--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புடன்
தமிழ்த்தேனீ
Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP
Blogspot Link: http://thamizthenee.blogspot.com
YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos
Contact:
Email: rkc...@gmail.com
Mobile: +91-9840686463
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
அன்பின் செல்வன், இழையை ஆரம்பித்தது நீங்கள். ஆனால் நான் அண்ணா கண்ணன் அவர்களை மட்டிலும் பாராட்டி விட்டு உங்களை விட்டு விட்டேனானால் தவறு. உங்களது கருத்துக்களில் தர்க்கம் பொதிந்திருக்கிறது அண்ணா கண்ணன் அவர்களது கருத்தில் உணர்வுகள் தெளிவாக ப்ரதிபலிக்கப்பட்டிருக்கின்றன. அது சட்டென்று மனதில் பதிந்து விட்டது. ஸ்டார்ட்டர் வீக்கான ட்யூப்லைட் மாதிரி மெதுவாக லைட் எரிஞ்சாலும் சரி வெளிச்சம் வருகிறதே. சந்தோஷம் :-)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
காட்ட முடியாது என்பதே நிதர்சனம். காட்டிவிட்டால், என்ன நடக்கும் எனக் கேரளாவில் காட்டியிருக்கிறார்கள்.
இந்த இழையில் இப்போது இது எதற்கு?ப.பாண்டியராஜா
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தமிழ் கருவறையில் ஒலிப்பதற்கு முழுக் காரணம் ஆண்டாளின் 30 பாக்கள். கோவிலில் செட்டியார், முதலியார், இடையர், பிராமணர், நாயுடு, ரெட்டியார் என அனைத்து மக்களும் ஒருங்கே அமர்ந்து வழிபாடு நடத்தும் ஒரு நோன்பு ஆண்டாளின் மார்கழி நோன்பு.பக்திக்கு அன்பே அடிப்படை தொழிலோ, பிறப்போ அடிப்படை அல்ல. . வைரமுத்து தனது மனக் கோணலை இப்படி ஒரு பெண் மீது ஏவி இருக்கக் கூடாது.எத்தனையோ கணிகையர் குலமக்கள் கோவிகளுக்கும் கோவில் நிகழ்வுகளுக்கும் அளப்பறிய கொடைகளை வழங்கியுள்ளனர்.ஸ்வாதி ஸ்ரீ விஜயாதித்ய சத்யஸ்ரைய ஸ்ரீ பிரித்வி வல்லப மகாராஜாதிராஜ படாரர உயிர்தலைவி (பிராணவல்லபே) வினாபோடிகள் எனும் சுள்ளையர். இவரது முது தாய் (அம்மைக்கு அம்மை) விரேவமஞ்சல் கலாவரா மகள் குசிபோடி களாவர மகள் வினாபோடிகல் இங்கே (இல்லியே) ஹிரண்யகர்ப்பம் இழுத்து எல்லா தானமும் கொடுத்து தெய்வத்திற்கு பீடம் அங்கிசுவினை கட்டி வெள்ளி மாலை கட்டி மங்கல் உள்ளே 800 சேத்திரம் கொடுத்தோள். இதனை அழிவோனுக்கு மாபாவம் மிகும்.
மங்கன் காப்பன்2018-01-10 19:55 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:இதில் உண்மையில் வெளியே வரும் விசயம் என்னவெனில் பல்கலைகழகங்களின் ஆய்வுகள் நடக்கும் லட்சணம்தான்.ஆண்டாள் என ஒருவர் உண்மையிலேயே இருந்தாரா, வரலாற்றுகதாபாத்திரமா என்பதற்கே கர்ணபரம்பரை கதைகளும் அவர் பெயரில் உள்ள பாடல்களும் தான் ஆதாரம் எனும் நிலையில் அவரது பாடல்களை தன் மேற்கத்திய மனோநிலையில் கேட்டு, மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடுவதுபோல ஆண்டாள் தேவதாசியாக தான் இருந்திருக்கவேண்டும் எனும் தன் யூகத்தையே ஆராய்ச்சி ஆக்கி, அதை பதிப்பித்தும் வைத்த ஆய்வாளர்களை நாம் குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஏனெனில் ஆராய்ச்சிகளின் லட்சணம் அந்த அழகில் தான் இருக்கிறது. பி.எச்.டி படித்துவிட்டால் அவர் ஒரு அறிஞர், மேதாவி எனும் நம் நினைப்பும் கூட அதிலும் வெள்ளைத்தோலும் கூட இருந்தால் அவருக்கு ஒரு கோயிலே கட்டிவிடவும் நாம் தயாராக தான் இருக்கிறோம்.இந்தியாவை பற்றி எதுவுமே தெரியாத இவர்களின் ஆய்வுகளை இந்தியர்கள் தலைமேல் ஏற்றிக்கொன்டு சுமக்கும் கலோனிய மனோபாவம் தான் இதில் கவனத்துக்கு உரியது. இந்தியாவை பற்றிய ஆய்வுகளை இந்தியர்கள் செய்வதே பொருந்தும்
--
--
*வைரமுத்து மனைவி கவிஞர் பொன்மணி வைரமுத்து* எழுதியது(கவிப்பேரரசு-வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம் விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு. உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.
இது இசைக்கவி ரமணன் எழுதிய திறந்த கடிதம் செல்வன். தலைப்பை 'கவிஞர் பொன்மணி வைரமுத்து' என்று மாற்றி வாட்ஸாப்பில் யாரோ சிலர் உலவ விட்டிருக்கிறார்கள். பொன்மணி வைரமுத்து, வைரமுத்துவுக்கு எழுதியதன்று.வைரமுத்துவைக் கல்லூரி நாட்களிலிருந்து நானும் ரமணனும் அறிவோம். அவர் ரமணனுடன் பழகுவது இப்போதும் தொடர்கிறது.
இரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா?
இல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.
ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல
ஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா? தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.
கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.
அதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.
பக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே
கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்
ஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.
கடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது? அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை
ஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டாலும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி
ஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்.. காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட .
வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.
ஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.
ஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.
ஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழகியல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.
மதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.
இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.
இன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.
இருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற்கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே
இதில் உண்மையில் வெளியே வரும் விசயம் என்னவெனில் பல்கலைகழகங்களின் ஆய்வுகள் நடக்கும் லட்சணம்தான்.ஆண்டாள் என ஒருவர் உண்மையிலேயே இருந்தாரா, வரலாற்றுகதாபாத்திரமா என்பதற்கே கர்ணபரம்பரை கதைகளும் அவர் பெயரில் உள்ள பாடல்களும் தான் ஆதாரம் எனும் நிலையில் அவரது பாடல்களை தன் மேற்கத்திய மனோநிலையில் கேட்டு, மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடுவதுபோல ஆண்டாள் தேவதாசியாக தான் இருந்திருக்கவேண்டும் எனும் தன் யூகத்தையே ஆராய்ச்சி ஆக்கி, அதை பதிப்பித்தும் வைத்த ஆய்வாளர்களை நாம் குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஏனெனில் ஆராய்ச்சிகளின் லட்சணம் அந்த அழகில் தான் இருக்கிறது. பி.எச்.டி படித்துவிட்டால் அவர் ஒரு அறிஞர், மேதாவி எனும் நம் நினைப்பும் கூட அதிலும் வெள்ளைத்தோலும் கூட இருந்தால் அவருக்கு ஒரு கோயிலே கட்டிவிடவும் நாம் தயாராக தான் இருக்கிறோம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
பா ராகவன் எழுதியது கண்டனம் பெற்றது -எப்போது??
ஏதோ கல்வெட்டு சான்று என பேசுகின்ரீரே இது என்ன கள்ளத்தனம் கல்வெட்டுவழியாகத்தான் எல்லாம் பேச வேண்டும் என்றால் பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்கள்பாசுரம் வரலாறு எல்லாம் கல்வெட்டுடன் காட்டுங்களேன் முடியுமா
கைக்கிளை அகத்திணைகளில் ஒன்று.
இராஜாஜி தன மனம் சென்றவழி இது நாச்சியார் பா டவில்லை என்கிறாரே
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
சற்றுமுன்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்டார்

இன்று (ஜனவரி 23) காலை 6 மணியளவில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் மதுரையில் இருந்து புறப்பட்டு திருவில்லிப்புத்தூருக்குப் புறப்பட்டார். அங்கே ஜீயரைச் சந்தித்துவிட்டு ஆண்டாள் சந்நிதிக்கும் சென்று , ‘ஆண்டாள் திருவடிகளே சரணம்’ என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
வைரமுத்துவின் ஆண்டாள் பற்றிய கருத்தைப் பெரிதாக பற்ற வைத்தது பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் மிகக் கடுமையான பேச்சு. அதேநேரம் பாஜக பற்ற வைத்த சர்ச்சையை பாஜகவே மெல்ல அணைத்திருக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத் தக்கது.
ஆம். தினமணி ஆசிரியரோடு ராமகிருஷ்ணா மடத்துப் பிரமுகர்களும், பாஜகவின் ஊடகப் பிரிவு மாநில தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத்தும் சென்றிருந்தனர். பிரசாத் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசையின் தீவிர ஆதரவாளராக அறியப்படுவர். மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர்.
இந்நிலையில் பிரசாத்தின் தொடர் முயற்சியால்தான் வைத்தியநாதன் திருவில்லிப்புத்தூருக்கு இன்று சென்றார் என்று தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அலையடித்த நிலையில் நாம் இதுபற்றி பிரசாத்திடமே பேசினோம்.
பாஜக ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், “நான் தினமணி ஆசிரியரின் மாணவன். பலர் சித்திரிக்கிற மாதிரியான நபர் அல்லர் அவர். அவரைப் பற்றி மிக நன்றாக அறிவேன். வைரமுத்துவின் அந்த வார்த்தைகளைப் பிரசுரிக்க வேண்டாம் என்று சில வைணவர்கள் அவரிடம் சொன்னதாகவும், அதை அவர் மறுதலித்ததாகவும் அவர் மீது புகார்கள் வளைய வந்தன. ஆனால் இன்று காலை தினமணி ஆசிரியர் திருவில்லிப்புத்தூர் ஜீயரை சந்தித்து இரண்டு மணி நேரம் உரையாடியதில் பல பிரச்னைகள் தீர்ந்துவிட்டன’’ என்றார்.
இருவரும் என்ன பேசினார்கள் என்று கேட்டோம்.
”ஜீயர் மிகவும் தன்மையாகவும், கனிவாகவும் பேசினார். ‘நீங்கள் பாரதத்தின் கலைகளையும், ஆலயங்களையும் பற்றியெல்லாம் தினமணியில் எவ்வாறு எழுதுகிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் உங்களை ஆண்டாள் சந்நிதியில் இப்படி நிறுத்தும் அளவுக்கு சூழல் ஆகிவிட்டது’ என்ற ஜீயர்,
’இந்தக் கட்டுரையை பிரசுரிக்க வேண்டாம், அந்த வார்த்தைகளையாவது பிரசுரிக்க வேண்டாம்னு உங்களிடம் கேட்டும், நீங்கள் அதை மறுத்து அப்படியே பிரசுரத்துக்கு அனுப்பினதா சொல்லுகிறார்களே?’ என்று தினமணி ஆசிரியரிடம் கேட்டார்.
அதற்கு தினமணி ஆசிரியர், ‘அப்படி யாரும் என்னிடம் சுட்டிக்காட்டவும் இல்லை, நான் அவர்களை மறுத்துப் பேசவும் இல்லை. இந்த கட்டுரை ஆற்றிய நாளில் என் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டதால் நான் அவரைப் பார்க்க சென்றுவிட்டேன். அதன் பின் ஐந்து நாட்கள் என்னால் பணியில் முழு கவனம் எடுத்துக் கொள்ள முடியவில்லை. மற்றபடி நான் வேண்டுமென்றே அந்த வார்த்தையைப் பிரசுரிக்கவில்லை’ என்று விளக்கம் அளித்தார் தினமணி ஆசிரியர்.
அதையடுத்து ஜீயர், ஆசிரியர் வைத்தியநாதனிடம், ‘வைரமுத்துவையும் இங்கே தாங்கள் வரச் சொல்லி வற்புறுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த தினமணி ஆசிரியர், ‘வைரமுத்துவை நான் சந்தித்து உங்களுடன் பேசியது பற்றி அவரிடம் சொல்கிறேன். உங்களைப் போன்றவர்கள் மனதளவில் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துகிறேன். ஆனால் அவரை இங்கே வரச் சொல்லி என்னால் வலியுறுத்த முடியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு. நான் அவரை கட்டாயப்படுத்த முடியாது’ என்று சொன்னார்.
அப்போது ஜீயர், ‘இது தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிட்டது. நாங்கள் அவரை மனிதர்களிடத்தில் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை. ஆண்டாள் தாயாரிடம் வந்துதான் கேட்கச் சொல்கிறேன். அவர் இங்கே வரட்டும், ஆண்டாளைப் பார்க்கட்டும். ‘அம்மா... நான் தவறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வார்த்தை உங்களை வணங்கும் கோடானுகோடி பேரைப் புண்படுத்தியிருக்கிறது. அவர்கள் அதை தவறு என்று கருதுகிறபோது நான் என் தாயிடம் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று அவர் இங்கே வந்து சொல்லட்டுமே. அதில் அவருக்கு ஒரு கௌரவக் குறைவும் வரப் போவதில்லை’ என்று ஜீயர் குறிப்பிட்டார்.
சில நேரங்களில் ஜீயர், தினமணி ஆசிரியர் இருவருமே கண் கலங்கிவிட்டனர். ஜீயரை சந்தித்து முடித்த கையோடு ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, ஆண்டாள் திருவடிகள் சரணம், ஜீயர் திருவடிகள் சரணம் என்று வணங்கினார் தினமணி ஆசிரியர். உருக்கமான சந்திப்பு இந்த சர்ச்சையில் பாதியை முடித்துவிட்டது. மீதியையும் விரைவில் முடித்துவிடும்’’ என்றார் பிரசாத்.
பாஜகவின் இந்த காய்நகர்த்தலுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.
தினமணி என்ற பாரம்பரிய நாளிதழை பாஜகவினர் சமூக தளங்களில் சகட்டுமேனிக்குத் தாக்கினர். இந்நிலையில் இப்போது நாம் நடத்தும் தாக்குதல் பிற்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு பாதகம் ஆகிவிடக் கூடாது என்றும் பாஜக மூத்த தலைவர்கள் கருதினர். இந்நிலையில்தான் அவர்கள் தினமணி ஆசிரியருக்கு நெருக்கமான பிரசாத்தின் மூலம் இந்த சந்திப்பை நடத்தச் செய்து சுமுக சூழலை உண்டாக்கியிருக்கின்றனர். பின்னாட்களில் தினமணி தன்னை ஒரேயடியாக எதிர்த்துவிடக் கூடாது என்ற பாஜகவின் பார்வையும் இதில் இருக்கிறது என்றனர் கட்சி வட்டாரத்தில்.
மேலும் ஜீயரின் உண்ணாநோன்பை முடித்துவைத்தது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா என்று ஜெகத்ரட்சகன் கூறியதை பாஜக வட்டாரங்கள் ரசிக்கவில்லை. ஜீயரிடம் பேசிப் பிரச்னையை தீர்க்கும் அளவுக்குக்கூட பாஜக இல்லையா? நமது ஏரியாவில்கூட திமுகதான் விளையாடுகிறதா? இதில்கூட திமுகதான் செல்வாக்கு செலுத்துகிறதா என்ற கேள்வி பாஜகவினர் மத்தியிலேயே எழுந்தது. அதையெல்லாம் முடிவுகட்டும் விதமாகத்தான், தான் பற்ற வைத்த இந்த சர்ச்சையை தானே முன் வந்து அணைக்க ஆரம்பித்திருக்கிறது பாஜக.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் இந்தச் சந்திப்பைப் பற்றி இன்றே வைரமுத்துவிடம் அலைபேசியில் பேசிவிட்டார். அப்புறம் என்ன என்பது ஆண்டாளுக்கே வெளிச்சம்!
-ஆரா
(1946 ஜூன் மாதத்திய திருவேணி பத்திரிகையில் வெளிவந்த பார்த்த சாரதியின் ஆண்டாளின் காதல் என்னும் கட்டுரையை படித்த பிறகு திரு.ராஜ கோபாலச்சாரியார் கீழ்க்கண்டவற்றை ஒரு கடிதமாக எங்களுக்கு எழுதி அனுப் பினார். திரு.ராஜாஜி அவர்கள் அளித்த விளக்கம் பரவலாக அறியப்படாமல் இருந்ததால் அவர்களுடைய அன்பான அனுமதியின் பேரில் அதனை நாங்கள் வெளியிடுகிறோம் - இணை ஆசிரியர்)
ஆண்டாள் உண்மையிலேயே பெரி யாழ்வாரால் வளர்க்கப்பட்ட மகள் அல்ல. அது அவரது கவிதை மனதினால் உரு வாக்கப்பட்ட ஒரு பாத்திரமாகும். தனது கற்பனையில் ஆன இந்தக் குழந்தை பேசுவது போன்ற பாடல்களை அவர் எழுதினார் - பக்திப் பாடல்களின் வழக்க மான பாணியை மாற்றிக்கொண்ட பெரியாழ்வார், காதல் நோய்ப்பட்ட ஒரு பெண்ணின் தாபத்தினை மத அனுபவங் களாக வெளிப்படுத்தினார்.
காதலால் துன்பப்படும் ஒரு பெண்ணின் மொழியிலேயே பெரி யாழ்வார் பேசுவது என்பது நாம் அனை வரும் நன்றாக அறிந்த ஒரு தந்திரம் தான். தனது மனதுக்கு உகந்த மணாளன் ஆன எம்பெருமானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மகளையே அவர் கற்பனையில் உருவாக்கிவிட்டார். ஞானம் பெற்ற இம்மனிதர் மீது வீழ்ந்த தெய்வத்தின் கருணையையே தான் கண்டெடுத்து பாசத்துடனும் அன்புடனும் வளர்த்த மகளாக பாவித்தார்.
தங்களின் முதல் அனுபவத்தில் பொதுவாக மக்கள் இருப்பது போலவே அவளும் முதலில் வெட்கம் கொண் டவளாகவும் ரகசியம் பெறுபவளாகவும் இருந்தாள். பெருமாளுக்கான மாலையை ரகசியமாகத் தான் போட்டுக்கொண்டு அழகு பார்த்த கதை இதுதான். சமூகப்பணியில் ரகசி யம் காப்பதை உலகம் ஒப்புக்கொள்வ தில்லை.
எம்பெருமானையே மணந்து கொள்வது என்பது ஆண்டாளின் விருப் பம். ஞானம் பெற்று ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப் படுவதைவிட ஆண் டவன் மேல் பக்தி உணர்வில் மூழ்கி கிடப்பதையே அனைத்து பக்தர்களும் விரும்புவார்கள் .
ஆண்டாள் இறைவனை அடைந்த போது ஏற்பட்ட துன்பம் இதுதான். ஒருவர் சமாதிநிலையை அடையும் போது தன்னுடைய தனித்தன்மை யையும் ஆழ்ந்த மகிழ்ச்சியையும் இழந்து விடுகிறார். இறைவனிடம் ஒருவரை எடுத்துச்செல்லும் உள்ளுறை கருணைக்கு எதிராக நுணுக்கமான கல்வியாளர்கள் போராடுகின்றனர். ஆண்டாளையே பிந்தையவராக செய்து கொண்ட பெரியாழ்வார் ஆண்டாளின் சந்தேகங்களையும் துயரங்களையும் தந்தையான தனக்கு அடையாளமாக ஆக்கிக் கொள்கிறார்.
இவ்வாறு ஆண்டாள் இயற்றியது என்று கருதப்படும் இலக்கியம் பெரி யாழ்வாரின் ஓர் அத்தியாயமாக இருக்கக்கூடும். மற்ற துறவிகளின் பக்திப் பாடல்களில் வரும் காதல் கதைகளைப் போன்றதே இந்த அத்தியாயமும்.
ஆனால் பாரம்பரியமான ஒருதனி நபராகவும் ஒரு துறவியாகவும் கருதப் படும் அளவுக்கு ஆண்டாளின் கதை மிகுந்த பாதிப்பும் புகழ் பெற்றதாகவும் ஆகிவிட்டது - ஒரு கவிதையின் கதாபாத்திரம் ஒரு தனிக் கதையாகவே ஆகிவிட்டது.
இக்காலமாக இருந்து இருந்தால் அது கட்டுக்கதை என்று ஒதுக்கப்பட்டு இருக்கும். ஒரு கூடுதல் துறவியாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மிகுந்த பக்தி கொண்டவராக தன்னையும் தன் மகளையும் பெரியாழ்வார் ஆக்கிக் கொண்டார்.
முகநூலிலிருந்து:
கிருஷ்ணன் டி.கே.பாலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெ யரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2018-02-04 6:51 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெ யரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று.
புனைபெயர். இது வினைத்தொகை. உவேசா போன்றோர் எழுதியுள்ளனர். எதற்கு ஒற்று மிகுகிறது?
4 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:59 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:2018-02-04 6:51 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெ யரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று.புனைபெயர். இது வினைத்தொகை. உவேசா போன்றோர் எழுதியுள்ளனர். எதற்கு ஒற்று மிகுகிறது?
புனைவுப்பெயர் சரியா?