ஓதம் ōtam , n. [M. ōtam.] 1. Moisture; dampness, as of a floor; ஈரம். (பிங்.) 2. Flood, inundation, deluge; வெள்ளம். வழிசிதைய வூர்கின்ற வோதமே (சிலப். 7, 35-ஆம் பாடல்). 3. Sea; கடல். ஓதமலி நஞ்சுண்ட வுடையானே (திருவாச. 38, 3). 4. Wave, billow; கடற்றிரை. கடலோதங் காலலைப்ப (திவ். இயற். 1, 16). 5. Affection of the testis, as hydrocele, hernia; அண்டவாதம். (அக. நி.)
ஓத (2)
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர - கலி 134/6
ஓத நீரின் பெயர்பு பொங்க - புறம் 22/23
ஓதத்து (2)
மலி ஓதத்து ஒலி கூடல் - பட் 98
ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று - பரி 23/14
ஓதம் (14)
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்/இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து - மது 540,541
உலவு திரை ஓதம் வெரூஉம் - நற் 31/11
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர - நற் 117/2
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில் - நற் 211/2
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் - குறு 9/5
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்/பெயர்தர பெயர்தந்து ஆங்கு - குறு 340/5,6
ஓதம் வாங்கும் துறைவன் - ஐங் 145/2
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார் - பரி 7/29
இரும் கழி ஓதம் போல் தடுமாறி - கலி 123/18
பெரும் கடல் ஓதம் போல - அகம் 123/13
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் - அகம் 220/12
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே - அகம் 300/17
கழியே ஓதம் மல்கின்று வழியே - அகம் 340/9
எறி திரை ஓதம் தரல் ஆனாதே - அகம் 350/2
ஓதமும் (2)
ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும் - நற் 319/1
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல் - நற் 335/3
ஓதமொடு (2)
ஓதமொடு பெயரும் துறைவற்கு - ஐங் 155/4
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த - அகம் 230/1
துறைமுகங்களில் உயர் ஓதம், தாழ் ஓதம் இருந்துகொண்டே உள்ளது. பூமி, திங்கள், சூரியன் இவற்றின் ஈர்ப்புவிசையில் மாற்றமே இந்த ஓதங்களுக்கு (Tide variation) காரணம். இதனை சங்கச் சான்றோர்கள் தமிழ்ச் செய்யுள்களில் விளக்கியுள்ளனர்.
பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - நற்றிணை - 117
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே,
மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் - அகம் 350
செல்லா நல் இசைப் பொலம் பூண் திரையன்
பல் பூங் கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் - அகம் 340
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! - சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: கானல் வரி ஊர்ந்த வழியே மீண்டும் ஊர்ந்தது கடல் ஓதம் என்கிறது சிலப்பதிகாரம்.
https://ta.wikipedia.org/wiki/ஓதம்கழி (அ) துறைமுக வர்ணனையில் வரும் ஓதம் பற்றிய இலக்கியச் செய்திகளை யாராவது தொகுக்கலாம்.
https://oceanservice.noaa.gov/education/tutorial_tides/tides01_intro.htmlhttps://old.thinnai.com/கடல்_ஓதம்/எனது வீடு கால்வெஸ்டன், டெக்சாஸ் துறைமுகம் அருகே உள்ளது. அதன் இன்றைய ஓதநிலை:
https://tides4fishing.com/us/texas/galveston-bay-entrance-south-jettyஓடு-தல் நீர் போன்ற எல்லாத் திரவங்களுக்கும் பொதுவானது. ஓடை, ஓடம் என்ற சொற்களைக் காண்க.
ஓடி, ஓடிகம் என நெல்லுக்குப் பெயர் உண்டு. நீர் பாய்ந்து/ஓடி விளையு
ம் பயிர் நெல்லம்பயிர். எனவே,
வட இந்தியாவில் “ஓடி(க)” என நெல்லுக்குப் பெயர் உண்டு. CDIAL reference.
Spontaneous Loss of Cerebrals (Th. Burrow, BSOAS). அதன் படி பார்த்தால்,
ஓட- ஓதம் எனத் தோன்றியுள்ளது எனலாம். சந்து (< சாத்து/சாந்து) சந்தனம் என ந-பிரத்தியம்
பெறுவது போலே, ஓத- > ஓதநம்.
~NG