Tēvāram 4:36__2
போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;---நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்---குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்---பழனத்து எம் பரமனாரே.
-- jlc (in Müssen)
Greetings
"விடவும் கில்லேன்"
Tēvāram 4:36__2
போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;---நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்---குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்---பழனத்து எம் பரமனாரே.
On Thursday, February 25, 2021 at 1:00:40 AM UTC-6 jeanluc.c...@gmail.com wrote:Greetings
"விடவும் கில்லேன்"
Tēvāram 4:36__2
போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;---நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்---குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்---பழனத்து எம் பரமனாரே.
முன்பு மு. இராகவயைங்கார் எழுதியதைப் படித்துள்ளேன். CTamil-ல் பேசியுள்ளோம்.கில்- :: கில்+து = கின்று எனவும் வரும். உ-ம்: நடக்கின்றது.
நா. கணேசன்
On 25/02/2021 05:44, rajam wrote:
நண்பர்களே, வணக்கம். நான் ‘வாட்சப்’ போன்ற குழுமங்களில் இல்லை. எனக்காக … ஒரு சொல்லைப் பற்றிக் கேட்டறிய முடிந்தால் அறிந்து சொல்லவும். அந்தச் சொல் ‘கில்லா.’ சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் காணப்படுகிறது. அதைப்பற்றி இணையக் குழுமங்கள் என்ன சொல்கின்றன என்று அறிய ஆவல். [தற்குறிப்பு: நெடுங்கால முன்பு ... இதைப் பற்றித் தமிழாய்வாளர் கமில் சுவலெபில் அவர்களிடம் கேட்டேன், விடையே கிடைக்கவில்லை. :-( ] நன்றி, ராஜம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/2138739a-4555-4f09-8a0b-690118c2ccd8n%40googlegroups.com.
மிக்க நன்றி இழான் (Jean-Luc).
கில்-கில்-தல், கிற்றல் என்பதைப் பார்த்திருக்கின்றேன். செய்யகில்லேன் என்று
நானே சில இடங்களில் பயன்படுத்தியும் உள்ளேன். இது நன்கு அறிந்த
சொல்லாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் இசானபோர்டு இசுட்டீவர்
(Sanford Steever) இந்தக் ‘கில்’ என்னும் சொல்லைப்பற்றி புதிய கண்டுபிடிப்பாக
எழுதியதைப் பார்த்து சற்று அதிர்ச்சியுற்றேன்.
இதைபற்றி அப்பொழுதே எழுதவேண்டுமென்று நினைத்தேன்.
தமிழ்ப்பேரகராதி தெளிவாக, கில்-தல், கிற்றல் பற்றிக் கூறுகின்றது:
கம்ப இராமாயணத்திலே பல இடங்களில் வருகின்றது இச்சொல்.
“துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்” என்று ஈரிடங்களில் வருகின்றது.
அன்புடன்
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/be8c76b9-7b52-627b-f7f4-36c9eb6aa42c%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7eNB1HC9jJcz%3DUfK26v6%2BW45iovk5LWE%2Be9sJukofpfZw%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/B546168F-A962-42E5-9528-E6D8AC564701%40earthlink.net.
' சொல்ல இயலாதவை ' என்று பொருள் கொண்டாலும் பொருத்தமாகத் தான் இருக்கிறது.
Greetings
"விடவும் கில்லேன்"
Tēvāram 4:36__2
போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;---நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்---குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்---பழனத்து எம் பரமனாரே.
On 25/02/2021 05:44, rajam wrote:
நண்பர்களே, வணக்கம். நான் ‘வாட்சப்’ போன்ற குழுமங்களில் இல்லை. எனக்காக … ஒரு சொல்லைப் பற்றிக் கேட்டறிய முடிந்தால் அறிந்து சொல்லவும். அந்தச் சொல் ‘கில்லா.’ சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் காணப்படுகிறது. அதைப்பற்றி இணையக் குழுமங்கள் என்ன சொல்கின்றன என்று அறிய ஆவல். [தற்குறிப்பு: நெடுங்கால முன்பு ... இதைப் பற்றித் தமிழாய்வாளர் கமில் சுவலெபில் அவர்களிடம் கேட்டேன், விடையே கிடைக்கவில்லை. :-( ] நன்றி, ராஜம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/be8c76b9-7b52-627b-f7f4-36c9eb6aa42c%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/B546168F-A962-42E5-9528-E6D8AC564701%40earthlink.net.
Dear VSR,
in case you (or other members of the list) are interested to know how François Gros translated in 1968 into French the passage which you are referring to, here is his French translation:
«Les mots que disent ceux qui se tiennent en rangs serrés sur le bord de la rive,
Nombreux et confus, s'élèvent à la fois.
Qui peut les comprendre et les écouter tous ? C'est impossible!
Quelques-uns seulement ont été perceptibles à nos oreilles.»
(François Gros, 1968, page 82)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/d5d0be60-3fc2-5f17-d655-bab5e188fe7a%40gmail.com.
அம்மையீர்,
வணக்கம்.
பரிபாடல் - உரை பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு பக் 268-9
….துறை
முன்றுறை நிறையணி நின்றவர் மொழிமொழி
ஒன்றல பலபல வுடனெழுந் தன்றவை
எல்லாந் தெரியக் கேட்குநர் யாரவை
கில்லா கேள்வி கேட்டன சிலசில
என்னும் வரிகளுக்கு
துறை முன்றுறை நிறையணி மொழிமொழி - அப்பொழுது அவ் வையையின்கண் நீராடுந் துறையின்
முன் நிறைந்த அணி அணியாக நின்ற மாந்தர் மொழிகின்ற மொழிகள்.
ஒன்றல பலபல உடனெழுந்தன்று - ஒன்றையொன்று ஒவ்வாது பலபலவாக ஒருகாலத்தெழுந்தன.
யாரவை எல்லாம் தெரிய கேட்குநர்- யாரே அம்மொழிகளை எல்லாம் பொருள்விளங்கக் கேட்க
வல்லார்.
கில்லா - அவை கேட்டல் கூடா
கேட்டன சிலசில - எம்மாற் கேட்கப்பட்டன ஒருசிலவேயாம்
என்று விளக்கம் தருகின்றார்.
.
இது பற்றிய என் கருத்துகள்:கில்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்று நினைக்கின்றேன்.
எனவே கில் என்பது அடிச்சொல் என்று கருதுகின்றேன். இதன் பொருள் இயலுதல், (ஒன்றைச் செய்யும் வல்லமை கொண்டிருத்தல்). இப்பொருள் இப்பாட்டில் முற்றிலும் பொருந்துவதாகவே கருதுகின்றேன்.
பொ.வே.சோ அவர்கள் கூறும் “கூடா”: என்பது ‘சேராத, முடியாத, செய்ய இயலாத (நடைபெறாத, நடைபெற இயலாத) என்னும்
பொருளில் ஆண்டுள்ளார் என்று கருதுகின்றேன்.
அன்புடன்
செல்வா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/B546168F-A962-42E5-9528-E6D8AC564701%40earthlink.net.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7fWuvRqoqOKL4OyHkc3RtAxn%3Drj05C0xm8yG6OT2fSaMg%40mail.gmail.com.
நானும் வலிமிகுந்திருக்கவேண்டுமே என்று நினைத்தேன்.
ஏன் அப்படி மிகவில்லை (ஏதும் எழுத்துப்பிழையா அல்லது
வேறு ஏதேனும் காரணம் பற்றியா) என்று தெரியவில்லை.
அன்புடன்
செல்வா
On Feb 27, 2021, at 1:33 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:அம்மா,இந்த ஒற்று மிகும் என்ற இலக்கணம் பேச்சுத்தமிழைக் கட்டுப்படுத்த இயலுமா?சகஇயலாது, கண்மணி.நமக்குக் கிடைத்திருக்கும் முதல் இலக்கணமாகிய தொல்காப்பியமே “வழக்கும் செய்யுளும் நாடிச்” செய்யப்பட்டதாகத் தானே அறிகிறோம். அந்நூலிலும் வழக்கு, செய்யுள் பற்றிய குறிப்புகள் உண்டே.அன்புடன்,ராஜம்
குன்றிமணிகளின் வண்ணத்தில் மயங்கி; ஓடிஓடிப் பொறுக்கி விளையாடும் பெதும்பைப் பருவத்துப் பெண்- புறம்.340.
தன் கையில் பாலை எடுத்துக் கொண்டு உண்ணச் சொல்லித் தாய் வற்புறுத்தக் கூடிய இளம்பெண்- புறம்.346.
‘கோங்கின்முகை வனப்புஏந்திய முற்றாஇளமுலைத் தகை’- பதின்மவயதுப்பெண்-புறம்.336.
புறம்345- ‘நெருங்கல் வெம்முலை மையல் நோக்கு’ உடையவள்- மங்கைப் பருவத்தினள்.
On Mar 2, 2021, at 8:50 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:பரிபாடலின் பாடுபொருள் அனைத்தும் வையை, திருப்பரங்குன்றத்து முருகன், அழகர்மலைப் பெருமாள் என்று மதுரையைச் சுற்றியுள்ள இடங்கள் தாமே.பாடிய புலவர்களும் அவற்றை நேரில் கண்டு எழுதியதாகத் தானே இருக்கிறது.வட்டாரத்தை வரையறை செய்வதில் சிக்கல் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை .
காலம் பற்றி நான் கொண்ட கொள்கைக்குக் காரணம் முருகனை அழைக்கும் முறை .மிகத் தெளிவாக வேறுபாடு உள்ளது. ஒரு கட்டுரைக்காக நான் அட்டவணைப்படுத்திய போது கண்டேன். இன்னொரு அட்டவணையும் வரையறுத்துப் பார்த்த நினைவு உள்ளது. தேடி எடுக்க வேண்டும்.
ஒரு ஐயம் ... தொகையிலக்கியம் யாப்புக்காகப் பாடப்பட்டது இல்லையே... என்னுடைய புரிதல் அப்படி …
ஆசிரியப்பாவாக இருந்தாலும் இடையிடையே வஞ்சி அடிகள் விரவி வரும். காரணம் ?
வாய்மொழித்தன்மை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.எனக்கு யாப்பில் அவ்வளவாகப் பயிற்சி கிடையாது அம்மா.இந்த மடல் எழுத முக்கிய காரணம் ...
சில மாதங்களுக்கு முன் பாரிமகளிர் வயது பற்றி இந்தாலஜி குழுமத்தில் நிகழ்ந்த உரையாடல் குறித்து ஐயம் எழுப்பி இருந்தீர்கள்... அவர்கள் இருவரும் 10+ வயதினர் தாமே ?! எப்படிப் பாடியிருக்க முடியும் என்றெல்லாம் ….
ஒரு கட்டுரைக்காக மகட்பாற்காஞ்சிப் பாடல்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்.வேந்தர் அடாவடித்தனமாகக் கேட்கும் பெண்கள் எல்லோரும் 10+ வயதினர் இல்லை.குன்றிமணிகளின் வண்ணத்தில் மயங்கி; ஓடிஓடிப் பொறுக்கி விளையாடும் பெதும்பைப் பருவத்துப் பெண்- புறம்.340.தன் கையில் பாலை எடுத்துக் கொண்டு உண்ணச் சொல்லித் தாய் வற்புறுத்தக் கூடிய இளம்பெண்- புறம்.346.‘கோங்கின்முகை வனப்புஏந்திய முற்றாஇளமுலைத் தகை’- பதின்மவயதுப்பெண்-புறம்.336.புறம்345- ‘நெருங்கல் வெம்முலை மையல் நோக்கு’ உடையவள்- மங்கைப் பருவத்தினள்.அதிலும் அந்தப் பெண்ணின் பார்வையில் 'மையல்' உள்ளது... திட்டவட்டமாக மங்கைப் பருவத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பவள். ஏனெனில் 'நெருங்கல் வெம்முலை' கொண்டவள். பாரிமகளிர்க்கு 10+ வயது என்று சொல்ல இயலாது. இப்படியும் இருக்கலாம் அல்லவா?!இதை உங்கள் இந்தாலஜி குழுமத்தில் பேசப் பயன்படுத்தலாமே.