மறைந்த 100 ஈழத்து இலக்கிய ஆளுமைகள்

179 views
Skip to first unread message

Maravanpulavu K. Sachithananthan

unread,
Aug 5, 2015, 8:37:12 AM8/5/15
to mintamil, vallamai
'காந்தளகம்' வெளியீடாக இலக்கியப் பூக்கள் இரண்டு பகுதிகள் கொண்ட ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. இரு பகுதிகளும் 916 பக்கங்கள்.
இலக்கியப் பூக்கள் தொகுப்பு நூல். இத்தொகுப்பு நூலில் 100 ஈழத்து இலக்கிய ஆளுமைகள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. 
இலண்டன் எழுத்தாளர் முல்லை அமுதனே இரு பகுதிகளினதும் தொகுப்பாசிரியர். 
இரு பகுதிகளிலும் உள்ள இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள், ஊர்கள் உள்ளிட்ட 3127 குறிப்புகள் / பக்க எண்களுடன் இரண்டாம் பகுதியின் இறுதியில் சுட்டியாக இருப்பதால் வாசகர் தேடல் எளிதாகிறது.
அமரர்களான ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் விபரங்களைத் தொகுத்து இரு தொகுப்புகளை வழங்கியுள்ள முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர். 
இவ்விரு பகுதிகளும் ஆவணச்சிறப்பு மிக்கவை. 
இந்நூலில் இடம் பெற்றுள்ள இலக்கிய ஆளுமைகளின் விபரங்களும், அவர்களைப்பற்றி எழுதியுள்ள கட்டுரையாசிரியர்கள் பற்றிய விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. 
இந்நூலினை வாங்க விரும்புபவர்கள் காந்தளகம் பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:
காந்தளகம்
4, முதல் மாடி, இரகிசா கட்டடம், 
68, அண்ணா சாலை, சென்னை - 600 002.
தொ.பே.: 0091 - 44 - 2841 4505
மின்னஞ்சல்: tami...@tamilnool.com
மின்னம்பலம்: www.tamilnool.com
இந்நூலில் இடம் பெற்றுள்ள ஆளுமைகளின் பெயர்களும் கட்டுரை ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு
1. ஈழத்து முன்னோடித் தமிழ்பெரும் புலவர் ஈழத்துப் பூதன்தேவனார் -மயிலங்கூடலூர் பி. நடராசன் 7
2. உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை -ம. பா. மகாலிங்கசிவம் 16
3. சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் -ம. பா. மகாலிங்கசிவம் 19
4. பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை -ம. பா. மகாலிங்கசிவம் 25
5. குருகவி ம. வே. மகாலிங்கசிவம் -ம. பா. மகாலிங்கசிவம் 28
6. தமிழ் மூதறிஞர், இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை -கா. சிவபாலன் 33
7. பேரறிஞர், தவத்திரு தனிநாயக அடிகள் -திருமதி ஜெயா நடேசன் 40
8. வித்துவான், கவிமணி, கலைஞானி, புலவர் க. த. ஞானப்பிரகாசம் -திருமதி ஜெயமணி கனகரத்தினம் 46
9. ஈழத்து நாடக இலக்கியப் பெரும் புலவர் தேவசகாயம்பிள்ளை -தமிழ் வேள் இ. க. கந்தசுவாமி 55
10. இரசிகமணி கனக. செந்திநாதன் -வி. கந்தவனம் 58
11. சுரபாரதி, சேவா துரந்தரர், வித்துவ சிரோன்மணி, வித்தியா கலாபமணி, சிவகலா பூஷணம், சமஸ்கிருத பண்டிதர், பிரம்மஸ்ரீ ச. பஞ்சாக்ஷர சர்மா - கோப்பாய் சிவம் 66
12. சிறுவர் இலக்கியவாதி, வ. இராசையா -அநு. வை. நாகராஜன் 70
13. தமிழ்அறிஞர், ஞானசிரோன்மணி, பண்டிதர் வடிவேல் -திருமதி இராதாதேவி சிவசுப்பிரமணியம் 77 14. கிருஷ்ணா வைகுந்தவாசன் - வாழ்வும் பணியும் -திருமதி மகேஸ்வரி வைகுந்தவாசன் 87
15. தமிழ்மணி சிவ. விவேகானந்த முதலியாரின் வாழ்க்கை வரலாறு -அன்புமணி 95
16. நாவற்குழி மண் தமிழீழத்திற்கு அளித்த மாபெரும் சொத்து பண்டிதர் சு. வே. -முல்லை அமுதன் 102
17. அ. செ. முருகானந்தன் -முருகபூபதி 107
18. அறிஞர் அ. ந. கந்தசாமியின் பன்முக ஆளுமை - வ. ந. கிரிதரன் 115
19. வரதரின் நினைவுகளுடன்... -என். செல்வராஜா 133
20. தன் படைப்புகளின் ஊடாகத் தன்னை இனம் காட்டும் எழுத்தாளர் நந்தி -என். செல்வராஜா 140
21. கவிஞர் தில்லைச் சிவன் (தில்லையம்பலம் சிவசாமி)-இ. நடராசா 152
22. ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்த்த சொக்க(னார்)ன் -சிவலிங்கம் சிவபாலன் 155
23. புலவர் மிக்கேல்பிள்ளை -மா. கி. கிறிஸ்ரியன் 164
24. பேராசிரியர் கைலாசபதி அவர்களின் எழுத்து, ஒரு மதிப்பீடு -சிவானந்தன் 177
25. யாழ்வாணன் வாழ்வும் பணியும்
-கண்ணதாசன் யாழ்வாணன் 186
26. ஏஜே: சில நினைவுச் சிதறல்கள் -மு. புஷ்பராஜன் 190
27. அப்பச்சி மகாலிங்கம் அவர்களின் அழியாச் சுவடுகள்
-நவாலியூர் நடேசன் 204
28. மு. தளையசிங்கம் அவர்களின் குறுகிய வாழ்வின் சில பக்கங்கள் -என். கே. மகாலிங்கம் 208
29. பிரமிள் -முனைவர் கால. சுப்பிரமணியம் 229
30. எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் -தம்பு சிவசுப்பிரமணியம் 235
31. படைப்பாற்றல் மிக்க கலைஞர் அங்கையன் கயிலாசநாதன் -தம்பு சிவசுப்பிரமணியம் 241
32. செ. யோகநாதன் -முல்லை அமுதன் 247
33. செம்பியன் செல்வன் பற்றிய நினைவுப் பெருக்கு
-கருணாகரன் 253
34. பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
-திருமதி நவஜோதி ஜோகரட்னம் 279
35. சிலோன் விஜயேந்திரன் - சில நினைவுகள்
-மறவன்புலவு க. சச்சிதானந்தன் 284
36. நாவண்ணன் -மட்டுவில் ஞானக்குமாரன் 292
37. ராஜ ஸ்ரீகாந்தன் -முருகபூபதி 304
38. காலத்துயர், சு. வி. பற்றிய நினைவுக் குறிப்புகள் -கருணாகரன் 310
39. அநுபவங்களை ஆவணப்படுத்திய படைப்பிலக்கியவாதி சி. புஸ்பராஜா -வண்ணை தெய்வம் 320
40. சிவலங்கம் சிவபாலன் என்னும் இலக்கியவாதி...... -வண்ணை தெய்வம் 325
41. கணபதி கணேசன் -முல்லை அமுதன் 331
42. முல்லை மண்ணுக்கு மகுடமிட்ட கவிமன்னன், புதுமைக் கவிஞர், முல்லையூரான் என்ற முருகேசு சிவராஜா அவர்கள் -வேலணையூர் பொன்னண்ணா 334
43. நினைவில் நீங்காத குமார் மூர்த்தி
-என்.கே.மகாலிங்கம் 334
44. அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்! எஸ்போஸ் பற்றிய நினைவுகள் -கருணாகரன் 340
45. நாவலர் குரு இருபாலைச் சேனாதிராய முதலியார் - திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 385
46. வசனநடை வல்லாளார், ஈழத்தின் சைவ எழுஞாயிறு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் - அருண். விஜயராணி 397
47. உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் - பண்டிதை தேவகியம்மாள் 404
48. ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் - இலக்குவனார் திருவள்ளுவன் 432
49. தமிழறிஞர் சபாபதி நாவலர் - திருமதி. இரா. கல்பனா அரவிந்தன் 444
50. செந்திநாதையரின் எழுத்துப்பணி - சித்தாந்த இரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் 447
51. ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை - சு. சா. அரவிந்தன் 455
52. யானறிந்த யாழ்பாணத்து அறிஞர் சதாவதானம் நா. கதிரவேற்பிள்ளை - சு. சா. அரவிந்தன் 459
53. ஆனந்தக் குமாரசாமி - வரதா சண்முகநாதன் 463
54. புலவர், வைத்தியர் ஆ. வேலுப்பிள்ளை உபாத்தியாயர் - கி. தவபாக்கியம் 468
55. நவாலியூர் தந்த பெரும் புலவர், தங்கத் தாத்தா - பல்மருத்துவக் கலாநிதி இளமுருகனார் பாரதி 471
56. இலங்கையின் தேசியகீதத்தைத் தமிழில் தந்த முதுதமிழ்ப் புலவர் முருகுப்பிள்ளை நல்லதம்பி - ஆய்வாளர் சூ. யோ. பற்றிமாகரன் 484
57. ஈழத்தின் முதற் பெண் புலவர் பண்டிதை இ. பத்மாசனி அம்மாள் - ம. பா. மகாலிங்கசிவம் 492
58. ஒற்றையடிப் பாதையில் பயணித்த சைவப்புலவர் சி. வல்லிபுரம் - புலவர் சீடன் 500
59. தென் மோடிக் கூத்தின் முன்னோடி அண்ணாவியார் பக்கிரி சின்னத்துரை - கவிஞர் மா. கி. கிறிஸ்ரியன் 508
60. தனித்தமிழ் வளர்த்த புலவர்மணி இளமுருகனார் - மருத்துவக் கலாநிதி இளமுருகனார் சோ. பாரதி 519
61. நானறிந்த நற்றவத்தார் நாடறிந்த நமசிவாயத்தார் - மறவன்புலவு க. சச்சிதானந்தன் 533
62. பேராசிரியர் வண. பிதா தனிநாயகம் அடிகள் - முருகேசு பாக்கியநாதன் 547
63. கோவைக்கிழார் க. இ. குமாரசாமி - ம. பா. மகாலிங்கசிவம் 579
64. வாரித் தமிழ் வழங்கிய வள்ளல் ஆறுமுகன் - தமிழரசி 582
65. விளங்கு புகழ்க் கவிஞர் வித்துவான் வேந்தனார் - பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் 607
66. சித்தாண்டி தலபுராணம் பாடிய அமரர் இலக்கியமணி ஆரையூர் நல். அளகேச முதலியார் - அன்புமணி 616
67. சிரஞ்சீவிதமான சிந்தனையாளன் தம்பலகாமம் க. வேலாயுதம் - வே. தங்கராசா 626
68. தமிழுக்குத் தன்னை அடையாளப்படுத்தி நின்ற மாமனிதர் அமுது ஐயா - முல்லை அமுதன் 632
69. தமிழ்ப் பித்தர் அமரர் க. சச்சிதானந்தன் - கமலநாதன் சுதர்சன் 637
70. ஈழமேகம் பக்கீர்தம்பி - வெலிப்பன்னை அத்தாஸ் 643
71. தேவன்- யாழ்ப்பாணம் - வ. ந. கிரிதரன் 650
72. வரதர் - கருணாகரன் 660
73. எனது ஆசான் தமிழருவி சண்முகசுந்தரம் - குரு அரவிந்தன், கனடா 668
74. எழுத்தாளர் அமரர் வ. அ. இராசரத்தினம் பற்றிய சில நினைவுகள் - அ. பாலமனோகரன் 675
75. அருள் செல்வநாயகம் - வசுந்திரா பகீரதன், அவுஸ்திரேலியா 682
76. அகஸ்தியர்! எனது பதிவுகள் - முல்லை அமுதன் 688
77. ஈழத்தமிழ்க் கவிதையுலகில் ஆழத் தடம் பதித்த அமரர் ஆரையூர் அமரன் - அன்புமணி 693
78. எனது நினைவுகளில் கே. டானியல் - வண்ணை தெய்வம் 700
79. நந்தியும் மலையகமும் - ப. ஆப்டீன் 711
80. கலைப்பேரரசு திரு. அ. கூ. பொன்னுத்துரை
- வி. கந்தவனம் 723
81. மூத்த பத்திரிகையாளர் ஐயா சிவநாயகம் - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் 727
82. வாழ்வாங்கு வாழ்ந்தவர்! இளவாலை ஜேசுரத்தினம் - முல்லை அமுதன் 734
83. அமரர் கவிஞர் நீலாவணன் - முகில்வண்ணன் 739
84. கைலாசபதியின் பார்வையில் உலகமயமாக்கல், ஊடுருவல், தேசிய இனப் பிரச்சினை - லெனின் மதிவானம் 752
85. தனிவழியில் ஒரு வெளி: கவிஞர் தா. இராமலிங்கம் நினைவுகள் - கருணாகரன் 769
86. பல்கலைவித்தகர் அநு. வை. நாகராஜன்
- உடுவை எஸ். தில்லை நடராசா 784
87. அண்ணாவியார் சாமிநாதர் - மா. கி. கிறிஸ்டியன் 791
88. 118 நாவல்கள் எழுதிய பவள சுந்தரம்மா - அன்புமணி 800
89. என் இதயத்தில் வாழும் ஏ. ஜே. - நவாலியூர் நடேசன் 806
90. கவிஞர் இ. முருகையன் சில நினைவுத் தடங்கள் - இரவீந்திரன் நடேசன் 812
91. ஈழவாணன் - மேமன்கவி 819
92. கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் அமரர் சண்முகம் சிவலிங்கம் - முகில்வண்ணன் 825
93. கவிஞர் கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை - வி. கந்தவனம் 830
94. கவிஞர் எஸ். எல். ஏ. இலத்தீப் (மருதூர் வாணன்) - முகில்வண்ணன் 834
95. ஆலங்கேணி இரட்டையர் 1. க. தங்கராசா - தாமரைத்தீவான் 840
96. ஆலங்கேணி இரட்டையர் 2. கு. கோணாமலை - தாமரைத்தீவான் 844
97. சிலோன் விஜயேந்திரன் - திருமதி. இரா. கல்பனா அரவிந்தன் 848
98. மாமனிதர் நாவண்ணன் - பூங்கோதை 851
99. தெ. நித்தியகீர்த்தி - மூனா, யேர்மனி 858
100. டானியல் அன்ரனி எனும் என் அன்புத் தோழர் - நந்தினி சேவியர்

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
cover I P front.jpg
mullaiamuthan.tif

Swaminathan Venkat

unread,
Aug 5, 2015, 9:11:23 AM8/5/15
to all friends in, mintamil
நான் எல்லாமே தெரிந்தவன் இல்லைதான். ஆனாலும் எனக்கு இருக்கும் கொஞ்ச பரிச்சயத்திலேயே, இதில் சில முக்கிய விடுபடல்கள் இருப்பது உறுத்துகிறது.

1. விபுலானந்த அடிகள்
2. கா. சிவத்தம்பி
3. மகா கவி
4.செல்வா கனகநாயகம்
5.எஸ் பொன்னுதுரை
இந்தப் பெயர்கள் உடன் நினைவுக்கு வருபவை.  யோசித்தால் இன்னும் சில நினைவுக்கு வருமோ என்னவோ.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages