தொல்காப்பியமும் நன்னூலும்

286 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 28, 2020, 3:47:20 PM3/28/20
to vallamai, மின்தமிழ்
தொல்காப்பியம், நன்னூல் தான் என்று யார் சொல்கிறார்கள்? தமிழ்
வளர்ந்துவரும் மொழி. இந்திய, அயல்நாடுகள் பேசும் மொழிகளின்
சொற்களை எழுத நன்னூல், தொல்காப்பியம் உதவுவதில்லையே. இதனால் தானே
தமிழர்கள் பெருவாரியாக அவ்வார்த்தைகளை
எழுதுவதற்கு 5 எழுத்துக்களை சேர்த்துக்கொண்டுள்ளனர்.

RNK wrote:
> Thanks for a prompt and sensible reply.
> That is the basis of grammar; to explain how things (related to words, language, syntax etc) are and not WHAT they should be. Grammar is reflection of the way people use the language.
> that is the reason i repeatedly say, though i am a tamil-illiterate, not to use the grammar books as the rigid rule book but a guiding framework. unfortunately many tamil scholars in this
> forum stick to the tolkappiyam and naanool as the "end-all' final word!
> rnk

N. Ganesan

unread,
Mar 30, 2020, 8:20:44 AM3/30/20
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, S. V. Shanmukam, Dr.Krishnaswamy Nachimuthu, George Hart, podhuvan sengai, sirpi balasubramaniam, mozhitrust, mozhia...@googlemail.com, Vasu Renganathan, K Rajan, Erode Tamilanban Erode Tamilanban
நன்னூல், தொல்காப்பியத்தில் இல்லாத 5 வடவெழுத்துகளை தமிழர்கள் தமிழல்லா அயன்மொழிச் சொற்களை
ட்ரான்ஸ்லிட்டரேட் செய்ய தமிழ் இலிபியில் பாவிக்கின்றனர். இணையம், அச்சு நூல்களில் காணலாம்.

இன்னொன்று: தமிழில் நன்னூல், தொல்காப்பியத்தில் இல்லாதது: தாதுவேரியல்.
சம்ஸ்கிருதத்தில் நன்கு வளர்ந்த துறை. தமிழில் தாதுவேர் சாஸ்திரம் நன்கு வளர்ந்திருந்தால்
இந்தியாவில் திராவிட பாஷைகள் அழிந்து இந்தோ-ஆர்ய பாஷைகள் மிகுதல் குறைந்திருக்கும்.
அது நடக்கவில்லை. பின்னர் எல்லிஸ் என்னும் சென்னை கலெக்டர் இதுபற்றி ஆராய்ந்தார்.
பல காலமாக, சமணர் வழிபாட்டில் உள்ள திருவள்ளுவர் உருவை தங்கக் காசாக வெளியிட்டவர் எல்லீசன்.
அதற்கு முன் சிலர் தமிழில் சில வாசகங்கள் சொல்லிப்போந்தனர்: மணவாள மாமுனிகள்,
மாதவச் சிவஞான யோகிகள், ... குறிப்பிடலாம். தனிநூலாக, ரெவரண்ட் கால்வெல் எழுதினார்.
சான்றார்கள், நெல்லை சரிதம் ஆகிய முக்கியமான நூல்களையும் எழுதியவர் இப் பாதிரியார் ஆவார்.
பின்னர், மாகறல் கார்த்திகேயர், சுவாமி ஞானப்பிரகாசர் (யாழ்), பாவாணர், ....
எல்லாவற்றுக்கும் மேலாக, எமனோ-பர்ரோவின் திராவிட வேர்ச்சொல் அகராதி (DED)
தெலுங்கு, திராவிட மொழியியல் பேரா. பி.எஸ். சுப்பிரமணியம்,
DED-கு பிற்சேர்க்கை நூல் வெளியிட்டுள்ளார். சென்னையின்
செம்மொழி ஆய்வு நிலைய வெளியீடு.

திராவிட மொழியியலில் செய்ய வேண்டிய பணிகள் பல. சிந்துவெளி திறந்துள்ளது.
21-ஆம் நூற்றாண்டில் திராவிட ஒப்பீட்டு மொழியியல் இந்தியாவில், மேலை நாடுகளில்
வளர வேண்டும்.

நா. கணேசன்

On Sat, Mar 28, 2020 at 9:10 AM nkantan r <rnka...@gmail.com> wrote:

 got the first error; ஒன்றே that is more on wrong word where the meaning has got across

ok
 
the second "வினை வேர்கள் ஏன் இப்படி மாறுகின்றன"    i didnot mean to say the வேர்கள் change;
bur rather that the word formation is different for similar வேர்கள்
as Mrs kanmani said why not!
the base rule is that make and break a rule!

நில் எனும் தாதுவேர் நின்ற, நிற்ற- என மாறும்.
கல் எனும் தாதுவேர் கற்ற என மட்டும் மாறும். ஏனெனில் கன்றிப்போதல் வேறு பொருள் உடைத்து.
செல் எனும் தாதுவேர் சென்ற என மட்டும் மாறும். ஏனெனில் செற்று ( < செறு- வினை) என்பது  வேறு பொருள் உடைத்து.

Disambiguation is the reason. There should be no ambiguity in the verb usage, that's the idea behind.
There are some examples where Tamil literature is needed to understand the original meaning.
Thanks to Tamil Thaay, we have a good depth in Time, some 2000 years, even though
the subject matters are rather few as we travel back in Time and also the quantity, analysis, area of spread, etc.,
when compared to Indo-Aryan literatures. Like Indo-Aryan, Dravidian languages never had extensive
dhAtu-etyma analysis until the European scholars entered the field.

பத்தர் (யாழின் பத்தர்), பந்தர் (தண்ணீர்ப் பந்தர்) பொருள் வேறுவேறு.
சங்க காலத்திலும், பிற்கால இலக்கியங்களிலும் பத்தர் X பந்தர் வேறுபாடு காட்டுகின்றனர்.
குலை (குலம் என்ற சொல்லோடு தொடர்புடையது), ஆனால் கொலை என்றால் மர்டர்.
குசு, கொசு வேறுபடும்.  புலை என்ற சொல்லும், பொலி என்ற சொல்லும் வேறுபடுவது சங்க இலக்கியம், 
த்ராவிட ஒப்பீட்டு மொழியியல் காட்டுகிறது. இதை மறைத்து தற்காலத்தில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் 
ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன. உ-ம்: அண்மையில் , கணியன் பாலா என்பவர் கட்டுரை பார்க்க நேர்ந்தது.

~NG

N. Ganesan

unread,
Mar 30, 2020, 7:10:12 PM3/30/20
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com

On Mon, Mar 30, 2020 at 2:23 PM podhuvan sengai <...@gmail.com> wrote:
நல்ல செய்தி
தங்கள் செய்தி என்னும் குறிப்புடன்  அடியேன் தளத்தில் இது தொடர்பான விரிவான கட்டுரை ஒன்று விரைவில் வெளிவரும் 
வந்ததும் இணைப்பு அனுப்புகிறேன் 

N. Ganesan

unread,
Apr 1, 2020, 8:39:37 AM4/1/20
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, S. V. Shanmukam, Dr.Krishnaswamy Nachimuthu, podhuvan sengai, sirpi balasubramaniam, mozhitrust, mozhia...@googlemail.com, Vasu Renganathan, K Rajan, Erode Tamilanban Erode Tamilanban, George Hart
புலவரையா செங்கை பொதுவன் அடிகள் பற்றி அறிய:

புலவர் பொதுவனடிகளார் எழுதிய வலைப்பதிவு: A note from Sengai Podhuvan aDikaL, after reading my posting that
Etymological Analysis, as pursued in Sanskrit traditions, if it ever were done in Dravidian languages would have prevented
the areas in Indian subcontinent transitioning from Dravidian to Indo-Aryan speaking states in India, Ceylon, Pakistan, and Bangladesh.

தமிழில் வேர்ச்சொல் Etymology in Tamil

மொழியில் உள்ள சொல் எங்கே தோன்றி எப்படி வளர்ந்து என்ன பொருளை உணர்த்துகிறது என்று அதன் வரலாற்றைக் கண்டறிதல் சொற்பிறப்பியல். 
Etymology is the study of the origin of words and the way in which their meanings have changed throughout history.
"the decline of etymology as a linguistic discipline"

ஆங்கில மொழி பல்வேறு பண்டைய மொழிகளிலிருந்து சொற்களை வாங்கிக்கொண்டு வாழ்கிறது. ஒரு சொல்லின் பொருளைக் காணும்போது அந்தச் சொல் தோன்றிய மொழியில் என்ன பொருள் உணர்த்திற்று எனக் காண்பது அந்த மொழிக்கு இன்றியமையாதது. 



தமிழ் பல மொழிகளுக்குத் தாய். 
இதன் வரலாற்றை ஆராய்வதால் என்ன பயன்? 
பிற மொழியிலிருந்து இதன் சொல் வரவில்லை என்பதைக் காட்டவே பயன்படும். பாவாணர் இதனைச் செய்தார் 

கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் ஒன்று என்றார். 

பாவாணர் ‘ஆதி’ என்னும் சொல்லை வடமொழி என்று விலக்கி, அகராதியை ‘அகரமுதலி’ என்றார். 

‘ஆதி என்னும் சொல் ‘முதல்’ என்னும் பொருளை உணர்த்தும்போதும் தமிழை என்பதை வேறொரு கட்டுரையில் காணலாம். - தொடுப்பு 


1

வேர் < அடி < மொழி
தாது என்பது விதை. வடமொழியில் வேர்ச்சொல்லைத் ‘தாது’ என்பர்.  

2

மொழியில் உள்ள ஒரு சொல்லை மரம் என வைத்துக்கொள்வோம்.
அதில் மேலே தழைத்து வளர்வனவற்றை நம் இலக்கணம் காட்டுகிறது.
நிலத்துக்குக் கீழே உள்ள வேரை சொற்பிறப்பியல் காட்டுகிறது. 

3

கீழே உள்ள கணேசனார் கட்டுரையில் தமிழில் சொற்பிறப்பியல் வளரவேண்டும் என்று குறிப்பிடுகிறார். யார் யார் இதில் முன்னோடியாகத் திகழ்கின்றனர் என்றும் சுட்டிக் காட்டுகிறார். 

4

தமிழில் உள்ள சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என்று 4 வகையில் காண்பது மரபு 

இவற்றில் பெயரும் வினையும் தனித்து இயங்கக் கூடியவை 
இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரோடோ, வினையோடோ இணைந்துதான் இயங்கும். தனித்து இயங்காது. 

பெயரும் வினையும் அடி
இடையும் உரியும் கிளை

5

இடைச்சொல் தனிச்சொல்லில் அல்லது மொழியில் பின்னொட்டாகவே வரும் - பிற, மற்று, ஆகியவை போன்றவைகளும் முன்னவற்றை உணர்த்தவே வருவது காண்க 

சில உரிச்சொல் முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ வரும்
நன்பொருள் (நன்று =பெரிது -தொல்காப்பியம்) - முன்னொட்டு
பொருள் முழுதும் - பின்னொட்டு

தொல்காப்பியம் 41 இடைச்சொற்களைக் குறிப்பிட்டு அவை வெளிப்படுத்தும் பொருளையும் சுட்டுகிறது - விளக்கம்

உரிச்சொற்கள் 3 வகையாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. 
பலசொல் ஒருகொருள் 26
ஒருசொல் பலபொருள் 15
ஒருசொல் ஒருபொருள் 107 - விளக்கம்

புணர்ச்சியில் தோன்றும் சாரியைகள் - விளக்கம் 
வினைச்சொல்லில் காலம் காட்டும் நிலைகள்
வேற்றுமை உருபுகள் - விளக்கம்
அசைநிலை, இசைநிறை, குறிப்பு, ஒப்பில் போலி முதலானவை
ஆகியனவும் இடைச்சொற்கள்

பால் உணர்த்தும் சொற்களும் இடைச்சொற்களே.
வினைச்சொல்லில் பால், இடம், எண் ஆகியவை தொல்காப்பியம் வினையியலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன - விளக்கம் 

6

பெயரிலும், வினையிலும் தனித்து நின்றாலும் பொருள் தரக்கூடிய அடிச்சொல்லை நன்னூல் பகுதி என்று குறிப்பிடுகிறது. 
அதனோடு உறவு கொள்ளும் சொற்களை விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்று பிரித்துக் காட்டுகிறது 

பகுதி என்பது அடிச்சொல் 
பிற அதற்குப் பால், எண், இடம், வேற்றுமை, காலம் காட்ட அதனோடு ஒட்டிக்கொள்ளும்

பகுபத உறுப்புகள்
நிலைகொள்ளும் இடம்
(உறுப்புகள் - இக்கால வழக்கு)
(உறுப்புக்கள் - பண்டைய வழக்கு)

7

N. Ganesan, Mar 30, 2020, 5:50 PM, தொல்காப்பியமும் நன்னூலும் என்று தலைப்பிட்டு வல்லமை முதலான மின்னிதழ்களுக்கு அனுப்பிய செய்தி


நன்னூல், தொல்காப்பியத்தில் இல்லாத 5 வடவெழுத்துகளை தமிழ் தமிழல்லா அயன்மொழிச் சொற்களை ட்ரான்ஸ்லிட்டரேட் செய்ய தமிழ் இலிபியில் பாவிக்கின்றனர். இணையம், அச்சு நூல்களில் காணலாம்.


இன்னொன்று: தமிழில் நன்னூல், தொல்காப்பியத்தில் இல்லாதது: தாதுவேரியல்.


சம்ஸ்கிருதத்தில் நன்கு வளர்ந்த துறை. தமிழில் தாதுவேர் சாஸ்திரம் நன்கு வளர்ந்திருந்தால் இந்தியாவில் திராவிட பாஷைகள் அழிந்து இந்தோ-ஆர்ய பாஷைகள் மிகுதல் குறைந்திருக்கும்.


அது நடக்கவில்லை. 


பின்னர் எல்லிஸ் என்னும் சென்னை கலெக்டர் இதுபற்றி ஆராய்ந்தார்.


பல காலமாக, சமணர் வழிபாட்டில் உள்ள திருவள்ளுவர் உருவை தங்கக் காசாக வெளியிட்டவர் எல்லீசன்.


அதற்கு முன் சிலர் தமிழில் சில வாசகங்கள் சொல்லிப்போந்தனர்: 


மணவாள மாமுனிகள்
மாதவச் சிவஞான யோகிகள், ... குறிப்பிடலாம். 

தனிநூலாக, ரெவரண்ட் கால்வெல் எழுதினார்.


சான்றார்கள், நெல்லை சரிதம் ஆகிய முக்கியமான நூல்களையும் எழுதியவர் இப் பாதிரியார் ஆவார்.


பின்னர், மாகறல் கார்த்திகேயர், சுவாமி ஞானப்பிரகாசர் (யாழ்), பாவாணர், ....


எல்லாவற்றுக்கும் மேலாக, எமனோ-பர்ரோவின் திராவிட வேர்ச்சொல் அகராதி (DED)


தெலுங்கு, திராவிட மொழியியல் பேரா. பி.எஸ். சுப்பிரமணியம்,

DED-கு பிற்சேர்க்கை நூல் வெளியிட்டுள்ளார். சென்னையின்
செம்மொழி ஆய்வு நிலைய வெளியீடு.

திராவிட மொழியியலில் செய்ய வேண்டிய பணிகள் பல. 


சிந்துவெளி திறந்துள்ளது.


21-ஆம் நூற்றாண்டில் திராவிட ஒப்பீட்டு மொழியியல் இந்தியாவில், மேலை நாடுகளில் வளர வேண்டும்.


நா. கணேசன்
On Mon, Mar 30, 2020 at 7:21 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages