INSCRIPTIONS ON THE WALLS OF THE CENTRAL SHRINENo. 69. On the outside of the east enclosure.)
தற்காலம் மலிந்து என்றால் விலை குறைவு அதாவது நிறைய வணிகத்திற்கு ல் வந்துள்ளதால்
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே உள்ள கழுகுமலை குசக்குடித் தெருவில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று காணப்படுகின்றது. (S. I. I. Vol. 14 No.31)
ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு யாண்டு இருபத்து மூன்று / அவ்வாண்டு மலை நாட்டு சடையங் கரு நந்தனார் / மேற் படை போய் அருவி ஊர்க் கோட்டை அழித்து / நன்று செய்து பட்டார் / பெரு நேச்சுறத்து எட்டி மண்ணனாயின மங்கல ஏனாதிகள் வீட்டு / கோயிற் சேவகரிருவர் அவனிலோருவன் / றொண்டை நாட்டு பூந்தண்மலி வினையந் தொழு சூரன் / ஒருவன் பேரேயிற் குடிச் சாத்தனக்கன்
நன்று - பெரிது, சிறப்பு, நல்லது; எட்டி - செட்டி(ச்+எட்டி), வணிகன், அரசன் வழங்கும் ஒரு பட்டம்; கோயில் – அரண்மனை
பாண்டியன் மாறன் சடையன் எனும் பராந்தக வீரநாராயணன் ( கி.பி. 866 - 911) உடைய இருபத்து மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 889) மலை நாட்டை ஆளுகின்ற சடையன் கருநந்தன் மீது படை கொண்டு போய் அவனது அருவி ஊர்க் கோட்டையை பெருநேச்சுரம் எனும் ஊரை ஆளும் செட்டி மன்னனான மங்கல ஏனாதி என்பவனுடைய அரண்மனையில் காவல்பணி செய்யும் படைத் தலைவர்களான தொண்டை நாட்டின் பூந்தண்மலியைச் சேர்ந்த வினையன் தொழு சூரன் என்பவனும் மற்றொருவன் பேர் எயில் குடியைச் சேர்ந்த சாத்த நக்கன் என்பவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அழித்து பெருஞ் செயல் புரிந்து வீர சாவு எய்தினர்.
சடையன் கருநந்தன் சேரநாட்டின் மலைநாட்டை ஆண்ட ஆய் மரபு மன்னன். மங்கல ஏனாதி பாண்டியனுக்குக் கீழ்ப்பட்டு பெரு நேச்சுரம் எனும் கழுகு மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். இவன் சார்பில் போரிட்டு மாண்ட இரு மறவர்களும் வட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல்லவர் ஆட்சிப் பகுதி நடுகறகளில் உள்ள சொற்களும் பாண்டியர் நடுகல் சொற்களும் வேறுபட்டிருக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள மொழி அமைப்பு இக்கால் உள்ள மொழிஅமைப்பு போலவே இருப்பது நோக்கத் தக்கது
வணக்கம் ஐயா.
மேலூர் அருகே மலம்பட்டியில் "நெவலி"நாதர் என்று ஐயனார் கோயில் உள்ளது.
மணலி, நெமிலி
இவற்றிற்கான விளக்கம் அருமை.
நன்றி ஐயா.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
இந்தப் பதிவை எழுத்துப் பிழைகள் நீக்கி மின் தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.சுபா
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே உள்ள கழுகுமலை குசக்குடித் தெருவில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று காணப்படுகின்றது. (S. I. I. Vol. 14 No.31)
ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு யாண்டு இருபத்து மூன்று / அவ்வாண்டு மலை நாட்டு சடையங் கரு நந்தனார் / மேற் படை போய் அருவி ஊர்க் கோட்டை அழித்து / நன்று செய்து பட்டார் / பெரு நேச்சுறத்து எட்டி மண்ணனாயின மங்கல ஏனாதிகள் வீட்டு / கோயிற் சேவகரிருவர் அவனிலோருவன் / றொண்டை நாட்டு பூந்தண்மலி வினையந் தொழு சூரன் / ஒருவன் பேரேயிற் குடிச் சாத்தனக்கன்
நன்று - பெரிது, சிறப்பு, நல்லது; எட்டி - செட்டி(ச்+எட்டி), வணிகன், அரசன் வழங்கும் ஒரு பட்டம்; கோயில் – அரண்மனை
பாண்டியன் மாறன் சடையன் எனும் பராந்தக வீரநாராயணன் ( கி.பி. 866 - 911) உடைய இருபத்து மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 889) மலை நாட்டை ஆளுகின்ற சடையன் கருநந்தன் மீது படை கொண்டு போய் அவனது அருவி ஊர்க் கோட்டையை பெருநேச்சுரம் எனும் ஊரை ஆளும் செட்டி மன்னனான மங்கல ஏனாதி என்பவனுடைய அரண்மனையில் காவல்பணி செய்யும் படைத் தலைவர்களான தொண்டை நாட்டின் பூந்தண்மலியைச் சேர்ந்த வினையன் தொழு சூரன் என்பவனும் மற்றொருவன் பேர் எயில் குடியைச் சேர்ந்த சாத்த நக்கன் என்பவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அழித்து பெருஞ் செயல் புரிந்து வீர சாவு எய்தினர்.
சடையன் கருநந்தன் சேரநாட்டின் மலைநாட்டை ஆண்ட ஆய் மரபு மன்னன். மங்கல ஏனாதி பாண்டியனுக்குக் கீழ்ப்பட்டு பெரு நேச்சுரம் எனும் கழுகு மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். இவன் சார்பில் போரிட்டு மாண்ட இரு மறவர்களும் வட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல்லவர் ஆட்சிப் பகுதி நடுகறகளில் உள்ள சொற்களும் பாண்டியர் நடுகல் சொற்களும் வேறுபட்டிருக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள மொழி அமைப்பு இக்கால் உள்ள மொழிஅமைப்பு போலவே இருப்பது நோக்கத் தக்கது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Dr.K.Subashinihttp://www.subaonline.net - எனது பக்கங்கள்http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கி
நான் வசிக்கும் சிவகாசியிலிருந்து கழுகுமலை 30கி.மீ.தூரத்தில் உள்ளது.6ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தோடு ஒரு மாலை வேளையைக் கழிக்க அங்கு சென்று வந்தேன் .சிறிய குன்று .அடிவாரத்தில் ஒரு கோயில்.உள்ளே முருகப்பெருமானைப் பார்த்ததாக நினைவு .நான் ஆராய்ச்சி நோக்குடனோ ஆவணப்படுத்தும் நோக்குடனோ செல்லவில்லை .அதனால் இந்த கோபுரத்தைப் பற்றி என்னால் கருத்துரைக்க இயலவில்லை .மீண்டும் ஒருமுறை அங்கு சென்று இந்தப்படத்தைக் கையோடு கொண்டுபோய் ஒப்பிட்டால் தான் முடியும்.குன்றின் மேல் தான் சமண தீர்த்தங்கரர் புடைப்புச்சிற்பங்களும் ஒரு குடைவரைக் கோயிலும் உள்ளன.அந்தக் குடைவரைக்கோயில் ஒரு masterpiece.எனக்கு வேறு சொற்கள் கிடைக்கவில்லை .வேறு எங்கும் அப்படி ஒரு திறமையான கைவினையை நான் கண்டதில்லை .மாமல்லபுரத்துக் குடைவரைக்கோயிலைகள் வேறு வகை .எங்கள் ஊரில் வெட்டுவான் கோயில் என்று தான் சொல்வோம் வேட்டுவன் கோயில் என்று இந்த இழையில் தான் முதல்முதலாகப் பார்க்கிறேன் .நான் தொல்லியல் துறை சார்ந்தவள் இல்லை .அதனால் எனக்கு அந்த அமைப்பை விளக்கத் தெரியவில்லை .நான் தமிழாசிரியை .மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பொதுத் தமிழ் செய்யுள்தொகுப்பில் அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடல் இடம்பெறும் .அது இந்த முருகன்மேல் பாடப்பட்டது என்பர் .
4ஆண்டுகளுக்கு முன்னர் திரு.கண்ணன் அவரகள் சிவகாசி வந்திருந்தபோது கவிஞர் திலகபாமா அவரை கழுகுமலைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகக் கூறினார் .அவரகள் சென்றார்களா இல்லையா என்று தெரியவில்லைஒருவேளை குன்றின் மேலிருந்த குடைவரைக்கோயிலினுள்ளே சிவன் இருந்திருக்கலாம் .ஒரு ஐயம் சிவன் வழிபாடு இருந்த இடம் சமணக் கோட்டமாக இருக்க இயலாதா ?திரு.பானுகுமார் அவரகள் என் ஐயத்தைத் தீர்த்து வைத்தால் நலம் .என் ஐயத்திற்குக் காரணம் உள்ளது.கொல்லிமலையின் உச்சியில் அறப்பளீஸ்வரர் கோயில் உள்ளது.சிவன்கோயில் தான் .ஆனால் அறப்பள்ளி என்று சமணர் பள்ளியைத் தானே குறிப்பிடுவோம் .அது சமணர் கோட்டமாக இருந்து சைவக்கோயிலாக மாறியிருக்க வேண்டும்.கண்மணி
2017-10-26 12:24 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:சிவா /விஷ்ணு /நரசிம்மா / தக்ஷிணா மூர்த்திதாங்கள் அருகன் என்பது நான்முகன் சிற்பம்நன்றிசுரேஷ்குமார்
அன்பின் சுரேஷ்,வணக்கம்.தெளிவான படத்தின் மூலம் விளக்கியதிற்கு நன்றி.சிலை அர்த்த பத்மாசனத்தில் காட்டப்பட்டிருக்கிறது?யானை சிலை கீழ்க் காட்டப்பட்டிருக்கிறது?கை முத்திரையை சுதைக் கொண்டு மாற்றப்பட்டிருப்பதுபோலயிருக்கிறது?போன்றவைகள் என் ஐயத்திற்கு காரணம்.சரி,சிவனார் கோயிலில், நான்முகனும், விஷ்ணுவும் வந்தது எப்படி? அப்ப்டியென்றால்,இக்கோயில் மிகவும் பிற்பட்ட காலமாகயிருக்கும் என்று நினைக்கிறேன்,
இரா.பானுகுமார்
On Thu, Oct 26, 2017 at 8:54 AM, நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:
சிவா /விஷ்ணு /நரசிம்மா / தக்ஷிணா மூர்த்திதாங்கள் அருகன் என்பது நான்முகன் சிற்பம்நன்றிசுரேஷ்குமார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.