தமிழக
அரசியல் வரலாற்றில் தந்தை பெரியாரின் தொண்டராய்த் திராவிடர் கழகத்தில் (நீதிக் கட்சியே
பின்பு திராவிடர் கழகமாக மாறியது) களமிறங்கிய காஞ்சிபுரம் திரு. நடேசன் அண்ணாதுரை அவர்கள்
பின்பு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாய்த் திராவிட முன்னேற்றக் கழகம்
எனும் கட்சியைத் தொடங்கியதும், தி.மு.க என்று அழைக்கப்பட்ட/படுகின்ற அவ்வரசியல் கட்சி
பின்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்ததும் தமிழர்களாகிய நாம் நன்கறிந்ததே.
மிகச் சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன்வாய்ந்த திரு. அண்ணாதுரை அவர்கள் ’அறிஞர் அண்ணா’ என்று கழகத் தொண்டர்களாலும், தமிழக மக்களாலும் அன்போடும், ஆசையோடும் அழைக்கப்பட்டவர்.
தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் ’spontaneous overflow’ என்று வியக்கத்தக்க வகையில் ஆற்றொழுக்காகப் பேசக்கூடியவர் அண்ணா. அதுமட்டுமா? மொழிபெயர்ப்புக் கலையிலும் வித்தகர்!
அதற்கான சான்று…
ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த சிறந்த கல்வியாளரான திவான் பகதூர் சர். இலட்சுமணசாமி முதலியார் அவர்களின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக வந்த வெள்ளையனான இராபர்ட் கிளைவ் பின்பு இந்தியாவையே கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாக மாறினான் எனும்பொருளில் “He came to India as Robert Clive and became Rober Clive” என்று தன் பேச்சினூடே சொல்விளையாடல் நிகழ்த்தினார் இலட்சுமணசாமி முதலியார். அவையிலிருந்தோர் அனைவரும் இதனை மிகவும் ரசித்ததோடல்லாமல் அண்ணா இத்தொடரை எவ்வாறு தமிழில் மொழிபெயர்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் முதலியாருக்கு அருகில் நின்றிருந்த அண்ணாவையே விழி இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தனராம்.
அண்ணாவோ, ”திரு. கிளைவாக இந்தியா வந்தவன் பின்பு திருடன் கிளைவாக மாறினான்” என்று அநாயாசமாக அதனை மொழிபெயர்க்கவும் அனைவரும் வியப்பில் விழிவிரிய விண்ணதிரக் கரவொலி எழுப்பினராம். அண்ணாவின் மொழிபெயர்ப்புத் திறன்கண்ட முதலியாரும் அவரை ஆரத்தழுவித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.
அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை அவர் அரசியல் தலைவராக மட்டுமல்லாது திரைப்பட வசனகர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் முத்திரை பதித்துத் தமிழ்நாட்டு ‘பெர்னார்ட்ஷா’ எனும் சிறப்புப் பெற்றவர்.
“வேலையற்றதுகளின் உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்; சாலையோரத்திலே சலசலப்பு; மரத்திலே பிணம்; மடியிலே பணம்; அரசே இது காலத்தின் குறி” என்பது (எஸ்.எஸ். ராஜேந்திரன், கே. ஆர். ராமசாமி போன்றோர் நடித்த) ’சொர்க்க வாசல்’ எனும் படத்தில் அவர் எழுதிய புகழ்பெற்ற வசனம்.
’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்பது அண்ணாவின் மற்றொரு புகழ்பெற்ற வசனம்.
தன் மேடைப் பேச்சுக்களால் அனைவரையும் சொக்கவைத்தவர் ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது அண்ணாவாகத்தான் இருக்கமுடியும்!!
ஒருமுறை அரசியல் கூட்டமொன்றில் பேசுவதற்காக அண்ணா ஓரிடத்திற்குச் (ஊரின் பெயர் நினைவில்லை) செல்லவேண்டியிருந்தது. அவர் வருவதாகச் சொன்னநேரம் கடந்துவிட்டிருந்தது; அவர் பேச்சைக் கேட்க ஆவலோடு வந்தவர்களோ இரவு எத்தனை மணியானாலும் சரி…அண்ணாவின் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் அவ்விடம் விட்டு நகர்வது என்ற உறுதியோடு அங்கேயே பாய், தலையணை சகிதம் உட்கார்ந்துவிட்டனர். கடைசியாக விழா நாயகர் ‘அண்ணா’ வந்தார். தன் கடிகாரத்தைப் பார்த்தார். அப்போது மணி இரவு 10:30.
’சர்’ என்று யாருமறியாவண்ணம் மூக்குப் பொடியை உறிஞ்சினார். :-) தொண்டையைச் செருமிக் கொண்டார். தன் வெண்கலக் குரலில்
”மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களைத் தழுவுவதோ நித்திரை
மறக்காது
இடுவீர் எமக்கு (திமுக) முத்திரை”
என்றாரே பார்க்கலாம். எழுந்த கரவொலியில் வானமே அதிர்ந்ததாம்!
”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”, ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
போன்றவை அண்ணாவின் புகழ்பெற்ற வேறுசில சொல்லாடல்கள். இவற்றில் ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பது திருமூலரின் திருமந்திரம்; அண்ணா இதனை அடிக்கடிப் பயன்படுத்தியதால் பலர் இது அண்ணா உருவாக்கிய சொற்றொடர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அண்ணாவின் மொழியாளுமை மக்களைக் கட்டிப்போட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அரசியலிலே அண்ணாவை ஓர் மிதவாதி என்றே குறிப்பிடலாம். எதிலும் தீவிரவாதப் போக்கை அவர் கைக்கொண்டதில்லை. (அதனை அவருடைய குறையாகவும் சிலர் விமரிசித்தனர்.) அரசியலில் எதிர்க்கட்சியினரையும் எதிரிகளாய் எண்ணாமல் அவர்களோடும் அன்பாகப் பழகியவர் அவர். தரக்குறைவான சொற்களால் யாரையும் விமரிசிக்காதவர்; அரசியலிலும் நாகரிகத்தைப் பேணியவர்.
கடவுள் மறுப்பிலும் பெரியார் அளவிற்கு அவர் முனைப்புக் காட்டினாரில்லை. நான் ”தேங்காயும் உடைப்பதில்லை; பிள்ளையாரும் உடைப்பதில்லை” என்பதே அண்ணாவின் கொள்கையாக இருந்தது. (It sounds he must be an Agnostic like Pandit Nehru.) :-)
தமிழக
முதலமைச்சராக இரண்டாண்டுகள்கூட முழுதாகப் பதவி வகிக்கவில்லை அண்ணா என்பது மிகவும் வருந்தத்தக்கது.
எனினும், தான் பதவியிலிருந்த சிறிது காலத்திலேயே ‘மதராஸ்’ எனும் பெயரை மாற்றித் ’தமிழ்நாடு’
எனும் புதிய பெயரைத் தமிழகத்திற்குத் தந்தார். 1968-இல் சென்னையில் இரண்டாவது உலகத்
தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.
அசாதாரணத் திறமைகளும், பல்துறை அறிவும், பகட்டற்ற எளிமையும் கொண்ட அறிஞர் அண்ணா எப்போதும் படித்துக் கொண்டிருப்பதையே விரும்புவாராம் (he was an avid reader). தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து எமனின் வரவை அவர் எதிர்பார்த்திருந்த வேளையிலும்கூடத் தன் மரணம் பற்றிக் கவலைப்படாமல் தன் தலைமாட்டில் வைத்திருந்த புத்தகங்களைப் படித்துமுடிக்காமல் போகப் போகிறோமே என்றுதான் கலங்கினாராம். :-(
தன் கவிதைகளால் பாமரர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாரதிபோல், தன் தனித்தன்மை வாய்ந்த மேடைப் பேச்சுக்களாலும், அற்புதமான எழுத்துக்களாலும் பாமர மக்களின் உள்ளங்களில் பாசமிகு ’அண்ணனாக’ இடம்பிடித்தவர் அறிஞர் அண்ணா.
அவருடைய பிறந்தநாளான (செப்.15) இன்று அவருடைய நினைவைப் போற்றுவோம்!
நண்பர்கள் அனைவரும் அறிஞர் அண்ணாவைக் குறித்து நீங்கள் அறிந்த கருத்துக்களை இவ்விழையில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
(சிவகாமிப் பாட்டியின் பேரனிடமிருந்து அதிகத் தரவுகளை எதிர்பார்க்கிறேன்.) :-))
அன்புடன்,
மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-09-15 7:22 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>://சர்.ஏ.ராமசாமி முதலியாரோ!!//அறிஞர் அண்ணா மொழிபெயர்த்தது சர். ஏ. இராமசாமி முதலியாரின் ஆங்கில உரையைத்தான். நான்தான் இவரோடு பிறந்த இரட்டையரும் (twin brother), சிறந்த மருத்துவருமான சர். இலட்சுமணசாமி முதலியாரின் பெயரைத் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டேன். மன்னிக்க!சர். இலட்சுமணசாமி முதலியார் இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்குப் பிரசவம் பார்த்தார் என்று சொல்லப்படுகிறதே...உண்மையா இந்திரரே?
அன்புடன்,மேகலா
2014-09-14 21:29 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
2014-09-15 3:51 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த சிறந்த கல்வியாளரான திவான் பகதூர் சர். இலட்சுமணசாமி முதலியார் அவர்களின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.
சர்.ஏ.ராமசாமி முதலியாரோ!!தெளிவுபடுத்தவும்மதஎசுஇந்திரன்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Sunday, September 14, 2014 7:06:46 PM UTC-7, singanenjan wrote:இலங்கைத் தமிழரைப் பற்றி அண்ணா 1964-ல் எழுதியது:நா. கணேசன்
இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
........
முதல் கழக முதல்வரும் அவர் பெயரில் தொடங்கிய கழகத்தின் இன்றைய முதல்வரும்
[அவர் நினைத்தாரா இது நடக்குமென்று... அவர் நினைத்தாரா இது நடக்குமென்று?]
அண்ணாவின் கடிதமொன்று...தகவல்கள் இணையத்தில் இருந்து
வணக்கம் வாழியநலம்
ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் அற்புதமான ஆளுமை பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு இக்கோட்டோவியம்.
அமைதியாக் புத்தகம் படிக்கும் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
உங்களுக்கும் பிடிக்கும் என்று பகிர்கிறேன்.
பார்க்க, ரசிக்க.
சு.ரவி.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/GWptKTdBvSE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
மிக நல்ல முயற்சி மேகலா. பாராட்டுக்கள்.இந்தக் கட்டுரையை நம் மின்தமிழ் மேடையில் இணைத்து வைக்க பரிந்துரைக்கின்றேன்.சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Thanks Ms Mekala.
Su.Ravi
வணக்கம் வாழியநலம்
ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் அற்புதமான ஆளுமை பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு இக்கோட்டோவியம்.
அமைதியாக் புத்தகம் படிக்கும் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
உங்களுக்கும் பிடிக்கும் என்று பகிர்கிறேன்.
பேரறிஞர் அண்ணா..
பிறந்தநாள் இன்றுதான் எனும்போதே ஏதோ ஒரு பந்தம் எழுகிறதே உள்ளத்தில்! அவரை நேரில் பார்த்த ஞாபகங்கள் இல்லை! அவரின் நெஞ்சார்ந்த உரைகேட்ட பாக்கியமுமில்லை! அவரின் ஆற்றல்மிக்க அரசாட்சியை அருகிருந்து பார்த்ததில்லை! போற்றுகிறார்.. நாட்டில் உள்ளோர் பலருமே என்பதைவிட பலமான காரணங்கள் ஏதுமில்லை! மறக்கத்தான் முடியாத மாணிக்கம் அவர்! மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று வார்த்தைகளில் சூட்சுமங்கள் நிறையவைத்து எதிர்ப்போரையும் தன் வசமாக்கிய தமிழ்மகன்! மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று என்றால் அது அண்ணா! எந்த ஒரு கருத்தையும் எப்படி எடுப்பது.. எப்படி தொடுப்பது.. எப்படி முடிப்பது என்பதை அணுவணுவாய் அவரிடம் கற்கலாம்! பாத்திரப் படைப்புகளிலும் பரிட்சயம் உள்ளவராய் அன்றே அண்ணா பற்பல திரைப்படங்களுக்கு கதையெழுதித் தந்திருக்கிறார். வேலைக்காரி முதல் வண்டிக்காரன் மகன் வரை அப்படங்கள் கால வரலாற்றைத் தாண்டி இன்னும் பேசப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றன. மாணவப் பருவத்தில் பள்ளிப்பாடத்தில் படித்த செவ்வாழை என்னும் சிறுகதை அண்ணா எழுதியது என்று அறிந்தது நினைவுண்டு! சொல்லத்தான் வார்த்தைகள் போதாமல் அவர்பற்றி சுவையான செய்திகள் பரிமாற.. ஏடதனை எடுத்து இன்று ஏதோ ஒரு செய்தியைப் பகிர்தலே வேண்டும் என்கிற உந்துதல் காலை முதலே இருந்தது.. என்றாலும் அலுவலகக் கடப்பாடு அதற்கு வழிவகுக்கவில்லை.
அழகுதமிழ் மொழிதனை அவரெடுத்து ஆளும்திறம் அதற்குப்பின் எவருக்கும் அந்த அளவிற்கு வாய்க்கவில்லை! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூக்கறுக்க நினைத்தோர் தாமே.. முன்வந்து அண்ணாவை அழைத்து முத்தமிழ் மன்றமிதில் முழங்க வேண்டும் என்று சொன்னார். அண்ணணும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி தலைப்புதனை பகர்க என்றார். தருகிறோம் என்று சொல்லி கடன்வாங்கியவர் தருவதற்கு தவணை கேட்பதுபோல்.. தள்ளியே போனது அந்தத் தலைப்பு எனும் விஷயமும். அப்படி இப்படி என்று பேசவேண்டிய நாள் வந்தது.. மேடைக்கும் வந்துவிட்டார்.. ஒலிவாங்கியை அவர் கைகளிலும் தந்துவிட்டார்.. என்றாலும் தலைப்பு மட்டும் தராமல் இழுத்தடித்தார்கள்.. கடைசியிலே கறுப்புப்பலகை அங்கே பின்னணியில் இருக்கிறது.. அதை ஒரு திரைச்சீலையிட்டு மறைத்திருந்த மாணக்கார் மனக்கதவுகளை.. அடுத்து வந்த ஒன்றரை மணிநேர ஆங்கில உரையாலே ஆளவந்தார்.. நம் அண்ணா..
ஆம்.. அந்தப் பலகையிலே ஒன்றுமில்லை என்பதுவே உங்கள் தலைப்பு.. உரையாற்றுக.. தமிழில் அல்ல.. ஆங்கிலத்தில் என்று வந்தது ஒரு குரல்!
மடைதிறந்த வெள்ளமென பிரவாகமெடுத்து.. ஒன்றுமில்லை என்கிற தலைப்பிலே அவர் பேசிய பேச்சு இன்றுவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெல்ல முடியாத வரலாறாய் நிற்கிறது! அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாய் அவரை வெல்ல.. துணிந்திருந்த எதிர்க்கட்சி மாமணிகள்.. வெட்கத்தில் தலைகவிழ்ந்தார்! மாற்றாரை மதித்து மனம்திருந்த வைப்பதிலே தேர்ந்திருந்த அண்ணா.. அவர்தம் உள்ளம் வென்றார்! எவரெல்லாம் அண்ணாவை எள்ளிநகையாட வேண்டும் என்று காத்திருந்தாரோ.. அவரேதான் கைவலிக்க பாராட்டி கரவோசை செய்திருந்த காட்சியை மறக்க முடியுமா? அண்ணாமலைப் பேருரை என்கிற பெயரில் அவர்தம் உரை சிறுவடிவப் புத்தகமாய் படித்திருக்கிறேன்.. ஆங்கில ஆக்கத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு..
மற்றுமொரு நிகழ்வு ஒன்று மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது அமரர் அண்ணாவைப்பற்றி! காஞ்சியிலே அவர் வாழ்ந்த வாழ்க்கை எளிமையின் சின்னம்! முதல்அமைச்சர் ஆனபின்னும் அவர்காட்டிய பணிவும்.. தமிழ்நாட்டின்மீதான அக்கறையும்.. புற்றுநோய் என்னும் அரக்கன் வந்து புகழுக்குப் புகழ்சேர்த்த மன்னவனை கொண்டு செல்லாதிருந்தால் தமிழகத்தின் அரசியலில் மறுமலர்ச்சி வந்திருக்கும்!
ஆம்.. அவர்தான் தன் வீட்டுத்திண்ணையிலே ஒரு நாள் அரசுக் கோப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாராம்! அந்நேரம் ஒரு கழக உறுப்பினர் வந்து ஐயா.. என் மகனுக்கு கல்லூரியில் இடம் வேண்டும்.. பிரமுகர் ஒருவரின் பரிந்துரைக் கடிதம் கொண்டுவா.. என்கின்றார். ஐயா.. ஒரு கடிதம் கொடுத்தால்.. நன்றாயிருக்கும் என்று சொல்ல.. எழுதிக் கொண்டிருந்த எழுதுகோலை மூடிவைத்து மற்றுமொரு எழுதுகோல் எடுத்த கழகத்தின் கடித ஏட்டில் மடல் வரையத் தொடங்கினாராம். ஏன்.. அண்ணா.. இரண்டுமே கறுப்பு மைதானே.. ஏன் எழுதுகோலைமாற்றினீர்கள் என்று அந்தக்கழக உறுப்பினர் கேட்டதற்கு முதலில் நான் எழுதிக் கொண்டிருந்தது அரசாங்க மை! இப்போது நான் எழுதுவது என் சொந்த மை!! என்பதை எண்ணிப்பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது!
வங்கக்கடலோரம் வரும் அலைகள் தாலாட்ட தங்கத்திருமகன் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் வந்துதித்த மண்ணில்தான் நாமும் பிறந்திருக்கிறோம் என்கிற பெருமை பீறிடுகிறது.. அண்ணா..அண்ணா.. அண்ணா என்று உங்களை ஆராதிப்பதில் அர்த்தமிருக்கிறது! அணையா விளக்கு நீங்கள்.. உங்கள் கல்லறையிலும் அணையாவிளக்கு எரிகிறது!
நினைவலையின்
ஓரத்தில் ஒரே ஒரு நொடிப்பொழுது இன்னும் சிறகடிக்காமல் இருக்கிறது தெரியுமா?
அன்றொரு நாள் அண்ணா நீங்கள்.. அடையாறு = சி.எல்.ஆர்.ஐ. எனப்படும் வளாகத்தில் பேசிமுடித்து புறப்பட்டு வெளியே வருகின்றீர்.. உங்களைக் காண ஓடோடி வந்த சிறுவன் நான்.. அந்த வளாகத்தின் கதவுகள் திறந்திருக்க.. வாயிற்காப்போன் வணக்கம் செலுத்த.. உங்கள் வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்த உங்களை ஒரு நொடி பார்த்தேன்.. உயிர்வரை இனித்ததுபோலிருந்தது!
காலம் ஒன்றும்
அதிகம் உருண்டோடவில்லை! நாங்கள் வாழ்ந்த
அதே பகுதியில் அமைந்த புற்றுநோய் மருத்துவமனையில் அண்ணா
அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி!
நான் என் பள்ளிக்குச் செல்கிற வழிதான்.. அண்ணா உங்களைப்பற்றி அதிகம்
தெரியாத வயது! தமிழகத்தின் முதலமைச்சர் இங்கே சிகிச்சை பெறுகிறார் என்பது மட்டும்
தெரிய.. வந்ததே அந்தத் துயரச் செய்தி! நெஞ்சிலே விழுந்த இடி!! எந்த ஒரு நாட்டிற்கு
இப்படிப்பட்ட தலைவன் கிடைக்க மாட்டானோ.. அவன் கிடைத்திருக்க.. யார் கண் பட்டதோ
தெரியவில்லை.. ஊரெல்லாம் ஓலமிட்டு அழுதது!
உங்கள் உயிர்ப்பறவை இவ்வுலகைப் பிரிந்தது! ஒவ்வொரு வீதியின் மருங்கிலும்
உங்கள் புகைப்படம்.. மாலை.. கற்பூர ஆரத்தி, ஊதுபத்தி.. ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்று திராவிட இயக்கத்திற்கு புதுவடிவம் தந்தவனே.. உன்னை வழிபட்டது உன்
மறைவுச்செய்தி கேட்டு!! அதிர்ச்சி தாங்காமல்.. உறைந்துபோன ஊரை நான் கண்ணாரக்
கண்டேன்! உலகத்தில் ஒரு அரசியல் தலைவன்
இறப்பிற்கு மக்கள் கடல் திரண்டு இவ்வளவு வந்தது என்று சொன்னால் அது அண்ணாவிற்குத்
தவிர வேறு எவருக்கும் அந்த அளவு இல்லை என்கிற வரலாறு மாற்றமுடியாதது!
எந்த பந்தமும் இல்லாத நானே முதன் முதலாக ஒரு இறப்புக்கு அழுதது அன்றுதான்! கதறிஅழுதேன்.. இனம்புரியாத உறவு என்பார்களே.. அண்ணா.. இதுதானா? ஏன் அழுதேன் என்று சொல்ல அன்றைக்கு என்னிடம் வார்த்தையில்லை.. இன்றைக்கு அந்த அழுகைக்குப் பின் எத்தனை நியாயமிருக்கிறது என்று உணர்வுபூர்வமாக உணர்கிறேன்!
சொல்லால்.. பேச்சால், எழுத்தால்.. மக்கள் மனதில்வாழ முடியும் என்று காட்டியவன் நீ! உன் சுவாசக்காற்றின் ஈரம் ஒருதுளி எனக்கு கிடைத்திருக்கிறது போலும்! எனவேதான் தமிழ் என்றால் மனம் சதிராட்டம் போடுகிறது! உனக்கான இரங்கலைக்கூட இப்படி எழுதிக்காட்ட முடிகிறது! வேறென்ன வேண்டும் எனக்கு?
அன்புடன்
காவிரிமைந்தன்
Then, Anna said, “Look here Kannadasan. Karunanidhi was the one who brought MGR into the party, and those fancy titles like Makkal Thilagam and Puratchi Veerar were tagged to him, by you guys. The popularity he has now, was due to your rash deeds. Now, for which reason can I tell that MGR is not needed in our party? If there is any route, let me know.”
What he said was true. It was our fault that knowing that he had faults, we praised him beyond the limits to increase his fan base. For that sin, now we are suffering now.”
http://sangam.org/2011/10/Kannadasan_Booklet.php?uid=4486
கண்ணதாசன் மாலையிட்ட மங்கை படத் தயாரிப்பில் கையைச் சுட்டுக் கொண்டவர். வேறு நடிகர்களை வைத்துப் படம் எடுக்கவிடாமல் தடுத்தார். தி.மு.க தொண்டர்கள் படம்பார்க்கவென்றே டி.ஆர். மஹாலிங்கம் பாடிய பாடலை அறிமுகப்படுத்தினார்
https://www.youtube.com/watch?v=CG-HAtxZyrY
கலைஞர் கவிஞர் மோதலில் அண்ணா கண்ணதாசனுக்கு உதவவில்லை, அதனாலேயே தி.மு.கவை விட்டு விலகியவர் அண்ணா மரணப் படுக்கையில் இருக்கும்போது பார்க்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் தனக்குத் தெரிந்த வழியில் இலைமறை காயாக நலம் விசாரித்ததாகச் சொல்வதுண்டு
https://www.youtube.com/watch?v=tnGQmUuWu3U
மதஎசுஇந்திரன்
என் அண்ணா
(கவியரசர் கவிதை)
சங்கத் தமிழெடுத்து
தங்கத்திலே இணைத்து
எங்கும் தருவாரடி - என் அண்ணா
இன்பத் தமிழரடி!
தென்னவன் பிள்ளையடி..
தீராத தீரரடி!
எண்ணம் நிறைந்தாரடி - என் அண்ணா
ஏற்றம் மிகுந்தாரடி!
முகத்தினில் அழகிருக்கும்
முல்லைமலர் மனமிருக்கும்
மொத்தமும் நிறைந்திருக்கும் - என் அண்ணா
மொழிந்திடும் ஒரு வார்த்தையில்!
பகைவரைச் சிரிக்கவைத்தார்..
பாம்பையும் பழக்கிவைத்தார்..
வகையொடுக்கும் நூற்கள் - என் அண்ணா
மனவளம் மிகவே கொண்டார்!
நாட்டிற்கு ஒருவரடி
நற்றமிழ் அறிஞரடி
கேட்டவர் அறிவாரடி - என் அண்ணா
கீழ்குணம் அறியாரடி!
(கவியரசர் கண்ணதாசன் கவிதை நூல் 1 & 2)
கவியரசு மின்னஞ்சல் - 1893
கருணாநிதி பற்றி அண்ணா
கவிஞர் கண்ணதாசன்
" நாங்கள் திராவிடர் கழகத்தில் இருந்தபோது திருவாரூருக்கு ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அப்போது ஒரு மாணவனாக இருந்த கருணாநிதியை அங்கே சந்தித்தேன். அந்தப்பருவத்திலேயே அவனுடைய குறும்புத்தனமான பேச்சு எனக்கு கோபத்தை உண்டாக்கியது. அதே நேரத்தில் வியப்பாகவும் இருந்தது. அப்போது என்னருகிலேயே தம்பி சம்பத்தும் இருந்தான். திரும்பிசெல்லும்போதும் கூட கருணாநிதி பற்றி சம்பத்திடம் பேசிக்கொண்டே போனேன்.
அதன் பிறகு ஒரு சிறிய பத்திரிக்கையின் மூலம் அவன் திராவிடக் கழக தோழர்களுக்கு அறிமுகமானான். அந்தப் பத்திரிக்கையின் பெயரும் 'முரசொலி' தான். சிறு வயதிலேயே அவனிடம் எழுத்துக் கவர்ச்சி இருந்தது. அதே நேரத்தில் கவர்ச்சிகரமாகவும் உருக்கமாகவும் பேசப் பழகி வைத்திருந்தான். கலைத்துறையில் ஈடுபாடிருந்ததால் ஜனங்களுக்கு அறிமுகமானான்.
1949 -ல் திராவிடர் கழகத்தை விட்டு நாங்கள் பிரிந்து தி மு க ஆரம்பித்தபோது முன்னணியிலிருந்த முக்கியஸ்தர்களில் ஒருவனாக அவன் விளங்கினான். என்னைப் பற்றி பேசிப்பேசியே அவன் தன்னை வளர்த்துக்கொண்டது ஒரு வகையான திறமையும் சாமர்த்தியமும் ஆகும். கலைத்துறை ஈடுபாடு அவனை வெகுவிரைவில் தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டது.
கடுமையாக உழைப்பான். எதிலும் தானே முன்னணியில் நிற்க வேண்டுமென்று ஆசைப்படுவான்.
இந்த நேரத்தில் இங்கிலாந்து அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றி அவர் மகன் சொன்ன கருத்து என் நினைவுக்கு வருகிறது,
" பாருங்கள்! என் தந்தை பிரசவித்த வீட்டுக்குப் போனால் தானே குழந்தையாக இருக்க ஆசைப் படுகிறார். பொதுச் சபைகளுக்குப் போனால் தானே தலைவனாக இருக்க ஆசைப் படுகிறார். கல்யாண வீட்டுக்குப்போனால் தானே மாப்பிள்ளையாக இருக்க விரும்புகிறார். கருமாதி வீட்டுக்குப் போனாலும் தானே பிணமாக இருக்க ஆசைப் படுகிறார்" என்றாராமவர்!
கருணாநிதியின் சுபாவம் அப்படிப்பட்டது. அவனது உழைப்பை ஆசை முந்திக்கொண்டு போகிறது.
தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எந்த வழியையும் கடைப்பிடிப்பது அவனுடைய சுபாவம், .அதிலே தோல்வியுற்று அவமானப்பட நேர்ந்தால் அதையும் ஜீரணிப்பது அவன் பழக்கம்.
தனக்கு விளக்கு தூக்குகிறவர்கள் மட்டுமே நண்பர்களாக இருக்க முடியுமென்பது அவன் சித்தாந்தம்.
பிறரை தூண்டிக் காரியம் செய்வான். கலகம் செய்வான். தான்தான் காரணம் என்பதைக் காட்டிக் கொள்ள மாட்டான், கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதற்கு அவன் உண்டாக்கிய கலகமே காரணம். அவர்களெல்லாம் என்னை விசுவாசித்தவர்கள். அவர்களெல்லாம் போன பிற்பாடு என்னையே அவன் ஆட்டிப்படைக்கத் தொடங்கினான். கட்சிக் கட்டுப்பாடுக்காக அதை வெளியே சொல்ல நான் தயங்கினேன்.
கட்சி எப்படிப்போனாலும் பதவிக்கு வந்தாக வேண்டுமென்று கூட்டணி சேர்ப்பதில் அவன்தான் முன்னணியில் இருந்தான்.
பதவிக்கு வந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலாகா பிரித்துக் கொடுத்தேன். இந்த இருபத்திமூன்று மாதங்களில் மற்ற மந்திரிகளுக்கும் சில இலாக்காக்கள் இருப்பதாகவே அவனுக்கு நினைவில்லை.
எல்லாவற்றிலும் புகுந்து விளையாடினான்.
போலீஸ் மந்திரி நான். உத்திரவிடுவது அவன்.
சகிக்கும்மட்டும் சகித்துப் பார்த்தேன். இனி சகிக்க முடியாது என்ற நிலை வந்தபோது - இறைவா, நீ வாழ்க - நீ என்னை அழைத்துக்கொண்டு விட்டாய்.
அனுசரித்த சம்பிரதாயங்களின் படி முதலமைச்சராக வேண்டிய நெடுஞ்செழியனை இப்போது அவன் ஒதுக்கித் தள்ளி விட்டான்.
நானிருக்கும் காலத்தில் தன் குடும்பக் கவலைகளைக் கூட நெடுஞ்செழியன் என்னுடன் தான் பகிர்ந்து கொள்வான். இப்போது யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் அவன் சொல்ல முடியம். அவனைப்போல என் கட்சியில் என்னை நேசித்தவர்கள் எல்லாம் இனி உள்ளுக்குளேயே புழுங்கிச் சாவதைத் தவிர வேறு வழி என்ன?
கருணாநிதியின் கையில் ஆட்சி வந்து விட்டது. நான் இல்லை என்ற நினைப்பிலாவது அவனுக்கு பொறுப்புணர்ச்சி வரவேண்டும். சேறு மிதிப்பது போல ஆட்சியை நடத்தக் கூடாது. அவன் என்ன செய்யப் போகிறானோ?
போதாக் குறைக்கு ஆதித்தன் வேறு பங்காளியாகி இருக்கிறான். நான் இருக்கும்போது ஆதித்தனை ஒதுக்கியே வந்தேன். இனி எவனும் ஆட்டம் போடுவான்.
இனி ஜனங்களிடமிருந்தும் கிஞ்சித்தும் அனுதாபத்தை அவர்கள் பெறமுடியாது.
-- மனிதன் பேசி முடித்தான்; தேவன் விடைப் பெற்றுக்கொண்டான்.
பிகு: கண்ணதாசன் அவர்கள் சி. என். அண்ணாதுரை அவர்கள் மறைந்த பின் தன் பத்திரிக்கையில் சில கடிதங்கள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு 'சொர்க்கத்தில் அண்ணா' என்று பெப்ரவரி 28 - 1969 அன்று ஒரு சிறு புத்தகமாக கண்ணதாசனுடைய தம்பி இராம முத்தையா அவர்களால் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தில் 'கருணாநிதி பற்றி அண்ணா' என்று 37-40 பக்கங்களில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையே இது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பகைவரைச் சிரிக்கவைத்தார்..
பாம்பையும் பழக்கிவைத்தார்..
என்னும் கவியரசர் கவிதையில் உண்மை உறைந்திருக்கிறதே..
2014-09-17 18:56 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:அண்ணா முதல்வராய் இருந்தபோது, எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் தன அறிவாற்றலை காட்டும் முகத்தான்,அவர் காங்கிரஸ் உறுப்பினர் கே.விநாயகம். ஆக்ஸ்போர்டில் படித்ததாகவும் ஷேக்ஸ்பியரில் புலமை மிகுந்தவராகவும் சட்டமன்றப் பேச்சுகளில் குறிப்பிட்டுள்ளார்மதஎசுஇந்திரன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வாக்களித்தார்கள். 1957 சட்டமன்றத் தேர்தலில் வென்று உள்ளே வந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த முதல்நாளே அண்ணா, ‘‘இன்று நீங்கள் அந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கிறீர்கள். நாங்கள் இந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கிறோம். காலம் மாறும். வல்லூறுகளை சிட்டுக்குருவிகள் வீழ்த்தும் காலம் வரும். நாங்கள் அந்தப் பக்கம் இருப்போம். நீங்கள் இந்தப் பக்கம் இருப்பீர்கள்” என்றார். மூக்கில் பொடி ஒழுக, நாக்கில் நம்பிக்கை வடிய அண்ணா பேசிய பத்தே ஆண்டுகளில் காலம் மட்டுமல்ல, காட்சியும் மாறியது; ஆட்சியும் மாறியது. அதுதான் 1967.