தமிழில் உரையாசிரியர்கள் துணையின்றி மூல நூல்களைப் படிக்க இயலாதா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

215 views
Skip to first unread message

மிஞ்ஞானி

unread,
Oct 15, 2013, 10:14:49 AM10/15/13
to mint...@googlegroups.com, vallamai
தமிழர்களின் ஊடக வழியான கருத்துப் பரப்புதல் கருத்துப் பரிமாற்றம் பற்றி அதிகத் தகவல் இணையத்தில் காணக் கிடப்பதில்லை.  இற்றைநாள் அச்சு ஊடகம் குழுமத்தில் சொல்லின் செல்வர்கள் சொற்சிலம்பத்தில் அறிவு பெற்ற நிலையை மாற்றி அவனை நூலோடு ஒன்ரி தனிமப்படும் நிலையை உருவாக்கியது. அச்சு ஊடகம் குடிகளாக குழுவாக இருந்து கருத்தவளங்களைத் தலைமுறை தலைமுறையாக எடுத்துச் சென்ற முரையைத் தகர்த்து குழ் வாழ்க்கை வாழ்ந்த தமிழனைத் தனியனாக்கியது

ஓலைச் சுவடிகள் குமுகத்தின் கருத்தை குழுவில் தலைமைப் பொறுப்பேற்று கருத்துவிளக்கம் அளிப்பவருக்கு ஒரு கையேடாகத்தான் இருந்தது.  காலம் காலமாகப் படி எடுத்ததால் படி என்ற படிக்கும்முறை தமிழர்களின் கல்வி கற்றல் முறையாக இருந்துவந்தது.  ஒரு தர நிர்ணயத்துக்காகவும் குழுவைத் தலைமையேற்று நடத்துபவர் தடம் மாறிப்போகாமல் உதவவும் மூல வளங்களுக்கு உரை எழுதும் பழக்கம் தோன்றியிருக்கலாம்.  ஒவ்வொரு கால கட்டத்திலும் உரை எழுதிய உரை ஆசிரியர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு ஏற்ப ஒரு பார்வயை உருவாக்கிக் கொண்டு உரை எழுதியுள்ளனர்

இன்றைஅய் நிலையில் அச்சு வடிவில் மூல நூல் எளிதில் கிடைக்கும் நிலையில் மூலக்கருத்தைப் அப்டித்துப் பொருளுணர வாய்ப்பும் திறனும் படிப்பவர்களுக்கு உள்ள நிலையில் இன்னும் உரையாசிரியர்கள் மூலமாக மூலக்கருத்தை உணர வேண்டும் என்ரு வலியுறுத்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை

மடலாடல் குழுக்களும் இணையமும் இன்று பழந்தமிழர் உருவாக்கிய குழுக் கல்விமுறையை மீட்டெடுத்துள்ளது என்று கூறலாம்.  கல்வியில் சிறந்த அறிஞர்கள் தலைமையேற்று மடலாடல் குழுவில் கருத்துச் சுதந்திரத்துடன் காலத்துக்கேறப மூல நூலின் பொருளை அறிய வாய்ப்புள்ளபோது மீண்டும் மீண்டும் உரையாசிரியர்களை முதன்மைப்படுத்துவதன் காரணம் என்ன?

எனக்கு இந்த உண்மை தெரிஞ்ஞாகனுஞ் சாமி

வம்பாண்டி

தேமொழி

unread,
Oct 15, 2013, 1:03:20 PM10/15/13
to vall...@googlegroups.com
///கல்வியில் சிறந்த அறிஞர்கள் தலைமையேற்று மடலாடல் குழுவில் கருத்துச் சுதந்திரத்துடன் காலத்துக்கேறப மூல நூலின் பொருளை அறிய வாய்ப்புள்ளபோது மீண்டும் மீண்டும் உரையாசிரியர்களை முதன்மைப்படுத்துவதன் காரணம் என்ன?///


உரையாசிரியரை தேர்ந்தெடுப்பதன் காரணம்: 
தனக்கு எந்த கருத்து மட்டும் உடன்பாடோ அதை முன்னிருத்த அதை சொன்ன உரையாசிரியரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்  பேராசிரியரே.


..... தேமொழி

DEV RAJ

unread,
Oct 16, 2013, 5:41:18 AM10/16/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

ஆத்த னறிந்தன யாவையுஞ் சொல்லல னாய்விடினிச்
சாத்தனும் யானு மவன்றன்னிற் சால விசையுடைய
நாத்தனை யாட்டியோர் நன்மைகண் டாலு நினக்குரைத்து
மீத்தன முண்டு மிருமைக்கு மேத மிலம்பிறவோ

காலத்துக்கேத்தாப்புல கருத்துச் சொல்லுங்க, ஐயா



தேவ்

Hari Krishnan

unread,
Oct 16, 2013, 5:51:51 AM10/16/13
to vallamai, mintamil

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

காலத்துக்கேத்தாப்புல கருத்துச் சொல்லுங்க, ஐயா



தேவ்

இந்தப் பாடலை --

இம்மையல் தையனைய ஏசூர மாதருமா
இம்மையுமை இம்மையையோ யென்செய்த - தம்மைதன்
மாமாமா மாமாமா மாமாமா மாமாமா
மாமாமா மாமாமா மா.

இயற்றியவர், மிக அண்மைக் காலத்தில் வாழ்ந்தவரும், எளிமையான நடைப் பாடல்களுக்குப் பெயர் பெற்றவருமான அருள்திரு இராமலிங்க வள்ளலார்.

ஒர ஆசிரியர் தொண இல்லாம, மேற்படி பாட்டுக்கு என்னா அர்த்தம்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

வேந்தன் அரசு

unread,
Oct 16, 2013, 6:45:07 AM10/16/13
to vallamai, mintamil



16 அக்டோபர், 2013 5:51 AM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>
காலத்துக்கேத்தாப்புல கருத்துச் சொல்லுங்க, ஐயா



தேவ்

இந்தப் பாடலை --

இம்மையல் தையனைய ஏசூர மாதருமா
இம்மையுமை இம்மையையோ யென்செய்த - தம்மைதன்
மாமாமா மாமாமா மாமாமா மாமாமா
மாமாமா மாமாமா மா.

இயற்றியவர், மிக அண்மைக் காலத்தில் வாழ்ந்தவரும், எளிமையான நடைப் பாடல்களுக்குப் பெயர் பெற்றவருமான அருள்திரு இராமலிங்க வள்ளலார்.

ஒர ஆசிரியர் தொண இல்லாம, மேற்படி பாட்டுக்கு என்னா அர்த்தம்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.



விடுகவிதைகளுக்கு துணை வேண்டும்தான்.
 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 6:49:23 AM10/16/13
to vallamai

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

காலத்துக்கேத்தாப்புல கருத்துச் சொல்லுங்க, ஐயா

​காலத்துக்கேற்ப மூல நூலின் விளக்கம் அமைவதால் ஒரு மூல நூலுக்கு ஒன்ருக்கு மேற்பட்ட உரைகள் தோன்றும் சூழல் ஏற்படுதை எவ்வாறு தடுக்கவியலும்

பொதுமறையான திருக்குறளை அறத்துப்பால் மனு தர்மத்திலிருந்தும் பொருட்பால் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் இருந்தும் காமத்துப்பாலை வத்ஸாயணரின் காமசூத்திரத்திலிருந்தும் திருவள்ளுவர் கருத்தொட்டி எழுதினார் என்று ஒரு உரையாசிரியர் சொல்லுவது பொதுமறை என்ற கருத்துக்குப் பொருந்துமா?

பாடல்கள் எளிதில் அறிய முடியாமல் இருக்க அடிப்படைக் காரணம் யாது?  

அதைப் படித்தவர்கள் புரிந்துகொள்ளும் திறனுடையவர்களாக இருந்திருக்கலாம் என்றுகொள்ள முடியும்.  

உரை எதற்காக யாருக்காக  யாருக்காக எழுதப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை

எழுதியவர் மற்றவர்கள் உரையாசிரியர் உதவியின்றிப் புரிந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடனா எழுதியிருப்பார்களா?

பாரதியார் பாஞ்சாலி சபதம் எழுதியது அவர் வாழ்ந்த காலத்தில் உணர்ச்சியுடன் செயல்படவேண்டும் என்று வலியுறுத்த அதிகம் தமிழறிவில்லாதவர்களுக்காக எழுதிய நூல் என்று குறிப்பிடுகிறார்

மூலக்கருத்தைத் தான் மாற்றவில்லை என்றும் தமிழ் மட்டுமே தன்னுடையது என்றும் குறிப்பிட்டு எளிய முரையில் படைத்த அந்தப் படைப்புக்கும் உரை எழுதுவது உரையாசிரியரின் புலமை வெளிப்படுவதற்கு ஒரு வாய்ப்பு என்றே கருத வேண்டியுள்ளது.  இந்த உரை இல்லாமல் ஒருவன் பாஞ்சாலி சபதத்தைப் புரிந்துகொள்ள முடியாது என்று சொல்வது பாரதியின் அடிப்படை நோக்கத்தைத் தகர்ப்பதல்லவா

உரை வேண்டும் என்பவர்களுக்கு உரை எழுதத் தெரிந்தவர்கள் எழுதட்டும் ஆனால் 10 ஆம் நூற்றாண்டு அல்லது 11-ஆம் நூற்றாண்டில் எழுதிய உரையை அடிப்படையாக வைத்துத்தான் மூலக் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுருத்துவது எங்கனம் ஏற்புடையது?

வம்பாண்டி

DEV RAJ

unread,
Oct 16, 2013, 7:20:56 AM10/16/13
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, 16 October 2013 16:15:07 UTC+5:30, Zஈனத் Xஏவியர் wrote:
விடுகவிதைகளுக்கு துணை வேண்டும்தான்.

நான் எடுத்துக்காட்டிய பாடல் விடுகதையன்று, ஐயா.
வள்ளலார் பாடல் பற்றித் தெரியாது


தேவ்

கி.காளைராசன்

unread,
Oct 16, 2013, 7:31:23 AM10/16/13
to mintamil, vallamai
வணக்கம் ஐயா.


2013/10/16 Hari Krishnan <hari.har...@gmail.com>


2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>
காலத்துக்கேத்தாப்புல கருத்துச் சொல்லுங்க, ஐயா



தேவ்

இந்தப் பாடலை --

இம்மையல் தையனைய ஏசூர மாதருமா
இம்மையுமை இம்மையையோ யென்செய்த - தம்மைதன்
மாமாமா மாமாமா மாமாமா மாமாமா
மாமாமா மாமாமா மா.

இயற்றியவர், மிக அண்மைக் காலத்தில் வாழ்ந்தவரும், எளிமையான நடைப் பாடல்களுக்குப் பெயர் பெற்றவருமான அருள்திரு இராமலிங்க வள்ளலார்.

ஒர ஆசிரியர் தொண இல்லாம, மேற்படி பாட்டுக்கு என்னா அர்த்தம்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.

-- 
அன்புடன்,
ஹரிகி.

நல்லாசிரியர் இல்லையேல், 

பேபேபே பேபேபே பேபேபே பெபேபே
பேபேபே பேபேபே பெ,

அன்பன்
கி.காளைராசன்

 

DEV RAJ

unread,
Oct 16, 2013, 7:32:56 AM10/16/13
to mint...@googlegroups.com, vallamai
On Tuesday, 15 October 2013 19:44:49 UTC+5:30, மிஞ்ஞானி wrote:
காலத்துக்கேறப மூல நூலின் பொருளை அறிய..................... 


காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவன்...


லேடஸ்டு லம்போர்கினி மாடல் காருங்க
மிதிலையில ஊர்கோலம் போச்சுதுனு
அருத்தம் சொல்லோணுமுங்களா , ஐயா



தேவ் 

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 7:45:25 AM10/16/13
to vallamai

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவன்...

​​படித்த உடன் புரிந்துகொள்ளக் கூடிய வரிகள் தானே இவை

உரையாசிரியரின் உதவி எதற்குத் தேவை?

தமிழகத்தில் மாணவர்கள் தமிழ் முறையாகக் கற்றுக்கொள்ளக்குட்டது என்று முனைப்புடன் நடந்த சேவை தானே கோனார் உரை

உரையப் படித்துப் படித்து மூலத்தைவிட்டுத் தமிழகத்தின் புதிய தலைமுறை எங்கேயோ சென்றுவிட்டதே

மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி பேசினால் எழுதினால் இலக்கியத் திறன் அதிகம் இல்லாதவர்களிடையே மதிப்பு உயரும் என்பதற்காக மூல நூலைப் படிக்காமல் உரையைப் படித்தால் போதும் என்ற அளவில் மக்களைத் தடுப்பது எவ்வகையில் சிறந்தது

வம்பாண்டி



DEV RAJ

unread,
Oct 16, 2013, 7:47:31 AM10/16/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 16:19:23 UTC+5:30, வம்பாண்டி wrote:
ஆனால் 10 ஆம் நூற்றாண்டு அல்லது 11-ஆம் நூற்றாண்டில் எழுதிய உரையை அடிப்படையாக வைத்துத்தான் மூலக் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுருத்துவது எங்கனம் ஏற்புடையது?


அவ்வாறு யாரும் கட்டாயப்படுத்துவது கிடையாது;
சிறந்த உரைகள் அறிஞர்கள் தொடர்ந்து பயன்படுத்திய
காரணத்தால் காலம் கடந்து நீடித்து நிற்கின்றன.
காலமே உரைகளின் உரைகல். அந்த அறிஞர்கள்
தமக்குப் புரியாத பகுதிகளையும் நேர்மையுடன்
ஒப்புக்கொள்கின்றனர்.  யாரும்  புதிய உரைகள்
எழுதக்கூடாது எனும் கட்டுப்பாடும் இருந்தது
கிடையாது.


தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 7:48:30 AM10/16/13
to vallamai
அன்புடை வி வீ ஐயா

நல்லாசிரியரும் உரையாசிரியரும் ஒன்றா?  எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

வம்பாண்டி


2013/10/16 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

unread,
Oct 16, 2013, 8:03:09 AM10/16/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 17:15:25 UTC+5:30, வம்பாண்டி wrote:
2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவன்...

​​படித்த உடன் புரிந்துகொள்ளக் கூடிய வரிகள் தானே இவை


உங்களுக்குப் புரிந்து விட்டது ஐயா.
இன்றைய தலைமுறை இளைஞர்களைத்
தமிழில் கார் என்றால் என்ன, கேட்டுப் பாருங்கள்.

ஒரு திரைப்பாடலுக்கு ஆடிய மாணவி 
‘இன்னும் இவள் முதுமை எய்தவில்லை’
எனும் வரிக்குக் கையால் எழுதுவதுபோல்
அபிநயம் பிடித்தாள். எய்தவில்லை என்பதை
எழுதவில்லை என்று புரிந்து கொண்டிருக்கிறாள்.

இது கண்ணதாசன் பாடல்களுக்குக்கூட உரை
தேவைப்படும் காலம் என்று வேந்தர் ஐயா
சொன்னதுண்டு. அவருக்கு மறந்து விட்டது போலும்



தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 8:07:12 AM10/16/13
to vallamai
அன்புடை தேவ்ஜி

வரலாறு என்பது ஒரு காலவரை என்று வகுத்து அந்த எல்லைக்குள் ஆவணங்களை அதன் நம்பக்த்தன்மை திறனாய்வு அடிப்படையில் ஆய்ந்து தகவல் நிறுவும் நெறிமுறையைக் கொண்டது

தமிழக வரலாறு பல்வேறு அறிஞர்களால் கால அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள்

கி.மு. 300 முதல் கி.பி 200 வரை உள்ள காலம் classical period என்ற சங்க காலத்தைக் குறிப்பிடும் காலம்

அந்தக் காலகட்டத்தில் வடபுல வேதக்கடவுள்களில் முதன்மைபெற்ற இந்திரன் அவரைப் புறந்தள்ளி மேன்மைபெற்ற கிரிஷ்ணா என்ற வடபுல உயர் கடவுளர் ஆகம்  அடிப்படையில் கோவில் கட்டி வணங்கப்பட்டவர்களா 

இந்தக் காலகட்டத்தில் பழந்தமிழர் சமயச் சிந்தனையில் சொர்க்கம் நரகம் மேலுலகம் பாதாள லோகம் போன்ற கருத்துக்கள் இருந்தனவா 

என்று மூலப் பாடல்களைக் கொடுத்து உதவுங்கள்

வம்பாண்டி

டிஸ்கி:

லம்பாகினி பற்றி தமிழர்களில் எத்தனைபேருக்கு முழுமையான செய்தி தெரியும்.  அதர்கும் உரை ஆசிரியர்கள் இல்லாமல் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்றும் வாதிடலாமே



2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

--

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 8:17:16 AM10/16/13
to vallamai

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

இன்றைய தலைமுறை இளைஞர்களைத்
தமிழில் கார் என்றால் என்ன, கேட்டுப் பாருங்கள்.

​ஆங்கில இலக்கியத்தை மேலோட்டமாகப் படிக்கும் நிலையிலிருந்து முன்னேறி ஆங்கில இலக்கியத்தின் நுண்மான் நுழைபுலம் அறிய மாணவர்கள் பல்வேறு காலகட்டதில் நிலவிய சமூக வரலாறுபற்றிக் கட்டாயம் படிக்க வேண்டும்

Social history of England - Victorian era Elizabethan era 

என்ற பின்புலத்தைப் புரிந்துகொள்ளாமல் அந்தக்காலகட்டத்தில் படைக்கப்பட்ட படைப்புகளை முழுமையாகப் பொருளறிய முடியாது என்பது ஆங்கிலக் கல்வியாளரின் கொள்கை

தமிழகத்தில் தமிழர்களின் பல்வேறு காலப் பிரிவுகளில் தமிழனின் சமூக வரலாறு என்ன என்று யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை

இதுவே தமிழ் மாணவர்களின் தமிழறிவு பழுதுபட்டுள்ளதற்குக் காரணம்

ஆய்வாளர்களே இந்தத் துறையில் தடுமாறும்போது நடனமாடும் மாணவி தடுமாறுவதில் வியப்பில்லை

வம்பாண்டி​

DEV RAJ

unread,
Oct 16, 2013, 8:34:53 AM10/16/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 17:37:12 UTC+5:30, வம்பாண்டி wrote:
கி.மு. 300 முதல் கி.பி 200 வரை உள்ள காலம் classical period என்ற சங்க காலத்தைக் குறிப்பிடும் காலம்


இதிலேயே கருத்து வேற்றுமை உள்ளது ஐயா

சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300)

கி.பி ஏழாம் நூற்றாண்டுவரை என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
களப்பிரர் காலமும் சங்ககாலத்தில் சேர்ந்து விட்டது.

தொல்காப்பியர், திருவள்ளுவர், திருமூலர், மாணிக்க வாசகர் இவர்களின் காலமும்
உறுதியாக்கப்படவில்லை.

பொதுவில் தேவர்களுக்கான ஆலயங்கள் இருந்துள்ளன என்பதற்குத்தான்
அகத்திணையியல் நூற்பாவை முன்வைத்தேன். அது அஜெண்டா என
ஓரங்கட்டப்பட்டது
 


தேவ்
 


Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 8:47:40 AM10/16/13
to vallamai

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

கி.பி ஏழாம் நூற்றாண்டுவரை என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
களப்பிரர் காலமும் சங்ககாலத்தில் சேர்ந்து விட்டது.

​கால்டுவெல் தாமோதரம் பிள்ளை என்று பலர் பல்வேறு காலகட்டங்களைத் தமிழக வரலாறாகப் பகுத்துள்ளார்கள்.  அதில் எந்த ஒஉர் காலகட்டத்தையும் ஆய்வுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம்​

கால எல்லையைத் தாண்டி  பிற்கால ஆவணங்களை மேற்கோள் காட்டுவது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

வம்பு

DEV RAJ

unread,
Oct 16, 2013, 8:51:28 AM10/16/13
to vall...@googlegroups.com
அவர்களின் ஆய்வடைப்படையிலும் அஜெண்டா இருக்காது என்பதற்கு என்ன நிச்சயம் ?


தேவ்

DEV RAJ

unread,
Oct 16, 2013, 8:55:41 AM10/16/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 17:37:12 UTC+5:30, வம்பாண்டி wrote:
இந்தக் காலகட்டத்தில் பழந்தமிழர் சமயச் சிந்தனையில் சொர்க்கம் நரகம் மேலுலகம் பாதாள லோகம் போன்ற கருத்துக்கள் இருந்தனவா 
என்று மூலப் பாடல்களைக் கொடுத்து உதவுங்கள்


அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்


அஜெண்டா எனும் சொல் தொய்யாவுலகம், மாறிப்பிறப்பின்மை என்பனவற்றுக்கு
விளக்கம் தர அச்சத்தை ஏற்படுத்தி விட்டது; உரையின் துணை தேவையில்லை
என்றும் நீங்களும் சொல்கிறீர்கள்  



தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 9:00:41 AM10/16/13
to vallamai

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

அவர்களின் ஆய்வடைப்படையிலும் அஜெண்டா இருக்காது என்பதற்கு என்ன நிச்சயம் ?

​அதில் என்ன சந்தேகம் கட்டாயம் இருக்கும்

அவர்கள் கோணத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஆய்வு செய்ய இயலாது.  அதனால்தான் ஆய்வில் நடுநிலை என்பது கோழிக்கனா என்று நவீன ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

ஒரு குறிப்பிட்ட காலத்தில் படைக்கப்பட்ட படைப்புகளை விளக்கும்போது அந்தக் காலகட்டத்தின் குமுக அமைப்பு சமயச் சிந்தனை வாழ்வியல் மரபு பற்றி அறிந்து பொருள் கொள்வதே சாலச் சிறந்தது.

விவிலியத்தின் புதிய ஏற்பாடில் ஏசுவின் சீடர்கள் அனைவரும் அவரவர் கோணங்களில் ஏசநாதரைப் பர்ரி எழுதியுள்ளனர்

அதர்கு விளக்கம் அளிக்கும் பாதிரிமாறும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள பிரிவை வலியுறுத்துக் கருத்துக்களையே முன் வைக்கிறார்கள்

இந்த அஜென்டாகளுக்கு நடுவில்தான் உண்மை மறைந்துள்ளது

வம்பு

வம்பு



DEV RAJ

unread,
Oct 16, 2013, 9:24:48 AM10/16/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 17:37:12 UTC+5:30, வம்பாண்டி wrote:
இந்தக் காலகட்டத்தில் பழந்தமிழர் சமயச் சிந்தனையில் சொர்க்கம் நரகம் மேலுலகம் பாதாள லோகம் போன்ற கருத்துக்கள் இருந்தனவா 
என்று மூலப் பாடல்களைக் கொடுத்து உதவுங்கள்


உயர்ந்த குறிக்கோளமைந்த செயலூக்கத்தை வற்புறுத்தும்
ஓர் அருமையான புறப்பாடல். துறக்கம் , வீடு பேறு இவை 
ஒருபுறமிருக்க மிகுந்த புகழைத் தரும் நற்செயல்களை 
மாந்தர் கைவிடாதிருக்க வேண்டும் எனும் கருத்தை 
வலியுறுத்தும் நல்லுரை இது -

செய்குவம் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே.


கீதையோடும் இதை ஒப்பிட முடிகிறது -
செய்குவம் கொல்லொ நல்வினை  - ’ஸததம் குரு கர்ம த்வம்‘ (எப்பொழுதும் செயல்புரி )
தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்  - ’ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்’
தம்மிசை நட்டு – ‘யசோ லபஸ்வ’ (புகழ் பெறுவாய்)

[போருக்கு அஞ்சினான் அருச்சுனன் எனும் அவச்சொல் களைந்து
வீறு கொண்டெழுவாய் ! மாண்டால் சுவர்க்கம் பெறுவாய் என்பது
கண்ணன் செய்த உபதேசம்]


இப்பாடலைச் செய்தவருக்கும் அஜெண்டா இருந்திருக்குமோ
தெரியாது; ஆனால் ஒப்பீடு தவறு என்று யாரும் சொல்லமுடியாது.
பொருளொற்றுமை இருப்பதால் ஒப்பீடு; வேறு அஜெண்டா எதுவும்
எனக்கு இல்லை. வடக்கிருத்தல், சல்லேகனை, ப்ராயோபவேசம்
எனும் பெயர்களில் வடக்கு நோக்கி அமர்ந்து உயிர் துறக்கும்
வழக்கமும் பாரதம் நெடுகிலும் இருந்துள்ளது. இப்பாடல்
அத்தருணத்தில் உருப்பெற்றது


இது மட்டும் போதாது, வேறு சான்றுகளும் வேண்டும் 
என்போர் அவை கிடைக்கும்வரை காத்திருக்கலாம்;
தடை இல்லை



தேவ் 

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 9:46:51 AM10/16/13
to vallamai

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

உயர்ந்த குறிக்கோளமைந்த செயலூக்கத்தை வற்புறுத்தும்
ஓர் அருமையான புறப்பாடல். துறக்கம் , வீடு பேறு இவை 
ஒருபுறமிருக்க மிகுந்த புகழைத் தரும் நற்செயல்களை 
மாந்தர் கைவிடாதிருக்க வேண்டும் எனும் கருத்தை 
வலியுறுத்தும் நல்லுரை இது -

​அக்கால கட்டத்தில் தமிழர் வாழ்வியல் பற்றிய கருத்துத் தொகுப்பு 

தமிழர்கள் எந்தவிதச் சாதனையும் பெருமையுல் இல்லாத நீண்ட நாள் வாழ்வதை விரும்பவில்லை

தான் ஏற்றுக்கொன்ட தலைமைமைகாகத் தயங்காமல் இன்னுயிர் நீத்தல்

போரில் பங்குபெற்று வீர மரணமடைதல் என்ற மரபைப் பின்பற்றியவர்கள்

அவர்களைப் பொறுத்தமட்டில் நற்செயல்களில் முதன்மைபெற்றவை இவை​

போரில் வீரமரணம் அடைந்தவர்கள் இந்திரலோகம் சென்று சிலகாலம் மகிழ்ந்திருந்து பின்னர் விண்ணுலகம் அடைவர் 

என்ற கருத்து நிலவியதாக தமிழ் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிரார்கள்

வம்பாண்டி



Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 10:04:31 AM10/16/13
to vallamai

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

மாண்டால் சுவர்க்கம் பெறுவாய் என்பது

​பகவத் கீதையின் காலம் தமிழ்ப் பாடல் பாடப்பட்ட காலம் என்ற வரலாற்று எல்லைக் கோடுகள் ஆய்வாளருக்குத் தொல்லை கொடுப்பவை

பொதுவாக விஞ்ஞானத்தில் ஜவ்வூடு பரவல் என்ற நியதி ஒன்னுள்ளது

அந்த அடிப்படையில் ஒரு மொழியில் இல்லாத வளங்கள் இன்னொரு மொழியிலிருந்து ஜவ்வூடு பரவல் போன்று பரவும்

தமிழ்ப் புலவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து எதிர்ப்புத் தெரிவித்தாலும் தமிழ் மொழியின் வளர்ச்சி வரலாற்று மொழியியல் அடிப்படையில் சங்கத மொழி வளர்ச்சியின் நிலையை எட்டிப்பிடிக்கவில்லை என்பதே உண்மை

வரலாற்று மொழியியலார் மொழிவளர்ச்சியை நான்கு படி நிலைகளில் வைத்து மதிப்பிடும் அலகீட்டில் சங்கதம் மிக உயர்ந்த நான்காம் நிலையிலும் தமிழ் இரண்டாம் நிலையில் இருப்பதும் கசப்பான உண்மை

சங்கத ஜவ்வூடு பரவலால் தமிழில் இலக்கண மாற்றம்ம் போன்ற பெரும் மாற்றங்கள் நிகழவில்லை

மனோன்மணியம் சுந்தரனார் சங்க இலக்கியத்தில் வட மொழிகளில் விழுக்காடு மிகவும் குறைவு என்று ஆய்வின் அடிப்படையில் குறிப்பிடுவார்​

தமிழர்களுக்கு விஞ்ஞான மெய்ஞான கருத்துவளங்கள் தமிழில் இல்லை என்ற குறை களைய எடுத்த முயர்சிகள் சங்க காலத்துக்கு மிகவும் பிற்பட்ட காலத்தில் நிகழ்ந்தது

எனவே ஒப்புமை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இந்த அடிப்படை வேறுபாட்டை உணர்ந்து சமகாலத்தில் ஒரே மாதிரியான சிந்தனைகள் இருவேறு குமுகங்களில் நிகழ்வதும் ஒரு மொழியின் தாக்கத்தால் மற்ற மொழி வளர்ந்தது என்று சொல்வதும் வேறு வேறானவை என்றும் முதலில் சொன்ன ஒப்புமை ஆய்வு எளிது என்றும் பின்னர் சொன்ன ஆய்வு நிறுவுதற்கு அதிக உழைப்பு வேண்டும் என்றும் உணர்ந்து செயல்படவேண்டும்


வம்பாண்டி

DEV RAJ

unread,
Oct 16, 2013, 10:37:34 AM10/16/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 19:16:51 UTC+5:30, வம்பாண்டி wrote:
போரில் வீரமரணம் அடைந்தவர்கள் இந்திரலோகம் சென்று சிலகாலம் மகிழ்ந்திருந்து பின்னர் விண்ணுலகம் அடைவர் 
என்ற கருத்து நிலவியதாக தமிழ் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிரார்கள்


இதற்கான இலக்கிய ஆதாரம் என்ன ?

தேவ் 

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 10:55:41 AM10/16/13
to vallamai
கட்டுரையின் பிற்பகுதியில் தமிழர்களின் இந்திரலோகம் பற்றிய இலக்கிய ஆதார்ங்கள் உள்ளன


வம்பு


2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

--

DEV RAJ

unread,
Oct 16, 2013, 11:00:47 AM10/16/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 19:34:31 UTC+5:30, வம்பாண்டி wrote:
மனோன்மணியம் சுந்தரனார் சங்க இலக்கியத்தில் வட மொழிகளில் விழுக்காடு மிகவும் குறைவு என்று ஆய்வின் அடிப்படையில் குறிப்பிடுவார்​

அது உண்மையே

 
 
ஒப்புமை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இந்த அடிப்படை வேறுபாட்டை உணர்ந்து சமகாலத்தில் ஒரே மாதிரியான சிந்தனைகள் இருவேறு குமுகங்களில் நிகழ்வதும் ஒரு மொழியின் தாக்கத்தால் மற்ற மொழி வளர்ந்தது என்று சொல்வதும் வேறு வேறானவை என்றும் முதலில் சொன்ன ஒப்புமை ஆய்வு எளிது என்றும் பின்னர் சொன்ன ஆய்வு நிறுவுதற்கு அதிக உழைப்பு வேண்டும் என்றும் உணர்ந்து செயல்படவேண்டும்


சிந்தனை வேறு, மொழி வேறு  எனும் அடிப்படையில் அமைந்த உங்களது 
இக்கருத்து தெளிவாக இல்லை. இந்தியாவில் நவீன விஞ்ஞானச் சிந்தனைகள் 
எப்படி வேரூன்றின ?ஆங்கிலம் வாயிலாகத்தானே ? ஆங்கிலம் எனும் மொழியின் 
துணையின்றி அச்சிந்தனைகள் எப்படி இங்கு வேர்கொண்டு வளர்ந்திருக்க முடியும் ?

மொழி என்பது இலக்கியம் மட்டுமன்று; அதுதவிரப் பல்துறை நூல்களையும்
உள்ளடக்கியது மொழி. சவ்வூடு பரவல் வானியல், மருத்துவம்,கணிதம்,
மெய்யியல் போன்ற பிற துறைகள் வாயிலாகவும் பரவ வாய்ப்புள்ளது.

மொழிப்பரவல் என்பதை வன்முறையான ஒரு ஆக்கிரமிப்பாகவே ஆர்வலர்களோ,
ஆய்வாளர்களோ  தொடர்ந்து சித்திரித்து வருகின்றனர்; நம்மில் பெரும்பாலானோர்
இன்று ஆங்கில வழிக் கல்வியையே நாடுகிறோம். இதற்கு ஆங்கிலேயரா காரணம் ?


தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 11:21:23 AM10/16/13
to vallamai
ஐயா நீங்கள் பகவத்கீதையை ஒரு சங்கப் பாடலுடன் ஒப்புமை செய்து ஒத்த கருத்து இருப்பதாகக் கூரினீர்கள்

Great men think alike என்பதும்

ஒருவரிடம் இருந்து இன்னொருவர் இரவல் வாங்கினர் என்பதும் இருவேறு நிலைகள்

பகவத்கீதை என்பது உபநிஷ்த்துகள் மற்றும் திராவிட சமயங்களின் கருத்துவளங்களைத் தொகுத்து ஒரு பொதுப்பார்வையை உருவாக்கிய முயற்சி

உங்கள் நிலையில் இருந்து நோக்கினால் இந்திய விஞ்ஞானம் என்பது வேத சமயம் கொடுத்த கொடை.  

என்னுடைய நிலையில் தமிழர்கள் விஞ்ஞான வளர்ச்சி கொண்டவர்களோ அன்றி விஞ்ஞானத்தில் நாட்டமுள்ளவர்களாகவோ சங்க காலத்தில் இருந்த சான்றுகள் இல்லை

ஆய்வு வடிவவரையரை (paradigm) எந்த நிலைப்பாட்டை முன்னெடுக்கிறது என்பது முக்கியம்

பகவத்கீதை இந்திய சமயசாரங்களின் பொதுமையை  (Universal) விளக்கும் தன்மையுடையது

அதை ஒரு குறிப்பிட்ட சமயக் கருத்துக்களின்  (Local) அடிப்படையிலும் விளக்கலாம்

இந்திய சிந்தனைகளின் பலமும் பலவீனமும் எந்த ஒரு கருத்தையும் தயக்கமின்றித் திறனாய்வு செய்யும் திறந்த மனப்பான்மையைத் தடை செய்வதில்லை

அதனால் ஒரு சித்தாந்தத்துக்குப் பலவிளக்கங்களும் பல சித்தாந்தங்களுக்கும் ஒரே விளக்கமும் உருவாகியுள்ளது

பழந்தமிழர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் வாழ்க்கை எளிமையான ப்ழங்குடி வாழ்க்கையாக இருந்தும் அவர்கள் வாழ்வின் நுண்ணிய உணர்வுகளை அவர்களின் இலக்கியப் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியது சிறப்பானது என்பதைத் தவிர சங்கதத்தின் விஞ்ஞான மெய்ஞான வளங்களுக்கு இணையான கரூதுவளங்களை வெளியிட்டதாகக் கருத இயலாது

வம்பு


2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>
On Wednesday, 16 October 2013 19:34:31 UTC+5:30, வம்பாண்டி wrote:

--

DEV RAJ

unread,
Oct 16, 2013, 11:34:44 AM10/16/13
to vall...@googlegroups.com
On Tuesday, 15 October 2013 19:44:49 UTC+5:30, வம்பாண்டி wrote:
கருத்துச் சுதந்திரத்துடன் காலத்துக்கேறப மூல நூலின் பொருளை அறிய வாய்ப்புள்ளபோது....


On Wednesday, 16 October 2013 18:30:41 UTC+5:30, வம்பாண்டி wrote:
ஒரு குறிப்பிட்ட காலத்தில் படைக்கப்பட்ட படைப்புகளை விளக்கும்போது அந்தக் காலகட்டத்தின் குமுக அமைப்பு சமயச் சிந்தனை வாழ்வியல் மரபு பற்றி அறிந்து பொருள் கொள்வதே சாலச் சிறந்தது.


இரண்டும் முரண்படுகிறது.

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

அடிசிற் கினியாளே அன்புடை யாளே
படி[தி] சொல் தவறாத பாவாய் - அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதாய் போதியோ
என்தூங்கும் என்கண் இரா.

இப்பாடல்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு இடமளிக்கின்றனவா ?
இதுபோன்ற பாடல்களுக்குக் காலத்துக்கேற்பப் பொருள் கொள்வதெப்படி ?
இவற்றை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று ஒருசாரார் கொடி பிடித்தால்
அக்கால மரபைத் தெரிந்துகொள்வதெப்படி ?
 


தேவ்
 

 
 

DEV RAJ

unread,
Oct 16, 2013, 11:38:46 AM10/16/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 20:51:23 UTC+5:30, வம்பாண்டி wrote:
Great men think alike என்பதும் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் இரவல் வாங்கினர் என்பதும் இருவேறு நிலைகள்

ஆம், உண்மை.
சிந்தனைப் பொதுமை, விழுமியப் பொதுமை இரண்டுமே
சேர்ந்து எளிதான மொழிப்பரவலுக்குக் காரணமாக
இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து


தேவ் 
 

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 11:43:42 AM10/16/13
to vallamai

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

இரண்டும் முரண்படுகிறது.

​இரண்டுக்கும் படைக்கப்பட்ட காலம் வேறுபடுகிறது

முதல் பாடலுக்கு எத்தnai உரையாசிரியர்கள்.  பல சமயப் பார்வைகள்

காலத்துக்கேற்ப என சொல்வது அக்கருத்து உருவான காலம்​

There is no text without context

va

DEV RAJ

unread,
Oct 16, 2013, 12:59:41 PM10/16/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 21:13:42 UTC+5:30, வம்பாண்டி wrote:
முதல் பாடலுக்கு எத்தnai உரையாசிரியர்கள்.  

சரி
உரைகள் இருப்பது  ஒரு merit  
என்று ஒப்புக்கொள்கிறீர்கள் :))


தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 1:10:31 PM10/16/13
to vallamai

2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>

உரைகள் இருப்பது  ஒரு merit  
என்று ஒப்புக்கொள்கிறீர்கள் :))

இது என் வாயைக் கிளறுவதாகத் தோன்றுகிறது.  

பைபிளில் உள்ள வாசகங்களுக்குப் பலவிதமான விளக்கங்கள்.  எனெனில் இறைத்தூதர் மீண்டும் வருவேன் என்று சொல்லிச் சென்றதால் அவரின் சீடர்கள் அவரவர் பார்வையில் விளக்கம் அளித்தனர்

இஸ்லாமில் முதலில் பல விளக்கங்களோ இருந்தாலும் இறைவன் தன் கடைசித் தூதருக்கு நேரடியாகச் சொன்னதை அவர் வாயால் பதிவு செய்த கருத்துக்களுக்கு பல உரைகள் எழுதுவதும் பல விளக்கங்கள் கூறுவதும் முறையற்றது என்று கருதி எல்லாக் கருத்து விளக்கங்களையும் விலக்கி ஒரே ஒரு கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டது

எனவே உரைகள் இருப்பது மெரிட் என்று கருதுவது அந்தந்தச் சமயங்களின் அடிப்படை நம்பிக்கைகளச் சர்ந்ந்தது என்பதே என் காத்துடுக் கருத்து

தேமொழி

unread,
Oct 16, 2013, 1:19:54 PM10/16/13
to vall...@googlegroups.com


///There is no text without context///

இராமாயணக் கதையை கோனார் ஒருவரிடம் கேட்டால் அவர்  சுருக்கமாக இப்படிச் சொல்லுவாராம் ...

"ராமன் கோனான் பொண்டாட்டிய ராவணன் கோனான் தூக்கிட்டுப் போனானாம், அனுமன் கோனான் போய் அடிச்சி பிடிச்சி கொணாந்தானாம்"

என்று சொல்வார்கள் (என் அம்மா சொல்லி தெரிந்து கொண்டது).

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 1:33:34 PM10/16/13
to vallamai
எங்க சிவகாமிப்பாடிகிட்டக் கேட்டா

ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு சென்றது அவன் அருமைத் தங்கையின் வற்புறுத்தலால்.  தென்னாட்டவர் உடன்பிறந்தவளின் நலனில் அக்கரை கொண்டு அவர்கள் வேண்டுதலைத் தட்டாமல் நிறைவேற்றுபவர்கள்

ஆனால் அவ்வளவு பெரிய காதையின் நாயகனான ராமனுக்கு அவன் சொந்தத்திலும் நட்பிலும் பல சகோதரர்கள் இருந்தும் ஒரு சகோதரியில்லை.  

வடபுலத்தில் உடன்பிறந்தவள்ம்மிது பற்று அதிகம் இருப்பதில்லை ஏனெனில் அவள் எப்படியும் பிறந்த வீட்டைத் துறந்து இன்னொரு குடும்பத்தில் குடிபுகுவதால் மணம் புரிந்தவுடன் தொடர்பு அறுந்துவிடுகிறது

தென்னகத்தில் உடன்பிரந்த சகோதரிப் பாசம் வாழ்நாள் முழுதும் பிணப்புள்ளதாக உள்ளது.

என்று பெண்ணியம் பேசுவார்

வம்பு




2013/10/16 தேமொழி <them...@yahoo.com>

தேமொழி

unread,
Oct 16, 2013, 1:42:07 PM10/16/13
to vall...@googlegroups.com
///தென்னகத்தில் உடன்பிரந்த சகோதரிப் பாசம் வாழ்நாள் முழுதும் பிணப்புள்ளதாக உள்ளது.///

பாட்டி சொன்னால் சரியாகத்தான் இருக்கும், அண்ணன் தங்கை சென்டிமெண்ட் வைத்து தமிழ்ப்படங்கள் போடு போடென்று போட்டு கிழக்குச்சீமை வரை பார்த்தாயிற்று.

இந்தியாவின் வடபுலத்தில் தாய்மாமாவிற்கு இத்தனை முக்கியத்துவம் உண்டா எனத் தெரியவில்லை பேராசிரியரே. 
ராக்கி கட்டும் வழக்கம் கேள்விப் பட்டுள்ளேன், அவ்வளவே.    

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2013, 1:51:18 PM10/16/13
to vallamai
தமிழ் நாட்டில் பரவலாக சீதாயணம் பெற்ற வெற்றி ராமாயணத்துக்குக் கிட்டவில்லை

என்மனைவியின் பழங்குடி வாழ்வியல் மரபு தழுவிய சட்டத்தில் ஒருவன் ஆட்சி புரிய அவனுக்கு உடன் பிரந்தவள் இருக்கவேண்டும் என்பது அடிப்படை விதி

சேர நாட்டு வாழ்வியல் மரபிலும் அண்ணன் தம்பி உறவு அரியணை ஏறுவதில் குக்கிய இடம் பிடித்துள்ள ஒன்று

பழந்தமிழ்நாட்டில் செவிலித்தாய் இருந்தாள் 

மாமியார் இருந்ததாக ஆதாரம் உள்ளதா என்று தேட வேண்டும்

வம்பு

வேந்தன் அரசு

unread,
Oct 16, 2013, 7:44:15 PM10/16/13
to vallamai



16 அக்டோபர், 2013 8:03 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:



இது கண்ணதாசன் பாடல்களுக்குக்கூட உரை
தேவைப்படும் காலம் என்று வேந்தர் ஐயா
சொன்னதுண்டு. அவருக்கு மறந்து விட்டது போலும்



தேவ்காரு நான் சொல்லியது பொதுமக்களுக்கு.
நமக்கு அல்ல. 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Oct 16, 2013, 7:46:51 PM10/16/13
to vallamai



16 அக்டோபர், 2013 8:55 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
இல்லெனினும் என்றதால் இவற்றில் முழு நம்பிக்கை இல்லை என்றே பொருள் கொள்ளலாம்

 
வேந்தன் அரசு

DEV RAJ

unread,
Oct 17, 2013, 5:35:06 AM10/17/13
to vall...@googlegroups.com
On Thursday, 17 October 2013 05:16:51 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
அஜெண்டா எனும் சொல் தொய்யாவுலகம், மாறிப்பிறப்பின்மை என்பனவற்றுக்கு
விளக்கம் தர அச்சத்தை ஏற்படுத்தி விட்டது; உரையின் துணை தேவையில்லை
என்றும் நீங்களும் சொல்கிறீர்கள்  

இல்லெனினும் என்றதால் இவற்றில் முழு நம்பிக்கை இல்லை என்றே பொருள் கொள்ளலாம்


அவருக்கு முழு நம்பிக்கை இல்லையென்றே பொருள் கொண்டாலும் 
அவர் வாழ்ந்த காலத்தில் அத்தகைய கருத்துகள் நிலவின என்பது
திட்டவட்டமாகத் தெரிகிறது; இருக்கும் கருத்தைத்தானே மறுக்கவோ,
அதன்மீது அவநம்பிக்கை தெரிவிக்கவோ முடியும் !

அவரவர் நம்பிக்கையைப் பொருத்துப் பொருள் கொள்வதிலும் 
அஜெண்டா இருக்கவே செய்கிறது


தேவ்

DEV RAJ

unread,
Oct 17, 2013, 5:46:54 AM10/17/13
to vall...@googlegroups.com
On Wednesday, 16 October 2013 22:40:31 UTC+5:30, வம்பாண்டி wrote:
எனவே உரைகள் இருப்பது மெரிட் என்று கருதுவது அந்தந்தச் சமயங்களின் அடிப்படை நம்பிக்கைகளச் சர்ந்ந்தது என்பதே என் காத்துடுக் கருத்து


அன்றாட ஆலய மரபில் தவறாமல் இடம்பெறும்
திருமுறைகளுக்கு அதிகம் உரைகள் இல்லையே;
அவை சைவ சமயம் சார்ந்தவைதானே,  உங்கள்
காத்துட்டுக் கருத்து என்ன ?
 


தேவ்

வேந்தன் அரசு

unread,
Oct 17, 2013, 7:13:07 AM10/17/13
to vallamai



17 அக்டோபர், 2013 5:35 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Thursday, 17 October 2013 05:16:51 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
அஜெண்டா எனும் சொல் தொய்யாவுலகம், மாறிப்பிறப்பின்மை என்பனவற்றுக்கு
விளக்கம் தர அச்சத்தை ஏற்படுத்தி விட்டது; உரையின் துணை தேவையில்லை
என்றும் நீங்களும் சொல்கிறீர்கள்  

இல்லெனினும் என்றதால் இவற்றில் முழு நம்பிக்கை இல்லை என்றே பொருள் கொள்ளலாம்


அவருக்கு முழு நம்பிக்கை இல்லையென்றே பொருள் கொண்டாலும் 
அவர் வாழ்ந்த காலத்தில் அத்தகைய கருத்துகள் நிலவின என்பது
திட்டவட்டமாகத் தெரிகிறது; இருக்கும் கருத்தைத்தானே மறுக்கவோ,
அதன்மீது அவநம்பிக்கை தெரிவிக்கவோ முடியும் !


தேவ்காரு

திருமுருகாற்றுப்படையில் முரணியோர் எனும் சொல்  நாத்திகர்களை குறிக்கும். முருகன் மேல்வந்து பக்தர்கள் வெறி ஆடினால், முரணியோர் கூட ஒருக்கால் கடவுள் உண்மைதானா என துணுக்குறுவார்களாம்

கம்பர் ஆம் எனின் ஆம் இல் எனின் இல் என்றாரே

தொன்று தொட்டு மாற்றுக்கருத்தினர்  இருந்துகொண்டுதான் உள்ளனர்,

 கமல்ஹாசனை அன்றியும் பார்ப்பனர்களில் நாத்திகர்கள் ஏன் இல்லை என்பது எனக்கு வியப்பே.
--

Nagarajan Vadivel

unread,
Oct 17, 2013, 7:14:54 AM10/17/13
to vallamai
​ஆய்வாளர்கள் ஆய்வின் இறுதி முடிவைத் தீர்மானம் செய்யும்போது இரண்டுவிதமான தவறுகளைச் செய்யும் வாய்ப்புண்டு என்பது ஆய்வு நெறிமுறை கூரும் எச்சரிக்கைகள்

சரியான முடிவைத் தவறென்று தீர்மானித்தல்

தவறான முடிவைச் சரியென்று தீர்மானித்தல்

தமிழகத்தின் சங்ககாலத் தமிழர்கள் எளிய வாழ்வு வாழ்ந்தவர்கள்  அவர்களுக்கு விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைவசப்படவில்லை

உக்கிரமாகப் போரிடுதல் விரும்பிய பெண்ணைத் தூக்கிகொண்டு போய் மணமுடித்தல் என்ரு வாழ்ந்தவர்கள் அவர்கள் சந்தித்த பல வெளியார்களில் அந்தணர்கள் அவர்கள் பார்வையில் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்களாகக் காட்சியளித்திருக்கக்கூடும்.  போர்க்குணமும் இன்பத் தேடலும் கொண்ட அவர்கள் பார்வையில் புலம்பெயர்ந்தவர்கள் அறிவிற் சிறந்த சான்றோர்கள் அமைதியும் சாந்தமும் பண்புநலனாகக் கொண்டவர்கள் என்பதே அவர்கள் பிராமணர் என்றும் அந்தணர் என்றும் அழைத்ததற்கு அடிப்படை. 

சங்க காலத்தில் தமிழகத்துக்கு வந்த அவர்கள் தமிழர்களோடு இரண்டறக் கலந்துவிட்டனர்.  அவர்கள் சங்கத மொழியை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர்.  உலகின் பிற பகுதியில் நடந்ததுபோன்று மற்றவர்கள் போல் வாளொடு தோன்றி மதமாற்றம் செய்யும் எண்ணம் அறவே இல்லாதவர்களாகவே விளங்கினர்

சங்க காலத்தில் தமிழர்கள் எளிமையான வாழ்வு வாழ்ந்த நிலையில் குருவி தலையில் பனங்காய் வைப்பதுபோல் சங்கதத்தின் சிறப்புகளைத் தமிழர்களுக்குச் சாற்றுதல் முதல் முறைத்தவறான சரியான முடிவைத் தவறெனத் தீர்மானிப்பதுபோன்ற முடிவாகத் தோன்றுகிரது

வம்பு


2013/10/16 DEV RAJ <rde...@gmail.com>
On Wednesday, 16 October 2013 20:51:23 UTC+5:30, வம்பாண்டி wrote:

--

Nagarajan Vadivel

unread,
Oct 17, 2013, 7:23:06 AM10/17/13
to vallamai

2013/10/17 DEV RAJ <rde...@gmail.com>

அன்றாட ஆலய மரபில் தவறாமல் இடம்பெறும்
திருமுறைகளுக்கு அதிகம் உரைகள் இல்லையே;
அவை சைவ சமயம் சார்ந்தவைதானே,  உங்கள்
காத்துட்டுக் கருத்து என்ன ?

​அவை சைவ சித்தாந்தம் காஷ்மீரிலிருந்து தமிழகம் வருவதற்குமுன் இறைவனுடன் நேரடியாகக் கருத்தாடல் என்ற அளவில் இருந்ததால் அதிகம் உரைகள் இல்லை

வம்பு​

DEV RAJ

unread,
Oct 17, 2013, 8:45:14 AM10/17/13
to vall...@googlegroups.com
ஆழ்வார்களின் பனுவலும் ஏறத்தாழ அதே காலகட்டத்திலோ,
அதற்கு முன்போ தோன்றியிருந்தாலும் உரைகள் மிகவும்
முதன்மை பெற்று விளங்கக் காரணம் என்ன ? 
நேரடி கருத்தாடல் அவற்றில் கிடையாதா ?



தேவ்

DEV RAJ

unread,
Oct 17, 2013, 8:52:00 AM10/17/13
to vall...@googlegroups.com
On Thursday, 17 October 2013 16:43:07 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
திருமுருகாற்றுப்படையில் முரணியோர் எனும் சொல்  நாத்திகர்களை குறிக்கும். முருகன் மேல்வந்து பக்தர்கள் வெறி ஆடினால், முரணியோர் கூட ஒருக்கால் கடவுள் உண்மைதானா என துணுக்குறுவார்களாம்
கம்பர் ஆம் எனின் ஆம் இல் எனின் இல் என்றாரே
தொன்று தொட்டு மாற்றுக்கருத்தினர்  இருந்துகொண்டுதான் உள்ளனர்,


மறைகளை ஏற்பவரிலேயே  நிரீசுவர சாங்கியர்,
நிரீசுவர மீமாஞ்சகர் இருந்துள்ளனரே. இறை மறுப்பு
புதிய கருத்து, அதற்கென ஒரு பிராந்தியச் சார்பு என்று
யாரும் கூறுவது கிடையாது. 

பண்டைத் தமிழகம் உயர் விழுமியம், மறுமையில் நம்பிக்கை 
நிரம்பியதாக இருந்துள்ளது என்பதே இலக்கியம் கூறுவது


தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 17, 2013, 8:59:53 AM10/17/13
to vallamai

2013/10/17 DEV RAJ <rde...@gmail.com>

ஆழ்வார்களின் பனுவலும் ஏறத்தாழ அதே காலகட்டத்திலோ,
அதற்கு முன்போ தோன்றியிருந்தாலும் உரைகள் மிகவும்
முதன்மை பெற்று விளங்கக் காரணம் என்ன ? 
நேரடி கருத்தாடல் அவற்றில் கிடையாதா ?

​ஆழ்வார்களின் நோக்கம் ​திராவிட வேதத்தைத் தொகுப்பதில் முழுமையாகச் சென்றுவிட்டதால் உரைகள் முதன்மை பெற்றன

திருமறைகள் நெஞ்சை உருக்கும் பண்ணிசையில் பக்திப்பாடல்களாக மாற ஆழ்வார்கள் பதிகங்களைப் படைப்பதில் அதிக கவனம் செலுத்தினர் என்பது என் காத்துட்டுக் கருத்து

வம்பு

வேந்தன் அரசு

unread,
Oct 17, 2013, 9:01:37 AM10/17/13
to vallamai



17 அக்டோபர், 2013 8:52 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
ஆயின், வீடு என ஒரு பால் எந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லையே. அதை ஒரு பொருட்டா கருதலையோ?
 

Nagarajan Vadivel

unread,
Oct 17, 2013, 9:05:17 AM10/17/13
to vallamai

2013/10/17 DEV RAJ <rde...@gmail.com>

பண்டைத் தமிழகம் உயர் விழுமியம், மறுமையில் நம்பிக்கை 
நிரம்பியதாக இருந்துள்ளது என்பதே இலக்கியம் கூறுவது

​மறுமையில் நம்பிக்கை இருந்தாலும் இந்திரலோகம் என்பதில் மாற்றுக்கருத்துளவர்களாக இருந்தார்கள்.  இந்திரலோகம் என்பது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் தற்காலிகத் தங்குமிடம் அதன் தலைவன் ​வடபுல நம்பிக்கையைப்போல் நினைத்தவாறு உருமாறுவதும் ஜாலங்கள் செய்வதும் இல்லாமல் இருந்ததாககவே தமிழ் இலக்கியம் கூறுகிறது

வம்பு

DEV RAJ

unread,
Oct 17, 2013, 9:30:22 AM10/17/13
to vall...@googlegroups.com
On Thursday, 17 October 2013 18:29:53 UTC+5:30, வம்பாண்டி wrote:
​ஆழ்வார்களின் நோக்கம் ​திராவிட வேதத்தைத் தொகுப்பதில் முழுமையாகச் சென்றுவிட்டதால் உரைகள் முதன்மை பெற்றன
திருமறைகள் நெஞ்சை உருக்கும் பண்ணிசையில் பக்திப்பாடல்களாக மாற ஆழ்வார்கள் பதிகங்களைப் படைப்பதில் அதிக கவனம் செலுத்தினர் என்பது என் காத்துட்டுக் கருத்து


ஆழ்வார்கள் ஏற்கெனவே இருந்தவற்றைத் தொகுத்தார்களா ?
அகச்சான்று உள்ளதா ?
அவை அவர்களே இயற்றிய பாடல்கள் இல்லையா !? 

பாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே

பொருள் என்ன ?


தேவ்

DEV RAJ

unread,
Oct 17, 2013, 9:32:56 AM10/17/13
to vall...@googlegroups.com
On Thursday, 17 October 2013 18:31:37 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
ஆயின், வீடு என ஒரு பால் எந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லையே. அதை ஒரு பொருட்டா கருதலையோ?


பக்தி இலக்கியங்கள் கூறுகின்றன;
ஒப்புக்கொள்வதற்கு அஜெண்டா
குறுக்கே புகுந்தால் அதற்கு
மாற்றில்லை


தேவ்
 

DEV RAJ

unread,
Oct 17, 2013, 9:38:00 AM10/17/13
to vall...@googlegroups.com
On Thursday, 17 October 2013 18:35:17 UTC+5:30, வம்பாண்டி wrote:
​மறுமையில் நம்பிக்கை இருந்தாலும் இந்திரலோகம் என்பதில் மாற்றுக்கருத்துளவர்களாக இருந்தார்கள்.  இந்திரலோகம் என்பது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் தற்காலிகத் தங்குமிடம் அதன் தலைவன் ​வடபுல நம்பிக்கையைப்போல் நினைத்தவாறு உருமாறுவதும் ஜாலங்கள் செய்வதும் இல்லாமல் இருந்ததாககவே தமிழ் இலக்கியம் கூறுகிறது

தவறு

இந்திரன் பூசை இவளக லிகைஇவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல யெழுத்துநிலை மண்டபம்
                                (பரிபாடல் 19:48-53) 

பரிபாடல் தமிழிலக்கியம் தானே


தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 17, 2013, 10:08:35 AM10/17/13
to vallamai

2013/10/17 DEV RAJ <rde...@gmail.com>
தவறு

​இலக்கியத் தொகுப்பில் எல்லாப் படைப்புகளும் ஒரே குரலில் கூட்டத்தில் கோவிந்தா போடுவதில்லை.  தமிழின் சிறப்பே ஒருவர் ஒரு ஆதாரம் கொடுத்தால் இன்னொருவர் இன்னொரு ஆதாரம் கொடுப்பார்

Inline image 1

வம்பாண்டி

tamil1.jpg

DEV RAJ

unread,
Oct 17, 2013, 10:18:08 AM10/17/13
to vall...@googlegroups.com
அகம். புறம் என அமைந்த நூல்களில் இறையியல்,
வீடுபேறு பற்றிய கருத்துகளை எதிர்பார்க்க முடியாது;
ஆனாலும் சில குறிப்புகளுக்கு அவற்றில் இடமுள்ளது.

ஆன் நிலை உலகத்தை வீடு பேறு என்று கொள்ளலாம்.
ஸகர புத்ரர்கள் உருவாக்கியதாகச் சொல்லப்படும்
கடல் குறித்த இதிஹாஸ நம்பிக்கையையும்
சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம்.

தமிழில் மட்டுன்று; சங்கத நூல்களிலும் வீடு பேறு
குறித்த மாற்றுக் கருத்துகள் உண்டு.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன் போல....... 


வடாஅது பனிபடு  நெடுவரை  வடக்கும்  - வடக்கின் 
கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்; 

தெனாஅது உருகெழு  குமரியின்  தெற்கும் -  தெற்கின்  கண்ணது  உட்குந் 
திறம்பொருந்திய கன்னியாற்றின்  தெற்கும்; 

குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும் - கீழ்க்கண்ணது கரையைப்  பொருகின்ற 
சகரரால்  தோண்டப்பட்ட சாகரத்தின்  கிழக்கும்;   

குடாஅது தொன்று   முதிர்    பௌவத்தின்   குடக்கும் - மேல்கண்ணது 
பழையதாய் முதிர்ந்த  கடலின்  மேற்கும்;  

கீழது -  கீழதாகிய; 

முப்புணர்  அடுக்கிய முறை முதற் கட்டின் -நிலமும் ஆகாயமும் 
சுவர்க்கமுமென  மூன்றுங்  கூடிய  புணர்ச்சியாக அடுக்கப்பட்ட 
அடைவின்கண்  முதற்கட்டாகிய;   

நீர்நிலை நிவப்பின் கீழும் - நீர்நிலைக்கண் ஓங்கிய  நிலத்தின்  கீழும்; 

மேலது  ஆன்நிலை  உலகத்தானும்  -   மேலதாகிய   கோலோகத்தின்கண்ணும்

ஆனாது - அமையாது; 

உருவும் புகழும்ஆகி  - உட்கும்  புகழுமாக; 

விரிசீர்த்  தெரிகோல் ஞமன்ன் போல -   பரந்த   அளவையுடைய 
பொருள்களை  ஆராயும் துலாக்கோலின்கட் சமன்வாய் போல..


அஜெண்டா எனும் ஐயப்பாடு இலக்கியப் பரப்பு
முழுவதையுமே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது;
உரைகளின் துணையின்றிப் பொருள் கூற
வல்லார் உளராகில் முயன்று பார்க்கலாம்



தேவ்


DEV RAJ

unread,
Oct 17, 2013, 10:27:33 AM10/17/13
to vall...@googlegroups.com
On Thursday, 17 October 2013 19:38:35 UTC+5:30, வம்பாண்டி wrote:
​தமிழின் சிறப்பே ஒருவர் ஒரு ஆதாரம் கொடுத்தால் இன்னொருவர் இன்னொரு ஆதாரம் கொடுப்பார்


இது இலக்கிய வளம் மிகுந்த எல்லா மொழிகளிலும் நடப்பதுதான்;
பல நிலைகளில் வழிபாடு இருந்ததை மறுக்கும் அஜெண்டா
எம்மிடம் இல்லை. பேரா ஐயாவின் பதிவுகளில் மட்டுமே மறைசார்
கருத்துகளை மறுக்கும் அஜெண்டா தொடர்ந்து நீடித்து 
வருகிறது. சான்று காட்ட முடியும்


தேவ்

 

N. Ganesan

unread,
Oct 17, 2013, 10:40:43 AM10/17/13
to vall...@googlegroups.com


On Tuesday, October 15, 2013 10:03:20 AM UTC-7, தேமொழி wrote:
///கல்வியில் சிறந்த அறிஞர்கள் தலைமையேற்று மடலாடல் குழுவில் கருத்துச் சுதந்திரத்துடன் காலத்துக்கேறப மூல நூலின் பொருளை அறிய வாய்ப்புள்ளபோது மீண்டும் மீண்டும் உரையாசிரியர்களை முதன்மைப்படுத்துவதன் காரணம் என்ன?///


உரையாசிரியரை தேர்ந்தெடுப்பதன் காரணம்: 
தனக்கு எந்த கருத்து மட்டும் உடன்பாடோ அதை முன்னிருத்த அதை சொன்ன உரையாசிரியரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்  பேராசிரியரே.


..... தேமொழி

அன்பார்ந்த தேமொழி,

பேராசிரியர் வ. நாகராஜன் ஐயா யுனிகோட் அடிக்கடி மாறும் என்று எழுதிய மடல்களிலிருந்து படித்துவருகிறேன்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களில் நாகராஜனார் போலப் பலர் பல்கலைக்கழகங்களில்
இருந்து எழுத வேண்டும். உ-ம்: பேரா. தெய்வசுந்தரம் ஐயா, கி. நாச்சிமுத்து ஐயா, ... போன்றோர் நிறைய எழுதவேண்டும்.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் உலகுக்கு வழிகாட்டும் ப்ராடக்ட்ஸ், ஆய்வேடுகள் நடத்த
தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள் எழுதினால் மாணவர்கள் புரிந்துகொள்வார்கள். மின் தமிழ்க் குழுக்கள் நல்ல ஆராய்ச்சிகளுக்கு
வழியமைத்து 21-ஆம் நூற்றாண்டில் பல தமிழ்மாணவர்கள் உலகப் பல்கலைகளில் தோன்றமுடியும்.

இன்று, நண்பர் பேரா. குணசீலன் எழுதிய பதிவு தமிழக நிலையைக் காட்டுகிறது:

பேராசிரியர் பழனிக் கல்லூரியில் அண்ணாவைச் சந்தித்தவர். அண்ணா அரசியல் மிகச் சிறப்பானது.
பெரியார் சொன்னவைகளைப் படித்திருப்பீர்கள். அண்ணா வழியில் பேராசிரியர்கள் 
இனிவரும் தலைமுறை ஆய்வாளர்களுக்கு போதித்து ஆராய்ச்சிகளை
முன்னெடுக்க வேண்டும். நடக்கும் என நினைக்கிறோம். 

அன்புடன்,
நா. கணேசன்

 
 

On Tuesday, October 15, 2013 7:14:49 AM UTC-7, வம்பாண்டி wrote:
தமிழர்களின் ஊடக வழியான கருத்துப் பரப்புதல் கருத்துப் பரிமாற்றம் பற்றி அதிகத் தகவல் இணையத்தில் காணக் கிடப்பதில்லை.  இற்றைநாள் அச்சு ஊடகம் குழுமத்தில் சொல்லின் செல்வர்கள் சொற்சிலம்பத்தில் அறிவு பெற்ற நிலையை மாற்றி அவனை நூலோடு ஒன்ரி தனிமப்படும் நிலையை உருவாக்கியது. அச்சு ஊடகம் குடிகளாக குழுவாக இருந்து கருத்தவளங்களைத் தலைமுறை தலைமுறையாக எடுத்துச் சென்ற முரையைத் தகர்த்து குழ் வாழ்க்கை வாழ்ந்த தமிழனைத் தனியனாக்கியது

ஓலைச் சுவடிகள் குமுகத்தின் கருத்தை குழுவில் தலைமைப் பொறுப்பேற்று கருத்துவிளக்கம் அளிப்பவருக்கு ஒரு கையேடாகத்தான் இருந்தது.  காலம் காலமாகப் படி எடுத்ததால் படி என்ற படிக்கும்முறை தமிழர்களின் கல்வி கற்றல் முறையாக இருந்துவந்தது.  ஒரு தர நிர்ணயத்துக்காகவும் குழுவைத் தலைமையேற்று நடத்துபவர் தடம் மாறிப்போகாமல் உதவவும் மூல வளங்களுக்கு உரை எழுதும் பழக்கம் தோன்றியிருக்கலாம்.  ஒவ்வொரு கால கட்டத்திலும் உரை எழுதிய உரை ஆசிரியர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு ஏற்ப ஒரு பார்வயை உருவாக்கிக் கொண்டு உரை எழுதியுள்ளனர்

இன்றைஅய் நிலையில் அச்சு வடிவில் மூல நூல் எளிதில் கிடைக்கும் நிலையில் மூலக்கருத்தைப் அப்டித்துப் பொருளுணர வாய்ப்பும் திறனும் படிப்பவர்களுக்கு உள்ள நிலையில் இன்னும் உரையாசிரியர்கள் மூலமாக மூலக்கருத்தை உணர வேண்டும் என்ரு வலியுறுத்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை

மடலாடல் குழுக்களும் இணையமும் இன்று பழந்தமிழர் உருவாக்கிய குழுக் கல்விமுறையை மீட்டெடுத்துள்ளது என்று கூறலாம்.  கல்வியில் சிறந்த அறிஞர்கள் தலைமையேற்று மடலாடல் குழுவில் கருத்துச் சுதந்திரத்துடன் காலத்துக்கேறப மூல நூலின் பொருளை அறிய வாய்ப்புள்ளபோது மீண்டும் மீண்டும் உரையாசிரியர்களை முதன்மைப்படுத்துவதன் காரணம் என்ன?

எனக்கு இந்த உண்மை தெரிஞ்ஞாகனுஞ் சாமி

வம்பாண்டி

N. Ganesan

unread,
Oct 17, 2013, 10:44:15 AM10/17/13
to vall...@googlegroups.com
On Tuesday, October 15, 2013 10:03:20 AM UTC-7, தேமொழி wrote:
///கல்வியில் சிறந்த அறிஞர்கள் தலைமையேற்று மடலாடல் குழுவில் கருத்துச் சுதந்திரத்துடன் காலத்துக்கேறப மூல நூலின் பொருளை அறிய வாய்ப்புள்ளபோது மீண்டும் மீண்டும் உரையாசிரியர்களை முதன்மைப்படுத்துவதன் காரணம் என்ன?///


உரையாசிரியரை தேர்ந்தெடுப்பதன் காரணம்: 
தனக்கு எந்த கருத்து மட்டும் உடன்பாடோ அதை முன்னிருத்த அதை சொன்ன உரையாசிரியரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்  பேராசிரியரே.


..... தேமொழி

அன்பார்ந்த தேமொழி,

பேராசிரியர் வ. நாகராஜன் ஐயா யுனிகோட் அடிக்கடி மாறும் என்று எழுதிய மடல்களிலிருந்து படித்துவருகிறேன்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களில் நாகராஜனார் போலப் பலர் பல்கலைக்கழகங்களில்
இருந்து எழுத வேண்டும். உ-ம்: பேரா. தெய்வசுந்தரம் ஐயா, கி. நாச்சிமுத்து ஐயா, ... போன்றோர் நிறைய எழுதவேண்டும்.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் உலகுக்கு வழிகாட்டும் ப்ராடக்ட்ஸ், ஆய்வேடுகள் நடத்த
தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள் எழுதினால் மாணவர்கள் புரிந்துகொள்வார்கள். மின் தமிழ்க் குழுக்கள் நல்ல ஆராய்ச்சிகளுக்கு
வழியமைத்து 21-ஆம் நூற்றாண்டில் பல தமிழ்மாணவர்கள் உலகப் பல்கலைகளில் தோன்றமுடியும்.

இன்று, நண்பர் பேரா. குணசீலன் எழுதிய பதிவு தமிழக நிலையைக் காட்டுகிறது:

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி - பேரா. குணசீலன், கேஎஸ்ஆர் கல்லூரி, திருச்செங்கோடு, தமிழ்நாடு:

DEV RAJ

unread,
Oct 17, 2013, 10:48:07 AM10/17/13
to vall...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Oct 17, 2013, 10:49:50 AM10/17/13
to vallamai
முதலில் எல்லைக்கு அப்பால் வாதத்தை வைப்பது தவிர்த்தல் நலம்

சங்க காலத்தில் பெரும்பாலான தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறை நம்பிக்கை இது என்று காணக் கிடைக்கும் ஆதாரங்களை இங்கே கொடுப்பதுவே என் நோக்கம்.  எனக்கு என் ஆசிரியர்கள் அஜென்டா தேவையில்லை என்fu சொன்னதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்

Inline image 1
Inline image 2
Inline image 3
Inline image 4

தமிழ் வரலாற்றில் இருக்கும் எல்லாம் முரண்பாடுடையவையே.  

வம்பாண்டி


2013/10/17 DEV RAJ <rde...@gmail.com>

--
tamil2.jpg
tamil4.jpg
tamil5.jpg
tamil3.jpg

DEV RAJ

unread,
Oct 17, 2013, 11:08:07 AM10/17/13
to vall...@googlegroups.com
On Thursday, 17 October 2013 20:19:50 UTC+5:30, வம்பாண்டி wrote:
தமிழ் வரலாற்றில் இருக்கும் எல்லாம் முரண்பாடுடையவையே.  


சமய நம்பிக்கை பலவாறாக இருந்துள்ளதைச்
சான்றுகள் கூறுகின்றன.ஒரே மொழி பேசும் மக்கள் 
தொகுதி முழுவதற்கும் ஒரே சமய நம்பிக்கை மட்டுமே 
இருந்தாக வேண்டும் எனும் முன்முடிவோடு ஆராயப் 
புகுந்தால் தெளிவேற்படாது


தேவ்




DEV RAJ

unread,
Oct 17, 2013, 11:12:41 AM10/17/13
to vall...@googlegroups.com
இலக்கிய ஆய்வும் இலக்கிய வரலாறும் :

Nagarajan Vadivel

unread,
Oct 17, 2013, 11:18:49 AM10/17/13
to vallamai

2013/10/17 DEV RAJ <rde...@gmail.com>

ஒரே சமய நம்பிக்கை மட்டுமே 
இருந்தாக வேண்டும் எனும் முன்முடிவோடு ஆராயப் 
புகுந்தால்

​சிக்கலே இங்கேதான்

தமிழகம் பலமொழி பேசி பல மதங்களைப் பின்பற்றி சமயப் பொறையுடன் வாழ்ந்தவர்கள் நிறைந்த நிலம். அவர்களின் தொன்மையான அவர்களுக்கே உரிய சமயத்தைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றால அது அஜென்டாதான்

ஆயினும் அது ஒரு இன்றியமையாத தேவை

​வம்பு​

Nagarajan Vadivel

unread,
Oct 17, 2013, 1:22:56 PM10/17/13
to vallamai


​வினவு மடலாடலில் அண்ணா பற்றிய கட்டுரையைப் படித்தேன். 

சொல்வதற்கு ஒன்றும் இல்லை

வம்பு​

DEV RAJ

unread,
Oct 18, 2013, 5:31:31 AM10/18/13
to vall...@googlegroups.com
On Thursday, 17 October 2013 20:48:49 UTC+5:30, வம்பாண்டி wrote:
அவர்களின் தொன்மையான அவர்களுக்கே உரிய சமயத்தைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றால அது அஜென்டாதான்
ஆயினும் அது ஒரு இன்றியமையாத தேவை


மறுக்கவில்லை; நடுகல் வழிபாட்டுக்கு
நீடித்த பரவலான சான்று உண்டு. 

பிற சமய நம்பிக்கைகள் பற்றிய
சான்றாதரங்களுக்கும்  உரிய மதிப்பளிப்பதே
முறையானது; நேர்மையானதும் கூட



தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 18, 2013, 5:57:19 AM10/18/13
to vallamai

2013/10/18 DEV RAJ <rde...@gmail.com>

சான்றாதரங்களுக்கும்  உரிய மதிப்பளிப்பதே
முறையானது; நேர்மையானதும் கூட

​நம்பகத்தன்மைமிக்க சான்றாதாரங்கள் எதிமறைக் கருத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் அதற்குரிய மதிப்பளிக்க வேண்டும் என்பது ஆய்வு நெறிமுறை வலியுறுத்தும் பண்பு

வம்பாண்டி​

N. Ganesan

unread,
Oct 18, 2013, 10:17:21 AM10/18/13
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Wednesday, October 16, 2013 5:34:53 AM UTC-7, DEV RAJ wrote:
On Wednesday, 16 October 2013 17:37:12 UTC+5:30, வம்பாண்டி wrote:
கி.மு. 300 முதல் கி.பி 200 வரை உள்ள காலம் classical period என்ற சங்க காலத்தைக் குறிப்பிடும் காலம்


இதிலேயே கருத்து வேற்றுமை உள்ளது ஐயா

சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300)

கி.பி ஏழாம் நூற்றாண்டுவரை என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
களப்பிரர் காலமும் சங்ககாலத்தில் சேர்ந்து விட்டது.

தொல்காப்பியர், திருவள்ளுவர், திருமூலர், மாணிக்க வாசகர் இவர்களின் காலமும்
உறுதியாக்கப்படவில்லை.

பொதுவில் தேவர்களுக்கான ஆலயங்கள் இருந்துள்ளன என்பதற்குத்தான்
அகத்திணையியல் நூற்பாவை முன்வைத்தேன். அது அஜெண்டா என
ஓரங்கட்டப்பட்டது
 


தேவ்
 


சங்க இலக்கியம் பற்றி குழப்பங்களை ஏற்படுத்த இன்றைய அஜெண்டாக்கள் 
பயன்படுவதைப் பார்க்கிறோம்.  இது பற்றி அண்மையில் தமிழ்ப் பேராசிரியர்கள்
விரிவாக விளக்கியிருந்தனர்.

வீட்டுவிலக்குப் பெண்களை சங்க காலத்தில் தீட்டு (மலையாளத்தில் தீண்டம்) என
ஒதுக்கிவைக்கும் செயல். இதைக் குறித்துப் பாடுகிற சங்கப் பாடல்
புறநானூற்றிலே உள்ளது. இந்தியா முழுமையும் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன,
முக்கியமாக திராவிட மொழிபேசும் மக்களுடன் ஒப்பிடலாம். இந்தப் பாடலை
தமிழறிஞர்கள் அருமையாக விளக்கியுள்ளனர். 

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
5 தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே.

ஆனால், அஜெண்டாக்களுக்கு ஒத்துவராத இதுபோன்ற பாடல்களை 
என்ன செய்வது எனத் தெரிவதில்லை சிலருக்கு. அதனால், புலை 
என்றால் பொலி என்று எழுதி வருவதைத் தமிழறிந்த பேராசிரியர்கள்
பார்த்து நகைக்கின்றனர். காலத்தால் நிற்காத புலை = பொலி போன்றவற்றின்
ஆதரவு இன்றைய அஜெண்டாக்கள், தமிழ் இந்தியாவின் சமூக அமைப்பை
2000 ஆண்டுகளுக்கு முன்னர் அறிந்துகொள்ள உதவாதவை என்று
சம்ஸ்கிருத, ப்ராகிருத, த்ராவிட, செந்தமிழ் பேராசிரியர்கள் பலரும்
புரிந்துகொண்டுவிட்டனர். 

புலை- என்னும் சொல் தமிழிலும், பிற த்ராவிட மொழிகளிலும் அரத்தம் 
என்னும் பொருளுடையது. உடற்கழிவு ரத்தம் கொண்ட சீலை போன்றன 
தீட்டாகக் கருதப்பட்டன. இதனால் ஏகாலியரை புலைத்தி என்றழைக்கும் 
பெயர்ச்சொல் தமிழர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கிறது. இக் கருத்து
வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரஜகீ, ரஜகன் என்று வருகிறது.
புலையன், புலைத்தி என்னும் சொற்கள் மிக ஆழமான வரலாறுடையவை.
புலை- என்ற சொல் வீட்டுவிலக்கு இரத்தம் என்று பல திராவிட மொழிகளில்
உள்ளது, அவ்வாட்சிக்கு வேராக இயங்கும் புலை தரும் சொற்கள் புலவு/புலா(ல்).
புலவு உண்ணும் விலங்கு புலி என அறிவீர்கள். இன்று இந்தியாவில் சாதிக் கொடுமைகள் 
இல்லை என்பதை பத்திரிகைகளில் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். கிரேக்க நாட்டில் 
அடிமைகள் இருந்தனர், எத்தனையோ உன்னதங்களும் இருந்தன. அதுபோல், எத்தனையோ 
உயர்ச்சிகளை கொண்ட இந்தியாவில் சாதி ஒரு கூறாக 3500 ஆண்டுகளாய் உள்ளது
என்பதைக் காட்டும் பாய்ண்ட்டர்ஸ் தருவது வடமொழி, சங்க இலக்கியங்கள்.
தற்கால அஜெண்டாவுக்காக, புலை என்றால் பொலி என்பதற்கு ஆதரவு காட்டவேண்டுமா?
காந்தி, பெரியார், அம்பேத்கார், பாரதி, பாரதிதாசன், கம்யூன்ஸ்ட்ஸ் (உ-ம்: இந்து ராம்),
தலித் கட்சிகள் பல (உ-ம்: திமுகவின் விடுதலைச் சிறுத்தைகள்), ...
போன்ற பலர் இன்று இந்தியாவின் சாதிகளை ஒழித்துவருகின்றனர்.

புகழ்மிக்க அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேருரை - பேரா. Donald Lopez பௌத்தத்தின்
பேராசிரியர் ஒருநூலை வாங்கினேன், சென்ற வாரஇறுதியில். Scientific Buddha என்பது 
நூல் தலைப்பு. புடகம்/புண்டரிகம் புள்- என்னும் வேர் தரும் சொல் என்றும் 
‘ஓம் மணிபத்மே ஹூம்’ என்னும் பொதிகை அவலோகிதன் பற்றியும், தாமரைக்கண்ணன்
என்று இந்திரனை வள்ளுவர் பாடக் காரண விளக்கமும் பேரா. லோப்பஸ் ஐயா
போன்றோர் நூல்களாலே தான் எனக்கு விளக்கமாகின்றன. பல பௌத்த/சமண நூல்கள்
அழிக்கப்பட்டுவிட்டதால் சுமார் 10 மொழிகள் அறிந்த பேராசிரியர்கள் ஆய்வுகளால்
இந்தியாவின் வரலாற்றை அணுகவேண்டியுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில்
பௌத்தம் பரவிவருகிறது. ஆனால், அந்த பௌத்தத்திற்கும் பழைய பௌத்தத்துக்கும்
எந்தத் தொடர்புமில்ல்லை என்பதே ஸ்யண்டிஃபிக் புத்தர் என்னும் நூலின் மையக்கரு,
புத்தர் எத்தனையோ அவதாரம் எடுத்தார். இது 21-ஆம் நூற்றாண்டின் அவதாரம்! என்கிறார்
பேராசிரியர். அதுபோல்தான், அஜெண்டாகாரர்கள் புலைத்தி, கலம் தொடா மகளிர்
பற்றிச் சொல்வதாகும். ஆனால், தமிழின் பேராசிரியர்கள் கூறுவதையும் கணக்கிலெடுத்தால்
சங்கத் தமிழும், அது சுட்டும் சமூகமும் புரிந்துகொள்ளலாம்.

2000+ ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மற்றும் இந்திய சமூக அமைப்பைக்
காண மூல நூல்கள் - சங்கம், வடமொழி ஒப்பீட்டாய்வுகள் அவசியம்.
இதை இன்றைய அஜென்டாக்காரர்கள் சொல்வதுபோல் படித்தால் நியூ யார்க் டைம்ஸ்
ஆகும். பழைய இந்தியாவின் சமூக அமைப்பும், பழக்கவழக்கங்களும் புரியாமல்
மறைக்கப்பட்டுவிடும். உம்: அணு, அணங்கன்/அனங்கன் என்னும் சொற்கள்
சங்கத் தமிழின் அணங்குக் கோட்பாடு, அணுங்கு/அழுங்கு (Indian Pangolin) போன்றவை
காட்டும் இந்தியாவின் பண்டைச் சரிதம் முக்கியம். ஆழ்- > ஆணி இருக்குவேதத்திலேயே
இத் தமிழ்ச் சொல் இருக்கிறது. அதுபோல், தமிழர் இன்றும் அழுங்கு அணுங்கு என்னும்
விலங்குப் பெயர் சொல்கின்றனர், ஆழ்வார் என்ற சொல் புத்தருக்கும், தீர்த்தங்கரருக்கும்
முதலில் அவர்கள் யோகு, தியானத்தில் ஆழ்பவர்கள் ஆனதால் கல்வெட்டுக்களில்
வருகிறது. தியானமூர்த்தி தக்ஷிணாமூர்த்திக்கு ஆழ்வார் என்கிறது தேவாரம்.
சில நூற்றாண்டுகள் சென்றபின் விஷ்ணு/கிருஷ்ணன் பக்தியில் ஆழ்வாரை
ஆழ்வார்கள் என்றே போற்றுகிறது ஸ்ரீவைஷ்ணவம். ஆள்தல், ஆழ்தல் இரண்டும்
வேறுபட்ட மூலச்சொற்கள். ஆழ்-தல் ஆண்டி (கொத்தாண்டி - அவலோகிதன்,
கவராண்டி - வச்சிரபாணி, மாயாண்டி - விஷ்ணு, பேயாண்டி - சிவன், 
விருமாண்டி - தியானத்தில் உள்ள வேத பிரமா). ஆண்டாள் < கிருஷ்ணனில் ஆழ்பவள்.
ஆழ்வார் என்ற சொல் ஆள்தல் என்பதில் இருந்து உருவானதன்று என்று தமிழ்
வரலாற்றை, கலைவரலாறை பார்த்தால் தெரியும்.

பேரா. Donald Lopz, Scientific Buddha நூல் ஞாபகம் வந்தது. முனைவர் ழான்-லுக் செவியார்
திருவள்ளுவன் இலக்குவனாரின் கட்டுரையின் தொடக்கம் பற்றி எழுதியிருந்ததை
இன்று படிக்கும்போது. இன்றைய அஜென்டாக்கள் சங்க இலக்கியங்களின் பொருளை
உணராமல் செய்கின்றன. ஆனால், தமிழின் பேராசிரியர்கள் விளக்கி எழுதி வருவதால்
பொருள் விளங்கிவிடும் என நினைக்கிறேன்:

[Begin Quote]
Dear iraamaki,

thank you.

This post (for which you give the link) seems to be identical
with the article which came out
in issue 19 of மணற்கேணி
(dated July -- August 2013).

I see on pages 55-61 of my copy of the journal
the same title,
புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்லன்
the same first sentence
"சங்க இலக்கியங்களில்  செருகப்பெற்றுள்ள சாதியாண்மைக் கருத்துகளை அறிந்து செம்மையாக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு உள்ளது."
and the same last sentence
"தமிழ் நெறிக்கேற்பத் தமிழ் இலக்கியப் புரிதலுணர்வை வளர்க்க வேண்டும்."
[End Quote]

This makes me remind the book that I'm currently reading by Prof. Donald Lopez, Scientific Buddha.

தேமொழி

unread,
Oct 18, 2013, 4:55:01 PM10/18/13
to vall...@googlegroups.com
அன்பு திரு. கணேசன் அவர்களுக்கு,


சுட்டிகளுக்கு மிக்க நன்றி.  
முனைவர் இரா.குணசீலன் அவர்கள் கட்டுரை நன்று. 
இந்தியாவின் கல்வி முறை பற்றி எனக்கு என்றுமே வருத்தம் தீர்வதில்லை.  
தானே சிந்திக்கும் ஆர்வமற்றவர்களாக மாணவர்கள் உருவாக்கப் படுகிறார்கள். 
மாணவர்களை  ஏன், எதற்கு என்ற கேள்விகள் கேட்க பெரியவர்கள் ஊக்கமூட்டுவதில்லை.

பெரும்பாலோருக்கு ஏதோ பிறந்ததற்கு படித்து, நல்ல வேலை ஒன்றில் சேர்ந்து, ஓய்வு பெற்று வாழ்க்கையை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.அது போலவே  தொழில் முனைவோராகவும் அவர்களை ஊக்கப் படுத்துவதில்லை.  
யாரிடமாவது வேலை செய்வதே பெரும்பாலோர் நோக்கம்.  முன்பு நிலையான அரசுப்பணி முன்னிலை வகுத்தது, இப்பொழுதோ நிறைய வருமானம் பெற பன்னாட்டு நிறுவனங்கள் என நோக்கம் மாறியுள்ளது, அவ்வளவே.  

கடந்த 25 ஆண்டுகளாகப் பள்ளி இறுதித் தேர்வில் தொடர்ந்து முதலிடம் பெற்ற மாணவிகள் எங்கு போய் சேர்ந்தார்கள், என்ன ஆனார்கள், அவர்களின் இன்றைய நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு.  
ஆனால் இந்தியாவில் இருந்தாலே என்னால் அனைவரையும் தொடர்ந்து சென்று  ஆராய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.  பல்கலையில் பெண்ணியம் வகுப்பில் படிப்போரும் ஆராயந்தார்களா எனத்  தெரியவில்லை.

அன்புடன்
..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages