சில கோயில்களின் தனித்துவங்கள்

431 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 2, 2024, 1:45:40 AM7/2/24
to vallamai
இப்படி வேறெங்கிலும் பார்த்தது உண்டா ?

பக்தர்கள் குங்குமமும் புற்று மண்ணும் இட்டுக்கொள்ளும் போது முகம் பார்க்க ஒவ்வொரு தூணிலும் கண்ணாடி ...

சங்கரன் கோயில் - சங்கரலிங்கனார், சங்கர நாராயணர், கோமதி அம்மை என மூன்று கருவறைகளைக் கொண்டு சமய நல்லிணக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் ஒருங்கு போதிக்கும் கோயில்.
'கோமதீஇஇ'  என பாரதியார் வாய்விட்டுப் பாடியது இங்குள்ள அம்மனைத் தான். இது திருமதி. செல்லம்மாள் பாரதியின் தாய் வீட்டார் வாழ்ந்த கடையநல்லூருக்கு மிக அருகில் உள்ளது.
'நெல்கெட்டுச்செவல்' என்று பெயர் பெறும் பூலி(ழி)த் தேவன் போற்றி வழிபட்டு மறைந்த கோயில். பொது மக்களுக்கு 'ழி' உச்சரிக்க இயலாமல் போக; பூலித்தேவன் ஆகி; பின்னர் பொருள் புரியாமல் போக; புலித்தேவன் என்று பெயர் மாற்றம் பெற்ற தலைவனின் பெயர் சொல்லும் கோயில்.
இங்கு தான் கோயிலுக்கு உள்ளேயே பெரிய புற்றும் உள்ளது. அந்த மண்ணின் மருத்துவ குணம் இன்றும் போற்றப்படுகிறது. குழந்தை பிறந்த வீட்டிற்குள் புற்றுமண் கட்டி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நானும் வீட்டில் ஒரு புற்றுமண் கட்டி வைத்து இருப்பேன். பேரப் பிள்ளைகளுக்காகப் பயன்படுத்தியது உண்டு.       


சங்கரன் கோயிலில் புற்றுமண் எடுக்கும் இடம் 

பயமே இல்லாமல் உள்ளே கை விட்டு எடுப்பார்கள். எனக்கு அந்தத் துணிவு வந்ததில்லை.

கீழே இருப்பது பூழித்தேவன் நினைவாக அமைக்கப்பட்ட அறை... முற்றிலும் மர வேலைப்பாடு. உள்ளே- பூழித்தேவனின் உருவம் வரைந்த படம். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி அவர்களது கைக்கு அகப்படாமல் உயிர் தப்பித்த ஒப்பற்ற வீரன் பூழித்தேவனைக் கடைசியாக மக்கள் இந்தக் கோயிலில் தான் பார்த்தார்களாம்! அதன் பிறகு யாருடைய கண்களுக்கும் தென்படவில்லையாம். 


குற்றாலம் சென்று குளித்துத் திரும்புபவர் யாராகிலும் தரிசிக்கும் இரண்டு கோயில்களில் ஒன்று இந்த சங்கரன் கோயில்; இன்னொன்று தென்காசிக் கோயில்.




Raju Rajendran

unread,
Jul 2, 2024, 9:43:17 AM7/2/24
to vall...@googlegroups.com
கோவையில் வாழைதோட்டத்து ஐயன் கோவிலில் புற்று மண் எடுப்பர். 

திங்., 1 ஜூலை, 2024, 11:45 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv-KcPL5brQiMLyhb6PW9DGf4h%3DXOoeLodzbZ2_nMjVww%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jul 2, 2024, 12:34:45 PM7/2/24
to vallamai
ஊர்ஊருக்கு நாக வழிபாடும் புற்றுமண் எடுப்பதும் வழக்கம் தான் வேந்தர் ஐயா.
இக்கோயிலின் தனித்துவங்கள்...
1. மூன்று தலைமைத் தெய்வங்களின் கருவறைகள் வரிசையாக... இடது கோடியில் சங்கரலிங்கம்... வலது கோடியில் அம்மன்... இடையில்- 
2. சங்கரநாராயணர் என்ற பெயரில் ஒரு பாதி சிவனும் மறுபாதி பெருமாளும் ஆக இணைந்த திருவுருவம்... சைவ வைணவ நல்லிணக்கம். வலது புறம் சிவன்; இடதுபுறம் பெருமாள். 

3. அம்மன் சன்னிதியில் கோமதி... இங்கிருந்து கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கரிவலம்வந்த நல்லூரில் எழுந்தருளி இருக்கும் அம்மனும் கோமதி அம்மனும் அக்கா தங்கை என்கின்றனர்; அதாவது காளித்தாயும் மாரித்தாயும்... 

4. கோமதிஅம்மன் சந்நிதிக்கு எதிரே தியானம் செய்வதற்கு அமைக்கப்பட்டு இருக்கும் பத்மபீடம். யார் வேண்டுமானாலும் அதில் அமர்ந்து தியானிக்கலாம். அந்தப் பத்மபீடத்தில் நாம் அமரும் இடத்தில் ஒரு துளை  இருக்கும். அத்துளை கோமதி அம்மன் பாதங்களுக்கு அடியில் வைக்கப் பட்டிருக்கும் இயந்திரத்தோடு இணைக்கப் பட்டது என்பர். அதில் அமர நீளமான வரிசை இருக்கும். ஆனாலும் காத்திருந்து என் பேரப் பிள்ளைகளைச் சில மணித்துளிகள் அமர வைப்பேன்; நானும் அமர்ந்து இருக்கிறேன். என் மகனுக்குத் திருமணச் சிக்கல் நேர்ந்த போது கூட அங்கே அமர வைத்து 'நிதானமாக யோசித்து முடிவெடுக்க' வற்புறுத்தி இருக்கிறேன். மனவுளைச்சலோ நிம்மதியின்மையோ; எக் காரணம் ஆயினும் பொதுமக்கள் பெருவாரியாக நம்பிக்கையோடு பின்பற்றும் செயல்பாடு இதுவாகும். இப்போது நாளுக்கு நாள் பெருகும் ஐனத்தொகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அப்பீடத்தில் யாரும் அமர இயலாத படி; கொச்சைக் கயிற்றால் தடுப்புக் கட்டி விட்டனர். 

சக 

kanmani tamil

unread,
Jul 3, 2024, 11:52:17 AM7/3/24
to vallamai
5. அடுத்த சிறப்பம்சம்: கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறத் தூணில் உள்ள சிற்பம் பற்றிய விபரம். அடியில் ஒட்டி உள்ள உருவத்தின் கீழே எழுதி இருக்கும் பெயர் 'காவல் பறையன் மணிகர்ணீகன்' . (இங்கே ஜாதிப் பெயரைக் குறிப்பிட வேண்டிய சூழலில் தான் நான் பயன்படுத்துகிறேனே தவிர வேறு நோக்கம் ஏதும் இல்லை.)
  image.png
(நான் கோயிலுக்குச் சென்ற போது என் கைபேசியை எடுத்துச் செல்லவில்லை; என் மகனைப் படம் எடுக்கச் சொன்ன போது அவனுக்கு அந்தப் பெயரின் மேல் ஆர்வமோ அக்கறையோ இல்லை. வெறும் சிலையை மட்டும் எடுத்து இருக்கிறான்.) மணிகர்ணீகன் என்ற பெயர் காசியில் ஒரு துறைக்கு உரிய பெயர் என்று நினைவு. காவல் தெய்வம் கருப்பசாமியைக் கூடக் கோயிலுக்கு வெளியே தனி இடத்தில் வைத்துத் தான் பல தமிழகக் கோயில்களில் பார்த்து இருக்கிறேன். ஆனால் இங்கு கோயிலுக்கு உள்ளே முதல் தூணில் ... சகல மரியாதையுடன் பார்த்த போது தென்தமிழகத்தின் தனித்துவமும் இந்தக் கோயிலின் தனித்துவமும் புரிந்தது. இன்னும் ஒரு சிறப்பும் இருக்கிறது. நாளை... 
சக  

kanmani tamil

unread,
Jul 4, 2024, 12:42:57 AM7/4/24
to vallamai

நான் பத்மபீடம் என்று சொன்னது தோற்றத்தை அடியொட்டி நானாக வழங்கும் பெயர் தான். எல்லோரும் அதைச் சக்கரக் குழி என்பர்.

மாரியம்மன் காளியம்மன் வழிபாட்டில் இடம் பெறுவது போலவே பொதுமக்கள் கோமதி அம்மனுக்கும் மாவிளக்கு எடுப்பர்; பூக்குழி இறங்குவர். 

சைவம், வைணவம் இரண்டு சமயங்களின் ஒத்திசைவுக் கோயில் ஆதலால் சங்கர நாராயணர் சந்நிதி முன்னர் பரமபத வாசல் திறக்கும் வைபவம் வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும். 

கோயிலில் வெகு விமரிசையாக நடப்பது ஆடித் தபசுத் திருவிழா. ஊர்வலம் வரும் போது பக்தர்கள் அனைவரும் அவரவர் நிலத்தில் விளைந்த பஞ்சைக் கோமதி அம்மன் மீது தூவி வழிபடுவர். 

ஒரு நாட்டார் தெய்வம் (folk deity) பெருந்தெய்வமாக உருவாகி உள்ள வரலாற்றின் எச்சங்களை இங்குள்ள வழிபடு முறைகளில் காண இயல்கிறது. இப்போது இங்கு பூசை செய்வோர் ஐயரும் பட்டரும் தாம் ஆனாலும்; மக்கள் தம் பாரம்பரியமான நடைமுறைகள் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. அதிலும் ஒரு ஆரோக்கியமான மானசீகச் சமநிலை உருவாகி உள்ளதைக் காண இயல்கிறது.

சமுதாயம் நல்ல திசையில் மேனோக்கி நகர்வது தெரிகிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக இக் கோயில் நின்று நிலைத்து ஒரு நாகரிகமான சமூகத்தை உருவாக்கி இருக்கும் இவ்வூரின் சிறப்பு அங்கே கிடைக்கும் பிரியாணியில் இருக்கிறது. ஊருக்குள்ளே சுற்றிலும் தடுக்கி விழுந்தால் பிரியாணிக் கடை தான்.

அரிசி விளையாத; மணப் பொருட்கள் விளையாத; ஏதோ ஒரு மேலைநாட்டு ரெசிபி இல்லை. சீரகச் சம்பா- தமிழ்நாட்டு மண் மணத்துடன்; பட்டை, ஏலம், கிராம்பு என அடுத்த மேலைமலைப் பொருப்பில் விளையும் ஒய்யாரங்களுடன்; இவ் வறண்ட பூமியின் கிடைத்தற்கரிய மேய்ச்சல் நிலத்து ஊட்டத்துடன் வளர்ந்த வெள்ளாட்டங்கறிக் கலவையோடு; கபிலர் 'கறிசோறு' என உம்மைத் தொகையாக அழைத்த தமிழகத்துப் பாரம்பரிய ஊன்சோறு. இந்த ருசியை மிஞ்சத் தமிழகம் முழுவதிலும் எந்த நட்சத்திர உணவகமும் பக்கத்தில் நிற்கக் கூட முடியாது. 

சக 

kanmani tamil

unread,
Jul 4, 2024, 4:42:24 AM7/4/24
to vallamai

இந்த ஆண்டு திருவிழாவிற்கு உரிய அறிக்கை


kanmani tamil

unread,
Jul 17, 2024, 5:21:26 AM7/17/24
to vallamai
இன்று ஆடி1ம் தேதி- எங்கள் வட்டாரத்தில் இது 'தலையாடி' கொண்டாட்டம் எனப்படும். 

எல்லோரும் மறுமகன்களையும் மகள்களையும் விருந்துக்கு அழைத்து  வீட்டில் வடை பாயசத்துடன் கறிச்சோறு சமைப்பர். புத்தாடை உடுத்தி வழிபாட்டுடன் நடக்கும் இன்றைய சிறப்பான நிகழ்வை நடத்த இயலவில்லை எனின் ஆடி18க்கு அழைத்து (இது இடை ஆடி) உபசரிப்பர்.  அதுவும் முடியாமல் போனால் ஆடியின் பிற்பகுதியில் ஒருநாளைத் தேர்வு செய்து எப்பாடு பட்டாயினும் அதை ஒரு கடமையாகக் கருதி நிறைவேற்றுவர் (கடையாடி).

ஆடிக்கு மருமகனை அழைக்கவில்லை என்றால் அது மாபெரும் தவறாகக் கருதப்படும் (ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப் பிடித்து ..ருப்பால சாத்து என ஒரு சொலவடையும் வழக்கில் உள்ளது. முழுவதுமாகச் சொல்ல மனம் வரவில்லை; அது அவமதிக்கும் சொல் ஆகி விடும்; யாரோ விஷமிகள் தோற்றுவித்து... அது இன்று வரை அழியவில்லை.)

ஆடிப்பூரம், ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு என இந்த மாதம் முழுவதும் சிறப்பான நாட்களுக்குப் பஞ்சமே இல்லை. 

இன்று சங்கரன் கோயிலில் ஆடித் தபசுத் திருவிழாவின் ஆறாம் நாள் கொண்டாட்டம். ஐந்து நாட்களுக்கு முன்னரே கொடி ஏற்றி விட்டார்கள். 


இந்தக் காணொலியின் 54:16ம் மணித்துளியில் இருந்து இக்கோயிலின் தலவரலாறு பாடப்படுகிறது. அதில் காவல் பறையனின் பங்கும் இடம்பெறுகிறது. 

சக 

Raju Rajendran

unread,
Jul 17, 2024, 10:42:46 PM7/17/24
to vall...@googlegroups.com
எனக்கு தீபாவளிக்கு மட்டும்தான் அழைப்பு.

புத., 17 ஜூலை, 2024, 2:51 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jul 18, 2024, 12:15:16 AM7/18/24
to vallamai

kanmani tamil

unread,
Jul 21, 2024, 2:31:47 AM7/21/24
to vallamai
இன்று ஆடித்தபசுத் திருவிழாவின் 11ம் நாள். பொதுமக்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்வு தான்  பின்வரும் காணொலியில் முதலிடம் பெறுகிறது. 


கோயில் பிரகாரத்தில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து வாழை இலையில் மாவைப் பரப்பி அதில் விளக்கேற்றும் காட்சிகள் ஆங்காங்கு தெரிகின்றன. 

அந்த முறை மட்டுமின்றி பெரிய பாத்திரத்தில் மாவைப் பாகு சேர்த்துப் பிசைந்து உருட்டி; உருண்டைகள் ஆக்கி; விளக்காக உருமாற்றி; தீபம் ஏற்றி; தேங்காய் (உடைத்து), பழம் வைத்து இறைவியை நோக்கித் தாமே ஆராதிப்பதையும் பார்க்கிறோம். 

உடல்நலம் கருதி நேர்ச்சை செலுத்துவோர் அதே கோயில் பிரகாரத்தில் நெடுஞ்சாண் கிடையாகப் படுக்க; கணவனுக்கு மனைவியோ அல்லது மகனுக்கு அம்மாவோ அல்லது மகளை அமர வைத்து அப்பாவோ அல்லது வீட்டுப் பெரிய மனுஷிக்கு இளவட்டப் பெண்ணோ (எந்த உறவாகவும் இருக்கலாம்.); அந்த விளக்கின் ஒளியைத் தாய் கோமதியின் தெய்வீக ஒளியாக மனதார நம்பி; வாழை இலையையே தாம்பாளம் போல ஏந்திக் கொண்டு;  தலை முதல் கால் வரை ஒவ்வொரு உறுப்பிலும் வைத்து எடுக்கும் வழிபாட்டு முறை தெள்ளத் தெளிவாகக் காட்டப் படுகிறது. 

மொட்டை போட்டு வந்து அமர்ந்து வழிபடுபவரும் தென்படுகிறார். 

இவை பாரம்பரிய நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் ஆகும். 

இதே கோயிலில் இன்னொரு புறம் உற்சவத் திருமேனிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. 

உண்மையில் இருவேறு பண்பாட்டுக் கலப்பின் தற்போதைய நிதர்சனமான நடைமுறைகளும் உண்மைகளும் வெளிப்படுகின்றன. 

இங்கு யாரும் யாரையும் திட்டம் போடும் சதிகாரராகப் பார்க்கவில்லை. 
யாருடைய நம்பிக்கையையும் யாரும் இழிவுபடுத்தவில்லை. யாருடைய செயல்பாட்டிற்கும் உயர்வுதாழ்வு கற்பிக்கப்படவில்லை. 
எந்த ஒரு அரசியல்வாதியின் தலையீடும் வியூகமும் கொள்கைப்பரப்பும் இல்லாமல் தமிழ்ச் சமூகம் அமைதியாகத் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. 

kanmani tamil

unread,
Aug 6, 2024, 11:11:44 AM8/6/24
to vallamai
அடுத்து நான் இன்று கண்டு வழிபட்ட தனித்துவம் கொண்ட கோயில் தாமிரபரணிக் கரையில் இருக்கும் பாபநாசம் சிவன் கோயில். 

உலகம்மை எழுந்தருளி இருக்கும் இக் கோயிலின் தனித்துவம் நம் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க ஏற்ற சிறந்த தலமாகக் கருதப்படுவது தான்.

படாடோபம் ஏதும் அற்ற எளிமையான இக்கோயிலில் இயற்கை எய்திய நம் குடும்பத்து முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். 

ஆடி அமாவாசை மட்டும் அன்று; ஆண்டு முழுவதும் இந்த நம்பிக்கை செயல்படுத்தப் படுவதைக் காணலாம்.

ஐயருக்கு இடம் கொடுக்காமல் தாமிரபரணியில் குளித்து விட்டுக் கோயிலுக்குச் சென்று மோட்சதீபம் ஏற்றுவோர் மிகுதியாக உள்ளனர். 

 ஐயர் வைத்துத் திதி கொடுக்கும் வழக்கம் எனக்குச் சற்றும் பரிச்சயம் இல்லாதது. திருமணத்திற்குக் கூட ஐயருக்கு இடம் கொடுக்காத கும்பலில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். ஆனால் குடும்பத்தில் அடுத்த தலைமுறைக்காக நம்மை நாம் மாற்றிக் கொண்டு அனுசரித்துப் போக வேண்டிய தேவை உள்ளதே. 

இன்று தான் வாழ்க்கையில் திதி கொடுப்பதை நேரில் பார்த்தேன். என் மகன் தனது பெரியப்பாவிற்காக மோட்ச தீபம் ஏற்றினான் (வயோதிகம் காரணமாக 85 வயதில் இயற்கை எய்திய அவருக்கு அவன் தான் கருமம் செய்தான்). இன்று 40ம் நாள்; பிண்டம் கரைத்து வழிபட்டான். 

ஐயர் கணபதி வழிபாட்டோடு தொடங்கிக் குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து மொத்தம் 19 வழிபாடுகளுக்கு விளக்கம் அளித்து ஹோமம் வளர்த்து... (இதைத் தானே தக்கிணாக்கினீயம் என்போம்) நடத்திக் கொடுத்தார். என் மகன் 'ஸ்வாஹா' மட்டும் சொல்லித் தேவதைகளுக்குப் பலிப் பொருட்களைச் செலுத்தினான். 

எனக்குப் புதுமையாகத் தோன்றியது... சப்தகன்னியர்க்கும் இந் நிகழ்ச்சியில் இடம் இருந்தது என்பது தான். எல்லாத் திதி நிகழ்ச்சியிலும் இப்படி இருக்குமா???
சுடலையாண்டி வழிபாடும் நடந்தது!!! 

முழுக் குடும்பத்தையும் சேர்த்து; சிவகாசி பொட்டல் காட்டில் இருந்து இழுத்துக் கொண்டு போய்த் தாமிரபரணியில் மணிக்கணக்கில் ஊறிக் கிடந்து விட்டு வந்ததும் இந்தக் கோயிலின் தனித்துவம் தான். 

சக 

kanmani tamil

unread,
Aug 9, 2024, 9:00:16 AM8/9/24
to vallamai




இன்று ஆடி வெள்ளி...
எல்லா அம்மன் கோயில்களிலும் மட்டுமின்றி; சிவன் கோயில்களிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு தான்.

அதுவும் இன்று கருடபஞ்சமி ஆதலால் வாராகி அம்மன் கோயிலில் அளவிட முடியாத  கூட்டமும் கொண்டாட்டமும் ஹோமகுண்டமும் பலியும் பக்திப் பரவசமும்... 

அருப்புக்கோட்டை வாராகி அம்மன் கோயிலில் நசுங்கிவிடாமல் ஒரு மணித்துளி அம்மனின் முகதரிசனம் கிடைத்ததே சற்றும் எதிர்பாராத பெரும் பேறு என்று கூறத்தக்க வகையில் இருந்தது. 

அந்த ஒரு மணித்துளியில் அம்மனைத் தன் கைபேசிக்குள் படம் பிடித்த பெருமை என் தோழியையே சேரும். 

மந்திரங்கள் கூறிப் பூரண ஆகுதி முடிந்த பின் கரக நீரைத் தெளித்த அந்த நொடியில் பக்தர்களுக்குக் கிடைத்த மனநிறைவு நம்பிக்கையின் பலத்தைக் காட்டியது. 



சப்த கன்னியருள் ஒருவளாகிய வாராகிக்குத் தனிக் கோயிலாக அமைந்து இருப்பதே இக்கோயிலின் தனித்துவம்.
சக 

kanmani tamil

unread,
Aug 10, 2024, 1:38:28 AM8/10/24
to vallamai

திருச்சுழி - ரமண மகரிஷி பிறந்த ஊர். அருப்புக்கோட்டையில் இருந்து 15கி.மீ. தூரத்தில் உள்ளது. சிறிய ஊர் தான்.
ஊருக்கு அழகு சேர்ப்பது பாண்டியர் கட்டிய பூமிநாதசாமி திருக்கோவில். பழைமை அழகு சற்றும் மாறாத கற்றளி . சாமி சந்நிதி கருவறையில் லிங்கம் இருக்க; அம்மனுக்கு உரிய கருவறை செல்ல வேண்டுமாயின் கோயிலை விட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்து; அடுத்து இருக்கும் சற்றே சிறிய கோயில் வாசலில் நுழைய வேண்டி உள்ளது. சாமி சந்நிதி பிரகாரத்தில் தான் சப்தகன்னியர் எழுந்து அருள் பாலிக்கின்றனர்.    


இந்தக் கோயிலின் தனித்துவம் ரமண மகரிஷியின் பாதம் பட்ட கோயில் என்பதே. சுந்தரர் தேவாரம் பாடி உள்ளார் என்று கூறுகின்றனர்; பார்க்க வேண்டும். சக

kanmani tamil

unread,
Aug 12, 2024, 12:43:19 AM8/12/24
to vallamai
ISKCON- International Society for Krishna Consciousness 

இவ்வமைப்பின் கிளை ஒன்றிற்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. 

கோயிலில் நடக்கும் பூஜை போலவே இங்கும் பகவான் கிருஷ்ணருக்குப் பூஜை நடத்துகின்றனர்.

இசைமுழக்கம், தீபம், தூபம், பூ அலங்காரம், பாட்டு இசைத்தல், ஹோமம் வளர்த்தல் எல்லாம் பொதுவான வழிபாட்டு முறைகள் தாம். 

தனித்துவம்: சில கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் தெரிகிறது. நாம் சாமிக்கு மாலையே பூச்சரமோ வாங்கினால் அதைப் பக்குவமாக பயபக்தியுடன் எடுத்துச் செல்வோம். ஆனால் இங்கு ஒரு விசித்திரமான பழக்கம் பார்த்தேன். தன் வீட்டில் பூத்த சம்பங்கிப் பூக்களை எடுத்து வந்த அம்மா ஒருவர்; அதை அங்கு வந்திருந்த ஒவ்வொருவரிடமும் கொண்டு வந்து நுகரக் கொடுத்தார். எல்லோரும் நுகர்ந்து பார்த்த பிறகே அதை பகவானுக்குப் படைத்தார். 

ஏன் இந்த நடைமுறை என்று சிந்தித்த போது...
'இறைவன் படைப்பில் எத்தனை எத்தனையோ அழகுகள்!!! அவற்றில் ஒன்று இப்பூவின் மணம். இதை நுகர்ந்து பார்ப்பதன் மூலம் அவ் இறைப் பொருளின் பெருமையைப் புரிந்து கொள்வோம்; வழிபடுவோம்' எனச் சொல்வது போல் இருந்தது. 

காவி அணிந்த சந்நியாசிகள் தாம் பூசித்து முடித்தவுடன் பூசையைக் காண வந்த பக்தர்கள் ஒவ்வொருவரையும் பூவிட்டுத் தூபம் காட்ட நெறிப்படுத்தினார்.

 





சக 

kanmani tamil

unread,
Aug 13, 2024, 5:38:07 AM8/13/24
to vallamai
ஒரு ஊரில் இரண்டு சிவன் கோயில்கள்; இரண்டும் ஒரே அமைப்பில்...

அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்று  எல்லோரும் அந்தக் கோயிலுக்குள் சென்று வழிபடலாம். ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் பாண்டியர் கட்டிய கோயில் என்கின்றனர். ஆனால் ஒருகாலத்தில் சிலருக்கு அக்கோயிலில் நுழைவும் வழிபாடும் மறுக்கப்பட்டது. வரலாற்றுக் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் ஏற்றத் தாழ்வுகளும் பல விதமான போராட்டங்கட்கு வழி வகுத்து உள்ளன. அதில் ஒன்று கோயில் நுழைவுப் போராட்டம். இவ்வூரில் நடந்த போராட்டம் இன்னொரு சிவன் கோயில் தோன்ற வழிவகுத்தது. அது தான்
அமுதலிங்கேஸ்வரர் கோயில். 'நீ நுழைய விடவில்லை என்றால் நாங்களே கோயில் கட்டிக் கொள்கிறோம்; அதில் எல்லோரும் நுழைந்து சாமி கும்பிடலாம்' என்று சவால் விட்டுக் கட்டிய கோயில். 

 கோயிலுக்கு உள்ளே நான் கண்ட தனித்துவம் ஒவ்வொரு சந்நிதியிலும் ஏதோ ஒரு இடத்தில் அதைக் கட்ட உதவியவரின் பெயர்கள் சமூக அடையாளத்துடன் பொறிக்கப்பட்டு இருப்பது தான்.  

வருங்காலத்தில் சமூக நிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ?!
இந்தக் கோயிலுக்கு உள்ளும் நம் சந்ததியினர் நுழைய இயலாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் மனக்கிலேசமும் ஒவ்வொரு கல்வெட்டுப் பொறிப்பிலும் எதிரொலிப்பதைக் காண இயல்கிறது.

சக 

kanmani tamil

unread,
Aug 14, 2024, 3:48:46 AM8/14/24
to vallamai
மீனாட்சி சொக்கநாதர் கோயில் 


இரண்டு சிவன் கோவில்களிலும் இடம் பெற்றுள்ள சப்தகன்னியர் பீடங்கள்:

மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில்...

அமுதலிங்கேஸ்வரர் திருக்கோயிலில்...


சக 

kanmani tamil

unread,
Aug 15, 2024, 3:48:18 AM8/15/24
to vallamai
மீனாட்சி சொக்கநாதர் கோயில் பற்றி  மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பேராசிரியர் எனக்குப் பழக்கம் இல்லாதவர் ஆதலால் என்னால் அதை இங்கே தர இயலவில்லை.  

2019ம் ஆண்டில் மார்ச் 15 முதல் ஏப்ரல் 12 வரை - வலையுலகில் நான் நுழைந்த புதிதில் - எனக்குப் பணி மூப்பாளராக (senior) என்னுடன் பணியாற்றி ஒய்வு பெற்ற திருமதி கஸ்தூரி தயாநிதி அவர்கள் மேற்சுட்டிய அமுதலிங்கேஸ்வரர் கோயில் பற்றி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த M.Phil. ஆய்வேட்டினை மின்தமிழ் குழுமத்தில் பகிர்ந்து உள்ளேன். அது நூலாக்கம் பெறவில்லை ஆதலால் அதை மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு ஆய்வேடு எந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஆய்வேடு சரியான மாதிரி ஆக இருக்கும்.

கணிப்பாளர் முன்னுரை 

‘அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக் கோயில்கள்- ஓர் ஆய்வு‘ என்னும் பெயரில் அமைந்துள்ள இவ் ஆய்வேட்டை 1984ல் சமர்ப்பித்த திருமதி கஸ்தூரி தயாநிதி அவர்கள் ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் என்னோடு இருபத்தைந்து ஆண்டுக்காலம் ஒரே துறையில் பணியாற்றியவர். அவரது தலைமையின் கீழும் மூன்றாண்டு காலம் நான் பணியாற்றி உள்ளேன்.

ஆய்வு நிறைஞர் பட்டத்திற்காக இந்த ஆய்வை அவர் செய்திருக்கிறார்; எனினும் இந்த ஆய்வேட்டில் உள்ள வரலாற்றுக்கூறுகள் இதன் மதிப்பை மேலும் உயர்த்துகின்றன.

கணினியும், வலைத்தளமும் மக்களிடையே புழக்கத்தில் இல்லாத அந்தக்  காலத்தில்; தட்டச்சு இயந்திரத்தில் தட்டி ஆய்வேடு சமர்ப்பித்தவர்கள் எல்லாம் 4+1என்ற கணக்கில் தான் பிரதிகள் எடுத்தோம். அவற்றில் முதல் 3பிரதிகளைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து விடுவோம். நான்காவது பிரதி நெறியாளருக்கு உரியதென்று கொடுத்து விடுவோம். எஞ்சிய ஐந்தாவது(அதாவது(+1) பிரதியை மட்டும் தான் ஆய்வாளர்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்வோம். அது அப்போதே மங்கலாகத் தான் இருக்கும். இந்த ஆய்வேடு 34ஆண்டுகள் கழித்து இப்போது கணிப்படுத்தப் பட்டுள்ளது. தட்டச்சு மை ஆய்வேட்டில் விரிந்து பரந்து; சில இடங்களில் எழுத்துக்களை அடையாளம் காண்பது சிக்கலான சவாலாகவும் இருந்தது. ஒவ்வொரு முறை ஆய்வேட்டைத் திறக்கும் போதும் , மூடும் போதும் பொன்னோ / பூவோ என்று தான் கையாள வேண்டி இருந்தது.

 

அது மட்டுமன்று; ஆய்வாளர் பின்னிணைப்புக்களாகக் கொடுத்திருக்கும் கையெழுத்துப் பிரதி, துண்டு அறிக்கை, கும்பாபிஷேக அழைப்பிதழ் எல்லாம் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தவை. பின்னிணைப்பு 4ஐப் பார்க்கும் போது- நல்லவேளையாக இந்த ஆய்வேட்டை இப்போது கணிப்படுத்தினோம்; இல்லை யெனில்  இன்னும் தெளிவின்றிச் சில உண்மைகள்  மங்கி மறைந்திருக்கும் என்று தான் எண்ணத் தோன்றியது. இப்படி எத்தனையோ வரலாற்றுக் குறிப்புக்கள் அடங்கிய ஆய்வேடுகள் காப்பாற்றப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. சில தரமான ஆய்வேடுகள் தேடினாலும் கிடைப்பதில்லை என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை தான்.

ச.கண்மணி கணேசன்



அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்  

கோயில்கள் ஓர் ஆய்வு

 






மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர்(M.Phil.) 

பட்டத்தின் ஒருபகுதியாக அளிக்கப்பெறும் ஆய்வேடு




திருமதி. கஸ்தூரி தயாநிதி



 

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

 மதுரை                                                                                                  ஏப்ரல்-1984




டாக்டர் நா. செயராமன், எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி., 

இணைப்பேராசிரியர், தமிழ் மற்றும் இந்திய மொழிப்புலம்,

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,

 மதுரை- 21. நாள் 30.4.84

                                                                                                                                                                                                                                                                                                                                                                      

மேற்பார்வையாளர் சான்றிதழ் 

"அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைக்  கோயில்கள்- ஓர் ஆய்வு" என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்.) பட்டத்திற்குச்  செய்யப்பட்ட இவ் ஆய்வு ஆய்வாளரின் சொந்த முயற்சியால் உருவானதே ஆகும். இதற்கு முன் இவ் ஆய்விற்கு எந்தவிதப் பட்டமும் அளிக்கப் பெறவில்லை என்று சான்று அளிக்கிறேன்.

                                                                                                                                                                                                                                             


    மேற்பார்வையாளர் கையொப்பம்                                                                                                                                                                                                                 (நா. செயராமன்) 

















கஸ்தூரி தயாநிதி,

எம்.ஃபில். மாணவி,

தமிழ் மற்றும் இந்திய மொழிப்புலம்,

 மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,

 மதுரை- 21.

                                                                                                                                                                                                                                               நாள் :30.4.'84


ஆய்வாளர் உறுதிமொழி

"அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைக் கோயில்கள் - ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் (எம்பில்.) பட்டத்திற்குச்  செய்யப்பட்ட இவ் ஆய்வு என் சொந்த முயற்சியில் உருவானதே ஆகும். இதற்கு முன் எந்தப் பட்டத்திற்கும் இவ் ஆய்வேடு அளிக்கப்பெறவில்லை என்று உறுதி அளிக்கிறேன்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     ஆய்வாளர்(கையொப்பம் )                                                                                                                                                                                                                                கஸ்தூரிதயாநிதி

 

 உறுதிக் கையொப்பம் 

(நா. செயராமன்)

மேற்பார்வையாளர்

























நன்றியுரை 

இவ் ஆய்வினை மேற்கொள்ள வாய்ப்பினை நல்கிய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாருக்கும் என் நன்றி உரித்தாகும்.

ஆய்வு நடத்த இசைவு தந்த எஸ். எப். ஆர் மகளிர் கல்லூரி நிர்வாகத்தினருக்கும்,கல்லூரி முதல்வர் திருமதி சரோஜினி நடராசன் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.

இவ் ஆய்வு நடத்த எனக்கு அனுமதியளித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர் தமிழண்ணல் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.

ஆய்விற்கு மேற்பார்வையாளராக இருந்து, ஆய்வின் எல்லா நிலைகளிலும் ஊக்கம் அளித்துச்  செம்மைப்படுத்தி முழுமையுறத் துணைபுரிந்த டாக்டர் நா.செயராமன் அவர்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி உரித்தாகும்.

ஆய்விற்குத் தேவையான உதவிகள் தந்த அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை நிர்வாகத்தினருக்கு என் நன்றி உரித்தாகும். "அருப்புக்கோட்டை ஈ.வெ.ராம.சகாப்த 'நாடார் குல மித்திரன்' பத்திரிகாதிபர் கு.ஆ.முத்து நாடார் நூல்நிலைய" உரிமையாளருக்கு என் நன்றி உரித்தாகும். 

சிறப்பான முறையில் தகவல்கள் நல்கி ஆய்விற்கு உறுதுணையாய் நின்ற உத்தண்ட நாடார், அ.காசி,எம்.ஏ.,பி.டி., கா.ஆவுடைத்தங்கம்,எம்.,ஏ.,பி.டி., ஆகியோருக்கு என் நன்றி உரித்தாகும். ஆய்விற்குத் தேவையான தகவல்கள் தந்த ஏனைய தகவலாளர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.  

தட்டெழுத்துப் பணியைச் செம்மையாகச் செய்து தந்த செல்வராஜ் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.                                                                                                                                                                                                                                                             

கஸ்தூரி தயாநிதி



                                


சுருக்கக் குறியீடுகளின் விளக்கம்


                        1. தொ. ஆ.---             தொகுப்பு ஆசிரியர்

                         2. செ.மீ.                  ---             சென்டி மீட்டர் 

                         3. ப.                           ---             பக்கம்

                         4. ப. ஆ.                   ---             பதிப்பு ஆசிரியர்

                         5. ப. ஆ. இல்லை  ---             பதிப்பித்த ஆண்டு இல்லை 

                         6. மீ.                       ---             மீட்டர்

                         7.   மொ.ஆ.            ---              மொழிபெயர்ப்பு ஆசிரியர்

                          8. Ed.                        ---              எடிட்டர் 

                          9. p .                        ---              page  



























                                                 












உள்ளடக்கம் 

1.             முன்னுரை                                                                     1 

 2.             அருப்புக்கோட்டை நகரம் - ஓர் அறிமுகம்              7 

 3.             கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும்               16 

 4.             கோயில்களின் அமைப்பு                                              35 

            5.             கோயில்களின் நாள் வழிபாடு                                     57 

           6.             ஆண்டு விழாக்களும் திருவிழாக்களும்                  66

7.              கோயில்களும் நாடார் சமூகமும்                             118

 8.              கோயில்களும் இலக்கியங்களும்                             138

            9.              முடிவுரை                                                                        170 

10.            துணைநூல் பட்டியல்                                                   

 11.            பின்னிணைப்பு                                                                                                                                  







முன்னுரை 

ஆய்வுத் தலைப்பு                                                                                                                                         

ஆய்வு எல்லை  

            ஆய்வு நோக்கம்                                                                                                                                            

           ஆய்வு மூலங்கள்                                                                                                                                             

           ஆய்வு அணுகுமுறை

           ஆய்வு முன்னோடிகள் 

           ஆய்வுப் பகுப்பு  












                                                                                                                                             





kanmani tamil

unread,
Aug 15, 2024, 6:32:54 AM8/15/24
to vallamai

முன்னுரை 

  ஆய்வுத் தலைப்பு:

  "அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைக் கோயில்கள் - ஓர் ஆய்வு" என்பது ஆய்வுத் தலைப்பாகும். 

 ஆய்வு எல்லை:

அருப்புக்கோட்டை நகரில் பல கோயில்கள் இருக்கின்றன. அவை இந்து சமய அறக்கட்டளையாலும் தனிப்பட்ட சமூகத்தினராலும்  நிர்வகிக்கப்படுகின்றன.  அவற்றுள் நாடார் சமூகத்தினரின்  வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் "நாடார்கள் உறவின்முறை" என்னும் அமைப்பின் கீழ் சில கோயில்கள் நிர்வகிக்கப்படுகின்றன.                                                                                                                        அவை:

1.அமுதலிங்கேஸ்வரர்  கோயில்  

 2.முத்து மாரியம்மன் கோயில்

 3.வால சுப்பிரமணிய சாமி கோயில் 

 4.சந்தி வீரசாமி கோயில் 

  5.சித்தி விநாயகர் கோயில் 

சுருக்கம் கருதி கோயில்களின்  பெயர்களுக்கு முன் 'அருள் மிகு' என்னும் சொல்லைச் சேர்க்கவில்லை. ஏனாதி நாதநாயனார் திருமடாலயம், சரப முத்துச்சாமி சங்கரலிங்க விலாஸ்  பஜனாலயம் ஆகிய இரு சமூக நிறுவனங்களும் 'நாடார்கள் உறவின் முறை'யின் நிர்வாகத்தில் உள்ளன. இவை பற்றி ஆய்வது ஆய்வின்  எல்லையாக அமைகின்றது. 

ஆய்வு நோக்கம்:

 தமிழ்நாட்டுக் கோயில்கள் சமய வளர்ச்சியையும்,  சமுதாய வளர்ச்சியையும் ஒட்டி வளர்ந்துள்ளன. இறைமை உணர்வு, பண்பாட்டு உணர்வு, கலை உணர்வு ஆகியவை இயைந்து சசமுதாயத்தின் அங்கமாகக்  கோயில்கள் செயல்படுகின்றன. எனவே அருப்புக்கோட்டை நகரில் அமைந்துள்ள நாடார்கள் உறவின்முறைக் கோயில்கள் எவ்வெவ் முறைகளில் நாடார் சமூகத்தோடு இணைந்து சமூகத்தைப்  பண்படுத்துகின்றன என்பதைத் தொகுத்தும் வகுத்தும் ஆராய்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.  

ஆய்வு மூலங்கள்: 

ஆய்விற்கு முதன்மை ஆதாரங்களும் துணைமை ஆதாரங்களும் மிக இன்றியமையாதனவாய் அமைகின்றன. களஆய்வில் சென்று திரட்டிய செய்திகளும்,  வயது முதிர்ந்தோர், கோயில் நிர்வாகிகள், கோயில் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றவர்கள்  ஆகியோருடன் நிகழ்த்திய  பேட்டிகளும் முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. இராமநாதபுரம் பற்றிய நூல்கள், அருப்புக்கோட்டை நகர்க்கோயில்கள் பற்றிய நூல்கள், கல்வெட்டுக்கள் ஆகியன துணைமைச்  சான்றாதாரங்களாக அமைகின்றன. 

 ஆய்வு அணுகுமுறை: 

அருப்புக்கோட்டை நகரில்  நாடார்கள்  உறவின் முறையின்  நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவில்களின் அமைப்புக்கள், நாள் வழிபாடு  நிகழ்த்தும் முறை, திருவிழாக்கள்  நடைபெறும் முறை  பற்றிய  பகுதிகள்  விளக்க  முறையில் ஆராயப்பட்டுள்ளன. கோயில்களின்  தோற்றமும் வளர்ச்சியும், கோவில்களும் சமூகமும் என்னும் பகுதிகள் வரலாற்று முறையில் ஆராயப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டை நகரம் - ஓர் அறிமுகம், கோவில்களும்  இலக்கியங்களும்  என்னும் பகுதிகள் மதிப்பீட்டு முறையில் அமைந்துள்ளன.

ஆய்வு முன்னோடிகள்: 

 கே வி  ராமனின்  ‘காஞ்சி  வவரதராஜ ஸ்வாமி கோயில்’ என்ற நூலும்,கே. கே. பிள்ளையின்  ‘சுசீந்திரம்  கோயில்’ என்ற நூலும், தொல்பொருள் ஆய்வுத் துறை அருங்காட்சியகக் காப்பாளர் வெ. வேதாசலத்தின் திருவெள்ளறை என்ற நூலும்  கோயில் பற்றிய ஆய்வுகளுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

 மதுரை காமராசர் பல்கலைக்கழக எம்.ஃ பில். பட்டத்திற்காக அளிக்கப்பட்ட சு.குருசாமியின் ‘திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்’, சு. தங்கமுத்துவின்  ‘பழையாறைக் கோயில்கள்’, வ.தங்கவேலுவின் ‘திருவேடகம் கோயில்  திருவிழாக்கள்’, யு. சண்முகசுந்தரியின் ‘சங்கர நயினார் கோயில் திருவிழாக்கள்’  ஆகிய  ஆய்வேடுகளும்  கோயில்  பற்றிய ஆய்வுகளுக்கு  முன்னோடிகளாக அமைகின்றன.  

ஆய்வுப் பகுப்பு:  

இவ் ஆய்வு ஒன்பது இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை 

 1.முன்னுரை 

 2.அருப்புக்கோட்டை நகரம் ஓர் அறிமுகம்

 3.கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும்

 4.கோயில்களின் அமைப்பு 

 5.கோயில்களின் நாள் வழிபாடு 

 6.ஆண்டு விழாக்களும் பிற விழாக்களும்

 7.கோயில்களும்  நாடார்  சமூகமும்  

 8.கோயில்களும் இலக்கியங்களும் 

 9.முடிவுரை 

என்பன.

முன்னுரையில் ஆய்வுத் தலைப்பு, ஆய்வு எல்லை, ஆய்வின் நோக்கம், ஆய்வின் மூலங்கள், ஆய்வு அணுகுமுறை, ஆய்வு முன்னோடிகள், ஆய்வுப்  பகுப்பு முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. 

இரண்டாம் இயலில் ‘அருப்புக்கோட்டை நகரம் - ஓர் அறிமுகம் என்னும் தலைப்பில் அருப்புக்கோட்டை ஊரின் வேறு பெயர், நல்லூர் என்னும் பெயருக்கான சான்றுகள், அருப்புக்கோட்டை என்னும் பெயர்க்காரணம், கோயில்கள், மக்கள், தொழில், அலுவலகங்கள், கல்விச்சாலைகள், முதலிய பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. 

மூன்றாம் இயலில் ‘கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் தலைப்பில் கோயில்களின்  தோற்றக் காரணங்களும், தோன்றிய  காலமும், அவை சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து இன்றுள்ள நிலையை அடைந்த தன்மையும் விரித்து உரைக்கப்பட்டுள்ளன. 

நான்காம் இயலில் ‘கோயில்களின் அமைப்பு’ என்னும் தலைப்பில் கோயில்களில் அமைந்துள்ளன மண்டபங்கள், சன்னதிகள், உட்பிரகாரங்கள்,  வெளிப்பிரகாரங்கள் ஆகியவை தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன. 

 ஐந்தாம் இயலில் ‘கோயில்களில் நாள் வழிபாடு’ என்னும் தலைப்பில் கோயில்களில் நடைபெறும் திருப்பள்ளி எழுச்சி, காலை - சந்தி,  உச்சிக்காலம், மாலை - சந்தி, அர்த்தஜாமம்  ஆகிய வழிபாடுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.   

ஆறாம் இயலில் ‘ஆண்டு விழாக்களும், பிற விழாக்களும்’ என்னும் 

தலைப்பில் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவும் ,   முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனிப் பொங்கல் விழாவும், ஏகாதசி, பிரதோஷம், நவராத்திரி, கார்த்திகை போன்ற பிற  விழாக்களும், அவை நடைபெறும் நாட்கள், கொண்டாடப்படும் முறை, காரணங்கள் ஆகியன விளக்கப்பட்டுள்ளன

.ஏழாம்  இயலில் ‘கோயில்களும்  நாடார் சமூகமும்’ என்னும் தலைப்பில் நாடார் சமூகத்தினரின் சமய நெறி,  அமுதலிங்கேஸ்வரர் கோயில் எழுந்த சூழல், திருவிழாக்களும் சமூகமும்,  கட்டளைதாரர்கள், உறவின்முறையும் கோயில்களும், நாடார் சமூகத்தினரும் பிற சமூகத்தினரும்’ ஏனாதி நாதநாயனார் திருமடாலயம், சரப முத்துசாமி - சங்கர லிங்க விலாஸ் பஜனாலயம்  போன்றன  ஆராயப்பட்டுள்ளன. 

 எட்டாம் இயலில் ‘கோயில்களும்  இலக்கியங்களும்’ என்னும் 

தலைப்பில் அருப்புக்கோட்டை உறவின்முறைக் கோயில்களைப் பற்றி எழுந்த இலக்கியங்களைப் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.   

இறுதியில்  முடிவுரையாக ஆய்வின்  மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.  அடுத்து  துணை நூற்பட்டியல்  தரப்பெற்றுள்ளது.  அதனையடுத்து பின்னிணைப்புகளாகப் பின்வருவன கொடுக்கப்பட்டுள்ளன. 

1. பத்திரம் 

2.வைகாசி விசாகத் திருவிழா அழைப்பிதழ் 

3.சூ.ஆ.முத்து நாடார்  தன்வரலாற்றுக் குறிப்பு 

4.அமுதலிங்கேஸ்வரர்கோயில் கும்பாபிஷேக மகோத்சவ பத்திரிக்கை   

5.அமுதலிங்கேஸ்வரர்கோயில் திருப்பணி செய்தவர்களின்  பட்டியல் 

6.அமுதலிங்கேஸ்வரர்கோயில் வைகாசி விசாகத்திருவிழா கட்டளைதாரர்கள் 

7.முத்துமாரியம்மன் பங்குனிப் பொங்கல் விழாக் கட்டளைதாரர்கள் 

8.அமுதலிங்கேஸ்வரர்கோயில் கார்த்திகை நாள் கட்டளைதாரர்கள் 

9.அமுதலிங்கேஸ்வரர்கோயில் மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சிக் கட்டளைதாரர்கள்  

10.வாழ்த்துக் கவிகள் 

11.அருப்புக்கோட்டைகோயில்கள் பற்றிய இலக்கியங்கள்

 12.அமுதலிங்கேஸ்வரர்கோயில் விக்கிரகங்களின் பட்டியல் 

13.அமுதலிங்கேஸ்வரர்கோயில் உற்சவ மூர்த்திகளின் பட்டியல் 

14.அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில் ஆபரணங்கள் 

15.அமுதலிங்கேஸ்வரர் கோயில் சாமான்கள் 

16.முத்துமாரியம்மன் கோயில் சாமான்கள்

17.அமுதலிங்கேஸ்வரர் கோயில் முத்து மாரியம்மன் கோயில் வாகனங்கள்

18. தகவலாளர்கள்

 19.நிழற்படங்கள்

 20.கோயில்கள் அமைப்பு


kanmani tamil

unread,
Aug 16, 2024, 12:29:04 AM8/16/24
to vallamai

அருப்புக்கோட்டை நகரம் - ஓர் அறிமுகம் 

ஊரின் வேறு பெயர் 

நல்லூர் என்னும் பெயருக்கான சான்றுகள் 

அருப்புக்கோட்டை என்னும் பெயர்க்காரணம் 

கோயில்கள் 

மக்கள் 

அலுவலகங்கள் 

கல்லூரிகள், பள்ளிகள்   


முகவுரை 

மதுரையில் இருந்து பாலையம்பட்டி வழியாக தூத்துக்குடி செல்லும் நெடுஞ் சாலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை உள்ளது.  மதுரையில் இருந்து  தெற்கே 49கிலோமீட்டர் தொலைவிலும் விருதுநகரில் இருந்து கிழக்காக 16கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ் ஊரிலிருந்து பல திசைகளிலும் உள்ள ஊர்களுக்குப்  பேருந்துகள் பல ஓடுகின்றன. விருதுநகர் மானாமதுரை  ரயில் தடத்தில் இங்கு ஓர் புகைவண்டி நிலையமும் அமைந்துள்ளது. 1963ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள்  முதல்  விருதுநகர் 

அருப்புக்கோட்டை புகைவண்டி இணைப்பு தொடங்கியது. இராமநாதபுரம் அரசாங்கப்  பதிவேட்டில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் இவ் இயல் எழுதப்பட்டுள்ளது.


ஊரின் வேறு பெயர்: 

இன்று அருப்புக்கோட்டை என வழங்கப்படும் இவ்வூர் திருநல்லூர்  என்று முன்பு வழங்கப்பட்டிருக்கிறது. சொக்கலிங்கபுரம், வாழவந்தபுரம், புளியம் பட்டி, நல்லூர், கரையாம்பட்டி என இருந்த சிறுபகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்து அருப்புக்கோட்டை எனப் பெயர் இடப்பட்டிருக்கிறது. சொக்கலிங்கபுரம் புளியம்பட்டி ஆகியன இன்றும் அருப்புக்கோட்டையில் சிறு பகுதிகளாக விளங்குகின்றன. ஊர் முழுவதும் அருப்புக்கோட்டை என வழங்கப்படுகின்றது.  . ஊருக்கு மேற்கே விளங்கும் முஸ்லிம் பகுதியில் சிற்சில  இடங்களில் இன்றும் விளம்பரப் பலகைகளில் நல்லூர் என்றே குறிப்பிடப் பட்டிருப்பதைக் காண முடிகிறது. நல்லூர் என்ற பெயர் மக்கள் இடையே பேச்சு வழக்கில் இல்லை; எனினும் இவ் ஊர்க்கு இப்பெயர் முன்பு வழங்கியுள்ளதைக் குறிக்கப் பல சான்றுகள் உள்ளன.

 

நல்லூர் எனும் பெயருக்கான சான்றுகள்:

பத்திரங்களில் திருநல்லூர் என்று பெயர் வழங்கிய அருப்புக்கோட்டை என்றே குறிக்கப்பட்டுள்ளது1. இவ்வூர் பற்றிய இலக்கியங்களிலும்



திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை என்றே குறிக்கப்பட்டுள்ளது2. இங்குள்ள அமுதலிங்கேஸ்வரர் கோயிலிலும், முத்து மாரியம்மன் கோயிலிலும் உள்ள கல்வெட்டுக்களில் திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை என்றே எழுதப்பட்டுள்ளது3. இக்கோயில்களில் நிகழும் திருவிழாக்களுக்குரிய அழைப்பிதழ்களில் திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை என்றே அச்சிட்டு  உள்ளனர்4.  இவ்வூர் முஸ்லிம் தெருவில் உள்ள அஞ்சல் பெட்டியில் நல்லூர் முஸ்லிம் தெரு என்றே எழுதப்பட்டுள்ளது. இராமநாதபுரம் அரசாங்கப் பதிவேட்டில், “இதன் இயற்பெயர் திருநல்லூர் என்று இருந்தது.” என்று குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பும் உள்ளது5. எனவே இதன் இயற்பெயர் ‘திருநல்லூர்’ என்று இருந்திருக்க வேண்டும் என்று அறியலாம்.

அருப்புக்கோட்டை என்னும் பெயர்க்காரணம்: 

இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை அரும்புகள் மிகுதியாகக் கிடைத்த காரணத்தால் அருப்புக்கோட்டை என்று இவ்வூர் அழைக்கப்பட்டது; என்று இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். அய்யம்பெருமாள் நாடார் என்பவரால் இயற்றப்பட்ட; “அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர், சான்றோர் குல திலகமும் சற்குணதயாழருமான (SIC) ஸ்ரீமான் சிவ. நாகலிங்க நாடார் அவர்கள் சிவபத விளக்கம்” என்னும் நூலில் அமைந்த,

“எத்திசை பார்த்திடின் பிச்சி முல்லை வளம்

  மிச்சமதாய்ப் பிரகாசிக்குமே” 

எனும் அடிகள் மேற்கூறிய கருத்தினை உறுதிப்படுத்துவனவாய் அமைகின்றன.

அரும்பு என்பது தமிழில் மணமுள்ள மலர் மொட்டுக்களைக் குறிக்கும். மலர்களின் கோட்டைப்பகுதியாக விளங்கியதால் அரும்புக்கோட்டை என்பது திரிந்து அருப்புக்கோட்டை ஆயிற்று என்று சொல்வர். இதற்கு வேறு ஒரு காரணமும் சொல்வர். இவ்விடத்திலுள்ள கோட்டையிலிருக்கும் மக்களின்

வீரத்தால் பகைவர்களின் தலைகள் அறுவடை செய்யப்பட்டதால் இவ்வூர் அறுப்புக்கோட்டை எனப் பெயர் பெற்றது என்றும் சொல்வர். இவ் இரு காரணங்களும் இராமநாதபுரம் அரசாங்கப்பதிவேட்டில் விளக்கப்பட்டுள்ளன6. ஊர் மக்களும் இவ் இரு காரணங்களையும் கூறி இக் கருத்துக்களை அரண் செய்கின்றனர். 

மேலும் அறுவைத் தொழிலாகிய நெசவுத்தொழில் இங்குள்ள  மக்களின் இன்றியமையாத தொழில் ஆகும். எனவே இவ் ஊர்க்கு அறுப்புக்கோட்டை என்று பெயர் வந்தது என்றும்; பின்னர் அருப்புக்கோட்டை எனத் திரிபடைந்தது என்றும் கூறுவர். இவ்வூர் அமுதலிங்கேஸ்வரர் கோயில் பற்றி எழுந்த கலம்பக நூலில் அறுப்புக்கோட்டை என்று குறிக்கப்பட்டுள்ளது7. 

இவ்வூரை ஒட்டி வடுகர் கோட்டை, வெள்ளாளக் கோட்டை , பொம்மக்கோட்டை என்று முடியக் கூடிய பெயரை உடைய பகுதிகள் சில இருந்தன போன்று; சொக்கலிங்கபுரம், புளியம்பட்டி, வாழவந்தாள்புரம், நல்லூர், கரையாம் பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்த்து அருப்புக்கோட்டை என்று புதிய ஊர் உருவாகியது எனலாம். 

வீரப்பநாயக்கர் தம் காலத்தில் (1572-1598) இவ்வூரில் கோட்டை ஒன்று கட்டியுள்ளார் என்ற குறிப்பும் கிடைக்கிறது8. இவரது காலத்தில் இவ்வூருக்கு அருப்புக்கோட்டை என்னும் பெயர் கிடைத்து இருக்கலாம் என்று R.நாகசாமி அவர்களும், N.S. இராமசாமி அவர்களும் கருதுகின்றனர்9. மதுரை அரசு சீர் குலைந்த போது இக்கோட்டை தகர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.

கோயில்கள்: 

இவ்வூரில் பல கோயில்கள் உள்ளன. சொக்கநாதசாமி கோயிலைச் சுந்தரபாண்டியன் கட்டியதாகப் பேசப்படுகிறது. இக்கோயிலில் நிறையக்  கல்வெட்டுக்கள் உள்ளன. வைகாசி, ஆனி மாதங்களில் இக் கோயிலில் திருவிழாக்கள் நடத்துகிறார்கள். 

காட்டு வாழவந்தம்மன் கோயில் என்று ஒரு  அம்மன்கோயில், சொக்கநாதசாமிகோயில் அருகே உள்ளது . இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இக்கோயிலில் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறும்.

நாடார் இனத்திற்கு சொந்தமாக  அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்து மாரியம்மன் கோயில், வால சுப்பிரமணியர் கோயில், சந்தி வீரசாமி கோயில், சித்தி விநாயகர் கோயில் ஆகியன உள்ளன.அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைகாசி மாதத்திலும், முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சந்தி வீரசாமி  கோயிலில் தை மாதத்தில் பொங்கல் விழா நடைபெறும். 

வெங்கடேசப் பெருமாள் கோயில் ஒன்றும் இங்குள்ளது . இக்கோயிலில் மார்கழி மாதத்தில் திருவிழா  நடைபெறும். ஊருக்குத் தென்மேற்கே உள்ள குன்றின் மீது மலையரசன் கோயில் என்ற கோயில் உள்ளது. அமுதலிங்கேஸ்வரர் கோயிலுக்கருகில் கருப்பணசாமிக்குக் கோயில் ஒன்றும் உள்ளது. சந்திவீரசாமி, மலையரசன், கருப்பணசாமி, ஆகிய தெய்வங்களை நாடார் இனத்தவர் தங்கட்குரிய குலதெய்வமாக வழிபடுகின்றனர். 

முகம்மதியர்களுக்கு இரண்டு மசூதிகளும், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கிறிஸ்தவ ஆலயமும் இங்கு இருக்கின்றன.

 

மக்கள்:

இவ்வூரில் நாடார், தேவாங்கர், நாயக்கர் ஆகிய மூன்று இனமக்கள் நிறைந்திருக்கின்றனர். சிறுபான்மை முகம்மதியர்களும், கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். 

முன்பு இவ்வூரில் பல்வேறு இனத்தாருக்கும் இடையில்  சண்டை சச்சரவுகள் நிறைந்து இருந்தன. 1914ல் இருந்தே இந்நிலை ஏற்பட்டு இருக்கிறது. 1914க்கு முன்னரே  இங்கு  காவலர்  படை நிறுத்தப்பட்டுள்ளது. முதல் கலவரம் முகமதியருக்கும் கிருத்துவ நாடார்களுக்கும் இடையே ஏற்பட்டது. ஆனால்  முக்கியமான கலவரம்  நாடார்களுக்கும் தேவாங்கச் செட்டியார்களுக்கும் இடையே ஏற்பட்டதாகும். மதுரைச் சாலையில் ஒரு மசூதி அமைந்துள்ளது. எனவே அவ்வழியே பிறருடைய எந்த ஊர்வலமும் செல்லக் கூடாது என்று முகமதிர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால் முதல் கலவரம் ஏற்பட்டது. நாடார்களின் எந்த ஊர்வலமும் அவர்கள் வாழும் தெருக்களுக்குள் அன்றி பிற தெருக்களுக்குள் போகக் கூடாது என்றதால் ஏற்பட்டது. செல்வம் மிக்கோராய் வியாபாரம், கல்வித்துறைகளில் முன்னேற்றம் கொண்டிருந்த நாடார்கள் திருவிழாக் காலங்களில் தாங்கள் பொதுச் சாலைகளைப் பயன்படுத்துவதைப் பிற இனத்தார் தடுக்கும் உரிமையை  எதிர்த்தனர். 1928க்குப் பின் ஓர் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. கலவரமும்  படுகொலைகளும் நிகழ்ந்தன. தங்கள் தெரு வழியாக நாடார்கள் தேர் இழுத்துச் செல்வதை முகமதியர்களும் எதிர்த்தனர். எனவே கொடிய கலகம் ஏற்பட்டது. காவலர்களுக்கும் இதனால் இவ்வூரில் தொடர்ந்து வேலை இருந்து வந்தது. கலவரம் திறமையாகக் கையாளப்பட்டு ஒடுக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் சமூக அரசியல் வகைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தற்போது இந்த இனக்கலவரம் இன்றி ஊர் அமைதியாக உள்ளது. நாடார்கள் திருவிழாக் காலங்களில் சாமி புறப்பாட்டினையும் தேர் இழுப்பதையும் நிறுத்தி விட்டனர். 



kanmani tamil

unread,
Aug 16, 2024, 5:07:27 AM8/16/24
to vallamai

தொழில்: 
           இவ்வூரில் நெசவுத்தொழிலே முக்கியமான  தொழிலாகும். இவ்வூர் கைத்தறித் துணிகளுக்குப் பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறித் துணிகளின் பெரும்பகுதி மற்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றது. வேட்டி, துண்டு, புதுப்பட்டு, நூற்  சேலைகள், படுக்கை விரிப்புகள், மற்ற துணி வகைகளும்  இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.  சாயச்  சேலைகள், எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள், வைக்கோல் தகடு செய்யும் ஆலைகள்(Straw board manufacturing company), பருத்தி ஆலைகள் முதலிய பலவும் இங்கு அமைந்துள்ளன. 

அலுவலகங்கள்:

             இவ்வூர் ஒரு நகராட்சி ஆகும். இந்தத் தாசிலுக்கும், பஞ்சாயத்து இணையத்திற்கும் இதுவே தலைமை இடமாகும். தாலுகா அலுவலகம், துணைப் பதிவாளர் அலுவலகம், கோட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், துணைக் கஜானா, தந்தி, தொலைபேசி வசதி உள்ள தபால் நிலையம், காவல் நிலையம், துணை வணிக வரி அலுவலகம், மாஜிஸ்திரேட் கோர்ட், துணைப் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முதலியன இங்கு அமைந்துள்ளன.

கல்விச்சாலைகள்: 

            சைவபானு க்ஷத்திரியர் கல்லூரி, தேவாங்கர் கலைக் கல்லூரி என்னும் இரு கல்லூரிகள் இவ்வூரில் நிறுவப்பட்டுள்ளன. இவ்வூரில் ஆறு மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. அவை நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி , சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி, சைவபானு ஷத்திரியர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சைவபானு ஷத்திரியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி. எஸ். ஐ. மேல்நிலைப்பள்ளி என்பனவாம்.

           மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத் தேவையான மருத்துவ மனைகள், சந்தை, பேருந்து நிலையம் போன்றனவும்  சிறப்பாக அமைந்துள்ளன.

            முத்துச்சாமி கவிராஜ சரபம் அவர்கள் இயற்றிய “அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அனவரத செல்வ விநாயகர் விளையாடல்“ என்னும் நூலில் அமைந்த “அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லி அம்மன் - வசந்த ருது என்னும் பகுதி அருப்புக்கோட்டையின் சிறப்பியல்புகளை எடுத்தியம்புவதாக அமைகிறது10. இப்பகுதி நொண்டிச்சிந்தில் அமைந்துள்ளது.

குறிப்புகள்                                    

1.   பின்னிணைப்பு -1 

2.   திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை மாநகர் ஸ்ரீஅமுத வல்லி  அம்மன் பதிகம்

3.  அ. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூரில் வசிக்கும் க்ஷத்திரியர்களாலியற்றிய  இச்சிவாலயத்தில் ……

    ஆ. திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் நாடார்கள் பொது அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி .

4.    பின்னிணைப்பு - 2

5.    This place was originally said to be known as Thirunalloor. Gazetteer of India Tamil Nadu State Ramanathapuram District. 1972  P . 864.

6.     ibid.

7.     அறுப்புக்கோட்டையென விளங்கும் நல்லூர்க் கலம்பகம்.

8.      Ramanathapuram An Archeological Guide, R.Nagasamy and N.S.Ramasamy, P . 71.

9.      ibid.

10. ”தாமரைக் கிணறடுத்து- சாந்தித் 

      தனிக்கதிர் குளித்த வகை கிளியே     

      மாமண வாளனுடன்- வாழ 

      வந்தம்மன் கோயிலில் வாசற்படி 

      சிந்தை கசிந்து வீழ்ந்து- வணங்கி 

      தேரடி போற்றித் திருநல்லூர் 

      காரணச் சந்திவீர- சாமி

      கருப்பண சாமியருட்  போற்றி 

திருப் பணித் தீர்த்தக்கரை- இருந்து

தெள்ளுமுகத் தரும் வெள்ளைமடம் 

வள்ளல் முத்துக்குமார- சாமி

வங்கிசத்தார் தரு- மந்தழைக்க 

மங்களம் பாடிவந்து- சான்றோர் 

மகிமைக் கடைவளர் புகழ்பேசி 

பகவதி சாமுண்டி- தேவாங்கர் 

பரவிய சவுடேஸ்வரி துலங்க

அரண்மனை மலையரசன் கோயில் 

அலங்காரம் பெற நலம் பேசிச் 

செங்கோட்டை வெள்ளைக்கோட்டை- விதைக்காம் 

தேட்டு முதல் வடுகக்கோட்டைக்கொடி 

நீட்டு பொம்மு கோட்டை யெல்லாம்- வளைக்கிற 

நிதி அருப்புக்கோட்டை புளியம்பட்டி 

துதிமிகு சொக்கலிங்க- புரமே

சோர்வடை யாமல் சீர்பெருக

ஊர்வலம் வரும் வீரி- மாரியம்மன் 

ஒளிர் சிலம் பணி பதங்களில் இறைஞ்சி 

மார்க்கண்டன் மகிழ் அமிர்த- லிங்கேசா 

வாமத்தில் அமிர்தவல்லி சந்நிதி 

பார்க்க வந்திடு நாளில்- இங்கே 

பார்க்க வந்தொலிக்கும் பைங்கிளியே“


 

kanmani tamil

unread,
Aug 17, 2024, 12:51:14 AM8/17/24
to vallamai

       3. கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும்

 

                        முன்னுரை 

                     

                      அமுதலிங்கேஸ்வரர் கோயில் 

                     

                       முத்துமாரியம்மன் கோயில் 

                     

                       வாலசுப்ரமணிய சாமி கோயில் 

                     

                        சந்தி வீரசாமி கோயில் 

                      

                        சித்தி விநாயகர் கோயில்

                      

                        முடிவுரை 

                                                          


முன்னுரை  

இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுவதற்காகப் பழைய கோயில்களைப் புதுப்பிக்கும் திருப்பணியையும், புதிய கோயில்களை உருவாக்கும் திருப்பணியையும் மக்கள் மேற்கொள்கின்றனர். மக்களைச் சமுதாய வாழ்விலும், கலை ஆர்வத்திலும்; பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி ஒன்றுபடுத்தும் பெரிய நிலையங்களாகக் கோயில்கள் உருவாகி இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் பல கோயில்கள் இவை போன்ற காரணங்களால் தோன்றி இருக்கின்றன. அருப்புக்கோட்டையிலும் பெரிய கோயில்களும், சிறிய கோயில்களும் பழங்காலந் தொட்டுத் தோன்றி இருக்கின்றன. சிறு கோயில்கள் ஆன்றோர்களின் திருப்பணியால் வளர்ச்சி பெற்றுச் சிறக்கின்றன. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக் கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆய்வது இவ் இயலின் நோக்கமாகும்.

“கடந்த 150 வருடங்களில், தென்னிந்தியாவிலுள்ள சமூகங்களைப் பொறுத்தமட்டில், நாடார் சமூகம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உயர்ந்த சாதி இந்துக்களால், தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட நாடார்கள், பனைத்தொழில் செய்து வாழ்ந்து வந்ததோடு, ஏனைய சமூகத்தினர் செய்த அநீதிகளையும் அனுபவித்து வந்தனர். மேலும் நாடார்கள் தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலும் நலிவுற்றுக் காணப்பட்டனர். ஆனால் 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களில் நாடார்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர். அதன் பலனாகத் தென்னிந்தியாவில் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாடுற்ற சமூகங்களில் தலைசிறந்ததாக நாடார் சமூகம் மாறியது. பலர் தலைசிறந்த வியாபாரிகளாகவும், மருத்துவர்களாகவும், கல்வியாளர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர்.” என்று நாடார் சமூகத்தைப் பற்றி ஆராய்ந்த எல்.ஹார்டுகிரேன் அவர்கள் தமது முன்னுரையில் கூறுகின்றார்.1                    


மேலே கூறியவாறு 19ம் நூற்றாண்டின் இறுதியில் உயர்வடைந்த நாடார் இனத்தினர் ஆலயப் பிரவேச உரிமைகளைப் பெற அரும்பாடுபட்டனர். ஆலயப் பிரவேச உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டமே நிகழ்த்த வேண்டி இருந்தது. ஒரு பக்கம் போராட்டம் நடத்தினர். மற்றொரு பக்கம் கோயில்களும் கட்டினர். இக்காலகட்டத்தில் தான் அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயில் தோன்றியது. ”பெரும்பாலான நாடார்கள் அனைவரும் சைவ மதத்தைத் தழுவி இருந்தனர். ஆனால் ஒரு கூட்டத்தார் வைணவ மதத்தையும் தழுவி இருந்தனர். தெய்வங்களைப் பொருத்த வரையில் சிவனின் இரண்டாவது மகனாகிய சுப்ரமணியன் அல்லது முருகன்; நாடார் சமூகத்தினர் மத்தியில் சிறப்புத் தெய்வமாகக் காணப்பட்டார்.” என்று எல்.ஹார்ட்கிரேன் கூறுகிறார்.2 “நாடார்கள் பொதுவாக இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்; சிவபக்தர்கள். இவர்களது குலதெய்வம் காளியம்மன் என்று கருதப்படுகிறது.” என்றும், “நாடார்களுக்குச் சிறந்த முருகபக்தி உண்டு“ என்றும் குரு.தேமொழி கூறுகிறார்.3


இக்கூற்றுகளுக்கேற்ப அருப்புக்கோட்டையில் நாடார்களுக்கு உரிமையுடைய சிவன்கோயில்,  முத்துமாரியம்மன் கோயில், வாலசுப்ரமணியர் கோயில் ஆகியன அமைந்துள்ளன. சிவன் கோயில் தோற்றக் காலத்திலிருந்தே வைணவக் கடவுளான ஆதிமூலப் பெருமாளும் அக்கோயிலில் இடம் கொண்டுள்ளார். அமுதலிங்கேஸ்வரர் கோயிலின் தோற்றத்தை முதலில் காண்போம்.


அமுதலிங்கேஸ்வரர் கோயில்:


அருப்புக்கோட்டை முதலாளி மு.மு.முத்துச்சாமி நாடார் அவர்களின் முயற்சியாலும், உறவின்முறையின் உறுதுணையாலும் அருப்புக்கோட்டையில் சிவன் கோயிலொன்று தோற்றுவிக்கப்பட்டது.1887ம் ஆண்டு தச்சுப்பணி செய்யத் தொடங்கப் பெற்று 1907ம்  ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப் பெற்றது. தச்சுப்பணி செய்த பின்னர் பல இடையூறுகளால் கோயில்வேலை நிறுத்தப்பட்டது என்று அறிய முடிகிறது. இராமநாதபுர ஜமீனுக்குச் சொந்தமான நிலத்தில், அவர்களது உத்தரவு பெறாமல் கோயில் கட்ட முற்பட்டதால் தடை செய்யப்பட்டது என்றும், பிற இனத்தார் இவ் இனத்தார் மீது கொண்ட பொறாமையால் ஜமீன் மூலம் தடை செய்தனர் என்றும் தகவலாளர்கள் கூறுகின்றனர். இத்தடை உத்தரவைப் பின்னர் சமஸ்தானாதிபதியைச் சந்தித்து நீக்கக் கோரி வெற்றி கண்டனர். பின்னர் கோயில் வேலையைத் தொடர்ந்தனர். இவ் வரலாற்றை நாடார் சமூக வரலாறு என்னும் நூலாசிரியர் குரு.தேமொழி அவர்கள் விரிவாக்க கூறியுள்ளார்.

“நாடார் உறவின்முறையார் அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் ஆலயம் ஒன்றைக் கட்ட எண்ணி, கி.பி.1887ம் ஆண்டு வேலையைத் தொடங்கினர். ஆனால் இராமநாதபுரம் சமஸ்தானாதிபதி 1893ம் ஆண்டு பல காரணங்கள் காட்டி, மானாமதுரை டி.மு.கோர்ட்டில் ‘பிராது’ செய்ய கோயில் கட்டுவதை நிறுத்தும்படி உத்தரவு கொடுக்கப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் மன்ற உத்தரவே நிலைநிறுத்தப் பட்டது. ‘ஹைகோர்ட்டில்’ நாடார்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வேளையில் அரல்வாயல் மகாவித்துவான் வேங்கட சுப்புப்பிள்ளையவர்கள் சிலரின் திட்டப்படி இராமநாதபுரம் அதிபர்கள் நடத்திய மகாநவமித் திருவிழாவில் அவர்கள் முன்னோருக்குப் புகழ்மாலை பாடினாராம். மனம் மகிழ்ந்த அதிபர்; புலவர் கேட்டதைக் கொடுப்பதாகக் கூற, அவர் தமது எண்ணத்தைப்

‘பாட்டினைப் பாடும் பாவலர்க்கிலவப் பாட்டினைக் 

                          கெடுத்துளம் (SIC) பரிவாய்

நாட்டினைக் கொடுத்தும் நகரினைக் கொடுத்தான் 

                          நலியவர் வாழ்ந்திடக் குலவு

தேட்டினைக் கொடுத்தும் நின்புகழ் பேசும் மிக்க 

                          சான்றோர்கள் வாழ் அருப்புக்

கோட்டையின் ஓங்கு சிவாலயம் வளரக் 

                           கொற்றவை கிருபை செய்குவையே’ 

என்ற பாட்டால் வெளியிட; அதிபரும் இசைந்து 1896ம் ஆண்டில் விடுதலைப் பத்திரம் பதிந்து கொடுத்ததாகக் கூறுகிறார்கள்4. பல தகவலாளர்கள் இக்கருத்தை அப்படியே கூறுகின்றனர். மேலே குறிப்பிட்ட அதிபர் பாஸ்கர சேதுபதி என்று பெரும்பான்மையோர் கூறுகின்றனர். சிலர் இக்கருத்தை சற்று மாற்றியும் கூறுகின்றனர்.

“இராமநாதபுரம் மாவட்டத் தோற்றக் காலத்தில் இக்கோயிலில் தச்சுப்பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது கோயில் சமஸ்தான நிலத்தில் அது நடைபெற்று இருந்திருக்கிறது. சமஸ்தான தாசில்தார் இச்செய்தியைச் சமஸ்தானத்திற்கு அறிவிப்பு செய்ய கோயில் வேலையைத் தொடரக் கூடாது என்று தடை விதித்தனர். ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்ய சமஸ்தான திவான் வேண்டியவர் மூலம் வழி சொல்லிக் கொடுத்திருக்கிறார். ‘சென்னையில் இருந்து இராமநாதபுரம் வரும் ரயிலில் மதுரை சந்திப்பில் பாஸ்கர சேதுபதியை எதிர்கொண்டு அழையுங்கள். அப்பொழுது பேட்டிக்கு அவர் ஏற்பாடு செய்வார்.’ என்று சொல்லிக் கொடுத்து இருக்கிறார். அதுபோல இவர்கள் செய்து இராமநாதபுரத்தில் உத்தரவு பெற்றனர். பின் கோயில் வேலை தொடர்ந்தது.” என்று திரு.சூ.ஆ.மு.முத்து முருகன் அவர்கள் கூறினார்.

முத்துமுருகன் அவர்கள் தந்தையார் திரு.சூ.ஆ.முத்துநாடார் 

அவர்களும் தமது நாட்குறிப்பேட்டில் கோயில் கட்டுவதற்கு இருந்த இடையூறுகளையும், அவற்றை எல்லாம் நீக்கிக் கும்பாபிஷேகம் நடந்த முறைகளையும் தெளிவாகக்  குறித்துள்ளார்.5

இவ் இடையூறுகளை எல்லாம் நிவர்த்தி செய்து மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் 1907ம் ஆண்டு நிகழ்த்தி இருக்கின்றனர். கும்பாபிஷேகம் நடந்தபொழுது கோயில் காரியதரிசிகளாக அம்பலம் பி.பொன்னம்பல நாடார், அம்பலம் இராமலிங்க நாடார், மு.மு.முத்துச்சாமி நாடார், க.பெ.சுப்பைய நாடார், மதுரை சிவ.பெ.வ.வகை பழ.விநாயக மூர்த்தி நாடார், தூத்துக்குடி மா.வே.மாயநாடார் ஆகிய அறுவர் இருந்திருக்கின்றனர். இதனைக் கும்பாபிஷேக அழைப்பிதழ் தெரிவிக்கிறது.6


kanmani tamil

unread,
Aug 17, 2024, 6:09:51 AM8/17/24
to vallamai

1887ம் ஆண்டு தொடங்கப்பெற்று இக்கோயிலில் இன்றும் சிற்பிகள் செதுக்கும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி, அமுதவல்லியம்மன் சந்நிதி ஆகிய இரு சந்நிதிகளுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பெற்று இருக்கிறது. வளர்ச்சிக்கு முடிவு கிடையாது என்னும் கூற்றிற்கேற்ப நாள்தோறும் வளர்ந்து கொண்டே வருகிறது இக்கோயில். கோயில் சுமார் 54000 சதுரஅடி பரப்பில் அமைந்து இருப்பதால் பற்பல ஆன்றோர்களால் பற்பல சந்நிதிகள் உருவாகியுள்ளன. உட்பிரகாரம்,   வெளிப்பிரகாரம் எனக் கோயில் அமைப்பு விரிவுற்று வளர்ந்து கொண்டே வருகிறது. கோயில் சந்நிதிகளைச் சுற்றியும் தளவரிசைக் கற்கள் பதிக்கப் பெற்றுள்ளன. இக்கோயிலின் வளர்ச்சிப் படிநிலைகளைக் கால வரிசைப்படி காண்போம்.


1907ம் ஆண்டு: அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி &அமுதவல்லியம்மன் சந்நிதி


அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி, அமுதவள்ளியம்மன் சந்நிதி ஆகிய 

இரு சந்நிதிகள் இருந்தன. பாலாலயத்தில் இருந்த ஆதிமூலப்பெருமாளைத் தம் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமுதவல்லியம்மன் சந்நிதியில் எழுந்தருளச் செய்திருக்கின்றனர். அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில்  நடராஜர் சந்நிதியை அமைத்திருக்கின்றனர். இச் சந்நிதியின் பின்புறம் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரையும் எழுந்தருளச் செய்திருக்கின்றனர். கோயிலின் கிழக்கே ஒரு பெரிய தெப்பமும், வடகிழக்கில் ஒரு கிணறும், தெப்பமும் இருந்ததாக அறிய முடிகிறது. கிழக்கில் இரு பெரிய இரும்பு வாயில்களும், தெற்கில் ஒரு சிறு வாயிலும் வடக்கில் இரு சிறிய வாயில்களும் அமைக்கப்பட்டன. வில்வமரங்கள் அடர்த்தியாக மண்டியிருந்தமையால் வில்வவன க்ஷேத்திரம் என்றே இப்பகுதி அழைக்கப்பட்டிருக்கிறது. வாதாம் மரங்கள் நிறைந்திருந்தன. கோயிலுக்கு வருபவர்கள் இயற்கைச் சூழலில் இறைவனை வழிபட்டு மகிழ்ந்தனர்.


1909ம் ஆண்டு: சலவைக்கல் பிள்ளையார்


மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் வைத்திருக்கும் இடத்தில் சலவைக்கல் வெள்ளைப் பிள்ளையார் ஒன்று உண்டு. இது 1909ம் ஆண்டு, இவ்வூருக்கு அருகிலிருக்கும் திருச்சுளி  என்னும்  ஊரைச் சேர்ந்த திரு.அல்லிமுத்து நாடார் என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும். இவர் பர்மா நாட்டில் இரங்கூன் நகரில் இருந்தபொழுது மாந்தளை என்னும் ஊரில் இப்பிள்ளையாரைச் செய்து தரச் சொல்லி வாங்கிக் கொண்டு வந்துள்ளார். இப்பிள்ளையாரின் சிறப்பைக் கண்டு அமுதலிங்கேஸ்வரர் கோயிலினை உருவாக்கிய திரு.மு.முத்துச்சாமி நாடார் அவர்கள் இதனை விலை கொடுத்து வாங்கி அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைக்க விரும்பினார். அவரது விருப்பத்தை உணர்ந்த திரு.அல்லிமுத்து நாடார் அவர்கள் விலைக்குத் தர மனமின்றி கோயிலுக்கே அன்பளிப்பாகத் தந்து விட்டார். அப்பொழுது திரு.அல்லிமுத்து நாடார்க்குச் சிறப்புச் செய்யும் வண்ணம் அவரையும், பிள்ளையாரையும் சாரட்டு வண்டியில் ஏற்றி ஊருக்குள் ஊர்வலமாக வரச்செய்து விழாவாகக் கொண்டாடினர் என்று அறிய முடிகின்றது. திரு.அல்லிமுத்து நாடாரின் மகன் திரு.அ.இரத்தின சாமி நாடார் இப்பிள்ளையாருக்குத் தனிச் சந்நிதி அமைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.


1911ம் ஆண்டு: அனவரத செல்வ விநாயகர்


அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் உட்பிரகாரத்தில் மேற்குப் புறத்தில் கன்னி மூலையில் அனவரத செல்வ விநாயகர் சந்நிதி அமைக்கப்பட்டது. இவ் விநாயகரை விருதுநகர் அருகிலிருந்து கொண்டு வரும் பொழுது வள்ளிக்குளம் என்னும் இடத்தில் வண்டியின் அச்சு முறிந்ததாகவும், பூசை செய்து எடுத்து வந்ததாகவும் செவிவழிச் செய்தியாகக் கூறப்படுகிறது. அனவரத செல்வ விநாயகர் பதிகத்தில் ,

“தொடர்ந்து நல்லூர் வந்திட விரைந்த போழ்து 

நடந்த கால்கள் நொந்து களைப்புற்று நீ 

கிடந்தாய் வள்ளிக் குளமாம் ………” 

என வரும் அடிகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

இக்கருத்து உண்மை என நம்பும் வண்ணம் விநாயகரின் தோற்றம் பெரிதாக அமைந்திருக்கின்றது. விநாயகர் வடிவத்தின் பாரம் தாங்காமல் அச்சு முறிவதற்கு வாய்ப்பு உண்டு. விநாயகர் வடிவத்தில் பெரிதாகக் கண்ணைக் கவரும் தோற்றத்தில் காட்சி தருகிறார்.


1912ம் ஆண்டு: நவக்கிரக சந்நிதி, வாழவந்தம்மன் சந்நிதி


இவ் ஆண்டில் இரு சந்நிதிகள் உருவாக்கப் பெற்றுள்ளன. அவை நவக்கிரக சந்நிதியும், வாழவந்தம்மன் சந்நிதியும் ஆகும். அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் நுழைவாயிலில் வலது பக்கம் நவக்கிரக சந்நிதி அமைக்கப் பெற்று இருக்கிறது. இச் சந்நிதி அழகிய மரத் தூண்களுடன் சிறு மண்டபமாகக் காட்சி அளிக்கிறது. இதன் மேற்கூரையும் மரத்தால் ஆகியுள்ளது. நல்ல சித்திர வேலைப்பாடு இம் மண்டபத்தில் அமைந்துள்ளது.

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்திருப்பது வாழவந்தம்மன் சந்நிதியாகும். கோயிலின் வடக்கு வாயிலை நோக்கி இச்சந்நிதி அமைந்து இருக்கிறது. இப்பகுதி பழைமைத் தோற்றத்துடன் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் இவ் அம்மனே முதன்முதலில் இருந்திருக்க வேண்டும். அமுதலிங்கேஸ்வரர் கோயில் கட்டிய பின்னர் இக்கோயிலையும் மராமத்து செய்து அதனுடன் இணைத்திருப்பர் என்று எண்ண இடமுண்டு.


1915ம் ஆண்டு: முத்துக்குமாரசாமி சந்நிதி


இவ் ஆண்டு முத்துக்குமாரசாமி சந்நிதி உருவாகி  உள்ளது. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்தில் மேற்குப் புறத்தில் வாயு மூலையில் இச்சந்நிதி அமைக்கப் பட்டிருக்கிறது. முருகன் வள்ளி தெய்வானையுடன் விளங்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார்.


1920ம் ஆண்டு: உட்பிரகார மண்டபம்


இவ் ஆண்டில் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.


1928ம் ஆண்டு: வரதராஜப் பெருமாள் சந்நிதி


சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதியையும் இங்கு காண முடிகிறது. நாடார் சமூகத்தாரின் சமயப் பொதுநோக்கை எடுத்துக் காட்டுவதாக வரதராஜப் பெருமாள் சந்நிதி அமைகிறது. அம்மன் சன்னிதியை அடுத்து கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. அம்மன் சந்நிதியில் இருந்த ஆதிமூலப் பெருமாளையும், தேவியர் இருவரையும் மணி மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, வரதராஜப் பெருமாளைத் தம் தேவியருடன் கருவறையில் எழுந்தருளச் செய்திருக்கின்றனர்.                                   


1974ம் ஆண்டு: அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில்  தளம்


1828ம் ஆண்டிற்குப் பின் கோயில் வளர்ச்சியடையாது இருந்து இருக்கிறது. மீண்டும் 1974ம் ஆண்டு முதல் வளர்ச்சி பெறத்தொடங்கியது. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் தள  வரிசைக் கற்கள் பதிக்கப்பெற்று செம்மைப் படுத்தப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த மரங்கள், செடிகொடிகள் அழிக்கப்பட்டன. கோயிலின் தலவிருட்சம் வில்வமரம். அதனால் ஓரிரு வில்வமரங்களே இன்று காணப்படுகின்றன. அவையும் வடக்கு வாயிலை ஒட்டி உள்ளன.


1975ம் ஆண்டு: அமுதவல்லி அம்மன் சந்நிதியில் தளம், கலாமண்டபம் 


இவ் ஆண்டில் அமுதவல்லி அம்மன் சந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் தள வரிசைக் கற்கள் பதிக்கப் பட்டிருக்கின்றன. தளங்களும் கற்களால் அமைக்கப்பட்டு விட்டதால் கோயிலைத் தூய்மை செய்வது எளிதாக இருக்கிறது. கோயில் எப்பொழுதும் தூய்மையாக விளங்குவதால் கோயிலுக்குள் சென்ற உடனேயே இறைவனை வழிபடக் கூடிய மனஉணர்வும் நம் உள்ளத்தில் தோன்றுகிறது.

விழா நிகழ்ச்சிகளைச் சிறப்புற நடத்தும் வண்ணம் ‘கலா மண்டபம்’ என்னும் பெயரில் ஓர் அரங்கு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டும் இதுவே. கோயிலில் கிழக்குப்புற வாயிலின் வலது பக்கத்தில் (முன்பு வாதாம் மரங்களும் கிணறும் இருந்த இடத்தில்) இம்மண்டபத்தை அமைத்து இருக்கின்றனர். கோயிலில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை மக்கள் நெரிசல் இன்றிக் கண்டு களிப்பதற்கும், கேட்டுக் களிப்பதற்கும் இம்மண்டபம் ஏதுவாக அமைந்து இருக்கிறது.

இம்மண்டபத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் எவ்விடத்தும் தங்கள் பெயரையோ, உருவச் சிலையையோ வைத்துத் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை. இது முற்றிலும் புதுமையாக அமைந்து இறை அருளால் இறைவனுக்குச் செய்யும் தொண்டில் நமக்குப்  பங்கில்லை என்பதை உணர்ந்தவர்களாகச் சிலர் இவ்வுலகில் வாழ்கின்றனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.


1976ம் ஆண்டு: நாயன்மார்கள், காசிவிஸ்வநாதர்- விசாலாட்சி, வல்லபகணபதி, கற்பகவல்லி, பாலசண்முகர்


இவ் ஆண்டில் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 64நாயன்மார்களையும், 9தொகை அடியார்களையும், காசிவிஸ்வநாதர்- விசாலாட்சி அம்மையாரையும் எழுந்தருளச் செய்திருக்கின்றனர்.

மேலும் இவ் ஆண்டில் அமுதவல்லி அம்மன் சந்நிதியில் உட்பிரகாரத்தில் மேற்குப் பக்கத்திலுள்ள திருமதிலில்  மாடங்கள் அமைத்து, வல்லப கணபதி, கற்பகவல்லி அம்மன், பாலசண்முகர் ஆகிய மூர்த்திகளைத் தனித்தனியே எழுந்தருளச் செய்திருக்கின்றனர்.


1978ம் ஆண்டு: ஆஞ்சநேயர் சந்நிதி


இவ் ஆண்டு வெளிப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதியைத் தோற்றுவித்து உள்ளனர். இச்சந்நிதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இச் சந்நிதிதான் மிகச் சமீப காலத்தில் தோற்றுவிக்கப் பட்டதாக உள்ளது. இதன் பின்னர் வேறு சந்நிதிகள் ஏற்படுத்தப்படவில்லை. 


பிற செய்திகள்:

 

பழனியாண்டவர் சந்நிதி எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்று அறியச் சான்றுகள் கிடைக்கவில்லை. 1930ம் ஆண்டிற்குச் சற்று முன் பின்னாகத் தோற்றுவிக்கப்பட்டது என்று தகவலாளர்கள் கூறுகின்றனர். 

அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் திருச்சுற்று மதிலில் இடம் பெற்றுள்ள சனீஸ்வரர் மாடம், பைரவர் சந்நிதி, உஷா - சூரியன் - பிரதியுக்ஷா மாடம், கார்த்திகை - சந்திரன் - ரோகிணி மாடம் ஆகியனவும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு அறிய முடியவில்லை. சனீஸ்வரன் மாடமும், பைரவர் மாடமும் பழைமையானவையாகத் தோன்றுகிறன. பிற இரு மாடங்களும் மிக அண்மைக் காலத்தில் தோன்றியிருக்க வேண்டுமென்று அவற்றின் புதுமைத் தோற்றத்தால் அறிய முடிகிறது.

கோயிலின் வெளிப்பிரகாரம் கலாமண்டபம் அமைந்த பகுதி தவிர ஏனைய இடம் மண் தரையாக  உள்ளது. இப்பகுதியில் விரைவில் கற்கள் பதிக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலில் தோற்றக் காலத்தில் அமைந்திருந்த இரு தெப்பக்குளங்களும் மூடப்பட்டு உள்ளன. கோயிலின் தோற்றச் சிறப்பிற்கு இது பெருங்குறையாகவே அமைகிறது. பழையகிணறு மூடப்பட்டு விட்டது. வாழவந்தம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ள வாயிலை ஒட்டி வலது பக்கத்தில் புதிய கிணறு ஒன்று இப்பொழுது தோண்டப்பட்டுள்ளது.

 கோயிலின் நிகழ்ச்சிகள் மின்சாரத்தடையினால் தடை ஏற்படா வண்ணம் நிகழ ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயிலில் நுழைவாயிலில் இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி தற்பொழுது விரைவாக நடைபெற்றுக்  கொண்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான நிர்வாகப் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன .

கோயில் திருப்பணி செய்தவர்களின் பட்டியல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது. திருப்பணி செய்தவர்களின் பெயர்கள் விளக்கமாக அவர்கள் திருப்பணி செய்த இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன. பழனியாண்டவர் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகிய இடங்களில் திருப்பணி செய்தவர் பெயர், செய்த ஆண்டு எதுவும் குறிக்கப் பெறவில்லை. கலாமண்டபத்தை உருவாக்கியவர்கள் வேண்டுமென்றே தங்கள் பெயரையும் ,உருவாக்கிய ஆண்டையும்  குறிக்கவில்லை என்று தெரிகிறது. இம் மண்டபம் 1975ம் ஆண்டு கட்டப்பட்டிருப்பதால் கோயில் பதிவேடு மூலம் கட்டியவர் பெயர் அறிய முடிந்தது. உஷா - சூரியன் - பிரதியுக்ஷா, கார்த்திகை - சந்திரன் - ரோகிணி ஆகிய மாடங்கள் கட்டியவர் பெயர் மட்டும் தெரிய முடிகின்றது. கட்டப்பட்ட ஆண்டு குறிக்கப்படாதிருப்பதால் கட்டிய ஆண்டு கண்டுகொள்ள முடியவில்லை.

 மிகப் பெரிய இடத்தில் சிறிய கோயிலாகத் தோற்ற மெடுத்த அமுதலிங்கேஸ்வரர் கோயில் இன்று அருப்புக்கோட்டையின் புகழ் பரப்பும் சிறப்புடைக் கோயிலாகப் பெரிய அளவில் தோற்றம் தருகிறது.


                         


kanmani tamil

unread,
Aug 17, 2024, 11:00:23 PM8/17/24
to vallamai

முத்து மாரியம்மன் கோயில்:

 

முத்துமாரியம்மன் கோயிலின் தோற்றம் கண்டு பிடிக்க முடியவில்லை. 1971ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Temples Of Madras State’  என்னும் அரசாங்கப்  பதிவேட்டிலும் கோயிலின் தோற்றம் தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.7  

நாடார் இனம் அருப்புக்கோட்டையில் நிலையாகத் தங்கத் தொடங்கிய காலத்தில் இக்கோயில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருத இடம் உண்டு. ஏனெனில் நாடார்கள் வியாபாரத்தின் பொருட்டுப் பல ஊர்களுக்கு எல்லாம் செல்ல வேண்டி இருந்ததால் தாங்கள் செல்லும் ஊர்களில் எல்லாம் பேட்டைகள் அமைத்தனர். பின்னர் வியாபாரம் பெருகப் பெருக அவ்வவ் வூரிலேயே தங்க ஆரம்பித்தனர். தங்களிடம் பணவசதி ஏற்பட்டவுடன் தங்கள் குலதெய்வங்களான பத்ரகாளியம்மன், மாரியம்மன் இவர்களுக்குக் கோயில்கள் கட்டத் தொடங்கினர்.

பத்ரகாளி நாடார் சமூகத்தின் அதிர்ஷ்ட தேவதை ஆகும் என்றும் அனைத்து நாடார்களும் பத்ரகாளியின் மைந்தர்கள் ஆவர் என்றும் ஹார்டுகிரேன் தமது நூலில் நாடார்கள் பற்றி வழங்குகிற குறிப்புக்களைக் குறித்துள்ளார்8. மேலும் இவர் நாடார்கள் பத்ரகாளியின் மைந்தர்கள் என்று கூறுவதற்கான புராணக்கதை ஒன்றையும் தம் நூலில் எழுதியுள்ளார். 

தேவலோக கன்னிகைகள் ஏழுபேர் பூலோகத்திலுள்ள நீரோடையில் குளித்துக் கொண்டு  இருக்கும் போது இந்திரன் என்ற கடவுள் அவர்களைப் பார்த்து விட்டார்.  இந்திரன் அக்கன்னிகைகள் அணிந்திருந்த சேலைகளைத் திரட்டி எடுத்துக் கொண்டு அவர்கள் தண்ணீரிலிருந்து வெளிப்படுவது வரையிலும் செடிகளின் மறைவில் காத்திருந்தார். கன்னிகைகள் வெளிப்பட்ட போது அவர்கள் ஒவ்வொருவர் மீதும் இந்திரன் காதல் கொண்டார். அதன் விளைவாக ஏழு கன்னிகைகளும் ஏழு ஆண் குழந்தைகளை விட்டுவிட்டு தேவலோகம் சென்று விட்டனர். பெண் தெய்வமான பத்ரகாளி அக்குழந்தைகளின் மீது இரக்கம் கொண்டு அக்குழந்தைகளைத் தனது சொந்தக் குழந்தைகளாக வளர்த்து வந்தாள். அவ்வாறிருந்த போது ஒரு நாள் மதுரையிலுள்ள வைகைநதி வெள்ளப் பெருக்கால் உடைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்து விடுமோ எனப் பயம் ஏற்பட்டது. எனவே பாண்டியமன்னன் ஒவ்வொரு ஆண்மகனும் கூடைகளில் மண் எடுத்துத் தங்கள் தலையில் வைத்துச் சுமந்து வந்து வைகைக் கரையை மீண்டும் கட்ட வேண்டும் எனக் கட்டளை இட்டான். மேற்குறிப்பிட்ட ஏழு இளம் மைந்தர்களும் செல்வந்தர்கள் இல்லையென்றாலும் பாண்டிய மன்னனின் கட்டளைக்குப் பணிய மறுத்து விட்டனர். மகுடம் சூட்டப்பட வேண்டிய எங்கள் தலைகளில் கூடைகளைச் சுமக்க மாட்டோம் எனக்கூறி அவ் இளைஞர்கள் மறுத்து விட்டனர். அதைக் கேட்டுக் கடுங்கோபமுற்ற அரசன் இளைஞர்களில் ஒருவனைக் கழுத்தளவு மண்ணிற்குள் நிறுத்தி வைத்துப் புதைத்து அவனது தலையை யானையை விட்டு இடறச்செய்யக் கட்டளை இட்டான்.கட்டளையும் நிறைவேற்றப்பட்டது. தலை மிதிபட்டு இரத்த வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட போதிலும் கூட, ‘நான் கூடையைத் தொட மாட்டேன்’ என்று அத்தலை சத்தமிட்டுக் கொண்டே உருண்டு சென்றது. அதைக் கேட்டு மேலும் கோபம் கொண்ட அரசன், இரண்டாம் இளைஞனையும் அவ்வாறு தண்டிக்கும்படி கட்டளை இட்டான். இரண்டாம் இளைஞனின் தலை “அத்தலைக்கு இத்தலை பொய்த்தலையோ ! ஏழு தலை இடரினும் கூடை தொடேன்” என்று கூறிக் கொண்டே உருண்டு சென்றது. அந்த அற்புதம் கண்டு பயந்து போன பாண்டிய மன்னன் எஞ்சிய ஐந்து இளைஞர்களையும் விடுவித்தான். அவர்களிலிருந்து நாடார் இனம் தோன்றிற்று.”9   

மேலே கூறிய கதையின் மூலம் நாடார் இனத்தின் குலதெய்வமாகப் பத்ரகாளி விளங்குவதன் காரணம் அறிய முடிகிறது. நாடார் சமூக வரலாறு எழுதிய ஆசிரியர் குரு.தேமொழி  அவர்களும், ‘நாடார் காளிபுத்திரர்’ என்று அழைக்கப்பட்டதைச் ‘சான்றோர் குலமரபு காத்தல்‘ என்னும் நூலிலிருந்து சான்று காட்டுகிறார்10. எனவே நாடார்குலம் அருப்புக்கோட்டையில் தங்கி வாழ முற்பட்ட போது தங்கள் குலதெய்வமான மாரியம்மனுக்கு முதலில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்திருப்பர் என்று கருத இடம் உண்டு. பத்ரகாளியம்மன், காளியம்மன், மாரியம்மன் என வழங்கப்படும் தெய்வங்கள் யாவும் ஒருவரே.

அருப்புக்கோட்டையில் முதன்முதலில் அமைந்த இம்முத்துமாரியம்மன் கோயில் மண்சுவரால் ஆன கூரைக்கட்டிடமாகத்தான் தோன்றி இருக்கிறது. பின்னரே கற்றளியாக ஆக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் தோற்றம் பற்றிய கதை ஒன்றும் மக்களிடையே வழங்கி வருகின்றது. ‘முன்பு அருப்புக்கோட்டை காடு அடர்ந்த பகுதியாக இருந்தது. ஊர்ச் சிறுவர்கள் ஒன்று கூடி; காட்டு ப் பகுதிக்குச் சென்று விறகு, சாணம் பொறுக்கி வருவர். ஒருநாள் ஒரு சிறுமி இப்பகுதியில் புகுந்து குறிப்பிட்ட இடத்தில் விறகு பொறுக்கிக் கொண்டு இருந்தாள். அப்பொழுது பின்பக்கமிருந்து “இவ்விடத்தைத் தூய்மை செய்து  நீர் தெளிப்பாயாக“ என்று குரல் எழுந்தது. சிறுமி சுற்றும் முற்றும் பார்த்து விட்டுக் குரல் வந்த திசை தெரியாது மீண்டும் தன் வேலையைத் தொடர ஆரம்பித்தாள். பின்னர் மீண்டும் “இந்த இடத்தைச் சுத்தம் செய்து நீர் தெளித்தால் காற்பணம் கிடைக்கும்” என்று குரல் ஒலித்தது. “இவ்விடத்தில் நின்று  மக்களுக்கு அருள் புரிவேன் மாரித்தாய் கூறுகிறேன்.” என்றும் அக்குரல் ஒலித்தது. அசரீரியாக அம்மன் கூறியதைக் கேட்ட சிறுமி வியப்புற்றுத் திகைப்படைந்தாள்.

அன்னை கூறியபடியே செய்வோம் என்று மனம் தெளிவடைந்த சிறுமி அவ்இடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்து நீர் தெளித்தாள். அவள் வியப்படையும் வண்ணம், அவ்விடத்தில் அன்னை சொன்னபடியே காற்பணம் இருக்கப் பெற்றாள். காற்பணம் கிடைத்த இவ்விடத்தில் தான் முத்துமாரியம்மனின் கோயில் அமைந்துள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.’11

 

1977ம் ஆண்டு: நான்கு கால் மண்டபம்


 மண் சுவரால் எழுப்பப்பட்ட கோயில் 1977ம் ஆண்டு திருப்பணி செய்யப் பட்டிருக்கிறது. 1977ம் ஆண்டு மகா மண்டபத்தில் நான்கு கற்றூண்கள் அமைத்து அர்த்தமண்டபத்தின் முன் பகுதியை அழகுபடுத்தி உள்ளனர். இதனை நான்கு கால் மண்டபம் என்று அழைக்கின்றனர். விழாக்காலங்களில் அம்மனை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து காட்சி கொடுக்க இம்மண்டபம் பயன்படுகிறது.


1978ம் ஆண்டு: கோயில் கற்றளியாக்கப்படது

 

1978ம் ஆண்டு தான் இக்கோயில் முழுவதும் கற்றளியாக 

ஆக்கப்பட்டு இருக்கிறது. இத்திருப்பணி பற்றிய விபரத்தைக் கோயிலின் கருவறையின் பின்புறச் சுவரில் குறித்து உள்ளனர். “இத்திருக்கோயில் கல்லினால் திருப்பணி செய்யப் பெற்ற நான்கு மதிற்சுவர்களும் அதனுள் அமைந்திருக்கும் அர்த்த மண்டபமும், கர்ப்பக்கிரகமும், கோபுரமும், கோயிலின் பின்புறம் உள்ள நான்கு கால் மண்டபமும், கோயிலின் கல்தள வரிசை முழுவதும் மின்சார இணைப்பு புதுப்பித்தலும், துவஜஸ்தம்பமும், பலிபீடமும்; நாடார்கள் பொது நிலக்கடலை எண்ணெய் மகமைத் தரப்பினரின் எண்ணெய் வியாபாரிகளிடமிருந்தும் சுமார் நாற்பது வருட காலமாகப் பெறும் எண்ணெய் நிதியிலிருந்து இத்திருப்பணி செய்து முடிக்கப்பெற்றது. (காளயுக்தி வருஷம் ஆவணி மாதம் 5ம் (தேதி 21.8.1978)”. சிறிது சிறிதாகத் திருப்பணி செய்யாமல் திருப்பணிக்கென்றே பணம் சேர்த்து முழுமையாகச் செய்து இருக்கின்றனர் இக்கோயிலிலும் ஜெனரேட்டர் வசதி உண்டு. மகாமண்டபத்தில் தனிப்பட்டவர்களால் உபயமாகக் கொடுக்கப்பட்ட அலங்கார விளக்குகள் அணி செய்கின்றன.


 வாலசுப்பிரமணியசாமி கோயில்:

 

வாலசுப்பிரமணியசாமி கோயிலின் தோற்றம் பற்றி எதுவும் அறிய முடியவில்லை. முத்துமாரியம்மன் கோயிலுக்குப் பின்னர் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று  தகவலாளர்கள் கூறுகின்றனர். இக்கோயிலின் வாயிலில் அமைத்து இருக்கும் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய மரக்கதவுகளும் வெளிப்பிரகாரமே இல்லாமல் உட்பிரகாரத்துடன் மட்டும் கூடிய கோயில் அமைப்பு ஆகியன இக்கோயில் மிகப் பழங்காலத்தது என்பதனை உறுதிப்  படுத்துகின்றன. இக்கோயில் அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்து மாரியம்மன் கோயில் போன்று வளர்ச்சி அடைந்த நிலையைக் காண இயலவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் விநாயகரை இக்கோயிலில் எழுந்தருளச் செய்திருக்கின்றனர் என்று தகவலாளர்கள் கூறுகின்றனர். இது பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இது தவிர இக்கோயிலில் மாற்றமோ வளர்ச்சியோ எதுவும் காண முடியவில்லை.

 

 சந்திவீரசாமி கோயில்:  


சந்திவீரசாமி கோயில் சுமார் ஐந்து தலைமுறைக்கு முன்னர் கட்டப்பட்ட தாகத் தகவலாளர்கள்  கூறுகின்றனர். குழந்தைவேல் நாடாரால் தம் குலதெய்வ வழிபாட்டிற்காகக் கட்டப்பட்டதாகக்  கூறுகின்றனர். கடைவீதியில் மிகச் சிறிய பகுதியில் அமைந்திருப்பதால் இக்கோயிலில் எந்தவித மாற்றமோ வளர்ச்சியோ ஏற்படுவதற்கு வழி இல்லாமல் கோயில் கட்டிய காலத்தில் இருந்தது போலவே இன்றும் உள்ளது.

 

சித்தி விநாயகர் கோயில்:

 

சித்தி விநாயகர் கோயிலின் தோற்றமும் அறிய முடியவில்லை. முன்பு சைவபானு க்ஷத்திரிய ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒரு பகுதியில் அரச மரத்தடியில் இச்சித்தி விநாயகர் எழுந்தருளியிருந்தார். இப்பள்ளி பெண்கள் பள்ளியாக மாறிய பொழுது இக்கோயிலுக்கும், பள்ளியின் மதிற்சுவரை ஒட்டித் தனித்த வாசல் வைத்துக்  கோயில் போன்ற அமைப்பினை ஏற்படுத்தினர். 30.3.1976ம் நாளன்று அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறையால் கோயில் மேற்கூரையும் திருவாச்சியும் பிற எழில் திருப்பணிகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. 


முடிவுரை:

  

“திருக்கோயில் மனித வாழ்வை மேம்படுத்துவதாயும், மனித வாழ்க்கை நலத்திற்கு வழிகாட்டியாகவும் மனிதனுக்கு இன்பவாழ்வினை இனிதே நல்குவதாயும், மனித வாழ்வின் நாகரிகச் சின்னமாயும், மனிதவாழ்வின் கலை நலத்தைப் பெருக்குவதாயும், பல்வகைக் கலைகளின் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும் இனிதே விளங்குகிறது.” என்று திருக்கோயில் தத்துவம் என்னும் நூலில் ஆசிரியர் புலவர் செந்துறைமுத்து அவர்கள் குறித்துள்ளார்கள்.12 இக்கூற்றின் உண்மையை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக் கோயில்கள் வெளிப்படுத்துகின்றன.

 தங்கள் குலம் சிறப்படைய இறைவனை வழிபட்டனர். இறைவனை வழிபடத் தங்களால் முடிந்த அளவு கோயில்கள் கட்டினர். தாழ்ந்த சமூகத்தினராகக் கருதப்பட்ட இம்மக்கள் பொருளாதார வளர்ச்சி அடைந்த பொழுது உயர்ந்த குலமாகிய பிராமணர்கள் போன்று அவர்களது பழக்க வழக்கங்களைப் பின்பற்றினார்கள். தங்கள் வாழ்க்கை முறைகளைச் சமஸ்கிருதமயமாக்க முற்பட்டனர். இதன் விளைவே சிவன் கோயிலின் தோற்றம் ஆகும். இங்ஙனம் தோற்றமெடுத்த சிவன் கோயிலும் பிற கோயில்களும்  மனித வாழ்வின் நாகரிகச் சின்னங்களாகவும் மனித வாழ்வின் கலைவளத்தைப் பெருக்குவனவாகவும் கட்டிடக்கலை, சிற்பக்கலை சித்திரக்கலை போன்ற கலைகளின் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும் அமைந்துள்ளன. 


                                                           குறிப்புகள்

 

  1.    S.T.ஜெயபாண்டியன் (மொ. ஆ) - தமிழக நாடார் வரலாறு - ப.8 

  2.     Ibid.- ப. - 53-54 

  3.    குரு. தேமொழி - நாடார் சமூக வரலாறு - ப. - 39 

  4.    ibid. ப. - 29-30 

  5.    பின்னிணைப்பு - 3   

  6.    பின்னிணைப்பு -  4 

  7.   Census Of India -1961 -  Volume - 9 - Madras - Part-11-DTemples Of Madras     State p. 339 

  8.   S.T.ஜெயபாண்டியன்  (மொ.ஆ.) - மு.நூ.- ப - 55 

  9.   Ibid - ப. - 26- 27  

  10.   குரு. தேமொழி - மு.நூ.- ப. - 38 

  11.   அ.காசி - மாரியைப் பணிகுவம் - ப. - 4 

  12.   செந்துறைமுத்து - திருக்கோயில் தத்துவம் - ப. - 108

kanmani tamil

unread,
Aug 18, 2024, 10:08:31 AM8/18/24
to vallamai

4     கோயில்களின் அமைப்பு


                        முன்னுரை 

                        அமுதலிங்கேஸ்வரர் கோயில் 

                                    அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி - அதன் உட்பிரகாரம் 

                                    அமுதவல்லி அம்மன் சந்நிதி -அதன் உட்பிரகாரம் 

                                    வெளிப் பிரகாரம் 

                        முத்துமாரியம்மன் கோயில் 

                         வாலசுப்பிரமணியசாமி கோயில் 

                         சந்திவீரசாமி கோயில் 

                         சித்திவிநாயகர் கோயில்

                         முடிவுரை 



முன்னுரை: 


இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் கோயில் என்று அழைக்கிறோம். மழைநீரைப் பெரிய அளவில் தேக்கிக் கால்வாய்கள் மூலம் அனுப்புகிற அணை போலத் தெய்வ அருளை ஒருமுகமாகப் பெற்றுத் தேக்கிக் கொண்டு; ஊர் முழுவதும் நாலா பக்கமும் செலுத்துவதாகக் கோயில் அமைகிறது. இவ்வண்ணம் அருப்புக்கோட்டை நகரில் நாடார்கள் உறவின்முறையின் மூலம் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.


அமுதலிங்கேஸ்வரர் கோயில்:


சுமார் தென்வடல் 200அடி; கீழ்மேல் 270அடி ஆக 54000 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது இக்கோயில். ஊரின் கிழக்கு ரதவீதியின் மேற்குப் பக்கத்தில் மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. காரண ஆகமத்தில் கூறியுள்ள சிவன்கோயில் அமைப்பின்படியே இக்கோயில் அமைந்துள்ளது என்று தகவலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோயிலின் கிழக்கு வெளிப்பிரகாரத்தின் வழியாக நுழைய இரு வாயில்களும், தெற்கு வெளிப்பிரகாரத்தின் வழியாக நுழைய ஒரு வாயிலும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வழியாக நுழைய இரு வாயில்களும் ஆக ஐந்து வாயில்கள் இக்கோயிலில் உள்ளன.

இக்கோயில் பல சந்நிதிகளை உடையதாயும், பற்பல கடவுளரை வழிபடக் கூடிய இடமாகவும் அமைந்திருக்கிறது. பெரிய அளவில் அமைந்து  இருப்பதால் அமைப்பைப் பின்வரும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுத்து விரிவாகக் காணலாம். 

                                1. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி -அதன் உட்பிரகாரம்    

                                            2. அமுதவல்லி அம்மன் சந்நிதி - அதன் உட்பிரகாரம் 

                                            3. வெளிப்பிரகாரம் 


அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி - அதன் உட்பிரகாரம்:  


கோயிலின் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நுழைவு வாயில்களுக்கு நேராக இரு உட்கோபுர வாயில்கள் உண்டு. அவற்றில் வடக்கு வாயிலில் அமுதலிங்கேஸ்வரரின் சந்நிதி அமைந்துள்ளது. இச்சந்நிதியின் வாயிலுக்கு முற்புறத்தில் நந்தீஸ்வரர், துவஜஸ்தம்பம், பலிபீடம் ஆகியன உயர்ந்த தோற்றத்தில் அமைந்துள்ளன. வாயிலைக் கடந்து சென்றால் வரிசையாகப் பல மண்டபங்கள்  அமைந்துள்ளன. அவை முறையே கல்யாண மண்டபம், ஆறுகால மண்டபம், மகாமண்டபம், மணிமண்டபம், அர்த்தமண்டபம் என்பனவாகும்.


கல்யாண மண்டபம்:


 கோயில் வாயிலுக்கும் ஆறு கால் மண்டபத்துக்கும் இடையே உள்ள பகுதி கல்யாண மண்டபம் ஆகும். கல்யாண மண்டபத்திற்குப் பந்தல் கால்கள் அமைத்தது போல் நான்கு பெரிய கல் தூண்கள் பொருத்தி கோயிலின் வாயிலையும், ஆறுகால் மண்டபத்தையும் இணைக்கின்றன. இங்கு அமைந்துள்ள தூண் ஒன்றில் “இந்த கல்யாண மண்டபத்தில் இருக்கிற....” என்றே இம்மண்டபம் குறிக்கப்பட்டுள்ளது. கல்யாணங்கள் நடைபெறுவதில்லை எனினும் தோற்றத்தை வைத்துக் கல்யாண மண்டபம் என்று இம்மண்டபம் அழைக்கப்படுகிறது என்று கருதலாம். திரு அ. காசி அவர்கள் இக்கோயில் பற்றித் தாம் எழுதிய நூலில் இம்மண்டபத்தைப் பந்தல் மண்டபம் என்று குறித்துள்ளார்1. 


ஆறுகால் மண்டபம்: 


கல்யாண மண்டபத்தை அடுத்து நான்கடி உயரத்தில் இம்மண்டபம் அமைந்துள்ளது. ஆறு கல் தூண்களைக் கொண்டதாக இம்மண்டபம் அமைந்திருப்பதால் இம்மண்டபம் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. தெற்கு வடக்காக இம்மண்டபத்திற்குச் செல்ல இரு வழிகள் உண்டு. கல்யாண மண்டபத்தின் வழியாகத் தெற்குப்புற வாயிலின் படிகள் மீது ஏறி இம்மண்டபத்தை அடைய வேண்டும். இதனை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபத்திற்குச் செல்லும் வாயிலின் இருபுறத்திலும் துவாரபாலகர்கள் உள்ளனர். இம் மண்டபத்தில் உள்ள ஆறு கற்றூண்களிலும் கடவுளரின் திருவுருவங்கள், திருவிளையாடல் காட்சிகள் இவற்றைச் சித்தரிக்கும் நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள் இடம் பெற்றுள்ளன.


முதலாம் தூண்: 


நான்முகன் திருவுருவம், வள்ளுவர் - வாசுகி திருவுருவங்கள், பிச்சாண்டவராகப் பரமேஸ்வரன் காட்சி அளித்தல், யாழியின் உருவம்,  நந்தி மத்தளம் முழக்குதல், பசு லிங்கத்திற்குப் பால் சுரத்தல், கூத்தபிரான் தாண்டவக் கோலம் ஆகியன இத்தூணின் பக்கங்களில் காட்சி தருகின்றன.  


இரண்டாம் தூண்: 

வீணா வாணி திருவுருவம், பைரவர் திருவுருவம்,  பரசுராமனுக்கு  லிங்கத் திருமேனியாக  பரமேஸ்வரன்  காட்சி அளித்தல்,  நாரைக்கு முக்தி கொடுத்தல், மகாலட்சுமி திருவுருவம்,  மயில் மேல் முருகன் வீற்றிருக்கும் காட்சி,  மணிவாசகர்  மந்திரியாக  இருத்தல்,  கருங்குருவிக்கு உபதேசித்தல், ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.


மூன்றாம் தூண்:   


அம்பிகையின் திருவுருவம்,  துவார பாலகர்  திருவுருவம்  ஆகிய இரு உருவங்கள் மட்டும் இத்தூணில் செதுக்கப்பட்டுள்ளன. பிற பகுதிகள் சாதாரண  வேலைப்பாட்டுடன் உள்ளன.  


நான்காம் தூண்:  


துவார பாலகர்  மட்டும்  செதுக்கப்பட்ட  எளிய வேலைப்பாடுடைய   தூணாக இது காட்சி தருகிறது. 


ஐந்தாம் தூண்:  


கந்தர்வ மாது இறைவனுக்கு மலர் சொரிதல், பரமேஸ்வரன் பார்த்தனுக்குப்  பாசுபதம் அளித்தல், விசுவாமித்திரர் மேனகையின் ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்து வரம் தருதல், பராசக்தியின் திருவுருவம், பரமேஸ்வரரும் பார்வதியும் இணைந்திருந்து உலக உயிர்களுக்குக் காட்சி தருதல், விநாயகர் மூஷிக வாகனத்தில் காட்சி கொடுத்தல், தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியில் குருவாகக்  காட்சி தருதல், துர்க்கா தேவி அசுரனைச் சம்ஹாரம் செய்தல் ஆகிய அரிய பல காட்சிகளைச் சிற்பங்களால் வெளிப்படுத்தும் சிறந்த கற்றூணாக இது அமைந்துள்ளது.


ஆறாம் தூண் :


 சிவலிங்கத் திருமேனி  யானைக்குக் காட்சி கொடுத்தல், பரமசிவன் பல்லுயிர்க்கும் படிஅளத்தல், திருப்பெருந்துறையில் அந்தணனாக வந்து இறைவன் மணிவாசகருக்குக் காட்சி தருதல், பத்ரகாளி சும்பன், நிசும்பன் இவர்களைச் சம்ஹாரம் செய்தல், அரசனாக வந்த ஆண்டவன் அகத்திய முனிவரிடம் கேள்வி கேட்டல், கல்யானைக்குக் கரும்பு ஊட்டல், கர்ப்பமாகிய பன்றி பல குட்டிகளை ஈன்று உயிர் நீத்தல், பரமேஸ்வரன் பன்றி வடிவில் வந்து அக்குட்டிகளுக்குப் பாலூட்டல் ஆகிய காட்சிகள் இத்தூணில் அழகுறச் செதுக்கப்பட்டுக் காட்சி தருகின்றன.


kanmani tamil

unread,
Aug 19, 2024, 11:51:25 PM8/19/24
to vallamai

மகாமண்டபம்: 


ஆறுகால் மண்டபத்தை அடுத்து உள்ளது மகாமண்டபம். இம்மண்டபம் நான்கு  தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தென்புறம் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்திற்கு இட்டுச் செல்லும் வாயில் உள்ளது. வாயிலை ஒட்டி உட்புறத்தில் சித்திரபுத்திரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இம் மண்டபத்தில்  தெற்கு நோக்கி நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. சிவகாமசுந்தரியும், மாணிக்க வாசகரும் இருபுறங்களிலும் இடம்பெற  நடராஜர் வலது காலைத் தூக்கி நின்றாடும் கோலத்துடன் காட்சி தருகிறார். சந்நிதியின் வாயிலில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இறைவனின் திருநடனக் காட்சிகளைக் கண்டு களிக்கும் கோலத்துடன் நிற்கின்றனர். இச்சந்நிதியின் பின்புறச் சுவர்களில் நடராஜரின் வலது காலைத் தூக்கி நின்றாடிய தோற்றம், இடது காலைத்  தூக்கி நின்றாடிய தோற்றம், காலைத் தலை மேல் தூக்கி ஆடிய தோற்றம்  ஆகியன அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.

 இம்மண்டபத்தின்  இருபுறங்களிலும்  உற்சவமூர்த்திகள் இடம் பெற்றுள்ளன. பெரிய சோமாஸ்கந்தர், நடராஜர், அமுதவல்லியம்மன், சிவகாமி, வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகிய உற்சவமூர்த்திகள் உள்ளன. இவற்றுடன் வெள்ளைச் சலவைக் கல்லால் ஆன பிள்ளையார் உருவம் ஒன்று கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.


மணிமண்டபம்: 


மணிமண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் சிறிய அளவில் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் தென்புறம் விக்னேஸ்வரரும் வடபுறம் சுப்பிரமணியரும் இருக்கக் காணலாம். வடபுறச் சுவரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பொருட்கள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 


அர்த்த மண்டபம்:

 

மணி மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் அமைந்துள்ளது. இங்கு அமைந்த கருவறையில் அமுதலிங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். அமுதலிங்கேஸ்வரரின் சிலை ஒரு மீ. பதினோரு செ. மீ. உயரம் கொண்டதாகச் சிறந்த தோற்றத்துடன் விளங்குகின்றது. 

வில்வ விருட்சத்தின் நிழலில் அநாதியாய் மலமில்லாத மூலப்பொருளாகி  அடியார்க்கு இன்பம் செய்தலாலே அமுதலிங்கம் என்னும் பெயர் பெற்று விளங்கியுள்ளார். .வினைகட்கு ஈடாகக் கண், கை,  கால்களை வருத்தும் நோய்கட்கெல்லாம் இவ்வில்வ இலை மருந்தாகித் தீர்க்கின்ற சிறப்பால் அமுதலிங்கமாகக் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது. 

 தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டும் என்று திருப்பாற்கடலைக் கடைந்த போது அமுதமும் விஷமும் வெளிப்பட்டன. அப்பொழுது அமுதத்தை யார் உண்ணுவது, விஷத்தை யார் உண்ணுவது என்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ஆலகால விஷத்தால் உலகம் முழுவதும் அழியக் கூடிய அபாயத்திலிருந்து மீள்வதற்குச் சர்வேஸ்வரனை வழிபட முற்பட்டனர். எக்காலத்திலும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பாகம் என்றும்,பரமாத்மா - ஜீவாத்மா - உடல் என்றும், ஆண் - பெண் - அலி என்றும் உருவத்தால் வழிபட எண்ணினர். எனவே அருவம்-உருவம்-அருவுருவம் என்றும், சிவம்-சக்தி-உலகம் என்றும், பிரம்ம பாகம் - விஷ்ணுபாகம் - சிவ   மும்மூன்று பாகம் சேர்ந்த  ஓர் உருவம் இலிங்கம் என்று எண்ணி வழிபட்டனர். வழிபாட்டின் இறுதியில் எல்லாம் வல்ல இறைவன் தோன்றி அமுதத்தை மற்றவர் உண்ணச்செய்து ஆலகால விஷத்தைத் தாம் உண்டார்.எனவே யாவரும் அமுதம் காரணமாக ஏற்பட்ட ஆபத்தை நீக்க வேண்டி பூஜை செய்ததால் இந்த இலிங்க இறைவனுக்கு ‘அமுதலிங்கம்’ என்ற பெயரும், அருவுருவான இலிங்கத்திலிருந்து உருவமாக ஈஸ்வரன் தோன்றி ஆலகால விஷத்தை உண்டமையால் ‘அமுதலிங்கேஸ்வரன்’ என்ற பெயரும் ஏற்பட்டு வழங்கலாயிற்று என்று கூறுவர்2.


அர்த்தமண்டபத்தின் வெளிப்புறச்சுவர்:


அர்த்த மண்டபத்தின் தெற்கு வெளிப்புறச் சுவரில் தட்சிணாமூர்த்தியும், மேற்கு வெளிப்புறச்சுவரில் அண்ணாமலையாரும், வடக்கு வெளிப்புறச் சுவரில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலையார் வடிவம் லிங்கோத்பவர் வடிவமாக உள்ளது. அதாவது நெருப்புத்தூண் வடிவாகிய இலிங்கத்தில் இறைவன் தோன்றும் திருக்கோலம்  ஆகும். இறைவன் இலிங்கத்தே தோன்றினான் என்பதற்கேற்ப  இலிங்கத்தின்  உள்ளே சிவபெருமானின் பிறை சூடிய திருக்கோலம் செதுக்கப்பட்டுள்ளது. இறைவன் அடி முடி தேடியும் காணா வண்ணம் அமைந்த நிலைக்கேற்ப முழந்தாளின் கீழும், முடியின் முடிவும் செதுக்கப்படவில்லை. சிவனின் இடது புறத்தில் மேற்பாகத்தில் நான்முகன் அன்ன வடிவத்தில் முடி காண மேனோக்கிப் பறத்தலும், வலது புறத்தில் கீழ்ப் பாகத்தில் மால் அடி காணக் கீழ்நோக்கி  நிலத்தை அகழ்தலும் காட்டப்பட்டுள்ளன. இருவரும் தம் சொந்த வடிவங்களோடு மார்பில் கை கூப்பியபடி அளவிட முடியாதவாறு வளர்ந்துள்ள இலிங்கத்தை அண்ணாந்து நோக்கிய வண்ணம் காணப்படுகின்றனர்.


உட்பிரகாரம்:


அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்தில் தென்புறத்திலுள்ள மண்டபத்தின் ஆரம்பத்தில் ஞானவிநாயகர் இடம் பெற்றுள்ளார். அடுத்து அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்கள் வரிசையாக அமைக்கப்பட்டு  உள்ளன. மண்டபத்தின் முடிவில் காசிவிஸ்வநாதரும், விசாலாட்சி அம்மையாரும் அமைந்துள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த கடம்பவனத்தாள் என்னும் அம்மையாரால் காசியிலிருந்து கொண்டு வந்து வைக்கப் பெற்றதால் இவ் இலிங்கமும், அம்மனும் காசி விஸ்வநாதர் என்றும், விசாலாட்சி அம்மையார் என்றும் அழைக்கப் படுகின்றனர் என்று தகவலாளர்கள் கூறுகின்றனர்.

மேற்குப் புறத்தில் கன்னி மூலையில் அனவரத செல்வ விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இரண்டு மீ. இருபது செ.மீ. உயரமுள்ள பெரிய தோற்றத்துடன் இவ் விநாயகர் வடிவம் சிறந்து விளங்குகிறது.

மேற்குப்புறத்தில் வாயுமூலையில் முத்துக்குமாரசாமி சந்நிதி அமைந்து உள்ளது. முருகன் வள்ளி தெய்வானையுடன் நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

வடக்குப் பக்கம் சண்டேசுவரர் சந்நிதியுள்ளது.

வடக்கு மதிலில் சனீஸ்வரன் தெற்கு நோக்கித் தோற்றம் கொண்ட மாடம் உள்ளது. நவக்கிரக சந்நிதி என்று ஒரு சந்நிதி இருந்த போதிலும்; சனீஸ்வரனுக்குத் தனித்த மாடமும் இங்கிருப்பது இக்கோயிலின் சிறப்பை எடுத்து விளக்கும்.

கிழக்குப் புறத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய தோற்றத்தில் பைரவர் காட்சி தருவதாக இச்சந்நிதி அமைந்துள்ளது.

கிழக்கு மதிலின் உட்புறத்தில் நவக்கிரக மண்டபம் உள்ளது. அமுத லிங்கேஸ்வரர் சந்நிதிக்கு உள்ளே நுழைந்தவுடன் வலப் பக்கமாய்க் கல்யாண மண்டபத்தில் இம்மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் தூண்களும் மேற்கூரையும் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.

கிழக்கு மதிலின் உட்பிரகாரத்தில் வலப்பக்கம் கார்த்திகை -  சந்திரன் - ரோகிணி ஆகிய மூர்த்திகளைக் கொண்ட மாடமும், இடப்பக்கம் உஷா - சூரியன்  -பிரத்யுக்ஷா ஆகிய மூர்த்திகளைக் கொண்ட மாடமும் அமைந்து உள்ளன. இம்மாடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் உருவாக்கப் பட்டுள்ளன என்று அவற்றின் அமைப்பு முறையிலிருந்து  அறிய முடிகின்றது.


அமுதவல்லியம்மன் சந்நிதி- அதன் உட்பிரகாரம்              


கிழக்கு மதிலின் முன்புற வாயிலில் அமுத வல்லியம்மன் சந்நிதி அமைந்துள்ளது. சந்நிதியின் முன்புறத்தில் துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தி ஆகியன முறைப்படி அமைந்துள்ளன. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதிக்கு துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தி ஆகியன வெளிப்பிரகாரத்தில் அமைந்திருக்க அம்மன் சந்நிதிக்கு  இவை உட்பிரகாரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி அமைந்த முறைப்படியே இச்சந்நிதியும் கல்யாண மண்டபம், ஆறுகால் மண்டபம், மகாமண்டபம், மணிமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்று அமைக்கப்பட்டுள்ளது.

 

கல்யாண மண்டபம்: 


அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் போல இம்மண்டபம் நான்கு தூண்களால் அமையாமல் இரு தூண்களால்  அமைந்துள்ளது. தூண்களைச் சுற்றியுள்ள பகுதி வெளியிடமாக அமைந்துள்ளது. அங்கு தான் துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தி ஆகியவை அமைந்துள்ளன. இம்மண்டபத்தில் அமைந்த இரு தூண்களும் ஆறு கால் மண்டபத்தை இணைக்கின்றன. இருதூண்களும் உயர்ந்த தோற்றம் உடையவனாய் அமைந்துள்ளன. இருதூண்களிலும் மேற்பகுதியில் யாளியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வடபுறம் உள்ள யாளியின் வாயில் உள்ள உருண்டை உருளக் கூடிய சிறப்பு உடையதாகும்.


kanmani tamil

unread,
Aug 21, 2024, 12:01:12 AM8/21/24
to vallamai

ஆறுகால் மண்டபம்:


கல்யாண மண்டபத்தை அடுத்து நான்கடி உயரத்தில் இம்மண்டபம்

 அமைந்துள்ளது. ஆறு கற்றூண்களைக் கொண்டதால் இம்மண்டபம் ஆறுகால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. தெற்கு வடக்காக இம்மண்டபத்திற்குச் செல்ல இரு வழிகள் உண்டு. கல்யாண மண்டபத்தின் வழியாகத் தெற்குப்புற வாயிலில் படிகள் மீது ஏறி இம்மண்டபத்தை அடைய வேண்டும். இதனை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்திற்குச் செல்லும் வாயிலில் இரு புறங்களிலும் துவாரசக்திகள் உள்ளனர். இம்மண்டபத்திலுள்ள ஆறு தூண்களிலும் அரிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. கடவுளரின் உருவங்களும் திருவிளையாடல் காட்சிகளும் காண்போர்க்கு இன்பத்தை நல்குகின்றன. 


முதலாம் தூண்:  


விநாயகர் சிவலிங்க வழிபாடு செய்தல், நான்முகன், பார்வதி பரமேஸ்வரன் அமர்ந்திருக்கும் பொழுது இராவணேஸ்வரன் மலையைப் பெயர்த்து எடுக்க முயற்சி செய்தல், பார்வதி பரமேஸ்வரன் முன் நாரதர் வீணையில் சாமகானம் இசைத்தல்,  ஊர்த்துவ தாண்டவம் ஆகிய காட்சிகளும், நந்திகேஸ்வரன், யாளி ஆகிய திருவுருவங்களும் இத்தூணில் சிறப்புறச் செதுக்கப்பட்டுள்ளன. 


இரண்டாம் தூண்: 


மகாலட்சுமி, பராசக்தி, வேணுகோபாலன், அமுத வல்லியம்மன், சுப்பிரமணியர் ஆகிய கடவுளரின் திருவுருவங்கள் இத்தூணில் காணப்படுகின்றன. 


மூன்றாம் தூண்:  


துர்வாசர் அக்னி யாகம், துர்க்கா தேவி, அர்த்த நாரீஸ்வரர், அமுதலிங்கேஸ்வரர் - அமுதவல்லியம்மன் திருக்கல்யாணம், துவார சக்தி, அம்மையின் திருநடனக் கோலம், நடராஜர் ஆகியன அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. 


நான்காம் தூண்:

  

பத்ரகாளி நிசும்பாசுரனை வதைத்தல்3, பராசக்தி மகாலட்சுமி, துவாரசக்தி, பரமேஸ்வரன் கஜமுகாசுரனை அழித்தல்,  கற்பகவல்லி ஆகியன சிறப்பாக இத்தூணில் அமைக்கப்பட்டுள்ளன. 


ஐந்தாம் தூண்: 


 காலசம்கார மூர்த்தி, விநாயகர், பிச்சாண்டவர் ஆகிய இறைத் தோற்றங்கள் மட்டும் இத்தூணில் செதுக்கப்பட்டுள்ளன. 


ஆறாம் தூண்:

பழனியாண்டவர், சண்டமுண்டாசுரனை அழித்தல், பத்ரகாளி, கல்யானைக்கு இறைவன் கரும்பு கொடுத்தல், பரமேஸ்வரன் ஆகிய காட்சிகளைக் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் இத்தூண் விளங்குகிறது. 


மகாமண்டபம்: 


ஆறு கால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் வலப்பக்கம் தென்புறம் நோக்கிப் பள்ளியறை அமைந்துள்ளது.

 

மணிமண்டபம்: 


மகாமண்டபத்தை அடுத்து மணிமண்டபம் அமைந்துள்ளது. இங்கு நந்தியும் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் தென்புறம் பிள்ளையாரும், வடபுறம் சக்திவேலரும் உள்ளனர். 


அர்த்த மண்டபம்:  


மணிமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. இங்குள்ள   கருவறையில் அமுதவல்லியம்மன் எழுந்தருளியுள்ளார். 1மீட்டர் 21 செ. மீ. உயரத்தில் அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்மன் நான்கு கரங்களுடன் விளங்குகிறார். இரு கரங்கள் மலர்களைக் கொண்டும் ஒரு கரம் அபயமுத்திரை காட்டியும், ஒரு கரம் தொங்க விட்டும் காட்சி தருகிறார். இறைவன் அமுதலிங்கேஸ்வரராக விளங்க இறைவனுக்கு இணையாக உயிர்களுக்கு அமுதமாகவும் கொடி போன்ற தோற்றத்துடனும் விளங்குவதால் அமுதவல்லி அம்மன் என்று அழைக்கப்படுவது பொருத்தமாகக் காணப்படுகிறது.

 

அர்த்த மண்டபத்தின் வெளிப்புறச் சுவர்: 


அர்த்த மண்டபத்தின் தெற்கு வெளிப்புறச் சுவரில் இச்சா சக்தியும், மேற்கு வெளிப்புறச் சுவரில் கிரியா சக்தியும், வடக்கு வெளிப்புறச் சுவரில் ஞான சக்தியும் அமைந்துள்ளன.

 

உட்பிரகாரம்: 


உட்பிரகாரத்தின் மேற்கு மதிலின் உட்புறத்தில் வல்லப கணபதி, கற்பகவல்லி அம்மன்,  பாலசண்முகர் ஆகியோரின் மாடங்கள் தனித்தனியாக அமைந்துள்ளன. இவை சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அமைக்கப் பட்டுள்ளன. உட்பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் சண்டேஸ்வரரின் சந்நிதி தெற்கு நோக்கி  அமைந்துள்ளது.


வெளிப்பிரகாரம்:


வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி, வரதராஜப் பெருமாள் சந்நிதி, பழனியாண்டவர் சந்நிதி, வாழவந்தம்மன் சந்நிதி, கலாமண்டபம், அமுதலிங்கேஸ்வரர்  சந்நிதிக்கு நேராக அமைந்த  துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தீஸ்வரர்  ஆகியன அமைந்துள்ளன. 


ஆஞ்சநேயர் சந்நிதி: 


வெளிப்பிரகாரத்தில் கிழக்குப் பக்கத்தில் எட்டடி உயரமுள்ள தனிச்சந்நிதிக்கு மேல் ஐந்தடி உயர மண்டபக் கோபுரத்துடன் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. ஆஞ்சநேயர் வடக்கு நோக்கிய வண்ணம் நெடிய தோற்றத்துடன் இறைவனை இருகரம் கூப்பி வணங்கும் வண்ணம் காட்சி தருகிறார். 


வரதராஜப் பெருமாள் சந்நிதி: 


வெளிப் பிரகாரத்தில் தெற்குப்பக்கம் வரதராஜப்பெருமாள் சந்நிதி உள்ளது. அமுதவல்லியம்மன் சந்நிதியின் உட்பிரகாரத்தின் வழியாக இச்சந்நிதிக்குள் நுழைய வாயிலும் உண்டு. பதினெட்டுத் தூண்களை உடைய சந்நிதியாக வரதராஜப் பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது. வெளிமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்னும் பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் துவாரபாலகர் அமைந்துள்ளனர். அடுத்துள்ள அர்த்தமண்டபத்தின் தென்புறத்தில் ஆதிமூலப் பெருமாள்; ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் நிற்கும் தோற்றம் உள்ளது. வடபுறத்தில் இராமானுஜர், நம்மாழ்வார் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. கருவறையில் வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்துடன் தம் இரு தேவியருடன் காட்சி தருகின்றார். வரதராஜப் பெருமாளின் தோற்றம் ஒருமீட்டர் தொண்ணூறு செ.மீ. அளவு உயரம் உடையதாகும்.

 வரதராஜப் பெருமாள் சந்நிதியின் வெளிப்புறச் சுவரின் தென்புறம் பாம்பணையில் துயிலும் ரெங்கநாதரையும், மகாவிஷ்ணுவையும், திருமாலின் பத்து அவதாரங்களையும் சிற்பவடிவில் காணமுடிகிறது. மேற்குப் புறச்சுவரில் நரசிம்மமூர்த்தியும், வடக்குப் புறச்சுவரில் வேணுகோபாலன் குழல் ஊதும் காட்சியும், இராமபிரானின் பட்டாபிஷேகக் காட்சியும் அழகுறச்  செதுக்கப்பட்டுள்ளன. 

இச்சந்நிதியின் முன்புறம் கருடாழ்வார் சந்நிதி சிறிய அளவில் அமைந்துள்ளது. வரதராஜப் பெருமாளை எதிர் நின்று வணங்குவது போல் காட்சி தருகிறார்.


kanmani tamil

unread,
Aug 22, 2024, 12:56:05 AM8/22/24
to vallamai

பழனியாண்டவர்  சந்நிதி:  


வெளிப் பிரகாரத்தின்  மேற்குப் பக்கத்தில் பழனி  ஆண்டவர்  சன்னிதி  உள்ளது. ஆண்டிக் கோலத்துடன் முருகன் காட்சி தருகிறார்.  


வாழவந்தம்மன் சன்னிதி: 

வெளிப்பிரகாரத்தின்  வடக்குப்பக்கத்தில்  வாழவந்தம்மன் சந்நிதி உள்ளது. எட்டுத் தூண்களை உடையதாய் வெளி மண்டபம் அமைந்துள்ளது. வாழவந்தம்மன் என்று சிறு தெய்வத்தின் பெயர் இருந்தாலும், துர்க்கையம்மன் வடிவத்தில் இவ் அம்மன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது ஆகும். சிவன், விஷ்ணு சேர்ந்த அம்சமாகக் கையில் சங்கு சக்கர இலட்சினைகளுடன், எருமைக்  கடா மீது நிற்கும் தோற்றத்துடன் கூடிய துர்க்கையின் தோற்றமாகவே  இவ் அம்மன் தோற்றம்  அமைந்துள்ளது. 


கலா மண்டபம்: 


கிழக்கு வெளிப் பிரகாரத்தின் வடபகுதியில் இம்மண்டபம் அமைந்துள்ளது. கோயிலின் விழாக் காலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இம்மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் கிழக்கே உட்புறச் சுவரில் அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளன. அவை விநாயகர் வடிவம், மார்க்கண்டேயனுக்கு இறைவன் அருள் புரிதல், பார்வதி - பரமேஸ்வரன் திருக்கல்யாணம், காளை வாகனத்தில் சிவபெருமானும் உமாதேவியும் முருகனைத் தம் மடி மீது அமர்த்திக்  காட்சி தருதல், சுப்பிரமணியர் தம் இரு தேவியருடன் காட்சி தருதல் ஆகியனவாம்.


பிற செய்திகள்: 


கிழக்கு வெளிப் பிரகாரத்தில் அம்மன் சந்நிதிக்கு நேரே உள்ள வாயிலை ஒட்டிக் கீழே விநாயகரும் மேலே ஆஞ்சநேயர், சங்கு சக்கரம் பொறித்த கற்றூண் ஒன்றும்  உள்ளது. 

அம்மன் சந்நிதிக்கு நேராக வெளிப் பிரகாரத்தில் இருந்த தெப்பம் இப்பொழுது மூடப்பட்டு விட்டது. கிழக்கு வெளிப் பிரகாரத்தின் வட பகுதியில் இருந்த கிணறு மூடப்பட்டுக் கலாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது . 

 அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியிலுள்ள கல்யாண மண்டபத்திலும், அமுதலிங்கேஸ்வரர்- அமுதவல்லிஅம்மன் சந்நிதிகளிலுள்ள மகாமண்டபங்களிலும், வரதராஜப் பெருமாள் சந்நிதியின் வெளிமண்டபத்திலும் , அனவரத செல்வ விநாயகர், முத்துக்குமாரசாமி சந்நிதிகளின் முன் மண்டபங்களிலும், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், கருடாழ்வார், ஆகிய மூர்த்திகளின் மண்டபங்களிலும் வாழவந்தம்மன் சந்நிதியின் முன்மண்டபத்திலும் உள்ள தூண்களில் கோயில் திருப்பணி செய்துள்ள ஆன்றோர்களின் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. இன்றும் திருப்பணி செய்பவரின் உருவங்கள் செதுக்கப்பட்டு நிறுவப்பெறுவது குறிப்பிடத்தக்க செயலாகும். திருப்பணி செய்தவர்கள் நித்திய பூஜை செய்வதைக் காட்டுவதாக இது அமைகிறது. 

மண்டபங்களில் அமைந்துள்ள தூண்கள் சதுர வடிவினவாய்ப் பதினாறு பட்டை வடிவத்தில் அமைந்துள்ளன. அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லி அம்மன், வரதராஜப் பெருமாள், நடராஜர், விநாயகர், முருகன் ஆகிய சந்நிதிகளில் உள்ள கருவறை மீது கோபுர அமைப்பு உள்ளது. கோயில் திருப்பணி செய்தவர்களின் பட்டியல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது4.

       

முத்து மாரியம்மன் கோவில்: 


முத்து மாரியம்மன் கோயில் சைவபானு ஷத்திரியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிச்  சாலையில் அமைந்துள்ளது. கோயிலை அடையச் சாலையிலிருந்து இறங்கி வடபுறமாகச்  சென்று கிழக்கே திரும்ப வேண்டும். கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் பபரப்பளவு சுமார் 10000 சதுர அடியாகும். கோயில் கட்டிடம் உள்ள பகுதி சுமார் 2576 சதுர அடியாகும். கோயிலின் முன்புறம், வெளிமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, உட்பிரகாரம் எனும் பகுதிகளாக இக்கோயில் அமைப்பு காணப்படுகிறது. கோயிலின் கிழக்குப் பக்கமும், மேற்குப் பக்கமும் வாயில்கள் உள்ளன. கோயிலைச் சுற்றி நான்கு  பக்கமும் பரந்த வெளி உள்ளது.


கோயில் முன்புறம்:

 

கோயிலின் முன்புறத்தில் வைரவ நாதர் பீடநிலையில் அமைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்துக் கொடிக் கம்பம் உள்ளது.


வெளிமண்டபம்: 


கோயில் நுழைவாயிலின் முன்புறம் உள்ள மண்டபம் வெளிமண்டபம் ஆகும். இம்மண்டபம் இரண்டு தூண்களை உடையது. இத்தூண்கள்  சதுர வடிவமாய் எட்டுப் பட்டைகளுடன் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. சிறு தெய்வக் கோயிலாக இருப்பினும் கோயில் முன் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ் அறிவிப்பின் காரணமாகப் பங்குனிப்  பொங்கலின் போது ஒன்பதாம் திருவிழா நாளன்று காலையில் ஆடு, சேவல் முதலியன வெட்டி உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. 


மகா மண்டபம்: 


வெளி மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் நான்கு தூண்களுடன் கூடிய மகாமண்டபத்தைக் காணலாம். இதனை நான்கு கால் மண்டபம் என்றும் அழைப்பர்.

 

அர்த்த மண்டபம்:

 

மகாமண்டபத்தை அடுத்துள்ளது அர்த்தமண்டபம் ஆகும். இம்மண்டபத்தில் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். உற்சவமூர்த்திகளான முத்துமாரியும் துர்க்கையும் இங்கு இடம் பெற்றுள்ளனர்.


கருவறை: 


கருவறையில் அம்மன் தோற்றம் பீடநிலையிலேயே உள்ளது. உருவத்தோடு கூடிய திருவாச்சியைப் பீடத்தின் மேல் வைத்துப் பூஜை செய்வர் அம்மன் நான்கு கரங்களுடன் சாந்த முகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மாரியம்மனின் நின்ற தோற்ற ம் பிற இடங்களில் காண முடியாத தோற்றமாகும். நான்கு கரங்களில் முறையே உடுக்கை, சூலம் பாசம் அக்கினி ஆகியனவற்றை ஏந்திக் கொண்டு அம்மன் காட்சி தருகிறாள்.  கருவறையின் மேற்கூரையில் கோபுர அமைப்பு உள்ளது.


உட்பிரகாரம்: 


கோயிலின் உட்பிரகாரத்தில் தெற்குப் பக்கத்தில் வாழவந்தம்மன் சந்நிதி உள்ளது. இங்கு வாழவந்தம்மன் பீடநிலையில் காட்சி தருகிறார். அம்மனுக்குக் கிழக்கே சந்திவீரசாமி,  வராகி,  ஆரணி,  பைரவி,  மாதங்கி,  முத்தாலம்மன் ஆகியோர் சிறுசிறு பீட நிலையில் அமைக்கப்பட்டுள்ளனர். அம்மனின் மேற்குப் பக்கம் முக்கனி,  சுந்தரி,  தேவி,  உச்சயினி,  சூலி,  கருப்பணசாமி ஆகியோரும் சிறுசிறு பீடநிலையில் காட்சி தருகின்றனர். நாடார் சமூகத்தார் வழிபடும் குலதெய்வங்களாக இவை அமைகின்றன. 

நாடார் சமூகத்தினரின் பண்டைய வழிபாட்டு முறையினை வெளிப்படுத்துவதாக இச்சந்நிதி அமைந்திருக்கிறது. சிறுதெய்வ வழிபாட்டு நெறியினரான நாடார் சமூகத்தினரின் குலதெய்வங்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர். முத்து மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெறும் பொழுது இங்குள்ள வாழவந்தம்மனுக்குப் பொங்கலிட்டு வழிபடுவர். அவ்வாறு வழிபடும் பொழுது அருகில் வேறு பல சிறுதெய்வங்களுக்கும் பீடங்கள் அமைத்து வழிபாடு நடத்தி விட்டு அவற்றை அழித்து விடுவது வழக்கம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் வாழவந்தம்மனுக்குக் கல்லால் பீடம் அமைத்து வழிபட்டுள்ளனர்.  அதனைச் சுற்றி அமைத்த பிற தெய்வ பீடங்களையும் அழிக்காமல் விட்டு விட்டனர் என்று தகவலாளர்கள் கூறுகின்றனர். அவை இன்று எல்லோராலும் வழிபடப்படுகின்றன. எனவே வாழவந்தம்மனைத் தலைமைத் தெய்வமாக நடுவிடத்தே கொண்டு சிறு தெய்வங்கள் சுற்றிலும்  அமைய இச்சந்நிதி அமைந்திருக்கின்றது.

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள வாழவந்தம்மன் சந்நிதியில் எழுந்தருளியுள்ள வாழவந்தம்மன் துர்க்கை வடிவினை உடையதாய் விளங்க; முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள வாழவந்தம்மன் சந்நிதியில் வாழவந்தம்மன் பீடநிலையில் எழுந்தருளி இருப்பது சிந்திக்கத்தக்க ஒன்றாய் அமைந்துள்ளது.


kanmani tamil

unread,
Aug 23, 2024, 1:22:25 AM8/23/24
to vallamai
மேலும் அருப்புக்கோட்டையில் சொக்கலிங்கபுரம் என்னும் பகுதியில் அமைந்த காட்டுவாழவந்தம்மன் கோயில் என்று அழைக்கப்படும் கோயிலில் இரு அம்மன் வடிவங்கள் காணப்படுகின்றன.  கருவறையில் இருக்கும் அம்மன் பன்னிரு கரங்களுடன் அசுரனை அழிக்கும் ஊர்த்துவ நாயகியாய் விளங்குகிறாள். வெளிப்புறத்தில் அமைந்த அம்மன் தான்தோன்றி அம்மன் என்னும் பெயருடன் பூமியிலிருந்து தோன்றிய தோற்றத்துடன் இடுப்பு வரை உள்ள பகுதிகளே தெரியக் காட்சி தருகின்றாள் முகம், கை, மார்பு போன்ற பகுதிகளும் தெளிவான தோற்றத்துடன் காணப்படவில்லை. இவ் அம்மனையும் வாழவந்தம்மன் என்றே மக்கள் குறிப்பிடுகின்றனர். 

இவ்வாறு வாழவந்தம்மன் என்னும் பெயரில் பல வடிவங்களுடன் வாழவந்தம்மன் காட்சி தருவதை அருப்புக்கோட்டையிலுள்ள கோயில்களில் காண முடிகிறது.


வால சுப்பிரமணியசாமி கோயில்: 


வால சுப்பிரமணியசாமி கோயில் ஊரின் பெரிய கடைவீதியில் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது.  அமுதலிங்கேஸ்வரர் கோயிலிலிருந்து நேராகக் கடைவீதி வழியே சென்றால் சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இக் கோயிலை அடையலாம்.

  “கலகலத்த மூன்றுவீதி கூடுகின்ற அருப்புக் கோட்டையெனும் நல்லூரின் மையமதில்               

  வலதுகரம் வேலேந்திக் காட்சி தரும் வாலனே”

என்று வால சுப்பிரமணியர்  பதிகம் இக்கோயிலின் இருப்பிடத்தை எடுத்து உரைக்கிறது. 

சுமார் தென்மேல் 38' கீழ்மேல்  88' ஆக 3344 சதுரஅடி நிலப்பரப்பில் இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது; அளவில் சிறியதாக உள்ளது. கோயில் சிறிய அளவில் இருந்தாலும் நெடிய கதவுகளை உடையதாய் உயர்ந்த தோற்றத்துடன் விளங்குகின்றது. ஆறுகால் மண்டபம்,  மகாமண்டபம்,  அர்த்தமண்டபம்,  கருவறை, உட்பிரகாரம் என்னும் பகுதிகளை மட்டும் கொண்டது. கோயிலில் பிற சந்நிதிகளோ வெளிப் பிரகாரமோ கிடையாது.


ஆறு கால் மண்டபம்:  


ஆறுகால் மண்டபத்தின் இருபக்கங்களிலும் படிகள் உண்டு. இம்மண்டபத்தில் உள்ள படிகள் வழியாக ஏறி மகாமண்டபம் செல்ல வேண்டும். இம்மண்டபத்தின் வாயிலில் துவார பாலகர்கள் இல்லை. இவ் ஆண்டு மாசிமாதம் அமாவாசை நாளன்று துவார பாலகர்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. அவை இனி பிரதிஷ்டை செய்யப்படும்.

 

மகா மண்டபம்: 

மகாமண்டபத்தில் மயிலும், பலிபீடமும் அமைந்துள்ளன. மகா மண்டபத்தின் இடதுபுறம் ஒரு வாயில் உள்ளது. இதன் வழியாக உட்பிரகாரம் செல்லலாம். 


அர்த்தமண்டபம்: மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது.


கருவறை:

அர்த்தமண்டபத்தை அடுத்துக் கருவறை அமைந்துள்ளது.  கருவறையில் முருகன் தன் இரு கைகளில் வேலும், சேவற்கொடியும் ஏந்தியவராய்க்  காட்சி தருகிறார்.


உட்பிரகாரம்: 

 

கோயிலின் வாசலை அடுத்து உட்பிரகாரம் அமைந்துள்ளது. வாசலை ஒட்டி வலப்பக்கம் உட்பிரகாரத்தில் விநாயகர் எஎழுந்தருளியுள்ளார். பிற கடவுளர் எவரும் இக்கோயிலில் இடம் பெறவில்லை. ஆறு கால் மண்டபத்தின் முன் உள்ள உட்பிரகாரப்  பகுதியில் பன்னிரண்டு தூண்கள் அமைந்துள்ளன.

 மக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ள கடைவீதியில் இக்கோயில் அமைந்திருப்பதால் அதிகமான மக்கள் வந்து வழிபடுகின்றனர். கோயிலின் முன் வாசலை ஒட்டி இருமருங்கிலும் பூக்கடைகளும், அவற்றை அடுத்துச் சுற்றிலும் பிற கடைகளும் அமைந்துள்ளன.

 

சந்திவீரசாமி கோயில்:

 

அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள பெரிய கடைவீதியில் சந்திவீரசாமி கோயில் உள்ளது. பெரிய கடைவீதியில் அமைந்த நாடார் உறவின்முறை மகமைக் கடைக்கு எதிர்ப்புறத்தில் சற்றுத் தள்ளி இக்கோயில் அமைந்துள்ளது. 

கோயில் சதுர வடிவில் (9 1/2'×9 1/2') அமைந்துள்ளது. நாடார் சமூகத்திலுள்ள பூசாரி வகையறா என்னும் குழுவினருக்குக் குலதெய்வக் கோயிலாகும். இக்கோயிலைக் கட்டியவர் பூசாரி வகையறாவினரே. கோயிலைப் பராமரிக்க இயலாத காரணத்தால் உறவின்முறையாரிடம் ஒப்புவித்துள்ளனர். கோயிலின் நிர்வாகத்தை மட்டும் உறவின்முறையாரிடம்  கொடுத்துவிட்டு பூஜை செய்யும் உரிமையை இவர்களே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 நான்கு தூண்களாலான மண்டபத்தில் 4' உயரமுள்ள பீடத்தில் இறைவன் எழுந்த ருளியுள்ளார்.  எனவே எல்லோரும் எளிதாகத்  தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது. இலிங்க வடிவத்தில் இறைவன் காட்சி தருகிறார். இது சுமார் 4' உயரமுள்ள பெரிய இலிங்கம் ஆகும்.

 கோயிலுக்கென்று வாசலோ பிரகாரமோ இல்லாமல் மிகச் சிறிய அளவில் அமைந்த கோயிலாகும். இது வழிச்செல்வோர் பாதையிலேயே நின்று இறைவனை வழிபட்டுச் செல்லக் கூடியதாக அமைந்துள்ளது.

 கோயிலின் பின்புறத்தில் தண்ணீர்ப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இத்தண்ணீர்ப் பந்தல் கிராம மக்களுக்கு உதவும் நோக்கத்தில் அமைக்கப்பட்டதாகும். இன்றும் இத்தருமம் நாடார் உறவின்முறையால் செவ்வனே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.


சித்தி விநாயகர் கோயில்:

  

சைவபானு ஷத்திரிய மேல்நிலைப்பள்ளிச் சாலை என்று வழங்கப்படுகின்ற சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. முத்துமாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.  சைவபானு ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மதிற்சுவரை அடுத்து அமைந்துள்ளது. இக்கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. வேம்பு அரசு ஆகிய மரங்களின் கீழ் உள்ள மேடையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். மிகச் சிறிய அளவிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.


முடிவுரை: 


கோயில்களின் அமைப்பு முழுவதையும் கலை வடிவமாக அமைப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ளனர் . பெருந்தெய்வ நெறியை மேற்கொள்ள விரும்பியதால் பெருந்தெய்வக் கோயில் அமைப்பு முறையையே பின்பற்றி உள்ளனர் . முத்துமாரியம்மன் கோயிலையும் கற்றளியாக அமைத்து நல்ல தோற்றத்துடன் விளங்கச் செய்து உள்ளனர். மக்கள் எளிதாக இறைவனை வழிபட கோயில்கள் நகருக்குள் ஒன்றுக்கொன்று அருகிலேயே அமைந்துள்ளன. 


                                                               குறிப்புகள் 

1.    சொ. இராஜாமணிப்பட்டர், அ. காசி - 'அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் திருத்தல வரலாறும் திருவாலய அமைப்பும் - ப. 31

 2.   Ibid. - ப. - 13

 3.   Ibid. - ப. - 38

 4.   பின்னிணைப்பு - 5

kanmani tamil

unread,
Aug 24, 2024, 1:18:01 AM8/24/24
to vallamai

  5.கோயில்களின் நாள் வழிபாடு


முன்னுரை 

அமுதலிங்கேஸ்வரர் கோயில்

திருப்பள்ளியெழுச்சி 

காலை -சந்தி 

உச்சிக்காலம் 

மாலை-சந்தி 

அர்த்தசாமம்-பள்ளியறை 

முத்துமாரியம்மன் கோயில் 

காலை-சந்தி 

உச்சிக்காலம் 

இரவுபூசை 

வாலசுப்பிரமணிய சாமி கோயில் 

காலை-சந்தி 

மாலை -சந்தி 

சந்திவீரசாமி கோயில் 

சித்தி விநாயகர் கோயில் 

ஏனாதிநாத நாயனார் மடம்

முடிவுரை



கோயில்களில்  நாள்வழிபாடு

 

முன்னுரை

 

மக்களின் சமய வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெறுவது கோயிலாகும். கோயிலுக்குச் சென்று இறைவனின் வழிபாட்டில் கலந்து கொள்வதை மக்கள் பெறற்கரிய பேறாகக் கருதுகின்றனர். தங்களின் அன்றாட வேலைகளில் ஒன்றாகவே இறைவழிபாட்டை நினைக்கின்றனர். கோயில்களில் நடைபெறும் வழிபாடுகள் கோயில்களின் சிறப்பை உணர்த்துவனவாக அமைகின்றன. 

             கோயில்களில் நிகழும் பூசையினை நித்திய, நைமித்திய, காமிய பூசைகள் என மூன்றாகப் பாகுபாடு செய்வர். நித்திய பூசை என்பது அன்றாடம் நிகழ்வது. ஏதேனும் ஒரு நிமித்தம் பற்றி நிகழ்வது நைமித்திய பூசையாகும். இதனைப் புண்ணிய காலங்களில் செய்யப்படும் சிறப்பு பூசை எனலாம். நித்திய பூசையில் தாழ்வு வந்துழிச் செய்வது நைமித்தியம் என்றும் ஆன்றோர் கூறுவர். தனிப்பட்டவர்களின் வேண்டுதலாகச் செய்யும் பூசை காமிய பூசையாகும்.   

பூசை இல்லாவிட்டால் ரோகமும், புஷ்பம் இல்லாவிட்டால் குலநாசமும், சந்தனமில்லாவிடில் குஷ்டரோகமும், ஜலமில்லாவிடில் துக்கமும், தூபம்   இல்லாவிடில் சுகத்தின் நாசமும், நைவேத்யமில்லாவிடில் துர்மிஷமும், மந்திரமில்லாவிடில் தரித்திரமும், வஸ்திரமில்லாவிடில் மகாரோகமும், ஹோமமில்லாவிடில் குலக்ஷயமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும்; வில்வம், அறுகு, அக்ஷதை இல்லாவிடில் சத்ருபயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத் தன்மையும்,  முத்திரை இல்லாவிடில் அசுரபயமும்; நித்யாக்னி காரியமில்லாவிடில் அரசர், இராஜ்யம் இவைகளுக்குக் கோபமும், பயமும், சர்வதிரவியமில்லாவிடில் தேவதைகளுக்குக் கோபமும் உண்டாகும். எல்லாத் திரவியங்களும் இல்லாவிடில் அளவுகடந்த தீங்கும் உண்டாகும். ஆதலால் சர்வமுயற்சியாலும் பூஜையைப் பக்தியோடு நன்றாய்ச் செய்ய வேண்டும் என்று காரண ஆகமம் கூறுகிறது1.

கோயில்களில் ஒரு கால பூஜையிலிருந்து ஆறு கால பூஜைகள் வரையிலும் நிகழ்கின்றன. இதற்கு மேலும் நடைபெறுகின்ற கோயில்களும் உண்டு. திருவனந்தல் அல்லது திருப்பள்ளியெழுச்சி, காலைசந்தி, உச்சிக்காலம், மாலைசந்தி, இரண்டாம்கால பூஜை, அர்த்த சாமபூசை என்பன ஆறு காலங்களில் நடைபெறும் பூசைகளின் பெயர்களாகும்.      

காலை பள்ளிதிறப்பு முதல் இரவு சயனாலயம் பூஜை வரை நடைபெறுவன யாவும் இறைவனுடைய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து தொழில் முறைகளை விளக்குவனவாம். காலையில் பள்ளியறை  திறப்பு; சிவனும் சக்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு பள்ளியறை மூடுதல்; சக்தியானது சிவத்தில் ஒடுங்கும் போது ஏற்படும் லயத்தையும் குறிப்பிடுவன2. இவை உலக மக்கள் நன்மையின் பொருட்டுச் செய்யப்படுவனவாம்.

 

திருவனந்தல் அல்லது திருப்பள்ளியெழுச்சி


காலை ஐந்து மணி அளவில் நிகழ்வதாகும். கதிரவன் தோன்றுவதற்கு முன் பள்ளியறையில் துயில் கொள்வதாகப் பாவிக்கப் பெற்ற இறைவனைத் துயில்எழ வேண்டிப் பல்லக்கில் ஏற்றிக் கருவறைக்குக் கொண்டு வருவர். பள்ளியறை மூர்த்தியில் துயில் ஒடுங்குவதாகப் பாவிக்கப் பெற்ற தெய்வீக சக்தியை மூலத்தானத்தே கோயிலில் எழுந்தருளச் செய்வதாகும்.

 

காலை- சந்தி

 

கதிரவன் தோன்றும் போது நடைபெறுவது இது. முதலில் சூரியனுக்குப்  பூஜை செய்த பின்னரே விநாயகருக்கும் அதனையடுத்து மூலத்தானத்து இலிங்கத்துக்கும் பின் சுற்றுத் தெய்வங்களுக்கும் பூசை செய்வர்.

 

உச்சிக்கால பூசை


 நண்பகலின் போது நடைபெறுவது. இப்பூசையிளைப் பல கோயில்களில் சிறப்பாக நடத்துவர். சிறப்பாக அபிஷேகம் செய்து நன்றாக அலங்காரம் செய்து நைவேத்யம் படைத்துப் பின் தீபாராதனை காட்டுவர்.


மாலை- சந்தி

  

கதிரவன் மறையும் நேரம் செய்யப்படுவது. முதலில் விநாயகருக்கும் அடுத்து மூலவருக்கும் அதனையடுத்து சுற்றுத் தெய்வங்களுக்கும் பூசை நடைபெறும்.

 

இரண்டாம் கால சந்தி

 

மாலை பூஜை முடிந்து ஒன்றரை மணி நேரம் கழிந்த பின்பு இப்பூசையினைச் செய்வர்.

 

அர்த்த சாமபூசை

 

இரண்டாம் கால பூஜை முடிந்து பின்னர் ஒன்றரை மணி நேரம் கழிந்த பின்பே இப்பூசை நடைபெறும். பள்ளியறை பூஜை என்றும் சொல்வர். அபிஷேகம், அலங்காரம், நைவேத்யங்களோடு, இப்பூசையைச் செய்வர். இறைவனைப் பள்ளியறைக்கு அழைத்துச் சென்று வாசனைப் பொருள்களைப்  படைத்துப் பள்ளி கொள்ள வேண்டுவர். பின் சண்டேசுர பூசை செய்து பைரவர் சந்நிதி சென்று பூசை நிகழ்த்திக் கோயில் திறவுகோலை அவரிடம் ஒப்படைத்தல் என்பது மரபாகும். காலையிலும் அவரிடம் திறவு கோலைப் பெற்றே கோயில் திறப்பதாக மரபு. 

இந்நாள் வழிபாடு அருப்புக்கோட்டை உறவின்முறைக் கோயில்களில் நடைபெறும் முறைகளை இப்பகுதியில் காண்போம்.

 

அமுதலிங்கேஸ்வரர் கோயில்

அமுதலிங்கேஸ்வரர் கோயிலின் நாள் வழிபாடு காரண ஆகமப்படி நடைபெறுவதாகக் கூறுகின்றனர். நாள்தோறும் ஐந்து காலங்களில் வழிபாடு நடத்தப்படுகிறது. அவை திருப்பள்ளியெழுச்சி, காலைசந்தி ,உச்சிக்காலம், மாலைசந்தி, அர்த்த சாமம் -பள்ளியறை என்பன.


திருப்பள்ளியெழுச்சி

 

இவ்வழிபாடு காலை ஆறு மணிக்கு நடைபெறும். பள்ளியறையில் துயில் கொள்வதாகப் பாவிக்கப் பெற்ற இறைவனைத் துயிலெழச் செய்து கருவறைக்குக் கொண்டு வருவர். விநாயகருக்கு வழிபாடு செய்து தொடங்கப்படும்.

 

காலை- சந்தி

 

காலை- சந்தி வழிபாடு காலை எட்டு மணிக்கு நடைபெறும். கோயிலில்  உள்ள அனைத்து மூர்த்திகளையும் நீராட்டி, மலர்மாலை அணிவித்து அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும். சுத்த அன்னம் நைவேத்யப் பொருளாகும். வரிசைக் கிரமமாக குடதீபாராதனை காட்டப்படும். விக்னேஸ்வரர், சுப்பிரமணியர், அமுத லிங்கேஸ்வரர், நடராஜர், சோமாஸ்கந்தர், பிள்ளையார், அமுத வல்லியம்மன், சக்திவேலர்,


kanmani tamil

unread,
Aug 24, 2024, 10:13:59 PM8/24/24
to vallamai

தட்சிணாமூர்த்தி, அனவரத செல்வவிநாயகர், முத்துமுருகன், அறுபத்துமூன்று நாயன்மார்கள்,  காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அண்ணாமலையார், துர்க்கை, சனீஸ்வரர், பைரவர், நவக்கிரகம், கார்த்திகை - சந்திரன்- ரோகிணி, உஷா- சூரியன்- பிரதியுக்ஷா, வல்லபகணபதி, கற்பகவல்லி, பாலசண்முகர், வரதராஜப்பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், பழனியாண்டவர், வாழவந்தம்மன், விநாயகர் (வெளிப்பிரகாரம்), ஆஞ்சநேயர் (வெளிப்பிரகாரத்தூண்), கொடிக்கம்பம், பலிபீடம், அமுதலிங்கேஸ்வரர் என்னும் வரிசையில் தீபாராதனை காட்டப்படும்.

 

உச்சிக்காலம்

 

நண்பகல் பன்னிரண்டு மணிக்கு நடைபெறும் பூசை உச்சிக்கால பூசை ஆகும். காலை சந்தி நடைபெற்ற வரிசை முறையிலேயே தீபாராதனை செய்யப்படும். நைவேத்தியப்பொருள் சுத்த அன்னம் ஆகும். 

இவ் வழிபாடு முடிந்த பின் கோயில் கதவுகள் சாத்தப்படும். மீண்டும் கோயில் நாலரை மணிக்குத் திறக்கப்படும்.

 

மாலை- சந்தி

 

இவ்வழிபாடு இரவு ஏழு மணிக்கு நடைபெறும். இதனைச் சாயரட்சை என்றும் கூறுவர். எல்லா மூர்த்திகளுக்கும் மலர் மாலை அணிவித்து தீபாராதனை காட்டுவர். காலை- சந்தி நடைபெற்ற வரிசை முறையிலேயே ஆராதனை நிகழும்.

 

அர்த்த சாமம்- பள்ளியறை 

இவ்வழிபாடு இரவு பத்து மணிக்கு நடைபெறும். அமுத லிங்கேஸ்வரருக்கும், அமுத வல்லியம்மனுக்கும் மட்டும் வழிபாடு நடைபெறும். இறைவனைப் பள்ளியறைக்குக் கொண்டு சென்று தீபாராதனை காட்டி அங்குத் துயிலச் செய்வர். 

நாள்தோறும் நடைபெறும் நாள்வழிபாட்டில் சுத்தஅன்னம் நைவேத்யப் பொருளாகும். அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மன் இருவருக்கு மட்டும் மாலையில் நீராட்டு நடைபெறும். நாள்தோறும்  காலை நாலேமுக்கால் மணி முதல் ஐந்தேகால் மணி வரை பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்படும். காலையில் மக்கள் சிலரே வந்து வழிபாட்டில் கலந்து கொள்வர். திருப்பள்ளியெழுச்சி, உச்சிக்காலபூசை, அர்த்தஜாமபூசை ஆகிய வழிபாடுகளில் மிகச் சிலரே வந்து இறைவனை வணங்குவர். மாலை‌யி‌ல் நடைபெறும் பூசையில் பெரும்பாலான மக்கள் வந்து வழிபடுவர். 

மக்கள் தங்கள் குறைகளைக் களைவதற்காகவும், வாழ்வில் அமைதி கிடைப்பதற்கும் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வங்களை வந்து வழிபட்டுச் செல்வர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கும், அனுமனுக்கும் சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கும் வழிபாடு நிகழ்த்த மக்கள் பலர் வருவர்.


முத்து மாரியம்மன் கோயில்

   

இக்கோயிலில் நாள்தோறும் மூன்று முறை மட்டும் வழிபாடு நடக்கும். காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வழிபாடு நடைபெறும்.

 

காலை- சந்தி

   

காலை எட்டரை மணிக்கு முதல் பூசை நடைபெறும். கருவறையில் இருக்கும் அம்மனுக்குப் பீடநிலையிலேயே திருநீராட்டு நடைபெறும். பால், மஞ்சள் காப்பு, எண்ணெய் அபிஷேகம் நடத்திய பின்னர் திருவாச்சியுடன் கூடிய அம்மனை வைத்து அலங்காரம் செய்வர். அம்மனை அலங்கரித்த பின்னர் தீபாராதனை காட்டுவர். சாம்பிராணிப் புகை காட்டிச் சூடதீபம் காட்டுவர். குங்கும அர்ச்சனை செய்வர். சுத்த அன்னம் நைவேத்யப் பொருளாகும். 

வழிபாட்டு வரிசை முறையானது; விநாயகர், சுப்பிரமணியர், கருவறையில் பீடம், பின்னர் பீடத்தில் திருவாச்சியுடன் கூடிய அம்மன், உற்சவமூர்த்திகள், வாழவந்தம்மன், சந்திவீரசாமி, வராகி, ஆரணி, பைரவி , மாதங்கி, முத்தாலம்மன், முக்கனி, சுந்தரி, தேவி, உச்சயினி, சூலி, கருப்பணசாமி, கொடிமரம், பலிபீடம், அம்மன் என்னும் வரிசையில் அமையும்.


உச்சிக்காலம்

 

நண்பகல் பன்னிரண்டு மணிக்கு இப்பூசை நடைபெறும். காலை சந்தி பூசை நடைபெற்ற முறையிலேயே எந்தவித வேறுபாடும் இன்றி நிகழும்.

 

இரவு- பூசை 


இரவு எட்டு மணிக்கு இரவு பூசை நடைபெறும். காலை சந்தி பூசை நடைபெற்ற முறையிலேயே நிகழு‌ம். ஆனால் நைவேத்தியப்பொருள் மட்டும் பொங்கலாக இருக்கும். 

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெருந்திரளாக மக்கள் வந்து வழிபடுவர். அம்மனுக்கு எண்ணெயைக் காணிக்கைப் பொருளாகக் கொண்டு வருவர். வழிபாட்டில் கலந்து கொள்ளும் போது மக்கள் குலவை இடுவர். அம்மன் புகழ் பாடும் பாமாலைகளைப் பாடுவர். சிவன் கோயிலுக்குச் செல்லும் கூட்டத்தை விட இங்கு மக்கள் கூட்டம் மிகுதியாகவே இருக்கும்.


 வாலசுப்பிரமணியர் கோயில்

 

வாலசுப்பிரமணியர் கோயிலில் இரண்டு வேளை வழிபாடு நடைபெறும். காலையிலும் மாலையிலும் பூசை நிகழும். இரு பூசைகளும் வேறுபாடின்றி நடைபெறும். இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் விநாயகரையும் கருவறை முருகனையும் முதலில் நீராட்டுவர். பின்னர் அலங்காரம் செய்வர். அதன் பின் சூடதீபம் காட்டுவர். சுத்த அன்னம் நைவேத்யப் பொருளாகும். இம்  முறையிலேயே இரு வழிபாடுகளும் நடைபெறும்.

 

சந்திவீரசாமி கோயில் 


சந்திவீரசாமி கோயிலில் முறையான நாள்வழிபாடு இல்லை. கடைவீதி வழியாகச் செல்வோர் சந்தி வீரசாமியைக் கும்பிட்டு விட்டுச் செல்வர்.

 

சித்தி விநாயகர் கோயில்

 

சித்தி விநாயகர் கோயிலிலும் முறையான நாள்வழிபாடு இல்லை. அதிகாலையில் இக்கோயிலின் அருகாமையில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்து விட்டு வரும் மக்கள் சித்திவிநாயகரை சூடதீபாராதனை செய்து வழிபட்டுச் செல்வர். தனிப்பட்ட முறையில் வழிபாடு நிகழ்த்த விரும்பும் மக்கள் அருகிலுள்ள மாரியம்மன் கோயில் அர்ச்சகரைக் கொண்டு நிறைவேற்றுவர். மார்கழி மாதம் முப்பது நாட்களும் மாரியம்மன் கோயில் அர்ச்சகர் அதிகாலையில் விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து அலங்காரம் செய்து தீபாராதனை காட்டுவார்.


ஏனாதி நாதநாயனார் மடம்

 

ஏனாதி நாதநாயனார் மடத்தில் உள்ள ஏனாதி நாதநாயனார் திருவுருவப் படத்திற்குக் காலையிலும் மாலையிலும் சூடதீபம் காட்டி வழிபாடு நடைபெறும்.

 

முடிவுரை 


மக்கள் தங்கள் கவலைகளை மறக்கவும், மன அமைதி பெறவும், இறைவனைக் கண்டு களிக்கவும் கோயிலுக்குச் செல்கின்றனர். உள்ளத் தூய்மையுடனும், புறத்தூய்மையுடனும் கோயிலுக்குள் வலம் வரும் பொழுது தங்கள் புறவாழ்வுச் சிக்கலை மறந்து, இறை உணர்வில் ஈடுபட்டு மனத்தெளிவு பெறுகின்றனர். சமய வாழ்வும், இறைவழிபாடும் ஒன்றிணைந்து மலரும் போது மக்கள் சமுதாயத்திலே ஒற்றுமை உறுதி அடைகிறது.

    

                                                    குறிப்புகள்

 

1.   அ.செல்வ பாண்டியன் - ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் - தொகுதி - 2-ப . 268 .  

2.    ibid. -  ப. -203


kanmani tamil

unread,
Aug 25, 2024, 10:45:54 PM8/25/24
to vallamai

6.ஆண்டு விழாக்களும் பிற விழாக்களும்


முன்னுரை 

அமுதலிங்கேஸ்வரர் கோயில் 

                வைகாசி விசாகத் திருவிழா 

முத்துமாரியம்மன் கோயில்  

                  பங்குனிப் பொங்கல் திருவிழா

அமுதலிங்கேஸ்வரர் கோயில் 

  ஏகாதசி 

  பிரதோஷம் 

கார்த்திகை 

சித்திரா பௌர்ணமி முதலியன

மாணிக்கக் காப்பு 

நடராஜர் அபிஷேகம் 

சூரிய பூசை 

முத்து மாரியம்மன் கோயில்

  நவராத்திரி 

திருக்கார்த்திகை 

தெப்பத் திருவிழா

திருவாதிரை 

வால சுப்பிரமணியசாமி கோயில் 

வைகாசி விசாகம் 

கந்த சஷ்டி 

திருக்கார்த்திகை 

மாசிமாதம் 

பங்குனி உத்திரம்

விநாயகசதுர்த்தி 

சங்கடஹர சதுர்த்தி 

சந்தி வீரசாமி கோயில் 

தைப்பொங்கல்

சித்தி விநாயகர் கோயில் 

முடிவுரை 


 

முன்னுரை 

கோயில்களில் அன்றாடம் நடைபெறும் பூசைகள் மட்டுமின்றிப் பல திருவிழாக்களும் நடைபெறுகின்றன. திருவிழா என்று தமிழிலும், உற்சவம் என்று வடமொழியிலும் வழங்கப்படும் தெய்வத் திருவுலாவானது, பாசச் சேர்க்கையால் மயக்கமுறும் மக்களைப் பாச மயக்கத்திலிருந்து விடுபடச் செய்யும் சாம்பவீதீட்சை என்று ஆகமங்கள் கூறுகின்றன. முன்செய்வினை காரணமாக, அங்கம் நலிவுற்று, நோயுற்றுக் கோயில் சென்று வழிபட இயலாதோர்க்கும், மற்ற எல்லா வகையினருக்கும் ஆண்டவனின் அருள் நோக்கையும், ஆண்டவன் மூலமான ஆசார்யனின் அருள் நோக்கையும் அடையச் செய்வதே சாம்பவீதீட்சையான உற்சவங்களாகும்1. உத்தம யாகமாகிய உற்சவத்தைச் செய்தவர்களும் செய்வித்தவர்களும், உதவி செய்தவர்களும் சகல போகங்களை அனுபவித்து மோட்சத்தை அடைவார்கள். 

பெரிய திருக்கோயில்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடைபெறுவதுண்டு. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை பிரம்மோத்சவம் எனப்படுகின்ற பெரிய திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு. இப்பெரிய திருவிழாக்கள் பத்து நாட்களுக்கு மேல் நடைபெறும். அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவும், முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவும் பெரிய திருவிழாக்களாக நடபெற்று வருகின்றன.

 

அமுதலிங்கேஸ்வரர் கோயில்:  வைகாசி விசாகத் திருவிழா

 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பெரிய திருவிழா வைகாசி மாதத்தில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா ஆகும். இத்திருவிழா பதினோரு நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவானது வைகாசித் திங்களில் புனர்பூச நட்சத்திர நாளன்று தொடங்கப் பெறும். இத்திருவிழாவின் பத்தாம் நாள் விசாக நட்சத்திரத்தன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர். எனவே இத்திருவிழாவை விசாகத் திருவிழா என்று அழைக்கின்றனர்

அருப்புக்கோட்டையிலுள்ள சொக்கநாதசாமி கோயிலில் ஆனித் திங்களில் திருவிழா கொண்டாடுகின்றனர். அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள  மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திங்களில் திருவிழா கொண்டாடுகின்றனர். இவ்இரு விழாக்களிலும் அருப்புக்கோட்டை மக்கள் பெருந்திரளாகச் சென்று பங்கு கொள்வர். எனவே சித்திரை அல்லது ஆனித் திங்களில் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் திருவிழா கொண்டாடினால் மக்கள் பலரும் பங்குகொள்ள இயலாமல் போய்விடும். இக்காரணத்தை மனதில் கொண்டே மக்கள் பலரும் பங்கு கொள்ள ஏதுவாக அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைகாசித் திங்களில் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தனர் என்று தகவலாளர்கள் கூறுகின்றனர்.


முதலாம் திருவிழா 

கொடியேற்று விழாவாக முதல் நாள் திருவிழா நடைபெறும். இது திருவிழாவின் தொடக்கத்தை மக்கட்கு அறிவிக்கும் திருநாளாகும். கொடியேற்றத்தைத் துவஜாரோகணம் என்று வடமொழியில் கூறுவர். விழாவின் தொடக்கத்தில் ஆகம விதிப்படி கொடியேற்றம் நிகழும். மும்மலத்திலே மூழ்கிக் கிடக்கின்ற ஆத்மா ஆசாரியனுடைய அருளால் பாசபந்தமற்றுச் சிவஞானத்தைப் பொருந்திப் பதியின் திருவடியை அடையும் முறையைக் கொடியேற்றம் காட்டுகின்றது. திருவிழாவின் முதல்நாளில் இக்கொடியேற்றுதலின் நோக்கமானது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்கின்றார் என்பதே. 

1930ம் ஆண்டிற்குப் பின் சாமிபுறப்பாடு நிறுத்தப்பட்ட காரணத்தால் இந்நாள் நிகழ்ச்சிகள் மிகச் சாதாரண முறையில் நடைபெறும். சாமி சந்நிதியின் வெளிப்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தின் அடியில் பூசை செய்து ரிஷப வாகனம் பொறித்த கொடியைக் கொடிமரத்தில் ஏற்றுவர்.

 

இரண்டாம் திருவிழா, மூன்றாம் திருவிழா

 

இவ் இரண்டு நாட்களிலும் சாதாரண முறையிலேயே விழா நடைபெறும். குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மன் இருவரையும் நன்கு அலங்கரித்து ரிஷபவாகனத்தில் வீற்றிருக்கச் செய்து கோயிலின் முன் புறத்தில் அமைந்த கலாமண்டபத்தில் மக்கட்குக் காட்சி கொடுக்கச் செய்வர். இரவு 9 மணிக்குத் தீபாராதனை நடைபெறும்.

 

நான்காம் திருவிழா

 

இந்நாள் கால சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் நாளாகும். இந்நிகழ்ச்சியைச் சிறப்பாகக் கொண்டாடி இருக்கின்றனர். இந் நிகழ்ச்சியைச் சிறு நாடகம் போன்று நடித்துக் காட்டி இருந்திருக்கின்றனர். சிவலிங்க வடிவில் அலங்காரக் கூடு செய்து அதற்குள் நடராஜர் வடிவம் செய்து வைத்திருப்பர். இரு பக்தர்கள் யமனாகவும், மார்க்கண்டேயனாகவும் வேடம் பூண்டு கொள்வர். மார்க்கண்டேயனை யமன் விரட்டிக் கொண்டு வருவான். அப்பொழுது மார்க்கண்டேயன் சிவலிங்க வடிவத்தைக் கட்டிக் கொண்டு வழிபட யமன் மார்க்கண்டேயனையும் சிவலிங்கத்தையும் சேர்த்துத் தன் பாசக் கயிற்றை வீச இறைவன் நடராஜர் வடிவத்தில் தோன்றி அருள் புரிவார். இவ்வாறு இந்நிகழ்ச்சி முன்பு நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. 1928 ம் ஆண்டு இந்நிகழ்ச்சி நடந்த பொழுது தான் ஊருக்குள் கலவரம் தோன்றியது என்று தகவலாளர்கள் கூறுகின்றனர். எனவே தற்பொழுது இந்நிகழ்ச்சியும் மிகச் சாதாரணமாகவே கொண்டாடப்படுகிறது.

 

ஐந்தாம் திருவிழா

 

இந்நாளை இந்திரனுக்குக் காட்சி கொடுத்தல் திருவிழாவாகக் கொண்டாடுவர். அமுதலிங்கேஸ்வரரையும், அமுதவல்லியம்மனையும் இந்திரனுக்குக் காட்சி கொடுப்பது போல அலங்காரம் செய்து ரிஷபவாகனத்தில் எழுந்தருளச் செய்து கலா மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்வர். வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.

 

ஆறாம் திருவிழா

 

சமணர் கழுவேற்றம் திருவிழாவாக இந்நாள் கொண்டாடப் பெறும். பெயரளவில் சமணர் கழுவேற்றல் திருவிழா என்று இருக்கின்றதேயொழியச் சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இந்நாளில் நடைபெறுவதில்லை. அமுதலிங்கேஸ்வரரையும், அமுதவல்லியம்மனையும் வழக்கம் போல் அலங்காரம் செய்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்து கலாமண்டபத்தில் மக்கட்குக் காட்சி கொடுக்கச் செய்வர்.


kanmani tamil

unread,
Aug 26, 2024, 10:51:02 PM8/26/24
to vallamai

ஏழாம் திருவிழா

 

இத்திருநாளைப் பட்டாபிஷேகத் திருவிழாவாகக் கொண்டாடுவர். அம்மனுக்குச் செங்கோல் கொடுத்துச் சிறப்புச் செய்யும் திருவிழாவாகும் இது. அமுதலிங்கேஸ்வரரையும், அமுதவல்லியம்மனையும் அலங்காரம் செய்வர். அமுத வல்லியம்மன் கையில் செங்கோல் கொடுத்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்து கலா மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்வர்.

 

எட்டாம் திருவிழா

 

திக்விஜயத் திருவிழா என்று எட்டாம் நாள் திருவிழாவை அழைப்பர். அட்டதிக்குப் பாலகர்கள் தூக்கிவர அம்மனும் சாமியும் ஊர்வலம் வருதல் திக்விஜயத் திருவிழாவாகும். ஊருக்குள் ஊர்வலம் செல்லாத காரணத்தால் கோயிலின் வெளிப்பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வரச் செய்வர். அமுதலிங்கேஸ்வரரும், அமுத வல்லியம்மனும் அலங்கரிக்கப்பட்டு ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்து கோயிலை வலம்வரச் செய்வர்.


ஒன்பதாம் திருவிழா

 

இந்நாள் திருக்கல்யாணத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இறைவன் நித்திய கல்யாணராமன். நமக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஆகையால், நாம் ஆண்டுக்கு ஒரு திருக்கல்யாணம் நடத்துவது தினமும் நடத்துவதாகும். தினமும் நடத்துவது ஏனென்றால் சிவனிடமிருந்து சக்தி பிரியாதிருந்து அம்மையப்பராகிய போகவடிவம் கொண்டு அருள் செய்வதாலேயே நாம் உய்கின்றோம் என்பதற்கு நம் நன்றியறிதலைக் காட்டுவதற்காகவே ஆகும். 

அமுதலிங்கேஸ்வரருக்கும் அமுதவல்லியம்மனுக்கும் திருமணம் நடத்தி வைப்பர். திருமணத்தில்  ஹோமம் வளர்க்கப்பெறும். மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத் திருவிழாவின் போது இரண்டு அர்ச்சகர்கள் பெண் மாப்பிள்ளை போன்று வேடமணிந்து திருமணத்தை நடத்தி வைப்பர். ஆனால் இங்கு அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறா.


பத்தாம் திருவிழா

 

தேர்த்திருவிழா என்று பத்தாம் திருவிழா கூறப்படும். தேவர்களின் வேண்டுகோட்கிணங்கிச் சிவபெருமான் சூரியன் சந்திரன் பூமி முதலிய வர்களைத் தேராகவும், உபகரணங்களாகவும் கொண்டு திரிபுரத்து அரசர்களை வதைக்கச் சென்ற போது தங்கள் துணையாலேயே சிவபெருமான் வெற்றி பெறப் போகின்றார் என்று அத்தேவர்கள் கருதியதால், உயிர்க்குயிராகிய சிவபெருமான் அதனை உணர்ந்து அவர்கள் துணையின்றியே சிரித்து முப்புரத்தையும் அழித்த வரலாற்றை உணர்த்துவதே தேர்த்திருவிழாக் காட்சியாகும். 

அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் பூரண அலங்காரத்துடன் தேரிலமர்ந்து நகரில் ஊர்வலம் வருதலாகும். திருவிழாவின் போது ஊர்வலம் நிறுத்தப்பட்டுவிட்டபடியாலும், கோயிலுக்கென இருந்த தேர் சிதைவுற்ற படியாலும், இப்பொழுது தேரில் சாமி புறப்பாடு நடைபெறுவதில்லை. அமுதலிங்கேஸ்வரரையும், அமுதவல்லியம்மனையும் அலங்கரித்து ரிஷபவாகனத்தில் அமர்த்திக் கலா மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்யும் நிகழ்ச்சியே இன்றும் நடைபெறுகிறது. 

பட்டாபிஷேகம், திக்விஜயம்,  திருக்கல்யாணம்,  தேர் ஆகிய விழா நிகழ்ச்சிகள் மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளை நினைவு கூரச் செய்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் மீது பற்றுக்கொண்ட மக்கள் இத்தகைய நிகழ்ச்சிகளைத் தங்கள் ஊரிலும் நிகழ்த்திப் பெருமை கொண்டனர் என்று தகவலாளர்கள் மூலம் அறிய முடிந்தது.

 

பதினோராம் திருவிழா

 

இறுதி நாள் திருவிழாவான பதினோராம் திருநாளைத் தீர்த்தவாரித் திருவிழா என்று அழைப்பர். இத்திருவிழா இறைவனின் அருட்தத்துவத்தை உணர்த்தும் திருவிழா ஆகும். ஆறு, குளம், கடல் முதலிய இடங்களுக்குச் சிவபெருமான் திருவுலாக் கொண்டு எழுந்தருளுவது தீர்த்தவாரி விழாவாகும். இவ்விழாவின் நோக்கம் அங்கேயுள்ள ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் குறிப்பே ஆகும். 

அட்டமூர்த்திகளுள் பகவான் என்னும் திருப்பெயருடைய சிவபெருமானது வல்லமை நீர் வடிவாக அமைந்து தன்னையடைந்து தரிசித்து நீராடும் அடியார்களது பிறவியாகிய வெப்பத்தை நீக்கித் தன்னிடத்தில் அமிழ்ந்தச் செய்த தத்துவாதீரராய் விளங்கும் சிவத்துடன் சேர்க்கும் என்று சமயச்சான்றோர் இவ்விழாவிற்கு விளக்கம் தருவர். 

அருப்புக்கோட்டை நகரின்கண் அமைந்த சிங்காரத்தோப்பு என்னும் வளமான சோலையில் அமுதலிங்கேஸ்வரரையும் அமுதவல்லியம்மனையும் எழுந்தருளச் செய்து மக்கட்குத் தீர்த்தம் வழங்கச் செய்வர். இந்நிகழ்ச்சியுடன் விழா முடிவடைவதாக அமைந்துள்ளது. 

திருவிழா நிகழ்ச்சிகள் நன்கு நடைபெறக் கட்டளைதாரர்கள் பேருதவி செய்துள்ளனர்2. ஒவ்வொரு கட்டளைதாரரும் தனித்தனியாக மண்டகப்படி அமைத்திருப்பர். ஒவ்வொரு நாளும் அமுதலிங்கேஸ்வரரும் அமுத வல்லியம்மனும் அலங்காரத்துடன் ஊர்வலமாகச் சென்று அந்தந்த நாட்குரிய கட்டளைதாரரின் மண்டகப்படியில் தங்கி மக்கட்கு அருட்காட்சி வழங்குவது மரபு. அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள புளியம்பட்டி, பொட்டல்பட்டி ஆகிய ஊர்களில் நாடார்கள் உறவின் முறைகளின் கட்டளைகளின் போது கூட அமுதலிங்கேஸ்வரரையும் அமுதவல்லியம்மனையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆங்காங்குள்ள மடத்தில் எழுந்தருளச் செய்வர். ஊரில் 1928 -1930 ல் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரத்தால் ஊர்வலம் நிறுத்தப்பட்டது. எனவே மண்டகப்படிகளுக்கு இறைவன் செல்லுதல், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தடைபட்டன. திருவிழாவில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளும் கோயில் வளாகத்திலேயே இப்பொழுது நநடைபெறுகின்றன. 

நாள்தோறும் அமுதலிங்கேஸ்வரரையும் ,அமுதவல்லியம்மனையும் நன்கு பட்டாடையாலும், மலர்களாலும், அணிகலன்களாலும்  அலங்கரித்து ரிஷபவாகனத்தில் அமர்த்திக் கலா மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மக்கட்குக் காட்சி வழங்கச் செய்வர். இரவு ஒன்பது மணி அளவில் சிறப்புத் தீபாராதனை வழிபாடு நடைபெறும். 

கர்ப்பக்கிரகத்திலுள்ள மூலவருக்கு இலிங்கக் கவசம் போட்டு நாகாபரணம் அணிவித்து விழா நாட்களில் அலங்காரம் செய்து இருப்பர். 

ஊர்வலம் இல்லாத குறையை நீக்கும் பொருட்டுத் திருவிழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திச் சிறப்பிக்கின்றனர். சிறந்த ஆன்மீகச் செல்வர்களால் சமயச் சொற்பொழிவுகள், இறைச் சிறப்புணர்த்தும் கதா காலட்சேபங்கள் நடைபெறச் செய்கின்றனர். மக்களை மகிழ்விக்கும் வண்ணம் இன்னிசைக் கச்சேரிகளையும் நடத்துகின்றனர். 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருவிழா, பிற விழாக்கள் யாவும் பிற பெருங்கோயில்களில் நடைபெறுவதை அப்படியே மேற்கொள்வதாகத் தகவலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவதற்குக் குறிப்பிட்ட காரணங்கள் இல்லை என்கின்றனர். கோயில் கட்டினால் மட்டும் போதாது. அங்கு நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகளைக் குறையின்றிச் செய்வது தான் உண்மையான இறைத்தொண்டு என்று உணர்ந்தவர்களாய்க் கோயில்களில் நடைபெற வேண்டிய சிறப்பு நிகழ்ச்சிகளைக் குறைவின்றி நடத்துகின்றனர்.

 

முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப்பொங்கல் திருவிழா

     

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திங்களில் நடைபெறும் பங்குனிப் பொங்கல் திருவிழா பெருவிழாவாகும். இத்திருவிழா பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். ஒரு செவ்வாய்க்கிழமையன்று தொடங்கப்பெற்று அடுத்த சனிக்கிழமையுடன் முடிவடையும் விழாவாகும் இப்பொங்கல் திருவிழா. கொடியேற்ற நிகழ்ச்சியை முதல் நாள் நிகழ்ச்சியாகக் கொண்டு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடைபெறச் செய்வர். 


முதலாம் திருவிழா


  முதல் நாள் திருவிழாவாகக் கொடியேற்றத் திருவிழா நடைபெறும் கோயிலில் விழா தொடங்கிவிட்டது என்று அறிவிக்கும் நிகழ்ச்சியே கொடியேற்றத் திருவிழாவாகும். கொடியேற்ற நிகழ்ச்சி இரவு பத்து மணிக்கு மேல் நடைபெறும். மகமைக் கடையிலிருந்து மாரியம்மன் படம் வரையப்பட்ட துணி ஒன்றையும், உற்சவமூர்த்திக்குரிய நகைகளையும் தேவஸ்தான கமிட்டியார் கொண்டு வருவர். அம்மன் படம் வரையப்பட்ட துணியில் ஒரு மூலையில் ஒரு ரூபாய் பணமும், தேங்காயும் முடிந்து கொடிமரத்தின் உச்சியில் கட்டி வைப்பர். 


kanmani tamil

unread,
Aug 28, 2024, 1:01:16 AM8/28/24
to vallamai

ஊரின் அருகிலுள்ள புளியம்பட்டி என்னும் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர்கள் இருவர் ஆண் பெண் வேடம் கொண்ட ஆழிப் பொம்மைக்குள் இருந்து ஆடிப் பாடிக் கொண்டு வருவர். அதன் பின்னர் வழிபாடு நடக்கும்      

திருவிழாவின் போது அக்கினிச்சட்டி எடுப்பதாகவும், பூக்குழி இறங்குவதாகவும் நேர்த்திக்கடன் பூண்டவர்கள் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரிடம் காப்பு கட்டிக்கொண்டு வருவர். இந்நாளில் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாகப் புதுப்புடவை அளிப்பவரும் உண்டு.

 

இரண்டாம் திருவிழா, மூன்றாம் திருவிழா

 

இந்த இரண்டு நாட்களிலும் சாதாரண நிகழ்ச்சிகளே நடைபெறும். மூலவரையும் உற்சவமூர்த்திஅம்மனையும் பட்டாடையாலும், மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்காரம் செய்து, கோயிலைச் சுற்றியுள்ள பரந்த வெளியில் போடப்பட்டிருக்கும் அலங்காரப் பந்தலில் அமைத்த ஊஞ்சலில் எழுந்தருளச் செய்வர். இரவில் மூலவருக்குச் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். உற்சவமூர்த்திக்குத் தீபாராதனை நிகழும்.

 

நான்காம் திருவிழா

 

நான்காம் திருவிழா வெள்ளிக்கிழமையாக இருப்பதால் மாரியம்மனுக்கு உகந்த நாளென்று மிகுதியான மக்கள் வந்து வழிபடுவர். மூலவரும், உற்சவமூர்த்தயும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருப்பர். உற்சவமூர்த்தியை அலங்காரப் பந்தலில் எழுந்தருளச் செய்வர். 

மாவிளக்கு எடுப்பதாக நேர்த்திக்கடன் பூண்டவர்கள் மாவிளக்கைக் கோயிலுக்குள் எடுப்பர். 


ஐந்தாம் திருவிழா, ஆறாம் திருவிழா

 

இரண்டாம் மூன்றாம் திருவிழா நிகழ்ச்சிகள் போலவே இவ் இரு நாட்களிலும் நடக்கும்.


ஏழாம் திருவிழா

 

இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் திருநாளாகும். இந்நிகழ்ச்சி இரவு பத்து மணிக்கு மேல் நடைபெறும். அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறைத் தலைவரும் பிறரும் பாலையம்பட்டி முருகன் கோயிலிலிருந்து வெண்பட்டு, தேங்காய், பழம், மாலை முதலியன கொண்டு வந்த பின்னரே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சி முன்பு வாழவந்தம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள தேர்முட்டி என்னும் இடத்தில் நடந்திருக்கிறது. இப்பொழுது திருவிழாவிற்காகப் போடப்பட்டிருக்கும் அலங்காரப் பந்தலிலேயே நடைபெறுகின்றது.

 

எட்டாம் திருவிழா

 

பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் நாள் இதுவேயாகும். நாடார்கள் உறவின்முறையிலிருந்து அதிகாலையிலேயே கோயில் முன் பொங்கல் வைத்து வழிபடுவர். அதன் பின் மக்கள் தனித்தனியாக கோயிலின் முன் பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைத்து வழிபடுவர்.

 கோயிலில் காணிக்கை செலுத்துபவர்கள் இன்று அதிகாலையிலிருந்து தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருப்பர். மானிட உறுப்புக்கள் வடிவிலுள்ள பொம்மைகள், கண்மலர் கொண்டு வந்து கோயிலில் வைப்பர். அம்மைநோய்  வாய்ப்பட்டவர் ஆயிரங்கண்பானை என்று அழைக்கப்படும் அதிகமான துளைகள் உடைய பானைகளையும், ஆமணக்கு விதைகளையும் கொண்டு வந்து கொடுப்பர். முளைப்பாரி வளர்த்துக் கோயிலுக்குக் கொண்டு வந்து வைத்துப் பலரும் அதைச் சுற்றி நின்று கும்மி அடிப்பர். உடம்பில் வெண்புள்ளி கரும்புள்ளி இட்ட வேடத்துடன் “ஆகோ ஐயாகோ” என்று ஆரவாரத்துக் கொண்டும், 

“ஆத்தா ஆத்தா மாரியாத்தா 

 ஐம்பது பிள்ளை பெத்தாத்தா 

 எனக்கு இரண்டு போடாத்தா” 

என்று பாடிக் கொண்டும் கோயிலுக்கு வருவர். புலிவேஷம் போட்டுக் கொண்டு தெருவழியே ஆடிப்பாடிக் கொண்டும் கோயிலுக்கு வருவர். 

கும்பிட்டாரணம் போடுதல், உருண்டு கொடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை.

 

கும்பிட்டாரணம் போடுதல் 


மாரியம்மன் கோயிலுக்கருகில் உள்ள பள்ளிக்கூடத்தின் கிணற்றில் குளித்து விட்டு ஈரஉடையுடன் கோயிலைச் சுற்றி விழுந்து எழுந்து விழுந்து கும்பிட்டுக் கொண்டே வருதலாகும். ஆடவர், பெண்டிர், சிறுவர், பெரியவர் எனப் பலரும் இவ்வண்ணம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.

 

உருண்டு கொடுத்தல்

 

குளித்து விட்டு ஈரஉடையுடன் கையில் ஒரு தேங்காயுடன் கீழே விழுந்து கோயிலைச் சுற்றி மூன்று முறை உருண்டு கொண்டு வருதலாகும். இவ்வாறு உருண்டு கொடுத்து வருபவருடன் உடன் வருபவர்கள் உருண்டு வருபவர்களுக்கு வழி உணர்த்தும் வண்ணம் ’பாதம் முந்தி; சிரசு முந்தி’ என்று கூறிக் கொண்டு பாதையில் உருண்டு வரச் செய்வர். கையில் ஒரு செம்பு நிறைய நீர் கொண்டு வந்து அதை வேப்பிலையால் பாதையில் தெளித்துக் கொண்டே வருவர்.

பனை ஏறுபவர்கள் மாரியம்மனுக்குச் சிறப்புச் செய்யும் வண்ணம் தாம் அன்று இறக்கும் பதனீரைக் கோயிலில் கொண்டு வந்து கொடுத்து விடுவர். கோயிலில் பதநீரைப் புதுப்பானையில் வைத்திருந்து மக்கட்கு வழங்குவர்.

பானக்காரம் கொண்டு வந்து கோயிலில் கொடுப்பதாக நேர்த்திக்கடன் உள்ளவர்கள் இரவில் தங்கள் வீடுகளிலிருந்து பானக்காரம் செய்து கொண்டு வந்து கோயிலில் கொடுப்பர். இதுவும் புதன்கிழமையன்று மக்கட்கு வழங்கப்படும்.

ஊர் மக்கள் அனைவரும் காலையிலேயே வீட்டைச் சுத்தம் செய்வர். மதியம் விருந்து சமைப்பர். விருந்தில் பூசணிக்காய்ப் பச்சடி செய்வதைக் குறிக்கோளாகக் கொள்வர். மாலையில் புத்தாடை பூண்டு கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுதலை மரபாகக் கொண்டு இருக்கின்றனர்

உற்சவமூர்த்தி அம்மனை அலங்கரித்துக் கோயில் முன் உள்ள மண்டபத்திலேயே எழுந்தருளச் செய்வர். அலங்காரப் பந்தலுக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள்.

 

ஒன்பதாம் திருவிழா

 

பொங்கல் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான அக்கினிச்சட்டி எடுத்தல் எனும் நிகழ்ச்சி ஒன்பதாம் திருவிழாவாக நடைபெறும்.


அக்கினிச்சட்டி எடுத்தல் 


அக்கினிச்சட்டி எடுப்பவர் பங்குனித் திங்கள் முதல் நாளிலிருந்து விரதம் இருப்பர். சிலர் கொடியேற்றநாள் முதல் விரதம் இருப்பர். விரதம் இருப்பவர் தினமும் வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்வர். வீட்டின் வாசலில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பர். தரையில் தான் படுப்பர். பிறர் வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். சமையல் செய்யும் பொழுது தாளிதம் செய்ய மாட்டார்கள். பயறு வகைகளையும் அசைவ உணவுப் பொருட்களையும் உண்ண மாட்டார்கள். மண் பாத்திரத்தில் சமைத்து தரையிலோ உலைமூடியிலோ இட்டுச் சாப்பிடுவர். சட்டி எடுக்கும் நாளில் பானக்காரம், நீர்மோர், பழம் முதலியவற்றை மட்டும் உணவாகக் கொண்டு, அம்மனுக்குச் சட்டியைச் செலுத்திய பின்னர் உணவு உட்கொள்வர். 

அக்கினிச்சட்டி எடுக்கும் நாளன்று வீட்டிலிருந்து மஞ்சள் பால், வேப்பஞ் சுள்ளிகள், வேப்பந்தழை, விளக்கெண்ணெய், அக்கினி வளர்ப்பதற்கான சட்டி இவற்றை எடுத்துக் கொண்டு அமுதலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் செல்வர். கோயிலிலுள்ள கிணற்றில் அல்லது அருகில் உள்ள சிலம்புப்பள்ளியில் உள்ள கிணற்றில் குளிப்பர். குளித்தபின் மஞ்சள் பாலை ஊற்றுவர். கோயிலிலுள்ள வாழவந்தம்மன் சந்நிதியின்  அர்ச்சகர் தேங்காய் உடைத்து, அக்கினிச்சட்டியில் சூடம் பொருத்தித் தீ வளர்த்துக் கொடுப்பார். அதனை மேலத்தெரு சுற்றி எடுத்துக் கொண்டு கடைவீதி வழியாக வந்து வாலசுப்பிரமணியசாமி கோயிலுக்குள் சென்று ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் கடைவீதி வழியாக முத்து மாரியம்மன் கோயிலை அடைந்து அக்கினிச்சட்டியைச் சேர்ப்பிப்பர். மீண்டும் அருகிலுள்ள பள்ளிக் கிணற்றில் குளித்து விட்டு வீடு செல்வர். முன்பு கோயிலுக்கு அருகில்   இருந்த மற்றொரு கிணற்றில் குளித்து விட்டு வீடு திரும்புவர். இப்பொழுது அக்கிணறு இல்லை. 

ஒருவரே 21அல்லது 101 அக்கினிச்சட்டிகள் எடுப்பதுண்டு. குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தோளில் சுமந்து கொண்டு அக்கினிச்சட்டி எடுப்பதுமுண்டு.  சிறுவர்கள் சேர்ந்து விளையாட்டு அக்கினிச்சட்டி எடுக்கும் பழக்கமும் உண்டு. அக்கினிச்சட்டியில் எண்ணெய், பசு நெய் ஊற்றுவதாக நேர்த்திக்கடன் செய்து கொண்டவர்கள் வழிநெடுகிலும் அக்கினிச்சட்டி எடுத்துக் கொண்டு வருபவர்களை நிறுத்தித் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவர்.


kanmani tamil

unread,
Aug 29, 2024, 5:37:45 AM8/29/24
to vallamai

ஆக்கி வைத்தல் 


இதுவும் ஓர் நேர்த்திக்கடன் செயலாகும். மாரியம்மனுக்குப் பல்வகை உணவுப் பொருட்களைச் சமைத்துப் படைப்பதாகும். உணவு சமைப்பதற்கு முன் வீட்டை வெள்ளை அடித்து வேப்பிலைத் தோரணம் கட்டி அலங்கரிப்பர். புதுப் பானையில் அத்தப் புழுங்கல் அரிசியால் சமைப்பர். பொங்கல், புளிக்குழம்பு, முருங்கைக்காய்ப் பொரியல்; கருவாடு, கத்தரிக்காய், முருங்கைக்காய் மூன்றும் சேர்த்துச் சமைத்த குழம்பு, கோழிக்குழம்பு முதலியன சமைப்பர். எள்ளும் புண்ணாக்கும் அவித்து வைப்பர். புதிய பரந்த உலை மூடியில் இவை யாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று பூசை நேரத்தில் வைப்பர். பூசை  முடிந்தவுடன் வீட்டிற்குக் கொண்டு வந்து சூடதீபாராதனை காட்டி உண்பர். கோயில் வாசலிலும் சமைப்பது உண்டு.

 நாடார்கள் உறவின்முறையிலிருந்து வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் செய்து மக்கட்கு வழங்குவர். 


சிலார் குத்துதல்

 

விலாவில் துளை செய்து கம்பிகளைக் கோர்த்துக் கொண்டு வருதலைச் சிலார் குத்துதல் என்பர். இதனைக் கயிறு குத்துதல் என்றும் வழங்குவர். சிலார் குத்திக்கொள்பவர்களும் அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் போன்று விரதமிருப்பர். சிலார் குத்திக் கொள்பவர்கள் கம்பிகளைக்  கோயிலில் கொடுத்து வைத்திருப்பர். கொடியேற்ற நாளில் இவற்றை வைத்துக் கோயிலில் கும்பிடுவர். புதன்கிழமை காலை சாமபூசை நடந்து சாமி கும்பிட்ட பின்னர் அர்ச்சகர் சிலார் குத்திக் கொள்பவர் கையில் சிலாரைக் கொடுப்பார். இவர்கள் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அல்லது வீட்டில் தூய்மையான இடத்தில் சிலாரை வைத்திருப்பர். மாலையில் கோயிலுக்குக் கொண்டு வந்து சாமி கும்பிட்டு, மஞ்சள் நீர் வாங்கிக் கொண்டு குத்திக் கொள்வர். அனுபவம் வாய்ந்த முதியவர் ஒருவர் சாமி கும்பிட்ட பின் சிலார் குத்தி விடுவார். இவ்வாறு சிலார் குத்திக் கொண்டு வருபவர்கள் தேரை இழுத்துக்கொண்டு வருவதுமுண்டு.

 

பூக்குழி இறங்கல் 


பூக்குழி இறங்குதல் என்னும் இந்நிகழ்ச்சி இவ்வூருக்குத் தனிச்சிறப்பைத் தந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமை காலையில் கோயிலின் முன்புறத்தில் நான்கடி அகலமும் நாற்பதடி நீளமும் உள்ள குழியை வெட்டுவர். அக்குழியில் நாடார்கள் உறவின்முறையிலிருந்து கொண்டு வந்த விறகையும், ஊர்மக்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய விறகையும் இட்டு நிரப்புவர். குழியைச் சுற்றிப் பத்தடி தூரம் வரை மக்கள் அருகில் வராதவாறு நல்ல உறுதியான கட்டைகளை ஊன்றிக் கயிறு கட்டிப் பாதுகாப்பு செய்திருப்பர். இக்கட்டைகள் தீப்பிடிக்கா வண்ணமும், வேடிக்கை பார்க்கும் மக்களை வெப்பம் தாக்கா வண்ணமும் இருக்க இக்கட்டைகள் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருப்பர். தீ மூட்டும் முன் சகுனம் பார்ப்பது வழக்கம். கருடப் பறவை ஒன்று தாழ்வாகப் பறந்து வந்து மூன்று முறை சுற்றுவதைப் பார்த்த பின் நெய் விட்டுச் சூடம் பொருத்தித் தீ வளர்ப்பர். பொது மக்கள் நெய்யும் எண்ணெயும் நேர்த்திக்கடனாகக் கொண்டு வந்து குழியில் ஊற்றுவர். உப்பையும் நேர்த்திக்கடனாக இடும் வழக்கம் உண்டு. உப்பு மூட்டை ஒன்றையும் அருகில் வைத்துக் கொண்டு அடிக்கடி உப்பைக் குழியில் போட்டுக் கொண்டே இருப்பர். 

புதன்கிழமை பகலும் இரவும் கட்டைகள் எரிந்து கங்குகளாகக் கிடக்கும். மக்கள் அதனை பூக்கள் என்றே அழைப்பர். வியாழக்கிழமை அதிகாலையில் பக்தர்கள் இப்பூக்குழியில் இறங்குவர். பூக்குழி இறங்குபவர்களும் அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் போன்று கடுமையான விரதத்தை மேற்கொள்வர். பூக்குழி யில் இறங்கும் அக்கினிச்சட்டி பக்தர்கள்;  ஊரின் கண்ணுள்ள புளியம்பட்டி என்னும் பகுதியிலுள்ள மாரியம்மன் பீடத்திலிருந்து தான் தீ வளர்த்துக் கொண்டு வருவர். பூக்குழியில் இறங்காதோர் அவர் விரும்பிய கோயில்களில் தீ வளர்த்துக் கொள்வர். பூக்குழிக்குள் மிக எளிமையாக இறங்கி தீக்கங்குகளைப் பூவாகப் பாவித்து அள்ளித் தங்கள் மேல் தூவிக் கொள்ளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். குழந்தையைத் தொட்டில் கட்டித் தோளில் போட்டுக் கொண்டு இறங்குவோரும் உண்டு. அமெரிக்க நாட்டு ஹென்றி ஆலன் என்பவர் இங்கு நடைபெறும் பூக்குழி விழாவினைக் கண்டு மகிழ்ந்து பாராட்டிச் சென்றுள்ளார்3.

 

பத்தாம் திருவிழா

 

முன்பு தேர்த்திருவிழா என்று பத்தாம் திருவிழா நடைபெற்று இருந்திருக்கிறது. தேர் இல்லாததாலும் ஊர்வலம் இல்லாத காரணத்தாலும் இத்திருவிழா இப்பொழுது தேர்த்திருவிழா என்று நடைபெறுவதில்லை. ஊரிலுள்ள சிலம்புப்பள்ளியும், உடற்பயிற்சிக் கழகமும் இணைந்து சில நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள திடல், புல் விற்குமிடம் போன்ற பரந்த வெளிகளில் பார் விளையாட்டு, உடற்பயிற்சி, சிலம்பு விளையாட்டு போன்ற விளையாட்டுக்கள் மக்கள் முன் செய்து காட்டுவர்.

 உற்சவமூர்த்தியை அலங்கரித்து  அலங்காரப் பந்தலில் எழுந்தருளச் செய்வர். 


பதினோராம் திருவிழா, பன்னிரண்டாம் திருவிழா

 

திருவிழாவின் இறுதி நாட்களாகிய இவ்விரண்டு நாட்களிலும் சாதாரண நிகழ்ச்சிகளே நடைபெறும். உற்சவமூர்த்தியை அலங்கரித்து அலங்காரப் பந்தலில் வீற்றிருக்கச் செய்வர். பதினொன்றாம் திருவிழா வெள்ளிக்கிழமை நிகழ்வதாக இருப்பதால் இன்றும் மக்கள் மாவிளக்கு எடுத்தல், பொங்கலிடுதல் முதலிய நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகளை மிகுதியாகச் செய்வர். 

பொங்கல் நாளன்றும், அக்கினிச்சட்டி எடுக்கும்  நாளன்றும் உற்சவமூர்த்தியை அலங்காரப் பந்தலுக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். இவ்விரு நாட்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறா. பிற நாட்களில் இன்னிசைக் கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். மாரியம்மனுக்கு விழா நாட்களில் நாள்தோறும் வேப்பம்பூ மாலை சாத்துவர். 

பன்னிரண்டு நாட்களும் மாரியம்மனுக்கு நீர் எடுத்து ஊற்றுவதைப் பெண்கள் நேர்த்திக்கடனாகக் கொண்டு நிறைவேற்றுவர். பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம்; கொடியேற்ற நாளிலும், பொங்கல் நாளிலும் நடைபெறும். பச்சரிசி இடித்துச் சீனி கலந்த துள்ளுமாவை வீட்டிலிருந்து கொண்டு வந்து வழங்குவர். சிலர் ஊறிய பச்சரிசியும் சீனியும் கலந்து வழங்குவர். 

மாரியம்மன் கோயில் திருவிழா மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகிறது. விழா நாட்களில் வீடுகளும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

பொங்கல் விழாவின் போது  மாரியம்மன் உலா வருவதற்கென்று தனியாக இக்கோயிலைக் சேர்ந்த தேர் ஒன்றும் முன்பு இருந்துள்ளது. இன்று தேர் இல்லை. ஊர்வலமும் இல்லை. விழா நாட்களில் நாள்தோறும் உற்சவமூர்த்திக்குச் செய்யப்படும் மலர் அலங்காரம் எல்லோராலும் போற்றற்குரியதாய் அமையும். 

பொங்கல் திருவிழாவை ஒட்டிப் பொருட்காட்சி ஒன்று சென்ற ஆண்டு முதல் நடைபெறுகிறது. சிறந்த மேடை நாடகங்கள், திரைப்படங்கள், இன்னிசைக் கச்சேரிகள் முதலியன நடைபெறுகின்றன. பொருட்காட்சியின் மூலம் கிடைக்கும் வருமானம் சைவபானு க்ஷத்திரிய மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றது. 

ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிக்கும் தனித்தனிக் கட்டளைதாரர்கள் உள்ளனர்4. கட்டளைதாரர்கள் தங்கள் நிகழ்ச்சிகள் செவ்வனே நடைபெற உதவி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்குக் கட்டளைதாரர்களைக் கொட்டு மேளத்துடன் ஊர்வலமாகக் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். அதன் பின்னர் தான் கோயிலில் அபிஷேக ஆராதனை நடைபெறும்.

 விழா சிறப்புடன் நடைபெறத் தனிக்கமிட்டி ஒன்றும் அமைக்கப்படும்.

 

ஸ்ரீவால சுப்பிரமணியசாமி கோயில்

 

வாலசுப்பிரமணியசாமி கோயிலில் குறிப்பிடத்தக்க பெரிய விழா ஒன்றும் இதுவரை நடைபெறவில்லை. வருகிற பங்குனி மாதம் அமாவாசை நாளன்று உற்சவமூர்த்தி செய்யப்பட்டு இங்கு வந்து சேர இருக்கின்றது. வரும் வைகாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்திச் சாமிபுறப்பாடு நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

சித்தி விநாயகர் கோயில்

 

சித்தி விநாயகர் கோயிலிலும் திருவிழா எதுவும் நடைபெறுவதில்லை. அமுதலிங்கேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா, முத்து மாரியம்மன் பங்குனிப் பொங்கல் விழா ஆகிய விழாக்கள் நடைபெறும் முறைகள் பற்றியும், அவற்றில் மக்கள் பங்கு பெறும் முறைகள் பற்றியும் இக்கட்டுரையின் முற்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.


kanmani tamil

unread,
Aug 30, 2024, 1:45:20 AM8/30/24
to vallamai

பிற விழாக்கள்


சில புண்ணிய நாட்களில் நடைபெறும் சிறப்புப் பூசையினையே பொதுவாக விழா என்கின்றனர். இவ்விழாக்கள் ஓர் ஆண்டில் பல நிகழ்வதுண்டு. தலப்பெருமையை உணர்த்தும் வண்ணம் இவ்விழாக்கள் இடம் பெறுகின்றன. இவ்விழாக்கள் நடைபெறும் நாள், அதற்குரிய காரணம், நடைபெறும் முறை ஆகியவற்றைக் காண்பது இப்பகுதியின் நோக்கமாகும்.


அமுதலிங்கேஸ்வரர் கோயில்

 

ஒவ்வொரு திங்களிலும் வரும் இரு ஏகாதசி நாட்கள், இரு பிரதோஷ நாட்கள், கார்த்திகை நாள் ஆகிய நாட்களில் சிறப்பாகப் பூசை நடைபெறும். 

இந்நாட்கள் தவிர ஒவ்வொரு திங்களிலும் ஒன்றிரண்டு விழாக்களும் நன்முறையில் நடத்தப்படுகின்றன. அவை 

திங்களின்  பெயர்                           விழாவின் பெயர்

சித்திரை                                            பௌர்ணமி 

வைகாசி விசாகம்

ஆனி                                                  திருமஞ்சனம் 

ஆடி தபசு 

ஆவணி விநாயகர் சதுர்த்தி 

புரட்டாசி சனிக்கிழமைகள்

 நவராத்திரி 

 விஜயதசமி 

ஐப்பசி தீபாவளி 

கார்த்திகை சோமவாரம்

திருக்கார்த்திகை 

மார்கழி மாணிக்கவாசகர்காப்பு 

அஷ்டமிபிரதட்சணம்

சிவராத்திரி 

தை தைப்பூசம் 

மாசி மாசிமகம் 

சங்கடஹர சதுர்த்தி 

பங்குனி பங்குனிஉத்திரம்  

கந்தசஷ்டி ஐப்பசி அல்லது கார்த்திகை மாதத்தில் நிகழும். 

மேலும் நடராஜர் அபிஷேகங்கள், சூரிய பூசை ஆகியனவும் இக்கோயிலில் நடைபெறும் விழாக்களாகும்.

 

ஏகாதசி 


ஒவ்வொரு திங்களிலும் வரும் இரண்டு ஏகாதசி நாட்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். ஏகாதசி என்பது ஓர் சக்தி என்றும், அவள் விஷ்ணுவின் திருமேனியில் விளங்குகிறாள் என்றும், அசுர சக்தியை அழிக்கும் இச்சக்தியே விஷ்ணு என்றும், இச்சக்தி “விஷ்ணுவிடம் ஏகாதசியன்று தங்களை நினைத்து உண்மை மனத்துடனும், திடமான சித்தத்துடனும் விரதம் இருப்பவர்களைக் காத்தருள வேண்டும்” என்று வரம் கேட்க இறைவன் தந்நருளினார் என்றும் கூறுவர். 

இக்கருத்தை விளக்கப் புராணக்கதை ஒன்றும் கூறுவர். “முரன் என்னும் அரக்கன் தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தான். அதைக் கண்ட இந்திரன் பயந்து சிவபெருமானிடம் சென்று முறையிட்டான். அவர் பரந்தாமனிடம் செல்லும்படி கூறினார். பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனிடம் சென்று வேண்டினான். அவர் உடனே போர்க்கோலம் பூண்டு புறப்பட்டார். அரக்கர் சேனையை அழித்தார். முரன் வீராவேசத்துடன் போர் புரிந்தான். அவனுடைய சக்தியைக் கண்டு பரந்தாமன் வியந்தார். பிறகு களைப்படைந்தவரைப் போல் காட்டி பத்ரிகாச்ரமம் சென்று அங்கே ஒரு குகையில் பள்ளி கொண்டார். முரனும் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரைக் கொல்ல வாளை உருவினான். பரந்தாமனின் உடலிலிருந்து ஓர் அழகான கன்னிகை தோன்றினாள். அவளுடைய கரங்களில் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. அரக்கன் அம்பை எடுப்பதற்கு முன் அக்கன்னிகை ஓர் ஹூங்காரம் செய்தாள். அரக்கன் முரன் பிடிசாம்பலாகிக் கீழே விழுந்தான். உடனே பரந்தாமனும் துயில் நீங்கி எஎழுந்து வியந்தார். அவளுக்கு ஏகாதசி என்று பெயரைச் சூட்டினார். அவள் பிறந்த தினத்திலே உபவாசம் இருந்து தம்மை வழிபடுவோருக்கு வைகுண்டம் அளிப்பதாக வாக்களித்தார்.” என்பதாகும் அக்கதை. இதன்  காரணமாகவே ஒவ்வொரு ஏகாதசியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கு இரவு ஏழு மணிக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நிகழும். பொங்கல், தேங்காய், பழம் ஆகியன நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும்.

 

வைகுண்ட ஏகாதசி

 

மார்கழித் திங்கள் சுக்லபட்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். இதனை மோக்ஷஏகாதசி என்றும் கூறுவர்.     

அறிதுயில் கொண்டுள்ள பெருமான் வைகுண்ட ஏகாதசியன்று தான் கண்ணைத் திறக்கிறாராம். அன்று தான் வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது.

 “காயத்ரிக்கு ஈடான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசிக்கு அதிகமான தீர்த்தமில்லை; ஏகாதசிக்குச் சமமான விரதமில்லை.” என்று இதன் பெருமையை எடுத்துரைப்பர் மக்கள்.

 அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வரதராஜப் பெருமாள் சந்நிதி விழாக்கோலம் கொண்டு திகழும். சந்நிதியில்  மாக்கோலம்  இட்டு, மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்துவர். இரவு ஏழு மணிக்குச் சிறப்பான அபிஷேகம் நடத்துவர் . சோடச தீபாராதனை நடைபெறும். அதன் பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்படும். 

மக்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து இரவில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவர். கோயிலில் திருமால் பெருமை விளக்கும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு கேட்டுக் களிப்பர். அதிகாலையில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டு சொர்க்கவாசல் திறப்பினைக் கண்டபின் தத்தம் இல்லம் செல்வர்.

 

பிரதோஷம்

 

ஒவ்வொரு திங்களிலும் அமாவாசை அல்லது பௌர்ணமி கழிந்த பதின்மூன்றாம் நாள் திரியோதசி ஆகும். அன்று மாலை நாலரை மணிமுதல் ஆறுமணி வரை பிரதோஷ காலமாகும். அப்பொழுது சிறப்புப்பூசை நடைபெறும். 

அமிர்தம் உண்ட அமரர்கள் தங்கள் மகிழ்ச்சியைச் சிவபெருமானிடம் தெரிவித்தனர். சிவபெருமான் மகிழ்ந்து அமரர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டு கயிலையில் திரியோதசியன்று  மாலை பிரதோஷ வேளையில் தம் முன் இருந்த ரிஷபதேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று அம்பிகை காணத் திருநடம் செய்து அருளினார்.  அமரர்கள் அதனைக் கண்டு சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள்.  அதுமுதல் திரியோதசி திதியன்று மாலை நேரம் பிரதோஷ காலம் என்று வழங்கலாயிற்று.

 மாலை நாலரை மணிக்கு மேல் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதிக்கு நேராக வெளிப்பிரகாரத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு முதலில் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தி அருகம்புல் மாலை, மலர் மாலை சூட்டுவர். பின்னர் அமுதலிங்கேஸ்வரருக்கு இதுபோல் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டியபின் மகாமண்டபத்திலிருககும் நந்தீஸ்வரருக்குத் தீபாராதனை காட்டுவர்.

அதன் பின்னர் ஆறுகால் மண்டபத்தில் அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி இருக்கும்   உற்சவமூர்த்திக்குத் தீபாராதனை காட்டிப் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வரச் செய்வர். உற்சவமூர்த்தியைத் தூக்கிக் கொண்டு அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்தைச் சுற்றி வெளிப்பிரகாரம் வந்து கொடிமரம் வரை சுற்றி வந்து சந்நிதிக்குள் கொண்டு செல்வர். முதல் சுற்றை நேரடியாகச் சுற்றச் செய்வர். இரண்டாம் சுற்றில் உற்சவமூர்த்தியை நான்கு திக்குகளிலும் நிறுத்தித் தீபாராதனை காட்டிக் காக்கைகளுக்குப் பொங்கல் வழங்குவர். மூன்றாம் சுற்றின் போது அட்டதிக்குப் பாலகர்களுக்குத் தீபாராதனை காட்டி அவ்வப்போது உற்சவமூர்த்திக்கும் தீபாராதனை காட்டுவர். 

மூன்று சுற்றுகளுக்குப் பின் ஆறுகால் மண்டபத்தில் உற்சவமூர்த்தியை எழுந்தருளச் செய்து தீபாராதனை காட்டுவர். பின்னர் உற்சவமூர்த்தியை ரிஷப வாகனத்தினின்றும் எடுத்துக் கருவறையில் அமுதலிங்கேஸ்வரர் முன் வைத்துச் சோடச தீபாராதனை காட்டுவர். தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்யப்படும். அடுத்து மகாமண்டபத்திலிருக்கும் நந்தீஸ்வரருக்குத் தீபம் காட்டி விட்டு வெளிப்பிரகாரத்தில் இருக்கும் நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுவர்.


kanmani tamil

unread,
Aug 30, 2024, 9:09:28 PM8/30/24
to vallamai
அமரபட்ச பிரதோஷம், பூர்வபட்ச பிரதோஷம் ஆகிய இரு நாட்களுக்கும் தனித்தனிக்
கட்டளைதாரர்கள் உள்ளனர். அமரபட்ச பிரதோஷம் வெற்றிலை வியாபாரிகளாலும்,
பூர்வபட்ச பிரதோஷம் அருப்புக்கோட்டை மு.சுப்பையா நாடார் கட்டளையாலும்
நடைபெறும்.

இவ்வாறு பிரதோஷ வழிபாடு முடிந்தவுடன் வழிபாட்டில் கலந்து கொண்ட
பக்தர்களுக்குத் திருநீறு, குங்குமம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல்,
பஞ்சாமிர்தம் முதலிய பிரசாதங்கள் வழங்கப்படும் அதிகமான மக்கள் இவ்வழிபாட்டில்
பங்கு பெறுவர்.



கார்த்திகை

ஒவ்வொரு திங்களிலும் வரும் கிருத்திகை நட்சத்திர நாள் மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படும்.

கார்த்திகைப் பெண்கள் குமரக் கடவுளை வளர்த்த காரணத்தால் அவர்களுடைய நாளான
கிருத்திகை நட்சத்திரத்தில் அவர்களுக்குச் சிறப்புச் செய்யும் வண்ணம்
இந்நிகழ்ச்சி நடைபெறும்.

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் இருக்கும் முத்துக்குமாரசாமி சந்நிதியில் பகல்
பன்னிரண்டு மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். பால், எண்ணெய், தயிர்,
பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நிகழும். பொங்கல், தேங்காய், பழம்
ஆகியன நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும்.

வள்ளி தெய்வானையுடன் இருக்கும் உற்சவமூர்த்தியாகிய முருகனை அலங்கரித்து மயில்
வாகனத்தில் எழுந்தருளச் செய்து கோயிலின் முன் உள்ள கலாமண்டபத்தில் காட்சி
தரச்செய்வர். அன்றிரவு திருவிளக்கு பூசை நடைபெறும். சொற்பொழிவு, இன்னிசைக்
கச்சேரி, கதாகாலட்சேபம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இவை முடிந்த பின்
உற்சவமூர்த்திக்குத் தீபாராதனை காட்டுவர்

பன்னிரு மாதங்களில் வரும் பன்னிரண்டு கார்த்திகை நாட்களை நடத்தத் தனித்தனிக்
கட்டளைதாரர்கள். உள்ளனர்5. வருடத்தில் பதின்மூன்றாவது கார்த்திகை நாள் வரும்
பொழுது அதை வெற்றிலை வியாபாரிகள் தரப்பு ஏற்று நடத்தும். பதினான்காவது
கார்த்திகை வரின் அதை உறவின்முறையிலிருந்து நடத்துவர்.

கார்த்திகை நாளில் நடைபெறும் குத்துவிளக்கு பூசையில் பெண்கள் மகிழ்வுடன்
கலந்து கொள்வர். கலை நிகழ்ச்சிகள் முடிந்த பின் உற்சவமூர்த்திக்கு வழிபாடு
நடத்தி விட்டுக் கட்டளைதாரருக்குப் பரிவட்டம் கட்டிச் சிறப்புச் செய்து
திருநீறு , குங்குமம், சுண்டல், பொங்கல் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்படும்.



சித்திரைத் திங்கள்: சித்ரா பவுர்ணமி

சித்திரைத் திங்கள் பௌர்ணமி நாளில் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில்
அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மன், வரதராஜப் பெருமாள், சித்திரபுத்திரர்
ஆகியோருக்குச் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

அமுதலிங்கேஸ்வரருக்கும், அமுதவல்லியம்மனுக்கும், சித்திர புத்திரருக்கும்
காலையில் அபிஷேக ஆராதனை நடைபெறு‌ம். வரதராஜப் பெருமாளுக்குப் பகல் பன்னிரண்டு
மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

தவம் புரிந்து கொண்டு இருக்கும் பிரம்மாவின் உடலிலிருந்து சித்ரா பவுர்ணமி
தினத்தில் தோன்றியதால் அவருக்குச் சித்திரகுப்தன் என்று பெயர் ஏற்பட்டது.
எமதருமனின் கணக்கர்; உலக உயிர்களின் பாவபுண்ணியங்களைக் கணக்கு எழுதும்படி
பிரம்மாவால் நியமிக்கப்பட்டவர். எமபயம் நீங்க இவரை வழிபடுவர். சித்ரகுப்தரையே
சித்திரபுத்திரர் என்று இங்கு வழங்குகின்றனர்.

இவருக்குக் காஞ்சிபுரத்தில் ஓர் ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சந்நிதியும்,
உள்ளன. அமுதலிங்கேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தில் உற்சவமூர்த்திகளுக்கு அருகில்
இவரை எழுந்தருளச் செய்துள்ளனர்.

இவருக்குக் காலையில் பொங்கல், சுண்டல் ,தேங்காய், பழம் ஆகியவற்றைக் கொண்டு
நைவேத்யம் செய்வர். சூட தீபாராதனை காட்டுவர்.

அமுதலிங்கேஸ்வரருக்கும் அமுதவல்லியம்மனுக்கும் பால், எண்ணெய் , தயிர்,
பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும். பொங்கல், பழம்,
தேங்காய் நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும்.

வரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை நடைபெறும். பொங்கல், சுண்டல், பழம்,
தேங்காய் நைவேத்யப் பொருள்களாக அமையும்.

அருப்புக்கோட்டை சி. பெ. அருணாசலநாடார் கட்டளையால் இச்சிறப்பு வழிபாடு இனிது
நடைபெறும்.



வைகாசித் திங்கள்: வைகாசி விசாகம்

வைகாசித் திங்களில் பூரணச் சந்திரனும் விசாக நட்சத்திரமும் கூடி வரும் நாளை
வைகாசி விசாகத் திருநாளாகக் கொண்டாடுவர். முத்துக்குமார சாமிக்கும்,
பழனியாண்டவருக்கும் இந்நாளில் மாலை ஏழு மணிக்குச் சிறப்பான அபிஷேக ஆராதனைகள்
நடைபெறும்.

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் திருவிழா இத்திங்களில் தான் நடைபெறும்.
இத்திங்களில் வரும் புனர்பூச நட்சத்திர நாளன்று தொடங்கப் பெற்று பதினோரு
நாட்கள் நடைபெறும். வைகாசி விசாகத் திருவிழா என்று அழைக்கப்படும் இத்திருவிழா
பற்றித் திருவிழா என்னும் பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

முருகப் பெருமானின் பிறந்தநாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முத்துக்குமாரசாமிக்கும், பழனியாண்டவருக்கும் பால், எண்ணெய், தயிர்,
பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல்,
தேங்காய், பழம் இவற்றை நைவேத்யப் பொருளாகக் கொண்டு வழிபாடு நடைபெறும். சோடச
தீபாராதனை நிகழும்.



ஆனித் திங்கள்: ஆனித் திருமஞ்சனம்

இவ்விழா நடராஜர் அபிஷேகங்கள் என்னும் பகுதியில் விளக்கப்படுகிறது.



ஆடித்திங்கள்: ஆடித்தபசு



ஆடித்திங்கள் பௌர்ணமியன்று இவ்விழா கொண்டாடப்பெறும். இரவு ஏழு மணிக்கு
அமுதலிங்கேஸ்வரருக்கும் அமுதவல்லியம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நிகழும்.

சிவபெருமான் கோமதியம்பிகைக்குச் சிவன் வேறு; திருமால் வேறு என்ற பேதமில்லாமல்
சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கும் விழாவே ஆடித் தபசு விழாவாகச் சங்கரன்
கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும். அவ்விழாவே இங்கும் சிறிய அளவில்
கொண்டாடப்படுகிறது.

அமுதலிங்கேஸ்வரருக்கும், அமுதவல்லியம்மனுக்கும் பால், எண்ணெய், தயிர்,
பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், தேங்காய்,
நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும்.

அருப்புக்கோட்டை சி.த.நாகலிங்க நாடார் கட்டளையில் இவ்விழா நடைபெறுகிறது.
மிகுதியான மக்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்கின்றனர்.



ஆவணித் திங்கள்: விநாயகர் சதுர்த்தி



ஆவணித் திங்களில் வளர்பிறைச் சதுர்த்தசி (நான்காம்) நாள் விநாயகர்
சதுர்த்தி கொண்டாடப்படும். அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள அனவரத செல்வ
விநாயகருக்கு இரவு எட்டு மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

விநாயகர் புராணத்தில் விநாயகர்சதுர்த்தியைக் கொண்டாடுவதன் காரணத்தையும்,
சிறப்பையும் சிவபெருமான் முருகப்பெருமானுக்குக் கூறுவதாக, “மைந்தா ஆதி
பரம்பொருள் விநாயகர். அவர் தான் மும்மூர்த்திகளாகிய எங்களைத் தோற்றுவித்தது.
அவருடைய அருளால் எங்கள் காரியங்களை நடத்திச் செல்லும் சக்தி எங்களுக்கு
உண்டாகி இருக்கிறது. எத்தனையோ காரியங்களின் நிமித்தம் அவர் அவ்வப்போது பற்பல
தோற்றங்களில் தோன்றுகிறார். அவற்றுள் ஒன்று தான் எனது குமாரராகத்
தோன்றியிருப்பது. ஆகவே முதற் கடவுளான விநாயகரைக் குறித்துச் செய்யப்படும்
சதுர்த்தி விரதத்துக்கு ஈடானது எதுவும் இல்லை”6 என அமைந்த பகுதி இங்கு
நினைக்கத் தக்கது.

. அனவரத செல்வ விநாயகருக்குப் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம்
ஆகிய அபிஷேகங்கள் முதலில் நடத்துவர். பின்னர் கொழுக்கட்டைகள் பல்வகைச்
சுண்டல், பொங்கல், பல்வகைப் பழங்கள், தேங்காய் ஆகியன வைத்து நைவேத்தியம்
செய்வர்.

இவ்விழா நடத்துவதற்கும் திருவிழாவில் பதினோராம் நாள் தீர்த்த மண்டபப்படி
நடத்துவதற்கும் கடைகள் மூன்றும், கிட்டங்கி மூன்றும் ரிஜிஸ்டர் சாசனம்
செய்யப்பட்டு உள்ளது.


On Fri, Aug 30, 2024 at 11:14 AM kanmani tamil <kanmani...@gmail.com>
>>>>>>>>>>>>> 1.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> S.T.ஜெயபாண்டியன் (மொ. ஆ) - தமிழக நாடார் வரலாறு - ப.8
>>>>>>>>>>>>> 2.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> Ibid.- ப. - 53-54
>>>>>>>>>>>>> 3.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> குரு. தேமொழி - நாடார் சமூக வரலாறு - ப. - 39
>>>>>>>>>>>>> 4.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> ibid. ப. - 29-30
>>>>>>>>>>>>> 5.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> பின்னிணைப்பு - 3
>>>>>>>>>>>>> 6.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> பின்னிணைப்பு - 4
>>>>>>>>>>>>> 7.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> Census Of India -1961 - Volume - 9 - Madras -
>>>>>>>>>>>>> Part-11-DTemples Of Madras State p. 339
>>>>>>>>>>>>> 8.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> S.T.ஜெயபாண்டியன் (மொ.ஆ.) - மு.நூ.- ப - 55
>>>>>>>>>>>>> 9.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> Ibid - ப. - 26- 27
>>>>>>>>>>>>> 10.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> குரு. தேமொழி - மு.நூ.- ப. - 38
>>>>>>>>>>>>> 11.
>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>> அ.காசி - மாரியைப் பணிகுவம் - ப. - 4
>>>>>>>>>>>>> 12.
>>>>>>>>>>>>>>>> *தொழில்: *
>>>>>>>>>>>>>>>> இவ்வூரில் நெசவுத்தொழிலே முக்கியமான தொழிலாகும்.
>>>>>>>>>>>>>>>> இவ்வூர் கைத்தறித் துணிகளுக்குப் பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு உற்பத்தி
>>>>>>>>>>>>>>>> செய்யப்படும் கைத்தறித் துணிகளின் பெரும்பகுதி மற்ற மாவட்டங்களுக்கு
>>>>>>>>>>>>>>>> விற்பனைக்காக அனுப்பப்படுகின்றது. வேட்டி, துண்டு, புதுப்பட்டு, நூற்
>>>>>>>>>>>>>>>> சேலைகள், படுக்கை விரிப்புகள், மற்ற துணி வகைகளும் இங்கு உற்பத்தி
>>>>>>>>>>>>>>>> செய்யப்படுகின்றன. சாயச் சேலைகள், எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள், வைக்கோல்
>>>>>>>>>>>>>>>> தகடு செய்யும் ஆலைகள்(Straw board manufacturing company), பருத்தி ஆலைகள்
>>>>>>>>>>>>>>>> முதலிய பலவும் இங்கு அமைந்துள்ளன.
>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>> *அலுவலகங்கள்:*
>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>> இவ்வூர் ஒரு நகராட்சி ஆகும். இந்தத்
>>>>>>>>>>>>>>>> தாசிலுக்கும், பஞ்சாயத்து இணையத்திற்கும் இதுவே தலைமை இடமாகும். தாலுகா
>>>>>>>>>>>>>>>> அலுவலகம், துணைப் பதிவாளர் அலுவலகம், கோட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய
>>>>>>>>>>>>>>>> அலுவலகம், துணைக் கஜானா, தந்தி, தொலைபேசி வசதி உள்ள தபால் நிலையம், காவல்
>>>>>>>>>>>>>>>> நிலையம், துணை வணிக வரி அலுவலகம், மாஜிஸ்திரேட் கோர்ட், துணைப் பள்ளி ஆய்வாளர்
>>>>>>>>>>>>>>>> அலுவலகம் முதலியன இங்கு அமைந்துள்ளன.
>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>> *கல்விச்சாலைகள்:*
>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>> சைவபானு க்ஷத்திரியர் கல்லூரி, தேவாங்கர் கலைக்
>>>>>>>>>>>>>>>> கல்லூரி என்னும் இரு கல்லூரிகள் இவ்வூரில் நிறுவப்பட்டுள்ளன. இவ்வூரில் ஆறு
>>>>>>>>>>>>>>>> மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. அவை நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தேவாங்கர்
>>>>>>>>>>>>>>>> மேல்நிலைப்பள்ளி , சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி, சைவபானு ஷத்திரியர் ஆண்கள்
>>>>>>>>>>>>>>>> மேல்நிலைப்பள்ளி, சைவபானு ஷத்திரியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி. எஸ். ஐ.
>>>>>>>>>>>>>>>> மேல்நிலைப்பள்ளி என்பனவாம்.
>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>> மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத் தேவையான மருத்துவ
>>>>>>>>>>>>>>>> மனைகள், சந்தை, பேருந்து நிலையம் போன்றனவும் சிறப்பாக அமைந்துள்ளன.
>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>> முத்துச்சாமி கவிராஜ சரபம் அவர்கள் இயற்றிய
>>>>>>>>>>>>>>>> “அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அனவரத செல்வ விநாயகர் விளையாடல்“
>>>>>>>>>>>>>>>> என்னும் நூலில் அமைந்த “அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லி அம்மன் - வசந்த ருது
>>>>>>>>>>>>>>>> என்னும் பகுதி அருப்புக்கோட்டையின் சிறப்பியல்புகளை
>>>>>>>>>>>>>>>> எடுத்தியம்புவதாக அமைகிறது10. இப்பகுதி நொண்டிச்சிந்தில் அமைந்துள்ளது.
>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>> *குறிப்புகள் *
>>>>>>>>>>>>>>>>>>> *கணிப்பாளர் முன்னுரை *
>>>>>>>>>>>>>>>>>>>> இரண்டு சிவன் கோவில்களிலும் இடம் பெற்றுள்ள சப்தகன்னியர்
>>>>>>>>>>>>>>>>>>>> பீடங்கள்:
>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>> மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில்...
>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>> அமுதலிங்கேஸ்வரர் திருக்கோயிலில்...
>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>> சக
>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>> On Tue, 13 Aug 2024, 3:07 pm kanmani tamil, <
>>>>>>>>>>>>>>>>>>>> kanmani...@gmail.com> wrote:
>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>> ஒரு ஊரில் இரண்டு சிவன் கோயில்கள்; இரண்டும் ஒரே
>>>>>>>>>>>>>>>>>>>>> அமைப்பில்...
>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>> அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயில்
>>>>>>>>>>>>>>>>>>>>> அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்று எல்லோரும்
>>>>>>>>>>>>>>>>>>>>> அந்தக் கோயிலுக்குள் சென்று வழிபடலாம். ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் பாண்டியர்
>>>>>>>>>>>>>>>>>>>>> கட்டிய கோயில் என்கின்றனர். ஆனால் ஒருகாலத்தில் சிலருக்கு அக்கோயிலில்
>>>>>>>>>>>>>>>>>>>>> நுழைவும் வழிபாடும் மறுக்கப்பட்டது. வரலாற்றுக் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட
>>>>>>>>>>>>>>>>>>>>> சமூக மாற்றங்களும் ஏற்றத் தாழ்வுகளும் பல விதமான போராட்டங்கட்கு வழி வகுத்து
>>>>>>>>>>>>>>>>>>>>> உள்ளன. அதில் ஒன்று கோயில் நுழைவுப் போராட்டம். இவ்வூரில் நடந்த போராட்டம்
>>>>>>>>>>>>>>>>>>>>> இன்னொரு சிவன் கோயில் தோன்ற வழிவகுத்தது. அது தான்
>>>>>>>>>>>>>>>>>>>>> அமுதலிங்கேஸ்வரர் கோயில். 'நீ நுழைய விடவில்லை என்றால்
>>>>>>>>>>>>>>>>>>>>> நாங்களே கோயில் கட்டிக் கொள்கிறோம்; அதில் எல்லோரும் நுழைந்து சாமி
>>>>>>>>>>>>>>>>>>>>> கும்பிடலாம்' என்று சவால் விட்டுக் கட்டிய கோயில்.
>>>>>>>>>>>>>>>>>>>>>

kanmani tamil

unread,
Sep 1, 2024, 2:13:53 AM9/1/24
to vallamai

இரவில் நடைபெறும் பூசையில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்வர். இறைவனின் அருள் பிரசாதம் பெற்று மனக்களிப்போடு வீடு திரும்புவர். 

புரட்டாசித் திங்கள்- சனிக்கிழமைகள் 

புரட்டாசித் திங்களில் வரும் நான்கு அல்லது ஐந்து சனிக்கிழமைகள் சிறப்பாகக் கொண்டாடப்படும். பகல் பன்னிரண்டு மணிக்குப் பூசை நடத்தப்படும். 

பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை ஆகும். எனவே அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள வரதராஜப் பெருமாளுக்குச் சிறப்பான அபிஷேக ஆராதனை நடைபெறும். பெருமாளுக்குப் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். புளியோதரை, சுண்டல், தேங்காய், பழம் வைத்து நைவேத்யம் செய்யப்படும். சோடச தீபாராதனை நடைபெறும்.

 இவ்வழிபாடு நிறைவேற்ற கட்டளைதாரர்கள் உள்ளனர்.

 

 நவராத்திரி

 

புரட்டாசித் திங்கள் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இரவு ஒன்பது மணிக்கு சிறப்புப் பூசை நடைபெறும். 

சக்தி வழிபாட்டிற்குரிய முக்கியமான விழா நவராத்திரி ஆகும். முதல் மூன்று நாட்கள் வெற்றியை நல்கும் மலைமகளுக்கும், இடையில் உள்ள மூன்று நாட்கள் செல்வத்தை அளிக்கும் திருமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கல்வியைக் கொடுக்கும் கலைமகளுக்கும் உரியவையாகக் கொண்டு விழாவைக் கொண்டாடுவர். 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில், அமுத வல்லியம்மன் சந்நிதியில் இவ்விழா கொண்டாடப்பெறும். உற்சவமூர்த்தி அம்மனை அலங்கரித்து ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வர். அம்மனை முதல் மூன்று நாட்கள் பார்வதியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அடுத்த இரண்டு நாட்கள் சரஸ்வதியாகவும் இறுதி நாள் அம்மன் சிவபூஜை செய்வது போலவும் அலங்காரம் செய்து காட்சி தரச் செய்வர். கருவறை அம்மனுக்கு வழக்கம் போல் மாலையில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இரவு ஒன்பது மணிக்குச் சோடச தீபாராதனை உற்சவமூர்த்திக்கு நிகழும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகக் கொண்டு வழிபாடு நடக்கும். 

அருப்புக்கோட்டை பெரிய கருப்பண நாடார் வகையறாவினர் கட்டளையால் இவ்விழா சிறப்பாக நடக்கிறது. 

நாள்தோறும் மக்கள் அம்மனை வழிபட இரவில் வருவர். அப்பொழுது நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டு இறைவனின் அருள் பிரசாதம் பெற்றுச் செல்வர்.

 

 விஜயதசமி

 

நவராத்திரி தொடங்கிய பத்தாம் நாள் விஜயதசமி ஆகும். இதனை மகர் நோன்பு விழா என்றும் கூறுகின்றனர். இரவு எட்டு மணிக்குத் தீபாராதனை நடைபெறும்.

 மதுரை சு. சு. இ. கருப்பண நாடார் கட்டளையால் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இன்றும் மக்கள் பெருந்திரளாக வந்து, முருகன் அம்பெய்யும் திருக்கோலம் கண்டு மகிழ்ந்து வழிபாட்டில் பங்கு கொண்டு முருகன் அருட்பிரசாதம் பெற்று வீடு திரும்புகின்றனர்.

 

ஐப்பசித் திங்கள் - தீபாவளித் திருநாள்

 

ஐப்பசித் திங்கள் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் வரும் திருநாளாகும். 

ஸ்ரீகிருஷ்ணனால் வதம் செய்யப்பட்ட நரகாசுரனின் விருப்பத்தை நிறைவேற்றக் கொண்டாடப்படும் விழாவாகும் இது. ஸ்ரீகிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த பொழுது அவன் இறைவனிடம் ஒரு வரம் கேட்டான். அதாவது அவன் இறந்த தினத்தை உலகிலுள்ள மக்கள் எவ்விதத் துன்பமுமின்றி; மங்கள நீராடல் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்துண்டு, மகிழ்ச்சி யாகக் கொண்டாட வேண்டும் என்பதே. அவனது விருப்பத்தை ஸ்ரீகிருஷ்ண பகவான் ஏற்றருளினார். அன்று முதல் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபங்களை வரிசையாக ஏற்றி வழிபடுவதால் இருளை நீக்கி வாழ்க்கைக்கு ஒளியூட்டும் புண்ணிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது. 

தீபாவளித் திருநாளன்று அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் இடம் பெற்றுள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் வழிபாடு நடைபெறும். அதிகாலையில் அனைத்து மூர்த்திகளுக்கும் எண்ணெய் நீராட்டல் செய்து புத்தாடை உடுத்தப்பெறும். குடதீபாராதனை காட்டப்படும். சுத்த அன்னம், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாக அமையும். மக்கள் வீடுகளில் இத்திருநாளைக் கொண்டாடிப் புத்தாடையுடன் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டுப் பிரசாதம் பெற்றுச் செல்வர்.

 

கந்தசஷ்டி 


தீபாவளித் திருநாளைத் தொடர்ந்து இவ்விழா நடைபெறும். ஐப்பசித் திங்களில் தொடங்கப் பெறும் இவ்விழா; ஐப்பசித் திங்களில் முடியும் அல்லது கார்த்திகைத் திங்களில் முடியும். 

இவ்விழா ஏழு நாட்கள் நடைபெறும். 

முருகன் சூரனைச் சம்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்தசஷ்டி விழாவாகும். இறைவனது கருணை அறக்கருணை, மறக்கருணை என இருவகைப்படும். நல்லவர்களை அறக்கருணையாலும் பொல்லாதவர்களை மறக்கருணையாலும் இறைவன் ஆட்கொள்கிறான். சூரன் வரம் பல பெற்று இடுக்கண் புரிந்து வந்தான். அவன் மீண்டும் பாவங்களைச் செய்யாது தடுக்கவும், அவனுக்கு முக்தி கொடுக்கவும் அவனை இருகூறாக்கி மயிலும் சேவலுமாக மாற்றினார். முருகன் மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் மாற்றிக் கொண்டார். முருகன் சூரனை மறக்கருணையால் ஆட்கொண்ட சிறப்பை வெளிப்படுத்துவதே கந்தசஷ்டி விழாவின் நோக்கமாகும். 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள பழனியாண்டவர் சந்நிதியில் இவ்விழா நடைபெறும். முதல் ஐந்து நாட்கள் முருகனை அலங்கரித்து மயில் வாகனத்தில் எழுந்தருளச் செய்து கலாமண்டபத்தில் காட்சி தரச் செய்வர். ஆறாவது நாள் தான் சஷ்டி. அன்று தான் முருகன் சூரனைச் சம்ஹாரம் செய்த நாளாகக் கொண்டாடப் பெறுகிறது. ஏழாவது நாள் பழனியாண்டவருக்குப் பாவாடை நைவேத்தியங்கள் செய்யப் பெறும். ஒவ்வொரு நாளும் இரவு ஒன்பது மணிக்கு மேல் சிறப்புப்பூசை நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம் , சந்தனம் அபிஷேகங்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 

கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டவர்களும், விரதம் மேற்கொள்ளாதவர்களும் நாள்தோறும் கோயிலில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வர். சஷ்டி தினத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தித் தேங்காயையும், பிரசாரத்தையும் அருகிலுள்ள பாலையம்பட்டி என்னும் ஊரிலுள்ள நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட முருகன் கோயிலுக்குக் கொண்டு செல்வர். அமுதலிங்கேஸ்வரர் கோயில் முருகன் பிரசாதம் பெற்ற பின்னரே பாலையம்பட்டி சஷ்டி வழிபாடு நடக்கும். இந்நிகழ்ச்சி கோயில் தோற்ற காலம் முதலாக இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கார்த்திகைத் திங்கள் - சோமவாரம்

 

கார்த்திகைத் திங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று கொண்டாடப்பெறும். இம்மாதத்தில் வரும் நான்கு அல்லது ஐந்து திங்கள் கிழமைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.   

கார்த்திகை மாதம் சுக்லபட்ஷ அஷ்டமியில் சந்திரன் தோன்றினான் என்றும்; அவன் தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதித்து நவகிரகங்களில் ஒருவன் ஆனான் என்றும் ஆன்றோர் கூறுவர். தன் பெயரால் தோன்றிய சோமவாரத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று சந்திரன் சிவபெருமானை வேண்டிக் கொள்ள சிவபெருமான் அவ்வாறே அருள் புரிந்தார். அதன் காரணமாகவே கார்த்திகை மாதத் திங்கள் கிழமை சோமவாரம் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமுதலிங்கேஸ்வரருக்கும் அமுதவல்லியம்மனுக்கும் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.   இவ்வழிபாடு மாலை ஐந்து மணிக்கு நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடக்கும். சுத்த அன்னம், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும். 

கடைசி சோமவாரம் புளியம்பட்டி சி. மு. ஆவுடையம்மாள் கட்டளையாலும், பிற சோமவாரங்கள் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறையாலும் நடத்தப்படும்.



<span style="font-size:11pt;font-family:Arial,san

kanmani tamil

unread,
Sep 2, 2024, 1:40:03 AM9/2/24
to vallamai

திருக்கார்த்திகை 


கார்த்திகைத் திங்களில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளன்று திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பெறும். இது சிவபெருமானுக்கும் முருகனுக்கும் சிறப்பு நாளாக அமைகிறது. 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் முத்துக்குமாரசாமி சந்நிதியில் இரவு ஒன்பது மணிக்கு இவ்விழா கொண்டாடப்பெறும். உற்சவமூர்த்தி முருகனை அலங்கரித்து மயில் வாகனத்தில் எழுந்தருளச் செய்து கலாமண்டபத்தில் காட்சி தரச் செய்வர். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகம் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். சோடச பூசை மூலவருக்கும், உற்சவமூர்த்திக்கும் நடைபெறும்.

கோயில் முழுவதும் தீபங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். இரவில் முருகன் புகழ் பாடும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறும். 

இந்நாளில் சொக்கப்பனை கொளுத்துகிறார்கள். சிவபெருமான் ஜோதிவடிவமாக எழுந்தருளிய நாள் கார்த்திகை நாளாகும். சிவனின் அடிமுடியைத் திருமாலும் பிரம்மாவும் தேடிய வரலாற்றை உணர்த்தும் விழாவாகும். சிவன் ஜோதிவடிவாய்த் தோன்றியதை நினைவு படுத்தவே சொக்கப்பனை கொளுத்துவதாகச் சொல்கின்றனர்.  

பனைமரத்தை வெட்டி நடுவில் வைத்துச் சுற்றிலும் பனை மடலை வெட்டிக் கட்டி வைத்துக் கொளுத்துவதனாலும், சொக்கனாகிய சிவபெருமானைக் குறித்து இதைச் செய்வதினாலும் சொக்கப்பனை என்று பெயர் வந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. 

பனைமரத் துண்டுகளைக் கொண்டு வந்து அடுக்கி வைத்து, அவற்றின் மேல் தேவையற்ற பொருட்களையெல்லாம் போட்டுக் கொளுத்துவர். மிகப் பெரிதாக விளங்கும் தீப ஒளி கண்டு மக்கள் களிப்படைவர்.

 

மார்கழித் திங்கள் - தனுர் மாதபூசை 


   மார்கழித் திங்கள் முப்பது நாளும் அதிகாலையில் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நடைபெறும் பூசை தனுர் மாதபூசை எனப்படும். தேவர்களுக்குத் தைத்திங்கள் முதல் ஆனித் திங்கள் வரை பகல்பொழுது  என்றும் ஆடித் திங்கள் முதல் மார்கழித் திங்கள் வரை இரவுப் பொழுது என்றும் வேதங்கள் கூறுகின்றன. இவ்வகையில் மார்கழித் திங்கள் தேவர்களுக்கு விடியற்காலைப் பொழுதுமாகும். அந்தத் திங்களில் விடியற்காலைப் பொழுதில் தேவர்கள் ஆகாய மார்க்கத்தில் உலா வரும் காலையில் ஆண்டவனைத் தரிசனம் செய்வது சிறப்பாகும். எனவே இப்பூசை அதிகாலையில் நடைபெறும்.

மார்கழித் திங்கள் முப்பது நாளும் கோயில் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். நாள்தோறும் சூரியஉதயத்திற்கு முன்பே அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள எல்லா மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறும். ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும் நாள்தோறும் ஓதப்படும்.

இத்திங்களில் வரும் வைகுண்ட ஏகாதசியும், ஆருத்ரா தரிசனமும் முறையே ஏகாதசி, நடராஜர் அபிஷேகங்கள் பற்றிய தலைப்புகளில் விளக்கமாக இடம் பெற்றுள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லா மக்களும் அதிகாலையில் நீராடி கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டு இறையருள் பெற்றுத் திரும்புவர். விடியற்காலைப் பொழுதில் கோயில் கலகலப்பாகத் திகழ்வது இம்மாதத்தில் தான். குளிரைப் பொருட்படுத்தாது இறைமை உணர்வுடனும் ஆழ்ந்த பக்தியுடனும் மக்கள் விளங்க அதிகாலை வழிபாடு தூண்டுகோலாக அமைகிறது.

   

அஷ்டமி பிரதட்சணம் - மார்கழித் திங்கள்

 

பொதுவாகவே மக்கள் ‘அட்டமி நவமி தொட்டது துலங்காது’ என்று எச்சுப காரியத்தையும் தொடங்குவதற்கு விரும்பமாட்டார்கள். நன்னாளாகக்   கருத மாட்டார்கள். ஆனால் இத்திங்களில் வளர்பிறையில் வருகின்ற அட்டமி நாளையும் மிகச் சிறப்புடையதாகக் கருதி விழா எடுக்கின்றனர். மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறான். இஃது இறைவனுக்கு எந்நாளும் உகந்ததே என்பதை உணர்த்துகிறது. 

இறைவன் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் படி அளக்கும் நாளாகக் கொண்டாடப் பெறுவது இத்திருநாள். இது அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் நடைபெறும் திருநாளாகும். அமுதலிங்கேஸ்வரருக்கு காலை ஆறு மணிக்கு அபிஷேக ஆராதனை நடத்தப் பெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். சுத்தஅன்னம், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாக அமையும். சோடச தீபாராதனை காட்டுவர். பின்னர் உற்சவமூர்த்திகளாகிய அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மனை அலங்கரித்து ரிஷபவாகனத்தில் எழுந்தருளச் செய்து கோயில் வெளிப்பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வரச் செய்வர். அவ்வாறு சுற்றி வரும் பொழுது எல்லா உயிரினங்களுக்கும் உணவிடுவதாக வழியெல்லாம் தானியங்களை இறைத்துக் கொண்டே வருவர்

திருவீதிப் புறப்பாடு இல்லாத காரணத்தால் இம்முறையில் இறைவனை உலா வரச் செய்கின்றனர். பிரதோஷ நாளில் உட்பிரகார உலாவும், அஷ்டமி பிரதட்சண நாளில் வெளிப்பிரகார உலாவும் குறிப்பிடத்தக்கனவாம். மக்கள் பலரும் இறைவனின் உலாவில் பங்கு கொண்டு இறையருளைப் பெறுகின்றனர்.

 

 மாணிக்கவாசகர் காப்பு

 

மார்கழித் திங்களில் நடைபெறும் விழாக்களில் இதுவும் ஒன்றாகும். இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளுக்குப் பத்து நாட்கள் முன்னதாகக் காப்புக் கட்டித் தொடங்கப் பெற்றுத் திருவாதிரை நாளுடன் முடிவடையும்.

சைவசமய குரவருள் ஒருவரான மாணிக்கவாசகருக்குச் சிறப்புச் செய்யும் திருநாளாகும். மார்கழி மாதம் நாள்தோறும் திருப்பள்ளியெழுச்சியும், திருவெம்பாவையும் பாடப்பெறுவதால் இவற்றை இயற்றியவருக்குச் சிறப்புச் செய்யும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்பெறுவதாகத் தகவலாளர்கள் கூறுகின்றனர். 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜர் சந்நிதியில் இவ்விழா நடைபெறும். உற்சவமூர்த்தியாகிய மாணிக்கவாசகரை நடராஜப் பெருமான் முன் வைத்து ஆராதனை நடைபெறும். அதன் பின்னர் உற்சவமூர்த்தியைப் பல்லக்கில் வைத்துக் கோயிலுக்குள் மூன்று முறை சுற்றி எடுத்து வருவர். மீண்டும் நடராஜர் முன் வைத்து தீபாராதனை காட்டுவர். திருவாதிரையன்று நடராஜருக்கும் அபிஷேக ஆராதனை நடத்திய பின்னர் மாணிக்கவாசகருக்கும் தீபாராதனை காட்டி விழாவினை முடிப்பர். காப்புத் திருநாளன்றும், திருவாதிரைத் திருநாளன்றும் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். சோடச பூசை நடைபெறும். சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். பிற நாட்களில் குட தீபாராதனை மட்டும் நடைபெறும்.

 

தைத்திங்கள் - தைப்பூசம்

 

தைத்திங்களில் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழாவாகும் இது.

பூச நட்சத்திரம் பௌர்ணமியன்று சேரும் நாள் சிறப்பான நாளாகும். அந்நாளைச் சிறந்த நாளாகக் கொண்டு இறைவனை வழிபடுகின்றனர். 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள பழனியாண்டவர் சந்நிதியில் கொண்டாடப்பெறும் இவ்விழாவில் மாலை ஏழு மணிக்குச் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பெறும். பழனியாண்டவருக்குப் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் ஆகிய பொருட்கள் நைவேத்யப் பொருள்களாகும். 

அருப்புக்கோட்டை பர.பெரிய கருப்பாயி அம்மாள் கட்டளையால் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

 

மாசித் திங்கள் - மகா சிவராத்திரி

 

மாசித் திங்கள் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி கொண்டாடப்பெறுகிறது. 

சிவராத்திரி என்ற சொல்லுக்கு சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை வழிபடும் ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல பொருள் உரைத்து சிவமான ராத்திரி என்பதற்குச் சிறப்பிடம் கொடுத்து சிவராத்திரி கொண்டாடுவதன் நோக்கத்தை வெளிப்படுத்துவர். ஒரு சமயம் உமா தேவி விளையாட்டாக ஈஸ்வரனது கண்களை அவருக்குப் பின்புறமாக வந்து பொத்திவிட எங்கும் பேரிருள் பரவுகிறது. இந்நிலையில் தேவர்கள் சிவபூஜை செய்த இரவே சிவராத்திரி என்றும் ஆன்றோர் கூறுவர். சிவபெருமான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள் என்றும், புனர் உற்பவத்திற்காகத் தேவி பூசை செய்த நாள் என்றும் இவ்விழா கொண்டாடுவதற்குப் பல காரணங்கள்


kanmani tamil

unread,
Sep 3, 2024, 9:50:20 AM9/3/24
to vallamai

கூறப்படுகின்றன. இவ்வாறு விளக்கினாலும் சிவபூசையினை ஏற்றுக் கொள்வதற்காக சிவபெருமான் அமைந்து நின்ற நாள் என்றே கூறலாம்.  

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமுதலிங்கேஸ்வரருக்கும் அமுதவல்லியம்மனுக்கும் உரிய சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்படும். ஐந்து அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக  நடைபெறும். இரவு பத்து மணி, பன்னிரண்டு மணி, இரண்டு மணி, விடியற்காலை நான்கு மணி, ஐந்து மணி ஆகிய காலங்களில் சிறப்புப்பூசை நடத்தப்படும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். ஒவ்வொரு முறையும் தேங்காய் பழத்துடன் நைவேத்யம் செய்யப்பெறும். விடியற்காலையில் நடைபெறும் இறுதி வழிபாட்டில் பாலாடை நைவேத்யம் செய்யப்பெறும். 

அருப்புக்கோட்டை மு. மு.முத்துச்சாமி நாடார், பெ.சி.வ.பெ.பெருமாள் நாடார் ஆகிய இவ்இருவர் சேர்ந்து அமைத்த கட்டளையால் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. 

இன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மக்கள் பெருந்திரளாக வந்திருந்து வழிபாடுகளில் கலந்து கொண்டு சிவபூசையின் சிறப்பைப் பெற்றுச் செல்வர்.

 

மாசிமகம்

 

மாசித்திங்களில் மிகவும் சிறந்த நாளாகக் கருதப்படும் பௌர்ணமி மகநட்சத்திரத்தில் வரும் நாளன்று இவ்விழா கொண்டாடப்பெறும்.

இவ்விழாவன்று மக்கள் கடலாடி இறைவனை வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. கடல் இல்லாத இடத்தும் மக்கள் நீராடிவிட்டு இறைவனைக் கோயிலில் வந்து வழிபட்டுச் செல்வர். 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள முத்துக்குமாரசாமிக்கும், பழனியாண்டவருக்கும் இந்நாளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவு ஏழு மணிக்கு பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும்.

மக்கள் பலர் வந்து வழிபாட்டில் கலந்து கொண்டு இறையருள் பெற்றுத் திரும்புவர்.

 

சங்கடசதுர்த்தி

 

மாசித் திங்கள் அமரபட்சத்தில் செவ்வாய்க்கிழமை கூடிய சதுர்த்தியில் இவ்விழா கொண்டாடப்படும். 

அங்காரகனுக்குப் பெருமாள் காட்சி தந்த செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தியாதலால் செவ்வாய்க்கிழமையில் வரும் சதுர்த்தி மிகச் சிறப்பானதாகும். மற்ற நாட்களில் வரும் சதுர்த்தியை விட அது பெருமாளுக்குச் சிறப்பாகவும், சங்கடங்களைப் போக்க வல்லதுமாக இருப்பதாலும்  சங்கட சதுர்த்தி எனப் பெயர் பெற்றுக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள அனவரத செல்வ விநாயகருக்கு இவ்விழா கொண்டாடப்படுகிறது. இரவு ஒன்பது மணிக்கு வழிபாடு நடக்கும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப் பெற்ற நைவேத்யப் பொருள்களைப் போலவே கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள், முதலியன வைத்து நைவேத்தியம் செய்யப்பெறும். அலங்கார தீபம், கும்பம், குடதீபம் மட்டுமே காட்டப்பெறும். 

மக்கள் பலர் கோயிலுக்கு வந்து விநாயகர் வழிபாட்டில் கலந்து கொண்டு விநாயகரின் அருட்பிரசாதம் பெற்றுக் களிப்புடன் வீடு திரும்புவர்.

 

பங்குனித் திங்கள் பங்குனி உத்திரம் 


பங்குனித் திங்கள் பௌர்ணமியன்று உத்திரத் திருநாள் கொண்டாடப்படுகிறது. 

சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது என்பர். அம்பிகைக்கும் இறைவனுக்கும் திருமணம் நடந்த நாள் இந்நாளாகும்.  அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள பழனியாண்டவர் சந்நிதியில் உத்திரத் திருநாள் கொண்டாடப்படும். இரவு ஏழு மணிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். சோடச பூசை நடைபெறும். 

இந்நாளில் நடைபெறும் இவ்விழாவில் மக்கள் பலர் கலந்து கொண்டு இறைவனை வழிபடுவர்.


நடராஜர் அபிஷேகங்கள் 


ஒவ்வொரு ஆண்டும் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேக ஆராதனை நடைபெறும். சித்திரைமாதத் திருவோண நட்சத்திரத்தன்றும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்றும்; ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூர்வபட்ச சதுர்த்தியன்றும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆனி மாதம், மார்கழி மாதம் ஆகிய இரு மாதங்களில் காலை மூன்றரை மணிக்கும்; பிறமாதங்களில் காலை பத்தரை மணிக்கும் இவ்வழிபாடு நடைபெறும்.

 

திருவாதிரை

 

பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் சிற்சபையில் தன் நடனத்தை ஆடிக் காட்டினார் சிவபெருமான். இதனைக் கொண்டாடுவதே திருவாதிரையாகும். இவ்விழாவை ஆருத்ரா தரிசனம் என்றும் வழங்குவர். இந்நாளைக் கொண்டாடுவதற்கான சிவபெருமானின் சிறப்பு உணர்த்தும் கதை ஒன்று ஆன்றோர் கூறுவர். 

தாருகா வனத்திலுள்ள முனிவர்கள், கர்ம மார்க்கமே சிறந்தது; கர்மாவே மனிதர்களுக்குப் பலனை அளிப்பதால் ஈஸ்வரன் ஒருவன் தேவை இல்லை என்ற நாத்திக வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் பக்தி மார்க்கத்தை அறிவுறுத்த சிவபெருமான் பிச்சாண்டவராகவும் மகாவிஷ்ணு மோகினியாகவும் வந்து பிச்சை கேட்டனர். இறைவனுடைய சுந்தரக் கோலத்தில் மயங்கிய ரிஷி பத்தினிகள் அவர் பின்னே சென்றனர். கோபம் கொண்ட ரிஷிகள் அவரைக் கொல்ல யானையை அனுப்பினர். அதைக் கொன்றார். பிறகு பூதத்தை அனுப்பினர். அதைக் காலில் கீழே போட்டு மிதித்தார். பிறகு உடுக்கை, மான், தீ, பாம்பு ஆகியவற்றை அனுப்பினர். அவற்றை ஆபரணங்களாகக் கொண்டு நர்த்தனம் செய்தார். அதைக் கண்டு ஆனந்தம் அடைந்த ரிஷிகள் உண்மையை உணர்ந்து சிவபக்தர் ஆனார்கள். அந்த நாளே ஆருத்ரா தரிசனமாகும். 

ஆண்டில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களிலும் சிறப்பான வழிபாடு நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் ஆகியன நைவேத்யப் பொருள்களாக அமையும். சோடச தீபாராதனை நடத்துவர். ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு நாட்களின் நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மா.வே.சண்முகவேல் நாடார் அன் சன்ஸ் அவர்களது கட்டளையாலும், பிற நான்கு நாட்களில் நடைபெறும் அபிஷேகங்கள் காய்கறித் தரப்பினர் கட்டளையாலும் நடைபெறும். 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் இடம் கொண்ட நடராஜரின் தோற்றம் மதுரை வெள்ளியம்பலத்தில் இருப்பது போல் வலது காலைத் தூக்கி நின்றாடும் தோற்றமாக விளங்குவதும், இச்சந்நிதியில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களும் சிதம்பரம் நடராஜர் கோ‌யிலில் நடைபெறும் அபிஷேகங்களோடு ஒத்திருப்பதும் குறிப்பிடத்தக்கனவாம். திருவாதிரையன்று விரதமிருத்தலைப் பொதுவாகக் கூறினும் மார்கழி மாதத் திருவாதிரை மிகச் சிறப்பாகக் கருதப்படுவதால் மக்கள் பெரும்பான்மையோர் விரதம் இருந்து கோயிலுக்கு வந்து நடராஜரின் ஆடும் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து திரும்புவர்.

   

சூரிய பூசை

 

புரட்டாசித் திங்கள் ஏழு, எட்டு, ஒன்பது தேதிகளிலும், பங்குனித் திங்கள் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்தாம் தேதிகளிலும் சூரிய பூசை நடைபெறும். இந்நாட்களில் சூரிய ஒளியானது காலை ஆறு மணியளவில் சிவலிங்கத்தின் மீது விழும். அப்பொழுது வழிபாடு நடக்கும். 

உத்தராயன தட்சினாயன காலங்களில் சூரியன் தனது சாயைகளுடன் சிவனை வழிபட்டதாக ஆன்றோர் கூறுவர். எனவே அக்காலங்களில் சூரிய பூசை நடைபெறுகிறது. 

சூரியபூசை காலை ஆறுமணிக்கு நிகழும். அப்பொழுது அமுத லிங்கேஸ்வரர் மீது சூரியஒளி படும். சுத்தஅன்னம், பழம் வைத்து நைவேத்யம் செய்து தீபாராதனை காட்டுவர். 

இக்காட்சியைக் கண்டு களிக்க மக்கள் வருவர். சூரிய பூசை வழிபாட்டில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டுத் திரும்புவர்.

kanmani tamil

unread,
Sep 5, 2024, 7:42:23 AM9/5/24
to vallamai

பிற நிகழ்ச்சிகள்  


வாழவந்தம்மன் சந்நிதி

 

பங்குனித் திங்களில் வாழவந்தம்மன் சந்நிதியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அருப்புக்கோட்டையிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் பொங்கல் விழா கொண்டாடப்பெறும். அப்பொழுது அக்கினிச்சட்டி எடுத்தல் சிறப்பாக நடைபெறும். அக்கினிச்சட்டி எடுக்கும் நாளில் அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் இச்சந்நிதியில் தான் தீ வளர்த்துக் கொண்டு செல்வர். அந்நாளில் இச்சந்நிதி விழாக்கோலம் பூண்டிருக்கும். மஞ்சள் நீராட்டி அலங்கரித்து சூட தீபாராதனை காட்டுவர்.

 

அனுமன் சந்நிதி 


கோயிலின் வெளிப்பிரகாரத்திலுள்ள அநுமன் சந்நிதியில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இவ் வழிபாட்டிற்குத் தனிப்பட்ட கட்டளைதாரர்கள் இல்லை. அனுமன் பக்தர்கள் கொண்டு வரும் பால், தயிர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். 

ஏகாதசி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, அஷ்டமிபிரதட்சணம், மாணிக்கவாசகர் காப்பு, மாசிமகம், பங்குனிஉத்திரம் ஆகிய விழாக்கள் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறையில் நடத்தப் பெறுகின்றன. 

கோயிலில் நடைபெறும் விழாநிகழ்ச்சிகளை முன்கூட்டியே கோயிலில் உள்ள விளம்பரப் பலகையில் அறிவித்து விடுகிறார்கள். எனவே மக்கள் பலரும் குறிப்பிட்ட காலங்களில் வந்து இறைவழிபாட்டில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். 

அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் பிரதோஷம், சித்ரா பௌர்ணமி, ஆடித் தபசு, கார்த்திகைமாத சோமவாரங்கள், அஷ்டமிபிரதட்சணம், சிவராத்திரி ஆகிய விழாக்கள் நடைபெறும். 

அமுதவல்லியம்மன் சந்நிதியில் சித்திரா பௌர்ணமி, ஆடித்தபசு, நவராத்திரி, கார்த்திகைமாத சோமவாரங்கள், சிவராத்திரி ஆகிய விழாக்கள் நடைபெறும். 

வரதராஜப்பெருமாள் சந்நிதியில் ஏகாதசி, திருமஞ்சனசேவை, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் ஆகிய விழாக்கள் நடைபெறும்.

அனவரத செல்வ விநாயகர் சந்நிதியில் விநாயகர் சதுர்த்தி, சங்கட சதுர்த்தி ஆகிய விழாக்கள் நடைபெறும். 

முத்துக்குமாரசாமி சந்நிதியில் மாதாந்திர கார்த்திகை நட்சத்திர நாட்கள், வைகாசி விசாகம், விஜயதசமி, திருக்கார்த்திகை, மாசிமகம் ஆகிய நாட்களில் விழாக்கள் நடைபெறும்.    

நடராஜர் சந்நிதியில் ஆறு அபிஷேகங்கள் ஓர் ஆண்டில் நடைபெறும். 

பழனியாண்டவர் சந்நிதியில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், மாசிமகம். பங்குனிஉத்திரம் ஆகிய விழாக்கள் நடைபெறும். 

தீபாவளித் திருநாள் எல்லா மூர்த்திகளுக்கும் கொண்டாடப்பெறும் சிறப்பு விழாவாக உள்ளது.

 

முத்து மாரியம்மன் கோயில்

 

முத்து மாரியம்மன் கோயிலில் நவராத்திரி, திருக்கார்த்திகை, தெப்பத் திருவிழா, திருவாதிரை ஆகிய விழாக்கள் நடைபெறும்.

 

நவராத்திரி

 

இவ்விழா கொண்டாடப்படும் நாளும், காரணமும் முன்பே விளக்கப் பட்டுள்ளன. 

இக்கோயிலில் நவராத்திரி கொண்டாடப்பெறும் ஒன்பது நாட்களிலும் உற்சவமூர்த்தி அம்மனை விதவிதமாக அலங்கரித்து மகாமண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து மக்கட்குக் காட்சி வழங்கச் செய்வர். அலங்கார வரிசை வருமாறு: 

1)உட்கார்ந்த கோலம்

2)வீணையுடன் அமர்ந்த கோலம் 

3)ஒரு காலை மடக்கிப் போட்டுச் சயன கோலம் 

4)சம்மணம் போட்டு உட்கார்ந்த கோலம் 

5)செங்கோல் கொண்டு அமர்ந்த கோலம் 

6)சரஸ்வதி போல வீணையுடன் இருக்கும் கோலம் 

7)உட்கார்ந்த கோலம் 

8)துர்க்கை சூரனைச் சம்ஹாரம் செய்யும் கோலம் 

9)அம்மன் சிவபூஜை செய்யும் கோலம் 

ஒவ்வொரு நாளும் பீடநிலையில் இருக்கும் மூலவருக்கு இரவில் எட்டு மணிக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறும். பால், எண்ணெய், தயிர், மஞ்சள்காப்பு அபிஷேகம் நடக்கும். பின்னர் அம்மன் வடிவத்தோடு கூடிய திருவாச்சி வைக்கப்பெற்று ஆராதனை நடைபெறும். சாம்பிராணிப் புகை ஊட்டி சூட தீபாராதனை காட்டப்படும். நைவேத்தியப்பொருள் வெண்பொங்கல் ஆகும். குங்கும அர்ச்சனை செய்யப்பட்டுத் தேங்காய் உடைக்கப்படும். இதனை அடுத்து உற்சவமூர்த்திக்குச் சாம்பிராணிப் புகை ஊட்டி சூடதீபாராதனை காட்டப்படும். அடுத்து உட்பிரகாரத்தில் உள்ள தெய்வங்களுக்குத் தீபாராதனை காட்டியபின் கொடிமரம், பலிபீடத்திற்குத் தீபாராதனை காட்டிவிட்டு மீண்டும் மூலவருக்குத் தீபாராதனை காட்டி வழிபாட்டை முடிப்பர். 

பொம்மைகள் கொண்டு பெரிய அளவில் கொலு வைக்கப்பட்டிருக்கும். இவ்அம்மன் கோயிலில் வழிபாடு நடந்த பின்னர் தான் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடைபெறும். அதிகமான மக்கள் நாள்தோறும் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு அருள் பெற்றுச் செல்வர்.

 

திருக்கார்த்திகை 


இவ்விழா கொண்டாடப்பெறும் நாளும், காரணமும் முன்பே விளக்கப் பட்டுள்ளன. 

கார்த்திகை மாதம் கார்த்திகைத் திருநாளன்று உற்சவமூர்த்தி அம்மனை அலங்காரம் செய்து முன்மண்டபத்து ஊஞ்சலில் எழுந்தருளச் செய்வர். அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருப்பாள். மூலவருக்குப் பால், தயிர், எண்ணெய், மஞ்சள்காப்பு அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் வைத்து நைவேத்யம் செய்யப்படும். கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு அலங்கரிக்கப்படும். 

மக்கள் பலர் புத்தாடை பூண்டு திரளாக வந்து அம்மனை வழிபடுவர். தங்கள் மனக்குறைகளை நீக்க வேண்டிக்கொண்டு அம்மன் அருள் பிரசாதத்துடன் வீடு திரும்புவர்.

 

தெப்பத் திருவிழா

 

முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெறும் தனிச்சிறப்பு மிக்க விழாவாகும் இத்திருவிழா. திருக்கார்த்திகைத்  திருநாளன்று நடைபெறும். கோயிலுக்கு அருகில் உள்ள நாடார் சமூகத்திற்கு உரிமை உடைய தெப்பத்தில் இவ்விழா நடத்தப் பெறும். 

சுமார் நாற்பது பேரல்களைக் கயிற்றால் கட்டி நீரில் மிதக்க விடுவர். இது மண்டபம் போல் அமைக்கப்படும். இதன்மேல் சப்பரம் செய்து நிறுத்தி மாரியம்மனை எழுந்தருளச் செய்வர். சப்பரத்தைக் கயிற்றால் கட்டி நீருக்குள்ளேயே இழுத்து வருவர். நான்கு திசைகளிலும் இருக்கும் படிகளின் முன் சப்பரத்தை நிறுத்தி தீபாராதனை நடத்துவர்.  இவ்வண்ணம் தெப்பத்திற்குள் மூன்று முறை அம்மனை வலம் வரச் செய்வர். இரவு ஏழு மணி அளவில் தொடங்கப் பெற்று நடு இரவு ஒரு மணி வரை விழா நடக்கும். 

தெப்பத்தில் நீர் இல்லாத போது இவ்விழா நடைபெறாது. ஊர் மக்கள் அனைவரும் கூடி தெப்பத்தைச் சுற்றி நின்று அம்மன் தரிசனம் கண்டு ஆனந்திப்பர். 


திருவாதிரை

 

இவ்விழா நிகழும் நாளும் காரணமும் முன்பே விளக்கப்பட்டுள்ளன. 

முத்து மாரியம்மன் கோயிலில் இவ்விழா காலை ஆறு மணிக்கு நடைபெறும். பால், எண்ணெய், மஞ்சள்காப்பு ஆகியவற்றால் அபிஷேகம் நிகழ்த்துவர். சாம்பிராணிப்புகை ஊட்டி, குங்கும அர்ச்சனை செய்து சூட தீபாராதனை காட்டுவர். நைவேத்தியப்பொருள் களியாகும். மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்திய பின்னர் உட்பிரகாரத் தெய்வங்களுக்குச் சூட தீபாராதனை காட்டப்பெறும். 

மக்கள் பலரும் காலையிலேயே தூய்மையாகக் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்வர். இக்கோயிலில் நடைபெறும் இவ் விழாக்களுக்குக் கட்டளைதாரர்கள் இல்லை.

 

வாலசுப்பிரமணியர் கோயில்

 

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியசாமிக்கு வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனிஉத்திரம் ஆகிய நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பெறும்.

kanmani tamil

unread,
Sep 6, 2024, 4:33:44 AM9/6/24
to vallamai

வைகாசிவிசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனிஉத்திரம்

 

இவ்விழாக்கள் கொண்டாடப்படும் நாட்களும், காரணமும் முன்பே விளக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் விழாக்கள் ஓரளவு சிறப்புடையனவாகவே கொண்டாடப்படுகின்றன. இவ்விழா நாட்களில் சுப்பிரமணியருக்குப் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். சூட தீபாராதனை காட்டப்படும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாக அமையும். அபிஷேக ஆராதனைகள் இரவு ஏழு மணிக்கு நடைபெறும். 

திருக்கார்த்திகைத் திருநாள் மட்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். கோயில் சிறிய அளவுடையதாக இருப்பினும் லட்ச தீபம் ஏற்றுவதாகக் கொண்டு பெரும் அளவில் விளக்கேற்றி வைத்திருப்பர். மக்கள் மிகுதியாக வந்திருந்து முருகனை வழிபட்டு விட்டுத் தீப வரிசையைக் கண்டு மகிழ்ந்து வீடு திரும்புவர். 

இக்கோயிலில் எழுந்தருளி உள்ள விநாயகருக்கு இரு விழாக்கள் நடைபெறும். அவை விநாயகர் சதுர்த்தியும், சங்கடசதுர்த்தியும் ஆகும். இவ்விரு விழாக்களும் கொண்டாடப்படும் நாட்களும், காரணமும் முன்பே விளக்கப்பட்டுள்ளன.

 

விநாயகர் சதுர்த்தி


விநாயகருக்கு இரவு ஏழு மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். சூட தீபாராதனை காட்டப்படும். கொழுக்கட்டை, சுண்டல், தேங்காய், பழங்கள் நைவேத்தியப் பொருள்களாக அமையும்.

 

சங்கடசதுர்த்தி

 

விநாயகர் சதுர்த்தியன்று நடைபெற்றது போலவே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இக்கோயில் தற்பொழுது தான் வளர்ச்சி அடைந்து வருவதால் விழாக்கள் பெரிய அளவில் எடுத்துச் செய்யப் பெறவில்லை. சிறிது சிறிதாக விழா நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெறத் தொடங்கி உ‌ள்ளன. இக்கோயிலுக்கும் விழா நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தக் கட்டளைதாரர்கள் இல்லை.

 

சந்திவீரசாமி கோயில்: பொங்கல் விழா

 

இக்கோயிலில் ஒரே ஒரு விழா மட்டும் நடைபெறுகிறது. இதனைப் பொங்கல் விழா என்பர். இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும் இது. தைமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல்விழா கொண்டாடுவர். இதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டிக் கொடி ஏற்றுவர். இந்த ஒரு வாரமும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறா. ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்கள் விழா நடைபெறும்.

நாடார் இனத்தாருள் ஒரு சிறு குழுவினரான பூசாரி வகையறாவினரின் குலதெய்வம் சந்திவீரசாமி ஆகும். இக்கோயிலைச் சரிவர நிர்வகிக்க முடியாத காரணத்தால் நிர்வாகப் பொறுப்பை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்  முறையிடம் தந்துவிட்டு வழிபாடு இயற்றும் உரிமையைத் தாங்களே வைத்துக் கொண்டுள்ளனர். தைமாதம் கொண்டாடப் பெறும் பொங்கல் விழாவிற்கு உறவின்முறை ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விடும்.       

இக்கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இக்கோயிலைச் சார்ந்தனவாம். ஞாயிற்றுக்கிழமையன்று அக்கடைகளை எல்லாம் மூடச் செய்து கடைகளின் முன் இரண்டிரண்டு பீடம் அமைப்பர். கோயிலின் முன் அமைக்கப்படும் பீடம் சற்றுப் பெரியதாக இருக்கும். குயவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த மண்ணால் இப்பீடங்கள் அமைக்கப்படும். பீடங்களுக்கு வெள்ளை அடித்துச் செம்மண் பூசி மஞ்சள், குங்குமம், மலர் வைத்து அலங்காரம் செய்வர். கோயில் முன் உள்ள பீடத்திற்குக் கரும்புகளால் பந்தல் போடப்படும். பீடங்களின் முன் கிளியஞ்சட்டியில் விளக்கேற்றி வைப்பர்.  

கோயிலுக்கு அருகில் கோயில்வீடு என்று ஒன்று உண்டு. சந்திவீர சாமியைக் குலதெய்வமாகக் கொண்டாடும் மக்கள் இவ்வீட்டில் வந்து தங்கி இருப்பர். இவ்வீட்டிற்கும் வெள்ளை அடித்துச் செம்மண் பூசி மாவிலையால் ஹோமியம் தெளித்துச் சுத்தம் செய்வர். இவ் வீட்டிற்குள் பூசை அறை ஒன்று உண்டு. இவ்வறையில் வழிபாட்டிற்கு உரிய பொருட்கள் ஒரு மரப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். கரகச்செம்பு, பொங்கல்பானை, மணி, போன்ற சாமான்களும், ஈட்டி, சிலம்பு, இரும்பாலான பழங்கால வழிபாட்டுப் பொருட்களும் உள்ளே இருக்கும். அவை இப்பொழுது சிதைவுற்ற நிலையில் உள்ளன. 

உறவின்முறைக் காரியஸ்தர்கள் மேளத்துடன் வந்து இவர்களை அழைப்பர். விழாச் செலவிற்கான தொகையைக் கொடுப்பர். உறவின் முறையினர் வந்தவுடன் பூஜை அறைக்குள் பூஜை செய்பவரை மட்டும் அழைத்து அங்குள்ள பூஜைப் பெட்டிக்குச் சூட தீபாராதனை காட்டி எல்லாச் சாமான்களையும் வெளியே எடுத்து வருவர். இவற்றை ஊர்வலமாகக் கோயிலுக்கு எடுத்துச் சென்று சாமி முன்னர் வைப்பர். சில சாமான்களை ஒவ்வொன்றாக ஒவ்வொரு பீடத்தின் முன் வைப்பர். 

பூசாரி வகையறாவில் பிறந்த பதினைந்து வயதிற்குட்பட்ட இரு சிறுவர்களைச் சிங்காரத் தோப்பில் குளித்து விட்டுக் கரகச் செம்பில் நீர் கொண்டு வரச் செய்வர். கரகச் செம்பில் தேங்காய் வைத்து, மாவிலைகள் செருகி மலர் வைத்து வழிபாடு செய்து சிறுவர்களுக்குத் திருநீறு பூசி எடுத்துக் கொடுப்பர். கரகம் கொண்டு வரும் பொழுது விநாயகர் கோயில், ஏனாதிநாத நாயனார் திருமடம், மாரியம்மன் கோயில் முன் உள்ள பரந்த வெளி, பேட்டை போன்ற இடங்களில் நிறுத்திக் குலவை போட்டு ஆடச் செய்து கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு வருவர். 

பின்னர் சந்திவீரசாமிக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பிப்பர். சிறுவர்கள் கொண்டு வந்த கரகச்செம்பு நீரால் முழுக்காட்டிய பின் முறையே எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் இவற்றால் அபிஷேகம் செய்யப்படும். சாமிக்கு வேட்டி, துண்டு கட்டி அலங்கரிப்பர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சட்டத்தினைச் சாமிக்குப் பின் வைத்து அழகு படுத்துவர்.

சாமிக்கு இவ்வாறு அலங்காரம் செய்யும் பொழுதில் உறவின்முறையில்  இருந்து வெண்பொங்கல் வைக்கப்படும். கம்புக்குடி வகையறா என்பவர் மட்டும் தங்கட்குரிய ஒரு பீடத்தின் முன் சர்க்கரைப் பொங்கல் வைப்பர். 

வெண்பொங்கலைத் தலைவாழை இலை போட்டு அனைத்துப் பீடம் முன்னும் படைப்பர். பீடங்களின் முன் இரு கலயங்களை வைத்து ஒன்றில் கரகச் செம்பு நீரையும், மற்றொன்றில் பானக்காரமும் ஊற்றி வைப்பர். சந்திவீர சாமிக்கு அலங்காரம் முடிந்த பின் தீபாராதனைகள் செய்வர். அடுத்து அனைத்துப் பீடங்களுக்கும் தீபாராதனை காட்டுவர். முடிவில் மீண்டும் சந்திவீர சாமிக்குத் தீபாராதனை காட்டி வழிபாட்டினை முடிப்பர். வழிபாடு முடிய அதிகாலை ஐந்துமணி ஆகிவிடும்.

தைமாதம் முதல் நாள் வீடுகளில் கட்டிய கூரைப்பூவினை ஒன்று சேர்த்துக் கொண்டு வந்து சொக்கப்பனை கொளுத்துவது இவ்விழாவின் சிறப்புச் செயலாகும். 

வழிபாடு முடிந்தபின் அனைவரும் கோயில் வீட்டிற்குச் சென்றுவிடுவர். உறவின்முறையினர் பொங்கல் பிரசாதத்தை அவர்களுக்கு அங்கு கொண்டு போய்க் கொடுப்பர். 

கோயில்வீட்டிற்கு வந்தபின் உறவின்முறையிலிருந்து கொடுக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட செம்மறிக்கடாவினைப் பலியிட்டுச் சமைப்பர். தட்டைப்பயிற்றுப் பருப்பால் குழம்பு செய்து வெண்பொங்கலுடன் காலை உணவு உட்கொள்வர். கறி உணவு பிற்பகலில் சாப்பிடுவர். கோயில் வீட்டிற்கு வருகின்ற அனைவருக்கும் உணவு பரிமாறுவர். 

மாலையில் மீண்டும் கோயிலுக்குச் செல்வர். ஊர் மக்கள் தேங்காய் பழத்துடன் வழிபாட்டிற்காக வருவர். அவர்களுக்கெல்லாம் தேங்காய் உடைத்துத் தீபம் காட்டுவர்.

திங்கட்கிழமை இரவு தான் உறவின்முறை கொடுத்த தேங்காய், வாழைப்பழம், கரும்பு, பஞ்சாமிர்தம், பூ போன்றவற்றைப் பூசாரி வகையறாவினர் தங்கட்குள் பிரித்துக் கொள்வர். 

இத்திருவிழா நடந்த பின்னர் தான் அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில்களுக்குரிய திருவிழா நாட்கள் குறிக்கப்படும். இக்கோயிலில் இவ்விழா நடைபெறவில்லை என்றால் பங்குனிப்பொங்கல் விழாவும், வைகாசி விசாகத் திருவிழாவும் நடைபெறா. 

இக்கோயில் இறைவனை நாடார் சமூகத்தில் ஒரு பிரிவினர் குலதெய்வமாகக் கொண்டிருப்பதால் இவர்களே மிகுதியாக இவ்விழாவில் பங்கு பெறுவர். நாடார் உறவின்முறையினர் இவ்விழாவை நடத்துவதால் சிறுபான்மை பிற நாடார் மக்களும் பங்கு பெறுவர். அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்து மாரியம்மன் கோயில், வாலசுப்பிரமணியசாமி கோயில் ஆகிய கோயிகளில் நடைபெறும் விழாவில் பிற சமூகத்தினர் பலர் வந்து கலந்து கொள்வர். ஆனால் இக்கோயில் விழாவில் பிற சமூகத்தார் கலந்து கொள்வது கிடையாது.

 

சித்திவிநாயகர் கோயில்

 

இக்கோயிலில் விழாக்கள் எதுவும் சிறப்பாக நடைபெறுவதில்லை.

 

முடிவுரை

 

திருவிழாவன்று அருள் தந்திட இறைவன் விக்கிரகத்தில் சிறப்பாக முனைந்து நிற்கிறான் என்றும், தன்னிடத்தில் இருந்தே தரிசனம் அளித்த இறைவன் வெளியே எழுந்தருளி வந்து தரிசனம் தருகிறான் என்றும் ஆன்றோர் கூறுவதால் மக்கள் பெருந்திரளாக வந்து இறைவனை வழிபடுகின்றனர். திருவிழாக் காண்டலைப் பிறவிப்பயனாகக் கருதி இறைவனை வழிபட்டுப் பயனடைகின்றனர். தாங்கள் பெறும் இன்பத்தையும், பயனையும் உற்றார் உறவினரும் அடைய அவர்களுக்கு விழா நாட்களைத் தெரிவித்து வந்து பயனடையச் செய்கின்றனர்.



 குறிப்புகள்

 

1.S.சந்திரசேகர பட்டர் - “மதுரைத் திருவிழாக்கள்” -  திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர் - மதுரைத் திருக்கோயில் - 1974 - அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை - ப.107

 

2.  பின்னிணைப்பு - 6

 

3.அ.காசி - மாரியைப் பணிகுவம் - ப.3


4. பின்னிணைப்பு - 7

 

5. பின்னிணைப்பு - 8


6. கார்த்திகேயன் - விநாயகர் புராணம் - ப.107

kanmani tamil

unread,
Sep 7, 2024, 12:47:31 AM9/7/24
to vallamai

கோயில்களும் நாடார் சமூகமும்


1)முன்னுரை

 

            2)நாடார் சமூகத்தாரின் சமயநெறி

 

            3)அமுதலிங்கேஸ்வரர் கோயில் எழுந்த சூழல்

 

            4)திருவிழாக்களும் சமூகமும்

 

            5)கட்டளைதாரர்கள்

 

            6)உறவின்முறையும்  கோயில்களும்

 

            7)நாடார் சமூகத்தினரும் பிற சமூகத்தினரும்

 

            8)ஏனாதிநாதநாயனார் திருமடாலயம்

 

            9)சரபமுத்துச்சாமி  சங்கரலிங்கவிலாஸ் பஜனாலயம்



 

முன்னுரை 

கோயில்கள் சமூகத்தின் பண்பாட்டு விளக்கங்களாக அமைகின்றன. அருப்புக்கோட்டையில் நாடார் சமூகத்தினர் மிகுதியாக வாழ்கின்றனர். நாடார் சமூகத்தாரின் சமயநெறி, அமுதலிங்கேஸ்வரர் கோயில் எழுந்த சூழல், திருவிழாக்களும் சமூகமும், கட்டளைதாரர்கள், உறவின்முறையும் கோயில்களும், நாடார் சமூகத்தினரும் பிற சமூகத்தினரும், ஏனாதிநாத நாயனார் திருமடாலயம், சரபமுத்துச்சாமி சங்கரலிங்கவிலாஸ் பஜனாலயம்  ஆகிய உட்தலைப்புகளில் கோயில்கள் மூலம் அறியப்படும் நாடார் சமூகம் பற்றி இவ்இயல் ஆராய்கின்றது. நாடார் உறவின்முறையால் நிர்வகிக்கப்படும் ஏனாதிநாதநாயனார் திருமடாலயமும், சரபமுத்துச்சாமி சங்கரலிங்கவிலாஸ் பஜனாலயமும் நாடார் சமூகத்தின் சமயப் பற்றை விளக்கும் இடங்களாக அமைகின்றன. எனவே இவையும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.

 

நாடார் சமூகத்தாரின் சமயநெறி

 

நாடார்கள் பொதுவாக இந்து சமயம் சார்ந்தவர்கள்; சிவபக்தர்கள். இவர்களது குலதெய்வம் காளியம்மன் என்று கருதப்படுகிறது. ‘சான்றோர் குலமரபு காத்தல்’ என்ற நூலில் “சான்றோர் குலத்தவர் வசிக்கும் நாடு நகரங்கள் எங்கும் காளிகா தேவியின் ஆலயங்கள் விஸ்தாரமாகப் பார்க்கலாம். காளிகா தேவியானவள் யுத்தத்திற்கும், வெற்றிக்கும், பதினெட்டு ஆயுத வித்தைக்கும் நாயகி ஆனமையால்; அவள் க்ஷத்திரிய குலத்தவர்களுக்கு இன்றியமையாத குலதெய்வமாம். ஆனதால் சான்றோர் குலத்தவர்களுக்குக் காளி புத்திரர் எனப் பெயர் வந்திருக்கிறது என்று கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது” என்று குரு.தேமொழி தம் நூலில் கூறியுள்ளார்1. ஹார்டு கிரேன் என்பவரும் நாடார்கள் பத்திரகாளியின் மைந்தர்கள் ஆவர் என்கிறார்2. குரு.தேமொழி, ஹார்டுகிரேன் ஆகியோரின்   இக்கருத்தை விளக்கப் புராணக்கதை ஒன்று வழங்கிவருகிறது. அக்கதை இவ்ஆய்வேட்டில் முத்துமாரியம்மன் கோயில் தோற்றம் பற்றிக் கூறுகையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நாடார்கள் தோற்றம் பற்றிய பாரம்பரிய வரலாறு பற்றிக் கூறும் பொழுது இக்கதையையே பலரும் கூறுகின்றனர். எனவே நாடார்கள் சிறுதெய்வ வழிபாட்டு நெறியினர் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது. 

நாடார்கள் பொதுநிதியாகிய மகமையைச் சமூக நலனுக்குப் பயன்படுத்த முற்பட்டபோது தங்கள் குலதெய்வத்திற்காகக் கோயில் கட்டுவதைத் தலைமைப் பணியாகக் கொண்டனர். நாடார்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதியின் மத்தியிலும் பெண் தேவதையான பத்ரகாளிக்குரிய அம்மன் கோயில் காணப்படுகிறது. இன்றும் பத்ரகாளியம்மன், காளியம்மன், மாரியம்மன் திருவிழாக்களை நாடார்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அருப்புக்கோட்டை நகரிலும் முத்துமாரியம்மன் என்னும் பெயரில் பத்ரகாளியம்மனுக்குக் கோயில் எழுப்பிச் சிறப்பாக வழிபடுகின்றனர். 

நாடார் சமூகத்தினர் சிறந்த முருகபக்தியும் உடையோராவர். அம்மன் கோயில்களுக்கு அடுத்த படியாக முருகன் கோயில்களை அமைத்துள்ளனர். அருப்புக்கோட்டையிலுள்ள முருகன் கோயிலுக்கு வாலசுப்பிரமணியர் கோயில் என்று பெயர் வழங்குகிறது. 

“1860 ம் ஆண்டிலிருந்து மெதுவாக க்ஷத்திரியர்களின் தகுதி உடையவர்கள் என்று கூறி வந்த நாடார்கள் தங்கள் வாழ்க்கை முறைகளைச் சமஸ்கிருத மயமாக்க முற்பட்டனர்.”3 “பொது வாழ்வில் பொருளாதார வளர்ச்சியுடன் தங்களது பெருமையை ஈடு செய்து கொள்ளும் வண்ணமாக உயர்ந்த குலங்களாகிய பிராமணர்களைப் போன்று அவர்களது பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள்.”4 

“சில நாடார்கள் சைவ உணவுப் பழக்கத்தை மேற்கொண்டனர். தங்கள் சமூகத்தினரிடையே ஆதரவாக இருந்த சமஸ்கிருதப் பெயர் கொண்ட கடவுளர்களின் பெயர்களைச் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டினர். ஆலயப் பிரவேசம் தடை செய்யப்பட்டிருந்த பிரசித்தி பெற்ற கோயில்களுக்குப் பெரும் நன்கொடை கொடுத்தனர். சிவன் கோயில்கள் கட்டினர். கோயில் திருவிழாவிற்கான செலவினங்களை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்களை ஆதரித்தனர். கோயில் வழிபாட்டுச் செலவுகளைச் செய்தனர். நாடார் குல மதச் சடங்குகளை முன்னின்று நடத்தவும், செல்வச் சிறப்புப் பொருந்திய நாடார் ஆலயங்களில் பணிவிடைகள் செய்வதற்கும் பிராமணப் பூசாரிகள் முன்வந்தனர்.”5 இவ்வாறு நாடார் சமூகம் சிறிதுசிறிதாகப் பெருந்தெய்வ வழிபாட்டு நெறியினையும் தழுவ ஆரம்பித்தது. 

இக்காலகட்டத்தில் தான் அருப்புக்கோட்டையில் இரண்டாவது சிவன் கோயில் எழுந்துள்ளது. சொக்கநாதசாமி கோயில் என்னும் பெயருடன் பழமையான சிவன் கோயில் ஒன்று ஏற்கனவே இருக்க; நாடார் சமூகத்தினர் மேலும் ஒரு சிவன் கோயிலைக் கட்டித் தாங்கள் பெருந்தெய்வ வழிபாட்டு நெறியினை மேற்கொள்வதை உறுதிப்படுத்தலாயினர். பெரும்பணம் செலவு செய்து கற்றளியாகக் கோயிலை அமைத்து நாள்தோறும் வளர்ந்து வரும் வண்ணம் திருப்பணிகள் செய்து வருகின்றனர். கோயிலில் பிராமணரையே அர்ச்சகராக அன்று முதல் இன்று வரை பூசை செய்ய நியமித்து வருகின்றனர். முத்துமாரியம்மன் கோயில், வாலசுப்பிரமணியர் கோயில் ஆகிய கோயில்களிலும் பிராமண அர்ச்சகர்களே இடம் பெற்று வருகின்றனர். 

பெருந்தெய்வ வழிபாட்டு நெறியை மேற்கொள்ள முயன்றாலும் சிறுதெய்வ வழிபாட்டு நெறியைக் கைவிடவில்லை. இதற்கு அமுதலிங்கேஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்திருக்கும் வாழவந்தம்மன் சந்நிதி தக்க சான்றாக அமைகிறது.   

நாடார்களிடம் காணப்படும் மற்றொரு பண்பு சைவவைணவ வேறுபாடு பாராட்டாமை ஆகும். இப்பண்பு அன்று முதல் இன்று வரை நாடார் சமூகத்திடம் நிலவி வருகிறது. 1907ம் ஆண்டு அமுதலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது. அப்பொழுது வைணவக் கடவுளான ஆதிமூலப் பெருமாளைத் தம் இரு தேவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறிய வடிவில் அம்மன் சந்நிதியில் இடம் பெறச் செய்து இருக்கின்றனர். 1928ம் ஆண்டில் அம்மன் சந்நிதியை அடுத்த கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வரதராஜப்பெருமாள் சந்நிதியை ஏற்படுத்தி உள்ளனர். கர்ப்பக்கிரகத்தில் வரதராஜப் பெருமாள் தம் தேவியர் இருவருடன் நெடிய தோற்றத்தில் நின்ற கோலத்தில் காட்சி தரச் செய்துள்ளனர். அன்று முதல் அம்மன் சந்நிதியில் எழுந்தருளிய ஆதி மூலப் பெருமாளை இச்சந்நிதியின் மணிமண்டபத்தில் எழுந்தருளச் செய்து இருக்கின்றனர். இச்சந்நிதிக்கு நேர் எதிரே கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. 1978ம் ஆண்டு இவ்வூர் ‘ஏகாதசி மாதர் குழு’வினரால் கருடாழ்வார் சந்நிதியை அடுத்து அனுமன் சந்நிதி உருவாக்கப்பட்டுள்ளது. 

இச்செயல்கள் நாடார் சமூகத்தாரின் சமயப்பொறையைக் காட்டும் சான்றுகளாக அமைந்துள்ளன. சிவன் கோயிலில் பெருமாள் கோயில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் இரு சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒரே அர்ச்சகரால் யாதொரு குறைவுமின்றி நிகழ்த்தப்பட்டு வருகின்றன.


அமுதலிங்கேஸ்வரர் கோயில் எழுந்த சூழல்

 

நாடார் சமூகத்திற்கு மற்ற சமூகத்தினர் இழைத்த கொடுமைகள் எண்ணிக்கையில் அடங்கா. சமுதாய அமைப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எண்ணிக்கையில் குறைந்த நாடார்களுக்குத் திட்டமிட்டுச் செய்த கேடுகளும் உண்டு. சில இடங்களில் நாடார்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கூட கருதியதாகக் கூறப்படுகிறது6. சக்கிலியர் இனத்தைக் காட்டிலும் இழிவாகக் கருதிய காலமும் உண்டு. இதை உறுதிப்படுத்துவது போன்று “சக்கிலியனைத் தொட்டால் தீட்டு சாணானைக் கண்டாலே தீட்டு” என்னும் பழமொழி இன்றும் வழங்கி வருகிறது. 

kanmani tamil

unread,
Sep 8, 2024, 11:58:49 AM9/8/24
to vallamai

“உயர்ந்த சாதியினர் என்று கூறிக் கொண்டவர்கள் நாடார்களை பொதுக் கிணறுகளில் குடிநீர் எடுக்க விடாமல் தடுத்தனர். ஊர்க் கோயில்களுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. நாடார்களுக்கென்று சுடுகாடுகள் கூடத் தனியாக அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. திருமணங்கள் ஊர்வலங்களைச் சில தெருக்களில் செல்ல விடமாட்டார்கள். பள்ளிக்கூடங்களில் சான்றோர்களின் குழந்தைகளுக்குத் தனியிடம் ஒதுக்கப்பட்டதாம். பள்ளியில் நாடார் குழந்தைகளைச் சேர்க்க மறுத்த காலமும் கூட ஒன்று இருந்ததாம்.”7                                        

“நாடார் குலப் பெண்கள் தலையில் தண்ணீர்ப்பானை கொண்டு வருவது தங்கள் மரியாதைக்கு இழுக்கு என்று சில பெரியசாதிக்காரர்கள் கருதினார்களாம். அடிதடியாலும் கலகத்தாலும் நாடார் மக்களை அடக்கி ஒடுக்கி வைக்க அவர்கள் எடுத்த முயற்சிகளைக் காலப் போக்கில் தான் நாடார்குல மக்களால் முறியடிக்க முடிந்திருக்கிறது.”8  

கமுதி, சிவகாசி, மதுரை ஆகிய இடங்களில் கோயிலில் நுழைவதற்குப் பெரும் போராட்டம் நடத்தித் தோல்வியே சந்தித்திருக்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் தான் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை சிவன்கோயில் ஒன்று கட்ட முனைந்தது. இச்செயல் நடைபெறா வண்ணம் ஏற்படுத்தப்பட்ட தடைகள் பல. இத்தடைகள் பற்றியும் அவற்றை நீக்கிக் கோயில் கட்டியது பற்றியும் “கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் இயலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 

இத்தகைய இடர்ப்பாடுகள் பலவற்றையும் சந்தித்து அருப்புக்கோட்டை நாடார்கள் சிவன் கோயிலைக் கட்டி முடித்து 1907ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கின்றனர். சூ.ஆ.முத்து நாடார் தன்வரலாற்றுக் குறிப்பில் நாடார் சமூகத்தினர் கும்பாபிஷேகத்தன்று குதூகலமாகத் திகழ்ந்த காட்சிகளையும், பிற சமூகத்தினர் இது போன்ற செயல்களை மேற்கொள்ள முனைந்ததையும் விரிவாகக் கூறியுள்ளார். 

நாடார் சமூகத்தில்; பெருந்தெய்வ நெறிக் கடவுளான சிவனுக்கு  இங்கு தான் முதன் முதலில் கற்றளி எடுக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் மீது ஈடுபாடு கொண்டவர்களாகையால் இக்கோயிலை மீனாட்சி அம்மன் கோயில் போலவே கட்டியுள்ளனர். திருவிழாக்களில் பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது. நாடார்களால் உருவாக்கப்பட்டதால் இக்கோயில் நாடார் சிவன் கோயில் என்றே வழங்கப்படுகிறது.

 

திருவிழாக்களும் சமூகமும்

 

திருவிழாக்கள் இறைவனைச் சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகின்றன. குறிப்பிட்ட நட்சத்திரம் விளங்கும் நாளில் கொண்டாடி இறையருள் பெற வேண்டும் என்பது பண்டைக்காலம் தொட்டு வரும் நம்பிக்கையாகும். இந்நம்பிக்கையோடு இச்சமூகத்தினர் இன்றும் திருவிழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவும், முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப்பொங்கல் திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. 

திருவிழாக்களின் போது நாள்தோறும் நாடார் சமூகத்தார் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவர். அர்ச்சனைகள் கொடுப்பர். இரவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வர். கலை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் நடக்கும் பூசையைக் கண்டு களிப்பர். திருவிழாக்களில் பங்கு கொண்டு மகிழத் தங்கள் உறவினரை விருந்திற்கு அழைப்பர். 

நாடார் சமூகத்தினர் வேறுபட்ட வழிபாட்டு முறைகளை உடையவர்கள் என்பது கோயில்களில் நிகழும் வழிபாட்டுமுறைகள் கொண்டு உணரப்படுகிறது. மாரியம்மன் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போதெல்லாம் மக்கள் குலவை இட்டு வழிபடுவர். அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அவ்வாறு செய்யார். முத்து மாரியம்மன் கோயிலில் அர்ச்சனை செய்யும் முன் அர்ச்சகர் குங்குமம், தேங்காய் ஆகியவற்றை முன்னுள்ள மக்களிடம் நீட்ட அவர்கள் தொட்டுக் கும்பிட்டுக் கொடுத்த பின் குங்கும அர்ச்சனையும் தேங்காய் உடைத்தலும் நடைபெறும். அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அர்ச்சகரே நேரிடையாக அர்ச்சனை செய்வார். 

நாடார்கள் தங்கள் குடும்பங்களில் சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகைகள் தீபாவளி, தைப்பொங்கல், பங்குனிப் பொங்கல் ஆகும். இவற்றுள் தீபாவளியையும், தைப்பொங்கலையும் தம் குடும்பத்தினரை மட்டும் அழைத்துக் கொண்டாடி மகிழ்வர். பங்குனிப் பொங்கல் விழாவிற்கு நெருங்கிய உறவினரையும், நண்பர்களையும் விருந்தினராக அழைத்துச் சிறப்புச் செய்வர். வியாபாரம், அலுவல் காரணமாக இந்தியாவின் எப்பகுதிக்குச் சென்று வாழ்பவராய் இருந்தாலும் இந்தப் பதினைந்து நாட்களில் ஊருக்கு வந்து தம் குடும்பத்தினரோடு தங்கி மகிழ்வர். பலரும் ஒருங்கே கூடுவதால் இல்லந்தோறும் மகிழ்ச்சியும், ஆரவாரமும் நிறைந்திருக்கும். ஒருவருக்கு ஒருவர் கொண்டிருந்த மனக்கசப்பு, குடும்பப் பிரச்னைகளை எல்லாம் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வர். குடும்பத்தில் நடைபெற வேண்டிய திருமணம், மகப்பேறுக்கு அழைத்தல், பிறந்த குழந்தைக்குக் கயிறு கட்டல் முதலிய நற்காரியங்கள் பற்றித் திட்டமிடுவர். இவ்வாறு குடும்பத்தினர் அனைவரும் கூடுவதால் மனதில் தெய்வ சிந்தனை, பக்தி வளர்வதோடு மன அழுக்குகளாகிய பொறாமை, ஆங்காரம், அகங்காரம் முதலியவை நீங்கிக் கூடி வாழும் மனப்பான்மையும், விட்டுக் கொடுக்கும் பண்பும் வளர்ந்து பண்படுத்துகின்றது என்பதில் ஐயமில்லை. கிராம மக்களிடையே காணப்படும் கூட்டுக் குடும்ப வாழ்வும், ஒருவரின் இன்பதுன்பங்களில் அனைவரும் பங்கு கொள்ளும் பண்பும் இன்னும் அழிந்து விடாது உயிருடன் விளங்குவதை இத்திருவிழாக் காலத்தில் காணலாம்.     

கோயில்களில்  திருவிழாக்கள் தொடங்கிய நாள் முதல் விழாக்கள் முடியும் வரை ‘கொடித்தடை’ என்று கூறி வீடுகளில் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளைச் செய்ய மாட்டார்கள். மிக இன்றியமையாத காரணங்களின் பொருட்டே வெளியூர்களுக்கும் செல்வர். இறைவனுக்குச் சிறப்புச் செய்யும் நாட்களில் தாமும் இருந்து பங்கு கொள்வது தான் முறை என்று இவ்வாறு செய்கின்றனர்.

 

கட்டளைதாரர்கள்

 

அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில் ஆகிய இரு கோயில்களிலும் திருவிழாக்கள், இதர நிகழ்ச்சிகள் கட்டளைதாரர்களாலும், உறவின்முறையாலும் குறைவுறா வண்ணம் நடத்தப்படுகின்றன. கட்டளைதாரர்கள் உள்ளூர்க்காரர்களாகவும், வெளியூர்க்காரர்களாகவும் இருக்கின்றனர். தூத்துக்குடி, வதுவார்பட்டி, திருச்சுழி, மதுரை, பொட்டல்பட்டி, மணிநகரம் ஆகிய ஊர் நாடார்ப் பெருமக்கள் அல்லது அவ்வூர் நாடார் உறவின்முறை தங்கள் தங்கள் பெயரில் கட்டளைகள் ஏற்படுத்திக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உதவுகின்றனர். 

கட்டளைதாரர்கள் எந்தெந்த நிகழ்ச்சிகளை நடத்த மானியம் வழங்கி இருக்கின்றனரோ அந்தந்த நிகழ்ச்சிகளின் போது அவரவர்களுக்கு  அழைப்பிதழ்கள் அனுப்பப்படும். அழைப்பிதழை ஏற்று வருவர். மானியம் வழங்கியவரின் உறவினர், பங்காளி முறையினரும் வருவதுண்டு. வந்த அனைவருக்கும் பரிவட்டம் கட்டிப் பிரசாதம் வழங்கிச் சிறப்புச் செய்வர். சமூக ஒற்றுமையைக் காட்டும் பண்பாக இஃது இன்றும் இருந்து வருகிறது. 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலுக்குக் கார்த்திகை கட்டளைதாரர்கள், மாதாந்திர விழாக் கட்டளைதாரர்கள், வைகாசி விசாகவிழாக் கட்டளைதாரர்கள் என மூவகைக் கட்டளைதாரர்கள் உண்டு. முத்துமாரியம்மன் கோயிலுக்குப் பங்குனிப் பொங்கலுக்கு மட்டும் கட்டளைதாரர்கள் உண்டு9.    

கட்டளைதாரர்கள் பணமாகவோ, சொத்தாகவோ, கட்டிடங்களாகவோ கட்டளைகளை ஏற்படுத்தி உள்ளனர். இவற்றை மேற்பார்வை செய்து கிடைக்கும் வருமானத்தால் அக்கட்டளைகளை உறவின்முறை நிறைவேற்றி வைக்கின்றது.

 

உறவின்முறையும் கோயில்களும்

“நாடார் சமூகத்தினர் தாங்கள் வாழும் ஊர்களில் உறவின்முறை என்ற பொதுச்சபைகள் ஏற்படுத்தி; தங்கள் சமுதாய முன்னேற்றத்திற்கான நல்லொழுக்கம், பண்புடைமை, வாய்மை, நாணயம், வாணிபம், வேளாண்மை, குடிப்பிறப்பு, வாழ்க்கை நலம், ஒற்றுமை, கட்டுப்பாடு, ஆண்மை, பொதுநலப்பணி முதலியவைகளை நிலைபெறச் செய்தனர். அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறையார்கள் நல்ல முறையில் பொது நிதிகள், சொத்துக்கள் முதலியவைகளை மகமை, தருமக்கலயம் மூலம் சேகரித்து ஆரம்பப் பாடசாலைகள், உயர்நிலைப் பள்ளிகள், வாசகசாலைகள், உடற்பயிற்சி நிலையங்கள், தேவாலயங்கள், நந்தவனங்கள், கிணறுகள், தெப்பக்குளங்கள், ஊருணிகள், தண்ணீர்த் தருமங்கள், ஸ்ரீமத் ஏனாதி நாதநாயனார் திருமடாலயம், பஜனை மடங்கள், மு.மு.முத்துச்சாமி நாடார் அவர்கள் ஞாபகச் சின்ன வாசகசாலை, இதர மடங்கள், மாதர் முன்னேற்ற சங்கம் முதலியவைகளைச் செவ்வனே நடத்தி வருகிறார்கள். தேவாலயங்களில் மாதந்தோறும் உற்சவங்களும், வருடந்தோறும் திருவிழாக்களும், பொங்கல்களும் நடைபெற்று வருகின்றன.”10

“உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட சகல ஸ்தாவர சங்கம சொத்துக்களையும் கோயில்களையும், பள்ளிக்கூடங்களையும், நந்தவனங்களையும், தெப்பக்குளங்கள், கிணறுகள், ஊருணிகள், தண்ணீர் தருமங்கள், வாசகசாலைகள் (ரீடிங்ரூம்), உடற்பயிற்சி நிலையங்கள், மாதர்


kanmani tamil

unread,
Sep 9, 2024, 1:15:22 AM9/9/24
to vallamai

முன்னேற்ற சங்கம், ஏனாதிநாத நாயனார் மடம், பஜனை மடங்கள், இதர மடங்கள், முதலியவைகளை நிர்வகித்து அபிவிருத்தி அடையச் செய்தல் உறவின்முறையின் முக்கிய நோக்கம் ஆகு‌ம்.”11

“இவை செவ்வனே நடைபெறுவதற்கு மகமை, தீபக்காசு, தருமக்கலயம் வருமானம், சொத்து வருமானம், விவசாய வருமானம், நன்கொடை, வரி, கல்யாணப் பதிவுக்கட்டணம், முதலியவைகள் மூலம் வேண்டும் பொருட்களைச் சேகரித்து சகல காரியங்களையும் நடைபெறச் செய்தல் வேண்டும்.”12 அதில் “மதுரை மகமைத் தரப்பு ஒன்றாகும். உறவின்முறைக்குப் பலவழிகளில் மகமைத்தரப்பு உள்ளது. மதுரை - கீழப்பேட்டை, அருப்புக்கோட்டை இந்து நாடார்களின் ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர் தேவஸ்தானம், வித்தியாசாலை, முதலான தரும பரிபாலன மகமைப்பண்டு என்று இருந்து வருகிறது. இந்தத் தரப்பில் வசூல் செய்த மகமையும் கோயிலுக்குப் பயன்படுத்தப்படும்.”13 சில ஆண்டுகளாக இத்தரப்பிலிருந்து நிதி வருவது நிறுத்தப்பட்டு விட்டது. 

“உறவின்முறை அங்கத்தினர்கள் ஒவ்வொரு வருடத்திலும் அருப்புக்கோட்டையில் வைகாசி மாதத்தில் நடைபெறும் ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர் கோயில் பிரம்மோத்சவ உற்சவத்திற்குத் தலைக்கட்டு வரியும், தை மாதத்தில் நடைபெறும் சந்திவீரசாமி கோயில் பொங்கலுக்குத் தலைக்கட்டு வரியும், பங்குனி மாதத்தில் நடைபெறும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பொங்கலுக்கு அப்போதைக்கப்போது ஏற்படுகிற நிலைமையை அனுசரித்துப் பொதுச் சபையில் விதிக்கிற தலைக்கட்டு வரியும் செலுத்தி வர வேண்டும்.”14

“தைமாதம் முதல் வாரத்தில் பொதுச்சபைக் கூட்டம் கூடி, சந்திவீரசாமி கோயில் பொங்கல் நடைபெறும் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும். மாசி மாதம் முதல் வாரத்தில் பொதுச் சபைக் கூட்டம் கூடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பொங்கல் உற்சவம் நடைபெற வேண்டிய தேதியை நிர்ணயம் செய்வதுடன் மேற்படி உற்சவத்தை நடத்துவதற்கு ஏழு பேர்கள் கொண்ட உற்சவக்கமிட்டி ஒன்றையும் நியமனம் செய்ய வேண்டும்.”15   

உறவின்முறை பல கமிட்டிகளாகப் பிரிந்து செயல்படுகின்றது. அவற்றுள் ஒன்று ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர், ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானக்  கமிட்டி ஆகும். இக்கமிட்டி உருவாகும் முறை, செயல்திறன் போன்றன விரிவாக ‘அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை யாதாஸ்தும் சட்டதிட்டங்களும்’ என்னும் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஒரு சிலவற்றை மட்டும் இங்குக் காண்போம். 

ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர், ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானங்களுக்கும் டிரஸ்ட் போர்டு மெம்பர்கள் இருபத்துநான்கு பேர்களில் மதுரை - கீழப்பேட்டை, அருப்புக்கோட்டை இந்து நாடார்களின் ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர் தேவஸ்தானம், வித்தியாசாலை முதலான தரும பரிபாலன மகமைப்பண்டு தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகள் இருவர், தூத்துக்குடி காரைப்பேட்டை, அருப்புக்கோட்டை இந்து நாடார்களின் பெண் பாடசாலை மகமைப்பண்டு தரப்பினர் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதி ஒருவர், சென்னையில் அருப்புக்கோட்டை உறவின்முறை நாடார்களின் சைவபானு க்ஷத்திரிய வித்தியாசாலை நிதி மகமைத் தரப்பினர் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதி ஒருவர், க்ஷைபொதுச்சபையில் தேர்ந்தெடுக்கப்படும் அருப்புக்கோட்டையில் வசித்து வரும் உறவின்முறை நாடார்களின் நிலச்சுவான்தார் பிரதிநிதி ஒருவர், க்ஷைபொதுச்சபையின் தேர்ந்தெடுக்கப்படும் அருப்புக்கோட்டையில் வசித்து வரும் உறவின்முறை நாடார்களின் பொது மக்கள் பிரதிநிதிகள் மூவர், ஆக எட்டு மெம்பர்கள் நீக்கிப் பதினாறு மெம்பர்கள் 47வது விதியில்  கண்ட ஐந்து தரப்புகளிலிருந்து க்ஷை தரப்பு வியாபாரிகளின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி ஈவித்துத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.

மானேஜர், என்டௌமென்ட் போர்டு சம்பந்தமான சகல கடிதப் போக்குவரத்துக்களையும் கவனித்துக் கொள்வதுடன் மேற்படி ஆலயங்களில் அன்றாடம் நடக்கும் பூசை முதலிய ஆராதனைகள், உற்சவங்கள், திருப்பணி வேலைகள் முதலிய சகல காரியங்களையும் டிரஸ்டிகளின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நடத்தி வர வேண்டும். 

விலையுயர்ந்த திருவாபரணம், அலங்காரச் சாமான்கள் முதலியவைகளைத் தலைமை அலுவலகத்தில் உள்ள இருப்புப் பெட்டியில் பந்தோபஸ்தாக வைத்திருக்க வேண்டும். மேற்படி பெட்டியின் சாவிகள் டிரஸ்டிகளின் தலைவரிடம் ஒன்றும், மானேஜரிடம் ஒன்றும் இருந்து வர வேண்டும். மானேஜர் திருவாபரணங்களின் விவரத்தைக் காட்டக் கூடிய பதிவுப் புத்தகம் (ரிஜிஸ்டர்) ஒன்று வைத்து வர வேண்டும். 

கோயில்களில் நடக்கும் உற்சவக்காலங்களில் திருவாபரணங்களும்  சாமான்களும் தேவைப்படும் போது டிரஸ்டிகளின் தலைவரும், மானேஜரும் எடுத்துக் கொடுத்து திரும்ப வாங்கிச் சரி பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். 

உறவின்முறையைச் சேர்ந்த ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர், ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவாலயங்களில் நடைபெற்று வரும் உற்சவங்களுக்குச் சொத்துக்கள், கட்டடங்கள் முதலியவை நன்கொடையாக எழுதி வைத்து; தாங்களோ அல்லது தங்கள் சந்ததியார்களோ மேற்பார்த்து நடத்தி வருபவைகளைத் தவிர (நமது) உறவின்முறையார்களே மேற்பார்த்து நடத்தி வரும்படி ஒப்புவிக்கப்பட்ட சொத்துக்கள், கட்டடங்கள் முதலியவைகளின் வருமானங்களை வசூல் செய்து, தஸ்தாவேசுகளில் குறிப்பிட்டுள்ள உற்சவங்களை நடத்தி வைப்பதற்காக மேற்படி தேவைக்கான டிரஸ்டிகள் தங்களில் ஆறு பேர்களை “கட்டளைச்சொத்து பரிபாலனக் கமிட்டியார்க”ளாக நியமனம் செய்து தஸ்தாவேசுகளில் கண்ட உற்சவங்களை நடத்தி வரும்படி செய்ய வேண்டும்.    

கட்டளைச் சொத்து பரிபாலனக் கமிட்டியார் மேற்படி சொத்துக்களின் வாடகை முதலிய வருமானங்களை வசூல் செய்து தஸ்தாவேசுகளில் கண்ட உற்சவங்களை நடத்தி வருவதுடன், கட்டளைதாரர் அல்லது அவரின் வாரிசுதாரர்களுக்குக் கோயிலில் செய்யவேண்டிய மரியாதைகளையும் செய்து வர வேண்டும். 

கட்டளைச் சொத்துக்கள் பழுதடைந்து விடாமல் காலாகாலத்தில் மராமத்து செய்து பாதுகாத்து வர வேண்டும். 

மேற்படி தேவஸ்தான டிரஸ்டிகள் நமது ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர் தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட காரியாபட்டி, குறிச்சிகுளம் முதலிய இடங்களில் உள்ள சொத்துக்கள், விவசாய நிலங்களை நன்கு கவனித்துப் பரிபாலனம் செய்து வர வேண்டும்16.

 இது போன்று பல விதிகளை உருவாக்கிக் கொண்டு சமூக ஒற்றுமையையும், சமயச்சிந்தனையையும் நன்கு வளர்த்து வருகின்றனர். “உறவின்முறை” என்னும் இவ் அமைப்பு நாடார் சமூகத்தாரால் முதற்கண் தோற்றுவிக்கப்பட்டு நாள்தோறும்  வளர்ச்சி அடைந்து சமூக ஒற்றுமையைக் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்குடனும் பாதுகாத்து வருகிறது.

  

பிற ஊர் உறவின்முறையுடன் கொண்டுள்ள தொடர்பு

 

அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறையார் கோயில்களில் நடத்தும் உற்சவங்களில் அருகிலுள்ள பிற ஊர் நாடார் உறவின்முறைகளும் பங்கு கொள்கின்றனர். தங்கள் ஊர் நாடார் உறவின்முறை பெயரால் கட்டளைகள் ஏற்படுத்தி உள்ளனர். உறவின்முறைத் தலைவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சிறப்புச் செய்கின்றனர். 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் கொண்டாடப்படும் ஆனிமாதக் கார்த்திகை உற்சவம் வதுவார்பட்டி நாடார் உறவின்முறையாராலும், ஆவணி மாதக் கார்த்திகை கஞ்சநாயக்கன்பட்டி நாடார் உறவின்முறையாராலும், ஐப்பசி மாதக் கார்த்திகை பொட்டல்பட்டி நாடார் உறவின்முறையாராலும், பங்குனி மாதக் கார்த்திகை மணிநகரம் நாடார் உறவின்முறையாராலும் கட்டளைகள் ஏற்படுத்தி சிறப்புற நடைபெற்று வருகின்றன. வைகாசி விசாகத் திருநாளில் ஆறாம் திருவிழாவாகிய சமணர் கழுவேற்ற நிகழ்ச்சி திருச்சுழி நாடார்கள் உறவின்முறையாரால் நடத்தப்படுகிறது. 

ஸ்ரீமுத்துமாரியம்மன் பங்குனிப் பொங்கல் திருவிழாவில் இரண்டாம் நாள் திருவிழா பொட்டல்பட்டி நாடார்கள் உறவின்முறையாராலும், ஆறாம் நாள் திருவிழா புளியம்பட்டி நாடார்கள் உறவின்முறையாராலும், பத்தாம் நாள் திருவிழா மதுரை - கீழப்பேட்டை அருப்புக்கோட்டை இந்து நாடார்கள் உறவின்முறையாராலும் நடத்தப்படுகின்றன. 

அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் வழியில் இரண்டு மைல் தொலைவில் உள்ளது பாலையம்பட்டி என்னும் ஊராகும்.இவ்வூர் நாடார்கள் உறவின்முறையோடு அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை கொண்டுள்ள தொடர்பு குறிப்பிடத்தக்கது ஆகும். 

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நாடார்கள் வாழ்ந்த முக்கியமான ஊர்களில் ஒன்று பாலையம்பட்டி ஆகும். 1860ம் ஆண்டு தொடங்கி அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி ஆகிய ஊர்களில் ஒன்றன்பின் ஒன்றாகத் தகராறுகள் ஏற்பட ஆரம்பித்தன. தேவர்களும், நாயக்கர்களும் நாடார்களுக்குத் தொல்லைகள் கொடுத்த வண்ணம் இருந்தனர். அப்போது அருப்புக்கோட்டை நாடார்களும், பாலையம்பட்டி நாடார்களும் ஒருவர்க்கொருவர் மிக்க துணை புரிந்து கொண்டு தங்கள் இனம் அழியாமல் ஒற்றுமையுடன் காத்தனர். இதன் விளைவாக இரு ஊர் நாடார்களுக்கும் பண்பாட்டுத் தொடர்பு உண்டாக்கப்பட்டது. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள முத்துக்குமாரசாமி சந்நிதியில் கந்தசஷ்டி தினத்தன்று அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் அருப்புக்கோட்டை உறவின்முறையினர் தேங்காய், பழம் பிரசாதம் பாலையம்பட்டியிலுள்ள முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்வர். இப்பிரசாதத்தைப் பெற்ற பின்னரே அங்கு அபிஷேக ஆராதனை நிகழ்த்தப்பெறும். பங்குனி மாதத்தில் நடைபெறும் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் ஏழாம் திருவிழாவான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். அந்நாளில் பாலையம்பட்டி உறவின்முறையினர் முருகன் கோயிலிலிருந்து


kanmani tamil

unread,
Sep 10, 2024, 7:03:01 AM9/10/24
to vallamai

பட்டுத் துண்டு, தேங்காய், பழம் கொண்டு வந்த பின்னர் தான் அன்றைய நிகழ்ச்சிகள் நடத்தப்பெறும்.

 இங்ஙனம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்புச் செய்து தங்கள் நன்றிக் கடனைத் தெரிவித்துக் கொள்கின்றனர். சமூக ஒற்றுமையைக் கோயில் வழிக் காத்து வருகின்றனர்.

 

நாடார் சமூகத்தினரும் பிற சமூகத்தினரும் 


நாடார் சமூகத்தினர் பிற சமூகத்தினருடன் இணைந்தும் முரண்பட்டும் வாழ்ந்தமையைச் சில நிகழ்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

அமுதலிங்கேஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய பொழுது ஏற்பட்ட தடையைப் பிள்ளை சமூகத்தினர் உதவி கொண்டு நீக்கியிருக்கின்றனர். அரல்வாயல் மகாவித்துவான் வேங்கடசுப்பு பிள்ளையவர்களை சமஸ்தான அதிபர் மீது புகழ்மாலை பாடச்செய்து உத்தரவு பெற்றனர். நாடார் சமூகத்தோடு கொண்டிருந்த நட்புறவால் தான் அவர்கட்கு இத்தகைய உதவியைச் செய்து இருக்கின்றனர். 

கோயிலில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் கோயில் கட்டி அங்கு பிராமண சமூகத்தினரை அர்ச்சகராக நியமித்துள்ளனர். நாடார் சமூகத்தினரின் நட்புறவையும், நன்றியுணர்வையும் நினைந்தே பிராமணர் அவர்தம் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றச் சம்மதித்து இருப்பர். இன்றும் அர்ச்சகருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகின்றனர். கோயில் கட்டிய நாள் முதல் பிற சமூகத்தினரைத் தங்கள் கோயிலில் வழிபட யாதொரு தடையும் விதிக்கவில்லை. எல்லாச் சமூகத்தினரும் வந்து வழிபடுகின்றனர். 

உடுமலை முத்துச்சாமிக் கவிராயருக்கு நாடார் உறவின்முறையால் குருபூஜை நடத்தப்பட்டுவருகிறது. நாடார் சமூகத்தோடு தொடர்பு கொண்டு அமுதலிங்கேஸ்வரர் கோயில் மீது பல பாடல்கள் பாடி உள்ளார். இதன் நினைவாகவே சமூக வேறுபாடு காட்டாது அவருக்குச் சிறப்புச் செய்கின்றனர். 

“அருப்புக்கோட்டை நாடார்களுக்கும் அங்குள்ள பிற சமூகத்தாருக்கும் 1914ல்  இருந்தே சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது. செல்வம் மிக்கோராய் வியாபாரம், கல்வித்துறைகளில் முன்னேற்றம் கொண்டிருந்த நாடார்கள் திருவிழாக்காலங்களில் தாங்கள் பொதுச் சாலைகளைப் பயன்படுத்துவதைப் பிற சமூகத்தினர் தடுக்கும் உரிமையை எதிர்த்தனர். 1928க்குப் பின்னர் ஓர் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. 1928-1930 ல் கலவரமும் படுகொலைகளும் நடந்தன. தங்கள் தெரு வழியே நாடார்கள் தேர் இழுத்துச் செல்வதை முஸ்லிம்களும் எதிர்த்தனர். எனவே பயங்கரக் கலகம் தோன்றியது. காவலர்கள் தொடர்ந்து அங்கே நிறுத்தப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்டது.”17  இதன் விளைவாக உற்சவக் காலங்களில் சாமி புறப்பாடு நிறுத்தப்பட்டது. நாடார்களின் கோயில்களுக்கு மூன்று தேர்கள் இருந்தும் பயனின்றி இன்று அழிந்துபட்டன. தாங்கள் அரும்பாடுபட்டுக் கட்டிய கோயில்களில் திருவிழாக்களைச் சிறப்பாகக் கொண்டாட முடியாத நிலையும் நாடார் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. கோயில் விழாக்கள் கோயில் வளாகத்திலேயே நடைபெறுகின்றன.

 

ஏனாதிநாத நாயனார் திருமடாலயம்

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏனாதிநாத நாயனாருக்கு அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை பெருஞ்சிறப்பு   செய்கிறது. இவரைச் சேக்கிழார்  “ஈழக்குடிச் சான்றார் ஏனாதி நாதனார்” என்று பெரியபுராணத்தில் குறிக்கிறார். சேக்கிழார் குறித்த ஈழக்குலச் சான்றார் என்னும் குலம் இன்றைய நாடார் சமூகத்தைக் குறிப்பதாகும். எனவே நாடார் சமூகத் தோன்றலாகிய ஏனாதிநாத நாயனாருக்கு அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை சிறப்புச் செய்கிறது. 

C.K.சுப்பிரமணிய முதலியார், “ஈழக்குலம் இஃது சான்றார் குடிவகைகளில் ஒன்று. ஈழம் இங்கு ஈழநாட்டின் தொடர்பு பற்றியதோ என்று சிலர் ஐயம் கொள்கின்றனர். ஈழம் - கள் என்ற பொருளில் வழங்குதலின் ஈழக்குலம் என்றது கள் இறக்கும் தொழில் பூண்ட குலம் என்றும் அது சான்றார் மரபில் ஒரு பிரிவு என்றும் கூறுவர். மலை நாட்டில் இத்தொழில் செய்பவர் சான்றார் (சானார் என மருவி வழங்குவது) என்ற மரபுப்பெயரால் வழங்கும் ஒரு சாதியினரும் உண்டு.” என்று தம் ஆராய்ச்சியுரையில் கூறுகிறார்.18 

சோழநாட்டில் எயினனூரில் பிறந்த ஏனாதிநாத நாயனார் பெயரில் அருப்புக்கோட்டையில் மடாலயம் ஒன்று உண்டு. நாடார் உறவின்முறையே இதை நிர்வகித்து வருகிறது. 1901ம் ஆண்டு முதல் இவர் பெயரில் புரட்டாசி மாதத்தில் குருபூஜை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது அன்றைய சிறப்பு நிகழ்ச்சியாகும். இதற்கு ஆகும் செலவை அருப்புக்கோட்டை, மதுரை, தூத்துக்குடி, கமுதி, வதுவார்பட்டி, விருதுநகர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் வாழும் நாடார்கள் பணமாகவும்; அரிசி, பருப்பு, காய்கறி, விறகு போன்ற பொருட்களாகவும் வழங்கி வருகின்றனர். வடை,பாயசம், பலவகைப் பொரிக்கறிகள் லட்டு, ஜிலேபி என்று உணவுப்பண்டங்கள் சமைத்து ஏழைகளுக்குப் பெருவிருந்து படைப்பர். 

ஏனாதிநாத நாயனார் பதிகமும், குருபூசைப் பாடல்களும் முறையே கவிஞர் காசி அவர்களாலும் உடுமலை முத்துச்சாமிக் கவிராயராலும் இயற்றப்பட்டுள்ளன.

 ஏனாதிநாத நாயனார் திருமடாலயம் சைவபானு க்ஷத்திரிய மேல்நிலைப் பள்ளிச் சாலையில் அமைந்திருக்கிறது. 

ஏனாதிநாத நாயனார் குருபூஜை விழாவிற்கு உற்சவப் பத்திரிகை அச்சடித்து வழங்குவர். நாடார்கள் சிங்காரத் தோப்பில் இவ்விழா நடைபெறும். 

அருப்புக்கோட்டை நாடார் சமூகத்தார் ஏனாதி என்று பெயரிடும் வழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர். நாடார் சமூகத்தார் சைவசமயப் பற்று உடையவர் என்பது ஏனாதிநாத நாயனாருக்குச் செய்யும் சிறப்பு மூலம் தெளிவாகிறது.

 

சரபமுத்துச்சாமி சங்கரலிங்கவிலாஸ் பஜனாலயம்

 

இம்மடமும் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறையைச் சேர்ந்ததாகும். அருப்புக்கோட்டை யில் சிவசாமி நாடார் தெருவில் இம்மடம் அமைந்துள்ளது. 

முத்துச்சாமிக் கவிராயர் உடுமலையில் பிறந்து கன்னிவாடி ஜமீனில் ஆஸ்தானப் புலவராக வீற்றிருந்து தமிழகம் எங்கும் சுற்றி வந்தவர். அமுதலிங்கேஸ்வரர் கோயில் கட்டியவரான திரு.மு.மு.முத்துக்குமாரசாமி நாடார் அவர்கள் இவருக்குக் கடிதம் எழுதி 20.11.1907 ம் நாள் அருப்புக் கோட்டைக்கு வரவழைத்தார். அந்நாள் திருக்கார்த்திகை ஆனதால் அமுதலிங்கேஸ்வரர் கோயில் உற்சவ மூர்த்திகள் வெகு கோலாகலமாய்ப் பவனி வந்து கொண்டிருந்தன. ஊரெங்கும் லட்சதீபங்கள் ஏற்றப்பட்டு இருந்தன. கோயில் சிறப்புக்களைக் கண்ட கவிராயர் திருநல்லூர் கார்த்திகை தீபம் என்ற கீர்த்தனையைப் பாடினார். இக்கீர்த்தனை இன்று கிடைக்கப் பெறவில்லை. 

பின்னர் அடுத்தடுத்து நாடார் பெருமக்களுடன் தொடர்பு கொண்டார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சூ.ஆ.முத்துநாடார் அவர்கள் ஆவார். இவர் தம்மைக் கவிராயர் மாணவராக ஏற்றுக் கொள்ளச் செய்தார். 1925ம் ஆண்டு கவிராயர் திருவாரூரில் இறந்தார். 1926ம் ஆண்டில் இருந்து 1944 வரை தொடர்ந்து திரு.சூ.ஆ.முத்து நாடார் இவர் பெயரால் குருபூசை நடத்தி வந்தார். பின்னர் பல ஆண்டுகள் நடைபெறவில்லை. மீண்டும் திரு.வெ.பழனிச்சாமி நாடாராலும்

 சூ.ஆ.முத்து நாடார் மகனாகிய முத்து முருகன் அவர்களாலும் தொடர்ந்து நடத்த முடிவு செய்து இன்று வரை நடைபெற்று வருகிறது. 

குருபூசை தினத்தன்று சிறப்புப் பூசை நிகழ்ச்சிகளும் இன்னிசை விருந்தும் நாடார் உறவின்முறையால் நடத்தப்படுகிறது. 

நாடார் சமூகத்தினர் பிற சமூகத்தினரால் மிகுந்த துன்பத்திற்கு ஆட்பட்டாலும் பிற சமூகத்தினரைப் போற்றுவதில் குறைபாடுடையவர் அல்லர் என்பது இப்பஜனாலய வரலாற்றால் அறிய முடிகிறது .



குறிப்புகள்

 

1)குரு.தேமொழி - நாடார் சமூக வரலாறு - ப.38

2)S.T. ஜெயபாண்டியன்  (மொ.ஆ.) - தமிழக நாடார் வரலாறு - ப.55

3)ibid.ப.159 

4)ibid.ப.159 

5)ibid.ப.161 

6)குரு.தேமொழி - முன்னது - ப.26 

7) ibid ப.26 

8)ibid ப.29&30 

9)பின்னிணைப்புகள் - 6,7,8,9 

10)அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை யாதாஸ்தும் சட்டதிட்டங்களும் - 1956 -5-2 

11)ibid ப.1

12)ibid.ப.2 

13)ibid.ப.10 

14)ibid.ப.13

15)ibid.ப.25

16)ibid.ப.41-44

17)A.Ramasamy - Gazetteer Of India -Tamil Nadu State - Ramanathapuram District, Govt. Of Tamilnadu 1972 

18)C. K. சுப்பிரமணிய முதலியார் - பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் பகுதி - ப.774.


kanmani tamil

unread,
Sep 11, 2024, 1:24:20 AM9/11/24
to vallamai

கோயில்களும் இலக்கியங்களும்


முன்னுரை

 

இலக்கியங்கள்


முடிவுரை



முன்னுரை 


ஊரின் சிறப்பு கோயில்களாலும், கோயில்களின் சிறப்பு இலக்கியங்களாலும் உணரப்படும். அருப்புக்கோட்டையில் கோயில் கொண்டருளிய இறையவர் மீது பாடப்பட்டிருக்கும் இலக்கியங்கள் இவ்ஊர்ச் சிறப்புக்களையும் இறையவர் சிறப்புக்களையும் நன்கு விரித்துரைக்கின்றன. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமுதலிங்கேஸ்வரர் கோயில் உருவாக்கப்பட்டதாக இருப்பதால் தேவார மூவரால் இக்கோயில் பாடப்பெறவில்லை. எனினும் இக்காலப் புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்பினை உடையதாய் விளங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாடப் பெற்றனவாக இரு நூல்கள் கிடைக்கின்றன. 

கோயில் பற்றி எழுந்துள்ள இலக்கியங்கள் பலவற்றுள் அருப்புக் கோட்டையின் பழம்பெயரான திருநல்லூர் என்னும் பெயரே மிகுதியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இலக்கியங்களில் இசைப் பாடல்கள் பெரும்பான்மையாகக் காணக் கிடக்கின்றன. இவண் இலக்கியங்கள் காலவரிசைப்படி  முறைப்படுத்தப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.

 

1. அருப்புக்கோட்டை என வழங்கும் திருநல்லூர் அமுதலிங்க மாலை 

இயற்றியவர் - வேங்கடசுப்புப் பிள்ளை 

காப்புச் செய்யுள் - 2 வெண்பா 

 1.விநாயகர்

 2. நடேசர் 

நூல் - 100 ஆசிரிய விருத்தங்கள்

வாழ்த்துச் செய்யுள் - 1 எழுசீர் ஆசிரியவிருத்தம் 

ஆக 103 பாடல்களைக் கொண்டது இந்நூல் 

ஆண்டு - 1891 

அருப்புக்கோட்டையின் வளம் பாடும் சிறப்போடு அமுதலிங்கேஸ்வரர் புகழ் பாடும் சிறப்பினையும் உடையது. இந்நூல் எளிய பாடல்களால் அமைந்துள்ளது. 

“திங்களும் தெய்வக் கங்கையும் புனையும் செஞ்சடா மகுட நீள்முடியும் 

பங்கய வதன மைந்தும் ஈரைந்து பனிமலர்க் கரங்களும் இன்பம் 

பொங்கு தாள்மலரும் மங்கையோர் பங்கும் பொலிதிருக் காட்சி

 தந்தருள்வாய் 

அங்கயல் வாவி மணிதிரு நல்லூர் அமுத லிங்கேச மாமணியே” 

என்னும் பாடல் இறைவனின் தோற்றத்தை எளிமையாக முழுமையாக அழகுபடச் சித்தரிக்கிறது.

 

2. அருப்புக்கோட்டை என விளங்கும் நல்லூர்க் கலம்பகம் - நல்லூர் மாலை 

இயற்றியவர் - வேங்கடசுப்புப் பிள்ளை 

காப்பு - 1 நேரிசை வெண்பா - பாலசந்திர விநாயகர் 

நூல் - 100 பாடல்கள் 

ஆக 101 பாடல்களைக் கொண்டுள்ளது. 

ஆண்டு - 1892 

இருபத்து ஒன்பதின்மர் பாடிய சாற்றுகவிகளைக் கொண்ட நூலாகத் திகழ்கிறது.

இரங்கல், புயவகுப்பு, மேகவிடுதூது, சம்பிரதம், தலைவியைப் புகழ்தல், மடக்கு, அம்மானை, பிச்சியார், தவம், தழை, கைக்கிளை, ஊசல், இரு பனிக்

காலம், குறம், சிலேடை, பாங்கன் தலைவியைக் கண்டு வியத்தல், கிளிவிடுதூது, சீர் பாத வகுப்பு, பாண், கொற்றியார், வண்டு விடு தூது, தலைவி நெஞ்சொடு கிளத்தல், வலைச்சியார், வெறி விலக்கல், சித்து, இடைச்சியார், மதங்கி, நற்றாய் கூறல், களி, கார், இளவேனில், முதுவேனில், கூதிர் காலம், சல்லாபம் எனும் 35 உறுப்புகளைக் கொண்ட நூலாக உள்ளது. 

சல்லாபம் என்னும் உறுப்பு புதுமையாக உள்ளது. சல்லாபம் -அமுத லிங்கேஸ்வரர் என்னும் இறைவனுக்கும், அமுதவல்லியம்மன் என்னும் இறைவிக்கும் நடந்த உரையாடலைச் சேடியிடத்து அமுதவல்லியம்மன் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

 

“கையிலோர் கபாலமுடன் அமுதலிங்கர் பலிக்கு வந்தார் கடைவாய்ச் சென்றே 

கையமுதம் கொள்வீ ரென்றேன் கையமுதேன் வாயமுதம் கனிந்தீ என்றார் 

ஐயவம்புத்தனம் விடும் என்றேன் வம்புத்தனம் விடுத லறியாய் என்றார் 

அழகிது சையோக மென்றேன் பழகுதிசை யோக மென்றாரடி களோவேன் 

மெய்யட்ட மூர்த்தி யென்றேன் மெய்யட்ட மூர்த்தியென்றார் மின்னீர் தம்மேல் 

வீணாசை உடையீ ரென்றேன் மானாசையுடை யமென்றார் வினவற்

  கெல்லா 

நைய விடை தந்திரென்றே  னையவிடை தந்திரென்றே நகையும் செய்தார் 

நல்லையர் போமென்றேனீர் நல்லையர் நாமென்றா ரெள்ளா டாய் சேடி”


இந்நூலில் சிவபெருமானின் பெருமைகள், திருவிளையாடல் செய்திகள், அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர்ச் சிறப்புக்கள் விரிவாகப் பேசப் படுகின்றன. அமுதலிங்கேஸ்வரரின் வெற்றிப் புயங்களை, 

“மாமதுரைப் பதியிருந் தரசு பேணி 

மாநிலம் ஒருங்கே பொறுத்துப் புரந்தன 

மாமகள் விரும்பி அமரும் திருநலூரில்

 வாழமு தலிங்கேசர்  வெற்றிப் புயங்களே”

என்று புகழ்ந்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

 

3.அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் கோயில் கொண்டருளிய முத்துக்குமாரசாமி என்னும் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்

இயற்றியவர் - சூ.ஆ.முத்து நாடார் 

காப்புச் செய்யுள் - 1 வெண்பா 

நூல் - 10 பதினான்குசீர் ஆசிரிய விருத்தங்கள் 

ஆக 11 பாடல்கள் கொண்ட நூலாகும் இது.

ஆண்டு - 1908 

இந்நூற்கு அறுவர் சாற்றுக் கவிகள் பாடியுள்ளனர்.  

“கந்தனே சோதியருள் மைந்தனே வந்தெனைக் 

காத்து இரட்சித்து அருள்வையே”

 என்னும் சீர்களை இறுதிச் சீர்களாக எல்லாப் பாடல்களும் கொண்டு உள்ளன. திருநல்லூர்ச் சிறப்பு எல்லாப் பாடல்களிலும் இடம் பெறுகிறது. 

“காவினை யடற்கு நல்லூர்”, 

“களித்து வாழ்ந்து ஓங்கு நல்லூர்”, 

“காவலர்கள் ஓங்கு நல்லூர்”, 

“கற்பு நிலை ஆர்ந்த நல்லூர்”, 

“காமர் வளமுற்ற நல்லூர்”, 

“கவிவாணர் தங்கு நல்லூர்”, 

“கதிரொளி மழுங்கு நல்லூர்”, 

என்று ஒவ்வொரு பாடலிலும் வரும் அடைமொழிகள் மூலம் நல்லூர்ப் பெருமையை நன்கு உணர முடிகிறது. 

முருகனின் தோற்றப் பொலிவினையும், திருமால், பிரம்மா முதலான தேவர்கள் சூழ்ந்து நிற்கும் காட்சியையும், 

“சீருலவு மகுடமுடி ஓராறும் ஈராறு திரு நயன மாமலர்களும் 

             திகழ்மகர குண்டலக் காதுபனி ரண்டும் வினை

 தீர்க்குநீ றணிபொன் நுதலும் 

மேருமலை ஒத்தபுய மீராறு முந்நான்கு விரைமலர்க் கரமு மயில்கூர்

             வெற்றிவடி வேல்முதற் படைகளு மெடுத்துமயில் 

மீதினிற் கனிவு  கொண்டு 

வாருலவு கனதனக் குஞ்சரியொ டுங்குறவர் வஞ்சியிரு பாலு முலவ 

             மால்அயன் முதற்றேவர் சூழ்தரத் தொண்டர்திரு 

வாய்மலர் திறந்து போற்ற 

காருலவு பைந்தடங் காவுகள்வி னிந்திரன் காவினை யடற்கு நல்லூர் 

கந்தனே சோதியருள் மைந்தனே வந்தெனைக் 

காத்திரட் சித்தருள்  வையே. “

எனும் பாடல் நன்கு எடுத்து இயம்புகிறது.


kanmani tamil

unread,
Sep 12, 2024, 11:19:53 PM9/12/24
to vallamai

4. திருநல்லூரில் கோயில் கொண்டருளிய ஸ்ரீமத் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதான உச்சவாதிபதிகளாகிய புண்ணிய சீலர்களை வியந்து பாடிய வாழ்த்துக்கவிகள் 

இயற்றியவர் - க.சு.வெங்கடாசலம் பிள்ளை 

காப்புச்செய்யுள் - 1கட்டளைக்கலித்துறை - விநாயகர்

நூல் - 23 ஆசிரிய விருத்தங்கள் ஆக 24 பாடல்கள் அடங்கிய நூலாக உள்ளது. 

ஆண்டு - 1908 

சோமவாரம், பிரதோஷம், அட்டமி, அமுதாம்பிகை சுக்கிரவாரம், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, முத்துக்குமாரசாமியின் கார்த்திகை மகோற்சவ வாழ்த்துக் கவிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. 

பாடல்கள் பின்னிணைப்பு 10ல் தரப்பட்டுள்ளன.

 

5. அருப்புக்கோட்டை என்று பெயர் வழங்கிய திருநல்லூர்த் திருக்கோயிலில் எழுந்தருளும் முத்துக்குமாரசாமி என்னும் வேலவர் மாலை. 

இயற்றியவர் - சூ.ஆ.முத்து நாடார் 

காப்புச் செய்யுள் -1 வெண்பா - விநாயகர் 

நூல் - 30 கலி விருத்தங்கள் 

வாழ்த்துச் செய்யுள் -1 அறுசீர் ஆசிரியவிருத்தம் ஆக 32 பாடல்களைக் கொண்டுள்ளது இந்நூல். பாடல்கள் எளிய நடையில் அமைந்துள்ளன.

ஆண்டு - 1910 

முருகனின் தோற்றச் சிறப்பு, அவனது அருட்செயல்கள், திருநல்லூர் வளம் ஆகியன பேசப்படுகின்றன. 

“ஆறுமுகமும் அழகுபுயம் பன்னிரண்டும் 

நீரும் நுதலும் நேசவள்ளி குஞ்சரியும் 

ஏறுமயில் மீதிலேறி வந்தெனது துயர் 

தீருமையா கந்தா திருநல்லூர் வேலவனே” 

இது போன்ற பாடல்கள் இனிமை நயம் வாய்ந்தனவாய் எளிமையாய் அமைந்து முருகன் புகழ் பேசுகின்றன.


6. அருப்புக்கோட்டை அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் பதிகம். 

இயற்றியவர் - சு.ச.கதிர்வேலு நாடார்  

காப்புச் செய்யுள் -1 வெண்பா - விநாயகர் 

நூல் - 10 அறுசீர் ஆசிரிய விருத்தங்கள் 

வாழி விருத்தம் -1 ஆக 12 பாடல்கள் உள்ளன.

ஆண்டு - 1910 

விண்ணுள்ளார் துயரனைத்தும் தீர்த்த இறைவன், “மண்ணுள்ளார் குறை தீர்க்க இரவி, மதி, வன்னி என வகுத்த மூன்று கண்ணுள்ளார் அமுதவல்லியுடன் வில்வ வனத்தமர்ந்தார்.” என்று அமுதலிங்கேஸ்வரர் வில்வமரத்தின் அடியில் அமுதவல்லியுடன் இருக்கும் தோற்றம் குறிக்கப்படுகிறது. மேலும் இறைவனின் அரும்பெருஞ் சிறப்புக்கள் எடுத்து இயம்பப் படுகின்றன. திருநல்லூர் என்று வழங்கிய அருப்புக்கோட்டையின் வளமும் இனிதுறக் கூறப்படுகிறது. அருப்புக்கோட்டையின் வளமும், சிறப்பும்,  

“பானகநிகர் மொழிமடவார் நடனமிடும் பான்மையினைப் பார்த்தன் பாலே 

தோகைவிளை யாடுபொழில் சூழ்திருநல் லூரென்னும தூத்த லத்தில்” 

என்னும் அடிகள் மூலம் நன்கு உணர முடிகிறது.


kanmani tamil

unread,
Sep 13, 2024, 12:12:27 PM9/13/24
to vallamai

7. அமுதலிங்கேஸ்வரர் சிறப்புணர்த்தும் தனிப்பாடல்  

இயற்றியவர் - உடுமலை முத்துச்சாமிக் கவிராயர்

ஆண்டு - 1910 

வளம் செறிந்த நல்லூரில் எழுந்தருளியுள்ள அமுதலிங்கேஸ்வரரைத் துதிக்கத் திருவுள்ளம் கொண்டதை இப்பாடல் மூலம் ஆசிரியர் வெளிப்  படுத்துகிறார்

“இன்னம் எத்தனைநாள் இருந்தாலும் ஒருநாள் இறப்பதே சத்தியந்தான் 

தொண்டர்கீழ்த் தொண்டனான உன்கோயில் வலமாய்த் துதித்திட விரும்புகின்றேன் 

தென்னைமா பலவுமல் லிகைமுல்லை வர்க்கம் செழித்ததிரு நல்லூரில் வாழ் 

செம்பாக குணசீல சம்பூர்ண சுகபோக சிங்கார லிங்கேசனே.”

 

8. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர்  முத்துமாரியம்மன் பேரில் சிந்து, கும்மி, கீர்த்தனை 

இயற்றியவர் - சூ.ஆ.முத்து நாடார் 

காப்பு - 4 பாடல்கள் 

1.வெண்பா - விநாயகர்   

2.சந்தப்பா - விநாயகர்  

3.சந்தப்பா - சுப்பிரமணியர்  

4.சந்தப்பா - சரஸ்வதி 

நூல் - 55 சந்தப்பாக்கள் உள்ளன.

ஆக 59 பாடல்களை உடைய நூலாக உள்ளது. 

ஆண்டு - 1911 

மாரியம்மன் கோயில் வளம், ஒயில் கும்மி, சந்தக்கும்மி, கீர்த்தன மஞ்சரி, ஆசிரிய வண்ணச் சந்தம் என்னும் தலைப்புகளில் அனைத்துப் பாக்களும் சந்தப்பாக்களாக அமைந்துள்ளன. 

ஒயில் கும்மி என்னும் தலைப்பில் உள்ள, 

“சின்னஞ் சிறுசிறு பெண்டுகளே தேனில் 

சேர்ந்து விளைந்த கற்கண்டுக   ளே 

சீதங்கமழ் தாதன்குள மேவும் குருவாம் ஐங்கரன் 

சேவடி தன்னைப் படியுங்க   டி

கும்மி யடிங்கடி கும்மியடி கையைக் 

கொட்டியே கும்மி அடியுங்க   டி 

கொஞ்சும்கிளி அஞ்சுமொழி துஞ்சும்விழிப் பெண்காள் நலம்  

கோரிக் கும்மி அடியுங்க   டி

என்றும் இது போன்றும் அமைந்த பாடல்கள் நல்ல சந்த இன்பம் பயப்பனவாய் அமைந்துள்ளன.

நூலில் அமைந்துள்ள இசைப் பாடல்கள் போற்றத் தக்கனவாய் உள்ளன. கீர்த்தனமஞ்சரி என்னும் தலைப்பில் உள்ள பாடல் தக்க சான்றாய் அமையும். 

“பல்லவி 

வரந் தருவாயே மகேஸ்வரி 

       அனுபல்லவி 

செந்திரு நல்லூர் வாழ் சிவமய சொரூபி

                                                  (வ) 

தீரசூர சங்காரி சிரியேன் நேரில் 

                                                                   (வ)

சரணம் 

அல்லும் பகலும் உன்னை அடி பணிந்தேனே

கல்லும் கரைய நானே கவி செய்தேனே

                                                                                  (வ) 

சிங்கவாகனம் ஏறி எங்கும் நிறைந்த மாரி 

மங்களமாய் உன் பேரில் வழுத்தும் சொற்கு

                                                                                       (வ)

பக்தியுடன் துதிக்கும் முத்துச்சாமிக்கு 

குற்றம் வராது காத்துக் கொண்டிருந்து

                                                                                 (வ)”

மாரியம்மன் மீது பாடப்பட்டு இதில் இடம் பெற்ற சந்தக்கும்மி என்னும் பகுதியிலுள்ள பாடல்கள் தனித்தும் அச்சிடப்பட்டுள்ளன.

 

9. திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை மாநகர் ஸ்ரீஅமுர்தவல்லியம்மன் பதிகம் 

இயற்றியவர் - சூ.ஆ.முத்துநாடன் 

காப்புச் செய்யுள் - 1கலிவிருத்தம் - விநாயகர் 

நூல் - 10 பதினாறு சீர் ஆசிரிய விருத்தங்கள் 

வாழ்த்துச் செய்யுள் - 1 ஆசிரிய விருத்தம் 

ஆக 12 பாடல்கள் கொண்டதாய் இந்நூல் அமைந்துள்ளது. 

ஆண்டு - 1914 

பதிகமாய் அமைந்த பத்துப் பாடல்களிலும் ஈற்றுச் சீர்கள்,

 “அரவமணி பரமனிடம் அமருமணி எனையாளும் அழகமுர்தவல்லி

 உமையே” 

என்று அமைந்துள்ளன.  

“ஆர்குன் றிலங்குதிரு நந்தவன மும்சூழும் அழகு திரு நல்லூர்” என்றும், 

“ஆழ்ந்தகுள மும்படியும் சூழ்ந்தவய லும்திகழும் அமரர் புகழ் நல்லூர்” என்றும்,

 “அரிபஜனை சிவபஜனை விரிவாய் விளங்கிடும் அவனி துதி நல்லூர்” என்றும்,

 “அண்ணா மலைக்குள் வளர் உண்ணாமுலைக் குமரி அழகுதிரு நல்லூர்”  என்றும், 

“ஆயிமக மாயிசிவ மாயா சொரூபியே அழகு பொலி நல்லூர்”என்றும் 

பாடப்பட்ட பகுதிகள்அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூரின்  செல்வவளமும், தெய்வநலமும் பற்றி எடுத்துரைப்பனவாய் அமைகின்றன.


kanmani tamil

unread,
Sep 14, 2024, 4:30:16 AM9/14/24
to vallamai

10. அருள்மிகு முத்துமாரியம்மன் பதிகம் 

இயற்றியவர் - ச.சு.சங்கரலிங்க நாடார் 

காப்புச் செய்யுள் - 1 வெண்பா -  விநாயகர் 

  தல விநாயகர் துதி - 1 விருத்தம்  

நூல் - 10 பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்

வாழ்த்து -1 விருத்தம் ஆக 13 பாடல்கள் நூலில் உள்ளன.

ஆண்டு - 1915 

“சீர்கொண்ட திருநல்லூ ரூர் கொண்ட வன்னையே திருமுத் துமாரியுமையே” 

என்னும் சீர்கள் எல்லாப் பாடல்களிலும் ஈற்றுச் சீர்களாக அமைகின்றன. 

முத்துமாரியம்மனின் பல்வேறு பெயர்கள் அம்மனின் வீரச்செயல்கள், அரும்பெருங் குணங்கள் சிறப்புற எடுத்து இயம்பப் படுகின்றன. 

“தீராத வல்வினைகள் தீர்க்கும் உபகாரிநீ செகமெலாம் நின்ற வளும்நீ 

          சீர்பெற்ற பாண்டிய குமாரிநீ  சான்றோர்தம் சிந்தைக் கிசைந்த வளும்நீ

சூரசங் காரிநீ வீரசிங் காரிநீ சுருதி முடிவான வளும்நீ

          துர்க்கைப் பிசாசுபேய் பில்லிமா ரகவைப்பு சூனியம் தீர்ப்ப வளும்நீ 

கோராத துட்டரிட மமதையை அடக்கியே கும்பிடச் செய்ப வளும்நீ 

          கோடித் துதிக்குமென் துயரத்தை மாற்றியான் கோருமோர் வரமதருள்வாய் 

தோர்ந்த வீதியில் பேரார்ந்த மரகதச் செம்ப வளமே துலங்கும் 

          சீர்கொண்ட திருநல்லூர் ஊர்கொண்ட அன்னையே திருமுத் துமாரியுமையே.”

 

11. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அனவரத செல்வ விநாயகர் விளையாடல் 

இயற்றியவர் - முத்துச்சாமி கவிராஜ சரபம் 

தற்சிறப்புப் பாயிரம் - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம் 

காப்புச் செய்யுள் - 12 பாடல்கள் உள்ளன. வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறையால் ஆகியுள்ளன. 

நூல் - 70 பாடல்கள் ஆக 83 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

ஆண்டு - 1923 

இந்நூல் விநாயகர் புராணத்தைத் தழுவி எழுதப்பட்டதாக அமைந்துள்ளது. இசைப் பாடல்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. பிரதிஷ்டைக் கீர்த்தனம், கற்பு லட்சணம், கணேசர் வந்த சேதி தெரிந்து வள்ளி தன் சகியிடம் சொல்கிறாள், சகி சொல் பிரதி, விநாயகருக்கும் வள்ளிக்கும் வினா விடை, கைலாசம்- உமை- மகேசன் சல்லாபம், சிங்காரத்தோப்பு- திருநல்லூர்- அமிர்தலிங்கேஸ்வரருக்கும் அமிர்தவல்லிக்கும் சல்லாபம்- வசந்தருது, கஜமகாசுரனால் வந்த துன்பத்தைச் சொல்லித் தேவர்கள் முறையிடல், அதிதி- வரம் பெறல், காசிபமுனிவர் முன் காசிராஜன், அமிர்தலிங்கர் அமிர்தவல்லி வசந்தருது, வேதவதிக் கல்யாணப் பத்தினிக்கு உத்தமநாயகன் சொல்லும் சத்தியம், இந்திரன்- உருக்குமாங்கன் வடிவு கொண்டு முகுந்தனிடம் வருதல், வள்ளி நாயகி மணங்கொண்ட பின்பு மனம் வேறுபட்ட தெய்வயானைக்குப் பாங்கி பாங்கு பகர்தல் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. 

விநாயகர் புராணத்தில் இடம் பெற்றுள்ள புராணச் செய்திகள் மிகுதியாக உள்ளன. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அனவரத செல்வ விநாயகர் செயல் குறைவாக இடம் பெற்றுள்ளது. அருப்புக்கோட்டையின் சிறப்புக்களை எடுத்துக் கூறும் அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் வசந்தருது என்னும் பகுதி அருப்புக்கோட்டை நகரம் ஓர் அறிமுகம் என்னும் பகுதியில் அடிக்குறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. 

முத்துமாலைப் பிள்ளையார், தாதன்குளத்துப் பிள்ளையார், பாலச்சந்திர கணேசர், சந்தி விநாயகர், பாண்டிப் பிள்ளையார் இவர்களை ஆழாக்கு அரிசிப் பிள்ளையார்  அழைத்துக் கொண்டு அனவரதச் செல்வப்பிள்ளையார் கோயிலுக்கு வருவதாகக் கூறும் பகுதி அருப்புக்கோட்டையின் பல்வேறு இடங்களில் அமைந்த பிள்ளையார்களின் தலைவராக அனவரத செல்வ விநாயகர் விளங்குவதை எடுத்துரைக்கிறது. 

கற்பு லட்சணம் என்னும் பகுதியில் வாசுகி, அனுசுயை, சபவிரதை, நளாயினி, காரைக்காலம்மை, தமயந்தி, ஜானகி, நல்லதங்கை, சுயம்புவல்லி, கன்னிகா பரமேஸ்வரி, கண்ணகி, சாவித்திரி, இல்லற மாதர் நற்குடிப்பெண் ஆகிய பதினான்கு பேர் பற்றிய சிறப்பியல்புகளைக் காண முடிகிறது. 

“தூக்கிய கையுலக்கை - விட்டுவிட்டுச் சொல்வது கேட்க வந்தாள் 

வீக்கிய தோண்டிதனைக் - கயிற்றுடன் விட்டு வந்தாள் ஒருத்தி”  என்றும், 

தாவியெம லோகம் - சென்றுமுன் தன் கணவன் உயிரை 

மேவியுடன் கொண்டு - வந்த கதை மேதினி ஓதிடுமே” என்றும் 

வாசுகி, சாவித்திரி பற்றிப் பாடப் பட்டுள்ள சிந்துப் பாடல்கள் இனிமையாய் எளிமையாய் அமைந்து விளங்குகின்றன.


12. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் வாழவந்தம்மை பிள்ளைத்தமிழ் 

இயற்றியவர் - மு.நாகூர் முத்துப் புலவர் 

காப்புச் செய்யுள் - 1 ஆசிரிய விருத்தம் - தாதன்குள விநாயகர் வணக்கம் 

நூல் - 101 பன்னிருசீர் ஆசிரிய விருத்தங்கள் ஆக 102 பாடல்ககளால் இந்நூல் அமைந்துள்ளது.    

ஆண்டு - 1924 .

பெண்பாற் பிள்ளைத் தமிழ் என்பது; குழந்தை பிறந்த மூன்றாம் மாதம் முதல் இருபத்தோராம் மாதம் வரை ஒற்றித்த மாதங்களிலும், ஐந்தாம் ஏழாம் ஆண்டுகளிலும் காப்புப் பருவம் முதல் ஊசல் பருவம் வரை முறையே பாட்டுடைத் தலைவியைக் கேட்பித்தலாகும். 

இந்நூலில் காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊசற் பருவம் ஆகிய பத்துப் பகுதிகள் பற்றிப் பாடப்பட்டுள்ளன.

காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், சுந்தர விநாயகர், மாப்பிள்ளை விநாயகர், பாலசுப்பிரமணியர், தேவேந்திரன், திருமகள், கலைமகள், காளி, சத்தமாதர்கள், முப்பத்து முக்கோடி தேவர் ஆகிய பதினொருவர் பாடப்பட்டுள்ளனர்.

இந்நூல் பெரும்பாலும் தோத்திரவடிவச் செய்யுட்களால் யாக்கப்பெற்று இடையிடையே பற்பல சந்த வேற்றுமை நயங்களையும் தழுவி உவமை முதலிய பல அலங்காரங்களையும் தன்னுட் கொண்டு படிப்பவர்க்கு இன்பம் பயக்கும் திறத்ததாய் அமைந்திருக்கிறது. வடசொற்கள் பல விராயிருப்பினும் இவை ஆன்றோர்களால் தமிழ்ச் செய்யுட்களில் எடுத்தாளப்பட்டவையாக உள்ளன.

‘இஃதை அரங்கேற்றி வரும் காலத்தோர் நாள், காப்புப் பருவத்தில் நல்லை நகர்க்கரசியென வந்திருப்பதை அங்குள்ளார்களில் ஒருவர், “கிராம தேவதையாகிய வாழவந்தம்மை அரசியாவது எங்ஙனம்?” எனக் கடா விடுத்தனராக; நூலாசிரியர் “சர்வ லோகேச நாயகியான அம்பிகையை நல்லை நகர்க்கரசி என்பதாற்படும் இழுக்கு என்னை?” என விடை இறுத்தாராகவும்; ஆசங்கித்த புலவர் கனவில் அன்றிரவு வாழவந்தம்மை ஓர் அரசிளங் கன்னியாகிச் சேவை தந்து புன்முறுவல் கோட்டித் திருவுருக்கரந்தனராம்! இவ்வுண்மை அரங்கேற்றவைக் களத்தகத்தே மேற்கூறிய அன்பரால் வெளிப்படுத்தப்பட்டதென்ப எனில் இந்நூலின் பெருமையை வேறு வகையாக மேன்மைப்படுத்திக் கூறுதல் மிகை’ என்று இந்நூற்கு அணிந்துரை எழுதிய சங்கமுத்து என்பவர் இந்நூற்சிறப்பை அழகுற எடுத்துரைத்து உள்ளார். நீராடி அருள வேண்டிப் புலவர் பாடிய பாடலான, 

“வாசமிகு மான்மத மணிந்தம்பு யத்தினில் வழங்குமா வளமேந்தலால் 

       வாரணங் கொடுதிரைக ளள்ளிமரு வலர்சூழ வந்துமி னிறைந்தேறலாற் 

தேசுலவு கொடிமகர மும்படைத் திடுதலாற் சேர்ந்தவரை யாற்றுநீரால் 

        தெள்ளிய தமிழ்க்கட லுண்மைபெற நிற்றலாற் தெய்வநன்னிலையு முறலால்  

மூசுவரி வண்டாட வேம்பார மைந்தலால் முந்துபரி வாரமுறலால் 

        முன்னுறத் தந்தாவ ளத்தினிற் சென்றெவரு முறையொடு வணங்கிவரலால் 

வீசுபுகழ் செழியனுன் தாதைநிகர் வைகைநதி வெள்ளநீர் ஆடியருளே 

        வேழவயல் சூழ்நல்லை வாழவந் தம்மைபுது வெள்ளநீர் ஆடியருளே.” 

எனும் பாடல் வாழவந்தம்மையின் புகழ் பாடும் பாடலாக அமைந்து சிறக்கிறது. 


kanmani tamil

unread,
Sep 14, 2024, 4:03:49 PM9/14/24
to vallamai

13. அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் சங்கீத மாலை 

இயற்றியவர் - ச.சு.சங்கரலிங்க நாடார் 

காப்புச் செய்யுள் - 2 

 1.வெண்பா - விநாயகர் 

                                       2.விருத்தம் - முத்துமாரியம்மன்

 நூல் - 52 பாடல்கள் ஆக மொத்தம் 55 பாடல்கள் அடங்கியது இந்நூல் 

ஆண்டு - 1925 

பதிகம், தியானபஜனம், ஊசற் பஞ்சகம், ஊசல் பாட்டு, நிந்தாஸ்துதி, ஸ்தலதெய்வீகத்தியானம், என்னும் சிறு பிரிவுகளை உடையதாய் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் விருத்தப் பாக்கள், கீர்த்தனைகள், சந்த விருத்தங்கள், ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. சந்தவிருத்தத்தால் ஆன ஊசல் பாட்டு ஒன்று முத்துமாரியம்மனின் துதிப் பாடலாக அமைவதைக் கீழே காண்போம். 

“பொன்னே மணியே புகழ்மே வியமா பூவே பூங்கவியே

புலவாதாரமே இருமா நிதியே புனிதச் சுட ரொளியே

மன்னே மதியே பாலே பழமே மருவே மரகதமே 

மானே தேனே மருளே பொருளே மறையா கம வடிவே 

சொன்னேன் எனதோர் மனமார் தமிழே சூடும் குண சீலி 

துதிபெறு பாதம் அடிமை விநோதம் சுந்தரமூர்த்தி மகிழ் 

அன்னே திருநல்லூர் கருமாரி ஆடுக திருவூசல் 

ஆன்றோர் எனும் சான்றோர்க்கு அனுகூலி ஆடுக திருவூசல்.”

 

14. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் சான்றோர் குலதிலகமும் சற்குணதயாளருமான  ஸ்ரீமான் சி.த.நாகலிங்க நாடார் அவர்கள் சிவபத விளக்கம் 

இயற்றியவர் - அய்யம்பெருமாள் நாடார் 

நூல் - 100 பாடல்கள். பல்வகைப் பாடல்கள் உள்ளன.

ஆண்டு - 1925 

சி.த. நாகலிங்க நாடார் அவர்கள் பெருமை கூறும் நூலாய் இருப்பதோடு அருப்புக்கோட்டையின் புகழ் பாடும் நூலாகவும் அமைந்துள்ளது. அருப்புக் கோட்டையின் புகழை, 

“மருப்படாத திருநல் லூர்என் றிடும்

மாவருப் புக்கோட்டை தன்னில் எங்கும்

தெருக்கள் தோறும் சிவாலயமாம் எங்கும் 

தேவ பஜனை களே முழங்கும் 

இத்தலம் தன்னிலே உத்தம  ஷத்திரியர் 

ஏற்றதோர் ஆலயம் உண்டு செய்து 

பக்தியுடன் ஆறு காலப் பூசையதும்

பல்லாண்டு தோறும் நடக்கச் செய்தார். 

எத்திசை பார்த்திடில் பிச்சிமுல்லை வளம்

மிச்சமதாய்ப் பிர காசிக் குமே 

முத்திபெரும் நல்லை நாடார் ஹைஸ்கூல்என்ற

வித்தியா சாலையும் தோணுமடி 

தித்திக்கு மேபுகழ் முத்துமாரி யம்மன்

திசைக ளெங்கும் முழங்குவது 

பத்திக்கரு அமுதாம் பிகையோடு இப் 

பாரில் அமுதலிங் கேஷனருள்

தொண்டர் திருக்கூட்டம் எங்கும் நிரைகாட்டும் 

தோகையே இன்னல்லை மாநகரில்” 

என்னும் பகுதி மிக விரிவாக எடுத்தியம்புகிறது. அருப்புக்கோட்டையில் அமைந்த அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில், நாடார் உயர்நிலைப்  பள்ளி, பற்றி நன்கு அறிய முடிகிறது. பிச்சி, முல்லை வளம் சூழ்ந்திருக்கும் அருப்புக்கோட்டையின் வளம் அறியப்படுகிறது.

 

15. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் வாழவந்தம்மன் பேரில் சிந்து

இயற்றியவர் - பெயர் தெரியவில்லை. 

நூல் - 1 பாடல் 

ஆண்டு - தெரியவில்லை. 

‘சென்னிகுள நகர் வாசன்’ என்ற மெட்டில் அமைந்த ஒரே பாடலாக உள்ளது. திருநல்லூர் வளமும், வாழவந்தம்மன் சிறப்பும் ஒருங்கே பேசப்படுகின்றன. 

“வாசமலர்ப் பொழில் சூழு நல்லூர் 

வாழ வந்தம்மனை நாளும் திரு 

மணமட்டல ரடியைத் தொழுது இனிதுற்றிட வருவோம்”

என்று இவ்வாறு பாடல் தொடங்கிச் செல்கிறது.


kanmani tamil

unread,
Sep 15, 2024, 2:28:32 AM9/15/24
to vallamai

16. பஜனைப் பாடல் 

இயற்றியவர் - ச.சு.சர்க்கரைப் பாண்டியர் 

பாடல் - 1 

ஆண்டு -1965 

வரதராஜப்பெருமாள் புகழ் கூறித் துதிக்கும் பாடலாக அமைந்துள்ளது.

 

17. அருப்புக்கோட்டை எனும் நல்லூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் அகரவரிசைப் பன்னிருபா. 

இயற்றியவர் - இராஜாமணிப்பட்டர் 

காப்புச் செய்யுள் - 1 வெண்பா - செல்வவிநாயகர் 

நூல் - 12 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள், 

வாழ்த்துக்குறள் வெண்பா

 ஆக 14  பாடல்கள் உள்ளன. 

ஆண்டு - 1979 

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உயிரெழுத்தால் அகரம் முதல் ஔகாரம் ஈறாக ஆரம்பமாகி உள்ளது. பாடலின் நான்கு அடிகளும் பாட்டின் முதலடியில் வந்துள்ள உயிரெழுத்தைக் கொண்டே ஆரம்பமாகியுள்ளன. அமுதலிங்கேஸ்வரரின் பெருமையும் சிறப்பும் ஒருங்கே எடுத்துக் கூறும் சிறு நூலாக இது விளங்குகிறது. 

“அமுதலிங்கேஸ் வரரைத் துதிக்கு மெவர்க்கும் அணுகா துதீவினை யென்றும் 

அணுவாகி மலையாகி அண்ட பிண்டமாய் அனைத்துயி ருமான பரமன் 

அருவாகி உருவாகி அத்தனை யுமாகி அனைத்துக் கும்வே றாகி 

அகரமுத லான அமுதலிங் கேஸ்வரா அடியே னைக்காத் தருள்வாய்.”


18. அனவரத செல்வ விநாயகர் அகவல் 

இயற்றியவர் - அ.காசி 

ஆண்டு - 1979

இது 24 அடிகளைக் கொண்ட ஆசிரியப் பாவாக அமைந்துள்ளது. 

ஔவையார் இயற்றிய விநாயகர் அகவலின் இறுதிப் பகுதி, மிகக் குறைந்த மாற்றத்துடன் அந்நூலில் உள்ளவாறே இங்கு எழுதப்பட்டு இருக்கிறது. 

“ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்” என்று தொடங்கி;

 “கருத்தினில் கபால வாயில் காட்டி” என்று முடியுமளவு உள்ள பதினேழு அடிகள் ஏறக்குறைய ஔவையாரின் விநாயகர் அகவல் அடிகளாகவே உள்ளன.


kanmani tamil

unread,
Sep 15, 2024, 2:44:52 PM9/15/24
to vallamai

19. அனவரத செல்வ விநாயகர் மஞ்சரி 

இயற்றியவர் - அ.காசி  

 காப்புப் பாடல், வாழ்த்துப் பாடல் இல்லை.7 கலி விருத்தங்களால் ஆனது 

ஆண்டு - 1979 

விநாயகரின் பொதுவான தன்மைகளைக் கூறும் நூலாக உள்ளது.

 

20. வாலசுப்பிரமணியர் மஞ்சரி 

இயற்றியவர் - அ.காசி 

நூல் - 4 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள் 

காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா இடம் பெறவில்லை. 

ஆண்டு - 1979 

தென்பொதிகை மாமுனிக்கு உபதேசம் செய்தது, கார்த்திகை மகளிரால் வளர்க்கப் பெற்றது ஆகிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன.

 

21. அருப்புக்கோட்டை அருள்மிகு வாலசுப்பிரமணியர் பதிகம் 

இயற்றியவர் - அ.காசி 

காப்புச் செய்யுள் - 1 கலித்துறை - சித்திவிநாயகர்

நூல் - 10 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள் 

வாழ்த்து - 1 அறுசீர் விருத்தம் 

ஆண்டு - 1979 

ஆக 12 பாடல்கள் உள்ளன. எல்லாப் பாடல்களும் “வந்தருள்வாய் வாலசுப்பிரமணியா நீ” என்னும் ஈற்றுச் சீர்களைக் கொண்டு முடிவடைகின்றன. வாலசுப்பிரமணியர் கோயில் கொண்டுள்ள இடத்தை

“..................................................................திருநல்லூர் நாடார்தம் பணிசிறக்க 

கலகலத்த மூன்றுவீதி கூடுகின்ற அருப்புக் கோட்டையெனும் நல்லூரின் 

மையமதில் 

வலதுகரம் வேலேந்திக் காட்சிதரும் வாலனே…………………………………….” 

என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.


kanmani tamil

unread,
Sep 16, 2024, 1:51:46 AM9/16/24
to vallamai

22. அருப்புக்கோட்டை அருள்மிகு அமுதவல்லியம்மன் பதிகம் 

இயற்றியவர் - அ.காசி 

காப்புச் செய்யுள் - 3 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள்

சங்கர விநாயகர், சிவபெருமான், அமுதவல்லியம்மன் ஆகிய மூவர் மீது பாடப்பட்டுள்ளன.

நூல் - 10 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள் 

வாழ்த்து விருத்தம் - 1 

ஆக 14 பாடல்கள் உள்ளன. 

ஆண்டு - 1979 

நல்லூரில் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பிடம் கொண்டு எழுந்தருளியிருப்பது சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

“அறைகின்ற நான்மறை சூல்(SIC) நல் லூரின் அமுதலிங் கேஸ்வரர் பதிதனில் 

உறைகின்ற நின்திருக் கோயில் நாடி நும்அருள் பெற்றுச் சிறக்க 

நிறைந்தபெரு கருணை வரத ராசர் வலவெளிப் புறத்தே நிற்கக் 

குறைதீர்க்கும் நல்லூர் உமையே சுகந்தனை அருள்வாய் அமுத வல்லியே.” 

தொலையாத நிதியமும் கீர்த்தியும் தந்து உலக உயிர்களைப் புரக்கும் அமுத வல்லியம்மனின் சிறப்பு பலவாறாகப் பேசப்பட்டுள்ளது. 

“அருள்வாய் அமுதவல்லியே” என்று முதல் பாடலில் வந்த ஈற்றுச் சீர்கள் எல்லாப் பாடலிலும் ஈற்றுச் சீர்களாக அமைந்து இருக்கின்றன.

 

23. அருள்மிகு அமுதவல்லியம்மன் போற்றி வழிபாடு 

இயற்றியவர் - அ. காசி 

நூல் - 108 போற்றிகள் 

ஆண்டு - 1979 

“அருந்தவச் செல்வியே போற்றி

அருமறையின் வரம்பே போற்றி”

என்று ஆரம்பித்து, 

“வாட்டும் வல்வினை தீர்ப்போய் போற்றி

காட்சிக் கினியாய் போற்றி போற்றி” 

என்று முடிவடைகிறது. 

அம்மையின் அருட் பெருங் குணங்களை உணர்த்தியும், அம்மையின் பல்வேறு குணங்களை எடுத்துக் கூறியும் இப்போற்றி வழிபாடு அமைந்துள்ளது. ஊழ்வினை தீர்ப்போய். ஔவியம் அல்லாய், வறுமை நோய் தீர்ப்போய் என்பன அம்மையின் அருட்செயல்களை உணர்த்துகின்றன. ஏகன் துணைவி, கனகாம்பிகை, சொக்கர் தேவி மீனாட்சி அம்மை, அருப்புக்கோட்டை அமுது போன்றன அம்மையின் சிறப்புப் பெயர்களை உணர்த்துவனவாக உள்ளன.


24. அமுதவல்லி அந்தாதி 

இயற்றியவர் - இராஜாமணிப்பட்டர் 

காப்பு - 1.வெண்பா - சித்திவிநாயகர் மீது 

நூல் - 50 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள் 

வாழ்த்துப்பா - 1 எழுசீர் ஆசிரியவிருத்தம் 

ஆக 52 பாடல்கள் நூலில் உள்ளன. 

ஆண்டு - 1979 

அமுதவல்லியம்மன் மீது அந்தாதித் தொடையுடன் அமையப் பெற்றதால் இந்நூல் அமுதவல்லி அந்தாதி என்று பெயர் பெற்றுள்ளது. 

அமுதவல்லி அம்மையின் அரும்பெருங் குணங்கள் வரிசையாகப் பாடப்பட்டுள்ளன. அம்மனின் புகழ் பாடும் நூலாக அமைந்துள்ளது. அம்மனின் பல்வேறு பெயர்களைக் கூறி விளித்துப் பாடும் பாடல்கள் மிகுதியாக உள்ளன. 

“நாயகீதி ரிபுவன தா(SIC)யகீ நவசக்தி நாரா யணன் சோதரீ 

நாரீமணி அஷ்ட லக்ஷுமீ கலைவாணீ  நாதாந்த மோன விளைவே 

நாதனாம் அமுதலிங் கேஸ்வரன் நாயகீ அமுத வல்லித் தாயியே

நால்வேத மறுசமயமும் புகழ் ஞானஒளிச் சோதியே ஒளி விளக்கே.”


kanmani tamil

unread,
Sep 17, 2024, 1:44:22 AM9/17/24
to vallamai

25. அருள்மிகு பழனியாண்டவர் பதிகம் 

இயற்றியவர் - அ.காசி 

காப்புச் செய்யுள் - 2 கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் 

1. விநாயகர் - எழுசீர் ஆசிரியவிருத்தம் 

2. முருகன்  - எண்சீர் ஆசிரிய விருத்தம் 

நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள் 

வாழ்த்து - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம் 

ஆக 14 பாடல்கள் கொண்ட நூலாகஉள்ளது. 

ஆண்டு - 1979 

“குறைதீர்க்க வந்தருள்வாய் நல்லூர்க் குமரா” என்னும் ஈற்றுச் சீர்களை எல்லாப் பாடல்களும் பெற்றிருக்கின்றன. முருகனின் தோற்றச் சிறப்பும் அவன் தன் அருட்குணங்களும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. ‘நல்லூர்க் குமரா’ என்று நூலின் பல இடங்களில் விளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

26. அருப்புக்கோட்டை அருள்மிகு அனவரத செல்வ விநாயகர் பதிகம் 

இயற்றியவர் - அ.காசி 

காப்புச் செய்யுள் - 1 வெண்பா - அனவரத  செல்வவிநாயகர்  

நூல் - 10 கலி விருத்தங்கள் 

வாழ்த்து - 1 விருத்தம் 

ஆக 12 பாடல்கள் நூலில் உள்ளன. 

ஆண்டு - 1979 

“வரமெமக் கருள்வயே” என்னும் சீர்கள் எல்லாப் பாடல்களிலும் ஈற்றுச் சீர்களாக உள்ளன.

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் இடம் கொண்ட அனவரத செல்வ விநாயகர் மீது பாடப்பட்ட பதிகம் ஆகும் இது. விநாயகரின் பெருமை பாடும் நூலாக உள்ளது. விநாயகரின் தோற்றமும் இனிது விளக்கப்பட்டுள்ளது. 

“யானை முகத்தோய் நாலிரு புயமும் கொண்டோய் 

பானை வயிறு பெற்றோய் வேலவர் முன்னோய்” 

என்றும், 

“சுற்றிய பூந்துகில் ஆடையும் அரவக் கிண்கிணியும் 

நெற்றியில் இலங்குசிந் தூரமும் மும்மதச் சுவடும் 

பற்றிய அங்குச பாசமும் கொண்ட கணேச” 

என்றும் விநாயகர் தோற்றம் வருணிக்கப்படுகிறது. 

அனவரத செல்வ விநாயகரை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யக் கொண்டு வரும் பொழுது வள்ளிக்குளம் அருகே வண்டியின் அச்சு முறிந்து இடருற்றதைக் குறித்துள்ளார். இந்நிகழ்ச்சியினை, 

“தொடர்ந்து நல்லூர் வந்திட விரைந்த போழ்து 

நடந்து கால்கள் நொந்த களைப்பு உற்றுநீ 

கிடந்தாய் வள்ளிக்குளமாம். .........”

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.


27.நல்லூர் பழனியாண்டவர் மஞ்சரி 

இயற்றியவர் - அ.காசி 

ஆண்டு - 1979

காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா எதுவும் இல்லை.

நூல் - 5 எண்சீர் ஆசிரிய விருத்தங்களால் ஆகியுள்ளது.

இதில் பழனி, திருத்தணிகை, திருப்பரங்குன்றம் ஆகிய தளங்களின் பெருமை பேசப்படுகிறது.

 “தெள்ளுதமிழ்ச் சொல்லாலே ஒளவைக் கறிவைத் தந்தனனே“ என்று ஒளவைக்கு அறிவு புகட்டிய செய்தி பாடப்பட்டுள்ளது.

kanmani tamil

unread,
Sep 18, 2024, 1:44:48 AM9/18/24
to vallamai

28. நல்லூர் பழனியாண்டவர் போற்றி அகவல் 

இயற்றியவர் - அ.காசி 

இப்பாடல் 17 அடிகளைக் கொண்டதாக உள்ளது. 

ஆண்டு - 1979 

“நல்லூர் வந்த ஆண்டவா போற்றி 

இல்லம் சிறக்க இருப்பாய் போற்றி

 ....................................................................

அறப்பணி சிறக்க அருள்வாய் போற்றி” 

என்று பாடல் தொடங்கி முடிவுறுகின்றது. பழனியாண்டவரின் அருங்குணங்களே பாடப்பட்டு உள்ளன.

 

29. அருள்மிகு ஆஞ்சநேயர் பதிகம் 

இயற்றியவர் - அ.காசி  

காப்புச் செய்யுள் - 2 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள் 

1 - விநாயகர் 

2 - ஆஞ்சநேயர் 

நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள் 

வாழ்த்து - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம் 

ஆக 13 பாடல்களைக் கொண்ட நூலாகும் இது. 

ஆண்டு - 1980 

ஆஞ்சநேயர் புகழ் பாடும் நூலாக அமைந்துள்ளது. 

“பராரை ஏற்றுநற் பணிபல புரிந்தனை 

பயனுற மருந்து மலைதனைக் கொணர்ந்தனை 

இராம நாமமும் உச்சரிப் போர்க்கு

இசைவுறு வாழ்வுங் கொடுத்து உதவினை 

இராவண வதத்தைப் பிராட்டி அறிய 

இனிதே இயம்பிய இன்முக முதல்வ 

இராம தூதனாய் நற்பணி புரிந்தோய் 

ஈன்ற தாயாய் வந்தெமைக் காப்பாய்” 

என்று இது போல் ஆஞ்சநேயர் புகழ் கூறும் நூலாக அமைந்துள்ளது.

 

30. அருள்மிகு வரதராஜப் பெருமாள் பதிகம் 

இயற்றியவர் - அ.காசி 

காப்புச் செய்யுள் - 2 

1. கலிவிருத்தம் - விநாயகர் 

2. எழுசீர் ஆசிரியவிருத்தம் - வரதராஜர் 

நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள் 

வாழ்த்து - 1 கலிவிருத்தம்

ஆக 14 பாடல்கள் நூலில் உள்ளன

ஆண்டு - 1980 

“வளமுற வாழவே வரந்தா வரதா” 

என்று எல்லாப் பாடல்களின் ஈற்றுச் சீர்களும் அமைந்துள்ளன.

திருமாலின் அவதாரச் சிறப்புகள், உயிர்களுக்கு அருள் புரியும் தன்மைகள் எடுத்தியம்பப்பட்டுள்ளன. 

“கள்ள நாடகம் ஆடிக் காட்டினை 

கண்ண னாகநீ கீதை ஓதினை 

குள்ள னாகநீ உருவங் கொண்டனை 

காலால் மிதித்துமே மகிமை காட்டினை 

பரந்தா மனாகநீ பாரில் உதித்தனை

 பரமன் தத்துவம் பாரோர்க்கு உணர்த்தினை 

விரைந்து கல்கியாய் வந்தெ மக்குமே 

வளமுற வாழவே வரந்தா வரதா” என்று எல்லாப் பாடல்களுமதிருமாலின் பெருமை பாடுவனவாக அமைந்துள்ளன.


kanmani tamil

unread,
Sep 19, 2024, 3:38:19 AM9/19/24
to vallamai

31. வரதராஜப் பெருமாள் மாலை 

இயற்றியவர் - அ.காசி 

நூல் - 20 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள் 

காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா இதில் இடம் பெறவில்லை. 

ஆண்டு - 1980 

திருமாலின் புகழ் பேசுவதோடு வாழ்க்கை அறங்களை எடுத்துரைக்கும் நூலாக அமைகிறது. 

“மிதமிஞ்சி வார்த்தைகளைப் பேச வேண்டாம் 

மெய்யறத்தை ஒருபோதும் தகர்க்க வேண்டாம் 

மதமான ஆங்காரம் கொள்ள வேண்டாம் 

மர்மத்தை ஒருநாளும் விரிக்க வேண்டாம் 

பதம்போற்றி வேங்கடவன் கோயில் கொள்ளும் 

பதிதோறும் வலம்வந்தால் குறைகள் தீரும்.” 

என்று மக்கட்குத் தேவையான வாழ்க்கை நெறிகள் விரிவாகப் பாடப்பட்டுள்ளன.

 

32. அருள்மிகு ஆஞ்சநேயர் கவசம் 

இயற்றியவர் - அ.காசி 

காப்பு - 1 வெண்பா - விநாயகர் 

ஆண்டு - 1982 

கந்த சஷ்டி கவசம் போன்று அமைந்துள்ளது. 

“நன்னெறி நெற்றிக் குங்குமம் காக்க 

நன்பொன் மணியணி மார்புங் காக்க

மின்னும் இரத்தினத் தோடணி காக்க 

மேதகு கிரீட முடியும் காக்க 

காக்க காக்க கதையுங் காக்க 

கருங்கடல் வண்ணத் தொண்டன் காக்க 

நோக்க நோக்க நெஞ்சம் நோக்க 

நெடுமால் தொண்டன் இணையடி காக்க “


33. மாரியைப் பணிகுவம் 

இயற்றியவர் - அ.காசி 

காப்புச் செய்யுள் - 2

1. விநாயகர் காப்பு 

2. மாரியம்மன்  

நூல் - 28 பாடல்கள் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

வாழ்த்து - 1

ஆக 31 பாடல்கள் நூலில் உள்ளன.

 ஆண்டு - 1982 

அருளமிர்தம், மாரியைப் பணிகுவம், வரம்தா மாரி, நல்லூர் முத்துமாரியம்மன் தோற்றம், மாரி புகழ் பாடுவம், அம்மன் கும்மி, நல்லூர் முத்துமாரியம்மன், அருள் முத்துமாரி, அகிலங் காக்கும் அன்னை, மாரிமகிமை, என்னும் பத்துத் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்நூலில் மாரியம்மன் அருட்திறம், அவளது புகழ், வரம் தரும் மாண்பு ஆகியன பலவாறாகப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளன. 

“நாதத் தில்ஒளிர் நல்லூர் மாரியே நாடும் பாவினில் கூடும் வீரியே 

ஆதரித்து தருள்வாய் அன்னை மாரியே அழகிய நல்லூரின் முத்து மாரியே 

அறிவினால் சேர்வது நாளா னந்தம் அருளினால் பெறுவது பிரமா னந்தம்

அறிந்ததும் அருள்வதும் பேரா னந்தம் அதுவன்றி எமக்கிலை வேறானந்தம்.” 

எனும் பாடல் மாரியம்மன் உயிர்களுக்கு ஆனந்தம் அளிக்கும் அருமையை எடுத்துரைக்கிறது.


kanmani tamil

unread,
Sep 20, 2024, 2:22:50 AM9/20/24
to vallamai

34. அருள்மிகு பாலசண்முகர் பதிகம் 

இயற்றியவர் - அ.காசி 

காப்புச்செய்யுள் - அறுசீர் ஆசிரியவிருத்தம் - கணபதி 

நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தம். 

வாழ்த்து - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம் 

ஆக 12 பாடல்கள் கொண்ட நூல்

ஆண்டு - 1983 

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமுதவல்லியம்மன் சந்நிதியின் உட்பிரகாரத்தில் அமைந்த முருகன் மீது பாடப்பெற்றதாகும். 

பாலசண்முகப் பெருமானின் அருட்செயல்கள், அவனது அருங்குணங்கள், அவனது தோற்றப்பொலிவு ஆகியன விளக்கமுறப் பாடப்பட்டுள்ளன. பால சண்முகனின் தோற்றச் சிறப்பை,

“ படெமடுத்து ஊர்ந்துவரும் நாகங் கண்டோம்

 புள்ளிமயில் எழிலாக நிற்கக் கண்டோம் 

அடம்பிடித்த பாலநீயும் அமரக் கண்டோம் 

ஆறுமுகங் கொண்டுநீயும் விளங்கக் கண்டோம்  

 உடம்பினிலே உயிர்சேர வாழ்வும் கண்டோம் 

ஒளிமயிலில் நீயமர்ந்த எழிலும் கண்டோம்.“

என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம்.


35. பாலசண்முகன் பாமாலை  

இயற்றியவர் - அ.காசி 

நூல் - 14 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள் 

ஆண்டு - 1983 

காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா இதில் இடம் பெறவில்லை. 

முருகன் உலக உயிர்களின் துன்பத்தை நீக்கி அருள் தரும் சிறப்பு விரித்துரைக்கப்படுகிறது. முருகன் எல்லா இடங்களிலும் கோயில் கொண்டுள்ள சிறப்பை, 

“எந்தமலை  யானாலும் ஏறி நிற்பாய் 

இறங்கி வந்து நிலத்தினிலே கூடி நிற்பாய் 

கொந்தளிக்கும் கடலினிலே விரும்பி நிற்பாய்

 கொத்து மலர்ச் சோலையிலும் உவந்து நிற்பாய் 

தஞ்சமென்று உனைப் பணிந்தோம் நல்லூர் பாலா…” என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம்.


 36. பாலசண்முகர் வருகைப்பத்து 

இயற்றியவர் - அ.காசி 

நூல் - 10 கலி விருத்தப் பாக்கள் 

ஆண்டு - 1983 

காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா இல்லை. 

‘வருவாயே’ என்று எல்லாப் பாடலும் முடிவடைவதாலும் பத்துப் பாடல்கள் உள்ளதாலும் இந்நூல் வருகைப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது. 

“வானக வளர்வணிகர் அணிநல்கும் நல்லூரில் 

ஆகமம் அருளுகின்ற அமுதலிங்க ஈஸ்வரர்தம் 

பாகம் பெற்றவளாம் அமுதவல்லி அகமகிழ 

தோகை மயிலேறி துயர் தீர்க்க வருவாயே “

இப்பாடலில் ஊர்ச்சிறப்பும், கோயிற் சிறப்பும் உடன்கூறி முருகனை அழைக்கும் திறன் சிறப்பாக உள்ளது.


kanmani tamil

unread,
Sep 21, 2024, 1:53:10 AM9/21/24
to vallamai

37. அருள்மிகு சித்திவிநாயகர் பதிகம் 

இயற்றியவர் - அ.காசி 

காப்புச் செய்யுள் - 1.வெண்பா 

நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள் 

வாழ்த்து - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம் 

ஆக 12 பாடல்களைக் கொண்டது இந்நூல். 

ஆண்டு - 1983 

“காப்பாய் எமையே” என்னும் இரு சீர்கள் எல்லாப் பாடல்களிலும் இறுதிச் சீர்களாக அமைகின்றன.

 

முடிவுரை 

அருப்புக்கோட்டையிலுள்ள கோயில்களில் எழுந்தருளியுள்ள அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மன், முத்துமாரியம்மன், வாழவந்தம்மன், அனவரத செல்வ விநாயகர், சுப்பிரமணியசாமி, வரதராஜப் பெருமாள், அனுமான், பாலசண்முகர் ஆகியோர் பற்றி முப்பத்தேழு நூல்கள் பாடப்பட்டுள்ளன. அ.காசி என்பவர் பத்தொன்பது நூல்களும், சூ.ஆ.முத்து நாடார் நான்கு நூல்களும், இராஜாமணிப்பட்டர், உடுமலை முத்துச்சாமிக் கவிராயர், வேங்கடசுப்புப் பிள்ளை, ச.க.சங்கரலிங்க நாடார் ஆகியோர் இரண்டிரண்டு நூல்களும் அய்யம்பெருமாள் நாடார், க.ச.கதிர்வேலு நாடார், ச.சு.சர்க்கரைப் பாண்டியர், மு. நாகூர் முத்துநாடார், க.சு.வெங்கடாசலம் பிள்ளை ஆகியோர் ஒவ்வொரு நூலும் இயற்றியுள்ளனர். வாழவந்தம்மன் சிந்து என்னும் நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. அ. காசி என்பவர் குறைந்த பாடல்கள் கொண்ட பல நூல்கள் இயற்றியுள்ளார். அமுதலிங்கேஸ்வரர் மாலை, நல்லூர்க் கலம்பகம், வாழவந்தம்மன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் ஒவ்வொன்றும் நூறு பாடல்களைக் கொண்டுள்ளன. விநாயகர் விளையாடல் எண்பத்து மூன்று பாடல்களைக் கொண்ட நூலாக உள்ளது. 

மாலை, கலம்பகம், பதிகம், பிள்ளைத்தமிழ், பன்னிருபா, அந்தாதி போன்ற சிற்றிலக்கிய வகைகளில் சில நூல்கள் எழுந்துள்ளன. சிந்து, கும்மி, கீர்த்தனை போன்ற இசைப் பாடல்களைக் கொண்ட நூல்களும் குறிப்பிடத்தக்கனவாய் அமைந்துள்ளன. அகவல், கவசம், மஞ்சரி என்னும் பெயர்களிலும் நூல்கள் பாடப்பட்டுள்ளன. அனைத்து நூல்களும் இறைவன் சிறப்புக்களை வெளிப்படுத்தி மக்கள் உள்ளத்தில் இறை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.


kanmani tamil

unread,
Sep 22, 2024, 1:16:46 AM9/22/24
to vallamai
முடிவுரை

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்கு உரிமையான கோயில்கள் பற்றி இவ்
ஆய்வேடு மதிப்பீடு செய்கிறது. 1887ம் ஆண்டு தச்சுப்பணி செய்யப்பட்ட
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் தொடர்ந்து இன்னும் சிற்பிகள் வேலை செய்கின்றனர்.
இக்கோயிலைச் சிறிதுசிறிதாக வளர்ச்சி அடையச் செய்துள்ளனர். இப்பொழுதும்
இக்கோயிலுக்கு இராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பது நாடார்
சமூகம் இடையறாது இறைப்பணியில் ஈடுபட்டிருப்பதை உணர்த்துகிறது.

மிகப்பெரிய கோயிலாக அமுதலிங்கேஸ்வரர் கோயில் அமைந்து இருப்பினும்; இங்கு
வழிபட வருபவர் குறைவாகவே காணப்படுகின்றனர். முத்துமாரியம்மன் கோயிலில் வழிபட
வருபவர் மிகுதியாக உள்ளனர். இதற்குக் காரணம் நாடார் சமூகம் சிறு தெய்வ
வழிபாட்டிற்கு முதலிடம் கொடுப்பதாகக் கருத இடமுண்டு.

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெறும் விழாக்கள் யாவும் பிற சிவன் கோயில்களில்
நடைபெறும் விழாக்களைப் பின்பற்றுவனவாக உள்ளன.

நாடார் சமூகத்தினர் சமயப்பொறை உடையவர் என்பதனை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில்
அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் சந்நிதி, அனுமன் சந்நிதி ஆகியன எடுத்துக்காட்டி
நிற்கின்றன. நாடார் உறவின்முறையினர் கோயில் வருமானம் கொண்டு மேலும் மேலும்
கோயிலையே வளப்படுத்துகின்றனர். மக்களின் சமய அறிவை வளர்க்க ஆவன செய்யலாம்.

கோயிலுக்குத் தீர்த்தச் சிறப்பு மிகமிக இன்றியமையாததாகும். கோயிலில்
அமைந்துள்ள தெப்பம் கோயிலின் பெருமையை உணர்த்துவதாக அமையும். ஆனால்
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் இரு தெப்பங்கள் இருந்து அவை மூடப்பட்டு விட்டன
என்று அறிவது வருந்தத்தக்கது.

கோயில்களில் தேர்களும் யானைகளும் முன்பு இருந்தன என்று அறிய முடிகிறது.
திருவிழாக்களின் போது சாமி புறப்பாடு இல்லாத காரணத்தால் தேர்கள் அழிவுற்றன.
யானைகளும் பேணப்படவில்லை. பிற சமூகத்தாரோடு இணைந்து வாழத் தெரிந்த
இச்சமூகத்தார் மீண்டும் திருவிழாக்களின் போது சாமி புறப்பாட்டினை
ஏற்படுத்தினால் சிறப்பாக அமையும்.

வாழவந்தம்மன் தெய்வம் பற்றி மேலும் ஆய்வு நிகழ்த்த இடமுண்டு. பல தோற்றங்களில்
காணப்படும் வாழவந்தம்மன் பற்றிய சில உண்மைகள், நாடார் சமூகம் பற்றிய சில
உண்மைகள் ஆய்வில் வெளிப்பட வாய்ப்புண்டு.

அமுதலிங்கேஸ்வரர் கோயிலில், கோயில் திருப்பணி செய்தவர்கள் பெயர், ஆண்டு,
கோயிலுக்குரிய சொத்து விபரம் முதலியன தெளிவாக அன்று முதல் இன்று வரை
குறிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நூற்றாண்டுக் காலக் கல்வெட்டுத் தமிழ் பற்றி
ஆராய இடமுண்டு.

கட்டிடக்கலை, சிற்பக்கலை பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சிக்கும் இடமுண்டு.


On Sat, Sep 21, 2024 at 11:22 AM kanmani tamil <kanmani...@gmail.com>

kanmani tamil

unread,
Sep 23, 2024, 2:16:09 AM9/23/24
to vallamai

துணைநூற் பட்டியல்

தமிழ் நூல்கள்

 

அய்யம்பெருமாள் நாடார்  - அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் சான்றோர் குலதிலகமும் சற்குணதயாழருமான ஸ்ரீமான் சி.த.நாகலிங்க நாடார் அவர்கள் சிவபத விளக்கம், நாடார் பிரஸ், மதுரை, 1925.


அருணாசலம்,ப.- சைவசமயம்- ப.அருணாசலம், நாகர்கோவில்.- முதல் பதிப்பு- 1979

 

இராகவன்,அ.- தமிழ் நாட்டுத் திருவிளக்குகள் - New Century Book House pvt. Ltd. , சென்னை. - முதல் பதிப்பு - 1964

 

இராசமாணிக்கம்,தி.- இந்து சமயக் கடவுள்களின் திருவுருவங்கள் - கழக வெளியீடு, திருநெல்வேலி. - முதல் பதிப்பு - 1982

 

இராஜாமணிப்பட்டர்& அ.காசி - அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் திருத்தல வரலாறும் திருவாலய அமைப்பும், ஏகாதசி மாதர் குழுவினர், அருப்புக்கோட்டை. (ப.ஆ.இல்லை)


காசி.அ.- அருப்புக்கோட்டை அருள்மிகு அனவரத செல்வ விநாயகர் பதிகம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1979

 

காசி.அ. - அருப்புக்கோட்டை அருள்மிகு அமுதவல்லியம்மன் பதிகம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1979

 

காசி.அ.- அருப்புக்கோட்டை அருள்மிகு பழனியாண்டவர் பதிகம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1979

 

காசி.அ.- அருப்புக்கோட்டை அருள்மிகு வாலசுப்பிரமணியர் பதிகம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1979

 

காசி.அ.- அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாள் பதிகமும் மாலையும், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1980

 

காசி.அ. - அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் நாடார்கள் உறவின் 

முறைக்குப் பொதுப் பாத்தியமான அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளிய அருள்மிகு ஆஞ்சநேயர் பதிகமும் நவக்கிரகத் தோத்திரமாலையும், இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1981

 

காசி.அ. - மாரியைப் பணிகுவம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1981

 

காசி.அ. - அருள்மிகு ஆஞ்சநேயர் கவசம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1982

 

காசி.அ. - அருள்மிகு பாலசண்முகர் பாமாலை, இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1983 


காசி.அ. - அருள்மிகு சித்திவிநாயகர் தரிசனமும், பதிகமும், இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1983

 

காசி.அ.& முத்துச்சாமிக் கவிராயர்  - அருப்புக்கோட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஏனாதிநாத நாயனார் பதிகமும் குருபூசைப் பாடல்களும், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1980 


கார்த்திகேயன் - ஸ்ரீவிநாயகர் புராணம், வாசு பிரசுரம், சென்னை, முதற்பதிப்பு, 1980

 

சங்கரலிங்க நாடார்,ச.சு.,அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன்சங்கீத மாலை, ஸ்ரீநடராஜ நாடார் (ப.ஆ.), அருப்புக்கோட்டை, 1925

 

சங்கரலிங்க நாடார்,ச.சு. ,ஏனாதிநாத நாயனார் சரித்திரம், அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை, அருப்புக்கோட்டை. (ப.ஆ.இல்லை )


சிவப்பிரகாசமுதலியார் - அபிதானசிந்தாமணி - Asian Educational Services- புது டில்லி. - இரண்டாம் பதிப்பு - 1968 


சுப்பிரமணிய முதலியார்,சி.கே. - பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் பகுதி - கோவைத் தமிழ்ச் சங்கம், கோயம்புத்தூர். - 2-ம் பதிப்பு - 1968 


செந்துறை முத்து - திருக்கோயில் தத்துவம் - ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை. 2ம் பதிப்பு - 1981 


ஜெயபாண்டியன்,எஸ்.டி.(மொ.ஆ)- தமிழக நாடார் வரலாறு - முருகன் பப்ளிகேஷன்ஸ், தூத்துக்குடி. - முதல் பதிப்பு - 1979

 

ஜெகஜீவகருணாலயநிதி - இந்துமத விரதங்களும் அதன் மகிமைகளும் - பராசக்தி பதிப்பகம் , மதுரை. - 6ம் பதிப்பு - 1983

 

சொக்கலிங்கம்,அ.,- ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் - முதல் புத்தகம் - கழக வெளியீடு, திருநெல்வேலி - முதல் பதிப்பு - 1952

 

 செல்லப்பாண்டியன், அ. - ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் - 2 ம் புத்தகம் - கழக வெளியீடு, திருநெல்வேலி. முதல் பதிப்பு - 1953  

தேமொழி,குரு.- நாடார் சமூக வரலாறு - நாடார் மகாஜன சங்கம், மதுரை. - முதல் பதிப்பு - 1969


நடராஜன், எஸ். - தமிழர் பண்டிகைகளும் பண்பாடும் - பிரதிபா பிரசுரம், சென்னை. - முதற்பதிப்பு - 1976

  

நாகூர் முத்துப் புலவர்,மு.- அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் வாழ வந்தம்மை பிள்ளைத்தமிழ் - மதுராம்பிகை அச்சியந்திர சாலை, மதுரை. - 1924

 

முத்துச்சாமி கவிராஜ சரபம் - அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அனவரத செல்வ விநாயகர் விளையாடல் - அரு.சுந்தரலிங்க சிதம்பர நாடார் - (ப. ஆ.)- 1923 


முத்து நாடார்,சூ.ஆ.- அருப்புக்கோட்டை என்ற பெயர் வழங்கிய திருநல்லூர் திருக்கோயில் எழுந்தருளும் முத்துக்குமாரசாமி என்னும் வேலவர் மாலை - மீனாம்பிகை அச்சியந்திர சாலை, மதுரை. முதற்பதிப்பு - 1910

 

முத்து நாடார்,சூ.ஆ. - அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் கோயில் கொண்டருளிய முத்துக்குமாரசாமி என்னும் சுப்பிரமணியக்கடவுள் பதிகம் - விஜயவிகடன் அச்சியந்திர சாலை, சென்னை.-1908

 

முத்து நாடார்,சூ.ஆ.- அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் முத்துமாரியம்மன் பேரில் சிந்து, கும்மி, கீர்த்தனை - விஜயவிகடன் அச்சுக்கூடம், சென்னை. - 1911

 

முத்து நாடார்,சூ.ஆ. - திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை மாநகர் ஸ்ரீஅமுர்தவல்லியம்மன் பதிகம் - அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை. முதற்பதிப்பு -1916

 

மோசஸ் பொன்னையா - நாடார் வரலாறு - சீயோன் பதிப்பகம், மதுரை. முதற்பதிப்பு - 1978

 

வெங்கடாசலம் பிள்ளை,க.சு. - திருநல்லூரில் கோயில் கொண்டருளிய ஸ்ரீமத் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதான உச்சவாதிபதிகளாகிய புண்ணிய சீலர்களை வியந்து பாடிய வாழ்த்துக்கவிகள் - அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை, அருப்புக்கோட்டை. - 1908

 

வெற்றிச் செல்வன், (தொ. ஆ.)- விரதங்கள் - ஸ்டார் பிரசுரம், சென்னை. - மூன்றாம் பதிப்பு - 1982 



<span style="font-size:11pt;font-family:Arial,sans-serif;background-color:transparent;font-variant-numeric:normal;font-variant-east-asian:normal;font-va

kanmani tamil

unread,
Sep 24, 2024, 5:06:45 AM9/24/24
to vallamai

வேங்கடசுப்புப் பிள்ளை - அருப்புக்கோட்டையென விளங்கும் திருநல்லூர் அமுதலிங்க மாலை - இந்து தியலாஜிகல் இயந்திரசாலை, சென்னை. - முதற்பதிப்பு - 1891

 

வேங்கடசுப்புப் பிள்ளை - அருப்புக்கோட்டையென விளங்கும்  நல்லூர்க் கலம்பகம், நல்லூர் மாலை - இந்து தியலாஜிகல் இயந்திரசாலை, சென்னை. - முதற்பதிப்பு - 1892

 

ஆசிரியர் இல்லாதவை/தெரியாதவை

 

அருப்புக்கோட்டைநாடார்கள் உறவின்முறை யாதாஸ்தும் சட்டதிட்டங்களும் - அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை, அருப்புக்கோட்டை - 1956

 

சான்றோர் குலமரபு காத்தல் - நாடார் மகாஜன சங்கம்,மதுரை.-(ப.ஆ.இல்லை)


அருப்புக்கோட்டை என்னும் நல்லூர் வாழவந்தம்மன் பேரில் சிந்து 


இதழ்கள் 


அய்யாத்துரை,டி.வி. - "சமயத் தலைமையில் நாடார்கள்" - சமூக ஒற்றுமை மலர் - 5 - இதழ் 11 &12- டிசம்பர் - 1973


காசி,அ. - "அமுதலிங்கேஸ்வரர் பெருமை"- திருக்கோயில் - சென்னை. - நவம்பர், டிசம்பர் -1980 


குன்றக்குடி பெரிய பெருமாள் - "நாடார் சமூகம்"- 17. 4.'81, 8. 5. '81,  15.5.'81 


திருஞானசம்பந்தன்,பெ.- "ஆலய அமைப்புகள்"- திருக்கோயில் - அக்டோபர் 1979

 

முத்துராமன் மு.- "ஆலய வழிபாட்டின் சிறப்பு"- திருக்கோயில்- ஜூன் 1979

 

வீரப்பன், இராம.- "கலைக்கோயில்கள் பண்பாட்டுக் கருவூலங்கள்" - திருக்கோயில் - நவம்பர், டிசம்பர் 1980

 

வீரப்பன், இராம. - "சமுதாய வளர்ச்சியில் ஆலயங்கள் ஆற்றும் பணிகள்"- செப்டம்பர், அக்டோபர் 1981  


மலர்கள் 


சோமசுந்தரம்,ஜே.எம். - "திருக்கோயில்களும் சமய வளர்ச்சியும்"- தமிழ் வட்டம் - முதல் ஆண்டு மலர் - பாஸ்கர நிலையம், சென்னை. - 1967

 

சந்திர சேகர பட்டர்,எஸ்.- "மதுரைத் திருவிழாக்கள்"- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. - 1974

 

ஆய்வேடுகள்  

குருசாமி,க.- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. -1981

 

சண்முகசுந்தரி,யு.- சங்கர நயினார் கோயில் திருவிழாக்கள் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. - 1981

 

தங்கமுத்து,சு. - பழையாறைக் கோயில்கள் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. - 1981

 

தங்கவேல்,வ.- திருவேடகம் கோயில் திருவிழாக்கள் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ,மதுரை. - 1981

 

ஆங்கில நூல்கள்

 

Nagasamy,R.& Ramasami, N.S. - Ramanathapuram - An Archeological Guide - The collector of Ramanathapuram - First edition - 1979

 

Nambiyar,P.K.& Nayayana Kurup,K.C.- Census of India - volume- 9- Madras.- Part- 9-D- Temples of Madras State - 6- Madurai &Ramanathapuram.

 

Ramasami,A.(Ed) - Gazetteer Of India - Tamil Nadu State-  Ramanathapuram District, Govt. Of Tamilnadu. - 1972  


kanmani tamil

unread,
Sep 26, 2024, 2:23:16 AM9/26/24
to vallamai
இவ்ஆய்வேட்டைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் தெரியலாகும் கோயிலின் தனிச்சிறப்பு வருத்தத்திற்கு உரியதாகத் தான் உள்ளது. 
இக்கோயிலில் சாமி திருவீதி உலா கிடையாது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளால் கோயில் ஒன்று எழுந்ததில் மகிழ்ச்சி .
ஆனால் நிலைமை முற்றிலும் சீராகி விட்டது என்று சொல்ல இயலாத வகையில் தான் காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நல்லதே நினைப்போம்; நல்லது நடக்கும்.
சக     

kanmani tamil

unread,
Oct 5, 2024, 2:31:38 PM10/5/24
to vallamai
U-tubeல் கண்ட இந்த ஒப்பீடு இந்த இழைக்குச் சற்றே தொடர்பு உடையது தான். அனுபவ உண்மை என்பதால் பதிவிடுகிறேன். 


வடஇந்தியாவில் பக்தர்கள் தாமே தெய்வத்தைக் தொட்டு நீரூற்றிப்; பிற வழிபாட்டுப் பொருட்களையும் செலுத்த முடியும் என்பது உண்மை தான் (கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை காசி விஸ்வநாதரை அப்படி வழிபடலாம்.). 

இது பௌத்த சமயத்தின் தடயம். 

இந்து சமயம் பல பௌத்த நடைமுறைகளை உள்வாங்கிக் கொண்டது தான் காரணம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேதார்நாத் சென்ற போது சாமிக்கு அவரவர் கையால் நீர் ஊற்றிப்; பால் ஊற்றிப் பூசித்தோம். அது ஒரு மறக்க முடியாத; உணர்ச்சி பூர்வமான அனுபவம். 

உத்தரகாசி சென்ற போது அம்மனுக்கு நாங்களே அவரவர் கைகளால் அபிஷேகம் செய்ததையும் என்னால் மறக்கவே முடியாது. 

கடவுளுக்கும் நமக்கும் இடையில் குறுக்கே நிற்க யாரும் இல்லை என்பது ஒரு வரவேற்கத் தக்க நடைமுறை தான்.

சக 

Raju Rajendran

unread,
Oct 6, 2024, 4:39:53 AM10/6/24
to vall...@googlegroups.com
வீடுகளில் நடக்கும் வழிபாடுகளில் ஆரத்தி எடுத்து பூ சொரிவது வழக்கம்.

ஞாயி., 6 அக்., 2024, 12:01 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcszABNv1%2B9xR0LcM2Gj50QArvP%2Br9G15xboG3GV%2B8dFPA%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Oct 6, 2024, 6:38:43 AM10/6/24
to vallamai
கோயில் நடைமுறைகள் பற்றித் தானே ஐயா பேசிக் கொண்டு இருக்கிறோம். 
சக 

kanmani tamil

unread,
Nov 2, 2024, 9:32:47 AM11/2/24
to vallamai
இந்த இழையில் அடுத்து இடம் பெறும் கோயில் எங்கள் கூட்டத்தினரின் குலதம்பிரானாக வழிபடப்படும் அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில். 
திருச்செந்தூரை ஒட்டிய பகுதியில் ஆண்டு முழுவதும் நீர் ஊறும் சுனை பெரிய நீராதாரமாகச்; சுற்றிலும் விளைநிலங்களுடன் தாழைப்புதர்களும் மிகுந்த மேலப்புதுக்குடி அருகே உள்ள கோயில். 
அந்தச் சுனை இந்தக் கோயிலின் தனித்துவம். நிறைய தாமரைப் பூக்களோடு ரம்மியமாகக் காட்சி அளிக்கும் அச்சுனையில் இறங்கிக் குளித்து மகிழ்ந்து பின்னர் ஐயனாரை வழிபடுவோம். பூரணி புஷ்கலை என இரண்டு தேவியரோடு ஐயனார் வீற்று இருப்பார். 
சக 
VID-20200303-WA0036.mp4

kanmani tamil

unread,
Nov 2, 2024, 6:33:37 PM11/2/24
to vallamai
சில வேளைகளில் சுனை முழுவதும் தாமரைகள் பூத்துக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சில வேளைகளில் எண்ணில் அடங்கா மீன்கள் துள்ளிக் கொண்டு இருக்க; குளிப்பதற்கு இயலாது இருக்கும். எல்லாமே அழகு தான்.

இன்னொரு தனித்துவம் இக்கோயிலில் இருக்கும் பரிவார தேவதைகள்... பிற சமூகத்தைச் சேர்ந்தவராய் வாழ்ந்து மறைந்த மாமனிதர் சிலர் இங்கு தெய்வங்களாக வழிபடப்படுவது குறிப்பிடத் தக்கது. 

பொதுமக்களுக்கு அவர்கள் பிற சமூகத்தைச் சேர்ந்தவராக வாழ்ந்தவர் என்னும் உண்மை தெரிந்து இருக்கப் பெரிதும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் நாட்டார் வழக்காறுகள் தம் இயல்பின்படிப் பலப்பல வடிவங்களில் மாறி மாறி வழங்குவது உண்மைகளைப் பொதிந்து வைத்துவிடும். 

நாட்டார் வழக்காற்றியலில் ஆர்வம் மீதூர ஒரு பட்டயப் படிப்பை மேற்கொண்டதன் காரணமாகச் சில உண்மைகளை நான் தெரிந்து கொள்ள நேர்ந்தது.  
அக்கடவுளருள் முதன்மையாகப் பிரபலமாகிய சுடலைமாடன் பற்றி எண்ணிலடங்காத கதைகள் நிலவுகின்றன எனினும்; சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்ற சான்றாகும் வழிபாடு சுடலைமாடசாமிக்கு உரியது.

    

சக 

kanmani tamil

unread,
Nov 4, 2024, 10:12:35 PM11/4/24
to vallamai
சமூக நல்லிணக்கத்திற்குச் சான்றாகும் இன்னொரு தெய்வம் வன்னியராஜன் . வன்னியர் என்ற சமூகப் பிரிவு ஒன்று உள்ளது . ஐயனார் கோயில்களில் வன்னிய ராஜனுக்குத் தனிச் சந்நிதியும் பூஜையும் நடத்தப்படுகிறது.

இன்றும் வன்னியராஜன் எனும் தெய்வத்தின் பெயரைத் தம் மக்களுக்குச் சூட்டுவதும் வழக்கமாக உள்ளது. சக




kanmani tamil

unread,
Nov 14, 2024, 2:40:16 AM11/14/24
to vallamai
முத்துப் பட்டனுக்கு உரிய சந்நிதி இன்னொரு சமூக நல்லிணக்கச் சான்றாக அமைகிறது. 

மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் சிறப்புத் தமிழ் மாணவர்களுக்கான பாடநூலாக அமைந்த முத்துப் பட்டன் கதை செருப்பு தைக்கும் பகடையின் காதலையும் திருமணத்தையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் பற்றியது. 

இக் கதைத் தலைவனுக்கு ஐயனார் கோயில்களில் தனிச் சந்நிதி அமைத்து வழிபடுவதை கற் குவாலை ஐயனார் கோயிலிலும் பார்த்து இருக்கிறேன். 

சக 

kanmani tamil

unread,
Nov 15, 2024, 9:44:31 AM11/15/24
to vallamai
அடுத்ததாக ஐயனார் கோயில்களில் வழிபடப்படும் தெய்வம் பெரியாண்டவர் / பெரியசாமி 

கடைத்தெருவில் கமிஷன் ஏஜென்ட்டாகத் தொழில் செய்த என் தந்தை ஒவ்வொரு ஆண்டும் புதுக்கணக்கு தொடங்க; புதிதாக பில்புத்தகம் அச்சடிக்கும்  போது மேலே பெரியசாமி காளசாமி துணை என்று போட்டுத் தான் வாங்குவார். 

அப்போது அதன் பொருள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்னர் கற்குவாலை ஐயனார் கோயில் சென்றிருந்த போது... 

என் பேரக்குஞ்சுகள் மூவரும் நேரம் வாய்க்கும் போதெல்லாம் என்னிடம் கதை கேட்கும் பழக்கம் உள்ளவர்கள். பிரகாரத்தில் கதை பேசிக் கொண்டே நாங்கள் பொடிநடை போட்டதை ஒரு பூசாரி கவனித்துக் கொண்டு வந்தார் போலும். பெரியசாமி சிலை (பெயருக்கு ஏற்ப மிகவும் பெரிய சிலை) அருகே வந்ததும் பிள்ளைகள் "இந்த சாமி கதையையும் சொல்லுங்கள்" என்று இடைமறித்தனர். 'முதலில் சாமி கும்பிடுங்கள்' என்று அவர்களை அதட்டி விட்டு; நகரும் முன்னர் 'இந்த சாமி பத்தி எனக்கு ஒரு கதையும் தெரியாது செல்லங்களா' என்றேன். உடனே பூசாரியார் "என்னம்மா இப்படிச் சொல்லி விட்டீர்கள்! பெரியசாமி என்பது சிவபெருமான் தான்; அவருக்கு ஐயனார் கோயில்களில் பெரியசாமி என்று பெயர்... மூலஸ்தானத்தில் இல்லாமல் பரிவார தேவதைகளோடு இருப்பதால் பெரும்பாலோர்க்குப் புரிவது இல்லை.

தோற்றத்தில் மாறுபட்டு அடையாளம் தெரியாமல் இருந்த பெரியசாமியை நான் ஆச்சரியத்தோடு பார்த்தேன். அதற்கு மேல் பேச அவருக்கும் பொழுது இல்லை; எக்கச்சக்கமான கூட்டம்... "கூட்டம் இல்லாத நாள் பார்த்து ஒருமுறை குழந்தைகளை அழைத்து வாருங்கள்; நான் இன்னும் நிறைய கதை சொல்கிறேன்.  இங்கு இருக்கும் ஒவ்வொரு தெய்வத் திருமேனிக்கும் கதை உண்டு. ஏரியா விட்டு ஏரியா போகும் போது தெய்வத்திற்குப் பெயர்கள் மாறுகின்றன; அவ்வளவு தான். இங்கே மூலஸ்தானத்தில் இருக்கும் ஐயனார் தான் மேலை மலைத் தொடரில் ஐயப்பசாமி ஆகி விட்டார்." என்று சொல்லி முடித்தார்.

சக 

kanmani tamil

unread,
Nov 16, 2024, 10:29:28 AM11/16/24
to vallamai
அருஞ்சுனை காத்த ஐயனார் கோயிலில் உள்ள பெரியாண்டவர்: 

அகநானூறு - 100 & நற்றிணை - 131 ஆகிய பாடல்கள் பெரியன் என்ற பெயர் உடைய குறுநில மன்னன் ஒருவனைப் போற்றுகின்றன. 

பெரியன் எனும் பெயர் சைவ சமய முழுமுதல் தெய்வமாகிய சிவபெருமானை அடியொட்டி இட்ட பெயராக இருக்க வேண்டும் என இதனால் தெளிய முடிகிறது. 

அது மட்டும் அன்று; என் தந்தை பில் புத்தகத்தில் அச்சடித்த காளசாமி என்ற பெயரின் காரணமும் சைவ சமயத்தின் தொடக்க காலப் பிரிவுகளில் ஒன்றாகிய 'காளாமுகம்' என்ற வகையை நினைவூட்டுவதாகக் கருதுகிறேன். 

தொகைநூல்களில் சிவனின் பெயரே இல்லை என்ற கருத்து இதனால் அடிபட்டுப் போகிறது. அதற்குப் பதிலாகத் தான் சிவபெருமானின் மாற்றுப் பெயராகிய 'பெரியன்' என்ற பெயர் இருக்கிறதே!!!

Sk

kanmani tamil

unread,
Nov 18, 2024, 1:38:14 AM11/18/24
to vallamai

kanmani tamil

unread,
Nov 18, 2024, 1:44:26 AM11/18/24
to vallamai
மேலே ஒட்டி இருக்கும் பரிவார தேவதை தளவாய் மாடன் எனப் பெயர். சுடலை மாடனினின்றும் வேறுபட்டவர் என்பதைத் தவிர வேறு செய்தி ஏதும் தெரியவில்லை.
இது போன்றே முன்னோடி முருகன் என்று ஒரு சந்நிதி.


   

kanmani tamil

unread,
Nov 19, 2024, 7:18:26 AM11/19/24
to vallamai
இன்றைய கோயில்களில் இருப்பது போல் காவல் தெய்வமாகிய கருப்பசாமியும் உண்டு.

மாலையம்மன் பரமேஸ்வரி என்ற பெண் தெய்வமும் உண்டு. மாலையம்மன் என்ற பெயர் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்து உண்டு. இப்பெயர் ரிக் வேதம் சொல்லும் மாலைநேரம் ஆகிய தேவதையின் தமிழ்ப் பெயர்ப்பு எனத் தோன்றுகிறது.

குதிரை வாகனமும் யானையும் மாடும் முன்னால் நிற்க ஐயனாருக்குப் பொங்கல் படையல் மட்டுமின்றி ஆடு வெட்டும் நேர்ச்சையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்தது. குடும்ப உறவினர் ஒன்றுகூட எதுவாக அமைவது குலதெய்வ வழிபாடே. நேர்ச்சை செலுத்தவோ அல்லது குழந்தைக்கு மொட்டை போடவோ எல்லோரும் சேர்ந்து வந்து இங்கு இருக்கும் மண்டபத்தில் ஒரு சமுக்காளத்தை விரித்து அமர்ந்து அரட்டை அடிப்பதோடு; சுனையில் குளியல் போட்டு; அங்கேயே கல் அடுப்புகளில் சோறு, குழம்பு, கூட்டு எல்லாம் சமைத்து உண்ணும் மகிழ்ச்சிக்கு உரிய இன்பச் சுற்றுலாவாக இந்த வழிபாடு நிறைவுறும். பதினைந்து ஆண்டுகட்கு முன்னர் வரை கெடா விருந்தும் சமைத்துச் சாப்பிடும் வழக்கம் இருந்தது. இப்போது அசைவம் சமைக்கவும் சாப்பிடவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.      
இத்தனை பரிவாரங்களோடு ஐயனார் தன் இரு மனைவியரோடும் காட்சி அளிக்கிறார்.

கோயிலுக்கு வெளியே மரமாகத் தழைத்து வளர்ந்து இருக்கும் தாழைகள். அவற்றைப் பார்க்கும் போது எனக்குச் சிலப்பதிகார அடிகள் நினைவிற்கு வருவது உண்டு (செங்குட்டுவன் போர் முடித்துத் திரும்பி வரும் போது கோவலர் தாழைக் கோட்டில் ஏறி அமர்ந்து குழல் ஊதுவர்.)..
சக 

kanmani tamil

unread,
Nov 24, 2024, 9:31:19 AM11/24/24
to vallamai
இன்று இந்த இழையின் தொடக்கத்தில் நான் விவரித்த சங்கரன் கோயிலுக்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஞாயிற்றுக் கிழமைக் கூட்டம் எனினும் மனநிறைவுடன் மூன்று சந்நிதிகளிலும் தர்ம தரிசனத்தில் கும்பிட நிம்மதி கிடைத்தது. காவல்காரனின் பெயரை நான் கொஞ்சம் தவறாகப் பதிவு செய்து இருப்பதைக் கண்டேன். மணிக்கிரீவன் என்பதே சரி (ஜூலை 3ம் தேதி நான் மணிகர்ணீகன் எனப் பதிவு செய்தது தவறு.) பெயர்ப் பலகையோடு இன்று படம் எடுக்க இயன்றது.


Sk

kanmani tamil

unread,
Dec 11, 2024, 6:00:42 AM12/11/24
to vallamai
கோபுர தரிசனம் கோடி புண்ணியம். இது சங்கரன் கோயிலின் வாயிலில் உள்ள கோபுரம் (கோயில் உள்ளிருந்து நோக்கும் கோணம்).

  

எளிமையும் அழகும் கலந்த பரவசம்.

சக 

kanmani tamil

unread,
Dec 13, 2024, 11:20:48 AM12/13/24
to vallamai
இன்று பெரிய கார்த்திகை. 

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் திருவிழா. 


அக்னிப் பிழம்பாக இறைவன் காட்சி தருவதாக நம்பிக்கை. தமிழகத்தில் இன்னும் சில கோயில்களில்... (திருப்பரங்குன்றத்தில் கூட) இவ்வாறு தீபம் ஏற்றுவது உண்டெனினும் திருவண்ணாமலைத் தீபம் தான் மிகுபுகழ் பெற்றது. ஏனெனில் அது மலைக்கு மேலே 2600அடிகளுக்கு மேலே ஒரு பெரிய கொப்பரையில் ஏற்றப்பட்டு நாட்கணக்கில் எரியும். 

சக 





kanmani tamil

unread,
Dec 14, 2024, 3:07:47 AM12/14/24
to vallamai

https://youtube.com/shorts/uzOp_WBX3F4?si=9rm1Xjf-GrOWP2aS

பல சிக்கல்களுக்கு இடையே தான் இந்த ஆண்டு திருவிழா நடந்தேறி உள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவும் வெள்ளப் பெருக்கும் காரணம்.

பாரம்பரியமாகச் செய்யும் சிறப்பு நிகழ்வுகள் தடைப்பட்டால் நம்பிக்கை மிகுந்த மனங்களுக்குத் தீராத குறையாகப் படும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்த அளவுக்கு வெற்றிகரமாகத் தீபம் ஏற்றப்பட்டது ஒருவகையில் நிம்மதியே தருகிறது.

சக  

kanmani tamil

unread,
Dec 14, 2024, 11:58:39 PM12/14/24
to vallamai
https://youtu.be/aCcYzSWDs3o?si=20fc-PiCuBo303c8

பாரம்பரியமாக தீபம் ஏற்றுவோர்...

தம்மைப் பர்வதராஜ குலம் என்றும்; மீன் பிடிப்பவர் என்றும் சொல்லிக் கொள்ளும் இவரது கொள்கைகள் நம்மை குழப்பத்திற்குத் தள்ளுகின்றன. 

மலை என்று பொருள்படும் பர்வதத்தின் ராஜாக்களாக இருந்தோர் என்ற கருத்து மேனிலையாக்கம் நோக்கியதாக உருப்பெற்று இருக்க வேண்டும். இது உலகப் பொதுவான போக்கு தான். ஆனால் மலையில் தீபம் ஏற்றும் தம் பாரம்பரியத்தை இன்று வரை அழியாமல் பாதுகாக்கும் இவர்கள் பண்பாட்டுக் காவலர்கள் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. இத்தகு உரிமைகளும் சிறப்புக்களும் அவ்வளவு எளிதில் மாற்ற இயலாதவை தாம். 

ஒரு வழிபாட்டை நடத்தக் காரணமானவர் எவர் ஆயினும் அவர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் என்பது தான் தமிழகத்து ஆன்மீக வரலாறு. 

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவது இன்று நேற்றுத் தோன்றிய வழிபாட்டு முறை அன்று.

சக 

kanmani tamil

unread,
Dec 15, 2024, 10:58:30 PM12/15/24
to vallamai
தீபக் கொப்பரையை ஒவ்வொரு ஆண்டும் மலைக்கு மேலே தூக்கிச் செல்வதும் விழா முடிந்த பிறகு கீழே கொண்டு வந்து சேர்ப்பதும் வழக்கம். 

முன்னெல்லாம் மூன்று நாட்கள் எரித்த தீபம் இப்போது பதினோரு நாட்கள் எரிய வைக்க ஏற்பாடாகி உள்ளது. இது காலத்தின் தேவைக்கேற்பச் செய்து கொண்ட மாற்றம் ஆகும். மக்கட் கூட்டம் இத்தீபத்தைத் தரிசிக்க பதினோரு நாட்கள் வரை திருவண்ணாமலைக்கு வருகிறார்கள் என்பதால்; அவர்கள் காண வசதியாக இம் மாற்றம் ஏற்பாடாகி உள்ளது. 

அடிமுடி அறிய இயலாத பரம்பொருளாகிய சிவபெருமானை நெருப்புப் பிழம்பாகக் கண்டு வழிபடும் போக்கை இவ்வழிபாட்டில் காண்கிறோம். 


சக 

kanmani tamil

unread,
Dec 16, 2024, 9:28:41 PM12/16/24
to vallamai
திருவண்ணாமலை மேல் தீபம் ஏற்றுவது போல்; பிற மலைத் தலங்களில்... மலையே 
இல்லாத தலங்களில்..., சமவெளியில்..., ஆற்றங்கரையில்..., கடற்கரையில்...  சொக்கப்பனை என்ற பெயரில் மகாதீபம் ஏற்றுகின்றனர். 

(கொழம்பம் என்ற தலம்- இருப்பிடம் தெரியவில்லை.).

(திருச்சி மலைக்கோட்டை தாயுமானசாமி திருக்கோயில்).

அழகர்கோவில் சொக்கப்பனை (மலை அடிவாரத்தில்...) 

ஸ்ரீரங்கத்தில் சொக்கப்பனை (ஆற்றிடைக்குறை பெருமாள் கோயிலில் அரோகரா கோஷம்)

தென்தமிழகத்து உவரி- கடற்கரை.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் மலை மேல் ஏற்றிய தீபம்... இன்று எங்கெல்லாம் வழிபாடு நடக்கிறதோ அங்கெல்லாம் ஏற்றப்படுகிறது. நான் பிறந்த ஊரின் நடுவே இருக்கும் பொட்டலில் (தேசபந்து மைதானம்- தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த இடம்) சொக்கப்பனை கொளுத்துவர்.

'சொக்கப்பனை' என்ற பெயருக்கு ஏற்பப் பனைமடல்களாலேயே அந்த தீபத்தைப் பற்ற வைப்பதற்குரிய கூம்பு வடிவமைக்கப்பட்டு இருக்கும். 'சொக்க-' எனும் பகுதி சொக்கநாதர் எனும் சிவனைக் குறிப்பதாகக் கருதுகிறேன். 

சக 

kanmani tamil

unread,
Dec 18, 2024, 11:59:38 PM12/18/24
to vallamai
ஐந்தாவது நாளாக எரியும் திருவண்ணாமலை மகாதீபம்... அன்றாடம் கொப்பரை நிரப்பப்படுகிறதாம். 


மலைக்கு மேல் கொப்பரையில் மகாதீபம் ஏற்றிப் பரமனை அக்னி வடிவாக வழிபடுவது திருவண்ணாமலையின் தனித்துவம் ஆகிறது. 

அது போல் திருக்கார்த்திகை அன்று வீடுகளில் தீபம் ஏற்றுவது போல; கோயிலுக்குள்ளும் பரணி தீபம் ஏற்றுவது இக்கோயிலின் இன்னொரு சிறப்பு. 

இத் தீபம் ஏற்ற வேண்டிய  காரணமும் முறையும் அது தொடர்பான கதையும் விளக்கமும் பின்வரும் பதிவில்...


/// பரணி தீபம் 2024 : வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்? எந்த நேரத்தில், எப்படி விளக்கு ஏற்றினால் பாவம் தீரும்?

கார்த்திகை தீபத் திருநாளன்று அதிகாலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிவ பெருமான் சன்னதியில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டு, பிறகு அதிலிருந்து 5 தீபங்கள் ஏற்றப்படும். 

பிறகு மீண்டும் அந்த 5 தீபங்களும் ஒன்றாக்கப்பட்டு, ஒரே தீபமாக மாற்றப்படும். இதற்கு பரணி தீபம் என்று பெயர். 

ஏகன் அநேகன் என்ற பஞ்சபூத தத்துவத்தை உணர்த்துவதே பரணி தீபம் ஆகும்.

கோவிலில் மட்டுமல்லாது வீடுகளிலும் திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் பரணி தீபம் ஏற்றப்பட வேண்டும். 

இதற்கு என்ன காரணம், பரணி தீபம் ஏற்றும் முறை எப்படி வந்தது, வீட்டில் பரணி தீபம் ஏற்றுவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும், இந்த ஆண்டு பரணி தீபம் எப்போது வருகிறது, இந்த நாளில் வீட்டில் எப்படி பரணி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பரணி தீபம் 2024 : வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்? எந்த நேரத்தில், எப்படி விளக்கு ஏற்றினால் பாவம் தீரும்?

பரணி தீபம் :

கார்த்திகை மாதமே தீபங்களுக்குரிய மாதமாகும். இந்த மாதம் முழுவதும் வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் சிலரிடம் உள்ளது. 

ஆனால் பெரும்பாலானவர்கள் திருக்கார்த்திகை துவங்கி மூன்று நாட்கள் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடும் 
வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். உண்மையில் திருக்கார்த்திகைக்கு முதல் நாள் பரணி தீபம், திருக்கார்த்திகை அன்று தீபம், திருக்கார்த்திகைக்கு மறுநாள் பாஞ்சராத்திர தீபம் என மூன்று நாட்கள் விளக்கு ஏற்றுவதே சரியான முறையாகும். இதில் பரணி தீபம் எமதர்ம ராஜாவிற்காகவும், திருக்கார்த்திகை தீபம் சிவ பெருமானுக்காகவும், பாஞ்சராத்திர தீபம் பெருமாளுக்காவும் ஏற்றுகிறோம்.

பரணி தீபம் எதற்காக ஏற்றப்படுகிறது?

சிவ பெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஜோதி வடிவமாக காட்சி தந்த திருநாளையே திருக்கார்த்திகை தீபமாக கொண்டாடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். 

அதே போல் ஜோதி வடிவமாக தோன்றி பெருமாள் உலகை காத்ததை போற்றும் வகையில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றப்படுவதும் தெரியும். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றுவார்கள் என்பது தெரியும். 

ஆனால் வீடுகளில் எதற்காக பரணி தீபம், அதுவும் எமதர்ம ராஜாவிற்காக ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் வரும். 
எமன் என்றால் அனைவருக்கும் பயம் தான் வரும். 

அவரை எதற்காக வழிபட வேண்டும் என்று கேட்க தோன்றும். 

இதற்கு புராணத்தில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

பரணி தீபம் தோன்றிய கதை :

நசிகேதன் என்பவரின் தந்தை யாகம் ஒன்றை நடத்தினார் அந்த யாகம் நடத்தும் போது தேவர்களுக்கு அவர்கள் வேண்டிய பொருட்களை தானமாக கொடுத்து வந்தார். 

இதை கண்டு குழப்பமடைந்த நசிகேதன் தனது தந்தையிடம் சென்று, "எதற்காக இப்படி தேவர்கள் அனைவருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? 

இப்படியே கொடுத்தால் எனக்கு என்று கடைசியில் என்ன இருக்கும்? 

விட்டால் யாராவது வந்து கேட்டால் என்னையும் தானமாக கொடுத்து விடுவீர்கள் போலவே" என கோபமாக கேட்டுள்ளான். இதை கேட்ட அவரது தந்தை, "ஆம் உண்மையும் தானமாக கொடுக்க போகிறேன்" என்றார். 

இதை கேட்டு மேலும் கோபமடைந்த நசிகேதன், "என்னை யாருக்கு தானமாக கொடுக்க போறீர்கள்?" என கேட்க, அவரது தந்தையோ, "எமனுக்கு உன்னை தானமாக கொடுக்கிறேன்" என கூறி தானமாக கொடுத்து விட்டார்.

பரணி தீபம் ஏற்ற காரணம் :
தந்தை தானமாக கொடுத்ததால் உயிருடனேயே எமலோகத்திற்கு சென்றான் நசிகேதன். 

அங்கு மனிதர்கள் படும் துன்பங்களை கண்டு பயமும், குழப்பமும் அடைந்த நசிகேதன், அது பற்றி எமதர்ம ராஜாவிடம் பலவிதமான கேள்விகள் கேட்கிறான். 

"மனிதர்கள் பூமியில் தான் பல விதமான துன்பங்கள் என்றால் இங்கும் அவர்களுக்கு துன்பம் தானா?" என கேட்கிறான். அதற்கு பதிலளித்த எமதர்ம ராஜா, அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ற தண்டனை என்றார். 

இது போன்ற துன்பங்களில் இருந்து விடுபட என்ன தான் தீர்வு என்று கேட்கிறான். அவனுக்கு தர்மங்களை எடுத்துச் சொல்கிறார் எமதர்மராஜா. 

மனிதர்கள் தெரியாமல் செய்த பாவங்கள் தீருவதற்கு என்ன செய்ய வேண்டும் என எமதர்ம ராஜா கூறிய வழிகளில் ஒன்று தான் பரணி தீபம்.

பரணி தீப நன்மைகள் :

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் அன்று எவர் ஒருவர் தீபம் ஏற்றி வழிபடுகிறாரோ அவரும், அவரது முன்னோர்கள் மற்றும் சந்ததியினர் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, யமவாதனை இன்றி நலமுடன் வாழ்வார்கள் என்றார். 

அது மட்டுமல்ல, மார்கழி மாதம் என்பது தேவர்களின் விடியற்காலை என சொல்லப்படுவதால் அதற்கு முன்பு வரும் கார்த்திகை மாதம் அவர்களுக்கு இருளாக இருக்கும். 

அந்த சமயத்தில் நாம் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவதால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கி, தேவர்களின் அருள் கிடைக்கும். குறிப்பாக மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

பரணி தீபம் 2024 தேதி, வீட்டில் ஏற்றும் முறை :

இந்த ஆண்டு பரணி தீபம் டிசம்பர் 12ம் தேதியன்று வியாழக்கிழமை வருகிறது. டிசம்பர் 12ம் தேதி காலை 08.20 மணி துவங்கி, டிசம்பர் 13ம் தேதி காலை 06.50 மணி வரை பரணி நட்சத்திரம் உள்ளது. 

யமதர்ம ராஜாவிற்கு பிரியமான பரணி நட்சத்திரம் அன்று, நாம் வாழும் போதும், வாழ்க்கைக்கு பிறகும் துன்பம் இல்லாமல் வாழ மாலை 6 மணிக்கு பிறகு விளக்கேற்ற வேண்டும். 

இது பஞ்சபூத தத்துவத்தையும் உள்ளடக்கியதாகும். உலகில் உள்ள பஞ்சபூதங்களும், நம்முடைய உடலில் உள்ள பஞ்சபூதங்களும் ஒழுங்காக செயல்பட குறைந்தபட்சம் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும். 

ஒரு தாம்பூலத்தில் கோலமிட்டு, அனைத்து திசைகளையும் பார்த்தவாறு வட்டவடிவமாக 5 நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். 

பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் தீபங்களுடன் சேர்த்து இந்த ஐந்து தீபங்களையும் ஏற்ற வேண்டும். 

மனைப்பலகையில் கோலமிட்டு, அதன் மீதும் இந்த விளக்குகளை ஏற்றலாம்.///

இப்பதிவில் வழிபாட்டிற்கு பஞ்சபூதத்துடன் சொல்லப்படும் தொடர்பு பற்றியும் ஈராயிரம் ஆண்டுகளாக மலை மேல் தீபம் ஏற்றும் பாரம்பரியம் பற்றியும் இனிக் காண்போம்.
சக 

N. Ganesan

unread,
Dec 19, 2024, 2:07:15 AM12/19/24
to vall...@googlegroups.com
> (கொழம்பம் என்ற தலம்- இருப்பிடம் தெரியவில்லை.).

கோழம்பம் - புகழ்பெற்ற தேவாரத் தலம் (சம்பந்தர், அப்பர்).

எங்கள் ஊர் அருகே, வடக்கந்தராவில் சொக்கப்பனை:

NG


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 19, 2024, 6:47:58 AM12/19/24
to vallamai
இரண்டு காணொலிகளிலும் பனைமடல்களின் பயன்பாடு தெரியவில்லை. 
வெடி போடுகிறார்கள் (சொக்கப்பனை மாதிரி...). 

சக 

kanmani tamil

unread,
Dec 19, 2024, 10:02:18 PM12/19/24
to vallamai
பஞ்ச பூதங்களால் ஆன இயற்கையை வழிபடுவதே பண்டைத் தமிழரிடம் பெரிதும் வழங்கிய முறை ஆகும். 
அதற்கு மாறுபட்ட 'உருவ வழிபாட்டை' எள்ளுவது போன்ற தொகைநூற் பாடல்கள் உள்ளன.

“தோற்றம் அல்லது நோய்க்கு மருந்தாகா 
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி” (குறுந்.263) எனும் தலைவியின் சலிப்பான சொற்கள் தொல்தமிழகத்து மக்கள் போற்றியது   இயற்கை வழிபாடு என்ற கொள்கையைத் தெளிவுறுத்துகின்றன.

“கண்ணிற் காண நண்ணுவழி இருந்தும் 
கடவுள் நண்ணிய பாலோர் போல” (குறுந்.203) 
என்ற பாடலடிகள் வருணத்தார் வருகையால் தமிழகத்து இயற்கை வழிபாடு மாற்றம் அடைந்ததென வெளிப்படையாகப் பேசுகின்றன.       

மலையுச்சி கடவுள் உறையும் இடம் எனக் கொண்ட தொல்தமிழகக் கொள்கையை;  

“அணங்குடை நெடுங்கோட்டு”- (நற்.288& அகம்.272),
“அணங்குடை நெடுவரை உச்சி” (அகம்.22),
“சூர்புகல் அடுக்கத்து” (அகம்.359), 
“பிறங்குமலை மீமிசைக் கடவுள்”- (குறிஞ்சிப்பாட்டு- 208),
“கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல்”- (புறம்.158), 
“கடவுள் ஓங்குவரை” (நற்.165) எனப் பலரும் பாடியிருப்பது காட்டுகிறது.

காடும் மலையும் பொருந்திக் கடலால் சூழப்பட்ட நிலத்தையும், திசைகளையும் தெய்வம் என்றனர்.

“வையக மலர்ந்த தொழில்முறை ஒழியாது 
கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து 
தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்து” (பதிற்.88)
எனும் பாடல் பகுதி; பூமியைக் கடவுள் என்கிறது. 

நெடுநல்வாடை கட்டுமானப் பணியைத் தொடங்கும் முன்னர்; 

“நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் 
தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனை” (அ.77-78) 
வகுத்த போது திசைத் தெய்வங்களை வாழ்த்தியதைக் காட்டுகிறது.

நிலம், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் வழிபாடு பூதவாதம் என மணிமேகலையும் சமயக் கணக்கர் தம் திறம் உரைத்த காதையில் சொல்கிறது. 

இன்றைய இந்து சமயம் பண்டைய பூதவாதக் கொள்கையைத் தன்னுள் அடக்கியதாகக் கொள்வதில் முரண்பாடு எழ வழி இல்லை. 

பஞ்சபூத வழிபாட்டின் ஒரு கூறே சிவபெருமானை நெருப்பு வடிவாக ஏற்றமைக்கு உரிய அடிப்படை ஆகிறது. 

சக 



kanmani tamil

unread,
Dec 20, 2024, 9:24:04 PM12/20/24
to vallamai
திருவண்ணாமலை என்ற பெயர் தொகையிலக்கியத்தில் இல்லை; ஆனால் குறிப்பாகத் திருவண்ணாமலை என்று பொருள் பெறத் தக்க பாடலடிகள் உள்ளன. 

///மூதூர் என்று பல பழைய ஊர்களை ஊர்ப்பெயர் சுட்டாமல் பொதுவாகச் சங்கச் சான்றோர் பாடியுள்ளனர். இரு பாடல்களில் சிவபெருமான் வண்ணனையுடன் வருவதால், திருவண்ணாமலையினைப் பாடியுள்ளனர் எனக் கொள்ளலாம்.

(1)  செக்கர் வானம் 'பிறைசூடி' வர்ணனை (பெரும்பாணாற்றுப்படை):
"புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய  
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ,
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்
அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய்    
அந்தி வானத்து ஆடு மழை
கடுப்ப",

(2) அண்ணாமலை கார்த்திகைத் தீப வர்ணனை (அகநானூறு)
"விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
நெய்யுமிழ் சுடரில் கால்பொரச் சில்கி
வைகுறு மீனில் தோன்றும்
மைபடு மாமலை விளங்கிய சுரனே"./// Dr.Ganesan quoted on 13th Dec. 2024

மேற்சுட்டிய இரண்டு மேற்கோள்களும் இன்று நெருப்புத் தலம் என்று போற்றப்படும் 2668அடி உயர  
திருவண்ணாமலையைக் குறிப்பதாகக் கொள்ளத் தக்க ஆதாரங்களைக் காண்போம். 

3000 கிலோ நெய்யும் 1000 மீட்டர் காடா துணியும் கொண்டு உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் ஆகிய பாரம்பரியம் (எடையும் நீளமும் தவிர்த்துப் பிற); தமிழக மண்ணில் ஈராயிரம் ஆண்டுகளாக வேரோடி இருப்பதை எண்ணி வியக்காமல் இருக்க இயலவில்லை. 

திருவண்ணாமலையின் புவியியல் பெரும்பாணாற்றுப்படைத் தலைவன் ஆகிய தொண்டைமான் இளந்திரையனின் நாட்டிற்கு உள்ளே அடங்குகிறது. 

கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் புனைவில் திரையனின் நாடு வேங்கடத்தை உள்ளடக்கிய நிலப்பரப்பில் இருந்து கீழைக் கடற்கரை வரை நானில வளங்களும் பொருந்திய தொண்டை மண்டலம் எனப்  பாடப்பட்டுள்ளது (பத்துப்பாட்டு தொகுதி l- பெரும்பாணாற்றுப்படை ப.1-33) இக் கருத்தை முறையே; குறிஞ்சிக் காட்சிகள் (மேற்.83-146), முல்லைக் காட்சிகள் (மேற்.147-168), மருதக் காட்சிகள் (மேற்.263-274), என்ற வரிசையில் பெரும்பாணாற்றுப்படையில் பாடுவதால் அறிகிறோம். முல்லையில் உழவர் செயல்கள் பற்றியும் (மேற்.169-231) மருதத்தில்  உழவர் செயல்கள் பற்றியும் (மேற். 232-262) கடற்கரைப் பட்டினத்தை ஒட்டிய உழவர் செயல்கள் பற்றியும் (மேற்.351-362) விதந்து பாடி உள்ளமையால்; தொண்டைமான் எனச் சிறப்புப் பெயர் பெற்ற திரையன் எனும் குறுநில மன்னனின் ஆட்சிப் பரப்பு இன்றைய திருவண்ணாமலையை உள்ளடக்கியது என்பது 
வெளிப்படை. 

தொண்டைமான் இளந்திரையன் பற்றிய தொன்மங்கள் (சோழ மரபு சார்ந்து... நாக கன்னியுடன் தொடர்பு...) தொகையிலக்கியச் செய்திகளினின்று தோன்றிய புனைவுகள் என நிறுவ இயல்கிறது (தனி ஆய்விற்கு உரிய...). மிகுபுகழ் பெற்ற தலைவர்கள் தொன்மங்களுள் தொடர்புற்றுப் புனைவு பெறும் போக்கு உலகளாவிய பொதுப் பண்பு; எல்லா நாகரிகங்களிலும் இடம் பெற்றுள்ளது; திராவிட நாகரிகமும் விதி விலக்கன்று.

இருங்கோவேளின் முன்னோன் புலிகடிமால் தொன்மப் பின்னலுள் இடம் பெறுவது போலத் தொண்டைமானும்...

இதனால் பெரும்பாணாற்றுப்படையும் கயமனார் பாடிய களிற்றியானை நிரைப் பாடலும் (அகம்.17) பேசும் மூதூர் இன்றைய திருவண்ணாமலை எனத் துணியலாம். 

ஈராயிரம் ஆண்டுகளாக இம் மலை உச்சி கார்த்திகைத் திருவிழா அன்று 'நெய்யுறு சுடரில் கால் பொர வைகுறு மீன்' போல் காட்சி அளிக்கிறது. 

நன்றி முனைவர் கணேசன்; புதிய கோணத்தில் சிந்தனையைத் தூண்டியமைக்கு... 🙏

சக 


seshadri sridharan

unread,
Dec 20, 2024, 9:30:52 PM12/20/24
to வல்லமை
கல்வெட்டில் அண்ணா நாடு என்று தான் உள்ளது. திரு என்ற சிறப்பு அடை பின் வந்தது. இக்கோவில் கல்வெட்டுகள் 12-13 நூற்றாண்டில் தொடங்குகின்றன. எனவே கோவில் பின் வந்தது என்று ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்










On 

kanmani tamil

unread,
Dec 20, 2024, 11:03:10 PM12/20/24
to vallamai
கட்டுமானக் கோயில்களின் காலத்திற்கு முன்பே வழிபாடு தொடங்கித் தொடர்ந்தமைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மறுக்க இயலாத சான்று ஆகும். அதுபோல...
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 23, 2024, 10:39:32 PM12/23/24
to vallamai
மதுரை என்றால் கோயில் மாநகர் மட்டும் அன்று; திருவிழா நகர் என்றும் கூறலாம். ஆண்டு முழுவதும் கொண்டாட்டமும் பரவசமும் தான். 

நேற்று மார்கழி மாதத்து அஷ்டமி சப்பரம் 


இரண்டு சப்பரங்களில் வழக்கம் போல் சொக்கநாதர் பிரியாவிடையுடனும்; மீனாட்சி தனித்தும் பவனி வரும் கோலாகலம். இதில் தனித்துவம் என்னவென்றால் மீனாட்சி சப்பரத்தைப் பெண்கள் மட்டும் தான் இழுப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை அரச குடும்பத்தின் பொறுப்பில் நடத்தும் கொண்டாட்டம் இது. 

பரமன் எல்லா உயிர்களுக்கும் படி அளப்பவன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நிகழ்த்தும் வழிபாடு. 


இவ்விழாவின் இன்னொரு தனித்துவம் சாமி சப்பரத்தில் அமர்ந்து வரும் சிவாச்சாரியார்கள் அரிசியை இறைத்துக் கொண்டே செல்வர்; அந்த அரிசியைத் தம் கைகளில் பிடித்து; அல்லது பொறுக்கிக் கொண்டு பக்தர்கள் தம் இல்லம் செல்வர். ஆண்டு முழுவதும் பசி ஆற உணவு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன்... 


நம்பிக்கை... அது வரலாறு, கற்பனை, புனைவு, உண்மை என எல்லாவற்றையும்விட வலிமையானது!!!

சக 

kanmani tamil

unread,
Jan 9, 2025, 11:28:48 PM1/9/25
to vallamai
திருமாலின் திருக்கோல அழகு 

இன்று வைகுண்ட ஏகாதசி...
இப்படி ஒரு தனித்துவப் பட்டியல் பொதுவெளியில் உலா வருகிறது. பின்வரும் திருக்கோலங்களில் நான்கு மட்டுமே நான் நேரில் பார்த்தவை; பிற அனைத்தும் இப்பதிவு மூலம் தெரிந்து கொள்கிறேன். 

///🌻ரங்கனுக்குத் திருவடி அழகு

🌻வரதனுக்குக் கடுக்கன் அழகு

🌻திருவேங்டவனுக்கு சொரூபம் அழகு

🌻திருநாரயணனுக்கு வைர முடி அழகு

🌻விட்டலுக்கு திருசூரணம் அழகு

🌻ஆராவமுதனுக்கு அழகோ அழகு

🌻ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு

🌻பார்த்த சாரதிக்குத் திருமுகம் அழகு

🌻ஜகந்நாதனுக்கு உருண்டைக் கண்கள் அழகு

🌻குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு

🌻உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு

🌻ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு

🌻ஆமுருவியப்பனுக்குக் கருணை அழகு

🌻ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு

அப்பப்பா சொல்ல இயலா அழகு💕 வர்ணனைக்கு அப்பாற்பட்ட அவன் அழகு💕

அந்த அழகன் திருவடிகளே சரணம்🙇🏻///

சக 

kanmani tamil

unread,
Mar 25, 2025, 3:26:50 PM3/25/25
to vallamai
சொந்த ஊரில் உள்ள கோயிலின் தனித்துவம்; இதுவரையில் நான் சொல்லாமல் விட்டது... ஏன் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். 

பக்கத்திலேயை இருப்பதால் அதன் அடையாளத்தைச் சொல்ல வேண்டும் என்று தோன்றவே இல்லை. 


செங்கமலத் தாயாரைச் சொல்கிறார். பெருமாளை நினைத்து நின்ற கோலத்தில் தவம் செய்யும் தோற்றம்.

மொழியியல் விதி அடிப்படையில் 'தங்கால்' எனும் தொகை இலக்கியக் கால ஊர் இடைக்காலப் பாண்டியப் பேரரசின் சிறப்பு மிகுந்த நகராக இருந்து 'திரு' எனும் அடைமொழி சேரத் 'திருத்தங்கால்' ஆகிப் பின்னர் முயற்சிச் சுருக்கம் காரணமாகத் 'திருத்தங்கல்' ஆனது. 

தமிழ் நாட்டில் எண்ணில் அடங்காத தலபுராணங்கள் தோன்றிய காலம் ஒன்று உண்டு. பொதுவாக இலக்கிய வகைகள் காலத்தின் தேவைக்கு ஏற்பவே உருவாகும் என்பது எல்லா நாட்டினர்க்கும் நாகரிகத்தினர்க்கும் பொதுவான விதி தான். தமிழ்ச் சமூகத்தின் பசிக்குத் தீனி போட்ட தலபுராணங்கள் எண்ணில் அடங்காதவை எனலாம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயில் திவ்யதேசங்களுள் ஒன்று. 
திரு + தங்கல் எனப் பிரித்துப் பார்த்து அதை அடிப்படையாக வைத்துக் கதை உருவாகி உள்ளது. 

ஊர்ப்பெருமை குறித்து நான் எழுதிய கட்டுரை தொடரும்...

சக 

 

kanmani tamil

unread,
Mar 27, 2025, 1:32:20 PM3/27/25
to vallamai

காலந்தோறும் திருத்தங்கல்

 ச.கண்மணி கணேசன் 

முன்னுரை:

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியுடன் இணைந்துவிட்ட திருத்தங்கல் ஊராட்சிப்பகுதிக்கு சங்ககாலத்திலிருந்து தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. இன்று சிற்றூராக இருப்பினும் வரலாற்றுக் காலத்தில் புகழ்பெற்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊராக இருந்தது. இவ்வூரின் இருப்பிடமும் அதற்கு ஒரு காரணமாயிற்று.


மேலைநாட்டார் பயணக் குறிப்பில் தங்கால்:

டாலமி தன் பயணக்குறிப்புகளில் தமிழகத்து உள்நாட்டு ஊர்களை வரிசைப்  படுத்துகிறார். அப்பட்டியலில் அவர் ‘தங்கலா’ என்று சுட்டுவது இன்றைய திருத்தங்கல் ஆகும். கடலோடி வாணிபம் செய்த மேலைநாட்டார் தமக்குப் பின் வரும் தலைமுறையினர்க்கு உதவும் வகையில் எழுதி வைத்த நிலவியல் குறிப்புகளில் இடம் பெறும் தகுதியைத் திருத்தங்கல் பெற்றிருந்தது.


சங்க இலக்கியத்தில் தங்கால்:

சங்க காலப் புலவர்கள் சிலரின் பெயர்கள் தங்கால் என்னும் அடையுடன் உள்ளன. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார், தங்கால் பொற்கொல்லனார், தங்கால் பொற்கொல்லன் தாமோதரனார், தங்கால் பொற்கொல்லன் வெண்- 

நாகனார் ஆகிய புலவர் பெயர்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன.

இப்பெயர்களில் காணப்பெறும் தங்கால் என்பதே திருத்தங்கலின் பண்டைப் பெயர் வடிவமாகும். இன்றும் திருத்தங்கலில் உள்ள நூறடி உயரக் குன்றில் எழுந்தருளி இருக்கும் பெருமான் தங்காலப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவ்வூரின் சுற்று வட்டாரங்களில் பெண்களுக்குத் தங்காலம்மாள் எனப் பெயரிடும் வழக்கம் 20ம் நூற்றாண்டு வரை நிலவியது.

     

சிலப்பதிகாரத்தில் தங்கால்:

கண்ணகி மதுரையை எரித்த போது; அவளுக்குப் பின் வந்து தோன்றிய மதுராபதித் தெய்வம் பாண்டியன் பெருமையை உணர்த்தப் புகுங்கால்; தங்காலில் நிகழ்ந்ததாக ஒரு செய்தியைக் கூறியே தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. 

“செங்கோல் தென்னவன் திருந்துதொழில் மறையவர் 

தங்காலென்பது ஊரே; அவ்வூர்ப் 

பாசிலைப் பொதுளிய போதி மன்றத்து” (கட்டுரை காதை L.74-76); 

என்றும், “தடம்புனற் கழனித் தங்கால்”- (மேற்.L.118) என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இதிலிருந்து அறியலாகும் செய்திகளாவன; தங்கால் பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. அது மறையவர் மிகுந்த ஊர் ஆகும். அவ்வூரில் பசுமையான போதி மன்றம் ஒன்றும் இருந்தது. தங்காலருகே கழனிகள் வளம் பெறும் அளவுக்கு ஆறு ஒன்றும் ஓடியது. எனவே விளைச்சல் மிகுந்த ஊர் ஆகும். திருத்தங்கலை அடுத்து இன்று ஓடும்  அர்ச்சுனா நதி என்ற காட்டாறு பண்டு வளமான ஆறாக ஓடியது எனலாம். தி.செல்வக்கேசவராய முதலியார் தனது ‘கண்ணகி சரித்திரம்’ என்ற நூலில் இன்றைய திருத்தங்கலே பண்டைத் தங்கால் என்கிறார்.

சோழ நாட்டைச் சேர்ந்த பராசரன் என்பான் தமிழ் மறையோரைப் போற்றும் சேரனின் அவை சென்று தன் திறமையைக் காட்ட விரும்பினான். தன்னூர் விட்டுக் கிளம்பி; காடும் நாடும் ஊரும் போகி; நீடுநீர் மலயம் பிற்படச் சென்று; சேர நாட்டை அடைந்து; அங்கே வேந்தன் முன்னர் தன் நாவன்மை வெளிப்படும் படியாக மறையோதி மிக்க பரிசில்களைப் பெற்றான். தன் ஊர் திரும்பும் வழியில் தங்காலின் போதி மன்றத்தில் தங்கி இளைப்பாறினான். அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை நோக்கி;

“ குண்டப் பார்ப்பீர் என்னோ டோதியென்  

பண்டச்  சிறுபொதி கொண்டு போமின்” என்று அவன் அழைத்த 

போது; தக்கிணன் என்னும் சிறுவன் தன் மழலை மாறா மொழியில் மகிழ்ச்சி பொங்கப்; பராசரனோடு ஒப்ப; வேத மந்திரங்களைக் குற்றமின்றி ஓதியமை கண்டு மனம் நெகிழ்ந்தான். தான் சேரனிடம் பரிசாகப் பெற்ற ஆபரணங்களை அவனுக்கு அணிவித்து மகிழ்ந்தான் பராசரன். பின்னர் தன் ஊர் நோக்கிப் பயணித்தான். தக்கிணன் திடீரென்று முத்தப்பூணூலும், பொற்கடகமும், தோடும் அணிவதைக் கண்ட அரசு அலுவலிளையர் ‘இவன் தந்தைக்குப் புதையல் கிடைத்துள்ளது; அதை அவன்  மன்னனுக்குக் கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டான்’ என்று அவனது தந்தை வார்த்திகனைச் சிறையில் இட்டனர். வார்த்திகன் மனைவி கார்த்திகையோ அழுதாள்; புரண்டாள்; தன் கணவன் எத்தவறும் செய்யவில்லை என்று அரற்றினாள்; ஏங்கினாள்; அவளது துன்பம் தெய்வத்தின் சந்நிதியை எட்டியது. மதுரையில் இருந்த கொற்றவை கோயில் கதவு திறக்க இயலாதபடி மூடிக் கொண்டது. செய்தி அறிந்த பாண்டிய மன்னன் மருண்டான். தன் செங்கோல் வளைந்ததென்று புரிந்துகொண்டான். ஏவலிளையர் மூலம் வார்த்திகன் அநியாயமாகச் சிறைப்படுத்தப்பட்டமை அறிந்தான். உடன் சிறைவீடு செய்தான். அது மட்டுமின்றித் தன் மார்பு நிலத்தில் தோய வார்த்திகன் முன்னர் வீழ்ந்து வணங்கினான். மாநகர் மதுரை முழுதும் கேட்கும்படியாகக் கொற்றவை கோயில் கதவு திறந்தது. ‘இனிமேல் பாண்டியநாட்டில் யாருக்குப் புதையல் கிடைத்தாலும் அது மன்னனுக்குரியது ஆகாது; எடுத்தவருக்கே சொந்தமாகும்’ என்று தன் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தினான். அச்சட்டத்  திருத்தத்தை முரசு முழக்கி அறிவித்தான். மேலும் வார்த்திகனுக்கு திருத்தங்கல் ஊரையும், வயலூரையும் தானமாகக் கொடுத்தான்.

பாண்டியமன்னன் வார்த்திகனுக்கு அளித்த வயலூர் தன் பெயரிலேயே வளத்தைத் தாங்கி நிற்கிறது. வயலூர் என்ற பெயர் வேளாண்மையைக் குறிக்கும் ‘வெள்’- எனும் பகுதியுடன் இன்று வெள்ளூர் என மாறி வழங்குகிறது. ஆற்றின் தென்கரையில் திருத்தங்கலும்; வடகரையில் வயலூரும் இருந்திருக்க வேண்டும். இன்றைய வெள்ளூரே இப்புவியியலுக்கு ஏற்ப அமைந்துள்ளது. ஒரு நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்றி வைக்கும் காரணி;  திருத்தங்கல் நிகழ்வு எனச் சொல்லக்கூடிய வகையில் கதையின் போக்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


பக்தி இலக்கியத்தில் தங்கால்:

பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியில்;

“தமர் உள்ளும் தஞ்சை தலைஅரங்கம் தண்கால்” (பா-70) என 

இவ்வூர் இடம்பெறுகிறது. திருமங்கை ஆழ்வாரும் திருநெடுந்தாண்டகத்தில்;

“தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி” (பா-17) என

இவ்வூரைச் சிறப்பிக்கிறார். தன் சிறிய திருமடலில்;

“பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்” (அடி-142) 

என வைணவப்  பதிகளின் வரிசையில் சேர்த்துள்ளார். அதற்குரிய வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளை ‘குளிர்ந்த காற்றுப்போலே அடியாரின் சிரமங்களைத் தீர்க்கும் தன்மை உடையவன் என்றன்றோ தண்கால் என்று பெயராயிற்று’ என  இவ்வூரைப் பற்றிச் சிலாகித்து உரைக்கிறார். பெரிய திருமடலிலும்;

“தண்கால் திறல்வலிமை” (அடி-240) என 

இவ்வூர் சிறப்பிடம்  பெறுகிறது. அத்துடன் பெரிய திருமொழி;

“பேரானைக் குறுங்குடியெம் பெருமானைத் திருத்தண்கால் 

ஊரானைக்”- (5ம் பத்து 6ம் பா) 

காண்பது பற்றிப் பெருமை பேசுகிறது. இங்கு தங்காலுடன் ‘திரு’ என்னும் அடைமொழி சேர்ந்துள்ளமை நோக்கத்தக்கது.

   

கல்வெட்டுக்களில் தங்கால்:

தங்கால் குன்றில் பள்ளிகொண்ட பெருமாளுடன் ஒரு குடைவரையும், திருநின்ற நாராயணப்பெருமாள் கோயிலும், கருநெல்லிநாத சுவாமி கோயிலும், காலத்தால் முற்பட்ட முருகன் கோயிலும் உள்ளன. இத்தலம் பெருமாளுக்குரிய 108திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். மேற்சுட்டிய கோயில்களுள் மொத்தம் 39 கல்வெட்டுகள் உள்ளன. தொல்லியல் ஆய்வுத்துறை படியெடுத்த அவற்றுள் கோயிலின் வரலாறும்; அதைச்சார்ந்த ஊரின் வரலாறும் விளக்கம்  பெறுகின்றன. ‘கருநிலக்குடிநாட்டுத் திருத்தங்கல்’ என்று அழைக்கப்படுகிறது. இன்றைய மல்லி, ஆனையூர், வடபட்டி, பெரியகுளம், பனையூர் முதலிய இடப் பெயர்களையும் காண இயல்கிறது. இக்கோயில் பற்றி ஆய்வு செய்த முனைவர் திருமதி இரத்தின மாலா சந்திரசேகரன் அவர்கள்; திருநின்ற நாராயணப்பெருமாள் சந்நிதிக்கு எதிரே மகாமண்டபத் தரையில் பாண்டியன் மாறன் சடையன் காலத்தில் வெட்டப்பட்டுக் கண்டெடுத்த வட்டெழுத்துக் கல்வெட்டே காலத்தால் முற்பட்ட கல்வெட்டாகும். கருநெல்லிநாத சுவாமி கருவறையின் வடக்குச் சுவரிலுள்ள கல்வெட்டு இறைவனைத் திருநெல்வேலி நாதன் என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஊரின் ஒருபகுதி பள்ளிச்சந்தமாக வழங்கப்பட்டு இருந்ததெனச் சொல்லும் கல்வெட்டும் உண்டு. சோழன் உய்யநின்றாடுவானான குருகுலத்தரையன் என்னும் அதிகாரி செய்த திருப்பணிகள் பல.  

     

புராணங்களில் தங்கால்: 

வடமொழியில் எழுதப்பட்ட இத்தலம் பற்றிய புராணத்தை M.R.ஸ்ரீனிவாச ஐயங்கார் தமிழில் ‘திருத்தங்கல் ஸ்தலபுராண வசனம்’ எனத் தமிழாக்கம் செய்துள்ளார். ‘திருமகள் தங்கும் இடமாதலால் திருத்தங்கல்’ என்று பெயர்க் காரணம் கூறுகிறார். நூலினுள்ளே தங்கால் என்னும் பெயரைப் பலமுறை (தொடரும்)


Raju Rajendran

unread,
Mar 28, 2025, 5:51:38 AM3/28/25
to vall...@googlegroups.com
interesting

வியா., 27 மார்., 2025, 11:02 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Mar 28, 2025, 12:06:19 PM3/28/25
to vall...@googlegroups.com

நூலினுள்ளே தங்கால் என்னும் பெயரைப் பலமுறை எடுத்தாண்டுள்ளார். N.S. தாத்தாச்சாரியார் திருத்தங்கல் தல வரலாறு ஒன்றை எழுதியுள்ளார். ‘ஸ்ரீதேவி அரிய தவம் இயற்றிய இடம் ஆதலால் ஸ்ரீக்ஷேத்திரம்’ என்பது அவர் தரும் விளக்கம். திருப்பதி நாராயணப்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருமணம் காணச் செல்லும் பொழுது இருட்டிவிடவே; வழியில் இவ்விடத்தில் தங்கியதால் திருத்தங்கல் என்று பெயர் பெற்றதென இராமநாதபுர மாவட்ட விபரத் தொகுப்பு கூறுகிறது. அத்தொகுப்பில் ஈசன் இருநெல்லிநாதன் என்றும் சுட்டப்படுகிறான்.


மூவேந்தர் நாடுகளை இணைத்த வழியில் தங்கால்:

சேரநாட்டையும் சோழநாட்டையும் இணைத்த ஒரு பாதையின் இடையில் தங்கால் இருந்தது. சேரநாட்டிலிருந்து சோழபாண்டிய நாடுகளுக்குச் செல்லப் பதினெட்டுக் கணவாய்கள் இருந்தன என்று விக்கிரம சோழன் உலா சொல்கிறது.

“...தூதற்காப் / பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும் 

கொண்டு மலைநாடு கொண்டோனும்” (அ.-32-34) எனும் பகுதி 

நோக்கற்குரியது. பதினோராம் நூற்றாண்டில் தன் ஒற்றன் பொருட்டு உதகை என்று அழைக்கப்பட்ட வஞ்சிமாநகரத்தை அழித்த ராஜராஜ சோழன் பதினெட்டுக் கணவாய்கள் வழியாகச் சேரநாட்டைத் தாக்கித் தனதாக்கினான் என்று சேரநாடும் செந்தமிழும் பற்றிப் பேசும் செ.சதாசிவம் கூறியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பேருந்து வழித்தடங்களும், தொடர்வண்டித் தடங்களும் மலிய;  போக்குவரத்து ஒழிந்ததால் கணவாய்கள் தூர்ந்து விட்டன. திருத்தங்கலுக்குத் தென்மேற்கே இராஜபாளையம் அருகே பல்லிளிச்சான் கணவாயும், வடமேற்கே கூமாபட்டிக் கணவாயும் இருந்தமை பொதுமக்கள் வழக்கிலிருந்து அறியும் செய்தி ஆகும். சிலப்பதிகாரக் கதாபாத்திரம் ஆகிய பராசரன் இக்கணவாய்களுள் ஒன்றன் வழியாகத் திருத்தங்கல் அடைந்தான் என்று கதை சொல்வது அறிவாராய்ச்சிக்கு ஏற்புடைய செய்தியே ஆகும்.


முடிவுரை:

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று வரை திருத்தங்கல் பல பெருமை பெற்றுச் சமய அரசியல் மாற்றங்கட்கு உட்பட்டமை இன்னும் விரிவாகப் பார்க்க வேண்டிய ஆய்வாகும்.


(murrum)


Sk




kanmani tamil

unread,
Jul 7, 2026, 12:52:26 AM (yesterday) Jul 7
to vallamai
ஸ்ரீபுரம் மகாலட்சுமி பொற்கோவில்.

/// வேலூரிலிருந்து 11 கிமீ. என் குழுவில் அனைவரும் 70+.

அங்கு அதிகம் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே எச்சரிக்கை வந்திருந்தது. போய்த்தான் பார்க்கலாமே என்ற திமிர் எனக்கு. 

சாலையின் வலது புறம் பிரம்மாண்டமான நுழைவாயில் கண்ணில் பட்டது. ஆனால் கார் நுழையத் தடை. நுழையக் கூடாது என்றால் எதற்கு இந்த கேட்? Only for VIPs? நான் VIP அல்ல என்ற அரிய புரிதலை எனக்கு ஏற்படுத்தித் தந்த அந்த கேட்டுக்கு நன்றி!

கொஞ்ச தூரம் தள்ளி.... கார் பார்க்கிங் பகுதி. அலுவலகங்கள், டிக்கெட் கவுண்டர்கள்..... எங்கு பார்த்தாலும் துரு ஏறிய இரும்புத் தடுப்புகள், தகரக் கூரைகள். மிக மிக சாதாரணமாகத் தோன்றும் அழகற்ற பகுதிகள். கண்களுக்கு இதமாக இருக்கவில்லை. 

பார்க்கிங் அருகில் இன்னொரு நுழைவாயில் மாதிரி ஒரு இடம். அனுமதி மறுப்பு. டிக்கெட் வாங்க வேண்டுமாம். டிக்கெட் கவுண்டரைத் தேடிப்போனேன். வழியில் சீருடை அணிந்த பெண்மணி விசாரித்தார். ஸ்வர்ணலக்ஷ்மி அபிஷேகம் டிக்கெட் 150 ரூபாய் சார் என்று ஏலம் விடும் குரலில் கூறினார்.

கவுண்டருக்குச் செல்லும் வழியில் 2 சீருடை அணிந்த பெண்கள். விசாரித்தால்.... மினிமம் டிக்கெட் 100 ரூபாய் என்றார்கள். 

நடந்தேன் நடந்தேன் கவுண்டர் வரை. கவுண்டர் பலகையில் அறிவிப்பு:

100 ரூபாய் 
150 ரூபாய் 
300 ரூபாய் 
500 ரூபாய் 
1000 ரூபாய் 
3000 ரூபாய் 
5000 ரூபாய் 

ஒரு கனவு. 5000 ரூபாய் டிக்கெட் வாங்கினால், கன்னிப்பெண்கள் சாமரம் வீச, தங்க ரதத்தில் நம்மை உட்கார வைத்து உள்ளே அழைத்துச் செல்வார்களோ? 

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, உங்கள் கனவு நிறைவேறாது என்று உணர்த்துவது போல் 'முன்னால போங்க சார்' என்று பின்னால் இருப்பவர் என் முதுகில் கை வைத்துத் தள்ளினார்! என் கனவும் கலைந்தது.

ஒரு கடவுளைப் பார்க்க ஏழு வகையான கட்டணங்கள். மக்களிடையே ஜாதி மதப் பாகுபாடுகள் போல் இங்கு பொருளாதாரப் பாகுபாடு. 'லூட்டி அடிக்கிறாங்க' என்று டிக்கெட் வாங்க க்யூவில் நின்று கொண்டிருந்த ஒருவர் கூறியது என் செவிக்கு வந்தது. அரைகுறைச் செவி என்றாலும் இந்த விஷயங்களில் உஷார் செவி! 🤣

பொருளாதார மாணவனாகிய நான், என் கண் முன்னே தெரியும் பொருளாதாரப் பாகுபாடு அட்டவணையில் நான் எந்த category என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் போதே, குழுவில் வந்த ஒருவர் ஆலோசனை கூறினார். 

வாசு, உள்ளே எப்படி இருக்கும், என்ன இருக்கும் என்று தெரியாது. வந்ததுக்கு மினிமம் டிக்கெட் வாங்கு. அது போதும் என்றார்.‌ எனக்கும் அதுதான் சரி என்று பட்டது.

100 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு மீண்டும் கேட்டருகே வந்தோம். மீண்டும் அனுமதி மறுப்பு. இந்த கேட் 150 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களுக்காம்.
---------------------------------------------------

100 ரூபாய் கேட்டைத் தேடி, ஒரு வழியாகக் கண்டுபிடித்தேன். 1960களில் திருச்சி நகரின் மத்தியில் ராக்ஸி- வெலிங்டன்
என்ற இரட்டைத் தியேட்டர்களில் 
டிக்கெட் வாங்குவதற்கு முழுவதும் இரும்புக் கம்பிகளாலான குறுகலான நீளமான நடைபாதை கட்டப்பட்டிருக்கும். அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. இரும்புக் கூண்டு மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
(இந்தத் தியேட்டர்களை மூட்டைப் பூச்சி தியேட்டர் என்றும் அந்தக் காலத்தில் அழைத்து வந்தோம்)

அனைவரும் கூண்டுக்குள் நுழைந்து... போனோம்.... போனோம்.... போய்க்கொண்டே இருந்தோம்.... ஓரிடத்தில் பாதை திரும்பியது. எங்கு செல்கிறோம் என்றே தெரியவில்லை.... இருபுறமும் அடைப்புகள் இருந்ததால் வெளி உலகம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏறக்குறைய சுரங்கப்பாதை மாதிரி! 

இது போன்ற இடங்களில் சிலருக்கு பயம் ஏற்பட்டு விடும். சிலருக்கு மூச்சு திணறும்.

மீண்டும் ஒரு வளைவு. பகல் வெளிச்சம் உள்ளே வந்தது சற்று ஆறுதல். தொடர்ந்து நடந்தோம்.... அருகில் ஒரு பெரிய சமையல் கூடம் தென்பட்டது. கிலோ கணக்கில் வெட்டப்பட்ட காய்கறிகள்... அரிசி பருப்பு மூட்டைகள்.... ஊழியர்களின் இரைச்சல்... பார்க்க ஆறுதலாக இருந்தது. மீண்டும் உலகிற்குத் திரும்பியது போன்ற உணர்வு.

முன்னே நடந்தோம் நடந்தோம்.... பாதை மீண்டும் திரும்பியது. பார்த்தால்......நான் முதன் முதலில் சென்று விசாரித்த கேட்! 

அடக்கடவுளே! இவ்வளவு சுற்றி.... மீண்டும் இதே இடத்திற்குத் தானா வந்திருக்கிறேன்! நாங்கள் எல்லோரும் மூத்த குடிமக்கள்.
இந்த கேட் வழியாகவே எங்களை உள்ளே விட்டிருக்கலாமே! 

அந்தப் பணியாளரிடம் கேட்டேன். இல்லை சார், எங்களுக்கு அப்படி ஆணை இல்லை, அவர்கள் சொல்படிதான் நாங்கள் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார். 
-----------------------------------------------------

மேற்கொண்டு நடந்தோம். நடந்தோம், நடந்தோம். திடீரென்று கண் முன்னே அகண்ட புறவெளி. 

கோவிலை நோக்கி அகண்ட பாதை. ஆனால் கோவில் கண்ணுக்குத் தெரியவில்லை. இடது புறத்தில் கோவிலுக்குப் போகும் நடைபாதை. வலது பக்கம் திரும்பி வர நடைபாதை.

VIP-க்கள் வந்தால் அந்த அகண்ட பாதையில் பேட்டரி வாகனத்தில், buggy வண்டிகளில் அழைத்துச் செல்வார்களோ என்னவோ? 

நடைபாதை அழகாக அமைக்கப்பட்டிருந்தது. அழகிய மேற்கூரை. இரு பக்கங்களிலும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், செடிகள், கொடிகள், மரங்கள். அழகாக செதுக்கப்பட்ட சிலைகள்.

இந்த நடைபாதையின் முனையிலிருந்து சற்று தூரத்தில் கோவில் தென்பட்டது. ஆனால் அங்கு போவதற்கு இன்னும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இங்கிருந்து கோவில் வரை செல்லும் நடைபாதை ஆறு முனைகள் கொண்ட சண்முகக் கோலம் போன்ற அமைப்பில் இருக்கிறது. அதன் நடுவில் கோவில். 

இதோ! வந்துவிட்டது கோவில்! என்று நினைத்தால், பாதை அதற்கு எதிர் திசையில் திரும்பிவிடும். சண்முகக் கோலத்தின் ஐந்து முனைகளையும் கடந்து கோவிலுக்கு அருகே வருவதற்குள் உடல் மிகவும் சோர்ந்து விட்டது.

தடுப்புகளைத் தாண்டிக் குறுக்கு வழியாக எங்கும் செல்ல முடியாது. நடைபாதையில் பெஞ்சுகள் உள்ளன. காபி பிஸ்கட் கடையும் உண்டு.
---------------------------------------------------

கோவில் அமைந்திருக்கும் இடம் சற்று மேடான பகுதி. நான்கு புறங்களிலும் சமமான சரிவுகள். சரிவுகளில் பச்சைக் கம்பளம் போர்த்தியது போல் புல்வெளிகள். சண்முகக் கோல நடைபாதையில் நடந்து வரும்போது வலது பக்கம் கோவிலின் ஒவ்வொரு பாகமும் தென்படும்.

சிறிய சுரங்கப்பாதையும் படிக்கட்டும் நம்மை மேல் தளத்திற்கு அழைத்துச் செல்லும். இங்கு முழுவதும் bathroom tiles.

இவ்வளவு கோடி ரூபாய் செலவில் கட்டுமானம் செய்தவர்கள், இந்த இடத்தை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். 

படிக்கட்டின் மேல் ஏறியவுடன் முதலில் நம் கண்களில் படுவது பெயிண்ட் பிய்ந்து போன நிலையிலுள்ள க்ரில்கள். அன்றாடம் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் விளக்குமாறுகளும் மற்ற கருவிகளும் தாறுமாறாகப் போடப்பட்டிருந்தன. அழகான இடத்தில் இதெல்லாம் திருஷ்டிப் பொட்டு மாதிரி.

கோவில் நிர்வாகத்திற்கு aesthetic sense இல்லை.
-------------------------------------------------

ஆயிற்று.... சட்டுபுட்டென்று தேவியை தரிசனம் செய்து கொண்டு திரும்புவோம் என்று நினைத்தால் அதுதான் முடியாது. தேவி வீற்றிருக்கும் மண்டபத்தைச் சுற்றி ஒரு அகழி. அதில் அரை அடி நீர். ஒரு துப்புரவுப் பணியாளர் அதில் கீழே இறங்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். 

இந்த அகழியைச் சுற்றிப் போடப்பட்டுள்ள பாதையில் பக்தர்கள் மீண்டும் கோவிலைச் சுற்ற வேண்டும்! கோவில் நிர்வாகம் நம் பொறுமையை அதிகமாகவே சோதிக்கிறது!

அகழியின் தரையில் ஆயிரக்கணக்கில் நாணயங்கள். பக்தர்கள் வீசியிருக்க வேண்டும். குறைந்தது 2 லட்சம் ரூபாய் இருக்கும்.

அகழியைச் சுற்றி வந்தோம். நேரே தேவி தரிசனம். மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ள சிலை. சகல ஆபூஷணங்களுடன் ஜ்வலிக்கிறாள். நேர்த்தியாக வடிவுமைக்கப்பட்ட வெள்ளி நந்தி. 
----------------------------------------------------

படிகளிலிறங்கிச் சம தரைக்கு வந்தவுடன் நேராக இருக்கும் மண்டபத்தில 70 கிலோ சுவர்ணலட்சுமி தங்க விக்ரஹம். இந்த விக்ரஹத்திற்குத் தான் பக்தர்கள் தாங்களே அபிஷேகம் செய்ய முடியும் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறது கோவில் நிர்வாகம்.

டிக்கெட்டைக் கொடுத்து அனுமதி கேட்டேன். அனுமதி கிடையாது. இந்த டிக்கெட் போதாது, நீங்கள் 150 ரூபாய் வாங்கியிருக்க வேண்டும் என்றார்கள்.

டிக்கெட் கவுண்டருக்குச் செல்லும் வழியில் அந்தப் பெண் சொன்னது ஞாபகம் வந்தது. கவுண்டரில் இருக்கும் பெணாவது எனக்கு இதை விளக்கியிருக்கலாம். சரி... அபிஷேகம் செய்வது பற்றி அடுத்த முறை யோசிப்போம். 

நான் நிற்குமிடத்திலிருந்து அந்த விக்ரஹம் 50 அடி தூரத்தில் இருந்தது. தாமிரச் சொம்பில் நீர் கொடுப்பார்கள். ஐந்து ஆறு படிகள் ஏறினால் விக்கிரகத்தின் தலைக்கு மேல் துளசியும் புஷ்பங்களும் நிறைந்த ஒரு ஓட்டைத் தட்டு தென்படும். சொம்பு நீரை அதில் ஊற்ற வேண்டும். அதுதான் அபிஷேகம். விக்ரஹத்தைத் தொட யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதைக் குறித்துக் கொண்டேன்.

திரும்பி வரும் வழியில் வெண்பொங்கல் பிரசாதம். எண்ணெய் அதிகம் இல்லாமல் நன்றாக இருந்தது.

அருகிலேயே ஒரு பிரசாத ஸ்டால். எனக்கு மிகவும் பிடித்த பூந்தி லட்டுவைக் குன்று போல் குவித்து வைத்திருந்தார்கள். பெரிய சைஸ். ஒவ்வொன்றும் 400 கிராம் இருக்கும். விலை 120 ரூபாய். ஓகே... மிகவும் சீப் என்று இரண்டு லட்டு வாங்கிக் கொண்டேன். 

என்னைத் தவிர, குழுவில் உள்ள மற்றவர்களுக்குச் சர்க்கரை நோய். அதனால் இரண்டு லட்டுவும் எனக்கே என்ற பேராசை.

நடைபாதை அங்கங்கு அடைக்கப் பட்டிருந்தது. இடது பக்கம் உள்ள கடைகளுக்குள் சென்று வெளியே வந்து மீண்டும் நடைபாதையில் இணைய வேண்டும். பக்தர்களை வலுக் கட்டாயமாகக் கடைகளுக்குள் இழுத்துச் செல்ல இது ஒரு அருமையான சூழ்ச்சி! 

இதை மட்டும் அவர்கள் செய்திருக்கவில்லை என்றால் யாருமே கடைகளுக்குள் சென்றிருக்க மாட்டார்கள். வியாபாரம் ஆயிருக்காது. ஏனென்றால் அதிக தூரம் நடந்து நடந்து பக்தர்கள் களைத்துப் போயிருப்பார்கள்.

Curios, துணிமணிகள், தெய்வ விக்கிரகங்கள், அகர்பத்திகள் மற்றும் கைவினைப் பொருள்கள்.... கோயம்புத்தூர் ஈஷா, பெங்களூரு ரவிசங்கர் ஆஷ்ரம் போன்ற இடங்களில் இருப்பது போல் இவர்களுடைய பிராண்டு ஐட்டங்கள் உள்ளன.

ஒருவழியாக, கார் பார்க்கிங் அருகே வந்து விட்டோம். மொபைல் போனை மீட்ட பிறகு, போட்டோ எடுக்கலாமென்று திரும்பிப் பார்த்தால் ஒரு இடம் கூட போட்டோ எடுக்க லாயக்காக இருக்கவில்லை.
----------------------------------------------------
கோவில்களுக்குச் செல்வது ஒரு ஆன்மீக அனுபவம்.‌ பழைய கோயில்களில் உள்ளே மாறுபட்ட அதிர்வலைகளை உணர முடியும். நம் உடலின் உள்ளத்திலும் அவற்றின் தாக்கத்தை உணர முடியும். 

இறை தரிசினம் உற்சாகம் தரும். தன்னிறைவு தரும். அதை அளவிட முடியாது. திருப்பதியில் பத்தே பத்து வினாடிகள் காணப் பெறும் இறைவடிவத்தைக் கண்களில் சிறைப்படுத்தி வெளியே வந்தால், எதையோ சாதித்தது போல் தோன்றும். ஒன்பது கிலோமீட்டர் மலை ஏறியதால் வந்த கால் வலி காணாமல் போகும். உடல் சோர்வு மாயமாகும். அதுதான் அந்த இடத்தின் மகிமை.

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் போன்ற பெரிய கோவில்களிலும் அதே அனுபவம் தான்.

பழங்காலக் கோவில்களின் பிரம்மாண்டக் கட்டுமானத்தைக் கண்டு பிரமித்து நிற்போம். தஞ்சாவூர் பெரிய கோவில் நுழைவாயிலில் நுழையும் போதே பரவசப் படுவோம். கோபுரமும் நந்தியும் மெய் சிலிர்க்க வைக்கும். அந்தக் காட்சிகள் நம் நினைவுகளில் நீண்ட காலம் நச்சென்று பதிந்திருக்கும்.

இந்தக் கோவிலில் இது போன்ற அனுபவங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

வெவ்வேறு வகை தரிசனக் கட்டணங்களை வைத்து, பக்தர்களை ரொம்ப தூரம் நடக்க விட்டு, அலைக்கழித்து விட்டார்கள். ஞாபகார்த்தமாக ஒரு போட்டோ கூட எடுக்க முடியாமல் போனது வருத்தத்திற்குரியது. கோவில் நிர்வாகம் பக்தர்களின் உணர்வுகளை மதிப்பதாகத் தெரியவில்லை. 

மங்கள நாராயணியை வணங்குகிறேன் 🙏🙏
(வாசுதேவன்)///


இதே கோயிலுக்கு ஏழாண்டுகளுக்கு முன் நானும் என் தோழியர் கூட்டமும் சென்று வந்தோம். 

அப்போது ஒரே நுழைவாயில் தான்; பக்தர்கள் தாமே அபிஷேகம் செய்யக் கூடிய விக்ரஹமும் அப்போது இல்லை. 

எங்கள் அனுபவமும் இதே போலத் தான். 
அங்கு பக்தியோ உருக்கமோ துளியும் இல்லை. 
புதுமாதிரியான வணிக வளாகம் என்ற முடிவுக்கு வந்தோம். 
ஆனால்... தங்க விக்ரஹம்; தூண்களெல்லாம் தங்கக் காப்பு... காணவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. 

சூட்சுமம் புரிந்தவுடன்... அந்த வணிக வளாகத்தில் நாங்கள் எதுவும் வாங்கவில்லை. 

மக்களின் பக்தி அங்கே விலை போகிறது; தங்கமாக்கப்படுகிறது!

சக 
Reply all
Reply to author
Forward
0 new messages