ஆசிரியர் பவளசங்கரி பிறந்த நாள்

37 views
Skip to first unread message

AnnaKannan K

unread,
Sep 4, 2025, 11:13:57 AMSep 4
to Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், coral shree
இன்று பிறந்த நாள் காணும் வல்லமை நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள் நீடூழி வாழ்க!

Pavalasankari Annakannan.jpg

தமிழக அரசின் அம்மா இலக்கிய விருது பெற்றவர், 20க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், கிம் யாங் ஷிக் கவிதைகளைக் கொரிய நாட்டுக் கவிக்குயில் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர், லெஸ்லி டவுனர் எழுதிய கெய்ஷா நூலைத் தமிழில் பெயர்த்தவர், கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம், கொங்கு நாட்டு வரலாறு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தமிழ் கொரியத் தொடர்புகள் குறித்த ஆய்வறிஞர், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையை நிறுவி நடத்துபவர், வல்லமை மின்னிதழை வழிநடத்தும் ஆதார சக்தி, திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவிப்பவர், ஆற்றல் வாய்ந்த பேச்சாளர், ஆளுமை மிகுந்த நிர்வாகி, அயராத உழைப்பாளர் பவளசங்கரி அவர்கள், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க!

seshadri sridharan

unread,
Sep 4, 2025, 10:20:47 PMSep 4
to வல்லமை
ஆசிரியர் நீடு நலமுடன் வாழ்க

coral shree

unread,
Sep 5, 2025, 1:09:58 AMSep 5
to AnnaKannan K, Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ்
அன்புச் சகோதரர் திரு அண்ணா கண்ணன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

அன்புடன்
பவளா
--

                                                               
                 

தமிழால் இணைவோம்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்!

பவள சங்கரி

Erode.
Tamil Nadu.

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Sep 7, 2025, 1:08:16 PMSep 7
to வல்லமை
அன்பின் திருமிகு பவளசங்கரி அவர்களே
மின்மடல் குழுக்களில்
தமிழ் வாசனை செழித்தோங்கி
இருந்த காலத்தில்
நானும் என் எழுத்துக்களைக்கொண்டு
உழுது பயிரிட வந்தேன்.
அப்போது என் எழுத்துக்களுக்கு
நீங்கள் காட்டிய ஆர்வம் அளப்பரியது.
"ஓலைத்துடிப்புகள்" என்ற தொடரில்
என் சங்க நடைச்செய்யுள்
கவிதைகள் வலம் வந்தன.
அதற்கு நீங்கள் அளித்த‌
ஆக்கமும் ஊக்கமும்
என்னால் மறக்க இயலாது.
"அகநானூற்றின்" ஒரு பகுதி
"மணிமிடைப்பவளம்" ஆகும்.
ஆம்.
தமிழ்க்கடலின் அடி ஆழத்து
"பவளத்"திட்டுகளாய் இருந்து
என் போன்ற கவிஞர்களின்
கற்பனை ஊற்றை சுரக்கச்செய்தது
உங்கள் தமிழ் ஆர்வமே ஆகும்.
குறுந்தொகையில்
"கல்பொரு சிறுநுரை"
என்ற ஒரு உவமையை
சந்தித்திருப்பீர்கள்.
அதைப்போல ஒரு
ஆழமான அழகான சொல்
உலக இலக்கியத்தின்
எந்த மூலையிலும் இடம்பெற்றிருக்க‌
வழியே இல்லை.
அச்சொல்லில்
கடல் இருக்கிறது.
அலை இருக்கிறது.
ஒரு மெல்லிய நுரையும்
இருக்கிறது
ஒரு கூழாங்கல்லோடு
அதனுடைய போரும்
இருக்கிறது.
இவற்றிடையே பின்னிய‌
தமிழின் சொல் அடர்த்தி
அரிதிலும் அரிதான நயமிக்கது.
இந்த உவமையையே
அந்த கவிஞரின் பெயராக்கி
"கல் பொரு சிறுநுரையார்" என்றார்கள்.
உங்கள் தமிழ்ப்பணி
இந்த பெருங்கடலில்
திவலை போல் காட்டி
ஆழிப்பேரலையாய்
ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது
என்றே நான்
கருதுகிறேன்.
உங்கள் ஆசிரியம் இந்த‌
மின்மடல்களுக்கு
ஒரு கலங்கரை விளக்கம் தான்.
உங்களுக்கு
என் மனமார்ந்த‌
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இப்ப்டிக்கு
மீண்டும் வாழ்த்துக்களுடன்
ருத்ரா இ பரமசிவன்.


வெள்ளி, 5 செப்டம்பர், 2025அன்று 10:39:58 AM UTC+5:30 மணிக்கு cor...@gmail.com எழுதியது:

coral shree

unread,
Sep 8, 2025, 7:26:04 AMSep 8
to வல்லமை

அன்பின் திரு ருத்ரா பரமசிவன் ஐயா அவர்களுக்கு,

மிக்க  அன்பும், பணிவான நன்றியையும் உரித்தாக்குகிறேன். இன்றும் தங்கள் படைப்புகளை வாசித்து மகிழும் தங்கள் வாசகர்களில் நானும் ஒருத்தி என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அறிவியல் அடிப்படையில் அமைந்திருக்கும் தங்களுடைய பல கவிதைகளைக் கண்டு பேராச்சரியம் அடைந்திருக்கிறேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள் ஐயா. எங்களைப் போன்றோருக்கு அவை நல்ல பயிற்சியாகவும், பாடமாகவும் அமைகிறது. மீண்டும் நன்றியும், அன்பும். வாழ்க வளமுடன் ஐயா.

அன்புடன்
பவளா

coral shree

unread,
Sep 8, 2025, 7:26:54 AMSep 8
to வல்லமை
மிக்க நன்றியும், அன்பும்.

அன்புடன்
பவளா

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Sep 9, 2025, 10:56:44 AMSep 9
to வல்லமை
பதில் மடலுக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி
திருமிகு பவளசங்கரி அவர்களே.

அன்புடன்
ருத்ரா

திங்கள், 8 செப்டம்பர், 2025அன்று 4:56:54 PM UTC+5:30 மணிக்கு cor...@gmail.com எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages