பனையூர் நோட்ஸ் 1:நெடுநல்வாடை

53 views
Skip to first unread message

Innamburan S.Soundararajan

unread,
Jun 14, 2014, 9:32:13 AM6/14/14
to mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, Innamburan S.Soundararajan, Nagarajan Vadivel


பனையூர் நோட்ஸ் 1




முன்னுரை


மும்பையிலிருந்து கொண்டு ‘பனையூர் நோட்ஸ் எழுதலாமா என்று கேட்காதீர்கள். ‘யாதும் ஊரே! யாவரும் கேளீர்...’ என்பது தானே தமிழ் பண்பு. இன்றிலிருந்து என் தாய்மொழியாகிய தமிழ் மொழியை கற்றுக்கொள்வதாக உத்தேசம். கற்றுக்கொள்வதை உடனுக்குடனே பகிர்ந்து கொள்வது சாலவும் தகும், என் வயதில்! விருப்பம் உள்ளவர்களும் சேர்ந்து கொள்ள வாய்ப்பு கிட்டும். நட்புரிமையுடன், திசை மாற்றாமல், எள்ளி குதிக்காமல் அளிக்கப்படும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும் கிடைக்கலாம். லாபம் ஒண்ணு. தனித்து விடப்பட்டால், சொந்த சாஹித்யமாச்சு. லாபம் இரண்டு. ‘பனையூர் நோட்ஸ்’ என்ற தலைப்பு ஒரு நெகிழ்வியல்பு கொடுக்கிறது. ‘திக்குத் தெரியாத காட்டில் புகுந்து விளையாடலாம். லாபம் மூன்று. ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பது போல மனம் இழுத்துச் செல்லும் மார்க்கத்தில்  நமது யாத்திரை பயணிக்கும். அதற்கு தடையேதும் இல்லை. லாபம் நான்கு. முதல் அடி எடுத்து வைச்சாச்சு.


பனையூர் நோட்ஸ்’ எழுதச்சொன்னவர் ஒரு பகுவேடதாரி, சில மாதங்களுக்கு முன்பு: ‘சவுடால்’/ஜில் ஜில்/ நாகராஜன். நன்றி அவருக்கு; தாமதத்திற்கு சால்ஜாப்பு நமது. ஹிலேரி பெல்லாக் என்ற ஆங்கிலேய கட்டுரையாளர் எதை பற்றியும் எழுதுவார். ஒரு தலைப்பு ‘On Nothing’. நமக்கு ஒரு முன்னோடியும் கிடைச்சாச்சு. சில வருடங்களுக்கு முன்னால், அந்த தலைப்பை வைத்துக்கொண்டு ஒரு ரோட்டரி மீட்டிங்கை சமாளித்தேன். எல்லாரும் வரவேற்றார்களாம். ‘அனுபவம் பேசுகிறது’ என்று சொல்லி மார் தட்டிக்கொள்ளலாம்.


இன்னம்பூரான்

14 06 2013


  1. நெடுநல்வாடை


சங்கத்தமிழினின் பத்துப்பாடல்களில் ஒன்றாகிய 188 அடிகள் கொண்ட நெடுநல்வாடை என்ற நூலை ‘ஒரு பெருஞ்சுரங்கம்’ என்று திரு.வி.க. பாராட்டுகிறார்கள். ‘வாடை’ துன்பத்தைக் குறிக்கும். ‘நல்ல’ என்பது அன்பை குறிக்கும்; ‘நெடு’ என்பது அழியாமையை குறிக்கும்; எனவே, இது அழியாது நீடும் நல்வாடை என்ற அந்த பெருந்தகை, ‘ ஒரு சிறு புல் நுனி மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் ஒரு பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன.’ என்கிறார். இதை விட வேறு என்ன பேறு வேண்டும், நமக்கு? எனக்கு நல்லதொரு தருணம் கிட்டியது. பாண்டித்தியம் மிகுந்த தமிழாசிரியர்களால் இந்த சங்கப்பாடல் பற்றிய பாடங்கள் எடுக்கப்படும். ஆய்வுகள் முன்னிறுத்தப்படும். நான் அங்கு ஒரு மாணவன். அதற்கெல்லாம் பீடிகை தான், இங்கே.


பாடியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
திணை – வாகை
துறை – கூதிர்ப்பாசறை
பாவகை – ஆசிரியப்பா

இன்று முதல் இரண்டு அடிகள் மட்டும்.

மழை பொழிதல்

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2)

தரணி தணிலே சூடு தணிந்து குளிர் பரவ, நீருண்ட மேகங்கள் உயர உயர ஏறின. புவனத்தை வளைத்தன. பொய்க்காமல் மழை பொழிந்தது. [மும்பையில் மான்ஸூன் மழைக்காக காத்திருக்கிறோம். ‘எங்கிருந்தோ வந்த’ மத்திய அரசின் பட்ஜெட்டே வருண பகவானின் கருணை பொறுத்துத் தான் அமையும். மாதுங்கா சங்கர மடத்திலே வருணஜபம் செய்தார்கள்.]

பழைய நினைவலை:

1966ம் வருடம் அந்தக்காலத்து கெரவெல் விமானத்தில் பம்பாய்-சென்னை பயணம். எட்டிப்பார்த்தால் பல மாடிகளுக்கு அடுக்கடுக்காய், கெட்டியாய், பஞ்சு மிட்டாய் போல இருந்தாலும், ஒரு நெகிழ்வியல்பு, ஆபரணமணியா, ஆலை குலைந்து நின்ற குதும்பாய் போல! நீருண்ட கார்மேகங்களுக்கு, நிமிடமொரு மேனியாக, வினாடியொரு அங்கமாக, மேகதூதம் விரைந்து விரைந்து நடந்து கொண்டிருந்தது. நெஞ்சம் மறக்கவில்லை.

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2) 
இப்போது புரிகிறது.

விட்டேனே, அத்துடன்? மஹாகவி பாரதியை நினைத்துக்கொண்டேன். 

புயற்காற்று

(நள வருஷம் கார்த்திகை 8-ம் தேதி (1916-17) புதன்கிழமை இரவு.)

ஒரு கணவனும் மனைவியும்:

மனைவி: காற்றடிக்குது, கடல் குமுறுது

கண்ணை விழிப்பாய் நாயகனே!

தூற்றல் கதவு சாளர மெல்லாம்

தொளைத் தடிக்குது பள்ளியிலே.


கணவன்: வானம் சினந்தது; வையம் நடுங்குது

வாழி பராசக்தி காத்திடவே!

தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு

தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.


மனைவி: நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே, இந்த

நேர மிருந்தால் என்படுவோம்?

காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்

காத்தது தெய்வ வலிமை யன்றோ!


மழை


திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட

தக்கத் ததிங்கிடதித்தோம் - அண்டம்

சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு

தக்கையடிக்குது காற்று - தக்கத்

தாம்தரிகிடத்தாம் தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல், கடல்

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;

கொட்டி யிடிக்குது மேகம்; - கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று;

சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று

தாளங் கொட்டிக் கனைக்குது வானம்;

எட்டுத் திசையும் இடிய - மழை

எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

அண்டம் குலுங்குது, தம்பி! - தலை

ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்

மிண்டிக் குதித்திடு கின்றான்; - திசை

வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்

செண்டு புடைத்திடு கின்றார்; - என்ன

தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!

கண்டோம் கண்டோம், கண்டோம் - இந்தக்

காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!


மஹாகவியின் இந்த பாடலுக்கு, இடம், பொருள், ஏவல் உளது. யாராவது ஆயிரம் பேர் கேட்டால், பார்க்கலாம்.


அன்புடன்,

இன்னம்பூரான்

14 06 2014


குறிப்புகள் எடுத்துக்கொள்ள, இவை உதவும்; மற்றும் பல உள.

  1. உ.வே.சா. பதிப்பு (மூன்றாவது பிரசுரம்: 1931): https://archive.org/stream/TamilNedunalvadai/book-Tamil-Nedunalvadai-Nachchi-Uvesa-1909#page/n0/mode/1up

2. சில்லென்று ஒரு காதல் (நெடுநல்வாடை: எளிய வடிவில்) - மின்னூல் - என். சொக்கன்


http://freetamilebooks.com/ebooks/nedunalvadai/


சித்திரத்துக்கு நன்றி: http://cache2.asset-cache.net/gc/AD3992-002-layer-of-dense-cumulonimbus-clouds-gettyimages.jpg?v=1&c=IWSAsset&k=2&d=Fo5uDjh7ejCZ0DTbbB0Qm6MPwYbIRBpMiG4xh9IVA0U%3D








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 14, 2014, 10:55:37 AM6/14/14
to mintamil, Innamburan S. Soundararajan, thamizhvaasal, Manram, tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Nagarajan Vadivel

வணக்கம். ஐயா .
மின்தமிழில் தமிழ் நல் வாடை வீசும் இந்த இழை நெடிதாகட்டும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jun 14, 2014, 7:43:38 PM6/14/14
to தமிழ் மன்றம், மின்தமிழ், Innamburan S.Soundararajan, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், vallamai, Nagarajan Vadivel, Kalairajan Krishnan
>தரணி தணிலே= தரணிதன்னிலே,தரணிதனிலே,தரணியிலே

”வலன் ஏர்பு” என்றால்??

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Anbu Jaya

unread,
Jun 14, 2014, 8:58:37 PM6/14/14
to vallamai
நல்ல தொடக்கம் ஐயா. தொடருங்கள்; பின் தொடர்வோம்.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" - 'கேளீர்' என தட்டச்சுப் பிழை நேர்ந்துள்ளது ஐயா.


அன்புடன்,
அன்பு ஜெயா



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jun 14, 2014, 9:02:51 PM6/14/14
to vall...@googlegroups.com
ஆம். தட்டச்சு பிழைக்கு மன்னிக்கவும்.

Anbu Jaya

unread,
Jun 14, 2014, 9:09:29 PM6/14/14
to vallamai
ஐயோ! பெரிய வார்த்தை வேண்டாம் ஐயா. 
குழுமத்தில் ஒருவருக்கொருவர் உதவுவதுதானே அதன் சிறப்பு. அவசரமாக தட்டச்சு செய்து அனுப்பும்போது இதையெல்லாம் கவனிப்பது கடினம்தானே. 


அன்புடன்,
அன்பு ஜெயா



Innamburan S.Soundararajan

unread,
Jun 14, 2014, 10:16:18 PM6/14/14
to Pandiyaraja, mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Nagarajan Vadivel, Kalairajan Krishnan
நன்றி இருவருக்கும். பெருமழைப்புலவரின் உரையை மனதில் வைத்து, ' மற்றும் பல உள.' என்று எழுதினேன். 0 லெவலில் துவக்கம். மெருகேற்றுங்கள்.
2014-06-15 7:41 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - திருமுருகாற்றுப்படை
நச்.உரை - உயிர்கள் மகிழும்பொருட்டு மேருவை வலமாக எழுந்து திரிதலைச் செய்யும்.

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ - நெடுநல்வாடை
பெருமழைப்புலவர் உரை: உலகம் குளிரும்படி, தான் கிடந்த மலையை வலஞ்சூழ எழுந்து வளைந்து
வலன் - வலப்பக்கம். மழையும் காற்றும் வலஞ்சூழுமாயின் அவை மிகும் என்ப.
ஏர்பு - எழுந்து. ஏர் என்னும் சொல்ல்டியாகப் பிறந்த எச்சம். ஏர்-எழுச்சி.
ப.பாண்டியராஜா

தத்து பித்து

unread,
Jun 14, 2014, 10:41:02 PM6/14/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, tamil...@googlegroups.com, thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, innam...@gmail.com, radius.co...@gmail.com
//‘பனையூர் நோட்ஸ்’ எழுதச்சொன்னவர் ஒரு பகுவேடதாரி, சில மாதங்களுக்கு முன்பு: ‘சவுடால்’/ஜில் ஜில்/ நாகராஜன்.//


நானோ தமிழில் ஒரு தத்துப்பித்து.  இங்கோ சில இலக்கியவாதிகள் தமிழைப் பிச்சு உதறுகிறார்கள்.  எனக்கு உயர்நிலைப் பள்ளியில் இருந்து தமிழில் கரையேற உதவியது கோனார் நோட்ஸ்தான்.  மாணவர்களும் தனியாகப் படிக்க நோட்ஸ் இருந்தாலும் ஒன்றுகூடி நல்ல மாணவனின் வல்லமையைப் பகிர்ந்துகொள்வது இயல்பு.  மேலை நாட்டில் இது ஒரு குற்றமாகக் கருதப்பட்டாலும் த்மிழகத்தில் இது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வரும் ஒரு மரபு

'இ'சார் விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியருக்கு ஒரு தலைக் குடைச்சல். படைப்பில் குற்றம் குறை காணும் அளவுக்கு மூலம் மற்றும் உரைகளை நன்கு கற்றவர்.  அவரின் ஆதித்தர் குணம் அவ்வப்போது தோன்றி மூலத்தில் குறை கண்டுபிடிக்கச் செய்தாலும் அவர் கற்ற கல்வி என்போன்ற தமிழ் தத்துப் பித்துகளுக்கு உதவும் என்ற நோக்கோடு அவருக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன்.  அது பனையூர் நோட்ஸ் என்று பனைமர உயரத்துக்கு வளரும் என்று நினைக்கவில்லை

அவர் நோட்ஸ் மின் நூலாக வடிவமைக்கப்பட்டு இணையத்தில் வெளிவர வேண்டும்.

தத்துப்பித்துக்கு நன்றி சொன்ன 'இ'சாருக்கு நன்றிகள் பல

தத்து பித்து

தேமொழி

unread,
Jun 14, 2014, 11:01:13 PM6/14/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com



///புயற்காற்று

(நள வருஷம் கார்த்திகை 8-ம் தேதி (1916-17) புதன்கிழமை இரவு.)///




அடுத்து வந்த நள ஆண்டு கார்த்திகை 8 ஆம் தேதி >>> October 30, 1976

அன்றும் பாரதியார் பாடலில் குறிப்பிட்டது போலவே இடி மழை புயல்காற்று ....தாம்தரிகிடத்தாம் தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிட...


....என்று ஒரு குமுதம் வாசகர் கவனித்து குமுதத்தில் எழுதியது நினைவு வருகிறது.  


(குமுதம் இல்லாவிட்டால் விகடனாக இருக்கலாம்...ஆனால் படித்திருக்கிறேன் நிச்சயமாக)


நெடுநல்வாடை >>> வெள்ளித்திரையில்  http://youtu.be/MA7YJi_cESc


..... தேமொழி

தேமொழி

unread,
Jun 14, 2014, 11:30:27 PM6/14/14
to vall...@googlegroups.com

///சில இலக்கியவாதிகள் தமிழைப் பிச்சு உதறுகிறார்கள்////


சில இலக்கியவாதிகள் ....

தமிழைப் பிச்சு உதறுகிறார்கள்???

அல்லது 

தமிழில்  பிச்சு உதறுகிறார்கள்???

விளக்கம் தேவை..


..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Jun 15, 2014, 8:35:13 AM6/15/14
to vallamai



14 ஜூன், 2014 9:08 பிற்பகல் அன்று, Anbu Jaya <anbuja...@gmail.com> எழுதியது:

ஐயோ! பெரிய வார்த்தை வேண்டாம் ஐயா. 
குழுமத்தில் ஒருவருக்கொருவர் உதவுவதுதானே அதன் சிறப்பு. அவசரமாக தட்டச்சு செய்து அனுப்பும்போது இதையெல்லாம் கவனிப்பது கடினம்தானே. 


கட்டுரைகளை இடும்போது அவசரம் கூடாது.
பின்னூட்டம் எனில் பிழை பொறுத்துக்கலாம்
 
--

Innamburan S.Soundararajan

unread,
Jun 15, 2014, 1:16:59 PM6/15/14
to vall...@googlegroups.com
ஊக்கமளிப்பவர்கள் எல்லாருக்கும் நன்றி. 'தத்து பித்து' சொன்னப்படி நடக்கட்டுமே. அவருடைய நோக்கம் பலிக்கட்டும். 
சில பாயிண்ட்களுக்கு அந்தந்த இழையில் விளக்கம். சிலவற்றிற்கு, உரிய இழையில் - உதாரணமாக, சிங்கா நெஞ்சனுக்கு பதில்.
இன்னம்பூரான்
--

Dr.V.Nagarajan

unread,
Jun 15, 2014, 1:59:37 PM6/15/14
to vall...@googlegroups.com
தத்து பித்துவிடம் விளக்கம் கேட்பது தப்பல்லவா.  தமிழ் இலக்கணம் தமிழ் இலக்கியம் அறியாத த.பிக்கு கிடுக்கிப்பிடி போட்டாலும் சரியான பதில் என்ற பெரிய பயன் கிட்டாது.

தத்து பித்து

தேமொழி

unread,
Jun 15, 2014, 11:15:41 PM6/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///'துன்பம் ' என்பதை நல்ல துன்பம் என ஆசிரியர் குறிப்பிடுவது ஏன்?///



கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்றிருக்கிறான்  இப்பாடலின் நாயகன் பாண்டியன்  நெடுஞ்செழியன்.  
காதல் கணவனை எதிர்பார்த்து தனிமைத் துயரில் தவிக்கும் அவன் மனைவிக்கு  வாடைக்காலம் நெடியவாடையாகத் தெரிந்ததாம்.  
தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். 
ரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்ற பெயராம்.  

விளக்கம் அளித்தவர் கீதா மதிவாணன் 



..... தேமொழி 









On Sunday, June 15, 2014 12:51:08 AM UTC-7, singanenjan wrote:
'NEDUNAL VADAI '- என தட்டச்சு செய்தால் , அது "நெடு நாள் வடை" என்று திரையில் தோன்றுகிறது..நேற்று முருகன் இட்லி கடையில் சாப்பிட்ட வடையின் விளைவோ..அறியேன்...

 ‘வாடை’ துன்பத்தைக் குறிக்கும். ##‘நல்ல’ என்பது அன்பை குறிக்கும்; ‘நெடு’ என்பது அழியாமையை குறிக்கும்; எனவே, இது அழியாது நீடும் நல்வாடை ##

'துன்பம் ' என்பதை நல்ல துன்பம் என ஆசிரியர் குறிப்பிடுவது ஏன்?





2014-06-15 10:34 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
வித்தியாசமாக அதே வேளை மிக சுவாரஸிமாகவும் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமும் இப்பதிவு  வந்துள்ளது. தொடர்க!

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 16, 2014, 12:13:12 AM6/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, June 15, 2014 8:15:39 PM UTC-7, தேமொழி wrote:
///'துன்பம் ' என்பதை நல்ல துன்பம் என ஆசிரியர் குறிப்பிடுவது ஏன்?///



கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்றிருக்கிறான்  இப்பாடலின் நாயகன் பாண்டியன்  நெடுஞ்செழியன்.  
காதல் கணவனை எதிர்பார்த்து தனிமைத் துயரில் தவிக்கும் அவன் மனைவிக்கு  வாடைக்காலம் நெடியவாடையாகத் தெரிந்ததாம்.  
தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். 
ரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்ற பெயராம்.  

விளக்கம் அளித்தவர் கீதா மதிவாணன் 




இந்த விளக்கம் அளித்தவர் நச்சினார்க்கினியர். 

நெருநல் என்றால் நேற்று என்று பொருள். கொழுநல் - செழுமை
கொழுநல் கொல்லேறே!  என்பர் சிவனை. பொருநல் - பொருனை.
”நெடுநல் யானை” என்று சில இடங்களில் சங்க இலக்கியத்தில் வருகிறது.
நெருநல் (நேற்று) என்பது போல் நெடுநல் (நீண்ட) என்ற பொருளில்
வரும் சொல்லை நெடு+நல் என்று பிரித்து விளக்கம் சொல்கிறார்களோ?
என்ற ஐயம்.  நெருநல், பொருநல், கொழுநல், ... போல நெடுநல்
என்பதிலுல் உள்ள -நல் விகுதியாகச் செயல்படுகிறதா? - எனப் பார்க்கவேண்டும்.

நா. கணேசன்

 
..... தேமொழி 








To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jun 16, 2014, 12:36:18 AM6/16/14
to mintamil, vall...@googlegroups.com
அருமையான பதிவுகளுக்கு நன்றி. அவற்றை உரிய காலத்தில் தொகுத்து இவ்வ்விழையில் வைக்கிறேன்.
இன்னம்பூரான்


2014-06-16 10:01 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
நல்ல சிந்தனையாகத் தோன்றுகிறது.
>>.. ”நெடுநல் யானை” என்று சில இடங்களில் சங்க இலக்கியத்தில் வருகிறது.<<

 (1) நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் - குறு 77/4. (முழு)
 (2) ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை - குறு 357/6. (முழு)
 (1) படி முழம் ஊன்றிய நெடு நல் யானை - அகம் 119/18. (முழு)
 (2) நெடு நல் யானை அடு போர் செழியன் - அகம் 149/13. (முழு)
 (3) அடு முரண் தொலைத்த நெடு நல் யானை - அகம் 307/7. (முழு)
 (4) நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட - அகம் 329/11. (முழு)
 (1) நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே - புறம் 57/11. (முழு)
 (2) நெடு நல் யானையும் தேரும் மாவும் - புறம் 72/4. (முழு)
 (3) நெடு நல் யானை எம் பரிசில் - புறம் 162/6. (முழு)
 (4) படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே - புறம் 343/17. (முழு)

இந்த இடங்களில் பிரித்தே பொருள்கொண்டிருக்கிறார்கள். நல் என்பது விகுதியா? கொடுக்கப்பட்டுள்ள ஏனைய மேற்கோள்களிலும் அவ்வாறேயா?
ஊன்றிக் கவனிப்போர் கருத்துக் கூறலாமே.
ப.பாண்டியராஜா

..... தேமொழி 








For more options, visit <a href="https://groups.google.com/d/optout" target="_blank" onmousedown="this.href='https://g
...
Reply all
Reply to author
Forward
0 new messages