Re: {தமிழாயம்} தகரம்

258 views
Skip to first unread message

நா. கணேசன்

unread,
Aug 22, 2015, 3:30:11 PM8/22/15
to தமிழாயம், vallamai, mintamil, housto...@googlegroups.com
On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:
தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!


ஆம், புலவர் இரவா. தகரம் - நந்தியும் அல்ல, ஆவாரையும் அல்ல.
அது வேறு பூ. 

சிந்து சமவெளியிலே இதற்கு மிக முக்கியத்துவம் இருந்தது.
அதைப்பற்றி அவ்வாய்வறிஞர்களுக்கு 10 ஆண்டு முன்பு விளக்கினேன்.
தலைக்கு தகரத்தை, அதன் மலர்களை அரைத்து நறுமணத்திற்காகப்
பூசி குளிப்பாட்டுவார்கள். இது இந்தியாவில் 5000 ஆண்டுகளாய் உண்டு.
இதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்கள், சிந்து சமவெளியில் கிடைக்கும்
தொல்லியல் சான்றுகள். 

தகரம், தகரை - இத் தாவரப் பெயரால் பெரிய ஊர்கள் இருந்திருக்கின்றன.
இப்பொழுது சற்று பெயர் மாறியுள்ளது.

பிற பின்!
நா. கணேசன்

புறநானூறு - 132

போழ்க என் நாவே! 

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.  
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.  திணை: பாடாண். 
துறை: இயன் மொழி.  

முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே! 
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே! பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! 
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி, அயல தகரத் தண்ணிழல் பிணையடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமையம், தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே. 

 

Sent from Samsung Mobile


-------- Original message --------
From: N D Logasundaram
Date:21/08/2015 5:04 PM (GMT+05:30)
To: thamizayam
Subject: Re: {தமிழாயம்} தகரம்

அன்பு மிகு இராமகி அய்யா 

இது ctamil குழுவில் எழுந்த கேள்வி.  அங்கிருந்து இங்கு கேள்வியை நகர்த்துவது ஒருவகையில் தவறுதான்


இதிலென்ன தவறு

அறிவுக்கு என்ன வேலி?? 
யாரு ம் அதற்கு  வேலி போட முடியயாதே  ??

GB INFITT ல் தான் 
அங்கிருப்பது இங்குகூடாது 
இங்கிருப்பது அ ங்கு கூடாது 
யாரோ எதற்கோ தேவையானை ஒன்றை
எல்லாவற்றிற்கும் வைத்து குழப்பம்  விளைவிக்கின்றனர் 

நிற்க 

தகரம் பற்றி சங்கநூல்களில்  நிகண்டுகளில் தே டிக்கொடிருக்கின்றென் 
முடிந்ததும் வைக்கின்றேன் அதற்கிடையில் 

தகரா என ஓர் மலையாள திரைப் படம் வந்தது அங்கு பார்த்தேன்
நீங்கள் கேட்கும் பொருள் பற்றி பிடி ஒன்றும் கிடைக்கவில்லை 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 




நூ த லோ சு 
மயிலை 

2015-08-20 18:50 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:
இது புதலியல் (botany) பற்றிய ஐயம்.
 
தகரம் என்ற குறிப்பு சங்க இலக்கியத்தில் ஒருசில இடங்களில் வருகிறது. (இது ஈயம் எனும் மாழை பற்றியதல்ல. இந்தக் காலத்தில் Tin என்றே நமக்கெல்லாம் விளங்குகிறது.)
 
இது நந்தியாவட்டையா (Tabernaemontana divaricata or Ervatamia divaricata) ? அன்றி ஆவாரம் பூவா? [ஆவாரம் பூவிலும் இரண்டு வகைகள் தொடர்பு கொண்டிருக்கின்றன. (Cassia Auriculata and Cassia Tora)] இந்தக் குழப்பத்தில் என்னால் முடிவிற்கு வரமுடியவில்லை. இதுவரை கிடைத்த சங்க இலக்கியக் குறிப்புக்கள் எதுவும் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய வில்லை.  இரண்டு, மூன்று குறிப்புக்கள் ஒன்றை நோக்கி நகரவைத்தால், இன்னொரு குறிப்பு அதை மறுக்கவைக்கிறது. தடுமாறிக்கொண்டிருக்கிறேன். இவற்றை அடையாளங்காண மருத்துவக் குறிப்புகள், அழகுக்குறிப்புகள், உடல்நலக் குறிப்புகள், புதலியற் குறிப்புகள் என ஏதேனும் உண்டா?
 
தகரம் என்பது பொதுவாகத் தலைமயிருக்கு இட்டுக்கொள்ளும் ஒருவகைச் சாந்து. (சந்தனம் மட்டும் சாந்தல்ல. பூசிக்கொள்ளும் எல்லாவகை paste களுமே சாந்துகள் தான். ஏன் சுவரிற்குப் பூசுவதும் சாந்துதான். சிமிட்டிச் சாந்து. சுண்ணாம்புச் சாந்து. சாந்து என்ற சொல்லின் பொருண்மையை நாம் உணரவில்லை.)  இந்தக்காலத்தில் இந்துலேகா, கேசவர்த்தினி போன்ற பொரிம்புத் (branded) தைலங்களைப் பூசிக்கொண்டு கொஞ்சநேரம் இருந்து, அதற்குப் பின் பெண்கள் குளிக்கிறார்களே, அதேபோல  சங்ககாலப் பெண்கள்  இந்தத் தகரச்சாந்தைத்  தலையிற் பூசிக்கொண்டு நீராடியிருக்கிறார்கள். (எங்கள் வீட்டிலேயே 50 ஆண்டுகளுக்கு முன் ஆண்களும், பெண்களும் செம்பருத்திச்சாறு கலந்த தைலத்தைக் காய்ச்சி வடித்து தலையிற்பூசிக் குளித்திருக்கிறோம். இந்தத் தைலம் செய்வதற்காக மதுரையிலிருந்து ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவார். சாறுபிழிந்து எண்ணெயோடு சேர்த்துக்  காய்ச்சுதல் 2,3 நாட்கள் நடக்கும். எங்கள் வீட்டிலிருந்து ஒவ்வொரு சொந்தக்காரருக்கும் என் தாத்தாவின் மேற்பார்வையில் புட்டில் புட்டிலாய்த் தைலம்போகும். இளம் அகவை நினைவுகள் மங்கலாய்த் தோன்றுகின்றன. இந்த மயிர்ச்சாந்து செய்யும் முறையைக் கற்றுக்கொள்ளாது போய்விட்டேனோ என்னவோ?)
 
நாட்டுபுறங்களில் மட்டும் தான் இதுபோன்ற செய்திகள் மீந்துகிடக்கின்றன. உங்கள் ஊர்களில் கேட்டுப்பாருங்கள். 50, 100 ஆண்டுகளுக்கு முந்திய நம்முடைய மரபுச்செய்திகள் கூடப் பதிவு செய்யப்படாமலேயிருப்பதால் சங்க இலக்கியச் செய்திகள் அடையாளங்காணப்படாமலே போகின்றன. ஒரு பெரிய இடைவெளியில் நாமிருக்கிறோம். தகரம் எனும் செடி/மரத்தை அடையாளங்காணும் முயற்சியில் இப்போது நானிருக்கிறேன். இது ctamil குழுவில் எழுந்த கேள்வி.  அங்கிருந்து இங்கு கேள்வியை நகர்த்துவது ஒருவகையில் தவறுதான். ஆனால் இதையெல்லாம் அங்குபேசித் தெளியமுடியாது. பட்டறிவு அப்படித்தான் சொல்கிறது. என்னை அங்கு பேசவிடமாட்டார்கள். அங்கு நான் மட்டுறுத்தப்பட்ட உறுப்பினன். வெறுமே படித்துக் கொண்டிருக்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.
 


STOP Virus, STOP SPAM, SAVE Bandwidth!
www.safentrix.com

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Aug 22, 2015, 4:39:00 PM8/22/15
to தமிழாயம், vallamai, mintamil, housto...@googlegroups.com
>தகரத் தண்ணிழல் 

ஒரு மரம் என புலனாகிறது

22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 3:30 பிற்பகல் அன்று, நா. கணேசன் <naa.g...@gmail.com> எழுதியது:

On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:
தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!


மரம்
 
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 23, 2015, 12:26:06 AM8/23/15
to மின்தமிழ், vallamai


On Saturday, August 22, 2015 at 4:56:48 PM UTC-7, தேமொழி wrote:
தகரம் அதன் நறுமணம் பற்றி புத்தரின் தம்ம பதத்தில் இருக்கிறது !!!


 
  
55.

சந்தனம், தகரம், தாமரை, ஜவந்தி ஆகிய புஷ்ப வகைகளின் நறுமணம் நற்குணத்தின் நறுமணத் திற்கு ஈடாகாது.

http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=172&pno=23



வடமொழி இலக்கியங்களில் (பாகதம், சம்ஸ்கிருதம்) ஏராளமான செய்திகளுடன் தகரம் இருக்கிறது - தமிழ்ப் பெயர் மாறவில்லை.
 

Verse 55. Fragrance Of Virtue Is The Sweetest Smell

Sandalwood or lavender,
lotus or the jasmine great,
of these many fragrances
virtue’s fragrance is supreme.

Explanation: Sandalwood, lavender, water-lily and the jasmine exude fragrance. Of all these varieties of fragrances the sweet-smell of virtue is the most supreme. This is because the fragrance of virtue is universally favoured. Besides, the fragrance of virtue spreads in all directions, even against the wind.


http://www.buddhanet.net/dhammapada/d_flower.htm


இதை ஆங்கிலத்தில் லாவண்டர் என்றா  சொல்வார்களா? !!!



ஐரோப்பாவில் லாவண்டர்.

ஆனால், அதன் நிறத்துக்கு அருகே வருவது தகரப் பூ. 
பூவின் பொடி, வேரின் பொடி எல்லாம் தலைக்குத் தேய்த்து நீராடியுள்ளனர்.

சங்க இலக்கியம் லாவண்டரைச் சொல்லவில்லை.
ஆனால், தகரத்தின் நிறம் முளரி (தாமரைக் குடும்ப ஆம்பலைச் சொல்கிறது. நீலோற்பலம் )
நெடுநல்வாடை:
    தண் நறு தகரம் முளரி நெருப்பு அமைத்து இரு காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப -
    File:Water Lily Closeup.jpg
இதனைச் சில நூற்றாண்டு சென்றபின் சீவசிந்தாமணியும் சொல்கிறது:

திருந்து தகரச் செந்நெருப்பிற்
  றேன்றோய்த் தமிர்தங் கொளவுயிர்க்குங்
கருங்கா ழகிலி னறும்புகையிற்
  கழுமிக் கோதை கண்படுக்குந்
திருந்து நானக் குழல்புலம்பத்
  தேனும் வண்டு மிசைப்புலம்ப
வரும்பொன் மாலை யலங்கலோ
  டாரம் புலம்ப வகற்றினாள்.

   (இ - ள்.) திருந்து தகரச் செந்நெருப்பில் தேன்தோய்த்து அமிர் தம்கொள உயிர்க்கும் கருங்காழ் அகிலின் நறும்புகையில் கழுமி - நல்ல தகர விறகால் ஆக்கிய செந்தீயில் தேனில் தோய்ப்பதால் இனிய மணம்கமழும் கரிய அகிற்கட்டையால் எழுந்த இனிய புகையில் மயங்கி; கோதை கண்படுக்கும் திருந்து நானக்குழல் புலம்ப - மலர்மாலை துயிலும் நல்ல புழுகுகலந்த கூந்தல் வருந்துமாறும்; தேனும் வண்டும் மிசைப் புலம்ப - தேனினமும் வண்டினமும் மலரின்மையின் இசைக்கு வருந்தவும்; அரும் பொன்மாலை அலங்கலோடு ஆரம்புலம்ப - அரிய பொன்அரி மாலையும் நெற்றி மாலையும் தலைக்கோலமாகிய முத்துமாலையும் வருந்த (இவற்றைக் குழலிலிருந்து) நீக்கினாள்.

தகரத்தின் தாவரப்பெயர் தெரிகிறதா?
 நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 23, 2015, 12:35:29 AM8/23/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Saturday, August 22, 2015 at 4:56:48 PM UTC-7, தேமொழி wrote:
தகரம் அதன் நறுமணம் பற்றி புத்தரின் தம்ம பதத்தில் இருக்கிறது !!!
 
  
55.

சந்தனம், தகரம், தாமரை, ஜவந்தி ஆகிய புஷ்ப வகைகளின் நறுமணம் நற்குணத்தின் நறுமணத் திற்கு ஈடாகாது.

http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=172&pno=23




Perfumes, five in number, viz., kōṭṭam, turukkam, takaram, akil, canta- ṉam; கோட்டம் துருக்கம் தகரம் அகில் சந்தனம் என்ற ஐவகை வாசனைப்பண்டம். பத்துத் துவரினு மைந்து விரையினும் (சிலப். 6, 79). 

பஞ்சகந்தம் என்பதை ஐந்துவிரை என்கிறார் இளங்கோவடிகள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 23, 2015, 12:54:10 AM8/23/15
to மின்தமிழ், vallamai


On Saturday, August 22, 2015 at 4:56:48 PM UTC-7, தேமொழி wrote:
தகரம் அதன் நறுமணம் பற்றி புத்தரின் தம்ம பதத்தில் இருக்கிறது !!!
[...]

publ. by the Jaffna-book society

American mission Press, 1842


தகரப்போடி ...  என்பது வாசனைப்பொடி என்றும்

தகரம் என்பது மயிர்ச்சாந்து, வாசனைப்பண்டம் 

என்ற குறிப்பையும் தருகிறது 


தகர்த்தல் என்றால் இடித்தல் என்ற பொருள் உண்டு.
தகரை/தகரம் என்பது வேர், பூ இடித்து மணப்பொடி ஆக்குவதைக் குறிக்கும்.

 

தகரை பற்றி ஆங்கில விக்கி 

https://en.wikipedia.org/wiki/Cassia_tora





காலப்போக்கில் தகரம் என்ற பெயர் பலவற்றுக்கும் ஏற்படுள்ளது.
ஏன் என ஆராயவேண்டும்.

வெள்ளாடை வந்தான் என்பது போல,
தகரஞாழல் வந்தாள் என்னும் தொடர்.
ஆனால், பொருள் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.
ஞாழல் என்றால் என்ன? தகரம் என்றால் என்ன? - என்பது மறந்துவிட்ட நூற்றாண்டுகளில்.

ஞாழல் என்றால் என்ன தாவரம் என எழுதியுள்ளேன் மின்தமிழில்.
பி. ஏ. கிருஷ்ணன் புலிநகக்கொன்றை என்று பிழைபட ஞாழலுக்கு (ஞாழல்பத்து) எடுத்து 
நாவல் செய்துவிட்டார். அது டைகர்க்லா ட்ரீ என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தாச்சு.
உவேசா (கிவாஜ?) குறிப்பை உவேசா மாணவரே திருத்திவிட்டார். உவேசா அதற்கு
முன்னுரையும் அளித்துள்ளார்கள். Indepedent reference தாவரவியல் நிபுணர் குறிப்பு
(17-ஆம் நூற்.) காட்டியுள்ளேன்.

வெள்ளாடை வந்தான் - வெண்மை ஆன ஆடை அணிந்தவன் வந்தான்.
தகரஞாழல் வந்தாள் - தகரப்பொடி மணம்வீசும் ஞாழல் மரம் போன்றவள் வந்தாள்.
ஞாழலைப் பெண்ணுக்கு உவமை ஆக்குவது தமிழிலும், காளிதாசனிலும் காணலாம்.


 

...... தேமொழி 




N D Logasundaram

unread,
Aug 23, 2015, 3:16:05 AM8/23/15
to தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, mintamil, Banukumar Rajendran, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A
திருஇராமகி அவர்களுக்கு 
தகரம்
என்னிடமுள்ள 18 நிகண்டுகள் + தொன்மை நூல்களிலிருந்து 
திவாகர நிகண்டு
763 = தகரம் தக்கோலம் கோட்டம் சாதிக்காய்
          இலவங்கம் ஏலம் கச்சோலம் மாஞ்சி எனப்
          பகரும் வாசம்தறு பண்டப்பெயரே         
1052  தகரமும்  ஏலமும் காசறையும் மயிர்ச்சாந்து
2272 =தகரமும் சுண்ணமும் தருப்பப் பிண்டியும்
            இனையவை இடி என இசைக்கப்படுமே  (சூரணம்??? நீரில் கரைத்து சாந்தாகும் )
                                  தகர் = ஆடு = இடித்தல் தொடர்பினால் எழுந்தது எனலாம்
                                 தகர்த்தல் எனும் வினைக்கும் இது வேரே  

        பிங்கலம் =காணவில்லை XXXXXX 

213  கயாதர நிகண்டு =  தகரம்  தமாலம் இண்டு ஈங்கை - - - - - - - - - - - -  

427 சூடாமணி நிகண்டு தகரம்  ஏலம் காசறை மயிர்சாந்தின் பேர் 

1768 அகராதி நிகண்டு தகரம்  தானே ஈயமும் தகரமும் நறுநாற்ற மும் மயிர்சாந்தும் நாற்பேரே 

18 அரும்பொருள் விளக்க நிகண்டு தகரம்  மயிர்சா ந்து ஈயம் மயிர்சாந்து தண் மணம் புன்கின் பேர் 

390 நாம தீப நிகண்டு = மயிர்சாந்தே ஏலம்  தகரம்  காசறை

32 நாநார்த்த தீபிகை தகரம்  யிர்சாந்து ஓர் மரம் 

13 வேதகிரியார் சூடாமணி நிகண்டு  தகரமே  மயிர்ச்சாந்து ஈயம் தகரம் வாசனைப்பொருட் பேர்

 தகரம் (வருக்கம்)  அகராதி நிகண்டு =   தகரம்  = மயிர் சாந்து நாற்றம் கிடாய் ஈயம் தற்கொமலை (??)

=============================================
யெரியவி ருருவி னங்குழைச் செயலைத் 105
தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக
வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்
தண்ணறுந் தகரம்  கமழ மண்ணி                           குறிஞ்சிப்பாட்டு      பூசு  நறும்  பொருள்

பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார் 55
தண் நறுந் தகர  முளரி நெருப்பமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப               நெடுநல்வாடை  பூசிய நறும்  பொருள்

சாந்துஉளர் வணர்குரல் வாரி வகைவகுத்து 10
யான்போது துணைப்பத் தகரம்  மண்ணாள்
தன்ஓ ரன்ன தகைவெங் காதலன்                           அகநானூறு 117     பூசிய நறும்  பொருள்

துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்
தகரம்  நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ 15              அகநானூறு 141       பூசிய நறும்  பொருள்

காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர 5
நன்மாண் விழவில் தகரம்  மண்ணி
யாம்பல புணர்ப்பச் சொல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்                     அகநானூறு 385               பூசிய நறும்  பொருள்

வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டவர்20
நீடலர் வாழி தோழி தோடுகொள்
உருகெழு மஞ்ஞை ஒலிசீர் ஏய்ப்பத்
தகரம்  மண்ணிய தண்ணறு முச்சி                       அகநானூறு 393         பூசிய நறும்  பொருள்

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகர  தண்ணிழல் பிணையொடு வதியும்              புறநானூறு 132   ஓர்  நிழல் தரும் செடி மரம் 
                                                                                                                        ((புல்லினப்  புதல்  ??))
அகரு வழை ஞெமை ஆரம் இனைய 5
தகரமும் ஞாழ்லும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு                                பரிபாடல் 12                            ஓர் மரம் செடி (புல்லினம் ??)                                                                                                                      (வெள்ளத்தில் 
உரையின் உயர்ந்தன்று கவின் 95
போர் ஏற்றன்று நவின்று  தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று
துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று       பரிபாடல் 12                   பூசு நறும் பொருள் 

கனவினும் பிரியா உறையுளொடு தண்எனத் 15
தகரம் நீவிய *துவராக் கூந்தல்*
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து            பதிற்று 89                        பூசு நறும  பொருள்

மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள் 1
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்      நற்றிணை 170          பூசு நறும்  பொருள் 

நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி எறிந்துழுது 23 திணைமாலை150 
                                                            ஓர் செடி (புல்லினம் ??) களை போன்று எறிபவை 
தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறித்த நோக்கு                      77 திணைமாலை150        பூசு நறும்  பொருள்

வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி 
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி 55                                                   பூசு நறும்  பொருள்
மகர யாழின் வான் கோடு தழீஇ                  4 பளிக்கறைபுக்க காதை மணிமேகலை 

புகரிலை நெடுவேல் அறுமுகக் குளவன் 55
தகரம் கமழும் நெடுவரைக் காட்சி             47 கல்லாடம்                     பூசு நறும் பொருள்

மேகாளகங்கள்மிஞிறுவாய்வைத்தூதக்
காகாளமென்னும்படிகலிப்பப்-போகத்
தகரங்கமழ்கதுப்பிற்றாழ்குழைதோடாழ்                                          பூசு நறும் பொருள்
மகரம்பிறழ்கொடியின்வாய்ப்பு-இகலனங்கன் 108 குலோத்துங்கசோழனுலா

தகரக்குழலாய் தகவிலளே சங்கமங்கை வென்ற                           பூசு நறும் பொருள்
சிகரக்களிறு செங்கோல் நெடுமாறன்தென் கூடலின்வாய்  278 பாண்டிக்கோவை

சக்கரக்கிரியுமெக்கிரியுமெம்புடவியுஞ்
சமையவந்துதகரத்தழுவினுந்தழுவுநின்று  398  தக்கயாகப்பரணி  

தகரப் புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே 1.66.3 ஞான.தேவாரம்  வெண்மை நிறம் அல்லது 
                                                                                                       ஓர் புல்லினம்
தகர மணியருவித் தடமால்வரை சிலையா               1.88.5 ஞான.தேவாரம் பால்போல் வெண்மைநிறம் 

முகரத்திடை முத்தின்னொளி பவளத்திரள் ஓதத் 
தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந்து          7.72.2 சுந்தரர் தேவாரம்                      ஓர் புல்லினம்

தகர நறைபூண்டவிந்தைக் குழலியர்கள் 60 அருணகிரிநாதர்  திருப்புகழ்      பூசு நறும் பொருள்

தகரத் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர்       வெண்மைநிறம்
                                                                                                                   
தகர நறுமலர் பொதுளிய குழலியர் 163 அருணகிரிநாதர்                     ஓர் மரம் (செடி புல்லினம் ??)

திணைமாலை150 ன் வரிகள் வழி தூக் கிஎறியும் களை .ஆ தலால் (சிறு) கோரையின் கிழங்கு ஆகலாம் 
கோரைக்கிழங்கு ஓர் நறுமணப் பொருள் மிகச் சிறிய சே ம்புபோல் கருநிற த்தில் காணும் இன்றும் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் 

நாநார்த்த தீபிகை எனும் நிகண்டு ஓர் மரம் என்கின்றது புறம் 132 ம் இதையே பேசுகின்றது 

வெண்மை நிறம் வழிதான் ஓர் உலோகமகின்ற தெனலாம் ஈயம் என்றாலும் வெள்ளீ  யத்தைக்குறித்தது  
தற்காலம் இ து துத்த நா கத்தைக் குறி க்கின்றது 

N. Ganesan

unread,
Aug 23, 2015, 10:36:47 AM8/23/15
to மின்தமிழ், vallamai, thami...@googlegroups.com, housto...@googlegroups.com


On Saturday, August 22, 2015 at 4:56:48 PM UTC-7, தேமொழி wrote:



மேலும் ..."தகர இலை" >>> https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%882.jpg


 


Botanical Name: Cassia Tora


என்று டாக்டர் சௌந்தரபாண்டியன் தெரிவிக்கிறார்.

Dr.S.Soundarapandian 

இவர் தாவரங்கள் பற்றி நன்கு தெரிந்த அறிஞராகத் தெரிகிறார்

https://commons.wikimedia.org/wiki/Special:Search/S.Soundarapandian


மற்றொரு தகரை படம்:

https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%883.jpg


மேலும் மற்றுமொரு தகரை படம் 

https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%881.jpg



இந்த படங்கள் எடுக்கப்பட்ட இடம்  டி.நகர், சென்னை

13.03888980.228611

மாம்பலம் இரயில்வே நிலையம் அருகில்....

எனத் தெரிகிறது.


***ஆனால் "நறுமணம்"பற்றிய குறிப்புகளைக் காணவில்லை. 

***தகரை என்பதுதான் தகரம் செடியா ... என்பதும் தெரியவில்லை 




இதன் தமிழ்ப் பெயர்: தகரப் புன்னை. வடமொழி தமிழிலிருந்து கடனாகப்பெற்று ப்ர-புன்னதம் என்கிறது.

இங்கே தகரம் என்னும் சொல் தகடு என்னும் சொல்லிலிருந்து வரும். இதன் இலைகள்
தகடு போல் இருப்பதால். -ட்- > -ர்- மாற்றம் இந்திய மொழிகளிலே மிகுதி:
சோழ/சோட > சோர என்று எழுதுவதும் உண்டு. பல்லவர்கள் ஆந்திராவில் இருந்தபோது
அவர்களின் ஆதி ஊர்களில் ஒன்று: காடுவெட்டி (பல்லவன் குலப்பெயர்) இது கார்வெட்டி இப்போது.
நாள்-/நாட்- = கறுப்பு. நாளணன்/நாளப்பன் எல்லாம் தமிழில் உண்டு. கருப்பராயசாமி எனும் விஷ்ணு.
நாளணன்/நாடணன் > நாரணன் என்பர் 100க் கணக்கான இடங்களில் ஆழ்வார்கள். 
கோடு = கொம்பு. ஆமான் கொம்பு விருப்பமுடன் அணிபவள் கொற்றவை.
எனவே, கோடி என்ற அவள் பெயர் கௌரீ. ரிக்வேதத்தில் கௌரீ என்றால் ஆமா/ஆமான்.
ஆமான் என்பது சங்கப்பெயர். கௌரீ என வடமொழியில் சொல்லப்படும் இந்தியன் பைஸன்:
(கௌட- கௌர-) இதன் கோடணிபவள் கொற்றி. நாடணன் > நாரணன் ஆவதுபோல்.
தகடம்  > தகரம். இங்கே.
தகடு போன்ற இலைகொண்டது இந்த தகரச் செடி. ஆனால் இதைத் தலையில்
தேய்த்து அரைக்கமுடியாது, நாத்தமடிக்கும். எனவே அவ்வாறு, சிந்து மக்களோ,
சங்கத் தமிழ்ப் பெண்களோ மயிர்ச்சாந்தாகக் கொண்டிலார். 
இதன் வாசம் துர்நாற்றம் ஆகும். ஆங்கிலத்தில் இதன் பெயர்: Stinking cassia!

தகரப் புன்னை, தாழை போல மணற்பாங்கான நெய்தல் திணையில் நிறைய வளர்கிறது:
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே

தமிழின் தகரப் புன்னை - வடமொழியில் பிர(பெரு)-புன்னதம்

தாவரவிஞ்ஞானப் பெயரை சிங்களப் பேர் என்கிறது விக்கி. சிலோனில் சிங்களர் தமிழிடம் பெற்ற பெயர் இது.


அமெரிக்காவில் இந்தச் செடிக்கு உறவான செடி உண்டு:

---------------------------------------------------------------

தகர்த்தல் - இடித்துப் பொடிசெய்தல் என்ற பொருளில் வரும் தகரம்/தகரை வேறு தாவரம்.
இமயத்தில் விளைவது. சிந்துமக்கள் அணிந்த மயிர்ச்சாந்தம். சங்க இலக்கியத்தில்
இமயத்தில் இருந்து பகர்ச்சிவரும் அன்னம் (  bh goose, செங்கால் அன்னம் - graylag goose)
பற்றிப் பார்த்தோம். மணச்சாந்து தகரை/தகரமும் இமாலயத்தின் விளைபொருளே.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Aug 25, 2015, 1:01:24 AM8/25/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Saturday, August 22, 2015 at 1:39:01 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
>தகரத் தண்ணிழல் 

ஒரு மரம் என புலனாகிறது

தகரை (< தகடு. தகடு போன்ற இலை, பூ. தகடு ஆகத் தட்டி காசுகள் வெளியிட
tin தென்கிழக்கு ஆசியாவில் இருந்து சங்க காலத்தில் இறக்குமதி ஆனது.
அதனால் தான் தகடு > தகரம்.) செடிகளும் உண்டு, மரங்களும் உண்டு,

எல்லாம் cassia தாவரக் குடும்பம்.
 

22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 3:30 பிற்பகல் அன்று, நா. கணேசன் <naa.g...@gmail.com> எழுதியது:
On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:
தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!


மரம்

தகரத் தண்ணிழல் என்ன மரம் என்று பார்ப்போம்.

கிரந்தித் தகரை என்னும் செடியையும் பார்ப்போம்.

நா. கணேசன்
 
 
-- 

N. Ganesan

unread,
Aug 25, 2015, 1:25:57 AM8/25/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com


On Sunday, August 23, 2015 at 12:16:06 AM UTC-7, selvi...@gmail.com wrote:


தகரத் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர்       வெண்மைநிறம்
          

இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.

த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.

நா. கணேசன்

 

N D Logasundaram

unread,
Aug 25, 2015, 3:58:06 AM8/25/15
to வல்லமை
தவறு
தகரம் பண்பு 
தகரம் போன்ற வெண்மை நிறமான தந்தம் 
இங்கு தந்தம் என்பது நிறம் வழி ஆகு பெயராக பெண்களின் தனத்தைக்குறித்தது 

நூ த லோ சு 
மயிலை 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 25, 2015, 10:01:07 AM8/25/15
to வல்லமை, mintamil


On Sunday, August 23, 2015 at 12:16:06 AM UTC-7, selvi...@gmail.com wrote:


தகரத் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர்       வெண்மைநிறம்
          

இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.

த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.

நா. கணேசன்

 

On Tuesday, August 25, 2015 at 12:58:06 AM UTC-7, N D Logasundaram wrote:
தவறு
தகரம் பண்பு 
தகரம் போன்ற வெண்மை நிறமான தந்தம் 
இங்கு தந்தம் என்பது நிறம் வழி ஆகு பெயராக பெண்களின் தனத்தைக்குறித்தது 

நான் கூறியதில் தவறு இல்லை ஐயா. முழுத் திருப்புகழும் படித்துப்
பாருங்கள். இங்கே ”தகரம் போன்ற வெண்மை நிறமான தந்தம்”  என்ற பொருளில்லை.

இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.

த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.

நா. கணேசன்

நூ த லோ சு 
மயிலை 

N. Ganesan

unread,
Aug 25, 2015, 3:25:53 PM8/25/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
தகரம் என்பதை தகரம் (< தகடு) என்று இலை அல்லது பூக்கள் தகடு போல உள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.
தகரம் என்னும் எல்லா மரங்களும் இதற்குப் பொருந்துபவை. சிறுதகரை எனப்படும் Cassia Tora அதன் தகடு போன்ற இலையால்
பெயர்பெறுபவை. சிறுதகரையை தகரப்புன்னை என்கிறது தேவாரம். ப்ரபுன்னாடம் என சம்ஸ்கிருதத்தில் தமிழ்ப்பெயர் வருகிறது.
Cassia மரம் என்றாலும், செடி என்றாலும் மஞ்சள் நிறத்தில் பூக்கும். சோழ/சோட-மண்டலம் சோரமண்டல் = Coramandel என அழிப்பது
-ட்- > -ர்- ஆவதாற்றான். காடுவெட்டி (பல்லவர் நகர்) > காருவெட்டி/கார்வெட்டி என இன்று ஆந்திராவில். இங்கே தகரம் என்னும் சொல் தகடு என்னும் சொல்லிலிருந்து வரும். இதன் இலைகள் தகடு போல் இருப்பதால். -ட்- > -ர்- மாற்றம் இந்திய மொழிகளிலே மிகுதி:
சோழ/சோட > சோர என்று எழுதுவதும் உண்டு. பல்லவர்கள் ஆந்திராவில் இருந்தபோது
அவர்களின் ஆதி ஊர்களில் ஒன்று: காடுவெட்டி (பல்லவன் குலப்பெயர்) இது கார்வெட்டி இப்போது.
நாள்-/நாட்- = கறுப்பு. நாளணன்/நாளப்பன் எல்லாம் தமிழில் உண்டு. கருப்பராயசாமி எனும் விஷ்ணு.
நாளணன்/நாடணன் > நாரணன் என்பர் 100க் கணக்கான இடங்களில் ஆழ்வார்கள். 
கோடு = கொம்பு. ஆமான் கொம்பு விருப்பமுடன் அணிபவள் கொற்றவை.
எனவே, கோடி என்ற அவள் பெயர் கௌரீ. ரிக்வேதத்தில் கௌரீ என்றால் ஆமா/ஆமான்.
ஆமான் என்பது சங்கப்பெயர். கௌரீ என வடமொழியில் சொல்லப்படும் இந்தியன் பைஸன்:
(கௌட- கௌர-) இதன் கோடணிபவள் கொற்றி. நாடணன் > நாரணன் ஆவதுபோல்.
தகடம்  > தகரம். இங்கே.
தகடு போன்ற இலைகொண்டது இந்த தகரச் செடி. ஆனால் இதைத் தலையில்
தேய்த்து அரைக்கமுடியாது, நாத்தமடிக்கும். எனவே அவ்வாறு, சிந்து மக்களோ,
சங்கத் தமிழ்ப் பெண்களோ மயிர்ச்சாந்தாகக் கொண்டிலார். 
இதன் வாசம் துர்நாற்றம் ஆகும். ஆங்கிலத்தில் இதன் பெயர்: Stinking cassia!

---------------------

ஆனால், மயிர்ச்சாந்து ஆகப் பயன்படும் இமையத் தாவரம் ஒரு சிறுசெடி. இந்தத் தகரை/தகரம் செந்நிறமாகப் பூப்பவை என்று சங்க இலக்கியம்
பேசுகிறது. தேவாரமும் இமயமலைத்தாவரம் என்கிறது. இங்கே, தகரை/தகரம் < தகர்த்தல் என்னும் வினைச்சொல்லைத் தாதுவேராகக்
கொண்டது என இழையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? 

தகரம் என்னும் சொல்லின் வேர்கள் (1) தகடு (2) தகர்த்தல் இருபாலாக இருப்பதுபோலவே,
கதலி என்ற சொல்லுக்கும் இருபாலான வேர்கள் இருப்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
தெலுங்கில் கடலி என்றால் கடல். கடம்பு > கதம்பு ஆவது போல, கடலி > கதலி
என சிறுவாழைப்பழத்தைக் குறிக்கும். ’கதலீபல நானாவித பரிமள கந்த புஷ்பம் சர்ப்பயாமி’
என அர்ச்சகர் சொல்வார் தீபாராதனையின்போது. கோவிலில் கேட்கலாம்.
ஆனால், மகாபாரதத்தில் கதலி என்றால் மான் என வருகிறது. இதனை, பாரதியார்
தம் பாஞ்சாலிசபதத்தில் ஆள்கிறார். கதழி “விரைவுடைய மா” > கதலி என ஆகிஅது இங்கே.
பழம் > பலம் என்று சம்ஸ்கிருதத்தில் ஆகிறது, அதேபோல், கதழி > கதலி.
பென்சில்வேனியா பல்கலை தமிழ்மொழியியல் பேரா. வாசு ரெங்கநாதன் அவர்கள் எழுதிய
மடலுக்கும் யானிட்ட மறுமொழி:

On Mon, Aug 24, 2015 at 9:07 PM, Vasu Renganathan <vasuren...@gmail.com> wrote:
Dear Ganesan,

You are really amazing!  You have so much in your repertoire about Tamil language and culture that not many of us have. 

Your information about vEmpattUr vs. vEppattUr is intriguing.  However, your other examples need to be pondered over further to assert whether or not they belong to this group.  As you know, some of us were on offline discussion about it and came up with so many intriguing stories about this NPP > NP vs. PP theory.


Can you send me offline NPP > NP vs. PP theory? Recently wrote about the vEppEri church,
Apparently, one of the oldest photos of Chennai, done in the first decade of the invention of photography,

vEppEri = vEmpu/vEppu + Eri. In Tamil Nadu, there is both vEmpUr as well as vEppUr (just like
there is vEmpattUr & vEppattUr).

On prof. Hart's question of KaDambu (Tam.) vs. kadambu (Sanskrit) flower name (also, a royal house's totem tree),we have to look at the interesting word, கதலி (kadali) & its history. I have written some points before. kaDal is "sea" in Tamil, and it is "kaDali". For example, 2013 film: https://en.wikipedia.org/wiki/Kadal_(2013_film) On the west coast there is a temple town, kadali in Mangalore. Apparently, kadali < kaDali "the sea". In the same town, kadri Manjunath is a famous temple. People all over India visit it, its administrator is a Jain. kadri is obviously a change from kadali (< kaDali). In the East Godavari district also, there is a kadali village
(which also lost its -D- into a -d-). 

Obviously, since bananas were cultivated from South East Asia, kadali "a small banana" has its source word, kaDal "sea". "kadalii phala" in Sanskrit = kaDali pazham of Tamil.

Interestingly, Bharatiyar uses kadali as a kind of deer. He himself has written as கதலி = ஒரு வகை மான். Hariki, years ago wrote about this special use of kadali "a deer" in Bharati's poetry. 
University of Cologne Monier Williams Sanskrit-English Dictionary
(H1B) कदली [L=42878]         f. the plantain tree
(H1B) कदली [L=42879]         f. **a kind of deer** (the hide of which is used as a seat) MBh. Sus3r.

 "அருஞ்சொற்பொருள் தருவதில் ஏற்பட்ட சிக்கல். ‘கதலி’ என்றொரு சொல் பாஞ்சாலி சபதத்தில் இடம்பெற்றுள்ளது. வாழைப்பழம், காற்றாடி போன்ற பொருள்கள் அங்கே பொருந்திவரவில்லை. பல அகராதிகள், நிகண்டுகள், அறிஞர்கள் பலர் என்று தேடி அலைந்தும் பலன் இல்லை. பாரதியே ‘கதலி’ என்பது ஒருவகை மான் என்று பொருள் குறித்துவைத்திருப்பது அறிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. " 

would love to know where does Bharati note this MBh epic word, kadali as a deer. It is interesting that this MBh epic word, kadali is a modification of kadazhi from Dravidian, katazh = speed. just like maa/maan denotes speed for deer originally, and later when horses were introduced by pre-Rgvedic Aryans (whom Parpola calls as Daasyu Aryans) around 1700 BCE possibly from BMAC, Dravidians call the horses as maa. These pre-RV Aryans co-opted with Dravidians and were worshipping "MazhuvaaL NediyOn" (= Anthropomorphic Axe) in North India, and later as huge monumental sculptures in Tamil Nadu around 800 BC (Mottur, Udayarnattam, Sittannavasal, ...) katazh "speed" > katazhi "deer" changes to kadali in MBh, just pazham "ripened fruit" into phala in Sanskrit.

N. Ganesan



Apparently, the west uses PP and the east uses NP for no clear reason.  There have been lots of examples and we enjoyed going over those pairs in our discussion. 

kompu vs. koppu is one such pair. vEmpu vs. vEppu is yet another pair that you have just told us about. 

Regards,
Vasu

P.S. In the context of appellative forms, one should also consider why in modern Tamil we have compound forms like palporu angkaai 'Consumers' market for common commodities', nalvaaḻttukaḷ 'graceful greetings' and so on. I am sure there can be many of these types.  Apparently, these are coined words and we don't know how these appellative roots were picked up by whoever coined them. Also, I enjoyed reading the Kṛṣ-ṇā story narrated by Mr. Radhakrishna Warrier, but not sure ifKṛṣ can be considered as an appellative form though! Tamil is unique in this sense!

On Mon, Aug 24, 2015 at 3:08 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Sat, Aug 15, 2015 at 1:39 AM, Jean-Luc Chevillard <jean-luc.chevillard@univ-paris-diderot.fr> wrote:
Dear Rob,

the language used in poetry must originally have had its root in a spoken language, but there was certainly dialectal variation.

If you read the commentary by Iḷampūraṇar to TE415i (see below),
you see that people had the choice between two possibilities, when combining /kuraṅku/ "monkey" and /kāl/ "leg"

They could say either /kuraṅkiṉkāl/ or /kurakkukkāl/.

Those two forms probably belonged originally to two distinc dialects



I saw recently a Tamil inscription on the grave of a Christian Paravar lady
dated to 1603 CE. The place is vEmpARu in the South. But there is also
vEppattUr and vEmpattUr in Tanjore district. I think cilampu and cilappu may
both be present (Cf. cilampu/cilappu < cilai- in CT, so, cilaimpu/cilaippu seems to
be the original) and the Tirumantiram author chooses cilaippu for anklet
since the etukai matches well with the other 3 lines of the verse.
Recently, there is some nice discussion on etukai in Dravidian, see:
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/2015-August/041915.html

Other variations of the same word among different dialects can be considered.
For example, for egrets, herons etc., kokku is Tamil, where as kaGka is in IA in general.
While we can understand the reason for koGka > kaGka since the short o
is absent in IA, kokku & koGku denoting "herons" seem to be present in different
Dravidian dialects, in south and north. Similarly, often p- of Tamil is
b- in Telugu, e.g., palli (Tam.) & balli (Tel.) ultimately from the verb, pullu-
"to embrace, hanging .." for the wall lizard. Another word, is poli/pali in Tamil
is bali in Sanskrit, Telugu etc., just like koGka > kaGka. The flower sacred to Murukan is kaTampu,
this word loses the cerebral consonant -D- to a -d-, hence kadamba flower
the totem symbol of West Coast kings of Goa etc., "kadamba" kings (mentioned
in Sangam texts also).
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/2008-August/032064.html

These variations must be considered in constructing Proto-Drav.(PD) words,
for example, if one looks at the kaDambu flower it shows clearly why the
retroflex -D- is integral part when PD folks named the flower.

N. Ganesan

 

N. Ganesan

unread,
Aug 25, 2015, 9:34:22 PM8/25/15
to மின்தமிழ், vallamai


On Saturday, August 22, 2015 at 10:57:48 PM UTC-7, தேமொழி wrote:


On Saturday, August 22, 2015 at 10:43:23 PM UTC-7, N. Ganesan wrote:


On Saturday, August 22, 2015 at 10:32:05 PM UTC-7, தேமொழி wrote:
தேவதாருவாக இருக்குமோ!!!

இல்லை. தகரம் ஒரு செடி.

நல்ல தகர விறகால் ஆக்கிய செந்தீயில்  என்ற பொருள் கொடுத்துள்ளீர்களே...செடியை விறகு என்று சொல்ல மாட்டோமே  

 நச்சினார்க்கினியர் முளரி என்றால் விறகு என்று பொருள் கொடுக்கிறார்.
தகரம் தாமரை, செவ்வாம்பல், அலரி போன்ற செந்நிறம். (இமயத்) தகரைக்குச் செந்துத்தீ என்ற பெயரே உள்ளது.

நெடுநல்வாடை:
    தண் நறு தகரம் முளரி நெருப்பு அமைத்து இரு காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப -
      நச்சினார்க்கினியர்: 

தண் நறு தகரம் முளரி நெருப்பு அமைத்து இரு காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப - தண்ணிய நறிய மயிர்ச்சந்தனமாகிய விறகிலே நெருப்பை யுண்டாக்கி அதிலே கரிதாகிய வயிரத்தையுடைய அகிலோடே வெள்ளிய 8கண்ட சருக்கரையையுங் கூட்டிப் புகைப்ப,

57 - 8. கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த செங்கேழ் வட்டம் சுருக்கி - கையாற் புனைதல்வல்ல உருக்குத்துகின்றவனாலே அழகு பெறப் பண்ணின சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம் உறையிடப்பட்டு,


அடுத்த அடியிலே கம்மாளனின் உலை சொல்லப்பெறுவதனால், தகரச் செடியின் பூவை அந்த ஆசாரியின் உலையில் உள்ள தீயினுக்கு
ஒப்பிட்டுச் சொல்கிறார். முளரி என்றால் தாமரை, விறகு என்ற இருபொருளும் இருக்கின்றன. அதனால் உரை அவ்வாறு எழுதினார்.

தகரத்தின் நிறம் முளரி (தாமரை, ஆம்பல் நீலோற்பலம் )
நெடுநல்வாடை:
    தண் நறு தகரம் முளரி நெருப்பு அமைத்து இரு காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப -
இதனைச் சில நூற்றாண்டு சென்றபின் சீவசிந்தாமணியும் சொல்கிறது:

திருந்து தகரச் செந்நெருப்பிற்
  றேன்றோய்த் தமிர்தங் கொளவுயிர்க்குங்
கருங்கா ழகிலி னறும்புகையிற்
  கழுமிக் கோதை கண்படுக்குந்
திருந்து நானக் குழல்புலம்பத்
  தேனும் வண்டு மிசைப்புலம்ப
வரும்பொன் மாலை யலங்கலோ
  டாரம் புலம்ப வகற்றினாள்.

   (இ - ள்.) திருந்து தகரச் செந்நெருப்பில் தேன்தோய்த்து அமிர்தம்கொள உயிர்க்கும் கருங்காழ் அகிலின் நறும்புகையில் கழுமி - நல்ல தகர விறகால் ஆக்கிய செந்தீயில் தேனில் தோய்ப்பதால் இனிய மணம்கமழும் கரிய அகிற்கட்டையால் எழுந்த இனிய புகையில் மயங்கி; கோதை கண்படுக்கும் திருந்து நானக்குழல் புலம்ப - மலர்மாலை துயிலும் நல்ல புழுகுகலந்த கூந்தல் வருந்துமாறும்; தேனும் வண்டும் மிசைப் புலம்ப - தேனினமும் வண்டினமும் மலரின்மையின் இசைக்கு வருந்தவும்; அரும் பொன்மாலை அலங்கலோடு ஆரம்புலம்ப - அரிய பொன்அரி மாலையும் நெற்றி மாலையும் தலைக்கோலமாகிய முத்துமாலையும் வருந்த (இவற்றைக் குழலிலிருந்து) நீக்கினாள்.

சிந்தாமணியில் தேவர் நெடுநல்வாடையைப் பின்பற்றுகிறார். நச்சர் உரையும் தொடர்கிறது.

 

அத்துடன் 

தகரை என்பதுதான் தகரம் இல்லை என்பது உறுதியாகத் தெரியுமா?
Botanical Name: Cassia Tora


ஆம். தகடு போன்ற இலையால் இதுவும் தகரை/தகரம் தான். சிறுதகரை. 
இது நாத்தமடிக்கும் Stinking cassia. மேலே சொன்ன மயிர்ச்சாந்தம் ஆகிய
இமாலய விளைபொருள் அன்று.
 
கிரந்தி தகரம் என்ற மற்றொரு மூலிகையும் உள்ளதே 


தகரை இமய விளைபொருள். கிடைக்காதபோது ஆயுர்வேத மருந்தில்
சில ஸப்ஸ்டிட்யூஸ் உண்டு. கிரந்தி தகரை என்ன தாவரம் எனப் பார்ப்போம்.
அவையும் முற்றிலும் அழியும் தறுவாயில் உள்ளன.

சங்க இலக்கியத்தில், வடமொழி இலக்கியத்தில், கலை ஓவியம் சிற்பங்களில்
அன்னம்/ஹம்சம் என்பது BH or GL geese தான். இதைப் பற்றி ஒரு பேப்பர்
16th WSC-ல் இருந்தது. ஆனால், 19-ஆம் நூற்றாண்டில் இமயமலைக்கு வடக்கே
வாழும், இமயம் தாண்டாத ஸ்வான் ஓவியங்கள் ஆகின்றன. சங்ககால
அன்னத்திற்கு ஸ்வான் ஸப்ஸ்டிட்யூட். அதுபோல், தகரைக்கு ஸப்ஸ்டிட்யூட்
கிரந்தி தகரை. 

நா. கணேசன்
 
..... தேமொழி 

 

தசாங்கம் வாசனைப்பொடியில் உள்ளவை:
Sambrani, Karagil, Sandal, white Kungiliyam, Kukil, Goraikishangu, Vilamichai-root, Jaggary Dhevadharu and mattipal. All these ten are known as dasgngarn

N D Logasundaram

unread,
Aug 26, 2015, 2:28:22 AM8/26/15
to வல்லமை, thamizayam, தமிழ் மன்றம், mintamil, Banukumar Rajendran, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A

 நூ த லோ சு வைத்தது 
தகர த் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர்       வெண்மைநிறம் 
 ------------------
நாசா கணெசனார் வைத்தது 
இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.

த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.
==========
முதலில் என்னுடைய மடலில் தகரம் ஒரு தாவரம் எனக் குறிக்கவில்லை என்பதை
கண்ணை நன்றாக திறந்து மனப்போக்கினை முன்சார்நிலை அல்லாது நோக்குக
நான் காட்டியது வெண்மை நிறம் மட்டுமே அது ஓர் பண்பு 

(1)
என் முதல் மடலில் பல நிகண்டுகளிலிருந்து தகரம் எனும் சொல்லிற்கு காட்டியதில் ஈயம் எனும் பொருள் உள்ளது
அதன் வழி வெண் மை நிறம் ஆகும் என வைத்துள்ளேன் அவ்வளவே 
(2)
தாவரம் என் நீங்கள் கொண்டதுதான் தவறு
(3)
அது உங்கள் மனப்போக்கு உங்களுக்கே தெரிந்த வழியில் பெருள் காண் நிலை

(4)
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.
த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.

என்பதெல்லாம் நாசா கணேசனார் மனதில் மட்டும் வந்துள்ள கருத்து
அது என்ன நான் கேட்க பின் அவர் தன பின் இழுத்து செல்ல நினைக்கும் கள்ளத்தனம் 

மேலும் இது அவர் எப்போதும் கையாளும்  தெனாலி ராமனின்

          "திலகாஷ்ட மகிஷ பந்தனம்"

எனும் கதையில் வரும் வாதக் கருத்து 

அதாவது 
அவரிடம் உள்ள குப்பைகளை (சேகரம் = பண்டாரம் )எல்லாம் கொட்டி குழப்பங்களை விளைவித்து 
மாற்றரை அறிவிலி எனக்காட்டும் வடநாட்டு வித்யாதீதர்கள்  கைக்கொள்ளும் புறம் தள்ள வேண்டிய கருத்து 

மேலும் 
(5)
ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் உண்டு எனும் குறையுடை நினைப்பினில்  வந்தநிலைப்பாடு 
(6)
எதிர நிலைக் கொள்ளும் போதும் காட்டப்பட்டதற்கு (தகரம் வெண்மை நிறமல்ல எனும்)
எதிர்நிலை சான்று தன காட்டப்படவேண்டும் அல்லாது புதிதாக அப்படி ஒன்று இருந்தால் அதனைப்பற்றி 
அவர்தனக்கு மட்டுமே விளங்கும் தரவு களைக்காட்ட நினைப்பது அதற்கு விளம்பரம் தேடும் நிலைதான்
ஆகுமே அன்றி மறுக்கும் சான்றாகாது   

வேறு 

தகரம் எனும் சொல்லிற்கு பலபொ ருள்கோள் நிலையில் கையாளப்பட்து குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது என்பதுதான்
துண்டாடும் முன் இழையின் முதலில் உயர்திரு இராம்கி அவர்கள் வைத்த கருத்து அதற்கு அதற்குத்தான் 
நான் என் அளவில் கிட்டியதை வைத்து பலபொருள்கள் இருப்பதை கா ட்டினேன் ஆக தகரம் எனும் சொல்லிற்கு
இடம்  சார்ந்து பொருள் கொள்ள வேண்டும்

அன்புடன் 
நூ த லோ சு  
மயிலை 
 




நூ த லோ சு 
மயிலை 

N. Ganesan

unread,
Aug 26, 2015, 8:00:52 AM8/26/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, thami...@googlegroups.com, minT...@googlegroups.com


On Tuesday, August 25, 2015 at 11:28:24 PM UTC-7, selvi...@gmail.com wrote:

 நூ த லோ சு வைத்தது 
தகர த் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர்       வெண்மைநிறம் 
 ------------------
நாசா கணெசனார் வைத்தது 
இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.

த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.
==========
முதலில் என்னுடைய மடலில் தகரம் ஒரு தாவரம் எனக் குறிக்கவில்லை என்பதை
கண்ணை நன்றாக திறந்து மனப்போக்கினை முன்சார்நிலை அல்லாது நோக்குக
நான் காட்டியது வெண்மை நிறம் மட்டுமே அது ஓர் பண்பு 


நீங்கள் கொடுத்துள்ளவை தகரம் என்னும் தாவரம் பற்றியன.
ஆனால், இத் திருப்புகழில் தாவரம் பற்றியதல்ல.
தந்தம் என்ற சொல்லோ, அதனால் நீங்கள் சொல்லும் 
தந்தத்திற்குரிய வெண்மைநிறமோ இல்லை.

முழுத் திருப்புகழும் படித்தால், தந்தம் வெண்மை என்ற பொருள்கள் இல்லை
என்பதை உணரலாம். தனியிழையில் இந்தத் திருப்புகழ்
பொருளை பார்ப்போம்.

N. Ganesan

unread,
Aug 27, 2015, 12:45:52 AM8/27/15
to மின்தமிழ், thami...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Saturday, August 22, 2015 at 1:39:01 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
>தகரத் தண்ணிழல் 

ஒரு மரம் என புலனாகிறது


சிறிய செடியாக இருக்கும் தகரை சிறுதகரை (சென்னைப் பேரகராதி) Foetid Cassia (=Cassia Tora, https://en.wikipedia.org/wiki/Cassia_tora), இதனை
எஸ். சௌந்தரபாண்டியன் குறிப்பிட்டதை தேமொழி தந்தார். இதற்கு புன்னிடா/புன்னாடம் என்ற பெயர்கள் உண்டு. புன்மை ‘barren land' நிலத்திலும் (புன்னாடு) வளரும்.

மரமாகவும் சில தகரை/தகரம் உண்டு. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட தகர மரம் இது. தென்னாசியா,
தென்கிழக்கு ஆசியா எல்லா நாடுகளிலும் இந்த தகரை/தகர மரம் நன்கு வளர்கிறது. “தகரத் தண்ணிழல்” (புறம்),
”அகரு வழை ஞெமை ஆரம் இனைய  தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி” (பரிபாடல்) என்பது இம்மரமாக இருக்கும். 
தகரை/தகர மரம்: (Cassia குடும்பம். சிறுதகரையின் உறவு).

Synonyms: Cassia surattensis = Glaucous%20Cassia
  • Senna sulfurea (as C. arborescens VahlC. enneaphyllaC. glauca Lam.C. petropolitanaC. sulfureaC. surattensis auct. non Burm.f.C. surattensis Burm. f. ssp.glauca (Lam.) K.Larsen & S.S.Larsen)
  • Senna surattensis (as C. fastigiata VahlC. galucaC. suffruiticosaC. suffruticosaC. surattensis Burm. f.)



தண்ணிழல் தரும் தகர மரம்:
தட்டையான, நீண்ட தகடு போல உள்ள காய்கள், தகடு போன்ற இலை: எனவே,
தகரை என அழைக்கலாயினர். சக்கரமர்தம் என்பது ringworm-ஐக் கொல்லுவதால்.
சுஸ்ருத சம்ஹிதை ப்ரபுன்னாடம்/ப்ரபுன்னிடா என்கிறது. தேவாரத்தின்
தகரப்புன்னை என்னும் மரம் இதுவாக இருக்கக்கூடும். புன்னிலத்தில் வளரும் தகரைமரம்.



தகரை/தகர மரம் - படங்கள்:


-----------------------------------------------------------

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் 18-ஆம் நூற்றாண்டு வாக்கில் இன்னொரு தகரை/தகர மரம் மத்ய அமெரிக்காவிலிருந்து
இறக்குமதி ஆனது. சீமை என்ற பெயர் முன்னொட்டு அதனால் ஆகும். மலையாளத்தில் எப்பொழுதும் இருந்த
தகரை என்னும் பெயரை இதற்கு வைத்தனர்.

Large-leafletted Eglandular Senna

Fabaceae (pea, or legume family) » Senna alata

 

SEN-nuh -- Latin form of Arabic word for a thorny bush

a-LAY-tuh -- winged

 

commonly known as: candle bush, candlesticks, large-leafletted eglandular senna, ringworm shrub • Hindi: एड़गज ergaj, प्रपुन्नाड prapunnad • Kannada: ಸೀಮೆ ಅಗಸೆ sime agase • Malayalam: ആനത്തകര aanattakara, മലന്തകര malamtakara, ശീമ അഗത്തി seema agatti, പുഴുക്കാടിത്തകര puzhukkadittakara •Marathi: शिमई अगसे shimai agase • Sanskrit: एडगजः edagaja, प्रपुनाल prapunal, उरभ्रः urabhrh, उरणक्षकः uranakshaka • Tamil: சீமையகத்தி cimai-y-akatti, வண்டுகொல்லி vantu-kolli •Telugu: అవిచిచెట్టు avicicettu, మెట్టతామర metta-tamara, సీమ అవిసె siima avise, తంటెము tantemu • Urdu: ايڙگج ergaj

 

Native to: tropical South America (the Amazon rainforest); naturalised elsewhere in tropics

இதற்கும் ப்ரபுன்னாடம் என்ற பெயரை ஹிந்தியில் வைத்துள்ளமை காண்க. அடிப்படையில் தமிழ்ப் பெயர் இது.

ஆனைத்தகரை, மலந்தகரை, புழுக்கடித்தகரை என்கிறது மலையாளம். தமிழில் சீமையகத்தி (வெற்றிலைக் கொடி)

கொடிக்கால்காரர் வளர்த்தும் தோப்புகளில் பார்க்கலாம்.


நா. கணேசன்



N. Ganesan

unread,
Aug 27, 2015, 1:54:54 AM8/27/15
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
இமயமலையில் தகரம் என்னும் மணப்பொருள் விளைவது. அதனால்,
இமையத்தை வில்லாக வளைக்கும் சிவபிரான் என்ன்னும்போது
“தகரம் அணி அருவித் தடமால் வரை சிலையா”  என்கிறது தேவாரம்.
தகரத் தாவரங்கள் அணித்தே இருக்கும் அருவி எனலுமாம்.

தகர மணியருவித் தடமால் வரைசிலையா

நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை யணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொ-ரை: தகரம் எனப்படும் மணப் பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாகவளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடி படச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினை மாசுகளினின்று நீங்கப் பெறுவர்.

கு-ரை: தகரம் அணியருவி - தகர மரத்தை அணிந்த அருவி என்றுமாம். நகரம் ஒரு மூன்று - முப்புரம். அகரமுதலானை என்பது ‘அகரமுதல எழுத்தெல்லாம்’ என்ற குறட்கருத்து.

N. Ganesan

unread,
Aug 27, 2015, 11:04:18 AM8/27/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com


On Thursday, August 27, 2015 at 1:10:56 AM UTC-7, தேமொழி wrote:

ஆனால் நறுமணம் கொண்ட சிவப்புமலர் என்று நீங்கள் குறிப்பிட்ட நினைவு??? 

ஆமாம். இமையம் தரும் விளைபொருள் தகரை/தகரம் என்னும் மணப்பொருள் சிவப்பு மலர் கொண்டது:
அது Cassia குடும்பம் அன்று. முற்றிலும் வேறான குடும்பம். அது என்ன?
எவ்வாறு சிந்து சமவெளியில் கிடைக்கிறது? சங்க இலக்கியத்திலிருந்து 17-ஆம் நூற்றாண்டுவரை
தமிழ் இலக்கியத்தில் இந்த மயிர்ச்சாந்து பற்றிப் பிறகு எழுதுகிறேன்.
 

அப்படியானால் Cassia renigera  இருக்கவும் வாய்ப்புண்டு 



இந்த தகரம் இந்தியாவில் இருக்கிறதா என தெரியவில்லை. பார்க்கணும்.
ஆனால், இவை நாத்தமடிக்கும் cassia வகைகள். மணப்பொருள் அல்ல.
இவற்றின் பெயரை தகரை/தகரம் < தகடு என்ற சொல்லோடு சொற்பிறப்பு
ஆகப் பார்க்கவேண்டும்.

தகரம் என்பதை தகரம் (< தகடு) என்று இலை அல்லது பூக்கள் தகடு போல உள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.
தகரம் என்னும் எல்லா மரங்களும் இதற்குப் பொருந்துபவை. சிறுதகரை எனப்படும் Cassia Tora அதன் தகடு போன்ற இலையால்
பெயர்பெறுபவை. சிறுதகரையை தகரப்புன்னை என்கிறது தேவாரம். ப்ரபுன்னாடம் என சம்ஸ்கிருதத்தில் தமிழ்ப்பெயர் வருகிறது.
Cassia மரம் என்றாலும், செடி என்றாலும் மஞ்சள் நிறத்தில் பூக்கும். சோழ/சோட-மண்டலம் சோரமண்டல் = Coramandel என அழிப்பது
-ட்- > -ர்- ஆவதாற்றான். காடுவெட்டி (பல்லவர் நகர்) > காருவெட்டி/கார்வெட்டி என இன்று ஆந்திராவில். இங்கே தகரம் என்னும் சொல் தகடு என்னும் சொல்லிலிருந்து வரும். இதன் இலைகள் தகடு போல் இருப்பதால். -ட்- > -ர்- மாற்றம் இந்திய மொழிகளிலே மிகுதி:
சோழ/சோட > சோர என்று எழுதுவதும் உண்டு. பல்லவர்கள் ஆந்திராவில் இருந்தபோது
அவர்களின் ஆதி ஊர்களில் ஒன்று: காடுவெட்டி (பல்லவன் குலப்பெயர்) இது கார்வெட்டி இப்போது.
நாள்-/நாட்- = கறுப்பு. நாளணன்/நாளப்பன் எல்லாம் தமிழில் உண்டு. கருப்பராயசாமி எனும் விஷ்ணு.
நாளணன்/நாடணன் > நாரணன் என்பர் 100க் கணக்கான இடங்களில் ஆழ்வார்கள். 
கோடு = கொம்பு. ஆமான் கொம்பு விருப்பமுடன் அணிபவள் கொற்றவை.
எனவே, கோடி என்ற அவள் பெயர் கௌரீ. ரிக்வேதத்தில் கௌரீ என்றால் ஆமா/ஆமான்.
ஆமான் என்பது சங்கப்பெயர். கௌரீ என வடமொழியில் சொல்லப்படும் இந்தியன் பைஸன்:
(கௌட- கௌர-) இதன் கோடணிபவள் கொற்றி. நாடணன் > நாரணன் ஆவதுபோல்.
தகடம்  > தகரம். இங்கே.
தகடு போன்ற இலைகொண்டது இந்த தகரச் செடி. ஆனால் இதைத் தலையில்
தேய்த்து அரைக்கமுடியாது, நாத்தமடிக்கும். எனவே அவ்வாறு, சிந்து மக்களோ,
சங்கத் தமிழ்ப் பெண்களோ மயிர்ச்சாந்தாகக் கொண்டிலார். 
இதன் வாசம் துர்நாற்றம் ஆகும். ஆங்கிலத்தில் இதன் பெயர்: Stinking cassia!

-------------------------------

மணப்பொருள் தகரை/தகரம் தகர்த்தல் = இடித்துப் பொடிசெய்தல்,
இமையத் தாவரம் இதன் வேரை இடித்துப் பொடி செய்து மணப்பொருளாகப்
பயன்படுத்தியதால் தகரை/தகரம் என்ற பெயர். இதற்கும் cassia
குடும்ப நாத்தமடிக்கும் செடி/மரங்களுக்கும் பொருள் வேறு.

தகர்த்தல் = இடித்தல், பொடித்தல் (நிகண்டுகள், சென்னை அகராதி).
ஆட்டுக் கிடாய்கள் ஒன்றையொன்று மோதும். வரையாடு ஆகட்டும் 
(In English also, same reason: ram is so called because they are ramming against each other.

Used as a word (not as an initialism)[edit]

Animals[edit]

Military[edit]

Battering ram, a heavy tool used to batter open walls or gates

  • Ramming, a tactic in which a vessel or vehicle runs into another

தகர் விரவு துருவை (மலைபடுகடாம் 414)



---------------------

ஆனால், மயிர்ச்சாந்து ஆகப் பயன்படும் இமையத் தாவரம் ஒரு சிறுசெடி. இந்தத் தகரை/தகரம் செந்நிறமாகப் பூப்பவை என்று சங்க இலக்கியம்
பேசுகிறது. தேவாரமும் இமயமலைத்தாவரம் என்கிறது. இங்கே, தகரை/தகரம் < தகர்த்தல் என்னும் வினைச்சொல்லைத் தாதுவேராகக்
கொண்டது என இழையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? 

தகரம் என்னும் சொல்லின் வேர்கள் (1) தகடு (2) தகர்த்தல் இருபாலாக இருப்பதுபோலவே,
கதலி என்ற சொல்லுக்கும் இருபாலான வேர்கள் இருப்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
தெலுங்கில் கடலி என்றால் கடல். கடம்பு > கதம்பு ஆவது போல, கடலி > கதலி
என சிறுவாழைப்பழத்தைக் குறிக்கும். ’கதலீபல நானாவித பரிமள கந்த புஷ்பம் சர்ப்பயாமி’
என அர்ச்சகர் சொல்வார் தீபாராதனையின்போது. கோவிலில் கேட்கலாம்.
ஆனால், மகாபாரதத்தில் கதலி என்றால் மான் என வருகிறது. இதனை, பாரதியார்
தம் பாஞ்சாலிசபதத்தில் ஆள்கிறார். கதழி “விரைவுடைய மா” > கதலி என ஆகிஅது இங்கே.
பழம் > பலம் என்று சம்ஸ்கிருதத்தில் ஆகிறது, அதேபோல், கதழி > கதலி.
பென்சில்வேனியா பல்கலை தமிழ்மொழியியல் பேரா. வாசு ரெங்கநாதன் அவர்கள் எழுதிய
மடலுக்கும் யானிட்ட மறுமொழி:

 

DEV RAJ

unread,
Aug 27, 2015, 12:45:13 PM8/27/15
to வல்லமை

On Thursday, 27 August 2015 10:15:52 UTC+5:30, N. Ganesan wrote:
சிறிய செடியாக இருக்கும் தகரை சிறுதகரை (சென்னைப் பேரகராதி) Foetid Cassia (=Cassia Tora, https://en.wikipedia.org/wiki/Cassia_tora), இதனை
எஸ். சௌந்தரபாண்டியன் குறிப்பிட்டதை தேமொழி தந்தார். இதற்கு புன்னிடா/புன்னாடம் என்ற பெயர்கள் உண்டு. புன்மை ‘barren land' நிலத்திலும் (புன்னாடு) வளரும்.

மரமாகவும் சில தகரை/தகரம் உண்டு. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட தகர மரம் இது. தென்னாசியா,
தென்கிழக்கு ஆசியா எல்லா நாடுகளிலும் இந்த தகரை/தகர மரம் நன்கு வளர்கிறது. “தகரத் தண்ணிழல்” (புறம்),
”அகரு வழை ஞெமை ஆரம் இனைய  தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி” (பரிபாடல்) என்பது இம்மரமாக இருக்கும். 
தகரை/தகர மரம்: (Cassia குடும்பம். சிறுதகரையின் உறவு).


சக்கர தகர இருக்குது; வெளாட்டுக்கு சேத்துப்பீங்களா ?

சக்ரதகர  - ചക്രത്തകര [Senna obtusifolia]


Inline images 1


வட்டத்தகரய்க்காயி, த₃யவாயி வட்டத்தகர காணுக.

ஸெந்ந ஒப்₃ற்ற்யூஸிபோ₂லிய எந்ந ஶாஸ்த்ரநாமவும்ʼ ஓவல்ʼ லீப்₂ பீ₂ற்றிட்₃ காஸ்ஸிய எந்ந ஆங்க₃லேய நாமவுமுள்ள சக்ரத்தகர அமேரிக்க,ஏஷ்யஆப்₂ரிக்க பூ₄க₂ண்ட₃ங்ஙளில்ʼ வளருந்நு. மூர்ச்சயில்லாத்த எந்ந் அர்ʼத்த₂ம் வருந்ந லாற்றிந் வாக்காய ஒப்₃ற்றுஸ், இல எந்ந் அர்ʼத்த₂ம் வருந்ந போ₂லிய எந்நீ வாக்குகளில்ʼ நிந்நாண் இதிந்றெ ஶாஸ்த்ரநாமம்ʼ உத்ப₄விச்சத். ஆயுர்வேத₃த்திலும்ʼ சைநீஸ் சிகித்ஸயிலும்ʼ மலப₃ந்த₄த்திநும், நேத்ரரோக₃ங்ஙளிலும், த்வக்-ரோக₃ங்ஙளிலும் ப்ரதா₄நமாயும் உபயோகி₃ச்சு வருந்நு.

https://ml.wikipedia.org/wiki/%E0%B4%9A%E0%B4%95%E0%B5%8D%E0%B4%B0%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%95%E0%B4%B0

தேவ்




 

N. Ganesan

unread,
Aug 27, 2015, 11:45:17 PM8/27/15
to வல்லமை, மின்தமிழ்
On Thursday, August 27, 2015 at 9:45:13 AM UTC-7, DEV RAJ wrote:

On Thursday, 27 August 2015 10:15:52 UTC+5:30, N. Ganesan wrote:
சிறிய செடியாக இருக்கும் தகரை சிறுதகரை (சென்னைப் பேரகராதி) Foetid Cassia (=Cassia Tora, https://en.wikipedia.org/wiki/Cassia_tora), இதனை
எஸ். சௌந்தரபாண்டியன் குறிப்பிட்டதை தேமொழி தந்தார். இதற்கு புன்னிடா/புன்னாடம் என்ற பெயர்கள் உண்டு. புன்மை ‘barren land' நிலத்திலும் (புன்னாடு) வளரும்.

மரமாகவும் சில தகரை/தகரம் உண்டு. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட தகர மரம் இது. தென்னாசியா,
தென்கிழக்கு ஆசியா எல்லா நாடுகளிலும் இந்த தகரை/தகர மரம் நன்கு வளர்கிறது. “தகரத் தண்ணிழல்” (புறம்),
”அகரு வழை ஞெமை ஆரம் இனைய  தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி” (பரிபாடல்) என்பது இம்மரமாக இருக்கும். 
தகரை/தகர மரம்: (Cassia குடும்பம். சிறுதகரையின் உறவு).


சக்கர தகர இருக்குது; வெளாட்டுக்கு சேத்துப்பீங்களா ?

சக்ரதகர  - ചക്രത്തകര [Senna obtusifolia]

இதனைத் தானே முதன் முதலில் விரிவாகப் பேசினேன். தமிழில் சிறுதகரை என்கின்றன அகராதிகள். சிறுசெடியாக உள்ள தகரை:

இதற்கு ஏராளமான ஒருபொருட்பன்மொழி (synonyms) இருக்கின்றன.

Chinese Senna has been treated under a wide range of scientific names. Some are synonyms of Senna obtusifolia, others are names that have been applied to it in error. In addition, several of these names may also refer to related plants. In particular, the distinction between this species and Senna tora was fraught with errors and misunderstandings:[3]

  • Cassia humilis Collad.
Cassia humilis Steud. is a synonym of Chamaecrista kunthiana
Cassia numilis Collad. is apparently a misprint and refers to Senna tora
  • Cassia obtusifolia L.
  • Cassia tora auct. non L.
Cassia tora L. is a synonym of Senna tora
  • Cassia tora L. var. b Wight & Arn.
  • Cassia tora L. var. humilis (Collad.) Collad.
  • Cassia tora L. var. obtusifolia (L.) Haines
  • Cassia toroides Raf.
  • Cassia toroides Roxb.
  • Diallobus falcatus Raf.
  • Diallobus uniflorus Raf.
  • Senna toroides Roxb.
  • Senna obtusifolia - Jue ming zi in Chinese
இந்திய மொழிகளில் சிறுதகரையின் பெயர்கள்:
English (1)coffee cassia
Hindi (22)aelon, ailu, ailwan, cakunda, cakvat, chakavat, chakonda, chakonr, chakramarde, chakunda, chakundra, ckakond, pamaar, pamad, panevar, panvar, panwar, puadia, puaria, punwad, relu, talka
Kannada (40)cagace, chagache, chagate, chakramarda, chogache, chogata, cogace, cogate, gandha thagase, gandu thagache, gandu thagase, gandutagasi, gundutagace, gundutagache, holasangi, kasamardavu, pambadiar, sagate, sirudaggare, sonte, tagace, tagache, tagaci, tagarasi, tagarchi, tagarci, tagarisyana, tagati, tajank, tajanku, taragashee, taragasi, thaagarisyana gida, thagache, thagarchi, vanaavarikke, vanava-rike, vanavarika, vanavarike, vannaavarike
Malayalam (7)cakramardrakam, chakramandrakam, tagara, tagera, takara, takaram, thavara
Marathi (12)takala, takla, tankala, tankli, taranvata, tarota, taykilo, thaakala, thakla, thankli, tharanvata, tharota
Persian (3)sang saboyah, sangsaboyah, sangsboyah
Sanskrit (28)adagaja, ayudham, cakramarda, cakramardah, cakramardana, chakramarda, chakramardah, chakramardaka, dadamandan, dadamardana, dadamari, dadrughna, dan, edagaja, edagajah, kharjugna, prabhoonata, prabhunatha, prabunatha, prapunnada, prapunnata, prapunnatah, praputatri, praputrata, prishnaparni, sadagaja, saidagajah, taga
Tamil (92)appulantam, cakatamatti, cakkarakacam, cakkarapati, cakkarapaticceti, cakkiram1, cakkiramatattu, cakkirami, cakkiramicceti, cakkirapati, cakkirapattirakam, cakkumati, cancavaram, cankuputpam, cenavu#, cenavu@, cenavucacceti, cepakkinam, cinavu, cirutakarai, cittiracikam, etakacam, jakatamatti, kalaparnam, karccakkinam1, kecatattu, konakkotayam, kupakkinam, kuralikkonikacceti, kuralikkonikam, kuttanacani1, makanilam@, mayakantotiyam, nakkalatakam, nali, narattarai, nativaram1, oosithagarai, oosthagarai, palavarate, pariyeritaiyati, pavattutarnatankam, perunkulikacceti, perunkulikam, pincacikacceti, pincacikam, punantam, punnatatavaram, punnita, punniyataki, punniyatakicceti, puntakarai, puntakaraicceti, senavu, sirutagarai, tagarai, tagaray-elley, takaracci, takarai, takaraivittu, takaram1, takaritam, tarunicceti, tarunikam, thagarai, thagarai-verai, thakarai, tiram@, tiritapicam, tunnamaram, tupparicimpam, tutakam, ucitakarai, ucittakarai, uranatcam, uranatciyam, ushit-tagarai, ushittagarai, usithagarai, usiththagarai, usittagarai, vanamavaram, vanappicci, vanappicicceti, vannaavaram, vincukam, vindu, vintu, vintu 1, vintu@, vintukam 1, vintutam
Telugu (18)pedda kasinda, tagarisa, tagarisha, tagirisa, tagirise, tagirisha-chettu, tantemu, tantepu, tantepu-chettu, tantepumokka, tantim, tantipu, tantiyamu, thagirise, thantemu, thantipu, thantipu chettu, thantiyamu

குறிப்பு: (அ) கன்னடத்தில் த- ச- எனத் திரிகிறது.(ஆ) தெலுங்கில் பெத்த kasinda - பெரிய காசு போலும் இலை.
(இ) மலையாள விக்கியில் சக்ரமர்ததகரை சுருங்கி சக்ரதகரை ஆகியுள்ளது.
திருவிதாங்கூர் காசுகளுக்கு சக்கரம் எனப் பெயர் உண்டு. தெலுங்கு போலவே, காசால் = சக்கரத்தால்
அமைந்த பெயர் சக்ரதகரை எனினும் அமையும்.

தமிழில் ஊசித் தகரை என்பதுண்டு. பெரிய தகரை மரங்களில் தட்டையாய் தகடு போல் காய்கள். இதில் ஊசி போல்
காய்களா? - எனப் பார்க்கணும்.

மேலும், சிறு தகரை, பெருந் தகரை - Stinking Cassia (hence, obviously, not the red colored flower bearing Himalayan perfume plant.
cassia takarai/takaram < takaTu, where as the hair wash perfume is takarai/takaram from takarttal "to powder, to pulverize"):




 
சிறுதகரை பற்றிய சீனப் பாடல் (கி.பி. 754-ல்):

qiū yǔ tàn sān shǒu (yī)

yǔ zhōng bǎi cǎo qiū làn sǐ
jiē xià jué míng yán sè xiān
zhù yè mǎn zhī cuì yǔ gài
kāi huā wú shù huáng jīn qián
liáng fēng xiāo xiāo chuī rǔ jí
kǒng rǔ hòu shí nán dú lì
táng shàng shū shēng kòng bái tóu
lín fēng sān xiù xīn xiāng qì

In autumn rain, the grasses rot and die,
Below the steps, the jueming's colour is fresh.
Full green leaves cover the stems like feathers,
And countless flowers bloom like golden coins.
The cold wind, moaning, blows against you fiercely,
I fear that soon you'll find it hard to stand.
Upstairs the scholar lets down his white hair,
He faces the wind, breathes the fragrance, and weeps.

தகரை மரமோ, செடியோ கடுங்காற்றுக்கு நில்லா.

நா. கணேசன்




N. Ganesan

unread,
Aug 28, 2015, 1:14:26 AM8/28/15
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஆப்பிரிக்க baobab மரம் விழுப்புரத்தில் ஆனைமரம், சென்னையில் ஆனைப்புளி என அதன் பேரளவால் அழைக்கப்படுள்ளன.
விழுப்புரம் மரம் இப்போது காணவில்லை என்ற தகவல் கோ. செங்குட்டுவன் அளித்திருந்தார்.

மத்திய அமெரிக்காவில் இருந்து கொண்டுவந்த பெருந்தகரை சீமைத்தகரை (அ) சீமைஅகத்தி என அழைக்கப்படுகிறது.
அகம் > அகத்தி. இதனை யானைத்தகரை எனலும் உண்டு.

யானைத் தகரை பல்வேறு நோய்க்கு நிவாரணி!

நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிற பூக்களையும் நீண்ட காய்கள் உள்ள சிறு செடியினம் இயற்கை மருந்தாகும். இதனை சில பகுதிகளில் யானைத் தகரை எனவும் வேறு சில இடங்களில் ஊசித் தகரை எனவும் பெயர் கூறி அழைப்பர்.

இந்த செடி பார்ப்பதற்கு நிலக்கடலை செடி போல காட்சியளிக்கும். இம்மரத்தின் 50  கிராம் இலையை சிறிதாக அரிந்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 250 மிலி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு 10 முதல் 15 மிலி வீதம்  காலை மாலை இரண்டு வேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் பல் முளைக்கும் போது ஏற்படும் காய்ச்சல் தணியும்.

இலையை நீர்விட்டு  மென்மையாய் அரைத்து சிறு தீயில் மீண்டும் சூடாக்கி, இளம் சூட்டில் பற்று போட்டால் கட்டிகள்கள், வாயு, நரம்பு பிடிப்பு போன்ற பல்வேறு  வீக்கம் நீங்கிவிடும். பலநாட்கள் தொடர் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை சுண்டலாக செய்து சோற்றுடன் உண்டால் உடன் மலச்சிக்கல் நீங்கும்.

யானைத் தகரை வேரை எலுமிச்சை பழ சாற்றில் இடித்து, தடவினால் தேமல் படை ஆகியவை தீரும். விதையை  அரைத்து  தடவினால், படை சிரங்கு மற்றும் ஆறாத புண் குணமாகும். (மு)

நன்றி – இந்திய மூலிகை மருத்துவம் 


---------------------------------------------------


A note: ஆனைத்தகரை = ஒரு பெரிய தகரை; ஊசித் தகரை = சிறு தகரை.

பெரிய தகரையில் தகடு தகடாய் காய்கள் காய்க்கும்.

ஊசித்தகரையில் ஊசி, ஊசியாய் காய்கள்.

http://mooligaimutram.blogspot.com/2011/10/31.html

Senna tora Blanco1.122-cropped.jpg










நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 30, 2015, 1:50:38 PM8/30/15
to மின்தமிழ், vallamai
On Saturday, August 22, 2015 at 10:32:05 PM UTC-7, தேமொழி wrote:
தேவதாருவாக இருக்குமோ!!!

தசாங்கம் வாசனைப்பொடியில் உள்ளவை:
Sambrani, Karagil, Sandal, white Kungiliyam, Kukil, Goraikishangu, Vilamichai-root, Jaggary Dhevadharu and mattipal. All these ten are known as dasgngarn


காஞ்சி மடத்தின் ஸ்ரீமுகத்தில் உள்ள இந்தி எழுத்து வாசகங்கள்.
கூகிள் ஓசிஆர் செய்து நண்பர் ஸ்ரீ ராதாகிருஷ்ண வாரியருக்கு அனுப்பி
சரிபார்த்தேன்.

ஆங்கில எழுத்தில் காஞ்சி மட ஸ்ரீமுகத்தில் உள்ள சுலோகங்கள்:

daśāṅgaṁ, guggulaṁ dhūpaṁ sugānghaṁ sumanōharama | ādrēyaḥ sarvadēvānāṁ dhūpāyē pratigr̥sdutāma


daśāṅgaṁ guggulaṁ dhūpaṁ sugandhaṁ sumanōharam |

ādrēyaḥ sarvadēvānāṁ dhūpā'yaṁ pratigr̥hyatām || There were three corrections.  I have shown the corrected words in red.

(gaṇēśamānasapūjāstōtraṁ,  śivamānasapūjāstōtram) There were errors in both the original on the website and the reproduced version.  Both have been corrected.


lakṣāsaṁmilitaiḥ śilārasapuṭaiḥ śrīmānasasaṁmuśritaiḥśrīmānasasaṁmiśritaiḥ  | correction from the previous version I sent you.

karpūrākālitaiḥ śirairmadhuyutaiḥ gōsārpiṣā lōḍitaiḥ ||

śrī śrīkāṣṭhāgaruguggulu prabhr̥tibhiḥ nānāvidhaivastibhiḥ |

dhūpaṁ tē parikalpayāmi janani snēhātvamarṅgākuruḥ ||

The red word is the correction in the original which I have implemented.  The blue words are what I think are correct.  In the first blue word, the original is śrīkaṣṭhāgaruguggulu  (zrIkaSThAgaruguggulu) which to me appears wrong.  In the reproduced it becomes zrIkapThAgaruguggulu which is obviously wrong.  So I used zrIkASThAgaruguggulu.  In the second blue word snēhātvamarṅgākuruḥ, the reproduced version snEhAtvamarGgAkuruH is correct while the original on the website, snEhAtvamarDgAkuruH is obviously wrong.


śrīvēṣṭkāgaru himasarjaguggulumustakān |

urḍūparaguḍaṁ dēvēdru dhūpasārasamānvartam |

jarjaraṁ ghr̥tamadhvalaṁ sugāndhi gr̥ha dhūpanam ||

The words in saffron colour are the ones I am not sure of.  I just reproduced as I saw it in the original on the website but those words don’t look right.  The blue word dhūpasārasamānvartam is my corrected version – the original and the reproduced have both dhUpasArasamArnvatam which sounds incorrect to me so I corrected it to dhUpasArasamAnvartam.


daśāṁgaṁ guggulūpētaṁ sugandhaṁ sumanōharam |

āghrēyaḥ sarvadēvānāṁ dhūpō'yaṁ pratigr̥hyayatām ||

For the first blue word, the original on the website has guggulupetaM whereas the reproduced has guggulUpetaM which seems to be more appropriate and so I have used the reproduced spelling with long U.  For the second word, the reproduced is wrong and the original on the website is correct, so I have used the original form.




śrīkhaṇḍāgaru guggulājyasaralaṁ lākṣānakhi mākṣikaṁ

māṁsi dāru - harītakī - guḍa - sitā - karpūra - nālāyakam |

saṁdhō dugdhagulāla kānalayutaṁ dhūpē sadā mānyitaṁ

dhūpaṁ parnati tē'rpayāmi manasā bhavayā gr̥hāṇāṁbhiṣikē ||

The first blue word is wrong in both the original on the website and in the reproduced.  The correct form, in my opinion, is harItakI and so have used this form.  For the second blue word, the original on the website is obviously wrong and the reproduced in correct.  So I have used the reproduced form.


gugguluṁ mahiṣākṣāṇāṁ sālaniryāsamēvaca |

agaruṁ dēvadāruṁca uśirāṁ śrīphalaṁ tathā |

hībēraṁ candanaṁ mustā daśāṅgaṁ dhūpamucyatē |

gānājyōnaṁ ca sayōjya dadyāt dhūpaṁ suvāsitam |

The original on the website has a few spelling mistakes whereas the reproduced one is OK.  So I have used the reproduced one.

guggulu saralaṁ dārupatraṁ malayasaṁbhavam |

ṭragābēramagaraṁ kuṣaṁ-guḍaṁ sarjarasaṁ tathā |

harītakī nakhīṁ lākṣāṁ jaṭāmāṁsi ca śailajām |

daśāṁgaṁ vidudhūpaṁ daivē pitryai'tha karmiṇi ||

I don’t know if TragAbera is a valid Sanskrit word.  The word is used as a Sanskrit translation for vettiver.


kastūrīnduśca bāhlikaṁ naravaṁ māṁsica sarjakam |

mustāgaru sitā sarvaṁ kramavr̥ddhaṁ samaṁpuram |

stōkaṁ stōkaṁ kṣipēttailaṁ dinaikabhaya kuhayēt |

vārtiṁnirvayayēt dīprāṁ divyaṁ dhūpaṁ nimuḥ vibhuñjati ||

The blue word is suspect in both the original on the website and the reproduced one.  So, I made some small changes.  Hopefully, my changes would be OK. Radha 


-------------------------------------

दशाङ्गंगुग्गुलं धूपं सुगान्घं सुमनोहरम  आद्रेयः सर्वदेवानां धूपाये प्रतिगृस्दुताम

 

दशाङ्गं गुग्गुलं धूपं सुगन्धं सुमनोहरम् 

आद्रेयः सर्वदेवानां धूपाऽयं प्रतिगृह्यताम् ॥ There were three corrections.  I have shown the corrected words in red.

(गणेशमानसपूजास्तोत्रं,  शिवमानसपूजास्तोत्रम्There were errors in both the original on the website and the reproduced version.  Both have been corrected.

 

लक्षासंमिलितैः शिलारसपुटैः श्रीमानससंमुश्रितैःश्रीमानससंमिश्रितैः  ।correction from the previous version I sent you.

कर्पूराकालितैः शिरैर्मधुयुतैः गोसार्पिषा लोडितैः 

श्री श्रीकाष्ठागरुगुग्गुलु प्रभृतिभिः नानाविधैवस्तिभिः 

धूपं ते परिकल्पयामि जननि स्नेहात्वमर्ङ्गाकुरुः 

The red word is the correction in the original which I have implemented.  The blue words are what I think are correct.  In the first blue word, the original isश्रीकष्ठागरुगुग्गुलु  (zrIkaSThAgaruguggulu) which to me appears wrong.  In the reproduced it becomes zrIkapThAgaruguggulu which is obviously wrong.  So I used zrIkASThAgaruguggulu.  In the second blue word स्नेहात्वमर्ङ्गाकुरुः, the reproduced version snEhAtvamarGgAkuruH is correct while the original on the website, snEhAtvamarDgAkuruH is obviously wrong.

 

श्रीवेष्ट्कागरु हिमसर्जगुग्गुलुमुस्तकान् 

उर्डूपरगुडं देवेद्रु धूपसारसमान्वर्तम् 

जर्जरं घृतमध्वलं सुगान्धि गृह धूपनम् 

The words in saffron colour are the ones I am not sure of.  I just reproduced as I saw it in the original on the website but those words don’t look right.  The blue wordधूपसारसमान्वर्तम् is my corrected version – the original and the reproduced have both dhUpasArasamArnvatam which sounds incorrect to me so I corrected it to dhUpasArasamAnvartam.

 

दशांगं गुग्गुलूपेतं सुगन्धं सुमनोहरम् 

आघ्रेयः सर्वदेवानां धूपोऽयं प्रतिगृह्ययताम् 

For the first blue word, the original on the website has guggulupetaM whereas the reproduced has guggulUpetaM which seems to be more appropriate and so I have used the reproduced spelling with long U.  For the second word, the reproduced is wrong and the original on the website is correct, so I have used the original form.

 

श्रीखण्डागरु गुग्गुलाज्यसरलं लाक्षानखि माक्षिकं

मांसि दारु - हरीतकी - गुड - सिता - कर्पूर - नालायकम् 

संधो दुग्धगुलाल कानलयुतं धूपे सदा मान्यितं

धूपं पर्नति तेऽर्पयामि मनसा भवया गृहाणांभिषिके 

The first blue word is wrong in both the original on the website and in the reproduced.  The correct form, in my opinion, is harItakI and so have used this form.  For the second blue word, the original on the website is obviously wrong and the reproduced in correct.  So I have used the reproduced form.

 

गुग्गुलुं महिषाक्षाणां सालनिर्यासमेवच 

अगरुं देवदारुंच उशिरां श्रीफलं तथा 

हीबेरं चन्दनं मुस्ता दशाङ्गं धूपमुच्यते 

गानाज्योनं  सयोज्य दद्यात् धूपं सुवासितम् 

The original on the website has a few spelling mistakes whereas the reproduced one is OK.  So I have used the reproduced one.

 

गुग्गुलु सरलं दारुपत्रं मलयसंभवम् 

ट्रगाबेरमगरं कुषं-गुडं सर्जरसं तथा 

हरीतकी नखीं लाक्षां जटामांसि  शैलजाम् 

दशांगं विदुधूपं दैवे पित्र्यैऽथ कर्मिणि 

I don’t know if TragAbera is a valid Sanskrit word.  The word is used as a Sanskrit translation for vettiver.

 


कस्तूरीन्दुश्च बाह्लिकं नरवं मांसिच सर्जकम् 

मुस्तागरु सिता सर्वं क्रमवृद्धं समंपुरम् 

स्तोकं स्तोकं क्षिपेत्तैलं दिनैकभय कुहयेत् 

वार्तिंनिर्वययेत् दीप्रां दिव्यं धूपं निमुः विभुञ्जति 

The blue word is suspect in both the original on the website and the reproduced one.  So, I made some small changes.  Hopefully, my changes would be OK. Radha

  
Reply all
Reply to author
Forward
0 new messages