
வேள்வி என்னும் தூய தென்சொல்லாகிய தொழிலாகுபெயர் (ம, தெ. வேள்வி; க. பேளுவெ) விரும்பு என்று பொருள்படும் வேள் என்னும் முதனிலையடிப் பிறந்து, பின்வருமாறு, விரும்பிச் செய்யும் பல்வேறு வினைகளைக் குறிக்கும்.
1. திருமணம் "நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127).
2. விருந்தினர்க்குப் படைப்பு. வேள்வி தலைப்படாதார் (குறள். 88).
3. தெய்வத்திற்குப் படைப்பு, பூசனை ( பிங் ) வேள்வியி னழகியல் விளம்புவோரும் (பரிபா. 19 : 43).
4. பேய்கட்குப் படைப்பு, களவேள்வி, "பண்ணிதைஇய பயங்கெழு வேள்வியின்" ( அகம். 13: 11)
5. கொடை (பிங்.).
ஆரியர் தம் ஆரியக் கொள்கைகளைத் தமிழ்நாட்டிற் பரப்புதற்கும் 'யாகம்' என்னும் கொலை வேள்வியைத் தமிழரிடை எதிர்ப்பின்றிச் செய்தற்கும், தம் கொலை வேள்விக்குக் கடவுள் வேள்வி யென்றும் வேதக்கல்விக்குப் பிரம வேள்வியென்றும் பெயரிட்டு அவற்றொடு பேய்ப்படையலாகிய பூதவேள்வியையும் விருந்தோம்பலாகிய மாந்தன் வேள்வியையும் இறந்த முன்னோர்க்குப் படைத்தலாகிய தென்புலத்தார் வேள்வியையுஞ் சேர்த்து, ஐவகை வேள்வி யென்று தொகுத்துக்கூறி, வேள்வியென்று வருமிடமெல்லாம் ஆரிய வேள்வியை நினைக்குமாறு செய்துவிட்டனர் என்கிறார் பாவாணர்.
எனவே, வேள்வி என்ற சொல்... திருமணம், விருந்தோம்பல், தெய்வத்திற்குப் படைத்தல், பேய்கட்குப் படைத்தல், பிறருக்குக் கொடுக்கும் ’கொடை’ எனும் பல வினைகளைக்குறிக்கும் ஒருசொல்லாக அன்று இருந்திருக்கிறது. அதன் விரிந்த எல்லையை ‘யாகம்’ என்று மட்டும் நம்மைச் சுருக்கிப் பொருள்கொள்ளவைத்தது ஆரிய மாயையே! :-)
தனியிழை தொடங்கியதற்கு நன்றி செல்வன்! :-)//இறந்தாரை தென்புலத்தோர் என கூறுவதே பித்ருலோகத்தின் இருப்பிடம் தெந்திசை என்பதையே சுட்டுகிறது."ஓம்பல் தலை" என்றால் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய அறநெறியை தவறாமல் செய்யவேண்டும் என்பதே பொருள்.//செல்வன்,ஓம்புதல்/ஓம்பல் என்பதற்குப் ’போற்றுதல்’ என்ற பொருளும் உண்டல்லவா? அந்த அடிப்படையில் இறந்தவர்களை/முன்னோர்களை நினைவுகூர்ந்து போற்றுதலும் ’ஓம்பல்’தானே?
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்......
திருக்குறள் தோன்றிப் பல நூற்றாண்டுகள் கழிந்தபின், வைதீக சமயத்தின் செல்வாக்கு தமிழகத்தில் ஓங்கியிருந்த காலத்தில் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) வாழ்ந்தவரும், திருக்குறளின் தலையாய உரையாசிரியர் (Supreme Commentator of Thirukkural) என்று போற்றப்படுபவருமான பரிமேலழகர், திருக்குறளுக்கு மிகச்சிறந்த உரைவரைந்திருக்கிறார் என்பதை எவருமே மறுக்கமுடியாது. அவர் தமிழறிஞர் மட்டுமன்று; வடமொழியிலும் பெரும் வல்லுநர். அதனால், திருக்குறளில் சிலஇடங்களில் வடஆரியச் சம்பிரதாயங்கள், சடங்குகள் முதலியவற்றைத் தன் உரைவிளக்கத்தில் புகுத்தியிருக்கின்றார். அதுபோன்ற இடங்களில் இதுவும் ஒன்று என்பதையே “தென்புலத்தார் என்பார் பித்ருலோகத்தார்; அவர்கள் அயனால் படைக்கப்பட்ட கடவுட்சாதியார்", என்றெல்லாம் உரைத்திருப்பது உணர்த்துகிறது. தர்ப்பணம் செய்வதெல்லாம் தமிழ் மரபே அன்று; ஆரியவழக்கத்தால் நம்மிடம் ஏற்பட்ட புதிய பழக்கங்களே அவை!
திருவள்ளுவரோ,மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற எனும் எண்ணம் கொண்டவர். ஆதலால், ஆரவாரம் மிகுந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அவர் ஆதரித்திருக்க வாய்ப்பேயில்லை. சடங்குகள் மட்டுமல்லாது, மழித்தல் நீட்டல் போன்ற வெளிவேடங்களையும் வெறுத்து, உலகம் பழிப்பதைச் செய்யாமல் ஒழியுங்கள் போதும்; வேறு ஒன்றும் நீங்கள் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அப்படிப்பட்டவர், முன்னோர்களைத் தூயநெஞ்சோடு நினைவுகூர்ந்து போற்றுவதை ’மனத்துக்கண் மாசில்லாத அறச்செயல்’ என்று நிச்சயம் ஒத்துக்கொள்வார். :-)
இதனை உணர்ந்தே கலைஞர் கருணாநிதி அவர்கள் தன் உரையில்,”வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப்
போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம்பேணல் ஆகிய கடமைகளை
நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக் குரியனவாம் என்று ’சிம்பிளாக’க் குறிப்பிட்டுவிட்டார்.”இவ்விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. :-)
***//தேவர் அனையர் கயவர் என்பதற்கும்கயவர் அனையர் தேவர் என்பதற்கும் இடையே உள்ல வித்தியாசம் உங்களுக்கு நிச்சயமாக தெரியும் என நம்புகிறேன் :-)//பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை செல்வன். இரண்டுபேருமே அயோக்கியர்கள்; மனம்போனபடி ஒழுக்கமின்றித் திரிபவர்கள் என்றுதான் (சொல்லை எப்படி மாற்றிப்போட்டாலும்) பொருள் வருகிறது. I guess, that' what the couplet intended to say here! :-))
செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் பொழிப்பு: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர். ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து (அதிகாரம்:கேள்வி குறள் எண்:413) |
மணக்குடவர் உரை: செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர். பரிமேலழகர் உரை: செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர். இரா சாரங்கபாணி உரை: செவியுணவாகிய கேள்வியுடையவர் இவ்வுலகத்தவராயினும் அவியுணவினைக் கொள்ளும் தேவரோடு ஒப்பர். |
ரிக் வேதத்தில் (நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல்) தேவர் தலைவனான இந்திரன், பிரஜைகளின் தலைவனான பிரஜாபதி, அங்கியக்கடவுள், மழைக்குரிய வருணன் போன்ற தேவர்களே பிரதானமாகத் துதிக்கப்பட்டவர்கள்; அவர்களை நோக்கித்தான் வேதங்கள் யாகமியற்றின; பலியிட்டன; விரும்பிய பலனைக் கேட்டன.
விஷ்ணு இலக்குமி போன்றோரையெல்லாம் புராணங்களும், செல்வனும் கொண்டாடுகின்ற அளவிற்கு வேதங்கள் கொண்டாடவில்லை என்றுதான் எனக்கு வேதமறிந்த சிலர் சொன்னார்கள். வேதத்தில் கரைகண்டவர்கள் இதுகுறித்து மேலதிகத் தகவலளித்தால் தெளிவு கிடைக்கும்! :-))
***//வள்ளுவரே வேதம், வேள்விகள், ஆகியவற்றை பின்பற்ற சொல்லி குறளில் கூறியுள்ல நிலையில் அதை இல்லை என்பது எப்படி என எனக்கு புரியவில்லை//இப்பதிவிலேயே 'வேள்வி' என்பதன் உண்மைப்பொருளை பாவாணர் வழிநின்று விளக்கிவிட்டேன். விருந்தோம்பல் அதிகாரத்தில் அது முழுக்க முழுக்க மக்கள் ’விருப்பத்தோடு செய்யும் செயல்’ எனும் பொருளிலேயே வருகிறது என்பதையும் தெளிவுபடுத்திவிட்டேன். :-)திருக்குறளில் வேள்வி குறித்துப் பேசும் மற்றொரு குறள், ’புலால் மறுத்தல்’ அதிகாரத்தில் வரும் ”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்...” எனும் குறளாகும். அதில் திருவள்ளுவர் மக்களைப்பார்த்து, ”நெய் வார்த்து வேள்வி செய்வது ஏராளமான நன்மைகளைத்தரும் என்ற எண்ணம்கொண்ட மக்களே! அதைவிட அதிக நன்மையும் புண்ணியமும் தருகின்ற செயல் ஒன்றை நான் சொல்கிறேன் செய்வீர்களா?” என்று வினவி, ”ஆயிரம் யாகங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களோ... அதைவிட அதிகப்பலன் ஒரே ஒரு உயிரினை நீங்கள் கொன்று தின்னாமல் இருப்பதால் கிடைக்கும்!” என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
இவரைப்போய்... யாகவேள்விகளை வேட்பவர் (விரும்புபவர்), சடங்குகளை ஆதரிப்பவர் என்று முத்திரை குத்துவது... தகுமோ? இது முறையோ? இது தருமம்தானோ? :-))அன்புடன்,மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அவங்க மந்திரம் மட்டும் இயற்றிஇருப்பார்கள்.“நடுகல் அன்றி, நெல் உகுத்து பரவும் கடவுளும் இல்லை”நெல் உகுத்தல் சடங்குதானே.
2016-01-20 19:52 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:அவங்க மந்திரம் மட்டும் இயற்றிஇருப்பார்கள்.“நடுகல் அன்றி, நெல் உகுத்து பரவும் கடவுளும் இல்லை”நெல் உகுத்தல் சடங்குதானே.இப்படி பாடல் வரிகள் இருப்பதால் "நெல் உகுத்து பரப்பி வணங்கும் வழக்கம் இருந்ததாகதானே" தெரியவருகிறது?
இல்லாத வழக்கை ஏன் பாடலில் எழுதி கண்டிக்கிறார்கள்?கள்ளுண்டவர்கள் நிறைய இருந்ததால் தானே வள்ளுவர் கள்ளுண்ணமை அதிகாரத்தை எழுதினார்?--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
20 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:22 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:2016-01-20 19:52 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:அவங்க மந்திரம் மட்டும் இயற்றிஇருப்பார்கள்.“நடுகல் அன்றி, நெல் உகுத்து பரவும் கடவுளும் இல்லை”நெல் உகுத்தல் சடங்குதானே.இப்படி பாடல் வரிகள் இருப்பதால் "நெல் உகுத்து பரப்பி வணங்கும் வழக்கம் இருந்ததாகதானே" தெரியவருகிறது?ஆம். ஆனால் வடமொழி மந்திரம் சொல்லியிருப்பாரா?
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நும்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே! (புறம்: 9)
சிலப்பதிகாரமும் இதே செய்தியை உறுதிப்படுத்துகின்றது.
***
***
2016-01-20 20:40 GMT-06:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>://ஏன் தமிழனுக்கு ஈமக்கடன் செய்வதெல்லாம் ஆரியர் இல்லையெனில் தெரிந்திருக்காதா?//தமிழர்களுக்கான ஈமக்கடன் இறந்தாரைப் புதைப்பது; அவர்கள் நினைவாக நடுகல் எடுப்பது; அதற்குப் பூவும் புகையும் காட்டி வழிபடுவது போன்றவையே. நீர்க்கடன் செய்வதெல்லாம் நாம் ஆரியரிடம் இருந்த கற்றுக்கொண்டவையே என்பதில் ’எள்’ளளவும் ஐயமில்லை. :-)ம்ம்ம்...வடநாட்டில் கடுகு எண்ணெய்தான். தமிழ்நாட்டில் தான் எள்ளிலிருந்து எடுக்கும் நல்லெண்ணெய் "நல்ல எண்ணை" என பாராட்டபடுகிறது. ஆக எள்ளை இறைத்து வழிபடும் முறை ஆரியர் நமக்கு கற்றுதந்தது என்பது நம்பும்படி இல்லை. அதிலும் தென்புலத்தாருக்கு பிள்ளைகள் சடங்கு செய்யும் வழக்கம் இருப்பதை புறநானூறும் உறுதி செய்கிறது. தமிழ் மந்திரத்துக்கு பதில் சமஸ்கிருத மந்திரங்கள் பின்னாளில் புகுந்திருக்கலாம். ஆனால் அந்த வழக்கமே ஆரியர் கற்றுதந்தது என்றால் சாரி...ஏற்க முடியவில்லை//தென்புலத்தார் என சொல்லகாரணம் என்ன? முன்னோர் அனைவரும் தென் திசையில் உள்ள பிதுருலோகத்தில் வசிக்கிரார்கள் என வள்ளூவர் கருதியதையே இது சுட்டுகிறது. //தென்புலத்தார் குறித்த பாவாணர் கருத்து:தமிழகத்தின் தென்பகுதி ’குமரிக்கண்டம்’ என்று அழைக்கப்பட்டது; அது கடல்கோளால் அழிந்ததனாலேயே நம்மவர் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வடபகுதிகளில் குடியேறினர். ஆகவே, கடல்கோளால் அழிந்த தென்புலத்தவரையே ’தென்புலத்தார்’ என்று வள்ளுவர் சுட்டுகிறார்.குமரிக்கண்டம் அறிவியலுக்கு முரண்பட்ட கருத்து.எத்தனையோ ஆயிரமாண்டுக்கு முன்பு அழிந்த குமரிக்கண்ட தமிழரை நினைவுகூர்தலை வள்ளுவர் முக்கிய கடமையாக முன்வைத்தார் என்பது பொருந்தும்படி இல்லை. வேறு விளக்கத்தை "தென்புலத்தார்" என்பவருக்கு கொடுக்கமுயலவும் :-)இந்தத் தென்புலத்தாரை ஓம்புதலில் உரையாசிரியர்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள. பரிமேலழகர், தன் காலத்து வழக்கத்தை அல்லது தன் விருப்பத்தை இவ்வுரையில் புகுத்தியுள்ளார். ஆனால், 'தென்புலத்தார் ஓம்புதலை' திருவள்ளுவர் என்ன பொருளில் சொன்னார் என்பதை அவரேதான் வந்து விளக்கவேண்டும்.அவர் வந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் வரப்போவது இல்லையே? :-)***தொல்காப்பியர் காலத்திலேயே ஆரியர்களின் தாக்கம் நம்மிடம் ஏற்பட்டுவிட்டது என்பது உண்மையே. அதனால்தான் அவர்,”வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்று வடசொற்களைத் தமிழில் பயன்படுத்துவது எப்படி என்று விளக்கவேண்டிய சூழல் வந்தது.இது உண்மையானால் தொல்காப்பிய காலத்தில் இருப்பதை தமிழ்மரபு என ஏற்க நாம் ஏன் தயங்கவேண்டும்? 2500 ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் ஒன்றை "நம் மரபல்ல" என்பது வேடிக்கை. வரலாற்றில் இன்னமும் எத்தனை ஆயிரமாண்டுகளுக்கு முன் சென்று அன்றைக்கு இருந்த சமூகம் தான் "ஒரிஜினல் தமிழ் சமூகம்" எனும் தூய்மைவாதத்தை நாம் முன்வைக்க போகிறோம்? அது சரியான அணுகுமுறை அல்ல.அதுபோல் சங்க இலக்கிய நூல்கள் அனைத்திலும் ஆரியர் வழக்கங்கள் நம்மிடையே கலந்துபோனதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட நெட்டிமையாரின் பாடல். அவர் அந்தப்பாடலில் அவர் போற்றியிருப்பது பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை. அவனோ ஆரியர்களை வைத்து யாகசாலைகள் அமைத்து யாகங்கள் செய்வதையே தொழிலாகக்கொண்டவன். அவனுடைய போர்முறையே நீங்கள் சுட்டிய பாடலில் இருப்பது. அந்தப்பாடல், ஆவுக்கும், பார்ப்பன மக்களுக்கும், அவர்களின் நம்பிக்கைகளுக்கும் சார்பாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும்? :-))வழக்கம் எங்கே இருந்து வந்தது, எப்படி வந்தது என்பதல்ல பிரச்சனை.வள்ளுவர் காலத்தில் தென்புலத்தாருக்கு தர்ப்பணம் செய்யும் முறை இருந்ததா இல்லையா என்பதே விவாதம். தொல்கபபியர் காலத்திலேயே ஆரியர் தாக்கம் புகுந்ததாக கூறுகிறீர்கள். அப்புறம் தொல்கபபியருக்கு பிற்பட்ட வள்ளுவர் காலத்தில் ஏன் யாகம், வேள்வி, அவி, தர்ப்பணம் எல்லாம் இருந்திருக்காது? அதே சங்க இலக்கிய காலகட்ட பாடலில் தென்புலத்தார் என் பிதுருக்களே அடையாளம் காட்டபடுகிறார்கள். அப்புறம் குறளில் வரும் தென்புலத்தார் என்பது லெமூரியர் என்பது பொருத்தமான வாதம் தானா?இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் ஆரியக்கலப்பில்லாத தூய தமிழ்மரபினைப் பேசும் பாடல்களும் நம் இலக்கியங்களில் இருக்கவே செய்கின்றன. இவை ஆரியர் வருகைக்குமுன் எழுதப்பட்ட பாடல்களாக இருக்கலாம். அவற்றில் ஒன்றைக் கீழே தந்துள்ளேன். (இதன் வரிகளை வேந்தரும் குறிப்பிட்டுள்ளார்)....துடியன் பாணன் பறையன் கடம்பனென்றுஇந்நான் கல்லது குடியு மில்லைஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கிஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்கல்லே பரவி னல்லதுநெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே. ( மாங்குடி கிழார்)
துடியன்குடி, பாணன்குடி, பறையன்குடி, கடம்பன்குடி யென்று சொல்லப்பட்ட இந் நால்வகைக் குடிகளன்றி வேறு குடிகள் இல்லை (இக்குடியினர்தாம் சிறந்தோர் என்பது புலவர் கருத்து); மனம் ஒன்றாத பகைவர் முன்னே அஞ்சாது நின்று அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து, விளங்குகின்ற உயர்ந்த கோட்டினையடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு வீழ்ந்திறந்தாராக, அவர் பெயரும் பீடும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதல்லது நெல்லைச் சொரிந்து வழிபடும் கடவுள் வேறேயில்லை.
தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யென பெய்யும் மழைஎன்ற குறள் இருப்பதால் கணவனே தெய்வம். வேறு தெய்வம் ஏதும் சங்ககாலத்தில் இல்லை என முடிவுகட்ட இயலுமா?பத்தினிக்கு கணவனே தெய்வம். வீரனுக்கு இறந்த வீரனே தெய்வம். பத்தினி கணவனை தொழுதெழுதலையன்றி வேறு எவ்வழிபாடும் செய்ய அவசியமில்லை. வீரன் நடுகல்லையன்றி வேறெதையும் வழிபடும் அவசியமில்லை. அந்த கண்ணோட்டத்திலேயே இதை புரிந்து கொள்லவேண்டும்.ஈதொப்ப, ஆரியத்தாக்கமில்லா நம் தமிழர் திருமணத்தில் உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவையே திருமண விருந்தாக வந்தோர்க்கு வழங்கப்பட்டது. மங்கலமகளிர் நீராட்டிக் கற்புநெறிவழாது வாழ்வாயாக என வாழ்த்துதலோடு திருமணம் இனிதே நிறைவுற்றது. பின்னர் ஆரியர் வரவால் ’மாமுதுபார்ப்பான் மறைவழி காட்ட’த் தமிழர் திருமணம் ’தடம்மாறி’ நடந்தேறியதையும் அறிகின்றோம். இப்படியே நம் பழமரபுகளை நாம் ஒவ்வொன்றாகத்தொலைத்துவந்ததைச் சங்கப்பாடல்கள், காப்பியங்கள் மூலம் அறியமுடிகின்றது.
இப்படி 2000 ஆன்டுக்கு முன் கண்ணகி திருமணம் செய்துகொன்ட முறை "தடம் மாறுதல்" என்றால் நீங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் ஆன்டு பின்னோக்கி செல்ல சொல்கிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது :-)மாமுது பார்ப்பன் தமிழன் தான் என்பதை என்று ஒப்புகொள்வீர்கள் என்பது அடுத்த சந்தேகம்
ஆதலால், என்னைப்பொறுத்தவரை நம் வழக்கவொழுக்கங்களில் ஆரியப் பகுதி எது? தமிழ்ப்பகுதி எது? என்று ஆராய்ந்தறிவது பயனுள்ள முயற்சியும் இன்றைய தேவையுமாகும். அதுவே நம் வேர்களைநோக்கி நம்மை இட்டுச்செல்லும். அப்படி ஆராய்ந்தால்தான் முல்லைக்கலியில் அன்று இயல்பாக நிகழ்ந்துவந்த ’ஏறுதழுவுதல்’ இன்று ’மிருகவதை’ என்றுமுத்திரை குத்தப்பட்டுத் தடைசெய்யப்பட்டிருப்பது எத்துணைத் தவறானது என்பதை நாம் நம் மரபறியாதோர்க்கு விளக்கமுடியும். ஏறுதழுவுதலை ஆதரிக்கும் நீங்கள் தொல்தமிழனின் பிற மரபுகளை ஏற்க மறுத்து அவற்றை ஆராய்வது அவசியமற்றது என்றுரைப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது!!!
கண்ணகியும், நெட்டிமையாரும் பின்பற்றிய சங்ககால வழக்கை ஒதுக்க கூறூவதை மரபை போற்றும் என்னால் எப்படி ஏற்கமுடியும்? யாராலும் ஏற்க முடியாது.
உயிர்ப்பலியை மையமாகக்கொண்டதுதான் அன்றைய வேதவேள்வி. விலங்குகளைப் பலியிட்டு வானோர்க்கு அவியுணவாக அளித்துவிட்டு (அவிஷ்), பின்பு அதனையே பிரசாதமாகவும் உண்டனர் வேள்விசெய்தோர். :-(
கொல்லாமை, புலால் மறுத்தல், இன்னாசெய்யாமை போன்ற உயிரிரக்கக் கோட்பாடுகளை ஒல்லும் வாயெல்லாம் திருக்குறளில் வலியுறுத்தும் வள்ளுவர் இதனை எப்படி ஆதரித்திருப்பார் என்று சற்றே சிந்தியுங்கள்!மவுரியர் காலத்தில் (கிமு 300) யாகங்களில் உயிர்பலியிடுவது தடுத்து நிறுத்தபட்டுவிட்டது. வள்ளுவர் ஆண்டு கிமு 31 என்கிறார்கள். வள்ளுவர் காலத்தில் யாகங்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கு நின்று 200 ஆண்டுகள் ஆகியிருந்தன. உயிர்ப்பலியிடும் வழக்கம் இன்றைக்கும் யாகங்கலில் இல்லை. மாவால் பசுவை பிரதிஷ்டை செய்தே யாகநெருப்பில் இடுவது வழக்கம்எனவே, அவர் உயிர்ப்பலியிடும் வேள்விகளுக்கு முற்றிலும் எதிரானவர் என்பதில் உங்களுக்கு ஐயமே வேண்டாம். அதைத்தான் ’அவிசொரிந்தாயிரம் வேட்டலின்’ குறளும் வலியுறுத்துகிறது. :-)தவறான புரிதல்ஒரு மன்னனை புகழவேண்டும் என வைத்துகொள்ளுங்கள்." ஒசாமாபின்லாடனை விட நீ உயர்ந்தவன்" என்போமாஅல்லது" ராஜராஜ சோழனை விட நீ சிறந்தவன்" என்போமா?ஒன்றை இன்னொன்றை விட சிறந்தது என புகழ்கையில் உயர்ந்ததாக நாம் கருதும் பொருளை கூறியே புகழ்வோம். நமக்கு பிடிக்காத பொருளை விட நீ உயர்ந்தவன் என்பது தவறான உவமைஅன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்அன்னயாவினும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்என எழுதியதால் பாரதி "அன்னசத்திரம் வைப்பதை வெறுத்தானா?" என்ற கேள்விக்கு நீங்கள் பதிலே கொடுக்கவில்லை. ஏனோ? :-)--
தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் ’தென்திசையைச் சேர்ந்தவர்கள்/வாழ்பவர்கள் என்பது. அது தென்புல வாழ்நரான பித்ருக்களைக் குறிக்குமென்று அறிஞர் சிலரும், தென்திசைக்கண் இருந்து கடல்கோளால் அழிந்த குமரிக்கண்டத்தைச் சார்ந்தவர்களைக் குறிக்கும் என்று பாவாணர் போன்ற அறிஞர் பெருமக்களும் கூறுகின்றனர். அதைத்தாண்டி அந்த சொல்லுக்கு வேறுபொருள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. :-)
நீங்கள் கொடுத்த பாடலிலேதான் லெமுரியா/குமரிக் கண்டத்தில் பாய்ந்த பஃறுளி ஆறு பற்றிய செய்தியும் வருகிறது. பாடலின் ஒருபாதியை ஒத்துக்கொள்ளும் நீங்கள் மறுபாதியை மறுப்பது ஏன்? :-)
மத்தபடி ஆடு,மாடு, பன்றியை எல்லாம் ஒரே போடா போட்டு யாக நெருப்பில் பார்பக்யூ செய்து சாப்பிடிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என யோசிக்தால் புத்தர் மேல கடுப்பா வருது.
(புத்தரை மட்டும் மன்னிக்க மாட்டேன் :-)
On Friday, January 22, 2016 at 10:48:43 AM UTC-8, Neander Selvan wrote:மத்தபடி ஆடு,மாடு, பன்றியை எல்லாம் ஒரே போடா போட்டு யாக நெருப்பில் பார்பக்யூ செய்து சாப்பிடிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என யோசிக்தால் புத்தர் மேல கடுப்பா வருது.(புத்தரை மட்டும் மன்னிக்க மாட்டேன் :-)பௌத்தம் ஏன் இந்தியாவில் காணாமல் போனது என்பதற்கு இன்றியமையாத சான்று கொடுத்த செல்வன் வாழ்க..
ஆனால் நீங்கள் எழுதுவதெல்லாம் மொக்கை என்று தன்னிலை விளக்கம் கொடுத்த பிறகு, இதனை நான் பிற இடங்களில் மேற்கோள் காண்பிக்க நினைத்தால் அது உதவுமா எனத் தெரியவில்லை.
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி! - சிலம்பு
தென்புலத்தார் என்பது நமக்குத் தெற்கே இருந்த குமரிக் கண்டம் என்பது தான் உண்மை.அது முதல் மனிதன் தோன்றிய இடம், முதல் மனிதன் பேசிய மொழி அதாவது தமிழ். அதனைக்கடல் கொண்டதால் அம்மக்களைப் போற்றும் விதமாக தென்புலத்தார் என்றார்.புறநானூற்றிலும்சிலப்பதிகாரத்திலும் செய்திகள் உள்ளன. மதுரையிலிருந்து தென் பகுதியை பாண்டியர்கள்ஆண்டார்கள். ஆனால் பாண்டியன் நெடுஞ்செழியன் " மன்பதை காக்கும் தென் புலம் காவல்என்முதல் பிழைத்தது " என்று கூறுவதாக இளங்கோவடிகள் காவியம் யாத்திருப்பது"அந்தத் தென்புலம் கடல் கொண்டு விட்டது. மீதம் இருக்கும் தென் புலத்தை காக்கும் காவல்தன்னால் கெட்டு விட்டதாக பாண்டியன் வருந்துவதாக அமைத்துள்ளார்.நம் முன்னோர்களைக்கடல் கொண்டுவிட்டதை நம் தமிழ் அறிஞர்களால் மறக்க முடியவில்லை. வள்ளுவரும்நம் முன்னோர்களை நினைவு படுத்திக் கொள்ள வேண்டி "தென் புலத்தார் " என்றார்.
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி! - சிலம்பு
கடல்கோள் தமிழகத்தில் ஏற்பட்டது குறித்த செய்திகளைத் திரட்டினால், குமரிக் கண்டம் குறித்த செய்திகளும் வெளிவரும்.
ஒரிசா பாலு, ஓரீராண்டுகளுக்கு முன், கடலடியில் இதற்கான சுவடுகள் உள்ளதாக எழுதியிருந்தார்.
ஆழ்கடலில் நவீன கருவிகளுடன் ஆராய்ந்தால், பண்டைய வரலாற்றின் முக்கிய சான்றுகள் கிடைக்கும். இதற்கான ஆய்வுத் திட்டங்களை நேஷனல் ஜியாகிரபிக், டிஸ்கவரி உள்ளிட்ட தொலைக்காட்சிகளுக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளுக்கும் சமர்ப்பிக்கலாம் என அவருக்குப் பரிந்துரைத்தேன்.
இவை ஒரு புறம் இருக்க, மேகலா - செல்வன் வாதங்கள் மிகச் சிறப்பாக வளர்ந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். சட்டென்று மின்னிய கீற்றாக, ஒன்று கண்டேன். வல்லமைக் குழுமத்தின் வலுவான கலந்துரையாடல்கள் பலவற்றிலும் அமெரிக்க - கனடா வாழ் தமிழர்களின் பங்களிப்பு இருக்கிறது.
செல்வன், தேமொழி, மேகலா, பழமைபேசி, ராஜம், வேந்தன் அரசு, ஜெயபாரதன், செல்வகுமார் உள்ளிட்டோரின் வாதங்களில் துணிச்சலும் கூர்மையும் பளிச்சிடுகின்றன. இதற்கு அமெரிக்க வளமும் வாழ்வியலும் காரணங்களா என்றும் சிந்தித்தேன்.
உங்களால் தமிழரின் கருத்து வளம் கூடுகிறது. நண்பர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திரு. ஹரிகி, திரு. ருத்ரா மடல்களைப் படிக்கிறபோது கதாகலாக்ஷேபம் பற்றிய செய்திகள் சிலஉணரமுடிகிறது: திரு. சேசாத்திரி கொடுத்துள்ள ஃபேஸ்புக் முனைவர் ஆராய்ச்சி:
நன்றி கணேசர் ஐயாதென்புலத்தார் என்பது குமரிக்கண்டத்தினர் (!) என்பது போன்ற விளக்கங்களை படிக்கையில் செம்மல் அவர்கள் ஏன் கோபப்படுகிறார் என்பதை உணர முடிகிறது :-)
குமரிக்கண்டம் போன்ற ஒரு விசயத்தை நிலவியல், புவியியல், அறிவியல், இலக்கியம் என பலதரப்பிலும் அணுகினால் தான் தெளிவு கிடைக்கும். அப்படி அணுகி பதிலும் தெளிவாக வரலாற்று ஆசிரியர்களால் கூறப்பட்டு உள்ளது. ஜெயகரன், சுமதி ராமசாமி போன்றோரின் கட்டுரைகளில் இதை தெளீவாக எழுதியே உள்ளார்கள் (ஜெயகரனின் கட்டுரையில் எனக்கு கொஞ்சம் மாற்றுகருத்து உள்ளது. அது பிறிதொரு இழையில் பேசுவோம்). அவை அதிகமாக மக்களை சென்று சேரவேண்டும் என்பதை இந்த எபிசோடின் மூலமாக தெரிந்துகொள்கிறேன்.