



எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்...திருமண விருந்துமணமக்களின் விருப்பம் பற்றி அறிவது..... தேமொழி
On Sunday, March 22, 2015 at 11:32:11 PM UTC-7, dhivakar wrote://பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு// Selvan//தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?// Themozhiதிருமணங்களில் ‘தளி’கையைப் பற்றிக் கவலைப்படுவது கூட நம் மரபுதான் :-)
2015-03-23 11:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதிதனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?;-)..... தேமொழி
On Sunday, March 22, 2015 at 11:10:20 PM UTC-7, செல்வன் wrote:2015-03-23 0:29 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள் குறைந்து வருவது கண்கூடு.
பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2015-03-24 16:56 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:அது ஏதோ அடிமைச் சின்னம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறேன். ஒரு காலத்திற் தாலியை ஆண்கள் அணிந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆணானப் பட்ட பெருமாளே அணிந்திருந்ததாய்ப் பெரியாழ்வார் சொல்லுகிறார்.
நன்றாக உரக்கச் சொல்லுங்கள் ஐயா. வால்மீகி இராமாயணத்தில், தாலி கட்டாமல்தான் சீதையின் திருமணம் நடக்கிறது. இதைப் பின்பற்றிய கம்பன் தன்னுடைய காப்பியத்தில், கடிமணப் படலத்தில் எல்லாச் சடங்குகளையும் சொன்னாலும், தாலி கட்டுவதைப் பற்றித் தனியே குறிப்பிடவில்லை.ஆனால், பின்னால் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்தில்:'கொற்றவற்கு, ஆண்டு, காட்டிக் கொடுத்த போது, அடுத்த தன்மை,பெற்றியின் உணர்தற்பாற்றோ? உயிர் நிலை பிறிதும் உண்டோ?இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழித்து நீத்தமற்றை நல் அணிகள்காண், உன் மங்கலம் காத்த மன்னோ!உன் கழுத்தில் இன்று தாலி இருக்கிறதென்றால், அதற்கு நீ அன்று களைந்த மற்ற அணிகலன்கள்தான் காரணம். (நீ அந்த அணிகலன்களை இட்டதால்தான், இராமன் இன்னமும் உயிரோடிருக்கிறான்.) என்று அழுத்தமாக வலியுறுத்துகிறான் கம்பன்.அரக்கியர் கழுத்திலும் தாலி இருந்தது. அனுமனைக் கட்டுவதற்குக் கயிறு தேடியபோது (சுந்தர காண்டத்தில்) அவனவன் தன் மனைவி கழுத்திலிருக்கும் தாலியைத் தவிர மற்ற எல்லாக் கயிறுகளையும் கொண்டு வந்தானாம்.மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த-தமக்கு இயைந்தபெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த-கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார்.மங்கலம் என்றால் தாலியைத்தான் குறிக்கிறது என்பது இந்தப் பாடலில் வலுப்பெறுகிறது.மங்கலம் என்ப மனைமாட்சி. இதுவும் அதுவே அன்றோ.
| ||||||||||||||||||||||||||||
(இ - ள்.) நாண் உள்இட்டுச் சுடர் வீசும் நன்மாணிக்கம் நகுதாலி - நாணைத் தன்னுள்ளே அடக்கி, ஒளிவீசும் நல்ல மணிகளிழைத்த நகுகின்ற தாலியை; நல்லார் பேணிக் கழுத்து அணிந்து - மடவார் ஓம்பிக் கழுத்திலே அணிந்து ; பெருங்கண்கருமை விருந்து ஊட்டி - பெரிய கண்ணிலே கரிய மையைப் புதுமைபெற அணிந்து; நீள்நீர் முத்தம் நிரைமுறுவல் - பெரு நீர்மையுடைய முத்தனைய வரிசையான பற்களை; கடுச்சுட்டு உரிஞ்சக் கதிர் உமிழ்ந்து - கடுவைச் சுட்டுத் தேய்த்தலால் அவை ஒளியை வீசி; தோள்நீர்க் கடலுள் பவளவாய் - தோண்டின நீரையுடைய கடலிலுள்ள பவளம் போன்ற வாயை; தொண்டைக் கனிகள் தொழுதன - கொவ்வைக் கனிகள் தோற்று வணங்கின. | ||||||||||||||||||||||||||||
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):
2015-03-24 18:23 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):
தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Tuesday, March 24, 2015 at 6:10:08 AM UTC-7, N. Ganesan wrote:On Tuesday, March 24, 2015 at 6:04:00 AM UTC-7, Hari wrote:தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல் மங்கலம் என்று வள்ளுவர் மங்கிலிய சூத்திரத்தைச்சொல்லுதலும், மங்கிலிய சூத்திரத்தை தாலி என்றே சிந்தாமணி குறிப்பிடுதலும் பார்ப்போம்.
இது எங்கு போய் நிற்கும் என இப்பொழுதே கொஞ்சம் கிலியாக இருக்கிறது...... தேமொழி
| 5809. | ‘ஓங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை |
ஓங்கல் அம்பெருவலி உயிரின் அன்பரை - ‘மலை போன்ற மிக்க
வலிமையும் அழகும் உடைய எமது உயிர் அனைய கணவன்மார்களை;
நீங்கலம் - இதுவரை நாங்கள் பிரிந்திலோம்; இன்றொடு நீங்கினாம் -
(இவனால்) இன்றொடு நீங்கினவர்களானோம்; இனி ஏங்கலம் - இனி யாம்
ஏக்கமுற்று வருந்தமாட்டோம்; இவன் சிரத்து இருந்து அலால்
திருவாங்கலம் - இவன் தலையையே பீடமாகக் கொண்டு உட்கார்ந்து
இருத்தலால், எங்கள் திருமாங்கல்யத்தை வாங்கி அகற்ற மாட்டோம்’; என்று
அழும் மாதரார் பலர் - என்று சொல்லி அழும் அரக்க மகளிர் பலராவர்.
‘தாலி வாங்கும்துக்கச் சடங்கை, குரங்கினைக் கொன்று, அதன்
தலையின் மேல் தான் நடத்துவோம்’ என்று அரக்க மகளிர் வீராவேசத்துடன்
கூறினர் என்க. (5)
இழை (அ) நாணில் ஓலைச் சுருளில் தாயத்து போன்றவை கோத்துச்செய்த தாலி (ஆண், பெண், குழந்தை ...) கலியாணத் தாலி என்றுகி.பி. 3-4 நூற்றாண்டுகளில் மலர்ச்சி அடைந்திருக்கணும். ஸ்ரீஉத்தர காரணாகமத்திலும், லலிதா சகசிரநாமத்திலும் காண்கிறோம்.’மாங்கல்யம் தந்துநாநேன’ எந்த நூலில், எந்த நூற்றாண்டில் வருகிறதுஎனப் பார்க்கணும். தாலி obviously a Dravidian custom that is widely prevalentas a substratum element from Northwest India to Ceylon.இராவணன் இமையத்தை அசைக்கிறான். போர் மூளுமோ என்றுஉமை அஞ்சுகிறாள். மங்கிலியம் நிற்குமோ? - என பயம். எனவே,அந்த situation-ஐ பாடும் பாடல்களில் சேயிழை, ஏந்திழை, ஆயிழை, ...என்று பாடுவார்கள் தேவார முதலிகள். இங்கே அச் சொற்களுக்குமங்கலநாண் அணிந்த பார்வதி எனப் பொருளுண்டு.
சிலம்பிலே திருமணக்காட்சி
தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும்
கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச்
சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட
இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும்
மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக்
காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய
நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது
வருமாறு:
"யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்
அவ்வழி
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்
வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி
யெழுந்தது
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முனைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார் தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு
உழையதா வெப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ழி உருட்டுவோ னெனவே
(மங்கல வாழ்த்துப் பாடல்)
மங்கல வாழ்த்துப் பாடலுள் வரும் "வானூர் மதியஞ் சகடு அணைந்த நன்னாள்"
என்பதற்கு "வானத்திலுள்ள ரோகிணி என்னும் நட்சத்திரத்தை சந்திரன் கூடிய நன்னாள்"
என்றுதான் பொருள் சொல்லப்படுகிறது. இதிலே புலவருலகில் கருத்து
வேறுபாடிருக்கவில்லை.
மணணுலக அருந்ததி
ரோகிணிக்கும் சந்திரனுக்குமுள்ள உறவு மனைவிக்கும் கணவனுக்குமுள்ளது போன்றது
என்று கதை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ரோகிணியைச் சந்திரன் கூடிய நாளே
திருமணத்திற்கான நன்னாள் என்று கருதி அந்நாளிலே கண்ணகி-கோவலனுக்குத்
திருமணம் செய்தனர் அவர்களின் பெற்றோர்- என்கிறார் இளங்கோவடிகள்.
இன்னும் "சாலியொரு மீன் தகையாள்" என்கிறார் கண்ணகியை. கற்புக்குக் கடவுளாக
அருந்ததி என்னும் நட்சத்திரத்தைக் குறிப்பிடுன்றன இந்து சமய காப்பியங்கள்.
அதையொட்டியே கண்ணகி அருந்ததியோடு ஒப்பிடப்படுகிறாள். விண்ணுலகில் கற்புக்குக்
கடவுள் அருந்ததி என்றால் மண்ணுலக மாதர்க்குக் கற்புக்கொரு கடவுளாவாள்
கண்ணகியென்பது சிலம்பு தந்த சேர முனிவரின் பிரகடனம். இது பாரதப் பெருநாடெங்கும்
பரவியுள்ள இந்துக்களின் நம்பிக்கையாகும். கவே இதுவும் தமிழருக்கேவுரிய திருமணச்
சடங்கல்ல.
இன்னும், "மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட", கண்ணகியைக் கைப்பிடித்துக்
கோவலன் புரோகிதன் வளர்த்த தீயை வலம் வருகிறான் என்பதும் இளங்கோ தரும்
திருமணச் செய்தி. "மாமுது பார்ப்பான்" என்பதற்கு, பிதாமகன் (பிரம்மதேவன்) என்றும்
"புரோகிதனுமாம்" என்னும் பொருள் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். பிரம்மா நால்
வேதங்களைத் தந்தவன் என்பது பரத கண்டமெங்குமுள்ள இந்துக்களின் பொது
நம்பிக்கை. அதனால் இந்துக்களாகவுள்ள தமிழர்களும் இதை நம்புகின்றனர்.
"மாமுது பார்ப்பான்" என்பது புரோகிதனை மட்டும் குறிப்பதாகக் கொண்டு, அவன் வேத
வழிப்படி திருமணத்தை நடத்தி வைத்தான் என்று பொருள் கொள்ளத் தூண்டும் வகையிலே
"புரோகிதனுமாம்" என்கிறார் அடியார்க்கு நல்லார். இது ராயச்சிக்குரியது.
"மாமுது பார்ப்பான்" என்பதற்குப் பிரம்ம தேவன் என்று மட்டுமே பொருள் கொண்டால்
இடர்ப்பாடெதுவுமில்லை. மாறாக, "புரோகிதன்" என்பது மட்டுமே கொண்டால், அவன்
வயதால் முதியவன் என்று நம்பியாக வேண்டும்.
பொக்கை வாய்ப் புரோகிதர்
பற்களை இழந்த பொக்கை வாய்ப் பார்ப்பானை புரோகிதத்திற்கு அழைக்கக்கூடாது என்பது
இந்துக்களாகவுள்ள தமிழரின் நம்பிக்கை. "பல்லு போனால் சொல்லும் போம்" என்பதும்
பழமொழி. வடமொழி மந்திரம் உந்தியிலிருந்து எழுந்து வாய் வழி ஒலிப்பதாகும்.
அதனால்தான் அது மந்திர மொழி எனப்படுகிறது. அதிலேதான் புரோகிதம்
நடத்தப்படவேண்டும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. பல்லில்லாதவன் மந்திரஞ் சொன்னால்
சொற்களின் வலிமை போய்விடுமாம்! பொய்ப்பல் கட்டிக்கொள்ள வசதியில்லாத காலத்தில்
பிறந்த சிலப்பதிகாரம் தலால், "மாமுது பார்ப்பான் மறைவழி" என்பதற்கு பிரம்மதேவன்
தந்த வேதங்களில் சொல்லியுள்ள மந்திரங்களை யோதி புரோதிகன் திருமணத்தை
நடத்தினார் என்று சொல்வதுதான் முறையாகும்.
கண்ணகி கோவலன் திருமணம் தமிழர் இன வழி அல்லாமல் நால்வருணப்
பாகுபாட்டின்படி வணிகருக்குரிய முறையில் நடந்ததாகவும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
ளவானூர் மதியம்" என்பதிலிருந்து "காண்பார்கண் நோன் பென்னை" என்பது
வரையுள்ள வரிகளுக்கு,
" மதியம் சகடணைந்த நான்னாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள்
வணிகர்களுக்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட இவர் இங்ஙனம் தீவலஞ் செய்கின்ற
இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாண் என்பாராய்."
என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம்.
சிலம்பில் படும் புரோகிதர்
இதுவரை கூறியவற்றால்-குறிப்பாக , சிலம்பு தந்த அடிகளாரும், அதற்கு விளக்கம் தந்த
அடியார்க்கு நல்லாரும் காட்சிப்படுத்தும் கண்ணகி-கோவலன் திருமணமானது வேத
(இந்து) மதத்தவருக்கு, அவர்களிலேயும் நால்வருணங்களிலே மூன்றாவது வருணத்தவரான
வணிகருக்குரிய நெறிப்படி நடந்ததென்பது உறுதிப்படுகிறது. இதிலே அந்நாளிலும்
இந்நாளிலும் தமிழ் இனத்தவருக்கே உரிய திருமணக்காட்சியில் சடங்காகிவிட்ட தாலி
அணிவிப்பது குறிப்பிடப்படாததால், சிலப்பதிகாரக் காலத்தில் அவ்வழக்கம் இல்லையென்று
கிவிடாது.
கண்ணகி-கோவலன் திருமணத்தில் வேத வழியிலிருந்து வேறுபட்ட -விரோதப்பட்ட அல்ல
- இனவழிப்பட்ட மணமகள் கழுத்தில் மணமகன் தாலியணிவிக்கும் சடங்கும் நடந்திருக்கும்
என்பதற்கு சிலப்பதிகாரத்திலுள்ள வேறு காதைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.
சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் 127-ல் "ஈகையரிய இழையணி மகளிர்" என
வரும் சொற்றொடருக்கு,
"மகளிர்க்கு மங்கல அணி ஒழியப் பிறவெல்லாம் நீக்குதற்கு உரியவாதலின் ஈகையறிய
இழைபெற்றார்" என்கிறார் பழைய உரைகாரர்.
சங்க இலக்கியமான நெடுதல் வாடையிலும், "ரந்தாங்கிய அவர் முலையகத்துப் பின்னமை
நெடுவீழ தாழத் துணைதுறந்து" என்று வருகிறது. இதற்கு
" முன் முத்தால் செய்த கச்சுச்சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது
குத்தலபுல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்று மட்டுமே தூங்க"
என்று உரையெழுதியுள்ளார். புலவர்கெளல்லாம் உச்சி மேற்கொண்டு போற்றும்
நச்சினாக்கினியர்.
சிலம்பில், "அகலுள் மங்கல அணியெழுந்தது" என்னும் வரிக்கு, "ஊரிலே மாங்கல்ய
சூத்திரம் வலஞ்செய்தது" என்கிறார் அருபத உரைகாரர். மற்றும் கணவன் கோவலன்
பிரிந்த வருந்தத்தால் அணிகல்னகளையும் அலங்காரத்தையும் துறந்து வாழும் கண்ணகியை
பாதாதி கேசமாக வருணிக்குமிடத்து, கழுத்தண்டை வரும்போது "மஙகல அணியிற்பிறிதணி
மகிழாள்" என்கிறார் இளங்கோவடிகள்.
பிற அணிகளை அகற்றிவிடட்ட கண்ணகி, கணவன் இன்னும் உயிர்வாழ்கிறான்
என்பதற்கு அடையாளமாகவுள்ள மங்கல அணியான மாங்கல்யம் ஒன்றை மட்டும்
அணிந்திருந்தாளாம். அது ஒன்றுமட்டுமே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாம்.
வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் சேரன் செங்குட்டுவனுக்கு நல்லணிகளோடு
கண்ணகி காட்சியளித்ததைக் கூறுமிடத்தும், " நாவலம் பொன் இழை" கழுத்தில்
இருந்ததாக இளங்கோ அடிகள் கூறுகிறார்.
திரும்பவும் கூறுகிறேன். சிலம்பில் திருமணத்தைக் காட்சிப் படுத்துமிடத்து கண்ணகி
கழுத்தில் கோவலன் தாலியணிவித்ததைக் கூறாமல் விட்டது, அது வேத வழிப் பட்டதாக
அல்லாமல் தமிழர் இனவழிப்படடதாக இளங்கோ கருதியதால்தான்.
நன்றி
மபொ சிவஞானம்
தமிழர் திருமணம்
பூங்கொடி பதிப்பகம்
நீங்கள் கூறிய எடுத்துக்காட்டுகள் பலவற்றை அனைவரும் கூறியுள்ளனர்.சில்ப்பதிகாரம் புகார்க காண்டத்தில்தாலி பற்றிய ஆய்வு முனைவர் இராசமணிக்கனார் காலம் முதல் ஆய்ந்து ஓய்ந்து போன தலைப்பு.மங்கல அணி என்பது தாலியா அன்றி வேறு பொருளா ! என்ற ஐயபாடு இன்றுவரை நிலவி வருகின்றது.இந்திரவிழாக் கொண்டாடும் காலத்தில் நகரப் பெண்டிர் அனைத்து அணிகளையும் அணிந்திருக்கக்கண்ணகியைச் சுட்டும் போது ” மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் “ என்று சொல்லப்படுகின்றது.புகார்க் காண்டத்தில் “ அகலுள் மங்கல அணி எழுந்தது “ என்று வருகின்றது.மதுரைக் காண்ட இறுதியில்கண்வனொடு மதுரை புகுந்த நான் இப்பொழுது வ்றிதே பெயர்கின்றேன்.என்று சொல்லிப் புறப்படும் போதுதன் கை வளையல்களை உடைத்தெறிந்து விட்டுப் போனாள் என்று சொல்லப் படுகின்றது.எனவே மங்கலஅணி என்பது தாலியன்று கை வளையலே என்பாரும் உளர்.ப்ழ்ங்காலத்தில் அரக்கில் செய்யப் பெற்றவளையல்களைப் பெண்ணின் கை அளவு பார்த்துத் திருமணத்திற்கு முதல்நாள் ஒட்டிச் சேர்ப்பது உண்டுஎன்று கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் த்ன்னுடைய நெடுங்கதையான “ இராவ் பகதூர் சிங்காரம் “என்பதில்பதிவு செய்கின்றார்.மங்கல அணி அணியும் வழக்கமுண்டு .அது மெய்யே.ஆனால் அதனை முற்காலஇலக்கியங்கள் சுட்டவில்லை.பிற்கால்த்தில்தான் தாலி அணிதல் வ்ழ்க்கிற்கு வந்துள்ளது என்பாரும் உளர்.தாலி இருந்த்தா இல்லையா என்ப்தை முடிவு செய்து என்ன செய்யப் பொஆகின்றோம்.இன்னும் அறியப்படவேண்டிய வ்ரலாற்றுச் செய்திகள் நிறைய உள.வரலாற்று உண்மைகள் பல திரித்து எழுதப்பட்டுள்ளன.சிவகங்கைமாவட்டத்தில் ஏராளம் உண்டு.அதனை எழுதுகிறவர்கள் சாதிப் பிரச்சினை வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.தாலி பற்றி எழுதிக் கால விரையம் செய்வதைவிட இதுவரை வெளிவ்ராத நூல்களைவெளிக்கொணரும் முயற்சியில் காலத்தைச் செலவிடலாம் என்பது என் கருத்து.யாரையும் குறைத்துநான் மதிப்பிடவில்லை.தேர்ந்த தமிழறிவு உடைய உங்களின் இலக்கியப் பங்களிப்பு த்மிழிலக்கிய வளர்ச்சிக்குத்திரும்பட்டுமே என்ற ஆதங்கம்தான் நான் இதை எழுதக் காரணம்.இதில் பிழையிருந்தால் அறிவுசால் நண்பர்களேபொறுத்தருளுங்கள்.மீனவன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தெலுகில் பனை மரத்துக்கு தாட்டிமான் என்பர். அது தாழை அல்லது தாலம் என்பதன் மரூஉவாக இருக்கலாம்

[1673. -- "For here is a Bird (having its name from the Tree it chuses for its Sanctuary, the toddy-tree). . . ." -- Fryer, 76.]
c. 1750-60. -- "It is in this tree (see PALMYRA, BRAB) that the toddy-birds, so called from their attachment to that tree, make their exquisitely curious nests, wrought out of the thinnest reeds and filaments of branches, with an inimitable mechanism, and are about the bigness of a partridge (?) The birds themselves are of no value. . . ." -- Grose, i. 48.
c. B.C. 320. -- "Megasthenes tells us . . . the Indians were in old times nomadic . . . were so barbarous that they wore the skins of such wild animals as they could kill, and subsisted (?) on the bark of trees; that these trees were called in the Indian speech tala, and that there grew on them as there grows at the tops of the (date) palm trees, a fruit resembling balls of wool." -- Arrian, Indica, vii., tr. by McCrindle.
c. 1330. -- ". . . There is another tree of a different species, which . . . gives all the year round a white liquor, pleasant to drink, which tree is called tari." -- Fr. Jordanus, 16.
[1554. -- "There is in Gujaret a tree of the palm-tribe, called tari agadji (millet tree). From its branches cups are suspended, and when the cut end of a branch is placed into one of these vessels, a sweet liquid, something of the nature of arrack, flows out in a continuous stream . . . and presently changes into a most wonderful wine." -- Travels of Sidi Ali Reïs, trans. A. Vambéry, p. 29.]
[1609-10. -- "Tarree." See under SURA.]
1611. -- "Palmiti Wine, which they call Taddy." -- N. Dounton, in Purchas, i. 298.
[1614. -- "A sort of wine that distilleth out of the Palmetto trees, called Tadie."-<-> Foster, Letters, iii. 4.]
1615.-
". . . And then more to glad yee
Weele have a health to al our friends in Tadee."
Verses to T. Coryat, in Crudities, iii. 47.
1623. -- ". . . on board of which we stayed till nightfall, entertaining with conversation and drinking tari, a liquor which is drawn from the coco-nut trees, of a whitish colour, a little turbid, and of a somewhat rough taste, though with a blending in sweetness, and not unpalatable, something like one of our vini piccanti. It will also intoxicate, like wine, if drunk over freely."-<-> P. della Valle, ii. 530; [Hak. Soc. i. 62].
[1634. -- "The Toddy-tree is like the Date of Palm; the Wine called Toddy is got by wounding and piercing the Tree, and putting a Jar or Pitcher under it, so as the Liquor may drop into it." --Sir T. Herbert, in Harris, i. 408.]
1648. -- "The country . . . is planted with palmito-trees, from which a sap is drawn called Terry, that they very commonly drink." -- Van Twist, 12.
1653. -- ". . . le tari qui est le vin ordi- naire des Indes." -- De la Boullaye-le-Gouz, 246.
1673. -- "The Natives singing and roaring all Night long; being drunk with Toddy, the Wine of the Cocoe." -- Fryer, 53.
" "As for the rest, they are very respectful, unless the Seamen and Soldiers get drunk, either with Toddy or Bang."-<-> Ibid. 91.
1686. -- "Besides the Liquor or Water in the Fruit, there is also a sort of Wine drawn from the Tree called Toddy, which looks like Whey." -- Dampier, i. 293.
1705. -- ". . . cette liqueur s'appelle tarif." -- Luillier, 43.
1710. -- This word was in common use at Madras. -- Wheeler, ii. 125.
1750. -- "J. Was vor Leute trincken Taddy? C. Die Soldaten, die Land Portugiesen, die Parreier (see PARIAH) und Schiffleute trincken diesen Taddy."-<-> Madras, oder Fort St. George, &c., Halle, 1750.
1857. -- "It is the unfermented juice of the Palmyra which is used as food: when allowed to ferment, which it will do before midday, if left to itself, it is changed into a sweet, intoxicating drink called 'kal' or 'toddy.'" -- Bp. Caldwell, Lectures on Tinnevelly Mission, p. 33.
"The Rat, returning home full of Toddy, said, If I meet the Cat, I will tear him in pieces." -- Ceylon Proverb, in Ind. Antiq. i. 59.
Of the Scotch application of the word we can find but one example in Burns, and, strange to say, no mention in Jameson's Dictionary:
1785.-
"The lads an' lasses, blythely bent
To mind baith saul an' body,
Sit round the table, weel content.
An' steer about the toddy. . . ."
Burns, The Holy Fair.
1798. -- "Action of the case, for giving her a dose in some toddy, to intoxicate and inflame her passions." -- Roots's Reports, i. 80.
1804.-
". . . I've nae fear for't;
For siller, faith, ye ne'er did care for't,
Unless to help a needful body,
An' get an antrin glass o' toddy."
Tannahill, Epistle to James Barr.
--
புலிப்பல் தாலி ஆண் அணிவது. ஆனால் கலியாணச் சின்னமாக பெண் அணிவதாகக் காணோம்.சங்க காலத்திலோ, பின்னரோ.பனைக் கொடியும், கலப்பையும் கொண்டவன் வேளாண் கடவுளான பலராமன்.கலப்பைக் கொழுமுனை போல அமைவது தாலி. இதனை சங்க இலக்கிய வரியைவிளக்கும் போது “குத்துதல் அமைந்த தாலி” எனச் சொன்னார் நச்சினார்க்கினியர்.கலப்பைக்கு fertility symbolism எல்லா வேளாண் சமூகங்களிலும் உண்டு.முதலில் மான்கொம்பு, பின்னர் இரும்பு இவற்றால் கொழு அமைந்தகலப்பை பனமரத்தால் செய்யப்பட்டிருக்கும். எனவே, தாலி கலியாணத்தில்கணவன் கட்டுவது திராவிட மக்கள் தொடங்கியுள்ளனர்.இன்று பூணூல் அணிந்த சிவாச்சார்ய குருக்கள் தாக்கப்பட்டுள்ளனர்என்ற அதிர்ச்சியான செய்தி. அவர்கள் வேத வழிப்பட்ட மந்திரங்களில்தாலியை சம்ஸ்கிருத இலக்கியங்களில் - முதலில் சைவ ஆகமங்களிலே- சொல்ல முற்படுகின்றனர். அதன் பின்னர் இலளிதை சகசிரநாமத்திலேபார்வதி தாலி கழுத்தில் அமைந்தது வருகிறது.ஈருயிர் ஓருயிராய்க் கலப்பதற்கு கலப்பை (தாலி) பொருத்தமான சின்னம் தானே.கலப்பு நின்றால் தாலி வாங்கப்படுகிறது.நா. கணேசன்வேத கால இலக்கியங்களிலே உள்ள தவளைக் கலியாணம். இன்றும் இந்தியா எங்கிலும் நடப்பதாகும்.
தவளைகளுக்கு தாலி கட்டி கொண்டாடிய மக்கள்! [Wednesday 2013-10-02 18:00]கோவை அருகே மழை வேண்டி தவளைகளுக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தடபுடலாக விருந்து தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது. அன்றே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் கடந்த 2 வருடமாக மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க சின்னவடவள்ளி கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 30ம் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி, மறுநாள் தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்றும் தேதி குறித்து ஊர் மக்களுக்கு விழா குழுவினர் அறிவித்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. ஆண் தவளையை தேவராஜ் என்ற சிறுவனும் பெண் தவளையை சாந்தாமணி என்ற பெண்ணும் ஊர்வலமாக சக்தி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். தவளைகளுக்கு புதுத் துணி கட்டி, மலர் களால் அலங்காரம் செய்திருந்தனர். நிஜ திருமணம் போன்றே மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. 600 பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. இரவில் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். பின்னர் இரவு முழுவதும் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.
நேற்று காலை 5.30 மணிக்கு தவளைகள் மணமேடைக்கு கொண்டு வரப்பட்டன. மணமேடை வாழை மர தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஐயர் மந்திரம் ஓத கெட்டி மேளம் ஒலிக்க பெண் தவளைக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தடபுடலாக கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் கொடுத்த மொய் பணம் ரூ.3 ஆயிரம் சேர்ந்தது.காலையில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், மாலையில் வடவள்ளி, ரங்கப்பகவுண்டன் புதூர், பெரியபுத்தூர், கெச்சங்கிணர், பெரிய வடவள்ளி, தேசம்பாளையம்,, குமரன் குன்று பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.