வடவெழுத்து வடசொல்: யாவை அவை?
முனைவர் கி. லோகநாதன் 18-6-14
அன்பர்களே
எழுத்து ஆராய்ச்சி எனக்கு கைவந்த கலை அல்ல. தொல்காப்பியத்தில் பொருளதிகாரமும் சொல்லதிகாரமே என்னை மிகவும் கவர்ந்தவை. ஆயினும் சுமேருத் தமிழ் ஆய்வில் ஈடுப்பட்ட காரணத்தல் எழுத்தாய்வும் சிறிது செய்ய வேண்டியக் கட்டாயம்.. இதனால் பிழைகள் இருக்கலாம். திரித்தி பிழைகலைப் போக்கினால் மகிழ்வேன்
இந்த கெஸ்த்தின் அன்னா ஆய்வில் பல வகையான சகரக்கிளவிகள் ஆய்விற்கு வந்தன. அவை ஸ் ஷ் ஜ எனும் எழுத்துக்கள் சுமேருத் தமிழில் இருப்பதைக் காட்டுகின்றன.
காண்க:
https://groups.google.com/forum/?fromgroups#!topic/mintamil/2-oRZ1wPz-s
இவை முதற் சங்கத் தமிழ் எழுத்தாக இருக்க, ‘வடவெழுத்து’ என்று தொல்காப்பியர் கூறும் எழுத்துகளில் இவை அடங்கும் என இவை செங்கிருதத்திற்கே உரிய எழுத்துக்களா என்ற கேள்வி எழுகின்றது. வடவெழுத்து வடசொல் என்பதின் பொருள்தான் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.
யாவை இந்த சகர வெழுத்துக்கள்?
ஸ் : கெஸ்த்தின் அன்னா. தென்.தமிழில்: அகஸ்த்தியம், அகஸ்த்தியர். இவையே அகத்தியர் என்றும் அகத்தியம் என்றும் விளங்குகின்றன.
ஷ் : சுமேருத் தமிழ் ‘நிஷபா’ என்று விளங்கும் இச்சொல் ‘நிடபா” என்றும் விளங்குவதைக் காண, இன்றும் வழக்கில் இருக்கும் நஷ்டம்> நட்டம், துஷ்டன்> துட்டன் போன்ற வழக்குகளிலும் இது உண்டு எனத் தெரிகின்றது’
ஜி: இதுவும் இன்றும் ஜீவ(சீவன்) ஜலம்(சலம்) போன்ற சொற்களில் விளங்குகின்றது.
ஆக செங்கிருதத்தில் இன்றும் ஒதுக்கப்படாது விளங்கும் இவ்வெழுத்துக்கள் சுமேருத் தமிழில் உண்டு என்றும் அங்கு இப்பொழுது நடக்கும் எழுத்து மாற்றங்கள் ( ஷ்> ட். ஜ்> ச் போன்றவை) நடந்துள்ளது என்றும் தெரிகின்றது.
ஆக தொல்காப்பிய வடவெழுத்து வடசொல் என்பவை யாவை? அவை வழக்கிழந்த ஆனால் செய்யுள் புனைவதற்கு ஏற்றவை என்றாலும் பட்டுப்போன எழுத்துக்களை ஒதுக்கி அவற்றின் மாற்றுகளோடு வரும் சொற்கள் என்றும் பொருள் கொள்ள முடியுமா>
தொல்காப்பிய சூத்திரங்கள்
எச்சவியல்
880
இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொலென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
பொருள்(உலகன்)
புலவர்கள் யாக்கக் கூடிய செய்யுள்கட்கு உரிய சொற்கள் இயற்சொல் திரிசொல் திசைச் சொல் என்பவற்ரொடு வடசொல்லும் அடங்கும்
884
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே
பொருள்(உலகன்)
இவற்றில் வடசொல் என்பது வழக்கிழந்து பட்டுப்போன தமிழ் எழுத்துக்களை ஒதுக்கி அவற்றின் மாற்று எழுத்துக்களோடு புணர்ந்த சொல்லாகும் எ-டு நஷ்டம்> நட்டம் அகஸ்த்தியம்> அகத்தியம் ஜீவன்> சீவன்.
இங்கு ஷ் ஸ் ஜ் என்ற எழுத்துக்கள் வழக்கிழந்துபோக அவற்றை மாற்றி ட் த் ச் என்ற பெயர்த்து எழுத அவை வடசொல் ஆகின்றன. இவை செய்யுள் யாப்பதற்கு ஏற்றச் சொற்களே யாம்.
இவ்வாறு இந்த சூத்திரங்களை புரிந்துகொள்ள முடியுமா? இல்லை இது பிழையா?
தமிழ் அறிஞர்கள் ஓர் விளக்கம் தந்தால் மகிழ்வேன்
உலகன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மொழியியல் குறிப்பாக வரலாறு சார் மொழியியல் மொழியின் வளர்ச்சியை நான்குநிலைப்படுத்துகிறது. சமஸ்கிருதம் முழுமையாக வளர்ந்து நான்காம் நிலையை அடைந்த மொழி என்று மொழியியலார் குறிப்பிடுவர்தமிழ் மொழியில் வளர்ச்சி இரண்டாம் நிலை அளவில் உள்ளது என்றும் அது முழுமையாக வளர்ச்சி அடையாத எளிமையான மொழி என்று வரலாற்று மொழியியலார் குறிப்பிடுவர்இரண்டு மொழிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமை உள்ளது.சமஸ்கிரிதத்தில் இருந்து உருவானதே தமிழ் என்று தொடர்ந்து வாதம் நடத்தும் நிலையில் சிலர் தமிழில் இருந்து தோன்றியதே சமஸ்கிரிதம் என்று வாதிடுகிறார்கள்தமிழும் சமஸ்கிரிதமும் இன்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆரிய மொழி திராவிட மொழி என்ற மொழிக்குடும்பங்களைச் சார்ந்தது என்ற கருத்தை மறுத்து இரண்டு மொழிகளுக்கும் ஆதார மொழி சுமேரு மொழி என்று கூறும்போது அதற்கான வாதங்களை முன்வைக்கும்போது வடமொழி வட எழுத்து பற்றி குறிப்பிடும்போது ஆரியம் என்ற சொல் வடபுலத்தைக் குறிப்பதா அல்லது பாரசீகத்தைக் குறிப்பதா என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டியது அவசியம்நாகராஜன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
திரு வேந்தன் அவர்களேதங்கள் கூற்று//நீங்க குறிப்பிடும் நஷ்டம், இஷ்டம், ஜீவன் போன்றன தமிழ் சொற்கள் இல்லை. அவை வடஎழுத்து ஒரீ வந்த வடசொற்கள்//இவற்றில் பல சுமேருத் தமிழில் உண்டு, kesda> கட்டு, கஷ்ட ji> ஜி. ஜீ போன்றவைஇவை சுமேருத் தமிழ் சொல்லும் செங்கிருதத்தில் அழியாது நிற்கும் சொல்லும் ஆகும் மேலும் செய்யுள் வழக்கில் இல்லாது பேச்சு வழக்கில் இன்று இருப்பவையும் ஆகும்.சுமேரு காலத்திலிருந்து இவை பேச்சு வழக்கில் இருக்கலாம் அல்லவா? செய்யுள் வழக்கில் ஏதோ ஓர் காரணம் பற்றி வழக்கிழந்து போயிருக்கலாம் அல்லவா?
--
தொல்காப்பியம் பானினிக்கு முன் வாழ்ந்த ஐந்திரன் வகுத்த இஅல்க்கண அடிப்படையில் அமைந்ததாகவும் பானினி பற்றித் தொல்காப்பியக் குறிப்புகள் இல்லாததாலும் தொல்காப்பிஅய் குறிப்பிடும் வட எழுத்து வடசொல் என்ற கருத்துருவை பானினி வகுத்த சமஸ்கிரித இலக்கணத்துக்கு வலிந்து பொருத்துவதுபோல் தோன்றுகிறதேதத்து பித்து
திரு வேந்தன் அரசு அவர்க்ளேஅவரசரப்படாது ஒருசில கூறுகளை வைத்துக்கொண்டு சுமேருத் தமிழை சுமேரு கிருதம் என்று கூறவது பொருந்துவது அல்ல. ஆனால் நான் கூறுவது போல, செங்கிருதம் சுமெருத் தமிழின் திரிபு. அங்கு செங்கிருதத்தின் அடிப்படைக் கூறுகள் இருக்கின்றன ஆனால் வாசிப்போருக்கு அது தொல் செங்கிருதம் என்ற உணர்வு பிறக்காது. ஆயினும் அது தொல தமிழ் என்ற உணர்வு பிறக்கின்றது. இப்படித்தான் நான் சுமேரு மொழியை தொல்தமிழ் என்று அடையாளம் கண்டேன்,கீழே உள்ள கிளவிகளைப் பாருங்கள். இவை செங்கிருதம் என் ற உணர்வை எழுப்புகின்றதா அல்லது தொல்தமிழ் என்ற உணர்வை எழுப்புகின்றதா? மேலும் இப்பொழுது நான் மின்பதிப்பாக்கி வருகின்ற 'தமுஜியின் மம்மு" என்ற நூலின் வரிகலையும் பாருங்கள். அவை தொல் செங்கிருதம் என்ற உணர்வை பிறப்பிக்கின்றதா?
மேலும் இப்பொழுதுதான் உறவுப்பெயர்களை முடித்தேன். அங்கு மருமான் மச்சான் என்றெல்லாம் இருக்கின்றது. இவை செங்கிருதத்தில் உள்ள உறவுப் பெயர்களா?உலகன்1. lugal-e mu-ni nig-du-se
The king's name, according to what is becoming
உளுகள்ளே மோஅன்னை நீடுசேய்
--
--
லோகா,
தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை. (physical speech generators).
வட எழுத்துக் குறிப்பது ஒலிகளை.
எனவே வட எழுத்தை எப்படி தமிழ் எழுத்தில் (transliteration) குறிப்பது என்பதுதான் விபரம்.
அன்றாட பாவனையில் பாவனையில் உள்ள ஒலிகளின் எண்ணிக்கை தமிழில் மட்டும்தான் அதிகம்.
சின்னத்துரை
__._,_.___
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (3) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___