முன்தோன்றிய மூத்தகுடி

825 views
Skip to first unread message

கி.காளைராசன்

unread,
Sep 11, 2013, 8:48:29 AM9/11/13
to mintamil, thiruppuvanam, vallamai, amr

கண்டாங்கிபட்டி அருள்மிகு புலிக்கரை ஐயனார் துணை

மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் துணை

மதுரை அருள்மிகு திருஆப்புடையார் துணை

 

முன்தோன்றிய மூத்தகுடி


அறிவியல் அறிஞர்கள், ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினான் எனவும், பின்னர் அவன் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றான் என்வும் கூறுகின்றனர்.  சிந்துசமவெளி நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கின்றனர். 

ஆனால் தமிழர் தங்களது நாகரிகத்தைக்,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றிய மூத்த குடி

என்று பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழைப் போற்றுவோரும், தமிழைத் தூற்ற நினைப்போரும் இந்தப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல்வரிகளையே பெரிதும் எடுத்தாள்கின்றனர்.  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே மதுரையில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் தமிழரின் தற்பெருமைகளையும், இப்பெருமைகளை மேல்நாட்டார் ஏற்க இயலாத நிலையையும் காண்போம்.

 1) தமிழரின் பெருமைகள்

பண்டைய மனிதர்கள் பேசிய மொழிகளுள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ள மொழி தமிழாகும். தமிழுக்குச் செம்மொழிக்கான தகுதிகள் எனக் கூறப்படும் தொன்மை, தனித்தன்மை, பொதுப்பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத்தன்மை, பண்பாடு, இலக்கிய வளம், உயர்சிந்தனை அனைத்தும் உள்ளன.  தமிழின் மொழிவளத்தை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய நடுவண் அரசும் தமிழைச் செம்மொழி என அறிவித்துச் சிறப்புச் செய்துள்ளது. 

 தமிழ்ச் சங்கம்

எல்லா மொழிகளும் எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கூறுகின்றன.  ஆனால் தமிழின் தொன்மையான நூலாக விளங்கும் தொல்காப்பியமோ எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல்லாது பொருளுக்கும் இலக்கணம் கூறுகிறது.  

பதின்மூன்றாம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன், பிரெஞ்சுமொழியைப் பேணிப் பாதுகாக்க 1525-ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக் கழகத்தை ஏற்படுத்தினான்.  ஆனால் பண்டைய தமிழர், தமிழை வளமையானதொரு மொழியாக மாற்றியமைக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்கங்களை நிறுவியுள்ளனர்.   அகம்-புறம் பற்றிய தொகை நூல்களில் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினர்களாயிருந்த புலவர்களின் பாடல்களே இடம் பெற்றுள்ளன.  இதனால் தமிழ்ச் சங்கத்தின் பழமையையும் பெருமையையும் நன்கு புலனாகிறது.

 மொழிவளம்

சுமேரிய மொழியானது பண்டைத் தமிழ்மொழியே என்று திரு.கி.லோகநாதன் அவர்கள் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலமாக நிருவி வருகிறார்.  ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டில் உள்ள பழங்குடிகள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன.  ஆசுத்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் பேச்சு மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன.  கொரியமொழியின் சிறப்புடைச் சொற்கள் சில தமிழ்ச் சொற்களாக உள்ளன.  இலக்கியத் தரமிக்க சங்க காலப் புறநானூற்றுப் பாடல்கள் கிரக்க வீரயுகப் பாடல்களோடு ஒப்பிடத்தக்கனவாக உள்ளன.

கல்வெட்டுகள்

உலகில் கிடைக்கப்பெற்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற் பழமையான கல்வெட்டுகள் பல தமிழ் மொழியில் உள்ளன.  இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டுக்களுள், 60,000க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.  மற்ற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவானவையே. 


2)  தமிழின் தொன்மையை ஏற்கமுடியாத நிலை

உலக அறிஞர்கள், குறிப்பாக மேல்நாட்டு அறிஞர்கள், எந்த வரலாற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.  கண்டிப்பான நெறிமுறைகளின்படியும், விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்று, அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துத்தான் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் வலுயுறுத்துகின்றனர்.  “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி“ என்பது போன்ற தமிழ்ச் சங்கப் புலவர்களின் கூற்றுகள் யாவும் தற்பெருமையான சொற்களாகவே இந்த அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.  இச்சொற்களை மெய்ப்பிக்கத் தகுந்த சான்றாதாரங்கள் ஏதும்  கிடைக்கவில்லை.  ஆனால் ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளன.  எனவே கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஆப்பிரிக்காவில்தான் ஆதிமனிதன் தோன்றினான் என்கின்றனர் அறிஞர்கள்.

ஆப்பிரிக்காவும் இசுரேலும்

ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமா சேப்பியன் என்ற இன மனிதர் சுமார் 60,000 40,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கிப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று மேலைநாட்டு அறிஞர்கள் கருதுகின்றனர். 

ஆனால், சமீபத்தில் இசுரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), சுமார் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடற் படிமங்களைக் கண்டெடுத்துள்ளனர். 

ஆப்பிரிக்காவில்தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்பிரிக்கா எனவும் மேலைநாட்டு அறிஞர்களால் கூறப்பட்டு வந்த நிலையில், இசுரேல் நாட்டு விஞ்ஞானிகளின் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  இதன்மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இசுரேல் நாட்டில் கிடைத்தது போன்று, தமிழ்நாட்டிலும் மண்தோன்றாக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் பருப்பொருள் அடையாளமாக அவர்களது எலும்புகளோ அல்லது மட்பாண்டங்களோ கிடைக்கப் பெற்றால் மட்டுமே, தமிழர்களே ஆதிமனிதர்கள் என்பதை அறிவியல் அடிப்படையில் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும்.

மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரையிலும் இன்று வாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தனர் என்பது எவ்வகையிலும் கீழ்க்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்குக் கூடுகட்டும் அடையாளங்கட்கும், உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாயிருப்பபினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்என்கிறார் தேவநேயப் பாவாணர் (தமிழர் வரலாறு - முதல் பாகம், பக்கம் 5-6)

அறிவியல் நிரூபணம் தொடரும்.... 

அன்பன்

K. Loganathan

unread,
Sep 11, 2013, 9:04:20 AM9/11/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
 நின்னா காளை அவர்களே

இக்கட்ட்டுரையை  படித்து மகிழ்ந்தேன். ஓர் LOGIC  இருக்கின்றது, ஆதாரத்தோடு சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும் என்ற எணணம்  இழையோடுகின்றது

சுமேரு மொழி தொல்தமிழ் என்ற எனது கருத்துக்களை எடுத்தியம்பி உள்ளீர். ஆனால் வடமொழி சுமேருத் தமிழின் திரிபாக ஆகவே பாரரத மொழிகள் பல இப்படி இருக்கலாம் என்று கருதற்கு இடம் உண்டு என்றாவது கூறியிருக்கலாம்

ஆயினும் முதன் முறையாக  (யான் அறிந்த வரையில்) தமிழர்களின் தொன்மையைப் பற்றி அறிவுப் பூர்வமான ஓர் கட்டுரையைப் படைத்டுள்ளீர்,

எனது வாழ்த்துக்கள்

உலகன்


2013/9/11 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2013, 9:08:31 AM9/11/13
to vallamai
காளை ஐயா ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வு மாணவர்.  ஆய்வு நெறிமுறைகளை அறிந்தவர்.  ஆய்வைத் தொடங்கும் முன் ஒரு வரைவையுடன் கூடிய எல்லையை வகுத்துக் கொண்டு அந்தக் கட்டத்தூள் இயங்க வேண்டும் என்பது நெறிமுறை.  வரலாற்று ஆய்வில் காலகட்டம் மிகவும் இன்றியமையாதது.  ஆய்வுகள் மூலம் தொன்மங்களையும் புன்சிவுகளையும் தரவின் உதவியில்லாமல் நிறுவ இயலாது

இந்த அடிப்படையில் பார்த்தால் மூத்தகுடி என்பதை நிறுவ தமிழ் வளங்களை மட்டும் பயன்படுத்துவது அவசியம். தற்சமயம் நம்மின்டம் உள்ள சரித்திர ஆவணங்கள் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாகவே உள்ளது. இந்தப் பின்னணியில் தமிழ்க்குடியை மூத்தகுடி என்று எவ்வாறு நிறுவுவது?

வவ


2013/9/11 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--

N. Ganesan

unread,
Sep 11, 2013, 10:28:41 AM9/11/13
to vall...@googlegroups.com


On Wednesday, September 11, 2013 6:08:31 AM UTC-7, பூனைக் கவிராயர் wrote:
காளை ஐயா ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வு மாணவர்.  ஆய்வு நெறிமுறைகளை அறிந்தவர்.  ஆய்வைத் தொடங்கும் முன் ஒரு வரைவையுடன் கூடிய எல்லையை வகுத்துக் கொண்டு அந்தக் கட்டத்தூள் இயங்க வேண்டும் என்பது நெறிமுறை.  வரலாற்று ஆய்வில் காலகட்டம் மிகவும் இன்றியமையாதது.  ஆய்வுகள் மூலம் தொன்மங்களையும் புன்சிவுகளையும் தரவின் உதவியில்லாமல் நிறுவ இயலாது

இந்த அடிப்படையில் பார்த்தால் மூத்தகுடி என்பதை நிறுவ தமிழ் வளங்களை மட்டும் பயன்படுத்துவது அவசியம். தற்சமயம் நம்மின்டம் உள்ள சரித்திர ஆவணங்கள் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாகவே உள்ளது. இந்தப் பின்னணியில் தமிழ்க்குடியை மூத்தகுடி என்று எவ்வாறு நிறுவுவது?

வவ



மின் தமிழ் குழுக்களில் முக்கியமான பங்காற்றுபவர் நண்பர் ஆராய்ச்சி முனைவர் காளை அவர்கள்.

> அறிவியல் நிரூபணம் தொடரும்....  

திரு. காளைராஜன் எழுதியிருப்பது என்ன அறிவியல் நிரூபணம் இருக்கிறது என பேராசிரியர்கள் சொல்லலாம்.

நா. கணேசன்



seshadri sridharan

unread,
Sep 11, 2013, 11:54:26 AM9/11/13
to vall...@googlegroups.com

Archeologists Say Humans Left Africa For Asia Only 60,000 Years Ago, Rejecting Previous Theory


Image Credit: Thinkstock.com

redOrbit Staff & Wire Reports – Your Universe Online

Modern humans did not leave Africa prior to the massive eruption of Sumatra´s volcano Mount Toba 74,000 years ago, according to a new study appearing in the journal Proceedings of the National Academy of Sciences.

Rather, Professor Martin Richards of the University of Huddersfield and colleagues have concluded that genetic evidence supports the belief that they departed for Asia approximately 60,000 years ago. Their findings refute a recent theory which had suggested that there was archaeological evidence establishing the presence of people in the southern part of the continent prior to the super-eruption, the university said in a statement.

Previous research completed by Richards used mitochondrial DNA evidence to show that anatomically modern men and women departed from Africa via a “southern coastal route” from the Horn and through Arabia some 14,000 years after the eruption of Mount Toba. Since then, however, archaeologists working in India say they had discovered evidence that humans had lived there far earlier — perhaps up to 120,000 years ago.

Those claims were made after the archaeologists discovered stone tools beneath a layer of Toba ash in 2007. In a rebuttal to those claims, Richards, University of Cambridge archaeologist Sir Paul Mellars, and others found additional genetic evidence to support Richards´ previous conclusion.

“One of the things we didn´t have in 2005 was very much evidence from India in the way of mitochondrial sequences. Now, with a lot of people doing sequencing and depositing material in databases there are about 1,000 sequences from India,” Mellars explained.

By using modern mitochondrial DNA and working backwards, Richards and his colleagues were able to make more exact estimates as to when exactly people set foot on the Indian continent. That genetic information, combined with additional evidence and research, led them to conclude that the dispersal from Africa and the settlement in India could have happened no earlier than 60,000 years ago.

“We also argue that close archaeological similarities between African and Indian stone-tool technologies after 70,000 years ago, as well as features such as beads and engravings, suggest that the slightly later Indian material had an African source,” Richards added. “There were people in India before the Toba eruption, because there are stone tools there, but they could have been Neanderthals — or some other pre-modern population.”

The recently-published research is “an unusually strong scientific put-down,” said Lewis Smith of the Daily Mail. He added that the research done by Richards´ team essentially declares that the pre-eruption settlement theory is “worthless,” and that the researchers wrote that they found “no evidence, either genetic or archaeological, for a very early modern human colonization of South Asia, before the Toba eruption.”

கி.காளைராசன்

unread,
Sep 11, 2013, 10:19:13 PM9/11/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com, K. Loganathan
வணக்கம் ஐயா,


2013/9/11 K. Loganathan <k.ula...@gmail.com>

 நின்னா காளை அவர்களே

இக்கட்ட்டுரையை  படித்து மகிழ்ந்தேன். ஓர் LOGIC  இருக்கின்றது, ஆதாரத்தோடு சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும் என்ற எணணம்  இழையோடுகின்றது

சுமேரு மொழி தொல்தமிழ் என்ற எனது கருத்துக்களை எடுத்தியம்பி உள்ளீர். ஆனால் வடமொழி சுமேருத் தமிழின் திரிபாக ஆகவே பாரரத மொழிகள் பல இப்படி இருக்கலாம் என்று கருதற்கு இடம் உண்டு என்றாவது கூறியிருக்கலாம்

ஐயா,
தங்களது மேற்கண்ட கருத்து சரியானதே.
கட்டுரையை முழுமையாக வெளியிடும் போது இதனையும் சேர்த்துக் கொள்கிறேன் ஐயா.
 
ஆயினும் முதன் முறையாக  (யான் அறிந்த வரையில்) தமிழர்களின் தொன்மையைப் பற்றி அறிவுப் பூர்வமான ஓர் கட்டுரையைப் படைத்டுள்ளீர்,

எனது வாழ்த்துக்கள்
தங்களது அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

K. Loganathan

unread,
Sep 13, 2013, 8:56:38 PM9/13/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் அவர்களே

தங்களது கூற்றில் ஓர் உணமை இருக்கின்றது. தமிழர்கள் என்பார் பல திறதினர். பலவகையான சாதிக் கட்டுப்பாடுகள் இதனால் எழுந்திருக்கலாம். ஆனால் கீழே தங்களது கருத்து எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, பிழை என்றே நினைக்கின்றேன்

//
2. கடல்வழியாக மேற்குப் பகுதியில் பாரசிக நாட்டில் ஆற்றுக்கரையில் வாழ்ந்து விவசாயத்தைக் காற்றௌப் புலம்பெயர்ந்தவர்கள் - வேளாளர், வேளிர்

3. இந்தியாவின் வடமேற்கு வடகிழக்கிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் - வேத விபன்னர்கள் அந்தணர்''//

தாங்கள் குறிப்பிடுவது பாராசீக நாடல்ல, அது சுமேரியாவாக இருக்க வேண்டும் அங்குதான் வேளாண்மை தோன்றி பெரிதும் வளர்க்கப்பட்டது. வேளிர் என்ற சொல்லின் தோற்றமும்  ஏண்> வேண் > வேள் என்றே இருக்கின்ற்து. இங்கு ஏண் என்ற சொல் சுமேருத் தமிழில் ' en"  என்று மிகப் பரவலாக வருகின்ற ஓர் சொல்

மேலும் வடமொழியே சுமேருத் தமிழின் திரிபாக இருக்கும்போது, வேதியர்களும் இன்னொரு வகையான தமிழர்களே, அவர்களும் சுமேரியாவிலிருந்து நில மார்க்கமாக வடக்கு வந்து பின் தெற்கும் வந்துள்ளனர்.  பிற இனங்களோடு கலப்பு நடந்திருக்கலாம் பண்டைய காலத்திலிருந்தே வேத மக்களும் தென் தமிழர்களும் தொடர்பு கொண்டிருந்தன்ர். மிகப் பழைய சங்கப் பாடல்களிலும் வேதியம் உண்டு. 'பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி" தன் பெயரிலேயே வேதியம் கொண்டுள்ளான்

ஐரோப்பியர்களின் மிகப் பிழையான மொழியியல் ஆய்வுகளே வேதியர்களை ஐரோப்பியர்களோடு தொடர்புடைய 'ஆரிய இனம்' ஆக்கியது. இந்த 'ஆரிய" என்ற சொல்லும் சுமேருத் தமிழே

உலகன்


2013/9/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

2013/9/13 bala subramani <sunke...@gmail.com>
புவியை சுற்றி உள்ள நீர் விலக என்ற வரியை சேர்த்து  பார்த்தால்  பொருள் விளங்கும்

​தமிழகத்தில் நான்கு இனத்தவர் கூடி வாழ்ந்ததாகப் பல வரலாற்றாசிரியர்கள் பட்டியலிட்டுள்ளனர்

1. மலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினர் - தோடர் படகர் வேடர்​

2. கடல்வழியாக மேற்குப் பகுதியில் பாரசிக நாட்டில் ஆற்றுக்கரையில் வாழ்ந்து விவசாயத்தைக் காற்றௌப் புலம்பெயர்ந்தவர்கள் - வேளாளர், வேளிர்

3. இந்தியாவின் வடமேற்கு வடகிழக்கிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் - வேத விபன்னர்கள் அந்தணர்

4.  கிழக்குப் பகுதியிலிருந்து கடல்வழியே வந்த நாகர்கள்- போர்க்குணம் மிக்க கடலோடிகள்.  நகரத்தார் வரலாறுபற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் நாகர் வழியில் வந்தவர்கள் என்ற குறிப்புள்ளது

இதில் யார் மூத்தகுடி என்பதில் வரலாற்று ஆய்வாளர்கள் தீர்வான ஒரு முடிவை அடைய இயலவில்லை.  பாலு அவர்கள் குறிப்பிடுவதுபோல் ஆமைவழிப்பாதை கிழக்குக் கரையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் உருவான அடிப்படையில் பார்த்தால் இந்த நாகர்களே வீரத்திலும் போர்க்கருவிகளை உருவாக்குவதிலும் வல்லவர்கள் என்ற அனுமானத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது

இனி ஆய்வாளர் காளை ஐயாதான்  இந்த அனுமானம் பற்றிய கருத்துக் கூறவேண்டும்

ஆராய்ச்சிக் குஞ்சு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 13, 2013, 9:10:27 PM9/13/13
to vallamai

2013/9/14 K. Loganathan <k.ula...@gmail.com>

தாங்கள் குறிப்பிடுவது பாராசீக நாடல்ல, அது சுமேரியாவாக இருக்க வேண்டும் அங்குதான் வேளாண்மை தோன்றி பெரிதும் வளர்க்கப்பட்டது. வேளிர் என்ற சொல்லின் தோற்றமும்  ஏண்> வேண் > வேள் என்றே இருக்கின்ற்து. இங்கு ஏண் என்ற சொல் சுமேருத் தமிழில் ' en"  என்று மிகப் பரவலாக வருகின்ற ஓர் சொல்

​நீங்கள் சொல்லும் விதமாகச் சுமேரியாவாக இருக்கலாம்.  ஒரு சமகாலப் பேராசிரியர் என்னிடம் கூறும்போது இன்றைய பெயரில் ஈரான் ஈராக் என்ற இரு நாடுகளில் டைக்ர்ஸ் யூப்ரடிஸ் நதிக்கரையில் இன்றூம் கருப்பு நிறத்தவ்ரும் கோதுமை நிறத்தவரும் வாழ்வதாகக் குறிப்பிட்டார்

நான் பெர்சியா என்று சொன்னது நீங்கள் குறிப்பிடும் நதிக்கரையை ஒட்டிய இடங்களே

வவ​

K. Loganathan

unread,
Sep 13, 2013, 9:39:34 PM9/13/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
 மிக்க நன்றி

ஆய்வாளர்களைடையே தமிழர்களின் தோற்றம் பற்றி ஓர் உடன்பாடு வருவதைக் கண்டு மகிழ்ச்சி,  இதனால் இன்னொரு விசயத்தையும் இங்கு கருதவேண்டும்

வேளிர்கள் எனப்படும் வேளாளர்கள் சங்கத்தமிழ் பண்பாட்டினை வளர்த்தவர்கள் , அது சுமேருத் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சி என்றும் தெரிகின்றது. ஆயினும் வட எழுத்துக்கள் என்ப்படுபவை சுமேருத் தமிழில் இருக்க அது தொல்காப்பியரால் ஒதுக்கப்படுதல், வேளிர்களோடு கலந்துவிட்ட பெருங் குடியினராகிய நாகர்களின் தாக்கமாக இருக்கலாம. பல தமிழ் குடிமக்களுக்கு  ஜ, ஷ போன்றவை வாயில் வராத ஒலியன்கள்

மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய ஓர் கருத்தாக இங்கு இதனை பதிவு செய்கின்றேன்

உலகன்






2013/9/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

பூனைக் கவிராயர்

unread,
Sep 13, 2013, 10:00:28 PM9/13/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com



தங்களின் மேலான பார்வைக்காக

தமிழர்களின் வரலாறு கி.மு என்ற காலத்தில் இருந்து தொடங்கப்படவேண்டும்.  கி.பி எட்டாம் நூற்றாண்டு என்ற கால அளவீட்டைத் தாண்டி தமிழுக்கும் சங்கதத்துக்கும் மூல மொழி ஒன்று இருந்திருக்கவேண்டும் என்ற அடிப்படையில் பார்க்கவேண்டும் அந்தணர்களும் வேளிர்களும் சுமேரியாவில் இருந்து வந்திருக்கக் கூடும் தமிழ் மொழியில் வழக்கில் இல்லாத சொற்களைச் சுட்டும் தொல்காப்பியர் சூத்திரத்துக்கும் சுமேருவுக்கும் தொடர்புள்ளதா போன்ற ஆய்வு வினாக்களுக்கு விடைகாண இந்த 1914-ல் எஸ்.கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய குறிப்பு தங்களுக்கு உதவக் கூடும்

வவ




On Saturday, 14 September 2013 07:09:34 UTC+5:30, K. Loganathan wrote:
 மிக்க நன்றி

ஆய்வாளர்களைடையே தமிழர்களின் தோற்றம் பற்றி ஓர் உடன்பாடு வருவதைக் கண்டு மகிழ்ச்சி,  இதனால் இன்னொரு விசயத்தையும் இங்கு கருதவேண்டும்

வேளிர்கள் எனப்படும் வேளாளர்கள் சங்கத்தமிழ் பண்பாட்டினை வளர்த்தவர்கள் , அது சுமேருத் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சி என்றும் தெரிகின்றது. ஆயினும் வட எழுத்துக்கள் என்ப்படுபவை சுமேருத் தமிழில் இருக்க அது தொல்காப்பியரால் ஒதுக்கப்படுதல், வேளிர்களோடு கலந்துவிட்ட பெருங் குடியினராகிய நாகர்களின் தாக்கமாக இருக்கலாம. பல தமிழ் குடிமக்களுக்கு  ஜ, ஷ போன்றவை வாயில் வராத ஒலியன்கள்

மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய ஓர் கருத்தாக இங்கு இதனை பதிவு செய்கின்றேன்

உலகன்






2013/9/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>


2013/9/14 K. Loganathan <k.ula...@gmail.com>

தாங்கள் குறிப்பிடுவது பாராசீக நாடல்ல, அது சுமேரியாவாக இருக்க வேண்டும் அங்குதான் வேளாண்மை தோன்றி பெரிதும் வளர்க்கப்பட்டது. வேளிர் என்ற சொல்லின் தோற்றமும்  ஏண்> வேண் > வேள் என்றே இருக்கின்ற்து. இங்கு ஏண் என்ற சொல் சுமேருத் தமிழில் ' en"  என்று மிகப் பரவலாக வருகின்ற ஓர் சொல்

​நீங்கள் சொல்லும் விதமாகச் சுமேரியாவாக இருக்கலாம்.  ஒரு சமகாலப் பேராசிரியர் என்னிடம் கூறும்போது இன்றைய பெயரில் ஈரான் ஈராக் என்ற இரு நாடுகளில் டைக்ர்ஸ் யூப்ரடிஸ் நதிக்கரையில் இன்றூம் கருப்பு நிறத்தவ்ரும் கோதுமை நிறத்தவரும் வாழ்வதாகக் குறிப்பிட்டார்

நான் பெர்சியா என்று சொன்னது நீங்கள் குறிப்பிடும் நதிக்கரையை ஒட்டிய இடங்களே

வவ​

K. Loganathan

unread,
Sep 14, 2013, 2:21:28 AM9/14/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திரு ருத்ரா பரமசிவ அவர்களே

 இது மிகவும் கேவலமான தனிப்பட்ட தாக்குதல், தேவையற்றது. வேதங்களையும் இப்படி கேவலப்படுத்துவது இணையம் தரும் சுதந்தித்ரத்தை அவமதிப்பதாகும். இப்படி நையாண்டி செய்தே தமிழன் கெட்டான் . நனறாக வளர்ந்து வரும் ஓர் இழையை கெடுத்த பாவம் உங்களையேச் சாரும்.. எந்த ஆதாரமும் சான்றுமில்லாது அபத்தமான குற்றச்சாட்டுகளை இவ்வாறு பதிவு செய்வதுதான் தமிழ் நாகரீகமா? 

உங்கள் எழுத்தைப் படித்து வெக்கி நாணிக் குனிகின்றேன்

உலகன்


2013/9/14 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>

தொல்காப்பியன் பிராமணன்.கபிலன் பிராமணன்.இன்னும் தமிழ்ச்சங்க செய்யுள் எல்லாம் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டுப்போகட்டும்.
ஆராய்ச்சிக்குஞ்சு அவர்களே.கூமுட்டையில் இருந்து குஞ்சு பொரித்த உங்கள் விஷயங்களில் விஷயங்களை விட "விஷமத்தனங்களே"அதிகம் உளது.


ஆனால் வேதம் ஒலித்தவன் தமிழன்.அதற்கு வரிவடிவம் தந்தவனும் தமிழனே.
வால்மீகி வியாஸன் கிருஷ்ணன் ராமன் போன்றவர்கள் திராவிட குலமே.
பரராசன் என்னும் பரதவர் குலம் தமிழரின் நெய்தல் நிலத்து பரதவனே.இது தான் பாரதகண்டம் தோன்ற அடிப்படையானது.சிந்துவெளி (சிந்தி என்ற தமிழ்ச்சொல்லின் வேரில் இருந்து சிந்தனை சித்தர் என்ற மக்கள் ஆண்ட வெளியே சிந்து வெளி.இவர்களின் ஆழ்னிலை யோக முத்திரைகள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகிறது.யாக்கை என்பது ஆக்கை ஆகும்.யானை என்பது ஆனை ஆகும்.யாறும் ஆறும் ஒன்றே.அது போல் ஓகம் என்பது யோகம் ஆயிற்று.ஓகம் என்பது ஒடுக்கம் ஒருக்கம் ஆகும்.யோகம் என்பதும் உடல் உள்ளம் உயிர் எண்ணம் எல்லாம் ஒருங்குவதே ஆகும்.வேய் என்பது புல்,மற்றும் மூங்கில் என்ற தமிழ்ச்சொல் ஆகும்.வேய்ங்குழல் மூலம் இசைத்து ஒலிகள் தோற்றுவித்ததே வேய்தம் ஆயிற்று.மாடுகள் மேய்க்கும் தமிழ்ச்சிறுவர்களின் 
பாட்டுகளே ரிக் வேதம் ஆயிற்று.

ஆராய்ச்சிக்குஞ்சு அவர்களுக்கு இது போதுமா?

வேத ஸ்லோகங்களில் புதைந்திருக்கும் தமிழ் ஒலிப்புகள் பற்றி அடுத்து ஒரு நீண்ட ஆராய்ச்சி காத்திருக்கிறது.

தொல்காப்பியர் முழுமை பெற்ற தமிழ் ஒலிப்பை நிறை மொழி என்றும்,
அரைகுறை ஒலிப்புகளில் மறைந்திருக்கும் மொழியை மறை மொழி என்றார்.அதுவே வடமொழி வடிவங்கள்.
வல்லின மெல்லினங்களுக்கு குறில் நெடில் என்று ஒன்று இரண்டு மாத்திரைகள்
குறித்திருப்பது போல் ஷ ஹ க்ஷ போன்ற எழுத்துக்களுக்கும் அரை கால் அரைக்கால் மத்திரைகள் குறித்திருப்பார்."வடவெழுத்து ஒரீஇ"யில் இத்தகைய‌
பொருள்கோள்களும் நாம் கொள்ளலாம்.சாங்கிய தத்துவம் சொன்ன கபிலனும்
குறிஞ்சித்திணை செய்யுள்கள் படைத்த கபிலனும் தொல்காப்பியர் சொன்ன வடவெழுத்து ஒரீஇ மொழி இலக்கணத்தை உருவாக்கி இலக்கியம் படைத்த அந்தணர்கள்.அந்தணர் என்போர் அறவோர்.மற்றெவருக்கும் செந்தணமை பூண்டு ஒழுகுவோர்.தமிழ் அந்தணர்கள் சமஸ்கிருத பரோஹிதர்களைவிட உயர்ந்தவர்கள். சமஸ்கிருதம் என்றால் மனிதர்களால் தொகுத்து செய்யப்பட்டது என்று தானே பொருள்.தானே தோன்றியிருந்தால் "சுய‌ம்பூகிருதம்"என்று தானே
அழைக்கப்பட்டிருக்கும்.ஆகவே சிந்துவெளித்தமிழே சமஸ்கிருதத்திற்கு முன்பு தோன்றிய மொழி என்பதில் ஐயமில்லை.ஐந்திறங்களில் (ஐந்திணை இயல்புகளில் சிறந்து விளங்கிய "ஐந்திறன் எனும் இந்திறனே (இந்திரனே)வேத  
ஒலிப்புகளை அந்த வந்தேறிகளுக்கு புகட்டினான்.காலப்போக்கில் தமிழ் இனத்துக்கு அவனை பகையாளி யாக்கிக்கொண்டார்கள்.

"வால்கா முதல் கங்கை"வரை எனும் ராகுல் சாங்க்ருத்தியாயனின் வரலாற்று நாவல் ரிக் வேதத்தில் கொப்பளிக்கும் குரோதத்தையும் பகைவெறியையும் நன்கு காட்டுகிறது.தமிழர்கள் இயற்றிய ரிக் வேதம் தமிழர்களுக்கு எதிராக புகை
கக்குமாறு திருத்தப்பட்டது."அக்னிம் ஈளேம் ப்ரோஹிதம்"என்று அது ஆரம்பிப்பது சிந்து இன "ஈழவனை"க்குறிப்பதாகும்.

===================================================ருத்ரா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 14, 2013, 10:28:07 AM9/14/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
 
I am just reading Kavignar Paramasivam Rudra's views in this thread.  One thing about google groups involved in Tamil research.
Please consider incorporating what is mentioned by Tamil linguists working as research scholars in Universities worldwide.
While Sumerian, Sanskrit and Tamil are the lead languages of three genetically non-related languages, according to specialists
in Historical Linguistics, it is welcome that Munaivar Kalairajan, a leading scholar from Tamil Nadu, is starting to give
scientific proof for Tamil and Sumerian relationships. Hope Prof. Nagarajan and other scholars tell us more in these 3
unrelated (genetically) languages, in journals, and scholarly discussion lists.
 
BTW, mun2tOn2Ri mUtta kuTi - is not about Sumerian.
 
N. Ganesan

coral shree

unread,
Sep 14, 2013, 12:15:58 PM9/14/13
to vallamai, mintamil, thiruppuvanam, amr
அன்புச் சகோ. திரு காளைராசன் அவர்களுக்கு,

நல்லதொரு கட்டுரை. நிறைய தகவல்கள். தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறோம். பகிர்விற்கு நன்றி.

அன்புடன்
பவளா


2013/9/11 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

K. Loganathan

unread,
Sep 14, 2013, 9:59:28 PM9/14/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

தங்கள் கூற்று//

தமிழன் வீட்டிலும் தெருவிலும் நாட்டிலும் நாக்கிலும் நெஞ்சிலும் தமிழனாய் இருந்தால் இத்தனை சினம் கொள்ள மாட்டானே!தன் வீட்டுக்குள் ரகசியமாய் தமிழை வேள்விக்குச்சிகளாய் வேள்வியில் எரித்து சாம்பல் ஆக்குபவர்கள் தான் தமிழ் கேவலமாய் பிறந்தது என்று ஜம்தக்கினியையும் த்ருணதக்கின முனியையும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.?/

இது தவறுதான். ஓர் சில வடமொழிவாணர்கள் இவ்வாறு தமிழை இகழ்ந்துள்ளதும் உண்மைதான், நானும்  இதைக் கண்டித்துள்ளேன். உலகச் சைவப் பேரவையின் செயளாலராக இருந்த பொழுது தமிழில் அர்ச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஐயர்களையும் தீட்சிதர்களைம் சிவாச்சாரியர்களையும் கண்டித்துள்ளேன்

ஆனால் இப்படி கண்டிப்பதும் மாத்திரம் போதாது.

வடமொழியும் தொல்தமிழின் திரிபே எனும் உணமையை அறிவார்ந்த முறையில் தெரிவித்து உணமையென நிறுத்திவிடால் வடமொழி தேவ பாஷை, தமிழ் நீச பாஷை என்ற கருத்தெல்லாம் எடுபடுமா?

சுமேருமொழி தொல் தமிழ் என்றும் உலக மூலச் செம்மொழி என்றும் வடமொழியும் மற்றும் பாலிபோன்ற ஏனைய வட இந்திய மொழிகளும் இப்படித்தான், தொல்தமிழின் திரிபுகளே என்றும் நன்முறையில் ஆய்ந்து அனைவரும் உடனடுமாறு செய்துவிட்டால், யார்  தமிழ் ஓர் நீச பாஷை என்று கூறுவார்?

ஆரிய இனவாதத்தை அறிமுகப்படுத்திய ஐரொப்பியர்களின் பொய்மையும் அதனால் எழுந்த திராவிட இனவாதமும்  பொய்த்து போகும்படி செய்ய வல்ல இந்த சுமேருத் தமிழ் ஆய்வில் ஏன் உங்கள் நாட்டம் செல்லவில்லை?

பிராம்மண துவேஷமும் வடமொழி எதிர்ப்பும்  எந்த மாற்த்த்தைக் கொண்டு வரும்? மேற்கொண்டு எதிர்ப்பையும் வெறுப்பையுந்தான் வளர்க்கும். அது தேவையா?


சுமேருமொழி ஆய்வும் அதனோடு வரும் பிறவும் தமிழர்கள் தொடர்பான வரலாற்று உணமைகளை உலகறியச் செய்ய வல்லவை என்றால், ஏன் தங்களது ஆர்வம் அங்கு செல்லவில்லை?,

புராணக் கதைகளை நம்பி வலுவான சான்றுகளோடு தமிழே மூலச் செம்மொழி என்று நிறுத்தவல்ல ஆய்வுகளில் ஏன் தங்கள் நாட்டம் செல்லவில்லை?

உலகன்


2013/9/15 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>



இங்கு தமிழர் யாருக்கும் வெட்கம் இல்லையா?
==================================================ருத்ரா


தொல்காப்பியனை ஜமதக்கினி ரிஷி என்பதும் தமிழ் சமஸ்கிருதம் எச்சில் துப்பி ஜனித்தது போல் பழைய நூல் ஒன்றை ஸ்கேன் பண்ணி போட்டு தமிழை கேவலப்படுத்துவதும் எந்த நியாயத்தில் சேரும்? ஆத்திகம் போற்றிய தமிழ் இன்று இன்னும்  வந்தேறிகளின் இரைச்சல் மொழிக் குப்பையில் வீசப்படுவதும் தான் இன்றைய நிலைமை.சிவன் தான் தமிழைப்படைத்தான் என்று தேவாரம் திருவாசகம் எல்லாம் மணக்க‌ மணக்க சொல்லிவிட்டு தமிழை புதைகுழிக்கு அனுப்புவதற்கு புரியாத மொழியிலேயே சிவனுக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்று புரியாமலேயே கூப்பாடு போடும் கூட்டம் தான் வெட்கி தலை சாய்க்கவேண்டும். இப்படியும் ஆராய்ச்சி செய்யலாம் என்று  தமிழ் தான் வேத ஒலிகளுக்கு வரிவடிவம் கொடுத்தது என்று நான் எழுதியத்தில் ஏன் இந்த 
தமிழர்களுக்கு கோபம் கொப்பளிக்கிறது என்று புரியவில்லை?விஷமத்தனத்தை
விஷமத்தனம் என்று சொன்னால் கோபம் கொள்வானேன்.

வியாஸன் எனும் மாபெரும் மேதையே வேத வேதாந்தங்களுக்குக் காரணம் ஆனவன்.அவன் ஒரு திராவிடன் (தமிழன்)என்று எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டு கூறியிருக்கிறார்கள்.அதன் அடிப்படையில் நான் இழையிட்டேன்.தமிழன் வீட்டிலும் தெருவிலும் நாட்டிலும் நாக்கிலும் நெஞ்சிலும் தமிழனாய் இருந்தால் இத்தனை சினம் கொள்ள மாட்டானே!தன் வீட்டுக்குள் ரகசியமாய் தமிழை வேள்விக்குச்சிகளாய் வேள்வியில் எரித்து சாம்பல் ஆக்குபவர்கள் தான் தமிழ் கேவலமாய் பிறந்தது என்று ஜம்தக்கினியையும் த்ருணதக்கின முனியையும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தெனாலிராமன் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்"எழுதிய கதை தெரியும் அல்லவா?
அது போல்  "அமாத்ரு ம்லேச்ச‌ பாஷார்த்த சோம பானம்" அருந்தியவர்களின்
குரல்களையும் தள்ளிவிடவேண்டியது தான்.


இதையாரையும் புண்படுத்த எழுதவில்லை.தமிழைப்புண்படுத்துபவர்களை பண்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே எழுதப்பட்டது.

அன்புடன் ருத்ரா 
 


On Wednesday, September 11, 2013 5:48:29 AM UTC-7, kalai wrote:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 15, 2013, 9:57:30 AM9/15/13
to மின்தமிழ், vallamai
இன்று முழுநாள் வகுப்பு என்பதால் ருத்ரா ஐயா அவர்களின் மறுமடலுக்கு உடனடியாகப் பதில் எழுத இயலவில்லை.  

கொங்கு நாட்டுச் செல்வம் மட்டுறுத்துனர் ஐயா செல்வன் தக்க சமயத்தில் தலையிட்டு நல்லதொரு நாட்டாமைத் தீர்ப்பைத் தந்து விவாதத்தில் ஏற இருந்த சூட்டைத் தணித்தார்

ருத்ரா ஐயா அவ்ர்களின் அடிமனதில் இங்கே ஏதோ தமிழுக்கு எதிரான சதிச்செயல் சிலர்கூடி நடத்துவதுபோல் ஒரு எண்ணன் இருப்பதை என்னால் உணர முடிகிறது.  அவர் என்னை நேரடியாகப் பார்த்திராததால் நான் ஒரு ஒல்லிப்பிச்சான் தணுஷ் பால்பாயின்ட் பென் ரீஃபில்லர் என்ற என்னுடைய உண்மையான உருவத்தைத் தெரிந்துகொள்ளாம நான் ஏதோ ஒரு கனபாடி என்ற எண்ணத்தில் என்னைச் சாடிவிட்டார்.  என்னுடைய தப்புத் தப்பான தமிழைப் பார்த்து எங்கோ தப்பு நடந்துவிட்டது என்று உணர்ந்து சமரச உணர்வுடன் பதில்மடல் எழுதியுள்ளார்.  எனவே இந்த மூத்தகுடி இழை முழுக்க முழுக்க ஆராய்ச்சி இழையாக இருக்க அவர் மனம் ஒப்பியுள்ளார் என்பதை இங்கே தெரிவித்துக் கொண்டதற்கு நன்றியும் மகிழ்வும்

என்னுடைய இல்லத்தில் எல்லாரும் தமிழ் தெரிந்தவர்கள் அல்ல.  அதனால் அவர்களுக்கு இந்த கருத்துமோதல் பற்றி எதுவும் புரிந்துகொள்ள இயலாது. ஆனால் எங்கள் சிவகாமிப் பாட்டி பொல்லாத பாட்டி உங்கள் கருத்தைப் படித்துவிட்டு அவர் இன்னும் வலுவாக வாதத்தை வைக்க வேண்டாமா என்று சொல்லி

பேராண்டி இமயமலையீல் பித்தனாக இருந்த சிவபெருமானே முதலில் பானினிக்கு சங்கத இலக்கணத்தையும் பின்னர் அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தையும் கற்பித்து சங்கதமும் தமிழும் இரு கண்கள் என்று சொன்னதாகப் புராணிகர்கள் சொல்லுவார்கள்.  அது தப்புடா பேராண்டி.  இமயமலையில் ஆட்சி செய்துகொண்டிருந்த அவரை நம்ம மதுரைக்கரப் பொண்னு மீனாட்சி போர்புரிந்து வென்று பாவமாக்வும் பவ்யமாகவும் நின்ற அவரை மதுரைகுக் கூட்டிவந்து திருமணம் செய்துகொண்டு அவரை இல்லறத்தில் நல்ல கனவனாக் மாற்ற அரும்பாடு பட்டு மதுரையில் இருந்து திருவிளையாடல் என்ற பெயரில் மதுரைக்காரங்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவரைக் கைப்பிடித்ததால்  அவர் செய்த நல்ல காரியம் முருகனை மகனாகப் பெற்றது.  நம் ஊர் பழனி மலையில் இருக்கும் முருகன் அல்லவா அகத்தியருக்குத் தமிழ் கற்பீத்தவர்.  18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான சாமி தொல்காப்பிய சூத்திர விருத்தியில்  "செந்தமிழ் நிலத்து மொழி தோன்றும் காலத்து உடன் தோன்றிய நூல் அகத்தியமென்பதால் என்று கூறியிருப்பதை எப்படித் தமிழ் ஐயா மறந்துவிட்டு வடபுலத்து சிவனைக் கொண்டாடுகிறார் என்று கேள் என்று சொன்னார். சமணர்களும் அகத்தியர் அவலோகிதரிடம் தமிழ் இலக்கணம் கற்றுக்கொண்டார் என்று விவாதிக்கிறார்கள்

இங்கே தமிழனின் பழமையைப் பற்றி அறீய உதவும் நூல் தொல்காப்பியம் அதை எழுதிய தொல்காப்பியர் யார் என்பதைவிட தொல்காப்பியம் படைக்கப்பட்ட காலம் கி.பி எட்டாம் நூற்றாண்டு என்று சொல்வதை இந்த நூலின் ஆசிரியர் மறுத்து தொல்காப்பியம் கி.மு 4 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்வதை ஆய்வாளர் காளைக்கு ஒரு ஆதார ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுப்பினே என்பதால் அவர் என்மீது கொண்டிருந்த என்னைப் பற்றிய சந்தேகம் நீங்கிவிட்டது.  

ஏதோ நான் தமிழை அழிக்கத் திட்டம்போடும் மொழித்தீவிரவாதி என்று ஐயா கணக்குப்போட்டு அப்புறம் பார்த்தா இது வெறும் டம்மிபீஸ் என்று மன்னித்துவிட்டார்.  எனக்கு இதை நினைத்தால் இந்தக்காட்சி மனத்திரையில் நிழலாடுகிறது


எப்படியோ பிரச்சினை ஒருவழியாக முடிந்த்தாலும் எனக்குத் தெரிந்த ரகசியத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.  நம் மடலாடல் கருத்துக்களித் தொடக்கத்தில் அரசு அதிகாரிகள் மட்டும் படித்துக்கொண்டிருந்தனர்.  இப்போது சென்னை காவல் துறையில் சைபர் குற்றவியல் காவல் நிலையத்தில் தொடர்ந்து படிக்கிறார்கள்.  தனிப்பட்டவர்களையோ ஒரு குறிப்பிட்ட குழுவையோ பிரிவைப் பற்றியோ தாக்கி எழுதுகிறார்கள் என்றூ தெரிந்தால் உடனே வெளியில் வரமுடியாத செக்ஷனில் வழக்குப்போட்டு உள்ளே தள்ளிவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள்.  எனவே தமிழை வளர்ப்பதற்குமுன் களி திண்பதிலிருந்து நம்மைக் காப்பாறிக்கொள்வதே இன்றைய முக்கிய நடவடிக்கையாகும்

ஆராய்ச்சிக் குஞ்சு


2013/9/15 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>
தொல்காப்பியனை ஜமதக்கினி ரிஷி என்பதும் தமிழ் சமஸ்கிருதம் எச்சில் துப்பி ஜனித்தது போல் பழைய நூல் ஒன்றை ஸ்கேன் பண்ணி போட்டு தமிழை கேவலப்படுத்துவதும் எந்த நியாயத்தில் சேரும்? 

//1. இதை நான் ஸ்கேன் பண்ணிப் போட்டேன் என்ற கருத்து சரியல்ல.  

இது இணையத்தில் இன்டெர்னெத் ஆர்கைவ்ஸ் எம்ற கருவூலத்தில் எண்ணிம வடிவில் உள்ள நூல்


அந்த நூல் தமிழர்களின் வரலாறு பற்ரி ஆய்பவர்களுக்கு ஒரு ஆதார நூல் எழுதப்பட்ட ஆண்டு 1914. அதில் அவர் தொல்காப்பியர் பற்றி எழுதும்போது குறிப்பிட்டதை ஆய்வு மாணவர் திரு.காளை ஐயா அவர்களுக்கு சுட்டிக்காட்டும் முகத்தன் இடப்பட்ட பின்னூட்டம்.  எனவே இதை விஷமத்தனம் என்று கருத்தில் கொள்ள வேண்டாம். // 

காளை அய்யா அவர்கள் தமிழன் மூத்த குடி என்பதையும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய பெருமையை உடையவன் என்று நிறுவ கட்டுரை துவக்கியவருக்கும் உங்கள் லிங்கும் ஸ்கேனும் அவருக்கு எப்படி உதவும்?ஏய்யா உனக்கு வேற வேல இல்லையா?
ஆனானப்பட்ட தொல்காப்பியரே இங்கு ஜமதக்கினி ரிஷி தான்.அப்படியிருக்க உம்ம ஆராய்ச்சியையெல்லாம் மூட்டை கட்டி வையும் என்று விஷமத்தனமாக சொல்வதைத்தவிர அது வேறு என்ன வாக இருக்க முடியும்?
 

ஆத்திகம் போற்றிய தமிழ் இன்று இன்னும்  வந்தேறிகளின் இரைச்சல் மொழிக் குப்பையில் வீசப்படுவதும் தான் இன்றைய நிலைமை

//வந்தேறிகள் என்று யாரைச் சொல்வது? இரைச்சல் மொழி என்று எதைச் சொல்வது? ஆத்திகம் போற்றிய தமிழைக் குப்பையில் வீசியது யார்?.//

தெரியாத மாதிரி பாசாங்கு செய்வதில் பயனில்லை.ஆத்திகம் பேசிய தமிழை குப்பையில் வீசியது நாத்திகர்கள் என்று அவர் திசைதிருப்ப நினைத்தால் அது அரசியல். அப்படிப்பார்த்தால் வேதம் பற்றிய பிரம்மசூத்திர வாத பிரதிவாதங்களில் ந்யாய வைசேஷிக வாதிகளும் (விஞ்ஞான பூர்வ சிந்தனை முறை)சாங்க்ய் யோகிகளும் (இயற்கையியல் வரிசை முறை வாதிகளும் ஆழ்நிலை சிந்தனை வாதிகளும்)நாத்திகர்களாக அறிவிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப் படுகிறார்கள்.



சிவன் தான் தமிழைப்படைத்தான் என்று தேவாரம் திருவாசகம் எல்லாம் மணக்க‌ மணக்க சொல்லிவிட்டு தமிழை புதைகுழிக்கு அனுப்புவதற்கு புரியாத மொழியிலேயே சிவனுக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்று புரியாமலேயே கூப்பாடு போடும் கூட்டம் தான் வெட்கி தலை சாய்க்கவேண்டும். 

//சிவன்தான் தமிழைப் படைத்தான் என்றால் (அவனுக்குப் . புரியாத மொழியா) அப்புறம் தமிழைப் புதை குழிக்கு அனுப்பியது எவ்வாறு என்ற கேள்விகளுக்கு என்னால் விடைகூற இயலாது ஏனெனில் இந்த அரசியலில் நான் தலையிடுவதில்லை.  இங்கே பேசப்படும் கருத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக நான் கருதவில்லை//

சரி சம்பந்தமில்லாது சபைக்கு வரவேண்டாம் தான்.இருப்பினும் தமிழை எவ்வளவுக்கு எவ்வளவு கீழ்த்தரமாக்கி கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தும் வேதமொழிக்காரர்களை நான் கேவலப்படுத்தியதாக‌ வெக்கி தலை சாய்க்க வேண்டும் என்று சொன்ன அந்த பெரியாரும் புரிந்து கொள்ளவேண்டும் என்று தான் இதனை எழுதினேன்.

இப்படியும் ஆராய்ச்சி செய்யலாம் என்று  தமிழ் தான் வேத ஒலிகளுக்கு வரிவடிவம் கொடுத்தது என்று நான் எழுதியத்தில் ஏன் இந்த 
தமிழர்களுக்கு கோபம் கொப்பளிக்கிறது என்று புரியவில்லை?

​//புரியவில்லை என்று சொன்ன பிறகு நான் சொல்ல ஏதுமில்லை?//

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து கொள்ளடா என்ற நாமக்கல் கவிஞருக்கும் "நாமம்"போட்டுவிடும் நம் தமிழர்களை வைத்துக்கொண்டு
என்ன செய்வது?
  ​

விஷமத்தனத்தை​ ​விஷமத்தனம் என்று சொன்னால் கோபம் கொள்வானேன்.

//​விஷ்மத்தனம் என்று நீங்கள் எத்தனைமுறை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்?  கூமுட்டை என்றும் கூறிக்கொள்ளலாம?  எனெனில் உங்கள் தமிழ் அதை அனுமதிக்கிறது? அப்படிச் சொன்னால்தானே தமிழ் வளரும்?//

இந்த இடத்தில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டிய இடத்தில் தான் இருக்கிறேன்.உங்கள் தமிழ் என் தமிழ் என்றெல்லாம் இல்லை.இது நம் தமிழ்.நம் தமிழ் நம்மாலேயே சிதைக்கப்படுகிறது என்ற கருத்தோட்டம் உங்களிடம் தோன்றியிருக்குமானால் அதற்கு நான் உங்களோடு உடன் படுகிறேன்.ஆம் நாம் இன்னும் விழிப்புணர்வு கொள்ளவேண்டும்.  ​


வியாஸன் எனும் மாபெரும் மேதையே வேத வேதாந்தங்களுக்குக் காரணம் ஆனவன்.அவன் ஒரு திராவிடன் (தமிழன்)என்று எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டு கூறியிருக்கிறார்கள்.

​//இது எனக்குத் தெரியவில்லை.  அந்த ஆய்வுக் கட்டுரைகளைப் பற்றிய குறிப்பை இங்கே கொடுத்தால் எல்லாரும் படித்துப் பயனடையலாம்.//

இணைய தளங்களில் படித்திருக்கிறேன்."ஜமதக்கினி"விஷயத்தையெல்லாம் தேடிப்பிடித்துப்போடும் உங்களுக்கும் இது தெரிந்திருக்கும் என நினைத்து விட்டேன்.


அதன் அடிப்படையில் நான் இழையிட்டேன்.தமிழன் வீட்டிலும் தெருவிலும் நாட்டிலும் நாக்கிலும் நெஞ்சிலும் தமிழனாய் இருந்தால் இத்தனை சினம் கொள்ள மாட்டானே!தன் வீட்டுக்குள் ரகசியமாய் தமிழை வேள்விக்குச்சிகளாய் வேள்வியில் எரித்து சாம்பல் ஆக்குபவர்கள் தான் தமிழ் கேவலமாய் பிறந்தது என்று ஜமதக்கினியையும் த்ருணதக்கின முனியையும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

​//நீங்கள் எழுதுஇயதைப் படித்தால் நான் தமிழன் இல்லையோ என்ற அச்சம் எழுகிறது?  எனக்குத் தமிழும் சரியாக வராது.  தப்பும் தவறாக எழுதுபவன்?  என்னை என்ன செய்யலாம் என்று  ஒரு பரிந்துரை ஐயா அவர்கள் அளிக்கவும்?  நாடு கடத்திவிடலாமா?  அல்லது கழுமரம் சுண்ணாம்புக் காளவாயில் போட்டுவிடலாமா?  முடிந்தால் அதற்குமுன் கொஞ்சம பரமசிவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.  ஏனெனில் அவர்தான் மொழிகளை எல்லாம் படைத்தவர்//

இப்படியெல்லாம் எழுதினால் எப்படி? அது என்னையே கழு மரத்திலும் சுண்ணாம்புக்காளவாயிலும் போட்டது போல் தான் நான் உணர்கிறேன்.வேதனைப்படுகிறேன்.தயவு செய்து என் வருத்தங்களை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.அந்தக்காலத்தில் "தேவ துவேஷம், ராஜ துவேஷம், பிராமாணத்துவேஷம்"எல்லாவற்றுக்கும் கழுவும் சுண்ணாம்புக்காளவாயும் தண்டனை தரக்காத்திருக்கும்.இப்போது அறிவு சுதந்திரத்தினால் நாத்திகம் பல்கலைக்கழக பாடமாகி விட்டது.அதனால் நாத்திகர்களும் தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துக்காட்ட அந்த பரமசிவனையே அவன் கழுத்தில் போட்ட பாம்பையே துண்டு போல் பாவித்து "அந்த துண்டை பிடித்து "இழுத்துக்கேட்கிறார்கள்.


//வேத வியாசர் ஒரு ரிஷி (அந்தணர் அல்ல) ஒரு மீனவப்பெண்ணுக்குப் பிறந்தவர் கருப்பாய் இருந்தவர் என்பதால் அவர் தமிழன் திராவிடன் என்று ஐயா ஏற்ருக்கொள்ளும்போது ஜமதக்னி என்ற இன்னொரு ரிஷியின் வழியில் வந்தவர் என்று சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குமுன் ஒரு தமிழறிஞர் எழுதியதில் நீங்கள் குற்றம் காண்பது ஏன் என்றூ புரியவில்லை.  ஒருவேளை இவர்கள் தமிழுக்கு எதிரிகள் என்று பரமசிவனார் உங்களுக்கு கனவில் வந்து 
சொன்னாரோ​//////// ////   ////
//

தொல்காப்பியரை ஒரு ரிஷியாக சித்தரித்தவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் வந்த 
"தமிழறிஞர்"என்று எப்படி சொல்ல முடியும்? இதற்கு தான் நம் நாட்டில் நதி மூலம் ரிஷி மூலம் கேட்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இருப்பினும் தொல்காப்பியரை சமஸ்கிருத ரிஷியாக (ஒரு வாதத்திற்காகவோ அல்லது அவர் ஆராய்ச்சிப்படி உண்மையாகவே இருக்குமானால்)ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொண்டால் வியாஸனை வேத ஒலிப்புகளுக்கு கிரந்த (பிராமி எனும் திராவிட எழுத்து முறையை தந்ததற்காக வியாஸரை அந்த தமிழறிஞர் தமிழர் என ஒத்துக்கொள்ள்வாரா?அது சாத்தியமில்லை.நம் புராணங்களையெல்லாம் பாருங்கள்.தாழ்ந்த சாதியில் பிறந்து அக்குழந்தை ஒரு பெரிய புலவர் ஆகியிருந்தால் அது ஒரு பிராமணருக்குப்பிறந்து அது ஒரு கூடையில் போடப்பட்டு ஆற்றில் மிதந்து அந்த தாழ்ந்த சாதியாருக்கு தான் கிடைத்து அது வளர்க்கப்படும்.திருவள்ளுவர் அவ்வையார் எல்லாம் இப்படி பிறந்ததாகத்தானே
புராணங்கள் கூறுகின்றன.அப்படி ஒரு ரிஷியாக பிறந்தவர் தான் தொல்காப்பியர்
என்று உங்களுக்கும் அதே பரமசிவர் தான் கனவில் வந்து சொல்லுவார். 





தெனாலிராமன் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்"எழுதிய கதை தெரியும் அல்லவா?

//​தெரியாது​////
//

அது ஒன்றுமில்லை சமஸ்கிருத பண்டிதர்களை முட்டாள்கள் ஆக்கிய தெனாலிராமனின் கிண்டல் காவியம்.

அது போல்  "அமாத்ரு ம்லேச்ச‌ பாஷார்த்த சோம பானம்" அருந்தியவர்களின் ​ ​குரல்களையும் தள்ளிவிடவேண்டியது தான்.​

​//தெரியாது கருத்து இல்லை​//
//
இதுவும் தடால் அடி ஸ்லோகங்கள் தான்.



//தமிழுக்கு வக்காலத்துப்போடவும் தமிழுக்காகக்ப் போராடவும் தமிழைப் பழிப்பவர்களைப் பொலிபோடவும் உங்களுக்கு யார் லைசென்ஸ் கொடுத்தார்கள் என்று சொன்னால அடியேனும் மனுப்போட்டு உங்க மாதிரியே விஷ்மே இல்லாத நல்ல முட்டியாக ஆகிவிடுவேன்.  அப்புறம் என்னால் தமிழுக்கும் உங்களுக்கும் பிரச்சினை இல்லையே//

தமிழுக்கு வக்காலத்துப்போடவும் தமிழுக்காகக்ப் போராடவும் தமிழைப் பழிப்பவர்களைப் பொலிபோடவும் தமிழர்களுக்கு வந்தேறி மொழிக்கூச்சல்களா
லைசென்ஸ் தரும்? அந்த மனுஸ்ம்ருதிக்காரர்களிடம் நீங்கள் மனுப்போட்டால்
அதுவே "தமிழனாயிருந்தும்"  விஷ்யமே இல்லாத முட்டியாய் ஆவதில் தான் போய் முடியும்.தமிழனுக்கு தமிழனே பிரச்னை ஆவது என்பதும் இது தான். 

பண்பாளரும் மதிப்புக்குரிய தமிழ்வித்தகருமான‌ திரு வ.வ அவர்களுக்கு
என்றும் சிரம் தாழ்த்தும் மரியாதைகளுடன்

ருத்ரா (இ.பரமசிவன்)


On Wednesday, September 11, 2013 5:48:29 AM UTC-7, kalai wrote:

--

கி.காளைராசன்

unread,
Sep 15, 2013, 10:25:19 AM9/15/13
to mintamil, vallamai, thiruppuvanam, amr
வணக்கம்.


2013/9/14 coral shree <cor...@gmail.com>

நல்லதொரு கட்டுரை. நிறைய தகவல்கள். தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறோம். பகிர்விற்கு நன்றி.

தங்களது அன்பிற்கு நன்றி.
இப்போது நான் எழுதியுள்ளதெல்லாம் ஒரு தொடக்கஉரை (preamble ) மட்டுமே.  இன்னும் இழையின் தலைப்பு தொடர்பாக நிறையவே எழுத வேண்டியுள்ளது.

விரைவில் தொடர்ந்து எழுதுகிறேன்.

Banukumar Rajendran

unread,
Sep 15, 2013, 10:30:02 AM9/15/13
to மின்தமிழ், vallamai



2013/9/15 கி.காளைராசன் <kalair...@gmail.com>

வணக்கம்.


2013/9/14 coral shree <cor...@gmail.com>
நல்லதொரு கட்டுரை. நிறைய தகவல்கள். தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறோம். பகிர்விற்கு நன்றி.

தங்களது அன்பிற்கு நன்றி.
இப்போது நான் எழுதியுள்ளதெல்லாம் ஒரு தொடக்கஉரை (preamble ) மட்டுமே.  இன்னும் இழையின் தலைப்பு தொடர்பாக நிறையவே எழுத வேண்டியுள்ளது.

நல்ல கட்டுரை. எளிமையான சொற்களில் எழுதுகிறீர்கள் காளை ஐயா. தொடருங்கள்.

சிறு யோசனை சொல்லலாமா?

கட்டுரையில் முக்கியமான கருத்துக்களுக்கு சான்றுக் காட்டி எழுதுங்கள்! பிறர் வாக்கியங்களையோ, வரலாற்று ஆவணங்களையோ
தரவுக் காட்டி எழுதினீர்கள் என்றால் இன்னும் சிறக்கும்.

நன்றி.

இரா.பானுகுமார்,
சென்னை



 

விரைவில் தொடர்ந்து எழுதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

கி.காளைராசன்

unread,
Sep 15, 2013, 10:48:25 AM9/15/13
to mintamil, vallamai
வணக்கம்.


2013/9/15 Banukumar Rajendran <banuk...@gmail.com>


நல்ல கட்டுரை. எளிமையான சொற்களில் எழுதுகிறீர்கள் காளை ஐயா. தொடருங்கள்.
தங்களது அன்பிற்கு நன்றி ஐயா. 

சிறு யோசனை சொல்லலாமா?
வரவேற்கிறேன் ஐயா. 

கட்டுரையில் முக்கியமான கருத்துக்களுக்கு சான்றுக் காட்டி எழுதுங்கள்! பிறர் வாக்கியங்களையோ, வரலாற்று ஆவணங்களையோ
தரவுக் காட்டி எழுதினீர்கள் என்றால் இன்னும் சிறக்கும்.
ஆமாம் ஐயா,
தாங்கள் குறிப்பிட்டுள்ளது சரியே.

ஆனால் நான் இதுவரை குறிப்பிட்டுள்ள கருத்துகள் எல்லாம் எல்லோரும் அறிந்தனவே.  இது ஒரு preamble மட்டுமே.
இனிமேல்தான் இழைதொடர்பான செய்திகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

மேலும், ஏதேனும் ஒரு இடத்தில் தரவு தேவைப்படுகிறது என்று கேட்டால், அதற்கான தரவுக் குறிப்புகளை உடனே தரக் காத்திருக்கிறேன்.

கி.காளைராசன்

unread,
Sep 30, 2013, 6:45:24 AM9/30/13
to mintamil, thiruppuvanam, vallamai, amr

கண்டாங்கிபட்டி அருள்மிகு புலிக்கரை ஐயனார் துணை

மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் துணை

மதுரை அருள்மிகு திருஆப்புடையார் துணை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி துணை
அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் துணை
அருள்மிகு பழமுதிர் சோலையாண்டவர் துணை
அழகர்கோயில் அருள்மிகு இராக்கச்சியம்மன் துணை 

 

முன்தோன்றிய மூத்தகுடி


அறிவியல் அறிஞர்கள், ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினான் எனவும், பின்னர் அவன் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றான் என்வும் கூறுகின்றனர்.  சிந்துசமவெளி நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கின்றனர். 

ஆனால் தமிழர் தங்களது நாகரிகத்தைக்,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றிய மூத்த குடி

என்று பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழைப் போற்றுவோரும், தமிழைத் தூற்ற நினைப்போரும் இந்தப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல்வரிகளையே பெரிதும் எடுத்தாள்கின்றனர்.  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே மதுரையில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் தமிழரின் தற்பெருமைகளையும், இப்பெருமைகளை மேல்நாட்டார் ஏற்க இயலாத நிலையையும் காண்போம்.

 1) தமிழரின் பெருமைகள்

பண்டைய மனிதர்கள் பேசிய மொழிகளுள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ள மொழி தமிழாகும். தமிழுக்குச் செம்மொழிக்கான தகுதிகள் எனக் கூறப்படும் தொன்மை, தனித்தன்மை, பொதுப்பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத்தன்மை, பண்பாடு, இலக்கிய வளம், உயர்சிந்தனை அனைத்தும் உள்ளன.  தமிழின் மொழிவளத்தை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய நடுவண் அரசும் தமிழைச் செம்மொழி என அறிவித்துச் சிறப்புச் செய்துள்ளது. 

 தமிழ்ச் சங்கம்

எல்லா மொழிகளும் எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கூறுகின்றன.  ஆனால் தமிழின் தொன்மையான நூலாக விளங்கும் தொல்காப்பியமோ எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல்லாது பொருளுக்கும் இலக்கணம் கூறுகிறது.  

பதின்மூன்றாம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன், பிரெஞ்சுமொழியைப் பேணிப் பாதுகாக்க 1525-ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக் கழகத்தை ஏற்படுத்தினான்.  ஆனால் பண்டைய தமிழர், தமிழை வளமையானதொரு மொழியாக மாற்றியமைக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்கங்களை நிறுவியுள்ளனர்.   அகம்-புறம் பற்றிய தொகை நூல்களில் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினர்களாயிருந்த புலவர்களின் பாடல்களே இடம் பெற்றுள்ளன.  இதனால் தமிழ்ச் சங்கத்தின் பழமையையும் பெருமையையும் நன்கு புலனாகிறது.

 மொழிவளம்

சுமேரிய மொழியானது பண்டைத் தமிழ்மொழியே என்று திரு.கி.லோகநாதன் அவர்கள் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலமாக நிருவி வருகிறார்.  ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டில் உள்ள பழங்குடிகள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன.  ஆசுத்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் பேச்சு மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன.  கொரியமொழியின் சிறப்புடைச் சொற்கள் சில தமிழ்ச் சொற்களாக உள்ளன.  இலக்கியத் தரமிக்க சங்க காலப் புறநானூற்றுப் பாடல்கள் கிரக்க வீரயுகப் பாடல்களோடு ஒப்பிடத்தக்கனவாக உள்ளன.

கல்வெட்டுகள்

உலகில் கிடைக்கப்பெற்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற் பழமையான கல்வெட்டுகள் பல தமிழ் மொழியில் உள்ளன.  இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டுக்களுள், 60,000க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.  மற்ற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவானவையே. 


2)  தமிழின் தொன்மையை ஏற்கமுடியாத நிலை

உலக அறிஞர்கள், குறிப்பாக மேல்நாட்டு அறிஞர்கள், எந்த வரலாற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.  கண்டிப்பான நெறிமுறைகளின்படியும், விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்று, அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துத்தான் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் வலுயுறுத்துகின்றனர்.  “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி“ என்பது போன்ற தமிழ்ச் சங்கப் புலவர்களின் கூற்றுகள் யாவும் தற்பெருமையான சொற்களாகவே இந்த அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.  இச்சொற்களை மெய்ப்பிக்கத் தகுந்த சான்றாதாரங்கள் ஏதும்  கிடைக்கவில்லை.  ஆனால் ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளன.  எனவே கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஆப்பிரிக்காவில்தான் ஆதிமனிதன் தோன்றினான் என்கின்றனர் அறிஞர்கள்.

ஆப்பிரிக்காவும் இசுரேலும்

ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமா சேப்பியன் என்ற இன மனிதர் சுமார் 60,000 40,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கிப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று மேலைநாட்டு அறிஞர்கள் கருதுகின்றனர். 

ஆனால், சமீபத்தில் இசுரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), சுமார் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடற் படிமங்களைக் கண்டெடுத்துள்ளனர். 

ஆப்பிரிக்காவில்தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்பிரிக்கா எனவும் மேலைநாட்டு அறிஞர்களால் கூறப்பட்டு வந்த நிலையில், இசுரேல் நாட்டு விஞ்ஞானிகளின் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  இதன்மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இசுரேல் நாட்டில் கிடைத்தது போன்று, தமிழ்நாட்டிலும் மண்தோன்றாக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் பருப்பொருள் அடையாளமாக அவர்களது எலும்புகளோ அல்லது மட்பாண்டங்களோ கிடைக்கப் பெற்றால் மட்டுமே, தமிழர்களே ஆதிமனிதர்கள் என்பதை அறிவியல் அடிப்படையில் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும்.

மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரையிலும் இன்று வாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தனர் என்பது எவ்வகையிலும் கீழ்க்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்குக் கூடுகட்டும் அடையாளங்கட்கும், உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாயிருப்பபினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்என்கிறார் தேவநேயப் பாவாணர் (தமிழர் வரலாறு - முதல் பாகம், பக்கம் 5-6)

இரண்டாம் பகுதி 

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றிய மூத்த குடி

என்று பெருமையுடன் சங்ககாலப் புறப்பொருள் வெண்பாமாலை கூறிட, இதற்கான சான்றாதரங்கள் ஏதுமில்லாததால் இக்கருத்தினை ஏற்கமுடியாதென இன்றைய அறிஞர்கள் கூறிட, புறப்பொருள் வெண்பாமாலையை அறிவியில் அடிப்படையில் நிருவுவதற்கான பருப்பொருளைத் தேடும் இந்த ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம்பகுதி தொடர்கிறது.  “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே....“ என்று உள்ளதால், கல் என்றால் என்ன? அது தோன்றிய காலம் யாது? மண் என்றால் என்ன?  மண்தோன்றிய காலம் யாது? என்பன இங்கே தொகுத்துக் கூறப்படுகின்றன.

கல்லும் மண்ணும்

நாம் வாழும் பூமியானது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்தோன்றியது என்கின்றனர்  பாறையியல் (Petrology) அறிஞர்கள். பூமியில் மேலுள்ள பாறைகளைத் 1)தீப்பாறை, 2)உருமாறிய பாறை, 3)படிவுப் பாறை என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். பாறை அடுக்குகளின் அமைப்பு, கூட்டுப்பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பாறைகள் தோன்றிய காலத்தைக் கணக்கிடுகின்றனர்

கருங்கல் :

Inline image 1

படம் நன்றி www.naturalstonegranite.com

கருங்கலானது புவிப்பரப்புக்கு மேலே பரவலாகக் காணப்படும் தீப்பாறை வகைகளுள் ஒன்றாகும். இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சில இடங்களில் கிடைக்கும் இவ்வகைப் பாறைகள் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி உள்ளது.  கருங்கற்களின் வேதியியல் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம்.   இவ்வகைப்பாறைகள் பூமி தோன்றிய காலத்திலேயே அதாவது சுமார் 4.0 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளன எனக் கணக்கிடுகின்றனர்.

Inline image 2
மதுரைக்குத் தெற்கே உள்ள திருப்பரங்குன்றம் (படம் நன்றி www.maduraiwelcome.com)

Inline image 3

மதுரைக்கு வடக்கே உள்ள யானைமலை (படம் நன்றி www.trekearth.com)

மதுரைக்குத் தெற்கே உள்ள திருப்பரங்குன்றமலையும், மதுரைக்கு வடக்கே உள்ள யானைமலையும் இவ்வாறான கருங்கற் பாறைகளால் ஆனவை.   மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில் மலையின் அடிவாரம் கருங்கற் பாறைகளால் ஆனது.  எனவே இந்த மலைகள் சுமார் 4.0 பில்லியன் (4,00,00,00,000)ஆண்டுகளுக்கு முன் பூமி குளிர்ச்சியடையும் காலத்தில் தோன்றியவை ஆகும்.

களிப்பாறை (shale) :  களிப்பாறை என்பது மெல்லிய களிமண் துண்டுகளும், குவார்ட்சு, கேல்சைட்டு போன்ற பிற கனிமங்களின் சிறு துண்டுகளும் சேர்ந்து இறுகி உருவான ஒருவகையான படிவுப்பாறை (sedimentary rock) ஆகும். இதில் களிமண்ணும் பிற கனிமங்களும் வெவ்வேறு அளவினதாகக் கலந்து இருக்கும். களிப்பாறை பல சன்னமான இணை அடுக்குகள் அல்லது பாளங்களின் தொகுப்பாய், இடையில் விரிசல் கொண்டனவாய் இருக்கும். இவ்வடுக்குகளின் திண்மம் ஒரு செ.மீ அளவிற்கு இருக்கும்.  களிமண் துகள்களின் இணை அடுக்குகளின் பண்பின் காரணமாக இப்பாறைகள் சன்னமான இணை அடுக்குகளாய் உடையும் தன்மை உடையனவாக இருக்கும்.  இப்பாறைகளில் கலந்திருக்கும் பிற கனிமங்கள், தாதுக்கள் இவற்றைப் பொருத்துக் களிப்பாறைகள் வெவ்வேறு நிறத்தைப் பெரும்.  இவ்வாறு களிமண் பாறையாக மாறிடக் குறைந்தது சுமார் 10 மில்லியன்  (10,00,000) ஆண்டுகளாகும். 

Inline image 4

களிப்பாறை (படம் நன்றி www. shale ucrtoday.ucr.edu)


Inline image 1

படிமம்பாறை (படம் நன்றி www.sedimentary rock .edu.pe.ca)

மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில்மலையின் உட் பகுதியானது கடினமான கருங்கற்பாறைகளால் ஆனதாக இருக்கும். அந்த  மலையின்  மேற் பகுதியானது களிப்பாறையால்  ஒரு போர்வைபோல் போற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.  அழகர்கோயில் மலையில் மேலே உள்ள பழமுதிர்சோலை யாண்டவர் கோயில் உள்ள இடத்திலும், அருள்மிகு தீர்த்தக்கரை இராக்கச்சி  அம்மன் கோயில் உள்ள இடத்திலும் இம்மாதிரியான களிப்பாறைகளைக் காணலாம்.  எனவே அழகர்கோயில் மலையின் அடிப்பகுதி உருவாகி 4.0 பில்லியன் ஆண்டுகளும், அதன் மேற்பகுதி உருவாகி 10.0 மில்லியன் ஆண்டுகளும் ஆகியுள்ளன எனலாம்.

Inline image 9

மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில் மலை (படம் நன்றி www.tamilhindu.com )


மண்ணும் மணலும் 

மண் என்றால் அது களிமண்ணைக் குறிக்கும்.  

மண் அல்லாதது (மண் - அல் = மணல்) மணல் ஆகும்.

மணல் என்பது, உடைந்த பாறைத் துண்டுகளையும் கனிமத் துணிக்கைகளையும் கொண்ட, இயற்கையில் கிடைக்கும் மணியுருவான பொருள் ஆகும்.  நிலவியலாளர்களின் வரைவிலக்கணப்படி மணல் துணிக்கைகள் 0.0625 மில்லிமீட்டர்  தொடக்கம் 2 மில்லிமீட்டர்கள் வரையான விட்டங்களைக் கொண்டவை.   நிலவியலில் மணலுக்கு அடுத்துக் குறைவான அளவுள்ள துணிக்கைகளைக் கொண்டது வண்டல் ஆகும். வண்டல் துணிக்கைகளின் அளவு 0.0625 மிமீக்குக் கீழ் 0.004 மிமீ வரை என வரையறுக்கப்படுகின்றது

இந்திய மண்ணை, அதன் வளத்தன்மையின் அடிப்படையில் செம்மண், மணற்பாங்கான மண், மணற்குறு மண், குறு மண், களி மண், கரிசல்மண், செம்புறை மண், வண்டல் மண் அல்லது அடை மண் என எட்டுவகையாகப் பிரிக்கின்றனர்.

மண்மலைகள் : மதுரையின் தெற்கே உள்ள பசுமலையும், திருப்பரங்குன்றத்தில் உள்ள கூடுதட்டிப்பரம்புமலையும், மதுரையின் மேற்கே உள்ள நாகமலையும் மண்மலைகளாகக் காட்சியளிக்கின்றன.  

நாகமலை : மதுரையின் மேற்கே உள்ள நாகமலை, மதுரையின் தெற்கே உள்ள பசுமலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள கூடுதட்டிப் பரம்பு மலை இவைகள் மண்மலைகளாகும்.  இவற்றின் உள்ளே களிப்பாறைகள் இருக்கின்றன.  இவற்றின் மேலே மணல் படிந்துள்ளன.   இம்மலைகளின் உள்ளே களிப்பாறைகள் படிந்துள்ளதால் இம்மலைகள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளன என அறியலாம்.

Inline image 6

மதுரையின் மேற்கே உள்ள நாகமலை (படத்தில் தொலைவில் நீண்டு தெரியும் மண் மலையே நாகமலையாகும்)படம் நன்றி kaveri.org 


Inline image 7

திருப்பரங்குன்றம் கூடுதட்டிப்பரம்பு மலை (படம் நன்றி www.skyscrapercity.com)

வேறுபாடு : மண்ணிலிருந்துநைட்ரஜன்பாஸ்பரஸ்பொட்டாசியம்சுண்ணாம்புமக்னீசியம்கந்தகம்,இரும்புமாங்கனீசுபோரான்தாமிரம்துத்தநாகம்குளோரின்மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறதுபாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது பாறைகளின் வேதியல் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது.   இதனால் கல்லிலிருந்துதான் மணல் தோன்றியது என்பதை அறிவியல் அடிப்படையில் நிருவ முடியவில்லை.  


1) அழகர்கோயில்மலையின் மேற்பகுதியில் களிப்பாறைகள் உருவாகக் காரணமான களிமண் எப்படி அங்கே வந்தது?

2) அருகே பெரிய மலைகள் ஏதும் இல்லாதபோது, நாகமலை, பசுமலை, கூடுதட்டிப் பரம்பு மலை என்ற மிகப்பெரிய மண்மலைகள் எவ்வாறு தோன்றின?

3) கல்லிலிருந்துதான் மணல் தோன்றியது என்றால், கல்மலைகளில் உள்ள வேதிப்பொருளும் அந்த மலைகளின் அருகில் உள்ள மண்ணில் உள்ள வேதிப்பொருளும் ஏன் பெருமளவில் வேறுபடுகின்றன?

கூடுதட்டிப்பரம்பு மலை.jpg
Golden-Persa-Granite-Close-up-1-15-2011.jpg
yanaimalai.jpg
nagamalai.jpg
Tirupparankundram.jpg
sedimentary rock .edu.pe.ca.jpg
alagarkovil.jpg
shale ucrtoday.ucr.edu.jpg

கி.காளைராசன்

unread,
Nov 17, 2013, 3:52:50 AM11/17/13
to mintamil, thiruppuvanam, vallamai, amr, chaku...@yahoo.co.in
வணக்கம்.

கண்டாங்கிபட்டி அருள்மிகு புலிக்கரை ஐயனார் துணை

மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் துணை

மதுரை அருள்மிகு திருஆப்புடையார் துணை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி துணை
அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் துணை
அருள்மிகு பழமுதிர் சோலையாண்டவர் துணை
அழகர்கோயில் அருள்மிகு இராக்கச்சியம்மன் துணை 

 

முன்தோன்றிய மூத்தகுடி


அறிவியல் அறிஞர்கள், ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினான் எனவும், பின்னர் அவன் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றான் என்வும் கூறுகின்றனர்.  சிந்துசமவெளி நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கின்றனர். 

ஆனால் தமிழர் தங்களது நாகரிகத்தைக்,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றிய மூத்த குடி

என்று பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழைப் போற்றுவோரும், தமிழைத் தூற்ற நினைப்போரும் இந்தப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல்வரிகளையே பெரிதும் எடுத்தாள்கின்றனர்.  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே மதுரையில் மக்கள் வாழ்ந்துள்ளனரா? என்பதை அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் தமிழரின் தற்பெருமைகளையும், இப்பெருமைகளை மேல்நாட்டார் ஏற்க இயலாத நிலையையும் காண்போம்.

 1) தமிழரின் பெருமைகள்

பண்டைய மனிதர்கள் பேசிய மொழிகளுள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ள மொழி தமிழாகும். தமிழுக்குச் செம்மொழிக்கான தகுதிகள் எனக் கூறப்படும் தொன்மை, தனித்தன்மை, பொதுப்பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத்தன்மை, பண்பாடு, இலக்கிய வளம், உயர்சிந்தனை அனைத்தும் உள்ளன.  தமிழின் மொழிவளத்தை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய நடுவண் அரசும் தமிழைச் செம்மொழி என அறிவித்துச் சிறப்புச் செய்துள்ளது. 

 தமிழ்ச் சங்கம்

எல்லா மொழிகளும் எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கூறுகின்றன.  ஆனால் தமிழின் தொன்மையான நூலாக விளங்கும் தொல்காப்பியமோ எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல்லாது பொருளுக்கும் இலக்கணம் கூறுகிறது.  

பதின்மூன்றாம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன், பிரெஞ்சுமொழியைப் பேணிப் பாதுகாக்க 1525-ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக் கழகத்தை ஏற்படுத்தினான்.  ஆனால் பண்டைய தமிழர், தமிழை வளமையானதொரு மொழியாக மாற்றியமைக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்கங்களை நிறுவியுள்ளனர்.   அகம்-புறம் பற்றிய தொகை நூல்களில் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினர்களாயிருந்த புலவர்களின் பாடல்களே இடம் பெற்றுள்ளன.  இதனால் தமிழ்ச் சங்கத்தின் பழமையையும் பெருமையையும் நன்கு புலனாகிறது.

 மொழிவளம்

சுமேரிய மொழியானது பண்டைத் தமிழ்மொழியே என்று திரு.கி.லோகநாதன் அவர்கள் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலமாக நிருவி வருகிறார்.  ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டில் உள்ள பழங்குடிகள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன.  ஆசுத்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் பேச்சு மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன.  கொரியமொழியின் சிறப்புடைச் சொற்கள் சில தமிழ்ச் சொற்களாக உள்ளன.  இலக்கியத் தரமிக்க சங்க காலப் புறநானூற்றுப் பாடல்கள் கிரக்க வீரயுகப் பாடல்களோடு ஒப்பிடத்தக்கனவாக உள்ளன.

கல்வெட்டுகள்

உலகில் கிடைக்கப்பெற்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற் பழமையான கல்வெட்டுகள் பல தமிழ் மொழியில் உள்ளன.  இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டுக்களுள், 60,000க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.  மற்ற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவானவையே. 


2)  தமிழின் தொன்மையை ஏற்கமுடியாத நிலை

உலக அறிஞர்கள், குறிப்பாக மேல்நாட்டு அறிஞர்கள், எந்த வரலாற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.  கண்டிப்பான நெறிமுறைகளின்படியும், விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்று, அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துத்தான் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் வலுயுறுத்துகின்றனர்.  “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி“ என்பது போன்ற தமிழ்ச் சங்கப் புலவர்களின் கூற்றுகள் யாவும் தற்பெருமையான சொற்களாகவே இந்த அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.  இச்சொற்களை மெய்ப்பிக்கத் தகுந்த சான்றாதாரங்கள் ஏதும்  கிடைக்கவில்லை.  ஆனால் ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளன.  எனவே கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஆப்பிரிக்காவில்தான் ஆதிமனிதன் தோன்றினான் என்கின்றனர் அறிஞர்கள்.

ஆப்பிரிக்காவும் இசுரேலும்

ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமா சேப்பியன் என்ற இன மனிதர் சுமார் 60,000 40,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கிப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று மேலைநாட்டு அறிஞர்கள் கருதுகின்றனர். 

ஆனால், சமீபத்தில் இசுரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), சுமார் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடற் படிமங்களைக் கண்டெடுத்துள்ளனர். 

ஆப்பிரிக்காவில்தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்பிரிக்கா எனவும் மேலைநாட்டு அறிஞர்களால் கூறப்பட்டு வந்த நிலையில், இசுரேல் நாட்டு விஞ்ஞானிகளின் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  இதன்மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இசுரேல் நாட்டில் கிடைத்தது போன்று, தமிழ்நாட்டிலும் மண்தோன்றாக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் பருப்பொருள் அடையாளமாக அவர்களது எலும்புகளோ அல்லது மட்பாண்டங்களோ கிடைக்கப் பெற்றால் மட்டுமே, தமிழர்களே ஆதிமனிதர்கள் என்பதை அறிவியல் அடிப்படையில் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும்.

மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரையிலும் இன்று வாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தனர் என்பது எவ்வகையிலும் கீழ்க்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்குக் கூடுகட்டும் அடையாளங்கட்கும், உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாக இருப்பபினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்என்கிறார் தேவநேயப் பாவாணர் (தமிழர் வரலாறு - முதல் பாகம், பக்கம் 5-6)

இரண்டாம் பகுதி 

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றிய மூத்த குடி

என்று பெருமையுடன் சங்ககாலப் புறப்பொருள் வெண்பாமாலை கூறிட, இதற்கான சான்றாதரங்கள் ஏதுமில்லாததால் இக்கருத்தினை ஏற்கமுடியாதென இன்றைய அறிஞர்கள் கூறிட, புறப்பொருள் வெண்பாமாலையை அறிவியில் அடிப்படையில் நிருவுவதற்கான பருப்பொருளைத் தேடும் இந்த ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம்பகுதி தொடர்கிறது.  “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே....“ என்று உள்ளதால், கல் என்றால் என்ன? அது தோன்றிய காலம் யாது? மண் என்றால் என்ன?  மண்தோன்றிய காலம் யாது? என்பன இங்கே தொகுத்துக் கூறப்படுகின்றன.

கல்லும் மண்ணும்

நாம் வாழும் பூமியானது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்தோன்றியது என்கின்றனர்  பாறையியல் (Petrology) அறிஞர்கள். பூமியில் மேலுள்ள பாறைகளைத் 1)தீப்பாறை, 2)உருமாறிய பாறை, 3)படிவுப் பாறை என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். பாறை அடுக்குகளின் அமைப்பு, கூட்டுப்பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பாறைகள் தோன்றிய காலத்தைக் கணக்கிடுகின்றனர்

கருங்கல் :

Inline image 1

படம் நன்றி www.naturalstonegranite.com

கருங்கலானது புவிப்பரப்புக்கு மேலே பரவலாகக் காணப்படும் தீப்பாறை வகைகளுள் ஒன்றாகும். இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சில இடங்களில் கிடைக்கும் இவ்வகைப் பாறைகள் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி உள்ளது.  கருங்கற்களின் வேதியியல் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம்.   இவ்வகைப்பாறைகள் பூமி தோன்றிய காலத்திலேயே அதாவது சுமார் 4.0 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளன எனக் கணக்கிடுகின்றனர்.

Inline image 2
மதுரைக்குத் தெற்கே உள்ள திருப்பரங்குன்றம் (படம் நன்றி www.maduraiwelcome.com)

Inline image 3

மதுரைக்கு வடக்கே உள்ள யானைமலை (படம் நன்றி www.trekearth.com)

மதுரைக்குத் தெற்கே உள்ள திருப்பரங்குன்றமலையும், மதுரைக்கு வடக்கே உள்ள யானைமலையும் இவ்வாறான கருங்கற் பாறைகளால் ஆனவை.   மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில் மலையின் அடிவாரம் கருங்கற் பாறைகளால் ஆனது.  எனவே இந்த மலைகள் சுமார் 4.0 பில்லியன் (4,00,00,00,000)ஆண்டுகளுக்கு முன் பூமி குளிர்ச்சியடையும் காலத்தில் தோன்றியவை ஆகும்.

களிப்பாறை (shale) :  களிப்பாறை என்பது மெல்லிய களிமண் துண்டுகளும், குவார்ட்சு, கேல்சைட்டு போன்ற பிற கனிமங்களின் சிறு துண்டுகளும் சேர்ந்து இறுகி உருவான ஒருவகையான படிவுப்பாறை (sedimentary rock) ஆகும். இதில் களிமண்ணும் பிற கனிமங்களும் வெவ்வேறு அளவினதாகக் கலந்து இருக்கும். களிப்பாறை பல சன்னமான இணை அடுக்குகள் அல்லது பாளங்களின் தொகுப்பாய், இடையில் விரிசல் கொண்டனவாய் இருக்கும். இவ்வடுக்குகளின் திண்மம் ஒரு செ.மீ அளவிற்கு இருக்கும்.  களிமண் துகள்களின் இணை அடுக்குகளின் பண்பின் காரணமாக இப்பாறைகள் சன்னமான இணை அடுக்குகளாய் உடையும் தன்மை உடையனவாக இருக்கும்.  இப்பாறைகளில் கலந்திருக்கும் பிற கனிமங்கள், தாதுக்கள் இவற்றைப் பொருத்துக் களிப்பாறைகள் வெவ்வேறு நிறத்தைப் பெரும்.  இவ்வாறு களிமண்ணானது பாறையாக மாறிடக் குறைந்தது சுமார் 10 மில்லியன்  (10,00,000) ஆண்டுகளாகும். 

Inline image 4

களிப்பாறை (படம் நன்றி www. shale ucrtoday.ucr.edu)


Inline image 1

படிமம்பாறை (படம் நன்றி www.sedimentary rock .edu.pe.ca)

மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில்மலையின் மேற் பகுதியானது களிப்பாறையால்  ஒரு போர்வைபோல் போற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.  அழகர்கோயில் மலையில் உள்ள பழமுதிர்சோலை யாண்டவர் கோயில் உள்ள இடத்திலும், அருள்மிகு தீர்த்தக்கரை இராக்கச்சி  அம்மன் கோயில் உள்ள இடத்திலும் இம்மாதிரியான களிப்பாறைகளைக் காணலாம்.  எனவே அழகர்கோயில் மலையின் அடிப்பகுதி உருவாகி 4.0 பில்லியன் ஆண்டுகளும், அதன் மேற்பகுதி உருவாகி 10.0 மில்லியன் ஆண்டுகளும் மேலாகியுள்ளது எனலாம்.

Inline image 9

மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில் மலை (படம் நன்றி www.tamilhindu.com )


மண்ணும் மணலும் 

மண் என்றால் அது களிமண்ணைக் குறிக்கும்.  

மண் அல்லாதது (மண் - அல் = மணல்) மணல் ஆகும்.

மணல் என்பதுஉடைந்த பாறைத் துண்டுகளையும் கனிமத் துணிக்கைகளையும் கொண்டஇயற்கையில் கிடைக்கும் மணியுருவான பொருள் ஆகும்.  நிலவியலாளர்களின் வரைவிலக்கணப்படி மணல் துணிக்கைகள் 0.0625 மில்லிமீட்டர்  தொடக்கம் 2 மில்லிமீட்டர்கள் வரையான விட்டங்களைக் கொண்டவை.   நிலவியலில் மணலுக்கு அடுத்துக் குறைவான அளவுள்ள துணிக்கைகளைக் கொண்டது வண்டல் ஆகும். வண்டல் துணிக்கைகளின் அளவு 0.0625 மிமீக்குக் கீழ் 0.004 மிமீ வரை என வரையறுக்கப்படுகின்றது

இந்திய மண்ணை, அதன் வளத்தன்மையின் அடிப்படையில் செம்மண், மணற்பாங்கான மண், மணற்குறு மண், குறு மண், களி மண், கரிசல்மண், செம்புறை மண், வண்டல் மண் அல்லது அடை மண் என எட்டுவகையாகப் பிரிக்கின்றனர்.

மண்மலைகள் : மதுரையின் தெற்கே உள்ள பசுமலையும், திருப்பரங்குன்றத்தில் உள்ள கூடுதட்டிப்பரம்புமலையும், மதுரையின் மேற்கே உள்ள நாகமலையும் மண்மலைகளாகக் காட்சியளிக்கின்றன.  

நாகமலை : மதுரையின் மேற்கே உள்ள நாகமலை, மதுரையின் தெற்கே உள்ள பசுமலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள கூடுதட்டிப் பரம்பு மலை இவைகள் மண்மலைகளாகும்.  இவற்றின் உள்ளே களிப்பாறைகள் இருக்கின்றன.  இவற்றின் மேலே மணல் படிந்துள்ளன.   இம்மலைகளின் உள்ளே களிப்பாறைகள் படிந்துள்ளதால் இம்மலைகள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளன என அறியலாம்.

Inline image 6

மதுரையின் மேற்கே உள்ள நாகமலை (படத்தில் தொலைவில் நீண்டு தெரியும் மண் மலையே நாகமலையாகும்)படம் நன்றி kaveri.org 


Inline image 7

திருப்பரங்குன்றம் கூடுதட்டிப்பரம்பு மலை (படம் நன்றி www.skyscrapercity.com)

வேறுபாடு : மண்ணிலிருந்துநைட்ரஜன்பாஸ்பரஸ்பொட்டாசியம்சுண்ணாம்புமக்னீசியம்கந்தகம்,இரும்புமாங்கனீசுபோரான்தாமிரம்துத்தநாகம்குளோரின்மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறதுபாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது பாறைகளின் வேதியல் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது.   இதனால் கல்லிலிருந்துதான் மணல் தோன்றியது என்பதை அறிவியல் அடிப்படையில் நிருவ முடியவில்லை.  

1) அருகே பெரிய மலைகள் ஏதும் இல்லாதபோது, நாகமலை, பசுமலை, கூடுதட்டிப் பரம்பு மலை என்ற மிகப்பெரிய மண்மலைகள் எவ்வாறு தோன்றின?

2) இந்த மண்மலைகளின் உள்ளேயுள்ள களிப்பாறைகள் தோன்றக் காரணமான களிமண் இங்கே எப்படி வந்தது? 

3) கருங்கற்கல்லில் இருந்துதான் மணல் தோன்றியது என்றால், கல்மலைகளில் உள்ள வேதிப்பொருளும் இந்த மண் மலைகளின்  உள்ள வேதிப்பொருளும் ஏன் பெருமளவில் வேறுபடுகின்றன?

மூன்றாம் பகுதி

இப்பகுதியில் 
நாகமலை, பசுமலை, கூடுதட்டிப் பரம்பு மலை என்ற மூன்று மண் மலைகளும் தோன்றுவதற்குக் காரணமான களிமண் அங்கே எப்படி வந்தது என்பதைக் காண்போம்.

நாகமலையின் உடற்கூறு.
நாகலையானது கிழக்கு மேற்காக அமைந்துள்ளது.
கிழக்குப் பகுதி தலைபோன்றும், மேற்குப் பகுதி வால்போன்றும் அமைந்துள்ளது.
இது ஒரு மண்மலை.  
இதனுள்ளே களிப்பாறைகள் உள்ளன.
இதில் துத்தநாகம் அதிகமாக உள்ளது.  
துத்த“நாக“ம் அதிகமாக உள்ள காரணத்தினால் இதற்கு “நாக“மலை என்ற பெயர் உண்டானது என்பர்.  
இந்தமலையிலிருந்து வரும் தண்ணீர் “துவர்“ப்பாக இருக்கும்.  
இந்தத் தண்ணீர் சேரும் கண்மாய்க்குத் “துவரி“மான் கண்மாய் என்று பெயர்.

மலையின் நீளம் சுமார் 30 கி.மீ.
இம்மலை ஓரே சீரான சாய்வு உயரத்தையும் பருமனையும் கொண்டுள்ளது.

Inline image 1
(நன்றி படம் - ஐயா நூ. த. லோகசுந்தரம் அவர்கள்) 

இந்த மண் மலையானது 
1) கற்பாறைகள் தேய்ந்து மண்மலையாக உருவாகியிருக்க வேண்டும்.
அல்லது
2) வைகை ஆற்றினால் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து அடித்துவரப்பட்ட மண்ணால் இந்த மண்மலை உருவாகியிருக்க வேண்டும்.
அல்லது
3) வேறு எங்கோ இருந்த மண்ணும் மணலும் அடித்துவரப்பட்டு இங்கே ஒரு மலை உருவாகியிருக்க வேண்டும்.

அறிவியல் அடிப்படையில் இம்மூன்று காரணிகளில் ஏதேனும் ஒன்றினால்தான் இவ்வாறான மண்மலை (நாகமலை) உருவாகியிருக்க வேண்டும்.
இக்காரணிகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.

1)  30கி.மீ. நீளமுள்ள நாகமலையில் அருகில் இதைவிடப் பெரிய கற்களால் ஆன மலைகள் ஏதும் இல்லை.  
எனவே பெரிய கற்பாறைகள் (கல்மலைகள்) தேய்ந்து இந்த மண்மலை உருவாகவில்லை என்பது உறுதியாகிறது.

2) வைகை ஆற்றினால் அடித்துவரப்பட்ட மண்ணால் இம்மலை உருவாகியிருந்தால், 
மலையிலிருந்து அடித்துவந்த மண்ணை இங்கே விட்டுவிட்டுத் தண்ணீர் மட்டும் இதனைக் கடந்து சென்றிருக்க வேண்டும்.
அடித்துவரப்பட்ட மண்ணானது முட்டிமோதித் திட்டாக மாறிடத் தடுப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும்.
மேலும் இந்த நாகமலையும், வைகையாறு போல் வளைந்து நெளிந்து இருக்க வேண்டும்.  
வளைந்து நெளிந்து செல்லும் ஓர் ஆற்றினால் 30 கி.மீ. நீளத்திற்கு நேர்கோடு போன்ற ஒரு மண்மலையை உருவாக்க முடியாது.
எனவே, இந்தநாகமலையானது வைகை ஆற்று மண்ணால் உருவாகவில்லை என்பதும் உறுதியாகிறது.

மேற்கண்ட இரண்டு காரணிகளும் நாகமலை தோன்றியதற்குப் பொறுந்திவரவில்லை.
3) எனவே அருகில் உள்ள கடலிலிருந்து மண் அடித்துவரப்பட்டு இங்கே குவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கடல்தண்ணீர் அடித்து வரும்போது உண்டான களிமண்ணும் இங்கே குவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு மிகப்பெரிய மண்மலை உருவாகும் அளவிற்குக் கடல்நீரானது மதுரைக்குள் புகுந்திருக்க வேண்டும்!

“மலிதிரை ஊர்ந்து தன் மண்  கடல் வவ்வலின்
மெலிவு இன்றி மேல் சென்று  மேவார் நாடு இடம்பட
புலியோடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர் தென்னவன்“
- என்கிறது கலித்தொகை.

“வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!“
- என்கிறது சிலப்பதிகாரம் காடுகாண்காதை 17 -22

மேற்கண்ட சிலப்பதிகார வரிகளாலும் கலித்தொகைப் பாடலாலும் பாண்டியநாட்டினைக் கடல்கொண்டதை அறியமுடிகிறது.  இவ்வாறு பாண்டிய நாட்டினைக் கடல் வவ்விய காலத்திலேதான் கடல்அலைகளால் அரித்துவரப்பட்ட மண்ணானது மதுரையில் மேடாகச் சேர்ந்து மண்(நாக)மலையாகத் தோற்றுவித்திருக்க வேண்டும்.

கலித்தொகையும், சிலப்பதிகாரமும் கூறும் இக்கூற்றையே திருவிளையாடற் புராணமும் திருப்பூவணப்புராணமும் கூறுகின்றன.
இக்கூற்றை அறிவியல் அடிப்படையில் காண்போம்.
nagamalai துவரிமான்.JPG
nagamalai.jpg
கூடுதட்டிப்பரம்பு மலை.jpg
sedimentary rock .edu.pe.ca.jpg
shale ucrtoday.ucr.edu.jpg
Tirupparankundram.jpg
alagarkovil.jpg
yanaimalai.jpg
Golden-Persa-Granite-Close-up-1-15-2011.jpg

வேந்தன் அரசு

unread,
Nov 17, 2013, 7:58:26 AM11/17/13
to vallamai, mintamil, thiruppuvanam, amr, chaku...@yahoo.co.in
>>கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

என் விளக்கம்: கல் எனும் சொல் தோன்றி மண் எனும் சொல் தோன்றாத மொழி வளரும் காலத்தே தோன்றியவர் என கொள்ளலாம்

தமிழில் ககரத்தில் தோன்றிய சொற்கள்தான் அதிகம். அதனல் கல் எனும் ககரத்தின் அடிப்படையில் தோன்றிய சொல் மண் எனும் சொல்லை விட மூத்ததாக இருக்கும்.
ஆதிமனிதன்  கல்லைத்தான்  முதன் முதலில் பயன்படுத்தி இருக்கிறான் என்பதற்காகத்தானே கற்காலம் என்கிறோம்.

கல் சில் ஆகி சிலா ஆச்சு.
இரண்டு கல்கல், கல்கள் ஆகி பன்மை குறிக்கும் இறுதியாக கள் ஆனது

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Innamburan S.Soundararajan

unread,
Nov 17, 2013, 1:47:17 PM11/17/13
to vall...@googlegroups.com, mintamil, Kalairajan Krishnan, Subashini Tremmel, Nagarajan Vadivel, N. Kannan, Innamburan Innamburan
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மவுனமாக இந்த இழையை நான் படித்து வருகிறேன், புலனடக்கத்துடன். காளைராஜனுடைய பீடிகையே இத்தனை திசைமாறி சுனாமிகளை உருவாக்குமானால், அவருடைய ஆய்வு என்ன பாடுபடும் என்ற அச்சம் மேலோங்கியது. அதனால் தான் இரண்டாவது பகுதிக்குக் காத்திருந்தேன். கட்டுரையின் நோக்கம் பாராட்டுக்கு உரியது. 'கண்டிப்பான நெறிமுறைகளின்படியும்விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்று, அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துத்தான் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் வலுயுறுத்துகின்றனர்.' என்பதும் நியாயம் தானே. கல் தோன்றும் முன், மண் தோன்றும் முன் குடி தோன்றுவது இலக்கிய சுவை அளித்தாலும், சாத்தியக்கூறு கேள்விக்குறியே. குறை காண்பது என் இலக்கு இல்லை என்பதால், பொதுப்படையாக சொல்லப்பட்ட விஷயங்களை நான் சாடவில்லை. மூன்று விஷயங்களை மட்டும் சொல்லி தப்பித்துக்கொள்கிறேன்.

1. தொல்காப்பியம் மட்டும் தான் பொருள் இலக்கணம் கூறுகிறது என்பது சரியல்ல. வடமொழி/கிரேக்கம்/அரபி இலக்கணங்களை நோக்கவும்.
2. கல்வெட்டுக்கள்: கிட்டத்தட்ட 60 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வரைந்த சித்திரங்களை பற்றி எழுதியிருக்கிறேன், மின் தமிழில்.
3. திரு.லோகநாதன் அவர்களுக்கு Winwood  Reade :The Martyrdom of Man என்ற நூலை பற்றி பல மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன் இணையதளத்தில் கிடைக்கும் அந்த பழமையான நூல் இங்கு மிகவும் உதவும்.

காளைராஜனுக்கு என் வாழ்த்துக்கள்,
நன்றி, வணக்கம்.



2013/11/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

கி.காளைராசன்

unread,
Nov 17, 2013, 6:15:04 PM11/17/13
to mintamil, vallamai, thiruppuvanam, amr, chaku...@yahoo.co.in
வணக்கம் ஐயா.

2013/11/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
என் விளக்கம்: கல் எனும் சொல் தோன்றி மண் எனும் சொல் தோன்றாத மொழி வளரும் காலத்தே தோன்றியவர் என கொள்ளலாம்
கல் தோன்றியதற்குப் பின்னர்தான் உலகத்தில் உள்ள எல்லாமும் தோன்றியுள்ளன.  கல் தோன்றிய பின்னரே கல் என்னும் சொல் தோன்றியிருக்க வேண்டும்.

கல் தோன்றிய பின்னரே மண் தோன்றியுள்ளது.
மண் தோன்றிய பின்னர்தான்,  மண் என்ற பெயர்ச் சொல்லும் உருவாகியிருக்க வேண்டும்.

எனவே கல் என்ற சொல் தோன்றிய பின்னரே மண் என்ற சொல் தோன்றியிருக்க வேண்டும்.


தமிழில் ககரத்தில் தோன்றிய சொற்கள்தான் அதிகம். அதனல் கல் எனும் ககரத்தின் அடிப்படையில் தோன்றிய சொல் மண் எனும் சொல்லை விட மூத்ததாக இருக்கும்.
நிச்சயமாக.
மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழர், மண்ணைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.
அவர்கள் கல்லை மட்டுமே பார்த்திருப்பர், அறிந்திருப்பர்.
ஏனென்றால் அவர்களது காலத்தில்தான் மண் என்ற ஒரு பொருளே இல்லையே!
 
எவ்வாறு கல் தோன்றிய பின் மண் தோன்றியதோ,
அதேபோல் கல் என்ற சொல் தோன்றிய பின்னரே மண் என்ற சொல்லும் தோன்றியிருக்கும்.  எனவே நீங்கள் குறிப்பிடுவதுபோல் கல் என்ற சொல் மண் என்ற சொல்லைவிட மூத்ததாகவே இருக்கும்.



ஆதிமனிதன்  கல்லைத்தான்  முதன் முதலில் பயன்படுத்தி இருக்கிறான் என்பதற்காகத்தானே கற்காலம் என்கிறோம்.
கல்மட்டுமே தோன்றியிருந்த காலத்திலேயே இருந்தோர், கல்லையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உண்டு.

ஆனால், மண் தோன்றுவதற்கு முன்பிருந்த தமிழர் “வாளொடு தோன்றியிருந்தனர்“ என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.
எனவே தாங்கள் குறிப்பிடும் ஆதிமனிதன் பற்றிய கருத்து புறப்பொருள் வெண்பாமலைக்குப் பொறுந்தாத கூற்று.
தங்களது கருத்து தவறாகவும் இருக்கலாம். 

ஏழுகடலும் ஒன்றாய்ப் பொங்கிப் பிரளயம் ஒன்று இன்று தோன்றினால்,
பிரளயத்திற்குப் பின் பிழைத்திருப்போர் எல்லாம் கற்கால மனிதர்களாகவே வாழமுடியும்.
எனவே தங்களது கருத்து உண்மையாவும் இருக்கலாம்.
 
அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Nov 17, 2013, 6:31:21 PM11/17/13
to Innamburan S.Soundararajan, vall...@googlegroups.com, mintamil, Subashini Tremmel, Nagarajan Vadivel, N. Kannan, Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

தங்களது பின்னுட்டம் மகிழ்ச்சி யளிக்கிறது ஐயா.

2013/11/18 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மவுனமாக இந்த இழையை நான் படித்து வருகிறேன், புலனடக்கத்துடன். காளைராஜனுடைய பீடிகையே இத்தனை திசைமாறி சுனாமிகளை உருவாக்குமானால், அவருடைய ஆய்வு என்ன பாடுபடும் என்ற அச்சம் மேலோங்கியது.
சுனாமியைப் பற்றி எழுதினால்,
கருத்து அலைகள் வந்து ஆர்ப்பரிக்கத்தானே செய்யும்.

அதனால் தான் இரண்டாவது பகுதிக்குக் காத்திருந்தேன். கட்டுரையின் நோக்கம் பாராட்டுக்கு உரியது.
மிக்க நன்றி ஐயா.
ஒரு சங்கப் புலவனின் சொல்லிலும் பொருளிலும் குற்றம் கண்டு இன்றைய தமிழ் அறிஞர்கள் பேசிவருவதால் உண்டான ஆய்வு இது.
 
'கண்டிப்பான நெறிமுறைகளின்படியும்விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்று, அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துத்தான் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் வலுயுறுத்துகின்றனர்.' என்பதும் நியாயம் தானே.
நியாம்தான். ஆனால் இவர்கள் கற்றது கைமண் அளவு.
சங்கப் புலவர்கள் கற்றதோ நாகமலையின் மண் அளவு.

கல் தோன்றி, மண் தோன்றும் முன் குடி தோன்றுவது இலக்கிய சுவை அளித்தாலும், சாத்தியக்கூறு கேள்விக்குறியே.
சாத்தியம் என அறிவியில் ஆதாரங்களுடன் நிறுவுவதே இந்த ஆய்வின் நோக்கம் ஐயா.
 
குறை காண்பது என் இலக்கு இல்லை என்பதால், பொதுப்படையாக சொல்லப்பட்ட விஷயங்களை நான் சாடவில்லை. மூன்று விஷயங்களை மட்டும் சொல்லி தப்பித்துக்கொள்கிறேன்.
உடன் இருந்து,
இந்த இழையில் பிழையேதும் தென்பட்டால்,ஒரு ஆடிட்டர் போல் விருப்புவெறுப்பு இன்றிச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
 

1. தொல்காப்பியம் மட்டும் தான் பொருள் இலக்கணம் கூறுகிறது என்பது சரியல்ல. வடமொழி/கிரேக்கம்/அரபி இலக்கணங்களை நோக்கவும்.
கிரேக்கம், அரபி பற்றி அறியேன்.
வடமொழியும் அறியேன்.
ஆனால் வடமொழியின் பொருள் இலக்கணமானது தமிழிலக்கணத்தின் நகல் என்று ஓர் அறிஞர் என்னிடம் கூறியுள்ளார்.  இதுபற்றி இங்கே கருத்துக் கூறினால், இழையின் தலைப்பிலிருந்து விலகிச் சென்று விடுவோம்.  பிறிதொரு இழையில் விரிவாக விவாதித்திடுவோம்.
 
 
2. கல்வெட்டுக்கள்: கிட்டத்தட்ட 60 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வரைந்த சித்திரங்களை பற்றி எழுதியிருக்கிறேன், மின் தமிழில்.
3. திரு.லோகநாதன் அவர்களுக்கு Winwood  Reade :The Martyrdom of Man என்ற நூலை பற்றி பல மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன் இணையதளத்தில் கிடைக்கும் அந்த பழமையான நூல் இங்கு மிகவும் உதவும்.

ஐயா லோகநாதன் அவர்கள் இதற்கு உதவிட வேண்டும்.
 
காளைராஜனுக்கு என் வாழ்த்துக்கள்,
நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

K. Loganathan

unread,
Nov 17, 2013, 7:40:45 PM11/17/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திரு வேந்தன் அரசு அவர்களே

தங்கள் கூற்று

//
கல் சில் ஆகி சிலா ஆச்சு.
இரண்டு கல்கல், கல்கள் ஆகி பன்மை குறிக்கும் இறுதியாக கள் ஆனது
//

இது பொருந்துவதாகப் படவில்லை, சுமேருத் தமிழை அகப்படுத்தி சொல்லாய்வுகள் செய்யாததால் வரும் பிழை என்று நினைக்கின்றேன்

சுமேரு தமிழில் 'kal(கல்) உம் இருக்கின்றது , அஃறினை பன்மை குறிப்பின்  gal(கள்)உம்  இருக்கின்றது. ஆக இந்த இரண்டு சொற்களின் வேர்கள் வேறு. gal(கள்) என்பது 'பெரியது, தொகுதி' என்று  பொருள்படும் இன்றும் இது, 'கணம். கள்ளர்' என்றெல்லாம் வழங்குகின்றது. 'கள்ப்பாளர். களப்பிரர்' என்ற சொற்களும் 'உய்ரந்தது பெரிய' என்ற கருத்தின் 'கள்' என்ற வேரிலிருந்து வந்திருக்கலாம்

சுமேருத் தமிழில் 'kal" (கல்) என்னும் சொல், கல்லு( stone)  என்ற பொருளிலும் 'கற்றல்' என்ற பொருளிலும் விளங்குகின்றது. இந்த மிகப் பழமையான சொல், வடிவிலும் பொருளிலும் இன்றைய தமிழோடு பெரிதும்  ஒத்து வருகின்றது.

மேலும் 'சிலை' என்ற சொல் சுமேரிய 'சில்'(<  sil)  என்ற சொல்லிலிருந்து வந்துள்ளதாகும். இதுவே 'சின்' என்றும் 'சிறு' என்றும் சுமேருமொழியிலும் அக்காடிய மொழியிலும் விளங்குகின்றது.  'சில்' என்பதின் மூலப் பொருள் 'சிறிய சிறியதாக் சிதைத்தல்' என்பதாகும். இவ்வாறு ஓர் கல்லை சிதைத்து  உருவாக்கப்பட்டதே 'சிலை' ஆகும்'

சில மாதங்கட்கு முன்பு 'சுமேருத்ட்ன்ஹமிழ் சொல்லாய்வுகள்' எனும் தொடரில் கள்' எனும் அஃறினை பன்மை விகுதிப் பறி மிக விரிவாக ஆய்ந்து பல கட்டுரைகல் வெளியிட்டேன். காண்க:

https://sites.google.com/site/sumerutamiltex/cumeru-collayvukal/a1-katturai-1-6

அதில் ஓர் பகுதி:


Gal> கள் : அஃறினைப் பன்மை

இதற்குச் சான்றாக எனக்குக் கிடைத்தது ஒரே ஒரு சொல். அச்சொல் ‘kingal” அதாவது கண்கள்’ என்பது.

Sunerian Temple Hymns 1

10.
kin-gal kin ki-du u nu-dib-be ( The great   . . .  the . .  the beautiful place, light enters not)

Ta. kaNkaL kaaNkidu uu naa tiiyppee ( For eyes to see light did not brighten it.)
கண்கள் காண்கிடு நா தீப்பே

இந்த ‘கள்’ விகுதிப் பற்றி டாகடர் சக்திவேல் இவ்வாறு கூறுவர்

The first is  ‘gal/ kaL’ as the plural marker of non-person objects and which is attested in CaGkam Tamil as well.  Dr S. Saktiveel in his Tamiz Mozi VarlaaRu (1984) gives the following occurrences ( p.151-152)




2013/11/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
>>கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

--

கி.காளைராசன்

unread,
Nov 22, 2013, 6:08:57 AM11/22/13
to mintamil, thiruppuvanam, vallamai, amr, chaku...@yahoo.co.in, Palanichamy Shanmugam
நான்காம் பகுதி

....பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ளும் அளவிற்குக் கடல்நீர் தோன்றி அளித்துள்ளது.
அப்படி யென்றால் குமரிக்கோட்டுடன் ஒன்றாக ஒட்டியிருந்த இருந்த தற்போதைய 
‘கன்னியாகுமரி‘ எவ்வளவு பாதிக்கப் பெற்றிருக்கும்?  
எப்படியெல்லாம் பாதிக்கப் பெற்றிருக்கும்?

Inline image 2
படத்தில் உள்ள சிகப்புக் கட்டம் 

Inline image 8



Inline image 6
கடல் பொங்கி ஏதோ 10 அல்லது 15 கி.மீ. தூரத்திற்கு வரவில்லை!
கிழக்கிலிருந்து கடல் பொங்கி எழுந்து அலைகள் மேற்குத் தொடர்ச்சி மலையையே தாண்டிச் சென்று இருப்பதைக் காணலாம்.
தமிழகம் முழுவதையும் அழித்துள்ளது.

கிழக்கிலிருந்து கடல் பொங்கி எழுந்து வந்திருந்தால், கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள...
சிவங்கை மாவட்டம் பிரான்மலையைக் கடல் சூழ்ந்த காட்சியைக் காண்போம்..

தொடரும்...
நாகபட்டிணம் சுனாமி.JPG
Golden-Persa-Granite-Close-up-1-15-2011.jpg
nagamalai.jpg
கூடுதட்டிப்பரம்பு மலை.jpg
nagamalai துவரிமான்.JPG
alagarkovil.jpg
sedimentary rock .edu.pe.ca.jpg
shale ucrtoday.ucr.edu.jpg
சுனாமி நாகர்கோயில்.JPG
yanaimalai.jpg
Tirupparankundram.jpg
சுனாமி நாகர்கோயில் அலைகள்.JPG

கி.காளைராசன்

unread,
Nov 22, 2013, 6:25:17 AM11/22/13
to mintamil, thiruppuvanam, vallamai, amr, chaku...@yahoo.co.in, Palanichamy Shanmugam
வணக்கம்..

சிவங்கை மாவட்டம் பிரான்மலையைக் கடல் வவ்விய காட்சி....
.

Inline image 1 

Inline image 2
பிரான்மலையின் உயரம் சுமார் 2.கீ.மீ. 
இவ்வளவு உயரத்திற்கு கடல் பொங்கி வந்துள்ளது!

அதாவது குமரிக்கோட்டினைக் கடல் கொள்ளும் போது, பொங்கி வந்த கடல்நீரின் உயரம் 2.கி.மீ.
அதன் நீளம் சுமார் 1500 கி.மீ.

நாகமலை  தொடரும்.....
சுனாமி பிரான்மலை அலைகள்.JPG
yanaimalai.jpg
shale ucrtoday.ucr.edu.jpg
சுனாமி நாகர்கோயில் அலைகள்.JPG
sedimentary rock .edu.pe.ca.jpg
சுனாமி பிரான்மலை.JPG
சுனாமி நாகர்கோயில்.JPG
Golden-Persa-Granite-Close-up-1-15-2011.jpg
Tirupparankundram.jpg
alagarkovil.jpg
கூடுதட்டிப்பரம்பு மலை.jpg
நாகபட்டிணம் சுனாமி.JPG
nagamalai துவரிமான்.JPG
nagamalai.jpg

கி.காளைராசன்

unread,
Nov 22, 2013, 6:35:32 AM11/22/13
to mintamil, thiruppuvanam, vallamai, amr, chaku...@yahoo.co.in, Palanichamy Shanmugam
வணக்கம்...
மேற்குத் தொடர்ச்சி மலைமேல் உள்ள வால்பாறையைக் கடல் வவ்விய காட்சி....


Inline image 1



Inline image 2

மேற்குத் தொடர்ச்சி மலைகளை எல்லாம் தாண்டிக் கடல்நீர் பாய்ந்து சென்றுள்ளது.

மதுரை நாகமலை தொடரும்....
sedimentary rock .edu.pe.ca.jpg
Tirupparankundram.jpg
நாகபட்டிணம் சுனாமி.JPG
சுனாமி நாகர்கோயில் அலைகள்.JPG
சுனாமி பிரான்மலை.JPG
yanaimalai.jpg
Golden-Persa-Granite-Close-up-1-15-2011.jpg
சுனாமி பிரான்மலை அலைகள்.JPG
கூடுதட்டிப்பரம்பு மலை.jpg
சுனாமி வால்பாறை அலைகள்.JPG
சுனாமி வால்பாறை.JPG
nagamalai.jpg
சுனாமி நாகர்கோயில்.JPG
shale ucrtoday.ucr.edu.jpg
alagarkovil.jpg
nagamalai துவரிமான்.JPG

வேந்தன் அரசு

unread,
Nov 22, 2013, 7:09:11 AM11/22/13
to vallamai, mintamil, thiruppuvanam, amr, chaku...@yahoo.co.in, Palanichamy Shanmugam
கடல் பொங்கி குமரி அழிந்தது என்று கொள்ள இயலாது. கடல் பொங்குவது ஆழிப்பேரலைகளால் நிகழ்ந்தது என்றால் அது கடற்கரையில் இருந்து சில கல் தொலைவுக்கு மட்டுமே அழிவு ஏற்படுத்தும். ஆழிப்பேரலைகள் திடீரென நிகழ்வதால் மக்கள் சாவு அதிகம் நிகழும். அதில் தப்பி பிழைபோர் சிலராகவே இருப்பார். மேலும் கடல்பின் வாங்கியபின் மீண்டும் அங்கே வாழ்க்கை நடத்தலாம்.

ஆனால்  புவி வெம்மையுறல் போன்ற காரணங்களால் கடல் மட்டமே உயர்ந்து நிலத்தை அகப்படுத்தினால் மக்கள் புலம் பெயரவேண்டும். அதுதான் குமரியில் நிகழ்ந்து இருக்கணும்



22 நவம்பர், 2013 6:25 AM அன்று, கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:

தேமொழி

unread,
Nov 22, 2013, 10:28:02 PM11/22/13
to vall...@googlegroups.com

திரு. காளைராசன் உங்கள் ஆய்வில் இடை புகுந்து குட்டையைக் குழப்ப விரும்பாவிட்டலும் ...வேந்தர் கோணத்தில் நடந்த ஆய்வுகளும் உள்ளன என்று தெரிவித்துக் கொள்ள விருப்பமுண்டு. 

Evidence Noah's Biblical Flood Happened, Says Robert Ballard
Dec. 10, 2012
By JENNA MILLMAN, BRYAN TAYLOR and LAUREN EFFRON

"We went in there to look for the flood," he said. "Not just a slow moving, advancing rise of sea level, but a really big flood that then stayed... The land that went under stayed under."

Four hundred feet below the surface, they unearthed an ancient shoreline, proof to Ballard that a catastrophic event did happen in the Black Sea. By carbon dating shells found along the shoreline, Ballard said he believes they have established a timeline for that catastrophic event, which he estimates happened around 5,000 BC. Some experts believe this was around the time when Noah's flood could have occurred.

இது போலவே துவாரகை கடலுக்குள் போனது பற்றியும் படித்த ஞாபகம்.

..... தேமொழி

K. Loganathan

unread,
Nov 22, 2013, 10:38:31 PM11/22/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

விவிலியத்தில் குறிக்கப்படும் பெரும் வெள்ளம் உள்ளபடியே சுமேருத் தமிழ் இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.  அதன் ஓர் பகுதி கீழ் வரும் சுட்டியில்''

https://sites.google.com/site/sumerutamiltex/deluge--sumerian

அடிப்படை வரிகள் கீழே

>.12. dug-pu-uh-ru-um> தூக்கு பொரூஉம்: கலந்துரையாடும் இடம்; அவை

13. du(g)-dug-ga an [en-lil-la] ..........(the command of Anu and Enlil ..........)

தூக்தூக்க ஆண் ஏண்லீல்ல..............

14. im-hul-im-hul (the storm winds) ni-gu(r)-gur-gal (with exceeding terror) du-a-bi (all of them)

இயம் ஒல் இயம் ஒல் நோய் கோர்கோர கால் எடுவபி

15. ur-bi ( together) i-sug-gi-es (raced along) a-ma-ru (the deluge) u-ka-kab-dug-ga( the mighty tempest?)

ஓர்பி ஈ சுங்கிசே அமரு ஒக்கல் கவ்வு துக்கம்

16. ba-na-da-ab-ur-ur (raged with them) ud-imin-am (when it was seven days) gig-imin-am (and seven nights)

பண்ணிடு அவ் உர் உர் உவா இமின் ஆம் மை இமின் ஆம்

17. a-ma-ru (that the deluge) kalam-ma (in the land) ba-ur-ra-ta (had raged) ma-gu(r)-gur( and the mighty ship

அமரு களம்ம பா உற்றத மா- கூர்-கூரை

18. a-gal-la(over the great waters) im-hul (the storm-wind) bu(l)-bul-a-ta, utu(( then ) the sun)

ஆல் கள்ள இயம் ஒல் புல்புல்லுத உது
19. i-im-ma-ra-e (rose over it) an-ki-a (in heaven and earth) ud ga-ga (making light)

ஈ இம்ம ராவே வான்கீழ்அ உதி கால் கால்

20. zi-u(d)-sud-du (Ziasuddu) ma-gu(r)-gur (in the mighty ship) ka-bur (an opening) mu-un-da-bur(bored)

ஜீவசூத்திரன் மா-கூர்-கூர் வாய்புரை முந்த பூர்

21. sul (the strong one) utu ( the sun) gis-sir-ni (his light) sag-ma-gu(r)-gur-su (into the mighty ship)

சூல் உது கீஸ் சூர்நி சான் மா-கூர்கூர்ச்சு

22. ba-un-tu-ri-en (sent in) zi-u(d)-sud-du( Ziu-suddu) lugal-am (being king)

பா உந்து எரியென் ஜீவசூத்திரன் உளுகள் ஆம்

23. igi-utu-su (before the sun) ka-ki-su-ub-ba-tum( kissed the earth) lugal-e( the king)

இஙி உதுச்சே கா கீழ் சப்புதம் உளுகள்ளே

24. gud (oxen) im-ma-ab-gaz-e (sacrificed) udu (sheep) im-ma-ab-sar-ri

கோடு இம்ம அப் கசியே உடு இம்ம அப் சேரே


2013/11/23 தேமொழி <them...@yahoo.com>

--

கி.காளைராசன்

unread,
Nov 24, 2013, 9:51:59 AM11/24/13
to mintamil, vallamai, thiruppuvanam, amr, chaku...@yahoo.co.in, Palanichamy Shanmugam
வணக்கம் ஐயா.


2013/11/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

கடல் பொங்கி குமரி அழிந்தது என்று கொள்ள இயலாது. கடல் பொங்குவது ஆழிப்பேரலைகளால் நிகழ்ந்தது என்றால் அது கடற்கரையில் இருந்து சில கல் தொலைவுக்கு மட்டுமே அழிவு ஏற்படுத்தும்.
ஆய்வுகள் சிலகல் தொலைவு மட்டுமே நடத்தப் பெற்றுள்ளன என்பதே உண்மை. 
சுனாமி தொடர்பாக நடைபெற்ற ஆய்வுகள் ஏதும் நாகமலை, பசுமலை, அரிட்டாபட்டி மலைகளில் மேற்கொள்ளப்பெற வில்லை.
எனவே ஆய்வாளர்களுக்கு நாம் இங்கே குறிப்பிடும் பேரழிவு பற்றி இதுவரை ஏதும் தெரியாது!  என்றே எண்ணுகிறேன்.
 
புவி வெம்மையுறல் போன்ற காரணங்களால் கடல் மட்டமே உயர்ந்து நிலத்தை அகப்படுத்தினால் மக்கள் புலம் பெயரவேண்டும். அதுதான் குமரியில் நிகழ்ந்து இருக்கணும்
எனது இந்தக் கட்டுரையில் குறிப்பிடும் ‘கடல்கோள்‘ மிகப் பெரிய நிலப்பகுதி கடலினுள் மூழ்கியதால் உண்டானது என்றே அறிகிறேன்.
அதாவது மிகப் பெரிய நிலத்திட்டு ஒன்று திடிரென்று தன்நிலையிலிருந்து தாழ்ந்து கடலில் மூழ்கியுள்ளது.  இதனால் கடலில் சுமார் 2.கி.மீ. உயரத்திற்கும் சுமார் 1500 கி.மீ. நீளத்திற்கும் அலைகள் உருவாகித் தமிழகத்தையே அழித்துள்ளது.  

தொடர்ச்சியான கடல்கொந்தளிப்பால் ஏழுகடல்களும் பொங்கி எழுந்துள்ளன.  எனவே இதுபோன்றதொரு அழிவு உலகத்தில் உள்ள கண்டங்களில் எல்லாம் நிகழ்ந்துள்ளது.

இந்நிகழ்வு பற்றி நான் அறிந்து கொண்டனவற்றை இன்னும் விளக்கமாக வரும் பகுதிகளில் எழுதுகிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Nov 24, 2013, 9:54:56 AM11/24/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
வணக்கம் ஐயா.

இழையுடன் தொடர்புடைய பதிவை வழங்கியதற்கு நன்றியுடையேன்.
சுமேருவில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளைத் தமிழிலில் தாங்கள் மொழிபெயர்த்து வழங்கிடுமாறு வேண்டுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

2013/11/23 K. Loganathan <k.ula...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

கி.காளைராசன்

unread,
Nov 24, 2013, 10:04:22 AM11/24/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
வணக்கம்.


2013/11/23 தேமொழி <them...@yahoo.com>

திரு. காளைராசன் உங்கள் ஆய்வில் இடை புகுந்து குட்டையைக் குழப்ப விரும்பாவிட்டலும் ..
குட்டையைக் குழப்பினால் இரண்டு நன்மைகள்,
1) குட்டையைக் குழப்பனால் மீன் பிடிக்கலாம்.
2) குட்டையும் தெளிவடைந்து விடும்.
 
.வேந்தர் கோணத்தில் நடந்த ஆய்வுகளும் உள்ளன என்று தெரிவித்துக் கொள்ள விருப்பமுண்டு.
வேந்தர் கோணத்து ஆய்வுகள் எல்லாம்,  ஒதுக்கப்படும் நிதியைப் பொறுத்து நடைபெற்றவை.
இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கண்ணோட்டதினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பெற்ற ஆய்வுகள் அல்ல.
தமிழகத்தில் நடைபெற்ற சுனாமி ஆய்வுகள் எல்லாம் கடற்கரையிலிருந்து 5-10 கி.மீ.தூரத்திற்கு உள்ளாகவே நடத்தப் பெற்றுள்ளன.   

 

Evidence Noah's Biblical Flood Happened, Says Robert Ballard
Dec. 10, 2012
By JENNA MILLMAN, BRYAN TAYLOR and LAUREN EFFRON

"We went in there to look for the flood," he said. "Not just a slow moving, advancing rise of sea level, but a really big flood that then stayed... The land that went under stayed under."

Four hundred feet below the surface, they unearthed an ancient shoreline, proof to Ballard that a catastrophic event did happen in the Black Sea. By carbon dating shells found along the shoreline, Ballard said he believes they have established a timeline for that catastrophic event, which he estimates happened around 5,000 BC. Some experts believe this was around the time when Noah's flood could have occurred.

இது போலவே துவாரகை கடலுக்குள் போனது பற்றியும் படித்த ஞாபகம்.

..... தேமொழி


நாம் இந்த இழையில் குறிப்பிடும் ஆழிப்பேரலையானது
சுமார் 10-17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றிருக்க வேண்டும்.

அதாவது,
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் சங்கத்தை அலங்கரித்த காலம் அது.

அன்பன்
கி.காளைராசன்
349.gif
338.gif

கி.காளைராசன்

unread,
Nov 25, 2013, 7:20:25 AM11/25/13
to mintamil, thiruppuvanam, vallamai, amr, chaku...@yahoo.co.in, Palanichamy Shanmugam
வணக்கம்.

Inline image 1
பிரளயத்தின்போது 
திருப்பரங்குன்றம் மலையும், யானைமலையும் மூழ்கும்படியான உயரத்திற்கு, மதுரைக்குக் கடல் பொங்கி வந்துள்ளது.
கடல்நீர் வந்ததை நீலநிறக் கோடுகள் குறிப்பிடுகின்றன.

கடல் நீரில் எல்லாமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஆனால் மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் சிவலிங்கம் மட்டும் பிரளய வெள்ளத்தில் (சுனாமியில்) அடித்துச் செல்லப்படாமல் நிலைத்து நின்றுள்ளது. 
இதனால் கடல்அலையானது திருஆப்புடையாரில் முட்டிமோதி அதைச் சூழ்ந்து சென்றுள்ளது.
இவ்வாறு ஒரு சுழற்சி ஏற்பட்டதனால், 
1) திருவாப்புடையாரின் பின்புறம் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட மண்ணானது ஒரு மேடாகப் படிந்து, நாகமலை உருவாகியுள்ளது.

2) திருவாப்புடையார் எதிர்த்து நின்றதால், வடக்குப் பக்கம் திசைதிரும்பி கடல்அலைகள் யானைமலையைத் தாண்டி மண்மேடாகப் படிந்து அரிட்டாபட்டி மலையாக உருவாகியுள்ளது.

3) திருப்பரங்குன்றம் மலையால் தடுக்கப்பட்ட அலைகள், அந்த மலையின் மேற்கே மண்மேடாகப் படிந்துள்ளது.
இரண்டு பக்கமும் கடல்அலைகள் சூழ்ந்து கொண்டதால் இடைப்பட்டபகுதியில் பசுமலை உருவாகியுள்ளது.

இவ்வாறு கடல்நீர் அடித்து வரப்பட்டதனால் உண்டான களிமண்ணும், மண்ணும் படிந்து மலைகளாக உருவாகியுள்ளன.
காலமாற்றத்தினால் களிமண் களிப்பாறைகளாக மாறியுள்ளது.  

எனவே இந்த மூன்று மலைகளிலிரும் உள்ளே களிப் பாறைகளும், வெளியே மணலும் உள்ளன.
இந்த மணல்களில் துத்தநாகம் அதிகமாக உள்ளது.  கடல்நீரால் அடித்துச் செல்லப்பட்ட தடயங்களை இம்மலைகளில் இன்றும் நன்கு காணலாம்.

தொடரும்...

அன்பன்
கி.காளைராசன்
------------------------------------------------.

சான்றாதாரம்...
திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் 2 ஆம் ஊழிப் பிரளயம் விவரிக்கப்படுகிறது. 

கீர்த்தி பூடண (பூஷண) பாண்டியன் ஆண்ட போது பிரளயம் ஏற்பட்டது. 

எழில்புனை யதுல கீர்த்தி யெனவிரு பத்தி ரண்டு
வழிவழி மைந்த ராகி வையங் காத்த வேந்தர்
பழிதவி ரதுல கீர்த்தி பாண்டியன் றன்பா லின்பம்
பொழிதர வுதித்த கீர்த்தி பூடணன் புரக்கு நாளில். 

கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி
ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்
பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்
பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த வன்றே.

அப்பெருஞ்சலதிவெள்ளத்தழுந்தினவழிவிலாத
எப்பெரும்பொழிலுமேழுதீபமுமிவற்றுட்டங்கி
நிற்பனசெல்வவானதிணைகளுநீண்டசென்னிப்
பர்ப்பதவகையுமீறுபட்டனவாகவங்கண்.

தேனிழிகுதலைத்தீஞ்சொற்சேனெடுங்கண்ணிகோயில்
வானிழிவிமானம்பொற்றாமரைவிளையாட்டின்வந்த
கானிழியிடபக்குன்றங்கரிவரைநாகக்குன்றம்
ஆனிழிவரைவராகவரைமுதலழிவிலாத.

வெள்ளநீர்வறப்பவாதிவேதியன்ஞாலமுன்போல்
உள்ளவாறுதிப்பநல்கியும்பரோடிம்பரேனைப்
புள்ளொடுவிலங்குநல்கிக்கதிருடற்புத்தேண்மூவர்
தள்ளருமரபின்முன்போற்றமிழ்வேந்தர்தமையுந்தந்தான்.
shale ucrtoday.ucr.edu.jpg
sedimentary rock .edu.pe.ca.jpg
சுனாமி பிரான்மலை.JPG
Tirupparankundram.jpg
சுனாமி வால்பாறை அலைகள்.JPG
சுனாமி பிரான்மலை அலைகள்.JPG
nagamalai துவரிமான்.JPG
yanaimalai.jpg
சுனாமி நாகர்கோயில் அலைகள்.JPG
nagamalai.jpg
nagamalai tsunami.JPG
Golden-Persa-Granite-Close-up-1-15-2011.jpg
alagarkovil.jpg
நாகபட்டிணம் சுனாமி.JPG
கூடுதட்டிப்பரம்பு மலை.jpg
சுனாமி நாகர்கோயில்.JPG
சுனாமி வால்பாறை.JPG

வேந்தன் அரசு

unread,
Nov 25, 2013, 7:25:04 AM11/25/13
to vallamai, mintamil, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com



24 நவம்பர், 2013 10:04 AM அன்று, கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:
பூ இவ்வளவுதானா?

தமிழில் ஆம்பல், சங்கம் போன்ற பேரெண்களும் உண்டு காளை ராஜா!!!!!!!!!!!!!!! 
349.gif
338.gif

கி.காளைராசன்

unread,
Nov 25, 2013, 9:53:57 AM11/25/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
வணக்கம் ஐயா.

பிரளயத்தினால் நாகமலை, பசுமலை, பன்றிமலைகள் தோன்றிய அதே காலகட்டத்தில் உலகெங்கும் கடல்கள் பொங்கி எழுந்துள்ளன.  
மற்றைய நாட்டினர் அவற்றைக் கண்டு பிடித்து வெளியிடுகின்றனர்.  யாழி (டைனோசர்) 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வாழ்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில் தமிழகத்தில் மக்கள் வாழ்ந்துள்ளனர்.  மன்னர் ஆட்சி நடைபெற்றுள்ளது.
நாம் நமது  நாகமலையை, பன்றிமலையை அகழ்ந்து ஆராய்ந்தால் பண்டைய தமிழர்களின் படிமங்கள் கிடைக்கும்.

அன்பன்
கி.காளைராசன்
google.com/+KalairajanKrishnan

2013/11/25 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--


349.gif
338.gif

கி.காளைராசன்

unread,
Nov 29, 2013, 5:43:30 AM11/29/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
வணக்கம்.  

ஊழிக்காலத்தில் உலகம் எல்லாம் ஏழுகடல்அலைகளாலும் அழிவுற்றுள்ளன.

அப்போது தமிழகத்தைத் தாக்கிய கடல் அலைகளால் அரித்துவரப்பட்ட மண்ணும் மணலும் திருஆப்புடையார் சிவலிங்கத்தால் தடுக்கப்பெற்றதால் நாகமலை உருவாகி உள்ளது.


Inline image 1


ஆழிப்பேரலைகள் திருஆப்புடையார் சுயம்புலிங்கத்தால் தடுக்கப்பட்டதால், கடல்அலைகள் திசைமாறி வடக்குப் பக்கமாகத் திரும்பிச் சென்றிருப்பதைக் காட்டும் படம்.  மதுரையின் வடக்கே உள்ள யானைமலை தடுத்த காரணத்தால், கடல்அலைகளால் அடித்துவரப்பட்ட மண்ணும் மணலும் மேடாகிப் பன்றிமலை (பெருமாள்மலை) உருவாகியுள்ளதைச் சித்தரிக்கும் படம்.

Inline image 2
களிமண் கல்லாக மாறிடச் சுமார் 10 முதல் 17இலட்சம் ஆண்டுகள் ஆகும்.
மதுரையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் உள்ள மண்ணானது பாறைகள் தேய்ந்து உருவானவை அல்ல என்றும்,
கடலில் இருந்து அடித்துவரப்பட்ட மண் என்பதும் உறுதியாகிறது.
எனவே, மண்தோன்றிய காலம் சுமார் 10-17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என நிருவுதல் செய்யலாம்.

தொடரும்...

அன்பன்
கி.காளைராசன்


2013/11/25 கி.காளைராசன் <kalair...@gmail.com>
பன்றிமலை.JPG
nagamalai tsunami waves.JPG
349.gif
338.gif

கி.காளைராசன்

unread,
Nov 29, 2013, 6:59:05 AM11/29/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

Inline image 1

Inline image 2

ஆழிப்பேரலையானது யானைமலையால் தடுக்கப்பட்பெற்றதால், ஊழிக்கால அலைகளால் அரித்துவரப்பெற்ற மண்ணும் மணலும் மலைபோல் குவிந்து விட்டன.  இதுவே பன்றிமலை (பெருமாள் மலையாகும்).  இந்த ஊரின் பெயர் “அரிட்டா பட்டி“ யாகும்.

அன்பன்
கி.காளைராசன்


2013/11/29 கி.காளைராசன் <kalair...@gmail.com>
யானைமலை சுனாமி.JPG
nagamalai tsunami waves.JPG
யானைமலை.JPG
பன்றிமலை.JPG
349.gif
338.gif

கி.காளைராசன்

unread,
Nov 29, 2013, 6:59:59 AM11/29/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
Inline image 1

Inline image 2
(படங்கள் நன்றி கூகுள்மேப்)



2013/11/25 கி.காளைராசன் <kalair...@gmail.com>
பன்றிமலை அலைகள்.JPG
பன்றிமலை.JPG
349.gif
338.gif

Nagarajan Vadivel

unread,
Nov 29, 2013, 7:25:07 AM11/29/13
to vallamai
ஆழிப் பேரலையானது கடலும் வைகையும் சந்திக்கும் முகத்துவாரத்திலிருந்து பிரளய காவிரியாக மதுரைக்கு வந்திருக்கவேண்டும் என்ற கோணத்திலும் ஆய்வு செய்யலாமே

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் அவருடைய பாண்டியா கிங்டம் (பக்கம் 4)


என்ற நூலில் சமணர்கள் ஒரு யானையை ஏவிவிட்டு மதுரையத் தாக்க வந்ததாகவும் சிவபெருமான் சிங்கமுக அம்பெய்தி அந்த ண்யானையைச் செயலிழக்கச் செய்து கோட்டைக்குவெளியே நிலை கொண்டிருப்பதே ஆனைமலை என்றும் சிவன் சிங்கமுக அம்பெய்ததன் நினைவாகப் பாண்டிய அரசன் நரசிம்மருக்காக ஒரு கோவில் கட்டியதாகவும் புராண அடிப்படையில் குறிப்பிடுகிறார்

படிக்காப் புலவன் கருநாகன்


--
பன்றிமலை.JPG
யானைமலை சுனாமி.JPG
யானைமலை.JPG
nagamalai tsunami waves.JPG
349.gif
338.gif

வேந்தன் அரசு

unread,
Nov 29, 2013, 8:36:15 AM11/29/13
to vallamai
>>ஆழிப்பேரலையானது யானைமலையால் தடுக்கப்பட்பெற்றதால், ஊழிக்கால அலைகளால் அரித்துவரப்பெற்றமண்ணும் மணலும் மலைபோல் குவிந்து விட்டன. 

ஒரு இடத்தில் குவிவதற்கு காரணம் மலை என்றாலும் அவ்விடத்தை சுற்றியும் அலை வரும் வழியிலும் கடல் மணல் இருக்கிறதா என ஆய வேண்டும்.


29 நவம்பர், 2013 6:25 AM அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:
பன்றிமலை.JPG
யானைமலை.JPG
யானைமலை சுனாமி.JPG
nagamalai tsunami waves.JPG
349.gif
338.gif

கி.காளைராசன்

unread,
Nov 30, 2013, 9:11:44 PM11/30/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
வணக்கம்.

குமரிக்கண்டம் அழியக் காரணமான பிரளயகாலத்தில் உண்டான ஆழிப்பேரலைகள் (சுனாமி) சுமார் 2.கி.மீ. உயரத்திற்கு எழுந்து தென்தமிழகம் முழுவதையும் அரித்துச் சென்றுள்ளது.  இவ்வாறு அடித்துச சென்றன எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்த பள்ளத்தாக்குகளில் தங்கிட கடல்அலைகள் அதையும் தாண்டிச் சென்று மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளன.  இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருந்த பள்ளத்தாக்குகள் நிறைந்து சற்று சிறிய சமவெளிகளாக மாறியுள்ளன.  இவ்வாறு பண்டைய தமிழர் புதையுண்ட இடமே ‘பொதிகை‘ என்று அழைக்கப்படுகின்ற இடமாகும்.

பொதிகையில் பொதிந்துள்ளனவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சி செய்தால், சுமார் 10-17 இலட்சம் வருடங்களுக்கு முந்திய நமது பண்டைத் தமிழரின் படிமங்கள் கிடைக்கும்.

அன்பன்
கி.காளைராசன்


2013/11/29 கி.காளைராசன் <kalair...@gmail.com>
பன்றிமலை.JPG
பன்றிமலை அலைகள்.JPG
349.gif
338.gif
Reply all
Reply to author
Forward
0 new messages