திருப்பதி - பெருமாள் கோவிலா அல்லது முருகன் கோவிலா?

1,620 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 15, 2013, 11:52:52 PM10/15/13
to vall...@googlegroups.com


கே 

திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?’ என்பதுதான் அன்று பெரியவர் கி.வா.ஜ.விடம் கேட்ட கேள்வி.

கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன் 
நன்றி; தீபம் இதழ் & பால ஹனுமான். 

‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’ 

‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர். 

‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாக இருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும் வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம் தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன் குறிஞ்சி நிலக் கடவுளல்லவா?’என்றார் கி.வா.ஜ.. ‘சரி! இதில் உன்னுடைய கருத்து என்ன?’ – என்று கேட்டார் பெரியவர். 

‘பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும் இருந்திருக்க வேண்டும். திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன் கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ. 

ஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா? 

‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி. அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது! 

திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். முருகன் கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்கு வாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. தொண்டை மண்டலத்தில், சக்தி க்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும். ஒரு காலத்தில் திருப்பதி, தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. பின், அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில் ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அது இருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும் சொல்வது பொருந்துகிறது’ என்றார். 

பிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில் கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்று பணித்தார். அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். அதை கி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார். கி.வா.ஜ.வுக்கோ ஒரே பரவசம். 

ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின் பெரியவருக்கும் சாத்தப்பட்டது. இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதை அவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்? 

கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். சரியாக முப்பத்தி ஆறு முழங்கள் இருந்தது. இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக் கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். இதற்கென்றே நெசவாள கிராமம் ஒன்று உள்ளது. அவர்களுக்கும் காலம் காலமாக முப்பத்தாறு முழம்தான் கணக்கு. கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம் இருப்பதைக் கூறினார். உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள் பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்தி ஆறு தானே?’ என்று கேட்டார். அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும் கணக்கில்… சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகே புரிந்தது. அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாக பெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி தலமாக தொடரவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்: 

‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாக மாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. கௌமார சக்திக்கு முருகனையும், வைஷ்ண விக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். இதில் இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. அவ்வகையில் மாமனே பெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம். இது ஒரு கோணம். 

அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்பது வழக்கு. சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன். அவனுக்குள் எல்லாமே அடக்கம். அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல் உள்ள ஆலயம்! அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன் அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்

வேந்தன் அரசு

unread,
Oct 16, 2013, 7:13:00 AM10/16/13
to vallamai



15 அக்டோபர், 2013 11:52 PM அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:



கே 

திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?’ என்பதுதான் அன்று பெரியவர் கி.வா.ஜ.விடம் கேட்ட கேள்வி.


வடவேங்கடம் மாலவன் குன்றம் என்றுதானே சொல்லப்படுகிறது

திருமுருகாற்றுப்படையின் அறுபடைகளில் இது இல்லை
 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 16, 2013, 9:20:53 AM10/16/13
to vallamai
திருப்பதித் திருப்புகழ் “கரிவாம்பரி தேர்திறல் சேனையுட
                                        னாந்திரியோதனனாதிகள்..........    பாடல் மூலம் திருப்பதி தெய்வம் முருகன் என்று ஒருமுறை நண்பரொருவர் கூறினார். குறிப்பிட்ட திருப்புகழ் பாடலின் முதல்வரி மட்டும் டைரியில் குறித்திருந்தேன். பாடல் இணையவழி தேடிப் பார்த்தேன். கண்டடைய முடியவில்லை. அப்பாடல் முருகன் திருப்பதித் தெய்வம் என்று கொள்வதற்குச் சான்று கூறுகிறதா என்பதனை நண்பர்கள் மூலம் அறிய ஆவல்.


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/10/16 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 10:30:02 AM10/16/13
to vallamai
திருப்பதியின் ஆதிக்கடவுள் காளி


வம்பு


2013/10/16 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N D Logasundaram

unread,
Oct 16, 2013, 6:12:44 PM10/16/13
to வல்லமை, minT...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
அன்புள்ள மடலாடருக்கு,

திருப்பதி எனும் திருமலை மேல் உள்ள கோயிலி ல் முன்பு இருந்த தெய்வம் காளி யும் முருகனும் தான் 

காளி  கோயில்தான் என்பதன் சான்றுகள் 

(1) நடையில் ஏறும்போது உயரப்பகுதியில் உள்ள கோபுரம்
இன்றும் காளி  கோபுரம் என்றே அழைக்கப் படுகின்றது

இந்த விளி யில் இதுவரை எந்த சந்தேகமும் யாரும் கூறவில்லை
 இப்படி இருந்து இப்படி ஆனது அல்லது இப்படி இருந்திருக்க வேண்டும்
என்பன போன்ற தனிப்பட்டவரின் மனம்போன போக்கில் எழும்  ஐயங்கள் 

(2) 
ஏழுமலையான் கோயில் மூல தானத்தின் மேலுள்ளவை சிங்கங்களே அன்றி வேறில்லை 
இதுவு ம் ஐயத்திற்கு இடமின்றியே நிற்கின்றன மேலும் சிங்கம் காளி  கோயிலில்தான் 
இருக்குமே அன்றி திருமால் கோயிலில் அல்லவே அல்ல

இ ஃ து பலராலும் நூற்றுக்கணக் கான முறை காட்டப்பட்ட மறுக்க முடியாத  சான்றுதான் 

(3)
இதுவரை யாரும் காட்டாத சான்று >>>> 

என்றுமே மாற்றப்படாத  திருவாசி வடிவம் 

திரு வாசி என்பது மூர்த்தத்தின் பின் உள்ள பிர பை 

ஆண்  தெய்வங்களுக்கு லிங்கவடிவில் வைப்பதுதான்  மரபு  ICONOGRAPHIC TRADITION 

பெண் தெ ய்வங்களுக்குதான் உச்சிப்பகுதி கீழ் நோக்கி கூர்மையான பகுதியுடன் தொங்கும் 
அதாவது சீட்டுக்கட்டு ஆட்டின் போன்று பெண்குறியைக் காட்டவே வந்தது 

மரபினை அறியாது பல இடங்களில் மாற்றி மாற் றி வைத்தும் வருகின்றனர் 
ஆனால் முன்பு போற்றப்பட்ட மரபு இதுவே. புள்ளி விவரமும் காட்டும் 

பெண்தெய்வத்திற்கு உரிய திருவா சியினால் காளி  கோயிலே ஆகும் 

காளி என நாம் தமிழில் எழுது கிறோம் வடநாட்டவர் காலி எனத்தான் எழுதுவர்
ஏனெனில் தேவ நகரியில் ள கரம் கிடையாது  கா லா என்றால் கருப்பு அறிவீர் 
மேலும் இதற்கு இணையாக காளியை  சியாமா என்பார்கள்
 கண்ணன் கருப்பு நிறத்தவன்இவனும் நீலமேக சியாமள வர்ணன் என விளிக்கப்படுவன் தான் 


முருகன் தான் தெய்வம் என்பதற் குச் சான்று 

(1) கோயில்  மலைமேல் இருப்பது

உயரமான பகுதியில் தான் காவல் கோட்டைகள் அமைப்பது வரலாறு இயல்பு 
திருமுருகாற்றுப்படை குன்றுதோறாடல் என்பதும் இதைத்தானே 
பொதுவாக படை வீடு என்றால் போர் புரிய தயா ராக உள்ள இடம் 
முருகன் தேவசேனாபதி ஆவான் ஆகவேதான் படைவீடு அவனிடம் ஆகும்  
கையில் போர்மேல் செல் லும் வேலுடனும் கொடியுடனும் காண்பது 
முருகன் கோயில் எதிரில் வைப்பது யானை உருவமே இந்நா ளில்
மயில்காண ப்பட்டாலும் யானை வைப்பதே பழம் மரபு இதுவும் ஓர் 
 போர் உறுப்பு காட்டும் 

வேல் தூரத்தில் உள்ள பகைவரை (போரில் ) கொல்ல பயன்கொள்ளும் மீட்கப்படாத
ஓர் ஆயுதம் ஆகும் அதாவது பகைவன் மேல் எறிந்தால் கையை விட்டு பிரிந்து விடும் 
வில்லிருந்து விடுபடும் அம்பும் இவ் வகையே 

ஆனால் வாள்  போன்றவை கையிலிருந்து பிரியாதவை  
சிவன் காளி  கைகளில்  காணும் சூலமும் அனுமான் திருமால் கைகளில் காணும்
செண்டும் (கதை )கையை விட்டுப்பிரியாத தற்காப்பு ஆயு தமாகும் 

(2) 
திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுடைய முடிவு

ஆதாரம் உவேசா அவர்களே எழுதியது இவர் தன சுய சரிதையில் 

தான் அறிமுகச் சீட்டு பெற்று முதன் முதலில் பாடம் கேட்கச் சென்றபோது 
காணுங்கால் பிள்ளை அவர்கள் உன்பெயர் என்ன எனக் கேட்க  உவேசா வும் 
உத்தமதானபுரம் வே ங்கடசுப்பு (தந்தைப்பெயர்) சாமிநாதன் என்றாராம் 
உடனே பிள்ளை அவர்கள் பார்த்தாயா பார்த்தாயா வேங்கடத்தில் இருப்பவன் 
முருகன் என்றாராம் 
அதாவது தந்தையார் பெயர் வேங்கட சுப்பு = வேங்கட மலையில் இருக்கும் கடவுள்
சுப்பன் = முருகன் 
மக்களுக் கு வைக்கும் பெயர்களில்

         வேங்கட ஈசன் 

                     வேங்கட கிருஷ்ணன் 

                               வேங்கட ராமன் 

                                       வேங்கட லக்ஷ்மி 
எனும் பெயர்கள் ஆங்கு உறையும் தெய்வத்தின் பெயரால் பயனில் உள்ளதால் 
வேங்கட சுப்பு எனும் பெயர் வைக்கும்  வழ க்கமும் வேங்கடத் தில் கோயில் கொண்டிருந்த 
முருகன் பற்றி வந்து என்பது பிள்ளை அவர்கள் காட்டும் சான்று 

இவ்வகையில் மேலும் ஓர் சான்று 

நான் பணியி ருந்து ஒய்வு பெற்று வந்த நிறுவனத்தின் (INEL-ஹோசூர் )  CEO பெயர்

 திருமலை குமரன் பாலாஜி  T K BALAJI 

இவர் டிவி சுந்தரம் அய்யங்கார் அவர்களுடைய பேத்தி (ஷீலா) யின் கணவர் 
லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தை யும் அதன் கிளை நிறு வனங் களை
(மனைவியின் சொத்துக்களை ) நடத் துபவர் 
இப்பெயர் மிகவும் வெளிப்படையாகவே திருமலையில் இருப்பவன் குமாரனான முருகன் தான் 
என ஐயம் ஏதுமின்றிக் காட்டுகின்றது 

வேறு எவராலும் காட்டப்பாடது என்னால் வெளிவந்த சான்று 
(3)
பாலாஜி எனும் பெயர் 

எல்லோரும் பாலா ஜியில் உள்ள பாலா எனும் சொல் குழந்தையைக்
குறிப்பதாகவே காட்டிச் செல்கின்றனர்.ஏனெனில் அவர்கள் தமிழில் ப எனும் எ ழுத் தைபார்கிரார்கள் 

ஜி என்பது தமிழல்ல  என நன்கே அறிவீர்கள் அதுபோல் பாலாவும் தமிழல்ல அனா ல் இங்குதான் குழப்பம் 
இங்கு எழுத வேண்டிய ப ஹிந்தியில் 3 வதாக உள்ள ப அல்ல நான்காவதாக வரும் ப ஆகும் 

பாலா  भाला என்றால் வேல் அல்லது ஈட்டி எனப்பொருள்படும்
நான் தலைநகர் டில்லியில் 10 ஆண்டு கள் பணியில் இருந்த காலத்து கண்டது 
அங்கு குழந்தைகளுக்கு முதல் முதல் எழுத்துப்பயிற்சி படத்துடன் கற்பிக்கப்
பயன்படும் புத்தகத்தில்நம் நாட்டு அணில் ஆடு இலை ஈ உரல் ஊசி எ ன உள்ளது
போல் ஹிந்தியை கற்பிக்க உள்ள புத்தகத்தில் 4 வது ப விற்கு ஓர் வேலின்
படம் இட்டு  भाला என உள்ளதைக் கண்டேன் 
 ஆக பாலா  கையில் ஏந்திய ஜி பாலாஜி ஆனார்  என உணர்ந்தேன் 
சிவ் ஜி பீஷ்ணுஜி காந்திஜி நேருஜி நேதாஜி போன்று பாலாஜி வந்துள்ளது 

இச் சொல் பாலாஜி  தமிழர்களால் இந்நாளில் பயன் கொள்ளக் கண்டாலும்
முன்பு வடநாட்டவர் களா ல்தால் பயன்பட்டு ள்ளது 

திருப்பதி கோயில் நிர்வாகம் 200/0300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 50 60 
ஆண்டுகள் முன் வரை  மஹந்த் எனும் சொல்லா ல் குறிக்கப்பெறும் மடத்
தலைவர்கள்ளல் நிர்வகிக் கப்பட்டுள்ளது இப்பெயரினாலேயே இவர்கள் வடநாட்டைச்
சேர்ந்தவர்கள் என்பது வெள்ளிடை மலை இவர்காலத்திலோ அதற்க்கு முன் போ 
இருந்தது முருகன் கோயிலே ஆ வதால்தான் இவர்கள் மொழியில் உள்ளதுபோல்
கையில் பாலாவை  ஏந்திய கடவுள் எனப்பொருள் பட பாலாஜி எனும் பெயர் அமைந்தது  


நூ த லோ சு
மயிலை 










2013/10/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Hari Krishnan

unread,
Oct 16, 2013, 10:35:26 PM10/16/13
to vallamai, mintamil, தமிழ் மன்றம், Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan

2013/10/17 N D Logasundaram <selvi...@gmail.com>

(1) நடையில் ஏறும்போது உயரப்பகுதியில் உள்ள கோபுரம்
இன்றும் காளி  கோபுரம் என்றே அழைக்கப் படுகின்றது


மன்னிக்கவும்.  அது ‘காலி கோபுரம்‘.  ஏதுமில்லாததால் காலி என்று சொல்கிறார்கள் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் தெலுங்கிலும் கன்னடத்திலும் gaali என்பதற்குக் காற்று என்று பொருள். ராஜஸ்தானில் ஹவா மஹாலைப் போல இது காற்றுக் கோபுரம்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Oct 16, 2013, 10:45:49 PM10/16/13
to vallamai, mintamil, தமிழ் மன்றம், Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
2013/10/17 N D Logasundaram <selvi...@gmail.com>
(3)
பாலாஜி எனும் பெயர் 

எல்லோரும் பாலா ஜியில் உள்ள பாலா எனும் சொல் குழந்தையைக்
குறிப்பதாகவே காட்டிச் செல்கின்றனர்.ஏனெனில் அவர்கள் தமிழில் ப எனும் எ ழுத் தைபார்கிரார்கள் 

ஜி என்பது தமிழல்ல  என நன்கே அறிவீர்கள் அதுபோல் பாலாவும் தமிழல்ல அனா ல் இங்குதான் குழப்பம் 
இங்கு எழுத வேண்டிய ப ஹிந்தியில் 3 வதாக உள்ள ப அல்ல நான்காவதாக வரும் ப ஆகும் 

பாலாஜியில் உள்ள பாலாவை, பாலா திரிபுர சுந்தரி என்று குறிப்பிடுபவர்கள் உண்டு. சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு பாலியம்மன் ஆலயம் உண்டு.  இந்த பாலியம்மன் பாலையேதான்.  நாம் பாலாம்பா, வாலம்பா என்று பாலாவைக் குறிப்பிடுவோம்.  

சிந்தனைக்கு ஒன்று.  ஐயங்கார் பிரிவினரில் ஒரு எழுபது வயதுக்கு மேற்பட்ட பாலாஜியை யாராவது பார்த்திருக்கிறீர்களா?  எனக்கு அடுத்த தலைமுறையிலிருந்துதான் அவர்கள் பாலாஜி என்று பெயர் வைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.  அதுவரையில் இந்தப் பெயர் விலக்கப்பட்டதாக இருந்தது.  Reasons are abundantly explicit.  

இதற்கு மேல் இன்னொன்று.  திருப்புகழில் ஏழோ பதினொன்றோ நினைவில்லை.. திருவேங்கடத் திருப்புகழ் என்று உண்டு.  திருவேங்கடத்தில் குடிகொண்டுள்ள முருகனைப் போற்றிப் பாடியிருக்கிறார்.   (ஆனால், அவர் பாடிய கோவில் இதுவன்று; திருவேங்கடத்தில் முருகனுக்கென்று தனியான ஆலயம் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.)

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 10:52:11 PM10/16/13
to vallamai

2013/10/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஐயங்கார் பிரிவினரில் ஒரு எழுபது வயதுக்கு மேற்பட்ட பாலாஜியை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

​மறைந்த பழம்பெரும் சினிமா நடிகர் கே.பாலாஜி

வம்பு​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 16, 2013, 10:54:29 PM10/16/13
to vall...@googlegroups.com, mintamil
அன்பார்ந்த உயர்திரு. ஹரிகி அவர்களுக்கு,

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே





2013/10/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Oct 16, 2013, 10:56:08 PM10/16/13
to vallamai

2013/10/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

மறைந்த பழம்பெரும் சினிமா நடிகர் கே.பாலாஜி

நன்றி.  இது என்னுடைய ஊகம் சரிதானா என்று சரிபார்த்துக் கொள்வதற்காகக் கேட்கப்பட்ட ஒன்று.  இப்படியும் சிலர் இருந்திருக்கின்றனர் என்பதைச் சுட்டியதற்கு நன்றி.  எனக்கு உமேஷ் என்ற பெயருடன் ஒரு ஐயங்கார் நண்பன் இருந்தான்.  விதியா, விதி விலக்கா என்பது தெரியவில்லை.

DEV RAJ

unread,
Oct 17, 2013, 6:03:30 AM10/17/13
to mint...@googlegroups.com, வல்லமை, minT...@googlegroups.com
On Thursday, 17 October 2013 03:42:44 UTC+5:30, selvi...@gmail.com wrote:

வேறு எவராலும் காட்டப்பாடது என்னால் வெளிவந்த சான்று 
(3)
பாலாஜி எனும் பெயர் 
பாலா  भाला என்றால் வேல் அல்லது ஈட்டி எனப்பொருள்படும்
நான் தலைநகர் டில்லியில் 10 ஆண்டு கள் பணியில் இருந்த காலத்து கண்டது 
அங்கு குழந்தைகளுக்கு முதல் முதல் எழுத்துப்பயிற்சி படத்துடன் கற்பிக்கப்
பயன்படும் புத்தகத்தில்நம் நாட்டு அணில் ஆடு இலை ஈ உரல் ஊசி எ ன உள்ளது
போல் ஹிந்தியை கற்பிக்க உள்ள புத்தகத்தில் 4 வது ப விற்கு ஓர் வேலின்
படம் இட்டு  भाला என உள்ளதைக் கண்டேன் 
 ஆக பாலா  கையில் ஏந்திய ஜி பாலாஜி ஆனார்  என உணர்ந்தேன் 
 

भालाजी என்று யாராவது பெயர் வைத்துக் கொள்கிறார்களா ?
நடைமுறையில் அவ்வாறு  காணப்படவில்லையே.

बालाजी, तिरुपति बालाजी தேடல் முடிவுகளைத்
தந்துள்ளேன்.




பாலாஜீ பெயருக்கும் , சிம்மப் படிமைகளுக்கும் 
காரணம் வேறு, ஐயா


அன்புடன்
தேவ்

DEV RAJ

unread,
Oct 17, 2013, 6:29:32 AM10/17/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil
On Thursday, 17 October 2013 08:24:29 UTC+5:30, tsparu2001 wrote:
வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே


அருணகிரி நாதர் திருமுட்டத்தில்
உறைபவராகவும் முருகனைப் பாடியுள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம் வராக நயினார் உறையும்
ஸ்வயம்வ்யக்த வைணவத் தலம்;
தமிழில் திருமுட்டம். 


செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
                 திருமுத்தி மாதின்   மணவாளா 
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
                      திருமுட்ட மேவு பெருமாளே ! 



தேவ்

வேந்தன் அரசு

unread,
Oct 17, 2013, 6:54:49 AM10/17/13
to vallamai, மின்தமிழ்



17 அக்டோபர், 2013 6:29 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:



செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
                 திருமுத்தி மாதின்   மணவாளா 
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
                      திருமுட்ட மேவு பெருமாளே ! 



தேவ்காரு

தளை வெட்டி பாடல் இட்டால் பொருள் விளங்கிக்கொள்வேமே
 

DEV RAJ

unread,
Oct 17, 2013, 7:01:27 AM10/17/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Thursday, 17 October 2013 16:24:49 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
தளை வெட்டி பாடல் இட்டால் பொருள் விளங்கிக்கொள்வேமே


செழுமுத்து மார்பின் அமுதத் தெய்வானை 
திருமுத்தி மாதின் மணவாளா 
சிறையிட்ட சூரர் தளைவெட்டி
ஞான திருமுட்டம் மேவு பெருமாளே.




சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 17, 2013, 7:03:41 AM10/17/13
to mintamil, vallamai
திருமுட்டத்தில் மிகப் பழமையான சிவன்கோவில் பூவராக சுவாமி கோவிலுக்குப் பின்புறம் குளத்தின் எதிரே தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது தேவ் சார். சோழர்காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.
(பூவராகசாமி கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதுமில்லை. கோவில் நாயக்கர் காலத்தில் விரிவுபடுத்திப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது) 
சிவன்கோவிலில் சுற்றுப்பிரகாரத்தில் 1940ல் புதுப்பித்துக் கட்டப்பட்ட முருகன் சன்னதியுள்ளது. இரண்டு திருப்புகழ் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 
படங்களுடன் பதிவிட எண்ணியிருந்தேன். தாமதமாகிவிட்டது. தனி இழையில் பிறகு பகிர்ந்துகொள்கிறேன்.
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ளது போல பதிவின் முதல் மடலில் குறிப்பிட்டுள்ளதற்கிணங்கத் திருமலையிலும் முருகன் கோவில், பெருமாள் கோவில் இரண்டும் இருந்திருக்கலாமா? 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2013/10/17 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Oct 17, 2013, 7:12:04 AM10/17/13
to vall...@googlegroups.com, mintamil
On Thursday, 17 October 2013 16:33:41 UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ளது போல பதிவின் முதல் மடலில் குறிப்பிட்டுள்ளதற்கிணங்கத் திருமலையிலும் முருகன் கோவில், பெருமாள் கோவில் இரண்டும் இருந்திருக்கலாமா? 


இருந்திருக்கலாம்; மறுப்பில்லை ஐயா.
பெருமாள்  எனும் மாலவனுக்கான சொல்லை
முருகனுக்கும் சொன்னவர் அருணகிரிநாதர்;
சாக்தம், சைவம், வைணவம் மூன்றையும்
முருகனிடம்  இணைத்து ஒருமை காண்கிறார்.
கண்ணபிரானின் பிள்ளை விளையாட்டுகளையும்
அவர் அற்புதமாகப் பாடியுள்ளார்


தேவ்

ருத்ரா

unread,
Oct 17, 2013, 10:51:56 PM10/17/13
to tamil...@googlegroups.com, வல்லமை, minT...@googlegroups.com, thami...@googlegroups.com, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
ஹரிகி அவர்களே "கால்" என்பது காற்று என பொருள் படும் தூய தமிழ்ச்சொல்.
குடம் காலி என்றால் குடம் வெறுமை அதாவது காற்று மட்டுமே உள்ளது என்று
பொருள்.இது போல் தமிழ்ச் சொற்கள் நம்மையே அவற்றை பிறமொழிச்சொல் என்று சொல்லும்படி பிறமொழியின் நசுங்கலில் தமிழ் மொழி வதைக்கப்படுகிறது.
வேதம் என்பது வானிலிருந்து கடவுள் தந்த மொழி என்று சொல்வதும் அப்படித்தான்.வேதம் காற்றின் உலவிய (அதாவது காதில் மட்டும் உலவிய)மொழிதான்.வேய் என்பது மூங்கில் புல் என்ற பொருளைக்குறிக்கும்.
வேய்தம் என்பது மூங்கில் எனும் புல்லாங்குழல் தரும் ஓதம்(ஓசை) ஆகும்.
வெறும் ஓசை ஓதம்.வேய்ங்குழல் ஓதமே "வேதம்" ஆயிற்று.மாடுமேய்க்கும்
தமிழ்ச்சிறுவர்கள் வாய்ப்பாடல்களுடம் வேய்ங்குழல் ஓதம் (வேய்தம்)முழுக்குவதே வேதம் ஆயிற்று.தொன்மையான சிந்துவெளி திராவிடத்தமிழ் காலத்தில் மேலைநாட்டு மொழி ஓசைகளும் தமிழும் கலந்த ஒலியே வேதம் ஆகும்.தமிழர்கள் கிரேக்கம் எகிப்து சுமேரிய பாரசீக மக்களுடன்
தொடர்பு கொண்டு தமிழ்சிந்தனைகளை (சித்த அறிவு)பகிர்ந்து கொண்டனர்.இரானிய அவெஸ்தா மொழியின் ஒரு இதிகாசப்பாடலும் இந்த தமிழ்க் கலம்பக வாய் ஒலி மொழியில் இழைந்திருக்கிறது.இதை ரிக் வேதம் என பெயர் இட்டு வைத்தனர்.அசுர சுர இனப்போர் பற்றிய அந்த அவெஸ்தா பாடல்கள் திராவிட சாயை பெற்றவை.தமிழ் மொழியின் பிராம்மி வடிவம் தான் வேத பாடல்களுக்கு வரி வடிவம் தந்திருக்கிறது.

ஒவ்வொரு ரிஷிகளையும் ஆராய்ந்தால் அதனுள் தமிழ்ப்பெயரே இருக்கும்.இதற்காக ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக்கூடாது என்ற பழமொழியே வழங்கி வருகிறது.யாழர்கள் பாடுபவர்கள் மட்டும் அல்ல.கல்வி கேள்விகளில் சிறந்தவர்களும் ஆவர்.மேளம் வாசிக்கும் கம்பர்கள் கவிச்சக்கரவர்த்திகளாக இருப்பது போல் குறி சொல்லும் வள்ளுவர்களில் "திருவள்ளுவர்" தோன்றியது போல் யாழர்கள் திராவிடத்தமிழில் வியாழர் ஆகி
அவரே வியாசர் ஆனார்.(ழ என்பதை ஸ என்பதும் பிறமொழி ஒலிப்பு வழக்கம்
தானே)மேலும் ஐந்திறம் எனும் ஐந்திணை ஒழுக்கம் உடைய சிந்துவெளித்தமிழில் "பரதவர் அல்லது பரதர்"என்பது நெய்தல் தமிழர்.பரவை என்றால் கடல்.பரவையர் பரதர் என வழங்கப்பட்டனர்.பராசரர் என்னும் பரதவர்
மகனே வியாசன்.பாரத வம்சம் எனும் தமிழர் திணையின் கடல் சார்ந்த தமிழரே இந்தியாவின் உரிமைக்குடி.பிறமொழிகளை தமிழரே தன் தலை மேல் தாங்கி இப்போது அதன் அடியில் நசுங்கிக்கிடக்கின்றனர்.தமிழ் மொழியின் ஆராய்ச்சி திசை திரும்பி பல குழப்பங்களை தோற்றுவிக்கிறது.அதனால் தான்
தமிழல்லாத மொழியை நாம் தலைமீது வைத்து கொண்டாடி வருகிறோம்.

அன்புடன் ருத்ரா   

Hari Krishnan

unread,
Oct 17, 2013, 11:08:53 PM10/17/13
to தமிழ் மன்றம், வல்லமை, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan

2013/10/18 ருத்ரா <eps...@gmail.com>

ஹரிகி அவர்களே "கால்" என்பது காற்று என பொருள் படும் தூய தமிழ்ச்சொல்.
குடம் காலி என்றால் குடம் வெறுமை அதாவது காற்று மட்டுமே உள்ளது என்று
பொருள்.இது போல் தமிழ்ச் சொற்கள் நம்மையே அவற்றை பிறமொழிச்சொல் என்று சொல்லும்படி பிறமொழியின் நசுங்கலில் தமிழ் மொழி வதைக்கப்படுகிறது.

நன்றி உயர்திரு உருத்திரா அவர்களே.  கால் என்றால் காற்று என்ற பொருளை இன்னொருவர் சொல்லித்தான் அறிந்துகொள்ள வேண்டிய நிலையில் என்னை என் பாரதியும் கம்பனும் வைக்கவில்லை.  ‘காலின் மதலை’ என்பது அனுமனுக்குப் பெயர். 

இன்றைய நிலையில் தமிழில் காலி என்றால் பொறுக்கி.  கன்றுகாலி என்பதில் உள்ள காலியைக்கூட மக்கள் புரிந்து கொள்வதில்லை.  காற்று என்ற பொருளில் தற்சமயத்தில் தமிழில் இச்சொல் பயில்வதில்லை.  ஆனால் தெலுங்கிலும் கன்னடத்திலும் சற்றே உச்சரிப்பு மாறி gaali என்ற உச்சரிப்பும், காற்று என்ற பொருளும் பயின்று கொண்டிருக்கிறது என்பதை மட்டுந்தான் சுட்டினேன்.


இது போல் தமிழ்ச் சொற்கள் நம்மையே அவற்றை பிறமொழிச்சொல் என்று சொல்லும்படி பிறமொழியின் நசுங்கலில் தமிழ் மொழி வதைக்கப்படுகிறது.

என்பது என் மீது திணிக்கப்படும் தேவையற்ற திணிப்பு.  என் நோக்கம் அதுவன்று.  எத்தனையோ முறை இணைய வெளியில் சொன்னதை, இப்போது மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.  என் தமிழ்ப் பற்று, யாருடைய தமிழ்ப் பற்றுக்கும் இளைத்தன்று.

காளி கோபுரம் என்று தவறாகச் சொல்லப் பட்டிருப்பதன் சரியான வடிவத்தைத் தரப் புகுந்தால், என் வாய்க்குள் நான் சொல்லாத சொற்களெல்லாம் கண்டறியப்படுகின்றன!

மீண்டும் நன்றி திரு உருத்தினாரே.

N D Logasundaram

unread,
Oct 18, 2013, 5:56:16 AM10/18/13
to vallamai, thami...@googlegroups.com, mintamil, தமிழ் மன்றம், Sivakumar M A
அன்புள்ள ஹரிகி
(1)
பாலாஜியில் உள்ள பாலாவை, பாலா திரிபுர சுந்தரி என்று குறிப்பிடுபவர்கள் உண்டு.
சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு பாலியம்மன் ஆலயம் உண்டு.  இந்த பாலியம்மன்
பாலையேதான்.  நாம் பாலாம்பா, வாலம்பா என்று பாலாவைக் குறிப்பிடுவோம்.  

நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் என்று புரியவில்லை அய்யா 

மடலில் நான் குறிப்பட்ட பாலா வுடன்(3வது அல்ல 4 வது ப ) =  வேலுடன் எப்படி தொடர்பு படுத்துகிறீர் ???

வேறு தனக்குத் தெரிந்த வேறு ஏதோ ஒன்றை இடையில் புகுத்தி தானும் குழம்பி மற்றவரை குழப்புகின்றீ ர் ?

அல்லது நான் சொல்லுவதை திசை திருப்பி மறைக்கப் பார்கின்றீ ர் எனக் கொள்ளலாமா? 

குறிப்பிட்ட ஒன்றைப் பேசும்போது அதனை ஒட்டியோ அல்லது வெட்டி யோ பேசலாமே

(2)
சிந்தனைக்கு ஒன்று.  ஐயங்கார் பிரிவினரில் ஒரு எழுபது வயதுக்கு மேற்பட்ட பாலாஜியை
யாராவது பார்த்திருக்கிறீர்களா?  எனக்கு அடுத்த தலைமுறையிலிருந்துதான் அவர்கள் பாலாஜி
என்று பெயர் வைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

பயன்பட்டுள்ள பெயருக்காக மட்டுமே   நான் குறிப்பிட்டவர் அய்யங்கார் மரபினர் அல்ல

இந்தப் பெயர் விலக்கப்பட்டதாக இருந்தது.  Reasons are abundantly explicit.  

பாலாஜி  பெயர் முருகனைக் குறித்து அதனால் வில க்கப்பட்டது எனக் காட்டுகின்றீர் எனக் கொள்கிறேன் 

(3)
 ‘காலி கோபுரம்‘.  ஏதுமில்லாததால் காலி என்று சொல்கிறார்கள் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் தெலுங்கிலும் கன்னடத்திலும் gaali என்பதற்குக் காற்று என்று பொருள். ராஜஸ்தானில் ஹவா மஹாலைப் போல இது காற்றுக் கோபுரம்.
காலி கோபுரம் எனும் சொல் காற்றி லி ருந்துதான் எனபதற்கு சான்று வேறு  எங்கோயோ  (jaipur ) இருந்து காட்டுகின்றீர் களே 
அருகிலேயே உள்ள காளி கோயிலுக்கு  சிறுதும் தொடர்பு இ ல்லை என் பதற்கும்  சான்று காட்டவேண்டுமே . முடியுமா?

காளி என நாம் தமிழில் எழுது கிறோம் வடநாட்டவர் காலி எனத்தான் எழுதுவர்
ஏனெனில் தேவ நாகரியில் ளகரம்** கிடையாது காலா என்றால் கருப்பு அறிவீர்     (**ஆனால் மராத்தியில் உண்டு அறிவீர் )
மேலும் இதற்கு இணையாக காளியை  சியாமா என்பார்கள்
 கண்ணன் கருப்பு நிறத்தவன்இவனும் நீலமேக சியாமள வர்ணன் என விளிக்கப்படுவன் தான் 
                              
எனவும் எழுதி உள்ளது பார்த்திருப்பீர்கள் எனவே காலி காளி ஒன்றுதானே 
 
தமிழிலும் கால் என்றால் காற்று என வரும் 
ஆனால் காலன் என வருமிடது கருப்பு நிறத்தவன் (யமன்)எனபொருள் படும் அறிவீர்கள் 

உஜ்ஜயின் சிவன் கோயில்(தமிழில் உஞ்சே னை  மாகாளம் (महाकाळ )எனவரும் இதனில் உள்ள காள ம் 
 கருப்பு நிறத்தவன் உள்ள கோயில் எனத்தான் பொருள் படும் (masculine form or COUNTER PART OF KAALI )

(4)
திருப்புகழில் ஏழோ பதினொன்றோ நினைவில்லை.. திருவேங்கடத் திருப்புகழ் என்று உண்டு. 
திருவேங்கடத்தில் குடிகொண்டுள்ள முருகனைப் போற்றிப் பாடியிருக்கிறார்.
 (ஆனால், அவர் பாடிய கோவில் இதுவன்று; திருவேங்கடத்தில் முருகனுக்கென்று
தனியான ஆலயம் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.)

மதுரைத் திட்ட பக்கத்தில் கண்ட அருணகிரிநாதர் திருப்புகழ் பதிப்பின்படி 
524 முதல் 529 வரை யிலா னவை திரு வேங்கடம் திருப்புகழ் எனக்காட்டுகின்றது 
அவைகள் மூலம்  முழுதும் இணை ப்பினில் காண்க 

குகைவழி வந்த 
மலைச்சிகர வடமலை நின்ற ...... பெருமாளே.                   524

ச மரபுரி தணிகையு மிகுமுயர் 
சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா 525

கடவட மலையுறை ...... பெருமாளே.                                   526

ஆ னால் இவற்றில் 524, 525 526 என்பவை வடமலை என்றுதான் உள்ளது 

இவைகளை தவிர்ப்பதுதான் சரியாகும் எனில் வடமலை எனும் பெயரில்
கோயிலுள்ள இடம் திண்டுக்கல் விருதுநகர் அருகும் உண்டு
இவை திருப்பதி ஆகவே ஆ காது திருமலை எனும் வழுக்குதான் உண்டு 
                                                  வடமலை = ஆலமரம் வளர்ந்த மலை (வடக்கு திசை மட்டுமல்ல)

வேங்கையும் வாரணமும் வேயு மானும்வளர் 
வேங்கட மாமலையி ...... லுறைவோனே                        527

                                 வட 
வேங்கட மாமலை ...... லுறைவோனே                            528

                            பொழில் சூழ்தரு 
திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே.         529 என 3 பாடல்கள் உள்ள


ஆனால், அவர் பாடிய கோவில் இதுவன்று; திருவேங்கடத்தில் முருகனுக்கென்று தனியான ஆலயம் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

அருணகிரியார் பாடிய திருப்புகழ் குறிப்பது இக்கோயில் அல்லாவிடில் வேறு எங்குள்ளது என (சான்று)  காட்டவிடில் மனதில் தோன்றும் 
வெறும் ஐயமே மறுக்கும் தர்க்கக்  கருத்தாகுமா? 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 
----------------------------

2013/10/17 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
vengkadam-trppkz.txt

Hari Krishnan

unread,
Oct 18, 2013, 6:07:17 AM10/18/13
to தமிழ் மன்றம், vallamai, தமிழாயம்”, mintamil, Sivakumar M A

2013/10/18 N D Logasundaram <selvi...@gmail.com>

நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் என்று புரியவில்லை அய்யா 

மடலில் நான் குறிப்பட்ட பாலா வுடன்(3வது அல்ல 4 வது ப ) =  வேலுடன் எப்படி தொடர்பு படுத்துகிறீர் ???

வேறு தனக்குத் தெரிந்த வேறு ஏதோ ஒன்றை இடையில் புகுத்தி தானும் குழம்பி மற்றவரை குழப்புகின்றீ ர் ?

அல்லது நான் சொல்லுவதை திசை திருப்பி மறைக்கப் பார்கின்றீ ர் எனக் கொள்ளலாமா? 

குறிப்பிட்ட ஒன்றைப் பேசும்போது அதனை ஒட்டியோ அல்லது வெட்டி யோ பேசலாமே

என் மடலைப் பார்த்தால் தெளிவாகத் தெரியும்.  எனக்கு உள்நோக்கமோ, திரிப்பதோ, மாற்றிச் சொல்வதோ, வழி மறிப்பதோ வழக்கமில்லை.   

தொடங்கும் போதே, எதிராளியின்மேல் உள்நோக்கம் கற்பிக்கும் முயற்சி வெளிப்படுமானால், அதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை.

நன்றி.  வணக்கம்.

C.M உதயன்

unread,
Oct 18, 2013, 7:00:20 AM10/18/13
to vallamai, mintamil
திருப்பதியில் பவுத்த மடங்கள் இருந்ததாகவும் பின்னர் முருகன் கோவிலாகவும் பின்னர் பெருமாள் கோவிலாக மாற்றம் ஆனதாகவும் அதனால் தான் ராஜபக்சே திருப்பதி வருவதாகவும் சிலர் சொல்லி கேள்வி பட்டுஇருக்கிறேன்.
--------
கீற்று இணையத்தில் இருந்து.

ராஜபக்சே திருப்பதி தரிசனம்?

குறிப்பிடத்தக்க இரண்டு பயணங்களை இலங்கை அதிபர்மகிந்த ராஜபக்சே சமீபத்தில் மேற்கொண்டிருந்தார்.
முதல்பயணம் புத்தர் பிறந்த நேபாளத்தை நோக்கி- அது “புனிதப் பயணம்”. இரண்டாவது பயணம் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு - இது “சாமி தரிசனம்”. இங்கே ஒரு முரண்பாடு தெரிகிறது.

நேபாளத்தில் பிறந்த புத்தர் ஆரியத்திற்கு எதிரானவர், இந்து மதங்களையும் கடவுள்களையும் அதன் சடங்கு சம்பிரதாய ஐதீக நெறிகளையும் தகர்த்து எறிந்தவர். சமூக எழுச்சிக்காக அவரால் உருவாக்கப்பட்ட பகுத்தறிவுச் சிந்தனைகளையும், மனிதநேய உணர்வுகளையும் “தம்மம்” என்று சொன்னவர். அதை பவுத்தம் என்றோ மதம் என்றோ சொல்லாதவர் புத்தர். அவர் மனிதனையும் மனித நேயத்தையும் மதித்துப் போற்றியவர்.

இவைகளுக்கு நேர் எதிராக,தான் பவுத்த மதத்தைச் சேர்ந்தவன் என்றும், சடங்கு சம்பிரதாய ஐதிக நெறிகளை மேற்கொண்டும், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இந்துத்துவ சிந்தனைகளோடும், இந்து கோயிலின் பூரண கும்ப மரியாதையை பக்தியோடு ஏற்றுக் கொண்டும் போலி பவுத்தனாக இருப்பவர் ராஜபக்சே. குறிப்பிட்டுச் சொன்னால், அடிமைப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகப் போர்க்குரல் எழுப்பியவர் புத்தர். ஆனால் சுதந்திரமாக இருந்த தமிழ்மக்களை அடிமைப்படுத்த முயற்சி செய்து, போர்க்களத்தில் அவர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சே!

மனிதனையும் மனித நேயத்தையும் வளர்த்தவர் புத்தர். ஆனால் பாதுகாப்பு முகாம் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் தமிழர்களை மனிதநேயமில்லாமல் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் இரக்கமற்ற மனிதன் ராஜபக்சே! புத்தருக்கு எல்லா மனிதர்களைப் பற்றிப் பேசவும் உரிமை உண்டு. ஆனால் புத்தரைப் பற்றிப் பேசும் அருகதை அற்றவர் ராஜபக்சே!

கி.மு.483 ஆம் ஆண்டில் இயற்கையாக மரணம் அடைந்தார் புத்தர். ஆனால் அதற்குப்பின் 2492 ஆண்டுகள் நகர்ந்து 2009 இல் ஈழமண்ணில் புத்தரைக் கொலை செய்த ராஜபக்சேவின் நேபாளப் பயணம் புனிதப் பயணம் அல்ல; அது, புத்தர் பிறந்த மண்ணில், தமிழர் இரத்தம் தடவச் சென்ற பயணம்.

தான் செய்த போர்க்கொடுமைகளை மறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க வேண்டும், அதற்கு உலக நாடுகளை ஏய்க்க, தான் ஒரு அகிம்சாவாதி போலவும், தான் ஒரு பவுத்தன் போலவும் கபட நாடகத்தை அரங்கேற்றும் பயணம்தான் ராஜபக்சேவின் நேபாளப் புனிதப் பயணம். அந்த மனிதனுக்குத் தெரியவில்லை புத்தர் இப்போது நேபாளத்தில் இல்லை, ஈழத்தில் முள்வேலியில் போய் அழுது கொண்டிருக்கிறார் என்று! சரி!

அடுத்த பயணம் திருப்பதி “ஏடுகுண்டலவாடா”விடம் “சாமிதரிசனம்”.

திருப்பதி இந்து மதக் கோயில். ஒரு வைணவ மதக்கோயில். பவுத்தத்தை நிராகரித்த ஐதீக சடங்குகளுடன் ஆறுகாலப்பூசை நடக்குமிடம் திருப்பதி. அக்கோயிலுக்குள் இந்து அல்லாத பிறமதத்தவர்களை உள்ளே அனுமதிக்காத இந்து தர்மச்சட்டம், பவுத்தனான ராஜபக்சேவை எப்படி அனுமதித்தது? எப்படி பூரண கும்ப மரியாதையை அந்த மனிதனுக்குக் கொடுத்தார்கள் கோயில் பூசாரிகள்? அப்படியானால் ராஜபக்சே பவுத்தனா? அல்லது இந்துவா? சற்று முன்னோக்கிய காலத்திற்குப் போனால் இதற்கு விடை கிடைக்கும்!

புத்தர் மறைந்து 103 ஆம் ஆண்டில் (கி.மு 380) காலாசோக என்ற மன்னன் ஆட்சியில், மகாவன விகார உபதேச மண்டபத்தில் கூடிய இரண்டாம் பவுத்த மகாசபையில், பவுத்தத்தை இரண்டாகப் பிளந்தார்கள் வஜ்ஜியர்கள் என்று அழைக்கப்படும் ஆரியப் பார்ப்பனர்கள்.

காரணம் புத்தர் திராவிடர். அவர் சொன்ன திராவிட பவுத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை பார்ப்பனர்களால். எனவே பவுத்தத்தை இரண்டு கூறாகப் பிளந்தார்கள். அப்படிப் பிளந்து, பிரிந்து சென்ற பார்ப்பனர்கள் தனியாக ஓர் பவுத்த அமைப்பை உருவாக்கினார்கள். அதன் பெயர் மகா சாங்கியம். பின்னர் கி.மு. முதலாம் நூற்றாண்டில், ஆந்திரத்தில் ஸ்ரீபர்வதத்தில் நாகார்ச்சுனர் என்ற பார்ப்பனரால் உருவாக்கப்பட்ட மகாயாணம் என்ற பவுத்தப் பிரிவில் மகா சாங்கியம் மற்றும் அதன் வளர்ச்சிப் பிரிவுகள் ஒன்று கலந்தன.

இந்த மகாயாண பவுத்தத்தின் கோட்பாடு விளக்கத்தை “ஆச்சாரிய வாதம்” என்று அழைத்தார்கள். ஆச்சாரியர்கள் பார்ப்பனர்கள். மகாயாண பவுத்தப் பிரிவும் பார்ப்பன ஆரிய பவுத்தமாக உருமாறிவிட்டது. இந்த மகாயாண ஆரிய பவுத்தன் ராஜபக்சே இந்திய வம்சாவளி பார்ப்பனப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்களம் என்றால் ஆரியம் ; சிங்களர் என்றால் பார்ப்பனர் என்பதே பொருள். இதற்கான ஆதாரம் அவர்களுடைய புனித நூலாகவும், இலங்கை அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நூலாகவும் இருக்கின்ற மகாவம்சத்தில் தெளிவாக இருக்கிறது.

மகாவம்சம் 6 ஆம் அத்தியாயம் விஜயனின் இலங்கை வருகையைப் பற்றிக் கூறுகிறது. இங்கிருந்துதான் சிங்கள இனம் தோற்றம் பெறுகிறது.

இந்தியாவின் வங்க நாட்டு அரசனுக்கும், ஒரிசாவின் இளவரசிக்கும் ஒரு மகள் பிறக்கிறாள். அவள் ஒரு சிங்கத்தை உடலுறவுப் புணர்ச்சி செய்கிறாள். அதனால் அந்தச் சிங்கத்திற்கும் அவளுக்குமான ஒரு மகளையும் ஒரு மகனையும் பெற்றெடுக்கிறாள். மகன் சிங்கத்தின் உருவமாகவும் மனிதனின் சாயலுடனும் பிறக்கிறான். அவன்பெயர் சிகபாகு. அவனுடன் பிறந்த தங்கை சிகசீலி.

அண்ணன் சிகபாகு, தங்கை சிகசீலி ஆகிய இந்த உடன்பிறந்தவர்கள் கணவன் மனைவியாகி இவர்களுக்கு 32 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களில் மூத்தவன்தான் விஜயன். 

விஜயன் ஒழுக்கக் கேடு கொண்ட கெட்டநடத்தை உடையவன். அதனால் வங்க நாட்டு அரசன், ஒரிசாவில் இருந்து விஜயனையும் மேலும் சிலரையும் கப்பல் ஏற்றி நாடு கடத்தி விடுகிறான். அக்கப்பல் வந்து சேரும் இடம் இலங்கை புத்தளத்திற்கு அருகில் உள்ள தம்பபண்ணி என்ற இடத்தில். இலங்கை வந்த விஜயன் இலங்கையின் பூர்வகுடிப் பெண் குவெய்னியை மணக்கிறான். அவனுடன் வந்தவர்களும் இவ்விதம் மணம் செய்கிறார்கள். இதன்வழி வளர்ந்த இனமே சிங்கள் இனம் என்கிறது மகாவம்சம். 

விஜயனின் அப்பா சிகபாகு ஒரு (பெண்ணுக்கும்) சிங்கத்திற்கும் பிறந்தவன் என்பதால், தந்தை வழியில் சிங்க என்ற சொல்லும், விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடம்(தம்பபண்ணி) புத்தளம் என்பதால் (புத்)அளம் என்ற சொல்லும் இணைந்து சிங்களம் ஆகி, இனமாக மாறிவிட்டது. 

இங்கே கவனிக்க வேண்டிய செய்தி, விஜயனின் பாட்டனான வங்க அரசனும், பாட்டியான வங்க அரசியும், அவன் தாயும் ஆரியர்கள் என்பதுதான். (தந்தை ஒரு மிருகம் விட்டுத்தள்ளுங்கள் -ராஜபக்சேவைப் பார்க்க வில்லையா?) ஆகவே வங்க - ஒரிசா நாட்டுப் பாரப்பனர்களின் வழித் தோன்றிய இனமே சிங்கள இனம். இதை ஆரியச்சிங்களம் என்றால் சரியாக இருக்கும். 

ஆரியர்கள் திராவிடர்களுக்கு எதிரானவர்கள். ஆரியச் சிங்களரும் ஈழத் தமிழ்த் திராவிடர்களுக்கு எதிரானவர்கள். இந்த தமிழர் மீதான எதிர்ப்பை கி. பி. 6 ஆம் நூற்றாண்டு முதலே துட்டகாமினி என்ற இலங்கை பார்ப்பனச் சிங்கள மன்னன் காலத்திலிருந்தே விதைக்கத் தொடங்கிவிட்டார்கள். இதையும் சொல்வது அவர்களின் மகாவம்சம்தான். அதன் உச்சகட்டம்தான் புலிகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் குத்திக் குலைசாய்த்து விட்டான் ராஜபக்சே!

உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக நின்றுகொண்டிருக்கும் ராஜபக்சே, தன்னைக் காத்தருள வேண்டித்தான் இந்துமரபுப்படி பூரணகும்ப மரியாதையை ஏற்று திருப்பதிக்கு வந்தார் என்றால், அவர் பவுத்தனாக வரவில்லை, பார்ப்பன பவுத்தனாக, பவுத்த இந்துவாகவே வந்துள்ளார். 

ஏன் திருப்பதியைத் தேர்ந்தெடுத்தார் ராஜபக்சே? அங்கேயும் அவரது இன உணர்வுதான் மேலோங்குகிறது. திருப்பதியின் மதம் வைணவம். கடவுள் விஷ்ணு. விஷ்ணு 10 அவதாரங்கள் எடுத்துள்ளார். கி. பி. 6ஆம் நூற்றாண்டு மச்சபுராணம்; மச்சாவதாரம்- கூர்மாவதாரம்- வராகவதாரம்- நரசிம்மாவதாரம்- வாமனா அவதாரம்- இராமாவதாரம்- பலராமனவதாரம் - கிருஷ்ணாவதாரம்-புத்தாவதாரம்- கல்கி அவதாரம் என்று 10 அவதாரங்களையும் பட்டியலிடுகிறது. 

நமது கேள்வி, அப்படியானால் பரசுராம அவதாரம் எங்கே? என்ன ஆனது? அதையும் சேர்த்தால் 11 அவதாரங்கள் ஆகிறதே! உண்மையைச் சொன்னால் இந்துமதம் ஒரு தகிடுதத்த வேலையைச் செய்துள்ளது இங்கே. புத்தரை இந்து கடவுளாக மாற்றும் முயற்சியாக, புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக நுழைத்துவிட்டது. தேவைப்படும்போது புத்தரை விரட்டிவிட்டு பரசுராமனைச் சேர்த்துக் கொள்ளும் இந்துமதம். 

இந்த அடிப்படையில்தான் பார்ப்பன ஆச்சாரிய பவுத்தனான ராஜபக்சே, அவரது ஆரிய(வங்க) மூல மரபுப்படி, ஆரிய கடவுளான விஷ்ணு வீற்றிருக்கும் திருப்பதிக்கு வந்தது. 

திருப்பதி “அவாள்கள்”, ஸ்ரீலங்கா “இவாளுக்குப்” பூரணகும்ப மரியாதை அளித்ததன் திருப்பதி ரகசியம் இதுதான் - புரிகிறதா?




--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Theetharappan R

unread,
Oct 18, 2013, 1:58:53 PM10/18/13
to vall...@googlegroups.com
திருப்பதியில் உள்ள சுவாமி முருகனே. எனவே தான் பரம்பரை பரம்பரையாக வேங்கடசுப்ரமணியன்
என்று பேர் வைக்கும் வழக்கம் நம்மவரிடையே வந்துள்ளது. முருகனுக்கு நாமத்தைப் போட்டு
வேங்கட கிருஷ்ணன் என்று சொல்லிவிட்டார்கள். நம் நாட்டில் ஒருவர் மற்றவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு
ஏமாற்றிவிட்டால் " அவன் நாமம் போட்டு விட்டான் " என்று சொல்லும் வழக்கம் இந்த மத மாற்றச்
செயலின் மூலமாக வந்ததுதான். குற்றாலம் கோயில் மூலத்தில் வைணவக் கோயிலே! மேலிருந்து பார்த்தால்
சங்கு வடிவமாகத் தோன்றும். அகத்தியர் தான் சிவன் கோயிலாக மாற்றியதாக வரலாறே இருக்கிறது.


2013/10/18 C.M உதயன் <udhay...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Oct 18, 2013, 5:52:59 PM10/18/13
to வல்லமை
அன்புள்ள தேவ் அவர்களுக்கு 

(1)
செழுமுத்து மார்பின் அமுதத் தெய்வானை 
திருமுத்தி மாதின் மணவாளா 
சிறையிட்ட சூரர் தளைவெட்டி
ஞான திருமுட்டம் மேவு பெருமாளே.

எல்லாத் திருப்புகழும் முரு கனைப் பாடியதே அன்றி திருமாலைப் பாடவில்லை
அதான்று 
 திருப்புகழ் பெற்றவை பல நேரங்களில் சிவத் தல மே ஆகுமே அன்றி தனித்த முருகன் தல ம் குறைவாகவே   


இதனில் உள்ள முட்டம் நீங் கள் சொலவதுபோல் ஸ்ரீ முஷ்ணம் ஆகாது 
அருணகிரியார்  60% சதப் பாடல்களில் திருமாலவன் லீலைகளை குறித்து
மருகோ னே எனத்தான் பாடியுள்ளா ரே அன்றி எந்த ஒரு தனித்த திருமால் 
கோ யிலைப் பாடவில்லை 

மேலும் முட்டம் என இடப்பெயர் பற்பல இடங்களில் உண்டு 

மயிலாடுதுறை அரு கு  
கோரடா ச்சே ரி அருகு 
கன்னியாகுமரி அருகு 
ஏன்
கேரளத்தில் 20 க்கும் மேல் முட்டம் எனும் இடப்பெயர் அமைந்துள்ளது 
                                        லட்சத் தீவிலும் கூடக் காணலாம் 

ஏன் தேவாரப் பாடல் பெறத் தலமே காஞ்சி (தூசி) க்கு அருகில் உண்டு = குரங்கணில் முட்டம் 

முட்டம் என்பதற்கு சந் தி  எனப்பொருள் வரும் என நினைகின்றேன்
கேரள த் தில்  பல இடங்களில் பயன் படுவதால்

வளவ னூரில் தேர்முட்டம் என உள்ளூர் இடப்பெயர் உள்ளது 

(2)

भालाजी என்று யாராவது பெயர் வைத்துக் கொள்கிறார்களா ?
நடைமுறையில் அவ்வாறு  காணப்படவில்லையே.

बालाजी, तिरुपति बालाजी தேடல் முடிவுகளைத்
தந்துள்ளேன்.

தங்களுக்கு கிடைக்காததால் அவ்வாறு எழுதுவது அறியாமல் திரிந்து போனது என்று பொருள் 

மற்றொரு நண்பர் பான்சிதர் போன்று பாலாதர் அல்லது தண்டபாணி போன்று  பாலாபாணி
என வர வேண்டுமே என்கிறார் அதற்கும் பதில் பாலாஜி என வைக்கக் கூடாது என விதி
எதாவது உள்ளதா? இலக்கணப் மொழிப்  பிழை யாவது உள்ளதா ??

 இரண்டிற்கும் வடநாட்டவர் அப்படி பெயர் வைத்துள்ளனர்   எனக் கொள்க

நூ த லோ சு 
மயிலை 




2013/10/17 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Oct 18, 2013, 7:38:04 PM10/18/13
to vall...@googlegroups.com
On Saturday, 19 October 2013 03:22:59 UTC+5:30, N D Logasundaram wrote:
மேலும் முட்டம் என இடப்பெயர் பற்பல இடங்களில் உண்டு 

ஆம், மறுக்கவில்லை. 

 
வளவ னூரில் தேர்முட்டம் என உள்ளூர் இடப்பெயர் உள்ளது 


திருமுட்டம் - ஸ்ரீமுஷ்ணம்
பொருத்தம் காண முடிகிறது.
அருணகிரிநாதர் முருகனோடு
இணைத்துப் பாடியுள்ளார் என்று
மிக கவனமாக எழுதியுள்ளேன், ஐயா. 
நீங்கள் மீண்டும் படித்துப் பார்க்கவும்

 
மற்றொரு நண்பர் பான்சிதர் போன்று பாலாதர் அல்லது தண்டபாணி போன்று  பாலாபாணி
என வர வேண்டுமே என்கிறார் அதற்கும் பதில் பாலாஜி என வைக்கக் கூடாது என விதி
எதாவது உள்ளதா? இலக்கணப் மொழிப்  பிழை யாவது உள்ளதா ??


அக்கருத்து சரியானதுதான். பழநி முருகனுக்கு
தண்டபாணி என்றுதானே பெயர். சூலாஜி,
சக்ராஜி - பெயர்களைப் பார்க்கமுடிவதில்லை
என அவர் கூறுவதிலும் உண்மை உள்ளது.
bhAlAji முருகனது பெயர் ஆனாலும் வடபுலத்தில்
கௌமாரமும், முருகனின் பெயர்களும் 
மிகவும் குறைவு


தேவ்

 

கி.காளைராசன்

unread,
Oct 19, 2013, 4:14:54 AM10/19/13
to mintamil, வல்லமை, tamilmanram, தமிழாயம், Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
வணக்கம் ஐயா,

2013/10/17 N D Logasundaram <selvi...@gmail.com>
திருப்பதி எனும் திருமலை மேல் உள்ள கோயிலி ல் முன்பு இருந்த தெய்வம் காளி யும் முருகனும் தான் 
காளி  கோயில்தான் என்பதன் சான்றுகள் 
(1) நடையில் ஏறும்போது உயரப்பகுதியில் உள்ள கோபுரம்
இன்றும் காளி  கோபுரம் என்றே அழைக்கப் படுகின்றது
 இதுபற்றிய கருத்துக்களைப் படித்து வருகிறேன் ஐயா.


(2) 
ஏழுமலையான் கோயில் மூல தானத்தின் மேலுள்ளவை சிங்கங்களே அன்றி வேறில்லை 
இதுவு ம் ஐயத்திற்கு இடமின்றியே நிற்கின்றன மேலும் சிங்கம் காளி  கோயிலில்தான் 
இருக்குமே அன்றி திருமால் கோயிலில் அல்லவே அல்ல
இ ஃ து பலராலும் நூற்றுக்கணக் கான முறை காட்டப்பட்ட மறுக்க முடியாத  சான்றுதான் 

இது பற்றி என்னிடம் மாற்றுக் கருத்துகள் உள்ளன ஐயா.
மூலதானத்தின் மேல் சிங்கங்கள் இருப்பதால் அது ஒரு காளிகோயில் என்று கூறமுடியாது.
சிவன்கோயில்கள் (சுயம்புலிங்கங்கள்) சிலவற்றிலும் சிங்கங்கள் இருப்பதைக் கண்டுள்ளேன்.
எனவே சிங்கங்கள் இருப்பதால் அது காளிகோயில் என்று கூற இயலாது.

மேலும்,
சிங்கம் = அரி (ஹரி)
எனவே அரியின் கோயிலில் சிங்கம் இருக்க வாய்ப்புள்ளது என்றும் கருதுகிறேன்.


(3)
இதுவரை யாரும் காட்டாத சான்று >>>> 

என்றுமே மாற்றப்படாத  திருவாசி வடிவம் 

திரு வாசி என்பது மூர்த்தத்தின் பின் உள்ள பிர பை 

ஆண்  தெய்வங்களுக்கு லிங்கவடிவில் வைப்பதுதான்  மரபு  ICONOGRAPHIC TRADITION 

பெண் தெ ய்வங்களுக்குதான் உச்சிப்பகுதி கீழ் நோக்கி கூர்மையான பகுதியுடன் தொங்கும் 
அதாவது சீட்டுக்கட்டு ஆட்டின் போன்று பெண்குறியைக் காட்டவே வந்தது 


தாங்கள் இங்கு சுட்டியிருப்பது முக்கியமான கருத்து.
பழமையான பெருமாள் கோயில்களில் எப்படி உள்ளன என அறிந்த பின்னரே
திருமலையில் உள்ள திருவாசி யின் வடிவம் குறித்து முடிவு செய்ய முடியும்.
மற்றபிற பழமையான பெருமாள் (நின்ற கோலம்) கோயில்களில் உள்ள திருவாசிகளுக்கும் திருப்பதியில் உள்ள திருவாசிக்கும் வேற்றுமை உள்ளது என்பதற்கான சான்றுகள் ஏதேனும் இருந்து கொடுத்தால் நல்லது ஐயா.

 
முருகன் தான் தெய்வம் என்பதற் குச் சான்று 

(1) கோயில்  மலைமேல் இருப்பது
மலைமேல் மேல் அல்ல ஐயா,
திருமலை கோயில் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளது.  குன்றின் மீதோ, மலையின் மீதோ அல்ல.  

எனவே எல்லா முருகன்கோயில்கள் உள்ள இடங்களையும்,
எல்லா பெருமாள் (நின்ற கோலம்) உள்ள இடங்களையும் 
வெகுவாக ஆராய்ந்து பார்த்தால்தான் ஒரு சரியான முடிவிற்கு வர இயலும் என்று கருதுகிறேன் ஐயா.


உயரமான பகுதியில் தான் காவல் கோட்டைகள் அமைப்பது வரலாறு இயல்பு 
திருமுருகாற்றுப்படை குன்றுதோறாடல் என்பதும் இதைத்தானே 
திருப்பதி கோயில் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளது,
அது உயரமான இடம் அல்ல.  எனவே திருப்பதி கோயில் ஒரு காவல்கோட்டை அல்ல என்பது தெளிவு ஐயா.

 
முருகன் தேவசேனாபதி ஆவான் ஆகவேதான் படைவீடு அவனிடம் ஆகும்  
கையில் போர்மேல் செல் லும் வேலுடனும் கொடியுடனும் காண்பது 
முருகன் கோயில் எதிரில் வைப்பது யானை உருவமே இந்நா ளில்
மயில்காண ப்பட்டாலும் யானை வைப்பதே பழம் மரபு இதுவும் ஓர் 
 போர் உறுப்பு காட்டும் 
தங்களது இந்தக் கூற்றுக்குச் சான்றாக,
 திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (முருகனின்)யின் பாதத்துக்கு அருகே யானையும் கிடா(ஆடு)வும் உள்ளன ஐயா.


வேறு எவராலும் காட்டப்பாடது என்னால் வெளிவந்த சான்று 
(3)
பாலாஜி எனும் பெயர் 
பாலா  भाला என்றால் வேல் அல்லது ஈட்டி எனப்பொருள்படும்
நான் தலைநகர் டில்லியில் 10 ஆண்டு கள் பணியில் இருந்த காலத்து கண்டது 
அங்கு குழந்தைகளுக்கு முதல் முதல் எழுத்துப்பயிற்சி படத்துடன் கற்பிக்கப்
பயன்படும் புத்தகத்தில்நம் நாட்டு அணில் ஆடு இலை ஈ உரல் ஊசி எ ன உள்ளது
போல் ஹிந்தியை கற்பிக்க உள்ள புத்தகத்தில் 4 வது ப விற்கு ஓர் வேலின்
மிகவும் அருமையானதொரு விளக்கம் ஐயா.
ஆனால் இதுபோன்று ஆயுதங்கள் உள்ளவற்றிற்கு இதுபோன்ற பெயர்கள் வைக்கப்பட வில்லை என்ற கருத்தையும் கவனத்திற்கு கொள்ள வேண்டியுள்ளது.

இவையெல்லாம் போக,
எனது ஐயப்பாடு ஒன்றும் உள்ளது.

திருப்பதி வேங்கடவனின் வலக்கை விரல்கள் 
கீழ் நோக்கி நீட்டிய நிலையில் இருப்பதைக் காணலாம்.
இதுபோன்று ஏதோவது ஒரு கோயிலில் முருகனுக்கு உள்ளதா?
இல்லையே...

எனவே திருப்பதியில் உள்ள திருமூர்த்தத்தின் வலதுகரத்தை அடையாளமாகக் கொண்டால் அது பெருமாளுக்கே உரியது என உறுதி செய்யலாம் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Oct 19, 2013, 6:35:38 AM10/19/13
to vall...@googlegroups.com
ஐயா

ரொம்ப கழித்து வந்திருக்கிறேன்.

அதனால் தயக்கத்துடன் ஒரு குறுக்கீடு.

இந்த இழையில் நீங்கள் முதலில் சுட்டிக் காட்டியிருக்கும் காளி கோபுரம் - காளி கோபுரம் அல்ல.

அது Ghaளி கோபுரம்.

அதாவது காற்று வரும் கோபுரம்.  தெலுங்கில் என்றால் காற்று.

அம்புட்டுத்தான்.

அதுக்காக தமிழ் துரோகி என்றெல்லாம் திட்டப்படாது. ஆமாம் சொல்லிப்புட்டேன்.  அப்புறம் திரும்ப வீட்டை விட்டு ஓடிவிடுவேன்.  :))

பென்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com



2013/10/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--

Nagarajan Vadivel

unread,
Oct 19, 2013, 6:54:05 AM10/19/13
to vallamai
ஐயா

எந்தக் கோபுரமானாலும் காத்து வரும்.  

கோவில் கட்டும் சிற்ப ஆகம முறைகளில் காளிக்கென்று கட்டும் கோபுரமும் திருமாலுக்கென்று கட்டும் கோபுரமும் முருகனுக்கென்று கட்டும் கோபுரமும் வடிவில் வேறுபடுமா என்று அறிய வேண்டும்

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது கணபதி ஸ்தபதியார் இதுபற்றி வகுப்பெடுத்தார்

கோபுரம் கட்டிய காலமும் இறைவனின் திருவுருவம் சிலையாக வடிக்கப்பட்ட காலமும் ஒன்றல்ல

எந்த தெய்வம் என்பதில் குழப்பம் நெடுநாட்களாக இருப்பதாகத் தெரிகிறது

அது கெடக்கட்டும் ஒருபக்கம்

நீங்க ரொம்பநாளா இங்க இல்லாமல் நானே ஒத்தையா நின்னு அடிவாங்க வேண்டியதாப் போச்சு

வாங்க வாங்க 

வம்பாண்டி




2013/10/19 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Oct 19, 2013, 7:02:41 AM10/19/13
to vall...@googlegroups.com
பேராசிரியர் ஐயா

எது எப்படியோ - எந்த கோபுரத்தில் காற்று வந்தாலும் சரி.

திருப்பதியில் உள்ளது Ghaளி கோபுரம் ஐயா.  காளி கோபுரம் அல்ல.

Ghaளி கோபுரம் என்று ஏன் அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.  சும்மா குன்ஸாவாக அடித்து விட்டேன்.  அந்த Ghaaளி கோபுரத்தின் காற்றை அனுபவித்து இருக்கிறேன்.  (நீங்களும் அனுபவிக்கலாம்.  முற்றிலும் இலவசம்).  அந்த நினைப்பில் சொன்னேன்.  ஆனால் அது Ghaaளி கோபுரம்தான்.  காளிக்கும் அதுக்கும் தொடர்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

அது இருக்கட்டும்.  இன்னொருத்தனும் சேர்ந்து அடி வாங்கினால் என்ன ஒரு சந்தோஷம் பாருங்கள் உங்களுக்கு.  சேர்ந்து அடி வாங்குவோம் இருங்கள்.

அன்புடன்

பென்னேஸ்வரன்




--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com



2013/10/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Oct 19, 2013, 7:30:15 AM10/19/13
to vallamai
2013/10/19 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
இன்னொருத்தனும் சேர்ந்து அடி வாங்கினால் என்ன ஒரு சந்தோஷம் பாருங்கள் உங்களுக்கு.


​Misery loves the company

Misery loves the company that is miserable


vambu

N. Ganesan

unread,
Oct 19, 2013, 3:31:57 PM10/19/13
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org


On Wednesday, October 16, 2013 3:12:44 PM UTC-7, N D Logasundaram wrote:
அன்புள்ள மடலாடருக்கு,
[...] 
 

இவ்வகையில் மேலும் ஓர் சான்று 

நான் பணியி ருந்து ஒய்வு பெற்று வந்த நிறுவனத்தின் (INEL-ஹோசூர் )  CEO பெயர்

 திருமலை குமரன் பாலாஜி  T K BALAJI 

இவர் டிவி சுந்தரம் அய்யங்கார் அவர்களுடைய பேத்தி (ஷீலா) யின் கணவர் 
லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தை யும் அதன் கிளை நிறு வனங் களை
(மனைவியின் சொத்துக்களை ) நடத் துபவர் 
இப்பெயர் மிகவும் வெளிப்படையாகவே திருமலையில் இருப்பவன் குமாரனான முருகன் தான் 
என ஐயம் ஏதுமின்றிக் காட்டுகின்றது 

வேறு எவராலும் காட்டப்பாடது என்னால் வெளிவந்த சான்று 


This Tirumalai Kumaran is different, nothing to do with Tirupati TiruveGkaTam. TVS family is from Tirunelveli area.
There are many prabandhams in Tamil on tirumalai kumaran in Tirunelveli district.

N. Ganesan

 

முருகதாசக் கவிராயர்

இவர் குலசேகரபுரத்தில் (சேரநாடு) பிறந்தவர். இவரது இயற்பெயர் சிவராமலிங்கம் பிள்ளை. முருகன் திருவருள் வாய்க்கப்பெற்ற இவர், குற்றாலம் அருகில் உள்ள "திருமலை'க்குத் தலபுராணம் பாடியுள்ளார். திருமலைக் குமரன் திருப்புகழ், திருமலைக் குமரன் அந்தாதி, திருமலைக் குமரன் பதிகம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

N. Ganesan

unread,
Oct 19, 2013, 4:05:57 PM10/19/13
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
திருமலைக் குமரன் மீது இயற்றப்பெற்ற பழைய பிரபந்தம். குறைப்பிரதியிலிருந்து  அச்சானது.

திருமலைக் குமரன் அருள் பெருக!

நா. கணேசன் 

தேமொழி

unread,
Oct 19, 2013, 4:28:46 PM10/19/13
to vall...@googlegroups.com
இணையத்தில் இருந்து சில படங்கள்




தேமொழி

unread,
Oct 19, 2013, 4:31:02 PM10/19/13
to vall...@googlegroups.com



சற்று சிறிய படமாக 

N. Ganesan

unread,
Oct 19, 2013, 4:37:41 PM10/19/13
to vall...@googlegroups.com

On Wednesday, October 16, 2013 7:30:02 AM UTC-7, வம்பாண்டி wrote:
திருப்பதியின் ஆதிக்கடவுள் காளி


 
Interesting web site of Agnihotram Thathachariyar. Let me read this.
Thanks for providing the link.
 
NG
 
வம்பு


2013/10/16 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>
திருப்பதித் திருப்புகழ் “கரிவாம்பரி தேர்திறல் சேனையுட
                                        னாந்திரியோதனனாதிகள்..........    பாடல் மூலம் திருப்பதி தெய்வம் முருகன் என்று ஒருமுறை நண்பரொருவர் கூறினார். குறிப்பிட்ட திருப்புகழ் பாடலின் முதல்வரி மட்டும் டைரியில் குறித்திருந்தேன். பாடல் இணையவழி தேடிப் பார்த்தேன். கண்டடைய முடியவில்லை. அப்பாடல் முருகன் திருப்பதித் தெய்வம் என்று கொள்வதற்குச் சான்று கூறுகிறதா என்பதனை நண்பர்கள் மூலம் அறிய ஆவல்.


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/10/16 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


N D Logasundaram

unread,
Oct 19, 2013, 5:54:29 PM10/19/13
to வல்லமை
திரு கணேசனார் அவர்களுக்கு 

தமிழாயத்தில் உள்ள தன் பதிலே இ தற்கும் கொள்க
 
நூ தலோசு 


2013/10/20 N. Ganesan <naa.g...@gmail.com>

--

நியாண்டர் செல்வன்

unread,
Oct 19, 2013, 7:46:56 PM10/19/13
to vallamai, mintamil
திருப்பதி மூலவிக்கிரகம் ஒரிஜினல் விடியோ.

இதில் இருப்பது காளியா, சிவனா, பெருமாளா என விடியோவை பார்த்தால் தெரியும்

https://www.youtube.com/watch?v=ytpsXOTY-UA


2013/10/19 N D Logasundaram <selvi...@gmail.com>



--
செல்வன்

http://selvan.wordpress.com/   (உடல்நலம் குறித்த தமிழ் பதிவு)

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

https://www.facebook.com/war.onsugar (சர்க்கரை மேல் போர்)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

http://www.pinterest.com/holyox/pins/  (தொன்மையான உணவுகள்)

கி.காளைராசன்

unread,
Oct 19, 2013, 8:20:50 PM10/19/13
to mintamil, vallamai
வணக்கம் ஐயா,

அதிகாலையில் அருமையானதொரு தரிசனம்.

மிக்க நன்றியுடையேன்.

அன்பன்
கி.காளைராசன்


2013/10/20 நியாண்டர் செல்வன் <hol...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

unread,
Oct 20, 2013, 5:25:50 AM10/20/13
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com
On Thursday, 17 October 2013 03:42:44 UTC+5:30, N D Logasundaram wrote:
(2) 
ஏழுமலையான் கோயில் மூல தானத்தின் மேலுள்ளவை சிங்கங்களே அன்றி வேறில்லை 
இதுவு ம் ஐயத்திற்கு இடமின்றியே நிற்கின்றன மேலும் சிங்கம் காளி  கோயிலில்தான் 
இருக்குமே அன்றி திருமால் கோயிலில் அல்லவே அல்ல
இ ஃ து பலராலும் நூற்றுக்கணக் கான முறை காட்டப்பட்ட மறுக்க முடியாத  சான்றுதான் 



மதுரை கூடலழகர் ஆலய அட்டாங்க விமானம் -

படத்தைப் பெரிது படுத்திப்பார்த்தால் மேல் இருமுனைகளிலும்
கருடனுக்கருகில் சிம்மம் இருப்பது தெரியும். இது மேலும் பல
விண்ணகர விமானங்களில் இருப்பதுதான். காளி கோவிலில்
மட்டுமே காணப்படும் என்பது தவறு. பலர் பெருமாள்
கோயில் பக்கம் போவதில்லை என்று தெரிகிறது. திருமலைக்கு
மட்டும் போவதால் அங்கு காணப்படுவது மிக அபூர்வமாகத் தெரிகிறது;
அவ்வளவுதான் :))


தேவ்

கி.காளைராசன்

unread,
Oct 20, 2013, 6:02:06 AM10/20/13
to mintamil, vallamai
வணக்கம்.

படத்தைப் பெரிது படுத்திப்பார்த்தால் மேல் இருமுனைகளிலும்
கருடனுக்கருகில் சிம்மம் இருப்பது தெரியும். இது மேலும் பல
விண்ணகர விமானங்களில் இருப்பதுதான். காளி கோவிலில்
மட்டுமே காணப்படும் என்பது தவறு.
நான் அறிந்த வரையில் காளிதேவியானவள் ஐயனாரின் பரிவார தெய்வம். 
தமிழகத்தில் திருமதில்களில் சிம்மங்கள் உள்ள காளிகோயில் ஏதேனும் உள்ளதா?

தேமொழி

unread,
Oct 20, 2013, 8:20:07 PM10/20/13
to vall...@googlegroups.com, kalair...@gmail.com




REF: http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_08.html



REF: http://www.thinakkathir.com/?p=49950



REF: http://shivaarpanam.blogspot.com/










///தமிழகத்தில் திருமதில்களில் சிம்மங்கள் உள்ள காளிகோயில் ஏதேனும் உள்ளதா?///




தேமொழி

unread,
Oct 20, 2013, 8:24:31 PM10/20/13
to vall...@googlegroups.com, kalair...@gmail.com

Banukumar Rajendran

unread,
Oct 21, 2013, 10:08:52 AM10/21/13
to மின்தமிழ், vallamai
ஆராய்ச்சி என்பது,

காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருள்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாதாகும்; உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும் - அறநெறிச்சாரம் - பாடல் - 42

எனக்கு பிடித்த பாடல். :-)


இரா.பானுகுமார்,
சென்னை.

Reply all
Reply to author
Forward
0 new messages