Re: தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்த நாள்- 19-2-26

5 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 19, 2026, 1:54:23 PM (3 days ago) Feb 19
to santhav...@googlegroups.com
 தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கத் துணைநின்றவை சங்க இலக்கியங்கள்.
சங்க நூல்களை அழியாது காத்து, ஏட்டில் இருந்து அச்சாக்கிய பெருமான், உ. வே. சாமிநாதையர் பிறந்த நாள் இன்று. தமிழ்த் தாத்தா, திராவிட வித்யாபூஷணம், தாக்ஷிணாத்ய கலாநிதி, ... போன்ற பட்டங்களால் அவர் வாழ்ந்தபோதே புகழப் பெற்றவர். பண்டாரகர் உவேசா புகழ் வாழ்க!
https://x.com/naa_ganesan/status/2024493442554839484
On Thu, Feb 19, 2026 at 5:17 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:

 உ.வே.சா. பஞ்சகம்

(இன்னிசை வெண்பா)

 

 தமிழ்த்தாய் உளங்கொள் தலைமகன்; தேனார்

அமிழ்தமாய்ப் பன்னூல் அளித்த அறிஞர்;

உரைநூல் வழங்கிய உத்தமர்; ஓங்கி

வரையென நின்றார் வளர்ந்து. 1

 

ஓலைச் சுவடியை ஓயாமல் தேடிஅதி

காலைப் பொழுதில் கருத்துடன் நோக்கி

அசைசீர்கள் நாடி அரும்பொருள் நாடி

நசையுற ஈந்தார் நயந்து.  2

 

இரவு முழுவதும் இம்மியும் தூங்கா(து)

இரந்து தொகுத்த இணையில் சுவடியை

ஆய்ந்து தெளிந்தார்; அதைஓர் தவமெனத்

தோய்ந்து படிப்பாரே துய்த்து.  3

 

உ.வே.சா என்னும் உயர்ந்த மனிதரே

ஆவேசம் கொண்டே அலைந்து திரிந்தனர்

ஓலைச் சுவடிகள் ஓராயிரம் சேர்த்தவோர்

வேலையைச் செய்தார் விழைந்து.  4

 

அஞ்சுகமே கேளாய் அவர்புகழ் கூறுவாய்

அஞ்சுவ தேனோ அருநூலைக் காண்பவர்

நெஞ்சார வாசித்தல் நித்தம் அவருக்கோர்

அஞ்சலி யாகும் அறி.  5

 

-கருவூர் இனியன்.


N. Ganesan

unread,
Feb 19, 2026, 1:55:13 PM (3 days ago) Feb 19
to santhav...@googlegroups.com
அருமை.

On Thu, Feb 19, 2026 at 6:22 AM veNbA virumbi <mvms...@gmail.com> wrote:
அன்பர் அனைவருக்கும் நமஸ்காரம். ஐயரவர்களின் 176-ஆம் பிறந்த தினத்தையொட்டிய செய்யுள்கள் வருமாறு.  குறை பொறுக்கவும்.  நன்றி.

********************
(அறுசீர் விருத்தம்)

கரும்பினனி இனியதெனச் செவிக்குணவின் தரமறிந்தோர்
      கருதிப் போற்றும்
அருந்தமிழ்கற் றெவருமுன்பு பயிலாப்பன் னூறிரட்டி
      ஆய்ந்தச் சிட்டுப்
பெரும்புலவர்க் காசானாய் உழைப்புருவாய்த் திகழ்ந்துதனிப்
      பெருமை ஈட்ட
இரும்புவிக்கண் சாமிநா தையனெனுங் கூர்மதியன் 
      ழுந்த​ திந்நாள்.
********************
(அறுசீர் விருத்தம்)

நாடுடைய ​மாமன்னர்தம்விறலால் அடையவொணா
      நளியு மட்டின்
மாடுடைய மாந்தர்க்கச் செல்வத்தால் வாராத
      மதிப்புஞ் சாலப்
பீடுடைய தமிழ்வளர்த்துப் பெறச்சாமி நாதனெனும்
      பேர்கொண் மைந்தன்
தோடுடைய செவியனடி மறவாரில் ஒன்றிலின்று
      தோன்றி னானே.
********************
(கட்டளைக்கலித்துறை)

அட்டதிக் கெங்கும் உறுபுகழ் நாட்டிய ஆரியர்கோன்
கட்டளைக் கேற்ப மறுபெயர் பூண்டு கடுந்தவமாக் 
கட்ட​மெய்க் கூட்டுஞ் சுவடி துருவுங் கடன்மிகவும்
இட்டமுற் றேற்ற தமிழ்முனி தோற்றிய தித்தினமே.
********************
On Thursday, February 19, 2026 at 4:34:09 PM UTC+5:30 Parthasarathy S wrote:

நமஸ்காரம்! இன்று தமிழ்த்தாத்தா உவேசா அவர்களின் பிறந்தநாள். இந்நாளில் அவரது பாதங்களில் இந்த வெண்பாவை இட்டு வணங்குகிறேன்.




+91 98441 24542/9980794542

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d0c4855b-9f9e-400c-beb0-eedc679ef4c3n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages