் மிகவும் போற்றிக் கொண்டாடப்படும் சக்தி வாராஹி. 'வாக்குக்கு வாராஹி' என்பது மிகப் பிரபலமானதொரு வாக்கியம். வாராஹியை உபாசிக்க, வாக்பலிதம் ஏற்படும் என்பதும், அவ்வாறு உபாசிக்கிறவர்களிடம் வெற்றி பெறுவது என்பது இயலவே இயலாது என்பதும் உண்மை. மேலும் வாராஹி வழிபாட்டில் நேரம் தவறாமை என்பது மிக முக்கியமானதொரு அம்சமாகும்.

ஏராளமாய்ச் செல்வம் தன்மடியில் ஏற்றவளாம்
வாராஹி வாராஹி வாராஹி என்றே உன்னை
சீரான அன்புடன் மனமுருகி நான் அழைத்தால்
வாராது இருப்பாளோ வாராஹி எனும் என் தாய்(நன்றி:பழனி திரு.பால இரவிச்சந்திரன்)

என்று கோடானு கோடி பக்தர்கள் போற்றித் தொழுதிடும் வாராஹி தேவி, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் தாந்த்ரீக ரூபமாவாள். ஸ்ரீலலிதாம்பிகையின் பஞ்ச பாணத்தினின்றும் தோன்றியவள். தேவியின் கிரியா சக்தியின் ஸ்வரூபம்.

ஸ்ரீலலிதாம்பிகையின் சக்தி சைன்யத்தின்(போர்ப்படைகளுக்கு தண்டம் என்றும் பெயர், தண்டநாயகர் என்பது சேனாதிபதியைக் குறிக்கும்) தலைவியானதால் தண்டினீ தேவி என்றும், தண்டநாதா என்றும் தந்த்ரிணீ என்றும் போற்றப்படும் வாராஹி தேவி, பண்டாசுர வதத்தின் போது, கிரிசக்ரத் தேரில் (ஐந்து தட்டுக்களாலான தேர்)ஏறி அம்பிகையைப் பணிந்து,  சேனைகளை வழிநடத்தினாள். இதை,

 'கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா'  என்று, ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்  போற்றுகிறது.

விசுக்ர ப்ராணஹரண வாராஹீவீர்ய நந்தி தாயை நம: என்னும் திருநாமம், தண்டினீ தேவி செய்த விசுக்ர வதத்தால் அம்பிகை மகிழ்ந்தாள் என்று உரைக்கின்றது. விசுக்ரன், பண்டாசுரனின் சகோதரன்.

சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், ஜீவனின் அஞ்ஞான வடிவே விசுக்ரன். ஜீவனின் அறிவை இழக்கச் செய்பவன். அவனை வீழ்த்துகிறாள் அன்னை. இது போல் சாதகர்களுக்கு, அவர்களின் யோக சாதனைகளில் நேரும் பேரிடர்களை மாய்க்க வல்லவள் வாராஹி. பெரும் ஆபத்துகளில் இருந்து பக்தர்களைக் காப்பவள்.

அம்பிகையின் திருக்கோலம், சங்கு, சக்ரம், கதை, பத்மம், உலக்கை, கலப்பை(ஏர்) ஆகியவற்றுடன் கூடிய ஆறு திருக்கரங்களுடன் கூடியதாக, வீராசனத்தில் அமர்ந்த நிலையில் இருப்பதாகவே பெரும்பாலான புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
வாராஹி தேவிக்கு 'வார்த்தாளி' என்ற திருநாமமும் உண்டு. இது தமிழ் வார்த்தையான 'ஒறுத்து அழி' என்பதிலிருந்து வந்ததாகக் கருதுகிறார்கள்.   புலன்களினால் ஏற்படும் தூண்டுதலில் இருந்தும் தீமைகளில் இருந்தும் சாதகனைக் காப்பவள் வாராஹி அன்னையே. இந்து தர்மத்தில் மட்டுமல்லாது, பௌத்தத்திலும் இதன் காரணமாகவே அன்னை போற்றப்படுகின்றாள். புத்த மதத்தில், வஜ்ரவாராஹி, ஹீருகா, மற்றும் மரீசி ஆகிய மூன்று விதமான திருவடிவங்களில் அன்னை ஆராதிக்கப்படுகின்றாள்.

வாராஹி தேவி, பூமி சம்பந்தமான பிரச்னைகள் எதுவாயினும் அதை அறவே நீக்கும் சக்தி உடையவள். வீடு, நிலம் ஆகியவை வாங்குவது, விற்பது ஆகியவற்றில் ஏதேனும் பிரச்னைகள், வாழும் வீட்டில் நிம்மதியில்லாமல் ஏதேனும் தொந்தரவுகள் முதலியவை இருப்பின் , வாராஹியை முறையாகத் தொழுது வர கட்டாயம் அகலும். மேலும் விரலி மஞ்சளை, 21,51,108 ஆகிய எண்ணிக்கையில் வாங்கி, மஞ்சள் கயிறில் (தடிமனான நூலை, மஞ்சளில் நனைத்தும் கட்டலாம்) மாலையாகக் கட்டி, செவ்வாய் கிழமைகளில் வாராஹிக்கு அணிவிக்க, அற்புத நற்பலன்கள் நிகழ்வதைக் காணலாம். இது என் சொந்த அனுபவம்.

பஞ்சுத் திரியை, குங்குமத்தில் தோய்த்து, அதை உபயோகித்து தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றி வர, குடும்பத்தில் மனக்கசப்புகள் மறைந்து அமைதி நிலவும். இது வாராஹி அன்னைக்கு மிக உகந்த பரிகாரமாகும்.

அம்பிகைக்கு உகந்த மலர் செவ்வரளி. அம்பிகை, காய் கனிகளை விட, பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் கிழங்கு வகைகள். குறிப்பாக, மாகாளிக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, பனங்கிழங்கு முதலியவற்றையே விருப்பமுடன் ஏற்கிறாள். கறுப்பு உளுந்தால் செய்யப்படும் வடை, பானகம் முதலியவை பிரதான நிவேதனம்.

தென்னாட்டில், தனிச் சிறப்போடு கூடிய அன்னையின் வழிபாடு தற்போதே பிரபலமடைந்து வருகிறது. இதற்கு முன்பாக, வெகு காலத்திற்கு முன்பே, சப்தமாதர்களுள் ஒரு சக்தியாக அன்னை சிறப்பிக்கப்பட்டு வழிபடப்படுகின்றாள்.

பிராமி, மாகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரே சப்த மாதர்கள். அநேகமாக, எல்லா சிவாலயங்களிலும் தேவியின் ஆலயங்களிலும் சப்தமாதர்களின் திருவடிவங்களைக் காணலாம். அமர்ந்த திருக்கோலத்தில், ஆயுதங்கள் தாங்கிய திருவடிவங்களாக, ஒரே கல்லிலோ அல்லது, தனித்தனியாகவோ சப்தமாதர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.

மதுரை மீனாட்சி, சியாமளா தேவியின் திருவடிவாக அறியப்படுவதைப் போல், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன், வாராஹியின் அம்சமாகவே அறியப்படுகின்றாள். அங்கு சந்தன அபிஷேகத்தின் போது அம்பிகையின் தண்டினி அம்சம் மிக அற்புதமாக வெளிப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

இதுவும் ஒரு நீண்ட பதிவாகவே அமைந்து விட்டதால், முழுப்பதிவும் காண இங்கே சொடுக்குக..


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



On Thu, Jul 31, 2014 at 6:42 AM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
​                    

shylaja

unread,
Aug 1, 2014, 3:58:25 AM8/1/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், வல்லமை
ஆடி வெள்ளிக்கான  அழகான இடுகை பார்வதி அம்பிகை பற்றிய அறிய தகவல்கள்  முக்கியமாய் ஆனைக்கா அன்னையைப்பற்றிய விவரம் இன்றும் அறிந்துகொண்டேன் அடுத்தமுறை செல்லும்போது அபிஷேகத்தின் போது தரிசிக்கவேண்டும் 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 1, 2014, 11:33:15 PM8/1/14
to shylaja, மின்தமிழ், வல்லமை
நன்றி அக்கா!..அபிஷேகத்தின் போது, தண்டினி தேவியின் திருவுரு போலவே தோன்றும் என்று சொல்கிறார்கள்!.. கட்டாயம் தரிசிக்க வேண்டுகிறேன்!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-01 13:28 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​  
​                
​   
​      
​                 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 1, 2014, 11:44:08 PM8/1/14
to shylaja, தமிழ் சிறகுகள், மின்தமிழ், வல்லமை
நாளை ஆடிப் பெருக்கு!...

“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து
கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!” (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்).


காவிரியின் தோற்றம் குறித்த புராணக்கதை:

அகத்திய மாமுனிவர், பொதிகை மலைக்கு வரும் வழியில், அங்கிருந்த மரத்தில் தம் முன்னோர்கள் தலை கீழாகத் தொங்குவதைக் கண்டார். வம்ச விருத்திக்காக, மணம் முடிக்க வேண்டிய, அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்டார்.

ஒரு நாள் அவர் விதர்ப்ப நாட்டை அடைந்த போது, அந்நாட்டு மன்னன் வேள்வி ஒன்றைச் செய்து கொண்டிருந்தான். அகத்தியரை வரவேற்று உபசரித்த மன்னன், வேள்வியில் பங்கு கொள்ள வேண்டினான். வேள்வித்தீயில் ஒரு பெண் தோன்றினாள். அப்போது ஒரு அசரீரி,'அகத்தியா, இவளே நீ மணமுடிக்க வேண்டியவள். இவள் பெயர் 'லோபமுத்திரை' என்பதாகும்' என்று கூறியது. ஆனால் அப்பெண்ணோ, 'நான் விதர்ப்ப ராஜன் யக்ஞ குண்டத்தில் தோன்றியதால் அவருடைய மகளாவேன்.அவரிடம் அனுமதி பெற்றால் என்னை மணமுடிக்கலாம்' என்றாள். விதர்ப்ப நாட்டு அரசனோ, லோபமுத்திரையை மணமுடிக்க வேண்டுமானால், அகத்தியர் பெரும் பொருள் தரவேண்டுமென்றான். லோப முத்திரையும் அரசன் சொற்படி நடக்க அகத்தியரை வற்புறுத்தினாள்.

பின், பல மன்னர்களிடம் யாசித்து, அரசன் கேட்ட பொருளை, அகத்தியர் அளிக்க, அவனும்  மனமுவந்து, லோபமுத்திரையை, அகத்தியருக்கு மணம் செய்து வைத்தான்.

அகத்தியர், லோபமுத்திரையை நோக்கி, 'அடங்காத ஆறு போல் என்னை ஆட்டி வைத்ததன் காரணமாக, நீராக மாறி என் கமண்டலத்துள் அடங்குவாய்' என்று கூறி, அவளை நீராக மாற்றி தன் கமண்டலத்துள் அடக்கினார். 

ஸ்ரீ அகத்திய மாமுனிவரும் லோபமுத்திரா தேவியும்:

அவர் குடகு மலைப் பகுதியை அடைந்து, கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போது, விநாயகப் பெருமான், உலக நன்மைக்காக, ஒரு காகத்தின் உருவெடுத்து, அந்தக் கமண்டலத்தைத் தட்டி விட்டார். ஒரு காகம் தட்டி விட, கமண்டலத்திலிருந்து நதியாய் விரிந்தமையால், 'காவிரி' எனப் பெயர் பெற்றாள் காவிரித்தாய்.

நடந்தவை அனைத்தையும் தம் ஞான திருஷ்டியால் அறிந்தார் அகத்தியர். நாடு வளம் கொழிக்கும் பூமியாக மாறவே, விநாயகப் பெருமான் இந்த லீலையை நடத்தியருளினார் என்பதை உணர்ந்தார். பின், தன் கமண்டலத்துள் எஞ்சியிருந்த நீரை எடுத்துக் கொண்டு, பொதிய மலையை அடைந்து, அந்த மலைச் சிகரம் ஒன்றின் மேல் எஞ்சியிருந்த நீரை ஊற்ற, அது 'பொருநை'(தாமிர பரணி) நதியாக விரிந்தது.

பதினெட்டாம் பெருக்கு:

தமிழர் பண்பாட்டில் காவிரித்தாய்க்குச் சிறப்பான ஓர் இடம் உண்டு. சிலப்பதிகாரம் முதலான காப்பியங்களிலிருந்து, தற்காலப் புதினங்கள் வரை, தமிழரின் பண்பாடு கூறும் பல நூல்களிலும் காவிரியன்னை சிறப்பிடம் பெறுகிறாள்.

'சோழவளநாடு சோறுடைத்து' என்று புகழ்பெறும் வண்ணம், சோழநாட்டை வளநாடாக்கிய பெருமை காவிரியன்னைகே உண்டு.

சோழ மன்னர்களும் காவிரியன்னையைச் சிறப்பிக்கத் தவறவில்லை. மேற்கே சஹ்யாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்பத்திரண்டு  சிவாலயங்களைக் கட்டுவித்தார் ஆதித்த சோழ மாமன்னர்.  சோழ மன்னன், கரிகாற்பெருவளத்தான் காவிரிக்குக் கல்லணை கட்டிப் பெரும்புகழ் பெற்றான்.

தம்மைக் கண் போல் காத்து, வாழ்வில் வளம் சேர்க்கும் காவிரியன்னை, ஆடி மாதம், கார்காலத் துவக்கத்தில், புது வெள்ளம் கண்டு, பெருக்கெடுத்து ஓடி வருவதை, தம் வீட்டுப் பெண் தம்மைக் காண வருவதாகவே எண்ணி, பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் தமிழர் பெருமக்கள். தன் பிறந்த குடகு மலை விட்டு, தமிழகத்தின் தாகம் தீர்க்கவென, தீராத பாசத்தோடு வரும் காவிரியன்னைக்கு, ஆடி மாதம் 18ம் தேதியன்று, 'ஆடிப்பெருக்கு' விழாக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

காவிரி ஆறு கரைபுரண்டோடும் பகுதிகளில் இருக்கும் படித்துறைகள் பெரும்பாலும் 18 படிகள் கொண்டதாக இருக்கும். அவை அனைத்தும் மூழ்குமளவு வெள்ளம் வருவதால் பதினெட்டாம் பெருக்கு கொண்டாடப் படுவதாக ஐதீகம்.

அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டு, 'தட்சிண கங்கை' என்று போற்றப்படும் காவிரியன்னைக்கு, காவிரிக் கரையோரம் வாழும் மக்கள், ஆடிப் பெருக்கன்று, பிறந்த வீட்டுச் சீராக, மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யச் சரடு, காதோலை, கருகுமணி, ரவிக்கைத் துணி போன்றவற்றை, முறத்தில் வைத்து, ஆற்றில் விட்டு பூஜிக்கிறார்கள். 

நீரில் மஞ்சளைக் கரைத்து அன்னைக்கு மங்கல விழாக் கொண்டாடுகிறார்கள்.   தீபங்கள் ஏற்றி, ஆற்றில் விட்டு, தம் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வரம் வேண்டுகிறார்கள்.

இரு கரைகளிலும், நுங்கும் நுரையுமாகப் பெருகும் வெள்ளம், நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை நினைவுபடுத்துவதால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு, வளைகாப்பு, பூச்சூட்டல் சமயங்களில், வாய்க்கு ருசியாக,சர்க்கரை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை முதலான பிசைந்த சாத வகைகளைச் செய்து உண்ணச் செய்வது போல், காவிரியன்னையையும் கர்ப்பிணிப் பெண்ணாகப் பாவித்து,  கலந்த சாத வகைகளை காவிரிக்கரைக்கு எடுத்து வந்து, அன்னைக்கு நிவேதனம் செய்து பகிர்ந்து  உண்கிறார்கள்.

புது மணத் தம்பதியர், தம் மண மாலைகளைப் பாதுகாத்து வைத்திருந்து, பதினெட்டாம் பெருக்கன்று ஆற்று நீரில் விட்டு மண வாழ்வு மணம் வீச அன்னையை வேண்டுகின்றனர்.

திருமண தினத்தன்று கட்டிய மஞ்சள் கயிற்றை மாற்றி, புது மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்துடன், பவளம், முத்து, மகாலட்சுமிக் காசு, அன்னப் பறவைக் காசு முதலான மங்கலச் சின்னங்களைக் கோர்த்து, புது மணமகளுக்கு அணிவிக்கும் 'தாலிப் பெருக்குதல்' எனப்படும் நிகழ்வும் காவிரிக்கரையில் நடைபெறும். ஆடிப்பெருக்கன்று தாலி பெருக்க, மங்கலம் நிறையும் என்பது நம்பிக்கை.

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!

(தொண்டரடிப்பொடி ஆழ்வார்).

'ரங்கம்' என்றால், ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான இடம் என்பது பொருள்.

'பூலோக வைகுண்டம்'  எனப் போற்றப்படும் திருவரங்கம் மட்டுமல்லாது, 'பஞ்சரங்கத் தலங்கள்' என்று சிறப்பித்துக் கூறப்படும் தலங்கள் அனைத்தும் காவிரியன்னையை அணைந்தே அமைந்துள்ளன.

திருவரங்கத்தில், காவிரித்தாய், கொள்ளிடமாகப் பிரிந்து,  நீராலான மாலையைப் போல் ஸ்ரீரங்கநாதரைச் சுற்றிக் கொண்டு ஓடி,பின் மீண்டும் இணைகிறாள்.

காவிரியன்னை, ஸ்ரீரங்கநாதரின் சகோதரியாகவே போற்றப்படுகிறாள். ஸ்ரீரங்கநாதர், தன் செல்லத் தங்கைக்கு, சீர் செய்ய, ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருளுகிறார்.  சீர்வரிசைகளாக, புதுப் பட்டுப்புடவை, மாலைகள், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை, முறத்தின் மீது வைத்து, அதைக் கோவில் யானை மீது ஏற்றி, கோவிலிலிருந்து எடுத்து வருகிறார்கள். பெருமாளுக்கு ஆராதனைகள் முடிந்ததும், அதை அவர் திருப்பாதங்களில் சமர்ப்பித்து, பின் கோவில் யானை மூலமாகவே, படித்துறையில் காவிரியன்னைக்கு வழங்கும் விழா நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கன்று இந்த நிகழ்வைக் காண்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிகப் புனிதமான, புண்ணியங்கள் சேர்க்கும் நிகழ்வாகும் இது.

(இது ஒரு சுருக்கப்பட்ட மீள் பதிவு.. முழு பதிவும் காண..http://aalosanai.blogspot.com/2012/08/blog-post.html)


(படம் உதவி: கூகுள் படங்கள்)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-02 9:03 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

shylaja

unread,
Aug 2, 2014, 11:37:42 AM8/2/14
to பார்வதி இராமச்சந்திரன்., தமிழ் சிறகுகள், மின்தமிழ், வல்லமை
பதினெட்டாம் பெருக்கு  பற்றிய மிகச்சிறப்பான பதிவு தந்த பார்வதிக்கு பாராட்டுக்கள் ..இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்  ஆழ்வார் பாசுரம் எல்லாம் அழகான மாலைகளாய் பதிவை அலங்கரிக்கின்றன ...

--
வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க விட்டுசித்தன் தூய திருமகளாய் வந்த ரங்கனார்க்குத் துழாய் மாலை முடிசூடித் தொடுத்த மாதே... நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும் நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும் அன்புடனே யடியேனுக்கருள் செய் நீயே...!

Megala Ramamourty

unread,
Aug 2, 2014, 9:15:09 PM8/2/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஆடிப் பெருக்கையொட்டி காவிரி பற்றிய அருமையான பல ஆன்மீகத் தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள் பார்வதி. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

அன்புடன்,
மேகலா


--

Megala Ramamourty

unread,
Aug 2, 2014, 9:24:23 PM8/2/14
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஆடிப்பெருக்கும் ஆட்டனத்தியும்!


ஆடித் திங்கள் பதினெட்டாம் நாளை 'ஆடிப் பெருக்கு' என்று நாம் கொண்டாடி வருகின்றோம். இந்நாளில் சித்திரான்னங்கள் பலவற்றைத் தயாரித்து காவிரியாற்றங்கரையில் அமர்ந்து உண்டு மகிழ்வது வழக்கம். அத்தோடு, பல மங்கலப் பொருட்களை ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரிக்குப்’ படைத்தின்புறுவது உள்ளிட்ட பல்வேறு நற்செயல்களும் நடைபெறும். அவ்வினிய வேளையில் காவிரியின் புதுவெள்ளத்தோடு மக்களின் மகிழ்ச்சி வெள்ளமும் சேர்ந்தே பாயும் என்பதில் ஐயமில்லை!


ஆயினும், ஆடிப்பெருக்கை ஒரு பெருவிழாவாகக் கொண்டாடும் வழக்கம் நம் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை இவ்விழாவும் பின்னாளில் ஆன்மீக அருளாளர்கள், பௌராணிகர்கள் போன்றோரால் ஏற்படுத்தப்பட்டுப் பிரபலம் அடைந்திருக்கக் கூடும். ’கங்கையின் மேலாய காவிரி’ என்று போற்றி, பூவிரியும் சோலைகள் நிறைந்த இக்காவிரியை ஓர் புனித ஆறாக – வழிபடு தெய்வமாக மாற்றிவிட்டனர் நம் சமயச் சான்றோர் என எண்ணுதற்கு இடமுண்டு. எனவே ஆடிப் பெருக்கை மகத்துவம் நிறைந்த ஓர் நன்னாளாகக் காட்டுதற்கு இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைத்தில.


எனினும், ஆடியின் புதுப்புனலில் நிகழ்ந்த ஓர் அற்புத (இலக்கிய) நிகழ்வை இத்தருணத்தில் நம் தோழியரோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.


கி.பி முதல் நூற்றாண்டின் பிற்பகுதி…


அளவற்ற பொன்னும் மணியும் துஞ்சும் எழில்கொஞ்சு காவிரிப்பூம்பட்டினப் பெருநகர். அதனை ஆண்டு வருகின்றான் பீடும், பெருமையும் மிக்க சோழ மன்னனான கரிகாற் பெருவளத்தான்!


புதுப்புனல் பாய்ந்துவரும் ஆடி மாதத்தின் ஒரு நன்னாளில் ’கழாஅர்’ எனும் காவிரியாற்றின் துறையில் கரிகாலன் நீர்விழாக் கொண்டாடிக்கொண்டிருந்த சமயமது…


ஆட்டத்தில் வல்லவனான சேர மன்னன் ’ஆட்டன் அத்தி’ அவ்விழாவில் நீர் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அப்போது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத வண்ணமாய் அடித்துச் செல்லப்பட்டுவிட்டான் அவன். என்னே விபரீதம்!


விழாவைக் காணவந்திருந்த அனைவரும் இந்த அசம்பாவிதம் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றனர். இவ்விபத்தினால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த கரிகாலன் மகளும், ஆட்டன் அத்தியின் மனைவியுமான ஆதிமந்தி, “என் கணவரைக் காப்பாற்றுவார் இல்லையா? காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அவரைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று கூக்குரலிட்டுக்கொண்டே கண்ணீரருவி பாய்ந்தோடக் காவிரியின் கரையோரமாய் வெகுதூரம் ஓடினாள்; காவிரி கடலில் கலக்கும் இடத்தருகே வந்து நின்றாள் மூச்சிரைக்க!


என்ன வியப்பு! திடீரென்று ஒரு இளம் பெண் தோன்றினாள் கடலின் நடுவே. சுயநினைவற்ற நிலையில் இருந்த அத்தியைத் தன் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு கடற்கரையோரமாய் வந்தாள் அந்த அணங்கு. அதனைக் கண்ட ஆதிமந்தியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. விரைந்தோடிச் சென்று தன் கணவனைப் பற்றினாள். நல்ல வேளை! அவன் உயிரோடுதான் இருந்தான். ஆதிமந்தி அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏது? மறுவாழ்வு கிடைத்த மகிழ்ச்சியில் தன் கணவனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினாள் ஆதிமந்தி.


அது சரி….கடல் நடுவே திடீரென்று தோன்றி ஆட்டன் அத்தியைக் காத்த அந்தக் கன்னி யார்? ஒருவேளை…தன் கடற்காதலனோடு கலந்திருந்த காவிரியன்னைதான் அந்த அதிசயப் பெண்ணோ?


’இல்லை’ என்கிறது தமிழிலக்கியம். அவள் பெயர் ‘மருதி.’ அவளை அத்தியின் காதலி என்று சொல்வாரும் உண்டு. எது எப்படியோ…அத்தியைக் காத்த அந்த மாதரசி மருதி பாராட்டப்பட வேண்டியவளே அல்லவா!


இந்த இனிய வரலாற்று நிகழ்வால் ஈர்க்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்றைச் ’சேர தாண்டவம்’ எனும் பெயரில் நாடகமாகவும், கவியரசு கண்ணதாசன் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் பெயரில் சுவையான குறுங்காவியமாகவும் இவ்வரலாற்றைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சோழன் கரிகாலனின் அருமை மகளாகிய இந்த ஆதிமந்தியே தமிழிலக்கியத்தில் பெண்பாற் புலவர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஆதிமந்தியார் ஆவார்.


ஆதிமந்தியார் எழுதிய குறுந்தொகைப் பாடலொன்று நம் பார்வைக்கு…


மள்ளர் குழீஇய விழவி னானும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டுங் காணேன் மாண்டக் கோனை

யானுமோ ராடுகள மகளே யென்கைக் 

கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த

பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே. (குறுந்: 31)

 

(இதன் பொருள்: வீரர்கள்  கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும் பெருமைமிக்க என் தலைவனை நான் கண்டேனில்லை. யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே; என் கையிலுள்ள சங்கு வளையல்களை நெகிழச் செய்த தலைவனும் ஓர் ஆடுகள மகனே.)


தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தைத்தான் இப்பாடலாய் வடித்துள்ளாரோ ஆதிமந்தியார்?

 

அன்புடன்,
மேகலா


தேமொழி

unread,
Aug 2, 2014, 11:12:45 PM8/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
இதை நீங்கள் எழுதுவீர்கள் எனக் கணித்து ஆவலுடன் இருந்தேன் மேகலா.  நினைத்தது நடந்தது. நல்ல பதிவு நன்றி. 

ஆதிமாந்தியார் போல அனைவரும் தங்கள் வாழ்க்கைத் துணை மீது ஒரு வெண்பா புனையலாம் என்ற யோசனை.  

..... தேமொழி

shylaja

unread,
Aug 3, 2014, 3:59:34 AM8/3/14
to vallamai
ஆஹா மேகலாவின்  இலக்கியவரிகள்  இனிமை இனிமை .. 
ஆதிமந்தியார்  பாடல்  அருமை ..அளித்த மேகலாவின்  தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது. 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Aug 3, 2014, 5:03:27 AM8/3/14
to பார்வதி இராமச்சந்திரன்., தமிழ் சிறகுகள், மின்தமிழ், வல்லமை

நீரின்றி அமையாது உலகு!

பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.நம்பாரத நாட்டில் நதிகளை நாம் புனிதமாகவே கருதுகிறோம்.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான்ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.


பதினெட்டு என்கிற எண்ணுக்குத்தான் எத்தனை சிறப்பு!
,
18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
18 பாகங்கள் பகவத்கீதைக்கு
18 சித்தர்கள்
18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு
இன்னும் பல இருக்கலாம் இவ்வகையில் ஆடிக்குப்பதினெட்டாம் நாள் சிறப்பு! 

இன்று ஆடிப்பதினெட்டு!
 மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டபின் காவிரி நதி கூடுதலாக பெருகி,
அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை!




பதினெட்டாம் பெருக்கன்று திருச்சி தஞ்சைப்பகுதி மக்கள் கோலாகலமாய் காணப்படுவார்கள்
அம்மாமண்டபம் கல்லணைமுக்கொம்பு என திருச்சியைச்சுற்றிய பகுதிகள் திருவிழா போல மாறிவிடும்.

படித்துறையில் மக்கள் வெள்ளம் காவிரிவெள்ளத்தை ஆர்வமுடன் கண்டு களிக்கும். மிட்டாய் பலூன் கடைகள் முளைக்கும.
. மேட்டிலும் படுகையிலும் பாய்ந்து மண்ணைப்பொன்னாகி மகிழ்ச்சி விளைவிக்கும் காவிரியை வாழி என வாழ்த்துகிறார்கள்!மஞ்சள் குங்குமம பூமாலை தந்து கருகமணிபோட்டு அனுப்புவார்கள். அந்திசூரியனின் நிறம்பட்டு மேனிக்கு இளம்சிவப்புவண்ணச்சேலையை சுற்றிவிட்டதுபோல ஆடிச்செல்வாள்.

காவிரியில் நீர் வற்றி மணலில் ஊறும் எறும்புகள் தெரியும் காலம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது அப்போதெல்லாம் நம் கண்களில்தான் காவிரி.
உற்சாகமாய் தன்போக்கில் வரும் நதிகள் எல்லாமேகடைசியில் கடலில்தான் கலக்கின்றன. 

காவிரியும் நுரைமலர் குலுங்க காதலைத்தேடி கடல் நோக்கிச்சென்று கொண்டிருக்கிறாள்!  காவிரிப்பெண்ணே நீ வாழி!


2014-08-01 20:44 GMT-07:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
நாளை ஆடிப் பெருக்கு!...

“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து
கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!” (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்).


காவிரியின்

தேமொழி

unread,
Aug 3, 2014, 5:16:20 AM8/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பாடல்:   http://youtu.be/gZJswMES8Io








On Sunday, August 3, 2014 2:03:30 AM UTC-7, shylaja wrote:

நீரின்றி அமையாது உலகு!

பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.நம்பாரத நாட்டில் நதிகளை நாம் புனிதமாகவே கருதுகிறோம்.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான்ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.


பதினெட்டு என்கிற எண்ணுக்குத்தான் எத்தனை சிறப்பு!
,
18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
18 பாகங்கள் பகவத்கீதைக்கு
18 சித்தர்கள்
18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு
இன்னும் பல இருக்கலாம் இவ்வகையில் ஆடிக்குப்பதினெட்டாம் நாள் சிறப்பு! 

இன்று ஆடிப்பதினெட்டு!
 மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டபின் காவிரி நதி கூடுதலாக பெருகி,
அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை!




பதினெட்டாம் பெருக்கன்று திருச்சி தஞ்சைப்பகுதி மக்கள் கோலாகலமாய் காணப்படுவார்கள்
அம்மாமண்டபம் கல்லணைமுக்கொம்பு என திருச்சியைச்சுற்றிய பகுதிகள் திருவிழா போல மாறிவிடும்.

படித்துறையில் மக்கள் வெள்ளம் காவிரிவெள்ளத்தை ஆர்வமுடன் கண்டு களிக்கும். மிட்டாய் பலூன் கடைகள் முளைக்கும.
. மேட்டிலும் படுகையிலும் பாய்ந்து மண்ணைப்பொன்னாகி மகிழ்ச்சி விளைவிக்கும் காவிரியை வாழி என வாழ்த்துகிறார்கள்!மஞ்சள் குங்குமம பூமாலை தந்து கருகமணிபோட்டு அனுப்புவார்கள். அந்திசூரியனின் நிறம்பட்டு மேனிக்கு இளம்சிவப்புவண்ணச்சேலையை சுற்றிவிட்டதுபோல ஆடிச்செல்வாள்.

காவிரியில் நீர் வற்றி மணலில் ஊறும் எறும்புகள் தெரியும் காலம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது அப்போதெல்லாம் நம் கண்களில்தான் காவிரி.
<span style="font:13p
...

Megala Ramamourty

unread,
Aug 3, 2014, 8:58:27 PM8/3/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தேமொழி. நான் இதை எழுதுவேன் என்று நீங்கள் ஊகித்தது உங்கள் கணிப்புத் திறனைப் புலப்படுத்துகிறது; அதற்கு என் பாராட்டுக்கள்!

//ஆதிமாந்தியார் போல அனைவரும் தங்கள் வாழ்க்கைத் துணை மீது ஒரு வெண்பா புனையலாம் என்ற யோசனை. //
நல்ல யோசனைதான் தேமொழி. நாமும் முயன்று பார்க்கலாம். வெண்பாவில் அப்படி ஏதேனும் பிழை வந்துவிட்டாலும் திருத்துவதற்குத்தான் தம்பி பிரசாத் இருக்கிறாரே. :-))

அன்புடன்,
மேகலா

coral shree

unread,
Aug 3, 2014, 9:18:13 PM8/3/14
to vallamai, மின்தமிழ்
ஆடிப் பெருக்கிற்கு அற்புதமாக பதிவிட்டிருக்கும் தோழிகள் மேகலா, பார்வதி, ஷைலஜா, கீதாஜி அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி.

அன்புடன்
பவளா


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

Megala Ramamourty

unread,
Aug 3, 2014, 9:21:38 PM8/3/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
//பதினெட்டு என்கிற எண்ணுக்குத்தான் எத்தனை சிறப்பு!

18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
18 பாகங்கள் பகவத்கீதைக்கு
18 சித்தர்கள்
18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு
இன்னும் பல இருக்கலாம்//
ஆமாம் ஷைலஜா! நீங்கள் கூறுவதுபோல் 18 எனும் எண் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே திகழ்கின்றது.

முதலில் பதினெட்டோடு தொடர்புடைய போர்கள்:
 தேவாசுர யுத்தம் 18 ஆண்டுகள்
 இராம இராவண யுத்தம் 18 மாதங்கள்
 மகாபாரத யுத்தம் 18 நாட்கள் (ஷைலு ஏற்கனவே குறிப்பிட்டதுபோல்)
செங்குட்டுவனுக்கும் வடநாட்டு அரசர்களான கனக விசயருக்கும் நடந்த யுத்தம் 18 நாழிகை (அதாவது ஒரு பகல் எல்லைக்குள்!)

இவையல்லாமல்,
பதினெண்(18) கீழ்க்கணக்கு நூல்கள் (நாலடியார், நான்மணிக்கடிகை முதலியன)
பதினெண் (18) மேற்கணக்கு நூல்கள் (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை)
பதினெட்டு கணங்கள் ( தேவர், அசுரர், தானவர், கருடர், கின்னரர், கிம்புருடர், யட்சர், வித்யாதரர், அரக்கர், கந்தருவர், சித்தர், சாரணர், பூதர், பைசாசர், தாரகையர், நாகர், ஆகாசவாசிகள், போக பூமியர்).

இன்னும் பலவும் கூட இருக்கலாம்.

PRASATH

unread,
Aug 4, 2014, 1:14:38 AM8/4/14
to vallamai, மின்தமிழ்
என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி அக்கா...
 
நேரம் கிடைக்கப் பெற்றால் கண்டிப்பாக நான் முதலில் வலம் வருவது வெண்பா இழைகளாகத் தான் இருக்கும்... :)))


2014-08-04 6:28 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 6, 2014, 2:18:54 AM8/6/14
to வல்லமை, மின்தமிழ்
அற்புதமான தகவல்கள். அக்காவுக்கும் மேகலாவுக்கும் மிக்க நன்றி!.

ஆமா, சுத்துப்பட்டு பதினெட்டு பட்டி கிராமங்கள‌  வுட்டுட்டீயளே!:)))!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-04 6:51 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
​ 
​ 
​                    

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 6, 2014, 2:22:05 AM8/6/14
to வல்லமை, மின்தமிழ்
வழக்கம் போல், மேகலாவின் அற்புதமான தமிழில் அருமையான தகவல்களோடு கூடிய பகிர்வு!.. மேகலாவின் வார்த்தைப் பிரயோகங்களிலிருந்து எப்போதும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இப்போதும் அப்படியே!.. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-03 6:54 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 6, 2014, 2:26:24 AM8/6/14
to shylaja, வல்லமை, மின்தமிழ்
ரொம்ப நன்றி அக்கா!.. ஊக்கம் தருகின்றன தங்கள் வார்த்தைகள்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-02 21:07 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​      
​                   
​                                      

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 6, 2014, 2:28:33 AM8/6/14
to வல்லமை, மின்தமிழ்
மிக்க நன்றி மேகலா!.. தங்கள் பாராட்டுக்கள் உற்சாகம் கொள்ள வைக்கின்றன!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-03 6:45 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
​ 
​ 
​                
​          
​                                                        

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 6, 2014, 2:31:25 AM8/6/14
to வல்லமை, மின்தமிழ்
மிக்க நன்றி பவளா அக்கா!... 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 6, 2014, 2:51:54 AM8/6/14
to வல்லமை, மின்தமிழ்
வரலக்ஷ்மி விரதம்: (8/8/2014)!!...

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம். இங்கே கர்நாடகாவில் அனைத்துத் தரப்பு மக்களும் விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை இது!. தமிழகத்தில், குடும்பத்தில் வழக்கமிருந்தால் மட்டுமே இந்தப் பூஜையைச் செய்கின்றனர். லக்ஷ்மி பூஜை செய்வது எப்போதும் உற்சாகத்தைத் தரக் கூடியது.. வழக்கம் போல், நான் கூட்ஸ் வண்டிப் பதிவாகவே போடுவதால், விரத பூஜைக்கு தயார் செய்து கொள்ள வேண்டிய சாமான்கள், பூஜை செய்யும் வழிமுறைகளுக்கு சுட்டி தந்திருக்கிறேன்.



வரலக்ஷ்மி விரதம் குறித்த புராணக் கதை:

ஒவ்வொரு புராணத்திலும் இது வெவ்வேறு விதமாக உள்ளது. இருப்பினும் பொதுவாக, கீழ்க்கண்ட புராணக் கதையே வழங்கப்படுகின்றது.

சியாமபாலாவின் சரிதம்:

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் பெரும் விஷ்ணு பக்தன். சுரசந்த்ரிகா என்னும் பட்டத்தரசியுடன், தன் நாட்டை நலமுற ஆண்டு வந்தான். அவனது செல்வத் திருமகளாக உதித்தவளே சியாமபாலா. சியாமாவை, மாலாதரன் என்னும் சக்கரவர்த்திக்கு மணம் செய்து தந்தார்கள்.

'விதி சதி செய்தது' என்னும் வார்த்தை பட்டத்தரசிக்குப் பலிக்கும் காலம் வந்தது. தேவதைகள், எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் தோன்றுவார்கள். ஆகவே யாராக இருந்தாலும் சரியான மரியாதை கொடுக்க வேண்டும். ஏளனமாக எவரையும் எண்ணக் கூடாது என்பது பெரியோர்கள் வாக்கு.

தான் பெற்ற திருமகளை மணமகளாக்கி புகுந்த வீடு அனுப்பிய பின்,பட்டத்தரசி ஒரு நாள்,  ஓய்வாக அமர்ந்திருந்தாள்.அப்போது ஸ்ரீலக்ஷ்மி தேவி, அவளைச் சோதிக்க எண்ணம் கொண்டாள். ஒரு முதிய சுமங்கலி வடிவில் தோன்றி, சுரசந்த்ரிகாவிடம், வரலக்ஷ்மி விரதம் பற்றிய குறிப்புகளை விரிவாக எடுத்துரைத்தாள். ஆனால், சுரசந்த்ரிகாவோ, அம்மையை, 'யாரோ யாசகம் கேட்க வந்தவள்' என்று நினைத்து கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி, அவளை வெளியே விரட்டிவிட்டாள். வெகுண்டு, கோபம் மிகக் கொண்டு வெளியேறிய லக்ஷ்மி தேவியை, அச்சமயம், தாயைக் காண பிறந்தகம் வந்து கொண்டிருந்த சியாமா, வாயிலருகில் சந்தித்தாள். கிழவியின் முகம் கண்டு துணுக்குற்றாள். மிகப் பணிவுடன்,முதியவளைச் சமாதானப்படுத்தி, அவளிடம் இருந்து விரத முறைகளைக் கேட்டறிந்தாள். தன் தாய் செய்த செயலுக்காக மன்னிப்பும் கோரினாள்.

அதன் பின், ஒவ்வொரு வருடமும், வரலக்ஷ்மி விரதம் இருந்து, முறை தவறாமல் சிரத்தையுடன் பூஜித்து வந்தாள் சியாமபாலா.அதன் பலனாக எல்லா செல்வ வளங்களும் அவள் இல்லம் தேடி வந்தன.

இப்படியிருக்க, பத்ரச்ரவஸ்ஸின் அரண்மனையில் காட்சிகள் மாறின. அவனது எதிரிகள், அவன் மீது படையெடுத்து, நாட்டைக் கைப்பற்றினர். மன்னனும், பட்டத்தரசியும் தப்பியோடி கானகத்தில் தஞ்சம் புகுந்தனர். உண்ண உணவும் இல்லாது வருந்தினர்.

சியாமா, பெற்றோர்களின் நிலை அறிந்து துயரம் மிகக் கொண்டாள். தகுந்தவர்கள் மூலம் விசாரித்து, பெற்றோர்கள் வசிக்கும் இடம் அறிந்தாள். தன் இருப்பிடம் அழைத்து வைத்துக் கொண்டு பராமரித்து வந்தாள். ஆனால், எத்தனை நாள் மருமகன் இல்லத்தில் மாமனார் வாசம் செய்ய இயலும்?. எனவே, ஒரு குடம் நிறைய தங்கக் காசுகள் எடுத்து பெற்றோரிடம் கொடுத்து, 'இதை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள்' என்றாள் சியாமா. ஆனால், திருமகள் வாசம் செய்யும் செம்பொன், தீவினையாளாரிடம் சேர்ந்ததும் கரித்துண்டுகளாக மாறியது.  இதைப் பார்த்து அதிர்ந்த சுரசந்திரிகாவுக்கு, வரலக்ஷ்மி விரதம் குறித்து உபதேசித்த மூதாட்டியின் நினைவு வந்தது.

'அவள் சாதாரண மானிடப் பெண் அல்ல' என்பதை உணர்ந்தாள். தன் மகளிடம் வரலக்ஷ்மி விரதத்தை உபதேசிக்கும்படி கேட்டுக் கொண்டு, முறைப்படி விரதம் செய்து வந்தாள்.

கருணைக் கடலான வரலக்ஷ்மியின் அருட்பிரவாகத்தின் பலனாக, பத்ரச்ரவஸ்ஸிற்கு தைரிய லக்ஷ்மியின் அனுக்கிரகம் நிரம்பியது. தீரத்துடன் படை திரட்டி, போர் புரிந்து, இழந்த நாட்டை வென்றான். தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றனர் பத்ரச்ரவஸ்ஸூம் சுரசந்த்ரிகாவும்.


இனி, கொஞ்சம் பொதுவான குறிப்புகள்.

விரத பூஜையில் கவனத்தில் கொள்ள வேண்டியவை.(முக்கியமாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு.

1.திட்டமிடல் எந்த வேலையையும் எளிதாக்கும். ஒரு மணி நேரம் ஒதுக்கி, ஆர அமர யோசித்து, செய்ய வேண்டிய வேலைகளையும் அழைக்க வேண்டிய நபர்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள்.பூஜைக்குத் தேவையானவற்றை முதலிலேயே திட்டமிட்டு வாங்கி வைத்துக் கொள்ளவும் (விவரம் மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளில் இருக்கின்றது)

2. இம்முறை வியாழன் விடுமுறை தினம் என்பதால் அன்றே அனைத்தையும் சேர்த்து வைத்து கொள்ள வேண்டாம். என்ன சமையல், என்ன நிவேதனம் என்பதையும்,  தாம்பூலத்தில் என்ன தரவேண்டும் என்பதையும் ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும் போது வாங்க வேண்டியதை வாங்கினால், கடைசி நேர டென்ஷன் மிச்சம். முக்கியமாக, எழுதின விபரங்களை கண்களில் படும்படி ஒட்டி வைத்துக் கொள்ளவும்.  முடிந்தால் தெரிந்தவர்களுக்குப் போன் போட்டு, எழுதியவற்றைச் சொன்னால், நமக்கு மறந்து போனதை அவர்கள் நினைவுபடுத்துவார்கள்(இது என் சொந்த அனுபவம்).

3. பூஜைகளை சிடி அல்லது பூஜா விதானத்தின் துணை கொண்டு செய்வதாக இருந்தால், முதல் நாளே  பூஜா விதானத்தை எடுத்து வைக்கவும். சிடி ஓடுகிறதா என்று செக் செய்யவும்.

4.  மின்சார வசதிகள் குறைவாக இருக்கும் இடத்தில், எந்த நேரத்தில் மின்சாரம் இருக்கும் என்பதை பலமுறை நினைவுபடுத்திக் கொள்ளவும். அதற்கேற்றாற் போல், அரைப்பது முதலியவற்றை திட்டமிடவும். பூஜை நேரத்தில் மின்சாரம் இருக்காதெனில், பூஜா விதானம் புக்கை நம்புவது கைகொடுக்கும்.

5. அம்மனுக்குச் சாற்ற வேண்டிய ரவிக்கைத் துண்டு, நோன்புச் சரடுகள், கொழுக்கட்டை மாவு தயாரித்த பின் அதை மூடி வைக்கத் தேவையான துணி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி, எடுத்து வைக்கவும். இது போன்ற விஷயங்களே டென்ஷனில் மறந்து போகும்.

6. எல்லா வேலைகளையும் நாமே செய்ய வேண்டும் என்று நினைக்காமல், இயன்ற‌ வேலைகளைப் பிரித்துக் கொடுங்கள். உதாரணமாக, தாம்பூலப் பொருட்களை கவரில் போடுவது முதலியவற்றை வீட்டில் உள்ள குழந்தைகளைச் செய்யச் சொல்லலாம். மறக்காமல், மறு நாள் தாம்பூலம் வாங்க வருபவர்களிடம்,  'தாம்பூலக் கவர் போட்டது'எங்க ரம்யா(அ) ரமேஷ் தான்' என்று சொல்வது குழந்தைகளை உற்சாகப்படுத்தும். அடுத்த முறை வேலை செய்ய  அழைக்காமலே ஓடி வருவார்கள்.

முக்கியமாக, பண்டிகை தினத்தில் பண்டிகை தின மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இன்றைய இறுக்கமான சூழலில், மனதை இலகுவாக்க இது போன்ற பண்டிகைகள் கட்டாயம் உதவும். ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடு அம்பிகையை அலங்காரம் செய்து பாருங்கள்!!. அலங்காரம் அழகாக அமையும். மனம் மகிழ்ச்சியில் மிதக்கும். எனவே, வேண்டாத டென்ஷன்களை இரண்டு நாட்கள் ஒதுக்கி வையுங்கள். பூஜை முடிந்ததும் அவை போன இடம் தெரியாது!!.

இல்லம் சிறிதெனினும், அதை சுத்தப்படுத்தி, எளிமையாக, இருப்பவற்றக் கொண்டு அலங்கரித்து, முத்துப் போல் கோலமிட்டு விளக்கேற்றி வைத்து, உள்ளன்போடு அர்ச்சித்தால் ஜகன்மாதா கட்டாயம் அங்கு கொலுவிருப்பாள். ஆகவே, எதைச் செய்தாலும் அதை உள்ளன்போடு, உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய்து அம்பிகையை ஆராதியுங்கள். அன்போடு வரம் பல தருவாள் வரலக்ஷ்மி!!. அம்பிகையை வரவேற்போம்!!.

இது சற்றே சுருக்கப்பட்ட மீள்பதிவு!.. முழுப்பதிவும் காண‌..http://aalosanai.blogspot.com/2013/08/varamahalakshmi-vratham1682013-1682013.html.



அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-06 12:01 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​       

shylaja

unread,
Aug 6, 2014, 3:14:27 AM8/6/14
to vallamai, மின்தமிழ்
வரலஷ்மிப்பதிவு களைகட்டுகிறது கூட்ஸ் வண்டிதலைப்புக்குத்தான் நான் வாருவேன் பதிவுக்கு அல்ல:) பண்டிகை என்பதே மகிழ்ச்சிதானே.. மகிழ்ச்சி என்பதே அழகின் வெளிப்பாடு. விவரங்கள் அடங்கிய லஷ்மிகரமான பதிவு கொடுத்த பார்வதிக்கு திருமகள் அருள் என்றும் நிலைக்கட்டும்.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
“Good friends, good books, and a sleepy conscience: this is the ideal life.”
Mark Twain

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 6, 2014, 3:22:51 AM8/6/14
to வல்லமை, மின்தமிழ்
ரொம்ப நன்றி அக்கா!.. தாங்கள் தரும் ஊக்கம் அபாரமானது.. தங்கள் ஆசிகளுக்கு மீண்டும் என் நன்றி!

 /////கூட்ஸ் வண்டிதலைப்புக்குத்தான் நான் வாருவேன் பதிவுக்கு அல்ல:)!..//////

:))!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



shylaja

unread,
Aug 6, 2014, 9:24:38 PM8/6/14
to vallamai, mintamil
பதினெட்டு பாட்டு இப்பதான் கேட்டேன் தேமொழி. இனிமை ஜானககிம்மாகுரலில். நாளைக்கு ஆடிவெள்ளிதேடி உன்னை   கொடுக்கவும் அப்படியே பாக்யாத லஷ்மி பாரம்மா  


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Aug 7, 2014, 4:51:55 AM8/7/14
to vallamai, மின்தமிழ்
பார்வதி  பாக்யதா பாட்டு போட்ருக்காங்க...இப்பதான் சரியா கவனிச்சேன்  அதனால பிசுசீலாவின் 
தாமரைப்பூவில் அமர்ந்தவளே  பாடலை  அளிக்கவும் நன்றி


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Aug 7, 2014, 7:14:55 PM8/7/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்:  





..... தேமொழி
It is loading more messages.
0 new messages