முதிரை... வாலூன் வல்சி = அரிசீம்பருப்பு சோறும் அதை ஒத்த பிறவும்

83 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Sep 29, 2023, 4:55:38 AM9/29/23
to vallamai
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவர்க்கு விருந்து அளித்தான். அசைவம், சைவம் என இருவகைச் சோறும் அவன் அளித்த விருந்தில் ஒத்த சிறப்புடைய உணவுகளாகப் பரிமாறப்பட்டன. 

தனக்காகப் போரிட்ட வீரர்க்கு அளித்த விருந்தில் ஊன் கலந்த நெல்லரிசிச் சோறு மட்டும் இன்றித் துவரை முதலிய பயறு வகைகளுடன் கலந்த நெல்லரிசிச் சோறும் அளித்ததைக் காண இயல்கிறது. 

"செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வாலூன் வல்சி மழவர்..." பதிற்.55

ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பழைய உரைகாரரைப் பின்பற்றிச்; 'செவ்வூனும் மிக்க துவரையும் கலந்து அரைத்த துவையல் ஆதலால்; "வெண்துவை" என்றும்; சிவந்த ஊன் ஆயினும் அத்துவையல் தன் செம்மை தோன்றாது ஆயினமையின்; "செவ்வூன் தோன்றா" என்றும் கூறினார்.' என்கிறார். 
பழைய உரைகாரர் 'செவ்வூன் தோன்றா வெண்துவை என்றது அரைத்துக் கரைத்தமையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவை என்றவாறு...' என்கிறார்.

'துவை' = துவையல் என அவர்கள் இருவரும் கூறும் பொருள் பொருந்தவில்லை.

'ஊன்துவை அடிசில்' = ஊன் மிகுதியாகக் கலந்த சோறு என்பதில் எந்தக் குழப்பமும் வரவில்லை ஆதலால்; 'வெண்துவை... வாலூன் வல்சி' என்ற தொடரிலும்; துவை = 'கலந்த' என்ற பொருளே பொருத்தமானது ஆகிறது. 

பழையவுரைகாரர் தாவரவுணவு மட்டுமே அறிந்தவர் எனப் புரிகிறது. ஔவை சு.துரைசாமிப் பிள்ளை அவர் சொன்ன பொருளை அப்படியே ஏற்றுக் கொண்டு தொடர்கிறார். 

கறிக்காகப் பேணி வளர்த்த ஆட்டின் இறைச்சி செந்நிறம் தெரியாத அளவு வெள்ளையாகக் கட்டிக் கொழுப்பு சூழ்ந்து இருப்பதை அசைவப் பிரியர் அறிவர். அதனால் தான் வெண்ணெல்லின் அரிசியோடு சேர்த்துச் சமைத்த சோறைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்; 
"செவ்வூன் தோன்றா வெண்துவை... வாலூன் வல்சி" 
எனப் பாடி உள்ளார். இந்த அசைவ விருந்து மட்டும் இன்றிச் சைவ விருந்தும் அளித்ததை; "முதிரை... வாலூன் வல்சி" என விதந்து பொருள் கொள்ள வேண்டும். 

பொருள்கோள் வகைகளைக் கருத்தில் கொண்டு மேற்சுட்டிய பதிற்றுப்பத்து பாடல் பகுதிக்குப் பொருள் கொள்ளும் போது 'வாலூன் வல்சி' என்ற தொடர் 'செவ்வூன் தோன்றா வெண்துவை ன'யுடன் சேர்ந்து அசைவ விருந்தையும் 'முதிரை'யுடன் சேர்ந்து சைவ விருந்தையும் குறிக்கும் ஒரு சொல் அல்லது சொற்றொடர் ஊஞ்சல் கயிறு போல இருபுறமும் சென்று சேர்ந்து பொருள் தருவது தாப்பிசைப் பொருள்கோள் ஆகும். இங்கு 'வாலூன் வல்சி' ஊஞ்சல் கயிறு போல இருபுறம் சென்று சேர்ந்து பொருள் தருகிறது. 

முதிரை = துவரை முதலிய பயறு வகைகள். 

வெண்ணெல் அரிசியோடு துவரம்பருப்பு சேர்த்துச் செய்யும் 'அரி(சீம்)சியும் பருப்பு சாதம்' இன்றுவரை மிகவும் போற்றப்படும் உணவு வகையாக உள்ளமை நோக்கற்கு உரியது.  இதற்குக் 'கொங்கு பிரியாணி / கவுண்டர் வீட்டு பிரியாணி' என்ற பெயர்வழக்கு இருப்பது குறிப்பிடத் தக்கது. பொதுமக்கள் வழக்கை U Tube காணொலியில் காண்க. 


இன்றும் கேரளத்தில் 'சாப்பாடு ஆயிற்றா?' என்பதை 'ஊனு கழிஞ்சோ?' என்று தான் வினவுகின்றனர். இங்கு 'ஊன்' = 'உணவு' ஆகிறது. வெண்ணெல்லின் அரிசியால் ஆன உணவு ஆகையால் "வாலூன்" எனப்படுகிறது. 

'ஊன் வல்சி' இருபெயரொட்டாக அமைந்துள்ளது. 

இறைச்சியின் செம்மையை மறைத்துக் கொழுப்பு மிகுந்து இருக்க; வெண்ணெல் அரிசியோடு சேர்த்துச் செய்த சோறு, துவரம்பருப்பை வெண்ணெல் அரிசியோடு கலந்து சமைத்த சோறு என இருவகைச் சோற்றையும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவர்க்கு அளித்தான். 

இன்றும் பொதுமக்கள் துவரை போன்ற பிற பயறு வகைகளைச் சேர்த்தும் சோறு சமைக்கின்றனர். 

(தொடரும்)

சக 

வேந்தன் அரசு

unread,
Sep 29, 2023, 8:32:10 AM9/29/23
to vallamai
ஊன் ஊண்  துறமின் எனும் அறஉரையில் ஊன் என்பது புலால் என்று பொருள் வருகிறது

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcstvKmhnaRmYAHpmmZCsQwHU9KcSY6nbOhu_zByiT5M6w%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Sep 29, 2023, 8:48:44 AM9/29/23
to vallamai
ஆம் ஐயா. 

'ஊன்' உணவைக் குறிக்கும் போது ஒரு உருபன் (morpheme).

'ஊன்' புலாலைக் குறிக்கும் போது வேறு ஒரு உருபன். 

(படி என்பது step என்ற பொருளையும் குறிக்கும்; study என்ற பொருளையும் குறிக்கும். அதுபோல...)

சக 

kanmani tamil

unread,
Sep 30, 2023, 5:01:47 AM9/30/23
to vallamai
முதிரை என்பதற்கு ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பதவுரையில் 'துவரை' என்கிறார். 'துவரை, அவரை முதலாயின'  என்கின்றார் பழையவுரைகாரர் (பதிற்றுப்பத்து, 2007, ப.265).

இவ்வுணவுமுறை தமிழர்களின் ஒன்றுபட்ட பண்பாடு,  நாகரிகம் ஆகியவற்றின் அடையாளம் ஆகிறது. 

மு.இராகவையங்கார் தொன்மவியல் கோணத்தில் ஆய்ந்து 'குறுநில மன்னராகிய வேளிர் வேளாளர் என்றும்; வந்தேறிகள் என்றும்; அவர்கள் நெல் வேளாண்மைக்கென உழுவித்தோர் என்றும்; வேந்தர்க்குப் பெண் கொடுக்கும் தகுதி உடையோர் என்றும் நிறுவுகிறார். 

புறநானூறு 335ல் மாங்குடி கிழார் தமிழகத்துப் பூர்வகுடிகள் என நான்கு பிரிவினரைக் குறிப்பிட்டுப்; 
பாணர், துடியர், பறையர், கடம்பர் ஆகியோரின் உணவு, வழிபாட்டு முறை, பயிர்த் தொழில், வாழ்வுமுறை ஆகியவற்றை வரிசைப் படுத்துங்கால்; 
"கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கு அல்லது உணாவும் இல்லை" 
என்கிறார்.

புன்செய் வேளாண்மை செய்த திணைமாந்தரும் நன்செய் வேளாண்மை செய்த வேளாளரும் சோழரும் (பாண்டியரும் சேரரும் வேளாண்மை செய்ததாகத் தகவல் இல்லை.) ஒருங்கு கலந்த பண்பாடே தமிழர் வாழ்வியலாக மலர்ந்தது என்பதற்கு "முதிரை வாலூன் வல்சி" ஆகிய உணவுமுறை அத்தாட்சியாக அமைகிறது. 

மாங்குடி கிழார் சொல்லும் 'அவரை' பயறுவகைகட்கு உரிய பொதுப் பெயர் ஆகும் (Family- Leguminacea). பச்சைப்பயறு, உழுந்தம்பயறு, தட்டைப்பயறு, காராமணி, கானப்பயறு, மொச்சை வகைகள் அனைத்தும் அவரைக் குடும்பத்துள் அடங்கக் கூடியன. 

தமிழகத்துப் பொதுமக்கள் இன்றும் 'முதிரை வாலூன் வல்சி'யாகப் பச்சைப்பயறுச் சோறு, தட்டைப்பயறுச்சோறு, கொள்ளுச்சோறு, உழுந்துச் சோறு எனச் சமைத்தும் உண்டும் ஒருமித்த பண்பாட்டை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். 

பச்சைப்பயறுச் சோறு:

தட்டைப்பயறுச் சோறு:

உழுந்துச் சோறு:

கொள்ளுச்சோறு:

சக 

N. Ganesan

unread,
Sep 30, 2023, 8:47:26 AM9/30/23
to vall...@googlegroups.com
இப்போது தான் இவ்விழை பார்க்கிறேன்:

On Fri, Sep 29, 2023 at 7:32 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
ஊன் ஊண்  துறமின் எனும் அறஉரையில் ஊன் என்பது புலால் என்று பொருள் வருகிறது

ஆமாம். ஊன் = புலால். ஊண் = உணவு ( < உள்-/உண்-)

இன்றும் கேரளத்தில் 'சாப்பாடு ஆயிற்றா?' என்பதை 'ஊனு கழிஞ்சோ?' என்று தான் வினவுகின்றனர். இங்கு 'ஊன்' = 'உணவு' ஆகிறது. 
> வெண்ணெல்லின் அரிசியால் ஆன உணவு ஆகையால் "வாலூன்" எனப்படுகிறது. 

கேரளத்தில், மலையாள பாஷையில் கேட்பது ”ஊணு கழிஞ்சோ?” ( ഊണു കഴിഞ്ചോ) என்பதாகும்.
https://www.youtube.com/watch?v=2Uek1u8DyxA  ഊണ് കഴിച്ചോ I Lunch I #shorts# I Recipe Garage  ഊണ് = ஊண்
https://www.youtube.com/watch?v=dT654yBVWEM  ഊണു കഴിച്ചോ full recipe video ഊണു = ஊணு
ஊன் = புலால். ஊண் = உணவு

முதிரை என்பது ஒரு தானியம். தொன்று முதிர் வேளிர் என்பதுபோல, முதிரை. இந்தியர்கள் 5000 ஆண்டுகளாய்ப்
பயிரிடும் தானியம் ஆதலால் பெறும் பெயர். இன்றும் கேரளாவில் முதிரை தான். = கொள்ளு (Horsegram).

முதிரை மரமும் உண்டு. https://en.wikipedia.org/wiki/Chloroxylon_swietenia . முதிரைமலை உடுமலை அருகே உள்ள மலை.
இவ்வூர் முதிரம் எனச் சங்ககாலத்தில் பெயர். சுவாமி பெயர் குமணலிங்கம். குமணன் ஆண்ட மலைநாடு. 
 இப்போது குமரலிங்கம் என்கின்றனர். வஞ்சி சிறுதாவரம், மரம் இரண்டும் உண்டு. அதுபோல, முதிரை சிறுதாவரம், மரம் இரண்டும் இருக்கின்றன. வஞ்சிக் கொடி வஞ்சிமாநகர் கோயிலில் அம்பிகை. குலதெய்வம்.

சேரநாட்டு நூல் பதிற்றுப்பத்து:
செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை,
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை!

முதல் வரி - சைவ உணவு.
செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை,
= சிறந்த புலால் இல்லாத, கொள்ளுச் சோறு

இரண்டாம் வரி - அசைவ உணவு
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை!
 = வெள்ளாட்டுச் சோறு உண்ணும் மழவர் (வீரர்கள்) காவலனே (கவசமே).

மையூன் = செம்மறி ஆட்டுக் கறி = sheep meat.
வாலூன் = வெள்ளாட்டுக் கறி. வால் = வெண்மை. எனவே, வெள்யாடு. வாலூன் = goat meat.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 30, 2023, 8:52:35 AM9/30/23
to vall...@googlegroups.com
On Sat, Sep 30, 2023 at 7:46 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
இப்போது தான் இவ்விழை பார்க்கிறேன்:

On Fri, Sep 29, 2023 at 7:32 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
ஊன் ஊண்  துறமின் எனும் அறஉரையில் ஊன் என்பது புலால் என்று பொருள் வருகிறது

ஆமாம். ஊன் = புலால். ஊண் = உணவு ( < உள்-/உண்-)

ஊன் என்றால் என்ன என சமணர் ஆகிய திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்:

ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
  நன்மை குறித்தது சால்பு - குறள் 102:3
ஊன் (8)
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
  எங்ஙனம் ஆளும் அருள் - குறள் 26:1
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு - குறள் 26:2
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல் பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள் 26:4
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு - குறள் 26:5
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் விலை பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன் - குறள் 26:8
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - குறள் 97:8
நம்பூதிரிமார் ஊனு கழிஞ்சதில்லா. ஊணு கழிஞ்சு.

N. Ganesan

unread,
Sep 30, 2023, 9:02:17 AM9/30/23
to vall...@googlegroups.com

அரிசீம்பருப்பு = அரிசியம்பருப்புஞ் சோறு/சாதம்

kanmani tamil

unread,
Sep 30, 2023, 12:09:57 PM9/30/23
to vallamai
On Sat, 30 Sep 2023, 6:32 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

அரிசீம்பருப்பு = அரிசியம்பருப்புஞ் சோறு/சாதம்

ஓ! சரி தான். ஏற்றுக்கொள்கிறேன். நன்றி. 

சக 

kanmani tamil

unread,
Sep 30, 2023, 12:14:17 PM9/30/23
to vallamai
///ஊன் = புலால். ஊண் = உணவு ( < உள்-/உண்-).... ஊணு கழிஞ்சு./// Dr.Ganesan wrote...

ஓகே; ஏற்கக் கூடியதே. நன்றி. 
சக 

kanmani tamil

unread,
Oct 1, 2023, 9:27:00 AM10/1/23
to vallamai
///இன்றும் கேரளாவில் முதிரை தான். = கொள்ளு (Horsegram)./// Dr.Ganesan wrote at 6.17pm

இப்போது தொகையிலக்கியத்தை அடிப்படையாக வைத்துத் தரவுகளைத் தொகுத்துக் கொண்டு இருக்கிறேன். 

புறம். 105 & பதிற்.75 இரண்டு பாடல்களிலும் 'கொள்' எனும் பெயரே காணக் கிடைக்கிறது. குறிப்பிட்ட பதிற்.55 தவிர வேறு எப்பாடலிலும் முதிரை என்ற சொல்வழக்கு இல்லை. 

முதிரமலைக்கு அப்பெயர் அங்கு இருக்கும் மரத்தால் உருவாகி இருக்க வாய்ப்பு உளது. 

தொகையிலக்கியக் காலத்தில் அவரை, துவரை அனைத்திற்கும் பொதவாக வழங்கிய முதிரை காலப் போக்கில் 'கொள்'ளை மட்டும் குறிப்பதாகப் பொருள் மாற்றம் (semantics) பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.

துவரை என்ற சொல் கூட 'முதிரை'யின் திரிந்த வடிவமோ என்ற ஐயம் எழுகிறது. 

சக 

N. Ganesan

unread,
Oct 1, 2023, 9:58:37 AM10/1/23
to வல்லமை
முதிரை - மலையில் விளையும் கொள்ளு. குடகில் கொடவரும், மலையாளிகளும் பயன்படுத்தும் சொல். Hill banyan என்பது போல, Hill horsegram எனலாம்.
நிகண்டுகளில் அழகாகச் சொல்லியுள்ளனர். தற்கால உரைகளில் தவறுகள் பிற திராவிட மொழிகளில் ஒப்பீட்டால் களையலாம். முதிரை = wild and/or semi-domesticated horsegram in South India. கொள்ளு = from North India (சிந்துவெளி நாகரிகம், வேளாண்மை பரவிய கொள் + கானம் = கொண்கானம், cf. தெலுகு + கானம் = தெலிங்கானம் ).

துவரை/தோரை வேறு. தூரன் கூட்டத்தாரின் குலச்சின்னம். toor dhal named because of astringency (tuvarppu). Toor dal is beneficial in wounding healing due to its anti-inflammatory and astringent properties. It also helps in managing skin infections as it has antimicrobial properties. Consumption of Toor Dal is generally considered safe. However, it might cause cause allergies in some individuals[1][2][13-15].

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 1, 2023, 9:59:43 AM10/1/23
to வல்லமை
SK> முதிரமலைக்கு அப்பெயர் அங்கு இருக்கும் மரத்தால் உருவாகி இருக்க வாய்ப்பு உளது. 

Yes. 100% correct.

kanmani tamil

unread,
Oct 1, 2023, 10:28:41 AM10/1/23
to vallamai
///முதிரை = wild and/or semi-domesticated horsegram in South India. கொள்ளு = from North India (சிந்துவெளி நாகரிகம், வேளாண்மை பரவிய கொள் + கானம் = கொண்கானம்/// Dr.Ganesan wrote at 7.28pm

அதெப்படி? தென்னிந்தியப் பெயர்வழக்கு பெரிதும் பயிலாமல் வடஇந்தியாவில் இருந்து வந்த பெயர் பெரிதும் வழங்குமா?! அதுவும் தொகையிலக்கியக் காலத்தில்...

கொள்ளு என்பதே தென்னிந்தியப் பெயர் வழக்கு தான் என்கிறேன் நான். அதுமட்டுமல்ல... கொள்ளு பூர்விகத் தமிழகத்து மண்ணின் புன்செய்ப் பயிர். திணைமாந்தரால் விளைவிக்கப்பட்டது. இது வடநாட்டில் இருந்து இங்கு வந்தது இல்லை. பதிற்றுப்பத்திலேயே இதற்கு ஆதாரம் உள்ளது. 

வேளாளனுடைய (குறுநில மன்னனுடைய) வயலைப் பாழாக்கியவுடன் திணைமாந்தன் அந்த நிலத்தில் கொள்ளை விதைக்கிறான். அவன் நெல்லரிசிச் சோறே அறியாதவன் (பதிற்.75). 

தொகையிலக்கியத்துப் போர்கள் அனைத்தும் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியாகத் தான் தெரிகிறது. 

சக
 







N. Ganesan

unread,
Oct 1, 2023, 10:32:30 AM10/1/23
to வல்லமை
On Sunday, October 1, 2023 at 9:28:41 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
///முதிரை = wild and/or semi-domesticated horsegram in South India. கொள்ளு = from North India (சிந்துவெளி நாகரிகம், வேளாண்மை பரவிய கொள் + கானம் = கொண்கானம்/// Dr.Ganesan wrote at 7.28pm

அதெப்படி? தென்னிந்தியப் பெயர்வழக்கு பெரிதும் பயிலாமல் வடஇந்தியாவில் இருந்து வந்த பெயர் பெரிதும் வழங்குமா?! அதுவும் தொகையிலக்கியக் காலத்தில்...

கொள்ளு என்பதே தென்னிந்தியப் பெயர் வழக்கு தான் என்கிறேன் நான். அதுமட்டுமல்ல... கொள்ளு பூர்விகத் தமிழகத்து மண்ணின் புன்செய்ப் பயிர். திணைமாந்தரால் விளைவிக்கப்பட்டது. இது வடநாட்டில் இருந்து இங்கு வந்தது இல்லை. பதிற்றுப்பத்திலேயே இதற்கு ஆதாரம் உள்ளது. 

கொள்கானம் எங்கே உள்ளது?

kanmani tamil

unread,
Oct 1, 2023, 11:21:55 AM10/1/23
to vallamai
கி.மு.காலத்தில் தமிழகத்தை Damerica என்று அழைத்த மேலைநாட்டு நிலவியலார் கோவா அருகே உள்ள தூவக்கல்/ பலிப்பாறை/ வெள்ளைத்தீவு/ லியூகேத் தீவு வரை தமிழகம் பரவிக் கிடந்ததாகத் தான் குறிப்பிட்டு உள்ளனர்.

கொண்கானம் நன்னன் ஆண்ட பகுதி தானே?! இன்றைய தமிழகத்திற்கு உள்ளே தான் இருக்கிறது (செங்கை மாவட்டம்). 

சக 



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 1, 2023, 11:37:23 AM10/1/23
to vall...@googlegroups.com
நான் குறிப்பிடும் கொண்கானம், கொங்கானம் (Konkan) மும்பை அருகே உள்ளது.

Virus-free.www.avg.com

kanmani tamil

unread,
Oct 3, 2023, 12:56:51 AM10/3/23
to vallamai
கொங்கானம் < கொண்கானம் < கொள்கானம் 
என்ற மாற்றத்தை நானும் ஏற்கிறேன். 

இதுவரை இப்படி எண்ணிப் பார்த்தது இல்லை. எனக்கு இது புதுச் செய்தி. நன்றி. 

கொங்கானமாயினும்/ கொண்கானமாயினும்...

தமிழகத்தில் இருப்பினும் மும்பாய் அருகே இருப்பினும்...

கொள் > கொள்ளு என்பது தமிழ் வழக்கே. 
கோவா வரை தமிழ்நாடு பரவி இருந்த காலம் ஒன்று உண்டு என ஏற்கெனவே சுட்டிக் காட்டி உள்ளேன். 
'கொள்' எனும் தானியம் தொகை இலக்கியத்தில் இரண்டு இடங்களில் அப் பொருளைச் சுட்டிப் பயின்று வருகிறது. முதிரை என்ற சொல் ஒரே ஒரு இடத்தில் அவரை, துவரை ஆகியவற்றுக்குப் பொதுவான பெயராக வழங்கி உள்ளது (பழைய உரையாசிரியர் கருத்தை ஏற்கிறேன்). 

மலையாளத்தில் முதிரை என்பதன் பொருள் வரலாறு மாற்றம் பெற்று; இன்று கொள்ளு தானியத்தை மட்டும் குறிக்கிறது.

சக 


kanmani tamil

unread,
Oct 3, 2023, 4:37:57 AM10/3/23
to vallamai
துவரை என்ற சொல் முதிரை என்ற சொல்லில் இருந்து தோன்றியது என்பது என் கருத்து. 

இது மெய் இடம் பெயரல் (mrtathesis) எனும் உலகளாவிய விதியின் அடிப்படையில் நிகழ்ந்து உள்ளது.
முதிரை > துமிரை > துமரை > துவரை. 
மொழியிடை /-ம்- > -வ்-/ மாற்றம் தமிழில் பல சொற்களில் நிகழ்ந்து இருப்பதை அறிவோம்.
(எ-டு) களமர் > கள்வர் 
             காமிண்டர்> காவிண்டர்> கவுண்டர் 

எனவே முதிரை என்ற சொல் ஆழமான ஆய்விற்கு உரியது. 

சக 

kanmani tamil

unread,
Oct 3, 2023, 9:14:41 AM10/3/23
to vallamai
///முதல் வரி - சைவ உணவு.
செவ் ஊன் தோன்றாவெண் துவை முதிரை,
= சிறந்த புலால் இல்லாத, கொள்ளுச் சோறு

இல்லை முனைவர் கணேசன். நீங்கள் அசைவ உணவிற்குப் பழக்கம் இல்லாதவர் ஆதலால் தான் இந்தக் குழப்பம். 
"செவ்வூன் தோன்றா வெண்... வாலூன் வல்சி" என்பது அசைவம். 'வெண்' என்றாலே வெள்ளாடு.
"வெண்ணெறிந்து இயற்றிய மாக்கண் அமலை" (மலைபடுகடாம் 440-443)
"வெண்ணெறிந்து" என்றால் வெள்ளாட்டை வெட்டி என்று பொருள்படும். 
கறிக்காகப் பேணி வளர்த்த ஆட்டின் இறைச்சி செந்நிறம் தெரியாத அளவு வெள்ளையாகக் கட்டிக் கொழுப்பு சூழ்ந்து இருப்பதை அசைவப் பிரியர் அறிவர். அதனால் தான் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்; "செவ்வூன் தோன்றா வெண்துவை... வாலூன் வல்சி" எனப் பாடி உள்ளார்

இரண்டாம் வரி - அசைவ உணவு
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை!
 = வெள்ளாட்டுச் சோறு உண்ணும் மழவர் (வீரர்கள்) காவலனே (கவசமே).

இல்லை. " துவை முதிரை... வல்சி" > முதிரை துவை வல்சி... அதாவது துவரை/ அவரை வகை ஏதேனும் கலந்த சோறு. 
'துவை' ஊஞ்சல் கயிறு போல முதிரையுடனும் சேரும்; வெண்துவை என வெள்ளாட்டுடனும் சேரும். 
அதேபோல 'வல்சி' ஊஞ்சல் கயிறு போல வாலூனுடன் சேர்ந்து பொருள் தந்த பின்னர் "முதிரை துவை வல்சி" எனச் சேர்ந்து பொருள் தருகிறது. ஆக மொத்தம் இரண்டு சொற்கள் அங்குமிங்கும் சேர்ந்து பொருள் தருகின்றன.

வாலூன் = வெள்ளாட்டுக் கறி. வால் = வெண்மை. எனவே, வெள்யாடு. வாலூன் = goat meat./// செப்.30ம் நாள் 6.17pmக்கு நா. கணேசன் எழுதியது...

நீங்கள் சொன்னது போல் ஊன், ஊண் ஆகிய சொற்களின் பொருள் வேறுபாட்டை மனதில் கொண்டு இந்த இழையில் முன்னர் சொன்ன கருத்தில் இருந்து சற்று மாற்றிக் கொண்டேன். நன்றி 
சக 

kanmani tamil

unread,
Oct 3, 2023, 9:27:30 AM10/3/23
to vallamai
மொச்சைப்பயறு சோறு:


பச்சை மொச்சையிலும் 'முதிரை துவை வல்சி' செய்யும் வழக்கம் இன்றும் கர்நாடக மாநிலத்தில் வழக்கத்தில் உள்ளதாம். 


(முற்றும்)

சக 

N. Ganesan

unread,
Oct 5, 2023, 2:43:22 AM10/5/23
to vall...@googlegroups.com
>> புன்செய் வேளாண்மை செய்த திணைமாந்தரும் நன்செய் வேளாண்மை செய்த வேளாளரும் சோழரும் (பாண்டியரும் சேரரும் வேளாண்மை செய்ததாகத் தகவல் இல்லை.) 

வஞ்சி மாநகரில் கிடைக்கும் சேரர் காசுகளில் வேளிர்கள் சேர மன்னர் ஆயினர்
என்பதற்குச் சான்று கிடைக்கிறது. சேரன் என்ற பெயரே சேர்/ஏர் என்ற சொல்லுடன்
தொடர்புடைய சொல்.

பழைய மடலில் சொன்னேன்:
வஞ்சி மாநகரில் (கரூர்) கிடைக்கும் சங்க காலச் சேரர் நாணயங்களை ஆராய்ந்து வருகிறேன்.
அதில் வேளிர் வேளாண்மை பற்றிக் கண்கிறோம். ஏர்க்கால் கலப்பை, எருத்து முகம் கொண்ட
காசுகள் சேரர்களின் வேளிர் தொடர்பைக் காட்டுகின்றன. ஏர் < கேர்/சேர். கீறு- (பாறு- பருந்து; முரி-முறி- போல் ர்/ற் மாற்றம்.). இன்றும் யாழ்ப்பாணத்தார் உழும் ஏரினைச் சேர் என்கின்றனர். கேரள/சேரல - இவற்றில் எல்லாம் இந்த ஏர்க் கலப்பை உண்டு.

பழு- என்ற சொல் நிறத்தைக் குறிப்பது. பாண்டியர் என்றாவதன் தாதுவேர் என்பர் அறிஞர்.
அது போல், வெள்- என்பதும் நிறம் பற்றி எழுந்ததாகும். வேள், வேளிர். ஒளியர் என்றும் வேளிருக்குப்
பெயர் உண்டு. சேரர், பாண்டியர் பெயர் பற்றிச் சொன்னேன். கோழி கொண்டு யானையை வென்றவன்.
எனவே, சோழன், சோழநாடு என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

N. Ganesan

unread,
Oct 5, 2023, 11:25:59 PM10/5/23
to vall...@googlegroups.com

On Sat, 30 Sep 2023, 6:32 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

அரிசீம்பருப்பு = அரிசியம்பருப்புஞ் சோறு/சாதம்


On Sat, Sep 30, 2023 at 11:09 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஓ! சரி தான். ஏற்றுக்கொள்கிறேன். நன்றி. 

அப்பச்சி/அப்பிச்சி = தாயின் தந்தை

(1) அப்பச்சியம்மா = அப்பிச்சீம்மா
(2) பாட்டியம்மா = பாட்டீம்மா
இவை போன்றது:
(3) அரிசி + அம் + பருப்பு = அரிசியம்பருப்பு > அர்சீம்பருப்பு

 

சக 
Reply all
Reply to author
Forward
0 new messages