Re: [MinTamil] ஐயப்பாடு - ’சங்க இலக்கியம்’

115 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 30, 2016, 10:03:36 AM11/30/16
to மின்தமிழ், vallamai


On Monday, 28 November 2016 14:33:17 UTC+5:30, anbulaham wrote:

............ பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார்.


வள்ளுவர் காலத்தில் ‘கழகம்’ என்ன பொருளில் பயன்பாட்டில் இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். 


வள்ளுவர் காலத்தில் கழகம் = சூதாடும் இடம் எனப் பொருள். வையாபுரிப்பிள்ளை “கழகம்” என்ற சொல்லுக்கு
ஒரு கட்டுரை எழுதியுள்ளார். களம் என்ற சொல்லில் இருந்து கப்பிரத்தியம் பெற்றுக் கழகம் எனவிரிவது பற்றி.

உலூகல- என்ற ரிக்வேத வார்த்தை பற்றி எழுதியுள்ளேன். உரல்-களம். நீலம் (Indigo plant - இப்போது ஜீன்ஸ் பேண்ட்ஸ்
செய்ய வங்காளத்தில் பயிரானது பிரிடீஷ் காலங்களில்) இடிக்க வட்டமான மர உரல்கள் கொண்ட களங்களை
நிறைய சிந்து சமவெளியில் பார்க்கலாம். எனவே, நீர்- > நீலம்; வார்- > வால்-, ... போல உரல்-களம் உர-களம்,
உலூகல என்று ரிக்வேதத்தில்.

2011-ல் எனது மடல்: (கழகம் என்ற சொல்லுக்கு வாழ்வு கொடுத்தது கம்பன் என்பது பற்றி.
தமிழ் தேசியர்கள் கழகம் என்றுள்ள கக்ஷிகட்கு என்ன பொருள் கொண்டுள்ளனர் என்பதும் பார்க்கணும்.)

On Mar 30, 7:27 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> அகராதியில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் இருக்கும்
>
> ஆனால் எந்த காலத்துக்கு எந்த பொரூள் என்று கவனிக்க வேண்டும்
>
> கழகம் என்றால் சூதாடும் இடம் ஒரு காலத்தில்
>
> இன்று கல்வி வழங்கும் நிலையங்கள்
>

பேர் பொருத்தம்தான் :)

கழகம் - எனக்கு முதலில் விளக்கியவர் கம்பராமன் ஐயா
(எஸ். கே. ராமராஜ ரெட்டியார், கோபாலையரும் இவரும்
கல்லூரி தோழர்கள். புருஷோத்தம நாயுடு மாணவர்கள். )

கழகத்துக்கு நல்ல பெயர் கொடுத்தது கம்பன்.
’கலை பயில் கழகம்’. பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.


நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Nov 30, 2016, 10:38:28 AM11/30/16
to மின்தமிழ், vallamai


On Monday, November 28, 2016 at 7:50:03 PM UTC-8, இரா.பானுகுமார் wrote:

பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.


முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள். 

இரா.பா


சங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். 

தாவிட சங்கொ ( < த்ராவிட சங்கம்) என்னும் ஜைநர்களின் ப்ராகிருதச்சொல் தான் தமிழை ஆராய்ந்த சங்கத்துக்கு முதலில் வரும் சான்று, முழு வாசகமும் தருகிறேன்.
 

On Wednesday, 30 November 2016 08:11:33 UTC+5:30, N. Ganesan wrote:
... திரமிள சங்கம் என்று சங்கம் வைத்தவர்கள் ஜைநர்கள் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டும்.  

Dev Raj wrote:
>அது தமிழ் மன்னர் போருக்காக அமைத்த கூட்டணி, காரவேலர்  கல்வெட்டின்படி.
> மொழிக்கான சங்கம் என்றால் ஆதாரத்தையும் இணைப்பது நன்று.

It is not the coalition of forces for war. "dAviDa sangho" of 470 CE headed by Vajranandi, a Jaina monk,
is the Tamil sangham to study and analyze Tamil literature and grammar.

> தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய அறிஞர்கள் ஆதரிப்பது சங்கத்தையா, கழகத்தையா ?

தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்கள் யாரும் கழகம் என்று எழுதியதில்லை. இது அண்மைக்காலத்தில்
தனித்தமிழாக்கம். வரலாற்றுச் சான்றில்லாதது.

> சங்க [அ] கழகப் புலவர்கள்  எத்தனை பேர் ?
> யார் தலைவர் ?
> சங்க [அ] கழகப் புலவர்களில் எத்தனை பேர் சமணர் ?

விரிவாக எழுதியுள்ளேனே. சமணர்களின் தமிழ்க்கொடையை மடைமாற்ற சைவப் புலவர்கள்
செய்தது இறையனார் களவியல். அதில் உள்ள மூன்று சங்கங்கள், கடல்கோள், ... என்னும் கதைகள்.
பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி, 20-ஆம் நூற்றாண்டு, இப்பொழுது இணையம் குமரிக்கண்டம் (லெமூரியா)
என வளர்ச்சி பெற்றுவருகிறது. ஆனால், ஒன்றுக்கும் எந்த தொல்லியல், கல்வெட்டு, வரலாற்று சான்றுகள்
இல்லை. எனவே, கற்பனையில் உருவான கதைகள்.

நா. கணேசன்

>தேவ்

N. Ganesan

unread,
Nov 30, 2016, 1:43:36 PM11/30/16
to மின்தமிழ், vallamai


On Wednesday, November 30, 2016 at 9:55:11 AM UTC-8, செல்வன் wrote:


குறள் 935:

கவறும் கழகமும் கையும் தருக்கி 
இவறியார் இல்லாகி யார்.

கழகம் எனும் சொல் குறளில் சூதாடும் இடம் எனும் பொருளில் கையாளப்படுகிறது

Valluvar also tells what happens to people when they enter Kazhakam-s.:

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்-
கழகத்துக் காலை புகின்.

NG

seshadri sridharan

unread,
Nov 30, 2016, 8:55:15 PM11/30/16
to vall...@googlegroups.com
2016-11-30 21:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

ரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.

முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள். 

இரா.பா


சங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். 


இந்த திராவிட சங்கம் என்பது மொழி வளர்ப்பு சங்கம் அல்ல மாறாக சமண  முனிகளின் சங்கம் என்கிறார் பேரா. இரா. மதிவாணர்.

ஆரைய்யன்  ஆயிரவன்   

N. Ganesan

unread,
Dec 1, 2016, 10:08:59 AM12/1/16
to மின்தமிழ், vallamai


On Thursday, December 1, 2016 at 3:23:22 AM UTC-8, Dev Raj wrote:
சங்க இலக்கியத்தில்  ’சங்கம்’

பரிபாடலில் ’சங்கம்’ கால அளவைக் குறியீடாக இடம் பெறுகிறது.
’கழகம்’ இருப்பதாகத் தெரியவில்லை. ’கூட்டம்’ உள்ளது.
மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன


 கழகம் - சங்க இலக்கியத்தில் உள்ளது. 2 குறள்கள் போன்ற பொருளிலே.

Cowrie என்னும் ஆங்கில வார்த்தை - கவறி. Cowrie shells used as dice, https://en.wikipedia.org/wiki/Cowry
உருவாக்கம் காணமுடியும்.

மேலும், சிவனுக்கு கவர்தி (Kavardha/Kabardin) பெயரும்: https://www.youtube.com/watch?v=wCkpO6OFDSw

வள்ளுவர் காலத்தில் கழகம் = சூதாடும் இடம் எனப் பொருள். வையாபுரிப்பிள்ளை “கழகம்” என்ற சொல்லுக்கு
ஒரு கட்டுரை எழுதியுள்ளார். களம் என்ற சொல்லில் இருந்து கப்பிரத்தியம் பெற்றுக் கழகம் எனவிரிவது பற்றி.
உலூகல- என்ற ரிக்வேத வார்த்தை பற்றி எழுதியுள்ளேன். உரல்-களம். நீலம் (Indigo plant - இப்போது ஜீன்ஸ் பேண்ட்ஸ்
செய்ய வங்காளத்தில் பயிரானது பிரிடீஷ் காலங்களில்) இடிக்க வட்டமான மர உரல்கள் கொண்ட களங்களை
நிறைய சிந்து சமவெளியில் பார்க்கலாம். எனவே, நீர்- > நீலம்; வார்- > வால்-, ... போல உரல்-களம் உர-களம்,
உலூகல என்று ரிக்வேதத்தில்.

வையாபுரியார் களம் > கழகம் என்பதை விட, கழ-/காழ் ‘கருமை’ என்ற பொருளிலே கழகம் என்ற சொல்லுக்குப்
பொருள் காணலாம் எனக் கருதுகிறேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 1, 2016, 10:31:56 AM12/1/16
to மின்தமிழ், vallamai


On Thursday, December 1, 2016 at 7:20:06 AM UTC-8, Dev Raj wrote:
On Wednesday, 30 November 2016 20:33:35 UTC+5:30, N. Ganesan wrote:
2011-ல் எனது மடல்: (கழகம் என்ற சொல்லுக்கு வாழ்வு கொடுத்தது கம்பன் என்பது பற்றி.
தமிழ் தேசியர்கள் கழகம் என்றுள்ள கக்ஷிகட்கு என்ன பொருள் கொண்டுள்ளனர் என்பதும் பார்க்கணும்.)

கழகத்துக்கு நல்ல பெயர் கொடுத்தது கம்பன்.


’கலை பயில் கழகம்’. பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.



சடகோபரந்தாதி பாடிய கம்பருக்கும் முன் சடகோபர் நற்பெயரளித்துத்
தம் பனுவல் வாயிலாக நல்வாழ்வு கொடுத்துள்ளாரே !

குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,
பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?
அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர்,
கழக மேறேல் நம்பீ! உனக்கும் இளைதே கன்மமே !

[எம் குழாம்தனுள் புக வேண்டா, நம்பீ,பேரழகு படைத்த பெண்டிர் பலர் உளர்,
அவர்பால் புகுவீர் ]



கழகத்தில் சூது ஆடுதல், சூது செய்தல் உண்டு. அப்படிச் சூது செய்யாதே என்கின்றனர் கோபிமார்கள்.
வாழ்த்திலே இருவகை உண்டு. இங்கே “உள்ளூறச் சொல்லுகின்ற வார்த்தை அல்ல” என்பர் உரைகாரர்.

அழகாக, பழைய உரை:
இவர்கள் ‘கழகமேறேல்நம்பீ“ என்றால் அதுகேட்டு அப்படியே வர்த்திப்பானோ  அவன்? இவர்கள்தாம் உள்ளூறச் சொல்லுகிறவார்த்தையுமன்றே இது, அவன் மேன்மேலும் உட்புகவேணும், தீம்புசெய்யவேணும் என்றன்றோ இவர்களும் உள்ளே எண்ணிருப்பது. அவன் இஃதறிவானாகையாலே பிடிவாதமாகச் சில செய்யப்புகுந்தான், அதுநோக்கி “உனக்குமிளைதே கன்மமே“ என்கிறார்கள். அப்பா! நீ செய்கிற இவ்வநீதியான செயல் நீசத்தனமானது என்று நாங்கள் சொல்லுகிறவளவேயோ? நீயே ஆலோசித்துப் பார்த்தல் இது மிகவும் நீசத்தனமென்னுமிடம் உன் மனத்துக்கும் தெரியுமே என்றபடி.

Here Nammazvar uses Kazakam in the old, Sangam sense. 

NG


தேவ்
 

N. Ganesan

unread,
Dec 3, 2016, 8:54:02 AM12/3/16
to மின்தமிழ், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Saturday, December 3, 2016 at 5:06:06 AM UTC-8, Dev Raj wrote:
On Thursday, 1 December 2016 20:38:58 UTC+5:30, N. Ganesan wrote:
 கழகம் - சங்க இலக்கியத்தில் உள்ளது. 2 குறள்கள் போன்ற பொருளிலே.

அவ்வாறாயின் முதற்கழகம், இடைக்கழகம், கடைக்கழகம் எனும் பெயர்களுக்கு வாய்ப்பில்லை
எனத் தெரிகிறது.


ஆமாம்.
 
 
Cowrie என்னும் ஆங்கில வார்த்தை - கவறி. Cowrie shells used as dice, https://en.wikipedia.org/wiki/Cowry
உருவாக்கம் காணமுடியும்.
மேலும், சிவனுக்கு கவர்தி (Kavardha/Kabardin) பெயரும்: https://www.youtube.com/watch?v=wCkpO6OFDSw
 

 kapardin -  कपर्दिन्  சரியான உச்சரிப்பு.
கபர்திநி - அம்பிகை
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்திநி, ரம்ய கபர்திநி, சைலஸுதே !

சோழி ஹிந்தியில் கௌடி ஆகி Cowry என ஆங்கில வடிவு பெறுகிறது என நினைக்கிறேன்.
எப்படி Cowrieyயைக் கபர்தியோடு பொருத்துகின்றனர் புரியவில்லை


-ட்-, -ற்-, -ழ்- இரண்டாம் எழுத்தாக தொடர்புடைய சொற்களில் வரும்.
கோடு-, கோறு, கோழ்-. குப்பை மண்ணைக் கோறிக் கொண்டிருப்பது கோழி. தெலுங்கில் கோடி.
தொறு-/தொழு-  தொடு- 

கோடு- குவடு/கவடு. இதுபோல், கோறு கவறு- முதலில் கழல் (அ) கழற்சிக்காய் எனக் கறுப்பாய் 
உள்ள காய்களால் ஆடிய ஆட்டம், பின்னர் கவறு என்னும் பலகறைப்பாசி (சோழி < கோற்- )யால்
ஆடப்படுகிறது, கவறு (கவர்/கவல்) : இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் சோழி. ஈசுவரன் ஜடாபாரத்தை
இரண்டாகப் பிளந்து கட்டியிருப்பதால் கபர்தின் < கவறு- இந்தத் தலையலங்காரத்தை சிந்துவெளிக்
கலைகளிலே காணலாம்.

கவறு ஆடல் = சூதாடல். முதலில், கழல் (கறுப்புக் காய்) கொண்டு ஆடியதால் அவ்விடம் கழகம் என்று
க-ப்ரத்யம் பெற்று விரிந்தது.  ... தமிழின் கவறு > Cowrie  https://en.wikipedia.org/wiki/Cowry



பின்னர், விரிவாகச் சொல்கிறேன்.

நா. கணேசன்
 

தேவ் 

N. Ganesan

unread,
Dec 3, 2016, 1:23:10 PM12/3/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Banukumar Rajendran


On Monday, November 28, 2016 at 7:50:03 PM UTC-8, இரா.பானுகுமார் wrote:

பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.


முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள். 

இரா.பா


சங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். 

முதலில், திரு. தேவ ராஜனின் கேள்விக்கு விடை: ” சங்க இலக்கியம் “ என முதல்பிரயோகம் யார் செய்தது: எனக்குத் தெரிந்தவரையில், வையாபுரியாருக்கு முன்னமே, உவேசா
சங்க இலக்கியங்கள் என்னும் தொடரைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

உவேசா மாணவர் பேரா. கு. அருணாசலக் கவுண்டர் அளித்த புஸ்தகம் பார்த்து எழுதுகிறேன். 1928-ல் அச்சானது. அதன் முதற்பதிப்பு, உவேசா கு.அ. அவர்கட்கு அளித்த பொக்கிஷம் இந்நூல்.
சங்கத்தமிழும், பிற்காலத்தமிழும். இந்நூல் சென்னை சருவகலாசாலையில் உவேசா சங்கத்தமிழ் பற்றிச் செய்த சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும். அதில் முதல் பக்கத்திலேயே
சங்க இலக்கியம் என்று இருக்கிறது. தொல்காப்பிய உரைகாரர் பேராசிரியர், நச்சர் வாக்குகளைக் கொண்டு இதனை உவேசா அவர்கள் அமைத்திருக்கிறார் என்று கருதலாம். அப் பழைய
உரைகளும் பார்ப்போம்.

சங்கத்தமிழும், பிற்காலத்தமிழும், 1928, உவேசா (பின்னரும் பல பதிப்புகள் வந்துள்ளன. பிடிஎப் ஆகவேண்டிய நூல். பின்னர் தட்டடெழுதிவிடலாம்.)
காவதம் என்னும் கன்னட நாட்டுச் சொல்லும், அதன் பொருளும், காதம்/காவதத்தின் அளவுகொண்டு பார்த்தால் காவுந்தி அடிகள் கர்நாடகப்
பொழில்மண்டிலத்தில் இருப்பதும், நாடுகாண் காதையின் ஊர்கள் தெய்வக் காவிரி பாயும் முழு நாடும் பேசுவதும் ஆராய்ந்தேன். அப்பொழுது
தழைக்காட்டுக் கங்கர்களின் ஊர் கொங்குநாடு என்று உவேசா குறிப்பிட்ட அரிய செய்தியும் தந்துள்ளேன். சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்
ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு
முடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு. இரண்டையும்
தெளிவாக சிலம்பின் பழைய உரைகாரர்கள் குறித்துள்ளனர். உவேசா தலக்காடு போன்ற இடங்கள் கொங்குநாடு எனக் குறிப்பிட்டமை:

சென்னை சருவகலாசாலையில் தாக்ஷிணாத்யகலாநிதி செய்த பிரசங்கங்கள்:
I தமிழ்ச்சங்கம். இதன் முன்னுரையில் தான் ”சங்க இலக்கியம்” என பெயரிட்டுள்ளார்.
II முத்தமிழ்
III சங்கநூல்களிற் கூறப்படும் தெய்வங்கள்
IV சங்க காலத்துப் புலவர்கள்
V சங்ககாலத்துப் புலமைவாய்ந்த பெண்பாலார்
VI புலவர்களை ஆதரித்த பிரபுக்கள்
VII கலைகள்
VIII பண்டை உரையாசிரியர்கள்
IX தமிழை ஆதரித்த பிரபுக்களும் புலவர்களும்
X ஆராய்ச்சி

10 ஆண்டுகள் சென்றபின்னர் அவர் மாணவர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் தம் பதிப்பிற்கு இப்பெயரை இட்டார்.
தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். 

N. Ganesan

R. Banukumar wrote:
********************************
சங்க இலக்கியம் என்று பெயர் சூட்டியவர், எனக்கு தெரிந்து, திருவாளர்.வையாபுரியார். மிந்தமிழில்
எழுதியிருக்கிறேன்.

சங்கம் என்று தேர்ந்தெடுத்தற்கு காரணம், பழம்பெரும் பாடல்களை முதன்முதலில் தொகுத்தவர்கள் சமண சமயத்தவர்கள் (ஜைன, புத்த) ஆகையால்! இரண்டாம் தொகுப்பு, கி.பி.ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில், சைவ சமயத்தவர்கள் செய்தது.

இதை பற்றியக் குறிப்பும் இங்கு கொடுத்திருக்கிறேன். 


இரா.பா
*****************************************************

N. Ganesan

unread,
Dec 4, 2016, 10:56:59 AM12/4/16
to மின்தமிழ், vallamai


On Sunday, December 4, 2016 at 6:27:52 AM UTC-8, Dev Raj wrote:
On Sunday, 4 December 2016 17:42:14 UTC+5:30, Dev Raj wrote:
‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது  ?


தனி மடல் தகவல் ஒன்று .

திராவிடப் பிரகாசிகை -
”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினு 
 நன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,
’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.

இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லை
எனத் தெரிகிறது. 


சங்கத்தைக் கழகம் என்றது சேலத்தில். இது சபாபதி நாவலர் காலத்திற்கு மிகப் பிற்காலம். சபாபதி
நாவலர் இறந்து 50, 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கம் கழகம் எனலாம் என்ற கருத்து பாவாணருக்கு
ஏற்பட்டது.

திராவிடப் பிரகாசிகையில் 14 இடங்களில் சங்க இலக்கியம் என்று குறிப்பிடுகிறார் சபாபதி நாவலர் (1845/6 - 1903).
யோசித்துப் பார்த்தால் ஆறுமுக நாவலர் - சபாபதி நாவலரின் குரு - சங்க இலக்கியம் எனப் பயன்படுத்தியிருப்பார்கள்.
தேடவேண்டும்.

நா. கணேசன்
 
சங்கம் நிறுவித் தொண்டாற்றியதில் பவுத்த - சமணர் பங்களிப்பு இருந்திருக்குமானால்
ஐம்பெருங்காப்பியங்களில் அல்லது பிற பவுத்த - சமண நூல்களில் கட்டாயம் குறிப்பு
இருக்கும் . அவற்றில் இதற்கான ஆதாரம்  உள்ளதா எனவும் ஆராய வேண்டும்.

தமிழ்ச்சங்கம் பற்றிய குறிப்பு சீவக சிந்தாமணியில் இருப்பதாகத் தெரியவில்லை


தேவ்

N. Ganesan

unread,
Dec 4, 2016, 11:59:42 AM12/4/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

On Sunday, December 4, 2016 at 6:27:52 AM UTC-8, Dev Raj wrote:
On Sunday, 4 December 2016 17:42:14 UTC+5:30, Dev Raj wrote:
‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது  ?


தனி மடல் தகவல் ஒன்று .

திராவிடப் பிரகாசிகை -
”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினு 
 நன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,
’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.

இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லை
எனத் தெரிகிறது. 


சங்கத்தைக் கழகம் என்றது சேலத்தில். இது சபாபதி நாவலர் காலத்திற்கு மிகப் பிற்காலம். சபாபதி
நாவலர் இறந்து 50, 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கம் கழகம் எனலாம் என்ற கருத்து பாவாணருக்கு
ஏற்பட்டது.

திராவிடப் பிரகாசிகையில் 14 இடங்களில் சங்க இலக்கியம் என்று குறிப்பிடுகிறார் சபாபதி நாவலர் (1845/6 - 1903).
யோசித்துப் பார்த்தால் ஆறுமுக நாவலர் - சபாபதி நாவலரின் குரு - சங்க இலக்கியம் எனப் பயன்படுத்தியிருப்பார்கள்.
தேடவேண்டும்.

தமிழ் தேசியம் வளர்க்கும் ஸ்ரீ சேசாத்திரி இரண்டு உயிரெழுத்தின் நடுவே உள்ள -க்- மெய்யின் ஒலிப்பு ஒருவிதமான -h-
என்பதுபற்றிக் கேட்டிருந்தார். இதனை மொழியியல் அறிஞர்கள் intrevocalical fricative sound என்பர். அதனைக் குறிப்பிட
ரோமன்/ஆங்கில எழுத்தில் ஒருமுறை உண்டு: h-ன் மீழே ஒரு breve (அரைவட்டம்). இவ்வொலி அறபி பாஷையிலும் இருக்கிறது.
அதே போல, சொல் முதலில் வரும் ச் மற்றும் இரு உயிரிடை -ச்- இதற்கும் s- ன் மீழே ஒரு breve (அரைவட்டம்) இடம்பெறல் வேண்டும்.
இந்த விதிகளை இ. அண்ணாமலை, ந. தெய்வசுந்தரம், ... போன்றோர் எழுதியுள்ளனர் தொகுத்து கணிஞரைக் கொண்டு
ஒலிப்புக்கு வசதியாக ஒரு வலைப்பக்கம் தயாரிக்கலாம். அப்போது யூனிகோட் தமிழோ, ஐஎஸ்ஓ ரோமன்லிபி தமிழோ
உள்ளிட்டால் ஒலிப்பது எவ்வாறு என்று காட்டலாம். அப்போதுதான் இளைஞர்களுக்கு இந்த தொன்மையான தமிழ் ஒலிப்பு
விளங்கிக்கொள்ள வசதி. இவ்வொலிப்பு மதுரையில், கோவையில், ஈழத்தில் உள்ளது. நல்ல தளம்: http://noolaham.org
noolaham.org எப்படி நூலகம் எழுதப்பட்டுள்ளது எனப் பார்க்கவும். 

Noolaham.org தளத்தில் திராவிடப் பிரகாசிகை:
சங்க இலக்கியம் என்று வருமிடங்களைத் தொகுக்கலாம். யாராவது செய்யலாம். இல்லையெனில், நான் செயக்கூடும்.

திராவிடப் பிரகாசிகை 14, 15 இடங்களில் சங்க இலக்கியம் பற்றிப் பேசுகிறது. சைவ பரமான நூல் இஃது. எனவே, சபாபதி நாவலரோ
அல்லது அவரது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரோ முதன்முறையாக “சங்க இலக்கியம்” என்று பயன்படுத்துகிறார்கள்.
பின்னர் உவேசா. பின்னர், 1938-ல் சங்க இலக்கியம் எல்லாவற்றையும் தொகுத்து “சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும்” என்று
ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க நூல்களை ஒரே புத்தகமாக வெளியிட்டார்.


On Saturday, December 3, 2016 at 12:37:29 AM UTC-8, ஆரோதன் wrote:
Satura-aharadi,   எனக்கு எப்போதும் ஒரு கேள்வி உண்டு. தமிழில் ஹகரம் இல்லை இருந்தும் ஏன் இப்படி ககரத்தை ஹகரமாக பலுக்கி தமிழைக் கொல்லுகிறார்கள். ஏன் தமிழர்கள் இப்படி முட்டாளாக இருக்கிறார்கள்?  அகநானுறும் இப்படி ahanaanuru என்று தவறாக பேராசிரியர்களால் எழுதவும் பலுக்கவும் படுகிறது.

ஆரோதன் 


தெலுங்கு, கன்னடம் போன்ற த்ராவிட மொழிகள் இழந்துவிட்ட ஒலிப்பு intervocalical -k- ஒலிப்பு. முகம், அழகு, பிறகு, முருகன், .... இவற்றில் எல்லாம் இந்த -h- ஓசை உண்டு. ஹிண்டு போன்ற பத்திரிகைகளில் தெலுங்கு, கன்னடம் தாய்மொழி கொண்ட பலர் எழுதுவதால் mugam, azhagu, piragu, murugan, .... என்ற தவறான எழுத்துப்பெயர்ப்பு நடக்கிறது. 

நல்ல பாடகர்கள் தாய்மொழி வேறாயினும் அழகாக இந்த voiceless fricative sounds from intervocalical -k- & -c- ஒலிப்பதைக் கேட்கலாம். பி. சுசீலா, டிஎம்எஸ், பாலமுரளி, யேசுதாஸ் ... இப்பொழுது தமிழர்களின் குழந்தைகள் பலர் ஆங்கில எழுத்தில் தமிழை எழுதத் தொடங்கியுள்ளனர். எனவே  intervocalical -k-  அவ்வாறே எழுதப்படுதல் கற்பிக்கப்பட வேண்டும். இன்றேல், தெலுங்கு, கன்னடம் போல் இந்த மிகப் பழைய உச்சரிப்பை தமிழ் இழந்துவிடும்.

பல மொழியியல் அறிஞர்கள் 150 ஆண்டுகளாய் எழுதுவதுதான் இந்த முக்கியமான ஒலிப்பியல். 1831-ல் பிரெஞ்சுக்காரர் கைப்பட எழுதிய பிரெஞ்சு-தமிழ் அகராதி உண்டு. சில காலமாக, இணையத்தில் இருக்கிறது. அதில் பார்த்தால், இந்த intervocalical -k- அப்படியே -k- என எழுதியுள்ளார். அம்முறை தான் தமிழின் இரண்டு உயிர்களுக்கு இடையே -க்- வரும்போது எழுதச் சிறந்தது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 4, 2016, 1:34:14 PM12/4/16
to மின்தமிழ், vallamai


On Sunday, December 4, 2016 at 2:06:04 AM UTC-8, N. Kannan wrote:
அன்பின் கணேசன்:

//சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்
ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு
முடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு.
​//

இது சற்று விளங்கவில்லை.

சீரங்கம் எங்குள்ளது? 

திருவரங்கம் சோழநாட்டில் உள்ளது. திருச்சியில். இது செய்யப்பட்ட அரங்கம் ஆகலாம். 10-11 நூற்றாண்டுவரை ஸ்ரீரங்கம் என்று திருவரங்கம் அழைக்கப்பட்டதில்லை.
பார்க்க: திவ்விய பிரபந்தம்.

ஆனால், இயற்கையாகவே அமைந்த அரங்கம் காவிரியில் பழைய கொங்குநாட்டில் (acc. to scholars like உவேசா, ...) உள்ளது. காவிரியில் உள்ள பெரிய அரங்கம் இதுதான்.
இதனை, கங்கர்கள் என்னும் சமண சமயத்தைப் பின்பற்றிய மன்னர்கள் ஆண்டனர். அவர்கள் மணிப்பிரவாள இலக்கியத்தை தமிழிலும், கன்னடம் போன்ற மொழிகளிலும்
வளர்த்தனர். ஸ்ரீபுராணம். ஆழ்வார் என்ற சொல் தியானத்தில், யோகத்தில் மூழ்கி இருப்பவரைக் குறிப்பது. தீர்த்தங்கரர்களுக்கான கல்வெட்டுகளில் முதலில் உள்ளது.
பின்னர், ஆழ்வார்கள் என்ற பெயரையும், வைஷ்ணவத்தின் முன்னர் உள்ள ஸ்ரீ, மணிப்ரவாலமாக உரைகள் எழுதும் வழிமுறை இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் சமண சமயிகளிடம்
இருந்து பெறலாயினர்.

Cascade of mountains - பன்மலை அடுக்கம் என்பது பழைய தமிழ் இலக்கியங்கள். பன்மலை அடுக்கம் கொண்டது ஸ்ரீரங்கம். கங்க ராஜ்ஜியம். அங்கே தான் மதுரைக்கு
30 காதம் (= ~ 360 மைல்கள்) வடக்கே பொழில்மண்டிலம் என்னும் ஸஹ்யாத்ரியில் கவுந்தி அடிகளைச் சந்தித்து, கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும்
தெற்கே மதுரை நோக்கி வருகின்றனர். கங்க ராஜ்ஜியமாக இருந்த ஸ்ரீரங்கத்தில் தான் கவுந்தி அடிகள் அந்த(ர)சாரணர் என்னும் ஜைந தெய்வங்களைச் சந்தித்து
மூவரும் தொழுகின்றனர். பின்னர் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அப்புறம் பெருமாள் துயில்கொள்ளும் திருவரங்கம் வருகின்றனர். நாடுகாண் காதையை
கண்டவியூக சூத்திரம் (பௌத்தம்) நூல் போல இளங்கோ அடிகள் அமைத்துள்ளார் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் எழுதிய புதினத்தில். காதம் எவ்வளவு தூரம்? என்னும்
இழையில் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் இருக்கிறது. நீங்கள் படிக்கலாம்.

பன்மலை அடுக்கம் உள்ள ஸ்ரீரங்கம் -சிலம்பில் பாடப்பட்டுள்ளது:  (இது திருவரங்கம் அல்ல).
அடுக்கம் என்ற சொல்லை Cascade-க்கு தமிழில் பயன்படுத்துவது மிகப்பழைய மரபு.
அடுக்கம் = பக்கம் பக்கமாக அமைந்த மலைகள் = cascade of hills, mountains.
cascade என்ற சொல்லுக்கு அடிப்படையாக “in stages, successively, subsequently" flowing/being next to each other.
அடுக்கடுக்கடுக்காக உள்ள மலைகள் பன்மலை அடுக்கம்.

cascade of water falls = நீரருவி அடுக்கம்.  
There are several waterfalls in the area = அங்கே அருவிகளின் கூட்டம்/திரள் இருக்கின்றன.

Cascade of Mountains = நெடுமலை அடுக்கம்.

நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாட் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல் (அகநானூறு)

Famous lines of CilappatikAram:
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள


cascade of mountains near Kumaricode. This cascade can be seen in Kotricode near Kanyakumari.

----------------

மஞ்சு உலா வரு சிகரியும் சூளிகை வரைப்பும் 
விஞ்சு மேல் நில அடுக்கமும் சோலையும் வெற்பும் 
சஞ்சரீக மார் ஓடையும் வாவியும் தடமும் 
எஞ்சல் இல்லதோர் மாடங்கள் எங்கணும் உளவே. - kampan

---------------------------------


நாடுகாண் காதை:

ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெய ரைய ரொருங்குட னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் 
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப்

சீரங்க பட்டினத்தில் - காவேரி ஆற்று வீ அரங்கத்தில்
அருகேயுள்ள அடுக்கத்து மலைகளைக் குறிப்பிடுகிறார்.
அடுக்கம் - cascade of hills.

சீரங்கத்தில் அடுக்கம்: (Cascade of Hills)






இந்த அரங்கத்தின் அருகே ”குரங்கு அமை மரம் பயில் அடுக்கம்” பல உள்ளன.
வடபெரும்கோட்டின் (சையமலைத் தொடர்கள்) மலைநாட்டு சீரங்கம் இது.



சீரங்க பட்டினத்து அடுக்கத்தில் இருந்த கோட்டையில் போர்:

நா. கணேசன்
 

10 நூற்றாண்டுக்கு முன் எழுத இலக்கியங்கள் எதைப் பேசுகின்றன?

தெரிந்து கொள்ளவே இக்கேள்வி.

நா.கண்ணன்​

N. Ganesan

unread,
Dec 4, 2016, 4:40:15 PM12/4/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, December 4, 2016 at 2:06:04 AM UTC-8, N. Kannan wrote:
அன்பின் கணேசன்:

//சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்
ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு
முடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு.
​//

இது சற்று விளங்கவில்லை.

சீரங்கம் எங்குள்ளது? 


இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் சிலம்பிற்கு உரை எழுதினோர் சிலம்பு நாடுகாண் காதையில் உள்ள இடங்களையும், ஊர்களையும்
விட்டுவிட்டார்கள். ஆனால், இளங்கோ அடிகள் காலத்தில் வடகொங்காக இருந்த பகுதிகள் இன்று கன்னட தேசம்/மாநிலம் ஆகிவிட்டதால் 
இக் குழப்பம் நேர்ந்துவிட்டது. 
 
திருவரங்கம் சோழநாட்டில் உள்ளது. திருச்சியில். இது செய்யப்பட்ட அரங்கம் ஆகலாம். 10-11 நூற்றாண்டுவரை ஸ்ரீரங்கம் என்று திருவரங்கம் அழைக்கப்பட்டதில்லை.
பார்க்க: திவ்விய பிரபந்தம்.

ஆனால், இயற்கையாகவே அமைந்த அரங்கம் காவிரியில் பழைய கொங்குநாட்டில் (acc. to scholars like உவேசா, ...) உள்ளது. காவிரியில் உள்ள பெரிய அரங்கம் இதுதான்.
இதனை, கங்கர்கள் என்னும் சமண சமயத்தைப் பின்பற்றிய மன்னர்கள் ஆண்டனர். அவர்கள் மணிப்பிரவாள இலக்கியத்தை தமிழிலும், கன்னடம் போன்ற மொழிகளிலும்
வளர்த்தனர். ஸ்ரீபுராணம். ஆழ்வார் என்ற சொல் தியானத்தில், யோகத்தில் மூழ்கி இருப்பவரைக் குறிப்பது. தீர்த்தங்கரர்களுக்கான கல்வெட்டுகளில் முதலில் உள்ளது.
பின்னர், ஆழ்வார்கள் என்ற பெயரையும், வைஷ்ணவத்தின் முன்னர் உள்ள ஸ்ரீ, மணிப்ரவாலமாக உரைகள் எழுதும் வழிமுறை இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் சமண சமயிகளிடம்
இருந்து பெறலாயினர்.

Cascade of mountains - பன்மலை அடுக்கம் என்பது பழைய தமிழ் இலக்கியங்கள். பன்மலை அடுக்கம் கொண்டது ஸ்ரீரங்கம். கங்க ராஜ்ஜியம். அங்கே தான் மதுரைக்கு
30 காதம் (= ~ 360 மைல்கள்) வடக்கே பொழில்மண்டிலம் என்னும் ஸஹ்யாத்ரியில் கவுந்தி அடிகளைச் சந்தித்து, கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும்
தெற்கே மதுரை நோக்கி வருகின்றனர். கங்க ராஜ்ஜியமாக இருந்த ஸ்ரீரங்கத்தில் தான் கவுந்தி அடிகள் அந்த(ர)சாரணர் என்னும் ஜைந தெய்வங்களைச் சந்தித்து
மூவரும் தொழுகின்றனர். பின்னர் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அப்புறம் பெருமாள் துயில்கொள்ளும் திருவரங்கம் வருகின்றனர். நாடுகாண் காதையை
கண்டவியூக சூத்திரம் (பௌத்தம்) நூல் போல இளங்கோ அடிகள் அமைத்துள்ளார் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் எழுதிய புதினத்தில். காதம் எவ்வளவு தூரம்? என்னும்
இழையில் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் இருக்கிறது. நீங்கள் படிக்கலாம்.

பன்மலை அடுக்கம் உள்ள ஸ்ரீரங்கம் -சிலம்பில் பாடப்பட்டுள்ளது:  (இது திருவரங்கம் அல்ல).
அடுக்கம் என்ற சொல்லை Cascade-க்கு தமிழில் பயன்படுத்துவது மிகப்பழைய மரபு.
அடுக்கம் = பக்கம் பக்கமாக அமைந்த மலைகள் = cascade of hills, mountains.
cascade என்ற சொல்லுக்கு அடிப்படையாக “in stages, successively, subsequently" flowing/being next to each other.
அடுக்கடுக்கடுக்காக உள்ள மலைகள் பன்மலை அடுக்கம்.

காதம்/காவதம்:
’பாரதியின் வேதமுகம்’ போன்ற நூல்களின் ஆசிரியர் சைவத்திரு. சு. கோதண்டராமன் அவர்கள் மின்தமிழ் குழுவில்
12/10/2010 அன்று குறிப்பிட்டுள்ளார்:
நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம் என்று
ஒரு வழக்கு அந்தப் பகுதிகளில்- நாகப்பட்டினம், காரைக்கால்,
திருக்கடையூர், சீர்காழி, சிதம்பரம்- கேட்டிருக்கிறேன்.
சொல்லப்பட்ட ஊர்களுக்கு இடையேயுள்ள தூரம்
ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் உள்ளது.”

கொங்குநாட்டார்களிடையே நீண்ட காலமாக ஒரு சொலவடை வழக்கத்தில் உள்ளது. கொங்குப் புலவோர் அ.மு.குழந்தை, பெ.தூரன் போன்றோர் எழுதியும் உள்ளனர். மலைகளால் சூழப்படுவது அகல்விளக்கின் விளிம்பு போலவும் (Edges of the earthen lamp),முவ்விழைகள் கொண்ட திரி அந்த அகல்விளக்கில்! நொய்யல், ஆன்பொருனை, பவானி சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை. இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் திரியின் முகம்/மூக்கு பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத் தமிழர்களுக்கு அத்திரி (காவிரி) அளிக்கிறது.

சங்ககாலச் சேரர்களின் தலைநகர் காவிரிக் கரையில் உள்ள வஞ்சி. விளக்கி நூலெழுதியவர் மகாவித்துவான் ரா. ராகவையங்கார். பின்னர், தினமலர் கிருஷ்ணமூர்த்தி கண்டெழுதின நாணயங்கள், ரா. நாகசாமியின் ரோமன் கரூர், ... எல்லாம் நிரூபித்துவிட்டன. காதம், காவதம் என்ற கன்னடச் சொற்களை அறிமுகம் செய்த இளங்கோ அடிகள் கொண்டது 10 - 14 மைல் எனலாம். சமணக் குரத்தி கவுந்தி அடிகளின் கதாபாத்திரத்தை தன் சமண சமயத்தை விவரிக்கத் தன் நாவலில் படைத்துக்கொள்கிறார். சீன மொழியில் Journey to the West போலவும், ஜப்பானிய மொழியில் Tale of the Genji போல, செம்மொழி தமிழில் உள்ள முதல் நாவல் சிலப்பதிகாரம். காவிரி பாயும் கங்கர்களின் நாட்டை ஆளுமைக்குள் வைத்திருப்பதைச் சோழர்கள் எப்பொழுதும் விரும்பினர். அணைகள் போன்றவை கட்டிவிட்டால் நீர்வரத்து திருச்சி-தஞ்சை டெல்ட்டா பாசனத்துக்கு குறையுமே. அதுபோல், சோழன் ஒருவனின் ஆட்சிக்குள் காவிரிநதி பாயும் எல்லா இடங்களும் இருந்தன என்று நாடுகாண் காதையில் கூறி, மதுரைக்கு வடக்கே 30 காதம் (= ~360 மைல்) தொலைவில் கோவலன் கண்ணகி கௌந்தி அடிகள் இருப்பிடத்தில் சந்தித்து, பின்னர் சீரங்கபட்டினம் வந்து, அந்தசரணரைத் தொழுது, பின் உறையூர் வந்துசேர்வதாகப் பாடியுள்ளார். பலரைச் சந்திப்பது எல்லாம் கண்டவியூக சூத்திரத்தை மாதிரியாக வைத்துச் செய்தது. வஞ்சியில் இருந்து கன்னட நாடு சென்று சமண சமய குரவர்களிடம் இளங்கோ அடிகள் அதன் தத்துவங்களைக் கற்றிருக்கலாம்.

ஜனத்தொகை மிகுந்துவரும் மாநிலங்களில் நீர் என்பது ஒரு நேஷனல் ரிஸோர்ஸ். சரியான முறையில் பங்கீடு செய்தல் வேண்டும். வரலாற்றையும் கணக்கில் எடுத்து. இதனையெல்லாம் தெளிவாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் நாடுகாண்காதையில் காவிரி பாயும் நாடு, அதன் உரிமைகள் எல்லாம் சொல்லிவிட்டார். சோழன் மேலாளுமையில் இருந்த சீரங்கம் (இப்பொழுது சீரங்க பட்டினம்), அங்கே இருந்த சமண சமயம் எல்லாம் விளக்குகிறார். அந்தச் சோழன் யார் என்றால் கரிகால் சோழன்காலத்திலிருந்து என அடியார்க்குநல்லார் குறிப்பிடுகிறார். காதம் ~12 மைல் என்பது கன்னட, தமிழ் நாடுகளில் உள்ள சான்றுகளால் தெளிகிறோம். முப்பது காதம் ~360 மைல் மதுரைக்கு வடக்கே கவுந்தி அடிகளின் தவப்பள்ளியைச் சொல்லி, குடநாட்டில் (வடபெருங்கோடு) பொழில்மண்டிலமும் குறிப்பிடுகிறார். ஐம்பொழில் (ஐஹொளெ), பொழில்நரசபுரம் (ஹொளெநர்ஸிபுர), என பொழில்மண்டிலம் என சையமலைப் பகுதிகளைக் குறிப்பிடுகிறார். அந்த மலைகளில் கரும்பாலைப் புகை மேகங்கள் போலச் சூழும் வேளாண் வளமும் குறிப்பிடுகிறார். அங்கிருந்துதான் கரும்பு அதியமான் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து பயிரிடச் செய்கிறான் என்பது சங்க இலக்கியம். சமண சமயத்தின் தெய்வங்களை சீரங்க பட்னத்தில் சந்தித்து, அங்கே மொழிந்த மந்திரங்களை பின்னர் தமிழ்நாட்டு திருச்சி (திருவரங்கம்) வந்தும் சொல்கின்றனர். சீரங்கத்தில் நிகழ்ந்தது திருவரங்கத்திலும் நினைவுக்கு வருதல் இயற்கை. சீரங்கம், திருவரங்கம் இரண்டுக்கும் இடையே நிகழும் நிகழ்ச்சிகளை நாடுகாண்காதையில் பேசுகிறார். இளங்கோ வாழ்ந்த காலத்தில் (~கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) தலைக்காவேரி உள்ளிட்ட பகுதிகள் தமிழகம் தான். ஆனால் ஏனோ, இருபதாம் நூற்றாண்டு உரைகள் நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ஆனால், கண்டவியூக சூத்திரம் படித்தாலும், காதம்/காவதம் கணக்கீட்டாலும், பொழில்மண்டிலம், வடபெருங்கோடு, ... என்ற குறிப்பிட்ட பொருளுடைய சொற்கள் காவிரி உற்பவிக்கும் பகுதியைச் சார்ந்தனவாகும். சையமலையும், தலைக்காவேரி, சீரங்கம் என்பதும் கர்நாடகம், சீரங்கம் அருகே தான் கங்கர்களின் தலைக்காடு. சீரங்கம் கங்கர் ராஜ்யம்; ஆனால், திருவரங்கம் என்பது திருச்சி எனவும் கணக்கில் எடுத்தால் நாடுகாண்காதையின் பொருள் தெளிவாக விளங்கும்.  ஆழ்வார் யாரும் திருவரங்கத்தைச் சீரங்கம் என்பதில்லை. இரண்டு இடங்களும் வெவ்வேறு. சோழனின் இறையாண்மைக்குக் கீழிருந்த பகுதிகள் இவை என்பதால் நாடுகாண்காதையில் காவிரிநாடு முழுக்கப் பாடியுள்ளார். மேல்கொங்கிலே காவிரி தடைபடாமல் இருந்தால்தான் தங்கள் நாட்டு வேளாண்மை செழிப்பாக இருக்கும் என்பதில் சோழர்கள் மிகக்கவனம் செலுத்தினர். இப்போதைய மாகாண எல்லைகள் இல்லாத காலம் சிலம்பின் காலம். இப்போது காவிரிநாட்டின் பகுதிகள் கர்நாடகா என்றாலும், பழங்காலத்தில் அதன் வரலாறும், மன்னர்களையும் உ. வே. சாமிநாதையர் விளக்குவதைப் பார்ப்போம்.

கொங்குநாட்டில் தலைக்காடு என்ற இடத்தில் கங்கர்கள் என்ற ஒருவகையரசர்கள் இருந்தார்கள். அவர்கள் புலவர்களை ஆதரித்து வந்தார்கள். தளக்காடு என்பது பிற்காலத்தில் தலைக்காடு என்று வழங்கப்படுகிறது. நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன் அந்தக் கங்கர்களில் ஒருவனே. அவர்கள் சைனர்கள். நன்னூல், அதற்குரிய மயிலைநாதர் உரை, நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், இவற்றின் உரைகள், பெருங்கதை, வச்சணந்திமாலை முதலியன அவர்கள் இயற்றுவித்த நூல்களாகும். சீவக சிந்தாமணியும், சூளாமணியும் சில உபகாரிகள் வேண்டுகோளால் சைன பண்டிதர்கள் இயற்றிய காப்பியங்களே.”(பக்கம் 129, உவேசா, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், என்னிடம் உள்ள பிரதி: நூலின் முதலச்சு 1928-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு).

அன்புடன்,
நா. கணேசன்

seshadri sridharan

unread,
Dec 5, 2016, 12:57:58 AM12/5/16
to vall...@googlegroups.com
2016-12-04 22:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
திராவிடப் பிரகாசிகையில் 14 இடங்களில் சங்க இலக்கியம் என்று குறிப்பிடுகிறார் சபாபதி நாவலர் (1845/6 - 1903).
யோசித்துப் பார்த்தால் ஆறுமுக நாவலர் - சபாபதி நாவலரின் குரு - சங்க இலக்கியம் எனப் ன்படுத்தி யிருப்பார்கள். தேடவேண்டும்.

தமிழ் தேசியம் வளர்க்கும் ஸ்ரீ சேசாத்திரி இரண்டு உயிரெழுத்தின் நடுவே உள்ள -க்- மெய்யின் ஒலிப்பு ஒருவிதமான -h- என்பது பற்றிக் கேட்டிருந்தார். இதனை மொழியியல் அறிஞர்கள் intrevocalical fricative sound என்பர். அதனைக் குறிப்பிட ரோமன்/ஆங்கில எழுத்தில் ஒருமுறை உண்டு: h-ன் மீழே ஒரு breve (அரைவட்டம்). இவ்வொலி அறபி பாஷையிலும் இருக்கிறது. அதே போல, சொல் முதலில் வரும் ச் மற்றும் இரு உயிரிடை -ச்- இதற்கும் s- ன் மீழே ஒரு breve (அரைவட்டம்) இடம்பெறல் வேண்டும். இந்த விதிகளை இ. அண்ணாமலை, ந. தெய்வசுந்தரம், ... போன்றோர் எழுதியுள்ளனர் தொகுத்து கணிஞரைக் கொண்டு ஒலிப்புக்கு வசதியாக ஒரு வலைப்பக்கம் தயாரிக்கலாம். அப்போது யூனிகோட் தமிழோ, ஐஎஸ்ஓ ரோமன்லிபி தமிழோ உள்ளிட்டால் ஒலிப்பது எவ்வாறு என்று காட்டலாம். அப்போதுதான் இளைஞர்களுக்கு இந்த தொன்மையான தமிழ் ஒலிப்பு
விளங்கிக்கொள்ள வசதி. இவ்வொலிப்பு மதுரையில், கோவையில், ஈழத்தில் உள்ளது. நல்ல தளம்: http://noolaham.org noolaham.org எப்படி நூலகம் எழுதப்பட்டுள்ளது எனப் பார்க்கவும். 

Noolaham.org தளத்தில் திராவிடப் பிரகாசிகை: http://noolaham.net/project/49/4863/4863.pdf
சங்க இலக்கியம் என்று வருமிடங்களைத் தொகுக்கலாம். யாராவது செய்யலாம். இல்லையெனில், நான் செயக்கூடும். http://noolaham.net/project/49/4863/4863.pdf


நான் சிறு  அகவை முதலே பலதரப்பு மக்களோடு பேசிவந்துள்ளேன்.  அவர்கள் எவரும் தம் பேச்சி ஊடே ககரத்தை ஹகரமாக பலுக்கி கேட்டறியேன். பிராமணர்கள் சிலர் அவ்வாறு பேசிஅறிந்துள்ளேன்.  ஹகரத்தை சரியெனும்  தமிழ் அறிஞர்கள் உண்மையில் தமிழின் பால் அக்கறை உள்ளவர் அல்லர் மாறாக தமிழ் கொலைஞர்கள். noolaham என்பதும் அப்படி ஒரு கொலைதான். வந்தாஹ, கேட்டாஹ என்பதெல்லாம் மொழிச் சிதைவு.   

மத்எவ்வி 


 

On Saturday, December 3, 2016 at 12:37:29 AM UTC-8, ஆரோதன் wrote:
Satura-aharadi,   எனக்கு எப்போதும் ஒரு கேள்வி உண்டு. தமிழில் ஹகரம் இல்லை இருந்தும் ஏன் இப்படி ககரத்தை ஹகரமாக பலுக்கி தமிழைக் கொல்லுகிறார்கள். ஏன் தமிழர்கள் இப்படி முட்டாளாக இருக்கிறார்கள்?  அகநானுறும் இப்படி ahanaanuru என்று தவறாக பேராசிரியர்களால் எழுதவும் பலுக்கவும் படுகிறது.

ஆரோதன் 


தெலுங்கு, கன்னடம் போன்ற த்ராவிட மொழிகள் இழந்துவிட்ட ஒலிப்பு intervocalical -k- ஒலிப்பு. முகம், அழகு, பிறகு, முருகன், .... இவற்றில் எல்லாம் இந்த -h- ஓசை உண்டு. ஹிண்டு போன்ற பத்திரிகைகளில் தெலுங்கு, கன்னடம் தாய்மொழி கொண்ட பலர் எழுதுவதால் mugam, azhagu, piragu, murugan, .... என்ற தவறான எழுத்துப்பெயர்ப்பு நடக்கிறது. 

நல்ல பாடகர்கள் தாய்மொழி வேறாயினும் அழகாக இந்த voiceless fricative sounds from intervocalical -k- & -c- ஒலிப்பதைக் கேட்கலாம். பி. சுசீலா, டிஎம்எஸ், பாலமுரளி, யேசுதாஸ் ... இப்பொழுது தமிழர்களின் குழந்தைகள் பலர் ஆங்கில எழுத்தில் தமிழை எழுதத் தொடங்கியுள்ளனர். எனவே  intervocalical -k-  அவ்வாறே எழுதப்படுதல் கற்பிக்கப்பட வேண்டும். இன்றேல், தெலுங்கு, கன்னடம் போல் இந்த மிகப் பழைய உச்சரிப்பை தமிழ் இழந்துவிடும்.

பல மொழியியல் அறிஞர்கள் 150 ஆண்டுகளாய் எழுதுவதுதான் இந்த முக்கியமான ஒலிப்பியல். 1831-ல் பிரெஞ்சுக்காரர் கைப்பட எழுதிய பிரெஞ்சு-தமிழ் அகராதி உண்டு. சில காலமாக, இணையத்தில் இருக்கிறது. அதில் பார்த்தால், இந்த intervocalical -k- அப்படியே -k- என எழுதியுள்ளார். அம்முறை தான் தமிழின் இரண்டு உயிர்களுக்கு இடையே -க்- வரும்போது எழுதச் சிறந்தது.

நா. கணேசன்


 
சங்கம் நிறுவித் தொண்டாற்றியதில் பவுத்த - சமணர் பங்களிப்பு இருந்திருக்குமானால்
ஐம்பெருங்காப்பியங்களில் அல்லது பிற பவுத்த - சமண நூல்களில் கட்டாயம் குறிப்பு
இருக்கும் . அவற்றில் இதற்கான ஆதாரம்  உள்ளதா எனவும் ஆராய வேண்டும்.

தமிழ்ச்சங்கம் பற்றிய குறிப்பு சீவக சிந்தாமணியில் இருப்பதாகத் தெரியவில்லை


தேவ்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages