வானொலி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்
அகில இந்திய வானொலியான மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தல் !
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் நேரலை நிகழ்வில் பங்கேற்று அசத்தினார்கள்.
மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைவர் தாராதேவி, ஒலிபரப்பு பொறுப்பாளர்கள் வேல்முருகன் , சதீஷ்குமார் ஆகியோர் மாணவர்களை வரவேற்று வானொலி நிலைய வளாகத்தில் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தனர்.பள்ளி மாணவர்கள் சபரீஸ்வரன், ஜெயஸ்ரீ , அட்சயா ,வள்ளியம்மை,ஆகாஷ்,யோகேஸ்வரன், உட்பட பல மாணவர்கள் நேரலையில் கதை,கவிதை ,சிவபுராணம்,தேவாரம் உட்பட பல தகவல்களை தொகுப்பாளர் விக்னேஸ்வரி கேட்க,கேட்க சுவைபட எடுத்துக்கூறி நேயர்களை ஆச்சிர்யப்படுத்தினர்.ஆசிரியை செல்வமீனாள் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.நேரலையில் மாணவர்கள் பேசியது மகிழ்வாக இருந்ததாக தெரிவித்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலியான மதுரை வானொலி நிலையத்தில் நேரலையில் பேசி நேயர்கள் அனைவைரையும் ஆச்சரியத்தில் அசத்தினார்கள்.நிகழ்ச்சி தலைவர் தாரா தேவி, நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் வேல்முருகன்,சதீஷ்குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர் மாணவர்களை மதுரை வானொலி நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.