இது.........என்னையும் கருத்து எழுத வைத்த விதியின் விஸ்வரூபம்!!

432 views
Skip to first unread message

Swathi Swamy

unread,
Jan 31, 2013, 7:35:37 AM1/31/13
to தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், தமிழ் வாசல், vallamai



என் அன்புக்குரிய குழும உறவுகளான பலருக்கு தெரியும் கமல் ரஜனி என்று இரண்டு நடிகர்களிடமும் , கடவுள் பெயரில் வியாபாரம், அரசியல், வன்முறை செய்பவர்களிடமும்  எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது என்பது.

  நான் என் கடவுளை விட இந்து மதம் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து தான் கடவுள் நம்பிக்கையையே விட்டேன்... இஸ்லாமிய அன்பர்கள் என்னை நம்ப வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை...ஈழத்தில் இருக்கும் போது வெறும் 6 வயதில் என்னை பார்த்தவர்கள் ஆண்டாள் மாதிரியும் மீரா மாதிரியும் தான் இந்த பிள்ளை வரப் போகுது என்று சொல்லுமளவுக்கு சைவப்பழமாக இருந்தவள்...என் பெரியம்மாவோடு சேர்ந்து விரதமிருப்பதும், கோவிலில் அடியழிப்பதுமாய் வளர்ந்தவள்....என்றைக்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டதோ, என்றைக்கு பம்பாயில் நெருல் என்ற இடத்தில் எங்கள் கண் முன்னால் இஸ்லாமிய இளைஞனை சிவசேனாவினர் தீயிட்டு உயிரோடு எரித்தனரோ அன்றைக்கு என் மதத்தைச் சார்ந்தவர்களை நான் வெறுத்தவள்...இந்து என்ற அடையாளத்தை நான் துறக்கக் காரணமே இந்தியா தான். குழுமங்களிலேயே சங்கர் அண்ணா உட்பட பலரோடு  எத்தனையோ தடவை கடவுளை மறுத்து வாதாடியிருக்கிறேன்  


அதனால் தமிழக, ஹாலிவூட் அல்லது வேறு எந்த தேசத்தினதும் எந்தவொரு சினிமாநடிகர்களின் ரசிகை அல்லாத, ஒரு குறிப்பிட்ட மதம் சார்பானவளாக இருக்க விரும்பாத ஒருத்தியாக தான் இதை எழுதத் தொடங்குகிறேன்.  . 

கமல் என்ன தான் கறுப்புச் சட்டை கருத்துகளை அள்ளிவிட்டாலும் அதை நான் எப்போதும் நம்பியதில்லை. அதே போல் உன்னைப் போல் ஒருவன் படத்தில் அப்பட்டமாக அவர் தனது காழ்ப்புணர்ச்சியை தன் முகபாவங்களாலும் , நறுக்கென்ற ஓரிரு வசனங்களாலும், எள்ளல் சிரிப்பாலும் காட்டியதையும் கவனிக்கவும் தவறவில்லை...

அதனாலேயே விஸ்வரூபம் படத்திலும் தனது காழ்ப்புணர்ச்சியை காட்டியிருக்கிறார் போலிருக்கிறது என்றே நான் தீவிரமாக நம்பினேன். அதனாலேயே இந்தப் படத்தை பார்த்தேயாக வேண்டும் என்று ஆக்கினைப் படுத்தி என் பிராணநாதரை இழுத்துக் கொண்டு தியேட்டருக்கு போய் நேற்று இரவுக் காட்சி யாக நியுயேர்ஸியில் ஒரு தியேட்டரில் விஸ்வரூபம் படத்தை பார்த்தேன்.  $14.00டாலர் .  படி $28.00டாலரும், நாச்சோ சிப்ஸுக்கு $8.00 டாலருமாக $32.00 டாலர் . போச்சு..!! 

32.00 டாலர்???  ம்ஹும்... ரெண்டு சட்டை வாங்கியிருக்கலாம் அல்லது பசங்களுக்கு வீடியோ கேம் வாங்கியிருக்கலாம் அல்லது ஒரு வாரத்துக்கு  மளிகைச் சாமானாவது வாங்கியிருக்கலாம் என்று மனது கணக்குப் பார்த்தாலும் "எப்ப பார் எனகு முன்பாகவே படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் இலங்கை இந்திய இணைய உறவுகளையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்...அதுவும் தம்பி மருதமூரானை நினைத்துப் பார்த்தேன்...ஆஹா..தம்பிக்கு நான் விமர்சனம் எழுதி படிக்கும் விதியை விஸ்வரூபம் மூலம் எழுதி வைத்த கமலுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இந்த விசயத்துக்காக நன்றி சொல்ல தோன்றியது...  :) 

என்னைப் பொறுத்தவரை எந்த சிங்களவரும் ஈழத்தமிழன் எவரைப் பார்த்தாலும் கொட்டியா என்று சொல்லும் உணர்வு தான் இந்த விசயத்தில் விஸ்வரூபத்தைப் பற்றிய எதிர்ப்பின் உணர்விலும் பார்த்தேன். அந்த உணர்வோடு தான் நேற்றிரவு இந்தப் படத்தை பார்க்க என்னவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் பார்த்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்குள்ளேயே  சில சந்தேகங்கள்...................சில கேள்விகள்.....!
.
கமலின் முந்தையை படங்களில் பல இடங்களில் அவர் நாசூக்காக காட்டும் பிரிவினையையும் காழ்ப்புணர்ச்சியையும் அவதானித்திருக்கிறேன். தென்னாலியில், மன்பதன் அம்பில்  ஈழத்தமிழரை அவர் கையாண்ட விதத்தில் எனக்கு மிகப் பெரியளவில் மாற்றுக்கருத்திருக்கிறது இன்று வரை. அதே போல் உன்னைப் போல் ஒருவன் படத்திலும் அவருடைய அந்த நாசுக்கான இகழ்சி சுருக்கென்று நெஞ்சைக் குத்தியிருக்கிறது எனக்கு...தசாவததாரம் ஒரு படி அதிகம் ...ஆனால் என்ன ஆச்சரியமோ எனக்கு இந்தப் படத்தில் அவர் இஸ்லாமிய சகோதரர்களையும், அமெரிக்காவையும் ஒரே நேரத்தில் ஆரத் தழுவ முனைந்திருப்பதாகவே தோன்றியது. அது அவரின் பொய்யான வெளிப்பாடாகவே இருந்தாலும் கூட  ….!  

நான் கமலையோ அல்லது ஜெயலலிதாவின் அரசியல் சூழ்சியையோ , இஸ்லாமிய மதப் பிரதிநிதிகளையோ கருத்தில் கொள்ளாமல் வெறுமனே விஸ்வரூபம் என்ற படத்தின் கதைய மட்டும் என்னுடய சிற்றிவுக்கு எட்டிய அளவில் கிரகித்துக் கொண்டதில் சில கேள்விகள் அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டன......................

அவையாவன...:

இந்தியாவில் இருக்கும் இஸ்லாம் மத சகோதர சகோதரிகளிடம் தேசபக்தி இருக்குமா இல்லையா?? அவர்கள் இந்தியாவை தங்கள்  தாய்நாடாக போற்றுகிறார்களா இல்லையா?? இரண்டு கேள்விகளுக்கும் ஆம் என்பது பெரும்பாலானோரின் பதிலாக இருக்குமானால் அவர்களிடம் எனக்கு இன்னொரு கேள்வி இருக்கிறது. தேசபக்தி உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் காவல்துறையிலோ, இராணுவத்திலோ அல்லது உளவு நிறுவனத்திலோ கடமையாற்ற முற்படுவார்களா மாட்டார்களா?? இந்தக் கேள்விக்கும் ஆம் என்று பதில் சொல்பவர்களிடம் நான் இன்னும்  சில கேள்விகள் கேட்க நினைக்கிறேன்...  அப்படிப்பட்ட,  நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட களத்தில் கடமையாற்றும் அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவார்களா இல்லையா?? உளவுத் துறையில் கடமையாற்றுபவர்கள் பயங்கரவாதிகளிடம் ஊடறுத்துச் சென்று வேவு பார்ப்பார்களா இல்லையா???  

இவை எல்லாவற்றுக்கும் அன்பான இஸ்லாமிய சகோதரர்களின் பதில் ஆம் என்றால் விஸ்வரூபம் படத்தின் கதை தளமும் அந்த ஆம் என்ற பதிலைப் பின்னிச் சுற்றி அமைக்கப்பட்டதே...என்ன அப்படி ஒரு கதையை எழுதி, இயக்கி, நடித்தவரை நீங்கள் கலைஞராக பார்க்காமல் உங்களை சிறுமைப்படுத்த நினைக்கும் ஒரு பிரிவினரின் பிரதிந்தியாகவோ அடையாளமாகவோ பார்த்துவிட்டீர்கள்...அல்லது அப்படி பார்க்கும் வண்ணம் உங்களை வேறு ஏதோ ஒரு சக்தி உருவாக்கிவிட்டது !

படத்தை இன்று நியுயெர்ஸியின் ஒரு திரையரங்கில் இரவு 8 மணிக் காட்சியில் பார்த்தேன்.

ஏதோ ஒருவகையில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியரான உளவுத்துறை அதிகாரி ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான்.அல்கொய்தா தீவிரவாதிகளுக்குள்  புனித போராளி (ஜீஹாத் ந்னு தான் எனக்கு அந்த வார்த்தை கேட்டது. சரியான உச்சரிப்பா என்று தெரியவில்லை) யாக புகுந்து அல்கொய்தா போராளிகளுடன் பயிற்சி பெற்று உமர் என்ற ஒரு தலைமைப் போராளியின் நம்பிக்கைக்குரியவனாகிறார். அங்கிருந்தவாறு அமெரிக்க இராணுவத்தினருக்கு துப்பு கொடுத்து போராளிகள் பதுங்கியிருக்கும் கிராமங்களை முற்றுக்கையிட்டு அல்கொய்தா போராளிகளை அழிக்க துணை போகிறார். அந்த போராளிகளுக்கும் அமெரிக்க இராணுவத்தினருக்குமிடையிலான சண்டையில் இவருடைய உயிருக்கு கூட எந்தப் பாதுகாப்புமில்லை. இந்த சண்டையில் போராட்டத் தலைவனின் குடும்பம் முழுவதும் அழிக்கப்படுகிறது. தலைவனுக்கும் உளவாளியாக கதாநாயகன் இயங்குவது தெரிய வர அமெரிக்கர்களை அழிக்கும் திட்டத்துடன் தலைவனும், அவனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்ற உளவாளியும் நியுயோர்க்கில் குடியேறுகிறார்கள். பாதிக்கதை ஆப்கானிஸ்தானிலும் பாதிக் கதை அமெரிக்காவிலுமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் பற்றிய கதை  இது.

என்னுடைய கேள்வியும் சந்தேகமும் என்னவென்றால்...........................

இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென்பதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டவை. இவை...................

  1. தாக்குதல்களுக்கு செல்லும் முன் தீவிரவாதிகள் தொழுதுவிட்டு போகிறார்கள்..
  2. பயங்கரவாதி உமர் மதுரையிலும் கோவையிலும் மறைந்திருந்ததாக சொல்வது.
  3. குர்ரானை பயங்கரவாதிகள் வைத்திருப்பதோ தாக்குதல்களின் பின்னணியில் குர்ரானை காண்பித்ததோ...(மன்னிக்கவும் இந்தக் காரணம் எனக்கு சரியாகப்புரியவில்லை)

இப்போது இந்தக் காரணங்களையிட்டு என்னுடைய கேள்விகள்....

  1. தீவிரவாதியோ பயங்கரவாதியோ நல்லவனோ கொடையாளியோ போராளியோ எவனாயினும் அவனவன் தத்தமது கடவுளை வணங்கும் உரிமை உள்ளவர்கள் தானே?? அதுவும் தலிபான், அல்கொய்தாவைச் சேர்ந்தவர்கள் தம்மை புனித போராளிகள் என்று தானே நம்புகிறார்கள்?? தாங்கள் செய்யவிருக்கும் தாக்குதல்கள் எதுவும் தங்கள் மதத்துக்காகவும் ,தம் மதத்தைச் சார்ந்த மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராகத் தானே அவர்கள் கருதுகிறார்கள்?? அப்படி நம்பும் அவர்கள் தங்கள் போர் வெற்றி பெற வேண்டுமென்று இறைவனை தொழுவது தவறா?? எந்தவொரு மனிதனும் தன்னுடைய மரணத்தின் நொடி தெரியப்படுமிடத்தில் தன் குல தெய்வத்தை பிராத்திக்காமல் இருப்பானா என்பது கேள்விக்குறியே..! அப்படிப் பார்க்கையில் மதத்துக்காகப் போராடும் இவர்கள் போருக்கு போகும் முன் தொழுகை நடத்துவதாக காண்பிப்பது தவறா??
  2. தமிழ் படம் எடுப்பதால் தமிழில் வசனங்கள் இருக்கவும் வேண்டும் அவை நம்பத் தகுந்தவையாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் நாட்டில் தீவிரவாதிகளின் தலைவன் மறைந்திருந்ததாக சொல்லலாம் . இல்லை அந்த நோக்கில் இந்தக் காட்சி அமைக்கப்படவில்லையென்றே வைத்தாலும் கூட இந்தியாவில் எங்குமே பயங்கரவாதிகள் மறைந்திருக்கமாட்டார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா?? யாரோ ஒரு பயங்கரவாதி (முல்லா உமர்) இங்கே மறைந்திருந்தார் என்பதற்கான ஆதாரங்களை வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில் எவருமே மறைந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் கடமையும் இருக்கிறதல்லவா??
  3. குர்ரானை அத்தனை பெரிய பிரமாண்டமான படத்தில் எந்த இடத்தில் காண்பித்தார்கள் என்பதை தான் கவனிக்கத் தவறிவிட்டேன். :( ஆனால் ஒரு இந்து வெறியனிடம் பகவத் கீதையும், கிறிஸ்தவ கலகக்காரனிடம் பைபிளும் , இஸ்லாமிய ஜிகாத் போராளியிடம் குர்ரானும் இருப்பது தவறென்றோ அவர்களை வைத்திருக்கக் கூடாது என்றோ உங்களால் சொல்ல முடி்யுமா?? ?

எல்லாவற்றையும் விட என் மனதைக் குடைவது ..................... இந்தப் படத்தில் தமிழ் இஸ்லாமியச் சகோதரர்களை மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சார்ந்த இஸ்லாமியச் சகோதரனையும் இழிவாகவோ, பயங்கரவாதியாகவோ காட்டவில்லை. இந்திய இஸ்லாமிய உளவாளியே அல்கொய்தாவின் பயங்கரவாதத்தை முறியடிப்பதாகத் தான் காட்டப்பட்டிருக்கிறது. இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?? இந்த எதிர்ப்பு அல்கொய்தாவையோ அல்லது தலிபானையோ ஆதரிப்பது போலாகாதா??? என்பது தான்...

மற்றபடி என்னால் கமலின் முந்தைய படங்களில் அவதானித்த நாசூக்கான இகழ்வைக் கூட இந்தப் படத்தில் காணமுடியவில்லை. பின்லாடனின் மறைவை அமெரிக்கர்கள் தீபாவளி போல் கொண்டாடியதாக சொல்வது கொஞ்சம் அதிகப்படியான சினிமாத் தனம்.....! சந்தோசப்பட்டவர்கள் உண்டு தான் எனினும் அந்தளவுக்கு கொண்டாடியதை நான் இங்கு அவதானிக்கவில்லை.   படத்தில் அரக்கனைக் கொன்றால் கொண்டாடமாட்டார்களா என்று ஒரு கேள்வியும் அங்கு வைக்கப்படுகிறது. பயங்கரவாதத்தையும் , பின்லாடனையும் வெறுக்கும் இஸ்லாமிய மக்கள் இந்த வசனத்தை ஆதரிப்பார்களா எதிர்ப்பார்களா??

இந்தப் படம் எந்தவகையில் ஹாலிவூட் தரம் என்று  என்னால் சீர்தூக்கிச் சொல்ல முடியவில்லை... ஆனால் மிகப்பிரமாண்டமான அளவில் அதிக செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். என்பதில் ஐயமில்லை.

ஒருவகையில் கணவன் மீது ஆர்வமிழந்து போகும் மனைவி, இன்னொரு ஆணிடம் ஈர்க்கப்படுவதும், கணவனை விட்டு விலக நினைப்பதும், அதற்கு முன் கணவனை வேவு பார்த்து அவனிடம் ஏதாவது தவற்ருந்தால் தன்னுடைய குற்றவுணர்வில்ருந்து மீளலாம் என்று நினைப்பதும், ஒரு கட்டத்தில் கணவனின் சுயரூபம் தெரிய வர பிரமிப்பதும் எனக்கு என்னவோ ஆர்னோல்ட் நடித்த True Lies படம் தான் நினைவுக்கு வந்தது. அதில் கூட இப்படி தான் இஸ்லாமிய தீவிரவாதக் கூட்டத்திடம் கணவரும் மனைவியும் அகப்படுவார்கள். ஆங்கிலப்படத்தில் கணவன் தான் மனைவியை வேவு பார்ப்பார். எனக்கென்னவோ அந்தப் படத்தின் கதையை வைத்து திரித்து கமல் கதை பண்ணியிருப்பது போல ஒரு தோற்றம். அந்த படம் காமெடியும் ஆக்‌ஷனும்..அதையே  கமல் உயிர்ப்புடன் யதார்த்தமும் ஆக்‌ஷனும் கலந்து தந்திருப்பதாக நினைக்கிறேன். அப்படிப் பார்த்தாலும் எதிர்ப்பும், தடையும் முதலில் ஆர்னோல்டுக்கு போட்டிருக்க வேண்டும்.

குறை சொல்ல முடியாத முதல் பிரமிப்பு காமிரா தான்...
ஆப்கானின் அடர்ந்த நெடிய மலைத்தொடர்களும்...பாலை மணல்வெளியும் அப்பப்பா..............ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் தோன்றி மறையும் உணர்வைத் தந்தது என்றால் மிகையாகாது. அதே போல் அமெரிக்க இராணுவத்திற்கும் அல்கொய்தாவினருக்குமிடையிலான போர் காட்சிகளும், வெடித்துச் சிதறும் கிராமம், மனிதர்கள், NYPD யின் கார் சேஸிங்குக்கும் என்ன சொல்வதென்றே தெர்யவில்லை..அத்தனை  சிறப்பு.. மனுஷன் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் .

அதுவும்  24 மணி நேரமும் எந்த நிமிடம் எங்கு குண்டு வெடிக்கும் எங்கு ஆயுதங்கள் வெடிக்கும் என்று சொல்ல முடியாத பயங்கரவாதமும், ஆயுதப் போராட்டமும் நடக்கும் ஒரு மண்ணில் அந்த மண்ணில் நடக்கும் காட்சிகளையே படம் எடுப்பது என்பது எத்தனை ரிஸ்கான விசயம் ???  உண்மையிலேயே ஆப்கானிஸ்தானில் தான் இவை படமாக்கப்பட்டனவா???? அல்லது ஏதும் கம்பியூட்டர் கிராபிக்கா அல்லது இந்தியாவின் ஏதேனும் பகுதிகளா...?? என்று எனக்கு தெரியாது.

இரண்டாவது கமலின் அந்த  கதக் நடன பாட்டு. அந்தப் பாட்டு எடுக்கப்பட்ட விதம் இணையத்தளத்தில் பார்த்த போது உண்மையிலேயே கமல் மீது பரிதாபம் வந்தது..ஒரு பாட்டுக் காட்சியை நிறைவாக எடுக்க இந்த மனுஷன் எத்தனை விதமான முயற்சிகள், ஈடுபாடு, களைப்பு என்று எத்தனையை எல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது. அத்தனையும் ஒரு 4 நிமிஷம் வருமா அந்தப் பாடல்...?? அத்தனை எத்தனிப்பும் உழைப்பும் அந்த 4 நிமிஷத்தை மனதில் அழுத்தமாக பதித்துவிட்டு தான் போகும் எதிரிகளுக்கு கூட...முகத்தில் ததும்பும் சிங்காரரசம் உண்மையான பெண்ணுக்கே வருமா என்று சந்தேகம் வர வைக்கிறது..அப்பப்பா...


வழமையான கமலின் முத்தக் காட்சியோ டூயட் பாடலோ கதாநாயகனின் அல்லது கதாநாயகியின் அல்லது வில்லனின் கனவில் கூட  வரவில்லை...என்பது கமலின் மசாலா இரசிகர்களுக்கு  ஏமாற்றம் தான். கதக் நடனப் பாட்டைத் தவிர மற்ற எந்தப் பாடலும் கதாநாயக நாயகியின் வாயசைப்பில் வரவில்லை...எல்லாமே பின்னணியில் தான். நிறைய அரபிக் வசனங்களும் குர்ரான் ஓதலும் படத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேறு என்ன ...வேறு என்ன???
கமல் ஏதாவது படத்தில் எந்த மதத்தையாவது கிண்டல் செய்தே தீருவேன் என்று இருக்கிறாரோ என்னமோ ....இந்தப் படத்தில் பிராமணப் பெண்ணான தன் மனைவிக்கு கோழி ரோஸ்ட் மிகவும் பிடிக்கும் என்று சமைப்பதும் அதை ருசி பார்க்கச் சொல்லி தன் கதக் நடன மாணவி ஒருவரைப் பார்த்து “பாப்பாத்தியம்மா முதல்ல நீயே டேஸ்ட் பண்ணிப் பார்த்து உப்பு காரம் போதுமான்னு சொல்லு” என்று சொல்வதையும் வைத்து இந்துமதத்தையும் பிராமணர்களையும் கிண்டல் பண்ணியதற்காக அடுத்ததாக RSS இயக்கத்தினரோ அல்லது பாஜக வோ கோர்ட் வாசல் படி ஏறினால் கமல் என்ன செய்வாரோ தெரியவில்லை...!

அடுத்து இன்னொரு விசயமும் நான் கிரகித்துக் கொண்டது .... முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம்....ஆனாலும் அதையும் இங்கே தரவே விரும்புகிறேன்...தேவர்மகன் படத்திலிருந்து (ஒருவேளை அதற்கு முன்னதாகக் கூட இருக்கலாம் ஆனால் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியது தேவர்மகன் காலத்திலிருந்து தான் )கமலின் ஆஸ்கார் கனவை அவருடைய சீரியஸான படங்களில் அவர் எடுக்கும் முயற்சிகள் வெளிக்காட்டி வருகின்றன என்று சொன்னால் அது பிழையாகாது அல்லவா??  அந்தக் கனவை நனவாக்க இந்த படம் மூலமும் முயற்சி செய்திருக்கிறாரோ என்றும் யோசிக்க வைத்ததற்கு காரணம் அமெரிக்காவுக்கு நிறைய கூழ் அடித்தால் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது போல்......பல காட்சிகள்...கூடவே...அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று செண்டிமெண்ட் வசனம் வேறு...

எல்லாவற்றையும் விட காமெடி இந்திய பிரதமர் போனில் பேசுவது , அமெரிக்காவையே இந்திய உளவாளி காப்பாற்றுவது போன்ற லாஜிக்....  :)  

எல்லையில் இருக்கும் காவலர்கள் தலையையே பக்கத்து வீட்டுக்காரன் கொய்து கொண்டு போவது தெரியாமல் இருப்பதை  இப்படி ஒரு காட்சியை பார்த்ததும் நினைத்தன் விளைவு .............தியேட்டரில் சத்தமாக சிரித்தவள் நானாகத் தான் இருக்கும்...!  பின்லாடனை, The beheading of journalist of Daniel Pearl க்கு ஒப்பான காட்சி, அல்கொய்தாவின் மரணதண்டணை முறை போன்ற நிஜங்களை , புனித போருக்காக தன் பிள்ளைகளை தாரை வார்க்க தயாரான திவிரவாத தலைவன், ஒரு குழந்தையாவது படித்து இந்த சூழலை விட்டு விலக வேண்டுமென்ற தவிப்புடன் ,கணவனுக்கு பயந்த தன் ஆசைகளையும் ,கனவையும் தன் முகத்தை மூடும் துப்பட்டாவின் பின்னால் மூடிவைக்கும் தீவிரவாதத் தலைவனின் மனைவியும், அமெரிக்க இராணுவத்தின்  தாக்குதலில் குடும்பமே அழிந்து போன பின் மகனை அவன் விருப்பப்படி படிப்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கலாம் என்று  தீவிரவாதத் தலைவன் அரற்றுவதும்...இயல்பாக இருந்ததை மறுக்க முடியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் தலைக்கு மேலே பறக்கும் விமானங்களையும், இராணுவ உடைகளையும், குண்டு வீச்சுகளையும், குண்டுவீச்சில் அழிந்து கிடந்த கிராமத்தையும் , அங்கு எரிந்து கருகிக் கிடந்த மக்களையும் படத்தில் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னாலும் ஈழத்தின் நினைவுகளோடு போராட வைத்து தூங்கவிடாமல் கரைச்சல்படுத்திக் கொண்டிருந்தன என்று சொன்னால் யாரும் நம்புவீர்களோ என்னமோ ஆனால் ஈழத்தமிழர்கள் யாராவது இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயம் நான் சொல்வதை நம்புவார்கள்...!


படம் பார்க்கும் முன்பு அமெரிக்காவில் படம் பார்த்துவிட்டு எழுதப்பட்ட மற்றவர்களின் விமர்சனங்களை படித்தேன் தம்பி கானா பிரபா அவர்களின் விமர்சனம் உட்பட....

படம் பார்த்த பின்பு மற்றவர்களின் விமர்சன வசனக்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை...கானா பிரபாவின் கடைசி வரிகளைத் தவிர...  
இங்கேதான் மேலே நான் சொன்ன என் வாழ்வில் கடந்து போன சிங்களப் பையன் லக்மால் ஐயும் துணைக்கு அழைக்கிறேன். ஆப்கானிஸ்தான் என்ன பாகிஸ்தான் என்ன அதையும் கடந்து இந்தியா, இலங்கை என எங்கிருந்து வந்தாலும் தாடி வைத்துத் தொப்பி வைத்த எந்த இஸ்லாமியனையும் தீவிரவாதி என்ற ஒரே முத்திரையோடு சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது. வெறுமனே படம் என்று ஒதுக்குமளவுக்கு கமல் போன்ற மூத்த படைப்பாளியின் இப்படியானதொரு படைப்பைக் கடந்து போய்விடமாட்டார்கள். படைப்பாளியின் சுதந்திரம் என்று என்னதான் நாம் தாராள மனம் கொண்டு இயங்கினாலும், இதே படைப்பு நேர்மை நாம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நியாயமாக ஒலிக்குமா என்பதே என் ஆதங்கம்.

தம்பி கானா பிரபா சொல்வது போன்ற மனநிலையில் இருப்பதால் தான் இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்றால் மூன்றாம் மனிதர்களாக தள்ளிநின்று அவர்களுக்காக பரிதாபப்படவும் அவர்கள் பக்கம் நின்று அவர்களை அரவணைக்கவும் மட்டும் போதாது. அவர்களுடைய அந்த மனநிலையை களைய வைக்க வேண்டிய கடமையும் ஒரே நாட்டுக்குள் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டுமென்ற இலக்கு இருக்கும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இருக்க வேண்டும்...அந்த கடமையை உணராமல் ஆதீக்க வெறியுடன் நடக்க முற்பட்டால் என்ன நடக்கும் என்று அனுபவித்த சிறுபான்மையினராக இருந்து என்னால் உணரமுடிகிறது..அதனால் தான் என்னால் கமலின் கருத்துரிமை என்ற ஒன்றைப் பார்க்கிலும் ஒரு சமூகத்தின் உணர்வுகளில் விழுந்துவிட்ட இரணம் சீழ் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமாக இருக்கிறது.  அந்த இரணத்தை ஆற்ற வேண்டுமென்ற  கடமையை மறந்துவிட்டு அந்த இரணத்தின் சீழை தமக்கு சாதகமாக்க முனையும் அரசியல்வாதிகள் விரட்டப்பட வேண்டியவர்கள்..எந்த வகையில் விரட்ட வேண்டுமென்ற தீர்வையும் இன்னொரு சினிமா மூலம்  தேடாமல் சுயசிந்தனையுடன் தேட வேண்டியது குடிமக்களின் கடமை.

மேலோட்டமாக இத்தனையும் விபரித்திருப்பது என் பார்வைக் கோணத்தில் கிடைத்த விஸ்வரூபம் மட்டுமே! உண்மையில் என்னுடைய அறிவுக்கு இதற்கு மேல் ஆராயமுடியவில்லை. ஒருவேளை இதை விட நுணுக்கமாக  காழ்ப்புணர்ச்சியோ அல்லது வெறுப்போ இருக்கிறதா என்று என்னால் கண்டுபிடிக்க இயலாதது எனது அறிவின்மையாக இருக்கலாம். ஆனாலும் நானும் என் கருத்தை பகிர்வதால் எந்த கேடும் வராது என்றே நம்புகிறேன்.

தவிர தமிழக மக்களிடம் உள்ள பெரிய குறைபாடு சினிமாவை ஒரு எண்டர்டெய்ண்ட்மெண்டாக பார்ப்பதில்லை. நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பிடுவதும் நடிகர்களை தலைவர்களாக தலைக்கு மேல் வைத்து கூத்தாடுவதும் தான்  இன்றைக்கு ஒரு ப்டத்தை பொழுது போக்காக பார்க்காமல் சமூகத்தை பிளக்கும் காரணியாக பார்க்கும் மனோபாவத்தை மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறது. அந்த மனோபாவத்தை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு திரையுலகமும் அரசியலும் இன்று உங்களையே பந்தாடுகின்றனர்.

ஹாலிவூட்டிலும் இதை விட மோசமாக இஸ்லாமிய இனத்தவரை சித்தரிக்கும் படங்களை எடுக்கிறார்கள். இந்தியர்களை கிண்டல் செய்து முழு நீளப்படமே எடுத்திருக்கிறார்கள்.. விடுதலைப் புலிகளை  பல படங்களில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களாக வசனங்களில் புகுத்தியிருக்கிறார்கள்...இந்துக்களை கேலி செய்திருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு உரிய இயேசு கிறிஸ்துவைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.. எல்சபெத் மஹாராணியை லெஸ்லி நெல்ஸன் என்ற நடிகர் தனக்குக் கீழே அகப்பட்டுக் கிடப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார் ஒரு படத்தில்.அப்படி மிகச் சுதந்திரமாக தமக்குத் தோன்றியதை  படமாக்கும் ஹோலிவூட் படங்களை... ஏன்  நம்மால் எதிர்க்க முடியவில்லை...?? அது இயலாத காரியம்

.கனக்க ஏன் சமீபத்தில் எகிப்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ இனத்தவர் எடுத்த படத்துக்கு எத்தனையோ போராட்டம் நடந்ததே...ஒபாமா வரை அந்த படத்தையிட்டு எச்சரிக்கை விடப்பட்டதே....என்ன பலன்?? ஒபாமாவும் சரி ஹாலிவூட்டும் சரி அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா??? இல்லை!

ஆனால்  யூ-டியூப் முதல் அகில உலகம் முழுக்க இன்று துள்ளாட்டம் ஆடும் gangnam style பாடல் அமெரிக்கர்களை கிண்டல் செய்யும் பாடலாம்.  ஒவ்வொரு நாளும்  அந்தப் பாடலை அமெரிக்காவின் அத்தனை வானொலியும், அத்தனை தொலைக்காட்சியும்  ஒலிபரப்பிக் கொண்டு தான் இருக்கிறன.. ஆனால் அந்தப் பாடலைப் பாடிய  பாடகர் ஒரு நாள் அமெரிக்கர்களிடம்  அந்தப் பாடலில் அவர் அவர்களை கிண்டல் செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். என்ன நடந்தது ஏது நடந்தது என்று விபரம் எனக்கு தெரியாது.

ஆக................Hollywood தரத்துக்கு படம் வேண்டும் என்று திரையுலகை எதிர்பார்க்கும் மக்கள் முதலில் தங்கள் இரசனையையும், அலட்சிய மனோபாவத்தையும்  அமெரிக்க மக்கள் மாதிரி் தமக்குள் வளர்த்திருக்க வேண்டும். திரைப்படத்துறையை அங்கே வெறும் எண்டர்டெய்ன்மெண்ட் மீடியாவாக மட்டுமே பார்கிறார்கள். ஆனால் எங்களவர்கள் தான் சமூகப் போராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சினிமாவை பார்த்து மறுமலர்ச்சி அடைகிறார்கள். சினிமா நடிகர்களை தேவ தூதர்களாகவும், மீட்பராகவும் வணங்குகிறார்கள்.  இத்தனை காலத்தில் பெரியார் வழியில் போனவர்களைப் பார்க்கிலும் ரஜனிக்கு பின்னால் போனவர்கள் தானே அதிகம்??? -கனக்க ஏன் பெரியாரின் கருத்துகள் கூட சினிமா மூலம் தானே பரப்பப்பட வேண்டியதாயிருந்தது...??

என்னுடைய மனநிலையை நான் இன்னும் விரிவாக சொன்னால் என் மீது அன்பு வைத்திருக்கும் குழும சகோதரர்கள் பலருக்கு என் மேல் வெறுப்பு வரக் கூடும்..ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை... நான் சினிமாவை வெறும் கூத்தாகவும் நடிகர் நடிகைகளை கூத்துக் கட்டுபவர்களாகவும் மட்டுமே பார்க்கிறேன். அதனாலேயே சினிமா நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதை கேலிக்குரியதாகவும், அவர்களையும் அவர்கள் மேடைகளில் பேசுவதை யும் ஒரு பொருட்டாக எடுக்கவும் விரும்புவதில்லை.. என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசும் குழும சகோதரர்களுக்கு கூட தெரியும் சமீபத்தில் ஈழ விவகாரத்தில் வீர வசனம் பேசும் நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் நான் எந்தளவுக்கு வெறுக்கிறேன் என்று.....

என்னை கமலோ ரஜனியோ அல்லது மற்ற நடிகர் நடிகைகளோ தங்கள் படத்தில் சொல்லும் கருத்துகளால் மாற்றிவிட முடியாது. ஈர்க்கவும் முடியாது. நான் சார்ந்திருக்கும் எதையும், நான் விரும்பும் எவரையும் இவர்களால் என்னிடமிருந்து பிரிக்க முடியாது. இவர்களை நான் என்றைக்கும் கொண்டாடப் போவதில்லை. இவர்கள் எனக்கு யாரோ ஒரு மூன்றாவது நபர்களே...வெறும் அரிதாரம் பூசும் கூத்துக் கட்டும் கலைஞர்கள்...எனக்கு போரடிக்கும் போது இவர்களுடைய கூத்துகளை  போட்டுப் பார்க்கிறேன். அவ்வளவே....!

அதனால் இவர்கள் என்னையோ என் உணர்வுகளையோ காயப்படுத்த முடியாது.  அந்த விசயத்தில் சினிமாவை நான் வென்றவள்..!

இந்தப் படத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களும் ,தடைகளும், கோர்ட் வழக்குகளும் இல்லாமல் இருந்திருந்தால் 10 நாட்கள் கூட திரையரங்குகளில் தங்கியிருந்திருக்குமா என்பது சந்தேகமே.... ஏன் எனில் இந்த படத்தின் தொழில்நுட்பம் முதல் தயாரிப்பு வையிலான உயரக தராதரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் தமிழக சினிமாரசிகர்களின் பெரும்பான்மையிடம் இருக்குமா என்பது  கேள்விக்குறி. வழமையான தென்னிந்திய திரைப்படங்களின்  பெண்களை  கவர்வதற்கான  சென்டிமென்ட் காட்சிகளோ , கண்ணீர் மல்கும் இடங்களோ அல்லது  காலரி டிக்கட் வரிசைகளை நிரப்பிக் கொன்டு தமது அபிமான நடிகர்களுக்கு ஆரத்தி காட்டும் அப்பாவி ரசிகர்களுக்கான வழமையான தமிழ் படத்தின் எந்தவொரு  சாயலும்  இல்லாத ஒரு ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங் என்று சொல்லுமளவுக்கு படம் இருக்கிறது. இந்தியாவின் எந்தப் பாகமும் ஊரும் மக்களும் இந்தப் படத்தின் முக்கிய அம்சங்கள் இல்லை . முழுக்க முழுக்க  தலிபான், அல்கொய்தா , ஆப்கானிஸ்தான் என்று அத்தனையும் இந்தியாவுக்கு வெளியால் இருக்கும் ஆனால் உலகை அச்சுறுத்தும்  பயங்கரவாதத்தை பற்றிய கதைக் களமும்,  படமும் தான் இது!!  இன்னும் சொல்லப் போனால் பிளாஸ்மா டிவி , 3டி டிவி என்று அகன்ற டிவிகளுடன் வீட்டிலேயே  போஸ் போல் நல்ல சவுன்ட் ஸிஸ்டங்களுடன் இருக்கும் மேல்தட்டு வர்க்க மக்கள் கூட டிவிடி வரட்டு வீட்டிலேயே அகன்ற திரையில் பார்த்துவிடலாம் என்று தட்டிக் கழித்துவிட்டுப் போகக் கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் தவிர்த்து இன்று இந்தப் படத்தை ஊர் விட்டு ஊர் போயாவது போய் பார்க்க வேண்டுமென்ற அளவுக்கு மக்களை வெறி கொள்ள வைத்தவை படத்தின் கதையோ கமலோ அல்ல. தமிழ அரசின் தடை மட்டுமே!!  கமலுக்கு  கெட்டதிலும் நல்லது நடந்திருக்கிறது. அதை மறைமுகமாக எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டங்களும் தடையும்  வழங்கியிருக்கிறது. :) 

பிற்குறிப்பு: என்னவரிடம் படம் முடிந்ததும் அபிப்பிராயம் கேட்டேன் “படம் எப்படி..?” என்று..மிகவும் அசதியுடன் கேட்டார் ”நீங்கள் என்ர நித்திரையைக் கெடுத்து என்ன  அல்கொய்தா ட்ரெயினிங் காட்டவா கூட்டி வந்தனியள்?”  என்றார். அப்போது தான் புரிந்தது எந்தவித சார்பும் இல்லாத, சினிமா அதிகம் பார்க்காத, சினிமாவினதும் அரசியல் கட்சிகளினதும் சூழ்ச்சி அரசியல் புரியாத அப்பாவியான என்னவரை பலவந்தப்படுத்தி இந்தப் படத்தை பார்க்க வைத்த பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் என்னை சும்மா விடாது...என்று,,!  :) இப்போது அதற்காக மட்டுமே கவலைப்படுகிறேன். :)




Latest News: விஸ்வரூபத்தை வெளியிட முஸ்லீம் பேரவை வேண்டுகோள்!

meena muthu

unread,
Jan 31, 2013, 8:02:46 AM1/31/13
to vallamai
 தூள்...! 

லைக் லைக் லைக் எத்தனை லைக் போடட்டும் ஸ்வாதி :))

2013/1/31 Swathi Swamy <mswat...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jan 31, 2013, 8:41:40 AM1/31/13
to vall...@googlegroups.com
நடுநிலை.

>என்னுடைய மனநிலையை நான் இன்னும் விரிவாக சொன்னால் என் மீது அன்பு வைத்திருக்கும் குழும சகோதரர்கள் பலருக்கு என் மேல் வெறுப்பு வரக் கூடும்..

நாமும் இன்னும் வளரணும்.

உங்களோடு நட்பாக இருக்கணுமுனா உங்க கருத்துகளை அப்படியே ஒத்துக்கிடணும் என்பது நம் மந்திரம்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Jan 31, 2013, 2:58:30 PM1/31/13
to vall...@googlegroups.com
On Thursday, January 31, 2013 4:35:37 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:

/// தமிழக மக்களிடம் உள்ள பெரிய குறைபாடு சினிமாவை ஒரு எண்டர்டெய்ண்ட்மெண்டாக பார்ப்பதில்லை. நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பிடுவதும் நடிகர்களை தலைவர்களாக தலைக்கு மேல் வைத்து கூத்தாடுவதும் தான்  இன்றைக்கு ஒரு ப்டத்தை பொழுது போக்காக பார்க்காமல் சமூகத்தை பிளக்கும் காரணியாக பார்க்கும் மனோபாவத்தை மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறது. அந்த மனோபாவத்தை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு திரையுலகமும் அரசியலும் இன்று உங்களையே பந்தாடுகின்றனர்.///

மிகவும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள், நல்ல அலசல். நன்றி.

..... தேமொழி


Tulsi Gopal

unread,
Jan 31, 2013, 3:50:47 PM1/31/13
to vall...@googlegroups.com
ஸ்வாதி,

ஹைய்யோ!!!!!!  

சினிமாவை சினிமாவாப் பார்க்கவோ நினைக்கவோ தெரியலைப்பா நம்ம மக்காளுக்கு. அதுதான் பிரச்சனை:(

'மக்கள்(??) விரும்புகிறார்கள்( !!) என்று சொல்லி நாலு ஃபைட், அஞ்சு டூயட் அதில் மூணு வெளிநாட்டு ஷாப்பிங் மால்களிலும் தெருக்களிலும் எடுத்தவை.  கதாநாயகன்கூடவே ஒட்டிக்கிட்ட காமெடி நடிகர், கூடவே செண்டிமெண்ட் போட்டுத் தாளிச்சதையும் அப்படியே அச்சு அசலா நம்பும் கூட்டம். இது.

என்ன செய்ய?  எல்லாம் விதி இப்படி விஸ்வரூபம்  எடுத்து விளையாடுது.

எங்கூர்லே  இன்றைக்கோ இல்லை நாளைக்கு ஹிந்தி விஸ்வரூபம்  ரெண்டு ஷோ போட உத்தேசமாம். போலாமா வேண்டாமான்னு  இருக்கேன். 



2013/2/1 Swathi Swamy <mswat...@gmail.com>





குறை சொல்ல முடியாத முதல் பிரமிப்பு காமிரா தான்...
ஆப்கானின் அடர்ந்த நெடிய மலைத்தொடர்களும்...பாலை மணல்வெளியும் அப்பப்பா..............ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் தோன்றி மறையும் உணர்வைத் தந்தது என்றால் மிகையாகாது. அதே போல் அமெரிக்க இராணுவத்திற்கும் அல்கொய்தாவினருக்குமிடையிலான போர் காட்சிகளும், வெடித்துச் சிதறும் கிராமம், மனிதர்கள், NYPD யின் கார் சேஸிங்குக்கும் என்ன சொல்வதென்றே தெர்யவில்லை..அத்தனை  சிறப்பு.. மனுஷன் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் .

அதுவும்  24 மணி நேரமும் எந்த நிமிடம் எங்கு குண்டு வெடிக்கும் எங்கு ஆயுதங்கள் வெடிக்கும் என்று சொல்ல முடியாத பயங்கரவாதமும், ஆயுதப் போராட்டமும் நடக்கும் ஒரு மண்ணில் அந்த மண்ணில் நடக்கும் காட்சிகளையே படம் எடுப்பது என்பது எத்தனை ரிஸ்கான விசயம் ???  உண்மையிலேயே ஆப்கானிஸ்தானில் தான் இவை படமாக்கப்பட்டனவா???? அல்லது ஏதும் கம்பியூட்டர் கிராபிக்கா அல்லது இந்தியாவின் ஏதேனும் பகுதிகளா...?? என்று எனக்கு தெரியாது.

இரண்டாவது கமலின் அந்த  கதக் நடன பாட்டு. அந்தப் பாட்டு எடுக்கப்பட்ட விதம் இணையத்தளத்தில் பார்த்த போது உண்மையிலேயே கமல் மீது பரிதாபம் வந்தது..ஒரு பாட்டுக் காட்சியை நிறைவாக எடுக்க இந்த மனுஷன் எத்தனை விதமான முயற்சிகள், ஈடுபாடு, களைப்பு என்று எத்தனையை எல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது. அத்தனையும் ஒரு 4 நிமிஷம் வருமா அந்தப் பாடல்...?? அத்தனை எத்தனிப்பும் உழைப்பும் அந்த 4 நிமிஷத்தை மனதில் அழுத்தமாக பதித்துவிட்டு தான் போகும் எதிரிகளுக்கு கூட...முகத்தில் ததும்பும் சிங்காரரசம் உண்மையான பெண்ணுக்கே வருமா என்று சந்தேகம் வர வைக்கிறது..அப்பப்பா...


என்றும் அன்புடன்,
துளசி

காமேஷ்

unread,
Jan 31, 2013, 8:12:41 PM1/31/13
to vall...@googlegroups.com, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், தமிழ் வாசல்
அட்சய பாத்திரம் கேட்டிருக்கேன்..
இதென்ன அட்சய ஈமெயிலா படிக்க படிக்க வந்திட்டே இருக்கே.. 
இந்த மெயில் முடிவை யாராவது படிச்சீங்களா ?

30 நிமிசம் படித்ததை வைத்து

நீங்க விஸ்வரூபாம் படம் பாத்தீட்டீங்கன்னு தெரியுது.
.........................



2013/1/31 Swathi Swamy <mswat...@gmail.com>

Swathi Swamy

unread,
Feb 1, 2013, 6:17:41 AM2/1/13
to mutht...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் பிரவாகம், பண்புடன், தமிழ் வாசல்
நான் உண்மைத்தமிழனின் ரசிகை....

Swathi Swamy

unread,
Feb 1, 2013, 6:32:58 AM2/1/13
to mutht...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் பிரவாகம், பண்புடன், தமிழ் வாசல்


2013/1/31 காமேஷ் <kame...@gmail.com>

அட்சய பாத்திரம் கேட்டிருக்கேன்..
இதென்ன அட்சய ஈமெயிலா படிக்க படிக்க வந்திட்டே இருக்கே.. 

நான் உண்மைத் தமிழன் அவர்களின் இரசிகை காமேஷ்... ! எனக்கு சின்னதா எழுதவே வருதில்லை நான் என்ன செய்யட்டும்?? :/

 


PRASATH

unread,
Feb 2, 2013, 1:55:31 PM2/2/13
to vallamai, பண்புடன், தமிழ் வாசல்
வாழ்த்துகள் அக்கா...

படத்தைப் பார்த்த திருப்தி உங்கள் விமர்சனத்தில் கண்டேன்...

நடுநிலையான விமர்சனமாகவே எனக்குப் படுகிறது... படம் பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன் நானும்...


2013/1/31 Swathi Swamy <mswat...@gmail.com>


shylaja

unread,
Feb 2, 2013, 8:29:35 PM2/2/13
to vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் வாசல்
சுவாதி  நல்ல அலசல் உங்க விமர்சனம்..ஆனா ஆயிரம்தான் சொல்லுங்க நான் கமல் ரசிகை அதனால் படம் பார்க்கப்போறேன் ஆனா தெரியாத்தனமா என் பதியிடம் உங்க விமர்சனத்தைக்காட்டிவிட்டேன் ‘இனியும் போயாகணுமா?’ என்று முறைக்கிறார்!:):)

2013/2/3 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
SHYLAJA
 

துரை.ந.உ

unread,
Feb 2, 2013, 8:50:29 PM2/2/13
to panb...@googlegroups.com, வல்லமை, mutht...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் பிரவாகம்
வாழ்க அக்கா ... மாற்றுக் கோணம்,,புதிய பார்வை 

 நல்லா இருக்கு நடை  

2013/2/2 Srimoorthy.S <srimoo...@gmail.com>

கட்டுரை பெருசுன்னு பின்னாடி வந்தவங்க மடல் பாத்துதான் தெரிஞ்சிகிட்டேன்.
படிக்க படிக்க கலந்துட்டேன்.
நேர்க்கோட்டு விமர்சனமா சுலபமாக புரியறாப்ல சொல்லியிருக்கீன்ங்க

போகிற போக்கில் தமிழர்களையும், தென்னிந்தியர்களையும் அவமானப்படுத்தும்விதமாக எழுதியதற்கு இந்த இழையை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்


‘ஆபாச’ தலைக்குப் பிடிக்கலியா ??
ஓகாட் ..அப்போ எனக்கும் பிடிக்கலை ..
ஏ த.அரசே ... ஆவன் செய் 
 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

துரை.ந.உ

unread,
Feb 2, 2013, 8:52:49 PM2/2/13
to vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் வாசல்


2013/2/3 shylaja <shyl...@gmail.com>

சுவாதி  நல்ல அலசல் உங்க விமர்சனம்..ஆனா ஆயிரம்தான் சொல்லுங்க நான் கமல் ரசிகை அதனால் படம் பார்க்கப்போறேன் ஆனா தெரியாத்தனமா என் பதியிடம் உங்க விமர்சனத்தைக்காட்டிவிட்டேன் ‘இனியும் போயாகணுமா?’ என்று முறைக்கிறார்!:):)

அவங்க அவங்க கவலை அவங்க அவங்களுக்கு ..
(படம் பார்க்கும் போர்வையில் ரொம்பக் கொடுமைப் படுத்தப் படுகிறார் எங்கள் மாமா என்று காஜியின் உளவுத்துறை குறிப்புகள் கூறுகிறது ) 


2013/2/3 PRASATH <pras...@gmail.com>
வாழ்த்துகள் அக்கா...

படத்தைப் பார்த்த திருப்தி உங்கள் விமர்சனத்தில் கண்டேன்...

நடுநிலையான விமர்சனமாகவே எனக்குப் படுகிறது... படம் பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன் நானும்...


2013/1/31 Swathi Swamy <mswat...@gmail.com>


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
SHYLAJA
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

துரை.ந.உ

unread,
Feb 2, 2013, 10:20:48 PM2/2/13
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, வல்லமை, தமிழ் வாசல், தமிழ் பிரவாகம்


2013/2/3 Srimoorthy.S <srimoo...@gmail.com>

குகச ரசிகரே,
தங்கள் பாசம் கண்டு மெய் சிலிர்த்தோம்.


'ஆபாச’த்தலைவரே ..மிக நன்றி 

( மெய் சிலிர்த்தலும் , புல்லரித்தலும் ஒன்றா ?
#டவுட்டு)

வேந்தன் அரசு

unread,
Feb 2, 2013, 11:08:46 PM2/2/13
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் பிரவாகம்
விசுவரூபத்தை அமெரிக்கா தடை செய்ய வேண்டும்.

எங்கள் அண்ணன் ஜார்க் புஸ் படத்தை அல்கொய்தா சுட்டு பழகுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒன்றுக்கு இரு முறை காட்டு எங்கள் மனதை புண்படுத்திவிட்டார்.

நான் தமிழன் என்றாலும் முதலில் அமெரிக்கன். வெள்ளை அமெரிக்கன் இந்த காட்சியை பார்த்தால் எம்மை இகழ்வாரே?

Swathi Swamy

unread,
Feb 2, 2013, 11:26:17 PM2/2/13
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் பிரவாகம்
நானும் அதை சொல்ல வேண்டுமென்று  மனதுக்குள் உருப்போட்டு வைத்திருந்தேன்,, கட்டுரையில் குறிப்பிட எப்படியோ மறந்துவிட்டேன். நன்றி ஐயா...சுட்டிக் காட்டியதற்கு...........................

அந்தக் காட்சியை  புஷ் பார்த்திருந்தால் கூட சிரித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.
ஈராக்கில் ஒரு பத்திரிகையாளர்  செருப்பைக் கழற்றி புஷ் மீது வீசியதற்கே " அந்த செருப்பைப் பற்றி எதுவும் தெரியவில்லை...சைஸ் 10 என்பதை தவிர" என்று காமெண்டினவராச்சே....   :) 


2013/2/2 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Swathi Swamy

unread,
Feb 3, 2013, 10:51:03 AM2/3/13
to தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், தமிழ் வாசல், vallamai

2013/1/31 Swathi Swamy <mswat...@gmail.com>

கமல் ஏதாவது படத்தில் எந்த மதத்தையாவது கிண்டல் செய்தே தீருவேன் என்று இருக்கிறாரோ என்னமோ ....இந்தப் படத்தில் பிராமணப் பெண்ணான தன் மனைவிக்கு கோழி ரோஸ்ட் மிகவும் பிடிக்கும் என்று சமைப்பதும் அதை ருசி பார்க்கச் சொல்லி தன் கதக் நடன மாணவி ஒருவரைப் பார்த்து “பாப்பாத்தியம்மா முதல்ல நீயே டேஸ்ட் பண்ணிப் பார்த்து உப்பு காரம் போதுமான்னு சொல்லு” என்று சொல்வதையும் வைத்து இந்துமதத்தையும் பிராமணர்களையும் கிண்டல் பண்ணியதற்காக அடுத்ததாக RSS இயக்கத்தினரோ அல்லது பாஜக வோ கோர்ட் வாசல் படி ஏறினால் கமல் என்ன செய்வாரோ தெரியவில்லை...!

நான் நினைத்த மாதிரியே நடந்துவிட்டது...பரவாயில்லை நான் கூட சரியாக யூகிக்கத்தொடங்கிவிட்டேன் போலிருக்கு.....  !!

விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது : கமலுக்கு எதிராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம் 


வேந்தன் அரசு

unread,
Feb 3, 2013, 10:51:56 AM2/3/13
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் பிரவாகம்


2 பிப்ரவரி, 2013 11:26 PM அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:

நானும் அதை சொல்ல வேண்டுமென்று  மனதுக்குள் உருப்போட்டு வைத்திருந்தேன்,, கட்டுரையில் குறிப்பிட எப்படியோ மறந்துவிட்டேன். நன்றி ஐயா...சுட்டிக் காட்டியதற்கு...........................

அந்தக் காட்சியை  புஷ் பார்த்திருந்தால் கூட சிரித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.
ஈராக்கில் ஒரு பத்திரிகையாளர்  செருப்பைக் கழற்றி புஷ் மீது வீசியதற்கே " அந்த செருப்பைப் பற்றி எதுவும் தெரியவில்லை...சைஸ் 10 என்பதை தவிர" என்று காமெண்டினவராச்சே....   :) 


ஐயன் திருவள்ளுவன் களவு செய்யாதே என்பார். ஆனால் செய்தால் செய்தவன் கையை வெட்டு என்று சொல்லலை. அவருக்கு அறிவுரை மேல் நம்பிக்கை இருந்தது. தண்டனைமேல் இல்லை. ஆனால் இறைவனுக்கோ அறவுரையை விட தண்டனை மேல்தான் அதிக நம்பிக்கை.

நாம் ஒரு தப்பு செய்தால் இறைவன் பார்த்துக்குவான் என்று நம்புவோம்
ஆனால் சிலர் இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் தாமே நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் சாற்றுவதும் பீற்றுவதும் தாம் இறைஅடியார் என்று.

வேந்தன் அரசு

unread,
Feb 3, 2013, 10:53:49 AM2/3/13
to vall...@googlegroups.com, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், தமிழ் வாசல்


3 பிப்ரவரி, 2013 10:51 AM அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:




நான் நினைத்த மாதிரியே நடந்துவிட்டது...பரவாயில்லை நான் கூட சரியாக யூகிக்கத்தொடங்கிவிட்டேன் போலிருக்கு.....  !!

விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது : கமலுக்கு எதிராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம் 



அது சும்மா. யாரையோ கிண்டல் செய்வதற்காக.

 

Hari Krishnan

unread,
Feb 3, 2013, 8:50:13 PM2/3/13
to vallamai

2013/2/3 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ஐயன் திருவள்ளுவன் களவு செய்யாதே என்பார். ஆனால் செய்தால் செய்தவன் கையை வெட்டு என்று சொல்லலை. அவருக்கு அறிவுரை மேல் நம்பிக்கை இருந்தது. தண்டனைமேல் இல்லை. ஆனால் இறைவனுக்கோ அறவுரையை விட தண்டனை மேல்தான் அதிக நம்பிக்கை.


அவருக்கு தண்டனைமேல் நம்பிக்கை இருந்தது.  அதனால்தான்

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்

--என்று சொன்னார்.

இதற்கு உரையாக ஆங்கிலத்தில்,

The king who punishes wicked men with death is a farmer weeding the tender crops என்றும்,

தமிழில்

அரசன் மிகக் கொடியவர்களைக் கொலைத் தண்டனை கொடுத்துத் தண்டித்தல், உழவன் பயிர் வளர்வதற்காகக் களைகளை வெட்டி நீக்குவதற்குச் சமமாகும்.  அது குற்றமாகாது.

என்றும் (அந்தக் காலத்தில்) ஹூஸ்டனைச் சேர்ந்த உயர்திரு நாக கணேசன் அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ள ‘தமிழ் மறை திருக்குறள்--தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு’ உரை கண்டிருக்கிறது.

:)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

வேந்தன் அரசு

unread,
Feb 3, 2013, 9:10:34 PM2/3/13
to vall...@googlegroups.com


3 பிப்ரவரி, 2013 8:50 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/3 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஐயன் திருவள்ளுவன் களவு செய்யாதே என்பார். ஆனால் செய்தால் செய்தவன் கையை வெட்டு என்று சொல்லலை. அவருக்கு அறிவுரை மேல் நம்பிக்கை இருந்தது. தண்டனைமேல் இல்லை. ஆனால் இறைவனுக்கோ அறவுரையை விட தண்டனை மேல்தான் அதிக நம்பிக்கை.


அவருக்கு தண்டனைமேல் நம்பிக்கை இருந்தது.  அதனால்தான்

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்

--என்று சொன்னார்.

இதற்கு உரையாக ஆங்கிலத்தில்,

The king who punishes wicked men with death is a farmer weeding the tender crops என்றும்,

தமிழில்

அரசன் மிகக் கொடியவர்களைக் கொலைத் தண்டனை கொடுத்துத் தண்டித்தல், உழவன் பயிர் வளர்வதற்காகக் களைகளை வெட்டி நீக்குவதற்குச் சமமாகும்.  அது குற்றமாகாது.

என்றும் (அந்தக் காலத்தில்) ஹூஸ்டனைச் சேர்ந்த உயர்திரு நாக கணேசன் அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ள ‘தமிழ் மறை திருக்குறள்--தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு’ உரை கண்டிருக்கிறது.

:)


ஒறுத்தல் என்றால் தண்டித்தல் மட்டுமே. அதை கொலைதண்டனை என கொள்வது பொருந்தாது

ஒறுத்தாருக்கு ஒரு நாளை இன்பம்

குற்றம் தண்டிக்கபடவேண்டியதுதான். ஆனால் தண்டனையின் அளவை ஐயன் குறிப்பிடலை

வரைவின் மகளிருக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் கள் விற்போருக்கும், அருந்துவோர்  சூதாடுபவருக்கும் என்ன தண்டனை?

ஆழ்ந்து நோக்கின், வள்ளுவர் இந்த தொழில் செய்பவரை கண்டிக்கவே இல்லை. அவர்களின் வாடிக்கையாளரையே கண்டிப்பார்.
 

Hari Krishnan

unread,
Feb 3, 2013, 9:15:15 PM2/3/13
to vallamai

2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ஒறுத்தல் என்றால் தண்டித்தல் மட்டுமே. அதை கொலைதண்டனை என கொள்வது பொருந்தாது

ஒறுத்தாருக்கு ஒரு நாளை இன்பம்

எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் வேந்தன் அவர்களே.  ஒறுத்தல் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு நிற்காமல், அதனை, ‘கொலையின்’ என்பதனோடு கொண்டு கூட்டுங்கள்.  கொலையில் ஒறுத்தல்.  கொலை தண்டனை வழங்குதல்.  இல்லையென்றால், கொலையின் என்ற சொல்லுக்கு இந்தக் குறளில் என்ன வேலை இருக்க முடியும்?  ஏன் இந்தச் சொல்லையும் சேரத்திருக்கிறார்?

திரித்துப் பொருள் சொல்லிக் கொண்டிருந்தவர் வெளியிட்ட பதிப்பே சரியான பொருளைச் சொல்லும்போது, எதற்காக ‘திரித்துத் திரித்து என்னைச் சிறையிலிட்டாய்’ என்று கீறல் விழுந்த ரெகார்டை ஓட்டிக் கொண்டிருப்பது சொல்லுங்கள். :)

வேந்தன் அரசு

unread,
Feb 3, 2013, 9:28:26 PM2/3/13
to vall...@googlegroups.com


3 பிப்ரவரி, 2013 9:15 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஒறுத்தல் என்றால் தண்டித்தல் மட்டுமே. அதை கொலைதண்டனை என கொள்வது பொருந்தாது

ஒறுத்தாருக்கு ஒரு நாளை இன்பம்

எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் வேந்தன் அவர்களே.  ஒறுத்தல் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு நிற்காமல், அதனை, ‘கொலையின்’ என்பதனோடு கொண்டு கூட்டுங்கள்.  கொலையில் ஒறுத்தல்.  கொலை தண்டனை வழங்குதல்.  இல்லையென்றால், கொலையின் என்ற சொல்லுக்கு இந்தக் குறளில் என்ன வேலை இருக்க முடியும்?  ஏன் இந்தச் சொல்லையும் சேரத்திருக்கிறார்?

திரித்துப் பொருள் சொல்லிக் கொண்டிருந்தவர் வெளியிட்ட பதிப்பே சரியான பொருளைச் சொல்லும்போது, எதற்காக ‘திரித்துத் திரித்து என்னைச் சிறையிலிட்டாய்’ என்று கீறல் விழுந்த ரெகார்டை ஓட்டிக் கொண்டிருப்பது சொல்லுங்கள். :)



எனக்கு உடன்பாடு இல்லை ஐயா

கொலைகளில் கொடியவர் என்றுதான் நான் கொள்வேன். அவர்களை அரசன் தண்டிப்பான்.
 மற்ற குற்றங்களை ஊர் பஞ்சாயத்து தீர்வு செய்யும்
 
கொலையில் ஒறுத்தல் என்ற சொல்லாட்சி விந்தையாக இருக்கு

 அரசன் செய்வதை கொலை என்று சொல்லுவாரா?

சாகும் வரை தூக்கு என்றுதானே தூக்கு தண்டனை என்றுதானே சட்டம்
சாகும் வரை கொலை?


Hari Krishnan

unread,
Feb 3, 2013, 9:29:56 PM2/3/13
to vallamai
2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
எனக்கு உடன்பாடு இல்லை ஐயா

கொலைகளில் கொடியவர் என்றுதான் நான் கொள்வேன். அவர்களை அரசன் தண்டிப்பான்.
 மற்ற குற்றங்களை ஊர் பஞ்சாயத்து தீர்வு செய்யும்

அப்படியானால், இந்தக் குறளில் கொலையிற் என்ற சீர் என்ன வேலையைச் செய்கிறது என்பதை விளக்குங்கள்.

வேந்தன் அரசு

unread,
Feb 3, 2013, 9:45:03 PM2/3/13
to vall...@googlegroups.com


3 பிப்ரவரி, 2013 9:29 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
எனக்கு உடன்பாடு இல்லை ஐயா

கொலைகளில் கொடியவர் என்றுதான் நான் கொள்வேன். அவர்களை அரசன் தண்டிப்பான்.
 மற்ற குற்றங்களை ஊர் பஞ்சாயத்து தீர்வு செய்யும்

அப்படியானால், இந்தக் குறளில் கொலையிற் என்ற சீர் என்ன வேலையைச் செய்கிறது என்பதை விளக்குங்கள்.

கொலையில் கொடியவர்   என்ற நேரடி பொருள்  கொள்வேன். திருக்குறளில் கொண்டு கூட்டல் தேவை இல்லை.

Hari Krishnan

unread,
Feb 3, 2013, 10:06:12 PM2/3/13
to vallamai
2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
திருக்குறளில் கொண்டு கூட்டல் தேவை இல்லை.

திருக்குறளில் கொண்டுகூட்டுப் பொருள்கோளுக்குத் தேவை இல்லை என்று சொல்வது, ஒன்று திருக்குறளைச் சரியாகப் பயிலாமையாக இருக்க வேண்டும்.  அல்லது முரட்டுப் பிடிவாதமாக இருக்க வேண்டும்.  

ஒருவருக்குதான் முரட்டுப் பிடிவாதம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். :)

வேந்தன் அரசு

unread,
Feb 3, 2013, 10:12:56 PM2/3/13
to vall...@googlegroups.com


3 பிப்ரவரி, 2013 10:06 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
திருக்குறளில் கொண்டு கூட்டல் தேவை இல்லை.

திருக்குறளில் கொண்டுகூட்டுப் பொருள்கோளுக்குத் தேவை இல்லை என்று சொல்வது, ஒன்று திருக்குறளைச் சரியாகப் பயிலாமையாக இருக்க வேண்டும்.  அல்லது முரட்டுப் பிடிவாதமாக இருக்க வேண்டும்.  

இரண்டுமே ஐயா.

அதுமட்டும் அல்லாது பெரிய மனதும் இல்லை
தவறை ஒத்துக்கொள்வது பெரிய மனசு அல்லவா?

கமஞ்சூல் மாமழையில் உப்பு தெளித்தால் மாரி பொழியுமாமே! அதை செய்வது நம் வழக்கம்.

Nagarajan Vadivel

unread,
Feb 4, 2013, 2:03:58 AM2/4/13
to vallamai
கமல் சொந்த வழ்க்கையில் மது அருந்துவதில்லை மாமிச உணவில்கொழி தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை

நாகராசன்


2013/2/3 Swathi Swamy <mswat...@gmail.com>

செல்வன்

unread,
Feb 4, 2013, 2:10:54 AM2/4/13
to vall...@googlegroups.com
பைங்கூழ் களைகட்டலொடு நேர்

கொலையின் கொடியோரை மனிதர்களாகவே வள்ளுவர் கருதவில்லை. மனிதர்களை பயிர்களுடன் ஒப்பிடுகிறார். கொடியோரை களைக்கு ஒப்பிடுகிறார்.(he de-humanizes them) 

ஆக இங்கு கூறப்படும் தண்டனை மரணதன்டனையே ஆகும்



--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



வேந்தன் அரசு

unread,
Feb 4, 2013, 7:03:15 AM2/4/13
to vall...@googlegroups.com, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், தமிழ் வாசல்

கமல் விசுவரூபத்தில் காட்டி்ய தொழில் நுணுக்கம்: He is ahead of his time. We are too dumb to appreciate his work.

15 கிராமில் 3 கமெராக்களுடன் உளவு ஹெலிகொப்டர் கண்டுபிடிப்பு [ திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 08:37.35 மு.ப GMT ] ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களுக்கெதிரான போரில், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் உளவு ஹெலிகொப்டரை ஈடுபடுத்த பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. 8 அங்குல நீளம் கொண்ட இந்த உளவு ஹெலிகொப்டரின் எடை வெறும் 15 கிராம் தான் என்றபோதும் அதன் மூக்கு பகுதியில் உள்ள சக்திவாய்ந்த 3 கமெராக்கள், எதிரியின் இலக்கை வெகு துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும் திறன்கொண்டவை. ஜி.பி.எஸ். கருவி மற்றும் ‘ஜாய் ஸ்டிக்’ உதவியுடன் இயங்கும் இந்த உளவு ஹெலிகொப்டருக்கு ‘பிளாக் ஹார்னட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹெலிகொப்டர், எதிரி இலக்கின் மீது பறக்கும் போது யாராலும் கண்டுபிடிக்கவோ ஓசையை கேட்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வேந்தன் அரசு

unread,
Feb 4, 2013, 7:08:18 AM2/4/13
to vall...@googlegroups.com


3 பிப்ரவரி, 2013 10:06 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
திருக்குறளில் கொண்டு கூட்டல் தேவை இல்லை.

திருக்குறளில் கொண்டுகூட்டுப் பொருள்கோளுக்குத் தேவை இல்லை என்று சொல்வது, ஒன்று திருக்குறளைச் சரியாகப் பயிலாமையாக இருக்க வேண்டும்.  அல்லது முரட்டுப் பிடிவாதமாக இருக்க வேண்டும்.  

ஒருவருக்குதான் முரட்டுப் பிடிவாதம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். :)



ஹரி ஐயா

இங்கே இரண்டு பேர் கருத்தாடல் செய்கிறோம். நீங்க முதலில் சொல்லிட்டீங்க. அதனால் நான் சொல்ல  முடியலே.


1. கொடியவர் என்றால் யார்?
2. ஒறுத்தல் என்ற சொல்லை இடாமல் கொன்றொழித்தல் என வள்ளுவர் சொல்லி இருக்கலாமே?
3. களை எடுத்தல் என்றால் கொல்லுதல் மட்டுமன்றி நாடுகடத்தல் ஆயுள் சிறை என சமுதாயத்தில் இருந்து களையும் தண்டனைகளும் உள்ளனவே

 

செல்வன்

unread,
Feb 4, 2013, 11:00:28 AM2/4/13
to vall...@googlegroups.com
2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
3. களை எடுத்தல் என்றால் கொல்லுதல் மட்டுமன்றி நாடுகடத்தல் ஆயுள் சிறை என சமுதாயத்தில் இருந்து களையும் தண்டனைகளும் உள்ளனவே


நாடு கடத்துவது அரசியல் கைதிகளுக்கு தான்.

களையை என்ன செய்து வயலில் இருந்து அகற்றுவீர்கள்? அகற்றுகையில் அது அழிந்தால் வருத்தபடுவீர்களா? குற்ரவாளி உயிருக்கு களைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தான் வள்ளுவர் அளிக்கிறார். அதை போட்டு எரித்தாலும் குற்றமில்லை.

குற்றவாளிகளை பயிர் என்ற கணக்கில் சேர்க்காமல் களை என்ற பட்டியலில் சேர்த்து de-humanize செய்கிறார் வள்ளுவர். களையை என்ன செய்தாலும் பிரச்சனை இல்லை. கொல்லுதல் உட்பட

வேந்தன் அரசு

unread,
Feb 4, 2013, 8:30:23 PM2/4/13
to vall...@googlegroups.com


4 பிப்ரவரி, 2013 11:00 AM அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
3. களை எடுத்தல் என்றால் கொல்லுதல் மட்டுமன்றி நாடுகடத்தல் ஆயுள் சிறை என சமுதாயத்தில் இருந்து களையும் தண்டனைகளும் உள்ளனவே


நாடு கடத்துவது அரசியல் கைதிகளுக்கு தான். 

களையை என்ன செய்து வயலில் இருந்து அகற்றுவீர்கள்? அகற்றுகையில் அது அழிந்தால் வருத்தபடுவீர்களா? குற்ரவாளி உயிருக்கு களைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தான் வள்ளுவர் அளிக்கிறார். அதை போட்டு எரித்தாலும் குற்றமில்லை.

குற்றவாளிகளை பயிர் என்ற கணக்கில் சேர்க்காமல் களை என்ற பட்டியலில் சேர்த்து de-humanize செய்கிறார் வள்ளுவர். களையை என்ன செய்தாலும் பிரச்சனை இல்லை. கொல்லுதல் உட்பட


 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் 
அடுமுரண் தேய்க்கும் அரம்.


இதனால் மன்னன் சும்மா தன் விருப்பத்துக்கு தண்டனை கொடான்


கொலை செய்வோர்தான் கொடியவர்கள் . மற்றவர்கள் கயவர்கள், தீயவர்கள், களவாணிகள்

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு 
தொல்கவின் வாடிய தோள்.

இந்த கொடியாருக்கும் கொலைத்தண்டனையா?



செல்வன்

unread,
Feb 4, 2013, 9:12:51 PM2/4/13
to vall...@googlegroups.com
2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
இதனால் மன்னன் சும்மா தன் விருப்பத்துக்கு தண்டனை கொடான்


தன் விருப்பத்துக்கு தண்டனை கொடுக்க வள்ளுவரும் சொல்லவில்லை. முறையான நீதிவிசாரணைக்கு பின்னர் கொலையின் கொடியோரை மட்டும் கொலையாலே கொன்றொழித்தல் களையை அகற்றுவதற்கு ஒப்பானதே. அது அக்குற்றத்துக்கு ஏற்ற தண்டனையே ஒழிய அதிகபட்சமான தண்டனை அல்ல.



கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு 
தொல்கவின் வாடிய தோள்.

இந்த கொடியாருக்கும் கொலைத்தண்டனையா?


அவர் இதயத்தை கவர்வதால் அதுவும் கொலைக்கு ஒப்பானதுதான்:-)

Hari Krishnan

unread,
Feb 4, 2013, 9:20:33 PM2/4/13
to vallamai

2013/2/5 செல்வன் <hol...@gmail.com>

2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
இதனால் மன்னன் சும்மா தன் விருப்பத்துக்கு தண்டனை கொடான்


தன் விருப்பத்துக்கு தண்டனை கொடுக்க வள்ளுவரும் சொல்லவில்லை. முறையான நீதிவிசாரணைக்கு பின்னர் கொலையின் கொடியோரை மட்டும் கொலையாலே கொன்றொழித்தல் களையை அகற்றுவதற்கு ஒப்பானதே. அது அக்குற்றத்துக்கு ஏற்ற தண்டனையே ஒழிய அதிகபட்சமான தண்டனை அல்ல.

இதுக்கு மேல என்ன விவாதம் வேண்டிக் கிடக்கு செல்வன்?  இந்த விஷயத்தில் எனக்குத் தெரிந்து பதினான்கு வருடங்களாக, குழு குழுவாக பொருளைத் திரித்துக் கொண்டிருந்த பெரியவர் திரு நாக கணேசன் சீஃப் பப்ளிஷிங் எடிட்டராக செயல்பட்டு வெளியிட்ட திருக்குறள் பதிப்பே கொலை தண்டனை தவறில்லை என்கிறது.  அதற்குமேல் விவாதிக்க என்ன இருக்கிறது!

செல்வன்

unread,
Feb 4, 2013, 9:39:07 PM2/4/13
to vall...@googlegroups.com

2013/2/4 Hari Krishnan <hari.har...@gmail.com>

இதுக்கு மேல என்ன விவாதம் வேண்டிக் கிடக்கு செல்வன்?  இந்த விஷயத்தில் எனக்குத் தெரிந்து பதினான்கு வருடங்களாக, குழு குழுவாக பொருளைத் திரித்துக் கொண்டிருந்த பெரியவர் திரு நாக கணேசன் சீஃப் பப்ளிஷிங் எடிட்டராக செயல்பட்டு வெளியிட்ட திருக்குறள் பதிப்பே கொலை தண்டனை தவறில்லை என்கிறது.  அதற்குமேல் விவாதிக்க என்ன இருக்கிறது!


:-).. உண்மைதான். கணேசரே மாறிவிட்டார். வேந்தரும் அடுத்து மாறிவிடுவார். வள்ளுவ சமயத்தை சார்ந்தவர் ரொம்ப நாள் வள்ளுவத்தை தவறா விளக்கிகொண்டிருக்க முடியாதே/:-)

வேந்தன் அரசு

unread,
Feb 4, 2013, 10:32:57 PM2/4/13
to vall...@googlegroups.com


4 பிப்ரவரி, 2013 9:39 PM அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2013/2/4 Hari Krishnan <hari.har...@gmail.com>
இதுக்கு மேல என்ன விவாதம் வேண்டிக் கிடக்கு செல்வன்?  இந்த விஷயத்தில் எனக்குத் தெரிந்து பதினான்கு வருடங்களாக, குழு குழுவாக பொருளைத் திரித்துக் கொண்டிருந்த பெரியவர் திரு நாக கணேசன் சீஃப் பப்ளிஷிங் எடிட்டராக செயல்பட்டு வெளியிட்ட திருக்குறள் பதிப்பே கொலை தண்டனை தவறில்லை என்கிறது.  அதற்குமேல் விவாதிக்க என்ன இருக்கிறது!


:-).. உண்மைதான். கணேசரே மாறிவிட்டார். வேந்தரும் அடுத்து மாறிவிடுவார். வள்ளுவ சமயத்தை சார்ந்தவர் ரொம்ப நாள் வள்ளுவத்தை தவறா விளக்கிகொண்டிருக்க முடியாதே/:-)

ஹஹ்ஹா மாறக்கூடாது என்பது என் அடம் இல்லை. மடமும் இல்லை.

கொடியார் என்றால் கொலையாளிகள் என்ற முன்கூட்டிய முடிவு எனக்கு ஏற்பு இல்லை.

வள்ளுவர் மிக நுணுக்கமாக சொற்களை கையாள்வார்.

தம்மக்கள் சிறு கை அளாவிய கூழ் என்பார். இன்னொரு பிள்ளை உழப்பிட்டான் என திட்டுவாங்க
வாலெயிற்று ஊறிய நீர். முத்துப்போல் இருந்தால்தான் அது பாலொடு தேன்

அப்படி இருக்கச்சே இந்த குறளில் குழப்புவாரா?

--

Hari Krishnan

unread,
Feb 4, 2013, 10:51:20 PM2/4/13
to vallamai

2013/2/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

தம்மக்கள் சிறு கை அளாவிய கூழ் என்பார். இன்னொரு பிள்ளை உழப்பிட்டான் என திட்டுவாங்க
வாலெயிற்று ஊறிய நீர். முத்துப்போல் இருந்தால்தான் அது பாலொடு தேன்

அப்படி இருக்கச்சே இந்த குறளில் குழப்புவாரா?

அவர் தெளிவாத்தான் சொல்லியிருக்கார்.  குழப்பம் நம்மகிட்டதான் இருக்கு.  இன்னும் கொஞ்சம் குழம்பலாம்.  குழப்பத்தின் பின்னே தெளிவு--வரும்--குறளுக்குப் பின்னே நிலைவு...இதுதான் இயற்கை நியதி--அப்படின்னு கண்ட்டசாலா மாதிரி பாடிடுங்க.  சரியாப் போயிடும்.  (கவனிக்கணணும்.  கண்டசாலான்னு எழுதல. :D)

செல்வன்

unread,
Feb 4, 2013, 11:25:09 PM2/4/13
to vall...@googlegroups.com
2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஹஹ்ஹா மாறக்கூடாது என்பது என் அடம் இல்லை. மடமும் இல்லை.

கொடியார் என்றால் கொலையாளிகள் என்ற முன்கூட்டிய முடிவு எனக்கு ஏற்பு இல்லை.



கொலையின் கொடியோர் என்றால் கொலையாளிகள் என்ற முன் முடிவாவது இருக்கா?:-)

சரி..உங்கள் வீட்டு புல்தரைக்கு என்ன பிரான்டு weed killer பயன்படுத்துகிறீர்கள்?



--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



வேந்தன் அரசு

unread,
Feb 5, 2013, 8:31:37 AM2/5/13
to vall...@googlegroups.com


4 பிப்ரவரி, 2013 10:51 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
தம்மக்கள் சிறு கை அளாவிய கூழ் என்பார். இன்னொரு பிள்ளை உழப்பிட்டான் என திட்டுவாங்க
வாலெயிற்று ஊறிய நீர். முத்துப்போல் இருந்தால்தான் அது பாலொடு தேன்

அப்படி இருக்கச்சே இந்த குறளில் குழப்புவாரா?

அவர் தெளிவாத்தான் சொல்லியிருக்கார்.  குழப்பம் நம்மகிட்டதான் இருக்கு.  இன்னும் கொஞ்சம் குழம்பலாம்.  குழப்பத்தின் பின்னே தெளிவு--வரும்--குறளுக்குப் பின்னே நிலைவு...இதுதான் இயற்கை நியதி--அப்படின்னு கண்ட்டசாலா மாதிரி பாடிடுங்க.  சரியாப் போயிடும்.  (கவனிக்கணணும்.  கண்டசாலான்னு எழுதல. :D)



ஹரி கி ஐயா

கொலையிற் கொடியார்.

என்ன வேற்றுமை உருபு? அது கொடியாருக்கு பொருந்துமா அல்லது ஒறுத்தலுக்கு பொருந்துமா?

 
கொலையில் என்றால் இல் வேற்றுமை உருபு குறளில் பயன்பாடு இல்லை. செல்வத்துள் செல்வன் தான்
கொலையின் என்றால் இன் வேற்றுமை உருபு. அதுக்கு ”அதை விட்” எனும் பொருள். ”தம்மின் தம் மக்கள்”, ”பெண்ணின் பெருந்தக்க”

குழவி இறப்பினும் குறுந்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளின் தப்பார். இங்கு ”வாளின் நின்று தப்பார்:

கொலையைவிட கொடியார் என்ற பொருளே வரும்போல் இருக்கு.
ஆனால் கொலையைவிட ஒறுத்தல், கொலையின் நின்று ஒறுத்தல் எனும் பொருள் பொருந்தலையே


Hari Krishnan

unread,
Feb 5, 2013, 8:53:33 AM2/5/13
to vallamai
2013/2/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஹரி கி ஐயா

கொலையிற் கொடியார்.

என்ன வேற்றுமை உருபு? அது கொடியாருக்கு பொருந்துமா அல்லது ஒறுத்தலுக்கு பொருந்துமா?

 
கொலையில் என்றால் இல் வேற்றுமை உருபு குறளில் பயன்பாடு இல்லை.

என்ன தைரியத்துல இப்படியெல்லாம் ஓங்கி அடிக்கிறீங்க?   நாங்கல்லாம் குறளப் படிச்சதே இல்லைங்கற தைரியமா?

இல் உருபு எத்தனைக் குறட்பாக்களில் ஐந்தாம் ஏழாம் வேற்றும உருபு, உருபுத் தொகையாக வருகிறது என்று சாமி வேலாயுதனார் பட்டியலிட்டிருக்கிறார்.  (திருக்குறட் சொல்லடைவு.)  நீங்களானா, இல் என்ற உருபு குறள் மொத்தத்திலயும் பயன்படலங்கறீங்க.  

550ம் குறளில் வருவது கொலையால் என்ற பொருளில் வருகிறது.  புத்தகத்திலிருந்து இரண்டு பக்கங்களையும் ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.  நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

எனக்குதான் புத்தியில்ல, தமிழ் தெரியாதுன்னு நினைச்சேன்.  சாமி வேலாயுதனாருக்குமா?
img044.jpg
img045.jpg

PRASATH

unread,
Feb 5, 2013, 5:24:18 PM2/5/13
to vallamai
//கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்//

எனக்கு தமிழ் கொஞ்சம் தான் வருமுங்க... இருந்தாலும் எனக்கு மனசுல படறதை பட்டுனு சொல்லிடுறேங்க...

பிரச்சினைக்குரிய இடத்தை, முதல்ல குறளில் இருந்து புணர்ச்சி விதியை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு எழுதலாமுங்களா...

கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் 

அதாவது, 

கொலையில் கொடியவர்களை அரசன் தண்டித்தல்

நல்லா தான் இருக்கு படிக்க... ஆனா இந்த நிறுத்தற்குறியீடுகள் இல்லாததால சில குழப்பம் வருது...

முதல்ல வேந்தன் ஐயா சொல்றது போல படிக்கலாமுங்களா...

கொலையில் கொடியவர்களை, அரசன் தண்டித்தல்

அதாவது கொலையில் கொடியவர்களை அப்படின்னு ரெண்டு வார்த்தையையும் ஒரே மூச்சா சேர்த்து படிக்கச் சொல்றாரு... அப்படி படிச்சா என்ன புரிஞ்சுக்கலாம் அப்படின்னா... கொலை தொழில் புரிவதில் கொடுமையானவர்களை அரசன் தண்டித்தல்னு... சரி தானுங்களா... இங்கன ஒரு கேள்வி வேந்தன் ஐயாவுக்கு...

கொடுமையானவன் தானுங்களே கொலை தொழில் செய்யுவான்... அப்படி கொலை தொழில் பண்றவங்கள்ல கொடியவன்னா, ஒரு கொலையை அணு அணுவா ரசிச்சு ருசிச்சு செய்யுற சைக்கோ கேரக்டர்களை அர்த்தம் செஞ்சுக்க சொல்லுறீங்களா...அந்த மாதிரியான சைக்கோ ஆளுங்களை அரசன் தண்டிப்பது அப்படின்னு அர்த்தம் செஞ்சுக்கணுமா... தெரியாமத்தான் கேட்குறேன்...

அடுத்து ஹரிகி ஐயா சொல்றாப்புல படிக்கலாமுங்களா...

கொலையில், கொடியவர்களை அரசன் தண்டித்தல்

அதாவது, கொலையில் அப்படின்னு சொல்லி அரை நொடி நிறுத்துங்க, அதுக்கு தான் கமா போட்டிருக்கேன். இப்ப மறுபடியும் விளக்கத்துக்கு போலாமா...

கொலையின் மூலமாக அல்லது கொலை தண்டனை மூலமாக கொடியவர்களை அரசன் தண்டித்தல் என்பது உழவன் பயிர்களில் இருக்கும் களையைக் களைவது போல அப்படின்னு அர்த்தம் வருது...

இதுல எது சரின்னு படிக்குறவங்க பக்குவத்துக்கு இருந்துட்டு போகட்டுங்களே... இப்ப என்ன கெட்டு போச்சுது...

ஆனாலும், செல்வன் அண்ணாச்சி நடுவுல வந்து ஒரு கருத்தைச் சொல்லிட்டுப் போனாரு பாருங்க... அது இன்னும் சூப்பரு...

அதாவது, தேவையில்லாம எதுக்கு சண்டை போட்டுக்குறீங்க, களையை பயிரிலிருந்து நீக்குதல் போலன்னு ஒரு உவமையை வள்ளுவர் ஏன் கொடுத்திருக்காருன்னு யோசிங்கப்பா... வேந்தன் ஐயா சொல்வது போல தண்டனைனே வச்சுகிட்டாலும் அது என்ன மாதிரி தண்டனைன்னா களையை பயிர்களில் இருந்து பிடுங்கி எறிதல் போல இருக்கணும்... களையைப் பிடுங்கி எறிஞ்சா களை உயிரோட இருக்குமுங்களா... செத்து தானே போகும்... அது மாதிரி நல்லவங்களுக்கு மத்தியில இருக்குற கெட்டவங்களை வேரோட புடுங்கி அழிக்கறது தான் அரச தண்டனையாக இருக்க முடியும் அப்படிங்குறாரு... அப்படின்னா கெட்டவங்களைக் கொல்றதுனுதானுங்களே அர்த்தம்...

ஏதோ அறியா பையன் தெரியாம நிறைய எழுதிட்டேன்... மன்னிச்சு விட்டுடுங்க... விவாதத்துக்கு என்னைய கூப்பிடாதீங்க... அவ்ளோ வொர்த் இல்லை நான் எல்லாம்... 

வேந்தன் அரசு

unread,
Feb 5, 2013, 10:51:57 PM2/5/13
to vall...@googlegroups.com


5 பிப்ரவரி, 2013 8:53 AM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஹரி கி ஐயா

கொலையிற் கொடியார்.

என்ன வேற்றுமை உருபு? அது கொடியாருக்கு பொருந்துமா அல்லது ஒறுத்தலுக்கு பொருந்துமா?

 
கொலையில் என்றால் இல் வேற்றுமை உருபு குறளில் பயன்பாடு இல்லை.

என்ன தைரியத்துல இப்படியெல்லாம் ஓங்கி அடிக்கிறீங்க?   நாங்கல்லாம் குறளப் படிச்சதே இல்லைங்கற தைரியமா?

இல் உருபு எத்தனைக் குறட்பாக்களில் ஐந்தாம் ஏழாம் வேற்றும உருபு, உருபுத் தொகையாக வருகிறது என்று சாமி வேலாயுதனார் பட்டியலிட்டிருக்கிறார்.  (திருக்குறட் சொல்லடைவு.)  நீங்களானா, இல் என்ற உருபு குறள் மொத்தத்திலயும் பயன்படலங்கறீங்க.  

550ம் குறளில் வருவது கொலையால் என்ற பொருளில் வருகிறது.  புத்தகத்திலிருந்து இரண்டு பக்கங்களையும் ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.  நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

எனக்குதான் புத்தியில்ல, தமிழ் தெரியாதுன்னு நினைச்சேன்.  சாமி வேலாயுதனாருக்குமா?



ஐயா’

நான் அரை மணி நேரம் யோத்தும் ஒரு குறளும் அகப்படலை

நீங்களும் என் போல்தானா? குறளுக்கு பதில் சஞ்சீவி மலை?

பார்த்துவிட்டு சொல்லுறேன்.

வேந்தன் அரசு

unread,
Feb 5, 2013, 11:01:11 PM2/5/13
to vall...@googlegroups.com


5 பிப்ரவரி, 2013 5:24 PM அன்று, PRASATH <pras...@gmail.com> எழுதியது:

//கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்//

எனக்கு தமிழ் கொஞ்சம் தான் வருமுங்க... இருந்தாலும் எனக்கு மனசுல படறதை பட்டுனு சொல்லிடுறேங்க...

பிரச்சினைக்குரிய இடத்தை, முதல்ல குறளில் இருந்து புணர்ச்சி விதியை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு எழுதலாமுங்களா...

கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் 

அதாவது, 

கொலையில் கொடியவர்களை அரசன் தண்டித்தல்

நல்லா தான் இருக்கு படிக்க... ஆனா இந்த நிறுத்தற்குறியீடுகள் இல்லாததால சில குழப்பம் வருது...

முதல்ல வேந்தன் ஐயா சொல்றது போல படிக்கலாமுங்களா...

கொலையில் கொடியவர்களை, அரசன் தண்டித்தல்

அதாவது கொலையில் கொடியவர்களை அப்படின்னு ரெண்டு வார்த்தையையும் ஒரே மூச்சா சேர்த்து படிக்கச் சொல்றாரு... அப்படி படிச்சா என்ன புரிஞ்சுக்கலாம் அப்படின்னா... கொலை தொழில் புரிவதில் கொடுமையானவர்களை அரசன் தண்டித்தல்னு... சரி தானுங்களா... இங்கன ஒரு கேள்வி வேந்தன் ஐயாவுக்கு...

கொடுமையானவன் தானுங்களே கொலை தொழில் செய்யுவான்... அப்படி கொலை தொழில் பண்றவங்கள்ல கொடியவன்னா, ஒரு கொலையை அணு அணுவா ரசிச்சு ருசிச்சு செய்யுற சைக்கோ கேரக்டர்களை அர்த்தம் செஞ்சுக்க சொல்லுறீங்களா...அந்த மாதிரியான சைக்கோ ஆளுங்களை அரசன் தண்டிப்பது அப்படின்னு அர்த்தம் செஞ்சுக்கணுமா... தெரியாமத்தான் கேட்குறேன்...



அதே

களை எடுத்தல் என்றால் இக்காலத்திலும் நீக்குதல் என்ற பொருள் இருக்கு
புரட்சி அம்மா  அடிக்கடி கட்சியில் , அமைச்சர் அவையில் களை எடுக்கிறாங்க
 
கொலையில் ஒறுத்தல், கொலையின் ஒறுத்தல் என்பது சரியான சொல்லாட்சியா என்பது எனக்கு புலனாகலை.

இதேபோன்ற சொல்லாட்சி பிற இடங்களில் வருதா என பார்க்கணும்





வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Feb 5, 2013, 11:01:36 PM2/5/13
to vall...@googlegroups.com
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
போஒய்ப் பெறுவ எவன்.




--

செல்வன்

unread,
Feb 6, 2013, 1:00:40 AM2/6/13
to vall...@googlegroups.com
2013/2/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
களை எடுத்தல் என்றால் இக்காலத்திலும் நீக்குதல் என்ற பொருள் இருக்கு
புரட்சி அம்மா  அடிக்கடி கட்சியில் , அமைச்சர் அவையில் களை எடுக்கிறாங்க


அவர் களையெடுக்கும் ஆட்கள் கொலையின் கொடியோரும் அல்ல.

செல்வன்

unread,
Feb 6, 2013, 2:26:56 AM2/6/13
to vall...@googlegroups.com

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,

பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.

கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர் முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.


மணக்குடவர் உரை 

"கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று; உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்." 

கலைஞர் உரை: கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

மு.வ உரை: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்கு நிகரான செயலாகும்.

சாலமன் பாப்பையா உரை: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

செல்வன்

unread,
Feb 6, 2013, 2:28:16 AM2/6/13
to vall...@googlegroups.com
அனைத்து உரையாசிரியர்களும் கொலை செய்யும் கொடியவர் என தான் சொல்கிறார்கள்.

பரிமேலகர், மணக்குடவர், முவ, கலைஞர், சாலமன் பாப்பையா ....இவர்கள் தமிழ் தவறானதா?

Nagarajan Vadivel

unread,
Feb 6, 2013, 2:35:01 AM2/6/13
to vallamai

பிரசாத் ஐயா
உங்க பின்னூட்டத்தைப் படிச்சதும் வேந்தர் என் தமிழுக்காக என்னை ஒறுத்தாலும் பரவாயில்லை என்று பயப்படாமல் எழுதுகிறேன்

உலகில் பல்வேறு குமுகங்களிலும் குமுகத்தில் சேர்ந்துவாழச் சில நெறிமுறைகள் வகுக்கப்படுவதுண்டு

அவை குமுகத்தில் தனி மனிதர்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட சில குழுக்களும் செயலாக்கப்படுவது மரபு

பண்டைக் காலத்தில் மத்திய கிழக்கில் ஹம்முரபி நெறிமுறை ஒன்று இருந்தது

ரத்தத்துக்கு ரத்தம்
பல்லுக்குப் பல்
கண்ணுக்குக் கண் என்று
தனியன்கள் தனக்கேற்பட்ட காயத்துக்குத் தண்டனையை எதிர்கிகு வழங்கிக் கொள்ளலாம்

கிரேக்கத்தில் குழு அடிப்படையில் ஹெடானிஸ்டிக் நெறிமுறை உருவாக்கப்பட்டது

இரண்டு தட்டுகள் உள்ள தராசில் ஒருவன் தன் மகிழ்வுக்காக மற்றவனுக்கு இழைத்த துன்பத்துக்கு வைத்து அதற்குச் சமமாக அவனுக்குத் தண்டனையை அடுத்த தட்டில் வைத்து அளந்து அளிக்கலாம் என்று நடைமுறைப் படுத்தப்பட்டது

ஃபெலிசிகி கால்குலஸ் என்ற கணக்கில் குற்றத்தின் தன்மையை மனதில்கொண்டு அதற்குச் சம்மான தண்டனை அளிக்க் வேண்டும் என்ற நியதி உருவானது

கொலை என்பது மனிதனுக்கு இயல்பானதன்று.  கற்றுக்கொன்டது.  அவனால் ஒரு உயிரைத் திரும்பத்தர இயலாது என்று தெரிந்தும் செய்வதே கொலை.  அப்படிப்பட்டவர்கள் குமுகத்தில் உயிர் வாழக்கூடாது என்பது அரசாளுமை நீதி

இறைவன் கொடுத்த உயிரை இறைவன் மட்டுமே எடுக்க வேன்டும்.  மன்னன் இறைவனின் பிரதிநிதி என்பதால் இறைவன் கொடுத்த உயிரை அவனின் பிரதிநிதி என்ற நிலையில் நீக்கலாம் என்பது கருத்து

அரசன் கொல்லுவது நின்றுகொல்லும் தெய்வம் அன்று கொல்லும் அரசு என்ற அடிப்படையில் குமுகத்தில் வாழ வரையறுக்கப்பட்ட நியதியைக் கடந்து கொலை செய்பவன் களைய வேண்டுவது அரச நீதி

நாகராசன்






2013/2/6 PRASATH <pras...@gmail.com>

--

தேமொழி

unread,
Feb 6, 2013, 3:11:14 AM2/6/13
to vall...@googlegroups.com


On Tuesday, February 5, 2013 11:28:16 PM UTC-8, செல்வன் கோவை wrote:
அனைத்து உரையாசிரியர்களும் கொலை செய்யும் கொடியவர் என தான் சொல்கிறார்கள்.

பரிமேலகர், மணக்குடவர், முவ, கலைஞர், சாலமன் பாப்பையா ....இவர்கள் தமிழ் தவறானதா?


செல்வன், நீங்கள் வழங்கிய விளக்க உரைகளில் கருணாநிதியின் விளக்கம் பிறர் கொடுத்த  விளக்கங்களில்  இருந்து வேறுபட்டுள்ளதைக் கவனிக்கவும். 
அவர் தண்டனை  அளிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்.  அது மரண தண்டனை என்று குறிப்பிடவில்லை.
கலைஞரும் வேந்தன் ஐயாவும் பொருள் கொள்வது ஒரு முறை.
ஹரிகி அவர்களும் பிற உரை ஆசிரியர்களும் பொருள் கொள்வது ஒருவகை. 

..... தேமொழி 

செல்வன்

unread,
Feb 6, 2013, 3:19:30 AM2/6/13
to vall...@googlegroups.com

2013/2/6 தேமொழி <them...@yahoo.com>

செல்வன், நீங்கள் வழங்கிய விளக்க உரைகளில் கருணாநிதியின் விளக்கம் பிறர் கொடுத்த  விளக்கங்களில்  இருந்து வேறுபட்டுள்ளதைக் கவனிக்கவும். 


தேமொழி..ஆனால் எந்த உரை ஆசிரியரும் "கொலையிற் கொடியார்" என்பது கொலை செய்யும் கொடியவர் என்பதை மறுக்கவில்லையே?

அதை நிருபிக்க தான் இந்த ஐந்து உரைகளையும் இட்டேன். இவர்கள் ஐவர் மட்டும் அல்ல, குறளுக்கு உரை எழுதிய யாருமே எனக்கு தெரிந்து கொலை செய்யும் கொடியவர்கள் என தான் பொருள் கன்டுள்ளார்கள். வேந்தர் குறளுக்கு இதுநாள்வரை உரை எழுதிய அனைத்து உரை ஆசிரியர்களும் இலக்கணம் தெரியாதவர்கள் என கூறினால் தான் அந்த சொற்றொடருக்கு வேறு பொருள் உண்டு என கொள்ள முடியும்.

Hari Krishnan

unread,
Feb 6, 2013, 3:50:01 AM2/6/13
to vallamai

2013/2/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ஐயா’

நான் அரை மணி நேரம் யோத்தும் ஒரு குறளும் அகப்படலை

நீங்களும் என் போல்தானா? குறளுக்கு பதில் சஞ்சீவி மலை?

பார்த்துவிட்டு சொல்லுறேன்.

அவ்ளோ பெரிய பட்டியல் கொடுத்தாச்சு.  இதுக்கு மேல பாக்க என்ன இருக்கு?

பாத்துட்டுதான் சொல்றேன்.... மீசைல மண் ஒட்டலைதான். :)

வேந்தன் அரசு

unread,
Feb 6, 2013, 7:33:47 AM2/6/13
to vall...@googlegroups.com


6 பிப்ரவரி, 2013 3:50 AM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஐயா’

நான் அரை மணி நேரம் யோத்தும் ஒரு குறளும் அகப்படலை

நீங்களும் என் போல்தானா? குறளுக்கு பதில் சஞ்சீவி மலை?

பார்த்துவிட்டு சொல்லுறேன்.

அவ்ளோ பெரிய பட்டியல் கொடுத்தாச்சு.  இதுக்கு மேல பாக்க என்ன இருக்கு?

பாத்துட்டுதான் சொல்றேன்.... மீசைல மண் ஒட்டலைதான். :)

உண்மையிலே மீசையில் மண் ஒட்டலை ஹரி கி ஐயா. புல் தரையில் தானே சாய்ந்தேன். (புன் சிரி)

அப்படி மன்னன் கொலை தண்டனை கொடுப்பதாக கொண்டாலும், வள்ளுவர் அதை வலியுறத்தலை. கற்க,, நிற்க, செயற்பால என்ற கிளவிகளை கூட்டலை

 வேந்தரின் கொலைகள் களை எடுப்பதற்கு நேர் என்ற சமாதானம் சொல்லிகிறார் என கொள்வேன்

நீங்க  கொலையில் ஒறுத்தல் எனற சொல்லாட்சிபற்றி விளக்கம் சொன்னால் மகிழ்வேன்



--

Hari Krishnan

unread,
Feb 6, 2013, 7:50:34 AM2/6/13
to vallamai
2013/2/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
நீங்க  கொலையில் ஒறுத்தல் எனற சொல்லாட்சிபற்றி விளக்கம் சொன்னால் மகிழ்வேன்

அதுக்கு முன்னால, கொஞ்ச நாளைக்கு முந்தி போட்டு வாங்கியிருந்தேனே... அதுக்கு இது:

http://tamilonline.com/thendral/contentnew.aspx?id=147&cid=45  நத்தை மடி மெத்தையடி.

படிச்சப்பறம் கோலியாடலாம் என்ன! :))

வேந்தன் அரசு

unread,
Feb 6, 2013, 7:54:19 AM2/6/13
to vall...@googlegroups.com


6 பிப்ரவரி, 2013 2:26 AM அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,

பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.

கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர் முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.


மணக்குடவர் உரை 

"கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று; உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்." 

கலைஞர் உரை: கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

மு.வ உரை: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்கு நிகரான செயலாகும்.

சாலமன் பாப்பையா உரை: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

>>வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,

பரிமேல்அழகர்,
  கொலையின் ஒறுத்தல் =  கொலையான் ஒறுத்தல் என்று திரித்துக்கொண்டார். என்ன லாஜிக்? யாராவது சொல்லுங்க.

Banukumar Rajendran

unread,
Feb 6, 2013, 11:45:09 PM2/6/13
to vall...@googlegroups.com

கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் = கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் = கொலைக் குற்றங்கள் செய்யும் கொடியாரை அரசன் தண்டிப்பது?

கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் = கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் = கொடியாரை அரசன் கொலையினால் தண்டிப்பது?


கூற்று ஒன்று: ஆட்டோ சங்கர் ஒன்பது கொலைப் புரிந்த மாபாதகன். அவனுக்கு உச்சநீதி மன்றம் ”கொலை” தண்டனை விதித்துத் தண்டித்தது - இது செய்தி

கூற்று இரண்டு: ஆட்டோ சங்கர் ஒன்பது கொலைப் புரிந்த மாபாதகன். அவனுக்கு உச்சநீதி மன்றம் ”மரண” தண்டனை விதித்துத் தண்டித்தது - இது செய்தி


மேற் சொன்ன வாக்கியங்களில் கூறப்பட்டிருக்கும்  ”கொலை” மற்றும் “மரண” சொற்களில் எது சரியான சொற்பிரயோகம்!


எனக்கு..ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி! :-)



இரா.பானுகுமார்,
சென்னை




2013/2/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

தேமொழி

unread,
Feb 7, 2013, 1:46:37 AM2/7/13
to vall...@googlegroups.com


On Wednesday, February 6, 2013 8:45:09 PM UTC-8, R Banukumar wrote:

மேற் சொன்ன வாக்கியங்களில் கூறப்பட்டிருக்கும்  ”கொலை” மற்றும் “மரண” சொற்களில் எது சரியான சொற்பிரயோகம்!

எனக்கு..ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி! :-)



சும்மா கொன்னுட்டீங்க போங்க...!!!!

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Feb 7, 2013, 6:26:58 AM2/7/13
to vall...@googlegroups.com


6 பிப்ரவரி, 2013 11:45 PM அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:



கூற்று இரண்டு: ஆட்டோ சங்கர் ஒன்பது கொலைப் புரிந்த மாபாதகன். அவனுக்கு உச்சநீதி மன்றம் ”மரண” தண்டனை விதித்துத் தண்டித்தது - இது செய்தி



நீதி மன்றம் கொலை, மர்டர் போன்ற வார்த்தைகளை தீர்ப்பில் பயன்படுத்தாது

சாகும்வரை தூக்கில் போடு. hang until death.
 

வேந்தன் அரசு

unread,
Feb 7, 2013, 6:30:31 AM2/7/13
to vall...@googlegroups.com


6 பிப்ரவரி, 2013 7:50 AM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
நீங்க  கொலையில் ஒறுத்தல் எனற சொல்லாட்சிபற்றி விளக்கம் சொன்னால் மகிழ்வேன்

அதுக்கு முன்னால, கொஞ்ச நாளைக்கு முந்தி போட்டு வாங்கியிருந்தேனே... அதுக்கு இது:

http://tamilonline.com/thendral/contentnew.aspx?id=147&cid=45  நத்தை மடி மெத்தையடி.

படிச்சப்பறம் கோலியாடலாம் என்ன! :))

ஹரி ஐயா

அது கடவு சொல் கேட்குதே.

N. Ganesan

unread,
Feb 7, 2013, 6:49:33 AM2/7/13
to வல்லமை, thami...@googlegroups.com

தேமொழி அவர்களுக்கு,

மகாவித்துவான் கா. ம. வேங்கடராமையா தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக,
பழைய சமணர் உரையை ஏட்டிலிருந்து பதிப்பித்திருக்கிறார். அதில்
குறள் 550க்கு கொலைதண்டனை என்ற பொருள் இல்லை. இந்தியவியல்
நிபுணர்கள் பலரும் வள்ளுவர் சமணர் என்று எழுதி விட்டார்கள்.
பல பல்கலைக்கழக நூல்களில் இந்த முடிபை நீங்கள் வாசிக்கமுடியும்.

சமணர் உரையை அறியாத நாமக்கல் கவிஞர் அருமையாக விளக்கியிருக்கிறார்.
அண்மையில் சுவாமி விவேகானந்தர் மீது தமிழில் எழுந்த சிறந்த பாடல்
(நாமக்கல் கவிஞர் பாடியது) பார்த்தோம். அதே கவிஞர்தான்.
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html

மத்திய கிழக்கு நாடுகளில் தமிழ் முஸ்லீம் பெண் ரிஸானா அரசாங்கத்தால்
கொலைசெய்யப்பட்டாள். அது போன்றவை நடக்காமல் இருக்க
வரம்பு கட்டும் வள்ளுவர் ஒரு தீர்க்கதரிசி. எந்த சமண நீதிநூலிலும்
கொலைதண்டனை கொடு என்றிருக்காது. முன்னேற்றம் அடைந்த
ஐரோப்பிய நாடுகளில் வள்ளுவர்வழியில் கொலைதண்டனை
நீக்கப்பட்டுவிட்டது மாந்தகுல வளர்ச்சி.

நா. கணேசன்

செல்வன்

unread,
Feb 7, 2013, 9:13:09 AM2/7/13
to vall...@googlegroups.com
வள்ளுவர் மரணதண்டனை கொடுக்க கூடாது என சொன்னதாக பழைய சமணர் உரையில் இல்லை. ஆனால் கணேசர் வள்ளுவர் மரணதன்டனையையே தடுத்து விட்டார், வரம்பு கட்டினார் என்கிறார்!!!!!:-)

களையை வேருடன் கெல்லி எடுப்பது தான் வழக்கம். அப்படி செய்கையில் சில களைகளை சரியாக பிடுங்காமல் விடுவதால் அவை பிழைக்குமே ஒழிய வேண்டுமென்றே அவற்ரை கொல்லாமல் விடுவதால் அவை பிழைப்பது இல்லை.

C.R. Selvakumar

unread,
Feb 7, 2013, 9:30:20 AM2/7/13
to தமிழ் மன்றம், வல்லமை, thami...@googlegroups.com
// இந்தியவியல்

நிபுணர்கள் பலரும் வள்ளுவர் 
சமணர் என்று எழுதி விட்டார்கள்.//

திருவள்ளுவர் (திருக்குறளின் ஆசிரியர்), அவர் நூல் வழியாகக் கூறியதைக் கொண்டு
அவர் சமணர் என்பதையோ, அவருடைய நூல் (திருக்குறள்)
சமண மதத்தைத் தழுவியது என்றோ கட்டாயம்
கூறுவது  இயலாது என்பது என் கருத்து. 'இந்தியாவில் "நிபுணர்கள்" 
இருக்கட்டும், எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் என்றாரே
திருவள்ளுவர் அப்படி அணுகிப்பாருங்கள்! 
திருவள்ளுவர் சமணர் என்று கூற முற்படுபவர்கள்
யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் செய்ய வேண்டியது,

(1) இவை இவை திருக்குறளுக்கு முன்பிருந்த சமண நூல்கள், 
(2) இவை இவை அந்நூல்களில் சமணமதத்தின் அடிப்படையான கருத்துகள், 
     இவை இவை சமணம் ஏற்காத அல்லது மறுக்கும்  கருத்துகள்
(3) இவை இவை சமணத்தின் தனி அடையாளக் கருத்துகள்

என்பதைக் கூறுதல் வேண்டும்.

(மாட்டுக்கு நான்கு கால்கள் உள்ளன, இந்த விலங்குக்கும்
நான்கு கால்கள் உள்ளன, ஆகவே இது மாடுதான், மேலும்
ஒரு வாலும் கூட உள்ளது, மாட்டுக்கு ஒரு வால் உள்ளது ஆகவே இது
கட்டாயம் மாடுதான், இதற்கும் மேல் இரண்டு கண்களும் கூட
இருக்குதாக்கும் ஆகவே இது மறுக்கொணாதபடி
மாடேதான். என்னும் வகையாக ஏரணம் அடுக்கிப் பயன்
இல்லை.)

சமன் செய்து சீர்தூக்க வேண்டும்.
கருதும் அனைவருக்கும் கருதப்படும் பொருள்கள் தெரிந்திருக்க வேண்டும். 
இது இப்படி இந்தச் சமண நூலில் கூறியிருக்கின்றார்கள் என்று ஒருவர்
கூறினால், அது எந்த நூற்றாண்டில் எழுதியது 12-ஆவது நூற்றாண்டா,
13-ஆவது நூற்றாண்டா, அது திருக்குறளுக்குப் பிந்தியதா முந்தியதா,
கருத்துகளில் மதங்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல்
இருந்தனவா (கருத்துகள் ஏற்பு மறுப்பு இருந்தனவா,
பொதுவானவை இருந்தனவா) என்றெல்லாம் கருதுதல் வேண்டும். 

திருவள்ளுவர் சமணர் என்பதற்கோ, திருக்குறள் சமண மதச்சார்புடைய
நூல் என்பதற்கோ  மெய்யான சான்றுளை மேலே நான்
கூறிய மூன்று குறிப்புகளை முன் வைத்துக் கூறினால்
வலுவாக நான் மறுத்துரைக்க முடியும். என் கருத்துகள் தவறாக 
இருப்பின், நான் கூறும் கருத்துக்கு எதிரான கருத்தில் உண்மை இருப்பின்
கட்டாயம் நான் ஏற்றுக்கொள்வேன். எந்தத் தயக்கமும்
இல்லை. என்னால் உடனுக்குடன் கருத்துரைக்க இயலாமல்
இருக்கலாம், ஆனால் பொறுமையாக கருத்துகளை முறையாக
வைத்து உரையாடினால், நான் என் கருத்துகளை முன் வைத்து
கருத்தாட இயலும்.

மேலே நான் கூறிய மூன்று அடிப்படைத் தரவுகளை 
வைத்துக்கொள்ளுவோம். அடுத்ததாக 
உண்மையான முன்னேற்றம் வேண்டும் எனில்,
திருக்குறளில் உள்ள கடவுள்
வாழ்த்தை  பின்னர் எடுத்துக்கொள்ளலாம் என்று
முதலில் விட்டுவிட்டுப் 
பிற பகுதிகளில் இருந்து கருத்தை எடுத்துக்
கருத்தாடலாம். கடவுள் வாழ்த்தை தீர அலசலாம்,
வேண்டாம் என்று சொல்லவில்லை,
அது கட்டாயம் சமணம் அன்று என்று கூற முடியும்.
கடவுள் வாழ்த்தைத்தான் முதலில் எடுத்துக்கொள்ள
வேண்டும் எனினும், எனக்கு மறுப்பு இல்லை. 

(நான்கு கால்கள், வால் கதையை அல்லது
ஏரணத்தை நினைவில் கொள்ளுங்கள்)

செல்வா




2013/2/7 N. Ganesan <naa.g...@gmail.com>

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
              விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.





--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Hari Krishnan

unread,
Feb 7, 2013, 9:33:57 AM2/7/13
to vallamai

2013/2/7 N. Ganesan <naa.g...@gmail.com>

மகாவித்துவான் கா. ம. வேங்கடராமையா தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக,
பழைய சமணர் உரையை ஏட்டிலிருந்து பதிப்பித்திருக்கிறார். அதில்
குறள் 550க்கு கொலைதண்டனை என்ற பொருள் இல்லை. இந்தியவியல்
நிபுணர்கள் பலரும் வள்ளுவர் சமணர் என்று எழுதி விட்டார்கள்.
பல பல்கலைக்கழக நூல்களில் இந்த முடிபை நீங்கள் வாசிக்கமுடியும்.

ஆனால் நீங்கள் தலைமைப் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட உரை அப்படிச் சொல்லவில்லையே!  கொலைதண்டனை தவறே இல்லை என்று ஓங்கி அடித்துச் சொல்கிறதே!    பதிப்பாசிரியர்--அதுவும் தலைமைப் பதிப்பாசிரியர்--என்ற முறையில் இந்தத் தவறான (அதாவது அது தவறு என்று இப்போது நீங்கள் சொல்கின்ற) உரைக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள் அல்லவா?

பரிமேலழகர், மணக்குடவர் எல்லோருமே தவறு என்றால், உங்கள் பதிப்பில் நீங்கள் அதைத் திருத்தியிருக்க முடியுமே... அப்படிச் செய்யவில்லையே!

சுவாதி சுவாமி

unread,
Feb 7, 2013, 10:52:06 AM2/7/13
to வல்லமை

On Jan 31, 8:02 am, meena muthu <rangame...@gmail.com> wrote:
>  தூள்...!
>
> லைக் லைக் லைக் எத்தனை லைக் போடட்டும் ஸ்வாதி :))

என்னோட மீனாம்மாவாச்சே....நான் அரிச்சுவடி எழுதினால் கூட
உங்ககிட்டேருந்து 1000 லைக்ஸ் வெள்ளமா வரும்னு எனக்கு தெரியும். :)

மிக்க நன்றி...எங்க வீட்டுப் பக்கமும் வரது தானே?? :)

அன்புடன்
சுவாதி

சுவாதி சுவாமி

unread,
Feb 7, 2013, 10:54:09 AM2/7/13
to வல்லமை
கிட்டத்தட்ட வேந்தர் ஐயாவின் தமிழை 6 வருசமாக  படித்து வருகிறேன்...
ஆனாலும் இன்னமும் அவர் எழுதுவதன் இன்னொரு அர்த்தத்தை கண்டுபிடிக்கத்
தெரியாமலேயே இருக்கிறேன்.


நீ சரியான மக்கு சுவாதி ! :)

On Jan 31, 8:41 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> நடுநிலை.
>
> >என்னுடைய மனநிலையை நான் இன்னும் விரிவாக சொன்னால் என் மீது அன்பு
>
> வைத்திருக்கும் குழும சகோதரர்கள் பலருக்கு என் மேல் வெறுப்பு வரக் கூடும்..
>
> நாமும் இன்னும் வளரணும்.
>
> உங்களோடு நட்பாக இருக்கணுமுனா உங்க கருத்துகளை அப்படியே ஒத்துக்கிடணும் என்பது
> நம் மந்திரம்.

சுவாதி சுவாமி

unread,
Feb 7, 2013, 10:56:41 AM2/7/13
to வல்லமை
மிக்க நன்றி தேமொழி!

பல விசயங்கள் இன்னும் வெளிப்படையாக எழுதப்படாமலேயே
போய்விட்டது..கட்டுரையின் நீளமும் ஒரு காரணம்..  :)

On Jan 31, 2:58 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> On Thursday, January 31, 2013 4:35:37 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:
>
> /// தமிழக மக்களிடம் உள்ள பெரிய குறைபாடு சினிமாவை ஒரு எண்டர்டெய்ண்ட்மெண்டாக
> பார்ப்பதில்லை. நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பிடுவதும் நடிகர்களை தலைவர்களாக
> தலைக்கு மேல் வைத்து கூத்தாடுவதும் தான்  இன்றைக்கு ஒரு ப்டத்தை பொழுது
> போக்காக பார்க்காமல் சமூகத்தை பிளக்கும் காரணியாக பார்க்கும் மனோபாவத்தை
> மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறது. அந்த மனோபாவத்தை தமக்கு சாதகமாக்கிக்
> கொண்டு திரையுலகமும் அரசியலும் இன்று உங்களையே பந்தாடுகின்றனர்.///
>
> மிகவும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள், நல்ல அலசல். நன்றி.
>
> ..... தேமொழி

Swathi Swamy

unread,
Feb 7, 2013, 11:09:39 AM2/7/13
to vall...@googlegroups.com
உண்மை தான் துளசி அம்மா! 
இப்ப கூட பாருங்க....எத்தனையோ தடைகளை  உருவாக்கியவர் கஷ்டப்பட்டு கடந்து வந்து கொண்டிருக்கிறார். இரு தரப்பினருக்குமிடையில் எத்தனையோ சமரசங்கள். வேண்டா வெறுப்பாகவும்,  கட்டாயங்களுக்குட்பட்டும் இணக்கங்கள்...என்று கடந்து திரைக்கு வரவிருக்கும் சமயத்தில் ரசிகர்களின் சுவரொட்டி ஒன்று....பார்க்கக் கிடைத்தது.. மிகவும் விசனப்பட வேண்டியிருக்கிறது. ஒருவகையில் அரசியல்வாதிகளாஇயும், மத இன வாதிகளையும் விட கலைஞர்களின் இரசிகர்களே கலைஞர்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

படத்தை படமாக பார்க்காமல் அபிமான நட்சத்திரத்தின் அவதாரமாக பார்க்கும் முட்டாள்தனம் மறையாதவரை தமிழ் சினிமா உய்யவே உய்யாது...! 

2013/1/31 Tulsi Gopal <gopal...@gmail.com>
ஸ்வாதி,

ஹைய்யோ!!!!!!  

சினிமாவை சினிமாவாப் பார்க்கவோ நினைக்கவோ தெரியலைப்பா நம்ம மக்காளுக்கு. அதுதான் பிரச்சனை:(

'மக்கள்(??) விரும்புகிறார்கள்( !!) என்று சொல்லி நாலு ஃபைட், அஞ்சு டூயட் அதில் மூணு வெளிநாட்டு ஷாப்பிங் மால்களிலும் தெருக்களிலும் எடுத்தவை.  கதாநாயகன்கூடவே ஒட்டிக்கிட்ட காமெடி நடிகர், கூடவே செண்டிமெண்ட் போட்டுத் தாளிச்சதையும் அப்படியே அச்சு அசலா நம்பும் கூட்டம். இது.

என்ன செய்ய?  எல்லாம் விதி இப்படி விஸ்வரூபம்  எடுத்து விளையாடுது.

எங்கூர்லே  இன்றைக்கோ இல்லை நாளைக்கு ஹிந்தி விஸ்வரூபம்  ரெண்டு ஷோ போட உத்தேசமாம். போலாமா வேண்டாமான்னு  இருக்கேன். 




e0aeaae0af8be0aeb8e0af8de0ae9fe0aeb0e0af8d.jpg

செல்வன்

unread,
Feb 7, 2013, 11:49:59 AM2/7/13
to vall...@googlegroups.com

2013/2/7 Swathi Swamy <mswat...@gmail.com>

ஒருவகையில் அரசியல்வாதிகளாஇயும், மத இன வாதிகளையும் விட கலைஞர்களின் இரசிகர்களே கலைஞர்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது.



அவர்கள் அடிக்கும் போச்டரால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை. ஏதோ மனமகிழ்ச்சிக்கு அடிக்கிறார்கள். கமலை சிவனுடன் ஒப்பிடுவதா என கோபபடுவதில் பொருள் இல்லை. சிவனே சிறந்த கலாரசிகர். கமலின் கலையை அவர் மேலே இருந்து ஆனந்தமாக ரசிப்பார் (விஜய் படத்தை ரசிக்க மாட்டார்:-)

Swathi Swamy

unread,
Feb 7, 2013, 12:16:28 PM2/7/13
to vall...@googlegroups.com
நாங்கள் அப்படி பார்க்கிறோம்.. ஆனால் மற்ற மதத்தினரின் மனம் இதை எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதற்கு உதாரணமாக இந்த சுட்டியில் இருக்கும் கட்டுரையை கொஞ்சம் படியுங்கள்...   விஸ்வரூபம் தந்த பாடம்

சிவனோடு ஒப்பீடு செய்வதில் தவறில்லை என்று சொல்பவர்களை விட எங்கள் குல தெய்வத்தை எப்படி இந்த மனிதனுடன் ஒப்பிட முடியும் என்று கொதித்து எழப் போகும் இன்னோரு சாராரும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் சொன்னதை சொல்லி சமாதானப்படுத்த முடியுமா?? அப்படியெல்லாம் பரந்த பகுத்தறிவு இருந்தால் எந்தப் படமும் கோர்ட்டு வாசல் ஏறாதே செல்வன்??  :)  

2013/2/7 செல்வன் <hol...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 7, 2013, 12:56:27 PM2/7/13
to vall...@googlegroups.com

2013/2/7 Swathi Swamy <mswat...@gmail.com>

நாங்கள் அப்படி பார்க்கிறோம்.. ஆனால் மற்ற மதத்தினரின் மனம் இதை எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதற்கு உதாரணமாக இந்த சுட்டியில் இருக்கும் கட்டுரையை கொஞ்சம் படியுங்கள்...   விஸ்வரூபம் தந்த பாடம்


சிந்துபாத்தின் ஏழு கடல் பயணம் என்ற ஆங்கில படத்தில் இலையால் செய்த ப்ரா, மற்றும் கோவனத்துடன் இருக்கும் காளிதேவியுடன் சிந்துபாத் கத்தி சண்டை போட்டு கொல்லுவது மாதிரி காட்சி இருந்தது. லாரா க்ராப்ட் படத்தில் பிரம்மனின் நாலு தலைகளையும் ஏஞ்சலினா ஜோலி வாள் சன்டையில் கொய்வார்.

பெரியார் படத்தில் அவர் எழுதிய நூல்களில் இந்து கடவுள்களை திட்டாத திட்டு இல்லை. பிஸ் கிரிஅஸ்ட் என்ற பெயரில் நியூயார்க் கலை எக்ஸிபிஷன் ஒன்றில் மூத்திர குடுவையில் ஏசு சிலையை போட்டு அதுவும் காட்சிக்கு வைக்க பட்டது.

இன்னும் ஆயிரம் உதாரணங்களை எழுத முடியும். பக்குவப்பட்ட மனங்கள் என் ஆண்டவனை நீ இன்சல்ட் செய்துவிட்டாய் என சொல்லி கலைஞனை தாக்க போவது இல்லை. அந்த பக்குவம் சிலருக்கு இல்லையெனில் திருந்த வேண்டியது அவர்களே ஒழிய கலைஞர்கள் இல்லை.



சிவனோடு ஒப்பீடு செய்வதில் தவறில்லை என்று சொல்பவர்களை விட எங்கள் குல தெய்வத்தை எப்படி இந்த மனிதனுடன் ஒப்பிட முடியும் என்று கொதித்து எழப் போகும் இன்னோரு சாராரும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் சொன்னதை சொல்லி சமாதானப்படுத்த முடியுமா?? அப்படியெல்லாம் பரந்த பகுத்தறிவு இருந்தால் எந்தப் படமும் கோர்ட்டு வாசல் ஏறாதே செல்வன்??  :) 


கொதித்து எழுந்து கமலஹாசனை தாக்கி ஒரு படம் எடுக்கட்டும். இல்லை கொடும்பாவி கொளுத்தட்டும். தியேட்டரை கொளுத்துவதை ஒத்துக்க முடியாது. யார் மனமும் புண்படாததை தான் படமா எடுக்கணும் என்றால் மிக்கிமவுஸ் கார்ட்டூன் கூட வெளிவருவது சந்தேகம் தான்.

Swathi Swamy

unread,
Feb 7, 2013, 1:04:56 PM2/7/13
to vall...@googlegroups.com
அதே தான் நான் சொல்கிறேன் கோலிவூட் தரத்துக்கு படம் வேண்டுமென்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. கோலிடூட்டின் சுதந்திரம் இங்கு  கோடம்பாக்கத்துக்கு இல்லை; அதே போல் அமெரிக்க மக்களைப் போல் சினிமாவை வெறும் என்டர்டெய்ன்மென்டாக பார்க்கும் மனிதர்கள் இங்கு இல்லை...  அவர்களிடம் அந்த பக்குவம் வர சில பல தளைகள் (தலைகள்) தடையாக இருக்கிறார்கள்... துரதிஷ்டம் அவர்களின் கை தானே மேலோங்கி இருக்கிறது  

2013/2/7 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Feb 7, 2013, 1:11:02 PM2/7/13
to vall...@googlegroups.com

2013/2/7 Swathi Swamy <mswat...@gmail.com>

அதே தான் நான் சொல்கிறேன் கோலிவூட் தரத்துக்கு படம் வேண்டுமென்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. கோலிடூட்டின் சுதந்திரம் இங்கு  கோடம்பாக்கத்துக்கு இல்லை; அதே போல் அமெரிக்க மக்களைப் போல் சினிமாவை வெறும் என்டர்டெய்ன்மென்டாக பார்க்கும் மனிதர்கள் இங்கு இல்லை...  அவர்களிடம் அந்த பக்குவம் வர சில பல தளைகள் (தலைகள்) தடையாக இருக்கிறார்கள்... துரதிஷ்டம் அவர்களின் கை தானே மேலோங்கி இருக்கிறது  


அதற்கு ரசிகர்கள் மேல் குற்றம் சொல்லி என்ன பயன்? முட்டாள்கள் கோபப்படுவார்கள் என்பது ரசிகர்களின் குற்றமா?:-) திருந்த வேண்டியது மூடர்களா ரசிகர்களா?

Swathi Swamy

unread,
Feb 7, 2013, 1:18:11 PM2/7/13
to vall...@googlegroups.com
2013/2/7 செல்வன் <hol...@gmail.com>
2013/2/7 Swathi Swamy <mswat...@gmail.com>
அதே தான் நான் சொல்கிறேன் கோலிவூட் தரத்துக்கு படம் வேண்டுமென்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. கோலிடூட்டின் சுதந்திரம் இங்கு  கோடம்பாக்கத்துக்கு இல்லை; அதே போல் அமெரிக்க மக்களைப் போல் சினிமாவை வெறும் என்டர்டெய்ன்மென்டாக பார்க்கும் மனிதர்கள் இங்கு இல்லை...  அவர்களிடம் அந்த பக்குவம் வர சில பல தளைகள் (தலைகள்) தடையாக இருக்கிறார்கள்... துரதிஷ்டம் அவர்களின் கை தானே மேலோங்கி இருக்கிறது  


அதற்கு ரசிகர்கள் மேல் குற்றம் சொல்லி என்ன பயன்? முட்டாள்கள் கோபப்படுவார்கள் என்பது ரசிகர்களின் குற்றமா?:-) திருந்த வேண்டியது மூடர்களா ரசிகர்களா?

 
மூடர்களோ அறிவுஜீவிகளோ...அவர்களும் ஒரு அங்கமான சமூகம் தானே இது. அவர்களை புறந்தள்ளிவிட்டு போக முடியுமா?? இல்லை...!! ரசிகர்களும் மூடர்களாகத் தான் நடந்து கொள்கிறார்கள்....  எத்தனையோ கஷ்டங்களை  கடந்து வந்த மனுசனுக்கு திரும்பவும் இக்கட்டான நிலையை குடுக்கிறமாதிரி  இவர்களின் சியரிங் இருந்தால் நட்டப்படுறது யார்?? ரசிகர்களா கலைஞர்களா??  

எனக்கு பலநாளாகவே இந்த சந்தேகம் இருக்கிறது. கலைஞர்களுக்கான ரசிகர்கள் கலைஞனின் கலைத் திறமையை மட்டும் ரசித்தால் போதாதா?? ஏன் அவனோடு  அவனுடைய வாழ்கையில் தாங்களும் அங்கமாக வேண்டுமென்று வெறிபிடித்து அலைகிறார்கள்?? அது முட்டாள்தனம் இல்லையா?? 

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



செல்வன்

unread,
Feb 7, 2013, 1:25:15 PM2/7/13
to vall...@googlegroups.com

2013/2/7 Swathi Swamy <mswat...@gmail.com>

மூடர்களோ அறிவுஜீவிகளோ...அவர்களும் ஒரு அங்கமான சமூகம் தானே இது. அவர்களை புறந்தள்ளிவிட்டு போக முடியுமா??


அவர்களுக்கும் தெருவில் போராட இடம் கொடுக்கிறோம். போலிஸ் பாதுகாப்பு தருகிறோம். யாரை பிடிக்கலையோ அவர்களை எதிர்த்து போராடி உண்னாவிரதம் இருக்கலாம். ரவுடிதனம் மட்டும் செய்யவேண்டாம் என தான் சொல்கிறோம்.



எனக்கு பலநாளாகவே இந்த சந்தேகம் இருக்கிறது. கலைஞர்களுக்கான ரசிகர்கள் கலைஞனின் கலைத் திறமையை மட்டும் ரசித்தால் போதாதா?? ஏன் அவனோடு  அவனுடைய வாழ்கையில் தாங்களும் அங்கமாக வேண்டுமென்று வெறிபிடித்து அலைகிறார்கள்?? அது முட்டாள்தனம் இல்லையா??


யாரையும் பாதிக்காத முட்டாள்தனம் வேறு, யாரையாவது பாதிக்கும் முட்டாள்தனம் என்பது வேறு.

தனிப்பட்ட முறையில் நடிகரின் ரசிகனாக இருந்து தன் குடும்பத்தை நல்லபடி கவனித்து மீதமிருக்கும் காசில் போஸ்டர் அடித்து சென்னைக்கு போனால் ரஜினி வீட்டுக்கு போய் எட்டி பார்த்து விட்டு வருவது எந்த விதத்திலும் குற்றம் அல்ல, முட்டாள்தனமும் அல்ல.

வீட்டை கவனிக்காமல், தொழிலை கவனிக்காமல் நடிகன் மேல் பைத்தியமாக இருந்தால் அது மிக பெரும் தவறு. ஆனால் கவிதை, மேதமெடிக்ஸ் மேல் கூட கிறுக்கா இருந்து உயிரை விட்டவர்கள் உள்ளனர். நந்தி கலம்பகத்துக்காக நிருபதுங்க பல்லவன் உயிரையே விட்டான். அவனை புகழ தான் செய்கிறோம். கலைக்கு இருக்கும் ஒரு காந்த சக்தி இது.

செல்வன்

unread,
Feb 7, 2013, 1:26:57 PM2/7/13
to vall...@googlegroups.com

2013/2/7 Swathi Swamy <mswat...@gmail.com>

எத்தனையோ கஷ்டங்களை  கடந்து வந்த மனுசனுக்கு திரும்பவும் இக்கட்டான நிலையை குடுக்கிறமாதிரி  இவர்களின் சியரிங் இருந்தால் நட்டப்படுறது யார்?? ரசிகர்களா கலைஞர்களா??  


ஒரு போஸ்டரால் ஒரு கலவரம் வருது என்றால் திருந்த வேன்டியது நாடு தான். போஸ்டர் அடித்தவன் அல்ல.

தேமொழி

unread,
Feb 7, 2013, 1:52:25 PM2/7/13
to vall...@googlegroups.com


இது என்ன இழை? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விவாதமா? 

விஸ்வரூபம் விமர்சனம்
வள்ளுவரும்   மரணதண்டனையும்
வள்ளுவர் சமணரா?
தமிழ்ப் பட ரசிகர்களின் சகிப்புத் தன்மை
.....நாளை என்ன விவாதம் ஆவலுடன் காத்திருக்கும் ......

...... தேமொழி 

Swathi Swamy

unread,
Feb 7, 2013, 2:18:17 PM2/7/13
to vall...@googlegroups.com

.ஒரு இழை இப்படி பல முகங்களை எடுத்து தொடர்வது எனக்கு  மகிழ்ச்சியை தருகிறது. அதுவும் இந்த இழை வள்ளுவர் வரை போகுமென்று நான் நினைக்கவேயில்லை..   :) பெருமையாக இருக்கிறது  அரோக்கியமான விவாதங்களாக தொடர்வதில்.  

2013/2/7 தேமொழி <them...@yahoo.com>

Innamburan Innamburan

unread,
Feb 7, 2013, 3:40:01 PM2/7/13
to vall...@googlegroups.com
நாளைய விவாதம்: 'டைம்பாஸ்'


2013/2/7 Swathi Swamy <mswat...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 7, 2013, 9:05:55 PM2/7/13
to vall...@googlegroups.com


7 பிப்ரவரி, 2013 9:33 AM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


பரிமேலழகர், மணக்குடவர் எல்லோருமே தவறு என்றால், 


ஹரி கி ஐயா,

அறத்தாறு இதுவென வேண்டா  சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை

அறத்தாறு எனும் சொல்லுக்கு அறத்தின் பயன் என்று இவர்கள் பொருள் சொல்லி உள்ளார்கள்

அதற்கு அறத்தின்  நெறி என்றுதானே பொருள்?

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போய்ப் பெறுவது எவன்?

Hari Krishnan

unread,
Feb 7, 2013, 9:46:23 PM2/7/13
to vallamai

2013/2/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ஹரி கி ஐயா,

அறத்தாறு இதுவென வேண்டா  சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை

அறத்தாறு எனும் சொல்லுக்கு அறத்தின் பயன் என்று இவர்கள் பொருள் சொல்லி உள்ளார்கள்

அதற்கு அறத்தின்  நெறி என்றுதானே பொருள்?

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போய்ப் பெறுவது எவன்?

‘இது நடந்தது இவ்வாறு’ என்று நாம் பேசும்போது, ‘ஆறு’ என்பது ‘இந்த வழியில், இன்ன மாதிரி, இந்த விதத்தில்’ என்றெல்லாம் பொருள்படுகிறதுதான்.  ‘அது உருப்படமா போனது இவ்வாறு’ என்னும்போது, அந்தக் குறிப்பிட்ட வழியில் சென்றதன் பயன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மறுபடியும் சாமி வேலாயுதம் பிள்ளை அவர்களுடைய புத்தகத்திலிலுருந்து குறிப்பிட்ட பக்கத்தை இணைத்துள்ளேன்.  எந்தெந்தக் குறளில் ‘ஆறு’ என்பதற்கு என்னென்ன பொருள் என்று சொல்கிறார்.  37ம் குறளுக்கு, ‘பயன்’ என்றுதான் அவரும் பொருள் சொல்லியிருக்கிறார்.

விட்டா காவிரி ஆறு, படிச்ச வகுப்பு ஆறு ரெண்டும் ஒண்ணுதான்னு ஒரே போடா போட்டுருவாங்க மக்க... :D
img046.jpg

Hari Krishnan

unread,
Feb 7, 2013, 9:48:20 PM2/7/13
to vallamai

2013/2/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

http://tamilonline.com/thendral/contentnew.aspx?id=147&cid=45  நத்தை மடி மெத்தையடி.

படிச்சப்பறம் கோலியாடலாம் என்ன! :))

ஹரி ஐயா

அது கடவு சொல் கேட்குதே.

செய்யவேண்டியதெல்லாம், உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து ஒரே ஒருமுறை இலவசமாகத் தென்றலின் சந்தாதாரர் ஆகவேண்டியதுதான்.  அல்லது உங்கள் ஊரில் அச்சுப் பதிப்பு கிடைத்தால் படிக்கலாம்.  

வேந்தன் அரசு

unread,
Feb 7, 2013, 10:05:37 PM2/7/13
to vall...@googlegroups.com


7 பிப்ரவரி, 2013 9:48 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
http://tamilonline.com/thendral/contentnew.aspx?id=147&cid=45  நத்தை மடி மெத்தையடி.

படிச்சப்பறம் கோலியாடலாம் என்ன! :))

ஹரி ஐயா

அது கடவு சொல் கேட்குதே.

செய்யவேண்டியதெல்லாம், உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து ஒரே ஒருமுறை இலவசமாகத் தென்றலின் சந்தாதாரர் ஆகவேண்டியதுதான்.  அல்லது உங்கள் ஊரில் அச்சுப் பதிப்பு கிடைத்தால் படிக்கலாம்.  


பின்னூட்டம் என்றால் கடவலாம். சும்மா வாசிக்கவுமா?


முன்னாள் காதலிகள் எல்லாரது பெயர்களையும் கடவியாச்சுஙக்.  கைவசம் மிச்சம் ஒன்னும் இல்லை.(:


வேந்தன் அரசு

unread,
Feb 7, 2013, 10:12:42 PM2/7/13
to vall...@googlegroups.com


7 பிப்ரவரி, 2013 9:46 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/2/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஹரி கி ஐயா,

அறத்தாறு இதுவென வேண்டா  சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை

அறத்தாறு எனும் சொல்லுக்கு அறத்தின் பயன் என்று இவர்கள் பொருள் சொல்லி உள்ளார்கள்

அதற்கு அறத்தின்  நெறி என்றுதானே பொருள்?

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போய்ப் பெறுவது எவன்?

‘இது நடந்தது இவ்வாறு’ என்று நாம் பேசும்போது, ‘ஆறு’ என்பது ‘இந்த வழியில், இன்ன மாதிரி, இந்த விதத்தில்’ என்றெல்லாம் பொருள்படுகிறதுதான்.  ‘அது உருப்படமா போனது இவ்வாறு’ என்னும்போது, அந்தக் குறிப்பிட்ட வழியில் சென்றதன் பயன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மறுபடியும் சாமி வேலாயுதம் பிள்ளை அவர்களுடைய புத்தகத்திலிலுருந்து குறிப்பிட்ட பக்கத்தை இணைத்துள்ளேன்.  எந்தெந்தக் குறளில் ‘ஆறு’ என்பதற்கு என்னென்ன பொருள் என்று சொல்கிறார்.  37ம் குறளுக்கு, ‘பயன்’ என்றுதான் அவரும் பொருள் சொல்லியிருக்கிறார்.


ஆமாம் ஐயா

ஆனால் அந்த பொருளில் 37 ஆம் குறள் மட்டுமே. தனக்கு தானே சாட்சி ஆகுமா?

 பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின் 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தாணோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

சங்க நூல்களில் வேறு இடங்களில் நான்  பயன் என்னும் பொருளில் கண்டது இல்லை, 
கம்பனில்?

DEV RAJ

unread,
Feb 9, 2013, 10:32:49 AM2/9/13
to vall...@googlegroups.com, thami...@googlegroups.com
On Thursday, 7 February 2013 17:19:33 UTC+5:30, N. Ganesan wrote:
>>>> எந்த சமண நீதிநூலிலும் கொலைதண்டனை கொடு என்றிருக்காது.
முன்னேற்றம் அடைந்த ஐரோப்பிய நாடுகளில் வள்ளுவர்வழியில் கொலைதண்டனை
நீக்கப்பட்டுவிட்டது மாந்தகுல வளர்ச்சி.<<<<



நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவைத் தூக்கிலிட்டது,
இத்தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின்
குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


இந்நிலையில், அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டது குறித்து யாதவின் மனைவி பிரேம், கூறியபோது,
“இந்த நாள் எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சியான நாள். எங்களுக்கு நீதி
கிடைத்துள்ளது. அப்சல் குருவுக்கு மரண தண்டனை என்பது மிகவும் சரியான முடிவு. ஆனால்
அதை நிúறைவேற்றுவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டுவிட்டது. எனவே, இத்தாக்குதலில் உயிர்த்தியாகம்
செய்த அனைத்து வீரர்களின் குடும்பத்தாரும் வீர விருதுகளை அரசிடமே ஒப்படைப்பது என்று 2006-ல்
கூட்டாக முடிவெடுத்தோம். இப்போது எங்களுக்கு நீதி கிடைத்துள்ளதால் அந்த விருதுகளை
மீண்டும் பெற்றுக் கொள்வோம்.” என்றார்.


http://dinamani.com/latest_news/article1456901.ece


ஐயா இந்தியா வளர்ச்சி பெறவில்லை என்கிறாரோ !

நம் குடும்பத்தில் ஒருவர் பலியாகியிருந்தால் வலி தெரிய
வாய்ப்புக் கிடைத்திருக்கும். செத்த படை வீரர் யாராக
இருந்தால் நமக்கென்ன ?




தேவ்

Nagarajan Vadivel

unread,
Feb 9, 2013, 11:00:46 AM2/9/13
to vallamai
அப்சல் குருவுக்கு மரண தண்டனையில் மகிழும்போது

தன் கனவரைக் கொலை செய்ய உடந்தையாக இருந்த நளினி என்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை தேவையில்லை என்று சொன்ன பெண்ணும் இருக்கிறாரே

அவர் வள்ளுவரைப் படிச்சதில்லையே

ஒரு உயிரைக் கொடுப்பதும் எடுப்பதும் இயற்கையின் கையில் என்று எண்ணுவதே உயர் சிந்தனை

விவிலியம் கெய்ன் மற்றும் ஏபல் கதையில் மனிதன் நெற்றியில் சொந்த சகோதரனைக் கொலை செய்வது எழுதப்பட்ட விதி என்று கூறுகிறது

நாகராசன்


2013/2/9 DEV RAJ <rde...@gmail.com>
--

DEV RAJ

unread,
Feb 9, 2013, 11:49:09 AM2/9/13
to vall...@googlegroups.com
On Saturday, 9 February 2013 21:30:46 UTC+5:30, Nagarajan Vadivel wrote:
>>> விவிலியம் கெய்ன் மற்றும் ஏபல் கதையில் மனிதன் நெற்றியில் சொந்த சகோதரனைக்
கொலை செய்வது எழுதப்பட்ட விதி என்று கூறுகிறது <<<


பண மோசடி, நில ஆவண மோசடி, கொலை, கொள்ளை போன்ற
எல்லாவிதக் குற்றங்களையும் செய்துவிட்டு அனைத்தும்
எழுதப்பட்ட விதி, ஏமாந்தவனின் தலைவிதி என்று கூறித்
தப்பிக்க  இடமளிக்கலாம் என்று பேராசிரியர் ஐயா கூறுகிறார்
போலும் ! நீதிமன்றமே  தேவையில்லையே

” இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
  கைகொல்லும் காழ்த்த இடத்து”
என எழுதியவருக்கு உயர் சிந்தனை
இல்லாமல் போய்விட்டது;
முள்மரம் வளர்வதும் எழுதப்பட்ட
விதி என்பது தெரியவில்லை
 


தேவ்

Nagarajan Vadivel

unread,
Feb 9, 2013, 12:13:21 PM2/9/13
to vallamai
//எல்லாவிதக் குற்றங்களையும் செய்துவிட்டு அனைத்தும்
எழுதப்பட்ட விதி, ஏமாந்தவனின் தலைவிதி என்று கூறித்
தப்பிக்க  இடமளிக்கலாம் என்று பேராசிரியர் ஐயா கூறுகிறார்
போலும் !//

நிச்சயமாக நான் அவ்வாறு நினைக்கவில்லை.

தண்டனையாக உயிரை மாய்ப்பது என்பது இயற்கைக்கு மாறானது

அரிதினும் அரிதான குற்றத்துக்கு உயிரைப் பறிக்கலாம் என்று கருத்து கேள்விக்குறியது

குமுக ஆளுமை செவ்வனே நிகழச் சமயம் சில நெறிகளை வரையறுத்து குமுக உறுப்பினர்களின் பிறழ் நடத்தையைக் கட்டுப்படுத்துகிறது

அதுபோன்றே சட்ட வரையறைகளும் குமுகத்தில் பிறழ்நிலை உறுப்பினர்களைத் தற்காலிகமாகக் குமுகத்தில் இருந்து பிரித்து அவனைத் திருத்த விதிகளை உருவாக்கியுள்ளது

எந்த மதமும் உயிரை உருவாக்குவதும் அந்த உயிரை எடுப்பதும் மனிதனுக்குள்ள உரிமை   என்ற கருத்துடன் உடன்பாடு கொண்டதல்ல

மார்க் ஆஃப் கெய்ன் என்பது கொலை செய்தல் இயற்கைக்கு மாறானது ஆனால் மனிதன் கற்றுக்கொண்ட செயல் என்று குறிப்பிடுகிறது

நாகராசன்



வேந்தன் அரசு

unread,
Feb 9, 2013, 2:58:08 PM2/9/13
to vall...@googlegroups.com
வள்ளுவர் மரணதண்டனை கூடாது என்று உறுதியாக சொல்லுவதாகவும் இல்லை. அதை வேந்தனின் தண்டனை முறைகளில் உட்பட்டது என்று சொல்லியதாக்வே நான் கருதுவேன்

”இளைதாக முள்மரம் கொல்க” என்று கட்டளைபோல் சொல்லியவர் இங்கு களைகட்டதனொடு நேர் என்று சமாதானம் மட்டுமே சொல்லுகிறார்

He is a practical man. I love him.

Hari Krishnan

unread,
Feb 9, 2013, 9:18:55 PM2/9/13
to vallamai

2013/2/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

விவிலியம் கெய்ன் மற்றும் ஏபல் கதையில் மனிதன் நெற்றியில் சொந்த சகோதரனைக் கொலை செய்வது எழுதப்பட்ட விதி என்று கூறுகிறது

This is from Genesis, Old Testament (Chapter 4)

8 Cain said to his brother Abel, ‘Let us go out to the field.’* And when they were in the field, Cain rose up against his brother Abel and killed him. 9Then the Lord said to Cain, ‘Where is your brother Abel?’ He said, ‘I do not know; am I my brother’s keeper?’ 10And the Lord said, ‘What have you done? Listen; your brother’s blood is crying out to me from the ground! 11And now you are cursed from the ground, which has opened its mouth to receive your brother’s blood from your hand. 12When you till the ground, it will no longer yield to you its strength; you will be a fugitive and a wanderer on the earth.’ 13Cain said to the Lord, ‘My punishment is greater than I can bear! 14Today you have driven me away from the soil, and I shall be hidden from your face; I shall be a fugitive and a wanderer on the earth, and anyone who meets me may kill me.’ 15Then the Lord said to him, ‘Not so!* Whoever kills Cain will suffer a sevenfold vengeance.’ And the Lord put a mark on Cain, so that no one who came upon him would kill him. 16Then Cain went away from the presence of the Lord, and settled in the land of Nod,* east of Eden.


Cain was punished by God for killing Abel.  Kindly enlighten me as to  where in the Bible it is said to the effect--

விவிலியம் கெய்ன் மற்றும் ஏபல் கதையில் மனிதன் நெற்றியில் சொந்த சகோதரனைக் கொலை செய்வது எழுதப்பட்ட விதி என்று கூறுகிறது
--

Nagarajan Vadivel

unread,
Feb 9, 2013, 9:55:08 PM2/9/13
to vallamai
நான் விதி என்பதை அறநெறிக்கூறு என்ற அடிப்படையில் நோக்குகிறேன்

வள்ளுவர் வாழ்ந்த சமகாலத்தில் வழக்கில் இருந்த அறநெறிக்கூறுகள்
1. விவிலியயம் சார்ந்தது
2. மத்திய கிழக்கில் ஹம்முரபி அறநெறிக்கூறு
3. வள்ளுவர் கூறிய அறநெறி
விவிலியம் மனிதனின் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் ஒரு அணயத்தின் இரு பக்கங்கள். சாத்தான் கெட்டதைச் செய்யத் தூண்டினாலும் நல்லவனாய் இருப்பதே இரைவழி என்ற கருத்தைக் கொண்டது

ஹம்முரபி ரத்தத்துக்கு ரத்தம் உன் எதிரி எவ்வளவு ரத்தம் உன்னிடம் இருந்து எடுக்கிறானோ அவ்வளவு ரத்தம் நீயும் எடுக்கலாம் தப்பே இல்லை என்று கூறுவது

வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தமிழன் வழக்கில் கொண்டிருந்த வாழ்வியல் மரபு பாவம் புண்ணியம் என்ற நிலையை அறியாது காதல் வீரம் என்ற இரு நிலை வாழ்க்கை

வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழன் பின் பற்றிய அறநெறியை வள்ளுவம் ஆவணப்படுத்துகிரதா அல்லது ஒரு புதிய அறநெறியை வகுத்துத் தமிழனின் வாழ்வியல் புதிய அறநெறியைச் சார்ந்து வலியுறுத்துவதா என்ற கேள்விக்குத் தெளிவான விடை இல்லை

விவிலியத்தில் இறைவன் தண்டனை கொடுத்தது விலங்குகளின் இயற்கை நிலைக்கு மாறாகச் சொந்தச் சகோதரனைக் கொலை செய்தது. அதிலும் நல்லவனை ஒரு கெட்டவன் கொலை செய்தது இந்த இரண்டும் நல்ல பண்புக்கூறுகள் அல்ல என்பதால் இறைவன் அளித்த தண்டனை

பழம் தமிழகத்தில் குழவி ஆண்மகன் இல்லை என்றால் தாயே வாளால் அறுப்பதும் போரில் வீரமரணம் என்பது வாழ்வியல் மரபு என்றும் தலைவனுக்காகத் தலையைக் கொய்வதும் செஞ்சோறுக் கடன் கழிப்பதும் தமிழன் தொடர்ந்து கடைப்பிடித்த மரபன்றோ

வேதம் விவிலியம் இதைத் தவறென்றே சொல்லுகிறது

விவிலியம் seeing world through word என்று வலியுறுத்தும்

Text out of context சரியான அனுகுமுறையன்று

திருக்குறளைவைத்துத் தமிழனையும் தமிழனின் வாழ்க்கையை வைத்துத் திருக்குறளையும் விளக்குவது கொஞ்சம் விவகாரமான ஒன்று

அறிஞர்கள் தங்கள் புலமையைக் காட்ட கிடைத்த வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள்

நாகராசன்





--

Hari Krishnan

unread,
Feb 9, 2013, 9:59:33 PM2/9/13
to vallamai

எனக்கு உங்கள் பைபிள்  விளக்கம் புரியவில்லை.  புரிந்து கொள்ள முயல்கிறேன்.

2013/2/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



அறிஞர்கள் தங்கள் புலமையைக் காட்ட கிடைத்த வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள்


உண்மை.  தாங்கள் தங்களுடைய புலமையைக் காட்டுவதற்குக் கிடைந்த வாய்ப்பை நழுவவிடவில்லை என்று சொல்லும்போது, மறுப்பதற்கு நான் யார். :)

Nagarajan Vadivel

unread,
Feb 9, 2013, 10:02:09 PM2/9/13
to vallamai
நான் அறிஞன் என்று சொல்வது யார்?

தெரிந்துதான்  சொல்லுகிறாரா?

நாகராசன்


2013/2/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

seshadri sridharan

unread,
Feb 9, 2013, 10:02:26 PM2/9/13
to vall...@googlegroups.com
இத்தாலியார் அரிசியல் பார்வை உடையவர் அதனால் நளினி தப்பினார். மாறாக இலங்கையில் அப்பாவித் தமிழர் லட்சத்திற்க்கு மேல் கொல்லப்பட்டனர். இவரது சனிப் பார்வைபட்டு பல  லட்சம் மக்கள் வீடிழந்து, வேலையிழந்து, உறவு இழந்து திறந்தவெளிச் சிறையாளிகளாயினர். மனநிலையில் முசோலினி, இட்லர் போன்றோடும் உறவால் இராசபட்சரோடும் ஒப்பத்தக்கவர்.      


சேசாத்திரி 
2013/2/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Feb 9, 2013, 10:07:49 PM2/9/13
to vallamai
ஐயா
இலங்கை அரசியலின் உண்மை நிலை புரியாமல் எழுதுவதென்றால் எதை வேண்டும் என்றாலும் எழுதலாம்

போரில் இறப்பது வீர மரபு

இலங்கைப் போரில் சிங்கள் வீரர்களும் புலிப்படை வீரர்களும் வீராங்கனைகளும் சொந்த மண்ணில் ரத்தம் சொரிந்து உயிர் நீத்தது இருபக்கமும் பாராட்டுக்குறியதே

ஆனால் அப்பாவித் தமிழர்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தியது போர்த் தந்திரம் என்பது இப்போது போர்க்குற்றமாகப் பார்க்கப்படுமானால் போர்க்குற்றம் புரிந்தவர்கள் இரண்டு பக்கத்திலும் இருக்கிறார்கள்

நாகராசன்


2013/2/10 seshadri sridharan <ssesh...@gmail.com>

DEV RAJ

unread,
Feb 10, 2013, 12:23:05 AM2/10/13
to vall...@googlegroups.com
On Sunday, 10 February 2013 08:25:08 UTC+5:30, Nagarajan Vadivel wrote:
>>> வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தமிழன் வழக்கில் கொண்டிருந்த
வாழ்வியல் மரபு பாவம் புண்ணியம் என்ற நிலையை அறியாது காதல் வீரம்
என்ற இரு நிலை வாழ்க்கை <<<



மிகவும் தவறான கருத்து.
தொன்றுதொட்டுத் தமிழனின் வாழ்வியல் மரபில்
நல்வினை - தீவினை, நன்று - தீது, அறம் - அல்லது , மறுமை
இவற்றுக்கு வேண்டிய அளவு இடமிருந்தது -


வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!
அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!
                   (ஐங்குறுநூறு - மருதம்)


கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்
நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (புறநானூறு, 57)


தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன (புறநானூறு 192)


நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன்செய்வினைப் பயனே
                                      (நற்றிணை,210)


இன்னா வைகல் வாரா முன்னே
செய்ந்நீ முன்னிய வினையே;
முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே (புறநானூறு, 363)


இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்தவைகல்,
வாழச்செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை (புறநானூறு, 367)


இன்னும் பல உள;  விரிவுக்கஞ்சி சில
எடுத்துக்காட்டுகள் மட்டுமே இங்கு சொல்லப்பட்டன



தேவ்

Nagarajan Vadivel

unread,
Feb 10, 2013, 6:00:37 AM2/10/13
to vallamai
கருத்து என்றால் அது தனிப்பட்டது அதில் தவறு சரி என்று சொல்வதற்கில்லை

உங்கள் கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு அவ்வளவுதான்

ஆனால் நாம் இங்கே பேசுவதற்கு ஒரு ஆவண ஆதாரம் அறிஞர் கூற்று இருக்க வேண்டும்

பழம் தமிழர்களைப் பொருத்த மட்டில் அவர்கள் மேல் உலகம் கீழ் உலகம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல அவர்கள் வாழ்வுமுறையும் பழங்குடிகள் வாழ்வுமுறையை ஒத்து இருந்தது என்பது கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின் நிலை


தமிழர்களைப் பொருத்த அளவில் அவர்களின் வாழ்வியல் பல்வேறு விதமாக ஆதாரங்களுடன் குறிப்பிடப்படுவதால் பல கோணங்களில் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது

தமிழர்களின் வாழ்வு சங்க காலத்திலேயெ சங்கதத் தாக்கம் ஏற்பட்டு மாற்றம்பெட்டுவிட்டது என்பது ஒரு கோணத்தில் கிடைக்கும் தகவல்

நாகராசன்


2013/2/10 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Feb 10, 2013, 6:46:42 AM2/10/13
to vall...@googlegroups.com
On Sunday, 10 February 2013 16:30:37 UTC+5:30, Nagarajan Vadivel wrote:
>>> பழம் தமிழர்களைப் பொருத்த மட்டில் அவர்கள் மேல் உலகம் கீழ் உலகம் என்ற நம்பிக்கை
கொண்டவர்கள் அல்ல அவர்கள் வாழ்வுமுறையும் பழங்குடிகள் வாழ்வுமுறையை ஒத்து இருந்தது
என்பது கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின் நிலை  <<<



குறள் சங்க மருவிய காலத்திய நூல்;
உங்கள் கேள்வியும் அது குறித்ததே
பழங்குடிகளால் செவ்விலக்கியம் படைக்க
இயலாது. பழங்குடிகளுக்கு நளினமான
உவமை கூறி விளக்க முடியாது;
வள்ளுவம் அதைச் செய்துள்ளது.


” புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
  உலகுடன் பெறினும் கொள்ளலர்”
எனும் பாராட்டைப் பெற்ற ஒரு சமுதாயத்தை
ஆய்வு எனும் நோக்கில் எந்த ஒரு கோணத்திலும்
கொச்சைப்படுத்திப் பார்க்க இயலவில்லை


தேவ்

Nagarajan Vadivel

unread,
Feb 10, 2013, 7:06:11 AM2/10/13
to vallamai
கொச்சைப்படுத்தியது நானல்ல 1904-ல் தமிழ் ஸ்டடீச் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதிய கிருஷ்ணசாமி ஐயங்கார்

அவருக்கே வெளிச்சம்

தூதுவனைத் தாக்குவது மரபல்ல

நாகராசன்

வேந்தன் அரசு

unread,
Feb 10, 2013, 9:46:10 AM2/10/13
to vall...@googlegroups.com
தமிழ்மக்கள், மேல் உலகம், மறு பிறப்பு இவற்றை பொருட்டாக கொள்ளலை.

புறம் 214 பாடல். 

செய்குவம் கொல்லோ, நல்வினை?' எனவே
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே:
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு,
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.


(பொருள்.) அறவினையைச்செய்வேமோ அல்லேமோவென்று கருதி 
ஐயப்பாடு நீங்கார் அழுக்குச்செறிந்த காட்சிநீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாதோர்; யானைவேட்டைக்குப்போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்;
 குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது பெறாது வறிய கையினனாயும் வருவன்;
 அதனால் உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட நல்வினைக்கூற்றிலே அதனை அனுபவித்தலுண்டாமாயின் அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலுங் கூடும் (பி-ம். கூட்டும்); அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின், மாறிப் பிறத்தலிலேகூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங்கூடும்; மாறிப்பிறவாரென்று சொல்லுவாருள ராயின் இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது 2 புகழை நிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடிநின்று இறத்தல் மிகத் தலையாயது; அதனால் எவ்வாற்றானும் நல்வினைசெய்தல் அழகிது

DEV RAJ

unread,
Feb 10, 2013, 10:00:55 AM2/10/13
to vall...@googlegroups.com
On Sunday, 10 February 2013 17:36:11 UTC+5:30, Nagarajan Vadivel wrote:
>>> கொச்சைப்படுத்தியது நானல்ல 1904-ல் தமிழ் ஸ்டடீச் என்று
ஆங்கிலத்தில் நூல் எழுதிய கிருஷ்ணசாமி ஐயங்கார்<<<


ஐயா, நான் கருத்தை ஒட்டியே பேசுகிறேன்;
அது யாராக இருப்பினும் அவருக்கானது.
இலக்கியம், கல்வெட்டு, மண்பாண்ட
வரிவடிவ ஆதாரம் என்பனவற்றின்
அடிப்படையில் ஆராய்ச்சி
அமைதல் வேண்டும்.

சங்க இலக்கியம் இயல்பு நவிற்சியில்
அமைகிறது. ஆடம்பரமான அணிகள்,
சந்த வகைகள் அதில் இல்லை.
திருக்குறள் அதற்கு அடுத்த கட்டம்
என்பர் அறிஞர்.

குறைபாடுகள் பல இருந்தாலும்
வள்ளுவம் எதிர்பார்க்கும் உயர் விழுமியங்களை
ஏற்கும் பக்குவத்தில் அன்றைய சமுதாயம்
அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை.

மன முதிர்ச்சி பெறாத பழங்குடியினரிடம்
’மற்றீண்டு வாரா நெறி’ குறித்துப்
பேச இயலாது


தேவ்

Nagarajan Vadivel

unread,
Feb 10, 2013, 10:51:02 AM2/10/13
to vallamai
//குறைபாடுகள் பல இருந்தாலும்

வள்ளுவம் எதிர்பார்க்கும் உயர் விழுமியங்களை
ஏற்கும் பக்குவத்தில் அன்றைய சமுதாயம்
அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை.

மன முதிர்ச்சி பெறாத பழங்குடியினரிடம்
’மற்றீண்டு வாரா நெறி’ குறித்துப்
பேச இயலாது//

மானுடவியல் அறிஞர்களும் மொழியியலாரும் வியந்து போற்றுவது தமிழ்ப் பழங்குடிகளிடம் இருந்த மன முதிர்ச்சியும் நுண்னிய மன உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி ஆற்றலும்

இந்தியாவில் பழங்குடிகள் குறிப்பாக வடகிழக்கில் மணிப்பூர் பழங்குடிகள் வைணவம் வளர்த்ததும் ராதையின் மன உணர்வுகளை நடனத்தில் வெளிப்படுத்தியதும் பழங்குடிகளிடம் பொதுவில் காணப்படாத ஒன்று என்று குறிப்பிடுவர்

நாகராசன்
It is loading more messages.
0 new messages