(ஏதும் புரியலைன்னா தாராளமா கேள்வி கேட்கவும்...)
8. மோனை
'தொடையற்ற கவிதை நடையற்றுப் போகும்' என்பது ஒரு பழமொழி. 'தொடை' என்பது கவிதையின்
ஓர் உறுப்பு. (தொடுப்பது தொடை.) கவிதைக்கு நடையழகைக் கொடுப்பதில் மோனை,
எதுகை, இயைபு
போன்றவை மிக முக்கியப் பங்கேற்கின்றன. மேலும், கவிதையை மனப்பாடம் செய்வதற்கும்
இவை உதவுகின்றன. முதலில் மோனை( alliteration)யைப் பற்றி அறிந்துகொள்வோம்.
மோனை: ஒரு சீருக்கும் இன்னொரு சீருக்கும் முதலில் உள்ள எழுத்துகள் ஒத்த
ஓசையுடன் இருப்பது.
(கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாயே" என்பதில் க-க-கா என்பது மோனை
எழுத்துகள். 'க' என்ற
எழுத்துக்கு மோனையாக 'க' மட்டும் அன்றி, 'கா' வும் வருகிறது , இல்லையா?
அதே மாதிரி, ஒவ்வொரு
எழுத்துக்கும் எந்த, எந்த எழுத்துகள் மோனை எழுத்துகளாகும் என்று முன்னோர்
சொல்லியிருக்கின்றனர்.
* உயிர் எழுத்தில் மோனை:
அ, ஆ, ஐ, ஔ --ஓரினம்
இ, ஈ, எ, ஏ --ஓரினம்
உ, ஊ, ஒ, ஓ -- ஓரினம்
காட்டுகள்:
அகல உழுவதை ஆழ உழு (1-3 சீர்கள் மோனை: அ, ஆ)
இருதலைக் கொள்ளி எறும்பு போல ( இ-எ)
ஓட்டைச் சங்கால் ஊத முடியுமா? (ஓ-ஊ)
* உயிர் மெய்யெழுத்தில் மோனை:
க, கா, கை, கௌ -ஒரே இனம்
'க' என்று தொடங்கும் சீருக்கு மோனையாக உள்ள சீர் க, கா, கை, கௌ என்ற நான்கில்
ஒன்றில் தொடங்க வேண்டும்; 'கி' 'கீ' போன்றவை மோனையாகா. அதாவது, 'அ' என்ற
உயிர் ஏறிய
'க்' என்ற மெய்யெழுத்துக்கு மோனை அதே மெய்யெழுத்தில் ('க்') அந்த 'அ'
என்ற உயிருக்கு மோனையான
நான்கு உயிர் எழுத்துகளுள் (அ, ஆ, ஐ, ஔ) ஒன்று ஏறிய சீரே மோனையாக
வரவேண்டும். இதே போல்
மற்ற உயிர்மெய்யெழுத்துகளுக்கும் மோனை எழுத்துகளைப் பட்டியலிடலாம்.
கி, கீ, கெ, கே - ஒரே இனம் ; கு,கூ, கொ, கோ-ஒரே இனம்; ப, பா, பை, பௌ -மோனை இனம்.
.....இப்படியே.
* சில விசேஷ இனங்கள்: சில மெய்யெழுத்துகளுக்கு -- அந்த எழுத்துகளில்
தொடங்கும் தமிழ்ச் சொற்கள்
அதிகமாக இல்லாதலால் -- விசேஷ சலுகைகள் உண்டு.
# ச,த -ஒரே இனம்
காட்டு: தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் (தொ,சு-மோனை)
அதாவது, 'தொ' என்னும் எழுத்திற்கு மோனை எழுத்துகள் எட்டு: தொ, தோ, து, தூ, சொ, சோ,
சு, சூ. இந்த எட்டில் உள்ள எந்த எழுத்துக்கும் எட்டில் எந்த எழுத்தும்
மோனையாக வரலாம்.
# ம, வ -ஒரே இனம் ( ம-வுக்கு உள்ள எட்டு மோனை எழுத்துகள் எவை?)
காட்டு: வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது (வ,மா -மோனை)
# ந,ஞ -ஒரே இனம்
காட்டு: நலிந்தோர்க் கில்லை ஞாயிறும் திங்களும் (ந, ஞா --மோனை)
# பழம் இலக்கண நூல்களில், யா-விற்கு, இ,ஈ,எ,ஏ.. மோனை என்பர்.
தற்காலத்தில், யா -விற்கு அ,ஆ, ஐ, ஔ-வும் மோனை என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.
(பழந்தமிழில் 'ய' வர்க்கத்தில் 'யா' ஒன்றில் தான் தமிழ்ச்சொற்கள்
தொடங்கும்; இப்போது
'யயாதி' போன்ற சொற்களும் வருவதைப் பார்க்கலாம்.) தற்காலத்தில், ஜ, ர
போன்ற எழுத்துகளும்
சொற்களின் தொடக்கத்தில் வருகின்றன, அல்லவா? அதனால், ஜ வுக்கு ச,த மோனை,
ர, ல வுக்கு இ, ஈ, எ, ஏ மோனை என்றும் கொள்ளலாம்.
* மோனை வாய்பாட்டை நினைவுறுத்த, ஒரு பழம் வெண்பா உண்டு. மேற்சொன்ன
பல விதிகளை அது சுருக்கிச் சொல்வதைப் பார்க்கலாம்.
அகரமொடு ஆகாரம் ஐகாரம் ஔகான்
இகரமொடு ஈகாரம் எஏ -- உகரமோ(டு)
ஊகாரம் ஒஓ; ஞந,மவ தச்சகரம்
ஆகாத அல்ல அநு. (அநு- வழி, பின்)
* கோல மலருக் குள்ளே மணமுண்டு என்ற வாக்கியத்தில் மோனை உண்டா?
பார்த்தால் கோ, கு மோனை மாதிரி இருக்கிறது. ஆனால், இது மோனை இல்லை.
ஏனென்றால், அங்கே
இருக்கும் சொல் 'உள்ளே'; ஆனால் கோ-உ மோனை இல்லை!
* மரபுப் பாடல்களில் பொதுவாக பாடல் அடிகளில் மோனை வருவதைப் பார்க்கலாம்.
மோனை அடிகளில் எங்கே வரவேண்டும் ? பொதுவாகச் சொன்னால், நான்குசீர்
அடிகளில் 1,3 சீர்களில்
மோனை வருதல் சிறப்பு. ஐந்துசீர் அடிகளில் 1,5 சிறப்பு; 1,3,5 மோனை
இன்னும் சிறக்கும்.
ஆசிரிய விருத்தங்களில், அந்தந்த விருத்தத்திற்குரிய சீர் வாய்பாட்டைப்
பொறுத்து மோனை வருதல் சிறப்பு.
பயிற்சிகள்:
8.1 கீழ்க்கண்ட மோனைப் பட்டியலை நிறைவு செய்க.
--------------------------------------------
அ,ஆ,ஐ, ஔ : க, . . ; ச, . . .; ந, . . ; ப, . . ; ம, . .
இ, ஈ, எ, ஏ; கி, . . ; சி, . . ; நி, . . ; பி, . . ; மி, . . ;
உ,ஊ, ஒ, ஓ; கு, . . ; சு, . . ; நு, . . ; பு, . . ; மு, மூ,மொ, மோ.
8.2 பயிற்சிகள் 4.4, 5.2- ஐ மோனையுடன் செய்யவும்!
வாலி வந்தான் ; பரிமளா பதுங்கினாள் போன்ற மோனை உடைய சொற்றொடர்கள் எழுதவும்.
குறிப்பு: வாக்கியங்கள் எழுதும்போது, முடிந்தவரை சொற்களை ஒரு சீரில் ஒரு
பாதி, அடுத்த சீரில்
இன்னொரு பாதி என்று பிரிக்காமல் எழுதுவது அழகு. மேலும் ,மோனை 'முழுச்
சொற்களுக்கு'த்தான் பார்ப்பது வழக்கம். தந்திருந் தான்பையன் என்ற தொடரில்,
த-தா மோனை யல்ல!
8.3 முன்பு சொன்ன 4.4, 5.2 பயிற்சிகளையும் சேர்த்து ஒரே வாக்கியம் எழுதலாம்.
காட்டு:
மருமகள் வந்தாள் ; மாமி விளாசினாள்.
இதில் நான்கு வகை நேரும், நான்கு வகை நிரையும் வருவதைப் பார்க்கலாம்.
இதே மாதிரி, 4-சீர் அடியில் 1-3 மோனையுடன், வகைகள் ஒரே முறை மட்டும்
வரும்படி, சில வாக்கியங்கள்
எழுதவும்.
8.4 காதலன் ஒருநாள் கண்ணைச் சிமிட்டினான். (1,3 மோனை)
(கூவிளம், புளிமா, தேமா, கருவிளம்)
செந்தமிழ் நாட்டின் சிறப்பினைப் புகழ்வோம் (1,3 மோனை)
(கூவிளம், தேமா, கருவிளம், புளிமா)
1-3 மோனையுடன், நான்கு வகை ஈரசைச் சீர்கள் (தேமா, புளிமா, கூவிளம்,
கருவிளம்..ஒரே ஒரு முறை)
வரும்படி மேற்கண்ட காட்டுகளைப் போல சில வாக்கியங்கள் எழுதவும்.
* வாக்கியங்கள் எழுதும்போது , முடிந்தவரை சொற்களை ஒரு சீரில் ஒரு பாதி,
அடுத்த சீரில் இன்னொரு
பாதி என்று பிரிக்காமல் எழுதுவது அழகு. தளை சரியாக இருக்கச் சிலசமயம்
இப்படிச் செய்ய வேண்டும்.
இதற்கு 'வகையுளி' என்பார்கள். இப்போது, நாம் தளைக் கட்டுப்பாடு இல்லாமல்
தான் எழுதுகிறோம்.
அதனால் , சிறுசிறு சொற்களையே பயன்படுத்தி , பயில முயலுங்கள்.
8.5 ஒவ்வொரு திருக்குறளிலும் முதல் அடியில் நான்கு சீர்கள் இருக்கும்.
இவற்றில்,
1,3 -மோனை;
1,2 -மோனை;
1,4 -மோனை;
1,2,4 -மோனை;
1,3,4 -மோனை;
1,2,3 -மோனை;
1,2,3,4-மோனை
இவற்றிற்கு வகைக்கொரு காட்டுக் கொடுக்கலாம்.
காட்டுகள்;
*1,2 சீர்களில் மோனை.
(உ-ம்.) பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் (பி,பெ)
* 1,3 சீர்களில் மோனை
(உ-ம்.) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் (ம,மா)
*1,4 சீர்களில் மோனை
(உ-ம்.) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி (அ,ஆ)
*1,2,3 சீர்களில் மோனை.
(உ-ம்.) தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் (தா,த,த)
*1,2,4 சீர்களில் மோனை.
(உ-ம்.) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் (இ,இ,இ)
*1,3,4 சீர்களில் மோனை.
(உ-ம்.) வானின் றுலகம் வழங்கி வருவதால் (வா,வ,வ)
* நான்கு சீர்களிலும் மோனை(முற்று மோனை)
(உ-ம்) வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் (வை,வா,வா,வா)
இம்மாதிரி, திருக்குறளிலிருந்து வேறு காட்டுகள் கொடுக்கவும் .
( நான்கு சீர் அடியில், 1-3 மோனை சிறப்பு; அதற்கு அடுத்தபடி, 1-4 மோனை
சிறப்பு என்று சொல்லலாம்.)
8.6 எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு
கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
இப்படி மோனையுடன் இருக்கும் சில பழமொழிகளை எழுதவும்.
காலத்திற்கேற்ற 'புது'ப் பழமொழிகளும் எழுதலாம்!
8.7
ஈரசைச் சீர்களின் வாய்பாட்டைப் பல்வேறு வகைகளில் சொல்லலாம்.
பழம் நூல்களில் சொல்லப் பட்டிருக்கும் ஒரு வரிசை: தேமா, புளிமா,
கருவிளம், கூவிளம். இவற்றை, சுருக்கி,
1,2,3,4 என்றழைக்கலாம்.
இந்த வாய்பாட்டைத் திரும்பத் திரும்பச் சொன்னால் எழுகிறதே ஒரு அழகான
ஓசை... அதுதான்
'ஈரசைக்குரிய வெண் தளை' விளைக்கும் ஓசை! ஒரு சீரும் அடுத்த சீரும் உரசும்
போது/ முத்தமிடும் போது
எழும்பும் ஒருவகை 'செப்பலோசை'. (தளை-பந்தம்; ஒரு சீருக்கும் தொடரும்
சீருக்கும் உள்ள பந்தம்)
1, 2, 3, 4, 1, 2, 3, 4 .... என்று சொல்லிக்கொண்டே போங்கள். ஒரு
சீருக்குப் பின் எந்தவகை சீர் வருகிறது என்பது ஒரே இலக்கண விதியைக்
கடைபிடிப்பது தெரியும்.
மாச் சீரைத் தொடர்ந்து வரும் சீரில் முதல் அசை நிரை; அதே மாதிரி, விளச்
சீரைத் தொடர்ந்து வரும்
சீரில் முதல் அசை நேர்.
சுருக்கமாகச் சொன்னால்,
மாவைத் தொடர்ந்து நிரை
விளத்தைத் தொடர்ந்து நேர்.
இதுவே 'ஈரசைச் சீர்கள் வரும் அடிக்குரிய வெண்டளை' விதி! (இயற்சீர் வெண்டளை என்பர்)
சரி, இந்த வாய்பாடு 1-இல் தான் தொடங்க வேண்டுமா? இல்லை! 2,3,4,1;
3,4,1,2; 4,1,2,3-இலும்
சொல்லலாம், வெண்டளை தட்டாது! (பயிற்சி- 7.2 -இல் வரும் திருக்குறளின்
முதல் அடி எந்த வகை?
பார்த்துக் கொள்ளுங்கள் ! )
சரி, இந்த நான்கு வகைகளை எழுதி , ஒவ்வொன்றுக்கும் ஒரு எடுத்துக்காட்டு
வாக்கியம் பார்ப்போம்.
* தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்
பாய்ந்தால் புலியார்; பதுங்கினால் பூனையார்.
* புளிமா, கருவிளம், கூவிளம், தேமா
புலியாய் வருபவன் பூனையாய்ப் போவான்.
* கருவிளம், கூவிளம், தேமா, புளிமா
புலிகளின் வேலையைப் பூனை செயுமோ?
* கூவிளம், தேமா, புளிமா, கருவிளம்
பூனையைப் பெற்றால் புலியாய் வளருமோ?
இந்த நான்குவகைகளுக்கு 'வெண்டளை வாக்கிய'க் காட்டுகளை, ஒவ்வொரு ஈரசையும் ஒரே முறை
வரும்படி, 1-3 மோனையுடன் எழுதவும்.
***
(தொடரும்)
//
நன்றி : பசுபதி ஐயா
நன்றி : https://groups.google.com/forum/#!msg/yAppulagam/Umr4M2rOzQs/2FA6_NeNQCoJ
9. எதுகை
மோனை(alliteration) என்பது 'இரு சீர்களின் முதல் எழுத்துகள் ஓசையில்
ஒன்றுவது' என்று பார்த்தோம்.
தமிழ்ச் செய்யுள்களில் எதுகை(Rhyme) என்பது ' இரு சீர்களின் இரண்டாம்
எழுத்து ஒன்றுவது' என்று
சொல்லலாம். காட்டுகள்: கற்று, பெற்று ; பாடம், மாடம் ; கண்ணன், வண்ணன்.
பகவன் முதற்றே உலகு.
என்ற குறளைக் காட்டாகப் பார்க்கலாம். பொதுவாகச் சொன்னால்,
தமிழ்ச் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் உள்ள சீர்களுக்குள் மோனை அழகு (அகர
- ஆதி போல்)
இருக்கும். அடிகளுக்கிடையே எதுகை . . முதற்சீர்களில் இரண்டாம் எழுத்து
எதுகையில் ஒன்றும் அழகு
(அகர -பகவன் போல்) . . இருக்கும்.
எதுகையை வைத்துக் கொண்டே செய்யுளுக்கு எவ்வளவு அடிகள் என்றும் கணக்கிட்டு விடலாம்!
'பல' அடிகள் கொண்டவை என்று நாம் கருதும் திருப்புகழ் போன்ற பாடல்களும் 'நான்கு'
அடிகள் கொண்ட விருத்தங்கள் தான் என்று நாம் எதுகையின் துணை கொண்டு
தீர்மானிக்கலாம்!
க.இ.க -2 -இல் பார்த்த கவிமணியின் கவிதை மீண்டும் இதோ:
இது எட்டு 'வரிக'ளில் இங்கிடப் பட்டிருப்பினும் , வெய்யிற்-
கையிற்-தெய்வ-வையம் இவற்றிலுள்ள
எதுகையை வைத்து இது அடிக்கு ஆறு சீர்கள் கொண்ட நான்கு அடிகள் (எட்டு வரிகள்) கொண்ட
பாடல்தான் என்று சொல்ல முடிகிறது. ( ஐ-காரம் சீரின் முதலிலும் 'அய்'
மாதிரி குறிலாக ஒலித்து,
எதுகைக்குப் பயன்படுவதையும் பாருங்கள்!) மேலும், வெ-வீ, கை-க, தெ-தெ, வை-வா போன்ற
மோனை எழுத்துகள் ஒவ்வொரு அடியிலும் சரிப்பாதியில் , 1-4 சீர் மோனையாக வந்து ,
வரிகளுக்கிடையே மோனையழகு கொடுப்பதையும் பார்க்கலாம். அடிகளுக்கிடையே எதுகை ;
வரிகளுக்கிடையே மோனை . . இதுதான் தமிழ்க் கவிதைகளில் உள்ள பொது நிலை.
* எதுகைக்கு இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றினால் போதாது. முதல்
எழுத்துகள் அளவில் ஒத்துப்
போகவேண்டும். அதாவது, முதல் எழுத்துக் குறிலானால் (நெடிலானால்), எதுகைச்
சீரிலும் முதல்
எழுத்துக் குறிலாக (நெடிலாக) இருக்கவேண்டும். (இது தொடக்கத்தில் பலர்
செய்யும் தவறு) .
தட்டு, பட்டு..எதுகை; ஆனால், தட்டு, பாட்டு ..எதுகை அல்ல.
* சிலசமயம் , மூன்றாம் எழுத்தும் ஒன்றினால் தான் முதல் தரமான, ஒத்த ஓசை
* தற்காலத்தில் அதிகமாகப் பயன்படும் மற்ற சில எதுகை வகைகளை இப்போது பார்ப்போம்.
* வருக்க எதுகை:
=============
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே. (கம்பர்)
இங்கே ல-விற்கு, லை-எதுகையாக வந்திருக்கிறது. இப்படியே ல-வருக்க உயிர்மெய்களான
ல,லி, லு,லெ, லொ, ..இவற்றில் எந்த எழுத்தும் வரலாம். ல-குறிலாதலால்,
எதுகை எழுத்தும்
குறிலாகவே வந்தால் சிறப்பு. 'லை' நெடிலானாலும், சீரின் நடுவில் வரும்போது
'ஐகாரக் குறுக்கம்'
என்ற விதியால் குறிலாகவே ஒலிக்கிறது. ஓரெழுத்திற்கு அதன் வருக்க
எழுத்துகளில் ஒன்று
எதுகையாக வருவது வருக்க எதுகை. பல இலக்கண நூல்கள் இதை 'இரண்டாந்தர' எதுகை
என்று சொன்னாலும், தற்காலப் பாடல்களில் இந்தவகை எதுகைகள் பெரும்பாலும் வருவதைக்
காணலாம். (பொதுவாக, ஒரு உயிர்மெய் எழுத்திற்கு அதன் வருக்க எதுகையாக மெய்யெழுத்து
வராது. முக்கியமாக, வல்லின மெய்கள் இவ்வாறு உயிர்மெய்களுக்கு எதுகையாக வராது.
அருகிச் சில பழமிலக்கியப் பாடல்களில், இடையின, மெல்லின மெய்கள் அவற்றின்
உயிர்மெய்க்கு எதுகையாய் வருவதைப் பார்க்கலாம். )
* இன எதுகை:
===========
இரண்டாம் எழுத்துக்கள் ஒரே இனமாக இருப்பது.
(உ-ம்) தக்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (திருக்குறள்)
'தக்' கும் , 'எச்' சும் வல்லின எதுகைகள். அதே மாதிரி, 'அன்பு' 'நண்பு'
மெல்லின எதுகை.
'வரவு' 'செலவு' இடையின எதுகை. இந்தச் சிறப்பற்ற எதுகைகளில் தற்காலப்
பாடல்களில் 'அன்பன் -
நண்பன்' போன்ற மெல்லின எதுகைகளைத் தான் அவ்வப்போது பார்க்கிறோம். (அதே போல்,
'ர' வும், 'ற'வும் தற்காலத்தில் ஒலியில் நெருங்கினபடியால், ஒன்றுக்கொன்று
( மறையில் - கரையில் போல்)
எதுகையாக வருகின்றன.)
* ஆசிடை இட்ட எதுகை :
===================
ஆசு என்றால் பற்றுக்கோடு.
எதுகையாக வரும் எழுத்துக்கு முன் 'ய்,ர்,ல்,ழ்' என்ற எழுத்துகள் நான்கில்
ஒன்று வந்தால், ஆசிடை
எதுகை எனப்படும். இந்த விதியினால், 'வாய்மை-தீமை', 'மாக்கொடி-கார்க்கொடி',
'ஆவேறு-பால்வேறு' ,'வாழ்கின்ற-போகின்ற' என்ற வார்த்தைகள் ஆசிடை எதுகை பெற்று
விளங்குகின்றன. இந்த எழுத்துகள் நடுவில் வந்தாலும் ஓசை கெடுவதில்லை
என்பது இந்த வகையின்
உட்பொருள். ( வாய்மை-தூய்மை; மாக்கொடி-பூக்கொடி; வாழ்கின்ற-தாழ்கின்ற ..இவை
'முதல்தரமான' எதுகைகள். ஆனால்... கருத்தைச் சொல்ல , முதல் தர
எதுகைகளைப் பயன்படுத்த முடியாவிட்டால், ஆசிடையிட்ட எதுகை போன்ற சிறப்பில்லா
எதுகைகளைப் பயன்படுத்தலாம் என்பதே இந்தச் சலுகைக்குப் பின்னுள்ள பொருள்.)
* சொற்புணர்ச்சி செய்தபின் தான் எதுகை சரியா என்று பார்க்க வேண்டும். மின்னியல்,
பொன்தகடு..எதுகை அல்ல. ஏனென்றால், பொன்+தகடு= பொற்றகடு!
* ஓசை அழகிற்காக, படிக்காதவர்களும் இயற்கையாக எதுகையை ஆள்வதைப் பார்க்கலாம்.
'எதுகை, மோனை' என்பது 'எகனை, மொகனை' ஆகும். 'ஆட்டம், பாட்டு' என்பது
'ஆட்டம், பாட்டம்' ஆகும். 'விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று காய்க்குமா' என்பது
'வெரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணு காய்க்குமா?" ஆகும்.
* இயைபு:
========
அடித்தொடக்கத்தில் வருவது எதுகை. அடிகளின் இறுதியில் ஓர் எழுத்தோ,
பல எழுத்துகளோ ஒன்றி வருவது இயைபு.
காட்டு:
நந்தவ னத்திலோர் ஆண்டி -- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி --அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி !
இதில் "ண்டி" என்ற எழுத்துகள் ஒன்றிவருகின்றன.
(நந்த -கொண்டு - மெல்லின எதுகை; ந-நா, கொ-கூ மோனைச் சீர்கள்)
===
பயிற்சி:
9.1
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
அகத்தின் அழகு முகத்திலே
அடியாத மாடு படியாது
வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை.
இப்படி அடிக்குள் எதுகை இருக்கும் சில பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதவும்.
'புது' மொழிகளும் எழுதலாம்!
10. சீர்கள் -2
க.இ.க -7 -இல் நான்கு வகையான ஈரசைச் சீர்களைப் பற்றியும், அவற்றின் வாய்பாடுகளாகிய
தேமா(நேர்நேர்), புளிமா(நிரைநேர்), கூவிளம்(நேர்நிரை),
கருவிளம்(நிரைநிரை) என்பதையும் பார்த்தோம்.
மூவசைச் சீர்கள்
============
ஈரசைச் சீர்களுக்குப் பின் நேரோ, நிரையோ வந்தால் மூவசைச் சீர்கள்
விளையும். காய் என்ற சொல்
நேரசையாதலால் , தேமாவிற்குப் பின் நேர் வந்தால் 'தேமாங்காய்' என்று
சொல்லலாம். அதேமாதிரி,
மற்ற ஈரசைச் சீர்களின் வாய்பாடுகளின் பின்னும் காய் என்பதைச் சேர்த்தால்
நேரசையில் முடியும்
நான்கு மூவசைச்சீர்களின் வாய்பாடு கிடைக்கும் .
நேர் நேர் நேர் - தேமாங்காய் ; நிரைநேர்நேர் - புளிமாங்காய்;
நேர்நிரைநேர் - கூவிளங்காய்;
நிரைநிரைநேர் - கருவிளங்காய் .
இப்படி நேர் அசையில் ( அதாவது, 'காயில்') முடியும் மூவசைச் சீர்களைக்
காய்ச்சீர் என்பர்.
அதேபோல், 'கனி' என்பது 'நிரை' அசைக்கு வாய்பாடாக இருப்பதால், நிரையில்
முடியும் மூவசைச்
சீர்களான 'கனிச்' சீர்கள் நமக்குக் கிடைக்கின்றன.
நேர்நேர்நிரை- தேமாங்கனி; நிரைநேர்நிரை-புளிமாங்கனி ; நேர்நிரைநிரை - கூவிளங்கனி;
நிரைநிரைநிரை -கருவிளங்கனி.
ஈரசைச் சீர்கள் நான்காதலால் , அவற்றுடன் நேர், நிரை சேர்த்தால், மொத்தம்
(4x2=8) மூவசைச்
சீர்கள் ( 4 காய் +4 கனி) கிடைக்கின்றன என்பது தெளிவாகிறது.
நான்கசைச் சீர்கள்
=============
நாலசைச் சீர்கள் ஈரசைச்சீர்கள் நான்கின் பின் 'தண்பூ' (நேர்நேர்),
நறும்பூ'(நிரைநேர்),
தண்ணிழல்( நேர்நிரை), நறுநிழல்( நிரைநிரை) என்ற நான்கு ஈரசைச் சீர்களின்
வாய்பாடுகளைப்
பெருக்கினால் (4x4=16) நான்கசைச் சீர்கள் கிடைக்கும். இவை அருகியே
தமிழ்ப் பாடல்களில்
வரும்.
நேர் அசையில் முடியும் நான்கசைச் சீர்கள் எட்டு; அவை 'பூச்'சீர்கள் என்று
அறியப்படும்.
அவை : தேமாந்தண்பூ (தேமா+தேமா), புளிமாந்தண்பூ(புளிமா+தேமா),
கூவிளந்தண்பூ (கூவிளம்+தேமா),
கருவிளந்தண்பூ(கருவிளம்+தேமா), தேமாநறும்பூ( தேமா+ புளிமா),
புளிமாநறும்பூ( புளிமா+புளிமா),
கூவிளநறும்பூ( கூவிளம்+புளிமா), கருவிளநறும்பூ(கருவிளம்+புளிமா) ,
இப்படியே 'நிரை'யில் முடியும்
நான்கசைச் சீர்களை 'நிழற்'சீர்கள் என்று சொல்வார்கள். அந்த எட்டு நிழற்சீர்கள்:
தேமாந்தண்ணிழல் (தேமா+கூவிளம்), புளிமாந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல்,
கருவிளந்தண்ணிழல்,
தேமாநறுநிழல்(தேமா+கருவிளம்), புளிமாநறுநிழல், கூவிளநறுநிழல், கருவிளநறுநிழல்.
பயிற்சிகள் :
10.1
மூவசைக் காய்ச் சீர்களுக்கு முன்னோர் வகுத்த சில அழகான நினைவுத்தொடர்கள்:
தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்
தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
பொன்னாக்கும், பொருளாக்கும், பொருள்பெருக்கும், பொன்பெருக்கும்
எல்லா வகைக் காய்ச்சீர்களும் ஒரே ஒரு முறை வரும்படி, 1-3 மோனை உள்ள, 4-சீருள்ள சில
வாக்கியங்கள் எழுதுக.(ஒவ்வொரு வாக்கியமும் வெவ்வேறு வகை காய்ச்சீரில்
தொடங்கினால் நல்ல பயிற்சி)
காட்டு:
என்னவளே ! இனியவளே! என்காதல் மறந்தாயோ?
(கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்)
10.2
மூவசைக் கனிச் சீர்களுக்கு முன்னோர் வகுத்த சில அழகான வாய்பாடுகள்:
தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி
பூவாழ்பதி, திருவாழ்பதி, திருவுறைபதி, பூவுறைபதி
மீன்வாழ்துறை, சுறவாழ்துறை, மீன்மறிதுறை, சுறமறிதுறை
(சுற-சுறா ; மறி-திரிதல்; துறை-நீர்த்துறை )
எல்லா வகைக் கனிச் சீர்களும் ஒரே ஒருமுறை வரும்படி, 1-3 மோனை உள்ள சில
வாக்கியங்கள் எழுதுக.
காட்டு:
செந்தாமரைப் பூஉறைபவள் திருமகள்பதம் துதிசெய்திடு!
10.3 நான்கு கனிகள் கொண்ட அடிகள் அதிகமாக மரபுக் கவிதைகளில்
வருவதில்லை. ஆனால், 'கனி கனி கனி மா' என்ற வாய்பாடு பயிலும் அடிகள்
உள்ள சந்தக் கவிதைகள் பல உள்ளன. இதற்கு 1-3 மோனையுடன் உள்ள, சில
உதாரணங்கள் காட்டுக. (கனிச் சீர்கள் எந்த வகையானாலும் சரியே; ஒரே
வகை வந்தாலும் சரி. )
காட்டுகள்:
நம்நாட்டினர் கொண்டாடிடும் நவராத்திரி நாளில்
நயவஞ்சக அசுரர்களை நசித்தாள்ஜய துர்க்கை.
நரகாசுரன் செயலால்விளை ஞாலத்துயர் நீக்க
அரிமாவென எழுந்தான்திரு அரியாகிய கண்ணன்.
கரம்சந்திரர் கரம்பற்றின கஸ்தூரியென் றொருவள்
அறவாழ்விலும் சிறைவாழ்விலும் அண்ணல்வழிச் சென்றாள்;
(தொடரும்)
( from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796
)
அன்புள்ள ஆசிரியருக்கு...வெண்பா என்பதற்கு தளை தட்டல் சரியாக இருந்தால் மட்டும் போதுமா ?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
செப்பலோசைன்னா என்னனு சொல்லுங்களேன்... :)))
புரியவில்லை ஐயா...2014-07-04 17:29 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
ஆசின்றி இருப்பதே ஆசிரியருக் கழகு ஆசிரியரே :))
(# நானே தான் )--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே