துப்பாக்கி

17 views
Skip to first unread message

செல்வன்

unread,
Oct 7, 2014, 10:48:05 PM10/7/14
to K Selvan

துப்பாக்கி

உலகின் புகழ்பெற்ற கைதுப்பாக்கிகளில் ஒன்று கோல்ட் 45 (Colt 45). இயந்திர துப்பாக்கிகளில் எப்படி ஏகே 47 பிரபலமோ அப்படி கைதுப்பாக்கிகளில் கோல்ட் 45 பிரபலம். இந்த துப்பாக்கி பிறந்த கதை சுவாரசியமானது

19ம் நூற்றாண்டில் கட்டைதுப்பாக்கிகளையும், பயோனட்டுகளையும் ரிவால்வர்களையும் போருக்கு பயன்படுத்தி வந்தார்கள். ரிவால்வர் என்பது தமிழ் சினிமாவில் வில்லன்கள் வைத்திருக்கும் ஆறுகுண்டு அடங்கிய துப்பாக்கி. இதை வைத்து போரை சமாளிக்க முடியாது என்பது 1899ல் துவங்கிய பிலிப்பைன்ஸ்- அமெரிக்க போரில் தெரிய வந்தது. மேலைநாடுகளில் போரில் சாவகாசமாக துப்பாக்கிகளில் குண்டுகளை லோட் செய்து சுடலாம். காரணம் அப்போதைய மேலைநாட்டு போர்களில் இரு தரப்பு வீரர்களும் தொலைதூரத்தில் இருந்து பீரங்கி குண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் சுட்டு கொள்வார்கள். ஆனால் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த போரில் முதல் முதலாக காடுகளில் மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர்வீரர்களை அமெரிக்க படைகள் எதிர்கொள்ள நேர்ந்தது.

காடுகளில் பதுங்கியிருக்கும் பிலிப்பைன் கொரில்லா வீரர்களான மோரோக்கள் (Moro) திடீர் என அமெரிக்க வீரர்கள் மேல் பாய்ந்து தாக்குதல் நடத்துவார்கள். மோரோக்கள் வலியை மறக்கடிக்கும் போதைமருந்தையும் பயன்படுத்தியதால் அமெரிக்க வீரர்களின் ரிவால்வர் துப்பாக்கி குண்டுகள் அவர்களை சாய்க்க முடியவில்லை. ஒரு மோரோவை கொல்ல ஒரு குண்டுக்கும் மேல் தேவைப்பட்டது. ஆறு குண்டுகளை மட்டுமே தாங்கும் ரிவால்வர்களை லோடு செய்கையில் அமெரிக்க படைவீரனை மோரோக்கள் கொல்லும் வாய்ப்பும் அதிகம். இப்படி நடந்த போரில் வெறும் கத்தி, வில் அம்பை மட்டும் வைத்திருந்த மோரோக்கள் அன்றைய உலகின் வல்லரசான அமெரிக்காவை பிலிப்பைன் காட்டுபகுதிகளில் எளிதில் தோற்கடித்தார்கள். கற்கால ஆயுதம் ஏந்திய காட்டுமிராண்டிகளிடம் இப்படி படுதோல்வி அடைந்த அமெரிக்க ராணுவம் பழியை ரிவால்வர்கள் மேல் சுமத்தி புதிய வகை கைதுப்பாக்கிகள் வேண்டும் என முடிவெடுத்தது.


(சிக்ஸ் ஷூட்டர் எனப்படும் ஆறு குண்டுகளை சுடும் ரிவால்வர்கள்)

புதியவகை கைதுப்பாக்கிகளுக்கு வைக்கபட்ட பரிசோதனையில் கோல்ட் 45 மற்றும் சாவேஜ் (savage) எனும் இரு கம்பனிகளின் துப்பாக்கிகள் மட்டுமே இறுதிகட்ட சோதனைக்கு எஞ்சி இருந்தன. கடைசிகட்ட பரிசோதனையில் இரு துப்பாக்கிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து சுட்டுகொண்டே இருந்தார்கள். 2 நாட்களில் கோல்ட் துப்பாக்கி 6000 குண்டுகளை தொடர்ந்து ஓய்வின்றி சுட்டுதள்ளியது. அதன்பின் துப்பக்கி கையில் பிடிக்க முடியாமல் சூடானதும் அதை நீரில் போட்டு எடுத்து மீண்டும் சுட ஆரம்பிக்கையில் அது தொடர்ந்து சுட்டது. அருகே பரிசோதிக்கபட்ட சாவேஜ் துப்பாக்கி 2 நாட்களில் 37 தடவை சுடுவதை நிறுத்தி இருந்தது.
ஆக இப்படிப்பட்ட அக்கினி பரிட்சையில் தேறிய செமி ஆட்டொமாடிக் துப்பாக்கி கோல்ட் அமெரிக்க ராணுவத்தின் ஆதர்ச துப்பாக்கி ஆக மாறியது. அதன் களப்பயனை சோதிக்கும் வாய்ப்பை முதல் உலக யுத்தம் கொடுத்தது.

 Colt 45

முதல் உலக யுத்தத்தில் 13 பேர் அடங்கிய அமெரிக்கபடையணி ஒன்றுக்கு ஜெர்மன் படையணிகளை தாக்கி அவர்களின் பீரங்கிகளை கைப்பற்றும் பணி கொடுக்கபட்டது. பதுங்கி, பதுங்கி சென்ற அந்த அணியின் மேல் யதேச்சையாக வந்து விழுந்த பீரங்கி குண்டு ஒன்று அதன் தலைவர் உட்பட ஆறுபேரை கொன்றது. தலைவரை இழந்த அணிக்கு தலைமை தாங்கினார் ஆல்வின் யார்க் எனும் இளைஞர்.

வெறும் ஏழு பேரை வைத்துகொண்டு நூற்றுகணக்கான ஜெர்மானியர்கள் மேல் தாக்குதல் தொடுத்தார். யார் எங்கே இருந்து சுடுகிறார்கள் என தெரியாத குழப்பமான சூழல். எத்தனை அமெரிக்கர்கள் தாக்குகிறார்கள் என புரியாமல் ஜெர்மானியர்கள் குழம்பினார்கள். ஜெர்மானிய இயந்திர துப்பாக்கிகள் முழங்க அஞ்சாமல் திருப்பி சுட்டார்கள் அமெரிக்கர்கள். ஒரு கட்டத்தில் யார்க்கின் இயந்திர துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்த நிலையில் யார்க்கை நோக்கி பயோநெட் ஏந்திய ஆறு ஜெர்மானிய வீரர்கள் பாய்ந்தார்கள். சற்றும் தயங்காத ஆல்வின் யார்க் தன் கோல்ட் 45 உருவி எடுத்தார். ஆறு ஜெர்மானியர்களையும் சுட்டு தள்ளினார். அதன்பின் யார்க் தன் கோல்ட் 45 மட்டும் வைத்துகொண்டு ஜெர்மானியர்களை சுட்டு தள்ளி முன்னேறி பீரங்கிகளை அடைந்து பீரங்கிகளை இயக்கிய ஜெர்மானியர்களை சுட்டு கொன்று பீரங்கிகளை பிடித்தார். பீரங்கி பிடிபட்டபோது யார்க்கின் துப்பாக்கியில் மீதம் இருந்தது ஒரே ஒரு குண்டுதான்.

பீரங்கிகள் பிடிபட்டவுடன் ஜெர்மானிய தளபதி பால் வால்மர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி சரணடைவதாக கூறினார். அதன்பின் ஒற்றை புல்லட்டுடனும், ஏழு வீரர்களுடனும் களத்தில் நின்ற ஆல்வின் யார்க்கிடம் 4 அதிகாரிகள் உள்ளிட்ட 132 ஜெர்மானியர்கள் சரணடைந்தார்கள்.

ஆல்வின் யார்க்குக்கு ராணுவ வீரர்களுக்கு வழங்கபடும் மிக உயர்ந்த விருதான மெடல் ஆஃப் ஹானர் வழங்கபட்டு கவுரவிக்கபட்டது. கோல்ட் 45 அதன்பின் உலக ராணுவ வரலாற்றில் உயரிய இடம் பெற்றது






C.M உதயன்

unread,
Oct 8, 2014, 4:49:38 AM10/8/14
to பண்புடன், vallamai, mintamil

நல்ல கட்டுரை ஜீ

முன்னர் நான், வீட்டில் உபயோகமற்றது என தூக்கி போடும் பொருட்களில் இருந்து ஏதேனும் செய்து கொண்டிருப்பேன், ஒன்றரை அடி நீளம் உள்ள இரும்பு பைப் கொண்டு துப்பாக்கி வடிவமைத்திருந்தேன், தோட்டாக்களாக AAA, AA சைஸ் பேட்டரிகளை உபயோகித்தேன்.

ட்ரிக்கர் அழுத்தி முடித்ததும் தானாக உள்ளிருக்கும் மோட்டார் (டேப்ரிக்கார்டரில் இருக்கும் மோட்டார்) இயங்கி பேரலில் உள்ள ஸ்ப்ரீங் இழுபட்டு நிற்க்கும் அடுத்த குண்டுகளை தாங்கி, ட்ரீக்கர் அழுத்தியவுடன் பேட்டரியாக உள்ள தோட்டா 10 அடி வரை பாயும்.

கொஞ்ச நாள் உப்யோகமபடாமல் வைத்திருந்து ஒரு நன்நாளில் உபயோகித்த போது எதிர்பார்த்த வேகத்தை விட அதிகம் பாய்ந்து என் தம்பி காதில் உரசி சென்றுவிட்டதால் அப்பா வழக்கம் போல் உடைத்து அதை குப்பையில் போட்டு விட்டார்.

இதே போல் தானியங்கி துப்பாக்கி வடிவமைத்திருந்தேன், சத்தம் கேட்டால் தானாக அந்த திசை நோக்கி திரும்பி சுடும் வண்ணம், சவுண்ட் சென்சார் சரியாக பொறுத்ததால் மோட்டார் வேகமாக சுற்றி துப்பாக்கி தானாகவே டிஸ்மெண்டல் பண்ணிக் கொண்டது.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Nagarajan Vadivel

unread,
Oct 8, 2014, 5:32:22 AM10/8/14
to vallamai
இதென்ன கொடுமை

தட்டாம் பூச்சியைக்கூடக் கையில் பிடிக்காமல் படம்பிடிக்கும் சமணப்பிள்ளை பேசும் பேச்சா இது?

இனா பனா அனா

வேந்தன் அரசு

unread,
Oct 9, 2014, 6:53:44 AM10/9/14
to vallamai, K Selvan
செல்வன் துப்பாக்கி வாங்கபோறாரு டோய்

7 அக்டோபர், 2014 10:47 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Oct 9, 2014, 4:55:26 PM10/9/14
to vall...@googlegroups.com, hol...@gmail.com
செல்வனுக்கு  துப்பாக்கி வாங்கும் உரிமம் வேண்டுமென்றால் இந்தப் பாட்டை (பிழையில்லாமல் ) பாடிக் காட்டினால்தான் உரிமம் வழங்கப்படும் என சட்டம் போடச் சொல்லி நான் கோரிக்கை வைப்பேன்...



..... தேமொழி 

செல்வன்

unread,
Oct 10, 2014, 4:21:17 PM10/10/14
to தேமொழி, vallamai

2014-10-09 15:55 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
செல்வனுக்கு  துப்பாக்கி வாங்கும் உரிமம் வேண்டுமென்றால் இந்தப் பாட்டை (பிழையில்லாமல் ) பாடிக் காட்டினால்தான் உரிமம் வழங்கப்படும் என சட்டம் போடச் சொல்லி நான் கோரிக்கை வைப்பேன்...

இந்த பாட்டு அதை விட பொருத்தமா இருக்கும் :-)


தீவிரவாதிகளின் தீவிரவாதி
வில்லன்களின் வில்லன்

செல்வன்

unread,
Oct 10, 2014, 4:21:58 PM10/10/14
to வேந்தன் அரசு, vallamai

2014-10-09 5:53 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
செல்வன் துப்பாக்கி வாங்கபோறாரு டோய்


இப்ப வாங்கமாட்டேன். எங்க ஊர்ல கிரைமே கிடையாது. பாருக்கு போய் யாரையாவது வம்பிழுத்தால் தான் உண்டு
Reply all
Reply to author
Forward
0 new messages