ருக்மணி பரிணயம்

122 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Dec 18, 2013, 8:48:48 AM12/18/13
to mintamil, வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org, myla...@gmail.com, முனைவர் இர.வாசுதேவன், C.R. Selvakumar, Arunachalam sivakumar, resp...@shaivam.org
ருக்மணி எந்த நாட்டுப்பெண்
எனும் இழையின் தொடர் எனக் கொள்க 
--------------------------------------------------------
நன்றி தேவ் அவர்களே 

நான் இ ந்த சான்றினை  முந்தைய மடலிலேயே காட்டியிருக்கமுடியும் 

என்னிடம் உள்ள காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம் அண்ணங் காச் சாரியார் பதிப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் அநுபந்தமாகக் காணப்படும்  "தியப் பிரபந்த பகவத் கதாம்ப்ரதம் " எனும் பகுதியில் ஆழ்வார்கள் பாசுரங்களில் இடையிடையே குறிக்கப்பட்டுள்ளவை களை  விவரமாக விவரிக்க  எழுந்த  பல்வேறு புராணக்  கதைகள் 101 ல்  65 வதாகக் காணும் ருக்மணி பரிணயம் எனும் தலைப்பின் 
கீழுள்ள பகுதியில் இப்படி காண்கின்றது

அவையாவது :-

"விதர்ப்ப தேசத்து குண் டினம் எனும் பட்டணத்தில் பீஷ்மகன் எனும் அரசனுக்கு ருக்மி எனும் மகனும் ருக்மிணி எனும் மகளும் இருந்தனர். தகுந்த வயது வந்தவுடன் கிருஷ்ணன் சென்று ருக்மிணியை விவாகம் செய்து கொடுக்கும்படி கேட்க அண்ணன் ருக்மிக்கோ
சேதி தேசத்து அரசரான சிசுபாலனுக்கு மண ம் செய்விக்ககும்  எண்ணத்தில் அதற்கு உடன்படாது இருந்து பின் சுயம் வரம் செ ய்ய கோ டி த்து சகல தேசத்து மன்னர் களை அழைக்க கிருஷ்ணனாவன் பலராமன் முதலியோருடன் முன்பே சென்று ருக்மிணியைக் கவர்ந்து வர தந்த வக்ரன் எனும் அரசர்கள் போர்தொ டுக்க அவர்களை புறமுதுகு காட்டி ஓடச்செய்ய ருக்மியானவன் இப்படிசெய்தது ஏன் எனக்கே ட்க அவனை பிடித்து தேர்க்காலில் கட்டி மொட்டை யடித்து மான பங்கம் செய்து விட கொல்லாது  இப்படி விட்டது ஏன் எனும் போது ருக்மிணியின் மன நோக்க கூடாது என்பதற்காக எனச சொல்லிச் சென்று பின் கிருஷ்ணன் ருக் மிணி யை முறைப்படி விவாகம் செய்து கொண்டு பிரத்யும்னன் எனும் பிள்ளையைப் பெற்றான்  . அதனால் திருமால் காமர் தாதை ஆயினார் "
----------------------------------

கிருஷ்ணன் ருக்மணியை கவர் ந்து வரும் இக்கதையை சிறிதே சாரளம் (window ) திறந்து காட்டும் ஆழ்வார் வரிகள் இவை

 (ஆனால் மேற்படி 'கதாம்ருதம்' ஆழ்வாரின் வரிகள் இவை எனக் சுட்டிக் காட்டவில்லை ) 

பெரியாழ்வார் திருமொழி 
309
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்து
செருக்குற்றான் (#) வீரம் சிதைய தலையைச்                      (#)ருக்மியைக் குறித்தது)
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
                   தேவகி சிங்கத்தைப் பாடிப்பற  3
--------------------------------------------------------------------------------
மேலும் 
என்னிடம் உள்ள  மற் றோர் மிகப்பழமை பதிப்பான ஸ்ரீ மகா பாகவத வசனம் எனும் நூலில் 
 மரத்தில் அ ச்சு செய்து படங்களை பதிக்கும் பழமையான  தொழி ல் நுட்பத்தில் உள்ள தில் 
சத்திய பாமா கருடனின் மீதேறி நரகாசுரனு டன்  போரிடும் காட்சியும் ருக்மிணியை ஆழ்வார் 
வாக்குப்படியே அபகரித்து தேரோடிக்கொண்டு சென்றதும் உள்ளமைக்  காண்க 
----------------------------------------------
அதான்று 

விதர்ப்ப நாடு இந்தியாவின் நடுநாயகமாக விளங்கும் விந்திய சாத்புரா மலை த் தொடர்  பகுதியைச் சார்ந்தது 
(விந்தியா =பிந்தியா = பிந்தி = நெற்றி நடுவில் இடும் போட்டு )

கண்ணனின் துவரகையின் கிழக்காக அமைந்துள்ளதால் அங்குள்ளவர்களுக்கு சூரியன் விந்திய மலைகளுக்கு
ஊடே இருந்து உதயமாகும் நாடாகும்  என்பதால் அருணாச்சல நாடாகலாம் 
--------------------------------------------

அன்புடன் 

நூ த லோ சு 
மயிலை 

பின்குறிப்பு 
திரு தேவ் அவர்களுக்கு 
தமிழில் திருமணம் எனும் சொல்லுக் இணையாக  வடமொழியில் 

விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில் 
அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா? 

இங்கு  கிருஷ்ணன் செய்தது சில அகப்பொருள் இலக்கண  நூற்கள் காட்டும் வகையில் அ சுரவகை(இராட்சச)எனக்
 கொள்ள வேண்டும் அல்ல வா  ?பரிணயம் என்பது இவ்வழி ஏதாவது நு ண்ணி ய பொருள் காட்டுமா? 

rukmaniyai apakarithal.jpg
sathyabama naragasura vatham.jpg

DEV RAJ

unread,
Dec 18, 2013, 10:09:50 AM12/18/13
to mint...@googlegroups.com, mintamil, வல்லமை
On Wednesday, 18 December 2013 19:18:48 UTC+5:30, selvi...@gmail.com wrote:
விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில் 
அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா? 

நுண்ணிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

பரிணய -
परिणय
परि-णय . leading round , (esp.) leading the bride round the fire 

 
இங்கு  கிருஷ்ணன் செய்தது சில அகப்பொருள் இலக்கண  நூற்கள் காட்டும் வகையில் அ சுரவகை(இராட்சச)எனக்
 கொள்ள வேண்டும் அல்ல வா  ?பரிணயம் என்பது இவ்வழி ஏதாவது நு ண்ணி ய பொருள் காட்டுமா? 
 

பாரதப் பண்பாட்டில் மறவர் குலத்தினருக்குச் சிறையெடுத்து
மணம் புரிந்து கொள்ளும் வழக்கம் இருந்தது ; ஆகோள் பூசல்,
பெண்கோள் பூசல் அவர்களின் மரபு. முறைப்பெண்ணுக்கான
போட்டி இன்றும் ஊரகப் பகுதிகளில் உண்டு.

 
பெரியாழ்வார் திருமொழி 
309
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்து
செருக்குற்றான் (#) வீரம் சிதைய தலையைச்                      (#)ருக்மியைக் குறித்தது)
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
                   தேவகி சிங்கத்தைப் பாடிப்பற  3

இதைக்காட்டிலும் அழகாக நகைச்சுவையுடன்
நாச்சியார் ருக்மிணி பரிணயத்தைப் 
பாடியுள்ளார், கண்ணாலம் எனும் 
கொச்சை வழக்குடன் -

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே




தேவ்

DEV RAJ

unread,
Dec 18, 2013, 10:41:38 AM12/18/13
to mint...@googlegroups.com, mintamil, வல்லமை
On Wednesday, 18 December 2013 19:18:48 UTC+5:30, selvi...@gmail.com wrote:
விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில் 
அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா? 
 

விவாஹம் - மறுபெயர் உத்வாஹம்
திருமணஞ்சேரியில் சுவாமி பெயர்
உத்வாஹ நாதர்.
தமிழில் மணவாள நாயகர்.

சங்கதத்தின் கல்யாணம் உண்மையில் திருமணத்தைக் 
குறிக்காது; ஏனோ அப்பெயர் நிலைத்து விட்டது,
இலக்கிய வழக்கிலும்.

கல்யாணம் சங்கத அகராதியில்
மணவினையைக் குறிப்பதாக இல்லை -

kalyANa
 कल्याण -
beautiful , agreeable 
illustrious , noble , generous
excellent , virtuous , good ((कल्याणि , " good lady ")
beneficial , salutary , auspicious
happy , prosperous , fortunate , lucky , well , right 

ஹிந்தியில் ‘கல்யாண் ஹோ’ என ஆசி கூறினால்
வாழ்க வளமுடன்’ என்று பொருள்


தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 19, 2013, 4:13:17 AM12/19/13
to vallamai, mintamil, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org, myla...@gmail.com, முனைவர் இர.வாசுதேவன், C.R. Selvakumar, Arunachalam sivakumar, resp...@shaivam.org, Subashini Tremmel
கருத்துக்கும் படங்களுக்கும் நன்றி ஐயா.
தங்களிடம் அரிய நூல் சேகரம் உள்ளதைக் காண்கிறேன். ஆர்வமும் முயற்சியும் போற்றத்தக்கன.
நூல்கள் பெயரையும் சிறு விவரத்தையும் பகிர்ந்துகொண்டால் நூல்களைப் படிக்கவிட்டாலும் அறிந்தகொண்ட திருப்தியிருக்கும்.
ஒளிவருடிவைத்தால் என்றும் பயன் தரும் என்பது தாங்கள் அறிந்ததே.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/12/18 N D Logasundaram <selvi...@gmail.com>


என்னிடம் உள்ள காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம் அண்ணங் காச் சாரியார் பதிப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் அநுபந்தமாகக் காணப்படும்  "தியப் பிரபந்த பகவத் கதாம்ப்ரதம் " எனும் பகுதியில்
 
மேலும் 

N. Ganesan

unread,
Dec 19, 2013, 8:57:54 AM12/19/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, mintamil, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, CTa...@googlegroups.com, Nagarajan Vadivel, pollachinasan, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, panb...@googlegroups.com, perumal murugan, Periannan Chandrasekaran, Periannan Chandrasekaran, Periannan Senapathy, K Rajan, Dr. Krishnaswamy Nachimuthu, Banukumar Rajendran, A. R. Venkatachalapathy, Asko Parpola, Iravatham Mahadevan, Jean-Luc Chevillard, Jean-Luc Chevillard
On Wednesday, 18 December 2013 19:18:48 UTC+5:30, selvi...@gmail.com wrote:
விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில் 
அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா? 

நுண்ணிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

பரிணய -
परिणय
परि-णय . leading round , (esp.) leading the bride round the fire 

 
இங்கு  கிருஷ்ணன் செய்தது சில அகப்பொருள் இலக்கண  நூற்கள் காட்டும் வகையில் அ சுரவகை(இராட்சச)எனக்
 கொள்ள வேண்டும் அல்ல வா  ?பரிணயம் என்பது இவ்வழி ஏதாவது நு ண்ணி ய பொருள் காட்டுமா? 
பாரதப் பண்பாட்டில் மறவர் குலத்தினருக்குச் சிறையெடுத்து
மணம் புரிந்து கொள்ளும் வழக்கம் இருந்தது ; ஆகோள் பூசல்,
பெண்கோள் பூசல் அவர்களின் மரபு. முறைப்பெண்ணுக்கான
போட்டி இன்றும் ஊரகப் பகுதிகளில் உண்டு.
பெரியாழ்வார் திருமொழி 
309
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்து
செருக்குற்றான் (#) வீரம் சிதைய தலையைச்                      (#)ருக்மியைக் குறித்தது)
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
                   தேவகி சிங்கத்தைப் பாடிப்பற  3

இதைக்காட்டிலும் அழகாக நகைச்சுவையுடன்
நாச்சியார் ருக்மிணி பரிணயத்தைப் 
பாடியுள்ளார், கண்ணாலம் எனும் 
கொச்சை வழக்குடன் -

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே

Dev

On Wednesday, December 18, 2013 7:41:38 AM UTC-8, DEV RAJ wrote:
On Wednesday, 18 December 2013 19:18:48 UTC+5:30, selvi...@gmail.com wrote:
விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில் 
அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா? 
 

விவாஹம் - மறுபெயர் உத்வாஹம்
திருமணஞ்சேரியில் சுவாமி பெயர்
உத்வாஹ நாதர்.
தமிழில் மணவாள நாயகர்.

சங்கதத்தின் கல்யாணம் உண்மையில் திருமணத்தைக் 
குறிக்காது; ஏனோ அப்பெயர் நிலைத்து விட்டது,
இலக்கிய வழக்கிலும்.

கல்யாணம் சங்கத அகராதியில்
மணவினையைக் குறிப்பதாக இல்லை -


கலியாணம் என்னும் பழந்தமிழ்ச்சொல் கல்யாணம் என்று வடமொழியில்
வழங்குவதாக த்ராவிட மொழியியல் அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியுளர்.
வடமொழியில் தமிழ்போலவே பொதுவான பொருளும், கண்ணாலம் (< PDr கலியாணம்,
a common phenomenon called consonant assimilation in Prakrits). என்ற பொருளிலும்
சம்ஸ்கிருதத்தில் உண்டு.  உதாரணமாக, உமையைக் கலியாணம் செய்யும்
சிவனின் மணக்கோலம் சம்ஸ்கிருத நூல்களில் (iconography) கல்யாணசுந்தரமூர்த்தி
என்பது வழக்கு. வங்கத்தில் கிடைத்துள்ள கலியாணசுந்தரர் படிமையைப்
பற்றிய ஆய்வுக்கட்டுரை படித்துக்கொண்டுள்ளேன். Elephanta (கஜபுரி, மும்பை),
எல்லோரா குகைகளின் கலியாணசுந்தர மூர்த்தி காண்க.

கலியாணம் = கலி + யாணம் எனப் பிரியும். இருசொற்களைச் சேர்த்து முக்கியமான
சொற்களை அமைப்பது தொல் தமிழரின் மொழியியல் பண்பு. கண்காணி (கங்காணி),
... இற்றைத்தமிழில் போஸ்ட்கம்பம், ... என்பது கூட இவ்வாறே.

கலி - மகிழ்வொலி, செழித்தல், உருவாதல், எழுதல், பெருகுதல், செருக்கு, பீடு, ...
(கலியரசர் - கல்வெட்டுச் சான்று).
யாணம் < யாண- என்னும் வேர்த்தாது. யாணர் = கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை (புறநா. 66, 6)
புதிது, புதுவரவு, செழுமை, வளப்பம், புதுவெள்ளம், செல்வம், நன்மை, முறைமை, அழகு.
கலி- + யாண- என்ற தொல்த்ராவிடச் சொல் தமிழிலும், சங்கதத்திலும் கண்ணாலம் என்ற
பொருளில் விளங்குவது இதனாற்றான்.

விவாஹம், பரிணயம் - வடசொற்கள். ஆனால், கலியாணம் என்பது தமிழ்ச்சொல் (உ-ம்: திருவிக பெயர்
கலியாணசுந்தரன். கல்கி இவர்பெயரை வைத்துக்கொண்டது ப்ரசித்தம்).

-----------

தொல்த்ராவிட பாஷைகள் ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி என்று மாறியதன் வரலாற்றை Vedic Night என்பர் இந்திய தொல்லியல் அறிஞர்.
அவ்வரலாற்று இருளில் ஒளிபாய்ச்சும் மகரவிடங்கர் ஸ்வாமி ஹரியானாவில் கிடைத்துள்ளார். மழுவாள் நெடியோன்
என்னும் தலைப்பில் புதுச்சேரி https://fr.wikipedia.org/wiki/EFEO  École française d'Extrême-Orient, ஜனவரி 10, 2014 அன்று
சொற்பொழிவு ஆற்ற உள்ளேன். சென்னையில் இன்ஸ்டிட்யூட்டில் ஜனவரி 17, 2014 உரை. இடையில்
தமிழ்ப் புத்தாண்டு தினமாம் பொங்கலின்போழுது பொள்ளாச்சி தோட்டத்தில் பட்டிநோன்பு. (முன்பிருந்த நிலையை
கோவைகிழாரின் எங்கள் நாட்டுப்புறம் (பேரூர் ஆதீனம் தமிழ்க் கல்லூரி வெளியீடு) நூலில் வாசித்தருளலாம்.
சென்னை மின்தமிழ், வல்லமை, தமிழாயம், தமிழுலகம், பண்புடன், ... தமிழறிஞர்களும், அன்பர்களும்
வந்து என் ஆராய்ச்சியை ஆசீர்வதித்தருள வேண்டுகிறேன். அருட்செல்வர் நா, மகாலிங்கள் (உடல்நிலை அன்று
நன்றிருந்தால்) போன்றோர் வருகிறார்கள்.

பிற பின்னர்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 19, 2013, 9:07:19 AM12/19/13
to vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, CTa...@googlegroups.com, pollachinasan, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, panb...@googlegroups.com, perumal murugan, Periannan Chandrasekaran, Periannan Chandrasekaran, Periannan Senapathy, K Rajan, Dr. Krishnaswamy Nachimuthu, Banukumar Rajendran, A. R. Venkatachalapathy, Asko Parpola, Iravatham Mahadevan
This difference exists in Englsih also:
wedding = திருமணம்
marriage = கலியாணம்.

Pl. see the differences between wedding and marriage.
Same thing in Dravidian/Taml: between திருமணம் & கலியாணம்.

Happy Holidays to all!
N. Ganesan
தமிழ்ப் புத்தாண்டு பொங்கலன்று 
தமிழன்னையை வணங்குவோம்!
தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடுவோம்!


2013/12/19 N. Ganesan <naa.g...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "திருவள்ளுவர் சங்கத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tiruvalluvar...@googlegroups.com.
To post to this group, send email to tiruva...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tiruvalluvar.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

C.R. Selvakumar

unread,
Dec 20, 2013, 10:42:33 AM12/20/13
to தமிழாயம், தமிழ் மன்றம், vallamai, Nagarajan Vadivel, pollachinasan, tamil_ulagam, perumal murugan, Periannan Chandrasekaran, Periannan Chandrasekaran, Periannan Senapathy, K Rajan, Dr. Krishnaswamy Nachimuthu, Banukumar Rajendran, A. R. Venkatachalapathy, Asko Parpola, Iravatham Mahadevan, Jean-Luc Chevillard, Jean-Luc Chevillard
கலியாணம் என்னும் சொல் பற்றிய முக்கியமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை
முனைவர் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதியிருக்கின்றார் 
கட்டாயம் படித்துப்பாருங்கள்:
http://www.laurasianacademy.com/pleonastic.pdf

அன்புடன்
செல்வா

Innamburan S.Soundararajan

unread,
Dec 20, 2013, 10:50:32 AM12/20/13
to vall...@googlegroups.com
Thank You, Dr.Selvakumar,
Interesting, Informative and Instructive. I have saved it.
Regards,
Innamburan










இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


2013/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>:
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Dec 20, 2013, 4:09:39 PM12/20/13
to வல்லமை
திருவாளர் செல்வா அவர்களுக்கு 
நன்றி அய்யா 

இதுமுதல் எ ன் கருத்துக்களை தமிழ் மன்றதத்திலு ம் வைக்கின்றேன் 

பெரியண்ணன் நூல் பற்றி காட்டியதற்கு நன்றி 
பொறுமை மையாகப்படிக்கவேண்டும் 
-----------------------------------------
வேறு 

திருமணம் / கல்யாணம்

பாணிக்கிரகணம் , வதுவை , மன்றல் 

திருமணத்திற்கு  வடமொழி வழியில் பாணிக்கிரகணம் என்னும் ஒரே சொல்லும் உள்ளது 

பாணி=கை த்தலம் (கைத்தலம் ற்றக் கனாக் கண்டென் தோழி >>> ஆண்டாள் )

கிரகணம் = பற்றுதல் 

சூரிய சந்திர கிரகண ங்களிலும் முறையே ராகு கேது எனும் பாம்புகள்  பற்று வதாகத்தா ன் 
புராண ஐதீகங்கள் காட்டுகின்றன 

கிருபானந்த வாரியார் அவர்கள் தன சொற்பொழிவினி ல் இந்த பற்றுதலைக் விவரித்து பின் 

அந்த வானத்து கிரகண ங்கள் பிடித்தால் சில மணிகளில் விட்டுவிடும் ஆனால் இம்மக்கள் 
மேற்கொள்ளும் பா ணிக்கிரகண ம்(திருமணம் ) பிடித்தால் வாழ்க்கை முழுதும் விடவே
விடாது  எ ன்பார் நகைச் சுவைக்காக 

சிவபெருமானின் கல்யாணசுந்தரம் மூர்த்தம் அதனில் 
ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கைமேல் வைத்துதான் காட்டுவது மரபு 
அதான்று மணப்பெண் ஆணின் வலப்பபுற ம் தான் நிற்ப்பாள் 

( மக்களும் திருமண தாலி கட்டும் போ து ஆணின் வல ம் தான் மணமகள் அமர்வாள் 
ஆனால் மற்ற நிகழ்வுகளில் இடம் அமர்வாள் 

இ ஃ து சிவனின் இடப்பால் மாதொரு பாகன் கருத்து >>
ஆனால் வைணவத்தில் திருவானவள் திருமாலின்
 வலது மார்பில் தான் வைகுவதாகக் காட்டப்படும் 



மேலும் இதற்கு திருமணத்திற்கு  தமிழிலேயே 

வதுவை எனும் சொல்லும் உள்ளது 

11-12 நூற்றாண்டு நூல் களா ம் பெரியபுராணம்  சீவக சிந்தாமணி என் ப வற் றில் பெரிதும் காண்கின் றது 

ஏன் தொல்காப்பியத்தி லும்  உள்ளது  நிகண்டுகள் காட்டுகின்றன
இதனுக்கு  எடுத்துக்காட்டுச் சான்றுகள் காட்டும் கோப்பு  இணைப்பினில் காண்க 

மன்றல் 
எனும் சொல்லும் திருமணத் தைக்குறி க்கும் என நிகண்டுகள் காட்டுகின்றன 




அன்புடன் 
நூதலோசு 
மயிலை 



2013/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
vathuvai=thirumaNam.txt
KALYANASUNDARAM2.jpg
E;EPHENTAA CAVES.JPG
KALanASUNDARAM 1.jpg

Innamburan S.Soundararajan

unread,
Dec 20, 2013, 4:19:30 PM12/20/13
to vall...@googlegroups.com
சுவையும் செய்தியும், இலக்கிய செறிவும் கூடுகிறது. நன்றி, ஐயா.

2013/12/20 N D Logasundaram <selvi...@gmail.com>:

N. Ganesan

unread,
Dec 20, 2013, 8:26:01 PM12/20/13
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, mintamil, tiruva...@googlegroups.com

கலியாணம் என்னும் த்ராவிடச்சொல் எல்லாப்பொருளிலும் சம்ஸ்கிருதத்தில் வழங்குகிறது.
உ-ம்: கலியாணசுந்தரேசுவரர் பற்றிக் குறிப்பிட்டேன். கல்யாணி என்ற நகரம் வடகன்னட நாட்டில்
உண்டு, குமாரசம்பவம் - இருவார்த்தைகள் சம்ஸ்கிருதத்தில் சேரும்போது உயிரெழுத்தி குன்றும்-
குமார்சம்பவம் ஆகும். அதுபோலே, கலியாணம் என்னும் தமிழ் கல்யாண என வடமொழியில்
ஆகியுளது.

மண்ணுதல் என்னும் வினையடிப் பிறக்கும் மண்ணான் என்னும் பெயர்ச்சொல் ஆதித்ராவிடர்களிடையேயும்,
மலையாளத்திலும் அப்படியே இருக்கிறது. ஆனால், மற்ற குலத்தாரிடையே மண்ணான் வண்ணான் ஆகிவிட்டது
அல்லவா? அதுபோலவே மொள்ளல்/மொண்டல் (கிணற்றில் நீர் மொண்டுவந்தாள்), மள்ளல், மண்டல் என்னும்
சொற்களில் இருந்து வண்டல் என்ற சொல் கிடைத்துள்ளது. அவ்வாறே, வதுவை என்பதன் பழையவடிவம் மதுவை
என்பதாகும். இதை அனைத்து த்ராவிடமொழிகளையும் ஒப்பிட்டால் தெரியும். (மதுவை > வதுவை).
வதுவை என்ற சொல்லுக்கு வேர்விளக்கம் காணோம். ஆனால், மதத்தல் - பிணைத்தல், மதர்ப்பு, மதகளிறு என்ற
சொல் போஸ்ட்கம்பம் என்பது போன்ற சொல்தான். மதுகை. மது - மிகப்பழைய substratum எல்லா இன்றைய
மொழிகளுக்கும் தந்தசொல். mead என்பர் ஐரோப்பாவில். மது தமிழ், வடமொழி. இதிலிருந்து மதுகை.
மதுகம் என்றால் இலுப்பைப்பூ. கள்- என்ற சொல் களிறு, கணவன் போன்ற சொற்களை உருவாக்கும்.
அதேபோல், கன்னடம் துளுவில் மதுவை. மதவன் என்றால் கணவன். 

மண்ணார் > வண்ணார், மண்டல் > வண்டல், மதுவை > வதுவை என்றாகியிருக்கிறது. 

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய்பி ளந்ததும்

மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும், அதுவிது

உதுவென்ன லாவன வல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்,

முதுவைய முதல்வா! உன்னை யென்று தலைப் பெய்வனே?



கண்ணன் ஒவ்வொரு கோபியர்க்கும் ஒவ்வொரு கண்ணனாகத் தோன்றி மதுவை வார்த்து ராசக்கிரீடை செய்த செயலை ஆழ்வார் பாடுகிறார்:
ஒவ்வொரு கோபியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாக வடிவெடுத்து நின்று ராஜக்ரீடை பண்ணி ஸௌசில்யம் காட்டின அழகு என்!;” PBA

காமன் (கமம் - தொல்காப்பியச் சொல்), அனங்கன் < அணங்கன் போலவே மதனம் - சமுத்திர-மதனம் (கடைதல்) போன்றவர்றில் இருந்து
காமனின் இன்னொருபெயர் ஆன மதனன் இந்த மதத்தல் (வினைச்சொல்), மதம் (மதகளிறு), போன்றவர்றில் இருந்து தோன்றுகிறது என்பது
வெள்ளிடைமலை.

DEDR: திராவிட வேர்ச்சொல் அகராதி தருவது பார்ப்போம்.

4687 Ta. mata (-pp-, -tt-)
4687 Ta. mata (-pp-, -tt-) to be furious as by must or fanaticism, be luxuriant or fruitful, grow fat, be wanton or lascivious, be intoxicated, be arrogant, be bewildered; n. (also matavu) strength, beauty, excess, abundance, ignorance; matakkam stupor caused by over-eating or drinking, weariness; matappu being intoxicated, exhilaration, wantonness or voluptuousness, being ferocious as beasts, being fertile as land, being luxurious as trees or vegetation; matam exhilaration, exultation, joy, ichor of elephants, strength, pride, arrogance, presumption, honey, madness, frenzy, wantonness, lasciviousness, venereal heats, richness of land, fertility, inebriety, intoxication, musk, abundance, greatness; mataṉ arrogance, strength, enthusiasm, elation, beauty, greatness, glory, abundance, excess, ignorance, bewilderment; matar (-pp-, -tt-) to flourish, be fertile, rich or luxuriant, be too luxuriant to be productive (as soil, plants, etc.), be affected with frenzy as a bull or elephant, be self-conceited, arrogant, rejoice, be full of joy, increase, abound; n. pride, arrogance, self-conceit, wantonness, joy, abundance, rush, gust, impulse, bravery; matarppu, matarvu flourishing, being rich, plump or luxuriant, joy, delight, intense desire, beauty, strength, abundance, fullness; matarvai flourishing, being rich, plump or luxuriant, pride, haughtiness, exhilaration, bewilderment; matalai desire, attachment; matār arrogance; matāḷi (-pp- -tt-) to thrive, flourish, be luxuriant, rich, be too luxuriant to be productive as plants, soil, etc.; mati (-pp-, -tt-) to be haughty, be furious; matippu growing fat (as a person), growing leafy (as a plant); mataiiya wanton, lascivious, beautiful, handsome, innocent, strong; matukai strength. Ma. madam delight, intoxication, elated spirits, passion, juice that flows from a rutting elephant's temples; madāḷikka to grow rank; madikka to be elated, intoxicated, be in rut. Ka. masaka vehement emotion, great agitation, passion, wrath, rage; masagu, mosagu to expand, become expanded, developed, break forth or out, appear, rise; activity to be displayed, be agitated or commoved; be urged on by the passions, grow furious, be enraged, rage; display, exhibit, manifest; mase acute lust. Koḍ. madi- (madip-, madic-) (animal) is lustful of the female, (elephant) is in must. Tu. madakuni to go or move swiftly. Te. masāgu to rage, be enraged or furious, increase, rise or swell, be extended; masakamu copulation, sexual desire or inclination; masakonu to feel sexual desire, yield, melt, be charmed; masaru frenzy, fury, absorption; (K. also) vb. to grow frenzied, arrogant, proud; masalu to boil well or violently, bubble; madincu to become fat. Kur.madārnā to be nervous and fidgety (as an animal overfed and left without work), be in rut, grow fond of a thing through habit, (Hahn) be intoxicated. Cf. 4706 Ta. maya. / The group has been influenced by Skt. mad- and its derivatives. Cf. also Skt. mac- to be arrogant, Pkt. maccaï is excited, etc.; Turner, CDIAL, no. 9710. DED(S) 3835.

4694 Ta. vatuvai

4694 Ta. vatuvai bride, wedding, wedding garland, sexual union. Ko. madv Badaga wedding ceremony. To. meQf marriage of people other than Todas. Ka. mada joining, wedding, marriage; madal, madive, maduvewedding, marriage; madaliga, madavaṇiga bridegroom; madaligitti, madavaṇigitti, madavaḷige, (K.2madevaḷ bride; madavana man connected by marriage, husband. Tu. madůmè wedding; madůmāyebridegroom; madůmāḷů bride, pubescent female. Kuwi (Ḍ.) mahla betrothal. DED 3841.

மதுவை என்பது மூலச்சொல் தமிழிலக்கியம் அதனை வதுவை ஆக்கியுள்ளது (cf. maNNaan > vaNNaan, maNDal > vaNDal, ...)

நா. கணேசன்






seshadri sridharan

unread,
Dec 21, 2013, 7:56:02 AM12/21/13
to vall...@googlegroups.com
2013/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

கலியாணம் என்னும் சொல் பற்றிய முக்கியமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை முனைவர் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதியிருக்கின்றார் கட்டாயம் படித்துப்பாருங்கள்: http://www.laurasianacademy.com/pleonastic.pdf

அன்புடன்
செல்வா

ஆழ்ந்த கருத்துடைய ஆய்வு. அதுதான் சமற்கிருதம் என்றால் பிற மொழிச் சொற்களை கடன் வாங்காது. சமற்கிருத சொல் ஒவ்வொன்றும் மந்திரம் போல் உயர்வானது என்று மக்களது பகுத்தறிவைக் கட்டிப் போட்டுவிட்டார்களே. அதனால் சமற்கிருத பித்தர் குழாம் இந்த ஆய்வுக்குழுவை ஏற்குமா? என்பது ஐயமே.

சேசாத்திரி

seshadri sridharan

unread,
Dec 21, 2013, 7:57:18 AM12/21/13
to vall...@googlegroups.com



2013/12/21 seshadri sridharan <ssesh...@gmail.com>
// ஆய்வுக்குழுவை ஏற்குமா? என்பது ஐயமே.//

ஆழ்வுக் கருத்தை என்று திருத்தி உள்ளேன்.

N. Ganesan

unread,
Dec 21, 2013, 8:01:38 AM12/21/13
to vall...@googlegroups.com, mintamil
இந்த ஆழ்வுக்கருத்தை  சமற்கிருத குழாம் ஏற்கும் என்று சொல்லவியலாது. ஆனால், அறிஞர் உலகம் (இந்தியவியல் துறை)  உலகப் பல்கலைக்கழகங்களில்
ஏற்றுக்கொண்டுவிட்டது. திருவள்ளுவர் சமண சமயஞ்சார்ந்தவர் என்பதை உலகின் தலைசிறந்த ஆய்வுப் பல்கலைகள் ஏற்றாற்போல.

பலமுறை நண்பர் பெரி. சந்திரா கட்டுரையையும், கலியாணம் என்பதன் தமிழ் வேர்த்தாதுவையும் பற்றி மின்தமிழில் எழுதிய்ருக்கிறேன். பார்த்தருள்க.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 21, 2013, 8:07:55 AM12/21/13
to vall...@googlegroups.com, mintamil


சேசாத்திரி,

உங்கட்கு ஓர் செய்தி:
நீங்கள் மாதிரி தான் நண்பர் சந்திரா. யோகத்தில் பெரிய ஈடுபாடுள்ளவர். நல்ல யோகி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 21, 2013, 7:17:50 PM12/21/13
to vall...@googlegroups.com, மின்தமிழ், thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com
முன்றில் என்பது மன்றல் எனவும் தமிழில் வரும். உற்றாரும், ஊராரும், உலகும்
அறிய மன்றில் நடக்கும் கலியாணம் மன்றல் என வழங்குகிறது. ஈழ நாட்டில்
இன்னும் புழக்கத்தில் உள்ள சொல். அந்நாட்டுக் கதை, இலக்கியங்களில் தேடினால்
இன்றும் நிறையக் கிட்டும். உ-ம்: மகாகவியின் மகன் சேரன் (பேராசிரியர், விண்ட்சர் பல்கலை,
கனடா) பயன்படுத்திக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டுத் தமிழர்கள் சேரன் போன்றோர்
பேசும் தமிழை - ஏற்ற இறக்கம் கொண்ட இசைத்தமிழாய் இருப்பது - மலையாளமா?
என்றும் கேட்பதுமுண்டு. மகாகவியின் கவிதைகளில் மன்றல் இருக்கிறது.
மகாகவி தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினை ஒன்றை முதலில் உறைப்பதற்காகப் பாடினவர்:

பெரியார் தொடங்கிய சாதிமறுப்பு, சுயமரியாதைத் திருமணங்கள் இத் தூய தமிழ்ச்சொல்லைப்
பல ஆண்டுகளாகக் கைக்கொண்டுவருகின்றன.  மன்றல் விழா 2012-ல் 
தொல். திருமா வாழ்த்துச் செய்தி இது. மிக முக்கியமானது.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages