Cascade - அடுக்கம், தொடர் அடுக்கம் (சிலப்பதிகாரத்தில்)

42 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 9, 2016, 11:44:56 AM10/9/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Sunday, October 9, 2016 at 5:39:38 AM UTC-7, jayabarathans wrote:
Venthan Arasu wrote>Cascade என்றால் தமிழில் என்ன?

தொடரடிப்பு, தொடர்ப் பொழிவு, தொடர் வீழ்ச்சி.

சி. ஜெயபாரதன்


cascade = தொடரடுக்கம் எனலாம். 
cascade of mountains = தொடரடுக்க மலைகள் (அ) அடுக்கிய மலைகள்.
cascade of events = அடுக்க நிகழ்வுகள். அடுத்தடுத்து நேர்வன.
 
Cascade of steps = அடுக்க சோபானம், அடுக்கப் படிக்கட்டுகள்.

அடுக்கு அடுக்காக இருக்கும் மலைத் தொடர்கள் Cascade Range. https://en.wikipedia.org/wiki/Cascade_Range

அமெரிக்காவில் தொடரடுக்க மலைகள்:



இளங்கோ அடிகள் காவேரியின் முதலானதும், பெரியதும் ஆகிய
சீரங்கத்தின் அருகே உள்ள Cascade மலைகளை ”அடுக்கம்” எனப் பதிவுசெய்துள்ளார்.

காவேரி நதியின் மிகப்பெரிய அரங்கம் ஆகிய சீரங்கத்தின் அருகே
cascade of hills உள்ளது. சமணர்கள் பள்ளியும் இன்னமும் உண்டு.
சங்க இலக்கியத்தில் எல்லாம் காவிரி தான். கன்னடநாட்டார்
சொல்லும் காவேரி, காவுந்தி/கவுந்தி, காவதம்/காதம் சொற்களை
தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யும் அடிகள் சீரங்கப்பட்டினத்தின்
Cascade-ஐ நாடுகாண் காதையில் பதிவு செய்வதைக் குறிப்பிட்டிருந்தேன்.
அங்கே, சமணக் கடவுளர் (சித்தர்) அந்தசாரணர் வழிபாடு.

நாடுகாண் காதை:

ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெய ரைய ரொருங்குட னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் 
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப்

சீரங்க பட்டினத்தில் - காவேரி ஆற்று வீ அரங்கத்தில்
அருகேயுள்ள அடுக்கத்து மலைகளைக் குறிப்பிடுகிறார்.
அடுக்கம் - cascade of hills. சீரங்க பட்டினம், அதற்கு வடக்கே
சில காதம் தொலைவில், சேரர் வஞ்சியில் இருந்து சென்று
சமண சமயக் கோட்பாடுகளை அடிகள் கற்றிருக்கலாம்.

சீரங்கம், திருவரங்கம் வேறுபடுத்தி இளங்கோவடிகள் பாடியதை
பழைய உரைகாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். திருவரங்கத்தில் பல நாள்களுக்கு
முன்னர் சீரங்க பட்டினத்தில் நடந்த அந்தசாரணர் வழிபாட்டை நினைவூட்டிச்
செல்கிறார். காவேரியின் இரண்டாம் அரங்கமாகிய திருவரங்கத்தில்,
முதல் அரங்கம் (சீரங்கம்) நிகழ்ந்த அசாதாரணமான அந்தரசாரணர்
வருகை, சமண சமய போதனை நினைவுக்கு வருதல் இயல்பு. திருவரங்கத்தை
துருத்தி என்றார். பெரிய அரங்கம் சீரங்கபட்டினம், அங்கிருந்து 
திருச்சி வரும் வழியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மிக விரிவாகப் பாடி
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்னும் சமணக் கோட்பாட்டை விளக்கினார்.

சீரங்கத்தில் அடுக்கம்: (Cascade of Hills)






இந்த அரங்கத்தின் அருகே ”குரங்கு அமை மரம் பயில் அடுக்கம்” பல உள்ளன.
வடபெரும்கோட்டின் (சையமலைத் தொடர்கள்) மலைநாட்டு சீரங்கம் இது.



சீரங்க பட்டினத்து அடுக்கத்தில் இருந்த கோட்டையில் போர்:


Cascade of mountains behind Seringapatam battle scene: மரம் பயில் அடுக்கம் (சிலம்பு, நாடுகாண் காதை)








 























நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Oct 9, 2016, 12:11:46 PM10/9/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
”முன் குளகு அருந்திக் கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்”
”கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்:
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்”
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின்”

கறங்கு என்றால் ஓசை, சுழற்சி எனும் இருபொருள் உள.
மேற்கண்ட அடிகளில் சுழற்சியும் பொருந்து. ஓலின், இசை எனும் சொற்களும் ஒலியை குறைக்க கறங்கு சுழற்சியை குறிக்கலாம்.

கறங்கு² kaṟaṅku

n. < கறங்கு-. 1. Whirling, gyration; சுழற்சி. (திவா.) 2. Kite, wind-whirl; காற்றாடி. கான்முகமேற்ற . . . கறங்கும் (கல்லா. கண பதி.) 3. Sound; சத்தம். (பிங்.)


9 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 11:44 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Oct 9, 2016, 6:28:07 PM10/9/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
அடுக்கம் என்ற சொல்லை Cascade-க்கு தமிழில் பயன்படுத்துவது மிகப்பழைய மரபு.
அடுக்கம் = பக்கம் பக்கமாக அமைந்த மலைகள் = cascade of hills, mountains.
cascade என்ற சொல்லுக்கு அடிப்படையாக “in stages, successively, subsequently" flowing/being next to each other.
அடுக்கடுக்கடுக்காக உள்ள மலைகள் பன்மலை அடுக்கம்.

cascade of water falls = நீரருவி அடுக்கம்.  
There are several waterfalls in the area = அங்கே அருவிகளின் கூட்டம்/திரள் இருக்கின்றன.

Cascade of Mountains = நெடுமலை அடுக்கம்.

நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாட் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல் (அகநானூறு)

Famous lines of CilappatikAram:
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள


cascade of mountains near Kumaricode. This cascade can be seen in Kotricode near Kanyakumari.

----------------

மஞ்சு உலா வரு சிகரியும் சூளிகை வரைப்பும் 
விஞ்சு மேல் நில அடுக்கமும் சோலையும் வெற்பும் 
சஞ்சரீக மார் ஓடையும் வாவியும் தடமும் 
எஞ்சல் இல்லதோர் மாடங்கள் எங்கணும் உளவே. - kampan

---------------------------------


நாடுகாண் காதை:

ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெய ரைய ரொருங்குட னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் 
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப்

சீரங்க பட்டினத்தில் - காவேரி ஆற்று வீ அரங்கத்தில்
அருகேயுள்ள அடுக்கத்து மலைகளைக் குறிப்பிடுகிறார்.
அடுக்கம் - cascade of hills.

N. Ganesan

unread,
Oct 10, 2016, 9:57:45 AM10/10/16
to மின்தமிழ், vallamai


On Monday, October 10, 2016 at 6:34:56 AM UTC-7, jayabarathans wrote:
Cascade  என்னும் சொல் வரிகள் கூறும் வாசகத்துக்கு ஏற்ப பொருள் வேறுபடும். 

சி. ஜெயபாரதன்

ஆமாம். .


"அடுக்கு அருவி, தொடர்படு அருவி - cascade" என்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலை என்பதுபோல, தொடர்ந்தூள்ள அருவிகளுக்கு அடுக்கருவி, தொடரருவி, அடுக்குவீழருவி, ... பொருந்தும்.

அருவியடுக்கம் (அல்லது) அருவித்திரள்:












































அடுத்தடுத்து, அடுக்கடுக்காக என்பது cascade-ன் அடிப்படைப் பொருள்.  
cascade என்ற சொல்லுக்கு “in stages, successively, subsequently" flowing/being next to each other
 
அடுக்கம் = cascade என்று பலகாலமாக தமிழில் உண்டு. 

சுருளி cascade எனல் பொருந்தாது எனத் தெரிகிறது.




2016-10-10 1:35 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Sunday, October 9, 2016 at 4:44:30 PM UTC-7, kalai wrote:

வணக்கம்.
cascade = சுருளி
சுருளி மலை
சுருளி அருவி
சுருளி ஆறு


சுருளி என்பது ஒருவகை மரம். https://en.wikipedia.org/wiki/Mesua_ferrea

சுருளி curuḷi , n. < id. 1. Iron-wood of Ceylon, l. tr., Mesua ferrea; இலங்கை மரவகை. 2. Telegraph-plant. See தொழுகண்ணி. (சங். அக.)

நா. கணேசன்

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Oct 11, 2016, 7:39:51 AM10/11/16
to vallamai, மின்தமிழ்
அடுத்தடுத்த?

I know this from experience; I was a writer on an early example of a show to benefit from this cascade of affection.



10 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:57 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 11, 2016, 9:56:53 AM10/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Tuesday, October 11, 2016 at 4:40:06 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
அடுத்தடுத்த?

I know this from experience; I was a writer on an early example of a show to benefit from this cascade of affection.

அடுத்தடுத்த (அ) அடுக்கடுக்கிய ... 

அடுக்கருவி = cascade of waterfalls.

அடுக்கம் = cascade. 2000 ஆண்டுகளாய்த் தமிழில் பதிவு ஆகியுள்ளது.

கொற்றிகோடு மலைகள் குமரி மாவட்டத்திலே பக்கமலைகளாய் இருக்கின்றன.
இவற்றை குமரிக்கோடு என்று பரியாயப் பெயரால் அழைத்து ”பன்மலை அடுக்கம்
என்கிறார் தாம் எழுதிய தமிழ்தேசீய நாவலில் இளங்கோ அடிகள்.

நா. கணேசன்

On Tuesday, August 16, 2016 at 8:07:27 AM UTC-7, Suba.T. wrote:
எனது வினாக்கள்

தமிழகம் போன்ற சூழலில் வரலாற்றுத் தகவல்கள் பாதுகாப்பு என்பவை சிறப்பாகச் செயல்படவில்லை. காலின் மெக்கன்சி காலத்தில் தான் அது பற்றிய பிரக்ஞை ஏற்படுகின்றது.   இந்தச் சூழலில் அனைத்து  பூளோக  நில சம்பந்தப்பட்ட தகவல்களும், நமக்கு இப்போது கிடைக்கின்ற நூல்களில் இருந்தே ஆக வேண்டும் எனக் கொள்ள முடியாது அல்லவா..?

இதே தொடர்ச்சியாக... குமரி என்ற பெயரில் தான் அது சுட்டப்பட்டிருக்க வேண்டும் என  நினைத்து நாம் தேட அது வேறு பெயரில் சுட்டப்பட்ட ஒரு பொருளாகவும் அல்லது  சேர நாடு, தென்னாடு, பாண்டிய நாடு என்ற வேறு பெயரால்  சுட்டப்பட்ட காரணமும் இருந்திருக்க வாய்ப்புண்டா?

சுபா

நல்ல வினாக்கள். இளங்கோ அடிகள் கற்பனையில் புனைந்த காவியத்தில் வழங்கும்பெயர்களைச் சற்றே மாற்றிப் பயன்படுத்தியுள்ளார்.
கோவலன் (விஷ்ணு-க்ருஷ்ணன்),  மாதவி (குருக்கத்தி. முல்லைத்திணையின் கோபியர் குறியீடு), கண்ணகி (கர்ணகீ, தாமரைப் பொகுடு, இலக்குமி),
கனகவிஜயர் (18 நாழிகைப் போர், மகாபாரதம் சுட்டும் கனக (ஹரி = விஷ்ணு), விஜயர் (அர்ஜுனன்) - கனகவிஜயர் வடநாட்டு மன்னர் கதாபாத்ரம், ....

அதுபோல், பறளி ஆறு குமரி மாவட்டத்தில் (கோவை மாவட்டத்திலும் பறளி ஆறு உண்டு) - பழம்பெயர் பஃறுளி ஆறு.
இளங்கோ கொற்றவை வழிபாட்டை பல இடங்களில் சொல்கிறார். லலிதா சகசிரநாமத்தில் 40 தொடர்களை அப்படியே மொழிபெயர்க்கிறார்.
பாய்கலைப்பாவை மந்திரம் எல்லாம் உண்டு. வேட்டுவவரி தனியாக நிற்கிறது. எனவே, கொற்றிகோடு என்னும் பன்மலை அடுக்கத்தை
குமரிக்கோடு என்று பரியாயப் பெயரால் அழைக்கிறார் எனலாம். குமரிக்கோடு = கொற்றிகோடு, இன்றும் உள்ள ஊரும், பல மலை அடுக்கமும்

நா. கணேசன்


நீர்க்கரைக்கு கோடு என்னும் பெயரை வேறுமுறையில் எழுத 4-5 ஆம் நூற்றாண்டில் முயற்சி செய்தனர். அதுபற்றிப் பின்னர் பார்ப்போம். வட்டெழுத்து தொடக்க காலம்.
காசரகோடு (காஞ்சிரங்கோடு) அருகே கிடைத்த கல்வெட்டு.

செங்கோடு, சேரங்கோடு, காஞ்சிரங்கோடு போல மலைக்கு -கோடு என்ற பெயரில் கொற்றிகோடு உள்ளது. கன்யாகுமரிக்கு மிக அருகே.
கொற்றவை (கன்யாகுமரி) கொற்றி என சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுகிறாள். அதன் அருகே வேளிமலை உள்ளது. பிரசித்தமான முருகன் தலம் வேளிமலை.
வேள் - வேளி எனவாகும்.  கொற்றி = குமரி (கன்யா குமரி), எனவே தன் தமிழ்தேசிய நாவலில் இளங்கோ அடிகள் கொற்றிகோடு, சற்றுமாற்றி குமரிக்கோடு என்றால்.
கோற்றிகோடு மலையே கடல் சுனாமியின் போது மூழ்கியது என்கிறார். காலப்போக்கில் இக் கதை விசுவரூபம் எடுத்து, குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம்
என வளர்ந்துவிட்டது. 

இக்கதைகளுக்கான அடிப்படையை இலக்கிய வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. சமணர்களின் கொடையை மறைக்க அகத்தியர் தமிழ் இலக்கணம் எழுதினார்
என்றும், முதல், இடை, கடை சங்கங்கள் என்றும் சைவர்கள் “இறையனார் அகப்பொருள்” நூலிலும், உரையிலும் கதைகள் கட்டினர். 

கொற்றிகோடு

 ‘என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இதுவரை சாதிக்க வில்லைஎன்றாலும் ஒரு சிறு அறிமுகம் இன்றியமையாதது என நினைக்கிறேன் . தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் .’

கொற்றிகோடு - பன்மலை அடுக்கம்:



Local News In Kotticode!


Sunday, January 30, 2011

கொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்

       முச்சங்கம் வைத்து தமிழ்வளர்த்த சேர,சோழ,பாண்டிய மூவேந்தருள்  முதன்மை பெற்ற சேர நாட்டின் தென் பகுதியில், கடல் கொண்ட லெமுரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியாக நின்று, இன்று முக்கடல் முத்தமிட, முத்தமிழ் கொந்தளிக்க , நஞ்சையும் , புஞ்சையும் கொஞ்சி விளையாடி பல இலக்கிய சுவை கூறும் குமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் நாகர்கோயில் நெடுஞ்சாலையில் தக்கலை பகுதியிலிருந்து  பிரிந்து மார்த்தாண்டவர்மா மன்னரால் 17 ஆம் நூற்றாண்டில்  நட்டாலத்து நீலகண்டபிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையின் மேற்பார்வையில் கட்டப்பட்ட வரலாற்று புகழ் கூறும் பத்மனபாபுரம் கோட்டை வாசலை முத்தமிட்டு செல்லும் குலசேகரம் சாலையில் , குமாரபுரம்  சந்திப்பில் ராஜீவ் காந்தி சிலை இடத்திலிருந்து பிரிந்து சிலப்பதிகாரம் காப்பிய புகழ் கூறும் பெருஞ்சிலம்பு  செல்லும் பாதையில் இரு பக்கமும் அமைந்திருக்கும் ஊர்தான் கொற்றிகோடு. இவ்வூர் மக்கள் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி வாழ்கிறார்கள் . எனவே இவ்வூர் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி விரிந்துள்ளது .
 வேளிமலை தோற்றம் 

இயற்கை அன்னை எழில் நடனமிடும் இக்குமரிமாவடத்தின்  மையபகுதியில்  மாவட்டத்தின் இதயம் போன்று அமைந்து , வானுயர மப்புடன் உயர்ந்து நின்று இளம்தென்றல் வீசி வரும் சுகம் கொடுக்கும் எழில் மிகு பசும்சோலைகளையும் கொண்டு ,முக்கனியும் ,தேங்கனியும் முதிர்ந்து , பணப்பயிரும்,மணபயிரும், குணப்யிரும் வாரிவழங்கி இம்மாவட்டத்தின் ஜீவாதாரமாக அமைந்திருப்பதும் , தமிழர்களின் தனித்தெய்வமான எழில்மிகு திருமுருகன்  தன் இதயம் கவர்ந்த கன்னி ,அன்று தினைப்புலம் காத்த வள்ளியை  தேடிவந்து திருவிளையாடல் நடத்திய இடமும் , தக்கராஜன் வேள்வி வளர்த்த இடமாகையால் இம்மலைக்கு வேளிமலை என்று வரலாறு கூறுவதுமான வேளிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இவ்வூரார் வேளிமலையிலிருந்து உதித்து வரும்உதயசூரியனை காலையில் கிழக்கு திசையில் கண்டு தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர்.


இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் வேளிமலை முகட்டிலிருந்து உற்பத்தியாகி இம்மாவட்டத்தில்  விளைந்தோடி வளபடுத்தும் ஆறுகளில் ஒன்றான கயலைகள் துள்ளி ஓடும் வள்ளி ஆறு இவ்வூரின் தெற்கு எல்லையிலும் , இன்னொன்றான தட்சணகோதையாறு என்ற சடையாறு இதன் வடக்கு எல்லையிலும் வளைந்தோடியும், பேச்சிபாறை  பெருஞ்சாணி அணைகளின் நீரைசுமர்ந்து வரும் பத்மனபாபுரம் புத்தனாறு என்ற வெட்டாறு  இதன் தென்மேற்கு  எல்லையில் விளைந்தோடி வளபடுத்தியும், இதன் 3 திசைகளிலும் விளைந்தோடி அரண்போல் அமைந்த பத்மனபாபுரம் புத்தனாறை கடந்து செல்ல குமாரபுரம் அம்மன்கோயில் பக்கமுள்ள பாலம் மட்டும் இதன் முக்கிய கணவாய் போன்று அமைந்த ஓர் பாதுகவல் ஊர்தான் கொற்றிகோடு .


          இவ்வளவு பாதுகாவலும் செல்வசெழிப்பும்  கொண்டு குறிஞ்சியும் ,முல்லையும் , மருதமும் ,ஒருங்கே அமைந்த  இவ்வூரிலே ஒரே மொழி பேசும் ஒரே இனம்  குழுமி வாழ்ந்து கொண்டிருகிறது . இந்த இனம் தான்  நாட்டின் தலைமக்களான நாடன் இனம். நாடாண்ட பரம்பரைக்கு சொந்தக்காரன் .சேரநாட்டை  மட்டுமின்றி இமயம் வரை இந்தியாவை ஆண்டதும் இவ்வினமே என்று இளம்பிள்ளை எழுதிய " பண்டைய கேரளம் " என்னும் நூலில் 198 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. தன் உயிரே போவதாய் இருந்தாலும்  கூட போர் நெறியிலிருந்து பின்வாங்கவோ , முன் வைத்தகாலை பின் வைக்கவோ , புறமுதுகிடவோ  மாட்டார்கள் , இதற்கு சான்றாக விளங்கியதால் சான்றோர் எனப்பட்டனர் . சேரனின் போர்ப்படை வென்று(கிரேக்கம்  வென்று )" இமயத்தடக்கிய சேரன்" என்று சிலப்பதிகாரமும் , பின் நாகரீகத்தில் பிறந்தவன் நாடான் , அவன் கள்ளையும், பதநீரையும் ,பனம்பால்(அக்கானி) கொடுத்து வளர்க்கப்பட்டவன். சான்றோர்  இன நாடான் என அகிலத்திரட்டு அம்மானையும் கூறுகிறது .
பழைய வரலாற்றுகளிலே . சங்க இலக்கியங்களிலே வெற்றிவேண்டி போர் தொடுத்து செல்லும் வேந்தர்கள் தங்கள் வெற்றிக்காய் கொற்றவை தெய்வத்தை(பத்திரகாளியை) வேண்டிகொண்டனர் . கொற்றவையை வெற்றிதேவதயாக வழிபட்டனர். தங்கள் நாடார் குலத்தை பனம்பால் கொடுத்து வளர்த்த கொற்றவையை இவ்வூர் மக்கள் தங்கள் குலதெய்வமாககொண்டு  வழிபட்டு அன்று வாழ்ந்திருந்தார்கள் . இத்தகவலை பெயர் தெரியாத ஒரு புலவர் எந்த நாளிலோ எழுதி வில்லுப்பட்டுகளில் பாடிவந்த பாடலான




                                         "கட்ட கட்ட உச்ச நேரம்"
                                           காளியம்மா வாற நேரம்
                                          பொட்டகுளத்து  இசக்கி யம்மை
                                          பொழுதடைய வாற நேரம்"


புத்தனாறு 


என்ற வரிகளால் தெரிய வருகிறது . இதிலிருந்து கூழக்கடை பக்கமுள்ள மக்கள் பொட்டைகுளக்கரையில் காளி (கொற்றவை) கோயில் இருந்ததாகவும் அங்கிருந்த மக்கள் காளியை  குல தெய்வமாக கொண்டு வழிபட்டதும்  தெரிய வருகிறது .
(இப்பாடல் மீட் நினைவு ஆலய 150 வது விழா மலரில் பக்கம் 44 ல்  இடம்பெற்றுள்ளது).


                      ஆனால் கி. பி. 1818 ல் பண்டைய வேணாட்டில் இன்றைய குமரி மாவட்டத்தில் மயிலாடியை மையமாக கொண்டு திருதொண்டாற்ற  சங். சார்லஸ் மீட் அவர்கள் வந்தார்கள் .திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் தாழ்த்தப்பட்டு அடிமைபடுத்தபட்டு கிடந்த நாடார் குலத் தமிழர்களின் விடுதலைக்காய் தோள்சீலை போராட்டத்தை நடத்தியவரும் , ஆட்சியாளர்களின் அனுமதியால் நாகர்கோயில் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவரும் , இன்று நாகர்கோயிலில் தன்னாட்சி கல்லூரியாக (autonomouse college )ஆக வளர்ந்திருக்கும் scott christian  college - அன்று  ஆரம்ப பாடசாலையாக ஆரம்பித்தவரும் ,1828 ல் நெய்யூரை தலைமையிடமாககொண்டு செயல் பட்ட நெய்யூர் மருத்துவமனையை நிறுவியவருமான  மேலே குறிப்பிட்ட சார்லஸ் மீட் ஐயர்  அவர்கள் 1830 ல் கிறிஸ்தவ நற்செய்தியை தெரிவிக்கும் படி கொற்றவையை  வழிபட்ட மக்கள் வாழ்ந்த கொற்றிகோட்டிற்கு  வந்தார் . அவர் அவர்களிடம் கிறிஸ்தவத்தை போதித்து திருத்தொண்டாற்றினார் அவரது போதனையால் தங்கள் குல வழிபாட்டை விட்டு ,இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட மக்கள் , தங்கள் குல தெய்வ சிலையையும் , வஸ்திரங்களையும் ,பூததடிகளையும் , கிலுக்குமணியையும்  சார்லஸ் மீட்  அவர்களிடம் ஒப்படைத்தனர் .


                          அவைகளை பெற்று கொண்ட மீட் ஐயர் அவர்கள் , அவற்றை லண்டனில் உள்ள ஆஸ்டின் பிரேயர்ஸ் என்ற  பொருட்காட்சி சாலைக்கு அனுப்பி வைத்து விட்டு   கொற்றவை தெய்வ வழிபாட்டிற்கு ஒரு கோடு போட்டு நிறுத்திவிட்டு கொற்றிகோடு குளத்திற்கும் பொட்டைகுழி குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியான சீனிவிளையில் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டி , கிறிஸ்தவ சமயதொண்டும், அங்கு ஓர் பாடசாலையை கட்டி கல்வியறிவு புகட்டி , சமுதயதொண்டும் ஆற்றி அச்சமுதாயத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்றார் . அவர் வைத்த" கொற்றவைகோடு" காலபழக்கத்தில் மருவி "கொற்றிகோடு " ஆக மாறியது . இவ்வாறாக கொற்றிகோடு பெயர் பிரபலமாகி இன்று  வெற்றிகள் பல குவிக்கும் கொற்றிகோடாக மாறி வெற்றிகள் குவித்துகொண்டிருக்கிறது .மீட் ஐயர் தன்  குறிப்பில் "KOTTICODE  IS THE HEAVEN OF SOUTH TRAVANCORE "என்று குறிப்பிட்டுள்ளபடி மேன்மை பெற்று திகழ்கிறது .




எழுதியவர் : உலக தமிழ் எழுத்தாளர் கொற்றை இ . ஞானதாஸ் (+919944373580
                          கொற்றிகோடு குமாரபுரம் அஞ்சல் 


பதிவு செய்தவர் : ஜே.டி .சிபி டேவிட 

 
 
Reply all
Reply to author
Forward
0 new messages