தமிழுக்கு விடுதலை தா

120 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Feb 20, 2018, 11:34:31 PM2/20/18
to tamilmantram, veeramani k, vallamai, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, thantha...@googlegroups.com
இப்பா எழுதப்பட்டதின் நோக்கம் : 

/// தமிழைச் சங்கச் சிறையில்  தள்ளாதே !////

///வளர்த்த சங்கங்கள் சிறை  ஆவது எப்படியோ  ?! //?

1.  சங்கத் தமிழில்  கிரந்த எழுத்துக்கள் இல்லை. 

2.  மொழிக்கு முதலில் மெய்யெழுத்து வாராது.  

3.  ஆரம்ப எழுத்துக்களாய் லகரம், டகரம்
​, ரகரம்
 வாரா.

இவற்றை நடைத்தமிழில் பயன்படுத்த விதி விலக்குகள் தேவை.  சில கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்த விதி விலக்கு தேவை.

சி. ஜெயபாரதன்

++++++++++++

2018-02-20 21:59 GMT-05:00 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>:
திரு செயபாரதன் அவர்களே,

நீங்கள் எழுதியிருக்கும் ''பாட்டு" நீங்கள்
கூறும் 'தங்கச்சிறையிலா' உள்ளது?
உங்கள் பாட்டில் ஏறத்தாழ 136 சொற்கள் உள்ளன.
(இவற்றுள் சில கூட்டுச்சொற்கள்). தமிழ் என்னும்
சொல் மட்டும் 10 முறை பயின்று வந்துள்ளது. 
சில சொற்கள் ஒருமுறைக்கும் மேல் வந்திருப்பதால்,
சற்றேறக்குறைய 100 சொற்கள் உள்ளன. அவற்றில்
ஏறத்தாழ அனைத்துமே சங்க இலக்கியத்தில் ஆளப்பட்ட
சொற்கள்தாம். யுக்தி என்னும் சொல்லும், தத்தெடுத்தல்
என்னும் சொல்லும், தரணி என்னும் சொல்லும்
நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ மற்றவையெல்லாம்
சங்கவிலக்கியத்தில் பயின்றுள்ளவை.
சில கூட்டுச்சொற்கள் புதுப்பொருள் தருவன.

நீங்கள் பயன்படுத்தும் வினைச்சொற்களைப் பாருங்கள்
(எளிய இனிய தமிழ்ச்சொற்கள். நீங்கள் தனித்தமிழ் உங்கள்
அறியாமையால் பழித்தாலும்)

தள்ளு, இடு, பூட்டு, வா, செல், ஆள், விலக்கு, பரவு, தவழ், நட, ஓடு, முடக்கு,, தவறு,
 விழு, எழு, கொடு (கைகொடு),  தூக்கு, தேடு, நாடு, ஏந்து, வடிகட்டு, மேய், பேசு, ஆகு,
ஆறு, குடி, கிழி, துவை, போ, இயல், அணி, பெறு,  நெரி, எடு , ஊன்று (35)


உங்களின் பெயர்ச்சொற்களைப்
பாருங்கள்:

சிறை, தங்கம், பொன், கை கால், விலங்கு, விதி, வல்லமை, மூச்சு,
தேவை, நுண்ணோக்கி,. மூலம், தொலைநோக்கி, வேர், கிளை, விழுது, செருப்பு, நடை
குருதி, தோள், உலகு, வலை, பழமை, கிழவி, கஞ்சி, சூடு, நீர், அழுக்கு, சட்டை, உயிர்,
ஆடை தரணி, வையம்  (33)

 

இவற்றுள் நுண்ணோக்கி என்பது புதுச்சொல்:

நுண்ணோக்கி  

இவை தவிர நீங்கள் பயன்படுத்திய உரிச்சொற்கள்,

முன்னிலைப் பெயர்ச்சொல் முதலானவையும் 

தங்கத்தமிழ்ச்சொற்கள்தாம்.

முன்னுக்கு, பின்னோக்கி, எங்கு, -உம் தூய, புது (புத்-), பைம் (6)

நீ


அடுத்து  உங்களின் கருத்துப்பிழைக்கு வருவோம்.

// தமிழால் இயலாததைத்
தத்தெடுத்துக் கொள்//

தமிழை விடுங்கள். எந்தமொழியாலும் எதுவும்
முடியாதது என்றில்லை. இதுவோர் அடிப்படை மொழியியல் கருத்து.
வளம்செறிந்த தமிழால் இயலாதது என்பது நீங்கள் தவறாகப்
புரிந்துகொண்டிருப்பது. 

நன்னீர் குடிக்க இருக்க சாக்கடைநீரைத்தான் குடிப்பேன்.

நற்காற்று இருக்கையிலே மாசுபடிந்த காற்றைத்தான்  

உள்மூச்சாகக் கொள்வேன், நல்வள மண்ணில் நல்விதையை

நட வாய்ப்பிருக்கும்பொழுது இல்லை நச்சு மண்ணில் தான்

குறைவுடைய (சரிவரவளராத) விதையை நடுவேன் என்று

கூறுகின்றீர்கள். பல்கிப்பெருகித் திளைக்கும் தமிழைக்

குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கத்துடிக்கின்றீர்கள்.


சங்கம் என்பது சிறையன்று, தங்கச்சிறையன்று

ஒப்பரிய உயிர்ச்சோலை, பேராற்றல் உயிரூற்று.

கணக்கற்ற வழிகளில் பல்கிப்பெருகி வளர நமக்கிருக்கும்

விதைக்களஞ்சியம். 


காலுக்கு ஏற்ற செருப்பு அல்ல நம்மொழி, நம் காலாய்

இருக்கும் உயிராற்றல். 


கருத்துப்பிழையுடன் இருந்தாலும், உங்கள் பாட்டே நல்ல

தூய தமிழில்தான் இருக்கின்றது. 

நல்ல சொற்கள் மட்டுமல்ல, மிகப்பல இலக்கணக்கூறுகளும்

உள்ளன. வேற்றுமை யுருபுகளும், எதிர்மறை வினைப்பெயர்

வடிவங்களும், நல்ல உரிச்சொற்களும் உள்ளன.

துவைத்து துவைத்து  என்பது போன்ற இரட்டித்து வந்து பொருள்

சுட்டும் மரபும், புத்துயிர், புத்தாடை போன்ற

சொல்லாட்சிகளும், வல்லமை  முதலான பண்புப்பெயர்களும்

வேற்றுமை யேற்றுநிற்கும் வினையாலணையும் பெயர்களும்

என எத்தனையோ கூறுகளைத் தாங்கி நிற்கின்றது

உங்கள் பாட்டு. ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக பொருளுணர்த்தி

வரும் சொற்கள். சொல்லாட்சிகள். இன்றும் இளமையோ 

இனிமையோ மாறா அருமையாய் நிற்கின்றது. ஆனால்

பொருள்தான் நீங்கள் வலித்துக் கெடுத்துவிட்டீர்கள்!!


நீங்கள் ஆண்டிருக்கும் நற்றமிழ்ச்சொற்களைப்

(தனித்தமிழ்ச்சொற்களைப்) பாருங்கள். சிறிய

சொற்கள், எளிய சொற்கள், தெற்றென பொருள்

துலக்கும் சொற்கள். பல்கி கிளைக்கும் வல்லமை

மிக்க சொற்கள். 

இப்பொழுதிருக்கும் பெரும் சிக்கல் தமிழைப்

புறக்கணிப்பதே. கிட்டத்தட்ட சரிபாதி பள்ளிகளே

தமிழ்வழிக்கல்வி தரும் பள்ளிகளாக உள்ளன. 

இது 20-30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது 

போல 90% ஆக மாறவேண்டும். 


நற்கல்வி பெறுவது 

தாய்மொழிவழியாகத்தான். 


செல்வா



2018-02-20 12:49 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:


தமிழுக்கு விடுதைலை தா​

Hands tied
 
 
சி. ஜெயபாரதன், கனடா.

 

தமிழைச் சங்கச் சிறையில்
தள்ளாதே !
தங்கச் சிறை வேண்டாம் !
​கை கால்களில்​
​பொன் விலங்கு பூட்டாதே !​
விதிகள் இட்டால்
விதி விலக்கும் இடு !
தமிழுக்கு வல்லமை தேவை
மூச்சு விடட்டும்;
முன்னுக்கு வரட்டும் !
நுண்ணோக்கி மூலம் நீ,
பின்னோக்கிச் செல்லாது,
முன்னோக்கிச் செல்
தொலை நோக்கி மூலம் !
வேரூன்றிக் கிளைகள் விட்டு
விழுதுகள்
வைய மெங்கும் பரவட்டும்;
கழுத்தை நெரிக்காதே !
காற்றில் நீந்தட்டும் !
காலுக்கு ஏற்றபடி செருப்பை மாற்று !
தமிழைத் தவழ விடு !
நடைத் தமிழில்
நடக்க விடு !
​நடக்க நடக்கக் குருதி ஓடும் !
​முடக்காதே தமிழை !
தவறி விழுந்தால்
எழுந்து நடக்கக் கைகொடு !
தோள் கொடு, தூக்கி விடு !
தனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி
வடிகட்டி ஏந்தி
வலை உலகில் மேயாதே !
பழமை பேசிப் பேசி
கிழவி ஆகாதே !
ஆறிய கஞ்சியை மீண்டும்
சூடாக்கிக் குடிக்காதே !
அழுக்குச் சட்டை
​தூய நீரில்​
துவைத்து துவைத்துக்
கிழிந்து போனது !
தமிழில் இல்லாததை, தமிழால் இயலாததைத்
தத்தெடுத்துக் கொள்
யுக்தியுடன்;
புத்தாடை அணிய விடு !
புத்துயிர் பெற்றுப் பைந்தமிழ்
இத்தரணி ஆளவிடு !
 

+++++++++++++++++++

S. Jayabarathan [jayaba...@gmail.com]  March 15, 2016  [R-1]


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

C.R. Selvakumar

unread,
Feb 21, 2018, 1:10:50 AM2/21/18
to தமிழ் மன்றம், veeramani k, vallamai, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, thantha...@googlegroups.com
உங்களுக்கு எத்தனையோ முறை எடுத்துரைத்து விட்டேன்.
உங்கள் விருப்பப்படி கிரந்தம் கலந்து எழுதுங்கள், மெய்யெழுத்தில்
தொடங்கி எழுதுங்கள், லகர,டகர, ரகரத்தில் தொடங்கி எழுதுங்கள்.
இப்படிப் பலரும் எழுதுகின்றார்கள்.

தமிழிலே இவ்விதிகள் ஏதும் வறட்டுத்தனமாக வைக்கவில்லை
என்பது என்போன்றோரின் கருத்து. மிகவும் நுணுக்கமாகச்
சிந்தித்து உற்றறிந்து முன்வைத்து நெடுங்காலம் வழக்கில்
இருக்கும் முறைமை.  இவைமட்டுமல்லாமல் சில
மெய்யெழுத்துக் கூட்டங்கள் முதலானவையும் கடைசி 
எழுத்துகளாக வருவனவற்றிலும் விதிமுறைகளை
வியப்பூட்டும் அறிவிய அருமையுடன் அமைத்திருக்கின்றார்கள்.
நல்ல அறிஞர்கள், நுணுக்கமாக அறிந்து 
இவற்றைப்போற்றுவதற்கு மாறாக இவற்றை
உடைத்தெறியவேண்டும்
என்று உங்களைப் போல சிலர் பேசுகின்றார்கள். 

இராமன் என்று எழுதுவதில் என்ன இடர்?
டாக்டர் என்று எழுதிப் பழகிவிட்டீர்களா, சரி
விதிவிலக்காக வைத்துக்கொள்ளுங்கள்.
மருத்துவர் எனலாமே. ஏன் டாக்டர்?
லட்டு என எழுதவேண்டுமா, எழுதிக்கொள்ளுங்கள்.
அது உலண்டு-உலட்டு என்பது என்போன்றோர் கருத்து.
எனவே உலட்டு என எழுதுவோம். இலண்டன்
என்று எழுதுவோம். உலட்டு, உலா, உலகம், உரல்
முதனானவை இயற்சொற்கள். இலண்டன்,
இலாவணியா (இலாவண்யா), இரணியன்
இரமேசு முதனானவை அயற்சொற்கள்.
இவற்றைத் தமிழ்முறைப்படித்தான் எழுதவேண்டும்
என்பது என்போன்றோர் கருத்து. இதில்
சீர்மை, ஒழுக்கம், அழகு அறிவுடைய இயக்கம்
இருப்பதாகக் கருதுகின்றோம். 

கிரந்த எழுத்துகளை நுழைத்து எழுதப்புகுந்தால்
மிகப்பெரிய எண்ணிக்கையிலே எழுத்துகள் கூடுகின்றன.
66, 79 இன்னும் நூற்றுக்கணக்காகக் கூடுகின்றன.
இலக்கண விதிகள் குழறுபடியாகின்றன.
ஒலிப்பில் சிக்கல் எழுகின்றன. மொழியின்
இனிமை, இசைநயம் கெடுகின்றன. 
இசைநயம் காப்பதையும் இனிமையைக் காப்பதையும்
நாங்கள் போற்றுகின்றோம். இவற்றைப் பின்பற்றுவதில்
எந்தவிதமான இடரோ சிக்கலோ நான் கண்டிலேன்.
உலகத்தின் பல மொழிகளின் இயல்புகளையும் கூர்ந்து
கவனித்தும் வருகின்றேன். தமிழ்நாட்டில் சிலர்
தாழ்வு மனப்பான்மையாலும், மேம்போக்கான
சிந்தனையாலும் அறியாமையாலும், தமிழ்முறையைச்
சிதைக்கத் தலைப்படுகின்றனர். தமிழ் கெடுவதைப்
பார்த்து, சிதைவதைப் பார்த்து கொண்டாட்டம் 
கொள்கின்றனர் சிலர்!

பிறமொழிச்சொற்களை உள்வாங்கி வழங்கும்பொழுது
எல்லா மொழிகளிலும் சிதைவுகள் ஏற்படும். இதனால்
ஏதும் குற்றமில்லை. உள்வாங்கும் மொழிக்கு இசைவாய்
இருப்பது இயற்கையாகும். தென்னைமரத்தில்
ஏன் கத்தரிக்காய் காய்க்க வைக்க முனைகின்றீர்கள்
என்பது விளங்கவில்லை. ஆர்வேடு பல்கலைக்கழகம்
எனலாம். உறழ்ச்சி கூடும் எனில் ஆர்வர்டு பல்கலைக்கழகம்
எனலாம். ஆங்கிலத்திலே Tamil என்றால் அது
தமிழ் என்பதுதான் என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம்,
ஆங்கிலமொழியாளரும் புரிந்துகொள்கின்றார்கள்.
அவன் தmiழ் என்று எழுதத்தேவையில்லை. அவன்
மொழியின் இசையும் ஓட்டமும் கெடும். வெட்டியாக
இதனை எல்லோருக்கும் எழுத்துரைக்கவும் வேண்டும்.

நல்ல தமிழிலே, கூடியமட்டிலும் தமிழிலக்கண
விதிகளை மீறாமல் எழுதுதலே சிறந்தது.

உங்கள் விருப்பப்படி நீங்கள் எழுதுங்கள். 

தமிழை மதித்து,  தமிழ்
விதிமுறைகளைப் போற்றி எழுதவேண்டும் என்று
நினைத்து எழுதுவோர் எழுதட்டும். 

S. Jayabarathan

unread,
Feb 22, 2018, 12:48:51 PM2/22/18
to வேந்தன் அரசு, C.R. Selvakumar, vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, thantha...@googlegroups.com, தேமொழி
வேந்தரே,

நீங்களும் பேராசிரியர் செல்வக்குமார்போல் ஒரு தனித்தமிழ் பட்டதாரிதானே.


டாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை  [TATA Institute of Fundamental Research, Mombai] இதை எப்படித் தனித்தமிழில் எழுதுவீர் ?

தாதா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

தாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

இடாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

அடாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

உடாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

டாடா என்னும் பெயர்ச்சொல்லை சொல்லைத் தனித்தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று தொல்காப்பியர் சொல்லியிருக்கிறரா ???


சி. ஜெயபாரதன்


2018-02-21 20:31 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


21 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:56 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
////<தமிழால் இயலாததைத்>= தமிழனாலியலாததை  ////

தமிழால் இயலாதது வேறு.  தமிழனால் இயலாதது வேறு.  

தமிழனால் இயலாதது  எது ???  எனக்குத் தெரியாது .

வேந்தரே,

 நீங்களே சொல்லிடுங்கள்.

 

தமிழனால் இயலாதது தனித்தமிழில் எழுதுவது.



S. Jayabarathan

unread,
Feb 22, 2018, 1:13:23 PM2/22/18
to வேந்தன் அரசு, C.R. Selvakumar, vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, thantha...@googlegroups.com, தேமொழி
இரு திருத்தங்கள்

2018-02-22 12:48 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
வேந்தரே,

நீங்களும் பேராசிரியர் செல்வக்குமார்போல் 
​"
தனித்தமிழ்
​ப் பல்கலைக் கழகப் ​
பட்டதாரிதானே
​​
.
​"​


டாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை  [TATA Institute of Fundamental Research, Mombai] இதை எப்படித் தனித்தமிழில் எழுதுவீர் ?

தாதா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

தாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

இடாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

அடாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

உடாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை

டாடா என்னும் பெயர்ச்சொல்லைத் தனித்தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று தொல்காப்பியர் சொல்லியிருக்கிறரா ???

Oru Arizonan

unread,
Feb 22, 2018, 1:44:51 PM2/22/18
to vallamai
டாட்டா என்றெழுதினால்தான் ஒலிப்பு சரியாக இருக்கும்.  இல்லாவிடில் taadaa என்ற ஒலிப்பே வரும். 

தனித்தமிழில் எழுதவேண்டுமென்றால் இடாட்டா என்றெழுதவேண்டும்.

ஒரு அரிசோனன் 

S. Jayabarathan

unread,
Feb 22, 2018, 9:10:55 PM2/22/18
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran
TATA  என்பதற்கு ஏற்ற தமிழாக்கம் டாடா [100% துல்லிமை] ஒரே வல்லின உயிர்மெய் இரட்டிப்பு உச்சரிப்பு.

TATA என்பது TAATTAA [டாட்டா] என்று ஏன் இரட்டை வால்லின உயிர்மெய்யாக எழுத வேண்டும் ? 

TATA  என்பதை ஏன் TAADAA வென்று எழுத வேண்டும் ?  

இடாடா என்று தமிழில் எழுதுவதும், விளிப்பதும் தமிழைத் தாழ்த்துகிறது 

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Feb 22, 2018, 9:22:42 PM2/22/18
to vallamai, mintamil, tamilmantram
ஒரு திருத்தம்


2018-02-22 21:10 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
TATA  என்பதற்கு ஏற்ற தமிழாக்கம் டாடா [100% துல்லிமை] ஒரே வல்லின உயிர்மெய் இரட்டிப்பு உச்சரிப்பு.

TATA என்பது TAATTAA [டாட்டா] என்று ஏன் இரட்டை வல்லின உயிர்மெய்யாக எழுத வேண்டும் ? 

TATA  என்பதை ஏன் TAADAA வென்று எழுத வேண்டும் ?  

இடாடா என்று தமிழில் எழுதுவதும், விளிப்பதும் தமிழைத் தாழ்த்துகிறது 

சி. ஜெயபாரதன்

C.R. Selvakumar

unread,
Feb 22, 2018, 9:37:26 PM2/22/18
to தமிழ் மன்றம், vallamai, mintamil
முதலில் உங்கள் கருத்தில் ஒரு திருத்தம்
//TATA  என்பதற்கு ஏற்ற தமிழாக்கம் டாடா [100% துல்லிமை] ஒரே வல்லின உயிர்மெய் இரட்டிப்பு உச்சரிப்பு.

100% துல்லியம் இல்லவே இல்லை. டாடா என எழுதினால் 
Taadaa என்றுதான் தமிழில் ஒலிக்கும். Taataa என ஒலிக்காது.
டாட்டா என எழுதினால் Taataa என ஒலிக்கும், ஆனால் தமிழில்
பெயர்ச்சொல்லே ஆனாலும் டகரத்தில் தொடங்கலாலாது,
டாக்டர் என்பதில் -க்ட- என்னும் எழுத்துக்கூட்டலும் தொடக்கத்தில்
ட- எனவும் தொடங்குவதை விலக்காகக் கொண்டால் அதுபோலவே
டாட்டா என்றும் எழுதலாம் (டாடா என்றல்ல).

தொல்காப்பிய விதிப்படி டகரம் கூடாது என்பதால்,
திரித்து தாட்டா என்று எழுதலாம். ஆங்கிலத்தில் தகரம்
கிடையாது (இது ஆங்கிலப்பெயர் அன்றெனினும்).
ஒரே எழுத்து இரண்டிடத்திலே வரும்பொழுது வேறுவேறு
விதமாக எழுத்துப்பெயர்க்கின்றோமா எனில், இல்லை.
ஒரு பெயரின் ஒலியைத் தமிழின் இயல்புக்கு ஏற்ப
வழங்குகின்றோம். 

எனவே தாட்டா ஆய்வுக்கூடம், மும்பை என்பது சரியாக இருக்கும்.
மாறாக தாத்தா ஆய்வுக்கூடம், மும்பை என்றும் சொல்லலாம்.
அதென்ன தாத்தா-பாட்டி எனக் கிண்டலடிக்கலாம்.
"டாட்டா" என்றாலும் ''செல்க'' எனக் கையசைப்பதாகவும்
பொருள்கொள்ளலாம். இப்படியாகப் பொருள்கொள்ளும்
வாய்ப்பு எப்பொழுதும் இருக்கும். தவிர்க்கலாகாது.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

AnnaKannan K

unread,
Feb 22, 2018, 9:39:26 PM2/22/18
to Vallamai
நானும் டாடா என்றுதான் எழுதுவேன். ஒருவர் தம் பெயரை எப்படி எழுதுகிறாரோ, அப்படியே எழுதுவது நடைமுறைக்கு, ஊடகத் தமிழுக்கு உகந்தது. க்ரியா என ஒரு நிறுவனம் பெயர் வைத்துக்கொண்டால் அப்படியே தான் எழுதவேண்டும். அதே நேரம், இராமன் என ஒருவர் எழுதினால், அதை மதித்து, அவ்வாறே எழுத வேண்டும்.

பெயர்ச் சொற்களை இவ்வாறு எழுதுங்கள் என இலக்கண வல்லார் பரப்புரை மேற்கொள்ளலாம். அதை ஏற்பதும் விடுவதும் தனி நபர் முடிவுகள். தமிழில் அது ஒரு போக்கு, இது ஒரு போக்கு என அமைதி கொள்ள வேண்டியதே.

S. Jayabarathan

unread,
Feb 23, 2018, 12:01:40 AM2/23/18
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, Anna Kannan
டாக்டர் பட்டம் / மெடிகல் டாக்டர் / முனைவர் பட்டம்

Doctor of Science / Doctor of Philosophy (Ph.D.) / Doctor of Medicine. [M.D.] [M.B.B.S.]

டாக்டர் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஜெயந்த் 
நர்லிகர்.  இவற்றில் வரும் டாக்டர் பட்டத்தைத் தனித்தமிழில் தாக்டர் என்றோ, இடாக்டர் என்றோ எழுதுவது, விளிப்பது மாபெரும் தவறு.

[மெடிகல்] டாக்டரை மருத்துவர் / தாக்டர் என்று தனித்தமிழில் எழுதுவது, விளிப்பது தவறு.

தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வது, விளிப்பது தவறு.

சி. ஜெயபாரதன். 

2018-02-22 21:39 GMT-05:00 AnnaKannan K <annak...@gmail.com>:
நானும் டாடா என்றுதான் எழுதுவேன். ஒருவர் தம் பெயரை எப்படி எழுதுகிறாரோ, அப்படியே எழுதுவது நடைமுறைக்கு, ஊடகத் தமிழுக்கு உகந்தது. க்ரியா என ஒரு நிறுவனம் பெயர் வைத்துக்கொண்டால் அப்படியே தான் எழுதவேண்டும். அதே நேரம், இராமன் என ஒருவர் எழுதினால், அதை மதித்து, அவ்வாறே எழுத வேண்டும்.

பெயர்ச் சொற்களை இவ்வாறு எழுதுங்கள் என இலக்கண வல்லார் பரப்புரை மேற்கொள்ளலாம். அதை ஏற்பதும் விடுவதும் தனி நபர் முடிவுகள். தமிழில் அது ஒரு போக்கு, இது ஒரு போக்கு என அமைதி கொள்ள வேண்டியதே.

--

C.R. Selvakumar

unread,
Feb 23, 2018, 2:03:09 AM2/23/18
to தமிழ் மன்றம், vallamai, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, Anna Kannan
பெயர்ச்சொற்களானாலும், வணிகப்பெயர்களானாலும்,
உள்வாங்கி வழங்கும் மொழியில் இயல்பின்படியேதான் வழங்க
வியலும். இது அடிப்படையான மொழியியல் அறிவு,
காந்தியையோ, மதுரையையையோ இன்னும் ஆயிரக்கணக்கான
பெயர்களையோ ஆங்கிலத்தில் வழங்கவியலாது. 
Caroline, Carolyn  என்பதுபோன்ற ஆயிரத்தெட்டு வேறுபாடுகளையும்
குறிக்கலாகாது. 

ஆங்கிலத்தில் தmiழ் என்று எழுதுங்கள்பிறகு சிந்திக்கலாம்.

எளிய இனிய தமிழே சாலச்சிறந்தது. கையெழுத்தை எப்படி
வேண்டுமானாலும் ஒருவர் போட்டுக்கொள்ளலாம். ஒருமொழியில்
ஒரு சொல் வழங்கும்பொழுது அம்மொழியின் இலக்கணப்படித்தான்
இயங்க முடியும். ஆங்கிலத்திலே எழுதும்பொழுது உங்கள்
பெயரின் முதலெழுத்து பெரிய எழுத்தாக இருக்கவேண்டுமென்பது
அவர்களின் இலக்கணம். 

தமிழர்களில் சிலர் மட்டுமே தமிழை மதிக்கமுடியாது
என எல்லா வரைமுறைகளையும் மீறி எழுதுகின்றனர்.
இந்தச்சிலரால் பலரும் சீரற்றமுறையில் இயங்கவும்
வழிவகுக்கின்றது. வணிக நிறுவனங்களுக்கு மொழியைக்
கெடுக்கவும் சிதைக்கவும் ஏதும் தனியுரிமையில்லை! 

முனைவர், மருத்துவர் என்பன அக் கல்விப்பட்டங்களின்
தமிழ்ப்பெயர். இதேபோலவே பொறியாளர், கணக்காயர்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

Manivannan Shanmugam

unread,
Feb 23, 2018, 2:30:29 AM2/23/18
to vall...@googlegroups.com
பாட்டா (BATA) என்று எழுதுவதைப் போல, டாட்டா என்று எழுதினால் தவறா என்ன?

Virus-free. www.avast.com

Manivannan S.

S. Jayabarathan

unread,
Feb 23, 2018, 10:12:16 AM2/23/18
to vallamai, mintamil, tamilmantram
///பாட்டா (BATA) என்று எழுதுவதைப் போல, டாட்டா என்று எழுதினால் தவறா என்ன?////

தவறுமில்லை. தேவையுமில்லை.  பாடா என்று எழுதினால் ஏற்கனவே டகரத்தில் வல்லோசை உள்ளது. 

டகரத்துக்கு இலக்கணப்படி மெல்லோசை கிடையாது.

சி. ஜெயபாரதன்

C.R. Selvakumar

unread,
Feb 23, 2018, 10:22:57 AM2/23/18
to தமிழ் மன்றம், vallamai
///பாடா என்று எழுதினால் ஏற்கனவே டகரத்தில் வல்லோசை உள்ளது. 

டகரத்துக்கு இலக்கணப்படி மெல்லோசை கிடையாது.///

அறிந்துதான் பேசுகின்றீர்களா என் ஐயுறுகின்றேன். 
தமிழின் அடிப்படை ஒலிப்பொழுக்கங்க்களை இதைவிடத் தவறாகப்
பொருள்கொள்ளமுடியுமா? வல்லின ஒற்று முன்னே வந்தாலோ
அல்லது ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தாலோ மட்டுமே
ஒரு வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில்
எழுத்துச்சூழலால் மெலிந்தும் மூக்கொலி கலந்தும் காற்றொலி
கலந்தும் சீராகவே ஒலிக்கும்.


படம் என்பதையும் இடம் என்பதையும்
வல்லின டகர வல்லொலியாகவா ஒலிக்கின்றீர்கள்?!!

S. Jayabarathan

unread,
Feb 23, 2018, 10:35:40 AM2/23/18
to tamilmantram, vallamai, mintamil, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, Raju Rajendran, Anna Kannan, Anne Josephine
மதிப்புக்குரிய இராம கி ஐயா,


தமிழ்மொழி ஒரு கருவி. எவருக்கும் அது சொந்தமில்லை. தமிழ்ப் பண்டிதருக்கு மட்டும் சொந்தம் என்று மனப்பால் குடிக்காதீர்.  தமிழே தெரியாமல் வந்த அன்னிய வீரமுனிவர் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார்.  தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று வசைபாடிய தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.  தமிழ் மொழி 21 ஆம் ஆண்டு விஞ்ஞானத் தேவைக்கு ஏற்பச் சில விதிவிலக்குகளை ஏற்றுக் கொள்வது, தமிழ் இலக்கியத்தை வளர்ப்போர் கடமை என்பது என் கருத்து.

நான் 1960 ஆண்டு முதல் தமிழில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள் எழுதி, 25 நூல்களை வெளியிட்டுள்ளேன்.  1964 இல் சென்னை பல்கலைக் கழகம், எனது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி என்னும் நூலுக்கு மாநில முதற்பரிசு அளித்துள்ளது.  தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் கல்லூரிப் பாடநூலாய் இடம்பெற்றுள்ளது.  எண்ணும் எழுத்தும் தெரியா ஐந்து வயதிலே தந்தையார் கூடப் பாரதியார் தேசீய, பக்திப் பாடலை மனப்பாடமாய்ப் பாடி வந்தவன்.

சி. ஜெயபாரதன் 

 

2018-02-23 3:33 GMT-05:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
திருக்குறளைச் சிலகாலம் படித்து அதன் நயத்தில் ஓரளவு ஆழ்ந்த வெள்ளைக்கார வருவாய்த்துறை ஆட்சித்தலைவர் ஒருவர், ”திருக்குறளில் இலக்கணப்பிழைகள் உள்ளதாய்” ஒருமுடிவிற்கு வந்தார். ”இவ்வளவு சிறந்த நூலில் அங்குமிங்குமுள்ள சில பிழைகளும் இல்லாதிருந்தால் எப்படியிருக்கும்?” என்ற எண்ணத்தில், தன் துபாசியிடம், ”யாரிடம் தன் யோசனைகளைத் தெரிவிக்கலாம்?” என்று கேட்டிருக்கிறார். “உ.வே.சா.வின் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இங்குதான் கும்பகோணத்தில் உள்ளார், அவரிடம் போகலாம், துரையவர்கள் சமூகத்தில் என்ன விருப்பமோ, அதைப் பிள்ளைவாள் கட்டாயஞ் செய்துகொடுப்பார்” என்று துபாசி சொன்னாராம். சரியெனப் புறப்பட்டு, கும்பகோணத்தில் பிள்ளையின் வீட்டிற்குப்போய்க் கதவைத் தட்டினார்களாம்.
 
தன் முதுமையிலிருந்த பிள்ளைவர்கள் அன்றுபிற்பகல் ஓய்விலிருந்தார். கதவுதட்டும் ஓசைகேட்டு எழுந்துவந்து கதவைத்திறந்தார். துபாசி விதயத்தைச்சொன்னார். கேட்ட மீணாட்சிசுந்தரம் பிள்ளைக்கோ வியப்பும் திகைப்பும் எழுந்தது. “திருக்குறளைப்படித்து, அதிலேயே பிழைகண்டு வெள்ளைக்காரர் ஒருத்தர் திருத்தஞ்சொல்ல வருகிறாரே? நமையாளும் இவரை மறுத்துப் போகச்சொல்லவும் முடியாதே?” என்று அலமந்து, வேறுவழியின்றித் திண்ணையில் அமரச்சொல்லி, “என்னவிவரம்?” எனக்கேட்டாராம். துரை தான்வந்த செய்தியை மீண்டுஞ் சொல்லி, ”தான்கூறும் திருத்தங்கள் சரியா?” என்று பிள்ளையைக் கேட்டாராம். பிள்ளையும் “என்ன சொல்லவருகிறீர்கள்?” என்றுகேட்டாராம். ”அறத்துப்பாலில் நடுவுநிலைமை அதிகாரம் 114 ஆம் திருக்குறளில்
 
தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்
எச்சத்தால் காணப்படும்
 
என்றுவருகிறது. ”இதெப்படிச் சரியாகும்? அவரவர் பிள்ளைகுட்டிகளால் தானே யார் தகவுடையரென்று உலகத்தில் அறியமுடிகிறது? இந்த அடிப்படைச் செய்தியைக் கூட திருவள்ளுவர் சரியாகச் சொல்லவில்லையே? தவிர 2 ஆம் வரியில் பாருங்கள், தளை தட்டுகிறது. இது போன்ற தளைதட்டும் குறள்வெண்பாவைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாமா? எனவேதான் இதைமாற்றி
 
தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்
மக்களால் காணப்படும்
 
என்றெழுதினேன். நான் சொல்லவந்த குறள் சரியா?” என்று வெள்ளைத்துரை கேட்டாராம். அடுத்தகணம் பிள்ளையவர்கள் தன் தலையிலேயே ”கருமம், கருமம்” என்றடித்துக் கொண்டு வீட்டிற்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டாராம். மீண்டும் துபாசி கதவைத்தட்டி பிள்ளையவர்களிடம், “என்னவாயிற்று? இப்படிப் போய்விட்டீர்களே? இவர் மிகப்பெரிய வெள்ளைத்துரை” என்றாராம். “யாராய் இருந்தால் எனக்கென்ன? முதலில் திருக்குறளை ஒழுங்காகப் படிக்கச் சொல்லுங்கள். எச்சத்தின் பொருள்தெரியாமல் பொய்யில் புலவரின் குறளையே மாற்ற முயல்கிறாரே?” என்று பிள்ளையவர்கள் மீண்டும் மறுத்து உள்ளே சென்றுவிட்டாராம். அந்தக் கதை தான் இங்கு எனக்கு ஞாவகம் வருகிறது.
 
திரு.செயபாரதனைப் போன்றோர், தமிழ்மொழியைத் திருத்தப் போகுமுன்னால் தங்களின் அடிப்படைத் தமிழறிவைக் கூட்டிக்கொள்வது நல்லது. அரைகுறை அறிவில் உளறக் கூடாது. அப்புறம், அந்த வெள்ளைத்துரையின் நிலையே வந்துசேரும். தமிழில் வல்லினமெய்களில் ஓரெழுத்துக்கு ஓரொலியென என்றும் அமைவதில்லை. (சங்கதம். நாகரியைப் பிடித்துக்கொண்டு அப்படியே தமிழில் அமைக்க முற்பட்டால் தமிழில் 33 அடிப்படை எழுத்துகள் இராது. 51 எழுத்துக்கள் வந்துசேரும். ”பேசாமல் கிரந்தத்திற்கு மாறவேண்டுமென்று வெளிப்படையாகவே செயபாரதன் போன்றோர் சொல்லலாமே? நாங்களும் மலையாளம் விருத்தம் 2.0 என்று புரிந்து கொள்வோம். அப்படி விழைவோர் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதிக்கொள்ளலாம். தமிழில் எழுதுவதானால் தமிழ்விதிகளைக் கடைப்பிடியுங்கள். .
 
கால்பந்து ஆடவேண்டுமானால் அதன்விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும். வேறுவிதிகளை உட்கொண்டுவந்து கந்தரகோளம் பண்ணக்கூடாது. மட்டைப்பந்தோ, வளைதடிப் பந்தோ வேண்டுமெனில், அந்தந்த ஆட்டத்தில் அந்தந்த விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும். மீறிக்கலந்தால் ஆட்டநடுவர் வழுசெய்ததாய்ச் சொல்லி விளையாடுவோரை வெளியில்தான் நிற்கவைப்பார். அதேபோல பரத நாட்டியம் ஆடுமிடத்தில் குத்தாட்டம் ஆடமுடியாது. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையுண்டு. அதேபோல ஒவ்வோர் இசைக்கும் ஒரு முறையிருக்கிறது. கலப்பிசை, கலப்புநாட்டியம் வரக்கூடாதென நாங்கள் சொல்லவேயில்லை. ”அதைத் தமிழென்று சொல்லாதீர்கள். வேறெதோ பெயரிட்டுக்கொள்ளுங்கல். உங்களுக்குத் தோன்றியபடி நடந்துகொள்ளுங்கள். அதையாரும் மறுக்க மாட்டார். தமிழைக் கொஞ்சம் விட்டுவிடுங்கள்” என்றுமட்டுமே சொல்கிறோம். தமிழில் ஒரு வல்லின மெய்யெழுத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட ஒலிகளுண்டு. அம்மெய் சொல்முதலில் வருகிறதா, சொல்லிடையில் வருகிறதா என்று பார்க்கவேண்டும். இடையில் வருவதிலும் 3 வகைகள் உண்டு. 
 
1.சொல்தொடக்கத்திலும், சொல்லிடையில் தம்மின வல்லின மெய்களைத் தொடர்ந்துவரும்போதும், வல்லினமெய்கள் தம் இயல்பான ஒலியைப் பெறும்
2. சொல்லிடையில் ஒரு மெல்லினம் வந்து அதைத்தொடர்ந்து அதன் இனமான வல்லினம் திடடுமெனில், குறிப்பிட்ட வல்லினம் அதிரொலி பெறும்.
3. சொல்லிடையில் ஓர் உயிர்மெய் வந்து, அதைத்தொடர்ந்து இன்னொரு வல்லின உயிர்மெய் வருமானால், இரண்டாவது உயிர்மெய் (ககரத்திற்கும், சகரத்திற்கும்) சற்று உரசியோ, (டகரம், தகரம், பகரத்திற்கு) சற்று அதிர்ந்தோ ஒலிக்கும். இவ்வகையை உயிரிடையொலிப்பு (intervocalic pronunciation) என்று சொல்வர். 
 
காட்டுகள்:
 
க   1. கடல் (Kadal), மக்கள் (MakkaL) - இயல்பொலி 2. மங்கை (Mangai) - அதிர்வொலி 3. மகள் (MahaL) - உரசொலி
ச   1. சடை (Chadai), மிச்சம் (Michcham) - இயல்பொலி 2. மஞ்சள் (ManjaL) - அதிர்வொலி 3. காசு (Kaasu) - உரசொலி
ட   1 டாடா (taada), பாட்டன் (Pattan). - இயல்பொலி 2. பண்டை (PaNdai) - அதிர்வொலி 3. பாடு (Paadu) - அதிர்வொலி
த   1. தள்ளை (ThaLLai), வித்தை (Viththai) - இயல்பொலி 2. விந்தை (Vindha)i - அதிர்வொலி 3. விதை (Vidthai). - அதிர்வொலி
ப   1.பட்டம் (Pattam), கப்பல் (Kappal) - இயல்பொலி 2. வேம்பு (Veembu) - அதிர்வொலி 3. சாயுபு (Chayubu)  - அதிர்வொலி
 
டாடா என்றெழுதினால் தமிழ்மரபுப் படி taada என்றுதான் ஒலிக்கும். டாட்டா என்றெழுதினால் தமிழ்மரபுப்படி Tata என்றொலிக்கும். மேலே சொல்லியது ஒலிப்பு பற்றி மட்டுமே. தமிழ்ப்பேச்சில், தமிழெழுத்தில் இன்னொரு விதியும் உள்ளது. ”மொழிமுதலில் என்ன எழுத்துக்கள் வரும்?, மொழிக்கடையில் என்ன எழுத்துகள் வரும்?” என்பது பற்றியது. அதையேற்றால் டாட்டா என்பது தமிழ்முறைப்படி தவறு. தாட்டா என்றுதான் சொல்லமுடியும். அப்படிச்சொல்ல உங்களுக்கு முடியாதென்றால் டாட்டா என்று சொல்லிப்போங்கள்,  நாங்கள் புரிந்துகொள்வோம். அல்லது (இ)டாட்டா என்று எழுதுங்கள். அதையும் புரிந்துகொள்வோம். உகப்பு உங்கள் கையில். செய்வதைப் புரிந்துசெய்யுங்கள் என்று மட்டுமே சொல்கிறோம்.
 
நாங்கள் ஒன்றும் தமிழ்மொழிக்குப் பட்டாப் போட்டு வரவில்லை. சும்மா தொணதொண என்று கீறல்விழுந்த தட்டாய் இதேபாட்டைப் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களை அறிந்துகொண்ட நாள்முதலாய் இதேபாட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. ”ஒரு சிறு ஒலிப்புவிதியைக் கூடக் கற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் தமிழைத் திருத்துவேன்” என்று முனைந்துநிற்போருக்கு என்னசொல்வது? “கருமம், கருமம்” என்றுசொல்லி, எங்கள் மண்டையில் நாங்களே அடித்துக்கொள்வது தவிர வேறுவழியில்லை. தெய்வமே! இவர்களுக்கு புத்தியைக் கொடு!
 
அன்புடன்,
இராம.கி..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

S. Jayabarathan

unread,
Feb 23, 2018, 10:42:59 AM2/23/18
to tamilmantram, vallamai
///வல்லின ஒற்று முன்னே வந்தாலோ
அல்லது ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தாலோ மட்டுமே
ஒரு வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில்
எழுத்துச்சூழலால் மெலிந்தும் மூக்கொலி கலந்தும் காற்றொலி
கலந்தும் சீராகவே ஒலிக்கும் ///

இப்படி வல்லினத்தில் வாயொலி நீங்கி, மூக்கொலி கலந்து புல்லாங்குழல் மெல்லோசை வரும் என்று தொல்காப்பியர் கூறுவதை ஆதாரம் காட்டுங்கள்.

சி. ஜெ.

C.R. Selvakumar

unread,
Feb 23, 2018, 12:04:33 PM2/23/18
to தமிழ் மன்றம், vallamai
தொல்காப்பிய நூற்பா ஒன்று
"உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே"
என்று வரும். 

முதலில் நான் கேட்ட கேள்விக்கு விடை பகருங்கள்.

படம், இடம் என்பதில் வரும் டகரத்தை எப்படி
ஒலிப்பீர்கள்?

தொல்காப்பியர் எழுத்தொலிகள் பிறக்கும்
இடத்தையும் எழுப்பும் விதத்தையும் 
சிறிதே விளக்கியுள்ளார். 

"இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்" (எழு. 97)
என்கிறார். ஒலிவேறுபாட்டை நாம் மரபால்
அறிகின்றோம்.

"மெல்லெழுத் தாறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய புள்ளி நிலையின வாயினும்
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்"
(எழு. 100) 

என்கின்றார். எனவே மூக்கொலி வரும் என்பதைக்
காணலாம்.  மூக்கை விரல்களால் அழுத்திப்
பிடித்துக்கொண்டு தங்கம், மணம், பஞ்சு
என்றெல்லாம் சொல்லிப்பாருங்கள்.

எழு. 25 இல்
" ங ஞ ண ந ம ன எனும் புள்ளிமுன்னர்த்
தத்தம் இசைகள் ஒத்தனவே நிலையே"

என்பதில்
இசையொத்தன வருவது பற்றிச் சொல்கின்றார்.

நூற்பா எழு. 30 இல் 

"மெய்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம்முன் தாம்வரூஉம் ரழ அலங்கடையே"

என்பதில் இரட்டித்துவரும் விதங்களைக் கூறுகின்றார்.
ஆகவே எடுத்துக்காட்டாக -க்க்[+உயிர்]-  என 
இரட்டித்து வருகையில் தம்மியல்பின்படி
வலுத்தோ (வல்லினம்), தன்தன்மைப்படி தம்மொலி
(எடுப்பாகத்) தோன்ற மெல்லின,
இடையின எழுத்துகள் ரழ நீங்கலாக
வரும். 

எழுத்ததிகார நூற்பாக்கள் 102, 103 ஆகியவற்றைப்
பாருங்கள்.

எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே.

அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே”


இதன்படி எல்லா எழுத்தின் 
ஒலிநுணுக்கங்களும் , மாறுபடும் தன்மைகளும்
வெளிப்படச் சொல்லவில்லை. 

அகத்தெழு வளியிசை அரில்தப
நாடத்தெரிந்திருக்கவேண்டும்.  
ஒலிநுணுக்கங்கள் மிகப்பல. 

"இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்"  என்று
சொல்வதால் பகாரமும் மகாரமும் ஒன்றெனச்
சொல்லலாகாது. இடந்தான் சுட்டப்பட்டது.

நான் முதலில் சொல்லியவாறு
"உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே" .


செல்வா

S. Jayabarathan

unread,
Feb 23, 2018, 12:39:09 PM2/23/18
to tamilmantram, mintamil, vallamai
வல்லின எழுத்துக்கள் மெல்லோசையில் வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளாரா ?

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Feb 23, 2018, 12:43:05 PM2/23/18
to mintamil, vallamai, tamilmantram
​இந்த தமிழ் விதிவிலக்கு இழைக்கு ஒவ்வாத வேறு தலைப்பு இது தேமொழி​.

சி. ஜெ.

2018-02-23 0:31 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

http://www.telegraph.co.uk/books/what-to-read/don-quixote-top-mispronounced-literary-name/

The top ten most commonly mispronounced fictional characters:

1 Don Quixote, Miguel de Cervantes (44%)  ‘Don-Key-Hoh-Tee’, not ‘Don Quicks-Oat’
2 Daenerys Targaryen, Game Of Thrones, George RR Martin (28%) ‘Duh-Nair-Ris’ ‘Tar-Gair-Ee-In’, not ‘Dee-Nay-Ris ‘Targ--Ahh-Ruh-Yen’
3 Oedipus, Sophocles (23%)  ‘Ee-Di-Pus’, not 'Oh-Eh-Di-Pus'
Hermione, JK Rowling's Harry Potter (22%) ‘Her-My-Oh-Knee’, not ‘Her-Mee-Own’
5 Beowulf, unknown author (16%)  ‘Bay-Oh-Woolf’, not ‘Bee-Oh-Wulf’
Poirot, Agatha Christie (15%) ‘Pwa-Row’, not ‘Poy-Rot’
7 Smaug, The Hobbit, JRR Tolkein (13%) ‘Sm-Owg’, not ‘Sm-Org’
8  Voldemort, JK Rowling's Harry Potter (12%) ‘Vol-De-More’, not ‘Vol-De-Mort’ 
9 Violet Beauregarde, Roald Dahl's Charlie And The Chocolate Factory (12%) ‘Vie-Ah-Let’ Bore-R-Garrr’, not ‘Bore-Ruh-Gard’
10
 Piscine Patel, Life Of Pi, Yann Martel (11%) 'Piss-Een Pat-El, not ‘Pis-Kine Pat-il’ 



Don Key Hoh Tee  என்று எழுத எழுத்துக்கள் இருக்கும்பொழுது Don Quixote என்று எழுதி ஏன் உச்சரிப்புத் தலைவலியை உருவாக்குகிறார்கள்?


..... தேமொழி 






On Thursday, February 22, 2018 at 9:28:34 PM UTC-8, தேமொழி wrote:


On Thursday, February 22, 2018 at 9:01:44 PM UTC-8, jayabarathans wrote:
டாக்டர் பட்டம் / மெடிகல் டாக்டர் / முனைவர் பட்டம்

Doctor of Science / Doctor of Philosophy (Ph.D.) / Doctor of Medicine. [M.D.] [M.B.B.S.]

டாக்டர் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஜெயந்த் 
நர்லிகர்.  இவற்றில் வரும் டாக்டர் பட்டத்தைத் தனித்தமிழில் தாக்டர் என்றோ, இடாக்டர் என்றோ எழுதுவது, விளிப்பது மாபெரும் தவறு.

[மெடிகல்] டாக்டரை மருத்துவர் / தாக்டர் என்று தனித்தமிழில் எழுதுவது, விளிப்பது தவறு.

தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வது, விளிப்பது தவறு.

ஐயா உச்சரிப்பதற்கும் ...   எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு.

(அடுத்து வரும் பதிவைப் பார்க்கவும்) 

இடாக்டர் என்று எழுதியிருதால் உச்சரிப்பில் டாக்டர் என்றுதான் அழைப்பார்கள்


என் அப்பா போன்றவர்கள் என்னவென்று தங்களைக் கூறிக் கொள்ள வேண்டும்.

மருத்துவம் படித்து டாக்டர் 
பிறகு தமிழில் ஆய்வு செய்து பி ஹெச் டி பெற்று முனைவர்.
டாக்டர் என்றுதான் போட்டுக் கொள்கிறார்கள் 

டாக்டர் ஆஃப் xxxxx  என்ற பட்டம் வாங்கினால் உலகம் முழுவதும் பிறர் அப்பட்டம் வாங்கியவர்களை டாக்டர் என்றுதான் அழைக்கிறார்கள் 

///தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வது, விளிப்பது தவறு.///

ஏன் தமிழ் பயின்றோருக்குத் தடை?

ஆங்கில இலக்கியம் படித்தவர்கள்  டாக்டர் என்று  போட்டுக் கொள்ளலாமா

பொருளாதாரம், நிர்வாக மேலாண்மை, அறிவியல், பொறியியல் படித்தவர்கள் டாக்டர் எனப் போட்டுக் கொள்ளலாமா?

நானும் என் கணவரும் மேலுள்ள பட்டியலில் இருக்கிறோம் 


..... தேமொழி


 

சி. ஜெயபாரதன். 

2018-02-22 21:39 GMT-05:00 AnnaKannan K <annak...@gmail.com>:
நானும் டாடா என்றுதான் எழுதுவேன். ஒருவர் தம் பெயரை எப்படி எழுதுகிறாரோ, அப்படியே எழுதுவது நடைமுறைக்கு, ஊடகத் தமிழுக்கு உகந்தது. க்ரியா என ஒரு நிறுவனம் பெயர் வைத்துக்கொண்டால் அப்படியே தான் எழுதவேண்டும். அதே நேரம், இராமன் என ஒருவர் எழுதினால், அதை மதித்து, அவ்வாறே எழுத வேண்டும்.

பெயர்ச் சொற்களை இவ்வாறு எழுதுங்கள் என இலக்கண வல்லார் பரப்புரை மேற்கொள்ளலாம். அதை ஏற்பதும் விடுவதும் தனி நபர் முடிவுகள். தமிழில் அது ஒரு போக்கு, இது ஒரு போக்கு என அமைதி கொள்ள வேண்டியதே.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Feb 23, 2018, 12:46:53 PM2/23/18
to mintamil, tamilmantram, vallamai
நான் துவக்கிய இழை : தமிழுக்கு விடுதலை தா.  பிற மொழிகளில் உள்ள குறைபாடுகளைப் பற்றி இங்கு தர்க்கமில்லை.

சி. ஜெ. 

2018-02-23 0:50 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அடுத்து 
Oedipus

O என்பதை உச்சரிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த பின்னர் அதை ஏன் எழுத வேண்டும்.

ஆங்கில மொழி மரபுப்படி எழுதுவதில் கேள்விகள்  கேட்கப் படுவதில்லை.

தவறாக உச்சரித்தாலோ எழுதினாலோ திருத்தம் செய்ய உடனே பலர் வருவர்.


ஆங்கிலத்தை அமெரிக்கர் தங்கள் விருப்பம் போல ஷட்யூல் என்பதை ஸ்கெட்யூல் என்று உச்சரித்தால் இங்கிலாந்துக்காரர்கள் சினம் கொள்கிறார்களா.


இசட்  என்பதையே சீ  என உச்சரிக்கும் பொழுது ஆங்கிலேயர் தடை சொல்கிறார்களா?


தமிழிலும் சமஸ்கிரத எழுத்துக்களை எழுதும் பொழுது யாரும் தடை செய்வதில்லை.

அதனால் இலக்கணப்படி எழுதுபவரைக் குறை சொல்வதை விட்டு விடுவோம். 


..... தேமொழி

 




On Thursday, February 22, 2018 at 9:31:45 PM UTC-8, தேமொழி wrote:

http://www.telegraph.co.uk/books/what-to-read/don-quixote-top-mispronounced-literary-name/

The top ten most commonly mispronounced fictional characters:

1 Don Quixote, Miguel de Cervantes (44%)  ‘Don-Key-Hoh-Tee’, not ‘Don Quicks-Oat’
2 Daenerys Targaryen, Game Of Thrones, George RR Martin (28%) ‘Duh-Nair-Ris’ ‘Tar-Gair-Ee-In’, not ‘Dee-Nay-Ris ‘Targ--Ahh-Ruh-Yen’
3 Oedipus, Sophocles (23%)  ‘Ee-Di-Pus’, not 'Oh-Eh-Di-Pus'
Hermione, JK Rowling's Harry Potter (22%) ‘Her-My-Oh-Knee’, not ‘Her-Mee-Own’
5 Beowulf, unknown author (16%)  ‘Bay-Oh-Woolf’, not ‘Bee-Oh-Wulf’
Poirot, Agatha Christie (15%) ‘Pwa-Row’, not ‘Poy-Rot’
7 Smaug, The Hobbit, JRR Tolkein (13%) ‘Sm-Owg’, not ‘Sm-Org’
8  Voldemort, JK Rowling's Harry Potter (12%) ‘Vol-De-More’, not ‘Vol-De-Mort’ 
9 Violet Beauregarde, Roald Dahl's Charlie And The Chocolate Factory (12%) ‘Vie-Ah-Let’ Bore-R-Garrr’, not ‘Bore-Ruh-Gard’
10
 Piscine Patel, Life Of Pi, Yann Martel (11%) 'Piss-Een Pat-El, not ‘Pis-Kine Pat-il’ 



Don Key Hoh Tee  என்று எழுத எழுத்துக்கள் இருக்கும்பொழுது Don Quixote என்று எழுதி ஏன் உச்சரிப்புத் தலைவலியை உருவாக்குகிறார்கள்?


..... தேமொழி 






On Thursday, February 22, 2018 at 9:28:34 PM UTC-8, தேமொழி wrote:


On Thursday, February 22, 2018 at 9:01:44 PM UTC-8, jayabarathans wrote:
டாக்டர் பட்டம் / மெடிகல் டாக்டர் / முனைவர் பட்டம்

Doctor of Science / Doctor of Philosophy (Ph.D.) / Doctor of Medicine. [M.D.] [M.B.B.S.]

டாக்டர் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஜெயந்த் 
நர்லிகர்.  இவற்றில் வரும் டாக்டர் பட்டத்தைத் தனித்தமிழில் தாக்டர் என்றோ, இடாக்டர் என்றோ எழுதுவது, விளிப்பது மாபெரும் தவறு.

[மெடிகல்] டாக்டரை மருத்துவர் / தாக்டர் என்று தனித்தமிழில் எழுதுவது, விளிப்பது தவறு.

தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வது, விளிப்பது தவறு.

ஐயா உச்சரிப்பதற்கும் ...   எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு.

(அடுத்து வரும் பதிவைப் பார்க்கவும்) 

இடாக்டர் என்று எழுதியிருதால் உச்சரிப்பில் டாக்டர் என்றுதான் அழைப்பார்கள்


என் அப்பா போன்றவர்கள் என்னவென்று தங்களைக் கூறிக் கொள்ள வேண்டும்.

மருத்துவம் படித்து டாக்டர் 
பிறகு தமிழில் ஆய்வு செய்து பி ஹெச் டி பெற்று முனைவர்.
டாக்டர் என்றுதான் போட்டுக் கொள்கிறார்கள் 

டாக்டர் ஆஃப் xxxxx  என்ற பட்டம் வாங்கினால் உலகம் முழுவதும் பிறர் அப்பட்டம் வாங்கியவர்களை டாக்டர் என்றுதான் அழைக்கிறார்கள் 

///தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வது, விளிப்பது தவறு.///

ஏன் தமிழ் பயின்றோருக்குத் தடை?

ஆங்கில இலக்கியம் படித்தவர்கள்  டாக்டர் என்று  போட்டுக் கொள்ளலாமா

பொருளாதாரம், நிர்வாக மேலாண்மை, அறிவியல், பொறியியல் படித்தவர்கள் டாக்டர் எனப் போட்டுக் கொள்ளலாமா?

நானும் என் கணவரும் மேலுள்ள பட்டியலில் இருக்கிறோம் 


..... தேமொழி


 
சி. ஜெயபாரதன். 

2018-02-22 21:39 GMT-05:00 AnnaKannan K <annak...@gmail.com>:
நானும் டாடா என்றுதான் எழுதுவேன். ஒருவர் தம் பெயரை எப்படி எழுதுகிறாரோ, அப்படியே எழுதுவது நடைமுறைக்கு, ஊடகத் தமிழுக்கு உகந்தது. க்ரியா என ஒரு நிறுவனம் பெயர் வைத்துக்கொண்டால் அப்படியே தான் எழுதவேண்டும். அதே நேரம், இராமன் என ஒருவர் எழுதினால், அதை மதித்து, அவ்வாறே எழுத வேண்டும்.

பெயர்ச் சொற்களை இவ்வாறு எழுதுங்கள் என இலக்கண வல்லார் பரப்புரை மேற்கொள்ளலாம். அதை ஏற்பதும் விடுவதும் தனி நபர் முடிவுகள். தமிழில் அது ஒரு போக்கு, இது ஒரு போக்கு என அமைதி கொள்ள வேண்டியதே.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Feb 23, 2018, 1:32:36 PM2/23/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai
தொல்காப்பியத்தில் சொல்லியுள்ளதை எடுத்துரைத்திருந்தேனே.
இசையொத்துவரும்  என்று எடுத்துக்காட்டியிருந்தேனே!

நேர்மையாக உரையாடுங்கள். இன்னமும் நீங்கள் நான்
கேட்ட கேள்விக்கு விடை பகரவில்லை.

படம், இடம் என்பதில் வரும் டகரத்தை எப்படி
ஒலிப்பீர்கள்?

செல்வா


S. Jayabarathan

unread,
Feb 23, 2018, 1:55:31 PM2/23/18
to tamilmantram, mintamil, vallamai
//படம், இடம் என்பதில் வரும் டகரத்தை எப்படி
ஒலிப்பீர்கள்?

செல்வா///

வல்லின உச்சரிப்பில் :  பtaம் என்று.  

பdaம் என்று உச்சரிக்க இலக்கண விதி உள்ளதா ?  பலரும் டமில்மொலி என்றுதானே சொல்கிறார்.

சி. ஜெ.

சி. ஜெ.

C.R. Selvakumar

unread,
Feb 23, 2018, 2:07:16 PM2/23/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai
திரு செயபாரதன். நீங்கள் ஏன் இப்படிப் பொய் சொல்கின்றீர்கள்?!!
padam என்னாமல் paTam என்றா ஒலிக்கின்றீர்கள்?!!
போங்க ஒன்றாம் வகுப்புக்கு :)

நான் தொல்காப்பியத்திலிருந்து எடுத்து முதலில் இட்ட நூற்பா
எத்தனையும் பொருத்தம்!!

மெலிந்தொலிக்கவேண்டுமென்பது இசையொத்திருக்கவேண்டும்
என்பதன் வழிவருவது. தன்னொலி இரட்டித்து வந்தால் வலித்து
ஒலிக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளது. 

நாக்கு என்பது வாயில் உள்ளது என்று எங்கே தொல்காப்பியர்
சொல்லியிருக்கின்றார் என்று விதண்டாவாதம் செய்தான் என்ன
செய்யமுடியும்? அதனாற்றான் முதலிலேயே அந்த நூற்பாவை
வைத்தேன்.

செல்வா
அன்

Oru Arizonan

unread,
Feb 23, 2018, 4:48:35 PM2/23/18
to தமிழ் மன்றம், vallamai
இராமகி அவர்களே,

தாங்கள் சான்று கொடுத்துள்ள வெள்ளைக்காரத் துரை - மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் விவாதக்கட்டுரையை எனது தமிழ்ப்பாடமாகப் படித்துள்ளேன்.  தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்கள்தான் எனக்கு அப்பாடத்தை எடுத்தார்கள்.

S. Jayabarathan

unread,
Feb 23, 2018, 9:14:29 PM2/23/18
to tamilmantram, vallamai, mintamil

தேமொழி

7:00 PM (2 hours ago)
Reply
to மின்தமிழ்


On Friday, February 23, 2018 at 9:41:10 AM UTC-8, tamilstorywriters wrote:
"மய்யம்" என்ற சொல் சரியான சொல்லா?.


 "மய்யம்" எனக் கமல் எழுதும் நோக்கின் பின்புலத்தில் இருப்பது அரசியல்.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தில் "ஐ" என்பது தேவையற்றது "அய்" என்பதே போதும் என்றிருந்தது.

ஐயா  அய்யா  என எழுதும் வேறுபாடுகள் போல 

எம் ஜி ஆர் அரசின் முன்னெடுப்பில் தமிழில்  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் பின்பற்ற அமைக்கப்பட்ட தமிழறிஞர் ஆலோசனைக் குழு "ஐ" என்ற  எழுத்துக்குத்  தமிழில் பல பொருள் கூறப்படுவதால் "ஐ" என்பதில் கூறப்பட்ட மாற்றத்தை ஏற்கவில்லை. 

ஆனால் பெரியார் கூட்டத்தினர் அய்யா மய்யம்  என்ற வகையில் தொடர்வர்.  
எம் ஜி ஆர் பகுதி பகுதியாக மக்களைக் கவர்ந்து, தான் அவர்களுக்கானவர் என்ற அரசியல் செய்தார்.

விவசாயி, தொழிலாளி, படகோட்டி, மீனவ நண்பன், ரிக்க்ஷாக்காரன் என்பது போல....
கமலும் அதே வழியைப் பின்பற்றி இஸ்லாமியர், திராவிட கழகத்தினர் என ஒவ்வொரு கூட்டத்தையும் கவர நினைக்கிறார்.

அவர் மய்யம் என்று எழுதும் முறையால் தான் யாருக்கு நண்பர் எனக் காட்ட நினைக்கிறார். 




2018-02-23 19:04 GMT-05:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
அன்பிற்குரிய செயபாரதன் ஐயா,
 
தமிழின் ஒலிப்புத்தெரியாமலேயே தமிழைத்திருத்த முன்வருகிறீர்கள்.  இதிலுள்ள முரண்பாடு உங்களுக்குத் தெரியவில்லையா? இதில் தற்பெருமை வேறு. இன்னும் விவரம் தெரியாமலேயே பேசுகிறீர்கள். (5 வயசுப்பிள்ளை மருத்துவரிடமிருந்தே ஒரு ”நாடிகாட்டியை”  இரவல்வாங்கித் தன் காதுகளில் மாட்டிக்கொண்டு, அன்னையின் நெஞ்சில் வைத்துப்பார்த்து, “உன் நெஞ்சு சரியாக வேலைசெய்யவில்லை” என்பதுபோல் இருக்கிறது. அச்செயலைப் பார்த்து நகைத்துவிட்டு நாமெல்லோரும் நகர்வோம். இதேபிள்ளை பொறியியல் படித்துவிட்டு, அணுவியலில் வேலை செய்துவிட்டு, மருத்துவர் போலச் செயற்பட முற்படுமானால், உலகம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்காது. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளுங்கள். ”படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்” என்பது சொலவடை. வேதிப்பொறிஞனாகிய நான், எனக்கறியா மருத்துவத்தில் என்றும் கேட்கும்நிலையில் தான் இருப்பேன். மருத்துவர் சொல்வதைக் கேட்டுநடப்பேன். அவரோடு வாக்குவாதம் செய்துகொண்டிருக்கமாட்டேன். என்னால் முடிந்ததை நான் பேசவேண்டும். “வானத்தை வில்லாய் வளைப்பேன்” என்று வாய்ப்பந்தல் போடக்கூடாது.
 
வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம் செய்யவில்லை. அவர்காலத்தில் ஏற்பட்ட சீர்திருத்தத்தை அவர் பரப்பினார். (இரட்டைக்கொம்பு வீரமாமுனிவருக்குச் சற்று முன்னாலேயே ஏற்பட்டுவிட்டதாய் ஓர் ஆதாரம் படித்தேன். அச்சு இவர்வயம் இருந்ததால் அதை இவர் பெருவலப்படுத்தினார். அவ்வளவுதான்.) பெரியார் எழுத்துச்சீர்திருத்தம் கணிவரும் முன் ஏற்பட்டது. அன்றைக்கு அச்சுக்கோக்கும் நிலை உழைப்பு நிறைய வேண்டியதாய் இருந்தது.. அதிலுள்ள அவர் அச்சகத்துச்சிக்கலால் இம்மாற்றத்தை அவர் பரிந்துரைத்தார். கணிவழி எழுத்துக்களைக் கோக்கும்போது அவருடைய எழுத்துச் சீர்திருத்தங்கள் தேவையேயில்லை. இன்று எல்லா எழுத்தும் இரண்டு பொத்தான அடிப்பிற்குள் அடங்கிவிடும். கோ என்று எழுதுகையில் மூன்றுதடவையா அடிக்கிறீர்கள்? இரு தடவை தானே அடிக்கிறீர்கள்?? நீங்கள் ஒரு அறிவியலார்/நுட்பியலார் தானே? சற்று ஓர்ந்துபார்த்துப் பேசுங்கள். 
 
அறிவியல் தேவை அது இதென்று ”கணி வந்தபிறகு” மொழியெழுத்தை மாற்றியவர்கள் நானறிந்து உலகில் யாருங் கிடையாது. (கணியின் வலுவை நான் சொல்லத் தேவையில்லை. (தமிழ்க்கணிமையில் இத்தனைபேர் வேலை செய்ததால் தான் நாமெல்லோரும் தமிழ் எழுதிக்கொண்டுள்ளோம். கணிமை தெரிந்தவர் சொல்கிறார். இனிமேல் எழுத்துச் சீர்திருத்தங்கள் எந்த மொழிக்கும் தேவையில்லை. உலகத்திலேயே சிக்கலான சீன எழுத்தையே கணிக்குள் கொண்டுவந்துவிட்டார்.) உங்கள் காலுக்கு ஏற்றபடியான செருப்பே ஒழிய, செருப்பிற்கேற்றபடி காலைவெட்டு என்பது முட்டாள் தனம்.  நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் அறிவீனம். குளிர்கிறது என்று சொல்லி தன்வீட்டு உத்திரத்தை உருவியெரிக்கும் அறியாமை. அறிவுள்ளவர் அதைச் செய்யமாட்டார்.
 
அதுதான் சொல்லிவிட்டோமே? இருக்கும் தமிழைக் கையாளமுடியவில்லை எனில் வேறுமொழியில் எழுதிக்கொள்ளுங்கள். தமிழை வசைபாடிக்கொண்டு இருக்காதீர்கள்.   இதுவரை நாங்கள்வைத்த எந்த உரையாட்டிற்கும் நீங்கள் கட்டுமானமாய் மறுமொழித்ததேயில்லை. சும்மா வசைபாடிக்கொண்டே இருப்பீர்கள். எழுத்துச் சீர்திருத்தங்கள் எதுவும் இந்தக் காலத்தில் தேவையேயில்லை.  மொழியைச் சிதைக்காது எல்லா வளர்ச்சியுங் காணமுடியும். நாங்கள் கட்டுப்பெட்டிகளும் இல்லை; பண்டிதர்களுமில்லை. உங்களைப் போன்ற நுனிநாக்கு அறிவியலாளர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றப் பாடுபடும் ஆர்வலர்கள். அவ்வளவுதான்.
 
அன்புடன்,
இராம.கி.
 

seshadri sridharan

unread,
Feb 24, 2018, 1:31:28 AM2/24/18
to vall...@googlegroups.com
நல்ல கருத்து 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Feb 24, 2018, 12:22:21 PM2/24/18
to mintamil, vallamai, tamilmantram, kanmani tamil
///ஆனால் நான் டாக்டர் என்று போட்டுக் கொள்ளக் கூடாது என்று சொன்னால் அந்தக்  கருத்தை கடாசி விடுகிறேன்.///

Ph.D. பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போடுவது நேர்மை என்று குறிப்பிட்டுள்ளேன்


/////இந்த இழையைத் தொடங்கியபோது நீங்கள்  தமிழுக்கு விடுதலை கேட்டீர்கள் .
யாரிடம் கேட்கிறீர்கள் என்று புரியாமல் தான் நானும் பேசாது இருந்தேன்.
எதற்காகக் கேட்க வேண்டும்?
அதுவும் தெளிவாகவில்லை.
தமிழ் எங்கே சிறைப்பட்டு இருக்கிறது ?
எப்போது சிறைப்பட்டது ?
யாரால் சிறைப்படுத்த இயலும் ?
நடக்காத ஒன்றை நடந்ததாக ஏன் கற்பித்துக் கொள்கிறீர்கள் ?
விதிகளைப் போட்டால் விலக்கு அளி என்கிறீர்கள்.
விதிகளைப் போடும் உரிமையை யார் யாரிடம் கொடுத்தார் ?
விலக்கு அளி என்று கெஞ்சுவது என் ?////

உங்களுக்கு வலையில் பல்லாண்டுகளாய் நிகழ்ந்துவரும் இந்த தர்க்க வரலாறு தெரியாது.

கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளாக எனக்கும், தமிழ் வலை உலகம் நன்கறிந்த தனித்தமிழ் மேதைகளான பேரா செல்வக்குமார், இராம கி ஐயா, நாக. இளங்கோவன் ஆகியோருக்கும் 
தர்க்கம் வலையில் நேர்ந்து வருகிறது.  

பிரச்சனைகள்: 

1.  தமிழில் ஸ, ஜ, ஹ, ஷ போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தக்கூடாது.

2.  லகரம், டகரம், ரகரம் போன்ற எழுத்துக்கள் சொல்லுக்கு முன் வரக்கூடாது. 

3.  ஸ்டாலின், ஸ்டரான்சியம், ஸ்டீஃபன் ஹாக்கிங் - மெய்யெழுத்து ஆரம்பத்தில் வரக்கூடாது 

4.  வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.

21 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானப் படைப்புகளுக்கு மேற்கூறிய முதல் மூன்று விதிவிலக்குகள் தேவை என்பது என் அழுத்தமான கருத்து.  

1960 முதல் நான் என் படைப்புகளில் ஐந்து கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகிறேன்.  இரசாயன மூலகங்களின் பெயரை [லாந்தனம், டங்ஸ்டன், ரேடான்,  ரேடியம், ஸ்டிரான்சியம்] அப்படியே எழுதி வருகிறேன்.  விஞ்ஞானிகள் பெயரை [ஐன்ஸ்டைன், ஸ்டீஃபன் ஹாக்கிங்] அப்படியே எழுதுகிறேன்.

அவையெல்லாம் தேவையில்லை என்பது தனித்தமிழ் மேதைகள் கருத்து.

இப்போது டாடா, டாக்டர் என்று எப்படித் தனித்தமிழில் எழுதுவது என்பது என் கேள்வி.

இவற்றுக்குத்தான் தர்க்கம்.  

யார் தமிழ்க் காப்பாளி, யார் தமிழைச் சிறையில் போடுகிறார், யார் தமிழுக்கு விடுதலை கேட்கிறார் என்பது தெரியலாம்.

சி. ஜெயபாரதன்.

+
​+++++++++++++++++++++++++
 

S. Jayabarathan

unread,
Feb 25, 2018, 11:02:41 AM2/25/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari
////உங்கள் காலுக்கு ஏற்றபடியான செருப்பே ஒழிய, செருப்பிற்கேற்றபடி காலைவெட்டு என்பது முட்டாள் தனம்.  நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் அறிவீனம். குளிர்கிறது என்று சொல்லி தன்வீட்டு உத்திரத்தை உருவியெரிக்கும் அறியாமை. அறிவுள்ளவர் அதைச் செய்யமாட்டார். ////

அடடா,  எத்தகைய பொருத்தமான உபமானங்கள் !!! 

இராம கி ஐயா தனித்தமிழ் மேதைக்கு  எது கால், எது செருப்பு என்று கூடத் தெரியவில்லை !!!   நான் சொல்கிறேன், விஞ்ஞானத்துக்கு ஏற்ப தமிழ்மொழி வளைந்து கொடுக்க வேண்டும் என்று.  டங்க்ஸ்டன், ரேடியம், லாந்தனம், ஸ்டிரான்சியம், ரேடான், ஸ்டீஃபன் ஹாக்கிங்,  டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் தேமொழி, டாக்டர் கண்மணி, டாடா, டெல்லி ஆகிய பெயர்ச்சொற்கள் சிதைவு படாமல் தமிழ் எழுத்துக்களாய் எழுதப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.  

இராம கி ஐயா சொல்வது,  தமிழ்மொழிக்கு ஏற்றவாறு இப்பெயர்ச்சொற்கள் சிதைவாகி எழுதுவது சரியே.  [தங்குசுடன், இரேடியம்,இலாந்தனம், இசுடிரான்சியம்,  இரேடான், இசுடீபன் காக்கிங்,  தாக்தர்  ஐன்சுடீன்,  தாக்தர் அப்துல் கலாம், தாக்தர் தேமொழி, தாக்தர் கண்மணி,  தாட்டா,  தில்லி.

தனித்தமிழ் மேதைகள்  எது கால், எது செருப்பு என்று தெரிந்து கொள்வது நல்லது.

சி. ஜெயபாரதன்
 

2018-02-24 16:00 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
///அறிவியல் தேவை அது இதென்று ”கணி வந்தபிறகு” மொழியெழுத்தை மாற்றியவர்கள் நானறிந்து உலகில் யாருங் கிடையாது. (கணியின் வலுவை நான் சொல்லத் தேவையில்லை. (தமிழ்க்கணிமையில் இத்தனைபேர் வேலை செய்ததால் தான் நாமெல்லோரும் தமிழ் எழுதிக்கொண்டுள்ளோம். கணிமை தெரிந்தவர் சொல்கிறார். இனிமேல் எழுத்துச் சீர்திருத்தங்கள் எந்த மொழிக்கும் தேவையில்லை. உலகத்திலேயே சிக்கலான சீன எழுத்தையே கணிக்குள் கொண்டுவந்துவிட்டார்.) உங்கள் காலுக்கு ஏற்றபடியான செருப்பே ஒழிய, செருப்பிற்கேற்றபடி காலைவெட்டு என்பது முட்டாள் தனம்.  நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் அறிவீனம். குளிர்கிறது என்று சொல்லி தன்வீட்டு உத்திரத்தை உருவியெரிக்கும் அறியாமை. அறிவுள்ளவர் அதைச் செய்யமாட்டார்.
 
அதுதான் சொல்லிவிட்டோமே? இருக்கும் தமிழைக் கையாளமுடியவில்லை எனில் வேறுமொழியில் எழுதிக்கொள்ளுங்கள். தமிழை வசைபாடிக்கொண்டு இருக்காதீர்கள்.   இதுவரை நாங்கள்வைத்த எந்த உரையாட்டிற்கும் நீங்கள் கட்டுமானமாய் மறுமொழித்ததேயில்லை. சும்மா வசைபாடிக்கொண்டே இருப்பீர்கள். எழுத்துச் சீர்திருத்தங்கள் எதுவும் இந்தக் காலத்தில் தேவையேயில்லை.  மொழியைச் சிதைக்காது எல்லா வளர்ச்சியுங் காணமுடியும். நாங்கள் கட்டுப்பெட்டிகளும் இல்லை; பண்டிதர்களுமில்லை. உங்களைப் போன்ற நுனிநாக்கு அறிவியலாளர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றப் பாடுபடும் ஆர்வலர்கள். அவ்வளவுதான்.
 
அன்புடன்,
இராம.கி.///

2018-02-24 14:44 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, February 24, 2018 at 11:29:15 AM UTC-8, jayabarathans wrote:
///இதுவரை உங்கள் கிரந்த எழுத்துப் பயன்பாட்டை கடிந்தவர்கள் பட்டியலைக் கொடுக்கவும் ஐயா.///

பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன.  10 அல்லது 15 ஆண்டுகளாகத் தர்க்கம். 


தர்க்கம் நடப்பது வேறு.
அது ஆரோக்கியமான முறையும் கூட. 

ஒரு குறிப்பிட்ட  பொருண்மை குறித்து  அவரவர் கருத்தை, மாறுபட்ட கோணங்களை  வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பளிக்கும் முறை விவாதம். அதனால் அனைவரும் அனைத்துக் கோணங்கள் குறித்தும் அறிய வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொன்றிலும் உள்ள நன்மை தீமை ஆகியன அறிய வாய்ப்பும் கிடைக்கும். 


நேற்றுவரை இராமகி ஐயாவோ பேரா. செல்வா அவர்களோ உங்கள் விருப்பப்படி  நீங்கள் எழுதுங்கள், தனித்தமிழார்வலர்கள்  அவர்கள் விருப்பப்படி எழுதட்டும் என்றுதான் சொல்வதைப் படித்து வருகிறேன்.

ஹார்வர்ட் - கருவாடு என்று அதே இழையிலேயே  நீங்கள்  நையாண்டி செய்த வகையில், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே  எவரேனும் வந்து கிரந்தம் எழுதுவதற்குத் தடை என்று கூறியவர்கள் யாரென அறிய விரும்புகிறேன்.

அடுத்தவர் தனது  கருத்து ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவது வேறு, தமது கருத்து இதுவென்று சொல்லிவிட்டுச் செல்வது வேறு.

இவற்றுக்கிடையில் வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். 

..... தேமொழி




 

சி. ஜெ. 


2018-02-24 13:54 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, February 24, 2018 at 9:22:23 AM UTC-8, jayabarathans wrote:
///ஆனால் நான் டாக்டர் என்று போட்டுக் கொள்ளக் கூடாது என்று சொன்னால் அந்தக்  கருத்தை கடாசி விடுகிறேன்.///

Ph.D. பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போடுவது நேர்மை என்று குறிப்பிட்டுள்ளேன்


/////இந்த இழையைத் தொடங்கியபோது நீங்கள்  தமிழுக்கு விடுதலை கேட்டீர்கள் .
யாரிடம் கேட்கிறீர்கள் என்று புரியாமல் தான் நானும் பேசாது இருந்தேன்.
எதற்காகக் கேட்க வேண்டும்?
அதுவும் தெளிவாகவில்லை.
தமிழ் எங்கே சிறைப்பட்டு இருக்கிறது ?
எப்போது சிறைப்பட்டது ?
யாரால் சிறைப்படுத்த இயலும் ?
நடக்காத ஒன்றை நடந்ததாக ஏன் கற்பித்துக் கொள்கிறீர்கள் ?
விதிகளைப் போட்டால் விலக்கு அளி என்கிறீர்கள்.
விதிகளைப் போடும் உரிமையை யார் யாரிடம் கொடுத்தார் ?
விலக்கு அளி என்று கெஞ்சுவது என் ?////

உங்களுக்கு வலையில் பல்லாண்டுகளாய் நிகழ்ந்துவரும் இந்த தர்க்க வரலாறு தெரியாது.

கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளாக எனக்கும், தமிழ் வலை உலகம் நன்கறிந்த தனித்தமிழ் மேதைகளான பேரா செல்வக்குமார், இராம கி ஐயா, நாக. இளங்கோவன் ஆகியோருக்கும் 
தர்க்கம் வலையில் நேர்ந்து வருகிறது.  

பிரச்சனைகள்: 
1.  தமிழில் ஸ, ஜ, ஹ, ஷ போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தக்கூடாது.
2.  லகரம், டகரம், ரகரம் போன்ற எழுத்துக்கள் சொல்லுக்கு முன் வரக்கூடாது. 
3.  ஸ்டாலின், ஸ்டரான்சியம், ஸ்டீஃபன் ஹாக்கிங் - மெய்யெழுத்து ஆரம்பத்தில் வரக்கூடாது 
4.  வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
21 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானப் படைப்புகளுக்கு மேற்கூறிய முதல் மூன்று விதிவிலக்குகள் தேவை என்பது என் அழுத்தமான கருத்து.  


பிரச்சனை  என்பது எப்பொழுது வருகிறது?

நீங்கள் அறிவியல் கட்டுரைகள் எழுதும் பொழுது, கிரந்த எழுத்து பயன் படுத்தப்பட்டுள்ளது என்று யாரேனும் உங்களைத் தடை செய்து, எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தால் அது பிரச்சனை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் குழுமத்தில் இருக்கிறேன்.

ஒரே ஒருவர் கூட உங்களுக்கு இடையூறு கொடுத்து நான் பார்த்ததில்லை. யாரும் தடையே சொல்லாத பொழுது பிரச்சனை எங்கிருந்து வருகிறது?



மாறாக, அடுத்தவர் தனித்தமிழில் எழுதுவதற்கு  (எ. கா:. ஹார்வர்ட்)  உங்களால்தான் இடையூறு கொடுக்கப்பட்டு வந்துள்ளது. 

தமிழை உங்கள் வழியில் எழுதும் உரிமையில் பிறர் தடையிடாத, தலையிடாத பொழுது, 
அடுத்தவர் விருப்பபடி அவர் தமிழ் எழுதினால், இதுதான் இலக்கணப்படி எழுதுவது என்று அவர் பின்பற்றினால், 
நீங்கள் ஏன் இடையூறு செய்கிறீர்கள், உங்கள் கொள்கையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்,  பிரச்சனை எழுப்புகிறீர்கள் என்பதுதான் எனக்கு விளங்காமல் போகிறது.



///யார் தமிழ்க் காப்பாளி, யார் தமிழைச் சிறையில் போடுகிறார், யார் தமிழுக்கு விடுதலை கேட்கிறார் என்பது தெரியலாம்.///

யார் தமிழ்க் காப்பாளி, யார் தமிழைச் சிறையில் போடுகிறார், யார் தமிழுக்கு விடுதலை கேட்கிறார் என்பது இங்கு அவரவர் கோணத்தில் மாறுபடுகிறது.

யார் கம்பியின் மறுபுறம் இருக்கிறார் என்பது நிற்கும் இடத்தில் இருந்து மாறுபடுவது போல.

தனித்தமிழ் ஆர்வலர்கள் அவர்கள் வழியில் போகிறார்கள், அவர்கள் கிரந்த எழுத்தாளர்களுக்குத் தொல்லை தராத பொழுது, மற்றவரும் அவர் உரிமையை மதிப்பதே நல்லது.

இதுவரை உங்கள் கிரந்த எழுத்துப் பயன்பாட்டை கடிந்தவர்கள் பட்டியலைக் கொடுக்கவும் ஐயா. 

..... தேமொழி




 

1960 முதல் நான் என் படைப்புகளில் ஐந்து கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகிறேன்.  இரசாயன மூலகங்களின் பெயரை [லாந்தனம், டங்ஸ்டன், ரேடான்,  ரேடியம், ஸ்டிரான்சியம்] அப்படியே எழுதி வருகிறேன்.  விஞ்ஞானிகள் பெயரை [ஐன்ஸ்டைன், ஸ்டீஃபன் ஹாக்கிங்] அப்படியே எழுதுகிறேன்.

அவையெல்லாம் தேவையில்லை என்பது தனித்தமிழ் மேதைகள் கருத்து.

இப்போது டாடா, டாக்டர் என்று எப்படித் தனித்தமிழில் எழுதுவது என்பது என் கேள்வி.

இவற்றுக்குத்தான் தர்க்கம்.  

யார் தமிழ்க் காப்பாளி, யார் தமிழைச் சிறையில் போடுகிறார், யார் தமிழுக்கு விடுதலை கேட்கிறார் என்பது தெரியலாம்.

சி. ஜெயபாரதன்.

+
​+++++++++++++++++++++++++
 

2018-02-23 21:04 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
மதிப்புக்குரிய இராம கி ஐயா,


தமிழ்மொழி ஒரு கருவி. எவருக்கும் அது சொந்தமில்லை. தமிழ்ப் பண்டிதருக்கு மட்டும் சொந்தம் என்று மனப்பால் குடிக்காதீர்.  தமிழே தெரியாமல் வந்த அன்னிய வீரமுனிவர் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார்.  தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று வசைபாடிய தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.  தமிழ் மொழி 21 ஆம் ஆண்டு விஞ்ஞானத் தேவைக்கு ஏற்பச் சில விதிவிலக்குகளை ஏற்றுக் கொள்வது, தமிழ் இலக்கியத்தை வளர்ப்போர் கடமை என்பது என் கருத்து.

நான் 1960 ஆண்டு முதல் தமிழில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள் எழுதி, 25 நூல்களை வெளியிட்டுள்ளேன்.  1964 இல் சென்னை பல்கலைக் கழகம், எனது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி என்னும் நூலுக்கு மாநில முதற்பரிசு அளித்துள்ளது.  தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் கல்லூரிப் பாடநூலாய் இடம்பெற்றுள்ளது.  எண்ணும் எழுத்தும் தெரியா ஐந்து வயதிலே தந்தையார் கூடப் பாரதியார் தேசீய, பக்திப் பாடலை மனப்பாடமாய்ப் பாடி வந்தவன்.

சி. ஜெயபாரதன் 

 

2018-02-23 3:33 GMT-05:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
திருக்குறளைச் சிலகாலம் படித்து அதன் நயத்தில் ஓரளவு ஆழ்ந்த வெள்ளைக்கார வருவாய்த்துறை ஆட்சித்தலைவர் ஒருவர், ”திருக்குறளில் இலக்கணப்பிழைகள் உள்ளதாய்” ஒருமுடிவிற்கு வந்தார். ”இவ்வளவு சிறந்த நூலில் அங்குமிங்குமுள்ள சில பிழைகளும் இல்லாதிருந்தால் எப்படியிருக்கும்?” என்ற எண்ணத்தில், தன் துபாசியிடம், ”யாரிடம் தன் யோசனைகளைத் தெரிவிக்கலாம்?” என்று கேட்டிருக்கிறார். “உ.வே.சா.வின் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இங்குதான் கும்பகோணத்தில் உள்ளார், அவரிடம் போகலாம், துரையவர்கள் சமூகத்தில் என்ன விருப்பமோ, அதைப் பிள்ளைவாள் கட்டாயஞ் செய்துகொடுப்பார்” என்று துபாசி சொன்னாராம். சரியெனப் புறப்பட்டு, கும்பகோணத்தில் பிள்ளையின் வீட்டிற்குப்போய்க் கதவைத் தட்டினார்களாம்.
 
தன் முதுமையிலிருந்த பிள்ளைவர்கள் அன்றுபிற்பகல் ஓய்விலிருந்தார். கதவுதட்டும் ஓசைகேட்டு எழுந்துவந்து கதவைத்திறந்தார். துபாசி விதயத்தைச்சொன்னார். கேட்ட மீணாட்சிசுந்தரம் பிள்ளைக்கோ வியப்பும் திகைப்பும் எழுந்தது. “திருக்குறளைப்படித்து, அதிலேயே பிழைகண்டு வெள்ளைக்காரர் ஒருத்தர் திருத்தஞ்சொல்ல வருகிறாரே? நமையாளும் இவரை மறுத்துப் போகச்சொல்லவும் முடியாதே?” என்று அலமந்து, வேறுவழியின்றித் திண்ணையில் அமரச்சொல்லி, “என்னவிவரம்?” எனக்கேட்டாராம். துரை தான்வந்த செய்தியை மீண்டுஞ் சொல்லி, ”தான்கூறும் திருத்தங்கள் சரியா?” என்று பிள்ளையைக் கேட்டாராம். பிள்ளையும் “என்ன சொல்லவருகிறீர்கள்?” என்றுகேட்டாராம். ”அறத்துப்பாலில் நடுவுநிலைமை அதிகாரம் 114 ஆம் திருக்குறளில்
 
தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்
எச்சத்தால் காணப்படும்
 
என்றுவருகிறது. ”இதெப்படிச் சரியாகும்? அவரவர் பிள்ளைகுட்டிகளால் தானே யார் தகவுடையரென்று உலகத்தில் அறியமுடிகிறது? இந்த அடிப்படைச் செய்தியைக் கூட திருவள்ளுவர் சரியாகச் சொல்லவில்லையே? தவிர 2 ஆம் வரியில் பாருங்கள், தளை தட்டுகிறது. இது போன்ற தளைதட்டும் குறள்வெண்பாவைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாமா? எனவேதான் இதைமாற்றி
 
தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்
மக்களால் காணப்படும்
 
என்றெழுதினேன். நான் சொல்லவந்த குறள் சரியா?” என்று வெள்ளைத்துரை கேட்டாராம். அடுத்தகணம் பிள்ளையவர்கள் தன் தலையிலேயே ”கருமம், கருமம்” என்றடித்துக் கொண்டு வீட்டிற்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டாராம். மீண்டும் துபாசி கதவைத்தட்டி பிள்ளையவர்களிடம், “என்னவாயிற்று? இப்படிப் போய்விட்டீர்களே? இவர் மிகப்பெரிய வெள்ளைத்துரை” என்றாராம். “யாராய் இருந்தால் எனக்கென்ன? முதலில் திருக்குறளை ஒழுங்காகப் படிக்கச் சொல்லுங்கள். எச்சத்தின் பொருள்தெரியாமல் பொய்யில் புலவரின் குறளையே மாற்ற முயல்கிறாரே?” என்று பிள்ளையவர்கள் மீண்டும் மறுத்து உள்ளே சென்றுவிட்டாராம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

C.R. Selvakumar

unread,
Feb 25, 2018, 11:54:04 AM2/25/18
to தமிழ் மன்றம், vallamai, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, Jothi Themozhi
// நான் சொல்கிறேன், விஞ்ஞானத்துக்கு ஏற்ப தமிழ்மொழி வளைந்து கொடுக்க வேண்டும் என்று. //

அறிவியல் ("விஞ்ஞானம்") என்றால் என்னவென்றே அறியாததால் கூறும் கூற்று.
இது வடிகட்டின அறியாமை!! எந்தக் கருத்தையும் எந்த அறிவியலையும்
எந்த மொழியிலும்
 கூறமுடியும் விளக்கமுடியும் என்பது அடிப்படை உண்மை.  

மொழி என்றால் என்ன
 அதன் பயன் என்ன, அது எப்படி இயங்குகின்றது,
அறிவியல் என்றால் என்ன, அது 
எப்படி இயங்குகின்றது
என்பதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் சிந்தியுங்கள்! சரி செல்வா
இவையெல்லாம் விளக்குங்கள் என்று என்னைத் திருப்பிக்கேட்காதீர்கள்.

திரு செயபாரதன், முதலில் அறிவியல் என்றால் என்ன என்பதையும்
அதன் அடிப்படை என்னவென்பதையும் புரிந்துகொள்ளுங்கள். 
" டங்க்ஸ்டன், ரேடியம், லாந்தனம், ஸ்டிரான்சியம் " என்று எழுதுவதில்
இல்லவே இல்லை என்பதையாவது புரிந்துகொள்ளுங்கள்!!

செல்வா








--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

N. Ganesan

unread,
Feb 25, 2018, 3:18:55 PM2/25/18
to மின்தமிழ், vallamai, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari


2018-02-25 8:01 GMT-08:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> ////உங்கள் காலுக்கு ஏற்றபடியான செருப்பே ஒழிய, செருப்பிற்கேற்றபடி காலைவெட்டு என்பது முட்டாள் தனம்.  நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் அறிவீனம். குளிர்கிறது என்று சொல்லி தன்வீட்டு உத்திரத்தை உருவியெரிக்கும் அறியாமை. அறிவுள்ளவர் அதைச் செய்யமாட்டார். ////
>
> அடடா,  எத்தகைய பொருத்தமான உபமானங்கள் !!!
>
> இராம கி ஐயா தனித்தமிழ் மேதைக்கு  எது கால், எது செருப்பு என்று கூடத் தெரியவில்லை !!!   நான் சொல்கிறேன், விஞ்ஞானத்துக்கு ஏற்ப தமிழ்மொழி வளைந்து கொடுக்க வேண்டும் என்று.  டங்க்ஸ்டன், ரேடியம், லாந்தனம், ஸ்டிரான்சியம், ரேடான், ஸ்டீஃபன் ஹாக்கிங்,  டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் தேமொழி, டாக்டர் கண்மணி, டாடா, டெல்லி ஆகிய பெயர்ச்சொற்கள் சிதைவு படாமல் தமிழ் எழுத்துக்களாய் எழுதப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.  


Tamil is a Phonemic script, where as all other Indian scripts (derived from Sanskrit) are Phonetic scripts. In other words, non-Tamil scripts have one-to-one correspondence for each letter & sound. In Tamil, it is not true.

எனவே, டாடா என Tata வை எழுதக் கூடாது. TaaDaa என உச்சரிக்கப்படும். சுடலை மாடா! = suDalai maaDaa.
எனவே தான்,  Tata = டாட்டா என்று எழுதுகிறோம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 25, 2018, 3:34:28 PM2/25/18
to மின்தமிழ், vallamai, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari


2018-02-25 8:01 GMT-08:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> ////உங்கள் காலுக்கு ஏற்றபடியான செருப்பே ஒழிய, செருப்பிற்கேற்றபடி காலைவெட்டு என்பது முட்டாள் தனம்.  நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் அறிவீனம். குளிர்கிறது என்று சொல்லி தன்வீட்டு உத்திரத்தை உருவியெரிக்கும் அறியாமை. அறிவுள்ளவர் அதைச் செய்யமாட்டார். ////
>
> அடடா,  எத்தகைய பொருத்தமான உபமானங்கள் !!!
>
> இராம கி ஐயா தனித்தமிழ் மேதைக்கு  எது கால், எது செருப்பு என்று கூடத் தெரியவில்லை !!!   நான் சொல்கிறேன், விஞ்ஞானத்துக்கு ஏற்ப தமிழ்மொழி வளைந்து கொடுக்க வேண்டும் என்று.  டங்க்ஸ்டன், ரேடியம், லாந்தனம், ஸ்டிரான்சியம், ரேடான், ஸ்டீஃபன் ஹாக்கிங்,  டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் தேமொழி, டாக்டர் கண்மணி, டாடா, டெல்லி ஆகிய பெயர்ச்சொற்கள் சிதைவு படாமல் தமிழ் எழுத்துக்களாய் எழுதப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.  


Tamil is a Phonemic script, where as all other Indian scripts (derived from Sanskrit) are Phonetic scripts. In other words, non-Tamil scripts have one-to-one correspondence for each letter & sound. In Tamil, it is not true.

எனவே, டாடா என Tata வை எழுதக் கூடாது. TaaDaa என உச்சரிக்கப்படும். சுடலை மாடா! = suDalai maaDaa.
எனவே தான்,  Tata = டாட்டா என்று எழுதுகிறோம்.


ஒரு உதாரணம் தருகிறேன். ’ஸ்ரீதேவியை அந்த நிருபர்  2 மாதம் முன் பேட்டி கண்டார்”. பேட்டி தமிழில் பரவலாகப் பயன்படும் உர்துச்சொல்.  bhēṭī. இதனைப் பேட்டி என ஆக்குகிறது தமிழ்.
பேட்டி pēṭṭi , n. < U. bhēṭī. Interview, audience; பெரியோரைக் காண்கை.
Tata- வை டாடா என எழுதினால்,  bhēṭī  பேடி என எழுதணும்.

இன்னொன்று: தாரா (duck) - இப்போதைய தமிழில் வாத்து என்று எழுதுகிறோம்.
வாத்து என்பது போர்ச்சுகீசியச் சொல் pato . இதனை வாது என்றோ பாது என்றோ தமிழில் எழுதுதலில்லை.

இது போல் 100-கணக்கில் உதாரணங்கள் பாருங்கள். தமிழ் எழுதும்முறை - from Phonetic scripts to Tamil's Phonemic script - புரிந்துகொள்ள இயலும்.


S. Jayabarathan

unread,
Feb 25, 2018, 3:44:04 PM2/25/18
to mintamil, vallamai, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari
நண்பர் கணேசன்,

இங்கு முதன்மைத் தர்க்கம் டாடா, டாட்டா, டாக்டர் என்று எழுதுவது தவறு, தாட்டா, தாக்டர் என்று எழுத வேண்டும் என்பது.  

டாடா, டாட்டா ஃபோனடிக்ஸ் பற்றி முதன்மைத் தர்க்கமன்று. 

சி. ஜெயபாரதன்

N. Ganesan

unread,
Feb 25, 2018, 3:52:32 PM2/25/18
to மின்தமிழ், vallamai, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari
2018-02-25 12:43 GMT-08:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் கணேசன்,

இங்கு முதன்மைத் தர்க்கம் டாடா, டாட்டா, டாக்டர் என்று எழுதுவது தவறு, தாட்டா, தாக்டர் என்று எழுத வேண்டும் என்பது.  

டாடா, டாட்டா ஃபோனடிக்ஸ் பற்றி முதன்மைத் தர்க்கமன்று. 

சி. ஜெயபாரதன்

நன்றி, விஞ்ஞானி ஜெயபாரதன். நான் இழையைப் படிக்கவில்லை.

டாக்டரை தாக்டர் என்றும், டாட்டாவை தாடா, தாட்டா என்றெல்லாம் எழுதினால்
பொதுமக்களிடையே பெருங்குழப்பமே நேரும்.
Reply all
Reply to author
Forward
0 new messages