நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!!வாழ்த்துதுமே!!!
சி.ஜெயபாரதன்.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுப்பாடலும் கீழே."நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
திராவிட என்ற சொல்லுக்காக மனோன்மணியம் சுந்தரனார் (1855 - 1897) பாடல் வரியை மாற்றுவதைட...
தமிழ் வணக்கப் பாடலையே மாற்றி வேறு பாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம்...
குறிப்பாக பாரதிதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலில் தேர்வு செய்யப்பட்ட சில வரிகள் என்பதைப் போன்று. வேறு ஒரு பாடலுக்குச் சென்றுவிடலாம்.
இதிலிருந்து 1879 இல் பெரியார் பிறந்தபொழுதே திராவிடம் என்ற கருத்தாக்கம் தமிழகத்தில் நிலைபெற்றுவிட்டிருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மனோன்மணியம் சுந்தரனார் மட்டுமில்லை, எவர் எழுதிய பாடலையும் திருத்துவது முறையானது இல்லை. பொருத்தமான வேறு பாடலைத் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது, புதிய பாடலை இயற்றிக்கொள்ளலாம். மலேசியாவிற்கு என, சீனி நைனா முகம்மது தனியே இயற்றிய தமிழ் வாழ்த்துப் பாடல் இங்கே: http://inbachudar.blogspot.in/2013/12/wmv.html
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
ஐயா,இப்பொழுது பாடப்படும் பாடல் காலப்போக்கில் ஏற்பட்ட கருத்து மாற்றத்திற்கு ஏற்ப அமையவில்லை என்பது எனது கருத்து...அதனால் தமிழக அரசிடம் தமிழ் வணக்கப் பாடலை மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறேன் என மனு கொடுக்கவும்.ஏற்றுக்கொண்டால் அவர்கள் தமிழறிஞர் குழு ஒன்றை அமைத்து தக்க பாடலைத் தேர்வு செய்து மாற்றாக அறிவிக்கட்டும்.ஆனால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய வரியை ஆளாளுக்கு மாற்றுவது சரியல்ல. அது அவர் கருத்து வடிவம்.நமக்கு வேறுபாடல் எழுதிக் கொள்ள பாடாசிரியர்களுக்கா குறைவு?
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
மனோன்மணியம் சுந்தரனார் மட்டுமில்லை, எவர் எழுதிய பாடலையும் திருத்துவது முறையானது இல்லை. பொருத்தமான வேறு பாடலைத் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது, புதிய பாடலை இயற்றிக்கொள்ளலாம். மலேசியாவிற்கு என, சீனி நைனா முகம்மது தனியே இயற்றிய தமிழ் வாழ்த்துப் பாடல் இங்கே: http://inbachudar.blogspot.in/2013/12/wmv.html
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
கனடா தேசீய கீதம்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
++++++
ஓ கானடா !
எமது இல்லமே ! சொந்த பூமியே !
நின் மாந்தரிடம் எல்லாம்
நிஜ தேசப் பற்றை
நிலை நாட்டுவது நீதான் !
ஒளி நிறைந்த
உள்ளத் தோடு
நீ உயர்வதைக் காண்றோம் !
நேர்வட திசையில் நீ
நிலைத்திடும் தனி நாடே !
நீண்டு அகண்ட கண்டம்,
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
சீரும் சிறப்பும் பொங்கிட
எமது நாட்டை, இறைவா நீ
சுதந்திர நாடாய் வைத்திரு !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
*********
On Tuesday, October 18, 2016 at 10:42:05 AM UTC-7, jayabarathans wrote:தேமொழி,நீங்கள் கூறுவது நல்ல ஆலோசனை. அது ஒருபுறம் நடக்கட்டும்.அதுவரை ஏற்றுக் கொண்ட பாடலில் திராவிட நாட்டுப் பெயரைத் தமிழ்நாடாக மாற்றிப் பாடுவோம்.
ஏற்கனவே ஒரு பாடல் புழக்கத்தில் உள்ளது ஐயா..:))அதுவும் நல்ல பாடலேபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -பிறந்த பின்னர்,யாதும் ஊரே யாவரும் கேளீர்உண்பது நாழி உடுப்பது இரண்டேஉறைவிடம் என்பது ஒன்றே எனஉரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்நன்மொழியே நம் பொன் மொழியாம்போரைப் புறம் தள்ளிபொருளைப் பொதுவாக்கவேஅமைதி வழி காட்டும்அன்பு மொழிஅய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்செம்மொழியான தமிழ் மொழியாம்…ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலேஉணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடுஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்செம்மொழியான தமிழ் மொழியாம்…கம்ப நாட்டாழ்வாரும்கவியரசி அவ்வை நல்லாளும்எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்றஎத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்புத்தாடை அனைத்துக்கும்வித்தாக விளங்கும் மொழிசெம்மொழியான தமிழ் மொழியாம்…அகமென்றும் புறமென்றும் வாழ்வைஅழகாக வகுத்தளித்துஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -ஓதி வளரும் உயிரான உலகமொழிநம் மொழி – நம் மொழி – அதுவேசெம்மொழியான தமிழ் மொழியாம்…தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியாம்தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம்வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…செம்மொழியான தமிழ் மொழியாம்..!!!..... தேமொழி
On Tuesday, October 18, 2016 at 10:37:00 AM UTC-7, jayabarathans wrote:இந்தியாவில் இல்லாத திராவிட நாட்டைப் பற்றி வாழ்த்தி வணங்க வேண்டுமா தமிழகத்தின் தமிழர் ?
ஆனால்.... இந்திய தேசிய கீதத்தில் திராவிட இருக்கிறதே....ஜன கண மன அதிநாயக ஜெய ஹேபாரத பாக்ய விதாதா.பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டாதிராவிட உத்கல வங்கா.விந்திய இமாச்சல யமுனா கங்காஉச்சல ஜலதி தரங்கா.தவ சுப நாமே ஜாகே,தவ சுப ஆஷிஷ மாகே,காஹே தவ ஜெய காதா.ஜன கண மங்கள தாயக ஜெயஹேபாரத பாக்ய விதாதா.ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா.)
|
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ் |
|
|
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் |
|
|
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே |
|
|
தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநல் திருநாடும் |
|
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற |
|
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே, |
| ||
|
|
||||||||||
கடல்குடித்த குடமுனியுன்
கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே. (1)
|
ஒருபிழைக்கா அரனார்முன் னுரையிழந்து விழிப்பாரேல் |
|
|
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே. |
(2) |
|
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் |
|
|
முதுமொழிநீ யநாதியென மொழிகுவதும் வியப்பாமே. |
(3) |
|
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு |
|
|
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே. |
(4) |
|
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள் |
|
|
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே |
(5) |
|
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை |
|
|
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே. |
(6) |
|
வடமொழிதென் மொழியெனவே வந்தவிருவிழியவற்றுள் |
|
|
கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே |
(7) |
|
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால் |
|
|
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். |
(8) |
|
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள் |
|
|
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார். |
(9) |
|
பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ |
|
|
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில்கற்பனையே. |
(10) |
|
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் |
|
|
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி. |
(11) |
|
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் |
|
|
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ. எனவாங்கு (தனிச்சொல்) |
|
நிற்புகழ்ந் தேத்துநின் னெடுந்தகைமைந்தர் | ||||||
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும் | ||||||
பொற்படை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும் | ||||||
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில் | ||||||
அடியேன் கடையே னறியாச் சிறியேன் | ||||||
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
|
வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய்ம்முதல்களை ’ரகர’ஞ் சேர்த்து, ’த்ர’, ’ப்ர’ எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். எ-டு: படி - ப்ரதி; பவளம் - ப்ரவளம் (ப்ரவாளம் என நீண்டும் ஒலிக்கும்). இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம் த்ரவிடம், எனத் திரிந்தது.
ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது.
தமிழுக்குத் திரவிடம் என்னும் பெயர் தமிழ்நாட்டில் வழங்காமையானும், தமிழ் என்னும் வடிவத்தை யொட்டிய பெயர்களே மேனாட்டிலும் வடநாட்டிலும் பழங்காலத்தில் வழங்கி வந்தமையாலும், திரவிட மொழிகளெல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவே யிருந்தமையானும், தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது என்று தெளியப்படும்.
******
ஆதலால் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் ’திரவிடநல் திருநாடு’ என்று பிள்ளையவர்கள் குறிப்பது கருநாடகத்தையோ, கேரளத்தையோ அல்லது ஆந்திரத்தையோ அல்ல! நம் தமிழ(க)த்தையே என்பது வெள்ளிடைமலை.
எனவே, அருமையான தமிழ்த்தெய்வ வணக்கத்தைக் கையில் வைத்திருக்கும் நாம், அதனைப் ’பொன்னேபோல் போற்றாமல்’ தேவையற்ற திருத்தங்களைச் செய்வதோ அல்லது பிறவற்றை நாடுவதோ... ’கனியிருப்பக் காய்கவர்வதற்கு ஒப்பாகும்!’ என்றே எண்ணுகிறேன்.
அன்புடன்,
மேகலா
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.--
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
On Tuesday, October 18, 2016 at 2:40:43 PM UTC-7, jayabarathans wrote:தேமொழி.தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும் என்று நாட்டைப் பற்றி முதலில் வருகிறதே.இல்லை ஐயா !!!
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
என்றுதான் வருகிறது.நான் பள்ளிநாட்களில் இருந்து இதனைத் "தமிழ்த்தாய் வாழ்த்து" என்றுதான் அறிந்திருக்கிறேன்...... தேமொழி
சி. ஜெயபாரதன்
On Tuesday, October 18, 2016 at 2:08:57 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,
இவ்வினிய அரிய ரகுமான் இசைப்பாடல் செம்மொழி தமிழைப் பற்றி புகழ்ந்து பாடுவது. தமிழ்நாட்டைப் பற்றிப் பாடும் நாட்டு வணக்கமாகுமா இது ?
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! என்று போற்றுவது தமிழ்த்தாய் வாழ்த்து அல்லவா ஐயா?இது தமிழ்நாட்டிற்கான பாடல் அல்லவே. நமக்கெதற்கு அப்படி ஒரு பாடல் தேவை ?நமக்குதான் இந்திய மக்கள் என்ற முறையில் தேசியகீதம் உள்ளதே. அதனை நிகழ்ச்சியின் இறுதியில் பாடுவது நம் நாட்டின் மரபு.அதற்கு நேரம் இல்லை என்றால் சுருக்கமாகவும் பாட, சிலவரிகளை நீக்கிப் பாடும் ஒரு முறையும் உள்ளது.தமிழ்த்தாய் வாழ்த்து என்பது சமயச்சார்பற்றமுறையில் தமிழன்னையை வாழ்த்தித் தொடங்கும் முறை என்பது எனது புரிதல்...... தேமொழி
அன்பு நண்பர்களே!பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய ‘மனோன்மணீயம்’ ஓர் அரிய நாடகத் தமிழ்நூல். அதில் இடம்பெற்றுள்ள ’நீராருங்கடலுடுத்த’ எனத்தொடங்கும் ’தமிழ்த்தெய்வ வணக்கமும்’ வெகுசிறப்பானது. ஆம், தமிழ்த்தெய்வ வணக்கம் என்பதுதான் சுந்தரம்பிள்ளையவர்கள் அதற்கு வைத்த பெயர். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது நாம் அப்பாடலுக்கு வைத்த புதுப்பெயர். :-)பிள்ளையவர்கள், தமிழைத் தாய் என்று கூறாது தெய்வம் என்று போற்றுவது தமிழ்மீது அவர்கொண்ட அளவிறந்த காதலை/பக்தியைப் புலப்படுத்துகின்றது.நமக்குப் பாடப்புத்தகத்தில் வைக்கப்பட்டிருப்பது அவருடைய தமிழ்த்தெய்வ வணக்கத்தின் மீச்சிறு பகுதியே. அந்தப் பாடலை முழுமையாய்ப் படித்தால்தான் அவரின் தமிழ்ப்பற்றும், தமிழ்குறித்த அவரின் உயரிய பார்வையும் நமக்குத் தெற்றெனப் புலப்படும்.முழுப்பாடலையும் காண்க: http://www.tamilvu.org/library/libindex.htm
”மறைமலை அடிகளாரிடம் பெரியார் பற்றி சொன்னதும்,
மறைமலை அடிகள் சொன்ன பதிலும்! http://viduthalai.in/previousyear/home/tamilnadu/90-asiriyar-speech/127729-2016-08-16-10-06-08

1967 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்கள். அதற்கு முன்பாக எஸ்.எஸ்.எல்.சி. என்று சொல்லக்கூடிய பள்ளி இறுதி வகுப்புப் பாடங்களை ஓராண்டு, ஈராண்டுகளுக்கு முன்பாக அமைத்துவிடுகிறார்கள். காமராசர் காலத்திலேயே, பக்தவத்சலம் காலத்திலேயே - எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து என்று மறைமலை அடிகளாருடைய கட்டுரையை எடுத்துப் போட்டிருந்தார்கள். அவருடைய கட்டுரையைப் போட்ட நேரத்தில், அதில் சமஸ்கிருதத்தை அவர்கள் கண்டித்து, வழக்கம்போல, அது இயல்பான மொழியல்ல. மக்கள் பேசுவதற்கு தமிழ் மொழி போன்று இயல்பான மொழியல்ல. அது சிக்கலானது. சமஸ்கிருத உச்சரிப்பு என்பது உடற்கூறுவிற்கே விரோதம் என்று ஆய்வு பூர்வமாக சொன்னார். சமஸ்கிருதம் அறிந்த பன்மொழிப் புலவர் அவர். எனவே, சமஸ்கிருத சொற்களை யெல்லாம் பயன்படுத்தி அவர் கட்டுரை எழுதியிருந்தார்.
அன்றைக்கு அண்ணா அவர்களுடைய ஆட்சி - தி.மு.க. ஆட்சி - உடனே பார்ப்பனர்கள் - ஏதோ தி.மு.க. ஆட்சி வந்தவுடன், இந்தப் பாடத்திட்டத்தை வைத்துவிட்டார்கள் என்பது போன்று - பெரிய ஏடுகள் - காகிதப் புலிகள் கிளம்பின.
அண்ணா அவர்கள் போட்ட எந்த ஆணையிலிருந்தும் அவர் பின்வாங்கவேயில்லை
அந்த நேரத்தில், அண்ணா அவர்கள் அமைதியானவர் - ஆனால், உறுதியானவர். அண்ணா அவர்கள் போட்ட எந்த ஆணையிலிருந்தும் அவர் பின்வாங்கவேயில்லை. அதே நேரத்தில், ஜனநாயகத்தில் எதிர்குரல் என்றால், அவர் உடன டியாக அதற்கு நான் என்ன பதில் சொல்வது என்று கவலைப் படாமல், அதற்கு வேண்டிய ஆதாரத்தைச் சொன்னார்கள்.
அப்பொழுது விடுதலையில் நாங்கள்தான் எழுதினோம். அய்யா அவர்கள், மிகக் கடுமையாக எழுத ஆரம்பித்தார். அந்தக் கட்டுரையில் எந்தப் பாகத்தை நீங்கள் மறுக்கிறீர்கள்; மறைமலையடிகளார் கட்டுரையில் எந்தப் பகுதியை தவறு என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டு, என்னிடம் பல செய்திகளைச் சொல்லி - இவற்றை தலையங்கமாக எழுதுங்கள் என்று. அந்தக் காலகட்டத்தில் விடுதலை பல செய்திகளை சொன்ன நேரத்தில் - அதற்கு முன்பு எப்படிப்பட்ட நிலைகள் இருந்தன என்பதையெல்லாம் மிகத் தெளிவாகச் சொல்லி, மனோன்மணியம் சுந்தரனார் அவர்களுடைய பாடல் - இப்போது கலைஞர் அவர்களாலே இங்கே பாடப்படுகிறதே - மொழி வாழ்த்தாக - தமிழ்த் தாய் வாழ்த்து என்ற பெயராலே மொழி வாழ்த்தாகப் பாடப்படுகிறதே - இந்தப் பாடலை, கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதை வைத்து அவர்கள் மிகப்பெரிய கிளர்ச்சியாக செய்தார்கள். அந்த ஒரு கட்டுரையில் வந்ததற்கே அவ்வளவு பெரிய கிளர்ச்சி. ஆனால், கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இன்றைக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இன்றைக்கு மொழி வாழ்த்து என்றால், ‘நீராருங் கடலுடுத்த’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு எழுந்து நிற்கவேண்டிய நிலை.
மாற்ற மறுத்த எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக்கு வந்த நேரத்தில், சிலர் கேட்டார்கள் இதனை மாற்றச் சொல்லி, ஆனால், அவர், இதையெல்லாம் நாங்கள் மாற்றப் போவதில்லை. எங்களுக்குள் சில கருத்து மாறுபாடுகள் உள்ளனவே தவிர - நிச்சயமாக இது அடிப்படைக் கொள்கை - நாங்கள் மாற்றமாட்டோம் என்று சொன்னார்.
எனவேதான், மறைமலை அடிகளாருடைய உருவப்படத்திறப்பும், சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடும் மிக ஒன்று பட்ட ஒன்றாகும்.
உடனே, அண்ணா அவர்கள் என்ன செய்தார், டாக்டர் மு.வ. அவர்களுடைய தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். அந்தக் குழு முடிவு செய்யட்டும். இந்தப் பாடத்தை எடுக்கவேண்டுமா? அல்லது இருக்கவேண்டுமா? என்று.
அண்ணா செய்த அறிவுப் புரட்சி -
நாட்டில் வந்த முதல் புரட்சி!
மு.வ. அவர்களும், அந்தக் குழுவில் இருந்த அத்தனை அறிஞர் பெருமக்களும் தெளிவாகச் சொன்னார்கள், இது ஆதாரபூர்வமானது, எதுவும் மறுக்கப்படக் கூடியதல்ல - எனவே, அதனை எடுக்க முடியாது என்று சொன்னவுடன், பத்திரிகைகளில் எழுதியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள். அண்ணா அவர்கள் அதனை பாடத் திட்டத்தில் வைத்து - தேர்வுக்கு வைத்து - கொஞ்சம்கூட பின்வாங்காமல், ஒரு வரியைக்கூட மாற்றாமல் நடத்தினார்கள். இது அண்ணா செய்த அறிவுப் புரட்சி - நாட்டில் வந்த முதல் புரட்சி.”
நண்பர் அண்ணா கண்ணன்,ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பாடலில் "ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழியா " என்ற வரி ஏன் நீக்கப்பட்டது என்று சொல்லுங்கள். அது பெருந்திருத்தம் அல்லவா ?
சி. ஜெயபாரதன்
2016-10-18 13:25 GMT-04:00 Anna Kannan <annak...@gmail.com>:
மனோன்மணியம் சுந்தரனார் மட்டுமில்லை, எவர் எழுதிய பாடலையும் திருத்துவது முறையானது இல்லை. பொருத்தமான வேறு பாடலைத் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது, புதிய பாடலை இயற்றிக்கொள்ளலாம். மலேசியாவிற்கு என, சீனி நைனா முகம்மது தனியே இயற்றிய தமிழ் வாழ்த்துப் பாடல் இங்கே: http://inbachudar.blogspot.in/2013/12/wmv.html
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
On Tuesday, October 18, 2016 at 2:08:57 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,
இவ்வினிய அரிய ரகுமான் இசைப்பாடல் செம்மொழி தமிழைப் பற்றி புகழ்ந்து பாடுவது. தமிழ்நாட்டைப் பற்றிப் பாடும் நாட்டு வணக்கமாகுமா இது ?
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! என்று போற்றுவது தமிழ்த்தாய் வாழ்த்து அல்லவா ஐயா?இது தமிழ்நாட்டிற்கான பாடல் அல்லவே. நமக்கெதற்கு அப்படி ஒரு பாடல் தேவை ?நமக்குதான் இந்திய மக்கள் என்ற முறையில் தேசியகீதம் உள்ளதே. அதனை நிகழ்ச்சியின் இறுதியில் பாடுவது நம் நாட்டின் மரபு.அதற்கு நேரம் இல்லை என்றால் சுருக்கமாகவும் பாட, சிலவரிகளை நீக்கிப் பாடும் ஒரு முறையும் உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது சமயச்சார்பற்றமுறையில் தமிழன்னையை வாழ்த்தித் தொடங்கும் முறை என்பது எனது புரிதல்...... தேமொழி
அன்பின் கணேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம், நன்றி , என்னை 1971 ஆண்டிற்கு அழைத்துச் சென்றதற்கு.என் நினைவிற்கு எட்டிய வரை தமிழ்த்தாய் கட்டுரையின் முதல் பாடல், " பண்ணுறத் தெரிந்தாய்ந்த " அல்ல. அது கட்டுரையின் உள்ளே வரும்.கட்டுரையின் முதற்பாடல்" கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்துபண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் - ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடப் படக் கிடந்ததா , எண்ணவும் படுமோ."என்பது. (பிழைகள் இருக்கலாம்)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
//பாவாணர் அவர்கள் தமிழம் என்னும் பெயரே திரவிடம் ->>> திராவிடம் எனத் திரிந்தது என்று தெளிவாகத் தன்னுடைய ’திரவிடத்தாய்’ எனும் நூலில் விளக்கியுள்ளார்.//அம்மா, அதன் பிறகு அவர் எழுதிய நூல்கள் எல்லாம் பிடிக்கவில்லையா நீங்கள்?//தமிழ் வேறு, திராவிடம் வேறு. தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது, பாலையும் தயிரையும் கலப்பது போன்றதே.//-'திரவிடம்' என்பதே தீது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
இந்திய தேசியப் பாடலிலேலே (National Anthem) திராவிட என்ற சொல் உள்ளதே. அதனை என்ன செய்வீர்களாம்?(பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டாதிராவிட உதகல பங்கா)ப.பாண்டியராஜா
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நன்றி மேகலா.திராவிட நாடு என்பது தமிழ் நாடுதான் என்றால், கருணாநிதி ஏன் தமிழகத்துக்குத் திராவிட நாடு என்று பெயர் மாற்றவில்லை ?பெரியார் தனித்துக் கேட்டுப் போராடிய திராவிடநாடு தமிழகம், கேரளம், மைசூர், ஆந்திரா சேர்ந்த பழைய மெட்ராஸ் மாகாணம். தனித் தமிழ்நாடு பெரியார் கேட்கவில்லை.சி. ஜெயபாரதன்
--
இந்தக் கூட்டுப்பரப்புக்கு மனோன்மணியம் சுந்தரனார் வாழ்த்துப் பாடவில்லை. அவரது பாடலை நன்றாகப் படித்துப் பாருங்கள்................................................................................தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்............................................................................................எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!'இருந்த' என்றுதான் அவர்கூறுகிறார். 'இருக்கும்' என்று கூறவில்லை. ஒரு காலத்தில் திராவிடம் முழுக்க தமிழ் கோலோச்சியது என்கிறார்.வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறு நல்லுலகத்து --என்ற தொல்காப்பியர் அடிகளை நினைவுகூறுங்கள். இதுதான் திராவிடம். இது அன்றைக்குத் தமிழ்கூறு நல்லுலகமாய் இருந்தது.கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும் --உன்னுதரத்தே உதீத்து எழுந்து ஒன்று பலவாக அன்றைக்கு ஒன்றாக இருந்த தமிழ்நாடு என்னும் திராவிடம் இன்றைக்குக் கூட்டுப்பரப்பாகிவிட்டது. இந்தக் கூட்டுப்பரப்பில் ஒருகாலத்தில் புகழ்மணக்க இருந்த தமிழணங்கையே சுந்தரனார் பாடுகிறார். எனவே பாடலில் தவறில்லை. மாற்றவும் தேவையில்லை.
ப.பாண்டியராஜா
On Thursday, October 20, 2016 at 3:15:06 AM UTC+5:30, jayabarathans wrote:
இந்திய தேசீய கீதத்தில் வரும் திராவிட என்னும் சொல் தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், கேரளா ஆகிய கூட்டு மாநிலப் பரப்பைத் தாகூர் குறிப்பதாகத் தெரிகிறது. அதில் பிரச்சனை இல்லை.தமிழர் எதற்கு அந்த திராவிடக் கூட்டுப் பரப்புக்கு வாழ்த்துக் கூற வேண்டும் ?சி. ஜெயபாரதன்.
2016-10-19 13:47 GMT-04:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
--இந்திய தேசியப் பாடலிலேலே (National Anthem) திராவிட என்ற சொல் உள்ளதே. அதனை என்ன செய்வீர்களாம்?(பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டாதிராவிட உதகல பங்கா)ப.பாண்டியராஜா
On Tuesday, October 18, 2016 at 9:24:14 PM UTC+5:30, jayabarathans wrote:நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!!வாழ்த்துதுமே!!!
சி.ஜெயபாரதன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உலகில் எல்லோரும் அவர்கள் தாய்மொழி என வாழ்ந்தாலும், ஒரு சிலரின் பிழைப்பிற்காக திராவிட என்னும் சொல் தமிழகத்தில் இருப்பதும்-'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' இதை புரியாமல் திரைப்பட நடிகர்களின் பின்னால், சாராயம் பின்னால் ஓடுவதும் மாறுவது எந்நாளோ!!
20 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:13 அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:விளங்காதவர்களுக்கு விளங்கியிருக்கும். விளங்கிக்கொள்ள விருப்பமில்லாதவர்களுக்கு விளக்கி வைக்க விருப்பமில்லை.
விளங்காதவர்களுக்கு விளங்கியிருக்கும். விளங்கிக்கொள்ள விருப்பமில்லாதவர்களுக்கு விளக்கி வைக்க விருப்பமில்லை.
ப.பாண்டியராஜா
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
///த்ராவிட கக்ஷிகள் ஆட்சியில் இருந்து விழலாம். ஆனால், திராவிடம் என்ற சொல்லும் ஏனை சம்ஸ்கிருதச் சொற்கள் போலவேதமிழரிடை வாழும். 50 ஆண்டு கேடான ஆட்சி எப்படி 1000 வருஷ சொல்லை நீக்கமுடியும்? ////"திராவிடம்" என்னும் வடமொழிச்சொல் காலப் போக்கில் எப்போது திரிந்து "தமிழ்" என்று "ழகரச்" சிறப்போடு மாறியது என்று விளக்க முடியுமா ?
Here there is no mixing up of apples with oranges. Let's see the meaning of this poem first and then come to a conclusion! :-) //நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ் | |||
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் | |||
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே | |||
தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநல் திருநாடும் |
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற |
எத்திசையும் புகழ்மணக்கஇருந்தபெருந் தமிழணங்கே,
| ||||||||||
| ||
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
இந்தக் கூட்டுப்பரப்புக்கு மனோன்மணியம் சுந்தரனார் வாழ்த்துப் பாடவில்லை. அவரது பாடலை நன்றாகப் படித்துப் பாருங்கள்................................................................................தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்............................................................................................எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!'இருந்த' என்றுதான் அவர்கூறுகிறார். 'இருக்கும்' என்று கூறவில்லை.
>>பாண்டியராஜா ஆப்பிளையும், ஆரஞ்சையும் கலக்கவில்லயா ? அவர் என்ன சொல்கிறார் ?>>
நான் சொல்லிவிட்டு ஓய்ந்துவிட்டேன். நான் எதனையும் எதனுடனும் கலக்கவில்லை. நீங்கள்தான் நாட்டுவாழ்த்தையும், மொழிவாழ்த்தையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் இந்த இழையின் தலைப்பே தவறு. தாங்கள் குறிப்பிடுவது தமிழ்நாட்டு வாழ்த்துப்பாடல் அல்ல. அது தமிழ்மொழி வாழ்த்துப்பாடல். பாடலை நன்கு படித்துப்பாருங்கள். இருந்த பெரும் தமிழணங்கே என்ற சொற்களில் உள்ள ஆழத்தையும் நுணுக்கத்தையும் நுண்ணிதின் கவனித்துப்பாருங்கள். இனிமேலும் notes போட எனக்கு விருப்பமில்லை. திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே காதுமடல்கள் ஜிவ்வென்று சிவப்போருக்கு இது புரியாதுதான். நான் மொழியால் தமிழன். இனத்தால் திராவிடன். தேசியத்தால் இந்தியன். முதல் இரண்டும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாது. ஐம்பதாண்டு கணக்கெல்லாம் சும்மா wishful thinking.P.Pandiyaraja
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஆறு கிராமங்களில் இன்றும் சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இருக்கிறது என்கிறது இந்தச் சுட்டி (மறுமொழியில் உள்ள தகவலையும் சேர்த்து)
அசாம் சட்டப் பேரவைக்குத் தேர்வுபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நடிகை அங்கூர்லதா தேகா, அசோக் சர்மா, விமல் போரா ஆகியோர், 2016 சூன் 1ஆம் தேதி, சமஸ்கிருதத்தில் உறுதிமொழியை வாசித்துப் பதவியேற்றுக் கொண்டார்கள்.
இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் சமஸ்கிருதத்தைப் பல்லாயிரம் பேர், கல்விக் கூடங்களில் கற்று வருகிறார்கள். சமஸ்கிருதத்தில் எதுவும் பேசாமல் பாடம் நடத்தலாம், கற்கலாம் என்பது சாத்தியமா?
மேலும், இந்தியாவின் ஆன்மீகத் தலங்களிலும் ஆலயங்களிலும் யாகங்களிலும் ஹோமங்களிலும் சடங்குகளிலும் இன்றளவும் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு வருகின்றன. சமஸ்கிருத இலக்கியங்கள் படிக்கப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
நிலைமை இப்படி இருக்க, சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை, உலக வழக்கில் இல்லை என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? இவை மட்டுமின்றி, தமிழ் உள்பட ஏராளமான மொழிகளில் சமஸ்கிருதம் ஊடுருவி, ஒன்றிக் கலந்திருக்கிறது. அந்த மொழிகளுக்குள்ளும் சமஸ்கிருதம் வாழ்கிறது. பிறகு எப்படி, 60 ஆண்டுகளாக நாம் ஒரே கருத்தினை மீண்டும் மீண்டும் கூறி, அதுவே சரியென வாதிடுகிறோம்.
தமிழும் வடமொழியும் எப்போது தோன்றியது என அறிய இயலாத, இணையான செவ்வியல் மொழிகள். இரண்டிலும் அரிய வளங்கள் உள்ளன. இவற்றை மதித்துப் போற்றுவதே, உரிய வகையில் பயன்படுத்துவதே நல்லது.
இந்தப் பின்னணியில், மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடல் கருத்தினை மறுக்கிறேன். ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து என்ற அடியை நீக்கியது சரியே. ஒரு மொழியை வாழ்த்துவதற்காக, இன்னொரு மொழி குறித்து எதிராகப் பதிய வேண்டாமே.
என்ன சார் இது தெரியாமல் பேசுகிறீர்கள். பாஸ்போர்ட்டில் Natioanality குத்துவார்கள். அதுதான் இந்தியன் என்றேனே. இனம் என்பது Race. அதற்கு பாஸ்போர்ட் முத்திரை கிடையாது. அது இறைவன் அளிக்கும் முத்திரை. உங்கள் ரத்தத்தில் குத்தப்படுவது.அடுத்து, ஐயா! தாங்கள் குறிப்பிடுவது நாட்டுப்பாடலே அல்ல. அதுதான் திரும்பத்திரும்பக்கூறுகிறேன். புரிந்துகொள்வதற்குத் தங்களுக்கு விருப்பமில்லை. நான் என் கையை விட்டுவிட்டேன்.
ப.பாண்டியராஜா
வணக்கம் ஐயா.
தங்களுடைய கருத்துகளும் அதனடிப்படையிலான வாதங்களும் ஆழ்ந்த பொருளுடையனவாய் உள்ளன. தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துகள் ஐயா.
On 22-Oct-2016 12:48 am, "சி. ஜெயபாரதன்" <jayaba...@gmail.com> wrote:
>
> இறை வணக்கம், நாட்டு வாழ்த்து, மொழி வாழ்த்து [தமிகத்தில் மட்டுமே] என்று முத்தலைப்பு வணக்க /வாழ்த்துக்கள் உள்ளன.
>
> தமிழ் நாட்டில் மட்டும் தனிக்குணப் பண்பாக தமிழ்மொழி வாழ்த்துள்ளது. விந்தையாக அது நாட்டு வாழ்த்தாகக் கருதப்படுகிறது. மற்ற இந்திய மாநிலங்களிலோ, உலக நாடுகளிளோ தன்னாட்டுக்கென மொழி வாழ்த்து இருப்பதாகத் தெரியவில்லை.
>
> தமிழணங்கு என்று ஓர் உருவமில்லை. கோயில் சிலையும் இல்லை. தமிழ்த்தாய் என்பது தமிழ் நாட்டைக் குறிப்பதில்லை. தமிழ் நாடு என்பது தமிழ் மொழியில்லை. ஆகவே தமிழ்மொழி வாழ்த்தைத் தமிழ்நாட்டு வாழ்த்தாக எடுத்துக் கொள்வது எனக்கு உடன்பாடில்லை.>
> தமிழ்மொழி வாழ்த்து வேறு; தமிழ்நாட்டு வாழ்த்து வேறு. தமிழருக்கு / தமிழ் மாணவருக்கு நாட்டுப் பற்று உண்டாக நாட்டு வாழ்த்து தேவை. தமிழ்மொழிப் பற்று தமிழ்நாட்டுப் பற்றை உண்டாக்காது.
>
> சி. ஜெயபாரதன்.
தகலுக்காக :
காரைக்குடியில் தமிழ்த்தாய் உருவம் கோயிலில் வைத்து வழிபாடு செய்யப்பெற்று வருகிறது.
முன்பு இங்கிருந்த தமிழ்த்தாய் சிற்பத்தை எடுத்துச் சென்று மதுரை தமுக்க மைதான வாயிலில் நிறுவியுள்ளனர். ஆனால் முறையான வழிபாடு இல்லை.அன்பன்
கி.காளைராசன்.
2016-10-21 10:50 GMT-07:00 மாயோன் <ts.m...@gmail.com>://ஐயா, உலகில் பூர்வக்குடி மக்களை அயலார் அடக்கி ஆளும் பொழுது இந்த பிரிவினை வருவது இயல்பு. இன்றும், தெலுங்கானாவில் ஆந்திரத் தெலுங்கர் அடக்கி ஆளுவதால் தனி மாநிலம் கேட்டு போராடவில்லையா? ஒரு மொழி பேசினாலும் ஆதிக்கம் என வரும் பொழுது அதை எதிர்ப்பது தவறு என உலகில் வேறெங்கும் சொல்வதில்லை,தமிழ்நாட்டை விட்டால்.ஆயிரம் உண்டு இங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?என பாரதியார் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.//
அன்புள்ள மாயோன் அவர்களே,தங்களின் எதிர்மொழியிலிருந்து, நான் என் கருத்தைத் தங்களுக்குச் சரிவர விளக்கவில்லை என்றே கருதுகிறேன். முதலில் தாங்கள் பாரதியாரின் வரிகளை எனக்குத் தந்திருப்பது பொருத்தமான பதிலல்ல என்றும் கருதுகிறேன்.பாரதியார் என்ன பறைந்து சென்றார் என்று எண்ணிப்பார்ப்போமாக:ஆயிரம் உண்டிங்கு ஜாதி எண்பத்தின்மூலம் இந்தியமக்களுக்குள் ஆயிரம் பிரிவுகள் உண்டு, அவர்கலுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டு, அண்ணண்-தம்பி சண்டைபோல அவர்களுக்குள் சண்டை/உட்பூசல் வருவதுண்டு, ஆயினும் அவர்கள் ஓரினம் என்றே விளக்குகிறார்.இப்படி நாங்கள் கருத்துவேறுபாறு கொண்டிருந்தாலும், எங்களுக்குள் உட்பூசல் இருந்தாலும், அவை நிரந்தரமானதல்ல, தாற்காலிகமானதே, அவை குளத்தில் கல்விழுவதனால் ஏற்படும் அலை போல மெலிந்து மறைந்துவிடும்; ஆனால், அதை நீ ஆப்புவைத்துப் பிளக்கிறாயே, ஆங்கிலேயா? நீ ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வணிகம்செய்து பிழைக்கவந்த பரங்கி. நீ எங்கள் மாறுபாடுகளை [பலநிறப்பூக்களான எங்களை] நிரந்தரமாக்கி, உனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எங்களை ஓரினம், ஒருநாட்டார் என்ற நினைவு வராதபடி செய்கிறாயே என்றுதான் பொருமினார்.அதே பொருமலைத்தான் நான் செய்திருக்கிறேன்.அவ்வளவே!ஆந்திராவுக்கு, தெலுங்கானாவும் பிறந்ததை மேற்கோள்காட்டி என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழர்களும் அப்படிப்பிரிந்துசெல்லவேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் தமிழ்நாட்டை எத்தனை கூராக்கவேண்டும் எனவிரும்பிக்கிறீர்கள்? தமிழ் உணர்வை எத்தனை கூராக்க விருபிக்கிறீர்கள் என்றும் எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வேன்.
பணிவன்புடன்,ஒரு அரிசோனன்
On Friday, October 21, 2016 at 1:51:58 PM UTC-7, oruarizonan wrote:
2016-10-21 10:50 GMT-07:00 மாயோன் <ts.m...@gmail.com>://ஐயா, உலகில் பூர்வக்குடி மக்களை அயலார் அடக்கி ஆளும் பொழுது இந்த பிரிவினை வருவது இயல்பு. இன்றும், தெலுங்கானாவில் ஆந்திரத் தெலுங்கர் அடக்கி ஆளுவதால் தனி மாநிலம் கேட்டு போராடவில்லையா? ஒரு மொழி பேசினாலும் ஆதிக்கம் என வரும் பொழுது அதை எதிர்ப்பது தவறு என உலகில் வேறெங்கும் சொல்வதில்லை,தமிழ்நாட்டை விட்டால்.ஆயிரம் உண்டு இங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?என பாரதியார் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.//
அன்புள்ள மாயோன் அவர்களே,தங்களின் எதிர்மொழியிலிருந்து, நான் என் கருத்தைத் தங்களுக்குச் சரிவர விளக்கவில்லை என்றே கருதுகிறேன். முதலில் தாங்கள் பாரதியாரின் வரிகளை எனக்குத் தந்திருப்பது பொருத்தமான பதிலல்ல என்றும் கருதுகிறேன்.பாரதியார் என்ன பறைந்து சென்றார் என்று எண்ணிப்பார்ப்போமாக:ஆயிரம் உண்டிங்கு ஜாதி எண்பத்தின்மூலம் இந்தியமக்களுக்குள் ஆயிரம் பிரிவுகள் உண்டு, அவர்கலுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டு, அண்ணண்-தம்பி சண்டைபோல அவர்களுக்குள் சண்டை/உட்பூசல் வருவதுண்டு, ஆயினும் அவர்கள் ஓரினம் என்றே விளக்குகிறார்.இப்படி நாங்கள் கருத்துவேறுபாறு கொண்டிருந்தாலும், எங்களுக்குள் உட்பூசல் இருந்தாலும், அவை நிரந்தரமானதல்ல, தாற்காலிகமானதே, அவை குளத்தில் கல்விழுவதனால் ஏற்படும் அலை போல மெலிந்து மறைந்துவிடும்; ஆனால், அதை நீ ஆப்புவைத்துப் பிளக்கிறாயே, ஆங்கிலேயா? நீ ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வணிகம்செய்து பிழைக்கவந்த பரங்கி. நீ எங்கள் மாறுபாடுகளை [பலநிறப்பூக்களான எங்களை] நிரந்தரமாக்கி, உனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எங்களை ஓரினம், ஒருநாட்டார் என்ற நினைவு வராதபடி செய்கிறாயே என்றுதான் பொருமினார்.அதே பொருமலைத்தான் நான் செய்திருக்கிறேன்.அவ்வளவே!ஆந்திராவுக்கு, தெலுங்கானாவும் பிறந்ததை மேற்கோள்காட்டி என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழர்களும் அப்படிப்பிரிந்துசெல்லவேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் தமிழ்நாட்டை எத்தனை கூராக்கவேண்டும் எனவிரும்பிக்கிறீர்கள்? தமிழ் உணர்வை எத்தனை கூராக்க விருபிக்கிறீர்கள் என்றும் எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வேன்.
பணிவன்புடன்,ஒரு அரிசோனன்
//இவ்விழையில் ரசித்த மடல்களிலொன்று. கூராக்க - கூறாக்க என எழுதலாம்.
கூராக்கல் - ஆயுதத்தைக் கூராக்கல் என ஆகும். அமைதிப் பூங்கா என அனைத்து சமயத்தினர், மொழியினருக்கு இந்தியாவில் தமிழ்நாடு இருக்கிறது.ஆயுதக் கூர்மையை விட மதிக் கூர்மை தமிழர்க்கு தேவை.
நா. கணேசன்//
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
//சீமாந்திரா மக்கள் தெலுங்கானா மக்கள் மேல் ஆதிக்கம் செலுத்தியதை தான் நான் சொன்னேன்; //இன்றும், தெலுங்கானாவில் ஆந்திரத் தெலுங்கர் அடக்கி ஆளுவதால் தனி மாநிலம் கேட்டு போராடவில்லையா? ஒரு மொழி பேசினாலும் ஆதிக்கம் என வரும் பொழுது அதை எதிர்ப்பது தவறு என உலகில் வேறெங்கும் சொல்வதில்லை,தமிழ்நாட்டை விட்டால்.//இதற்கும் தமிழைக் கூறு போடுவதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையே.//
--
//பாரதியாரின் வரிகளை நான் ஆந்திர-தெலுங்கானா உவமைக்கு கொடுக்கவே இல்லை. அது இந்தியர்-அயலார் என்பதற்கு உவமையாக தமிழர்-அயலார் என கொடுத்தேன். பாரதியின் வரிகளை நீங்கள் தமிழர் அயலார் என பார்க்காமல், தமிழர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை இழுப்பதேன்?//
//என்னைப்பொறுத்தவரையில், தாங்கள் சாதி அடிப்படையில் தமிழரைப்பிறித்துகூறாக்க முனைகிறீர்கள் என்றே கருதுகிறேன் -- மொழி அடிப்படையில் அல்ல. உள்மனத்தைத் தொட்டுப்பார்த்து, அங்கிருக்கும் இரும்புத்திரையைப் பொடிபொடியாக்கிவிட்டு எனக்கு மறுமொழி இடுங்கள். //
சாதி என்றால் உயிர்களின் பாகுபாடு என்று தான் நான் சொல்கிறேன்;தமிழர்கள் எல்லாம் ஒரே சாதி தானே-நான் ஏன் பிரிக்கணும்?தமிழர்-தமிழரல்லாதோர் என்று தான் நான் பிரிக்கிறேன். உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்பதால், தமிழரை நான் பிரிக்கிறேன் என்றெல்லாம் கதை கட்டி விடாதீர்கள் 😵//
--