ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு அஞ்சலி

18 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Nov 22, 2025, 7:22:43 AM (11 days ago) Nov 22
to வல்லமை

ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு 

அஞ்சலி

_________________________________________


ஈரோடு தமிழன்பன் எனும்

தமிழ்ச்சூரியன் 

நம் இதய மலைகளில் 

உறங்கப்போனானோ?

உயிர்க்கப்போனானோ?

நாளை ஓர் கவிதை அந்த

சூரியனுக்கும் முன்னெழுந்து

மூண்டு தருவானோ?

தினம் தினம் இனி அந்த‌

சூரியனாய் கனல்வீசி

தமிழ்க்கனல் பொங்கிடவே

பொங்கல் விழா காண தன்

உளம் அங்கே சொல் பரப்பி

சுடர் பூத்து வருவானோ?

ஈரோடு இனி உன் திருப்பெயரே

ஆகி விடும் தமிழ் ஒளியில்!

அகர முதல என 

ஒலி பிறக்கும் ஏடெல்லாம் உன்

வீடாகும் நாடாகும் மறவோமே தமிழன்ப!

மறவோமே மறவோமே நாம்.

__சொற்கீரன்__


22.11.25



coral shree

unread,
Nov 23, 2025, 10:18:40 AM (9 days ago) Nov 23
to வல்லமை
ஆழ்ந்த இரங்கல்கள். 
Reply all
Reply to author
Forward
0 new messages