சங்கரன் கோயிலில் புற்றுமண் எடுக்கும் இடம்
பயமே இல்லாமல் உள்ளே கை விட்டு எடுப்பார்கள். எனக்கு அந்தத் துணிவு வந்ததில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv-KcPL5brQiMLyhb6PW9DGf4h%3DXOoeLodzbZ2_nMjVww%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hJDy_3d9QqrZ%2B4j5C38KEeiCB-Vuey9N%2BX%3DUXC%3DjqwrA%40mail.gmail.com.
நான் பத்மபீடம் என்று சொன்னது தோற்றத்தை அடியொட்டி நானாக வழங்கும் பெயர் தான். எல்லோரும் அதைச் சக்கரக் குழி என்பர்.
மாரியம்மன் காளியம்மன் வழிபாட்டில் இடம் பெறுவது போலவே பொதுமக்கள் கோமதி அம்மனுக்கும் மாவிளக்கு எடுப்பர்; பூக்குழி இறங்குவர்.
சைவம், வைணவம் இரண்டு சமயங்களின் ஒத்திசைவுக் கோயில் ஆதலால் சங்கர நாராயணர் சந்நிதி முன்னர் பரமபத வாசல் திறக்கும் வைபவம் வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும்.
கோயிலில் வெகு விமரிசையாக நடப்பது ஆடித் தபசுத் திருவிழா. ஊர்வலம் வரும் போது பக்தர்கள் அனைவரும் அவரவர் நிலத்தில் விளைந்த பஞ்சைக் கோமதி அம்மன் மீது தூவி வழிபடுவர்.
ஒரு நாட்டார் தெய்வம் (folk deity) பெருந்தெய்வமாக உருவாகி உள்ள வரலாற்றின் எச்சங்களை இங்குள்ள வழிபடு முறைகளில் காண இயல்கிறது. இப்போது இங்கு பூசை செய்வோர் ஐயரும் பட்டரும் தாம் ஆனாலும்; மக்கள் தம் பாரம்பரியமான நடைமுறைகள் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. அதிலும் ஒரு ஆரோக்கியமான மானசீகச் சமநிலை உருவாகி உள்ளதைக் காண இயல்கிறது.
சமுதாயம் நல்ல திசையில் மேனோக்கி நகர்வது தெரிகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இக் கோயில் நின்று நிலைத்து ஒரு நாகரிகமான சமூகத்தை உருவாக்கி இருக்கும் இவ்வூரின் சிறப்பு அங்கே கிடைக்கும் பிரியாணியில் இருக்கிறது. ஊருக்குள்ளே சுற்றிலும் தடுக்கி விழுந்தால் பிரியாணிக் கடை தான்.
அரிசி விளையாத; மணப் பொருட்கள் விளையாத; ஏதோ ஒரு மேலைநாட்டு ரெசிபி இல்லை. சீரகச் சம்பா- தமிழ்நாட்டு மண் மணத்துடன்; பட்டை, ஏலம், கிராம்பு என அடுத்த மேலைமலைப் பொருப்பில் விளையும் ஒய்யாரங்களுடன்; இவ் வறண்ட பூமியின் கிடைத்தற்கரிய மேய்ச்சல் நிலத்து ஊட்டத்துடன் வளர்ந்த வெள்ளாட்டங்கறிக் கலவையோடு; கபிலர் 'கறிசோறு' என உம்மைத் தொகையாக அழைத்த தமிழகத்துப் பாரம்பரிய ஊன்சோறு. இந்த ருசியை மிஞ்சத் தமிழகம் முழுவதிலும் எந்த நட்சத்திர உணவகமும் பக்கத்தில் நிற்கக் கூட முடியாது.
சக