சிரிப்போம்

18 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Aug 15, 2025, 10:00:21 AM8/15/25
to vallamai
/// #திருநெல்வேலி_குசும்பு: 😆 

தம்பி: (அழைப்பேசியில்) அண்ணாச்சி வணக்கம்... எப்படி இருக்கீய...

நான்: நல்ல இருக்கேன் தம்பி... நீ சொவமா இருக்கீயா? வீட்டுல அப்பா, அம்மா எல்லாம் சொவமா இருக்காவோளா?

தம்பி: ஆமா அண்ணாச்சி அம்புட்டு பேரும் சொவமா இருக்கோம். அப்புறம் அண்ணாச்சி இன்னைக்கு அந்தபக்கம் கொஞ்சம் வேலையா வாறேன். வயக்காட்டுல நடுவைனு சொன்னாவோ, அதான் ஒரு எட்டு வந்து வயலையும் பாத்துட்டு, அப்படி உங்களையும் பாத்துட்டு வரலாம்னு கிளம்புதேன்.

நான்: அப்படியால சரி வா வா... நான் வீட்டுல தான் இருக்கேன். நேரா இங்க வா... அப்புறமா சேர்ந்து வயக்காட்டுக்கு போவோம். நானும் வாரேன்.

தம்பி: சரி அண்ணாச்சி... அப்போ நான் கிளம்பி வாறேன், உங்களுக்கு ஏதும் இங்க பாளையங்கோட்டையில, டவுணுல வாங்கிட்டு வரவேண்டிய சாமான் இருக்கா... சொல்லுங்க வாங்கியாரேன்.

நான்: ஏல மூதி அதெல்லாம் வேண்டாம்ல.. எதுக்கு போட்டு சங்கடபடுத நீ கிளம்பி வா...

தம்பி: அண்ணாச்சி இதுல என்ன சங்கடம், சொல்லுங்க நான் வார பாதைக்கு வாங்கியாரேன்.

நான்: அப்படியா சொல்லுத... உனக்கு ஒன்னும் சங்கடம் இல்லையா... அப்போ ஒன்னு பண்ணு நீ நேரா நம்ம பஜாருல உள்ள கண்ணன் ஸ்வீட்சுக்கு போ, அங்க ஒரு காக்கிலோ காராபூந்தி, அரைக்கிலோ துக்கடா, அரைக்கிலோ ஆந்திராமுறுக்கு, காக்கிலோ நெய்க்கடலை வாங்கிக்கோ... அப்புறம் அப்படியே தெற்க போயி நம்ம ராம் லாலா கடையில ஒரு காக்கிலோ கேரட் அல்வா, ஒரு காக்கிலோ பேரீட்சை அல்வா, ஒரு அரைக்கிலோ மஸ்கோத் அல்வா வாங்கிக்கோ... அப்புறம் நம்ம கோவாலங்கோவில் வழியா வந்து வடக்கே திரும்பினா அங்க ஒரு முறுக்குக்கடை உண்டுலாடே... அதுல ஒரு 25 அச்சு முறுக்கு, ஒரு 25 சுத்து முறுக்கு, ஒரு 25 தேங்குழலு, ஒரு 15 சோமாசி, ஒரு 15 முந்திரிகொத்து, அப்புறம் ஒரு 25 தட்டை வாங்கிக்கோ...

தம்பி: சரி அண்ணாச்சி அப்போ பாத்து வாங்கிட்டு வாரேன்.... (ஏதும் வாங்கனுமானு கேட்டது ஒரு குத்தமா... 🤔)

அண்ணாச்சி: ஏல இருல அதுக்குள்ள யாம்ல பறக்க... இதெல்லாம் வாங்கிட்டு அங்க இருந்து கிளம்பி வரும் போது, அந்த தெரு கடைசியில இருக்க நம்ம கோபாலன் செக்குக்கு போய் அங்க கருப்பட்டி சேர்த்த எள்ளு புண்ணாக்கு முட்டாயினு கேட்டு அதுல ஒரு அரைக்கிலோ வாங்கிக்கோ. அப்புறம் நீ அங்க இருந்து நம்ம ஜங்சன் வழியாதானல வருவ..?

தம்பி: (🙄) ஆமா அண்ணாச்சி.. ஐங்சன் வழியாதான வரனும்.

நான்: அப்போ சேரில நீ நேரா நம்ம ஜங்சன் சாந்தி லாலா கடைக்கு வந்துரு... அங்க நம்ம திருநெல்வேலி அல்வா காக்கிலோ பொட்டலமா ஒரு 6 வாங்கிக்கோல... அப்புறம் சாந்தி கடையிலயே ஒரு அரைக்கிலோ சிப்சு, ஒரு அரைக்கிலோ பர்பி, ஒரு அரைக்கிலோ பாதுசா, ஒரு அரைக்கிலோ ஜாங்கிரி, ஒரு காக்கிலோ மைசூர்பா, ஒரு காக்கிலோ மிளகு காரச்சேவு, ஒரு காக்கிலோ பக்கோடா வாங்கிட்டு அப்படி நாலு கடை தள்ளி நம்ம லெட்சுமி விலாஸ் லாலா கடைக்கு வந்துரு என்னா....

தம்பி: (🙄🙄🤔) லெட்சுமி விலாஸ்ல என்ன அண்ணாச்சி வாங்கனும்?

நான்: ஏல லெட்சுமி விலாஸ் கடையில ஒரு அரைக்கிலோ பாதாம் அல்வா, அப்புறம் ஒரு அரைக்கிலோ பொடி மிச்சரு, ஒரு அரைக்கிலோ பரு மிச்சரு, ஒரு அரைக்கிலோ ஓமப்பொடி, ஒரு அரைக்கிலோ தடியங்காய் முரப்பா, அப்புறம் அங்கையும் ஒரு 4 காக்கிலோ பொட்டலம் நம்ம திருநெல்வேலி அல்வா வாங்கிக்கோல...

தம்பி: (இதெல்லாம் வாங்கிட்டு நான் வந்து சேரதுக்குள்ள நட்ட நாத்து விளைஞ்சு அறுப்பே வந்துரும் 😔) சரி அண்ணாச்சி வாங்கிட்டு வாறேன்....

நான்: ஏல அப்படி டவுண் வழியா வரும் போது நம்ம சநம்ம R S அல்வா கடை கல்லத்தி முடுக்கு தெருல கருக்கல்லுல 6.00 மணிக்குலா தொறப்பான்... ஒரு அரைக்கிலோ திருநெல்வேலி அல்வாவும், ஒரு அரைக்கிலோ பால்கோவாவும் வாங்கிக்கோல... அப்புறம் அந்த முக்குல உள்ள செட்டியார் லாலா கடையில ஒரு அரைக்கிலோ கருப்பட்டி சுத்து முட்டாய், வெள்ளை சீனி சுத்து முட்டாய் ரெண்டும் கலந்து வாங்கிட்டு, ஒரு காக்கிலோ கோவில்பட்டி சேவு இருந்தா அதையும் வாங்கிக்கோல...

தம்பி: (😥) அவ்ளோதானா அண்ணாச்சி.

நான்: அப்படி வர்ற பாதைக்கு நம்ம பூதத்தாரு முக்கு சன்னதி எதிருல நரசுஸ் காபி தூள் கடை இருக்கும்லா அதுல 60க்கு 40 னு சொல்லி ஒரு அரைக்கிலோ காபித்தூளும் வாங்கிருல... அப்படி நம்ம தெற்கு ரத வீதி மாரியம்மன் விலாஸ் கடை திறந்திருந்தா அங்க உளுந்தங்களியும், திருப்பாகமும் வாங்கிக்கோ. சில சமயம் சூடா அங்க போளி போடுவாவோ... அப்படி சூடா போட்டா ஒரு 5 பருப்பு போளியும், 5 தேங்காய் போளியும் வாங்கிருல...

தம்பி: (😷😷😷) ம்ம்ம்ம்ம்....

நான்: என்னல இழுத்துட்டு கிடக்க, சடாருனு கிளம்பி இதெல்லாம் வாங்கிட்டு வந்துசேருல... நான் உனக்கு சூடா அரிசியும் - பருப்பும் உடைச்சு உப்புமா கிண்டி வைக்கேன்... ரெண்டு உருண்டை உப்புமாவ தின்னு ஒரு தம்ளாரு கருப்பட்டி காபிய குடிச்சுட்டு வயக்காட்டுக்கு போவோம்... ஏல கருப்பட்டி காபின உடன தான் ஞாபகம் வருது... கருப்பட்டி வேற காலியாக போவுது, அதனால நீ ஒன்னு செய்... நம்ம அய்யனார் கடைக்கு போயி அங்க ஒரு 3 கிலோ உடன்குடி கருப்பட்டி வாங்கிட்டு, அப்படி ஒரு அரைக்கிலோ பனங்கல்கண்டும் வாங்கிட்டு வந்துருல...

தம்பி: (😔🙄🤔😷) சரி அண்ணாச்சி... எல்லாத்தையும் 🤐😖 வாங்கிட்டு வாறேன்..... வாறேன்.....

நான்: ஏல அப்புறம் வண்டியா மெதுவா மேடு பள்ளம் பாத்து ஓட்டிட்டு வால... பண்டமெல்லாம் நொறுங்கிறாம பத்திரமா கொண்டுவா என்னா.... நான் வைச்சிருதேன்.

தம்பி: 😷😷😷😷😷😷
🤔🤔🤔😋😋😋🤗🤗🤔

*திங்கப்பொறந்தவன் திருநெவேலிக்காரனாக்கும்*

*🙏🏻🙏🏻🙏🙏🙏🤝🙏 ///


வட்டார வழக்கும் சொல்லிச் செல்லும் செய்தியும் 😄😄😄

சக 



kanmani tamil

unread,
Jan 14, 2026, 7:31:06 PMJan 14
to vallamai
வட்டார வழக்குகளில் ஒன்றான சென்னைத் தமிழ் 

/// மெட்றாஸ் பாஷை...

வடசென்னையில்... மீனவர்கள், பிற்படுத்தப்பட்ட; தாழ்த்தப்பட்ட மக்கள் பேசும் பாஷையை தான் நாம் காலம் காலமாக மெட்ராஸ் பாஷை என்றும் சென்னை வழக்கு என்றும் பேசியும் எழுதியும் வருகிறோம். ஆகவே சென்னை கலாச்சாரம் என்றால் அதன் பூர்வகுடிகளான இந்த வடசென்னை மக்களையும் அவர்கள் வாழ்வையும் குறிப்பிடுவதே முறைமை என்பது பலரின் தனிப்பட்ட கருத்து. ......

இந்த பாஷை உருவாக காரணம் ஆங்கிலோ இந்தியர்கள், நவாப் ஆளுகையின் கீழ் வாழ்ந்த உருது, அரபு, தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் வடநாட்டிலிருந்து வந்தவர்கள். இவர்களின் பேச்சு மொழிக் கலப்பு வெகு காலத்துக்கு முன்பிருந்தே வந்திருக்கிறது. இந்த மெட்ராஸ் பாஷையை பிரபலப்படுத்தியதில் தமிழ் சினிமாக்களுக்கு பெரும்பங்கு உண்டு. அதன் வரலாறை பார்ப்பதற்கு முன் சினிமாவில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் சில சொற்களுக்கான அர்த்தங்களை பார்ப்போம். 

சென்னை பாஷையில், உருதுக்கு அடுத்தபடியாக ஆங்கிலச்சொற்கள் அதிகமிருக்கும். காரணம் ஆங்கிலேயர்களிடம் கூலிகளாக வேலை செய்தவர்கள் அங்கு எஜமானர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை வீட்டிலும் பயன்படுத்தினார்கள்.
அங்கு மேடம்… மேடம்… என பெண்களை அழைப்பதை சுருக்கி ஆங்கிலேயர்கள் மேம்… மேம் என அழைத்தனர். அதை பார்த்து மக்கள் வீட்டுப் பெண்களிடம் அப்படியே கூப்பிட நாளடைவில் இன்னாமே…போமே… வாமே… என்றானது.

அந்தாண்ட… இந்தாண்ட…

அந்த எண்டிலிருந்து இந்த எண்ட் வரை என்பதுதான் சுருங்கி அந்தாண்ட இந்தாண்ட என்றானது. 

*அஞ்சலை

வழக்கமாக வடசென்னையில் அஞ்சலை என்ற பெயர் பிரசித்தம். சூர்யா நடித்த ஒரு படத்தில் அஞ்சலை.. அஞ்சலை… அஞ்சலை என்ற பாட்டே உண்டு
அந்த பெயர் எப்படி வந்தது என்றால் ஆங்கிலேயர்கள் வீட்டில் மனைவியை ஏஞ்சல்… ஏஞ்சல்… என கொஞ்சுவதிலிருந்து உருவானது.

கம்னாட்டி,

”ஹே நாட்டி கேர்ல்” என ஆங்கிலத்தில் சிலர் கொஞ்சுவதை பார்த்திருப்போம், இதுதான் எஜமானர்கள் விசுவாசமான குறும்புக்கார வேலைக்காரனை ”கம் நாட்டி பாய்” என அழைக்க அதுவே காலப் போக்கில் கம்னாட்டி என ஆனது.

போடா கஸ்மாலம் என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் இருந்தது.

கசியும் மலம் போன்ற அருவருப்பானவனே என்பதுதான் கஸ்மாலம்.

உடான்ஸ், பீலா, டபாய்க்கிற, கலாய்க்கிற, சோமாரி, நாஷ்டா, டோமர் என பல சொற்கள் சுவாரசியமாக பயன்படுத்தப்பட்டு வருபவை.
”பேமானி” என்பார்கள் பேமானி என்பது அபிமானி என்ற சொல்லின் எதிர்ப்பதம். அபிமானி என்றால் நம்பத்தகுந்தவன், பேமானி என்றால் துரோகி

பெரும்பாலும் இந்த சொற்கள் உருது வழி வந்தவை.
இவற்றில் சில தமிழ் தூய தமிழ் சொற்களும் அடங்கும்.

பன்னாடை, குந்து.. போன்றவை அவற்றில் சில

”சர்தான் சித்த நேரம் குந்து மே” என்பார்கள்

உட்காரச் சொல்வதைத்தான் குந்து என்கிறார்கள் என்பது நாமனைவரும் அறிந்த விடயம். அது எப்படி உருவானதென்றால் நாற்காலி போன்ற இருக்கைகள் உருவாகாத காலத்தில் நின்றுகொண்டே பேசும் விருந்தாளிகளை குந்தியிருங்கள் என சொல்ல ஆரம்பித்தனர். இதன் உண்மையான சொல் குண்டியிரு…. குண்டியால் இரு என்பதன் அர்த்தம் இது. நாளடைவில் இது மருவி குந்தியிரு என்பதாகி பின் குந்துவாகிவிட்டது. இதைத்தான் நமது பாவேந்தர் பாரதிதாசன் “காற்று குந்திச் சென்றது; மந்தி வந்து குந்தி” என்று குந்து, குந்தி என்ற சொற்களை அழகாக தனது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பதை காணலாம்.

பன்னாடை என்பது இயற்கை வடிகட்டி.. தென்னங்கள்ளை இறக்கும் போது அதில் இருக்கும் புழுக்களை, தூசி தும்புக்களை வடிகட்ட பயன்படுத்துவது வழக்கம். அது கெட்ட விஷயங்களை எடுத்துக்கொண்டு நல்ல விஷயங்களை கீழேவிடுவதால் அதுபோல கெட்ட விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்பவனை பன்னாடை என திட்டுவது வழக்கம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மெட்ராஸ் பாஷை என்பது நகைச்சுவை. நடிகர்களால்தான் அதிகம் பேசப்பட்டு வந்தது. அது கிண்டலுக்குரிய பாஷையாக அல்லது அதை பேசினாலே சிரிப்புவரும் பாஷையாக தமிழ் சினிமாவில் உலவி வந்தது மிகுந்த ஆச்சர்யமான ஒன்று. சினிமாவின் கர்ப்பகிரகமாக சென்னை இருக்கும் போதே சென்னை பாஷை ஏதோ அன்னியமாக வேற்றுகிரக பாஷை போல உருவாக்கம் கண்டது ஆச்சர்யம் தான்.

Reply all
Reply to author
Forward
0 new messages