தந்தை மொழி தமிழ்

253 views
Skip to first unread message

Anna Kannan

unread,
Feb 20, 2014, 12:55:01 AM2/20/14
to Vallamai
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரின் மேலாண்மை இயக்குநர் (ஓய்வு) ஆ.கிருஷ்ணன் அவர்களின் மகாபாரதத்தில் கிருஷ்ணன், கம்பன் காணும் திருமால் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா, நாரத கான சபாவில் 19.02.2014 அன்று மாலை நடைபெற்றது. பேரா.மோகன், பேரா.தெ.ஞானசுந்தரம், பேரா.நிர்மலா மோகன், ஏர்வாடி எஸ்,இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய வேதாந்த தேசிக ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எம்.கே.ஸ்ரீநிவாஸன், உலகில் ஐந்து விஷயங்கள் பூரணமானவை (Perfect) எனக் கணிதம், சமஸ்கிருதம், கர்நாடக சங்கீதம், விசிஷ்டாத்வைதம் உள்ளிட்டவற்றைக் கூறினார். இவை ஐந்தும் பொருந்தியவர் ஆ.கிருஷ்ணன் எனக் குறிப்பிட்டு, அவரை Perfect என்று பாராட்டினார். அடுத்துப் பேசிய பேரா.மோகன், சமஸ்கிருதம் பற்றிய கருத்தினைக் கேட்டதும், வள்ளலார் சொன்னது நினைவுக்கு வந்தது என்றார். 

வள்ளலாரும் அவர் காலத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராச்சாரியாரும் ஒரு முறை ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அப்போது, சம்ஸ்கிருதம், இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி எனச் சங்கராச்சாரியார் சொல்ல, அப்படியானால் தந்தை மொழி தமிழ் என வள்ளலார் பதில் அளித்ததைக் குறிப்பிட்டார்.


--
Dr.Annakannan
Chennai

Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 20, 2014, 1:25:21 AM2/20/14
to வல்லமை

2014-02-20 11:25 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
உலகில் ஐந்து விஷயங்கள் பூரணமானவை (Perfect) எனக் கணிதம், சமஸ்கிருதம், கர்நாடக சங்கீதம், விசிஷ்டாத்வைதம் உள்ளிட்டவற்றைக் கூறினார்.

ஐந்து முறை விரல் விட்டு எண்ணிப் பார்த்து விட்டேன்.  எனக்கு நான்குதான் வாருகிறது.  ஐந்தாவது எதுவோ?


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Anna Kannan

unread,
Feb 20, 2014, 1:30:14 AM2/20/14
to Vallamai

அதை மறந்துவிட்டேன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 20, 2014, 1:40:53 AM2/20/14
to vallamai
தமிழ்ச்சூழலில் காலங்காலமாக வாழ்ந்து உடல் வளர்த்து, உயிர் வளர்த்து, உணர்வு வளர்த்து, சந்ததி வளர்த்துவந்தாலும் சிலர் தமிழைச் சமஸ்கிரதத்திற்கு இணையானதில்லை என்று கருதும் மனப்பான்மை எங்ஙனம் விளைகிறது?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014-02-20 11:25 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:

S NEELAKANTAN

unread,
Feb 20, 2014, 1:59:29 AM2/20/14
to vall...@googlegroups.com
தமிழை திராவிட மொழி என்றும் சமிசக்ரிதத்தை ஆரிய மொழியென்றும் எண்ணும் தமிழர்கள் இருக்கும்வரை இந்த மனப்பான்மை போகாது தான்  வணங்கும் கடவுளையே ஆரியக்கடவுள் திராவிடக்கடவுள் என்று ப்ரித்துபார்ப்பவருக்கு மொழி மட்டும் விதிவிலக்கா ???? 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--



 

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2014, 7:36:41 AM2/20/14
to vallamai



20 பிப்ரவரி, 2014 1:40 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:

தமிழ்ச்சூழலில் காலங்காலமாக வாழ்ந்து உடல் வளர்த்து, உயிர் வளர்த்து, உணர்வு வளர்த்து, சந்ததி வளர்த்துவந்தாலும் சிலர் தமிழைச் சமஸ்கிரதத்திற்கு இணையானதில்லை என்று கருதும் மனப்பான்மை எங்ஙனம் விளைகிறது?

சமஸ்கிருதத்துக்கு தமிழ் இணையானது இல்லை என ஒத்துக்கொள்வதில் என்ன தவறு. அது உண்மைதானே

 தமிழ் வேங்கடத்தின் தெற்கில் மட்டும் வளர்ந்த மொழி. மற்றது இந்தியா முழுமையும் புழங்கிய மொழி. அதனால் அதில் படைப்புகள் அதிகம். ஆனால் சம்ஸ்கிருதம் புரிந்து கொள்கிறவர்களை விடவும் தமிழை புரிந்துகொள்கிறவர்கள் இன்று ஏராளம். அது தமிழுக்கு வெற்றிதானே.

 தமிழில் சகர கிளவிகள் வரா என்று தொல்காப்பியம் சொல்லும். ஒரு காலத்தில்  சகரவருக்கத்தில் சொற்கள் தமிழில் குறைவாகவே இருந்து இருக்கும். இன்றும் அப்படித்தான். சிப்பியை இப்பி எனும் மரபும் இருந்தது.

சம்ஸ்கிருதத்துல் சிந்து எனும் சொல்லே ஐரோப்பிய மொழிகளில் இந்து (ஹிந்து>இந்து) என்று சொல்லி இருக்கிறார்கள்

அதனால் தமிழ் மரபு ஐரோப்பிய மொழிகளிலும் இருக்கு. எனவே தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு மூத்தது தமிழ் எனலாம்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Theetharappan R

unread,
Feb 20, 2014, 12:04:06 PM2/20/14
to vall...@googlegroups.com
ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப் 
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தெழுதார்- எட்டெழுதி 
வல்லுனரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் 
சொல்லிடினும்  ஆற்றல் சோர்வின்று. என்று கோதமனார் 
திருவள்ளுவமாலையில் சொல்லியுள்ளார். எழுதாக் கிளவியாக 
இருந்த வடமொழிக்கு எழுத்து உருவைக் கொடுத்தது தமிழ்.
சிலர் சமஸ்கிருதம் தேவ பாஷை என்றும் தமிழ் நீச பாஷை 
சொல்லியிருக்கிறார்கள்.இன்றும் மக்களின் பாஷையாக 
வழக்கில் இருப்பது தமிழ் மட்டுமே.


--

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Feb 21, 2014, 3:49:39 AM2/21/14
to vall...@googlegroups.com
அன்புள்ள திரு.அண்ணா கண்ணன் அவர்களே
 
தந்தை மொழி தமிழ் என்று வள்ளலார் அவர்கள் உட்பொருளுடன் தான் உரைத்திருக்கிறார்கள்

திரை என்ற தூய தமிழ்ச்சொல்லே த்ரவத் பாணி என்று ரிக் வேதத்தில் வருகிறது.அலை போல வேகமாக போகும் கால்களை உடைய குதிரையை குறிப்பிட அந்த சொல் வருகிறது.தமழர்கள் திரை கடலோடி திரைவியம் சேர்த்தவர்கள்.இதிலிருந்து வேத மொழி த்ராவிட அரசர்கள் (அல்லது அரக்கர்கள்)என்று பெயர் சூட்டுகிறது.

மக்கள் உருவாக்கிய வரி வடிவ ஒலி வடிவ மொழியாக தமிழ்
நிறைமொழி என்றும் வடமொழி ஒலிவடிவில் மட்டும் தமிழோடு புழங்கி வந்ததால் மறைமொழி என்றும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகிறது.
இருமொழியும் நிரவி மணிப்பவள நடையாக இருக்கும்போது தான் புத்த சமயம் சார்ந்த அறநூல்கள் நிறைய வந்தன.இவை பாலி மொழித்தாக்கம் உடையவை.
ஆனால் தேவாரம் திர்வாசகம் மற்றும் திருவாய்மொழி போன்றவை தூய தமிழ் நடையை அடியொற்றின.

சமஸ்கிருதம் என்ற சொல் தமிழ்ச்சொற்களால் ஆன தொடர் ஆகும்.சமை என்பது பக்குவப்படுத்து ஆகும்.கிருதம் என்பது கரம் எனும்(கை)தமிழ்ச்சொல்லின் அடிப்படையில் "செய்யப்பட்டது" (எழுத்து அமைக்கப்பட்டது)என்பதைக்குறிப்பதாகும்.வேத மொழி அப்படி செய்யப்பட வில்லை(அபௌர்ஷாயே)என்பதால் (ஒலி வடிவில் மட்டுமே இருந்ததால்)அதற்கு சமக்கிருதம் என்ற சொல் பொருந்தாது.எனவே தமிழ் மொழியின் உதவியால் தான் வேத ஒலிப்புகளுக்கு வரிவடிவம் அமைக்கப்பட்டது.வேத ஒலி வடிவம் தமிழர்கள் உலகின் பலவேறு நாடுகளுக்கும் க்டல்வழி தொடர்பு கொண்டு அதை ஒலிவடிவுகளாக கொண்டு வந்து செவிவழியாய் பாது காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்.

கற்பனை போல தோன்றினாலும் இதுவே உண்மை.இன்றும் நம் தமிழர்கள் 
நான்கு வேதங்களையும் ஒலிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள்.இரு மொழிகளையும் ஆனால் தனித்தனி பாதைகளில் செலுத்தியவர்கள்
தொன்மையான அந்த சிந்து வெளித்தமிழர்கள் தான்.

==================================================ருத்ரா

வேந்தன் அரசு

unread,
Feb 21, 2014, 7:08:11 AM2/21/14
to vallamai
>>ஆகும்.சமை என்பது பக்குவப்படுத்து ஆகும்.




21 பிப்ரவரி, 2014 3:49 முற்பகல் அன்று, ருத்ரா (இ.பரமசிவன்) <eps...@gmail.com> எழுதியது:

.

சமஸ்கிருதம் என்ற சொல் தமிழ்ச்சொற்களால் ஆன தொடர் ஆகும்.சமை என்பது பக்குவப்படுத்து ஆகும்.

சகரக்கிளவி தொல்காப்பிய தமிழில் இல்லை எனும்போது சமை எங்கிருந்து வந்தது?  

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Feb 21, 2014, 4:29:26 PM2/21/14
to vall...@googlegroups.com
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்"என்று வள்ளுவர் எழுதிய 
"சமன் செய்து" என்ற சொற்றொடர் சமைத்தல் அதாவது சாப்பிடுவதற்கு சமமானதாக ஆக்குதல் பக்குவப்படுத்தல் என்ற பொருளில் தான் வருகிறது.தராசு தட்டுகளில் ஒன்று வெறும் அரிசி என்றும் இன்னொன்று சோறு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.வேத மொழி ஒலி வடிவில் இருந்ததை வரி வடிவில் சமப்படுத்தி என்பதே இங்கு பொருள்.ஸ்ருதியை சப்தம்(சொல்)ஆக்குவது என்றால் அது ஸ்ருதிசப்தம் என்றே அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.ஒலி சொல் என்ற இரண்டும் ஒரே "சப்தம்" என்று இருப்பதால் சப்தகிருதம் என்று கூட அழைக்கப்பட்டிருக்கலாம்.

சமன் அல்லது சமம் என்பதே நமக்கு "சமயம்"(மதம்)
ஆயிற்று.இது மனப்பக்குவம் அடைவதை விளக்குகிறது.மேலும் சமயம் என்பதற்கு காலம் என்ற சொல்லும் பயன் படுத்துகிறோம்.காலம் ஒரு புள்ளியில் சமன் செய்து கணிக்கப்படுகிறது.தூரத்து விண்மீன் இடனிலையும் பூமியின் இட நிலையும் சமன்செய்து கணிக்கப்படுவதே சமயம் ஆகும்.


சகடம் (பீலி பெய்ச் சாகாடும்..) சங்கு சருகு சமர் (போர்) போன்ற சொற்களும் சங்கத்தமிழில் புழங்கி வந்துள்ளனவே.தொல்காப்பியம் எனும் இலக்கண நூல் தோன்றிய பிறகா எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் வந்திருக்கும்?

கீழே வரும் "பதிற்றுப்பத்து (9 ஆம் பத்து 82 ஆம் பாட்டு)
பாடினோர் : பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்டோ ர் : குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை


பகை பெருமையின், தெய்வம் செப்ப, 
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர், 
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் 
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை 
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, 5
......
புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை, 15
நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே. 

இதில் சமம் என்ற சொல்லே வருகிறது.

இலக்கியம் தோன்றிய பின்னரே அதை முறைப்படுத்த இலக்கணம் வந்திருக்கலாம்.

வடமொழி தமிழ்மொழி மயக்கத்தில் பல சொற்கள் இடம்பெயர்ந்து உள்ளன. இங்கிருந்து (தமிழ்)அங்கு (வடமொழி)போய் மறுபடியும் இங்கு வந்த சொற்கள் 
மிக மிக அதிகம்.சான்றாக இலங்கு என்றால் விளங்கு என்று பொருள்.பெரும்பாணாற்றுப்படையில் "இலங்கை" என்ற சொல் (திண்டிவனம் பகுதியை ஒட்டி)அருவி காடு மலை உள்ள இடத்தை குறித்து வருகிறது.இலங்கைத்தீவு வடமொழி வடிவில் "லங்கா" ஆனாது.

சகரக்கிளவிக்கும் வழுவமைதி இருக்கலாம்.

=================================================================ருத்ரா






On Wednesday, February 19, 2014 9:55:01 PM UTC-8, அண்ணாகண்ணன் wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages