தமிழின் திரிபே வடமொழி!

170 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Mar 17, 2013, 8:47:08 AM3/17/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

தமிழின் திரிபே வடமொழி

 

முனைவர் கி. லோகநாதன் 17-3-13

 

அன்பர்களே

 

என்று சுமேருத் தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து நலமே முடிந்த வரையில் கற்று அது தொல்தமிழே, கடைச் சங்கத் தமிழ் போன்ற தமிழ் மொழி அதிலிருந்து கூர்ந்து வளர்ந்த ஒன்றே என்று அறிய வந்தேனோ அப்பொழுதே செங்கிருதமாகிய வடமொழியும் அந்த மொழியின் ஓர் திரிபே என்று நினைக்கத் தோன்றிற்று. சுமேரு இலக்கியத்தில் மிகப் பரவலாக இன்று வடமொழியில் பயினும் பல சொற்களும் இலக்கணக் கூறுகளும் காணக்கிடக்க இத்தகைய ஓர் உணர்வு தோன்றிற்று. பிற்காலத்தில் இந்த உள்ளுணர்வு தக்க ஆய்வு மூலம் உறுதி செய்ய வடமொழியை ஓரளவு கற்று இருக்குவேதம் ஆங்கில மொழிபெயர்ப்பு போன்ற நூற்களின் உதவியோடு இந்த ஆய்வினையும் மேற்கொண்டு சுமேரு மொழியாகிய தொல்தமிழின் ஓர் பண்டையத் திரிபே வடமொழி என்று நிறுத்தி பல கட்டுரைகளை வரைந்துள்ளேன், அவற்றில் சில மரபு விக்கியில் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான கட்டுரைகளை கீழே வரும் வலைபக்கத்தில் அன்பர்கள் காணலாம்

 

https://sites.google.com/site/vedictamil/

 

 

இங்கு இந்த ஆய்வினை தமிழ் மொழியில் தந்து தமிழ் அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்,

 

முதலில் இருக்கு வேதத்தின் முதல் சில சுலோகங்களிலிருந்து தொடங்குவோம்,

 

குறிப்பு:

 

I shall now take up for an intensive study  the First Hymn of Rig Veda and for this I rely on the English translation by Svami Satya Prakash Sarasvati and Satyakam Vidyalankar and published by Veda Pratishthana ,  New Delhi, 1977. My rendering of the  verses just using the ordinary fonts will not be  very accurate and hence those who wish to have a more accurate transcription are advised to consult the original which is given both in Devanagri Script as well as English . The authors have the meanings along with semantic and other considerations in the notes where the opinions of Sayana (say) , Dayananda ( day), Arobindo  (aro) and so forth are also given. These notes have been very useful but I shall also  give my own by tracing the words and their meanings  to their Sumerian and tamil  occurrences .

 

Hymn 1:1

Agnim iile purohitam yajjnasya devam ritvijam / hotaram ratnadhaatamam

We worship the adorable God, the high priest of cosmic activities, the divine , the one who works through the eternal laws, and who feeds and sustains all that is divine and luminous.

அக்நிம் ஈலே புரோஹிதம் யாஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜம்/ ஹோதாரம் ரத்னதாதமம்

(வட எழுத்துக்கள் முற்றிலும் தமிழில் இயலாத நிலையில் தமிழில் தந்துள்ளது பல குறைபாடுகள் உள்ள ஓர் எழுத்துப் பெயர்ப்பே. இந்த குறைகளை மனதில் கொண்டே இந்த ஆய்வு செல்கின்றது)

தரப்பட்டுள்ள பொருள்கள்

agnim: the foremost leader, makes everything part of himself, drying agent; (Day) : Supreme Lord who is venerable adorable , is available everywhere etc. Also master of tejas, brilliance etc.; (aro)  fiery light , mystic fire; God-will

iile : to worship,  to adore, to love, to embrace, to praise , and even to desire and yearn for

சுமேருத் தமிழில் வரும் ஒத்த சொற்கள்

உக்நிம்:  போர் வீரர்கள் (கொல்பவர்கள், அழிப்பவர்கள்)

தமிழ்: உக்கு, அக்கு: கொல்தல் அழித்தல். உக்ரம்: கொடூரம்

Sirbiyam

99. sir-ku-ga-ke-es i-ug-ge-de-es ( At( the sound of ) my sacred song they are ready to die

* Ta. ciir kokakee-isu ii ukkidu-isu ( ")

சீர் கோகக்கேயிசு ஈ உக்கிடுயிசு

46. ugnim-bi ni-bi-a ma-ra- ab-si-il-e ( It disbands its regiments before you of its own accord)

* Ta. ukkunam-bi niibiya  maa(nRa) ab  cillee  ( The band of warriors disband themselves on your behave on their own accord)

உக்நிம்பி நீபிய மா(ன்)ற அவ் சில்லே

Sk iilee தமிழ்: எல், எல்லு

‘எல்லே இலக்கம்’ என்பார் தொல்காப்பியர். இச்சொல் அக்ககாடிய மொழியில் ‘எல்லு”(ellu)  என்றும் சுமேரிய ‘கோ’ (<சூ) என்ற சொல்லிற்கு ஈடாக கொடுக்கப்படும் ஓர் சொல்லாகும். ஆனால் இதுவும் சுமேரிய ‘எரி, ரி” (நெருப்பு) என்ற சொல்லின் திரிபு என்றேத் தெரிகின்றது. காண்க

சூருப்பாக்கின் நெறி(நரி) (கி.மு 3000)

1.    [u]ri-a u sud-ra ri-a ( In those distant days, in those far remote days)

எரிய சூத்திர எரிய

uu eriya uu cuuttira eriya

இங்கு ரி> எரி என்றாகி பின் ‘எல்லு’ என்றாகி இருக்க வேண்டும். இங்கு ‘சூத்திர’ என்பது ‘தொலைவு’ ‘தூரம்’ என்றெல்லாம் பொருள் படும். ‘தொல்’ என்றும் பொருந்தி வரும்.

ஆக சுமேருவின் ‘உக்நிம் எல்லே” அதாவது கொல்கின்ற அக்குகின்ற நெருப்பு என்ற பொருள் உடையதாக விளங்க அதன் திரிபே ‘அக்நிம் ஈலே” என்று தெரிகின்றது. பிற்காலத்தில் ‘எல்லு’ மறைய ‘அக்நிம்’ என்ற சொல்லே அக்நி என்றாகி தமிழில் அங்கி என்றும் ஆகி இருக்கலாம்.

தொடரும்

 

வேந்தன் அரசு

unread,
Mar 17, 2013, 9:37:59 AM3/17/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
‘அக்நிம்’ என்ற சொல்லே அக்நி என்றாகி தமிழில் அங்கி என்றும் ஆகி இருக்கலாம்.

வடமொழியின் திரிபே  தமிழ் என தலைப்பை மாற்றுங்க ஐயா


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

K. Loganathan

unread,
Mar 17, 2013, 9:47:56 AM3/17/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

அது எப்படி முடியும்  தொல் தமிழாகிய சுமெருத் தமிழில் எழுதப்பட்ட இலக்கியம் கி.மு 3000 க்கு செல்கின்றது, இருக்கு வேதத்தின் காலம் கி,மு. 2000 க்குப் பின். மேலும் பிறகு சில கட்டுரைகளில் தொல்தமிழாகிய சுமேருத் தமிழிலிருந்தே இருக்கிருதம் எனப்படும் இருக்கு வேத மொழி தோன்றியுள்ளதை விளக்குவேன்

 ஆக மாற்ற வேண்டாம்: தொல்தமிழாகிய சுமேருத் தமிழின் திரிபே வடமொழி.

உலகன்

2013/3/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

K. Loganathan

unread,
Mar 17, 2013, 9:57:03 AM3/17/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

உக்நிம் (ugnim) என்பதே மூலம். இது தமிழ் உக்கு, அக்கு என்பன போன்ற  சொற்களோடு தொடர்புபுடைய தொல்தமிழ் அதாவது  சுமேருத் தமிழ் சொல் ஆகும். ஆக மூலம் தொல்தமிழ் எனும் தமிழ் தானே!

உலகன்

2013/3/17 K. Loganathan <k.ula...@gmail.com>

Thevan

unread,
Mar 17, 2013, 9:57:58 AM3/17/13
to vall...@googlegroups.com
சமஸ்கிருதம் ஒரு காலத்திலும் பேசப்படும் மக்கள் மொழியாக இருந்ததில்லை. அது ஞானிகள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட மொழி என்று ஓஷோ சொல்லி இருக்கிறார். 

வேந்தன் அரசு

unread,
Mar 17, 2013, 10:09:25 AM3/17/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com


17 மார்ச், 2013 9:57 AM அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

அன்பரே

உக்நிம் (ugnim) என்பதே மூலம். இது தமிழ் உக்கு, அக்கு என்பன போன்ற  சொற்களோடு தொடர்புபுடைய தொல்தமிழ் அதாவது  சுமேருத் தமிழ் சொல் ஆகும். ஆக மூலம் தொல்தமிழ் எனும் தமிழ் தானே!

உலகன்



ஐயா

உக்கு, அக்கு  எனப்னவற்றுக்கும் நீங்கள் சான்றுகள் கொடுக்கணும்

உக்கு எனில் சிந்த்துதல்

”நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காங்கு”

அக்கு என்றால் சிறு ஊசி

”அக்கு வேறு ஆணி வேறாக பிரி”

அவற்றுக்கு அக்னி எனும் பொருள்தரும் இலக்கிய சான்று, அல்லது தமிழ் வழக்கு உளவா? 



--

K. Loganathan

unread,
Mar 17, 2013, 9:30:17 PM3/17/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

எனக்கு ஓஷோ அவர்களைப் பற்றி அதிகம் தெரியாது, மேலும் அவருக்கு சுமேருத் தமிழ் அறிவு இருந்ததா என்றும் தெரியவில்லை.

'உக்கு அக்கு ' அறிஞர்கட்கு தெரிந்த சொற்கள் என்றே நினைத்திருந்தேன். கீழே Tamil Lexicon- இல் கண்டது:

>>>

1. உகு தல் uku- : (page 387)

யுகாநின்ற மேனியும் (திருநூற். 45). 6. To fall down, fig. to die; சாதல். உக்கார் தலைபிடித்து (தேவா. 641, 4). 7. To melt, pine, languish, wither; கரைந்து தேய் தல். உக்கு விடுமென் னுயிர் (கலித். 138). 8. To set, as heavenly bodies; அஸ்தமித்தல். உத யக்குன்றி னின்றுகு குன்றில் (கம்பரா. இராவணன்றா. 39). 9. To

 சுமேரிய 'உக்நிம்' 'உக்கு'(கொல்லல் சாதல்) என்பவற்றோடு இது ஒத்thu வருகிண்றது என்றே நினைக்கின்றேன்

உலகன் 
2013/3/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

K. Loganathan

unread,
Mar 18, 2013, 10:57:04 PM3/18/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

purohitam

அடுத்து ‘purohitam’  என்ற சொல்லின் தொல்தமிழ் வடிவைக் காண்போம். இங்கு தமிழின் ‘புரோசு; அப்பர் பெருமானின் புரோதயம் (அப்பர்: நாம் யார்க்கும் குடி அல்லோம் எனும் பதிகத்தில் “நீராண்ட புரோதயம் ஆடப் பெற்றோம்’ என்று வருகின்றது). இங்கு புர்-உதயம் எனும் போது ‘புர்’ எனும் சொல் அதிகாலை அல்லது பண்டு என்றெல்லாம் பொருள் தரும் . பூர்-வீகம்’ என்பது இதனின்று வந்த ஓர் சொல்லாக இருக்கலாம். ‘புர்-ஆணம்’ ‘புர்-ஆதனம் என்ற சொற்களிலும் இச்சொல் பயில்வதாகத் தெரிகின்றது

அடுத்து ‘புர்’ என்றால் ‘புரம், புரி என்பன போன்ற சொற்களின் மூலம் எனக் கொண்டு ஓர் இடம் என்றும் ஊர் என்றும் கொள்ளலாம். சுமேருத் தமிழில் இவ்வாறு pur, par  என்ற சொல் வருகின்றது. சுமேருவின்  gi-par  என்ற சொல் mi-par  என்றும் வாசிக்கப்பட்டு ஓர் கோயிலின் கரு-அறையைச் சுட்டும்  gi=mi என்றாகும் தமிழ் மை: கரி என்றுதான் பொருள் படும் ஆக  purohitam  என்ற சொல்லை  pur-uu-ki-dam’  என்று எடுத்துக் கொண்டால் பூர்வத்தில்(pur) இருளைக் கடியும் ஒளியை(uu) உலகெங்கும்( Su ki, ku: place, world land etc) தந்துள்ளது ( dam, tam? Su tar , Ta. taa?)

ஆக இங்கு ‘அக்நிம் எல்லே” எனும் கடுமையான ஒளி, ஞாலத்தில் தொல் இருளை ஒளி பாய்ச்சிக் கடிகின்றது என்று ‘அக்நிம் எல்லே புரோஹிதம்’ என்ற தொடரின் பொருளை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

Su. u (uu. O?) : radiant light

காண்க (ஈnaன்னை சீர்பியம்)

1.    nin-me-sar-ra u-dalla-e-a

Lady of all the me's resplendent light

நின் மெய் சர்வ உள் தெள்ளிய

சில சுமேரு அறிஞர்கள் ‘u’  என்று வாசிக்கப்படுவதை ‘ஒ’ என்றும் வாசிக்கலாம் என்கின்றனர். தமிழில் ஊ . உள் > ஒள்> ஒளி என்றாகியுள்ளது என்று தெரிகின்றது. உகாரம் எனும் அக்கரம் ஒளியைக் குறிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இங்கு ‘உள்’ என்பது ‘உண்-மை; என்றுமாகி எது ஒளியாகி வெளிப்பட்டு நிற்கின்றது அதுவே ‘உண்மை’ என்று ‘உள், உண்’ ஆகிய சொற்களின் வேர்ப்பொருளைத் தருகின்றது.

இன்னொர் இடத்தில்  Su u (ul, ul-li)  தமிழின் ‘ஊழ், ஊழி’ என்றும் ஆகும் காண்க

சூருப்பாக்கின் நெறி(நரி)

மேலே காட்டபட்டது மீண்டும்

1.    [u]ri-a u sud-ra ri-a ( In those distant days, in those far remote days)

எரிய சூத்திர எரிய

uu eriya uu cuuttira eriya

இங்கு ‘u’  ‘ஊழி’ என்று வருவதைக் காண்க. இந்த சுமேரிய ‘ஊழி எரி” அல்லது ஊழித் தீயே இருக்கு வேதத்தில் ‘அக்நிம் எல்லே’ யாக சொல் அளவில் மருவி வந்திருப்பதாகத் தெரிகின்றது.

புரோகிதர் யார்? மூலப் பொருள் என்ன?

இறைவன் பண்டே உலகெல்லாம் பரவி இருந்த துன்னிருளை தனது ஒளி வடிவ சிவ வடிவில் வெளிப்பட்டுத் தோன்றி கடுந்திறலின் ஒளி பாய்ச்சி இருளைக் கடிந்து உலகு தோன்றி நிற்க அருள் புரிந்தான் என்பது  சூருப்பாக்கின் நெறி நமக்குக் காட்டு பிரபஞ்சவியல். திருமுருகாற்றுப்படையிலும் இன்னும் பல செங்கிருத தமிழ் இலக்கியங்களிலும் வரும் கருத்தாகும். இதனை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கோயிலில் தீப ஆராதனை செய்து காட்டுகின்றவரே புரோசு, புரோகிதர் என்படுவோர் என்று நினைக்கின்றேன்

மேலும் ஊழி எரியாகிய ஊழித் தீயை நினைவு படுத்தும் வகையில் வேள்விதீ வளர்ப்பார் எரி ஒம்புவார் என்றும் பொருள் படும் என்று நினைக்கின்றேன

தொடரும்

 


2013/3/18 K. Loganathan <k.ula...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 19, 2013, 7:34:33 AM3/19/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
> தமிழில் ஊ . உள் > ஒள்> ஒளி என்றாகியுள்ளது 

உங்களை போல் சிந்தித்தால் அன்றி எங்களுக்கு இது புலப்படாது

K. Loganathan

unread,
Mar 19, 2013, 9:54:31 PM3/19/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

அப்படியே செய்யுங்களேன்! என்னைப் போல சுமேருத் தமிழைப் பற்றி வடமொழிக்கும் அதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி நான் சிந்திப்பது போல பிறரும் சிந்தித்து மகிழ வேண்டும் என்றுதானே இந்த இழையையே தொடங்கியுள்ளேன்.

மற்றும் ஒன்று.  சுமேரு மொழியில் இப்போது விளங்கும்  கோல் எழுத்துக்களை வாசிக்கும் வகையில் ஏறக்குறைய பத்து ;உ, ஊ' இருக்கின்றன. இவற்றில் சில 'ஒ,ஓ' வாக இருக்கலாம் என்று சுமேரு அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் இவற்றில் சில மெய்யெழுத்துக்களை ஈற்றில் பெற்று 'உள், உன். உண்' என்றெல்லாம் இருக்க. இடம் உண்டு.  கோல் எழுத்து ஆய்வு தமிழ் தெரியாத அறிஞர்களால் நடத்தப் படும் ஒன்று. நம் தமிழ் பேராசிரியர்களே இத்துறையில் புகுந்து கோல் எழுத்து ஆய்வினை திராவிட மொழிகளோடு ஒப்பிட்டு செய்தால் இப்படிபட்ட குறைகள் இல்லாது போகும் என்று நினைக்கின்றேன்.

இன்னொன்று. பாவாணர் வேர்ச் சொல் கட்டுரைகளில் 'அ, உ இ'' எனும் சுட்டுக்களையே ஆதி வேர்களாகக் கொண்டு பல சொற்களின் பிறப்பினை விளக்கியுள்ளதாக படித்த ஞாபகம். ஆத இது விந்தையான ஒன்றல்ல, பாவாணருக்கு ஆக்கம் தருவதாக இருக்கலாம். மேலும் நான் கூறுவது உண்மை என்றால் பாவாணர் கூறியவாறே தமிழ் 'பாரதீய செம்மொழி' மாத்திரம் அன்று, பல உலக மொழிகளின் வளர்ச்சிக்கு உதவிய உலகச் செம்மொழியும் ஆகும். ஆக இப்பொழுது தமிழைச் செம்மொழியாக எடுத்துக்கொண்டு ஆயும் தமிழ் பேராசிரியர்கள் சுமேரு எனும் தொல்தமிழையும் எடுத்துக் கொண்டு ஆயலாமே?

உலகன்

2013/3/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

K. Loganathan

unread,
Mar 21, 2013, 4:56:02 AM3/21/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
இனி அடுத்ததாக வரும் தொடர் பல சுவையான இலக்கணக் கூறுகளைக் கொண்ட தொடர் :

yajjnasya devam யாஜ்நஸ்ய தேவம்

என்பதாகும். இதன் தொல்தமிழ் உரு என்ன? எனும் போது அது ‘ஏஜெனஸ்ய தேவர்’
என்றவாறு காணலாம் இதற்குரிய சான்றுகளை கீழே தருகின்றேன்

Su. ejen, ezen: fire festival iji, eji: fire

Temple Hymn 4

4( 43)

itu za-mu ezen-gal-la-za u-di tag-ga ( In the month of New Year's
Day, on which the feast is celebrated, (you are wonderously adorned)

Ta. intu saalmu vizenkaLLajaa udai taGka ( During the festival
celebrated on Full Moon Day, your attire is golden)

இந்து சால்மு விழன்கள்ளஜிய உடை தங்கம்

இங்கு ezen என்பதை ‘விழன்’ என்று கொண்டுள்ளேன் இது மிகவும் பிற்கால
வழக்காகும், ஆயினும் ezen என்ற சொல்லே yajna என்றாகி பின் தமிழில்
‘யாகம்’ என்றாகி இருப்பதைக் காண்முடிகின்றது.

‘ezen, ejen’ என்ற தொல்தமிழே பிறகாலத் தமிழின் ‘விழன், யாகம்’ என்ற
சொற்களின் மூலமாக இருக்கலாம். தொடர்ந்து ஆராயப்பட வேண்டிய ஓர் விசயமாக
இதனை இங்கு முன்மொழிகின்றேன்.

‘asya’ Su as-a

இது ‘as’ எனும் சாரியையோடு வரும் ‘-a’ எனும் கிழமை வேற்றுமை உருபு ஆகும்,
இது கடைச் சங்கத் தமிழில் ‘அத்து’ எனும் சாரியையோடு ‘அத்திய’ என்று
வரும். சுமேருத் தமிழில் கீழ் வரும் கிளவியில் காணக் கிடக்கின்றது,.

Sir 2.

mi-zi me-lam gur-ru ki-aga -an -uras-a ( Righteous woman, beloved of
Heaven and Earth).

Ta, mai jii meeLam kuuru kaangka vaan uurasya (“)

மை ஜீ மேளம் கூரு காங்க(காம) வானூரஸ்ய

இங்கு an-uras-a என்பது ‘வான் ஊரஸ்ய’ தான், இங்கு ‘ஊர்’ என்றால் ‘உலகு’
என்றும் பொருள். காங்க> காமம்: விருப்பம், காதல்.

Devam தெய்வம், தேவம்

இச்சொல் சுமேருவில் dingir என்று பெரும்பாளும் விளங்க அக்காடிய மொழியில்
dimmer>diwer என்று திரிந்துள்ளது, இதிலிருந்தே ‘devam’ என்ற சொல்லும்
தமிழின் ‘தெய்வம்’ என்ற சொல்லும் வந்திருக்கலாம். மேலும் dingir> திங்கள்
என்றும் ஆகி இருக்கலாம்.

ஆக ‘yajnasya devam’ தொல்தமிழில் ‘எஜெனஸ்ய தேவம்’ என்று இருந்திருக்கலாம்.



தொடரும்





2013/3/20 K. Loganathan <k.ula...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2013, 9:21:50 AM3/21/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
>‘ezen, ejen’  என்ற தொல்தமிழே பிறகாலத் தமிழின் ‘விழன், யாகம்’ என்ற
சொற்களின் மூலமாக இருக்கலாம். தொடர்ந்து ஆராயப்பட வேண்டிய ஓர் விசயமாக
இதனை இங்கு முன்மொழிகின்றேன்.

ஐயா

தொல்தமிழில் ஜகரம், ஸகரம் போன்ற ஒலிகள் இருந்தால் பின் அவை ஏன் இடைக்கால தமிழில் இல்லாமல் போயின?

புஜம் என்பதை புயம் என்றும், தஸரதன் என்பதை ஏன் தயரதன் எனறும் ஏன் எழுதினார்கள்?

வடமொழியில் அவை இருக்க தென்மொழியில் இல்லாமல் போன  காரணம்?


--

K. Loganathan

unread,
Mar 21, 2013, 9:46:51 AM3/21/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

இதேக் கேள்வியைய்த்தான் நான் பல தமிழ் அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டு
இருக்கின்றேன் 'கஷ்டம்; 'நஷ்டம்' 'துஷ்டன்' என்றெல்லாம் வழக்கில்
சொல்கின்றோம், சுமேருத் தமிழில் 'நிஷபா' என்ற சொல் 'நிடபா' என்றும்
எழுதப்படுகின்றது., 'ஷ்' எனும் எழுத்டு 'ட்' ஆகின்றது

இதனால் தான் என் கேள்வி: தமிழின் எழுத்துக்கள்தாம் யாவை? தொல்காப்பியர்
தானே இந்த எழுத்துக்கள 'வட எழுதது' என்று சொல்லி அவற்றை விலக்க வேண்டும்
என்றார்? அதற்கு முன்பு?

தமிழ் அறிஞர்கள் தான் தக்க விளக்கம் தர்வேண்டும்

உலகன்

2013/3/21 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2013, 9:55:40 AM3/21/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அதேபோல்  சாதம் என்னும் சொல்லில்  த என்னும் எழுத்து  dha  என்று தான் உச்சரிக்கப்படுகிறது
 
வேகம் என்னும் சொல்லில்   க என்னும் எழுத்து   ga  என்றுதான் உச்சரிக்கப்படுகிறது
 
அன்றாடம் நாம் உபயோகிக்கும் பல சொற்களில்  ஸ்மஸ்கிருதம் கலக்காத  சொற்களே   மிகவும்  குறைவு
 
சங்(க)ம், அங்(க)ம் வ(கி)க்கிறது
 
வரு(கி)றேன்
 
தண்ணீர்  கு(டி)ப்பது   போன்ற எழுத்துக்கள் எல்லாமே  சமஸ்கிருத உச்சரிப்பே
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2013/3/21 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Mar 21, 2013, 10:06:22 AM3/21/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

இவற்றை 'மாற்றொலியன்கள்' என்பர். ஒரே வரி வடிவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
ஒலிக் குறிப்புகள் இருப்பதில் தவறில்லை, ஆனால் ஷ் ஸ் ஜ போன்ற
எழுத்துக்கள் மாற்றொலியன்கள் அல்ல. தனி ஒலியன்கள். தொல்காப்பியர் காலந்
தொட்டுதான் அவை விலக்க்ப்பட வேண்டும் என்ற விதி வந்துள்ளது. அதற்குமுன்?

மேலும் சுமேருத் தமிழில் 'da' இருக்கின்றது ஆனால் 'dha' இல்லை. இதுபோன்ற
எழுத்துக்கள் வடமொழியில் பிறகாலத்தில் தோன்றி இருக்கவேண்டும். ஏன்?
எப்படி? யாதோவோர் அந்நிய மொழியின் தாக்கமாக இருக்கலாமோ? எந்த மொழி அது?

உலகன்

2013/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

K. Loganathan

unread,
Mar 21, 2013, 9:31:54 PM3/21/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

Suzannee Redalia என்ற ஓர் அறிஞர் சிந்து வெளி எழுத்துக்களை ஆராய்ச்சி
செய்கின்ற ஒருவர். அவர் சிந்து வெளி எழுத்துகட்கும் Proto Cuneiform
எழுத்துகட்கும் ஓர் தொடர்பு இருப்பதாகவும் ஒரே வகையானக் குறியீடுகள்
இரண்டு மொழிகளிலும் இருப்பதாகக் கூறுகின்றார். வேறு சில அறிஞர்கள்
Elamite மொழி திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஒன்று என்றும் அதேப்
பொழுது, Prot ELamite எழுத்துக்களும் இந்த Proto Cuneiform
எழுத்துளோடு சில வகையில் ஒத்து வருகின்றன என்றும் கூறுகின்றனர்

Kinnier Wilson போன்றோர் சிந்து வெளி மொழி சுமேரு மொழியாக இருக்கலாம்
என்றும் கூறுகின்றார்.

ஆக சிந்து வெளியிலும் சுமேருத் தமிழ் போன்ற ஓர் மொழி பழக்கத்தில்
இருந்தது என்பதும் கூடி வரும் ஒன்றே.

உலகன்

2013/3/21 seshadri sridharan <ssesh...@gmail.com>:
> //தொல்தமிழில் ஜகரம், ஸகரம் போன்ற ஒலிகள் இருந்தால் பின் அவை ஏன் இடைக்கால
> தமிழில் இல்லாமல் போயின?//
>
> ஏன் இடைக்காலத் தமிழ்? சிந்து முத்திரையில் கூட சமற்கிருத ஒலிகள் கிடையா!!
>
> 2013/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
>
> //அதேபோல் சாதம் என்னும் சொல்லில் த என்னும் எழுத்து dha என்று தான்
> உச்சரிக்கப்படுகிறது வேகம் என்னும் சொல்லில் க என்னும் எழுத்து ga
> என்றுதான் உச்சரிக்கப்படுகிறது அன்றாடம் நாம் உபயோகிக்கும் பல சொற்களில்
> ஸ்மஸ்கிருதம் கலக்காத சொற்களே மிகவும் குறைவு சங்(க)ம், அங்(க)ம்
> வ(கி)க்கிறது வரு(கி)றேன். தண்ணீர் கு(டி)ப்பது போன்ற எழுத்துக்கள் எல்லாமே
> சமஸ்கிருத உச்சரிப்பே - தமிழ்த்தேனீ///
>
> தமிழில் இந்த ஒலிகள் திரியக் காரணம் சமண, பௌத்த, இந்து புராணங்கள் மதங்கள் தாம்
> காரணம். மேட்டுக் குடிமக்களும் பின் வந்தேறிய தெலுங்கரும் இதை
> அதிகப்படுத்தினர். நெல்லை வழக்கு, யாழ்ப்பாண வழக்கு மலையாளம் ஆகியவற்றில்
> இச்சொற்கள் தமிழ் ஒலிப்புபடியே இன்றும் உள்ளன என்பதை நோக்குங்கள்.
>
>
>
> சேசாத்திரி
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2013, 9:52:41 PM3/21/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com


21 மார்ச், 2013 9:55 AM அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதியது:

அதேபோல்  சாதம் என்னும் சொல்லில்  த என்னும் எழுத்து  dha  என்று தான் உச்சரிக்கப்படுகிறது
 
வேகம் என்னும் சொல்லில்   க என்னும் எழுத்து   ga  என்றுதான் உச்சரிக்கப்படுகிறது
 
அன்றாடம் நாம் உபயோகிக்கும் பல சொற்களில்  ஸ்மஸ்கிருதம் கலக்காத  சொற்களே   மிகவும்  குறைவு
 
சங்(க)ம், அங்(க)ம் வ(கி)க்கிறது
 
வரு(கி)றேன்
 
தண்ணீர்  கு(டி)ப்பது   போன்ற எழுத்துக்கள் எல்லாமே  சமஸ்கிருத உச்சரிப்பே

தேனி ஐயா

தமிழில் சொல்லிடை வரும் வல்லின மெலியும். மெலியாமல் இருக்க ஒற்று இடுகிறோம். படம், பட்டம்

சம்ஸ்கிருதத்தில் மெய்யெழுத்து தனித்து இயங்குவது இல்லை.  சொல்லின் இறுதியில் மட்டும் சில இடங்களில் வரும்.

ராமம் என்பதற்கு மகர மெய் இறுதி இல்லை. அம் எனும் உயிர் எழுத்து தான்.


உயிர் எழுத்து மெய்யெழுத்து என்ற பாகுபாடு தமிழில் சிறப்பாக இருக்கு. வடமொழியில் மெய்யெழுத்துக்கு பதில் கூட்டெழுத்துகள் பயன்படுது

அதே போல்  வடமொழி  நெடுங்கணக்கில் க1 க2 க3 க4,  வரிசை ஏறுமுகத்திலும் இல்லை இறங்கு முகத்திலும் இல்லை.

தமிழ்  நெடுங்கணக்கில் லாஜிக்  சிறப்பாக இருக்கும்.

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2013, 10:03:24 PM3/21/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com



21 மார்ச், 2013 9:46 AM அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

அன்பரே

இதேக் கேள்வியைய்த்தான் நான் பல தமிழ் அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டு
இருக்கின்றேன் 'கஷ்டம்; 'நஷ்டம்' 'துஷ்டன்' என்றெல்லாம் வழக்கில்
சொல்கின்றோம், சுமேருத் தமிழில் 'நிஷபா' என்ற சொல் 'நிடபா' என்றும்
எழுதப்படுகின்றது., 'ஷ்' எனும் எழுத்டு 'ட்' ஆகின்றது

இதனால் தான் என் கேள்வி: தமிழின் எழுத்துக்கள்தாம் யாவை? தொல்காப்பியர்
தானே இந்த எழுத்துக்கள 'வட எழுதது' என்று சொல்லி அவற்றை விலக்க வேண்டும்
என்றார்? அதற்கு முன்பு?

தமிழ் அறிஞர்கள் தான் தக்க விளக்கம் தர்வேண்டும்

முந்துமொழிகளில் யகரம்தான் பயன் அதிகம். 

லத்தீன் மொழியிலும் இசுபானிய மொழியிலு கூட ஜகரத்தை யகரமாகவே ஒலிக்கிறார்கள். ஜப்பானை  யப்பான் என்றும்   jஜாஸ்மினை யாஸ்மின் என்றும் சொல்லுவார்கள்.  ஜீஸஸின்  பெயர் எபிரேயத்தில் யகரத்தில்தான் தொடங்கும். அரபியிலும் இந்த மரபு இருக்கு. ஜகரம் பிந்திய மொழிகளில்   பயன் அதிகம்

வேந்தன் அரசு

K. Loganathan

unread,
Mar 21, 2013, 10:19:51 PM3/21/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

இப்படியெல்லாம் பொருள் கொள்வது இங்கு ஆயப்படும் சிலோகத்தின் சொற்
சூழலிற்கு ஒத்து வருமா? என்றும் பார்க்க வேண்டும் 'அக்நிம் எல்லே எனும்
கடுமையான ஊழித் தீ என்பது உலகில் பூர்வதிலேயே நிலவும் இருளைக் கட்கின்றது
என்பதே பொருந்தி வரும் பொருள்.

தாங்கள் கூறுவது பிற்காலதது புராண வழக்கே தவிற பிழையற்ற முறையான சொல்
ஆராய்ச்சி ஆகாதென்றே நினைக்கின்றேன்.

உலகன்

2013/3/22 Prakash Sugumaran <praka...@gmail.com>:
> புரோஹிதர் - புரு வம்சத்தின் தயை பெற்றவர்; புரு வம்சத்தின் இதயம் போன்றவர் -
> இப்படியும் அர்த்தம் கொள்ளலாம். பரமபதம் - தாயம்: புரு வம்சத்தை ஒழிக்க
> பரமபதத்தில் உள்ள பாம்பு போன்றவர்; ப்ரோஹிதம்: கொடுக்கல் - வாங்கலில்
> உதவக்கூடியவர். மீடியேட்டர். ப்ரோக்கர்.. என்றும் கொள்ளலாம்.
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+u...@googlegroups.com.
>>
>> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>>
>>
>
>
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Blog
> http://thamizharkoodu.blogspot.com/
> My Facebook
> http://www.facebook.com/#!/prakashvlr
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
> (tamilnadu travel guide)
> http://www.tamilnadutravelguide.com/
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2013, 7:27:57 AM3/22/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
தமிழ்மொழி தானாக தளிர்த்த மொழியாக எனக்கு தோணுது

காட்டாக,

தவழ்தல், தத்துதல், தாண்டுதல், தாவுதல்
தைவரல், தடவுதல், தட்டுதல், தாக்குதல்.
படர்தல், பரவுதல், பாய்தல்


இவைகள் ஒரே தன்மையான செயல்.  அதன் அளவில் மட்டும் வேற்றுமை

சுமேரு  மொழி  தொல்தமிழாக இருப்பின் இது போன்ற உறவு அதிலும் இருக்கணும்.

K. Loganathan

unread,
Mar 22, 2013, 7:37:30 AM3/22/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

நியாயந்தான். ஆனால் கூர்தல் முறையில் வளர்தல் என்றும் இருக்கின்றது.
இப்பொழுது நமக்குக் கிடைக்கின்ற சுமேருத் தமிழ் இலக்கியங்கள் கி.மு
2000க்கு முற்பட்டவை. ஆக இப்போதுள்ள வளர்ச்சியை அங்கு எத்ர்பார்ப்பது
நியாயமாகுமா?

அங்கு குழந்தைப் பருவ நிலை. இப்போது 5000 ஆண்டுகளைக் கடந்த முதிய நிலை.
இந்த முதிய நிலையில் உள்ள வளர்ச்சி நிலையை குழந்தை பருவ நிலையில்
எதிர்ப்பார்க்க முடியுமா? நியாயமா?

உலகன்

2013/3/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2013, 8:45:46 AM3/22/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com


22 மார்ச், 2013 7:37 AM அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

அன்பரே

நியாயந்தான். ஆனால் கூர்தல் முறையில் வளர்தல் என்றும் இருக்கின்றது.
இப்பொழுது நமக்குக் கிடைக்கின்ற சுமேருத் தமிழ் இலக்கியங்கள் கி.மு
2000க்கு முற்பட்டவை. ஆக இப்போதுள்ள வளர்ச்சியை அங்கு எத்ர்பார்ப்பது
நியாயமாகுமா?

அங்கு குழந்தைப் பருவ நிலை. இப்போது 5000 ஆண்டுகளைக் கடந்த முதிய நிலை.
இந்த முதிய நிலையில் உள்ள வளர்ச்சி நிலையை குழந்தை பருவ நிலையில்
எதிர்ப்பார்க்க முடியுமா? நியாயமா?


ஐயா

இன்றைய தமிழ் 2500 ஆண்டுகளாக பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கு. அதுக்கும் ஒரு 1500 ஆண்டுகள் முந்தியதுதானே சுமேரு? அதானல் உருக்குலையும் அளவுக்கு மாற்றம் இருக்காது என்றே நினைக்கிறேன்.  நீங்க செய்ய வேண்டியது சுமேருவுக்கும் தமிழுக்கும் உள்ள திரிபு விதிகளை கண்டு பிடிப்பது. அதை கண்டு சொல்லிவிட்டால் யார் வேண்டுமானாலும் கல்வெட்டு வல்லுநர்கள் செயவது போல சுமேருவை வாசிக்கலாம்

தமிழுக்கும் தெலுகுக்கும் கொடுந்தமிழுக்கும் உள்ள திரிபு விதிகள் சில:
தமிழின் ழகரம் தெலுகில் டகரம் ஆகும்  கூழ் = கூடு, பாழ்=பாடு, ஏழு=ஏடு

தமிழின் றகரம் தெலுகில் டகரம் ஆகும்: சுற்று = சுட்டு, பற்று = பட்டு, மாற்றம்= மாட்ட

திராவிட மொழிகளில், டகரம் பின் வரும்போது    ணகரம்தான் தொடரும்.  உண்டு, பண்டு, கண்டு

குகரம் கொகரம் ஆகும் இடங்கள் உண்டு. குடை= கொடை(கொடுகு-தெலுகு), குலை=கொலை 

இந்த விதிகளைக்கொண்டு குன்று = கொண்ட ஆகும் என உணரலாம் (ஏழில் குன்றம் = ஏடு கொண்ட(லவாடு)

குன்றம் =குன் ட= குண்ட =கொண்ட
அல்லது

குன்றம் =கொன்ற =கொண்ட
-- 

K. Loganathan

unread,
Mar 22, 2013, 9:16:23 AM3/22/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே இதனை நான் ஓரளவு செய்துள்ளேன், உயிர் எழுத்துக்களைப் பற்றிய ஓர்
ஆய்வில் இருந்து ஓர் சிறிய பகுதி கீழே , முழு கட்டுரை மரபு விக்கியில்:
Sumerian; Tamil of the First Sangkam என்பதைப் பாருங்கள். இன்னும் பல
உள்ளன, பிறகு காட்டுகிnReen,

ulaகன்

The vowels correspondences between Su. and Ta. are as follows.

Su. a-: Ta. a-

Su. a Ta. am ' water '; Su. aka Ta. akam ' love '; Su. ambar Ta. amparam
' sea. marsh '; Su. amma Ta. amma ' mother ': Su. ara
Ta. arai ' to grind '; Su. aliri Ta. alaru ' to blent '.

Su. -a- . Ta. -a-

Su. arali Ta. arali ' terrfying '; Su. abbal Ta. aval- ' curse '.
Su. uname Ta. uLamai ' whatever existing '; Su. kalam Ta. kalam ' boat '.
Su. kar-ra Ta. karai ' quay ' ; Su. kak Ta. kakam ' arrow '.

Su. a- . Ta. aa-

bu. a Ta. aam, aal ' water '; Su. ag, ak Ta. aakku ' to make, do '; aaku: become
Su. ara Ta. aaraay ' investigate '; Su. a-ra- Ta. aaRu ' course, way '.

Su. -a- : Ta. -aa-

Su. sar Ta. caRRu ' to write, relate '; Su. sal Ta. caal ' to be weary '.

Su. a’- : Ta. aa-

Su. a’ Ta. aay ' wages, toll '; Su. aga Ta. aaNai ' command'; Su. a’m.
Ta. aa ' to become '; Su. a’r Ta. aar ' fullness '.

Su. -‘a- : Ta. -aa-

Su. m’as Ta. maan ' gazelle '; Su. g’al, k’al Ta. kaal ' to place '.

Su. ‘a- : Ta. a-

Su. ‘am Ta. anbu ' love '.

Su. -a- : Ta. -u-

Su. sam Ta. cumm- * to carry '.

Su. a- : Ta. e-

Su. a-na Ta. enna, en ' what '.

Su. -a- : Ta. -o-

Su. kak Ta. kokki ' peg '; Su. sarru Ta. koRRan ' king '.

Su. -a- : Ta. -oo-

Su. gada Ta. koodi ' cloth '.

Su. -a- : Ta. -e-

Su. sag, san, sa-an Ta. cenni ' head ', Su. nari Ta. neRi ' moral
instructions '.

Su. -a- : Ta. -i-

Su. tar Ta. tiRa ' to open, disclose '; Su. pad Ta. pitir ' to break
to pieces '.

Su. a- : Ta. -*

Su. amaru Ta. maari ' deluge '; Su. amar Ta. mar i ' young of living things ';
Su. amas Ta. maadu ' cattle '.

Su. i- : Ta. i-

Su. ir Ta. ir ' wet, moist '; Su. inim Ta. enam ' word '; Su. inga, iga
Ta. innam ' again '; Su. ilum Ta. iru ' great, powerful '.

Su. -i- : Ta. -i-

Su. egir Ta. etir ' future '; Su. ibila Ta. piLLai 'son, daughter ';
Su. itima Ta. patimam, padivam ' shrine '; Su. edin Ta. tiNai ' territory '.

Su. i- : Ta. ii-

Su. i Ta. ii (ee) to exalt '.


Su. -i- : Ta. -ii-

Su. ki, ki(n) Ta. kiiz ' below, land '.

Su. i- : Ta. i-

Su. ib Ta. ikal ' be angry

Su. i-: Ta. a-

Su. igi Ta. akki ' eye '; Su. ilu Ta. azu ' cry, weep '.

2013/3/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>
>

K. Loganathan

unread,
Mar 22, 2013, 10:45:44 AM3/22/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

மீண்டும் மீண்டும் நான் கேட்கின்ற கேள்வி ஆனால் இதுவரை தக்க பதில் இல்லை.
பிறப் பிற விசயங்களை எல்லாம் விட்டு விட்டு சுமேரு மொழி கிளவிகளை
வாசிக்கும் போது அவை தமிழ் என்ற உணர்வைத் தேற்று கின்றன்வா? அல்லையா?

காட்டாக ஓர் கிளவியைத் தருகின்றேன்"

177. ses-gal a-a na-nam nin-gal ama na-nam ( (The elder brother is
indeed a father, the elder sister is indeed a mother!)
Ta. cisukaL aiya nanam ningaL ammaa nanam ( “)
சிசுகள் அய்யா நனம் நின்கள் அம்மா நனம்

இது ஏறக்குறைய கி.மு 3000 ஆண்டிற்கு உரிய ஓர் கிளவி, இதனை வாசித்து
புரிந்துகொள்ளும்போது இது ஓர் வகையான பழந்தமிழ் என்று படுகின்றதா?
அல்லையா?

சிந்தித்துப் பாருங்கள். தக்க பதிலை சொல்லுங்கள்,.

உலகன்.

2013/3/22 K. Loganathan <k.ula...@gmail.com>:

K. Loganathan

unread,
Mar 22, 2013, 8:25:24 PM3/22/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திரு காளை

இதைத்தான் நான் எதிர்ப்பார்த்து இந்த இழையை தொடங்கினேன். எப்படி
வாசிப்பது என்பதெல்லாம் நாம் இப்பொழுது வாசிக்கின்ற தமிழை ஒட்டிதான்
வாசிக்க்வேண்டும் இதனை தமிழ் அறியாத சுமேரிய அறிஞர்களிடம் எதிர்ப்பார்க்க
முடியாது, தமிழ் அறிந்த தமிழர்களாகிய நாம் தான் அவர்கட்கு வழிகாட்ட
வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

'அம்மா' 'ஐயா' என்ற சொற்களெல்லாம் நமக்குத் தெரிந்தவைதானே? இப்படி
எத்தனியோ சொற்கள் அங்கு உண்டு

மற்றபடி நான் இப்படிப்ப்ட்ட மொழி ஆய்வுகளிருந்து ஓய்வு பெற்று ஞான
ஆய்வில் என் எஞ்சிய காலத்தை முடிக்க விருக்கின்றேன்.

எனக்கு இந்த கணினித் துறையில் அதிகம் திறமையில்லை, யாராவது உதிவினால்
என்னால் இயன்றதைச் செய்கின்றேன். எனது எதிர்ப்பார்ப்புக்கள் எல்லாமே
ந்மது இளைஞர் சமுதாயமும் தமிழகத்து தமிழ் மொழி பேராசிரியர்களும் சுமேருத்
தமிழ் ஆய்வில், கோல் எழுத்து ஆய்வில் ஈடுபட வேண்டும் என்பதே. சுமேருமொழி
தொல்தமிழே முதற் சங்கத் தமிழே என்பதை உணர்த்துவதோடு என் பணி முடிகின்றது
என்று நினைக்கின்றேன்

தொடர்ந்து என்னால் இய்ன்றதைச் செய்துகொண்டுதான் இருப்பேன். ஆனால
இப்பொழுது எனது ஆர்வமெல்லாம் மெய்ஞான விசாரணையில் தான்.

தங்கள் பலகலையில் இதற்கு ஓர் ஏற்பாடு செய்யுங்களேன். டாக்டர் கண்ணன்
திருமதி சுபா T, ஆகியோருக்கு எனது இந்த ஆய்வுகளைப் பற்றி நன்கு தெரியும்

நான் எதிர்பார்த்த அந்த சொல்லைத் தந்து உதவியமைக்கு என் நன்றிகள்.

அடுத்த கேள்வி: இவ்வாறான உணர்வு தோன்றுவதற்கு என்ன காரணம்?

இதனை விசாரிப்போமே?

உலகன்

2013/3/23 கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> வணக்கம்.
>
>> மீண்டும் மீண்டும் நான் கேட்கின்ற கேள்வி ஆனால் இதுவரை தக்க பதில் இல்லை.
>> பிறப் பிற விசயங்களை எல்லாம் விட்டு விட்டு சுமேரு மொழி கிளவிகளை
>> வாசிக்கும் போது அவை தமிழ் என்ற உணர்வைத் தேற்று கின்றன்வா?
>
> ஆமாம்.
> தமிழ் வார்த்தைகளாகவே தோன்றுகின்றன.
>
> சுமேரிய மொழியில் வாசித்து (ஒலிக்கோப்பு) க் கேட்டால் இதனை நிச்சயம் உறுதிய
> செய்ய இயலும்.
>
> எனவே, ஐயா,
> தாங்கள் அன்புள்ளம் கொண்டு இவற்றை வாசித்து அதனை ஒலிப்பதிவு செய்து பதிப்பிக்க
> வேண்டுகிறேன்.
>
> அன்பன்
> கி.காளைராசன்
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Mar 22, 2013, 11:08:55 PM3/22/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

நினைவு கூர்வோம். நாம் ஆய்ந்துகொண்டிருப்பது இருக்கு வேதத்தின் முதல் சுலோகம்:
Agnim iile purohitam yajjnasya devam ritvijam / hotaram ratnadhaatamam
We worship the adorable God, the high priest of cosmic activities, the
divine , the one who works through the eternal laws, and who feeds and
sustains all that is divine and luminous.
இனி அடுத்து வரும்’ ritvijam’ என்ற சொல்லை ஆய விருக்கிண்றோம்

ritvijam and Ta. uru-bi-jam , Ta, erittu-bi-ji-am
இச்சொல்லின் பொருள் “the one who works through the eternal laws” என்று
தரப்பட்டுள்ளது.
முதலில் இதன் உறுப்பாக விளங்கும் bi-ji’ என்பதை ‘தருதல்’ என்ற கருத்தில்
வரும் ‘ba-i>bi’ என்று அதாவது ‘பா’ ‘பீ(ய்ச்சு)’ என்று
எடுத்துக்கொண்டால் ‘ rit>erittu’ என்பதை ‘எரி’ அதாவது ‘தீ’ நெருப்பு’
என்றெல்லாம் எடுத்துக்கொள்ளலாம். ஆக இச்சொல் வழியாக ‘அக்நின் எல்லே’
என்பது உலகில் நெருப்பு தோன்றுதற்கு அருளுவது என்று பொருள் கொள்ளலாம்
Hotaram Ta. uu-taaram
Su. u> Ta, uu, uN, uNaa etc

கீழே சூருப்பக்கின் நெறியிலிருந்து ஓர் வரியைக் காண்க
136. u-buru-se u kal-kal-la-am ( At the time of harvest, the days are precious)

Ta. uu.pari-see uu kalkallaam ( “)

ஊ பரிசே உவா கல்கல் ஆம்

இங்கு முதல் ‘ஊ” தானியச் செடிகளைக் குறிக்க இரண்டாம் ‘ஊ’ உவா எனும்
‘நாள்’ என்பதைக் குறிக்கின்றது. ‘ஊ பரி’ என்பது பயிர்களை அறுவடை செய்யும்
காலம் ஆகும்.

Nam-tar-ra. Ta. tarnam> tarumam

பல இடங்களில் ‘nam-tar-ra’ என்றும் nam-tar’ என்றும் இச்சொல்
பயிகின்றது, இதன் பொருளை ‘விதி(fate)’ என்றே கொள்கின்றனர். இங்கு
‘அக்நியால் தரப்படுவது, அருளப்படுவது என்று கொண்டால், இங்கு உனவு தரும்
செடிகளை அருளுவது அக்நிம் எல்லே என்று கூறப்படுவதாகக் கொள்ளலாம்

காண்க

171. nam-tar pes dur-ra-am ( Fate is a slippery bank)

Ta. tarnam veesu tuura aam ( The banks of Dharma are far way)

தருநம் வேசு தூர்-அ-ஆம்

nam-tar > Ta. tarnam> tarumam : the givenness, Dharma

இங்கு pes(கரை)> vees> வேசி வைசி என்று வந்து பிறகு வைசியர் ஆகி,
கடற்கரை ஓரங்களில் வாணிபம் செய்யும் மக்களைக் குறிக்கும் ஓர் சொல்லாகவும்
இதனை எடுத்துக்கொள்ளலாம். தொல்காப்பிய மரபியலில் இச்சொல் பயில்கின்றது

தொடரும்

உலகன்




2013/3/23 K. Loganathan <k.ula...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Mar 23, 2013, 5:01:10 PM3/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com


22 மார்ச், 2013 9:16 AM அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

அன்பரே இதனை நான் ஓரளவு செய்துள்ளேன், உயிர் எழுத்துக்களைப் பற்றிய ஓர்
ஆய்வில் இருந்து ஓர் சிறிய பகுதி கீழே , முழு கட்டுரை மரபு விக்கியில்:
Sumerian; Tamil of the First Sangkam என்பதைப் பாருங்கள். இன்னும் பல
உள்ளன, பிறகு காட்டுகிnReen,


ஐயா நன்றி

சொற்கள் தமிழ் சொற்கள் போல தோணுது

Su. ara Ta. aaraay ' investigate '; Su. a-ra- Ta. aaRu ' course, way '.

ஆய் என்பதுதான்  investigate . ஆர் = சிறந்த

ஆறு எனில் ரிவர் எனும் இன்னொரு பொருள் இருக்கு. அதுபோல் இருக்கா


தமிழில் மொழிமுதல் வரும் எழுத்து, சொல் இறுதி எழுத்து 

லகர, ளகர, ழகரம்
நகரம், அனகரம், அணகரம்

தமிழில் வினைச்சொற்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை, பால், காலம், ஒருமை பன்மை இவற்றை ஒரே சொல்லில் உணர்த்தும்
அஃறிணைக்கு பால் இல்லை

இந்த மரபுகள் உண்டா? , 

K. Loganathan

unread,
Mar 23, 2013, 9:03:45 PM3/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

மிக்க நன்றி. எனக்கு வேண்டியதெல்லாம் இதுதான். சுமேரு மொழி
வாசிக்க்கப்ட்ட நிலையில் தமிழறிந்த ஓர் தமிழனால் இது ஓர் வகையான
பழந்தமிழே என்று அடையாளம் காண முடிகின்றது, இதுவே சுமேரு மொழி தொல்தமிழ்
என்பதற்குச் சான்றாக அமைகின்றது,. ஐரோப்பியர்கள் இதனை ஏற்பதில்லை-
அவர்கட்கு Constructive Historical Linguistics என்ற கோட்பாட்டின் படி
Protoform எனும் மூலக்கூறுகளைக் காட்டவேண்டும் சுமேரு மொழியின் சொற்களை
ஏனையத் திராவிட மொழி சொற்களோடு ஒற்றுமைக் காட்டி அவற்றின் மூலகூறுகளைக்
காட்ட வேண்டும், ஆனால் இந்த மூலக் கூறுகள் பாவாணர் ஆய்ந்த வேர்ச் சொற்கள்
அல்ல- வெற்றுக் கற்பனை படைப்புக்கள், மாந்தர் மூல மொழியில் திகழ்ந்தவை
அல்ல.,

நான் உருவாக்கிய மொழி கோட்பாடு Evolutionary Historical Linguistics
என்பது அரவிந்தர் இப்படித் தான் மொழியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும்
கணித்து வடமொழியைப் பற்றி எழுதியுள்ளார்.

எனது கேள்வி:

சமேரு கிளவிகளை தமிழறிந்த தமிழனாகிய நான் அதனை தமிழ் என்று உணரமுடிவதால்
அது தொல்தமிழே என்கின்றேன் மேலும் 'சங்கம்' 'குமரி' போன்ற சொற்களெல்லாம்
அங்கிருக்க அதனை முதற் சங்கத் தமிழே என்கின்றேன்

இதனால் தமிழனின் முதற்சங்கத் தமிழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும்
நினைக்கின்றேன்

மற்றும் தங்கள் கேள்விகளுக்கு பதிலாக என் ஆராய்ச்சி கட்டுரைகள் சிலவற்றை
எடுத்துத் தருகின்றேன், விரைவில்.

சுமேருமொழி தொல்தமிழே என்று உடன்பாடு தெரிவித்தமைக்கு மீண்டும் மிக்க
நன்றி. தமிழ் மொழி வரலாற்றில் தமிழர்கள் வரலாற்றில் இது பெரும் புரடிசிய
கொண்டு வரும் என்றே நினைக்கின்றேன்

உலகன்.

2013/3/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

K. Loganathan

unread,
Mar 23, 2013, 9:22:26 PM3/23/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பின் கண்ணன்

கண்களில் ஆநந்த கண்ணீர் மல்கத்தான் தங்கள் மடலை வாசித்தேன். அதில் வரும்
புரிந்துணர்வு அப்படி என்னைத் தாக்கி விட்டது, தமிழனின் சுயச் சிந்தனை
எங்கே போய்விட்டது என்று நேற்றும் என் நண்பர் ஒருவரிடம் மன்ம் நொந்து
பேசிக்கொண்டிருந்தேன்.

ஏறக்குறைய முப்பது ஆண்டு கால போராட்டம் இது. இதுவரை
வெள்ளையர்களிடமிருந்து வடநாட்டினர்களிடமிருந்து இன்னும் பல
தமிழர்களிடமிருந்தும் ஏளனம் எதிர்ப்பு என்று சந்தித்தவாறே இருந்த எனக்கு
தங்கள் மடல் அமிர்தமாகவே இருக்கின்றது.

இத்தனை ஆண்டுகளாக நான் ஊக்கம் இழக்காது தொடர்ந்து இத்துறையில் ஆய்வினைப்
பெருக்கி வந்தததற்கு தங்களைப் போன்ற நல்லோர்களின் ஆதரவும் நான் வணங்கும்
அந்த நடராஜ பெருமானின் அருளும் தான்.

மீண்டும் மிக்க நன்றி,..

தமிழனுக்கு பாரத தேசத்திற்கு ஓர் விடுதி காலம் பிறந்து
கொண்டிருக்கின்றது. சங்கத் தமிழன் கண்டவாறு பாரதம் என்பது இமயம் முதல்
குமரி வரை பரவியிருந்த தமிழ் நாடு தான்!

இனி நல்லவொரு ஒருமை நல்லுணர்வு மலரும் என்றே நினைக்கின்றேன்.

உலகன்

2013/3/24 N. Kannan <navan...@gmail.com>:
> டாக்டர் லோகநாதனின் சுமேருத்தமிழ் ஆய்வு மீண்டும் உயிர் பெற்று
> மின்தமிழில் நடை போடுவது மகிழ்வாக உள்ளது.
>
> தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஒரு கொரிய
> பத்திரிக்கையாளருக்கு எப்படித் தோன்றியது எனில், அம்மொழியை கனடாவில்
> வாழும் சில தமிழர்கள் பேசிக்கொண்டு போகும் போது, “அட! இது கொரிய மொழி
> போல் இருக்கிறதே!” எனும் உணர்வுதான். அவ்வகையில் சுமேரிய தொன்மொழி தமிழ்
> போல் ஒலிக்கிறது எனும் உணர்வு முக்கியம் என்று கி.லோ சொல்வது யோசிக்க
> வேண்டியது.
>
> இரண்டாவது, காலனித்துவ ஆய்வுகள் ஆரிய, திராவிட பிளவிற்குக் காரணமாக
> அமைந்தன. ஆயின் தென்னவர்களோ அவையிரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை
> என்று சொல்கின்றனர். உபயவேதாந்தம், சிவனின் உடுக்கையிலிருந்து
> தமிழ்/ஆரியம் தோன்றும் தொன்மம் போன்றவை.
>
> நான் கூடற்புராணத்திலிருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுவேன், அதில்,
> “ஆரியத்தமிழ் வென்ற மாறன் சடகோபன்” என்று வரும். தமிழ்ச்சங்கத்தில்
> வென்றார் என்பதைச் சொல்லும் சேதி. அது என்ன “ஆரியத்தமிழ்” என்று
> கேட்பேன். தொன்தமிழ் சுமேரியம் என்றால், தென்தமிழ் ஆரியமே! உங்கள் ஆய்வு
> தனித்தமிழ் ஆர்வலர்களுக்கு உற்சாகம் அளிக்கின்ற வேளையில், இப்படியான
> முரண்கள் அவர்களை சிக்கலில் தக்க வைக்கின்றன. ஆரியமும், தமிழும் ஒரே
> இடத்தில் தோன்றினால் பாரதி சொல்வது போல் நாம் எல்லோரும் “ஆரிய
> புத்திரர்களே!”. இதை ஏற்றுக்கொள்வதில் உளவியல் சிக்கல் உள்ளது :-)
>
> எப்படியாயினும் டாக்டர் லோகநாதனின் 30 வருடங்களுக்கும் மேலான இந்த ஆய்வு
> கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. மேலைத்தவர் சொல்வதே வேதம் என்று
> இருக்கும் தமிழ்க் குமுகாயத்திற்கு லோகா துணிந்து சொல்லும், “நாம் தான்
> அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்” எனும் முனைப்பு புதியது!
>
> இவ்விழைக்கு எம் ஆசீர்வாதங்கள்.
>
> நா.கண்ணன்
>
> 2013/3/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
>> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
>> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
>> to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>>
>>
>
>
>
> --
> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Mar 23, 2013, 10:26:26 PM3/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com


23 மார்ச், 2013 9:22 PM அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

அன்பின் கண்ணன்

கண்களில் ஆநந்த கண்ணீர் மல்கத்தான் தங்கள் மடலை வாசித்தேன். அதில் வரும்
புரிந்துணர்வு  அப்படி என்னைத் தாக்கி விட்டது,  தமிழனின் சுயச் சிந்தனை
எங்கே போய்விட்டது என்று நேற்றும் என் நண்பர் ஒருவரிடம் மன்ம் நொந்து
பேசிக்கொண்டிருந்தேன்.

ஏறக்குறைய முப்பது ஆண்டு கால போராட்டம் இது. இதுவரை
வெள்ளையர்களிடமிருந்து வடநாட்டினர்களிடமிருந்து இன்னும் பல
தமிழர்களிடமிருந்தும் ஏளனம் எதிர்ப்பு என்று சந்தித்தவாறே இருந்த எனக்கு

ஐயா

எந்த மொழியிலும் இன்னொரு மொழியின் 100% சொற்கள் இராது. தமிழ்- தெலுகு போல
நீங்கள் வரிக்கு வரி மொழிபெயர்க்கும் போது ஐயம் பெருகுது

சில சொற்கள் தமிழ். மற்றவை தெரியலே என்ற அளவில் இருந்தால் நம்பகம் பெருகும்.

தமிழுக்கும் சுமேருவுக்கும்  1500 ஆண்டுகள் இடைவெளி இருக்கலாம். இதில் பேரளவு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இல்லை.
1000 ஆண்டு முந்திய மலையாளமும் 2000 ஆண்டு முந்திய கன்னடமும் சம்ஸ்கிருதம் நீங்கிய சொற்களை எளிதில் புரிந்துகொள்ளலாம்


 

K. Loganathan

unread,
Mar 23, 2013, 10:32:14 PM3/23/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பின் கண்ணன்

மீண்டும் மிக்க நன்றி. இங்கு சுபாவையும் நான் மறக்க முடியாது, சுபாவே
துணிந்து எனது சுமேருத் தமிழ் கட்டுரைகளை பல் எதிர்ப்புகளிடையே
மரபுவிக்கியில் பதிவு செய்து அதனை உலகெங்கும் பரப்புதற்கு
உதவியுள்ளார்கள்,. அதனைத் தொடர்ந்து தான் நானும் பல கட்டுரைகளைப் பதிவு
செய்தேன் தொடர்ந்து மக்களின் வரவேற்பைப் பெற்றும் வருகின்றேன்.

எனது ஆகம உளவியல் மெய்கண்டாரின் சமயாதீத ஆகமீயம் தொல்காப்பியரின்
ஏரணவீயம் போன்ற கருத்துக்களைப் பற்றி எல்லாம் விளக்கி எழுத
விருக்கின்றேன் நிச்சயமாக அவை மின் தமிழில் வரும்

தங்களது ஆதரரவிற்கு மீண்டும் மிக்க நன்றி.


உலகன்

2013/3/24 N. Kannan <navan...@gmail.com>:
> அன்பின் முனைவர் லோகநாதன்:
>
> உங்களைப் போன்ற மனிதர்கள் அரிது என்பதால்தான் உங்கள் ஆய்வை முதுசொம்
> என்று பத்திரப்படுத்தி வருகிறோம். உண்மையைச் சொல்வதில் உங்களுக்குள்ள
> நெஞ்சுரம் நான் அறிந்ததே. வாய்மையே வெல்லும் என்பதில் மிக ஆழமான
> நம்பிக்கை உள்ளவர் நீங்கள். தங்களது ஆகம உளவியல் எனும் புதிய துறையும்
> காலத்தால் உணரப்படும். உங்களது மிகப்பெரிய பங்களிப்பு மெய்கண்டார்
> பற்றியது என்று எண்ணுகிறேன். சைவ சித்தாந்தம் எனும் துறைக்கு புதிய
> பரிமாணம் வழங்குகிறது உங்கள் ஆய்வுகள். விரைவில் வந்து உங்களை ஒரு நாள்
> சந்திக்கிறேன்.
>
> நா.கண்ணன்
>
> 2013/3/24 K. Loganathan <k.ula...@gmail.com>:
>> அன்பின் கண்ணன்
>>
>> கண்களில் ஆநந்த கண்ணீர் மல்கத்தான் தங்கள் மடலை வாசித்தேன். அதில் வரும்
>> புரிந்துணர்வு அப்படி என்னைத் தாக்கி விட்டது, தமிழனின் சுயச் சிந்தனை
>> எங்கே போய்விட்டது என்று நேற்றும் என் நண்பர் ஒருவரிடம் மன்ம் நொந்து
>> பேசிக்கொண்டிருந்தேன்.
>>
>

Nagarajan Vadivel

unread,
Mar 23, 2013, 10:44:45 PM3/23/13
to vallamai
ஆழ்ந்த்து சிந்திக்கத் தூண்டி தமிழ்மொழி ஆய்வில் புதிய அனுமானத்தை முன் எடுக்க வழிசெய்யும் பதிவு

தமிழ் மொழி காலத்தால் முந்தியது என்று நிறுவப் புதிய ஆய்வுச் செய்திகள் வெளிப்படும் நிலையில் தமிழின் தொடர்பு வடக்கைவிட மத்தியகிழக்கு நாட்டில் இருக்கக்கூடும் என்ற தேடுதலுக்கு உதவியாக இருக்கும்

தமிழை வடமொழி கிரந்தம் என்ற எல்லைக்குள் கட்டுப்படுத்தி நடந்த ஆய்வுகளுக்கு மாறாக மொழியியல் வரலாறு தமிழை இந்தியாவுக்கு அப்பால வழங்கிய பண்டைமொழிகளுடன் ஒப்பீடு செய்ய வழிவகுக்கும்

தமிழ்மொழி வடமொழியின் திரிபே என்ற அனுமானம்போல் வடமொழி தமிழின் திரிபே என்ற அனுமானம் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து மனமாச்சரியம் இல்லாத ஆய்வுகளை மேற்கொள்ள வழி செய்யும்

நாகராசன்


2013/3/24 K. Loganathan <k.ula...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Mar 23, 2013, 10:48:44 PM3/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

சுமேருத் தமிழைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன். அங்கு ப்ல இடங்களில்  பெரும் பான்மையான சொற்கள் தமிழ் என்றாலும் சில சொற்கள் அக்காடியச் சொற்களாக இருக்கலாம் என்று கூறியுள்ளேம் மேலும் சில சொற்கள் தெலுங்கிலும் கன்னடத்திலும் உண்டு தமிழில் வழக்கிழந்து விட்டது என்றும் கூறியுள்ளேன்,

மேலும் ப்ல சொற்கள் வடமொழியில் நல்மே இருக்க தமிழில் அவை இல்லாதுபோய்விட்டது அல்லது பெரிதும் சிதைந்து விட்டது என்றும் கூறியுள்ளேன்

கீழே வரும் பக்கங்களைக் காண்க;
https://sites.google.com/site/sumeriantamil/

மேலும்:

https://sites.google.com/site/sumerutamiltex/


என்பதையும் காண்க. பெரும்பாலான  எனது மொழியியல் கருத்துகள்  சுமேரு நூற்களின் விரிவுரையில் கிடைக்கும்.

உலகன்




2013/3/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>
>
> --

> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Mar 23, 2013, 10:58:21 PM3/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் உண்மையே குறிப்பாக


<<< தமிழ் மொழி காலத்தால் முந்தியது என்று நிறுவப் புதிய ஆய்வுச் செய்திகள் வெளிப்படும் நிலையில் தமிழின் தொடர்பு வடக்கைவிட மத்தியகிழக்கு நாட்டில் இருக்கக்கூடும் என்ற தேடுதலுக்கு உதவியாக இருக்கும்

>>>
இங்கு மத்திய கிழக்கு நாடுகளோடு எகிப்து நூபியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்  தமிழர்கட்கும் இவர்கட்கும் மொழியிலும் பண்பாட்டிலும்  நெருங்கியப் பல தொடர்புகள் இருப்பதாக பல அறிஞர்கள் கூறியுள்ளனர்,  கூறியும் வருகின்றனர்

உலகன்

2013/3/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

K. Loganathan

unread,
Mar 26, 2013, 8:55:18 AM3/26/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இனி அடுத்ததாக இச் சுலோகத்தின் கடைசிச் சொல்:

ratnadhaatamam

எனும் சொல்லாகும்.  முதலில் நாம் கவனிக்க வேண்டியது இது பல சொற்களை ஒட்டி ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள ஓர் தொகைச் சொல்லாகும். இதுபோன்ற சொல்லாக்கங்கள் தமிழ் மற்றும் ஏனைய திராவிட மொழிகட்கு மற்றும் பொதுவாக ஒட்டுமொழி குடும்பதிற்கு (agglutinative languages) உரிய ஓர் சொல்லாக்க முறையாகும். வடமொழியில் இது வெகுவாக இருக்கின்றது. தமிழில் இருப்பதைப் போலவே வடமொழியிலும் இத்தகைய தொகைச் சொற்கள் உண்டென்பர் ‘பிரயோக விவேகம் (17ஆம் நூற்றாண்டு) எழுதிய சுப்ரமணிய தீட்சிதர் போன்றோர்.

இந்த சொல்லை நாம் ‘ரத்தினம்+தாது+தமம்’ என்று எடுத்துக்கொண்டு இம்மூன்று சொற்களின் ஒட்டே இந்த தொகைச் சொல் என்று எடுத்துக்கொள்ளலாம் இந்த வேர்கள் மூன்றும் சுமேருத் தமிழே யாகும்.

‘ரத்தினம்” என்பது ri-a> ra : சுடர்வது என்ற கருத்தில் ‘ஒளி பிரகாசப் பொருள்’ என்று பொருள் படும். ‘தாது’ என்பது சுமேரு ‘தார்-அ( tar-ra) என்பதில் இருக்கும் ‘தா’ தான் என்று நினைக்கின்றேன் இந்த வேரிலிருந்து ‘தருவது” என்ற கருத்தில் வரும் சொல்லாக எடுத்துக்கொள்ளலாம்.  ‘tamam’(தமம்) என்பதை ‘தர்மம்’ என்ற சொல் இடைகுறைந்து விளங்கும் ஓர் சொல் என்றும் எடுத்துக்கொள்ளலாம்

இச்சொல்லில் ‘அக்நிம் எல்லே’ செய்யும் பிறிதோர் உபகாரத்தை போற்றுவதாக அமைகின்றது. இந்த இருளைக் கிழித்து தொல்லிருளை விரட்டும் அக்நி எல்லு, இரத்தினம் போன்ற ஒளிப் பிரகாச வைர, வைடூரியம் போன்ற ஒளிக் கற்களை உபகரிக்கும் பொருளுமாகும் என்று இங்கு பகரப்படுகின்றது.

இனி இச்சுலோகத்த்தின் தொல்தமிழ் மூலத்தை இவ்வாறு தொகுத்துக் காணலாம்

Hymn 1:1

Agnim iile purohitam yajjnasya devam ritvijam / hotaram ratnadhaatamam

We worship the adorable God, the high priest of cosmic activities, the divine , the one who works through the eternal laws, and who feeds and sustains all that is divine and luminous.

அக்நிம் ஈலே புரோஹிதம் யாஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜம்/ ஹோதாரம் ரத்னதாதமம்

சுமேருத் தமிழ் மூலம்:

உக்நிம் எல்லே புர்-ஊ-கி-தம் எஜென்அஸ்-ய தேவர் (எ)ரித்துபீஜியம்/ ஊதாரம் ரத்தின தாது தர்மம்

இதன் பொருள்

அழிக்கும் கடுந்திறல் உக்னிம் எல்லு எனும் ஊழித் தீ, தொல்லிருளை கிழித்து ஒளி பரப்புவதோடு, யாகத்தீயில் வெளிப்படும் தெய்வமாகவும், உலகில் நெருப்பு தோன்றுதற்கு மூலமாகவும், உணவு தரும் செடிகட்கு ஆதாரமாகவும் மேலும் இரத்தினம் போன்ற அரிய கற்களைத் தருவதாகவும் விளங்குகின்றது.

இங்கு நாம் இரண்டையும் ஆராயும்போது, சில அடிப்படை உண்மைகள் தெளிவாகின்றன,

1.

இந்த சுலோகத்தின் ஒவ்வொறு சொல்லும் சுமேருத் தமிழ் வேர்களைக் கொண்டதாகவே இருக்கின்றது. இந்த தொல்தமிழ் வேர்கள் இல்லையென்றால், இந்த இருக்கு வேத சுலோகமே இல்லை, இது இன்னும் பல சுலோகங்கட்கும் பொருந்தும் என்பதால், தமிழின் வேரின்றி வடமொழி இயங்காது என்றும் தெரிகின்றது

2.

இனி இச்சுலோகத்தின் பொருளை நோக்க, தொல்தமிழ் மூலத்தை நாம் கொண்டு வந்த முறையில் சில பிழைகள் இருந்தாலும், பொருள் கொள்ளல் ஓர் ஊகிப்புத் தன்மையில் பெறப்படுவதல்ல. வேர்ச் சொற்களை அடையாளங் கண்டு அதன் வழி உண்மையான பொருள் விளக்கம் தரப்படுகின்றது.

3.

இந்த சுலோகம் இவ்வாறு சுமேருத் தமிழ் மூலத்தைக் கண்டு பொருள் காணும்போது, அற்புதமான அறிவியல் கருத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதையும் காணலாம்.

இவ்வாறே இன்னும் பல சுலோகங்களையும் காணவிருக்கின்றோம்

உலகன்

K. Loganathan

unread,
Apr 6, 2013, 4:16:45 AM4/6/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இனி இதேப் பதிகத்தில் அடுத்ததாக வரும் சுலோகம் கீழ்வருமாறு:

Hymn 1:1.2

I shall now consider the second sloka in the first hymn that contains words that show that Sanskrit is later because less archaic than SumeroTamil.

agnih puurvebhir rishibhir idyo nuutanair uta/ sa devam eha vakshati

May the adorable God, eternally adorned by the seers of times, past and present, be a source of inspiration to wise men of all ages.

இங்கு சுலோகத்தின் பொருள் சொல்லுக்குச் சொல் ஒத்துவருமாறு இல்லை என்பதொடு ஓர் ஊகமாகவே இருகின்றது. ஆக சொற்களைத் தனித் தனியாக ஆய்ந்து மூலப் பொருளைத் தெளியவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றோம்

இங்கு மேலே முதல் சுலோகத்தில் வந்துவிட்ட ‘agnih’ ‘devam’ ‘pur’ போன்ற சொற்களை விட்டு விடுவோம்.

முதலில் நாம் ஆயவிருப்பது ஓர் இலக்கணக் கூறு- உயர்திணைப் பண்மைச் சுட்டும் பெயர்சொற்களுக்கு ஈற்றில் ஓர் பின்னொட்டாக வரும் ‘bhir’ ‘nair’ போன்ற உருபுகளை ஆராய்வோம்

இங்கு ‘bhir’ என்பது இப்பொழுது தமிழில் விளங்கும் ‘பேர்’ என்ற சொல்தான்.’மூன்றுபேர், நான்குபேர்’ என்றெல்லாம் இன்று இச்சொல் வழங்குகின்றது.  உள்ளபடியே இதன் மூலம் சுமேருத் தமிழ் ‘ba-e-re’ என்றும் தெரிகின்றது. காண்க

Sir

21.  ni-me-lam u-lu-da nam-lu-u-lu  ( When mankind comes before you)

22. ni-me -gar-hus-bi u-mu-re-gin  (In fear and trembling at (your ) tempestuous radiance)

23. me-ta me-hus-bi   su ba-e-re-ti  (They receive from you their just deserts)

* Ta. nii meLLam  vizuta uLuuLunam

நீ மெள்ளம் உலகிட நம்.உளு.உளு

* Ta. nooy mey kaal ush(Na)bi uu maar kan(al)

நோய் மெய் கால் உஷ்(ண)பி ஊ மார். ஏகின்

·       Ta. meyttu mey ush(Na)bi  cuur ba-yiree ti(ti)

மெய்த்து மெய் உஷ்(ண)பி சூர் பாயிரே தி(தி)

இங்கு ‘ba-e-re’ என்பது , ‘ba’ ‘e-re’ என்ற இரண்டு சொற்களின் ஒட்டாகும். இங்கு ‘ப, பா’ என்பது உயர்திணை சுட்டுபோல் தெரிகின்றது. தொல்காப்பிய காலத்தில் ‘ப’ எனும் தனிச் சொல்லே ‘ உயர்திணைப் பன்மை’ காட்டும் விகுதியாக வழங்குகின்றது. ‘என்ப’ ‘சொல்ப’ என்றெல்லாம் வினைச் சொற்கள் பயில்வதைக் காண்க

e-re> இரே, ஈரே என்பது ‘பலர்’ என்ற கருத்தின் பன்மைச் சுட்டு. இது சுமேருத் தமிழின் ‘e-ne> இனம் என்ற சொல்லின் ஓர் திர்பு ஆகும். (e-ne> இன(ம்) என்பது குலம் குழு என்பன போன்ற சொற்களில் ஒன்று, ஓர் மக்கள் தொகுதியைக் குறிப்பது. இப்பொழுது இது ‘ஆர், அர் ஓர்’ என்றெல்லாம் திரிந்து திகழ்கின்றது

e-ne > இனம்

இச்சொல் வெகுவாகப் பயிலும் ஓர் சொல்லாகும். காட்டாக இங்கு ஓர் கிளவி

Sulgi Hymn B

141. inim-dingir-re-e-ne nig kal-kal-la-am     The word (will) of the gods is then most precious ...

எனெம் திங்கிர்-இனே நிக கல்கல்.ஆம் (“)

இங்கு ‘இனே’ என்ற சொல் இனம் என்ற பொருளில் தெய்வங்களின் பன்மையைச் சுட்டி நிற்பதைக் காண்க. இந்த ‘இனே’ தான் திரிந்து ‘இரே’ ஆகி பின் இப்பொழுது பயிலும் உயர்திணைப் பன்மை சுட்டும் உருபாக ‘அர், ஆர்’ என்றெல்லாம் ஆகி இருக்கின்றது போலும்.

ஆக ba-e-ne என்ற சொல்லே சுமேருத் தமிழில் ‘ba-e-re’ ஆகி பின் இருக்கு வேத காலத்தில் ‘bhir’ ஆகி பின் தமிழில் இன்னும் திரிந்து ‘பேர்’ ஆகிவிட்டது போலும்

இங்கு ஓர் கால நியதியைக் காண்கின்றோம்

Ba-e-ne> ba-e-re > Sk bhir> Ta peer

இந்த நியதி அல்லது வரலாற்றுப் போக்கு எதைக் காட்டுகின்றது?  சுமேருத் தமிழ் இருக்கிருதற்கு வடமொழிக்கு முற்பட்ட ஒன்று என்பதை நலமேக் காட்டுகின்றது என்று நினைக்கின்றேன்

தொடரும்

உலகன்

 

 

 

 



2013/3/26 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 15, 2013, 4:09:17 AM4/15/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

மேலே பல ஆதாரங்களோடு எவ்வாறு சுமேரு ‘ba-e-re’  என்ற பன்மை படர்க்கை உயர்திணை சுட்டுப்பெயர் இருக்கிருதத்தில் bhir  என்றும் அதுவே தமிழில் ‘பேர்’ என்றும் திரிந்துள்ளது என்று கண்டோம்.

இது போலவே nuutanair என்பதில் வரும் உயர்திணை பன்மைச் சுட்டாக வரும் ‘nair”  என்பதையும் ‘na-e-re> nayir> nair  என்று கொள்ளலாம என்றும் நினைக்கின்றேன்.  பழந்தமிழில் இதுவே ‘நீயிர்’ என்றாக பின் ‘நீர்’ என்று ஆனால முன்னிலைப் பன்மையாக விளங்கி உள்ளது என்றும் நினைக்கின்றேன்.

 

இங்கு தமிழில் இருக்கும் ஆனால் வடமொழியில் நான் இதுவரைக் காணாத ‘மார்’ எனும் பன்மை உயர்திணை சுட்டையும் இவ்வாறே கண்டுகொள்ளலாம்

 

மேலே காட்டப்பட்ட கிளவியில் இது வருகின்றது. காண்க

22. ni-me -gar-hus-bi u-mu-re-gin  (In fear and trembling at (your ) tempestuous radiance)

இங்கு ‘mu-e-re> mu-re ஆகி பின் கடைச்சங்கத் தமிழில் ‘மார்’ என் கிளவி ஆகியுள்ளது.

Rishi . ரிஷி

சுமேருத் தமிழில் மிகப் பரவலாக விளங்கும் ஓர் சொல் ‘ரி’ என்பது,. இதனைத் தான் ‘எரி’ என்று நாம் கொண்டுள்ளோம். பல சுமேருத் தமிழ் சொற்கள் இவ்வாறு உயிரெழுத்துக்களை முதலாக கொண்டிராதே இருந்து பொருள் மலைவினை உண்டாக்குகின்றன. ‘ri’  எனப்படுவதை எரி என்றும் உரி என்றும் அரி என்றும் நாம் சூழலிற்கு ஏற்ப கொள்ளவேண்டி இருக்கின்றது.  மேலே உதாரணங்களைக் காட்டியுள்ளோம்

இங்கு ‘ரி-ஷி’ என்பதை ‘ரி-ஜி; என்று அதாவது ‘எரி-ஜி’ என்ற சொல்லின் திரிபாகக் கொண்டால், எரி ஓம்பி ஞானம் வளர்ப்பாரைக் காட்டும். இவர்களே பிறகாலத்தில் வேதியர்கள் எனப்பட்டனர் போலும்

அடுத்து

idyo nuutanair uta

என்ற தொடரை அலசுவோம்

இதனை ‘ஈடிய நூதநயிர் உதிய : தொடர்ந்து ஓர் நதியைப் போல உதிக்கும் புதியோர்கள்” என்று பொருள் கொள்ளலாம என்று நினைக்கின்றேன்.

இங்கு ‘idyo’ சுமேரிய ‘ii, id” அதாவது ‘ஓடை” என்ற சொல்லோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது, தமிழில் ‘ஈடு’ என்றவோர் சொல்லும் இருக்கின்றது. திருவாய்மொழி போன்ற திவ்விய பிரபங்கக்ட்கு எழுதப் பட்ட நெடிய விரிவான விளக்கங்கள் ‘ஈடு’ என்ப்படுகின்றன. ‘நெடிய, ஓடை போல் ஓடும் உரை; என்பதால் இப்படி இருக்கலாம்

Nuuta> நூத (நூதனம் : புதுமை)

இதன் மூலம் “நுதி: project’ என்றே தெரிகின்றது. இல்லாதிருந்து புதிதாக நுதிக்கப்படுவது நூதனம், புதுமையானது. இதன் சுமேரு தோற்றம் தெற்றெனத் தெரியவில்லை, ஆயினும் ‘உயர்ந்த’ என்ற பொருளில் “ni, nim”  என்ற சொற்கள் இருக்கின்றன. இதன் ஓர் திரிபாக ‘நுதி’ தோன்றி இருக்கலாம்

Uta: ஊத(எதிர்காலம்) அல்லது உதிய(தோன்றுதல்)

சுமேரு மொழியில் பல இடங்களில் ‘u’ எனும் சொல் ‘நாள் = உவா என்ற பொருளிலும் ‘காலம்” என்ற பொருளிலும் வந்துள்ளது

136. u-buru-se u kal-kal-la-am ( At the time of harvest, the days are precious)

 

Ta. uu.pari-see uu kalkallaam  ( “)

 

ஊ பரிசே உவா கல்கல் ஆம்

 

ஆக ‘idyo nuutanair uta’ என்ற தொடரின் பொருளை “ எதிர்காலத்தில் தொடர்ந்து வரும் புதியவர்கள், நூதனர்” என்று எடுத்துக்கொள்ளலாம்.

தொடரும்

உலகன்

 



2013/4/6 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Apr 18, 2013, 3:46:15 AM4/18/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இனி எஞ்சி இருப்பது

sa devam eha vakshati

எனும் கிளவிதான். இதன் பொருள் தெற்றென விளங்கவில்லை,

“sa devam “ என்பது மேலே ஆராயப்படுள்ளது. ‘sa’ என்பது சுமேரு மொழியில் ‘sa, sag’ என்று வந்து ‘ஒருவன், ஒன்று” என்ற கருத்தில் வரும். இங்கு ‘ஒர் தெய்வம்’ என்ற கருத்தில் வருவதாக இருக்கலாம்.

Eha என்பதை ‘e-a” என்று கொண்டு  ‘என’  அல்லது ‘ஏய” என்று பொருள் கொள்ளலாம்

‘sa devam eha” என்பதை  ‘அந்த தெய்வம் என’ என்று கொண்டு அடுத்துவரும் சொல்லை நாம் ஆய வேண்டும்

 Vakshati எனும் சொல்லிற்கு குறிப்புகளில் கூட தெளிவான விளக்கம் இல்லை. இதனால சொற் சூழலை வைத்து நாம் பொருள் காண வேண்டிய நிலையில் இருக்கின்றோம், இதனை ‘ba-ku-si-a-ti” என்று கொண்டால். என்றும் (சி) வாழும்படியாக (ti,til) அருள்பாலிக்க (ba-ku) வேண்டும் என்பதாகக் கொள்ளலாம்.

Ba-ku-si-a-ti> vakshati

ஆக இந்த இரண்டாவது சுலோகத்தின் மூல சுமேருத் தமிழ் வடிவை இவ்வாறு காணலாம்

*Ta. angki-a: puurvee-ba-ere (e)ri-ji-ba-ere iidiyoo nuuta-na-ere uuta/ saa teyvam  e-a vaku-si-ati

அங்கிய(அக்நிJ பூர்வேபாயிரே (எ)ரி-ஜி-பாயிரே ஈடியோ நூத-ந-யிரே ஊதா/ சா தெய்வம் என பகு-சீய-தி(ல்)

பொருள்

அக்நியே!  தொல்லோர் (பூர்வபாயிரே) இன்றுள்ள எரி ஓம்புவோர்( (எ)ரிஜிபாயிரே) நதிபோன்று தோன்றும் புதியவர்கள் ( ஈடியோ நூதநயிரே) ஆகியோரை அந்த தெய்வமே என நலமே வாழ அருள்பாலிக்க வேண்டும்( சா தெய்வம் என பகு-சீய-தில்)

குறிப்பு

இங்கு படர்க்கை உயர்திணை பன்மை உருபாகிய “பாயிரே’ திரிந்து bhir  என்று நிற்பதும் இவ்வாறே ‘na-ere’ திரிந்து ‘நாயிர்+ நீயிர்’ என நிற்பதும் இலக்கணக் கூறுகள் என்பதின், இவை சாதாரன சொற்கள் போல கடன் வாங்கப் பட்டவை அல்ல. இவை இருக்கிருதத்தின் இயல்பாக நிற்கின்றன மேலும் இவை சுமேருத் தமிழின் திரிபே என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்க, இருக்கிருதமாகிய பழைய வடமொழி தொல்தமிழாகிய சுமேருத் தமிழின் திரிபே என்பது உறுதியாகின்றது என்றே நினைக்கின்றேன்

தொடரும்

உலகன்



2013/4/15 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Jul 23, 2013, 4:16:07 AM7/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 9

இதுவரை இருக்குவேதத்தில் முதல் பதிகத்தின் முதல் இரண்டு சுலோங்களில் விளங்கும் சொற்களையும் இலக்கணக் கூறுகளையும் ஆய்ந்து அவை சுமேருத் தமிழின் திரிபுகளே என்று விளக்கியுள்ளோம். இனி இம்முயற்சியில் அடுத்ததாக மூன்றாவது சுலோகத்தை ஆய்வுவிற்கு ஆட்படுத்தி அதுவும் எவ்வாறு  மூல சுமேருத் தமிழின் திரிபே என்று விளக்குவம் .இந்த சுலோகம் கீழ்வருமாறு

Hymn 1:1-3

agninaa rayim asnavat puusham eva dive-dive/ yasasam viiravattamam

May the inspiration derived from the adorable God be a source of ever increasing affluence, vitality and prosperity

இங்கு முதலில் நம்மை கவர்ந்து  இதுவும் ஓர் வகையான பழந்தமிழே என்று உணர்த்துவது ‘தினம் தினம்’ என்னும் இரட்டைக்கிளவின் இன்னொரு வடிவமாகிய ‘திவே திவே” என்பதுதான். ஆனால் மொழி பெயர்ப்பில் இது விடப்பட்டுள்ளது வியப்பாக இருக்கின்றது. எனினும் நம் ஆய்வை தொடங்கி செவ்வே செய்து இதன் மூல வடிவத்தையும் மூலப் பொருளையும் கண்டு பிடிக்க முயல்வோம்

agninaa rayim

முதலில் “agninaa rayim’ எனும் தொடரை எடுத்துக்கொள்வோம். இதன் பொருளை ‘அக்னியுடைய பிரகாசம்’ என்றோ அருள் என்றோ எடுத்துக்கொள்ளலாம்

‘அக்நினா’ என்பதில் வரும் அகர ஈறு சுமேருத் தமிழிற்கும் வடமொழிக்கும் கடைச்சங்கத் தமிழிற்கும் பொதுவாக விளங்கும் ஆறாம் வேற்றுமை உருபாகும். முதல் சுலோகத்தில் வரும் ‘யாஜ்னஸ்ய தேவம்’ என்பதுபோல இங்கும்.  ‘அஸ்’ என்றும் ‘அத்து’ என்றும் வரும் சாரியைகட்குப் பதிலாக இங்கு ‘அன்’ சாரியை வருவதாகக் கொள்ளலாம். ‘காலன கழல் < கால்-அன்.-அ கழல்’ என்பது போல.

இங்கு அகர ஈற்று வேற்றுமை உருபு கிழமைப் பொருளிலும் இடப்பொருளிலும் வருகின்றது என்று கொள்ளலாம்

‘rayim’ என்பது  சுமேரு ‘லா’ விலிருந்து வரும் ‘ரா’ எனும் வேரினை மூலமாக்கொண்டு ‘வருதல்’ என்ற பொருளில் பயில்வதாக இருக்கலாம.  சுமேரிய ‘லா’ தமிழில் ‘அலை’ என்றாகி நிற்க தெலுங்கில் ‘ரா’ என்றாகி ‘வருதல்’ கருத்தில் பயில்கின்றது போலும்.

மேலும் இதனை ‘’(எ)ரியும்’ என்பதின் திரிபாகக் கொண்டு அக்நியின் ஒளி விகசிப்பு என்றும் கொள்ளலாம.   

asnavat puusham

இனி இத்தொடரில் ‘பூஷம்’ என்பது சுமேரு puu  என்றும் தமிழில் ‘பூ’ என்றும் வரும் சொல்தான் என்று தெரிகின்றது, பூப்பது, மலர்வது தோன்றுவது என்றெல்லாம் பொருள்படும் என்று தெரிகின்றது.

‘அஸ்னாவத்’ என்பதில் ‘ஆஸ்’ எனும் சொல் சுமேருவில் ‘as” என்று பயில்கின்றது. As-im-babbar> ஆதிபார்ப்பான்” என்ற சொல் ‘ஆஸ்’ என்பது இப்பொழுது ‘ஆதி’ என்று மருவி இருப்பதாகத் தெரிகின்றது

மேலும் இச்சொல்லை ‘ஆஸ்-னி.அ-ஆபது> ஆஸ்னாவத் ‘ஆதியில் ஆவது என்று பொருள்படுவதாகக்கொண்டு இத்தொடரின் பொருளை ‘ஆதியில் ஆவதாகிய மலர்ச்சி’ என்று அர்த்தப்படுவதாக கொள்ளலாம்

ஆக இரண்டையும் இணைத்து ‘agninaa rayim asnavat puusham’  என்ற கிளவியின் பொருளை ‘அக்நியின் அருள் ஆதியில் மலரும் ஒளி’ என்று கொள்வது பொருந்தும் என்றே நினைக்கின்றேன்

தொடரும்

உலகன்



2013/4/18 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Jul 24, 2013, 3:43:31 AM7/24/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 10 இரட்டைக் கிளவிகள்

Eva : இவ்வே, அவ்வே: இவ்வாறு? அவ்வாறு?  அல்லது ஈவே?

இனி அடுத்ததாக ‘eva’ என்ற இடைச்சொல் வருகின்றது. இதனை ஓர் வகையான ஏகாம என்ற கொள்ள இடமில்லை என்றே நினைக்கின்றேனெ. இந்த பிரிநிலை ஏகாரம் தேற்ற ஏகாரம் போன்ற ஏகாராங்கள் சுமேருத் தமிழிற்கும் வடமொழிக்கும் தென்தமிழிற்கும் பொது என்ற போதிலும் இங்கு அவ்வாறு கொள்ள முடியவில்லை. மாறாக சுட்டுச் சொல்லாகிய ‘இவ்வே, அவ்வே’ என்று கொள்வதே சிறப்பு என்று தெரிகின்றது, சுமேருத் தமிழில் இது ‘ib, ib-ba, ab-ba’ என்றெல்லாம் வரும் இடைச் சொற்கலோடு தொடர்புடையதாகக் கொள்ளலாம்

மேலும் இதனை ‘ஈவே” என்று கொண்டு தருதல் கொடுத்தல் என்ற பொருளில் விளங்குகின்றது என்றும் கொள்ளலாம். இது சுமேரு சீ> ஈ என்ற சொல்லோடு தொடர்பு படுத்தவும் செய்யலாம. இச்சொல் ‘ஈன்.அன்னா” (in-anna)  என்ற சொல்லிலும் அடங்கி கிடக்கின்றது.

Dive-dive: திவே திவே: தினம் தினம்

இங்கு குழப்பம் யாதுமில்லை, இது சுமேருத் தமிழ் dib-be >dive தான். காண்க

10.
kin-gal kin ki-du u nu-dib-be ( The great   . . .  the . .  the beautiful place, light enters not)

Ta. kaNkaL kaaNkidu uu naa tiiyppee ( For eyes to see light did not brighten it.)
கண்கள் காண்கிடு நா தீப்பே

ஏறக்குறைய சங்கத் தமிழாகவே தோன்றும் இக்கிளவியில் ‘ஊ தீ(ய்)ப்பு” என்பது ஊவாகிய ஒளி தீய்த்தல் அதாவது விகசித்தல் என்ற பொருள் விளங்குவதை காண்க. இது ‘தீ’ என்ற வேரினைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் சொல்லாகத் தெரிகின்றது. தீ-பா: தீயாகிய ஒளியைத் தருவதல் ஆகவே ‘தீபம்’ என்பது போன்று இங்கு ஆனால் ‘தி-னம்’ என்ற கருத்தில் வருவதாகக் கொள்ளலாம்.

‘தீ’ என்ற சொல்லும் சுமேருத் தமிழில் உண்டு. காண்க:

 Sirbiyam

44. ka-gal-a-be de mu-ni-in-dal ( Its grand entrance you have reduced to ashes)

*Ta. kaa kaLLabiyee tii munnin taL ( You have pushed into fire the great entrance gates)

கா கள்ளபே தீ முன்னின் தள்

இக்கிளவி மிகத் தெளிவாக உடன் தமிழ் என்றே புரிந்துகொள்ளும் வகையில் இருப்பதைக் காண்க.

ஆக ‘தீ’ என்ற வேர்ச்சொல்லிலிருந்தும் இரட்டித்தல் எனும் வகையாலும் வடமொழியில் ‘திவே திவே’ வர தென்தமிழில் ‘தினம் தினம்’ எனூம் இரட்டைக் கிளவி உருவாகியுள்ளது.

இவ்வாறான இரட்டைக் கிளவிகள் திராவிட மொழிகளிலேயே காணப்படும் ஓர் கூறு என்றும் நினைக்கின்றேன். சுமேருத் தமிழில் இது பரக்கப் பரக்கக் காணப்படும் ஓர் கூறுமாகும், கீழே சில சான்றுகள்.

 Temple Hymn 1.

17. su-su : to cook?

gir ninda ili u-su-su-ja ( Where the oven brings bread, (good) to eat)

Ta. kiir niiNda ilai uy.suur-suurja ( It is also a place where greens with long leaves are cooked)


கீர் நீண்ட இலை உசூர்சூர்ஜிய

su-su > suur-suur : to heat up, cook?

Hymn 2. :

5. te-te-en< te-en-te-en: cool

e-en-lil-la sa-zu te-te-en bar-zu nam-tar-ra ( House of Enlil, your interior is cool, your back determines destiny)

Ta. il eeNliilla saayju taNtaN puRaju tarunam ( O temple of EnLiil ! Your heart is cool and your exterior is generous)


இல் ஏண்லீல்ல சாய்ஜு தண்தண் புறஜு தருநம்.

இந்த te-en> தண் என்ற சொல் சுமேருத் தமிழில்  பல இடங்களில் வரும் ஓர் சொல்லாகும். இன்றைய தமிழில் விளங்கும் தண், தணி என்றவாறே அங்கும்.

மேலும் தனித் தனி> தத்தனி என்றாகி நிற்பதுபோல தண்.தண். தத்தண் என்று ஆகி இருப்பதைக் காண்க.. இவ்வாறு இன்னும் பல சொற்கள் இருக்கின்றன

இதுபோன்ற இரட்டைக் கிளவிகள் பலவற்றை கீழ் வரும் வலைப் பக்கத்தில் காணலாம

https://sites.google.com/site/sumerutamiltex/echo-words-in-temple-hymns-1-10

இத்தகைய இரட்டைக் கிளவிகள் வடமொழியிலும் அதிலும் குறிப்பாக இருக்குவேதத்திலும் பல இடங்களில் உண்டு. இக்கூறு தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட வேண்டிய ஓர் கூறாகவும் இருக்கின்றது. வடமொழியும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியே என்பதை ஐயம் திரிபற இத்தகைய ஆய்வுகள் நிறுத்தும்

தொடரும்

உலகன் 



2013/7/23 K. Loganathan <k.ula...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jul 24, 2013, 8:14:16 PM7/24/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
‘திவே திவே

திவசம் என்றாலும் திதி என்றாலும் தினம் என்ற பொருள் என கருதுகிறேன். 

24 ஜூலை, 2013 3:43 AM அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:


K. Loganathan

unread,
Jul 24, 2013, 8:37:20 PM7/24/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
த்்வேந்தன் அரசு அவர்களே

மிக்க நன்றி. 'தீ' எனும் வேரிலிருந்து வடமொழியில் இன்னும் பல சொற்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். தேட வேண்டும்.

'திதி'  என்பது சோதிடக் கலையில் வரும் சொல்லாக இருந்தால் அதுவும் 'தீ' எனும் வேரிலிருந்து வந்ததாக இருக்கலாம்.  'தோன்றுதல்' எனும் கருத்த்தாக இருக்கலாம்ஆனால் 'திதி; என்று (ஸ்திதி) சுமேரிய தி, தில்: இருத்தல் வாழ்தல் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம்.
 தீக்கை எனும் தமிழ் சொல் வடமொழியில் தீக்ஷா என்றிருக்கின்றது  என்று நினைக்கின்றேனெ

 மேலும் 'தில்' எனும் இதிலிருந்தே தின்  என்ற சொல்லும் 'தீனி' 'தானியம்' போன்ற சொற்களும் வந்திருக்கலாம்.

ஆராய்ச்சித் தொடரவேண்டும்.

உலகன்

2013/7/25 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

K. Loganathan

unread,
Jul 26, 2013, 11:15:32 PM7/26/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 11

இனி இந்த சுலோகத்தில் எஞ்சி இருப்பதாக இரண்டு சொற்கள் தாம் இருக்கின்றன “ yasasam viiravattamam”

இவையும் தமிழ் சொற்களேயாம

Yasasam: ஆசாசம்> ஆயாசம்? : களைப்பு?

இச்சொல் வழக்குத் தமிழில் இன்றும் பயில்கின்ற ஓர் சொல்லாகும் இதன் மூலம் ஆல்.நாசம் அதாவது ஆற்றலில் நாசம் ஆகவே களைப்பு என்றாகி பிறகு இதுவே நகரம் கெட்டு (இது பரவலாக நேரும் ஒன்று) ஆல்.ஆசம் என்றாகி பின் ஆயாசம் என்றாகி இருக்கலாம.

இது தினம் தினம் கடுமையான வெயிலின் தாக்கத்தால் வரும் ஓர் வகையான களைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

இதனோடு தொடர்புடையதே அடுத்து வரும் சொல்  என்று நினைக்கின்றேன்

Viiravattamam : வீர வத்தமம்: வீர வறுத்தம்? வீரவுணர்வு காய வைத்தல்?

Suம் bi-ra> வீரா?

From Kes temple hymn we have

19. ur-sag-bi (d) as-sir-gin rib-ba ama si-in-ga-u-tu ( One great as its hero Assir -- has any mother ever borne him?)

*Ta. oorsaan (d) acuurngin biira ammaa utu-icinka ? ( ")

ஓர்சான் (தெய்) அச்சூர்ங்இன் பீர(>வீர) அம்மா இசிங்க உது?

Sulgi Hymn B.

105 nig bi-ra-a-a-mu ki-bi gu nu-zi-zi-i ( Whatever I hit , did not raise its head from the spot)

*Ta. nika biira aala moo ki-bi kavvu   na jiji-i ( Because of bravery and immense strength , whatever fell down the ground never lived again)

நிக பீராஅல மூ கீபி கூவ் நா ஜிஜி.இ

இவ்வரிகளில் எரிப்ப > பீர என்றும் பீர> வீர என்றும் வந்திருப்பதைக் காண்க. கடுந் திறல் என்று பொருள் படுகின்றது.

Vattamam>  வத்தமம்< வறுத்தமம்,? காய வைத்தல், தீய்த்தல், வறுத்தல்

ஆக ஆயாசம் போல் ‘வீர வத்தமம்’ என்பதும் வீரவுணர்வை காயவைத்தல் வத்திடச் செய்தல் என்றாகின்றது.

ஆக நாம் இப்பொழுது இச்சுலோகத்தின் மூல சுமேருத் தமிழ் வடிவை ஒருவாறு ஊகித்துப் பெற்று அதன வழி  மூலப் பொருளையும் காண முடியும் நிலையில் இருக்கின்றோம்

Hymn 1:1-3

 Now we shall consider the Third Sloka of the first hymn that goes as follows:

agninaa rayim asnavat puusham eva dive-dive/ yasasam viiravattamam

May the inspiration derived from the adorable God be a source of ever increasing affluence, vitality and prosperity.

இதன் மூல சுமேருத் தமிழ் வடிவம்:

அக்நின எரியம் ஆஸ்வத்து பூஷ்யம் ஏவே திவே திவே/ ஆயாசம் வீரவத்தமம்

தினம தினம் (திவே திவே) அக்நி ஈயும் எரியும் ( அக்நின எரியும்) ஆதிய ஒளி மலர்ச்சியும் ( ஆச்னவத்து பூஷம்) மக்களிடையே களைப்பாகிய ஆயாசத்தையும்( ஆயாசம்)  வீரம் வற்றிப்போதலையும் ( வீரவத்தமம்) தரும்

இங்கு விதந்தெடுத்து ஓதப் படும் எரியும் கடுந்திறல் ஒளியும் உடம்பில் இருக்கின்ற சத்தியை வற்றச்செய்துவிடும் பண்புடைய என்று அனுபவத்திற்கு ஒத்டு வருகின்ற ஓர் உண்மையே பகரப் படுவதாக தெரிகின்றது.

தொடரும்

உலகன்   



2013/7/25 K. Loganathan <k.ula...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages