--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பவள சங்கரி
அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
ஈரேழுலகின் ஈடில்லா ஈசனின் இடப்பாகம்
உரையும் ஊழிமுதல்வனின் நாயகியே! அபிராமி அன்னையே!!
பழமைக்கோலம் பரிதியின் தவம்
புதுமையில் புகுந்தால் புவிநாசம்
பழமையும் புதுமையும் பரிதிக்கேது
சுட்டெரிக்கும் சூதையும் சூழ்வினையையும்!!
பரிதிக்கே ஒளியாய் ஓங்கிய உத்தமியே
பங்கயத் தேரில் பதவிசாய் பவனிவரும்
மங்கையர்கரசியே மாதவச் செல்வியே
அங்கையர்கண்ணி அம்மையே! ஆனந்தமே!!
தஞ்சமென்று சரண் புகுந்தோர் நெஞ்சமெலாம்
பஞ்சமில்லா பேரருள் புகுத்தி வஞ்சமெல்லாம்
நீக்கியருள் மழைமேகமாய் புவியனைத்தையும்
காத்தருள் அகிலாண்ட நாயகியே! அபிராமியே!
அம்பிகையின் மலர்பாதங்களை சரணடைந்தோர் என்றும் துன்பக்கடலில் துவண்டுவிடுவதில்லை. இன்பமும், துன்பமும் இல்லா இன்னமுதம் அவள் பாத கமலம். எத்தனை எத்தனை அவதாரங்கள்.. எழில்மிகு வண்ணக்கோலங்கள் அவள் தோற்றம். அபிராமி அந்தாதி அருளிய அபிராமிப்பட்டரின் வாழ்க்கைச் சரிதமே அதற்கு ஆதாரம். அன்னையைச் சரணடைந்து, பித்தராய்த் திரிந்த பட்டர், காணும் பெண்களனைவரையும், அபிராமி அன்னையின் அவதார உருவமாகவேக் கண்டின்புற்றார்.
அபிராமி அந்தாதி பாடலை உள்ளம் உருகப் பாடிப்பரவச் செய்தவர், அபிராமிப்பட்டர். இவர் பிறந்த ஊர் அன்னை பராசக்தி அபிராமவல்லியாக அடியவர்க்கு அருள்பாலிக்கும் திருக்கடையூர். சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களின் சிறப்பானதொன்றுதான் திருக்கடையூர். என்றும் பதினாறு என்ற வரம் பெற்ற மார்கண்டேயரை அன்னை பராசக்தி, எமதர்மனிடமிருந்து காப்பாற்றிய வரலாறு சுவையானது. எமதர்மன், மார்கண்டேயர் மீது பாசக்கயிற்றை வீசிய அத்தருணத்தில், அப்பாலகன் ஓடிச்சென்று சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டான். எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்திருமேனியின் மேல்வந்து வீழ்ந்தது. கடுங்கோபம் கொண்ட சிவபெருமானாரின் சகதர்மினி அன்னை பராசக்தி சிவலிங்கத்தில் தோன்றினாள். ஈசனின் இடப்பாகம் உறையும் சக்திதேவி சிவலிங்கமாக வீற்றிருக்கும் தம் கணவர் மீது விழுந்த பாசக் கயிறு, தம் மீது விழுந்ததாகவேக் கருதி கோபமுற்றார் அம்பிகை. அதனால் எமனைத்தம் இடது காலால் எட்டி உதைத்தார் பெருமானார். ஆம், தன் மனைவியின் மனதை வேதனை அடையச் செய்த எமனை, அன்னைக்கேயுரிய தனது இடது பகுதியின் காலால் எமனை எட்டி உதைத்தார் இறைவன். இப்படி மார்கண்டேயனை காப்பாற்றிய அன்னை அபிராமவல்லி, என்றென்றும் பக்தர்களை காக்கவும் காத்திருக்கிறாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே அன்னையை வழிபடுவோரை வழிநடத்திச்செல்கிறது என்பதே நிதர்சனம்!
இதுபோன்று பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய அன்னை அபிராமவல்லிமீது பித்தரான ஒருவரை ‘பைத்தியக்காரன்’ என்று அவ்வூர் மக்கள் பேசினார்கள். அபிராமிபட்டர் என்ற அந்த மகான் சிறந்த தேவி உபாசகர். தாம் பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அபிராமியின் அம்சமாகவே கருதுவார். எப்போதும் அபிராமி அன்னையையே தியானித்துக் கொண்டும் இருப்பார். இவரின் பக்தியை சோதிக்கவும், இவரின் கீர்த்தியை உலகுக்கு உணர்த்தவும் விரும்பினார் இறைவன், ஒருநாள் சரபோஜி மன்னர், திருக்கடையூர் அமிர்த கடேசுவரரை தரிசிக்கும்பொருட்டு திருக்கடையூர் கோயிலுக்குத் தன் பரிவாரங்களுடன் வந்தார். அரசர் வந்தது கூட தெரியாமல், அம்பாள் சன்னதியில் அபிராமி பட்டர் தியானத்தில் அமர்ந்திருந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்ற நிலையைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை எனும் திருக்கோலத்தையும் தம் கண்ணாரக் கண்டு இன்புற்றதோடு, இடைப்பட்ட ஏனைய கிரந்திகளனைத்தையும் கடந்து, சகஸ்ராரத்தில் ஒளிமயமாகத் திகழும் லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருந்தார். ஆனால் இதன் மகத்துவம் அறியாத சாதாரணர்கள், இவர் ஏதோ துர்தேவதையை ஆராதனை செய்து வந்த காரணத்தினாலேயே இப்படி பித்தராகி, ஆசாரங்கள் அனைத்தையும் கைவிட்டு, தீய வழியில் சென்றுவிட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர்.
ஒரு நாள் தஞ்சை அரசர், ராஜா சரபோஜி தை அமாவாசை தினத்தன்று, பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடிவிட்டு, திருக்கடவூருக்குத் தரிசனம் பெற வேண்டி வந்தார். அவ்வேளையில், அபிராமி அம்மன் சந்நிதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதும் என்று வித்தியாசமாக செய்துகொண்டிருந்தார். சுற்றி இருந்தவர்களோ தங்களுக்குள்ளாக, ‘மன்னர் வந்திருப்பதுகூட அறியாமல், மன்னரை வணங்கவும் செய்யாமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே’ என கூறிக்கொண்டிருந்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், ‘இவர் ஒரு பித்தர். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுபவர்’ என்றனர். மன்னரும் இதைச் சோதிக்க எண்ணியதால், சுப்ரமணிய ஐயரிடம், ‘இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?’ என்று கேட்டார்.
அன்னையின் காட்சியின் பேரானந்தத்தை உள்ளூரக் கண்டு களித்துக்கொண்டிருந்த பட்டரின் செவியில், அமாவாசை என்ற சொல் மட்டும் விழ, அவரும், ‘இன்று பௌர்ணமி அல்லவோ?’ என்று சொல்லிவிட்டார். அனைவரும், ஏளனத்துடன் கைகொட்டி சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். மன்னரும் மக்கள் சொன்னதும் சரிதான் என்று நினைத்தவாறு சென்றுவிட்டார். ஆனாலும் அரண்மனை திரும்பிய மன்னருக்கு, அவருடைய தோற்றமே, திரும்பத் திரும்ப கண்ணெதிரே வந்தது. அன்று பெளர்ணமி என்று சுப்பிரமணிய ஐயர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னையறியாமல் கண்ணயர, கருவறையின் அபிராமி அன்னை அவர் கண்ணெதிரே தோன்றியதோடு, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். ‘ஆகா, இது பூரண நிலவன்றோ! முழுமதி சுடர் விட்டு பிரகாசிக்கின்றது பாருங்கள்’ என்று சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தபோது, அவர் உடல் அச்சத்தில் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.
இந்தப் புராணக் கதையை மற்றொரு விதமாகவும் கூறுவர். மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாகக் கூறாதவர் அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பு சொன்னதாகச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் தீயை மூட்டி அதன் மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, ‘அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்’ என்று சூலுரைத்து அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங்கியதாகவும் கூறுவார்கள். ‘உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்’ என்று துவங்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், பேராச்சரியமாக, ‘விழிக்கே அருளுண்டு’ என்ற 79-வது பாடலின் போது மங்கிய அம்மாலைப் பொழுதில் அபிராமி அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் காட்சி கொடுத்து, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது. அன்னையின் அருளால் பட்டரும் மனம் தெளிவுற்று, அன்னையின் அருளைப் போற்றி, துதிப்பாடல்கள் இயற்றலாயினார். அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் நல் அனுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அற்புதமாக பொழிய ஆரம்பித்தது. மன்னரும் பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் பரிசளித்தார்.
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!
(அபிராமி அந்தாதி)
அபிராமி அந்தாதி 108 முத்தான பாடல்கள் கொண்டது. அன்னையை வழிபடுபவர் வாழ்வின் சகல செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்வர் என்பது ஐதிகம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எங்கள் அன்புத் தலைவி ஷைலஜாவின் அணிந்துரையுடனும், அரிய தகவல்களுடனும் நவ(ராத்திரி) ரதம் அழகாய் அசைந்தபடித் தன் பத்து நாள் பயணத்தை முத்தாய்த் தொடங்கியுள்ளது.
எங்கள் ரதத்தில் ஆண்களே வடம் பிடிப்பதில்லை - இடம் பிடிப்பதில்லை எனும் குறை தீர்க்க வந்த கோமகன் தமிழ்த்தேனீயார் அவர்கள். அவர் நவராத்திரியின் சிறப்பையும், கொலு வைக்கும் முறையினையும்
தேன் போன்ற இனிய தமிழ்நடையில் வழங்கியும், கூடவே போனஸாக நாட்டிய விருந்தையும் அளித்துச் சென்றுள்ளார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
அடுத்து ரதத்தை அணிசெய்ததோ எங்கள் அன்புத் தோழியும் ஆன்மீகச் சுரங்கமுமான பார்வதி. மலைமகளின் பெயர்கொண்ட அவரன்றோ எங்கள் நவராத்திரி நாயகியரில் முதன்மையானவர். :-)
நவராத்தி நாட்களில் செய்யவேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை (Do’s and Don’ts), கொலுவைக்கும் முறை, எந்தெந்த பொம்மைகளை எந்தெந்தப் படிகளில் வைக்கவேண்டும்...இப்படிப் பல்வேறு தகவல்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியிருக்கிறார் எங்கள் பார்வதி டீச்சர். :-) அவருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்!
அடுத்து ரதத்தின் எழிலைக்கூட்ட வந்தவர் அன்புத் தோழி பவளா. அவருக்கே உரிய மிடுக்கான நடையில் அழகரசி அபிராமியின் அணுக்கத் தொண்டரான அபிராமி பட்டரின் வரலாற்றை அபிராமி அந்தாதிப் பாடல்களுடன் பக்திச்சுவை சொட்டச் சொட்ட நமக்குப் பகிர்ந்தளித்துள்ளார்.
மனமுவந்த
பாராட்டுக்கள் பவளா.
நவ(ராத்திரி) ரதத்தின் பயணம் இனிதே தொடரட்டும்!
அன்புடன்,
மேகலா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இதோ வந்துவிட்டேன் பவளா. :-)
நீங்கள் பதிவிட்டுள்ள அபிராமி பட்டர் சரிதத்தில் என் சிந்தை ஒன்றிவிட்டது. எனவே, அபிராமி அம்மனைப் போற்றி நான் எழுதி வல்லமையில் வெளிவந்த பதிகம் ஒன்றை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.
அபிராமி அம்மன் பதிகம்!
கல்வி நலந்தரு கன்னிகை நீயே!
செல்வ வளந்தரு செல்வியும் நீயே!
வல்லியே நிதமுனை வணங்குகின் றேனே
நல்லவை
எண்ணிடும் மனமருள் வாயே!
அதிசயம் நிகழ்த்திடும் அன்னையே உன்னை
மதியினில்
வைத்தே மனமகிழ்ந் திடுவேன்
விதியினை
மாற்றிடும் விமலையே என்றும்
கதியென்று
நினைத்தேன் நின்பதம் தனையே!
துணையற்ற மனிதர்க்குத் துணையாகும் தாயே!
இணையற்ற உன்னருட் பார்வையி னாலே
தீராத துயர்களைத் தீர்த்திடு வாயே
வாராது
வந்திட்ட மனோன்மணி நீயே!
விடமுண்ட கண்டனின் இடப்பாகத் திருந்தே
இடர்களை
கின்றாய் இப்புவி சிறக்க!
தொடரும் இருவினை எனுமிருள் நீக்கிச்
சுடரே நிலவே ஒளிதரு வாயே!
காலனும் உனைக்கண்டு அஞ்சிடு வானே!
வேல்விழி கண்டால் விரைந்தோடு வானே!
தோல்விகண் டறியாத் தூயவள் உனையே
பால்போல்
சொற்கொண்டு போற்றிடு வேனே!
நிலையில்லாப் பொருட்செல்வப் பற்றினை யறுத்து
விலையில்லா
அருட்செல்வம் அளித்திடு தாயே!
மலைமகள் உன்னடி பணிகின்ற பத்(க்)தர்
கலையாத
கல்வியைப் பெற்றிடு வாரே!
அழகரசி உந்தன் எழில்தனைப் பருக
விழியிரண்டு
போத வில்லையே அம்மா!
தொழுதிடு வேனுனைத் தவறாது நித்தம்
குழவியென்
பிழைகளைப் பொறுத்தருள் வாயே!
மணியின் ஒளியாய்ச் சுடர்விடும் அன்னாய்!
பிணிகள் நீக்கிடும் மாமருந் தனையாய்!
பணிந்தே போற்றிடும் பாமர னுக்கும்
துணிந்தே
அருளும் பரமனின் துணைவி!
பந்த பாசங்கள் எனும்தளை நீக்கி
வந்த வினைகள் ஓடிடச் செய்வாய்!
கந்த வேளினை இப்புவி தனக்கே
சொந்த மாக்கிய சுந்தர வல்லி!
அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்திட
அகமது தூய்மையாய் என்றும் திகழ்ந்திட
மறவாது
பற்றினேன் நின்னடி தனையே
பிறவாமை
நல்கியே பேரின்பம் காட்டு!
நன்றி
வல்லமை: http://www.vallamai.com/?p=39324
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
எங்கள் அன்புத் தலைவி >>தலைவலி கைதவறுதலா தலைவி ஆகிட்டதா?:)
ஷைலஜாவின் அணிந்துரையுடனும், அரிய தகவல்களுடனும் நவ(ராத்திரி) ரதம் அழகாய் அசைந்தபடித் தன் பத்து நாள் பயணத்தை முத்தாய்த் தொடங்கியுள்ளது.
எங்கள் ரதத்தில் ஆண்களே வடம் பிடிப்பதில்லை - இடம் பிடிப்பதில்லை எனும் குறை தீர்க்க வந்த கோமகன் தமிழ்த்தேனீயார் அவர்கள். அவர் நவராத்திரியின் சிறப்பையும், கொலு வைக்கும் முறையினையும் தேன் போன்ற இனிய தமிழ்நடையில் வழங்கியும், கூடவே போனஸாக நாட்டிய விருந்தையும் அளித்துச் சென்றுள்ளார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! >>தேனிசாருக்கு நன்றி. நாம இது பெண்கள் இழை ஆண்கள் வந்தீங்கன்னா தெரியும் சேதின்னு எங்கே என்றைக்கு சொல்றோம்?
அடுத்து ரதத்தை அணிசெய்ததோ எங்கள் அன்புத் தோழியும் ஆன்மீகச் சுரங்கமுமான பார்வதி. மலைமகளின் பெயர்கொண்ட அவரன்றோ எங்கள் நவராத்திரி நாயகியரில் முதன்மையானவர். :-)>>>>ஆன்மீகத்தென்றல் ஆச்சே!
நவராத்தி நாட்களில் செய்யவேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை (Do’s and Don’ts), கொலுவைக்கும் முறை, எந்தெந்த பொம்மைகளை எந்தெந்தப் படிகளில் வைக்கவேண்டும்...இப்படிப் பல்வேறு தகவல்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியிருக்கிறார் எங்கள் பார்வதி டீச்சர். :-) >>>டீச்சர் கையில் பிரம்பு இல்லை:)
அவருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்!
அடுத்து ரதத்தின் எழிலைக்கூட்ட வந்தவர் அன்புத் தோழி பவளா. அவருக்கே உரிய மிடுக்கான நடையில் அழகரசி அபிராமியின் அணுக்கத் தொண்டரான அபிராமி பட்டரின் வரலாற்றை அபிராமி அந்தாதிப் பாடல்களுடன் பக்திச்சுவை சொட்டச் சொட்ட நமக்குப் பகிர்ந்தளித்துள்ளார்.
மனமுவந்த பாராட்டுக்கள் பவளா. >>>>நவரத்தினங்களில் ஒன்று வந்தால் நவரதம் ஜொலிக்காதா என்ன!
நவ(ராத்திரி) ரதத்தின் பயணம் இனிதே தொடரட்டும்!<>>>மேகலை ஒளிக்கும் காத்திருக்கிறோம் தங்காய்!
அன்புடன்,
மேகலா
2014-09-23 21:06 GMT-04:00 coral shree <cor...@gmail.com>:
வல்லமை வெளியீட்டிற்கு நன்றி. வல்லமையில் காண இதோ இங்கு
...2014-09-23 21:06 GMT-04:00 coral shree <span dir="l
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றிக் கடன்!
புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனபடுகிறது. இந்த நிறைந்த நாளே நவராத்திரியின் ஆரம்ப நாள். அதுமட்டுமில்லாமல் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நமது நன்றிக்கடனை நாம் செலுத்தும் நாளும் இதுவே.
பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த தலைமுறை மனிதர்கள் எல்லோருமே நமது இன்றைய வாழ்விற்கு ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்றைக்கு நாம் பேசும் மொழி, நாம் உடுத்தும் உடை, நாம் வசிக்கும் வீடுகள், நமது நடை என்று எல்லாமே அவர்களிடமிருந்து நாம் கற்றவைதான். நாம் பெற்றவைதான், இல்லையா?
இந்தப் பூமியில் விலங்குகள் மட்டுமே இருந்துவந்த காலத்தில் உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் இவற்றினூடே தங்களைக் கொல்லவரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பது இவையே முக்கியமானவைகளாக இருந்தன. பின் மெதுமெதுவே விலங்குகள் பரிணாமம் பெறத் தொடங்கின. அகலமாக வளர்ந்தவைகள் எழுந்து நிற்கத் தொடங்கின. மூளை, வளர்ச்சி பெறத் தொடங்கியவுடன், பல்வேறு திறன்களும் வளரத் தொடங்கின.. ஒரு செல் பிறவியாக இருந்த உயிரினம் பல செல் பிறவியாக, மனிதனாக பரிணாமம் பெற்றது. மனித இனத்தின் மிக முக்கியமான பரிணாமம் தன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களை பல்வேறு வகைகளில் அவன் பயன்படுத்தத் தொடங்கியது தான். இந்த எளிமையான திறன் தான் பிற்காலத்திய தொழில் நுட்பங்களுக்கு அடிகோலியது. தன் கைகளை மட்டுமே நம்பியிருந்தவன் மரக்கிளைகளை ஆயுதமாகக் கொண்டு தன்னை எதிர்த்து வந்த எதிரியுடன் போரிட்டபோது நுட்பவியலின் கதவுகள் திறந்தன. தன்னைச் சுற்றியுள்ள பல பொருட்களையும் கொண்டு தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் மனிதன். இதுவே மனித இனத்தின் நீடித்த வாழ்வின் ஆரம்பம் எனலாம்.
விலங்குகளைப் போல இருந்த மனிதன் மெதுமெதுவே தன் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ள ஆரம்பித்தான். இதனால் விலங்குகளைவிட சிறந்த வாழ்வு அவனுக்குக் கிடைத்தது. தனக்கென தங்குமிடம் வேண்டுமென விரும்பியதால் கட்டிடங்கள் வர ஆரம்பித்தன. கட்டடக்கலை இப்போது வானுயர வளர்ந்திருப்பதற்கு என்றோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவரின் மனதில் தோன்றிய ‘தனக்கென ஒரு இடம் வேண்டும்’ என்ற எண்ணம். குளிர், வெயில், மழை இவற்றிலிருந்து உடலை காக்க விரும்பியதால் உடைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த உலகத்தில் மனிதனாலேயே பலவும் நிகழ்த்தப்பட்டன. இரண்டு கற்கள் உரசும்போது ஏற்பட்ட தீப்பொறியால் அதுவரை பச்சையாகத் தின்னப்பட்ட உணவு சமைக்கப்பட்ட உணவானது. காலங்கள் செல்லச்செல்ல சமைக்காத உணவை பதப்படுத்தவும், சமைத்த உணவை பாதுகாக்கவும் மனிதன் கற்றான். அதுவே இப்போது நமக்குக் கிடைக்கும் தயார் நிலை உணவிற்கு முன்னோடி.
‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்’
கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; அவைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் நவீனப்படுத்தப்பட்டன; மேம்படுத்தப்பட்டன. இன்னும் மேம்படுத்தலுக்கு இடமும் அளித்தன. என்னைபோல தையல் கலையை அறியாத தையல்களும் இன்று தைத்த உடைகளை அணிவதற்கு எப்போதோ ஒரு தலைமுறையில் தைத்து உடுத்த வேண்டும் என்ற உந்துதலுடன் பிறந்த ஒரு மனிதனோ மனுஷியோ தானே காரணம். தான் தைத்து உடை உடுத்தியதுடன் தையற்காரர் என்ற ஒரு தலைமுறையையும் உருவாக்கிய தலைமுறைக்கு நாம் எல்லோருமே கடன்பட்டிருக்கிறோமே! தயார் நிலை ஆடைகளை தைக்கும் தொழிற்சாலை நடத்தும் வியாபாரிகளும், அங்கு தைக்கும் பெண்களும், அவற்றை விற்கும் கடைக்காரர்களும் யாரோ ஒரு புண்ணியவானுக்கு / புண்ணியவதிக்கு பட்ட கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள்!
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதால் அல்லவா இன்று போக்குவரத்து நெருக்கடியில் நாம் சிக்கித் தவிப்பது தினசரி நடவடிக்கை ஆகிவிட்டது! எண்களில் ஜீரோவைக் கண்டுபிடித்து எண்ணற்ற கணித மேதைகளை உருவாக்கியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். என்னைப் போன்ற கணித வெறுப்பாளர்களையும் உருவாக்கியதும் அவர்களே. மருத்துவ உலகில் எத்தனை எத்தனை அரிய கண்டுபிடிப்புகள்! நமது வாழ்நாளின் அளவு நீண்டிருப்பதற்கு எத்தனையெத்தனை முன்னோர்கள் காரணம்!
இன்றைக்கும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன; நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இவை நிச்சயம் பயன்படும். ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. நம்மிடையே யாருக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று ஒரு அலட்சியம். இருக்கும் வளத்தையெல்லாம் நாமே பயன்படுத்திக் கொண்டுவிடவேண்டும் என்ற ஒரு சுயநலம் பிறந்துள்ளது.
‘உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக’
எல்லா இயற்கை வளங்களும் நமக்காகவே இறைவனால் படைக்கப்பட்டன என்பது உண்மை. ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நதி நீர் மாசு படிந்துவிட்டது; காற்று அசுத்தமாகிவிட்டது; பல நதிகள் இருந்த இடமே தெரியாமல் வறண்டு போய்விட்டன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நீர் வேண்டாமா? நமது பேரக்குழந்தைகள், அவர்களது பேரக்குழந்தைகள் நல்ல நீர் குடிக்க வேண்டாமா? நல்ல காற்றை சுவாசிக்க வேண்டாமா? ‘இருக்கும் நல்லவற்றையெல்லாம் நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு அழுக்கு நீரையும் அசுத்தக் காற்றையும் விட்டுவிட்டுச் செல்லுகிறீர்களே’ என்று நம் இளைய தலைமுறைகள் கேட்கும் முன் விழித்துக் கொள்வோம்.
நாம் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நன்றி சொல்லும் இந்த மஹாளய பட்ச தினத்தில் நம் வருங்கால சந்ததியினரையும் மனதில் கொள்வோம். அவர்களது நலன்களையும் பாதுகாக்க உறுதி பூணுவோம். அவர்களும் நாளை இன்று நாம் செய்வதுபோல நமக்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள் முழு மனதுடன்.
///
அதையும் தவிர இங்கே ரதம் இழுப்போர் பெண்களாயினும் என் குழந்தைகள் போன்றவர்கள்
///.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மைசூரு தசரா
நவராத்திரி என்றால் இந்தியாவில் இரண்டு நிகழ்வுகள் நமக்கு நினைவிற்கு வருகின்றன. முதலாவது மைசூரு தசரா. இரண்டாவது மேற்குவங்கத்தில் நடக்கும் காளி பூஜை. வருடங்கள்தோறும் இவை மாறாமல் நடைபெற்று நமது பெருமை மிக்க பழைய பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றி வருபவை. மைசூரு தசரா பண்டிகை நாடஹப்ப (கர்நாடக மாநிலத்தின் பண்டிகை) என்று கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினம் மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். மகிஷாசுரன் என்கிற பெயரிலிருந்தே மஹிஷூர் (பிற்காலத்தில் மைசூரு) வந்திருப்பதாகவும் சொல்லுகிறார்கள். 2010 ஆம் வருடம் இந்த பண்டிகை தனது 400வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
இந்தப் பண்டிகை விஜயநகரப் பேரரசர்களால் 15ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் இந்த பண்டிகையைப் பற்றி தனது Matla-us-sadain wa Majma-ul-Bahrain (இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்) என்ற புத்தகத்தில் மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்தன என்று குறிப்பிடுகிறார். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூரை ஆண்டுவந்த ஒடையார் வம்ச அரசர் ராஜ ஒடையார் இந்த தசராவை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கொண்டாட ஆரம்பித்தார். தசரா கொண்டாட்டங்களில் 3வது கிருஷ்ணராஜ ஒடையார் காலத்தில் சிறப்பு தர்பார் இடம் பெற்றது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் கூடியது. அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த தர்பாரில் பங்குபெற்றனர். சென்ற வருடம் (2013) வரை இந்த வழக்கம் தொடர்ந்தது. மஹாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாவது தினம் அரச உடைவாள் யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் யானைகளுடன் கூட ஒட்டகங்களும், குதிரைகளும் இடம் பெரும்.
இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பது பார்க்க பார்க்க திகட்டாத ஒரு காட்சி. இதற்காக ஒரு லட்சம் விளக்குகள் ஒரு கோடி ரூபாய் செலவில் ஏற்றப்படுகின்றன. பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் அரண்மனையின் முன் நடைபெறும்.

விஜயதசமியன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேச்வரி தேவி எழுந்தருளப்பட்டு மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவாள். இந்த தங்க மண்டபத்தின் எடை 750 கிலோ மட்டுமே! இந்த தங்கமண்டபம் அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலம் வரும். ஊர்வலம் ஆரம்பிப்பதற்கு முன் அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும் தேவியை ஆராதிப்பார்கள்.

விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் மைசூரு அரண்மனை
நடனக் குழுக்கள், இசைக்குழுக்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டங்கங்கள் எல்லாம் இந்த ஊர்வலத்தின் அழகைக் கூட்டும். இந்த ஊர்வலம் மைசூரு அரண்மனையிலிருந்து துவங்கி பன்னிமண்டபம் (Banni Mantapam) என்று சொல்லப்படும் இடத்தில் முடிவடையும். இந்த இடத்தில் இருக்கும் பன்னி (வன்னி மரங்கள்) மரங்களுக்கு பூஜை நடக்கும். பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாதவாசத்தின் போது இந்த மரங்களில் தான் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்கள் என்பதால் அரசர்கள் இந்த மரத்தை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அன்று அரசர்கள் செய்த வழிபாடு இன்றும் மைசூரு தசரா பண்டிகையில் தொடருகிறது.

ஜம்போ சவாரி - தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவி
விளக்கொளி அணிவகுப்பு
தசரா கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்ச்சியாக விளக்கொளி அணிவகுப்பு பன்னிமண்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் லேசர் காட்சிகள், கரணங்கள் போடுபவர்களின் சாகசங்கள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் மற்றும் குதிரையேற்றம் ஆகியவை இடம் பெறும். விளக்கொளி அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது அரசர் குதிரையேற்ற உடையில் குதிரை மீதமர்ந்து வந்து இராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இந்த நிகழ்ச்சி துவங்கும் சமயம் இரவுப் பொழுது வந்துவிடுமாதலால் நிறைய விளக்குகள் ஏற்றுவார்கள். அரசர் தனது இராணுவ பலத்தை தனது எதிரிகளுக்குத் தெரியப்படுத்தவும், மக்களிடையே ‘இத்தனை பலமுடைய நான் உங்கள் ராஜா; உங்களைக் காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது’ என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவுமே இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.
இந்த வருடம் மைசூரு தசரா நடைபெறுமா என்பது இன்னும் சந்தேகமாகவே இருந்து வருகிறது. மாநில அரசு நிச்சயம் நடக்கும் என்று சொன்னாலும், மைசூரு அரண்மனையைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் தசரா பூஜை உண்டு என்று சொன்னாலும் எப்போதும் போல சோபையுடன் இந்த வருடம் நடக்காது என்றே சொல்ல வேண்டும்.

தர்பாரில் அரசர் அமர்ந்திர்க்கும் காட்சி
தசராக் கொண்டாட்டங்களில் தர்பார் ஒரு பகுதிதான் என்றாலும் பொதுமக்களுக்கு அரசரை அரியணையில் பார்ப்பது மிகவும் பிடித்த விஷயம். என்னதான் சுதந்திரம் கிடைத்து, குடியரசாக நாடு மாறிவிட்டாலும், இன்னும் அரசர்களுக்கும், அரச குடும்பங்களுக்கும் நம் நாட்டில் மிகப்பெரிய மரியாதை இருக்கத்தான் செய்கிறது
கடைசி அரசர் ஸ்ரீகண்டதத்த ஒடையார் இயற்கை எய்தி இன்னும் ஒரு வருடம் கூட பூர்த்தி ஆகாத நிலை. அவருக்குப்பின் இதுவரை வாரிசு என்று யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை அரச குடும்பத்தினர். தசராவின் போது அரசர் தர்பாரில் அமர்ந்து காட்சியளிப்பது கண்ணுக்கினிய காட்சி. அரசர் இல்லாத நிலையில் யார் இந்த தர்பாரில், அரசரின் அரியணையில் அமருவார்கள்? மிகப்பெரிய கேள்வி இது. மறைந்த அரசரின் மனைவி அரியணையில் அமர விரும்பவில்லை என்று செய்திகள் வருகின்றன.
‘என்னுடைய எழுபது வயதுவரை எனது வாரிசு பற்றி யோசிப்பதாக இல்லை’ என்றவர் வாரிசு இல்லாமல் 60 வயதில் மரணமடைந்து தலக்காடு சாபத்திற்கு ஆளாகிவிட்டார் என்று எண்ண வைத்துவிட்டார் ஸ்ரீகண்டதத்த ஒடையார்.
அது என்ன தலக்காடு சாபம்?
விஜயநகரத்தின் தளபதி ஸ்ரீரங்கராயனிடமிருந்து ஸ்ரீரங்கப்பட்டினத்தை 1610 ஆம் ஆண்டு அன்றைய மைசூரு மகராஜா ராஜ ஒடையார் கைப்பற்றினார். ஸ்ரீரங்கராயனின் மனைவி அலமேலம்மா ஆதிரங்கனின் ஆலய நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானபோது, ராஜ ஒடையார் அவரைப் பிடிக்க தனது படை வீரர்களை அனுப்புகிறார். அவர்களிடமிருந்து தப்ப அலமேலம்மா தலக்காடு நோக்கி ஓடிவருகிறார். அங்கு மாலங்கி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, தப்ப முடியாத அலமேலம்மா, ‘தலகாடு மணல் மூடி போகட்டும்; மாலங்கி நதி மடுவாகட்டும்; ஒடையார் பரம்பரை வாரிசற்றுப் போகட்டும்’ என்று சாபமிட்டு விட்டு நதியில் குதித்து விடுகிறார்.
இப்போதும் தலக்காடு மணல் மூடித்தான் இருக்கிறது. மாலங்கி நதியில் நீர் வரத்து இல்லை. இந்த இரண்டு சாபங்களும் பலித்தது போலவே ஒடையார் பரம்பரையிலும் நேர் வாரிசு என்பது இல்லை. ஸ்ரீகண்டதத்தாவின் அந்திமக் கிரியைகளை அவரது சகோதரி மகன் காந்தராஜ் அர்ஸ் செய்தார். அவரே ஒடையார் பரம்பரையின் அடுத்த வாரிசாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.
தசரா கொண்டாட்டங்களை நடத்த அரசியார் ப்ரமோதா தேவி சம்மதித்துவிட்டார்; ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற மாட்டார்கள்; அரண்மனையில் எந்த கொண்டாட்டமும் நடப்பதையும் அவர் விரும்பவில்லை என்று அண்மைய செய்திகள் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதற்கு முன் இந்த தசரா கொண்டாட்டங்களை நேரில் கண்டு அனுபவித்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புடன்ஷைலஜா.
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களேஅபிராமி அந்தாதி.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
அம்புவியைக் காக்கும் அருளன்னை - கனிவுடனேஇப்புவி மாந்தரின் சங்கடம் போக்குமலர்ப்பாதம்மந்திரச் சொல்லால் பணிந்து நாளும்வெந்தயத்தீயின் விதியை வீழ்த்து!நன்றிஅன்புடன்பவளா
2014-09-26 0:32 GMT-04:00 shylaja <shyl...@gmail.com>:
பவள சங்கரி
நவ்வி போலுமே விழியுடையாள் – ஐயன்
கவ்வி கடுந்தவம் கலைத்துமகிழ செல்வி
நஞ்சுண்டகண்டனவன் பாதம் பணிந்தே
பாவவினை களையும் வரமளிப்பவளே!!
கனிவளச் சோலையில் கற்பகத்தருவாய் படர்ந்து
கசிந்துருகும் பக்தரின் பரிதவிப்பில் சொற்பதமாய்
விரிந்துவிரிந்து விசித்திரமாய் விந்தையானாய்
விரைந்துவந்து உந்தன் மகவைக் காத்தருளே!
சிந்திய முத்துக்களின் புத்தொளியில் சீவனின்
சிந்தை மலர்களின் சிலிர்ப்பில் சித்தாந்தம்
பேசும் சின்னக் கிளியின் கொஞ்சுமொழியில்
சித்தம் கலங்காமல் இறுமாப்பு கொண்டாயோ?
ஒங்காரரூபினி என்றால் ஓயாமல் ஓசைஎழுப்பி
ரீங்காரம் செய்யும் தேனீயாய் சுற்றிவரும்
பாங்கான பக்தருக்கு வரமருளும் நித்தமும்
நீங்காத நாயகியே! காத்தருளும் காமாட்சியே!!
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
Take life as it comes.All in the game na !!Pavala SankariErode.Tamil Nadu.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அன்புடன்ஷைலஜாவெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்துடுவேன் .
எள்ளத் தனைபபோழு துமபய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
வேல்சக்தி வேல்சக்தி வேல்பாரதியார்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
Take life as it comes.All in the game na !!Pavala SankariErode.Tamil Nadu.

வெற்றிவாகினியே வீரத்திருமகளேஊரெல்லாம் குதூகலமாய்கூடிக் களித்திருக்கையில்பாடிப்பரவசமாய் ஓருயிர்பத்ரகாளியுந்தன் பதம்பணிந்தேநித்தமுன்நாமம் கூவியழைத்துவெதும்பியழ பாவியானெனபரிதவித்து உனைத்தொழசூழும்துயர் களையாமல்எங்கனம் செல்வாயோநீயே!
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
//ரதம் சிலர் இழுவை என்கிறார்கள்//அட! அப்ப இழுக்கலைன்னா ரதம் எப்படி நகரும்? :-))))
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மீனாஜி..! நீங்களும்--------மரத்தடி காலமிருந்தே ஸ்மார்ட் ..உங்களூக்கெல்லாம் கண்டுபிடிக்கமுடியலேன்னாதான் ஆச்சரியம்:)

நவராத்திரி நாயகி:
"ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி"
என்னுள்ளத்தில்(எங்களின் வீட்டிற்கு அருகில்)குடி கொண்டிருக்கும் அன்னையர்களுக்கெல்லாம் அன்னையான அவளை நினைத்து...
'ஆயிரம் நாமத்தால் அர்ச்சனை செய்தாலும்
அன்னை உந்தன் பெருமை சொல்லத்தரமோ
ஆயுளும் யோகமும் ஐஸ்வர்யம் யாவும் உன்
அன்பினால் கடைக்கண் பொழி அருளே - திருவே..
ஸ்ராவண பௌர்ணமி முன் சுக்கிரவாரத்தில்
சௌந்தர்யவதி உன்னை ஸ்ரத்தையாய் பூஜிக்க
தேவாதி தேவரும் தேடி வருவார் தேவி
உந்தன் திருவருளை நாடி வருவார்
ஸர்வா பரணமொடு காஷி தருவாய்
மன ஸஞ்சலங்கள் துடைத்து ஆட்சி புரிவாய் - திருவே செந்திருவே..'
பீம்ப்ளாஸ் ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் குளமான கண்களுக்குள் ராஜேஸ்வரி அமர்ந்திருப்பாள்!
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம் சிறிய குன்றின் மேல், ஆற்றின் கரையோரம் அற்புதமான அழகுடன் இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் நுழைவாயிலில் இருபத்தைந்து படிகள் ஏறி மேலே வந்தால்…பளிச்சென்று நல்ல காற்றோட்டத்துடன் விசாலமான(பிராத்தனை)மண்டபம். (உள்ளே நுழைந்தவுடன் மனதில் ஏற்படும் அந்த உணர்வு!) கோயிலின் அடித்தளத்தில் கல்யாண மண்டபம் (இங்குதான் கொலுவைக்கப்பெறும்!) அதன் மேல் தளத்தில் ஆலயம் அமைந்திருக்கிறது.
மண்டபத்தின் உள்ளே ஆலயத்தின் பிரதான கருவறையின் இடப் பக்கத்தில் வீற்றிருக்கிறார் (ஐந்து கரப்பெருமான்)சித்திவிநாயகர். ஆலயத்தின் மற்ற திருமேனிகளைப் போலவே இந்தத் திருமேனியும் தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பி தேவகோட்டை முத்துக் கருப்பரால் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப் பட்டதாகும்! 1977 ல் நிகழ்ந்த முதல் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவில் இத்திருமேனி பிரதிஷ்டை செய்யப் பட்டது.
சித்திவிநாயகரைச் சுற்றி வலம் வரும்போது முதலில் காட்சி அளிப்பவர் விஷ்ணுதுர்கை என வழங்கப்படும் அன்னை துர்காதேவி, தொடர்ந்து வலம் வர (பிரதானக் கருவறையின் வலப்பக்கம்) இங்கு காட்சி அளிப்பவர் (பாலசுப்பிரமணியனாக அருள்பாலிக்கும்) திருமுருகப்பெருமான் ஆவார்.அடுத்து பிரார்த்தனை மண்டபத்திற்கு வரும் படிக்கட்டுகளின் எதிரே மூலஸ்தானம், (இப்பிரதான கருவறையின்)வாயிலில் (தூய வெண்ணிறத்தில்) துவார பாலகர்கள் இருவருடன் நடுநாயகமாக ஏற்றமுடன் காட்சியளிப்பது பொற்றாமரையின் மேல் அமர்ந்த நிலையில் சௌந்தரவல்லியாக உலகநாயகி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரித் தாயார்!.
பிரார்த்தனை மண்டபத்தின் இருபுறமும் இரு சிறிய மண்டபங்கள் உள்ளன, மூலஸ்தானத்தின் இடப்புறம் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஸ்ரீகணேசர், ஸ்ரீதுர்கை, வள்ளிதெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள நடராஜ மண்டபத்தில் சண்டிகேஸ்வரராக சிவபெருமான், சிவகாமி சமேதரராய் நடராஜர், நாயன்மார்கள் நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.கீழே ஆலயத்தின் இடப்பக்கம் வெளிப்
பிரகாரத்தில் ஆற்றின் ஓரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கென்று தனி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
நவக்கிரக
சந்நிதிக்கும் ஆற்றுக்கும் இடையில் அரசமரம் ஒன்று
ஆலயத்தின் மேல் குளு குளுவென்று
தன் நிழலைப் பரப்பிக் கொண்டு
கம்பீரமாக நிற்பது, ஆற்றின் இருபக்கமும் (கோயிலின்
உள்ளே) செண்பக மரங்களும், கரும்பும்,
நவக்கிரக மூலஸ்தானத்திற்கு வலப்புறம் பெரி(ய்)யநாவல்
மரம் ஒன்று(!) மஞ்சள் பூக்களுடன் பழங்களுடன்
பசுமையாக கிளை பரப்பி நிற்பதும்
(கொட்டிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கி ஒட்டியிருக்கும் மண்ணை ஊதும் போது
ஔவையும், ஆடுமேய்க்கும் முருக(சிறுவ)னும்
நினைவில் வருவது!) கருவறையின் முன்புறம் வில்வமரம் ஒன்று உயர்ந்து அடர்ந்த
கிளைகளுடன், கோவிலின் உட்புறம் வன்னி மரங்களும்,
ஆலயத்தின் இடப்பக்க நுழை
வாயிலுக்கும் கோயிலின் வெளிப்பிரகாரத் துக்கும் இடையில் இரு
வேப்பமரங்கள் இம்மரங்களின் கிளைகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு
மேல் குடைபோல் படர்ந்து இருப்பது வெகு அழகு!.
இங்கு வருடம்தோறும் நவராத்திரி கொண்டாட்டம் பிரமாதப்படும். இந்தப் பத்து நாளும் கோவில் திருவிழாக் கோலத்துடன் தக தகவென்று ஜொலிக்கும்!.
மண்டபத்தில் ஒன்பது படிகளுடன் அழகாக அடுக்கப்பட்டிருக்கும் கொலுவின் வலதுபக்கத்தில் நடுநாயகமாக பெரிய உருவத்தில் தத்ரூபமாக திருப்பதி ஏழுமலையான் எழுந்தருளியிருப்பார்,
அவருக்கு அடுத்தாற்போல் சிறிய மேடை அமைத்து அதில் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அழகாக காட்சி தருவாள்,.கொலுவின் கடைசி நாள் அம்பு போடுவதும், அதற்கு அடுத்தநாள் (ஒவ்வொருவரும் உற்சாகத்துடன் வித விதமாக சீர்வரிசை எடுத்துச்செல்ல) விமரிசையாக திருக்கல்யாணமும் ,அதையொட்டி திருமண விருந்தும் அமர்களப்படும்.
இப்படி நாட்டியம், வீணை, வயலின், பாட்டு என ஒவ்வொரு நாளும் இன்றைக்கென்ன அலங்காரத்தில் அன்னை இருப்பாள்? இன்று யாரின் நாட்டியம், பாடுவது யார்,?வயலினா, வீணையா.. வாசிக்கப் போவது யார் ? என அறியும் ஆவலுடன் ஆலயம் சென்று பார்க்க கேட்க ரொம்பவும் மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருக்கும்.
அகில உலகமும் சுபிட்சம் பெற நம் அன்னை ராஜராஜேஸ்வரி யின் அருள் வேண்டி வணங்குவோம் வாருங்கள் தோழியரே!.
தற்போது இக்கோவில் புதிய மாற்றங்களுடன் மிகப்பெரிதாக விரிவாக்கம் செய்து வெகுசிறப்பான முறையில் சென்ற வருடம் நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இப்பதிவு10 வருடங்களுக்கு முன் ”தோழியர்” (womankind.yarl.net/archives/2004/10/22)
வலைப்பதிவில் எழுதியது.
நீண்ட விரிவான பதிவின் சுருக்கத்தை இங்கே மீள்பதிவு செய்துள்ளேன் நன்றி.
அன்புடன்
மீனா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நவராத்திரி நாயகி:
"ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி"
என்னுள்ளத்தில்(எங்களின் வீட்டிற்கு அருகில்)குடி கொண்டிருக்கும் அன்னையர்களுக்கெல்லாம் அன்னையான அவளை நினைத்து...
'ஆயிரம் நாமத்தால் அர்ச்சனை செய்தாலும்
அன்னை உந்தன் பெருமை சொல்லத்தரமோ
ஆயுளும் யோகமும் ஐஸ்வர்யம் யாவும் உன்
அன்பினால் கடைக்கண் பொழி அருளே - திருவே..
ஸ்ராவண பௌர்ணமி முன் சுக்கிரவாரத்தில்
சௌந்தர்யவதி உன்னை ஸ்ரத்தையாய் பூஜிக்க
தேவாதி தேவரும் தேடி வருவார் தேவி
உந்தன் திருவருளை நாடி வருவார்
ஸர்வா பரணமொடு காஷி தருவாய்
மன ஸஞ்சலங்கள் துடைத்து ஆட்சி புரிவாய் - திருவே செந்திருவே..'
பீம்ப்ளாஸ் ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் குளமான கண்களுக்குள் ராஜேஸ்வரி அமர்ந்திருப்பாள்!>>பாட்டையும் கொடுங்க மீனாஜி யு ட்யூப்ல இருக்கா கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறது
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம் சிறிய குன்றின் மேல், ஆற்றின் கரையோரம் அற்புதமான அழகுடன் இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் நுழைவாயிலில் இருபத்தைந்து படிகள் ஏறி மேலே வந்தால்…பளிச்சென்று நல்ல காற்றோட்டத்துடன் விசாலமான(பிராத்தனை)மண்டபம். (உள்ளே நுழைந்தவுடன் மனதில் ஏற்படும் அந்த உணர்வு!) கோயிலின் அடித்தளத்தில் கல்யாண மண்டபம் (இங்குதான் கொலுவைக்கப்பெறும்!) அதன் மேல் தளத்தில் ஆலயம் அமைந்திருக்கிறது.
மண்டபத்தின் உள்ளே ஆலயத்தின் பிரதான கருவறையின் இடப் பக்கத்தில் வீற்றிருக்கிறார் (ஐந்து கரப்பெருமான்)சித்திவிநாயகர். ஆலயத்தின் மற்ற திருமேனிகளைப் போலவே இந்தத் திருமேனியும் தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பி தேவகோட்டை முத்துக் கருப்பரால் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப் பட்டதாகும்! 1977 ல் நிகழ்ந்த முதல் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவில் இத்திருமேனி பிரதிஷ்டை செய்யப் பட்டது.
சித்திவிநாயகரைச் சுற்றி வலம் வரும்போது முதலில் காட்சி அளிப்பவர் விஷ்ணுதுர்கை என வழங்கப்படும் அன்னை துர்காதேவி, தொடர்ந்து வலம் வர (பிரதானக் கருவறையின் வலப்பக்கம்) இங்கு காட்சி அளிப்பவர் (பாலசுப்பிரமணியனாக அருள்பாலிக்கும்) திருமுருகப்பெருமான் ஆவார்.அடுத்து பிரார்த்தனை மண்டபத்திற்கு வரும் படிக்கட்டுகளின் எதிரே மூலஸ்தானம், (இப்பிரதான கருவறையின்)வாயிலில் (தூய வெண்ணிறத்தில்) துவார பாலகர்கள் இருவருடன் நடுநாயகமாக ஏற்றமுடன் காட்சியளிப்பது பொற்றாமரையின் மேல் அமர்ந்த நிலையில் சௌந்தரவல்லியாக உலகநாயகி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரித் தாயார்!.
பிரார்த்தனை மண்டபத்தின் இருபுறமும் இரு சிறிய மண்டபங்கள் உள்ளன, மூலஸ்தானத்தின் இடப்புறம் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஸ்ரீகணேசர், ஸ்ரீதுர்கை, வள்ளிதெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள நடராஜ மண்டபத்தில் சண்டிகேஸ்வரராக சிவபெருமான், சிவகாமி சமேதரராய் நடராஜர், நாயன்மார்கள் நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.கீழே ஆலயத்தின் இடப்பக்கம் வெளிப்
பிரகாரத்தில் ஆற்றின் ஓரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கென்று தனி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
நவக்கிரக சந்நிதிக்கும் ஆற்றுக்கும் இடையில் அரசமரம் ஒன்று ஆலயத்தின் மேல் குளு குளுவென்று தன் நிழலைப் பரப்பிக் கொண்டு கம்பீரமாக நிற்பது, ஆற்றின் இருபக்கமும் (கோயிலின் உள்ளே) செண்பக மரங்களும், கரும்பும், நவக்கிரக மூலஸ்தானத்திற்கு வலப்புறம் பெரி(ய்)யநாவல் மரம் ஒன்று(!) மஞ்சள் பூக்களுடன் பழங்களுடன் பசுமையாக கிளை பரப்பி நிற்பதும் (கொட்டிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கி ஒட்டியிருக்கும் மண்ணை ஊதும் போது ஔவையும், ஆடுமேய்க்கும் முருக(சிறுவ)னும் நினைவில் வருவது!) கருவறையின் முன்புறம் வில்வமரம் ஒன்று உயர்ந்து அடர்ந்த கிளைகளுடன், கோவிலின் உட்புறம் வன்னி மரங்களும், ஆலயத்தின் இடப்பக்க நுழை வாயிலுக்கும் கோயிலின் வெளிப்பிரகாரத் துக்கும் இடையில் இரு வேப்பமரங்கள் இம்மரங்களின் கிளைகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு மேல் குடைபோல் படர்ந்து இருப்பது வெகு அழகு!.
இங்கு வருடம்தோறும் நவராத்திரி கொண்டாட்டம் பிரமாதப்படும். இந்தப் பத்து நாளும் கோவில் திருவிழாக் கோலத்துடன் தக தகவென்று ஜொலிக்கும்!.
மண்டபத்தில் ஒன்பது படிகளுடன் அழகாக அடுக்கப்பட்டிருக்கும் கொலுவின் வலதுபக்கத்தில் நடுநாயகமாக பெரிய உருவத்தில் தத்ரூபமாக திருப்பதி ஏழுமலையான் எழுந்தருளியிருப்பார்,
அவருக்கு அடுத்தாற்போல் சிறிய மேடை அமைத்து அதில் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அழகாக காட்சி தருவாள்,.கொலுவின் கடைசி நாள் அம்பு போடுவதும், அதற்கு அடுத்தநாள் (ஒவ்வொருவரும் உற்சாகத்துடன் வித விதமாக சீர்வரிசை எடுத்துச்செல்ல) விமரிசையாக திருக்கல்யாணமும் ,அதையொட்டி திருமண விருந்தும் அமர்களப்படும்.
இப்படி நாட்டியம், வீணை, வயலின், பாட்டு என ஒவ்வொரு நாளும் இன்றைக்கென்ன அலங்காரத்தில் அன்னை இருப்பாள்? இன்று யாரின் நாட்டியம், பாடுவது யார்,?வயலினா, வீணையா.. வாசிக்கப் போவது யார் ? என அறியும் ஆவலுடன் ஆலயம் சென்று பார்க்க கேட்க ரொம்பவும் மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருக்கும்.
அகில உலகமும் சுபிட்சம் பெற நம் அன்னை ராஜராஜேஸ்வரி யின் அருள் வேண்டி வணங்குவோம் வாருங்கள் தோழியரே!.>>>>>அருமையான இடுகை .
தற்போது இக்கோவில் புதிய மாற்றங்களுடன் மிகப்பெரிதாக விரிவாக்கம் செய்து வெகுசிறப்பான முறையில் சென்ற வருடம் நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இப்பதிவு10 வருடங்களுக்கு முன் ”தோழியர்” (womankind.yarl.net/archives/2004/10/22) வலைப்பதிவில் எழுதியது.>>>அப்போதும் வாசித்தேன் .சிறப்பாக இருக்கிறது மீனாஜி.
நீண்ட விரிவான பதிவின் சுருக்கத்தை இங்கே மீள்பதிவு செய்துள்ளேன் நன்றி.
அன்புடன்
மீனா
அதுலேயும் சித்திரை மாசம் வர்ற திருவிழா இருக்கே, இது இன்னும் விசேஷம்! ரெண்டு கையிலேயும் அக்கினிச் சட்டி
எடுத்துகிட்டு ஆடிகிட்டு வருவாங்க பாருங்க, ஒரே அமக்களமா இருக்கும். அந்தக் கொட்டு கேக்கறப்பவே நமக்கும்
கூடவே ஆடணும்னு ஒரு வேகம் வரும். கொஞ்சம் அசைஞ்சாப் போதும், 'சாமி வந்துருச்சு'னு நம்ம மேலெ மஞ்சத்
தண்ணி யாராவது ஊத்திருவாங்களேன்னு பொட்டைப் பசங்க எல்லாம் கவனமாக் காலை அசையாம வச்சிகிட்டு நிப்பாங்க!
அதையும் மீறி சிலபேரு ஆடறதும் உண்டு! அடி வேப்பிலையை! கொண்டா துண்ணூரை!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.





----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.